Navigation


RSS : Articles / Comments


நிழலாடும் நினைவுகள்

11:47 PM, Posted by sathiri, No Comment



கப்ரன் வாசு (கண்ணாடி வாசு.ஜடியா வாசு)வல்வெட்டிதுறை

1984 ம் ஆண்டு ஒரு கோடைகாலத்தின் மாலை நேரத்தில் யாழ் அராலி வீதி கல்லுண்டாய் வெளியில் ஒருவர் மட்டுமே அமரகூடிய ஒரு சிறிய விமானம் உள்ளே அதனை இயக்க தயாராய் வாசு அமர்ந்திருக்கிறான். அதனருகே மாவீரர்களான லெப்.கேணல்அப்பையா அண்ணை குட்டிசிறி. கப்ரன் பாரத் மேஜர் சுபாஸ் இவர்களுடன் மேலும் பல போராளிகள் நிற்கிறார்கள். வாசு மற்யை போராளிகளை பார்த்து எல்லாம் சரி எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளுங்கோ இந்த முறையாவது பிளேன் பறக்கவேணும் என்று சொல்லவும் எல்லா போராளிகளும் சேர்ந்த்து விமானத்தை தள்ள அது வீதியில் உருள ஆரம்பிக்கவும் வாசு மற்றவர்களிடம் இன்னும் இன்னும் வேகமா என்று கத்தியபடி அந்த விமானம் மேலே கிழம்ப வசதியாய் அதன் இறக்கைகளை இயக்குகிறான்.அந்த நேரம் பார்த்து ஒரு போராளி ஏலேலோ அய்லசா என்று பாடவும் விமானத்தை தள்ளிய மற்றறைய போராளிகள் தள்ளுவதை நிறுத்தி விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். வாசு அவர்களை பார்த்து கோபமாய் கத்துகிறான் மேலை எழும்பினா காணும் நான் எப்பிடியாவது கோட்டைக்குள்ளை கொண்டு போய் இரண்டு ஆமிகாரன்ரை தலையிலையாவது விழுத்துவமெண்டா இவங்களோடைஒண்டும் செய்ய ஏலாது பகிடியை விட்டிட்டு தள்ளுங்கோடா என்கிறான்.

போராளிகள் தொடர்ந்து விமானத்தை தள்ள விமானம் சில அடிகள் மேலே எழுவதும் கீழே விழுவதுமாய் கடைசியில் அந்த வீதியோரத்தில் நின்ற ஒரு பூவரசு மரத்துடன் மோதி ஒரு பக்க இறக்கை உடைந்து போக வாசு சில சிராய்ப்பு காயங்களுடன் விமானத்தை விட்டு இறங்குகிறான். ஆனாலும் விமானம் செய்கின்ற முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
வாசு எப்பவுமே தன்னைபற்றியோ தன்னுயுரிரைபற்றியோ கவலைபடாமல் எப்படியாவது எங்கேயாவது எதிரிக்கு இழப்பை ஏற்படுத்துவதை பற்றியே சிந்திப்பவன். அது மட்டுமல்ல கண்ணிவெடிகள் தயாரிப்பது ரவைகட்டுவது(ஆரம்பகாலத்தில் 9 மி.மீ.துப்பாக்கி ரவைகூடுகளை சேகரித்து திரும்ப அவைகளை ரவைகளாக தாயாரிப்பார்கள்) அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பழுதடைந்த ஆயுதங்கள் அனைத்தையும் திருத்துபவனாகவும் இருந்தான். ஈழத்தில் இருந்த போராட்ட குழுக்களிற்கு இந்தியா அன்று ஆயுதங்கள் வழங்கிய போது புலிகள் இயக்கத்திற்கும் ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்கியது ஆனால் அவை பெரும்பாலும் ஏன் 80 வீதம் பாவிக்க முடியாத ஆயுதங்களையே கொடுத்திருந்தது.

அவற்றையெல்லாம் வாசு இரவு பகலாக இருந்து முடிந்தவரை திருத்தி போராளிகளிடம் கொடுப்பான். அந்த ஆயுதங்கள் யுத்த களத்தில் சில நெரங்களில் இயங்க மறுக்கும்.யுத்தகளத்தில் ஒரு போராளியின் ஆயுதம் இயங்கா விட்டால் அது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அனைவரிற்கும் தெரியும். அந்த போராளிகள் வாசுவை திட்டியபடியே அந்த ஆயுதங்களை அவனிடம் கொண்டு போய் கொடுப்பார்கள்.அவன் சிரித்தபடியே என்ன மச்சான் செய்யிறது இந்தியா ஆயுதத்தை தந்த நேரம் அதை இரும்பா தந்திருந்தா நான் அதை உருக்கி ஒரு நல்ல ஆயுதமா செய்து தந்திருப்பன்.ஆனால் என்ன செய்ய அவங்கள் இப்பிடி தந்திட்டாங்கள் நானும் முடிஞ்சவரை திருத்திறன் எனறவாறே மீண்டும் அவற்றை திருத்த தொடங்கிவிடுவான்.அப்போது 1987ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ் நாவற்குழி இராணுவ முகாம் மீது புலிகள் ஒரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டனர்.

அந்த இராணுவ முகாமிற்கு தண்ணீர் வெளியில் இருந்து ஒரு பெளசர் முலமே எடுத்து செல்லபடுவது வழைமை எனவே அதே போல ஒரு பெளசரை தயாரித்து அதன் உள்ளே வெடிமருந்தை நிரப்பி அதனை முகாம் உள்ளே அனுப்பி வெடிக்க வைப்பது பின்னர் அது வெடித்ததும் அதிர்ச்சியில் இருக்கும் இராணுவத்தினரை தாக்குவது என்று திட்டம் தீட்டப்பட்டு.அதற்கான அந்த முகாம் மீதான வேவுபார்த்தல் மற்றும் இராணுவ நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பொறுப்பு அன்றைய சாவகச்சேரி பொறுப்பாளராக இருந்த கேடில்சிடமும். வெடிமருந்து நிரப்பிய பெளசரை தயாரிக்கும் பொறுப்பு வாசுவிடமும் ஒப்படைக்க பட்டது. அதுவும் எதிரிக்கு எந்தவித சந்தேகமும் வந்து விடாதபடி தண்ணீர் கொண்டு போகின்ற அதேபோன்றதொரு அச்சுஅசலாக இன்னொரு பெளசரை தயாரிக்க வேண்டும்.சிரமமானதும் சவாலானதமான ஒரு பணி ஆனால் வாசு ரஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரின் உதவியோடு ஆர்வத்துடன் செயற்பட்டான். அசல் தண்ணி பெளசரில் எங்கெங்கு கறள் பிடித்திருக்கின்றது.

எங்கெங்கு நெளிந்திருன்றது என்று பார்த்து பார்த்து நகலை அசல் போல ஒரு மாதங்களிற்கு மேலாக செய்து முடித்தான்.அது மட்டுமல்ல தண்ணீர் பெளசர் இராணுவ முகாமிற்கு உள்ளே போகும் போது இராணுவத்தினர் பெளசரின் உள்ளெ தண்ணீர் தானா உள்ளது என்று பரிசோதித்து தான்அனுப்புவார்கள்.அதனால் அந்த பெளசரின் மேல் பாதியில் தண்ணீரும் கீழ் பாதியில் வெடிமருந்தும் நிரப்பி தயாரிக்கப்பட்டது.தாக்குதலுக༢r />??கான நாளாக 14.02.87 அன்று மாலை தீர்மானிக்கபட்டது.அந்த தாக்குதலிற்கு பொறுப்பாக அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு பொறுப்பேற்றிருந்தார்.அவர் போராளிகளிற்கு அன்று காலை தாக்குதல் பற்றிய விழக்கங்களை அளித்து மாலை 6.30 மணியளவில் முகாமின் உள்ளே அந்த பெளசர் வெடிக்கும் அதை தொடர்ந்து தொலைதொடர்பின் ஊடாககட்டளை வந்ததும் முகாம் மீதான தாக்குதலை தொடங்கும்படி வழியனுப்பி வைத்தார்.

அதன்படி போராளிகள் எல்லோரும் அன்று மாலை 4 மணியளவிலேயே தயாராய் நாவற்குழி முகாம் தாக்குதலிற்காக அவரவர் இடங்களில் நிலையெடுத்து காத்திருந்தனர்.இறுதியாக அந்த பெளசரை வெடிக்க வைப்பதற்காக நேர கணிப்பு பொறியை லெப். கேணல் பொன்னம்மானும் வாசுவும் இணைத்து முடித்திருந்தனர். எல்லா போராளிகளும் தங்களிற்கு தந்தவிடயங்களையும் எதிரியை எப்படியெல்லாம் தாக்கலாம் என்று தங்கள் மனங்களிலேயே ஒத்திகை பார்த்தபடி அந்த வெடி வெடிக்க போகும் 6.30 மணி எப்போவரும் என தங்கள் கை கடிகாரங்களை அடிக்கடி ஒரு பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்த வேளை 5.30 மணியவில் அந் பகுதியையே அதிர வைக்கும் ஒரு வெடியொசை கேட்டது. எல்லா போராளிகளின் முகங்களிலும் ஒரு வித கேள்வி குறி யுடன் தொலை தொடர்பு கருவி வைத்திரந்தவர்களை பார்த்தனர்.

தொலை தொடர்பில் எல்லோரும் கிட்டுவை அழைத்தபடி இருந்தனர்.அண்ணை என்ன நடந்தது. அங்கை வாசு பென்னம்மான் ஒரதரின்ரை தொடர்பும் கிடைக்கேல்லை என்ன நடந்ததெண்டு தெரியேல்லை எல்லாரும் அப்பியே நில்லுங்கோ நான் இடத்திற்கு போய் பாத்திட்டு உங்களை தொடர்பு கொள்ளுறன்கிட்டுவின் குரல் ஒலித்தது. அரை மணி நெரத்தின் பின்னர் அனைவரையும் தங்கள் முகாம்களிற்கு திரும்பும்படி கிட்டுவின் கட்டளை கிடைத்தது. ஆம் 5.30 மணிக்கே அந்த பெளசர் வெடித்து சிதறிவிட்டது. எப்படி எங்கே தவறு நடந்தது என்று யாருக்கும் தெரியாது காரணம் அதனருகில் நின்றிருந்த பொன்னம்மான் கேடில்ஸ் ரஞ்சன் அகியோருடன் வாசுவும் கந்தக காற்றுடன் கலந்து எங்கள் தேசத்தில் வீசும் காற்றாகி போனான். வாசு மட்டுமல்ல அவனது குடும்பத்தில் அவனது சகோதரன் மேஜர் ஜேம்ஸ். சகோதரி கப்ரன் சுந்தரி ஆகியோரும் எங்கள் மண்ணிற்காய் மாவீரர்களாகி போனார்கள். அவர்களிற்காய் எனது தலை தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்து கொண்டு நினைவுகளை தொடர்வேன்...

மேலே நான் இணைத்த கட்டுரை சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது அந்த கட்டுரையை எழுதி பத்திரிகைக்கு அனுப்பிய பின்னர் புலிகளின் வான்படை நடாத்திய தாக்குதல் செய்திகள் வெளிவந்தபோது ஒருகணம் புலிகளிற்கு ஒரு வான் படை உருவாக்கும் கனவுகளுடன் அயராது உழைத்த வாசு.அப்பையா அண்ணை .குட்டிசிறி .பாரத். போன்றவர்களுயும் பின்னர் சங்கரண்ணாவும் ஒரு கணம் நினைவில் வந்து போயினர்

வந்துவிட்டது சாத்திரியின் ஐரோப்பிய அவலம் அங்கம் - 3,

1:43 PM, Posted by sathiri, One Comment

ஐரோப்பிய அவலம் நகைச்சுவை நாடகம் அங்கம் 3 கேட்பதற்கு கீழுழ்ழ இணைப்பை அழுத்தவும்.....

ஐரோப்பிய அவலம் அங்கம் - 3

நிழலாடும் நினைவுகள்

10:41 AM, Posted by sathiri, No Comment





லெப்.கேணல் ஜொனி(விக்கினேஸ்வரன்: விஜயகுமார்)
பருத்திதுறை(குட்டலை)

இவர் பேராதனை பல்கலை கழகத்தில் பெளதீக விஞ்ஞான மாணவகாய் கல்வி கற்று கொண்டிருந்த காலத்தில் தன்னை விடுதலை போராட்டத்திற்காய் இணைத்த ஒரு போராளி.இந்தியா விடுதலை புலிகளிற்கும் பயிற்சி வழங்க முன்வந்த போது தலைவர் தொலை தொடர்பு மற்றும் அது சம்பந்தமான தொழில்நுட்ப பயிற்சிகளிற்கு ஜொனியை தெரிவு செய்து அனுப்பிருந்தார்.

அப்போது புலிகளிடம் தொலை தொடர்பு வசதிகள் அவ்வளவாக இல்லாத கால கட்டம் யாராவது மிக நம்பிக்கையான ஒருவர்தான் செய்திகளை காவிசென்று மற்றைய போராளிகளிற்கு தெரிவிப்பது வழைமை அப்படி புலிகளின் ஆரம்பகாலத்தில் இருந்தே பல இரகசிய செய்திகளைதாங்கி எடுத்து செல்பராக இருந்தவர்களில் முக்கியமானவர் ஜெனி.


1984ம் ஆண்டு ஆவணி மாதம் பொலிகண்டி பகுதியில் ஒரு எதிர்பாராத விதமாகமோதல் புலிகளிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் எற்படுகின்றது இராணுவத்திற்கு துணையாக பருத்தி துறை முகாம் இலங்கை கடற்படையும் இணைந்து கொள்ள அந்த மோல் ஒரு தொடர் சண்டையாக மாறிவிட்டது அது இரண்டாம் நாளும் தொடர்ந்தது அந்த காலகட்டதில் புலிகள் அமைப்பில் இருந்த அனேகமான போராளிகள் அந்த சண்டைநடந்த இடத்திற்கு போய் சேர்ந்திருந்தனர்.அவர் வழைமை போல பொலிகண்டி பகுதியில் சண்டையில் ஈடுபட்டிருந்த போராளிகளிற்கு சில செய்திகளை எடுத்து செல்லவும் அங்கு கள நிலைமைகளை அறிந்து வரவும் பண்டிதரின் முகாமில் இருந்து தயாராகிறார்.

அனால் சண்டைக்காக ஆயுதங்கள் அனைத்தையும் மற்றைய போராளிகள் எடுத்து சென்றுவிட்டதால். பாவனைக்கு உதவாது என்று கைவிடபட்ட ஒரு 4.5 வகை றீற்றா கைத்துப்பாக்கிறை எடுத்து இயக்கி பார்க்கிறார். அது பலதடைவை இயக்கினால் ஒரு தடைவை தான் அதன் விசை இயங்கும்.அதில் குண்டுகளை நிரப்பி இடுப்பில் செருகி கொண்டு கட்டியிருந்த சாரத்தினை மடித்து கட்டிகொண்டு புறப்படுகிறார்.

பருத்தி துறை கெருடாவில் பகுதியில் ஒரு ஒழுங்கையில் இவர் போய்க்கொண்டிருக்கும் போது அங்கு மறைந்திருந்த ஒரு இராணுத்தினன் திடீரென ஜொனியை நோக்கி தனது தப்பாக்கியை நீட்டியபடி அருகில் வரும்படி அழைக்கிறான் உடனே ஜொனி சைக்கிளை விட்டு இறங்கி அதை உருட்டியபடி அவனருகில் சென்று அய்யா நான் தோட்டதாலை வாறன் என்றபடி சைக்கிழை நிறுத்திவிட்டு கட்டியிருந்த சாரத்தை சரி செய்வது போல பாவனை செய்தபடி இடுப்பில் இருந்த துப்பாக்கியை திடீரென எடுத்து அவனை நோக்கி இயக்குகிறான். துப்பாகி இயங்கிவிட்டது அந்த இராணுவத்தினன் சுருண்டுவிழ ஜொனி முதல் தடைவையாக தப்பித்து கொள்கிறான்.

பின்னர் 1987ம் ஆண்டு பங்குனி மாதம் பலாலியை அண்மித்த கட்டுவன் பகுதியில் ஒரு மோதல் சம்பவம் அதில் தனது குழுவினருடன் சென்று ஜொனி சண்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரம் எங்கிருந்தோ எதிரியின் துப்பாக்கி குண்டு ஒன்று ஜொனியின் இடது பக்க கண்ணிற்கு மேலே நெற்றியில் புகுந்து அது வெளியெறாமல் நல்ல வேளையாக மூளையை தாக்காமல் பின்பக்க மண்டையோட்டில் முட்டியபடி உள்ளேயே நின்று விட்டது.பின்னர் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற ஜொனிக்கு அப்போதைய தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருந்த திரு எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய உதவியாளர் மூலம் ஜொனிக்கு சத்திர சிகிச்சைக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குமாறு உத்தவிட்டிருந்தார்.

இந்தியாவின் பிரபல வைத்தியர்கள் பலர் சேர்ந்து செய்த சத்திர சிகிச்சை மூலம் தலையில் இரந்த கண்டினை அகற்றி இரண்டாவது தடைவையாக ஜொனி சாவை சுகம்விசாரித்து விட்டு திரும்பியிருந்தான்.இந்தியாவhல் ஜொனி தங்கியிருந்த காலகட்டத்தில் ஈழத்தில்மணலாறு பகுதியில் இந்தியபடைகளுடனான மோதல் தீவிரமடைந்து தலைவரை எப்படியாவது பிடித்துவிடுவது என்று இந்திய இராணுவம் போரிட்டு கொண்டிருக்க இந்திய உளவு படையும் தன்னாலான தகிடுதன வேலைகளையும் செய்து கொண்டிருந்தது

அதில் ஒன்றுதான் சண்டையை முடிவுக்கு கொண்டுவர சில யோசனைகள் என்று ஜொனியிடம் சில செய்திகளை சொல்லி அதை தலைவரிடம் கொண்டு போய் சேர்க்க சொல்லிவிட்டு இந்தியாவிற்கு விசுவாசமான ஒட்டு குழுக்களின் உதவியுடன் ஜொனியை பின் தொடர்ந்து சென்று தலைவரின் இருப்பிடத்தை அறிந்து அதை அழிப்பதே இந்திய உளவுபடையின் நோக்கமாகும். அதன்படி ஜொனிவவுனியாவில் கொண்டுவந்து விடப்பட்டு தலைவரைபோய் சந்தித்துவரும்படி வழியனுப்பிவைத்தனர்.

ஜொனிக்கும் இவர்களது திட்டம் புரிந்தது ஆனால் போராட்டத்தின் ஆரம்பகாலந் தொட்டே எதிரிகளை ஏமாளிகளாக்கி செய்திகளை உரிய இடங்களிற்கு எடுத்த சென்ற ஜொனிக்கு இந்திய உளவுபடையையையும் அதன் ஒட்டு குழுக்களையும் ஏமாற்றி தன்னை பின் தெடரமுடியாதவாறு சென்று தலைவரை சந்திப்பது ஒன்றும் பெரிய விடயமாய் இருக்கவில்லை. அதன்படியே தலைவரை சென்று சந்தித்து விட்டு திரும்பிவந்தான். தங்களை ஏமாற்றி தலைவரின் இருப்பிடத்தை அறியமுடியாதவாறு செய்துவிட்டான் என்கிற ஆத்திரத்தில் தூதுவனான நிராயுதபாணியாய் சென்றுவந்த ஜொனியை இந்திய இராணுவம் கொலைசெய்து வீதியிலே வீசி விட்டு சென்று விட்டனர்.,இந்திய வைத்தியர்களால் காப்பாற்ற பட்ட உயிரை இந்திய இராணுவம் நயவஞ்சகமாக பறித்து கொண்டது.

ஐரோப்பிய அவலம் நாடகம் அங்கம் - 2

1:43 PM, Posted by sathiri, No Comment


சாத்திரியின் ஐரோப்பிய அவலம் தமிழ்வெப்றேடியோ ஊடாக மாதம் இருமுறை ஒலிக்கிறது.




புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.

7:37 AM, Posted by sathiri, 5 Comments

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய கட்டுரை

புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.

பேனா என்பது அதனின்றும் வெளிப்படும் எழுத்து என்பது ஒரு மாபெரும் சக்தி. அறிவுள்ள ஆழுமையுள்ள ஒருவனின் பேனாவால் இந்த உலகையெ புரட்டி போடலாம். ஆனால் இன்று தொழில் நுட்ப வளர்ச்சிகாரணமாக எத்தனை பேர் பேனா பிடித்து எழுதுகிறார்கள் என்னபது சந்தேகமே ஆனால் எழுதுபவர்களின் தொகை கூடியுள்ளது என்பது மட்டும் உண்மை.அது தொழில் நுட்பம் எமக்கு தந்த நல்லதொரு பயன்பாடு.காரணம் முன்னர் எல்லாம் சாதாரணமாக ஒரு சிறு கதையை எழுதி அதை பலபேரிடம் கொண்டு போய் சேர்ப்பதென்றாலே எழுதியவன் பாடு பெரும்பாடு. சில நேரங்களில் எழுதியவனே அலுத்து போய் விரக்தியில் அதை கிழித்து எறிந்து விட்டு போவதும் நடப்பதுண்டு .

எனக்கும் அப்படி அனுபவங்கள் உண்டு அனால் இப்பொழுது அப்படியல்ல .வீட்டிலிருந்த படியே எழுதியதை இந்த உலகில் குறைந்தது ஒலு நூறு பேராவது படிக்க கிடைக்க செய்யமுடியும். அதனால் எல்லோருமே எழதுகிறார்கள் என்னவெல்லாமோ எழுதுகிறார்கள்.என்ன சாத்திரி புலம்பகிறான் எண்டு நினைக்கிறீர்கள் உண்மைதான் புலம்புகிறேன் காரணம். ஈழதமிழரை பொறுத்தவரை சா(தீ) யம்என்பது மெல்ல மெல்ல மறக்க பட்டு அதன் கூர்கள் மழுங்கடிக்கபட்டு அது புலத்திலும் நிலத்திலும் மறைந்து கொண்டிருக்கின்ற நேரம்.

புலத்தில் உள்ள சிலரோ தற்சமயம் தங்கள் புலைமைகளை எழுத்தில் காட்டுவதற்கு என்று சிலரும். இந்த சாதியை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் மீண்டும் அந்த சாதிஆயுதத்தை கூர்தீட்டி அதை எம்மவர் கைகளில் கொடுத்து எமக்குள் நாங்களே அடிபட்டு மடிந்து போகஎன்று ஒரு பெரிய சதியை தீட்டி சிலர் தலித்துகளிற்காக பேராடுகிறோம் என்றும் பறப்பட்டு இருக்கின்றனர்.அந்த போலி தலித்துகளிற்கான போராட்டத்தில் பிரான்சில் தானும் ஒரு எழுத்தாளன் என்று அடையாளபடுத்தி கொண்டு சோபாசக்தி என்பவர் எழுதிதள்ழுகிறார்.ஈழத்தில் தலித்துகள் என்கிற சொற்பதம் இருந்ததாக இவர்எழுத்துக்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன்.இவர் எதிர்ப்பது உண்மையில் ஈழத்து மண்ணின் மேல்சாதியினரையல்ல அந்த போர்வையில் எல்லாவற்றிற்கும் மேலான எமது விடுதலை போராட்டத்தையே என்பது இவரது எழுத்தக்களை படித்தவர்களிற்கு நன்கு புரியும்.இதற்கு மேல் இவரை பற்றி எழுதி இவரை ஒரு பெரியவராக்க நான் விரும்பவில்லை.அடுத்ததாக சாதிகள் இந்து மதத்தாலும் அதன்வருண வேதத்தால்தாலும் தான் வந்தது எனவே இந்து மதத்தை எதிர்ப்போம் என்று பெரியார் பாதையில் சிலர்.

சரி இந்துமதத்தின் வரண வேதத்தால் தான் சாதிவந்ததாகவே இருக்கட்டும். இதை எழுதுபவர்கள் எத்தனை பேரிற்கு இந்த வருண வேதத்தை பற்றி தெரியும் அல்லது எத்தனை பேரிற்கு அது எழுதபட்டிருக்கும் மொழியான சமஸ்கிருதம் தெரியும் என்று பார்த்தால் எவருக்குமே சுத்தமாக தெரியாது. எப்போதோ செத்து போன சமஸ்கிருத மொழியில் எழுதபட்டதாக சொல்லபடுகின்றகின்ற சாதியத்தை மட்டும் சாக விடாமல் அதை எதிர்க்கிறேன் பேர்வழியென்று நீறூற்றிவழர்க்கிறீர்கள்.இந்༢r />?? சாதியை எதிர்ப்பதாக சொல்லிகொண்டு சைவ மதத்தை எதிர்ப்பவர்களிடம் ஒரு கேள்வி? உலகில் உள்ள எல்லாமதங்களின் மூல நூல்களிலும் மதசடங்குகளிலுமே தற்காலத்திற்கு உதவாத பலவிடயங்களும் பல மூடநம்பிக்கைகளும் இருக்கதான் செய்கிறது.

அவற்றை நாங்கள் தான் காலத்திற்கு ஏற்றவிடயங்களை ஆராய்ந்து அதன் மூடபழக்கவழக்கங்களை அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவிகளுடன் அகற்றி மதத்தை தூய்மையாக்க வேண்டுமே தவிற தூற்றுவது புத்திசாலித்தனம் அல்ல.ஆரியன் சாதியை தோற்றுவித்தான் என்பதற்காக மதத்தை வெறுப்பது அசிரியர் சரியில்லையென்பதற்காக படிக்கவே மாட்டேன் என்பது போல.சரி ஆரியன் சாதியை தோற்றுவித்தான். அதில் சூத்திரனிற்குள் ஆயிரம் சாதியை தோற்றுவித்தது யார்?? நாம்தானே.ஆகவே ஆரியன் தோற்றுவித்த சாதியை அழிப்போம் அழிப்போம் என்று கத்துவதை விட நாம் தோற்றுவித்ததை முதலில் நாமே அழிக்கலாமே.அடுத்ததாய் இந்த புலத்தில் நாத்திகம் புரட்சி பேசுபவர்களை நான் நீண்டகாலமாகவே கவனித்ததில் தனிப்பட்டவாழ்க்கையில் எவருமே அதை கடைப்பிடித்தவர்களை காணவில்லை.புரட்சிபேசி தாலியும் பொட்டும் பெண்களிற்கு வேலி அதை அழிப்போம் என்று சொன்னவர்களின் மனைவிமார்கள் அனைவருமே விழா காலங்களில்தாலியுடனும் பொட்டுடனும் தான் உலா வருகின்றனர்.

அதைவிட நாத்திகம் பேசுகின்றவர்களின் மனைவி பிள்ளைகள் கோவிலுக்கு தவறாமல் போய் வருகிறார்கள். அதற்கு அவர்கள் தரும் விழக்கம் அது அவர்களின் தனிப்பட்டவிருப்பு அதில் நான் தலையிட முடியாது என்பார்கள். ஒரு கணவனுடன் அவனைபற்றி எல்லாவற்றையுமே தெளிவாக புரிந்து எல்லாகருத்துகளுடனும் ஒத்து போய் இறுதிவரை சேர்ந்திருக்கும் மனைவியையே தன்னுடையை நாத்திக கருத்துடன் ஒத்து போக வைக்க முடியாதவர்கள் எப்படி மற்றவர்கள் தன்னுடைய கருத்தை கேட்டு அதன்படி நடக்கவேண்டும் எதிர்பார்க்கலாம்.ஊருக்கு சொல்ல முதல் உங்கள் வீட்டில் சொல்லி திருத்த பாருங்கள்.அது மட்டுமல்ல கோவிலுக்கு போகும் மனைவியிடம் " அப்பிடியே என்ரை அவிட்ட நட்சத்திரத்திற்கு ஒரு அருச்சனை பண்ணிகொண்டுவா"என்று சொல்லிவிட்டு கடவுள் எதிர்ப்பு எழுதிகொண்டிருப்பார்கள்.சரி அதை எதிர்த்து எழுதியும் பேசியும் வந்தசில புரட்சி பெண்கள் கூட தாலியை கட்டிகொண்டு தலைமறைவாகிவிட்டனர்.(பெயர்கள்
குறிப்பிட விரும்பவில்லை)இறுதியாக ஒன்று எழுதவிரும்புகிறேன் பெரியார் சாதியை எதிர்த்தார் கடவுள் சிலையை செருப்பால் அடித்தார் காரணம் கடவுளின் பெயரால் அந்த காலங்களில் சிலர் மற்றவர்களை அடிமை படுத்தியதன் காரணத்தால் நான் சாமி சிலையையே செருப்பால் அடிக்கிறேன் சாமி என்னை ஒன்றும் செய்யவில்லை எனவே சாமிபெயரால்உங்களை அடிமைபடுத்த முடியாது எனவே பயபடாதீர்கள் என்று படிப்பறிவு மற்றும் வெளியுலக அறிவு அற்ற மக்களை நம்பவைக்கவே.அனால் இன்று அதுவும் புலத்தில் சாமியை காரணம் காட்டிதான் சாதியை ஒழிக்கவேண்டிய அவசியம் இல்லை.

அதுமட்டுமல்ல இன்று புலத்தில் சாதிகள் என்றால் என்னவென்றே தெரியமல் நாம் எல்லோரும் மனித சாதி என்று நினைத்து கொண்டிருக்கும் இளையசமுதாயத்தினரிடம் .மெல்ல செத்துகொண்டிருக்கும் சாதியை அதை எதிர்க்கிறேன் என்று சொல்லி கொண்டேஅதற்குள் மதத்தையும் இழுத்து அவற்றை இளையசமுதாயத்திடம் அறிமுகபடுத்தி அவர்கள் கைகளிலும் ஆயுதத்தை கொடுக்காதீர்கள்.காரணம் எமது இனவிடுதலையுடன் இந்த சாதிவிடுதலைக்காகவும் நாம் கொடுத்த விலை அதிகம் நன்றி சாத்திரி