Navigation


RSS : Articles / Comments


தளபதி ராம் அவர்களின் மாவீரர் நாள் உரை 2009 ஒலிவடிவில்

8:25 AM, Posted by sathiri, One Comment


தளபதி ராம் அவர்களின் மாவீரர் நாள் உரை ௨௦௦9ஒலிவடிவில்

மாவீரர் தின உரை 2009

7:17 AM, Posted by sathiri, No Comment




சிறையிலிருந்து ஒரு குரல்

1:06 PM, Posted by sathiri, No Comment



சிறையிலிருந்து ஒரு குரல் உரையாடல்.
கழுத்துறைச் சிறையில் 12வருடங்களாக பொய்யான குற்றச்சாட்டின் பெயரில்கைதாகியிருக்கும் ஒரு இளைஞனின் குரல் இது. தென்னிலங்கைச் சிறைகளில்தமிழர்களின் அவலம் குறித்து உரையாடுகிறார். உரையாடியோர் சாத்திரி சாந்தி.

புலிகளின் தளபதி ராமின் அறிக்கை

5:07 AM, Posted by sathiri, No Comment

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா??

1:16 PM, Posted by sathiri, 7 Comments




வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா?? என்பது பற்றியதான கலந்துரையாடல்.. .ஈழத்தின் விடுதலைப்போராட்ட காலத்தின் ஆரம்பகால போராளியாகவும்..ஈரோஸ் இயக்கதின் மத்தியகுழு உறுப்பினராகவுமிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களுடனான கலந்துரையாடல்..கலந்து கொண்டபவர்கள்...சாத்திரி மற்றும் சாந்தி ரமேஸ் ஆகியோர்.இங்கு அழுத்தி கேட்கலாம்

தமிழினப் படுகொலைகள் ஆவணப்புத்தகம்

12:21 PM, Posted by sathiri, No Comment

சிறீலங்காலில் 1956ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு மேமாதம் வரையிலான தமிழினத்தின் மீதான சிறீ லங்கா அரசின் படுகொலைகளை ''தமிழனப் படுகொலைகள்' என்ற ஆவணப் புத்தகத்தை மனிதம் அமைப்பு மற்றும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இணைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.


உடனே இலங்கை அதிபரை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அதிபரின் தம்பிகள் இருவரையும், இராணுவ தளபதியையும் அப்படியே செய்ய வேண்டும். இது உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களின் குரலாய் தற்போது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில், அவர்களை குற்ற கூண்டில் ஏற்ற தேவையான படுகொலை ஆவணத்தை புத்தக வடிவில் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனிதம் - மனித உரிமை அமைப்பு, 6 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், பிரன்சு, ஜெர்மன், சிங்களம் மற்றும் இந்தி) கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

வணங்காமண் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த கப்பலை இலங்கை அரசு முதலில் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, 2009 அக்டோபர் இறுதி வாரத்தில் வன்னி மக்களிடம் வணங்காமண் நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்க காரணமாய் இருந்தது மனிதம் அமைப்பு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மனிதம் அமைப்பு, புத்தக வெளியீட்டிற்காக எழுத்துபூர்வமான அனுமதியை முறையாக பெற்றுக்கொண்டு, சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்துடன் (International Association of Tamil Journalists,) தற்போது அப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறது. (அனுமதி கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)

இலங்கையில் தமிழர் பகுதிகளில் 1956 முதல் 2009 ஏப்ரல் வரையில் சுமார் 200க்கும் அதிகமான படுகொலைகள் நடந்தறின.2009 ம் ஆண்டு மேமாதம் கடைசிகட்ட போர் குறித்த ஆவணங்கள் தற்போது அதிமுக்கிய பொறுப்பாளர்களால் சேகரிக்கப்பட்டு நிறைவு பெற்று வருகிறது என்பது குறிப்பித்தக்கது.

இப்படுகொலையில் இறந்தவர்கள் யார், யார் - காயமடைந்தவர்களின் பெயர்கள், எந்த ஊரை சேர்நதவர்கள், 14 வயதுக்கு கீழ்உள்ள குழந்தைகள் எத்தனை பேர், படுகொலை நடந்த இடம், தேதி முதலிய ஆவணங்களை கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் 'வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் (North East Secretariat on Human Rights)' தன்னிச்சையாகவும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுடன் இணைந்தும் செயல்பட்டு நேரிடையாக பார்வையிட்டு இந்த ஆவணங்களை சேகரித்து உள்ளது. அதேபோல், இப்புத்தகத்தில் படுகொலை செய்யப்பட்ட இடத்தின் வரை படங்களும், படுகொலையில் சிக்குண்ட நபர்களின் புகைப்படங்களும் கூடிய மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படுகொலைகள் இலங்கை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடைபெற்றவைகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. 2002-ல் அமைதி உடன்படிக்கையின் போது நடைபெற்ற படுகொலைகளும் இதில் அடக்கம்.

புத்தகம் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட பக்கங்களில், இப்போது வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் முக்கிய பொறுப்பாளர்களால் திருத்தம் செய்யப்பட்டு, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை மனிதம் - மனித உரிமை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்புத்தகத்திற்கான முன்னுரையை அமெரிக்காவில் ஈழத்தின் மனித உரிமை விடுதலைக்காக பாடுபட்டுவரும் திருமதி. எலின் சாடார் அவர்கள் கொடுக்க உள்ளார். புத்தகத்தின் அட்டை வடிவமைப்பும், மிகச்சிறந்த ஓவியரான நந்தா கந்தசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மொழி மாற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டு, விரைவில் முடிக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.

இனப்படுகொலையின் முக்கியமான வரலாற்று ஆவணமாக இப்புத்தகம் விளங்கப் போகிறது.சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்களிற்கு எதிராக மனிதவுரிமை அமைப்புக்களோ..நாடுகளோ..தனி நபர்களோ சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளிற்கு இந்த ஆவணம் மிக உதவியாக இருக்கும். இப்புத்தகங்களை 2009ம் ஆண்டு இறுதிக்குள் கொண்டு வர திட்டமிட்டப்பட்டுள்ளது.

6 மொழிகளில் கொண்டுவரப்பட உள்ள இந்த ஆவணப்புத்தகத்தை அச்சிட்டு வெளி கொண்டுவர இந்திய ரூபாய் பல லட்சம் செலவு ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் அதேசமயம், இப்புத்தகம் விற்பனை நோக்கம் கொண்டது அல்ல. புத்தகம் கொண்டுவர ஆகும் செலவு மற்றும் இதர செலவுகளை மட்டுமே நன்கொடையாக வாங்கப்படும்.

இப்புத்தகத்தில் கிடைக்கும் நன்கொடை தொகையை, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது மிக முக்கிய செய்தியாகும்.

தமிழர் வரலாற்றில் பதிப்படப்போகும் இந்த ஆவணப் புத்தகத்தை வெளிகொண்டு வர ஆர்வமுள்ளவர்கள் நிதி ஆதரவு எதிர்பார்க்க்படுகிறது. குறித்த காலத்தில் இப்புத்தகத்தை கொண்டு வர உதவிகாரமாய் உங்கள் ஆதரவு இருக்கும். அத்தோடு, நிதி ஆதரவு கொடுப்போருக்கு, அவர்களுக்கு உரிய புத்தகங்கள் கொடுக்கப்படும்.

இப்புத்தகம் வெளிவர அனைத்து தமிழர்களின் ஒத்துழைப்பும்இ ஆதரவும் வேண்டி நிற்கிறோம். உங்களின் அரிய யோசனைகளையும் எங்கள் முகவரிக்கு தெரியப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம்.


புத்தக நிதி ஆதரவினை கொடுக்க விரும்புவோர், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தொடர்பு:

அக்னி சுப்ரமணியம்
செயல் இயக்குநர், மனிதம் - மனித உரிமை அமைப்பு
274- ஜி.சி, அவ்வை சண்முகம் சாலை, இராயப்போட்டை, சென்னை - 600014, தமிழகம்
தொலைப்பேசி எண் : +91-9003027712 - 9443322543 - 9003133661
தொலைநகலி எண் : +91-44-28133968
மின்னஞ்சல் : manitham@gmail.com
இணையம் : www.manitham.net/nesohr

சிறி
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் (International Association of Tamil Journalists), France
தொலைப்பேசி : 0033611149470
மின்னஞ்சல் : sri@orupaper.com sathiri@gmail.com