Navigation


RSS : Articles / Comments


கிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3

12:44 PM, Posted by sathiri, No Comment

கிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3
இந்த வார ஒரு பேப்பரிற்காக சாத்திரி

வாசகர்களே  இந்தப் பாகத்தில்  மிகுதி விடயங்களிற்குள் நுளைவதற்கு முன்னர்.  தாயகத்தில் போரால் பாதிக்கப் பட்ட  மக்களிற்கு உதவுதாக  கூறிக்கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளி என்கின்ற  அமைப்பை பற்றியும் சிறிது பார்த்துவிடுவோம். 2009 ம் ஆண்டு மேமாதம்  தாயகத்தில் புலிகளின் ஆயுதப் போர் முடிவடைந்து விட்ட நிலையில் பெருமளவு  போராளிகள்  காயமடைந்தும்  அங்கவீனர்களாகவும்  இலங்கையரசிடம் சரணடைந்ததன்  பின்னர்.  அவர்களிற்கு ஏதாவது  உதவவேண்டும்  என்கின்ற  நோக்குடன்  கனடாவில் இருக்கும்  ஒரு புலிகள் அமைப்பின்  முன்னைநாள்   போராளியால்  வெளிநாடுகளில் வாழும் முன்னை நாள்  புலிகள் அமைப்பு போராளிகள்   பலரையும் இணைத்து உருவாக்கபட்டதுதான்  இந்த நம்பிக்யொளி அமைப்பு.இது பின்னர்  பிரான்ஸ். பிரித்தானியா டென்மார்க்  என்று ஜரோப்பா மற்றும்  ஸ்கன்டிநேவிய நாடுகளிற்கும் விரிவாக்கப்பட்டு அந்தந்த  நாடுகளில்   ஒவ்வொரு குழுக்கள் அமைக்கப்பட்டு  அதற்கென ஒரு பொறுப்பாளரும் நியமிக்கப் பட்டதோடு அந்தந்த நாடுகளில் அந்த அமைப்பை பதிந்து இயங்கவும். அதே நேரம்  முன்னை நாள் போராளிகள் அல்லது புலிகள் என்கிற  எவ்வித  அடையாளங்களுமின்றி பாதிக்கப்பட்ட போராளிகளிற்கு உதவுவதுதான் இதன் நோக்கம்.  அன்றைய காலத்தில்  நேசக்கரம் என்னும் அமைப்புடன் இணைந்து  நானும் தாயகத்து மக்களிற்கு உதவிக்கொண்டிருந்த காலகட்டம்.(தற்சமயம் அந்த அமைப்பில் இல்லை)

நம்பிக்கையொளி அமைப்பினை உருவாக்குவதற்காகவும் அதன் சட்ட வரைபுகளிற்காகவும் எனது உதவியினையும்  அந்த கனடிய நண்பர் நாடியிருந்தார். அதனடிப்படையில்  நம்பிக்கையொளியின்  உருவாக்கத்திற்கும் மற்றும்.உதவி கோருபவர்களின்  விபரங்களை பரிமாறுதல் மற்றும் வழங்கப்பட்ட உதவிகள் ஒருவரிற்கே மீண்டும் கிடைக்கமல் அவற்றை சரிபார்த்தல் என  பல வழிகளிலும் நம்பிக்கையொளி அமைப்பிற்கு உதவிகளும் செய்திருந்தேன். இப்படியான காலகட்டத்தில் தான்  இலண்டனில் நம்பிக்கையொளி அமைப்பினை  தான் பதிந்து  தருவதாக ஸ்கந்தா  முன்வந்திருந்தார். இவர் ஏற்கனவே புலிகள் அமைப்பு ஆதரவாளர் என்பதோடு  பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினராக இருந்ததாலும்  நன்கு அறியப்பட்டிருந்தார். எனவேதான் பதிவு பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது.  இதே நேரத்திலேயே  ஸ்கந்தா ரிசியையும் பலரிற்கு அறிமுகப்படுத்தி  ரிசியின்  பொறுப்பில் I T S O  ம் உருவாக்குகின்றார்.இதன்பின்னர்  தாயகத்திலிருந்து  முன்னை நாள் போராகளாகவிருந்து  சரணடைந்தவர்கள் மற்றும் சரணடைந்து  விடுதலை பெற்றவர்களை வைத்து   நம்பிக்கையொளி நிறுவனம்  பாதிக்கபட்டவர்களின் தகவல்களை சேகரிக்கதொடங்கியது.  அப்படி சேகரித்த தகவல்களை  வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கொண்டு சென்று  உதவிகளை பெற்று  வழங்கிவந்தனர்

.ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே நடந்தது.  ஆனால் நாள் செல்லச் செல்ல  நம்பிக்கையொளி அமைப்பின் இலண்டன் கிளை  மற்றைய நாட்டு  உறுப்பினர்களுடன்  தொடர்புகளை ஏற்படுத்தாமலும் கலந்தாலோசிக்காமலும். தன்னிச்சையாக செயற்பட ஆரம்பிக்கத் தொடங்குகின்றனர்.  பாதிக்கப்பட்ட  காயமடைந்த போராளிகளின் படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகளை  போட்டுக்hட்டி மக்களிடமும் வர்த்தகர்களிடமும்  சேகரித் பெரும் தொகை  பணத்தின் விடயங்களையோ தாயகத்திற்கு அனுப்பிய  தொகை என்பனவற்றை  அந்த அமைப்பை தொடங்கி  இயக்கிவந்த கனடிய உறுப்பினரிற்கோ மற்றைய நாட்டு உறுப்பினர்களிற்கோ  தெரிவிக்காமலும்  தகவல்களை பரிமாறாமலும் நடக்க தொடங்கிவிட்டிருந்தனர். சேகரிக்கப்பட்ட பெருமளவு நிதியில் சிறிய தொகை மட்டுமே  பாதிக்கப்பட்டவர்களிற்கு கொடுக்கப்பட்டு  அவர்களிடமிருந்து  கடிதங்களும்  படங்களும் எடுக்கப்பட்டு  சில தமிழ் இணைய ஊடகங்களில் விளம்பரப் படுத்தியிருந்தனர்.  இப்படி நம்பிக்கையொளி இலண்டன் பிரிவு ஸ்கந்தாவின் கைகளில்  முழுதுமாய்  வீழ்ந்த பின்னர் இவரால் தனது நம்பிக்கை பாத்திரமானவன் என நினைத்து  ரிசியை  முதன்மைப் படுத்தி  உருவாக்கப்பட்ட  I.T.S.O  கிழக்கு  மகாணத்தில் கடந்த வருடம் 2011 ம் ஆண்டு தைமாதமளவில்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு  காரணமாகவும்  பெருமளவு நிதியிளை நம்பிக்கையொளி அமைப்பும்  I.T.S.O வம் சேர்த்தனர். இதற்காக பல தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்  உதவியிருந்தார்கள்.   இதில்  நம்பிக்கையொளி அமைப்பை விட   ரிசியிடமே எம்மவர்கள் பெரும்தொகை பணத்தினை  வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களிற்காக கொடுத்திருந்தனர். காரணம் ரிசி தான் ஒரு பல்கலை கழக மாணவர் என்றும்  இலண்டனிலும் தனது பல்கலைகழக படிப்பை தொடர்வதாகவுமே கதைவிட்டு திரிந்தவர். எனவேதான்  படித்தவன் அதுவும் பல்கலைகழக மாணவன் என்றாலே  எம்மவர்களிற்கு ஒரு ஈர்ப்பு பல்கலைகழக மாணவன் ஏமாற்றமாட்டான் என்கிற  ஒரு  மாயை. ஆனால் அப்படி சேர்த்த பணம் அத்தனையையும்  ரிசி தனது  இலங்கை வங்கி  கணக்கிற்கு அனுப்பிவிட்டிருந்தார்.

பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனமான தமிழர் நலவாழ்வு நிறுவனம்( tamil health orginitation) I T S O இன் இலங்கையிலுள்ள அதன் வங்கிழ கணக்கிற்கு  (  commercial dilakanda  srilanka)ஒரு இலட்சம்  ரூபாயை வழங்கியுள்ளதாக  அதன் இணைத்தளத்தில் கணக்கு காட்டியுள்ளது   இலங்கையில் பதிவு செய்யப்படாத நிறுவனத்திற்கு  எப்படி நிறுவனத்தின் பெயரில் வங்கி  கணக்கு திறக்கப்பட்டது  அந்த கணக்கில்  பணம் எப்படி போடப்பட்டது என்பதனை  தமிழர் நலவாழ்வு  நிறுவனம்தான்  விளக்கவேண்டும்.இந்த விடயத்தை அறிந்த ஸ்கந்தா   தனக்கு பங்குதராமல் மொத்தமாய் ஆட்டையை போட்ட ரிசி மீது கடுப்பாகிறார். இங்கு இவர்கள் மோதல் தொடங்குகின்றது.இங்கு ஒருவர் மொல்லைமாரி என்றால் மற்றவர் முடிச்சவிக்கி எனவே  இருவரும் உதவி நிறுவனத்தின் கணக்கு விபரங்களை பகிரங்கமாக கேட்க முடியாத  நிலை எனவே யாரை எங்கே காலை வாரலாமென தருணம் காத்திருக்கின்றனர். ரிசி தொழிலுக்கு  புதிது என்பதால் ஸகந்தா தனது அனுபவத்தையும் தொடர்புகளையும் பாவித்து  ரிசியை ஓரம் கட்டதொடங்கியதோடு அவர் தொடர்ந்தும்  தொழிலில்  நீடித்து  பணம் சுருட்டவிடாமல்   அவரை  தமிழின துரோகியாக்கி தமிழ் ஊடகங்கள் ஊடாக செய்தியை கசிய விடுகிறார்.

அப்பொழுதுதான்  ஏற்கனவே ஸ்கந்தாவுடன்  பிரச்சனை பட்டுக்கொண்டிருந்த உதயகலாவின் பெயரும் இலவச இணைப்பாக்கப்பட்டு  செய்திகள் வெளியாகின்றது.  ஆனால் செய்திகள் வெளியானதுமே  இவை அனைத்திற்கும் பின்னணி  ஸ்கந்தாவே என்பதனை அறிந்து முதன் முதலாக ஒரு பேப்பர்  கிணறு தோண்டக் கிழம்பிய பூதம் முதலாவது பாகத்தில்  அம்பலப்படுத்தியிருந்தது.. அதே நேரம் கடந்த ஒரு பேப்பரிற்கு  பாகம் இரண்டினை எழுதி முடித்துவிட்டு  ஸ்கந்தா தரப்பு நியாயங்களை  தெரியப்படுத்துமாறு  ஸ்கந்தா அவர்களிற்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தேன். ஆனால் அவர் அதற்கு நேரடியான பதில் எதனையும் தராது அந்த மின்னஞ்சலை தற்சமயம்  யாழ்ப்பாணத்தில்  வசிக்கும் ராதிகா என்பவரிற்கு அனுப்பி ராதிகா என்பவரிடமிருந்து  எனக்கு ஒரு மின்னஞ்சலும்  மேற்படி  கட்டுரை சம்பந்தமாக  சில விபரங்கள் தரவேண்டும் என்றும் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி   ஒரு தோ.பே  இலக்கத்தையும் இணைத்திருந்தார்.  அவருடன் நான்  தொலைபேசி இணைப்பினை ஏற்படுத்தியபொழுதுதன்பெயர் ராதிகா என்றும் தானும்   அலுவலகத்தில் வேலை செய்தவர் என்றும் ஸ்கந்தா என்பவர் எந்த தவறும் செய்யவில்லையென்றும்  உதயகலாவே  பலரிடம்  பணமோசடி செய்தார்  அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்  நூறு பேரின் பெயர் விபரம் மற்றும் அவர்களது தொலைபேசி இலக்கங்கள்ஆதாரமாக  இருப்பதாக  கூறியதும். அவற்றை  என்னிடம் அனுப்பி வைக்கும்படியும்  நானே அவர்களுடன் நேரடியாக  கதைத்து  இருதரப்பு நியாயங்களையும் ஒரு பேப்பர் மூலமாக வெளிக்கொண்டு வருவேன் என சொல்லியிருந்தேன்.

அதற்கு அவரோ நூறு பேரின் பெர் விபரங்களும் உடனடியாக தரமுடியாது முதலாவதாக பத்துப்பேரின் விபரங்களை  அனுப்புவதாகவும்  இதில் செய்திகளில் தனது பெயர்  வெளிவரக்கூடாது  என்று பலமுறை வலியுறுத்தியிருந்தார்.  அவர் தரும்  ஆதாரங்கள்  உண்மையாக இருப்பின்  அவரது பெயர் வெளியிடமாட்டேன் என கூறியிருந்தேன்.பின்னர் அவர் 17 பேருடைய பெயர்களையும்  தொ.பே இலக்கங்களையும்  இன்னொரு  மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பியிருந்தார். அது யாருடைய மின்னஞ்சல்  முகவரி என்பதனை பின்னர் பாக்கலாம்.  எனக்கு கிடைத்த 17 இலக்கங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்த  முனைந்தேன். பல இலக்கங்கள் வேலை செய்யவில்லை . அதில் இரண்டு இலங்கங்கள்  ஒருவருடையது.  அவர் மூலம் மேலும் பல தகவல்கள் கிடைத்தது அவரது தகவல்களின்படி  ராதிகா  மற்றும் அவரது காதலன் நியூ சீலன் ஆகியோரின்  உதவியுடன் வவுனியாவை சேர்ந்த  ஜேர்ச் மற்றும் கிரிஜா என்பவர்களது கணக்குகளிலும்  நியூ சீலனின் கணக்கிலும் தாங்கள் பணத்தை வைப்பிலிட்டதாக கூறினார். நியூ சீலனின் கணக்கில்  பணம் வைப்பிலிட்டதற்கான ஆதாரத்தினையும் இங்கு இணைக்கிறேன்.

Posted Image

ராதிகா என்பவர் அனுப்பிய  விபரங்களில்  ஒரேபெயர் இரண்டு தடைவை குறிப்பிட பட்டிருந்ததும் பல இலக்கங்கள்  வேலை  செய்யாததனாலும் மீண்டும் அவருடன்  தொடர்பினை ஏற்படுத்தி விபரம் கேட்டபொழுது அந்த  விபரங்களை தானும் குழலி என்பவருமே சேர்ந்து தயாரித்ததாகவும் அதே நேரம் தங்கள்  வேலைபழு காரணமாக  தவறுகள் நடந்து விட்டதாக சப்பை கட்டு கட்டினார்.
இனி உதயகலாவிற்கும் ரிசிக்கும் என்ன தொடர்பு என்பதனை பார்க்க முன்னர்  செல்வி சபாரத்தினம் கஸ்தூரி என்பவரை   அடுத்த  தொடரில் உங்களிற்கு அறிமுகப்படுத்துகின்றேன்.
தொடரும் ...................

கிணறு வெட்ட கிழம்பிய பூதம் 2

2:28 PM, Posted by sathiri, 5 Comments



ஒரு பேப்பரிற்காக சாத்திரி

2011 டிசம்பர் 4,5ம் திகதிகளில் தமிழ் இணையங்களில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியிருந்தது. உதயகலா தயாபரராஜ் என்ற பெண்ணின் மோசடி, விபச்சாரம் நீலப்படமென்றெல்லாம் கதை வசனம் தயாரிக்கப்பட்டு மெகாசீரியல் நீளத்துக்கு செய்தி பரவியிருந்தது.

அதே நேரம் போரால் பாதிக்காப்பட்டு  அங்கவீனமானவர்களும்  முன்னை நாள் போராளிகளையும் வெளிநாடு அழைத்துச் செல்லதாகக்கூறி  அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு  தாய்லாந்திலும் மலேசியாவிலும் கைவிட்டு விட்டார்கள் என்கிற செய்தியும் பரவியிருந்தது .அப்படி கைவிடப்பட்டு நின்றவர்கள் சிலருடன் தொடர்புகளை  ஏற்படுத்தி   அவர்களின் வாக்கு மூலங்களை ஆதாரமாக வைத்து  இவை அனைத்தையும் பின்னால் நின்று இயக்குபவர்  மொட்டை பாஸ் என செல்லமக அழைக்கப்படும்  லண்டனில் வசிப்பவரான  ஸ்கந்த தேவாவே என்டபதை நான் ஒரு பேப்பர் மூலமாக  அம்பலப்படுத்தியிருந்தேன். அந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னராக அதனுடன் சம்பந்தப் பட்டவர்களான . ரிசி மற்றும்  ஸ்கந்தா ஆகியோடும்  தொடர்பு கெண்டு அவர்களது  கருத்துக்களையும் கேட்டிருந்தேன்.  விபரம் வெளிவந்ததுமே  ரிசி என்பவர்  அவர்  இயக்கிய  தமிழ் செய்தி இணையத்தளத்தினையும் நிறுத்திவிட்டு  தலைமறைவாகி விட்டிருந்தார். ஆனால் ஸ்கந்தாவோ  தனக்கு யாரையும் தெரியாது தனக்கும் இவற்றிற்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஒற்ரை வரி பதிலில் மறுத்திருந்ததோடு  ரிசி என்பவர்தான் (I.S.O.T.O.)  என்கிற தொரு அமைப்பின் ஊடாக  போரால் பாதிக்கப் பட்ட மாணவர்களிற்கு உதவுவதாக  தன்னிடம் பெரும் தொகை பணத்தினை வாங்கி ஏமாற்றி விட்டதாகவும்   எனக்கு மின்னஞ்சல் முலம்  பதில் தந்திருந்தார்.

அங்கவீனமடைந்த முன்னை நாள் போராளிகளை  ஏமாற்றிய விடயத்தில் சம்பந்தப் பட்டதாக  கூறப்பட்ட  உதயகலா மற்றும் தயாபர ராஜ் ஆகியோரோடு அப்பொழுது என்னால் உடனடியாக தொடர்புகளை  ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை.அதன் பின்னர்  சிலகாலங்களிற்கு பின்னர்  உதயகலா மற்றும்  தயாபராஜ் ஆகிரோடு  தொடர்பு கொள்ளக்கூடிய சந்தர்பம் எனக்கு கிடைத்த பொழுது  செய்திகளில் வெளியானபோல் தங்களிற்கும் நடந்த மோசடிகளிற்கும் எவ்வித சம்பந்தமும்  இல்லை அனைத்திற்கும்  ஸ்கந்தாவே பொறுப்பு என  அதற்குரிய ஆதாரங்களுடன்  தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக மீண்டும் இந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னரும் ஸ்கந்தா அவர்களிற்கு உதயகலா எழுதியிருந்த கடிதத்தினையும் இணைத்து  அவரது பக்க கருத்துக்களை கேட்டிருந்தேன். ஆனால் அவர் நேரடியாக எவ்வித பதிலையும் தராமல் இலங்கையில் வாழும் ராதிகா என்பரிற்கு  அவற்றை அனுப்பி ராதிகா மூலமாக சம்பந்தமேயில்லாத பதில் ஒன்றினை  அனுப்பியிருந்தார்.  அவற்றை பின்னர்  பார்க்கலாம்.இனி நடந்து முடிந்த மோசடி  பற்றியும் அதில் ஸ்கந்தாவின் பங்கு  என்ன என்பதனையும் பார்ப்போம்.

ஸ்கந்ததேவாவே , ரிஷி என்ற ரிசாந்தன் அல்லது ரிஷி ஆகிய இருவரும்  gatherpage என்கிற அமைப்பினை தாயகத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்து நடாத்தி வந்தனர். இந்த  gatherpage இல் 20 வரையிலான இளம் பெண்களை வைத்து பல்கலைக்கழகமாணவர்கள், கல்விகற்கும் மாணவர்களுக்கு உதவுவதாகக் கூறி நடாத்தி வந்தனர். சமநேரத்தில்  I S O T O என்ற அமைப்பினை ஸ்கந்ததேவாவின் மகளின் பெயரிலும், ரிஷியின் பெயரிலும் பிரித்தானியாவில் பதிவு செய்து நடாத்தத் தொடங்கினார்கள்.

இதேநேரம் நம்பிக்கையொளி என்றொரு அமைப்பினை லண்டனில் ஸ்தந்ததேவாவின் மனைவி கமலாவின் பெயரில் (வியாபார நிறுவனம் என்ற பதிவோடு) பதிந்து கொண்டார். நம்பிக்கையொளி மூலம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவியென்ற பெயரில் ஊடகங்கள் மூலமும், மக்களிடமும் பண வசூலிப்பு ஸ்கந்ததேவாவும் அவரது குழுவினரும் செய்து வந்தனர். இதில் சிறுபகுதி மட்டும் மக்களுக்குப் போக மீதப்பெரும்பகுதிக்கு கணக்கில்லாது போனது.

இச்செயற்பாட்டின் மூலம் நிகழ்ந்த ஊழல்கள் மக்கள் மத்தியில் தெரியவர இவ்வருடம் பெப்ரவரிமாதம் வாழைக்குட்டி கொடுத்து தாயக மக்களை வாழ வைக்கிறோம் என்ற பெயரில் நம்பிக்கையொளியை தொண்டு நிறுவனமாக பதிவு செய்து மீண்டும் மக்களை ஏமாற்றிப் பண வசூல் பண்ண புறப்பட்டுவிட்டது ஸ்கந்ததேவா கூட்டணி. ஏமாறுபவர்கள் உள்ளவரை ஸ்கந்தா போன்றவர்களும் இருந்து கொண்டேயிருப்பார்கள். அது போகட்டும். உதயகலாமீது எப்படி கள்ளப்பட்டம் விபச்சாரப்பட்டம் சூட்டப்பட்டது என்பதனைப் பார்ப்போம்.

உதயகலா துடிப்பும் துணிச்சலும் மிக்க  ஒரு பெண். இந்தப்பெண்ணை ஸ்கந்தா கூட்டணியின் முகவர்கள் அணுகுகிறார்கள். சமூக முன்னேற்றம் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை தமது நிறுவனங்கள் மூலம் செய்து வருவதாகவும் தமது நிறுவனம் இலங்கையிலும் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

தமது நிறுவனத்தில் பணியாளாக உதயகலாவை இணையுமாறும் மாதாந்தம் சம்பளம் தருவோம், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை ஊர்கள் தோறும் சென்று எடுத்துத் தருமாறும் வேண்டுகிறார்கள். தரப்படுகிற விபரங்களுக்கு, உரியவர்களுக்கு நம்பிக்கையொளி, i s o t o  இரண்டும் உதவிகளைத் தருமென்றும் கேட்டுள்ளனர். மக்களுக்கான உதவிகள் மூலம் தனக்கும் ஒரு வேலை வாய்ப்புக் கிடைக்கிறதே என்ற நம்பிக்கையில் உதயகலா ஸ்கந்தாவின் பணிப்பில் பணிக்கு அமர்த்தப்படுகிறார். இவர்கள் சொல்கிற இடங்களுக்கெல்லாம் சென்று பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை உதயகலாவும் சேகரித்து அனுப்பத் தொடங்கினார்.

இத்தோடு நின்றுவிடாமல் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு போரால் பாதிக்கப்பட்ட ஊனமுற்றவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டு சென்று கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலைகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியாகச் செய்வதாகவும் ஸ்கந்தா கூறியுள்ளார். வெளிநாடு போக விரும்புகிற போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் 2 முதல் 3 லட்சம் வரையான பணத்தையும் சேகரிக்குமாறும் பணித்தார். உதயகலா சுவிசிலிருந்து வந்திருப்பதாக மக்களிடம் அறிமுகமாகும்படியும் பணித்தார்கள் ஸ்கந்தாவும் அவர் பின் நின்ற கும்பலும்.


ஸ்கந்தா மீதிருந்த நம்பிக்கையில் உதயகலாவும் செயற்படத் தொடங்கினார். அத்தோடு வெளிநாடுகளிலிருந்து பலரை உதயகலாவுடன் ஸ்கந்தா தொலைபேசத் தொடர்புபடுத்திவிட்டார். தமது பணி மக்களுக்கானது அதில் உதயகலாவின் பங்கு தங்களுக்கு வேண்டும் என்பதனையும் வெளிநாட்டு முகவர்கள் கூறினார்கள். வெளிநாட்டில் இருந்து மக்களுக்காக இயங்குவோரென பலர் ஸ்கந்தாவின் ஏற்பாட்டில் உதயகலாவுடன் பேசியிருக்கிறார்கள். இப்போது முழுமையான நம்பிக்கை ஸ்கந்தா கூட்டணிமீது உதயகலாவுக்கு வந்துவிட்டது.

ஸ்கந்தாவினதும் அவரது கூட்டணியினரின் சொற்படி பல ஊனமுற்றவர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் சேகரித்து அவர்கள் சொன்னபடி கொழும்பில் இட ஒழுங்குகள் செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஒழுங்குகளையும் ஸ்கந்தாவின் ஆலோசனைப்படி உதயகலா பொறுப்பேற்றுச் செய்து கொண்டிருந்தார். வடக்கு கிழக்கு இரு பகுதியிலும் ஸ்கந்தா வழங்கிய தரவுகளோடு உதயகலா சென்று வெளிநாட்டுக்கு ஆட்கள் சேர்த்ததோடு ஸ்கந்தாவின் பெயரால் வழங்கப்பட்ட WheelChair, பண உதவிகளும் பல ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. றால் போட்டு சுறாபிடித்த ஸ்கந்தாவின் சூழ்;ச்சியை நம்பிய உதயகலாவும் ஸ்கந்தாவின் சொற்படி இயங்கிக் கொண்டிருந்தார்.

இவ்வேளையில் பயவாநசியபந என்கிற அமைப்பில் ரிஷியாலும் ஸ்கந்தாவாலும் இயக்கப்பட்ட அலுவலகத்திலும் அது சார்ந்த இடங்களிலும் பெண்கள் துஸ்பிரயோகம் ஏமாற்று வேலைகள் , ஆட்களைக் கொல்வதற்கான திட்டமிடல்கள் போன்ற வேலைகள் நடைபெறுவதனை பாதிக்கப்பட்ட சில இளம் பெண்கள் மூலம் உதயகலா அறிந்து கொள்கிறார்.  gatherpage  அலுவலகத்தில் நடைபெறுகிற ஊழல்கள் ஸ்கந்தாவுக்கு தெரியாமல் நடப்பதாக நினைத்த உதயகலா இவ்விடயம் பற்றி ஸ்கந்தாவுக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தினார்.

ஆயினும் ஸ்கந்தாவால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த உதயகலா gatherpage இல் நடக்கிற துஸ்பிரயோகங்கள் நிறுத்தப்படாவிட்டால் அதுபற்றி இராணுவத்தினருக்கும் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப் போவதாக ஸ்கந்தாவுக்கு தொலைபேசியில் மிரட்டினார். அத்தோடுgatherpage  இற்கு நேரே சென்று அங்கு பணியாற்றிய கஸ்தூரி , ராதிகா போன்ற பெண்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

கஸ்தூரி , ராதிகா இருவரும் உதயகலாவுடன் முரண்பட்டு ஸ்கந்தாவுக்கு விடயம் தெரிவிக்கப்பட்டது. விடயம் இப்பெண்களுக்கு இடையில் கைகலப்பு வரை சென்றுவிட உதயகலா பொலிசாருக்கு தொலைபேசியில் தகவல் சொல்லப்போவதாக தொலைபேசியை எடுக்க கஸ்தூரி திடீரென gatherpage அலுவலகத்தில் இருந்த எழுத்துப்பிரதி ஆவணங்கள் யாவற்றையும் தீயிட்டெரித்தார். விடயங்கள் உடனுக்குடன் ஸ்கந்தா கூட்டணிக்கு கஸ்தூரி , ராதிகா மூலம் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

விடயத்தைச சமாளிக்க ஸ்கந்தா உதயகலாவுடன் சமாதானம் பேச முயன்றார். உதயகலா விடாப்பிடியாக இந்த மோசடியை இணையங்களுக்கும் அச்சு ஊடகங்களுக்கும் அறிவிக்கப் போவதாகக் கூறினார். விடயத்தின் நிலமையைப் புரிந்து கொண்ட ஸ்கந்தா உதயகலாவை அமைதியாகச் சிலநாள் இருக்கும்படியும் தவறுகளை விசாரித்து முடிவுக்கு வருவோம் எனவும் வேண்டிக் கொண்டார். ஆனால் தொடர்ந்து இந்த மோசடிக்காரர்களுடன் தான் இயங்கமாட்டேன் எனக்கூறிய உதயகலா நம்பிக்கையொளியுடனான உறவை முறித்துக் கொண்டு வெளியேறினார்.

gatherpage இல் நடைபெறுகிற மோசடி வெளியில் உதயகலா மூலம் வெளிவராது இருக்க ஸ்கந்தா தனது நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் அவசர அவசரமாக உதயகலா தயாபரராஜ் மோசடி, விபச்சாரம் என செய்தியைப் பரப்பி மின்னஞ்சல் மூலமும் பரப்புரையை மேற்கொண்டார். வெறுமனே ஸ்கந்தாவின் மோசடியை வெளியில் சொல்லுவேன் என்ற உதயகலா மீது முழுப்பழியும் விழுந்துவிட ஸ்கந்தா கருணாநிதி கணக்கில் ஒரு புனைவையும் அவிழ்த்துவிட்டார். அதுதான் 28ஆயிரம் பிரித்தானியப் பவுண்ஸ்களையும் ரிஷியிடம் கொடுத்து ஏமாந்ததான கதை. உதயகலாவுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிராத ரிஷியை உதயகலாவுடன் தொடர்புபடுத்தி செய்தியை ஆளாளுக்கு ஊடகங்கள் கதையெழுதி வெளியிட்டிருந்தன.

ஸ்கந்தாவை நம்பி வெளிநாட்டுக்கு போகும் கனவோடு கொழும்பில் தங்கியிருந்தவர்களுக்கு விடயத்தைச் சொல்வதெப்படியெனத் தவித்த உதயகலா வெளிநாடு அனுப்பும் முகவர் ஏமாற்றிவிட்டதாகச் சொன்னதோடு பணத்தைக் கொடுத்தவர்கள் உதயகலாவையே சுற்றத் தொடங்கினார்கள். பெருந்தொகை பணத்தை உதயகலா முன்னின்று பெற்றுக் கொடுத்தமையால் அதற்கான பதிலையும் உதயகலாவே சொல்ல வேண்டியிருந்தது.

இந்தப்பணப்பிரச்சனை வந்ததும் ஸ்கந்தாவையும் ஸ்கந்தாவின் முகவரான மட்டக்களப்பின் முகவருக்கும் தொலைபேசியெடுத்து தான் பொறுப்பு நின்று பெற்றுத் தந்த பணத்தை உரியவர்களுக்குத் திருப்பிக் கொடுக்குமாறு வேண்டினார். ஸ்கந்தா எதற்கும் தான் பொறுப்பில்லையெனத் தப்பிக்க பல பொய்களைச் சொன்னார். இறுதியில் உதயகலா மோசடி விபச்சாரம் என்ற செய்தியை தான் இணையங்களுக்கு கொடுக்கவில்லையென்று சத்தியம் செய்தார். gatherpage இல் பணியாற்றிய பெண்பிள்ளைகளில் சிலரது பெயரைச் சொல்லி அவர்களே செய்தியை வெளியில் போட்டதாகவும் சொன்னார்.

செய்தி வந்த அவமானத்தால் தயாபரராஜ்ஜின் குடும்பம் அவரை வெறுத்து ஒதுக்கிவிட்டது. அத்தோடு சகோதரனுடன் இருந்த உதயகலாவின் தாயாரை உதயகலாவின் சகோதரன் வீட்டில் இருந்து வெளியேறச் சொல்லிவிட்டார். அந்தத்தாய் இன்று வரையும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலேயே ஆதரவற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது தயாபரராஜ் மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார். இதேபோன்ற நிலமையில் உதயகலாவும் மன அழுத்த நோய்க்கு ஆளாகி துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவமானத்துடன் வாழ முடியாத துயரத்தில் தங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளும் முடிவில் உதயகலா தயாபரராஜ் இருந்த நேரம் கடவுள் காட்டிய வழிபோல அவர்கள் பட்ட துன்பங்கள் யாவும் வெளியுலகிற்கு கொண்டுவரும் வகையிலான சந்தர்ப்பம் ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது.





தொடரும்.....
அடுத்த தொடரும் அங்கங்களில்.....
1) தயாபரராஜ் உதயகலா மோசடியானவர்களா புலிகள் தண்டித்தார்களா ?
2) உதயகலாவுடன் ரிஷி தொடர்புபடுத்தப்பட்டது எப்படி ?
3) தயாபரராஜ் எப்படிக் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தது ?
4) ஸ்கந்தா தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பதாக கூறும் குழலி (றஜிதன் ஜோதி) யார் ?
5) குழலியின் அண்ணனின் மகனான ஜோய்க்கும் ரிசிக்கும் என்ன சம்மந்தம் ? ஜோயிடம் ரிஷியின் முகவரான நிதர்சன் என்பவர் பெற்ற பணத்துக்கு என்ன நடந்தது ?
6) இந்த நாடகத்தில் ஸ்கந்தா தயார்படுத்தியயவர்கள்  யார் ?
 பிற்குறிப்பு :-
தொடர்ந்த மர்மங்களுக்கான பதில் இனிமேல் தொடரும்......மேற்படி மோசடிகள் தொடர்பான சகல புகைப்பட ஆதாரங்கள் ஒலிப்பதிவுகள் யாவும் எஎன்னிடம் உள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் அவற்றையும் வெளியிடக் காத்திருக்கிறோம்.
Photobucket


Photobucket