Navigation


RSS : Articles / Comments


பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம்.

10:38 AM, Posted by sathiri, One Comment

பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம்.

கடந்த பகுதியில் பரிதிக்கும்  தலைமைச் செயலக  தமிழரசனிற்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் பின்னர்  தலைமைச் செயலக்தினருடனான இணைவிற்கு  பரிதி ஒத்துக்கொண்டு அறிக்கை  வெளியிடுவதற்கு  முன்னராக  அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக   லண்டன்  தனத்திடம் இருந்தும்  சுவிஸ் ரகுபதியியாலும்   கொடுக்கப் பட்ட அழுத்தத்தை தொடர்ந்து  ஜெர்மனியில் இருந்த இரும்பொறை பிரான்சிற்கு  விரைந்து வந்ததும்  பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார் என்பதை பார்த்தோம். பரிதி சுட்டுக் கொல்லப் பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்துலக செயலகம் சார்ந்த  இணையத் தளங்கள்  இந்தக் கொலையை  தலைமைச் செயலகத்தை சேர்ந்தவர்களே செய்ததாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படும் கடும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். அதற்காக அவர்கள் அவிழ்த்த பொய் செய்திகள்தான்  பாரிசில் வினாயகம்  சுற்றி வழைத்து கைது. தமிழரன். கைது. கனி என்பவர் என்கிற  பரபரப்பு செய்திகள். இவை எல்லாவற்றையும் விட  அதிர்வு என்கிற அனைத்துலகத்தின்  அம்மம்மா குழல்(ஊதுகுழல் )இணையம் வெளியிட்ட செய்தியை பார்த்து  விழுந்து  விழுந்து சிரிப்பதா  அல்லது  கோவி  கோவி அழுவதா என்றே தெரியாதிருந்தது.

காரணம் அவர்களது செய்தியில்  வினாயfம் சுற்றி வழைத்து கைது  என்பதோடு செய்தியை உறுதிசெய்வதானால்  பிரெஞ்சு புலனாய்வு த் துறையோடு தொர்பு கொள்ளவும் என்று  077 என்று தொடங்கும் ஒரு இலக்கத்தையும் எழுதியிருந்தார்கள்.   அதை படிப்பவர்கள் பாவம் பிரெஞ்சு  புலனாய்வுத் துறை  அவர்களிற்கு  சாதாரண தொலைபேசி இணைப்பே இல்லை  கைத்தொலைபேசி   தான் பாவிக்கிறாங்கள் என்று நினைத்து விட்டு அந்த  இலக்கத்திற்கு போனடித்திருந்தால் இந்த இணைப்பு பாவனையில் இல்லையென்று  சொல்லியிருக்கும். அட பாவமே  பிரெஞ்சு புலனாய்வு துறையிடம் பணம் இல்லாததால்  தொலைபேசி கட்டணத்தை கட்டவில்லையென்று நினைத்திருப்பார்கள்.

அவர்களின் இந்த திட்டமும் பிசுபிசுத்து போக  அனைத்துலகச் செயலகத்தின் அடுத்த திட்டம்தான்  மீள இணையும் புலிகள் என்கிற ஒரு காணொளி.
இந்தக் காணொளியானது இறுதிக் கட்ட யுத்தத்தில்  நாட்டை விட்டு விட்டு வெளியேறி  அவுஸ்ரேலியா போவதற்காக இந்தோனோசியாவில்  தங்கி நிற்கும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களால் தயாரிக்கபட்டிருந்தது. இவர்களிற்கு அனைத்துலகச் செயலகமே பணஉதவி செய்துவிட்டு அப்படியொரு காணொளியினை தயாரித்து அனுப்புமாறு கோரியிருந்தனர்.  காணொளியினை பார்ப்பவர்களிற்கு  அதனை தயாரித்ததன் நோக்கம் புரியும்.



ஆனால்  பரிதியின் கெலையை பிரெஞ்சு காவல்த்துறை  ஆரம்பத்தில் மூன்று கோணங்களில் விசாரிக்க ஆரம்பித்திருந்தனர். அவை. 1) இலங்கை புலனாய்வுத் துறை.  2) உள் வீட்டு மோதல்கள் அதில் தலைமைச் செயலகம்.  அல்லது அனைத்துலக்கத்திற்கிடையேயான  குழு மோதல்.  விசாரணைகளின் ஆரம்பத்திலேயே   கொலை சம்பந்தமாக   பரிதியுடன் நெருக்கமாக  இருந்த பாம்புக் குழுவை சேர்ந்த  இருவர்  கைதானதும் தலைமைச் செயலகத்திற்கும் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று உறுதியாகிவிட்ட நிலையில்தான்  அடுத்ததாக அவர்களத விசாரணை  இலங்கை புலனாய்வு பிரிவா அல்லது அனைத்துலகத்தின்  உள்வீட்டு மோதலா? என்கிற கோணத்தில் விசாரணைகள் போய்க்கொண்டிருந்தது.  அப்பொழுதான்  பிரான்சின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான Le Parisienபத்திரிகையில் இலங்கையரசே  பரிதியின் கொலைக்கு பின்னால்  இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.


ஆனால் இது போன்ற  அரசியல் கொலை பற்றிய செய்திகளில் தகவல் அடிப்படையாக  ஒரு விசாரணை  அதிகாரியை மேற்கோள் காட்டியோ அல்லது உள்துறை அமைச்சர் அல்லது அதன் குரல் தரவல்ல அதிகாரிகளை  மேற்காட்டியே செய்தி வெளியாவது  வழைமை. அதன் அண்மைய ஊதாரணம்  பாரிசில் படுகொலை செய்யப் பட்ட மூன்று குர்திஸ்தான் போராளிகள் பற்றிய செய்திகளை பிரெஞ்சு பத்திரிகைகள் வெளியிட்ட விதத்தினை படித்திருந்தவர்களிற்கு புரிந்திருக்கும். ஆனால் பரிதி பற்றி Le Parisienபத்திரிகையில் ஒரு மொட்டை செய்தியாகவே வெளிவந்திருந்தது. அதையெல்லாம் விட்டுவிடலாம்.  இந்தக் கொலையை இலங்கை  அரசே செய்தது என வைத்துக் கொள்வோம்.  அரசியல் கொலைகளை  கன கச்சிதமாக உளவுப் பிரிவுகள் மூலம் மேற்குலக நாடுகளும். இரஸ்யாவும்.  இஸ்ரவேலுமே இதுவரை செய்து முடித்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தங்கள் அனைத்து வளங்களையும் பாவித்திருப்பதோடு கொலை நடந்து பல வருடங்களின் பின்னர் அதனோடு சம்பந்தப் பட்டதொருவர்  ஓய்வு பெற்ற காலத்தில் ஒரு புத்தகத்தை எழுதினாலோ அல்லது ஏதாவது ஒரு பத்திரிகையாளர் பல வருடங்களாக  நோண்டி விடயத்தை வெளியே கொண்டு வந்தால்தான் வெளி வரும். அனால் அந்த உண்மைகள் வெளிவரும் போது அந்த விடயமே மறந்து போய்விட்டிருப்பதோடு  அதை வைத்து எந்த நியாயமும் கிடைத்ததும் இல்லை.இவங்கை போன்ற சிறிய நாடுகள் மேற்குலக நாடுகளிற்குள் புகுந்து அரசியல் கொலைகளை செய்வதற்கு துணிய மாட்டாது காரணம் கொலையை இலங்கையரசுதான் செய்ததென்று நேரடியாக உறுதிப் படுத்தப் பட்டால் பிரான்ஸ் போன்ற  பலமான நாடுகளிற்கு  தங்கள் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையாகி  கெளரவ பிரச்சனையாகி அது இலங்கை மீதான அழுத்தத்தை கொடுக்கும் என்று தெரியாத அளவிற்கு  இலங்கையரசு முட்டாள் அல்ல .

அதுவும்  Le Parisienபத்திரிகையில் வெளி வந்தது போல் இலங்கையரசின் தூதரகம் நேரடியாக சம்பத்தப் பட்டிருக்காது. இலங்கைத் தூதரகத்திற்கே தெரியாமல் இலங்கை புலனாய்வுத்துறை  வேறு தரகர்கள் ஊடாக கூலிக் கொலையாளர்களை வைத்து நடத்தியிருக்கும். அப்படியே  தரகர்கள் ஊடாக கூலிக்கு ஆளை வைத்து  பிரிதியை கொலை செய்திருந்திருந்து பிரெஞ்சு புலனாய்வுத் துறை அதை கண்டுபிடித்திருந்தாலும்  பிரெஞ்சு அரசு  தமிழர்களிற்கு அநீதி நடந்து விட்டது என்று இலங்கை யரசை குற்றம் சாட்டவோ ஜ.நா சபையில் இலங்கைக்கெதிராக தீர்மானமோ. அல்லது தமிழீழத்தை வாங்கித் தரப் போவது கிடையாது. பிரான்ஸ் தன்னுடைய நலனிற்கு தேவையான ஏதோ ஒன்று இலங்கையிடமிருந்து  பெறமுடியுமானால்  இலங்கையரசுடன் பேரம் பேசி இலங்கையை அடிபணியவைத்து தன்னுடைய தேவையை  தீர்துக்கொள்ளும். அதே நேரம் பரிதி கொலைக்காக  நீதி கேட்டு கூட்டம் போட்டாலென்ன  பாரிசில் இருந்து  ஜ.நா சபைவரை பிரதட்டை  தூக்கு  காவடி  என்று எடுத்தால் கூட ஒன்றும் நடக்கப்போவதில்லை.காரணம் பரிதி பரிதி பிரான்சில் தடைசெய்யப் பட்டதொரு அமைப்பின் பிரதிநிதி என்பதோடு  பிரெஞ்சு காவல்த்துறையின் கண்காணிப்பில் இருக்கின்ற ஒரு முன்னை நாள் கைதி.

ஆனால் தற்சமயம் பரிதியின் கொலை விசாரணை உள்வீட்டு விவகாரம் என்கிற கோணத்திலேயே தான் போய்க்கொண்டிருக்கின்றது. கைதானவர்கள் பரிதியோடு நெருக்கமாக இருந்த ஒரு வன்முறைக் குழுவினர். பரிதி தலைமைச் செயலகத்துடன் இணைவதை விரும்பாத சுவிஸ் ரகுபதியும். லண்டன் தனமும் கொடுத்த அழுத்தத்தினால்  இரும்பொறையே  பாம்பு குழுவிடம் பரிதியை  போடச் சொல்லியிருக்கலாம். இப்படி நடந்ததை பிரெஞ்சு காவல்த்துறை உறுதி செய்தாலும்  செய்ததும் தமிழன் செத்ததும் தமிழன் . எனவேப கணக்கு தீர்த்தல் என்கிற  வகையில் இந்த கொலையை அடக்கி கைது செய்யப் பட்டவர்கள் விசாரணை கைதிகள் என்கிற பெயரிலேயே  ஆறு அல்லது ஏழு வருடங்கள் கழித்து எச்சரித்து விடுவித்து விடுவார்கள்.  அவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தி எந்த ஊடகத்திலும் வராது. ஆனால் உண்மையில்  என்ன நடந்தது என்பதனை  ஊடுருவி தேடல்கள் நடத்தி கண்டு பிடித்து கொலையை வெளியே கொண்டு வரும் அளவிற்கு எம்மவரின் எந்த ஊடகமோ  ஊடகர்களோ இல்லை.  எங்களை நாங்களே மகிழ்ச்சிப் படுத்த  எழுதும் ஊடகங்களும்   தலைப்பை மட்டும் மாற்றி விட்டு வெட்டி ஒட்டும் ஊடகங்கள் மட்டுமே எம்மிடம் உள்ளது.எனவே பரிதியின் கெலை என்பது  இன்னும் சில காலங்களில் மறக்கப்பட்டதொன்றாகவே மாறிவிடும்.

இது இப்படியிருக்க  அனைத்துலகச் செயலகம் அடுத்த கட்ட ஆயுதப் போரை நடத்தப் போவதாக கூறியிருப்பது தெய்வீகன் என்கிற  நபரை வைத்துத்தான்.தெய்வீகன் என்பவர் யாரென்று சுருக்கமாக பார்த்து விடலாம். இவர் புலிகள் அமைப்பில் ஒரு இளநிலை போராளி விமான ஓட்டியாக பயிற்சி பெறுவதற்காக புலிகள் அமைப்பினால்  கிழக்கு ஜரோப்பிய  நாடொன்றிற்கு அனுப்பி விமான ஓட்டிக்கான கல்வியும்  பயிற்சியும் பொற்றவர்  அதில் தேர்ச்சி பெறாததால்  திரும்பவும் வன்னிக்கு அழைத்து  புலிகளின் உள்ளக புலனாய்வு பிரிவில் இணைக்கப் பட்டிருந்தார். இறுதிகட்ட யுத்தத்தில் இவரே வழங்கலிற்கும் பொறுப்பாக இருந்தவர். புலிகள் அமைப்பின் இறுதி முயற்சியான ஆனந்த புரம் ஊடறுப்பு சமர் நடந்தவேளை  அதற்கு  தலைவர் பிரபாகரனே  நேடியாக நின்று கட்டளைகளை வழங்கியிருந்ததும் அது தோல்வியில் முடிந்து  புலிகள் அமைப்பின் முன்னணி தளபதிகளும் ஆயிரக்கணக்கான போராளிகளும் பலியானதோடு தலைவர் பிரபாரன்  உயிர் தப்பியிருந்தார். அந்த சண்டைக்காக மேலதிக ஆயுத மற்றும் காயமடைந்தவர்களிற்கான  அவசர மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு களத்தில் நின்றிருந்த தளபதிகள்  தெய்வீகனை தொடர்பு கொள்ள முற்பட்ட வேளை  தனது தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு காணாமல் போயிருந்தவர். மீண்டும் 2010 ம் ஆண்டு தை மாதமளவில்  இந்தியாவில் மதுரையில் நடமாடத் தொடங்கியிருந்தார்.

 அவரோடு வெளியக புலனாய்வுத் துறையின் புகழேந்தி  மற்றும் தென்னவன் அல்லது கரிகாலனும் மதுரையில் தங்கியிருந்து புலிகளின் அனைத்துலக செயலகத்தின் வெளிநாட்டு கிளைகளோடு தொர்புகளை ஏற்படுத்தி தாங்கள் இன்னமும்  பலநூறு  போராளிகளுடன் வன்னி காடுகளிற்குள்ளேயே நிற்பதாகவும் மறு பக்கம் கிழக்கு மாகாண காட்டிற்குள்  ராமும் தங்களோடு தொடர்பில் இருப்பதாகவும்  ராமின்  தலைமையில் அடுத்த கட்ட தாக்குதல்களை நடத்துவதற்காக  தங்களிற்கு ஆயுதங்களை பெறுவதற்காகவும்  அத்தியாவசிய தேவைகளிற்காவும் நிதி உதவி கோரியிருந்தார்கள்.  அதை நம்பி அனைத்துலக செயலகமும் பணம் அனுப்பியிருந்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் தென்னவன் என்கிற கரிகாலனும் என்னுடன் தொர்புகளை ஏற்படுத்தி கதைத்திருந்தார். பணத்தை அனுப்பிவிட்டிருந்த அனைத்துலகச் செயலகத்தினர் தாக்குதல் எதுவும் நடக்காததால் ஏமாற்றமடைந்து  ராமோடு தொடர்புகளை ஏற்படுத்தி ஏதாவது தாக்குதல் செய்தால் தான்  இங்குள்ள மக்கள் நம்புவார்கள்  அப்பொழுதான் பணம் சேகரித்து அனுப்பலாம் ஏதாவது தாக்குதலை  செய்யும்படி கேட்டிருந்தனர். ஆனால் இது வரை காலமும் தலைவரின் கட்டளைக்கிணங்கவே  தான்  தாக்குதல்களை நடத்தியதாகவும்  வெளிநாட்டிலிருந்து  வரும் கட்டளைகளிற்கிணங்க தன்னால் இயங்க முடியாது  தலைவரின் கட்டளை  வராமல்  தன்னால் எதையும் செய்ய முடியாதென  ராம் எவ்வித தாக்குதலையும் செய்ய மறுத்து  தெய்வீகனின் தொடர்பும் தனக்கு இல்லையென்று அவர்களிற்கு சொல்லிவிட்டிருந்தான். பின்னர் ராமிற்கும் எனக்கும் நடந்த உரையாடல்களின்போது அதை தெரித்திருந்தான். அன்றை கால கட்டத்தில் தான் இலங்கை வான்படையின் உலங்கு வானுர்தியொன்று காலநிலை காரணமாக  கட்டுப் பகுதியில் விபத்திற்குள்ளாக அதனை ராமின் தாக்குதலிற்குள்ளானதாக  வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யவும் அனைத்துலகம் முயன்றிருந்தது.

பின்னர் சில காலங்கள் தெய்வீகனின் தொடர்பு அறுந்து பேயிருந்ததோடு தென்னவன் (கரிகாலன் )பிரான்ஸ் வந்து சேர்ந்ததும் மீண்டும் அனைத்துலக செயலகம் மற்றும் பழைய வெளிநாட்டு கட்டமைப்பை சேர்ந்தவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துகிறார். அப்பொழுது மீண்டும் என்னுடன்  ஒரு தொடர்பையும் ஏற்படுத்தியிருந்தார். இவர்தான்  தற்சமயம் அனைத்துலக செயலகத்தோடு சேர்ந்து நின்று  தெய்வீகனால் அடுத்த கட்ட ஆயுத போரை வழிநடத்த முடியும் என்று  அவர்களையும் நம்பவைத்து  தெய்வீகனோடு தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆயுதப் போர் நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும் ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர் தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன் பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில் சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான் பதில் சொல்லும். 

இறுதியாக ஒரு வியடம்  அனைத்துலகச் செயலக்த்தின்  டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது  பிரியனின் தலைமையில் அண்மைக்காலமாக  டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி ஊடாக தாயகத்தில் மக்களிற்கான உதவிகளை செய்து வருகிறார்கள். அதே போல சுவிஸ் இளையோர் அமைப்பும்  தமிழர் ஒருங்கிணைப்பக் குழுவும் தங்கள் பிரதிநிதிகளை  கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி கிழக்கு மக்களிற்கு உதவுகின்றனர்.இந்த மாற்றம் வரவேற்கப்படவேண்டிய விடயம்.  இவர்களை முன் மாதிரியாக எடுத்து மற்றைய நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களும் வீணே  ஊருக்கு போகின்றவன் உதவி செய்பவன் எல்லோரையும் துரோகி என்றும் அடுத்த கட்ட ஆயுதப்போர் என்று கதைவிட்டு காலத்தை கடத்தாமல்   தாயகத்து மக்ககளிற்கான  உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திவிடுவதே இனிவரும் காலங்களில் செய்யக்கூடியதொன்றாகும்.செய்வார்களா????

கரிகாலன்(பிரான்ஸ்), குட்டி(டென்மார்க்) பிரியன்,(டென்மார்க்) தனம் (இலண்டன்), சிறீறவி'ஜெர்மனி) , அதிர்வு கண்ணன்(இலண்டன்)  பெஞ்சமின்(நோர்வே) அம்புறுஸ்(இத்தாலி..தற்சமயம் பிரான்ஸ்) ஆகியோரது பங்கு பிரிப்புக்கள் பற்றி இன்னொரு கட்டுரையில் தனியாக பார்க்கலாம்.  அதுவரை நன்றி வணக்கம்.


தோடம்பழக் கொம்பனியும்.லண்டன் பயணமும்.

1:20 PM, Posted by sathiri, No Comment

தோடம்பழக் கொம்பனியும்.லண்டன் பயணமும்.
சாத்திரி  ஒரு பேப்பர்.

 இந்த வருசம்  நத்தாரோடை பத்து நாளைக்கு  கடையை பூட்டுவம் எண்டு முதலாளி சொல்லிட்டான்.நீண்ட நாளின் பின்னர்  பத்துநாள் லீவு மகிழ்ச்சிதான் நத்தார் முடிந்ததுதம் லண்டனுக்கும் ஒருக்கா போய்   சில உறவுக்காரர் பழைய சினேதங்கள். எல்லாத்தையும் பாத்திட்டு வரலாமெண்டு நெற்றிலை மலிவாய் றிக்கற்றை பாக்கத் தொடங்கினன். வழக்கம் போலை தோடம் பழக் கொம்பனி அதுதானுங்கோ Easy jet   அதிலை றிக்கற்றும் பதிஞ்சிட்டன். ஆனால் போகிற நேரக் குளப்பத்தாலை பதிவு போடுறதும் நிறுத்திறதும் திருப்ப பதியிறதுமாய் ஒரு நலைஞ்சு தரம் செய்து  ஒரு மாதிரி பதிஞ்சு முடிச்சிட்டன்.


நத்தாருக்கு மனிசி எனக்கு ஒரு ஜுன்ஸ் பரிசா வாங்கி வைச்சிருந்தாள். வாங்கியந்தவுடைனையே போட்டு அளவு பாக்கச் சொல்லி அளவு சரிவராட்டி மாத்தலாமெண்டாள். போட்டுப் பாத்தன் வருசக் கடைசி கொஞ்சநாளாய் தொடந்து ஒரே தும்படி எண்டிதாலை கொஞ்சம் மெலிஞ்சு போயிருந்தன். ஜுன்ஸ்  ஒரு ஒண்டரை அங்குலம் அளவு  பெரியதாயிருந்தது. மாத்திக் கொண்டு வரவா  என மனிசிகேட்டாள். வேண்டாம் கோடை(சமர் )தொடங்கி  இரண்டு பியரடிக்க வண்டி கொஞ்சம் வைக்கும்  அப்ப அளவாயிருக்கும்  இப்போதைக்கு ஒரு பெல்ட்டை  கட்டினால் சரியாயிடும். திரும்ப கடைக்கு அலைய வேண்டாம் எண்டு சொல்லிட்டன்.


லண்டனுக்கு போகேக்குள்ளை தான் ஆசையாய் வாங்கின ஜுன்சை போட்டுக் கொண்டு போகச்சொல்லி மனிசி சொன்னதாலை அதையே போட்டுக்கொண்டு  ஏயா பேட்டுக்கு வந்து தோடம்பழ கொம்பனி கவுண்டரிலை  போடிங் எடுக்கிறதுக்காக  வரிசையிலை நிண்டன். இரண்டு கவுண்டரிலை ஒண்டிலை ஒரு ஆணும்  மற்றதிலை பெண்ணும்  போடிங்குடுத்துக் கொண்டு இருந்தார்கள்.பெண்ணை பார்த்தன்  கறுப்பிற்கும் வெள்ளைக்கும் பிறந்த பழுப்பு  அழகாக இருந்தாள்.வரிசை நகர்ந்து கொண்டிருந்தது  கடவுளே என்ரை முறை  அவளிட்டை  வரவேணும்  எண்டு மனதிற்குள் வேண்டுதல். ஆனால்  என் முறை  ஆணிடம் வந்து விட்டது. பின்னலை திரும்பிப் பார்த்தன் ஒரு பெண்  கைக் குழந்தையோடை நின்றிருந்தாள். உடனை அவரிட்டை  எனக்கொண்டும் அவசரமில்லை நீங்கள்  போகலாம் எண்டு விட்டு ஒதுங்கி கொள்ள  அவளும் நன்றி என்றிட்டு என்னை  அழைத்த ஆணிடம் போடிங்  எடுக்க போயிட்டாள்.   அப்பாடா.. இப்ப எனது முறை  என்னைப் பார்த்து  அவள்  வரச்சொல்லி கையசைத்து  புன்னகைத்தாள். அவளிடம் போய் பாஸ் போட்டை நீட்டினன். தனக்கு பின்னால் இருந்த ஒரு படத்தை காட்டி இதில் உள்ள பொருட்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா என்றாள்.
அவள் காட்டின படத்தை நிமிர்ந்து பாத்தன். அதிலை  கத்தி சுத்தியல்.ஸ்கூருட்றைவர்.துவக்கு.கைக்குண்டு.காஸ் போத்தல் ஆகியவற்றின் படங்கள் இருந்தது.

அந்த பொருள் ஒண்டுமே என்னட்டை இருக்கேல்லை  இதெல்லாம் இருந்தால் தான் பிளேனிலை ஏத்துவாங்களோ எண்டொரு  பயம் எனக்கு வந்திட்டுது. தயங்கியபடி இதிலை ஒண்டும் என்னட்டை இல்லை .அதே நேரம் நான் பிளேன் கடத்திறதுக்காக வரேல்லை  லண்டனுக்கு  சொந்த அலுவலாய் போறன் எண்டதும் . சிரித்தபடியே அடுத்த கேள்வியை கேட்டாள். உங்களிற்கு தெரியாதவர்கள் யாராவது ஏதாவது பொருட்கள் தந்தார்களா??  இதென்ன கோதாரி எண்டபடி எனக்கு தெரிஞ்சவங்களோ எனக்கு ஒண்டும் தாறேல்லை.இதுக்கை  தெரியாதவங்கள் எப்பிடி ஏதாவது தருவாங்கள் விரும்பினால் நீ ஏதாவது எனக்கு தரலாம் மகிழ்ச்சியோடை ஏற்றுக் கொள்ளுவன் எண்டன். தலையாட்டினபடி போடிங்கை மட்டையிலை  இருக்கை   இலக்கத்தை  சுற்றி ஒரு வட்டத்தை போட்டு தந்து விட்டாள். அதை வாங்கிக் கொண்டு  உள்ளை போனன். இனி பரிசோதனை  பகுதி அங்கை என்ரை கைப்பை  பொக்கற்றுக்கை இருந்த போன் திறப்பு எல்லாத்தையும் எடுத்து   ஒரு  பிளாஸ்ரிக் பெட்டியிலை போட்டு ஸ்கான் பண்ணிற பெல்ட்டிலை  வைச்சிட்டு  உள்ளை போக வெளிக்கிட அங்கை நிண்ட காவலாளி என்ரை இடுப்பு பெல்ட்டையும்  கழட்டி என்ரை பொருள்களோடை பிளாஸ்ரிக் பெட்டிக்குள்ளை போடச் சொன்னான்.


ஜயையோ என்ரை ஜுன்சே அந்த பெல்ட்டை நம்பித்தானே நிக்கிது  ஆனால் வேறை வழியில்லை  பெல்ட்டை கழட்டி பிளாஸ்ரிக் பெட்டியிலை போட்டிட்டு  இடக் கையாலை ஜுன்சை  பிடிச்சபடி  உள்ளை போனன். உடல் பரிசோதனைக்காக கையிலை ஒரு மெட்டல் டிடெக்ரர் ஒண்டை  கையிலை பிடிச்சபடி தயாராய் நின்றிருந்த ஒருத்தி நல்வரவாகுக கைகளை உயர்த்துங்கள் என்றாள்.இடக்கை   ஜுன்சை பிடித்தபடி  இருந்ததால் வலக்கையை  மட்டும் உயர்த்தினன். இரண்டு கைகளையும் உயர்த்தவேண்டும் என்றாள். அம்மணி இரண்டு கையையும் ஒரே நேரத்திலை உயர்த்தினால்  என்ரை மானம் பிளேன் ஏறிடும். அதாலை என்ரை ஜுன்சை நீ கொஞ்ச நேரம் விழவிடாமல்  பிடிச்சிரு நான் கைளை உயர்த்திறன் என்று மெல்லிதாய் சிரித்தபடி சொல்ல அவளும்  ஓ தாராளமாய் என்றபடி  அங்கை நிண்ட காவலாளியளிலை  கறுவல் தடியன்  ஒருவனை கூப்பிட்டு  இவனின்ரை ஜுன்சை ஒருக்கா பிடித்து உதவி செய் என்றாள். என்ரை பிளான் பிழைச்சு போச்சுதெண்டு விழங்கிட்டுது. உடைனே நான்  என்னை  நோக்கி வந்த தடியனிட்டை  வேண்டாம் எண்டு சொல்லிட்டு தம் பிடிச்சு வயித்தை தள்ளி ஜுன்சை விழவிடாமல் பாதுகாத்தபடி கைகளை உயத்தினன்.  மெட்டல் டிடெக்கராலை  பின்னுக்கு முன்னுக்கு எல்லாம் தடவிப் பாத்திட்டு உன்னட்டை  ஒரு ஆயுதமும் இல்லை நீ போகலாம் எள்றாள்.  அவள் என்னட்டை ஆயுதம் இல்லையெண்டதும் எனக்கு அழுவை அழுவையா வந்திச்சிது ஆனாலும் அடக்கினபடி போய் பெல்ட்டை எடுத்து கட்டிக்கொண்டு என்ரை பொருட்களையும் எடுத்துக் கொண்டு பிளேனை பிடிச்சு லண்டன் வந்து இறங்கியாச்சு.


விமான நிலையத்திலையிருந்து என்ரை சொந்தக்காரனுக்கு போனடிச்சு நான் வந்திட்டன்  எங்கை வாறது என்டு கேட்டன்  அதுக்கு அவன் பட்டினி எண்டான். எனக்கு எரிச்சலாயிட்டுது  டேய் நீ சாப்பிட்டியா  இல்லை சிவ பட்டினியா  எண்டது  எனக்கு பிரச்சனையில்லை உன்ரை இடத்தை சொல்லு  எண்டதும்  அதுக்கு அவன்  நான் இருக்கிற இடத்தின்ரை பேர்தான் பட்டினி எண்டான். ஒரு பணக்கரான்  இருக்கிற இடத்தின்ரை பேர் பட்டினி எண்டு நினைச்சபடி  றெயின் ஏறிபோய் சேந்திட்டன். முதல்நாள்  எங்கடை குடும்ப அலுவல் கதைச்சு முடிஞ்சதும். என்ரை ஒரு பேப்பர் சினேதங்களை  சந்திக்கலாமெண்டு  அவங்களையும் சந்திச்சு கதைசன். அதை விட முக்கியம்.தலைவரின்ரை நேரடி வழிகாட்லிலை இந்த வருசம் மூண்டாவது மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்த எங்கடை பாலாண்ணையும் சந்திச்சு கடைசியாய் தலைவர் என்ன செய்தி சொன்னவர் எண்டிறதையும் கேக்கிற ஆவல் . ஆனால் அவர் அதை கடைசிவரை சொல்லவேயில்லை ஏமாற்றம்.  போற வழியிலை எங்கடை பேப்பர் ஆசிரியர் கோபிட்டை பட்டினி பாலத்திலை இறக்கிவிட சொன்னன் அவரும் இறக்கி விட்டிட்டு போயிட்டார்.  அடுத்தநாள் சந்திப்பு புலம் பெயர் தேசங்களிலை  தமிழரின்  அடுத்த கட்ட அரசியலை நகர்த்துபவர்களாக சொல்லிக் கொள்பவர்களிடமானது.  நான் அவங்களை சந்திச்சு எப்பிடி கதைக்கிறது என்ன கதைக்கிறது எண்டு றூம் போட்டு யோசிக்கவேணும் எண்டு நினைச்சபடி  நான் நிண்ட சொந்தக் காரனிட்டை இண்டைக்கு அரசியல் சந்திப்பு எண்டதும். அவன் நீ யாரையும் சத்திச்சு கதை ஆனா தயவு செய்து வீட்டை ஒருத்தரையும் கூட்டிவராதை எண்டு கையெடுத்து கும்பிட்டான்.

வேறை வழி  நான் நினைச்ச மாதிரி றூம் போட வேண்டியதுதான் எண்டு நினைச்சு அங்கையே ஒரு விடுதியிலை றூமை போட்டு அடுத்த அரசியல் சந்திப்பு நல்ல மாதிரி முடிஞ்சுது. ஆனால் வழக்கம் போலை வாறதாய் சொன்ன ஒரு குழு கடைசி நேரம் காலை வாரிட்டுது.
அவங்களோடை கதைச்சு முடிஞ்சு படுக்க போக ஒரு மணியாயிட்டுது திரும்ப  மூண்டு மணிக்கு எழும்ப வேணும். ஏனெண்டால் எனக்கு ஆறு மணிக்கு பிளைற். இரண்டு மணித்தியாலம் நித்திரை கொள்ளலாம் எண்டு நினைச்சு போனிலை அலாம் வைச்சிட்டு படுத்திட்டன். அலாரம் அடிச்சதும்  அடிச்சுப் பிடிச்சு வெளிக்கிட்டு கொண்டு ஓடிப்போய் ரக்சியிலை ஏறி Luton air port க்கு போகவேணும் எண்டன். ரக்சி ஓடியவர் தமிழர் அவர் அண்ணை வணக்கம் எண்டார். நானும் வணக்கம் சொல்லிட்டு  பாதி நித்திரையிலை  கண்ணை  மூடினன். ஆனால் ரக்சி காரர் விடுறமாதிரியில்லை.
நீங்கள் ஊரிலை எந்த இடம்.தொடங்கினார்.

நான் மானிப்பாய் நீங்கள்.??

நான் சண்டிலிப்பாய். அப்ப பக்கத்திலைதான். நீங்கள் நாட்டு பிரச்சனையை பற்றி என்ன நினைக்கிறீங்கள்.??

நித்திரை தூக்கத்திலை ஏற்கனவே எரிச்சலாயிருந்த எனக்கு மேலும் எரிச்சலோடு என்னத்தை நினைக்கிறது ஏதோ போகுது எண்டன்.

அண்ணை  முதல்லை கொழும்பை தரை மட்டமாக்கவேணும்.

ம்..நல்லது.

பிறகு மகிந்தா குடும்பத்தை அவங்கடை சகோதரங்களையும் கூண்டோடை அழிக்க வேணும்.

ம். நல்லது.

அடுத்ததா இந்தியாவை துண்டு துண்டா உடைக்க வேணும்.

ம்..நல்லது

சோனியாவையும் மன் மோகனையும்  பான்கி மூனையும் போட வேணும்.

ம்.நல்லது.

என்னை திரும்பி பாத்தவர்.உங்களுக்கு அரசியல்லை இன்றஸ்ற் இல்லை போலை ??

நீங்கள் ரக்சி ஓடுறது முழுநேர வேலையோ இல்லாட்டி பகுதிநேரமோ??

இப்ப இருக்கிற எக்கொனமி பிரச்சனைக்குள்ளை  வீடு வேறை வாங்கிட்டன். பகல்லை வேலை செய்திட்டு  இரவிலை  பாட் ரைமா ரக்சி வேறை ஓடுறன்.

உங்கடை வாழ்க்கையே இப்பிடி பொருளாதார பிரச்சனைக்குள்ளாலை ஓடுது நீங்கள்  முதல் சொன்ன எல்லாத்தையும் செய்யப் போறது யார்?? என்று கேட்க மனம் உந்தினாலும். எதுக்கு முன் பின்ன தெரியாத ஒருத்தரோடை விவாதம் எண்டு நினைச்சிட்டு கண்ணை மூடிட்டன். விமான நிலையம் வந்து  இறங்கியாச்சு தோடம்பழ கொம்பனி கவுண்டரிலை பாஸ்போட்டை கொண்டு போய் நீட்டினன்.

அவன் வாங்கி கணணியை தட்டிட்டு என்னையும் கணணியையும் மாறி மாறி பாத்தான்.ஏதாவது பிரச்சனையா எண்டன். அதற்கு அவன் ஜயா நீங்கள் வந்திருப்பது  Luton air port

இது எங்களிற்கு தெரியாதா?

எதற்காக இங்கே வந்தீர்கள்.??

 இவன் என்ன கேனைத் தனமா  கேக்கிறான்  ..வீட்டை போறதுக்கத்தான் ..

அதற்கு நீங்கள் Getwick air port ற்கு போக வேண்டும் அங்கிருந்துதான் உங்கள் விமானம் கிழம்புகின்றது.
அப்பதான் எனக்கு மண்டையில் யாரோ குட்டின மாதிரி உறைத்தது. முதலில் ரிக்கற்றை மாத்தி மாத்தி போட்டதிலை   Luton air port  மனதினை நிண்டிட்டுது.மாறி வந்திட்டன் என்ன வெய்யலாமெண்டு கைத் தொலை பேசியை எடுத்து  நவிகேற்றரிலை அங்கையிருந்து Getwick air port க்கு போறதுக்கு எவ்வளவு நேரம் எண்டு பாத்தன் நேரம் காணாது. Luton air port லை இருந்து என்ரை ஊருக்கு போறதுக்கு மத்தியானமளவிலை ஒரு பிளேன் இருந்திச்சிது அதிலை றிக்கற்றை மாத்திட்டு போய் ஒரு கதிரையிலை சாய்ஞ்சு படுத்திருந்தன்.  யாருடைய போன் வரக்கூடாது எண்டு பயந்துகொண்டிருந்தனோ அந்த போன்  வந்தது எடுத்து காதிலை வைச்சன்.

என்னப்பா  வந்திட்டியளோ??எங்கை நிக்கிறியள்.??

இல்லை பிளேனை  தவற விட்டிட்டன்.

உனக்கு இதே வேலையா போச்சு உருப்டியா என்னதான் செய்யாத் தெரியும். என்று  தொடங்க நான் போனை காதை விட்டு எடுத்திட்டன்  ஒரு நாலு நிமிசத்தாலை..சரி வா நேரிலை மிச்சம் இருக்கு போன் கட்டாயிட்டுது.
பிளேனை தவற விட்டிட்டன் எண்துக்கே இப்பிடியெண்டால் ஏயா போட்டையே மாறி வந்திட்டன் எண்டால் என்ன நடந்திருக்கும். உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் .. :(

கடைசியாய்  ஒரு கேள்வி  விமான நிலையங்களிலை எதுக்கு ரெர்மினல் TERMINAL எண்டு பேர் வைச்சிருக்கிறாங்கள் பல பேரின்ரை வாழ்க்கை  அங்கையே முடியிறதாலையா?? இந்த பேரை பாத்தாலே பிளேனுக்குள்ளை ஏற மனம் வருதில்லை பயமாகிடக்கு
நன்றி வணக்கம்.
 பிற்குறிப்பு. பல யாழ்கள உறுவுகளையும் சந்திருந்தேன். அவர்கள் தங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க   யார் யாரை சந்தித்தேன் என்று  சொல்ல மாட்டன்.

பங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4

1:59 PM, Posted by sathiri, One Comment

பங்குபிரிப்பும் படுகொலையும்  பாகம் 4
சாத்திரி

தலைமைச் செயலகம் நாடு கடந்த அரசு அனைத்துலகச் செயலகம் ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில்  அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக  பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டு அது  அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை ஆனால் இந்த வருடமும் தொடர்ந்த முயற்சியில்  பேச்சு வார்த்தை  நடாத்திய இரண்டு தரப்பும் பேசியவை அது பற்றிய விபரங்களை  பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரோடும்  இரு தரப்பிற்கும் மத்தியஸ்த்தம் வகித்தவரிடமும் அறிந்து கெண்டேயிருந்தேன்பரிதி சுடப்படுவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னர் முதலாவது  பேச்சுவார்த்தை பாரிஸ் 18 Marcadet Poissonnier என்னமிடத்தில் குமார் என்பவரது உணவகத்திலேயே நடந்தது,குமார் என்பவர் மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல கடந்த காலங்களில்  பிரான்சில் மாவீரர் குடும்பங்களின் விபரங்களை திரட்டி அவர்களை கெளரவிக்கும் பொறுப்பிலும் இருப்பபவர் அனைத்து தரப்பும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என பாடு படுவதோடு அதற்கான பேச்சு வார்த்தை முன்னெடுப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுக்கும் ஒருவர், இவரது கடையிலேயே அனைத்துலகம் சார்பில் பரிதியும் தலைமை செயலகம் சார்பில் தமிழரசனும் பேசத் தெடங்கினாரகள்,,
இங்கு பேச்சு வார்த்தை தொடக்கத்தில் தமிழரன் முன்று கோரிக்கைகளை  அடிப்படை கோரிக்கைகளாக முன்வைக்கிறார் அவை

1  புலம்பெயர் தேசங்களில் இயங்குகின்ற ஏனைய அமைப்புக்கள் உதாரணத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசு ,உகத்தமிழர் பேரவை போன்றனவற்றின் செயற்பாடுகளை குழப்பபாமல் அவர்களிற்கும் ஆதரவு அளித்து அவர்களோடு பயணித்தல்,அல்லது ஆதரவு அளிக்காவிட்டாலும் குறைந்த பட்சம் குழப்பாமல் விடுதல்.அதே நேரம் வெறுமனே  மாவீரர் தினத்தையும் விழையபட்டு போட்டிகளையும் மட்டும் நடத்திக்கொண்டிராமல்  இலங்கையரசின் போர்க்குற்றம் மீதான விசாரணைகள்  மற்றும் தாயக மக்களின் சுதந்திர வாழ்விற்காவும் தொடர்ந்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தல்,

2 தற்போது உள்ள சூழலில் தாயகத்தோடு தொடர்பு இல்லாமல் வெளிநாடுகளில் மட்டுமே பரப்புரைகளை மேற்கொள்வது எமது போராட்டங்களிற்கு பலம் சேர்க்காது, எனவே தாயகத்தில்  பல குழப்பங்களோடு இயங்கிக் கொண்டு இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து அவர்களையும் சீரமப்பதற்கான அழுத்தங்களை கொடுத்து  அவர்களோடு தொடர்புகளை பேணியபடி அரசியல் ரீதியாக புலம்பெயர் மக்களையும் இணைத்து சரியான பாதையில் பயணிப்பது

3போரால் பாதிக்கப்பட்ட  போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களிற்கு முன்னுரிமைகொடுத்து பராமரிப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டு அவற்றை நடை முறைப்படுத்துதல்

இந்த மூன்று கோரிக்கைக்கும் அனைத்துலகச் செயலகம் இணங்கும் பட்சத்தில் தலைமைச்செயலகத்துடன் இணைந்து ஒரு கூட்டறிக்கை தயாரித்து ஊடகங்களிற்கு அறிவித்துவிட்டு சேரந்து இயங்லாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டது,
இந்த கோரிக்கைகளிற்கு பரிதி அளித்த பதில்கள் என பார்ப்போம்,முதலாவது கோரிக்கைகான பதில் நாடுகடந்த அரசை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் காரணம் அவர்கள் கே.பி யால் தொடக்கப்பட்டவர்கள்.இலங்கையரசுடன் வேலை செய்கிறார்கள் துரோகிகள்,துரோகிகளுடன் இணையமாட்டோம், உலகத் தமிழர் பேரவையானது செயற்பாட்டில் இல்லை அவர்கள் செயற்படும்போது யோசிக்கலாம் என்பது
இரண்டாவது கோரிக்கைக்கான பதில்,தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்ப முடியாது அவர்களும் துரோகிகள்,அதனால் நாங்கள்  செல்வராசா கஜேந்திரன் தலைமையில் புதிதாக ஒரு ஒரு அரசியல் கட்சியை உருவாக்குவதோடு  வெறுமனே அரசியலோடு மட்டும் நிற்காமல் அடுத்த கட்ட ஆயுதப்போரை தொடங்குவதற்கான  ஆயத்த வேலைகளிலும் இருக்கிறோம் விரைவில் ஆயுதப்போர் தெடங்கும்,

முன்றவதான  மாவீரர் குடும்பங்கள் மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றிய கோரிக்கைக்கு பரிதியின்பதில் அதைப்பற்றி எங்களிற்கு தெரியும், முதலில் மக்களின் விடுதலை பிறகு மற்றவற்றை பாக்கலாம் என்றதுதான்,

 நடைமுறைக்கு சாத்தியமற்ற  வில்லங்கமான பரிதியின் பதில்களால் மத்தியஸ்த்தம் வகித்தவர்கள் ஆத்திரமடைந்து  வில்லங்கமான பதில்தராமல் தற்காலத்திற்கேற்றவாறு  யோசித்து பதில் தருமாறு கூறிவிடுகிறார்கள் பரிதி கோபமாக அங்கிருந்து வெளியேறிவிடுகிறார், ஆனலும் பேச்சு வார்த்தை முயற்சியில் ஈடுபட்டவர்கள் விடுவதாயில்லை இந்த வருடம் எப்படியாவது அனைவரையும் இணைத்து மாவீரர் தினத்தை கொண்டாடுவதோடு ஒற்றுமைபப்படுத்தி விடவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தவர்கள் பரிதியோடு தொடர்ந்து பேசினார்கள், கடந்த முறையைப்போல  எவ்வித நிபந்தனைகளும் விதிக்காவிட்டால்  ஒற்றுமையை பற்றி பேசலாம் என்று விட்டார், அதற்கு மத்தியஸ்த்தம் வகித்தவர்களும் தலைமை செலகத்தை சேர்ந்தவர்களும் சம்மதித்தனர்.

சரியாக ஒரு வாரம் கழித்து  மீண்டும் அதே கடையில் பலர் முன்னிலையில் இருதரப்பும் பேசியது , நிபந்தனைகள் இன்றி இரு தரப்பும் ஒற்றுமையாக செயல்படவும் ஒன்றாக மாவீரர் தினத்தை கொண்டாடுவது எனவும் தொடர்ந்தும் அடுத்த நடிவடிக்கைகள் போராட்டங்களை இணைந்தே முன்னெடுப்பது என்பதற்கு பரிதி சம்மதம் தெரிவித்தார், பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்தவர்களிற்கும் மகிழ்ச்சி பேச்சுவார்த்தை வெற்றி என்கிற செய்தி தொலைபேசி முலமாக அனைவரிற்கும் பரிமாறப்படுகின்றது,எனது கைத்தொலைபேசியும் உதறியது, இரு தரப்பும்  தனித்தனியாகஅறிக்கை தயாரிப்பது என்றும் அதனை பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தவர்களோடும் இணைந்து சரிபார்த்து விட்டு கூட்டறிக்கையாக்கி ஊடகங்களிற்கு அனுப்புவது என்றும் முடிவுசெய்யப்பட்டது, பரிதியும் குறித்துவிட்டு கைகுலுக்கி  மகிழ்ச்சியோடு விடை பெற்றார்கள்,

ஆனாலும் பேச்சு வார்த்தையை ஒழுங்கு செய்தவர்களிற்கு எல்லாமே திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சந்தேகம் இருக்கத்தான் செய்தது காரணம் 2009 ம் ஆண்டு புலிகள் அமைப்பின் ஆயுதப்போர் முடிவிற்கு வந்த பின்னர்  நாடு கடந்த அரசு தொடங்கப் பட்டதிலிருந்து வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு என்று தொடங்கி 2010 ம் ஆண்டு மாவீரர்  தினத்தன்று தலைவர் பிரபாகரனின் மரணணத்தை அறிவித்து அவரிற்குரிய மரியாதையை செலுத்தவேண்டும் என மேற்கொண்ட முயற்சிகள் வரை அனைத்திலுமே அனைத்துலகச் செயலகம் ஆரம்பத்தில் ஒத்துவருவது போல போக்கு காட்டிவிட்டு கடைசி நேரத்தில் காலை வாரிவிடுவது அவர்களது வழக்கமாக இருந்தது,அதைப்போலவே  இந்தத்தடைவையும் கடைசிநேரத்தில் காலை வாரிவிடுவார்களா என்கிற சந்தேகத்தில் இரு தரப்பையும் தொர்பு கொண்டு அறிக்கையின் முன்னேற்றம் பற்றி அறிந்து கொள்கிறார்கள்: ஆனால் அவர்கள் பயந்தது போல் நடந்தே விட்டிருந்தது, இரண்டு நாள் கழித்து தமிழரசனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்ட பரிதி , ஊடக அறிக்கை  ஒண்டும் வேண்டாம் மற்றைய நாட்டு பொறுப்பாளர்களும் இரும்பொறையும்  அதற்கு  ஒத்து வருகிறார்கள் இல்லை நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இணைந்து செயற்படுவோம் என்கிறார், மீண்டும் தேவாங்கு தென்னை ஏறப்போவதை (எத்தனை நாளைக்குத்தான் வேதாளம்  மட்டும் முருங்கையில் ஏறுவது) பேச்சு வார்த்தை ஏற்பாட்டாளர்களிற்கு அறிவிக்கிறார்,

குமார் உட்பட மேலும் பலர் பரிதியை தொடர்பு கொண்டு கூட்டறிக்கை விடவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்கள், காரணம் கூட்டறிக்கை ஒன்று வந்தால்தான்  பிரான்சை முன்னுதாரணமாக எடுத்து மற்றைய நாடுகளிலும் இணைப்புக்களை ஏற்படுத்தலாம், அல்லது மற்றைய நாடுகளில் தொடர்ந்தும் மாறி  மாறி துரோகி பட்டங்கள் வழங்குவது தொடரும், அடுத்ததாக எம்மவர்களிற்குள் உள்ள சிறிய பிழவுகளை வைத்துக்கொண்டு எதிரியானவன் அதற்குள் புகுந்து பிழவுகளை வலுப்படுத்தி மோதல்களை ஊக்கிவித்து எம்மைகொண்டே எம்மை அழிக்கும் வேலையை செய்து முடிப்பான், எனவே இந்த கூட்டறிக்கையானது நிச்சயம் எதிரிக்கு ஏமாற்றத்தை கொடுக்கும், எனவே கூட்டறிக்கை அவசியம் என்று வலியுறுத்தியதோடு மீண்டும் நவம்பர் மாதம் 11 ந்திகதி சந்திப்பு ஒன்றை நடத்துவதோடு அறிக்கையயும் வெளியிடுவதென உறுதியாக சொல்லி விட்டார்கள்,

அதற்கிடையில் பிரான்சில் தான் மற்றைய அமைப்புக்களோடு இணைந்து இயங்கப்போவதாக  மற்றைய நாட்டு அனைத்துலகப் பொறுப்பாளர்களிற்கும் அறிவித்து விடுகிறார், உடனடியாகவே  இலண்டன் பொறுப்பாளர் தனத்திடம் இருந்தும், சுவிஸ் பொறுப்பாளர் ரகுபதியிடம் இருந்தும் எதிர்ப்பு கிழம்புகின்றது, அதுமட்டுமல்ல அவர்கள் உடனடியாக இரும்பொறை( அரவிந்தன் இவர்தான் நெடியவன் மற்றும் வாகீசன் ஆகியோர் கைதான பின்னர் அனைத்துலகத்தை வழி நடத்தும் முக்கியமானவர்,  என்பவரை தொர்பு கெண்டு  பிரான்சில் பரிதியின் இணைவை எப்படியாவது தடுத்து நிறுத்தும்படியும் அப்படி அங்கு இணைந்தால் அதே முன்னுதாரணமாகி அனைத்து நாடுகளிலும்  அனைவரோடும் இணையவேண்டி வரும், பின்னர் கணக்கு வழக்கு எல்லாம் காட்டவேண் வரும்   இணைப்பை நிறுத்தி விடுமாறு  கூறிவிடுகிறார்கள், பரிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இணையவேண்டாம்  அறிக்கையும்  விடவேண்டாம் என கோரிக்கை வைக்கிறார்,  ஆனால் தான் இக்கட்டான நிலையில் இருப்பதாக பரிதி தெரிவிக்கிறார், இணைப்பை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடவேண்டும் என்கிற நோக்கோடு யேர்மனியில் இருந்த இரும்பொறை பாரிசிற்கு விரைகிறார், அன்று இரவு பரிதி சுட்டுக்கொல்லப் படுகின்றார்,, 
B870BB00BC10BAE0BCD0BAA0BC60BBE0BB10BC80
இரும்பொறை

BB00B950BC10BAA0BA40BBF0B9A0BC10BB50BBF0

ரகுபதி சுவிஸ்

BB20BA30BCD0B9F0BA90BCD0BA40BA90BAE0BCD0

தனம் இலண்டன்
அடுத்தபாகத்துடன் முடிவடையும்....