பாரீசில் மகாகவிபாரதியாரின் 125 வது ஆண்டுவிழா
11:33 AM, Posted by sathiri, 3 Comments
Comite de célébration du 125 éme Anniversaire de Mahakavi Bharathiyar
04-11-2007. காலை 9மணியிலிருந்து இரவு 8 மணிவரை
இடம் Salle ADYAR. 4-Square Repp (bd-Repp) 7507-Paris
M°.- Ecole Miltaire (RER(C) Pont de l'Alma
சிறப்பு விருந்தினராக திரு வெ.வைத்திலிங்கம்
(புதுவை தொழிற்துறை அமைச்சர்)
திரு தமிழருவி மணியன்
திருமதி ரேணுகா அப்பாத்துரை
தமிழகத்திலிருந்து மேலும் பல தமிழறிஞர்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள்
பரதநாட்டியம்.இன்னிசை.பட்டிமன்றம்.கவியரங்கம் இவற்றுடன்.தமிழ்நாடு கலைக்கோல் புரிசை கண்ணப்பதம்பிரான் தெருக்கூத்து மன்றம் வழங்கும்
பாரதியாரின் பாஞ்சாலி சபதம்
மதிய விருந்தோம்பலுடன் அனைத்தும் இலவசம்
தொடர்புகளிற்கு B.Dassaradane -.0 42 53 03 12 Paris- Brathassarady:- 06 12 23 86 14 Vannai Theivam:- 01 48 61 42 23
மாசில்லாதர்
3:12 PM, Posted by sathiri, 4 Comments
பிரான்சில் தலித் மகாநாடு
3:16 PM, Posted by sathiri, No Comment
http://thesamnet.net/?p=38
புலம் பெயர்ந்து, பல நாடுகளைத் தங்கள் வாழ்விடமாகக் கொண்ட தலித் சமூகத்திலிருந்து ஒரு சில சமூக சிந்தனையாளர்கள் தங்கள் சமூகப் பிரச்சினையும், இலங்கை இனப் பிரச்சனைத் தீர்வுடன் இணைக்கப்படவேண்டும் என கோரிக்கையைத் செயற்படுத்தும் வேலைத்திட்டங்களைத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த வருடத்திலிருந்து, பலவிதமான தலித் சமூக மேம்பாட்டு விழிப்புணர்ச்சி வேலைகள் செயற்படத் தொடங்கியதற்கு அடையாளமாக “வடு” என்ற மாதப் பத்திரிகை கடந்த நான்கு மாதங்களாக வெளிவருகிறது. “வடு” பத்திரிகையில் தலித் மக்களின் சரித்திரக் கூறுகள், அரசியல், பொருளாதார, சமூக விடயங்கள் எழுத்து வடிவத்தில் படைக்கப்படுகின்றன. இத்துடன் “தூ” என்ற தோழமை இணையத்தளமும் தலித் மக்களின் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பிரதிபலிக்கின்றன.
எத்தனையோ தமிழ் இயக்கங்களும், பிரமுகர்களும் கலந்து கொண்ட ஸ்ருக்காட் மாநாட்டில் எழுப்பப்பட்ட தலித் குரல்களை தமிழ்த் தேசியத்துக்குள் அடக்க முயன்றாலும்; E.P.R.L.F போன்ற முற்போக்குக் குழுக்கள் தலித் பிரச்சனையை ஒரு அரசியல் விடயமாகக் கணித்து பிரான்சில் இருக்கும் தலித் சமூக மேம்பாட்டுக் குழுவினருடன் ஒரு சந்திப்பை நடத்தினார்கள்.
தலித் முன்னணியினரின் அடுத்த செயற்பாடாக இலங்கையிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தலித் மக்களின் பல்வேறு விடயங்களை ஆராயும் நோக்கில் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 20, 21 ம் திகதிகளில் பாரிசில் ஒரு மகாநாடு நடக்கவிருக்கிறது.
அரசியல் ஆர்வலர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என்று பல தரப்பட்ட முற்போக்கு சக்திகளும் இணையும் இந்த மகாநாடு தமிழ் மக்களின் சமூக விடுதலைக்கு ஒரு வித்தியாசமான பரிமாணத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“எங்கள் ஆட்சி வந்தால் எந்தவிதமான பேதங்களும் இருக்காது” என்று மக்களை ஏமாற்றும் அரசியல் வாதத்தின் போலிமுகத்தை இனங்காட்டப் பல சரித்திர உண்மைகளை இந்த மகாநாடு மேடையேற்றும் என நம்பலாம்.
சமூகவியலில் அரசியல் மாற்றங்கள் தவிர்கமுடியாதவை. இம்மகாநாடு, தமிழ்த் தேசியத்தின் மாற்றுக் கருத்துக்களுக்கு முதற்படியாகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்பது அவர்களின் நிகழ்ச்சி நிரலை பார்த்தபோது புரிகிறது
சிலதமிழிச்சிகளின் பேச்சுகள்
3:10 PM, Posted by sathiri, No Comment
புலம்பெயர் தேசத்தில் சிறீலங்கா புலனாய்வு பிரிவின் புதிய பொறிகள்
2:33 PM, Posted by sathiri, 2 Comments
இந்தவார ஓரு பேப்பரிற்காக எழுதியது
சிறீலங்கா அரசானது காலங்காலமாக தனது தமிழின அழிப்பு வேலைகளை தாயகத்தில் மேற்கொண்டுவரும் வேளைகளில் அதற்கு எதிராக புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைளையும் அடக்கிவிட தனது சகல வளங்களையும் பாவித்து சில நடவடிக்கைகளை மேற்டிகாள்வதும் பொதுவாக சகலரும் அறிந்ததே. அது போலத்தான் தற்சமயம் மகிந்த அரசும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் தமிழ் தேசியத்திறகான ஆதரவை குலைப்பதில் முழுமூச்சாக முயன்று வருகிறார். ஆனால் கடந்த காலங்களில் சிறீலங்கா அரசபதவிகளில் இருந்தவர்கள் தமிழர்களின் எழுச்சியை ஒடுக்க யாராவது ஒரு தமிழரிற்கு பதவிகளை கொடுத்து அவர் மூலமாகவே சர்வதேசமெங்கும் தமிழ் தேசிய செயற்பாடுகளிற்கொதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
மகிந்த அரசோ தன் சொந்த நலனை காக்ககூட ஒரு தமிழனிற்கு பெரும்பதவி ஒன்றினை குடுக்க விரும்பாமல் கொஞ்சம் மாறு பட்டு புலம்பெயர் தேசங்களில் இலகுவாய் விலை போக கூடிய சில தமிழர்களை தேடிப்பிடித்து அவர்கள் மூலமாக குறைந்த செலவில் நிறைந்த சேவையை எதிர்பாத்து சில செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த புலம்பெயர் தமிழர்களும் வாங்கியதற்கு வஞ்சகமில்லாமல் உழைப்பதையே காணக்கூடியதாக உள்ளது. இது பேலத்தான் அண்மையில் பிரான்சிற்கு வந்து போன ஒரு தமிழ் அமைச்சர் மூலமாக இலங்கை புலனாய்வு துறை பிரான்சிலும் சில நடவடிக்கைகளை செய்து முடிக்க சில திட்டங்கள் தீட்டப்பட்டு அவற்றை சில தமிழர்களிடம் ஒப்படைத்து சென்று விட்டார்.
அவர்கள் திட்டப்படி பிரான்ஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் பல்வேறு பெயர்களில் பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு பட்ட நோக்கங்களிற்காக நடாத்தபடுவது போன்ற ஒரு மாயையை காட்டி சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது. ஆனால் அந்த எல்லா நிகழ்வுகளிலுமே முதற்கட்டமாக மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் தேசிய மற்றும் தமிழர்களின் உரிமைபோரிற்கும் எதிரான கருத்துக்களை பரப்பி அவர்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவது. பின்னர் மீண்டும் தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம் தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழர் உரிமை போரின் முதுகெலும்பாக இருக்கும் புலம்பெயர் தேசத்து தமிழர்களின் ஆதரவை மழுங்கடிப்பதே முக்கிய நோக்கமாகும்.
அதே போல இந்தியாவில் இலங்கையரசு ஆழும்கட்சிகளையும் சில அதிகாரிகளையும் தன் சூழ்ச்சியால் தன்வசம் இழுத்து வைத்திருந்தாலும் தமிழ் நாட்டின் சாதாரண மக்களிடம் ஈழத்தமிழரிற்கான ஆதரவை இன்றுவரை சிதைக்க முடியாமல் திண்டாடிவருவது அனைவரிற்கும் தெரிந்த விடயம்தான். அதற்காக இலங்கையரசும் இந்திய அதிகாரிகளும் சேர்ந்து ஆடிய நாடகங்களும் அதே நேரம் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை கிளைத்தூதரகமும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டும் பெரிய அளவில் எவ்வித பயனையும் இலங்கையரசு பெறாததால். அடுத்த நடவடிக்கையாக புலம்பெயர் தேசத்து தமிழர்களை வைத்தே இந்த தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவை சிதைக்க திட்டம் தீட்டியுள்ளது. முக்கியமா தமிழ் நாட்டில் எத்தனை துன்பங்கள் வந்தபோதும் தமது தளராத ஆதரவை தந்தவர்கள் பெரியார் திராவிடஇயக்கங்களும் அரசியல் கட்சிகளும்.
தலித் இயக்கங்களும் அரசியல்கட்சிகளும் ஆகும்.
எனவே இந்த அமைப்புக்களின் ஆதரவை தமிழ் நாட்டில் சிதைத்து விட்டால் மற்றைய ஆதரவு கரங்களையும் மடக்கி விடாலாமென்பது இலங்கையரசின் கனவு. இதன் ஆரம்ப கட்டமாக பிரான்சில் சிறீலங்கா அரசிற்கு சேவகம் செய்ய புறப்பட்டவர்களால் சில நிகழ்வுகள் எற்பாடு செய்யபபட்டுள்ளன. அவை சமாதானப்பறைவைகள் என்கிற பெயரில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு என்கிற தலைப்பில் ஒரு எற்பாடு . இதை கேட்டதுமே சிரிப்புதான் வந்தது இதை படிக்கின்ற உங்களும் கட்டாயம் வரும். ஏனெனில் எங்கள் தேசத்தில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் அமைதி பூத்து குலுங்குகின்றது. எனவேதான் ஈராக்கை பற்றி கதைக்க போகினமாம். அடுத்த நிகழ்வு 26 புகலிட பெண்கள் சந்திப்பு இந்த புகலிட பெண்கள் சந்திப்பில் வருடா வருடம் வழைமை போல நடக்கின்ற புலியெதிர்ப்பு தான் இந்த வருடமும் நடக்க போகின்றது. எனவே இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
அனால் அடுத்ததாக நடக்க போகின்ற முதலாவது தலித்மகாநாடு என்கிற பெயரில்: நடக்க போகின்ற மகாநாடுதான் முக்கியமான ஆனால் மேசமான விளைவுகளை ஏற்படுத்த போகின்ற மகாநாடு. ஏனெனில் நான் முதலே குறிப்பிட்டது போல இது இந்தியாவில் தலித் அடைப்புகளிடையே ஈழத்தமிழரிற்கு இருக்கும் ஆதரவை சீர்குலைக்கும் ஒரு நிகழ்வு காரணம் இந்த நிகழ்வை ஒழுங்கு படுத்தியிருப்பவர்கள் இலங்கையரசின் எலும்புத்துண்டை எட்டிப்பிடித்தவர்கள். ஏற்கனவே இந்த மகாநாடு பற்றி நான் எதிர்பார்த்ததை போல இணைய தளங்களிலும் வலைப்பூக்களிலும் பல சர்ச்சையைகளை கிழப்பி விவாதங்களும் தொடங்கி விட்டது.
இந்த மகாநாட்டிற்கு பிரான்சில் பெரியார் விழிப்பணர்வு இயக்கம் என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் ஒரு பெண்மணியும் தெரிந்தோ தெரியாமலோ இந்த மகாநாட்டிற்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் ஆனாலும் அவரிற்கு தலித் மகாநாட்டின்உள்நோக்கம் பற்றிய போதிய விளக்கம் கொடுத்தும் அவர் பெரியார் இயக்கத்தின் பெயரால் தொடர்ந்தும் தனது ஆதரவை நடக்கவிரக்கும் தலித் மகாநாட்டிற்கு ஆதரவு வழங்குவதால் இந்த பெண்மணியும் இலங்கையரசிடம் விலைபோயுள்ளார் என்று எண்ணவே தோன்றுகின்றது. எது எப்படியோ இலங்கை புலனாய்வு பிரிவினர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்வுகள் பற்றி பிரான்ஸ்வாழ் தமிழர்கள் விழிப்பாயிருக்க வேண்டிகால கட்டம் இது. ஆனால் இந்த ஏற்பாடுகள் இந்தியாவில் ஈழத்தமிழர்களின் ஆதரவுத்தளம் ஆட்டம்காணுமா??அல்லது இந்தச்சதிகள் தகர்க்கப்பட்டு மேலும் உறுதியாகுமா?? பொறுத்திருந்து பார்க்கலாம் நன்றி சாத்திரி
பொம்பளைப் பொறுக்கிங்களா?
6:43 AM, Posted by sathiri, No Comment
பெண்கள் என்றால் உங்களுக்கு என்ன காமக்கழிச்சடைகளா?
போதைக்கு உபயோகித்துக் கொள்ளும் வஸ்துக்களா?
உங்களின் காமவெறிக்கு உருவான ஜீவன்களா?
இணையத்தில் சில பொம்பளைப் பொறுக்கி பதிவர்கள் இருக்கிறார்கள்.
பெண் பதிவர்களை எப்படி வர்ணிப்பது?
கவர்ச்சியான அதே சமயம்
இரட்டை அர்த்த வார்த்தைகளை எப்படி போட்டு எப்படி எழுதுவது
என்றே நினைத்துக் கொண்டிருப்பார்கள் போலும்!
உதாரணத்திற்கு பதிவர் சாத்திரி என்னை ஆண்பாலில் அழைக்கின்றார்.
http://sathirir.blogspot.com/2007/10/blog-post_8155.html
இயக்கத்தின் ஆதரவாளர் போல் பேசும் இவரின் செயல்களுக்கு
இயக்கம் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
நான் பெண் என்பது தெரிந்தும் "தம்பி" என்று அழைப்பதற்கு காரணம்
பல உட்பொருளை கொண்டது. முகம் தெரியாத அவரை நான் "டீ" போட்டு
பேசட்டுமா? ஏன்டி நீ உன் அம்மாவை "அப்பா" என்று தான் அழைப்பாயாடி!
அனானி பெயரிலும் அதை தொடர்ந்து வரும் உன் பின்னூட்டத்தையும்
வைத்து உன்னை அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டாய்!
பெண் என்றால் கேலிக்குறிய ஜீவனாக நினைக்கும் உனக்காக
நிர்வாணப் பெண்களின் போராட்டத்தைத்பார்.
http://sinnakuddy1.blogspot.com/2007/01/blog-post_29.html
உரிமையும், அட்டுழியமும், ரொவுடித்தனமும் அதிகரிக்கும் போது
ஆவேசப் பெண்களின் புரட்சியை பார்.
தமிழச்சி
பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா.
தொடர்புகளுக்கு : periyar71@yahoo.com
Posted by தமிழச்சி at 12:54
எனக்கெல்லாம் மினக்கெட்டு பதில் பதிவு போட்டதற்கு நன்றி தமிழிச்சி மற்றப்பக்கம் உங்களிற்காக சிறீ ரங்கன் கொடுக்கு கட்டிவிட்டார் முடிந்தால் சோபா சக்தி .சுகனையும் ரயாகரனையும் கூப்பிடுங்கள்..வாழ்க பெரியார் விழிப்புணர்வு. வளர்க அவர்புகள் ஒங்குக தமிழிச்சி தம்பியின் தற்பெருமை
தமிழிச்சி தம்பிக்கு
2:11 PM, Posted by sathiri, 6 Comments
ஜரோப்பிய அவலம்
1:08 PM, Posted by sathiri, One Comment
ஜரோப்பா வாழ் தமிழர்களே அவதானமாயிருங்கள்.
இலங்கை அரசும் அதன் ஒட்டுகுழுக்களும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் மத்தியில் அவர்களது தமிழ்தேசியத்தின் பற்றுறிதியையும் மற்றும் தமிழீழ விடுதலை ஆதரவையும் மழுங்கடிக்கும் செயற்பாடுகளை அண்மைகாலமாக வேகமாக முடிக்கி விடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதற்காக அவர்கள் வெளிநாடுகளில் தங்கள் சுயநலத்திற்காக விலைபோன பலரையும் ஒன்றிணைத்து அவர்களிற்கு வேண்டிய பொருளாதார உதவிகளை வாரி வழங்கி தங்களிற்கு உதவியாக இணைத்து பல செயற்பாடுகளை புலம்பெயர் தேசமெங்கும் செயற்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களின் இந்த செயற்பாடுகள் தற்சமயம் பிரான்ஸ் நாட்டை மையமாக வைத்தே தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அண்மையில் பிரான்ஸ் நாட்டிற்கு வந்து போன ஈ.பி.டி.பி. ஒட்டுக்குழுவின் தலைவர் டக்டஸ் அவர்கள் பிரான்ஸ் நாட்டில் சிலவிலைபோன தமிழர்களை வைத்து அதற்கான அத்தி வாரத்தை போட்டுவிட்டு போயிருக்கிறார்.
அவர்களது திட்டத்தின் படி பலவேறு அமைப்பகளின் பெயர்களில் பல்வேறு தலைப்புக்களில் பல கூட்டங்கள் அல்லது கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்தி அதில் பிரான்ஸ் வாழ் தமிழர்களை உள்வாங்கி அவர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்தேசிய உணர்வையும் தமிழீழ விடுதலை ஆதரவையும் மழுங்கடிப்பதாகும்.இதற்கெனஇவர்கள் நன்கு திட்டமிட்டு சில கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் பிரான்சில் ஏற்பாடு செய்து துண்டு பிரசுரங்கள் தொலைபேசி மூலமாகவும் ஆள்சேர்க்கும் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டனர். அவர்கள் முதற்கட்டமாக தொடங்கியுள்ள சில நிகழ்வுகள் இதோ 26வது புகலிடபெண்கள் சந்திப்பு இதில் பெண்கள் பற்றி பிரச்சனைகளை ஆராய போகினமாம். 13மற்றும்.14.10.2007 இடம் la courneuve அடுத்ததாக 14.10.2007 சமாதான பறைவைகள் என்கிற தலைப்பில் ஈராக்மீதான ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க போகினமாம். இடம் sacelleஅடுத்ததாக20.மற்றும் 21 .10.2007 ந் திகதிகளில் தலித்து மகாநாடாம். இடம் sacelle இந்த மூன்று நிகழ்வுகளிலும் உள்ளே கதைக்கபோறது என்னவோ ஈழபோராட்டத்திற்கான எதிர்புகருத்துகள்தான். எனவே பிரான்ஸ் வாழ் தமிழர்களே அவதானமாயிருங்கள். இவர்களை இனங்காணுங்கள்.
ஜயோஅப்பா அடிக்காதையுங்கோ
3:01 PM, Posted by sathiri, No Comment
ஒரு பேப்பருக்காக
விஞ்ஞான கண்டு பிடிப்புக்களில் இந்த தொலைபேசியின் கண்டுபிடிப்பும் ஒரு உன்னதமானதுதான். கைத்தொலைபேசியின் வரவிற்கு பின்னர் அதன் தொழில் நுட்பவளர்ச்சியும் மாற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துதான் செல்கிறது.முன்பெல்லாம் ஊரில் ஒருவர் வீதியில் தன்பாட்டில் சிரித்து கதைச்சபடி நடந்து போனல் சந்தேகமே இல்லை அவருக்கு விசர் என்று எல்லோரும் முடிவு கட்டிடுவினம்.ஆனால் இன்று நிலைமை அப்பிடியில்லை காரணம் கைத்தொலைபேசி புளுதோத் என்கிற சின்ன கருவியை காதுக்குள்ளை வைச்சிட்டு எல்லாருமே தங்கடை பாட்டிலை கதைச்சபடிதான் போகினம். இப்ப யார் கதைக்காமல் தன்ரை பாட்டிலை கம்மெண்டு போகினமோ அவைதான்விசரர் எண்டு நினைக்கிற அளவுக்கு நிலைமை மாறி போச்சுது.அது மட்டுமில்லை தொலைபேசி தொல்லை பேசியாவும் மாறிப்போச்சுது.இன்றைய நிலைமை இப்பிடியிருக்கு முந்தி ஊரிலை தொலைபேசியை காணுறதெண்டாலே அபூர்வம்.
முக்கியமா அரசாங்கம் சம்பந்த பட்ட கச்சேரி புகையிரத நிலையம்.தபால்கந்தோர்.காவல்ந??லையங்களிலையும் மற்றது பெரிய பணக்காரர் அதுவும் அரசியல் செல்வாக்கு இருக்கிறவையின்ரை வீடுகளிலைதான் தொலைபேசி இருக்கும்.இதன் இணைப்புகள் வீதியிலை ஒருபக்கம் கரண் கம்பம் எண்டால் மற்றபக்கம் பதிவாய் கம்பங்கள் நட்டு பித்தளை கம்பிகளால் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். தொலைபேசி பெரியதாய் கறுப்பாய் கிட்டத்தட்ட ஒரு மூண்டு நாலு கிலோ பாரமாவது இருக்கும். நீங்கள் வெளிமாவட்டத்திற்கு யாரோடையாவது கதைக்கிறதெண்டாலே நேரடியாய் அடிச்சு கதைக்க முடியாது .
தொலைபேசி கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அடிச்சு நீங்கள் கதைக்கபோற இலக்கத்தை குடுத்திட்டு தொலைபேசிக்கு பக்கத்திலை ஒரு கதிரையை போட்டு காவல் இருக்க வேண்டியதுதான் அவையள் அந்த இலக்கத்துக்கு அடிச்சு லைன் கிடைச்சதும் உங்களுக்கும் அடிச்சு இணைச்சு விடுவினம்.அப்பிடி நீங்கள் கதைச்சு கொண்டு இருக்கேக்கை எங்கையாவது கம்பி இணைப்பிலை காவோலை விழுந்து கம்பி அறுந்தால் உங்கடை கதையும் அறுந்து போகும்.எனக்கு சின்னவயசிலை ஒரு பெரிய சந்தேகம் நாங்கள் கதைக்கிறது எப்பிடி இந்த கம்பிக்குள்ளாலை போகுது எண்டு பலநாள் யோசிச்சுபாத்தும் பிடிபடேல்லை ஒருநாள் அதை ஆராச்சி பண்ணிபாக்கவேணும் எண்டு நினைச்சு ஒருநாள் தந்தி கம்பத்திலை ஏறி கம்பியிலை காதைவைச்சு கொண்டிருக்க அந்தவழியாலை வந்த சித்தப்பா கண்டிட்டு பூவரசம் தடியொண்டை புடுங்கி வீடுவரைக்கும் கலைச்சு அடிச்சு கொண்டு வர அதை பாத்திட்டு அப்பா ஏன் மகனுக்கு அடிக்கிறாயெண்டார்.
அதுக்கு சித்தப்பா சொன்னார் உன்ரை மகன் தந்திக்கம்பத்திலை ஏறி கம்பியிலை காதைவைச்சு கொண்டிருக்கிறான் இப்பிடியே விட்டா நாளைக்கு கரண்டு கம்பத்திலை ஏறி கரண்வருதாஎண்டு கையை வைச்சு பாப்பான் எண்டார்.பிறகென்ன மிச்சத்துக்கு அப்பாவும் கூரையிலை செருகியிருந்த பிரம்பை உருவ என்ரை ஆராச்சியும் அதோடை நிண்டுபோச்சுது.இல்லாட்டி இண்டைக்கு நானும் ஒரு விஞ்ஞானியாகி குறுந்தாடியும் வைச்சு கண்ணாடியும் வெள்ளை கோட்டும் போட்டபடி விஞ்ஞான விளக்கம் குடுத்துகொண்டிருப்பன். இப்பிடி உங்களுக்கு விண்ணாணம் எழுதிகொண்டிந்திருக்கமாட்டன் என்னாலை இப்ப குறுந்தாடி தான் வைக்க முடிஞ்சுது விஞ்ஞானியா வரமுடியேல்லை எல்லாத்தையும் சித்தப்பா கெடுத்துப்போட்டார் சரி ஆராச்சிதான் பண்ண முடியேல்லை ஒரு நாளாவது தொலைபேசியிலை யாரோடையாவது கதைக்கவேணும் எண்டு எனக்குள்ளை ஒரு ஆசை ஏன் பேராசை எண்டே சொல்லலாம்.
ஆனால் அந்த நேரத்திலை எங்கடை ஊரிலை இரண்டே இரண்டு தொலைபேசி தான் இருந்தது ஒண்டு தபால்கந்தோரிலை மற்றது ஒரு பெரிய அரசியல்புள்ளி ஒருதரின்ரை வீட்டிலை.83ம் ஆண்டு கலவரம் நடக்கேக்கை எங்கடை ஊர்ச்சனம் எல்லாம் தங்கடை சொந்தங்களின்ரை செய்தி அறிய இவரின்ரை வீட்டு தொலைபேசியைதான் சுத்திவர காவல் நிண்டது இப்பவும் நல்ல ஞாபகம். அந்தநேரத்திலை இந்த வெளிநாட்டு அழைப்பெல்லாம் வாறேல்லை .அனேகமா கொழும்பிலை இருந்து இல்லாட்டி ஏதாவது மாவட்டத்திலை இருந்து அவசர செய்தி மட்டும் வரும்.எங்கடை ஊரிலை உள்ளவைக்கு ஏதாவது அவசர செய்தியெண்டால் ஒண்டு தந்தி வரும் அல்லது அந்த அரசியல்வாதி வீட்டுக்கு தொலைபேசிவரும் செய்தியை சொல்லிவிடச்சொல்லி.
இந்த தந்தியிலையும் தொலைபேசியிலையும் எவ்வளோ செய்தியளை பரிமாறலாம் ஆனாலும் எங்கடையாக்களுக்கு அந்த நேரம் ஏதாவது விபத்து இல்லாட்டி யாராவது செத்தால்தான் தந்தியடிக்கிற இல்லாட்டி தொலைபேசியடிக்கிற பழக்கம்இருந்ததாலை தந்தி வந்தால் அதை பிரிச்சு வாசிக்காமலேயே ஒப்பாரிவைக்க தொடங்கிவிடுவினம். அதே மாதிரித்தான் அந்த அரசியல் வாதியின் வீட்டு வேலைக்கார பெடியன்வந்து யாராது வீட்டில் உங்களுக்கு ரெலிபோன் வந்திருக்கு கெதியா வாங்கோ எண்டாலே போதும் வீட்டுகாரரர் பக்கத்து வீட்டு காரர் எல்லாரும் அலறியடிச்சபடி ஓடுவினம்.இது இப்பிடியிருக்க ஒருநாள் யாழ்ப்பாணநகரத்துக்கு போன நான் என்ரை நீண்ட நாள் தொலைபேசிகதைக்கிற ஆசையை அண்டைக்கு நிறைவேற்றலாம் எண்டு நினைச்சு யாழ்ப்பாணம் தபால் கந்தோருக்குள்ளை நுளைஞ்சன் ஆனால் யாருக்கு அடிக்கிறதெண்டு யோசிச்சு பாத்தன் ஏணெண்டால் தொலைபேசியிலை கதைக்கிற அளவுக்கு எனக்கு ஒருதரையும் தெயாதது மட்டுமில்லை எனக்கு தெரிஞ்சவையின்ரை வீடுகளிலை தொலைபேசியும் இல்லை.
அதாலை எங்கடை ஊர் அரசியல் வாதியின்ரை வீட்டுக்கு போனடிச்சு எங்கடை வீட்டு காரரை கூப்பிட்டு கதைப்பம் எண்டு நினைச்சு அந்த வீட்டு இலக்கத்தை தபால்கந்தேர் காரரிட்டை சொல்ல அவரும் தொலைபேசியிலை விரலை விட்டு சுழட்டி போட்டு றிசீவரை தந்தார்.அந்த வீட்டிலை தொலைபேசியை எடுத்தவரிட்டை நான் அப்பாவின்ரை பெயரை சொல்லி அந்த வீட்டு காரரோடை அவசரமா கதைக்கவேணும் ஒருக்கா கூப்பிடுங்கோ நான் ஒரு அஞ்சு நிமிசத்தாலை திருப்ப எடுக்கிறன் எண்டிட்டு வைச்சிட்டன். அந்த வீட்டு வேலைக்கார பெடியன் செய்தி சொல்ல வீட்டை போன நேரம் வீட்டிலை அம்மம்மாவை தவிர வேறை ஒருத்தரும் இருக்கேல்லை.அவனும் அம்மம்மாவிட்டை உங்களுக்கு ரெலிபோன் வந்திருக்கு அவசரமாம் கெதியா வாங்கோ எண்டு சொல்லவும். அம்மம்வாவும் கொழும்பிலை இருந்த மாமாவுக்கோ இல்லாட்டி திருகொணமலையிலை இருந்த சின்னம்மாவுக்கோ ஏதோ நடந்திட்டு எண்டு நினைச்சு ஒப்பாரிவைக்க பக்கத்து வீட்டுகாரரும் சத்தம்கேட்டு வந்து அம்மம்மாவை சமாதானப்படுத்தி எல்லாருமா சேந்து அந்த வீட்டிலை வந்து என்ரை தொலைபேசிக்காக காவல் நிண்டிச்சினம்.
நான் மீண்டும் அடிக்கவும் பக்கத்து வீட்டுகாரர்தான் கதைத்தார் அவர் என்னிடம் தம்பி அந்தவீட்டிலை மாமியாரை தவிர மற்றாக்கள் ஒருதரும் இல்லை நீங்கள் என்ன பிரச்சனையெண்டாலும் என்னட்டை சொல்லுங்கோ நான் பக்கத்து வீட்டுகாரர்தான் எண்டாலும் அவையின்ரை குடும்பத்திலை ஒருத்தர் மாதிரி அதாலை பிரச்சனையில்லை என்னட்டை சொல்லுங்கோ நான் அவையிட்டை பக்குவமா எடுத்து சொல்லுறன் எண்டு படபடப்பாய் கதைத்து கொண்டிருக்கவும் எனக்கு அம்மம்மாவின் அழுகை சத்தம் தொலைபேசிக்குள்ளாலை கேட்டது. அப்போதான் என்ரை விழையாட்டு வினையாபேச்சுதெண்டது எனக்குவிழங்கியது .
உடனே அவரிடம் நான் தான் கதைக்கிறது என்கிற விபரத்தை சொல்லி அம்மம்மாவை அழவேண்டாமெண்டு செல்லுங்கோ நான் சும்மாதான் போனடிச்சனான் கொஞ்ச நேரத்திலை வீட்டை வாறன் என்று சொல்லி தொலை பேசியை வைத்து விட்டு வீட்டுகாரர் வர முதல் முதலே வேகமாய் போய் அம்மம்மாவை சமாதானப்படுத்தி விடலாமென்று நினைத்து சைக்கிளை மிதித்தேன். ஆனால் நான் வீட்டிற்கு போகும் போதே வீட்டுக்காரர் எல்லோரும் முற்றத்தில் நின்றபடி என்வரவை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர்.நான் சைக்கிளை நிறுத்தியதும் அப்பாவின் கை கூரையில் செருகியிருந்த பிரம்பை உருவியது. பிறகென்ன அய்யோ அப்பா அடிக்காதேங்கோ இனி இப்பிடி செய்யமாட்டன்.......................