Navigation


RSS : Articles / Comments


இலங்கை கடற்படையின் பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்டுள்ளது

4:19 AM, Posted by sathiri, No Comment



டோறா அதிவேகப் பீரங்கிப் படகு ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் பலியாகியுள்ளனர். தாக்குதலின் போது மற்றொரு டோறா முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் கடற்பரப்பிலிருந்து 52 கடல்மைல் தொலைவில் நின்ற சிறீலங்காக் கடற்படையினரின் சுப்பர் டோறாப் பீரங்கிப் படகே கடற் கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதன்போது பீரங்கிப் படகில் உள்ள 15 கடற்படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்த சமநேரத்தில் மற்றொரு சுப்பர் டோறாப் பீரங்கிப் படகு மீது கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் அப்படகு முற்றாகச் சேதமடைந்துள்ளது.

இன்றைய தாக்குதலில் இரு கடற்கரும்புலிகளும், நான்கு கடற்புலிகளுமாக 6 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

No Comment