Navigation


RSS : Articles / Comments


அடிவாங்காமல் தப்பித்தான்..சோ..(மாரி) ராமசாமி

9:56 AM, Posted by sathiri, 19 Comments


பாஜக மூத்த தலைவரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியின் புத்தக வெளியீட்டு விழா சென்னை நாரதகான சபாவில் நடந்தது.
குஜராத்தில் நரேந்திரமோடி எழுதிய புத்தகம் தமிழில் ‘கல்வியே கற்பகத்தரு’ என்று மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு நரேந்திரமோடி, துக்ளக் ஆசிரியர் சோ உட்பட பலரும் வந்திருந்தனர்.

சோ இப்புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது கொஞ்சமும் இவ்விழாவுக்கு சம்பந்தம் இல்லாமல் ஈழப்பிரச்சனை பற்றி பேசினார்.

இலங்கை பிரச்சனையில் தமிழக பிஜேபியினருக்கு புதுப்பாசம் வந்திருக்கிறது. இந்த விசயத்தை பற்றி பேச எனக்கு சரியான இடம் அமையவில்லை. இந்த மேடைதான் அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதை பயன்படுத்திக்கொண்டு பேசுகிறேன்.

பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று காஷ்மீர் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் குண்டுகள் வீசி தாக்குகிறது. அதைப்போய் ஏன் குண்டு வீசுகிறீர்கள் என்று கேட்க முடியுமா? அப்படித்தான்...இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை ராணுவம் போரிடுகிறது. அதை நிறுத்துங்கள் என்று சொல்லமுடியாது. எப்படித்தான் சொல்ல முடியும்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கை பிரச்சனை குறித்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருகிறார். அதே போல் தான் நானும் எனது இந்த கருத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறேன்..

தமிழக பிஜேபியினர்தான் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை என்று சோ ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்க, தமிழில் பேசு என்று பிஜேபியினர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.தொடர்ந்து சோ ஆங்கிலத்திலேயே பேச, புத்தக சம்பந்தமா மட்டும் பேசு, சம்பந்தம் இல்லாம இலங்கை பிரச்சனை பற்றி பேசாதே என்று பிஜேபியினர் எதிர்ப்புக்குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.

சோ பேச்சை நிறுத்தாமல் நான் இப்போதும் சொல்கிறேன் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன்’ என்று பேசினார். கடைசியில் எதிர்ப்புக்குரல் வலுக்கவும், பிஜேபியினர் எழுந்து நின்று கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் நன்றி,வணக்கம் என்று உரையை முடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

இதனால் அரங்கத்தில் பெரும் சலசலப்பு உண்டானது.


நரேந்திர மோடி பேசும் போது சோ பேச்சைப் பற்றியும், அதனால் எழுந்த சலசலப்பு பற்றியும் எதுவும் பேசவில்லை. தனது புத்தகத்தைப் பற்றியும் தனது ஆட்சியின் சாதனைகள் பற்றியும் மட்டும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார்.

நன்றி நக்கீரன்

19 Comments

Anonymous @ 10:50 AM

சோமாரியை வளர்த்தெடுத்த தமிழக மக்கள் தான் வெட்கப்படவேண்டும்..

Anonymous @ 12:59 PM

சிங்களனோடு சேர்ந்து இவன் இன்னும் தமிழர்களை கொல்வதில் மக்கள் புரட்சியில் இவன் தமிழ் நாட்டிலிருந்து அடித்து துரத்தப்படுவது உறுதி.

Anonymous @ 9:28 PM

இவனெல்லாம் ஒரு ஆள் என்று கணக்கெடுக்கிறீங்களே!!!!
போடா சோமாரி நீயும் உன்ட துக்ளக்,ம்...

Anonymous @ 9:36 PM

பேமானி, இதுக்கு என்னடா பதில்,

//பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று காஷ்மீர் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் குண்டுகள் வீசி தாக்குகிறது. அதைப்போய் ஏன் குண்டு வீசுகிறீர்கள் என்று கேட்க முடியுமா?//

Anonymous @ 9:48 PM

I don't understand people like Cho, JJ...

They hate the English dominancy(at least, politically), and speak against British Raj. Sonia is the real prime minister of India, but these people all were against her taking the mantle with the title.

The same people, still want to be recognized at better than others based on their social hierarchy(that was created by them) and want others to remain under. Now tell me, why is it wrong for your society to be under the English, but right for others to be under another oppressor? It is disgusting that medias have been monopolized by them, and people are being taken for a ride.


-kajan

Anonymous @ 9:53 PM

என்னோட comment எங்கடா பாடு?

யூர்கன் க்ருகியர் @ 10:24 PM

I don't like his attitude!

Anonymous @ 10:27 PM

don't give more importants to this(so-ramasamy) fool.

சக்(ங்)கடத்தார் @ 10:27 PM

கல்வியே கற்பகத்தரு’ //

''மேடையில் கதைப்பது எப்படி?? என்ற தலைப்பிலை புத்தகத்தை வெளியிட்டிருந்தால் மனுசன் பேசினது சரியா இருக்கும். உதுக்குத் தான் ராசா சொல்லுறது 'நாய்க்கேன் போர்த் தேங்காய்??? குரங்கின்ரை கையிலை மைக்கை குடுத்தால் என்ன ராசா செய்யும்??? உதுகள் திருந்தாத ஜென்மங்கள் மோனை??


அப்பு ராசா மகிந்தருக்கு இப்ப என்ன சுக்கிர திசையோ/ ராகு காலமோ/ எம கண்டமோ?? இல்லையெண்டால் ஏழரைச் சனியோ??? ஏதாவது பார்த்துச் சொல்லுமன் தம்பி சாத்திரி????

சூனிய விகடன் @ 11:33 PM

சோ சொல்வதில் என்ன தப்பு ? இலங்கைத்தமிழர் பிரச்னை என்பது வேறு ..விடுதலைப்புலிகள் என்பது வேறு . ..விடுதலைப்புலிகள் கை ஓங்குவது தமிழ்நாட்டுக்கு நாசமாகவே முடியும். இதைப் பற்றி இங்குள்ளவர்கள் யோசிப்பது போலவே தெரியவில்லை. சூனியர் விகடன்காரன், நக்கீரன், ப்ளாக் பைத்தியங்கள், சோ கால்டு தமிழ் உணர்வாளர்கள் எல்லோருமே புலிப் பைத்தியம் பிடித்து திரிகிறீர்கள். இது நாட்டுக்கு நல்லதல்ல. வாட்டாள் நாகராஜன் கன்னடப் பற்றுள்ளவன், கொளத்தூர் மணியும் நெடுமாறனும் தமிழ்ப் பற்றுள்ளவர்கள் என்று பேசுவது அந்தந்த இனங்களையே கேவலப்படுத்துவது போலுள்ளது. சோ மாதிரி தெளிந்த சிந்தனையுள்ளவன் பேசுவது உங்களுக்கெல்லாம் புரியாது. இந்து என்றால் திருடன் என்றும ராமன் எந்த காலேஜில் எஞ்சினீரிங் படித்தான் என்று கேட்டவனையும் விட்டுவிட்டு சோ வை உதைக்க கிளம்புவதில் நியாயம் இல்லையே.? தமிழ்நாட்டில் தேர்தலில் இலங்கைத்தமிழர் பிரச்னை ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சொல்லப்போனால் உங்கள் சோ கால்டு தமிழர் தலைவர்களே தேர்தலுக்கு அப்புறம் அதைப் பற்றி பேசமாட்டார்கள்.


இலங்கை பிரச்னை தீர வேண்டுமானால் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். இதில் வேறு எந்த மாற்று வழியும் இல்லை

சிவாஜி த பாஸ் @ 1:46 AM

பாவம் விடுங்கள், அவர் நம்பிய பிஜேபி இப்படி ஆகிவிட்ட விரக்தியில் பேத்திவிட்டார்.
எனது இந்த பதிவையும் பாருங்கள்,
http://aiadmk-tn.blogspot.com/2009/02/blog-post_17.html#links

Unknown @ 2:25 AM

செய்தி - 4. பா.ஜ.க வின் திடீர் இலங்கை தமிழர் பாசம் - சோ கிண்டல்
(மேலும் இவர், "காஷ்மீரில் போரை நிறுத்த சொல்லி பாகிஸ்தான் சொன்னால் இந்தியா நிறுத்துமா?" என்கிறார்...! )
நான் (நாம்?) - சோ இந்திய அரசை இவ்வளவு மோசமாக இதற்கு முன்னால் விமர்சித்ததாக தெரியவில்லை!
இந்திய அரசு காஷ்மீரில் இன ஒழிப்பில் ஈடுபடுகிறது, இந்திய ராணுவம் பொதுமக்களை
கொன்று குவிக்கிறது என கூறியிருக்கிறார். தேச விரோதம் அல்லவா இது!
தேச விரோத குற்ற சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்!

http://aiadmk-tn.blogspot.com/2009/02/blog-post_17.html

Bleachingpowder @ 5:38 AM

யாகாவர் ஆயினும் நாகாக்க. வயதில் மூத்த ஒருவரை ஒருமையில் விளிப்பது அநாகரிகத்தின் உச்சம்.

தமிழ் ஓவியா @ 6:25 AM

பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள். அவர்கள் மீது காழ்ப்புணர்வு கொள்ள வேண்டாம் என்று துள்ளிக் குதிக்கும் பார்ப்பனரல்லாதவர்கள் இது குறித்து என்ன சொல்லப் போகிறார்கள்?

Anonymous @ 10:30 AM

http://therthal.blogspot.com/2009/02/blog-post_6651.html

தேர்தல் வருது. உங்கிட்ட மாலனோட கேள்விக்கு பதில் இருக்காடா பன்னாடை

Anonymous @ 11:59 AM

I read a news that today Subramaniaswamy assaulted by TN lawyers inside the HC.Soon, This fellow will be the next victim.

Anonymous @ 12:47 PM

சோ அடி வாங்கிட்டான், சாமி முட்டை அடி வாங்கிட்டான், அடுத்து நம்ம இனத்துரோகிகளில் வருவது ஜெ, தினமலர்.

இவர்கள் அடி வாங்குவதை காண ஆவலாக உள்ளேன்.

ARIVUMANI, LISBON @ 6:22 PM

sir, cho innum adi vaangalee, we have to wait..

ali @ 10:13 AM

he is a hindu terror