Navigation


RSS : Articles / Comments


கழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின் குரல்...

12:58 PM, Posted by sathiri, No Comment


கழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின் குரல்.....
கேட்பதற்கு இங்கு அழுத்தவும்...நன்றி

தமிழினப் படுகொலைகள் 1956....2008..ஆவணப்புத்தக வெளியீடு

8:26 AM, Posted by sathiri, No Comment


புத்தகம் லண்டன், பாரீஸ், ஜெர்மனி, சுவிஸ் மற்றும் நார்வே நாடுகளில் 2010 ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார்

11:14 AM, Posted by sathiri, No Comment



நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார் அவர்களினுடனான செவ்வி
சாத்திரி

சாத்திரி. வணக்கம் தற்சமயம் நாடு கடந்த தமிழீழ அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள். அல்லது செயற்திட்டங்கள் என்னவாக இருக்கின்றது.

வசந்தகுமார்....தற்சமயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வர்கின்ற தேசங்கள் எங்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்குவதற்காக பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்றினை வருகின்ற வருடம் சித்திரை மாதமளவில் நடாத்துவதற்காக வேலைகளில் இறங்கியிருக்கிறோம்..என்ன காரணங்களை அடிப்படையாக வைத்து அந்தத் தேர்தல்கள் நடை பெறப்போகின்றதென்பது பற்றி அதற்கான அறிவித்தலும் வெளியாகியிருக்கின்றது.

சாத்திரி....நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்கும் தேர்தல் வருகின்ற சித்திரை மாதம் நடைபெறும் என்று அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில்..பிரித்தானியாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு ஒன்றினை நடாத்த வேறு சில அமைப்புக்கள் முயற்சி செய்து வருகின்றார்கள் அதற்கான திகதிகளும் விளம்பரங்களும் வெளியாகி விவாதங்களும் நடந்து வருகின்றது. அந்த அமைப்புக்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசு குழுவினரும் இணைந்தே அந்த வாக்கெடுப்பினை நடாத்துவதாக சில செய்திகளும் மறுத்து சில செய்திகளும் வெளிவருகின்றது.அதனைப்பற்றி விளக்கமாக சொல்லுங்கள்.

வசந்தகுமார்...இதைப்பற்றி நான் தீர்மானிக்க முடியாது.. அதே நேரம் எங்கள் அமைப்பின் ஆலேசனைக்குழு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பினை மற்றைய அமைப்புக்களுடன் இணைந்து நடத்துவதற்கான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.ஆனால் எமது அமைப்பின் பிரித்தானியக் கிளையினருடன் மற்றைய அமைப்புக்கள் தொர்பு கொண்டு பேச்சு வார்த்தைகளை நடாத்தியுள்ளனர்..வேண்டுமானால் அதுபற்றிய சில விபரங்களை நான் உங்களிற்கு தெரிவிக்கலாம்..

சாத்திரி.. அதாவது நா.க..தமிழீழ.அரசின் பிரித்தானியக் கிளையினர் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை நடாத்தும் மற்றைய அமைப்பினருக்கு உங்கள் ஆதரவினை வழங்கியோ அல்லது அவர்களுடன் இணைந்து செயற்படுகிறீர்களா..

வசந்தகுமார்..இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ஈத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் அரசியல் அடித்தளம் போன்றது. அந்தத் தீர்மான நிறைவேற்றலின் பின்னர்தான் எங்கள் போராட்டம் வேகமெடுத்தது.அதனை அன்று 77ம் ஆண்டு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் அவர்களது கட்சிகள் இணைந்து தான் அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தியிருந்தனர்.ஆனால் இன்று இங்கு பிரித்தானியாவில் அந்தத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை தாங்களகவே சிலர் சேர்ந்து செய்யப் புறப்பட்டவேளை நாங்கள் அவர்களை தொடர்பு கொண்டு அதனை தற்சமயம் அவசரமாக செய்யவேண்டாம்..இது ஒரு முக்கியமான வாக்கெடுப்பு எனவே இங்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து அனைத்து நாடுகளிலும் இதனை நடாத்தினால் அது பெரிய பயனைத் தரும். எனவே இதுபற்றி தொடர்ந்து ஆலேசனைக்கூட்டங்களை வைத்து முடிவு செய்யலாமென்று கூறியிருந்தோம்..ஆனால் அவர்கள் தாங்களாகவே திடீரென ஒரு திகதியினை அறிவித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் எங்களுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லையென்றே நினைக்கிறேன்.

.சாத்திரி..நாடுகடந்த தமிழீழ அரசு சில நாடுகளிற்கு அதாவது கனடா அமெரிக்கா பிரித்தானி போன்ற நாடுகளிற்கு தங்கள் ஆலோசனைக்குழு பிரதிநிதிகளை நியமித்துள்ளனர். அதே நேரம் தமிழர்கள் அதிகமாக வாழும் மற்றைய நாடுகளிற்கான பிரதிநிதிகளை இன்னமும் அறிவிக்கவில்லை அதற்கான காரணம் என்ன...

வசந்தகுமார்....மற்றைய நாடுகளில் இன்னமும் ஆலோசனைக்குழு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வேலைகள் முழுமையாக முடிவடையவில்லை..அதனால் குறிப்பிட்ட திகதிக்குள் அந்த அறிவிப்பு வெளியாகாமல் தள்ளிப்போயுள்ளது..ஆனால் வெகு விரைவில் அவை வெளியாகும்

சாத்திரி..நல்லது ஆனால் இந்த நாடு கடந்த தமீழ அரசு கட்டமைப்பு பிரதிநிதிகள் மீது ஒரு பொதுவான அபிப்பிராயம் ஒன்றுள்ளது அவர்கள் இன்னமும் வந்து மக்களிடம் இறங்கி அல்லது அவர்களை அணுகி இன்னமும் சரியாக வேலைசெய்யத் தொடங்கவில்லை என்று அதனை பலர் குற்றச்சாட்டகவே வைக்கின்றனர்..அதைப்பற்றி..

வசந்தகுமார்..அந்தக்குறைபாடு உள்ளதுதான் ஒத்துக்கொள்கிறோம்..இப்பொழுதுதான் பல சிக்கல்களிற்கு மத்தியில் ஒரு ஆலேசனைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம்தான் நாங்கள் பிரித்தானியாவில் மக்களிடம் சந்திப்புக்களை மேற்கொண்டு கலந்துரையாடலகளை நடத்தத்தொங்கியுள்ளோம்..அவைகளை வேகப் படுத்துவோம்..

சாத்திரி.
..அடுத்த சித்திரை மாதம் நடக்கவிருக்கும் தேர்தலின் நோக்கம் என்ன

வசந்தகுமார்..தற்சமயம் எங்கள் அமைப்பின் கட்டமைப்பு ஒரு தற்காலிக ஆலேசனைக்குழுவைக் கொண்ட அமைப்பு மட்டுமே. அடுத்த தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்தான் எங்கள் அமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பார்கள்

சாத்திரி...நா.க.தமிழீழஅரசின் திட்டங்கள் ஒரு நீண்டகாலத்திட்டங்கள் அல்லது நீண்ட காலத்தின் பின்னர் நிறைவேற்ற முயற்சிக்கும் திட்டங்கள்.ஆனால் தற்சமயம்.இன்றைக்கு அந்த முகாம்களில் வாழும் மக்களிற்கான அந்த இலங்கையரசின் ஒடுக்குமுறைக்குள் வாழும் தமிழீழ மக்களிற்கான உதவும் திட்டங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா..

வசந்தகுமார்...இறுதியாக நோர்வேயில் நடந்த கூட்டத்தில் இதுபற்றிய விடயங்கள்தான் பெரும்பாலும் ஆராய்ந்தோம்..ஆனால் நாங்கள் நேரடியாக அவர்களிற்கு எதுவும் செய்யமுடியாத நிலைமையிலேயே இன்று இருக்கின்றோம்..அதே நேரம் அவர்களிற்கு உதவக்கூடிய நிலையிலுள்ள அமைப்புக்கள் நிறுவனங்களின் உதவிகளை நாடி அவர்கள் ஊடாக உதவிகளை செய்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றோம்..

சாத்திரி...இறுதியாக ஒரு கேள்வி என்னவென்றால் பிரித்தானியாவில் உங்கள் அமைப்பில் தற்காலிக ஆலேசனைக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார் யாரென்று பிரித்தானிய வாழ் தமிழர்களிற்கு இன்னமும் தெரியது..எனவே அவர்கள் பற்றிய அறிமுகம் விபரங்களை அவர்களது படங்களுடன் ஊடகங்களிலாவது வெளியிட்டால்தான் மக்கள் அவர்களை அடையாளம் கண்டு தொடர்புகளை ஏற்படுத்த முடியும்..அப்பொழுதானே மக்கள் தங்கள் சந்தேகங்கள் ஆலோசனைகள் என்று கேட்டு தெளிவுபெற முடியும். அதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவீர்களா

வசந்தகுமார்..லண்டனில் தற்சமயம்தான் நாங்கள் ஒரு அலுவலகத்தினை திறந்து அங்கு முழுநேர ஊழியர்கள் அமர்த்தப்பட்டுளர்..அதே நேரம் எங்கள் அமைப்பு பற்றிய விபரங்கள்..அமைப்பு ஆலோசகர்குழு பிரதிநிதிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய பிரசுரங்கள்..புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றது..அவை வெளியிடப்படும் அதே நேரம் வேறு ஊடகங்கள் ஊடாகவும் அவர்களது விபரங்கள் வெளியிடப்படும்.இவை அனைத்தும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்..

தளபதி ராம் அவர்களின் மாவீரர் நாள் உரை 2009 ஒலிவடிவில்

8:25 AM, Posted by sathiri, One Comment


தளபதி ராம் அவர்களின் மாவீரர் நாள் உரை ௨௦௦9ஒலிவடிவில்

மாவீரர் தின உரை 2009

7:17 AM, Posted by sathiri, No Comment




சிறையிலிருந்து ஒரு குரல்

1:06 PM, Posted by sathiri, No Comment



சிறையிலிருந்து ஒரு குரல் உரையாடல்.
கழுத்துறைச் சிறையில் 12வருடங்களாக பொய்யான குற்றச்சாட்டின் பெயரில்கைதாகியிருக்கும் ஒரு இளைஞனின் குரல் இது. தென்னிலங்கைச் சிறைகளில்தமிழர்களின் அவலம் குறித்து உரையாடுகிறார். உரையாடியோர் சாத்திரி சாந்தி.

புலிகளின் தளபதி ராமின் அறிக்கை

5:07 AM, Posted by sathiri, No Comment

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா??

1:16 PM, Posted by sathiri, 7 Comments




வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா?? என்பது பற்றியதான கலந்துரையாடல்.. .ஈழத்தின் விடுதலைப்போராட்ட காலத்தின் ஆரம்பகால போராளியாகவும்..ஈரோஸ் இயக்கதின் மத்தியகுழு உறுப்பினராகவுமிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களுடனான கலந்துரையாடல்..கலந்து கொண்டபவர்கள்...சாத்திரி மற்றும் சாந்தி ரமேஸ் ஆகியோர்.இங்கு அழுத்தி கேட்கலாம்

தமிழினப் படுகொலைகள் ஆவணப்புத்தகம்

12:21 PM, Posted by sathiri, No Comment

சிறீலங்காலில் 1956ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு மேமாதம் வரையிலான தமிழினத்தின் மீதான சிறீ லங்கா அரசின் படுகொலைகளை ''தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இணைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.


உடனே இலங்கை அதிபரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அதிபரின் தம்பிகள் இருவரையும், இராணுவ தளபதியையும் அப்படியே செய்ய வேண்டும். இது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் குரலாய் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில், அவர்களை குற்ற கூண்டில் ஏற்ற தேவையான படுகொலை ஆவணத்தை புத்தக வடிவில் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனிதம் - மனித உரிமை அமைப்பு, 6 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், பிரன்சு, ஜெர்மன், சிங்களம் மற்றும் இந்தி) கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

வணங்காமண் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த கப்பலை இலங்கை அரசு முதலில் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, 2009 அக்டோபர் இறுதி வாரத்தில் வன்னி மக்களிடம் வணங்காமண் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்க காரணமாய் இருந்தது மனிதம் அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மனிதம் அமைப்பு, புத்தக வெளியீட்டிற்காக எழுத்துபூர்வமான அனுமதியை முறையாக பெற்றுக்கொண்டு, சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்துடன் (International Association of Tamil Journalists,) தற்போது அப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறது. (அனுமதி கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)

இலங்கையில் தமிழர் பகுதிகளில் 1956 முதல் 2009 ஏப்ரல் வரையில் சுமார் 200க்கும் அதிகமான படுகொலைகள் நடந்தறின.2009 ம் ஆண்டு மேமாதம் கடைசிகட்ட போர் குறித்த ஆவணங்கள் தற்போது அதிமுக்கிய பொறுப்பாளர்களால் சேகரிக்கப்பட்டு நிறைவு பெற்று வருகிறது என்பது குறிப்பித்தக்கது.

இப்படுகொலையில் இறந்தவர்கள் யார், யார் - காயமடைந்தவர்களின் பெயர்கள், எந்த ஊரை சேர்நதவர்கள், 14 வயதுக்கு கீழ்உள்ள குழந்தைகள் எத்தனை பேர், படுகொலை நடந்த இடம், தேதி முதலிய ஆவணங்களை கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (North East Secretariat on Human Rights)' தன்னிச்சையாகவும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்தும் செயல்பட்டு நேரிடையாக பார்வையிட்டு இந்த ஆவணங்களை சேகரித்து உள்ளது. அதேபோல், இப்புத்தகத்தில் படுகொலை செய்யப்பட்ட இடத்தின் வரை படங்களும், படுகொலையில் சிக்குண்ட நபர்களின் புகைப்படங்களும் கூடிய மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படுகொலைகள் இலங்கை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடைபெற்றவைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. 2002-ல் அமைதி உடன்படிக்கையின் போது நடைபெற்ற படுகொலைகளும் இதில் அடக்கம்.

புத்தகம் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட பக்கங்களில், இப்போது வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களால் திருத்தம் செய்யப்பட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை மனிதம் - மனித உரிமை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவில் ஈழத்தின் மனித உரிமை விடுதலைக்காக பாடுபட்டுவரும் திருமதி. எலின் சாடார் அவர்கள் கொடுக்க உள்ளார். புத்தகத்தின் அட்டை வடிவமைப்பும், மிகச்சிறந்த ஓவியரான நந்தா கந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மொழி மாற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டு, விரைவில் முடிக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.

இனப்படுகொலையின் முக்கியமான வரலாற்று ஆவணமாக இப்புத்தகம் விளங்கப் போகிறது.சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்களிற்கு எதிராக மனிதவுரிமை அமைப்புக்களோ..நாடுகளோ..தனி நபர்களோ சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளிற்கு இந்த ஆவணம் மிக உதவியாக இருக்கும். இப்புத்தகங்களை 2009ம் ஆண்டு இறுதிக்குள் கொண்டு வர திட்டமிட்டப்பட்டுள்ளது.

6 மொழிகளில் கொண்டுவரப்பட உள்ள இந்த ஆவணப்புத்தகத்தை அச்சிட்டு வெளி கொண்டுவர இந்திய ரூபாய் பல லட்சம் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் அதேசமயம், இப்புத்தகம் விற்பனை நோக்கம் கொண்டது அல்ல. புத்தகம் கொண்டுவர ஆகும் செலவு மற்றும் இதர செலவுகளை மட்டுமே நன்கொடையாக வாங்கப்படும்.

இப்புத்தகத்தில் கிடைக்கும் நன்கொடை தொகையை, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது மிக முக்கிய செய்தியாகும்.

தமிழர் வரலாற்றில் பதிப்படப்போகும் இந்த ஆவணப் புத்தகத்தை வெளிகொண்டு வர ஆர்வமுள்ளவர்கள் நிதி ஆதரவு எதிர்பார்க்க்படுகிறது. குறித்த காலத்தில் இப்புத்தகத்தை கொண்டு வர உதவிகாரமாய் உங்கள் ஆதரவு இருக்கும். அத்தோடு, நிதி ஆதரவு கொடுப்போருக்கு, அவர்களுக்கு உரிய புத்தகங்கள் கொடுக்கப்படும்.

இப்புத்தகம் வெளிவர அனைத்து தமிழர்களின் ஒத்துழைப்பும்இ ஆதரவும் வேண்டி நிற்கிறோம். உங்களின் அரிய யோசனைகளையும் எங்கள் முகவரிக்கு தெரியப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம்.


புத்தக நிதி ஆதரவினை கொடுக்க விரும்புவோர், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தொடர்பு:

அக்னி சுப்ரமணியம்
செயல் இயக்குநர், மனிதம் - மனித உரிமை அமைப்பு
274- ஜி.சி, அவ்வை சண்முகம் சாலை, இராயப்போட்டை, சென்னை - 600014, தமிழகம்
தொலைப்பேசி எண் : +91-9003027712 - 9443322543 - 9003133661
தொலைநகலி எண் : +91-44-28133968
மின்னஞ்சல் : manitham@gmail.com
இணையம் : www.manitham.net/nesohr

சிறி
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் (International Association of Tamil Journalists), France
தொலைப்பேசி : 0033611149470
மின்னஞ்சல் : sri@orupaper.com sathiri@gmail.com

சும்மா பவிடிக்குத்தான்.......

9:15 AM, Posted by sathiri, 12 Comments

பெரிதாய் பார்க்க படத்தில் நீங்கள் விரும்பியவர் மீது அழுத்தவும்..



கிழக்குப் பதிப்பகம்.பா.இராவகன் திருடினாரா??

1:10 PM, Posted by sathiri, 5 Comments

எனது நண்பரான நந்தா கந்தசாமியின் மனக்குமுறல்.

என்னுடைய் ஓவியத்தை இணைய தளத்தில் இருந்து திருடி மழை ருசி என்னும் புத்தகத்தில் கவர் டிசைன் ஆக கிழக்கு பதிப்பகம் பாவித்திருந்தார்கள் . அதில் எனது பெயர் கூட குறிப்பிட படவில்லை. பல இணைய என் முகம் கூட தெரியாத நண்பர்கள் பலர் கிழக்கு பதிபக்தினருடன் இது சம்பந்தமாக இணைய தளங்களில் எழுதியும் அம்பலப் படுத்தி இருந்தனர்
இதன் பின்பு கிழக்கு பதிபகத்தை சேர்ந்த
சேசாத்ரி என்னுடன் தொடர்புக்கொண்டு நடந்த தவறுகளுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி இருந்தார் அத்துடன் நான் கேட்டு கொண்டது க்கு இணங்க கைருப்பிலுள்ள எல்லா புத்தகங்களுக்கும் எனது பெயர் அச்சிடபட்டு வெளிடுவதாக சொன்னார்கள் அதன் பிற்பாடு
மழை ருசி இரண்டு புத்தகங்களில் எனது பெயர் வெட்டி ஒட்டி அனுபி ருந்தனர் அத்துடன் அவர்களது வெளிஈடுலிருந்து நான்கு புத்தகங்கள் அனுப்பி இருந்தார்கள் அனால் இன்று தட்செயலக இணைய தளத்தை பார்த்தபோது என்னக்கு காம்பன்சேஷன் தொகை கொடுக்கபட்டதாக ... Lire la suite
பா .ராகவன் எழுதி உள்ளார். இது மிகவும் கேவலமானதும் அப்பட்டமான பொய்யுமாகும்
அவரது இணையதலத்தில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்புகேட்க தவிர்க்கவில்லை என்ன சொல்லி கொடுப்பனவு கொட்டுக்கபட்டது என அபாண்டத்தை சுமத்துகிறார்

திருகுதாளத் திருமாவும் திருந்தாத சில புலம்பெயர் தமிழரும்

1:43 PM, Posted by sathiri, 11 Comments


இந்த வார ஒரு பேப்பரிற்காக

சீறினால் சிறுத்தை..வாய் திறந்தால் வரிப்புலி..பார்த்தால் பாயும் புலி..கர்ச்சித்தால் கரும்புலி..செயலில் வெறும் பழப்புளியான..எங்கள் அண்ணன்திருமா அவர்கள் வன்னியில் அடைபட்டுக்கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் இரட்சிப்பதற்காக ..இதோ இரண்டாவது தடைவையாக ஜரோப்பவிற்கும்.முதற் தடைவையாக இங்கிலாந்திற்கும் வருகிறார்..பராக் பராக்..பராக்..
பிராக்கு பாக்கிற தமிழரெல்லாரும் திரண்டு வாருங்கள்.. டம..டம..டம..டம...டம்.டம்..டம்...


நான் கட்டியம் கூறிட்டன்..கட்டுரையை படிக்கிற பலர் என்னைக் கட்டிவைச்சு இழவு கூறத்தயாராவார்கள் என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும்..சொல்ல வந்த விடயத்தை சொல்லிமுடிக்கிறேன்... இலண்டனில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்.இந்த 26ந் திகதி ஈழத்தில் யுத்தத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக காற்றுவழிக்கிராமம் என்கிற ஒரு நிகழ்வினை செய்யவிருக்கிறார்கள்..இன்றைய காலகட்டத்தில் மிக மிக தேவையானதும் அவசியமானதுமான ஒரு நிகழ்வு. அதனை மனதார வரவேற்கிறேன்..ஆனால் இந்த நிகழ்விற்கு திருமாவளவனை சிறப்புரையாற்ற அழைத்திருப்பதுதான் இழவு வீட்டில் திருமண மந்திரம் ஓதுவதைப்போல இருக்கின்றது..

ஈழத்தமிழரின் இன்றைய இன்னல்கள் இழப்புக்கள் அனைத்திற்கும் காரணமான இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து ஒரேயொரு கதிரைக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழழர்களும் அவர் மீது கட்டிவைத்திருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தவர்தான் திருமா..பல்லாயிரம் தமிழரின் வாழ்வை அழித்த சோனியாவை சென்னைத் தீவுத்திடல் கூட்டத்து மேடையில் வைத்து சோனியா அம்மையாரை வாழ்க என்று கையுயர்த்தி கோசம் போட்டு தன் தமிழீழ மக்கள் மீது தான் கொண்டுள்ள அன்பின் வேடத்தை கலைத்துவிட்டவர்...சரி அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி பாணியில் சொல்லிவிட்டாலும்..வென்று கொடிபிடித்து கோட்டைக்குள் போனபின்னர் இன்று மானிலத்திலும் மத்தியிலும் ஆழும் கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்..அதற்கு பிறகாவது ஈழத்தில் தினம் தினம் அல்லல் பட்டும் செத்து மடியும் தமிழரிற்காக உருப்படியாக ஏதாவது செய்தாரா என்றால் அதுவும் இல்லை ..

எங்காவது ஒரு மேடையில் பிரபாகரன் திரும்ப வருவான் ..5 ம்கட்ட ஈழப்போர் வெடிக்கும் ..தமிழீழம் மலரும்..அது மலர்ந்ததும் அதைப் பிடுங்கி நாங்கள் மாலையாபோட்டுக்கலாம் என்று.. வெறும் வெட்டிப்பேச்சுக்கள் மட்டுமல்ல.. அந்த மேடையில் வைத்துத்தான் அவர் சோனியாவை நோக்கி.."எங்கள் அன்னை ஈழத்தமிழரிற்காவும் உதவுங்கள் என்று மன்றாட்டமாய் வேண்டிக்கொள்கிறேன்" என்று ஏதோ மாதா கோயிலில் வாசலில் முட்டுக்காலில் மெழுகுதிரியுடன் நிற்பவனின் வேண்டுதலைப்போல ஒரு வேண்டுதலையும் வைப்பார்..கலைஞராவது ஈழத்தமிழரை காப்பாற்ற அடிக்கடி தந்தியடிப்பார் .. இவரால் ஒரு கடிதம் கூடவா எழுதமுடியாது..

இப்படித்தான் கடந்த மாதம் ஜெர்மனியில் றைனை என்கிற நகரில் நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை மகாநாட்டில் வைத்து. கேக்கிறதற்கு கேனையர்கள் புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள் என்கிற துணிவில் இந்தியாவையும்..அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராகப் பேசியது மட்டுமல்ல 5ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்கிற வீராவேசப் பேச்சுக்களை வீசியெறிந்து விட்டுப்போனார். ஆனால் இந்தியா விமான நிலையத்தில் இறங்கியதுமே மறுபடியும் அதே அன்னையிடம் மறுபடியும் மன்றாட்டம்..இவைகளையெல்லாம் விட்டு விடுவோம்..புலம்பெயர் தமிழரெல்லோரும் சேர்ந்து தங்கள் உறவுகளிற்காக மருந்தும் உணவுப்பொருட்களும் அனுப்பிய வணங்கா மண் கப்பலை இலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியிருந்து..அப்
போது இலங்கையரசை கண்டித்து வீராவேசமாக கண்டன அறிக்கைகளை விட்ட திருமா அவர்கள்..

அதே வணங்காமண் கப்பல் இந்தியக்கடல் எல்லையில் நின்றபடி அந்த உணவுப்பொருட்களை இந்தியாவிலுள்ள ஈழத்து அகதிகளிற்காவது கொடுக்க உதவுங்கள் என்று ஒரு வேண்டு கோளை வைத்தனர்..அந்த வேண்டு கோள் திருமாவிடமும் வைக்கப்பட்டது..இது இரண்டு அரசுகள் சம்பத்தப்பட்ட விடயம் தன்னால் எதுவுமே செய்யமுடியாது எனகழண்டுகொண்டார்.பின்னர் அந்த விடயத்தை மனிதம் என்கிற மனிதவுரிமை அமைப்பு பொறுப்பெடுத்து பல சிரமங்களிற்கு மத்தியில் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதற்கான வேலைகளை செய்து அவை நிறைவடைந்து வணங்கா மண் கப்பல் இலங்கைக்கு திரும்ப செல்லப்போகின்றதென்பது உறுதியானதும்.. அந்தக் கப்பலை அனுப்பவதற்காக பின்நின்று உழைத்த சிலரிடம் தன்னுடைய ஆட்களை அனுப்பி ஆவணங்களை கைப்பற்றி அந்தக்கப்பல் தன்னுடைய முயற்சியினால்தான் இலங்கைக்கு அனுப்பப்பட்டது என்கிற தோற்றப்பாட்டை உருவாக்கி அறிக்கைவிட்டு கீழ்த்தரமான அரசியலை செய்ய நினைத்தவர் தான் இந்த ஆயுதமேந்தாத காகிதப்புலி.. ஆனால் மனிதம் அமைப்பினரின் கட்டுக்கோப்பான உறுதியான நடவடிக்கைளினால் இவரது தகிடுத்தனம் பலிக்கவில்லை...இன்னமும் இவர்போன்ற அரசியல் இலாபக்கணக்கு மட்டுமே போடத்தெரிந்த இந்திய இறக்குமதிகளை நம்பியா எமது வாழ்வாதாரப் போராட்டத்தை நடாத்தப் போகின்றோம்..இவர்களின் வீராவேப் பேச்சுக்களிற்கு உணர்ச்சிவசப்பட்டு வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாகவா புலம்பெயர் இளையசமூகம் இருக்கப் போகின்றது..புலம்பெயர் இளைய சமூகமே உங்களிற்குள் உணர்வில்லையா?? உங்கள் உறவுகளிற்கு நீங்கள் உதவுவது உங்கள் உரிமையில்லையா??இவர் போன்ற காவடிகள் இந்தியாவிருந்,து வந்து சொல்லித்தான் நாம் எமது உறவுகளிற்கு உதவப்போகிறோமா. எனவே இவர்களைப்போன்றவர்கள் இன்னமும் தேவையா?? முடிவெடுங்கள்..

அய்..அய்ய்...அய்ய்ய்......

11:21 AM, Posted by sathiri, No Comment

தமிழகமும் ஈழத்தமிழரும் மனிதம் அமைப்பின் இயக்குனர் அக்கினி சுப்பிரமணியத்துடனான கலந்துரையாடல்.

1:01 PM, Posted by sathiri, One Comment



மனிதம் ! மனிதம் என்கிற அமைப்பு. இது மனிதவுரிமை மக்கள் நலன் மற்றும்சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றுக்குஆதரவாகக் குரல் கொடுத்தும் அதற்கானநடவடிக்கைகளை எடுத்துவரும் ஒர்அமைப்பு. அந்த வகையில்நீண்டகாலமாக ஈழத்தமிழரின்உரிமைகளுக்கு ஆதரவாகமட்டுமல்லபல உதவிகளையும் செய்துவருகின்றனர். அண்மையில் புலம்பெயர் தேசத்தமிழ் மக்களால் தமதுஉறவுகளுக்காக உதவும் வகையில் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலைஇலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியதும், அதனைப் பல சிரமங்களுக்குமத்தியில் மீண்டும் ஈழத்தமிழரிற்குப் போய்ச் சேரும் வழிவகைகளைச் செய்துமுடித்துள்ளனர் . அந்த அமைப்பின் அமைப்பாளரும் நிர்வாக இயக்குனருமானதிரு.அக்கினி சுப்பிரமணியத்துடனான ஒரு கலந்துரையாடல்.

இந்நிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.

12:30 PM, Posted by sathiri, No Comment

மனிதம்..என்கிற அமைப்பு.இது மனிதவுரிமை.மக்கள் நலன் மற்றும்.சுற்றுப்புறச்சூழல்.ஆகியவற்றிற்கு ஆதரவாக குரல்கொடுத்தும்..அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துவரும் ஒரு அமைப்பு.அந்த வகையில் நீண்டகாலமாக ஈழத்தமிழரின் உரிமைகளிற்கு ஆதரவாகமட்டுமல்ல பல உதவிகளையும் செய்து வருகின்றனர்..அண்மையில் புலம்பெயர் தேசத்து தமிழ் மக்களால் தமது உறவுகளிற்காக உதவும்வகையில் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலை இலங்கையரசு தடுத்து திருப்பியனுப்பியதும்.. அதனை பல சிரமங்களிற்கு மத்தியில் மீண்டும் ஈழத்தமிழரிற்கு போய் சேரும் வழிவகைகளை செய்துமுடித்துள்ளனர்..அந்த அமைப்பின் அமைப்பாளரும் நிருவாக இயக்குனருமான திரு.அக்கினி சுப்பிரமணியத்துடனான ஒரு கலந்துரையாடல்..

12:22 PM, Posted by sathiri, No Comment

ஈழத்தமிழர்களின் அடுத்த போராட்டவடிவம் என்ன..?

3:39 PM, Posted by sathiri, 4 Comments


டென்மார்க் நாட்டின் தற்சமயம் எதிர்கட்சியாக விளங்கும் பழம்பெரும் கட்சியான சமுக ஜனநாயகக்கட்சின் அரசியலாளரும்.. தென் பிராந்திய சபையின் பிரதி நிதியும் .தர்மகுலசிங்கம் தருமன் அவர்களுடனான செவ்வி..

நேரடியாக நிகழ்ச்சியைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

நிகழ்ச்சியை தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.




சினேகிதிகளும் சில சில்லெடுப்புக்களும்

2:11 PM, Posted by sathiri, 5 Comments




அண்மையில் நண்பி ஒருவர் மானுஸ்ய புத்திரனின் சினேகிதிகளின் கணவர்களுடனான சினேகிதங்கள் என்றொரு கவிதையொன்றினை அனுப்பிவைத்து இப்படியான சம்பவங்கள் உங்களிற்கும் ஏற்பட்டிருக்கா என்று கேட்டிருந்தார்..எனக்குத்தான் சினேகிதிகள் அதிகமாயிருக்கே அவர்களிற்கு திருமணமான பின்னர் அவர்களினுடனானதும் அவர்களின் கணவர்களினுடனானதுமான என்னுடைய உறவில் நான் நெளிந்த.வழிந்த சம்பவங்கள் பல... எங்கள் சிறுவயது அல்லது பாடசாலை சினேகிதிகள் வயது வந்து திருமணமாகிப் போன பின்னர்..அவர்களுடன் எங்கள் உறவு முற்றாக அறுந்து போய்விடுகின்றது..அல்லது பெரும்பாலும் குறைந்து போய்விடுகின்றது.ஆனாலும் திருமணமான பின்னர் தொடர்பில் இருக்கின்ற சினேகிதிகளுடனான எங்கள் உறவு என்பது உண்மையிலேயே ஒரு கம்பியில் நடக்கிற வித்தை மாதிரி..

நீ.. நான்..வாடி போடி என்கிற ஒருமைகள் அற்றுப்போய்..நீங்கள் நாங்கள் என்கிற ஒரு அன்னியத் தன்மையில்..அழைக்கவேண்டியிருக்கும்.எனக்கும் ஜரோப்பாவில் சிறுவயது தோழி ஒருத்தி இருக்கிறாள்..நிச்சயிக்கப்பட்ட திருமணம் மூலம் வெளிநாடு வந்தவள்..அவளது கணவன் நல்லவர்தான் ஆனால் ஊரில் வாழ்கின்ற ஒரு சராசரி குடும்பத் தலைவனைப்போன்ற கொஞ்சம் கண்டிப்பு கொஞ்சம் சந்தேகம்..வருடத்தில் ஒருதடைவைதான் அவர்களது வீட்டிற்கு போவேன்.. மற்றும்படி தொலைபேசியில் கதைப்பேன்..அவள் கணவர் இல்லாத நேரங்களில் தொலைபேசியடித்து பல விடயங்களையும் மனம்விட்டு பேசுவாள். சில நேரங்களில் அவள் கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது கணவன் வேலையால் வந்துவிட்டால்..உனையே ""அவர் வேலையாலை வந்திட்டார் அவரோடை கதையுங்கோ என்று தொலைபேசியை அவரிடம் திணித்து விட்டு போய்விடுவாள்..அதுவரை கலகலவென பல விடயங்களையும் கதைத்துக்கொண்டிருந்த எனக்கு அவரிடம் என்னகதைப்பது என்று தெரியாமல் திக்கித் திணறி " என்ன வேலையோ.?? இப்பதான் முடிஞ்சதோ??எப்ப லீவு??என்று உப்புச்சப்பில்லாத சில கேள்விகளுடன் சும்மாதான் சுகங்கள் விசாரிக்க போனடிச்சனான்.என்று ஒருமாதிரி கதைத்து போனை வைத்துவிட்டு பெருமூச்சு விட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்..

அவளதும் பிள்ளைகளினதும் மற்றும்.கணவரினதும் . பிறந்தநாளிற்கு தவறாது வாழ்த்து மடல் அனுப்புவேன்..அதே நேரம் அவளிற்கான வாழ்த்து மடலில் மட்டும் இதயம்..அல்லது சிவப்பு றோசாப்பூ..இல்லையில்லை றோசாப்பூ படமே இல்லாத வாழ்த்து மட்டைதான் தெரிவு செய்து அனுப்புவேன்..மற்றும்படி அவளது வீட்டிற்கு போகும் பொழுது அவளது கணவரிற்கு ஒரு வைன் போத்தல். பிள்ளைகளிற்கு விழையாட்டுப்பொருள் என்று வாங்கிவிட்டு அவளிற்கும் ஏதாவது வாங்கலாமென்று யோசிப்பேன்..அவளிற்கு என்னநிற உடைபிடிக்கும்.என்னென்ன பொருட்கள் பிடிக்கும் என்கிறதெல்லாம் எனக்கு அத்துபடியாய் தெரிந்தாலும் அவளிற்கு பிடித்தமானவற்றை யெல்லாம் எடுத்து பலதடைவை புரட்டிப் புரட்டிப் பார்த்து விட்டு கடைசியில் எதுவுமே வாங்காமல் போவதுதான் வழைமையாகிவிட்டது..அவளிடம் ஏதாவது பொருளை கொடுக்கும் போதும்சரி வாங்கும் போதும் சரி தப்பித்தவறியாவது என் கைகள் அவள் மீது பட்டுவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொள்வேன்..சாதாரணமாக கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது சில சமயங்களில் நான் என்னை மறந்து போடி என்று சொல்லி விட்டாலும் ..நாக்கைக்கடித்து மன்னிப்பு கேட்டு அவளது கணவனைப்பார்த்து வழியவேண்டியிருக்கும்.

அவர்களுடன் உரையாடும் பொழுதும்.. எங்கள் ஊர் பற்றியதும்..எங்கள் சிறுவயது சமாச்சாரங்கள் உறவுகள் பற்றிய விடயங்களை பெரும்பாலும் தவிர்த்து ..அவர்களது பிள்ளைகள் பற்றியும்..அவளது கணவன் பற்றியுமே அதிகம் பேசுவோம்..ஆனாலும் அவள் கணவன் விடாக்கண்டன்.நான் கொண்டு போன வைன் போத்தலை உடைத்து கிளாசில் ஊற்றியபடி தொடங்கும் உரையாடலில் ""இவள் படிக்கேக்கை ஒருத்தரையும் காதலிக்கேல்லையோ""என்று கதையோடு கதையாய் சிரித்தபடி அடிக்கடி கேட்பார்..""சேச்சே அவள் நல்லபிள்ளை குனிஞ்சதலை நிமிரமாட்டாள்..ஒரு பெடியளோடையும் கதைக்க மாட்டாள்.நான் பக்கத்து வீடு அதோடை சின்னவயதிலையே பழக்கம் எண்டதாலை என்னோடை மட்டும்தான் கதைப்பாள்""..என்றொரு நற்சான்றிதழ் பத்திரத்தை கொடுத்த கையோடையே அடுத்த கேள்வி வந்து விழும்..இவள் காதலிக்காட்டிலும் இவளின்ரை கலருக்கும் வடிவுக்கும் பெடியள் யாராவது காதல் கடிதம் குடுத்திருப்பாங்கள்தானே??அப்பிடியும் நடக்கேல்லையோ ""என்று அவளைப் பார்த்து சிரித்தபடிகேட்பார்..இது கொஞ்சம் சிக்கலான கேள்விதான்..ஒருத்தருமே கொடுக்கவில்லையென்று பொய்யும் சொல்லமுடியாது..யாரும் நம்ப மாட்டார்கள்.

ஏனென்றால் பாடசாலை நாட்களில் அது நிச்சயமாக அனைவருக்குமே நடந்திருக்கக்கூடிய விடயம்..அதே நேரம் கடிதம் கொடுத்து..அல்லது அவள் படிக்கின்ற காலங்களில் ஒருத்தனை காதலித்து அவளிற்காக நானே கடிதம் பரிமாறியதை நிச்சயமாக இப்பொழுது அவள் கணவனிடம் சொல்லமுடியாது.. அப்படியான சந்தர்ப்பத்தில் சமாளிப்பதற்காக முன்னாலிருந்த வைனை எடுத்து ஒரே மடக்கில் குடித்துவிட்டு அவரது கேள்விக்கணைகளில் இருந்து தப்புவதற்காக ""படிக்கிற காலத்திலை நீங்கள் பல பெட்டையளிற்கு கடிதம் குடுத்து அடிவாங்கி அனுபவம் போலை "" என்று ஒரு ஏவுகணையை அவர்மீது ஏவி விட்டு அது உலகமகா படிகிடிபோல நான் வில்லங்கத்திற்கு விழுந்து விழுந்து சிரிக்க..அவரும் பதில் சொல்லாமல் அசடுவழிந்தபடி அடுத்த விடயத்திற்கு மாறிவிடுவார்..

அதே நேரம் நான் குடித்த போதை எந்த அளவில் நிற்கிறது என்பதையும் அளந்து பார்ப்பதற்காக அடிக்கடி கழிவறைக்கு போவது போல எழுந்து நின்று நிதானித்து நடந்து சுய பரிசோதனை செய்து பார்ப்பேன்.. நடக்கும் போது சாதுவாய் தலை கிறு கிறுத்து நடை தடுமாறுவது போலவோ.. அல்லது சொன்ன ஒரு விடயத்தை திரும்ப சொல்வது போலவோ தோன்றினால் அதற்கு மேல் அங்கிருந்தால் ஏதாவது உளறிவிவேன் என்கிற பயத்தில்.உடைனேயே ..சந்தித்தது மகிழ்ச்சி என்று நன்றி வணக்கங்கள் சொல்லிவிட்டு விடைபெற்று விடுவேன்.. நண்பர்களே உங்களிற்கும் இப்படியான சில்லெடுப்பு அனுபவங்கள் நடந்திருக்கிறதா??நடந்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே..எனவே நன்றி வணக்கம்..

இத்தாலிய இந்துக்கள்.தமிழில் பூசை..

1:12 PM, Posted by sathiri, 8 Comments

இங்கிலாந்தில் வோல்ஸ் என்கிற இடத்தில் இந்துமதத்தினை பின்பற்றும் இங்கிலாந்து வெள்ளையர்களின் முருகன் கோவிலை பலரும் அறிந்திருப்பிர்கள்.. அதே போல இத்தாலி நாட்டில் altair என்கிற இடத்தில் இந்து மதத்தினை பின்பற்றும் இத்தாலிய நாட்டினர்கள் சிலர் இணைந்து ஆரம்பத்தில்84 ம் ஆண்டளவில் ஒரு யோகாசனம் மற்றும் தியானம் செய்கின்ற ஒரு மண்டபத்தினை அமைத்து அவர்கள் வழிபடுவதற்காக ஒரு அம்மன்சிலையை மட்டும் வைத்து சிறிய கோயிலையும் அமைத்திருந்தார்கள்..காலப்போக்கில் மன அமைதிக்காக தியானம் செய்கிற இத்தாலியர்களின் தொகையுடன் இத்தாலி மற்றும் பிரான்சில் இருக்கின்ற இந்துக்கள். பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கோயில் பற்றி கேள்விப்பட்டு வரத்தொடங்கிவிட்டார்கள்..அதனால் சிறிய கோயிலும் வளர்ச்சியடைந்து இந்தியாவின் கன்னியாகுமாரியிலிருந்து சிலைகளும் இந்தியாவிலிருந்து சிற்பிகளும் வருவிக்கப்பட்டு அழகிய ஆனால் அளவான கோயிலாக உருப்பெற்று நிற்கிறது..அதனை நிருவாகிக்கின்ற இத்தாலியர்கள் தமிழ்நாட்டிலேயே பெரும்பாலும் இந்துமதம் பற்றியும் தேவாரப்பாடல்களையும் தமிழிலேயே படித்திருப்பதால் பாடல்கள் தமிழில் பாடுவது மட்டுமல்ல பூசைகளும் தமிழிலும் சமஸ்கிருதம் இரண்டும் கலந்தே செய்கிறார்கள்..

அவர்கள் தங்கள் பெயர்களையும் தமிழிலேயே மாற்றியிருக்கிறார்கள்..இன்று பிள்ளையார் சதுர்த்தி விசேட பூசை என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.. பிரான்சில் நான் இருக்குமிடத்திலிருந்து 250 கி.மீ தூரம் இரண்டு மணிநேரப்பயணம்..மலைப்பிரதேசத்தில் அமைதியான அடர்ந்த காட்டுப்பிரதேசத்தில் அமைந்திருந்த கோயிலுக்கு போய் வந்தது மட்டுமில்லை உங்களிற்காக சில படங்களையும் எடுத்து வந்தேன் இங்கு இணைக்கிறேன்..

கோயிலின் முகப்பு


பூசைகள் முடிந்தபின்னர் இடம்பெற்ற கலை நிகழ்வில் நடனமாடும் இரண்டு இத்தாலிய மற்றும் ஒரு தமிழ்பெண்

அங்கு பலரின் கவனத்தையும் கவர்ந்து சிறப்பாக நடனமாடிய மீனாச்சி என்கிற இத்தாலியப்பெண்மணி







எங்களுக்கும் கலையை இரசிக்கத்தெரியுமில்லை..

இந்தக் கோயில் பற்றிய மேலதிக விபரங்கள்

ஈழம்..இனி ஆயுதப்போர் சாத்தியமா??

11:23 AM, Posted by sathiri, 4 Comments


ஈழத்தில் இலங்கையரசின் அடக்குமுறைகளிற்கெதிரான அறவழிப்போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு திருப்புமுனையானயாக 1970 ம் ஆண்டு தமிழ் மாணவர் பேரவை என்கிற மாணவர் அமைப்பினை அமைத்து ஈழத்தமிழரிற்கு இனி ஆயுதப் போராட்டம்மூலமாகவே தீர்வு ஏற்படுமென்று தீர்மானமெடுத்தவர்களின் முக்கியமானவர்களில் சத்தியசீலனும் ஒருவர்..இவரது மாணவர் பேரவையிலிருந்தே பிற்காலங்களில் பிரபாகரன்உட்பட பலஇயக்கங்களையும் தொடங்கிய தலைவர்கள் அனைவரும் தோன்றியிருந்தனர்.இன்று ஈழத்தில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்துள்ள நிலையில் ஆயுதப்போர் மூலமே தீர்வு எனமுடிவெடுத்த சத்தியசீலனுடனான ஒரு நேர்காணல்..







ஈழம்.. முடிந்துபோன ஆயுதப்போராட்டமும்.. முடிவுறாத காமக்கதைகளும்..

12:40 PM, Posted by sathiri, 4 Comments



ஈழத்திலை ஆயுதப் போராட்டம் முடிசிச்சுதா ... புலிகளின் தலைமையும் இல்லையெண்டு அறிவிச்சிட்டாங்களா இங்கினை ..புலம்பெயர் தேசங்களின் புலிகளின் கட்டமைப்போ நேத்திக்கடனிற்கு(வேண்டுதலுக்கு)உடைச்ச சிதறு தேங்காய் மாதிரி ஆகிப்போய் அதை மீண்டும் கே.பி..என்கிறவர் அமைத்த நாடுகடந்த தமிழீழ அரசு என்கிற கட்டமைப்பில் மீண்டும் அனைவரும் இணைத்து பழையபடி தமிழர்தரப்பு பெரும் சக்தியாக மாற்றமடைந்து வந்துகொண்டிருக்கிறபோது ..இன்னமும் புலிகளினதும் பிரபாகரனினதும் பெயரை வைத்தே பிழைப்பு நடாத்த விரும்பும் சிலர்மட்டும் நெடியவன் தலைமையில் கே.பி தலைமையிலான அணியினரை துரோகிகள் விலை போய்விட்டார்கள் என்றபடி.. தலைவர் மீண்டும் வந்து தாட்டுவைத்த துவக்கை கிழறியெடுத்து போராட்டம் நடாத்துவார்..அதற்கு பணம் தாருங்கள் என்று பணம் சேர்ப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள்..

அதுமட்டும் கிடையாதுங்கோ ஏதோ ஏருத்தரையொருத்தர் பார்த்து .காய் கலோ.. எண்டு சொல்லுறமாதிரி ஆளாளிற்கு காய் துரோகி என்கிற நிலைமையாய் போச்சு..ஆனால் கே.பி அணி பக்கம் நிற்கிறவங்களிற்கு மற்றவங்கள் சொல்கிற குற்றச்சாட்டு என்னவெண்டால்... புலிகள் இயக்கத்தில் இருந்து பணமோசடி .பாலியல் மோசடி செய்தார்கள்..என்று அதரப்பழசான அலுத்துப்போன குற்றச்சாட்டுக்களாக உள்ளது.. இனியாவது புதிசாய் ஏதாவது யோசிப்பாங்களா?? ஒரு பாரிய ஆயுத அமைப்பிலை இருந்து வெளியேற்றுறதுக்கு வேறை குற்றச்சாட்டுக்கள் எதுவுமே இல்லையா..என்ன கண்றாவி...இந்த குற்றச்சாட்டு கே.பி..யில்தொடங்கி.. வழுதி..வழியாய் வந்து.. இப்பொழுது என்மீதும் அதே குற்றசாட்டை சுமத்தி நானும் துரோகியாம்..

எல்லாரும் நல்லா கவனமாய் கேட்டுக்கொள்ளுங்கோ.. நான் இப்போ துரோகி..சரி..புலிகள் இயக்கமென்பது.. இதுவரை உலகில் இருந்த விடுதலை இயக்கங்களிலேயே மிகவும் கண்டிப்பான கட்டுக்கோப்பானதொரு ஆயுதஇயக்கம் என்பதை நான் இங்கு எழுதத் தேவையில்லை.. அப்படி அந்த இயக்கத்தில் பணம் களவெடுத்து பாலியல் மோசடியும் செய்தால் உடைனே தலைவர் மோசடி செய்தவரை இயக்கத்திலிருந்து வெளியேற்றி முடிந்தால் பத்திரமாக வெளிநாட்டிற்கும் அனுப்பிவைப்பாராக்கும்...அப்பிடியே வெளிநாடு வந்தவங்களும் புலியளிற்கு ஆதரவாய் இருக்கிறமாதிரி இருந்து கொண்டு வெளிநாட்டு உளவு நிறுவனங்களிற்கு விலை போயிடுவாங்களாம்..முக்கியமாய் றோவிற்கு..இங்கினை கவனியுங்க உலகத்திலையே உளவு நிறுவனமெண்டால் அது றோ மட்டும்தானாம்..

ஏனெண்றால் அதை எழுதிறவங்களிற்கு அதை விட்டால் வேறை உளவு நிறுவனங்களின்ரை பெயரே தெரியாது அதுதான் பிரச்சனை.சரி எங்களைத்தான் தலைவர் வெளியேத்த முதல்லை ஊரிலை ஒரு பெண்ணை பிடித்து கலியாணமும் பண்ணிவைத்து தான் வெளியேத்துவார்..அதுதான் வெளியேத்திட்டாரே..நாங்களும் இயக்கத்திலை சுருட்டின பணத்தோடை முதல்லை இந்திய வருவம்..ஏனெண்டால் அங்கினைதானே எங்களிற்கு புலிகள் இயக்கம் பயிற்சி தந்தது..அதாலை எங்களிற்கு தெரிந்த முதல் வெளிநாடு அதுதான்..அங்கை தமிழ்நாடு.. கன்னடா.. ஆந்திரா..கேரளா என்று முதல்லை மானில வாரியாய் எங்களோடை பாலியல் சேட்டைகளை ஆரம்பிப்போம்..பிறகு அப்பிடியே கொஞ்சம் வெளியாலை போய்

தாய்லாந்து.கம்போடியா..இந்தோனேசியா என்று நாடுவாரியாய் முடித்துக்கொண்டு.. இப்போ ஜரோப்பாவிலை பிரான்ஸ்.. ஜெர்மன்..சுவிஸ் எண்டு உலகலெவலிலை பாலியல் மோசடியள் செய்து கொண்டிருக்கிறம்..இப்போ உலகலெவலிலை நாங்கள் இயங்கத்தொடங்கின படியாலை பணமும் அதிகமா தேவைப்படுதா.. அதுதான் றோவிட்டை விலை போயிட்டம்...றோவிற்கும் என்ன கஸ்ரமோ??எங்கனை வாங்கிட்டு மொத்தமாய் பணத்தை தராமல் தவணை முறையிலை கே.பி..ஊடாக தாறாங்கள்..அதை வைச்சுக்கொண்டு நானும் பொழுது போகாமல் அப்பப்ப ஓசி பேப்பர் ஒண்டிலையும் இணையத்தளங்களிலையும்..ஊர்வம்பளக்கிறது அவங்களிற்கு குடையுதாம்..நாங்கள் றோவிட்டை வாங்கிறம் அதுக்கு எங்களாலை கணக்கு காட்ட ஏலும்.. ஏனெண்டால் ஒவ்வொரு பெட்டையளும் ஒவ்வொரு நாட்டிலை இருக்கிறபடியாலை போக்குவரத்துசெலவு..அங்கை போனால் ஊசார் ஏத்துறதுக்கு தண்ணிச்செலவு.. போகேக்கை வெறும் கையோடை போறது தமிழர் நாகரீகம் இல்லைத்தானே அதாலை ஏதாவது வாங்கிற செலவு இப்பிடி ஏகப்பட்டது இருக்கு தாராளமாய் கணக்கு காட்டலாம்..

ஆனால் நீ்ங்கள் திரும்பவும் ஆயுதப் போராட்டத்திற்கெண்டும்..இராணுவ முகாம்களிலை இருக்கிறவையை வெளியாலை எடுக்கிறமெண்டும்.. மருந்துக்கு எண்டும் சனத்திட்டை காசு சேர்க்கிறீங்களே.. அதிலை யாரையாவது வெளியிலை எடுத்ததை காட்டமுடியுமா?? இல்லாட்டி வாங்கின பணத்துக்குத்தான் அது எங்கை எவ்வளவு போனதெண்டு கணக்கு காட்டமுடியுமா???முடியாதே..
இதை நான் உங்களிட்டை நேரை கேட்டால் உடைனையே .. நான் புலிகள் இயக்கத்திலை எந்தப்பயிற்சி முகாமிலை எத்தனையாவது அணியிலை பயிற்சி எடுத்து எந்தெந்தப் பிரிவிலை எத்தினை வருசம் இருந்தனான் எண்டுகூடத்தெரியாமல்..என்னைப்பற்றி தெரிந்த அரைகுறை தகவல்களைவைத்துக்கொண்டு துரோகி கட்டுரை எழுதிறாங்கள்.. இனியாவது உங்களைப்போலவே அரைகுறை கட்டுரைகளை எழுதாமல்.. என்னுடைய விலாசம் தொ.பே இலக்கம் எல்லாம் பகிரங்கமாய் இருக்கு.. நேரிலை யாரவது வாங்கோ..அல்லது தொ.பே அடிச்சு என்னைப்பற்றிய முழு விபரத்தையும் கேளுங்கோ.. கேட்டுவிட்டு எழுதுங்கோ.. அப்பதான் ஒரு பரபரப்பாய் இருக்கும்...அப்போ வரட்டா????அவ்வ்வ்...........

காம சாத்திரி

2:19 PM, Posted by sathiri, 9 Comments

"ஊருக்கு உபதேசம் உனக்கில்லயடி"

நீங்கள் "சாத்திரி" அல்லது "சிறீ" என்றழைக்கும் சிறீரங்கநாதன் கெளரிபாலனை அறிந்திருப்பீர்கள். ஆனால் அவரின் மறுபக்கத்தை யாரும் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஒரு பேப்பரில் ஊருக்கு உபதேசம் செய்யும் இவருக்கு உபதேசம் செய்ய யாரும் இல்லை. அதனால், காம களியாட்டங்களுடன் கழிகின்றது இவரது வாழ்க்கை.

இவர் பிரான்சில், நீஸ் நகரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சண்டிலிப்பாய் எனும் இடத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1984 முதல் 1986 வரை பயிற்சி முகாம் நான்கில் இருந்தவர். குறுகிய காலம் இயக்கத்தில் இருந்த இவர், இயக்கத்தில் இருந்தவர்களுடன் கண்டபடி முறண்பட்டதுடன், இயக்கத்தின் கொள்கைகளுக்கு முரணாக நடந்துகொண்டு ஒழுக்காற்று நடவடிக்கையில் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


இயக்கதில் குறுகிய காலமே இருந்து ஒழுக்காற்று நடவடிக்கையில் வெளியேற்றபட்ட புலம்பித்திரியும் ஷோபா சக்தி என்பவர் போல்தான் இவரும் வெளியேற்றப்பட்டபின் புலி எதிர்ப்பு புராணங்களைப் பாடத் தொடங்கினார்.
ஆனால், வெளியேற்றப்பட்ட "சாத்திரி" இயக்கத்தின் விசுவாசி போல் காட்டிக் கொண்டாலும் இயக்கத்தைப்பற்றி விமர்சிப்பதை நிறுத்தவில்லை. அதற்கு ஒத்துழைப்பாக இருந்தது இலண்டனில் இருந்து வெளியாகும் 'ஒரு பேப்பர்'. நிதி நெருக்கடியால் நின்றுபோன இந்தப் பேப்பர் இப்போது கேப்பியின் நிதி உதவியுடன் மீண்டும் வலம்வரத் தொடங்கியுள்ளது.
சாத்திரி ஊரில் ஒருவரை திருமணம் செய்திருந்தார். பின்னர் புலம்பெயர்ந்த வந்தவுடன் அந்தத் திருமணத்தை மறைத்து அந்த மனைவியைக் கைவிட்டு பிரான்சில் வெள்ளைக்காரப் பெண் ஒருவருடன் உல்லாசமாக வாழ்க்கை நடத்தினார்.

காலப்போக்கில் அப்பெண்மணியும் கசத்துவிட இந்திய உளவு அமைப்பான "றோ"வின் அறிமுகத்துடன் வந்த கன்னடப் பெண்மணியை மணந்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண்குழந்தையும் உண்டு. தற்போது கன்னடப் பெண்மணியுடன் "சாத்திரி" குடித்தனம் நடத்தினாலும், நாலாவதாக இப்போது சீனப் பெண்மணி ஒருவருடன் தொடர்பு இருப்பதை எமது வாசகர்களுக்கு நாம் ஆதாரத்துடன் உறுதிப்படுத்த முடியும். ஆனால் "சாத்திரியின்" குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த விபரங்களை இங்கே தவிர்க்கின்றோம்.

இவர் இந்திய புலனாய்வு அமைப்பான "றோ"வுடன் இணைந்து வேலை செய்வதை தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை 2003ம் ஆண்டு தலைமைக்கு உறுதிப்படுத்தியிருந்தது. தற்போது "ஒரு பேப்பரின்" பிரான்சுக்குரிய தொடர்பாளராகவும் இவர் இருக்கின்றார். இப்படிப்பட்ட கோடாரிக்காம்புகளை நீங்கள் இனம் காணுங்கள்.

இந்தத் தகவல்களை நம்ப மறுப்பவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள "சாத்திரியுடன்" கடிதம் மூலமாகவோ, தொலை, செல் பேசிகள் மூலமாகவோ நவீன இலத்திரனியல் ஊடாகவோ நீங்களே தொடர்பு கொண்டு கேளுங்கள்...
GOWRIPAL SRI
241, BOULEVARD DU MONT-BORON
06300 NICE
http://meivilampi.blogspot.com/2009/08/blog-post.ஹ்த்ம்ல்

TEL: 09 64 30 06 16
MOBILE: 06 11 14 94 70

என்னடா தன்னைப்பற்றியே எழுதியிருக்கிறானே என்று நினைப்பவர்களிற்கு
எனது குறிப்பு..ஒரு இனத்திற்கான விடுதலைக்காக ஒரு ஆயுதப் போராட்டத்தினை நடத்தி தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் அர்ப்பணித்தவனின் வழியை தொடப்போவதாக சொல்லிக்கொண்டு பிரபாகரனின் படத்தையும் போட்டுக்கொண்டு அடுத்த கட்ட ஈழப்போரை நடத்துவதாக சொல்லிக்கொண்டு இப்படி என்னைமாதிரி சிலர் என்னென்ன மோசடி செய்தார்கள் எந்த பெண்களோடை தொடர்பு வைத்திருந்தார்கள் என்றும் யார் யாரோடை படுத்தார்கள் என்கிற ஆராச்சியில் ஈழப்போராட்டத்தை சுருக்கிவிட்ட சிலர் எழுதும் ஒரு இணையத்தில் வெளியானது..அவர்கள் ஒரு பத்திரிகையையும் சில இணையத்தளங்களையும் நடாத்துகிறார்கள்.. அப்படி அவர்கள் நடாத்துகின்ற ஒரு இணையத்தளத்தில் என்னைப்பற்றி எழுதிய உண்மைகள்தான் இவை..இவை பாதிதான் இன்னமும் மீதி அவர்களிற்கு தெரியாது..
எனவே அந்த இணைப்பினை பார்க்க


படித்து மகிழுங்கள் நன்றி
அத்துடன் பாகம் இரண்டினை மற்றவர்களிற்கு சிரமம் கொடுக்காமல் நானே எழுதவுள்ளேன் விரைவில் எதிர்பாருங்கள்..நன்றி