Navigation


RSS : Articles / Comments


தமிழ் நாடும் .. தேசியமும் தமிழரும் ..

3:06 PM, Posted by sathiri, One Comment

தமிழ் நாடும் .. தேசியமும் தமிழரும் ...

இலங்கைத் தீவில் சிங்கள தேசிய வாதமே முதலில் தோற்றம் பெற்றது. காரணம் ஆங்கிலேய அரசுக்கு எதிராக சிங்களவர்களே அதிகம் போரசிக்கொண்டிருந்தார்கள். அப்படி போராடிய சிங்களதலைமைகளான அநாகரிக. தர்ம பாலா போன்ற வர்களால். சிங்களத் தேசியம் உருப்பெற்றது. தமிழர்கள் ஆங்கிலேய அரசோடு சமரசம் செய்தும் இணக்க அரசியல் செய்தும் தங்களது தேவைகளையும் அரசியல் அபிலாசைகளையும் நிறை வேற்றிக் கொண்டிருந்தனர் அதனால் அவர்களுக்கு தமிழ்த் தேசியம் பற்றிய தேவைகள் ஏதும் இருந்திருக்கவில்லை . இது சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்கள் மீது லேசான எரிச்சலை உண்டுபண்ணத் தொடங்கியிருந்தது.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 1950 நடுப்பகுதியில் தான் தமிழ்தேசியம் என்பது தமிழர் தரப்பு தலைவர்களான அருணாசலம் இராமநாதன் போன்றவர்களால் தோற்றம் பெற்று பின்னர் செல்வநாயகம் காலத்தில் உரம் பெற்றது.அதே நேரம் தமிழ் நாட்டில் திராவிடக் கட்சியின் தோற்றமும் அதன் வேகமான வளர்ச்சியும் இலங்கைத் தமிழர்களிடமும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணத் தவறவில்லை .திராவிடக் கட்சியின் வளர்ச்சிக்கு எப்படி சினிமா உதவியதோ அதே சினிமா தான் இலங்கைத் தமிழர்களிடமும் திராவிடக் கட்சிகளின் தாக்கத்தை கொண்டு வந்து சேர்த்திருந்தது .
திராவிடக் கட்சித் தலைவர்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்கான ஆவேசப் பேச்சுக்கள் இலங்கைத் தமிழ் தலைவர்களையும் கவர்ந்தது .இலங்கையில் அரசியல் மேடைகளில் அண்ணாவைப் போலவும் கருணாநிதியைப் போலவும் கரகரத்த குரலில் பலர் பேசத் தொடங்கியிருந்தார்கள் .

இவையெல்லாம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தையும் வேகத்தையும் கொடுக்கத் தொடங்கியிருந்தது .அதே நேரம் சிங்களத் தலைமைகளிட்கு ஒரு பயத்தை உருவாக்கத் தொடங்கியிருந்தது .அது என்ன வெனில் இலங்கையை பொறுத்தவரை தமிழர்கள் சிறுபான்மையினர்தான் .ஆனால் சிங்களத் தலைமைகளுக்கு இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுத்தமிழர்கள் தமிழர்கள் எல்லாம் ஒன்றுதான் .பொதுவாக அனைவரையும் தமிழர்களாகவே பார்த்தார்கள் .

அப்படிப் பார்க்கும் போது சிங்களவர்கள் தமிழர்களை விட இலங்கைத் தீவில் மட்டுமே வாழ்கின்ற ஒரு சிறு பான்மையினம் .மிகப் பெரிய தொகையான தமிழினத்திடம் இருந்து சிறுபான்மையான தங்களை தற்காத்து கொள்ள வேண்டிய தேவை. அதன் பயம் சிங்கள தேசிய வாதமானது சிங்கள இனவாதமாக மாற்றம் பெற்றது .சிங்களத் தலைவர்களான பண்டார நாயக்கா .சிறில் மத்தியு .ஜெயவர்த்தனா .போன்றவர்கள் அதனை வளர்த்தார்கள் அதற்குள் அவர்களது சுயநலங்களும் இருந்தது .சிங்கள இன வாத வளர்ச்சியின் பிரதி பலிப்பு இலங்கை தீவில் தமிழர்கள் மீதான வன்முறையை நடத்தத் தொடங்கியிருந்தது .இந்த வன்முறைகள் தமிழ் தேசிய வாதத்தினை தமிழ் இனவாதமாக மாற்றத் தொடங்கியது .தமிழர் விடுதலைக் கூட்டணி த் தலைவர்கள் தீவிர தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் சிங்கள இன வாதத்துக்கு கொஞ்சமும் சளைக்காத அதேயளவு மூர்க்கத் தோடு தமிழ் இனவாதத்தினை வளர்த்தார்கள் .

தமிழகத்தின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு அடுத்த படியாக இலங்கையில் தமிழீழக் கோரிக்கை வலுக்கத் தொடங்கியது .ஆனால் தமிழ் நாட்டில் திராவிடக் கட்சின் வெற்றியோடு தனித் தமிழ் நாட்டுக்கான கோரிக்கைகள் அப்படியே தான் இருக்கின்றது என்று ஆனால் இப்போதைக்கு ஆசியமைப்போம் .என்று விட்டு பெயரை மட்டும் தமிழ் நாடு என்று மாற்றம் செய்து விட்டு அண்ணாதுரை ஆட்சியமைத்து விட்டார் .ஆனால் இலங்கையில் தமிழீழக் கோரிக்கை ஆயுதப் போராட்ட வடிவமெடுத்து .இளையோர்கள் ஆயுதங்களை தூக்கினார்கள் .தமிழகத்து தலைவர்கள் தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கை விட்டுவிட்டு தமிழ் ஈழம் பற்றி பேசத் தொடங்கினார்கள் .ஈழத்து ஆயுத அமைப்புகளுக்கு உதவத் தொடங்கினார்கள் .அங்கே விட்டதை இங்கே பிடித்து விடலாம் என நினைத்தார்கள் .
இந்திய மத்திய அரசும் உதவியது

.இந்தியாவின் உதவியோடு இலங்கைத் தீவில் தமிழ் ஈழம் அமைந்தால் அது வெறுமனே வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் பிரதேசத்தோடு மட்டும் நிற்காது தமிழகத்தின் உதவியோடு ஒட்டு மொத்த இலங்கையும் தமிழர் வசமாகி சிங்களவர்கள் அனைவரும் அழிக்கப் பட்டு விடுவார்கள் என்று சிங்களத்துக்கு மேலும் பயத்தையும் சினத்தையும் கொடுத்தது அதனால் சிங்களம் மேலும் மூர்கதோடு போராடியது.
காலப் போக்கில் தமிழ் நாட்டில் திராவிடக் கட்சி உடைந்து பல கட்சிகள் ஆகிய பின்னரும் புதிதாக தொடங்கிய தமிழக கட்சிகள் அனைத்துக்குமே ஈழம் ஈழத் தமிழர் என்பது அவர்களது மேடைப்பேச்சுக்களில் கட்டாயம் பேச வேண்டிய பேசு பொருளாகிப் போனது .அதேதான் இன்று சீமானும் செய்கிறார் .இரத்த ஆறு ஓடும். இலங்கை சென்று போரிடுவோம் .ஆறு கோடி தமிழர்களும் பொங்கியெழு வோம் .கரும்புலியாக மாறுவோம் என்கிற தமிழக அரசில்வாதிகளின் பேச்சுக்கள் ஈழத் தமிழனுக்கு இதுவரை எந்த நன்மையும் செய்யவில்லை செய்யப் போவதுமில்லை அது சிங்களத்தை சீண்டி இலங்கையில் தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்தொழிக்க மட்டுமே உதவும் . முப்பதாண்டு கால யுத்தமும் ஈழத் தமிழனின் பெரும் அழிவும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு உம்மையை புரிய வைத்திருக்கிறது அது என்னவெனில் தமிழகத்து அரசியல் வாதிகள் உணர்ச்சி பொங்க பேசலாம் .ஆட்சில் இருந்தால் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம் அதை தவிர்த்து .ஈழத் தமிழனுக்காக ஒரு துருபைக் கூட அசைக்க முடியாது