Navigation


RSS : Articles / Comments


வாமலோசன் விடுவிக்கப்பட்டார்.

1:09 AM, Posted by sathiri, 12 Comments

அறிவிப்பாளர் வாமலோசன் விடுவிக்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட வெற்றி எம் எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வி வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலைதாரி ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இவருடைய கையடக்க தொலைபேசி இலக்கம் இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் மலேசியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று நண்பகல் அவர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe

பயோடேற்ரா (கருணா)

1:26 AM, Posted by sathiri, One Comment


மதிக்கப்பட்ட பெயர். கருணா அம்மான்
மதிப்பிழந்த பெயர். முரளிதரன்
தொழில். .நக்குவது
உபதொழில்.காட்டிக்கொடுப்பு. கடத்தல்.கப்பம்
பொழுது போக்கு.துரோகம் செய்வது
சாதனை. கிழக்கு மாகாண தமிழ்மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் உணர்வுகளையும் சிங்களத்திடம் அடகுவைத்தது.
சோதனை.பிள்ளையான்.
வேதனை.இங்கிலாந்தின் சிறைவாசம்.
நண்பர்கள். அண்மைக்காலமாக தேவானந்தா.
எதிரிகள்.தன்மானமுள்ள உலகத்தமிழர்கள் அனைவரும்.
இலட்சியம். எதுவுமே கிடையாது
பிடித்த பாடல். எங்கே செல்லும் இந்தப் பாததை யார்தான் யார்தான் அறிவாரோ(படம்.சேது)
மறந்தது. தமிழீழம்
நினைப்பது.மகிந்தா. கோத்தபாய.

புலம்பல்.அரசனை நம்பி புருசனை கைவிட்டதெண்ட பழமொழி எனக்குத்தான் பொருந்தும்.அரசாங்கத்தை நம்பி பெண்டாட்டி பிள்ளையளையும் கைவிட்டிட்டன்.இப்ப கோட்சூட்டை வேறை மாட்டி பார்லிமென்ருக்குள்ளை தள்ளிவிட்டிட்டாங்கள்.அறிக்கை வேறை விடவேண்டிக்கிடக்கு ஜயோ..ஜயோ..

இந்தியாவே இது தேவையா????

2:24 PM, Posted by sathiri, No Comment

இலங்கையின் போரை நிறுத்தவே முடியாது- ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பேன் என்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புதுடில்லி சென்றுள்ள மகிந்த ராஜபக்ச இன்று அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் போரை நிறுத்த முடியும்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் என் நாட்டு குடிமக்கள். அவர்களைப் பாதுகாப்பது எனது பணி என்பதை இந்தியப் பிரதமருக்கும் உலக நாடுகளுக்கும் தெரிவிக்கிறேன்.

இந்தியாவில் பயிற்சி பெற்ற 1,200 தமிழர்களை (துணை இராணுவக் குழுவினரை) சிறிலங்கா படையில் இணைத்துக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

2008 ஆண்டின் சிறந்த நகைச்சுவை

6:35 AM, Posted by sathiri, No Comment




இலங்கை
அமைதி ஒப்பந்தத்தி்ற்குப் பின்னர் தனது சொந்த குண்டு துளைக்காத உடையை, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு வழங்கினார் ராஜீவ் காந்தி. ஆனால் அவரையே குண்டு வைத்துக் கொன்றனர் புலிகள் என்று சட்டசபையில் காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எப்பிடித்தான் யோசிப்பாங்களோ?? யாராவது ஒரு விருதிற்கு அல்லது ஒரு பொன்னாடைக்காவது ஏற்பாடு பண்ணுங்கப்பா.

சிறீலங்கா வான் படை

10:33 AM, Posted by sathiri, No Comment

சிறீலங்கா வான் படையினர் இன்று பரந்தன் பகுதியில் நடத்திய கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட ஐந்து பொது மக்கள் படுகாயமடைந்துள்ளனர். மதியம் 12.50 மணியளவில் இரண்டு குமாரபுரம் பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் சிறீலங்கா வான் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த திருமதி மனோகரன் என்பவரின் 31ம் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே, விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதே நேரம் தாங்கள் கடற்புலிகளின் முக்கிய தளத்திற்கே குண்டு வீசியதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையரசு சொன்ன காயமடைந்த கடற்புலிகளின் படங்கள் இணைத்துள்ளேன். படங்கள் நன்றி செய்தி கொம்.



பிரான்சில் மாவீரர்நாள் விபரம்

3:24 PM, Posted by sathiri, No Comment

யாழ்ப்பாண பத்திரிகைகளின் இன்றைய பரிதாப நிலை

2:31 AM, Posted by sathiri, One Comment

யாழ்ப்பாணத்து மக்களினதும் யாழின் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் நிலைமையை பதிவு செய்த யாத்ரா பதிவாளரிற்கு நன்றிகள்










நன்றி யாத்ரா

உடன் பிறப்புக்களே

12:30 PM, Posted by sathiri, No Comment



உடன் பிறப்புக்களே என்
முயலாமை நான்கெழுத்து
தள்ளாமை நான்கெழுத்து
இயலாமை நான்கெழுத்து
ஈழத்தமிழா
மரணம் நான்கெழுத்து
அதுதான் உனது
தலையெழுத்து