Navigation


RSS : Articles / Comments


பங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3

2:20 PM, Posted by sathiri, 5 Comments

 பங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3
 
(பூபாளம் கனடா)
சாத்திரி
 
கடந்த தெடரில் பங்குபிரிப்பும் 1995ம் ஆண்டு புலிகளின் புலனாய்வு மற்றும் வெளிக்கட்டமைப்பை சேர்ந்தவர்களாலேயே புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப்பட்ட  வியாபார நிலையமும் அவர்களது அலுவலகமும் தாக்கப்பட்டதை  எழுதியிருந்தேன். அது பலரிற்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல பல முன்னைநாள் போராளிகள் கூட அந்தச் சம்பவம்பற்றி அறிந்திருக்கவில்லை,உண்மையிலேயே இலங்கை புலனாய்வாளர்களோ அல்லது ஒட்டுக்குழுக்களோ நடத்தியதாகவே இது வரை காலமும் நினைதஇதிருந்தார்கள், அதேபோலத்தான்  புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவரே தங்களது பொறுப்பாளரை போட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்றும் யெர்மனியில் நடந்தது,
 
 
புலிகள் அமைப்பின் முடிவிற்கு பின்னர் அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோ இறந்துபோக வெளிநாட்டு அனைத்துலகச்செயலகம் அனைத்தையும் நோர்வே யில் இருந்து நெடியவன் என்பவர் இயக்க அவரிற்கு அடுத்த நிலை பொறுப்பாளராகவும் யெர்மனிய பொறுப்பிலும் இருந்தவர்தான் வாகீசன் என்பவர். புலிகளின் முடிவிற்கு பின்னர் நெடியவனும் வாகீசனும் கனடா அமெரிக்கா தவிர்ந்த மற்றைய நாடுகளிற்கு பயணம் செய்து புலிகள் அமைப்பின் சொத்து விபரங்களை திரட்டியவர்கள்  தங்களின் நம்பிக்கைக்குரிய தாங்கள் கைகாட்டும் நபர்களின் பெயரிற்கு மாற்றி விடும்படி கோரிக்கை வைத்தனர் ,மறுத்தவர்கள் மிரட்டப்பட்டனர்
 
vakesan_zps04d82faf.jpg
,
அதேபோலத்தான் சுவிசிலும் அனைவரிடமும் கோரிக்கை வைத்தபோது சுவிஸ் பொறுப்பாளராக இருந்த குலம்  இவர்களது கோரிக்கைக்கு மறுத்ததோடு பலர்  தன்னை நம்பித்தான் கடன் எடுத்து பணம் தந்திருக்கிறார்கள் எனவே வியாபார நிலையங்களால் வரும் வருமானத்தை வைத்து அந்தக்கடன்களை அடைக்கவேண்டும் என்று சொன்னதற்கு. கடன் அடைக்கிற வழி எங்களிற்கு தெரியும் நீ உனது வேலையை பார் இன்றிலிருந்து நீ பொறுப்பாளர் இல்லையென்று விட்டு நெடியவன் குலத்தை தாக்கி அலுவலகத்தை விட்டு துரத்தியும்விட்டிருந்தார்கள், இங்கு குலம் என்பவர் யார் என்றும் சுருக்கமாக சொல்லி விடுகிறேன், சுவிஸ் நாட்டில் புலிகளின் பொறுப்பாளரக இருந்த முரளி  தற்சமயம் கனடாவில் வசிக்கிறார் இவர் நிதி சேகரித்தது சிலரை அச்சுறுத்தியது தொடர்பா சுவிஸ் காவல்த்துறையால் கைதான பின்னர் சுவிஸ் பொறுப்பை ஏற்றவர் குலம்,எழுபதுகளின் இறுதியில் பிரபாகரன் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய காலங்களில் பிரபாகரனை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனது வீட்டில் தங்கவைத்து பராமரித்ததில் இருந்து இவரது இயக்கத்துடனான தொடர்பு தொடங்குகின்றது,பிரபாகரனே குலம் அண்ணை என்று மரியாதையோடு அழைக்கப்பட்டதொரு மனிதர்,
 
ltteSwisskulam-147x150_zps1beb18ec.jpg
 
1984 ம் ஆண்டு இலங்கையரசின் அவ்ரோரக விமானத்தை தானே தயாரித்து எடுத்துச்சென்ற நேரக்கணிப்பு குண்டின் முலம் தகர்த்தவர்,அதற்கும் மேலால்  ஆரம்ப கால இயக்க விதிக்கு அமைய இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஒரு மனிதன் , பிரபாகரன் அவர்களே திருமணம் செய்த பின்னர்  பல தடைவைகள் குலத்தை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டும் தமிழீழம் கிடைக்கட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவந்தவர்,புலிகளை திட்டுபவர்கள் கூட குலம் அண்ணையை திட்டுவது கிடையாது அப்படியான ஒருவரை சொத்திற்காக நெடியவனும் வாகீசனும்அடித்து உதைத்திருந்தார்கள்,பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால்  இந்த செய்கைக்காக நெடியவனையும் வாகீசனையும்  வெளிநாட்டில்வைத்தே போட்டுத்தள்ள சொல்லியிருப்பார், 
 
nediyavan_zps0a7d3761.jpg
 
இதற்கு அடுத்ததாக யெர்மனியில் அனைத்து மானிலங்களிலும் தங்கள் பெயர்களில் சொத்துக்களை வைத்திருந்த பொறுப்பாளர்கள் அனைவரையும் அதன் விபரங்களோடு தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்த வாகீசன் சந்திக்கும் இடம் திகதி நேரம் அனைத்தையும் அறிவித்து விடுகிறார். அவர்கள் சந்திப்பதாக சொல்லியிருந்த  உணவு விடுதியில் வாகீசன் காத்திருக்கிறார். பெரும்பாலனவர்கள் வந்துசேர்ந்துவிட்டிருந்தார்கள் முக்கியமான ஒருவரைத்தவிர,அவர் யாரெனில் தென்மானிலங்களிற்கு பொறுப்பாக இருந்த ஸ்ருக்காட் நகரை சேர்ந்த சிறிரவி  என்பவரே,  சிறிரவிக்காக காத்திருந்தவேளை சிறிரவி வரவில்லை அவரிற்கு பதிலாக அங்கு வந்தவர்கள் யெர்மனிய காவல்த்துயையினர், வாகீசனையும் அவரோடு நின்றவர்களையும் கைது செய்கிறார்கள், ஒபகௌசன் என்னும் இடத்தில் இயங்கிய வாகீசனின் அலுவலகத்தினுள் புகுந்த யெர்மன் காவத்துறையினர் அங்கிருந்த ஆவணங்களையும் எடுத்துச் சென்றார்கள்.
 
வாகீசனை ஏற்கனவே யெர்மனிய காவல்த்துறையினர் தங்கள் கண்காணிப்பு வழையத்தினுள் கொண்டுவந்திருந்தாலும் அன்று அனைவரும் முக்கிய ஆவணங்களோடு சந்திப்பதை போட்டுக்கொடுத்ததேடு தன்னுடைய சொத்துக்களை சிறிரவி வாகீசனிடமிருந்து பாதுகாத்துக்கொண்டார்,  ஆனால் வழைமைபோல இலங்கை அரசின் சதி என்று தமிழ் இணையங்கள் எழுதித் தள்ள  இந்த கைதுகளின் பின்னணியில் தானே இருந்ததாக சிறீலங்காவிற்கான தூதர் ஜெகத்டயஸ் அறிவித்ததாகவும் செய்திகள் வெளியானது, தொடர்ந்தும் யெர்மனியில் பலர் கைதாகி விசாரணைகள் நடந்தாலும் இதுவரை புலிகள் அமைப்பில் ஒரு பெரும் பகுதியான தென்மானில பொறுப்பாளரான சிறிரவியை மட்டும் இன்னமும் யெர்மன் காவல்த்துறையினர் விசாரணை செய்யவில்லை.இவரிடமிருந்து தொடர்ந்தும் யெர்மன் காவல்த்துறை தகவல்களை பெற்றுக்கொண்டிருக்கலாம், எல்லாவற்றையுமே பணமாக்கத் தெரிந்த அனைத்துலகசெயலகம் வாகீசன் கைதானதும் ,வாகீசனை வெளியே எடுக்கவேண்டும் என்று அதற்கும் மக்களிடம் பணம் சேர்த்தார்கள், நிதி சேர்ப்பது விரும்பியவர்கள் கொடுப்பது அவரவர் விருப்பம் ஆனால் நிதியை சேகரிப்பவர்  சிறிரவியே . அவரே மாட்டியும் விட்டுவிட்டு வெளியே எடுக்க அவரே நிதியும் சேகரிக்கிறார்,சிறி ரவி தான் வாகீசனை போட்டுக்கொடுத்தார் என்று அறிந்த சிலர் சிறிரவியிடம் எதற்காக வாகீசனை போலிசிடம் போட்டுக்குடுத்தாய் எனகேட்டதற்கு அவர் சொன்ன பதில்  நான் போட்டுக் குடுக்கவில்லை நான் யேர்மனியில் வசிப்பதால் யேர்மன் நாட்டு காவல்த்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துளைப்பு கொடுத்தேன்  அது காட்டிக்கொடுப்பு அல்ல என்றாராம். இதே மற்றவங்கள் என்றால் துரோகி உளவாளி கட்டிவைத்து போட்டுத்தள்ளவேண்டும் ,
 
அதே இவர்களே தங்களுக்குள்ளை காட்டிக்குடுத்தால்  அது காவல்த்துறைக்கு ஒத்துளைப்பாம்,கவுண்டமணி பாணியில்  அடங்கொக்கா மக்கா என்று  சொல்லதோன்றுகிறதா,,ஆனால் வாகீசன் வெளியே வந்தபாடுதான் இல்லை, இதேபோலத்தான் பிரான்சில் பரிதி மற்றும் பலரும் கைது செய்யப்பட்டபோதும் பிரான்சிலும் அவர்களை வெளியே எடுக்கவென நிதி சேகரிக்கப்பட்டது  அதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாளராக பாரிஸ் ஈழநாடு  பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார் , இந்தக்குழுவை பரிதி கைதின் பின்னர் பிரான்ஸ்  பொறுப்பை எடுத்த மயூரன் குட்டி அல்லது விடுதலை  என்பவரோடு சேர்ந்து அமைத்தவர்களில் நானும் ஒருவன் ,அந்த குழுவை அமைத்ததோடு நான் ஒதுங்கி விட்டிருந்தேன், பிரான்சிலும் நிதி சேகரிக்கப்பட்டது ஆனால்  கைதானவர் எவரது வழக்கிற்கும் அந்த நிதி செலவளிக்கப்படவில்லை .கைதானவர் அவரவர் தங்கள் உறவுகள் நண்பர்களின் உதவிகளுடனேயே வழக்கு செலவுகளை கவனித்திருந்தார்கள்.
 
 
இது இப்படியிருக்க யெர்மனியில் பரப்புரைக்கு பொறுப்பாக இருந்தவர் பெயர் அகிலன் என்பவர். இறுதி யுத்தத்திற்கு என சேகரித்த நிதியில் ஒரு பகுதி இவரது கைகளிலும் இருந்தது அதனை அவர் மடகஸ்காரில் முதலீடு செய்திருந்தார் அதேநேரம் அகிலன் சிறுவயதிலேயே யெர்மனிக்கு வந்துசேர்ந்தவர் யெர்மனிய குடியுரிமை பெற்றவர் இவரிற்கு யெர்மன் சட்டதிட்டங்கள் என்றால் என்ன யெர்மனிய காவல்த்துறை எப்படிப்பட்டது என்று தெரிந்திருந்திருந்தவர். வாகீசனின் அடிதடி அடாவடி அரசியலால் நிச்சயம் ஒரு நாளைக்கு மாட்டவேண்டி வரும் என்று தெரிந்திருந்தது ஆனால் வாகீசனை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தார். அதனால் நிரந்தரமாக குடும்பத்துடன் மடகஸ்காரிற்கு சென்று குடியேறிவிட திட்டமிட்டிருந்தார். ஆனால் யேர்மன் காவல்த்துறை முந்திவிட்டிருந்தது.வாகீசனை கைது செய்துவிட்டார்கள். அதை அறிந்த உடனே அகிலன் யேர்மனிய காவல்த்துறை எல்லாம் மொக்கனுகள் என நினைத்தாரோ என்னவோ அவசரமாக மடகஸ்காரிற்கு தனியா பறந்துவிட்டிருந்தார்.ஆனால் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந் யேர்மன் காவல்த்துறையினர்  அகிலனை மடகஸ்காரிலிருந்துயேர்மனிக்கு  நாடுகடத்தவைத்து யேர்மன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
 
இவையனைத்தும் அவ்வப்போது செய்திகளாக வெளிவந்தவைதான். அனைத்துலகச் செயலகம் புதிதாக விட்ட புலுடாதான்  மீள இணையும் புலிகள் என்கிறதொரு   காணொளி. 
கைத்தொலைபேசி முலம் எடுக்கப்பட்ட காணொளியில் முதலில் மாவீரர்நாள் உறுதி உரை என எழுத்து போகின்றது. பின்னர்  இருளான  மரங்கள் உள்ள  இடமொன்றில் முகங்கள் மறைக்கப்பட்ட சிலர் கறுப்பு உடையணிந்தபடி நிற்க முன்னால் ஒரு பெண் சிறிய ரோச்லைற் வெளிச்சத்தில் கடதாசியில் எழுதியிருப்பதை படிக்கிறார். தாங்கள் முள்ளிவாய்க்காலில் நின்றே உறுதியெடுப்பதாக தொடங்குகிறார். முள்ளிவாய்கால் பகுதிமுழுக்க முழுக்க இலங்கை ராணுவமே நிற்கிறதென்பது வேறை கதை. அறிக்கையை படித்தவர்   5ம் கட்ட ஈழப்போரை தொடங்கப்போகிறோம் என்கிறார்.ஒருவர் கைகளிலும் ஒரு பொல்லாங்கட்டை கூட இல்லை. சரி அவர்களது உறுதி மொழியில் அடுத்த கட்ட நடவடிக்கை கொள்கை விளக்க உரை தரைவரைப்பற்றிய தகவல்கள்.எதாவது வருமா என நானும் ஆவலோடு காத்திருந்தேன். ஆனால் அந்தப் பெண்மணியோ  வினாயகத்தையும்  அவரது சகோதரரையும் திட்டித்தீர்க்கிறார்,இதுதான் அவர்களது மாவீரர் உறுதி உரை. மற்றையவர்களை திட்டித்தீர்ப்பதுதான் அவர்களது 5 ம் கட்டப்போர் என்று அப்பொழுதுதான்  எனக்குப்புரிந்தது.
 
அறிக்கை படித்து முடிந்ததும் ஒருவர் ஆமிவாறான் ஓடுங்கோ என்பார் . அறிக்கை படித்து முடியும்வரை ஆமிக்காரரை காத்திருக்கச் சொல்லியிருப்பாங்கள் என்று நினைக்கிறேன். பற்றைகள் உள்ள பகுதியால் ஓடுகிறார்கள். தமிழ் சினிமாவில் கதாநாயகன் உசிலம்பட்டியில்  கொழுத்தும் வெய்யிலில் கதா நாயகியை கலைக்கத்தொடங்க  உடனேயே சுவிசில் கொட்டும் பனியில் பாடல் தொடங்குவதைப்போல  பற்றைக்குள்ளால் ஓடியவர்கள் திடீரென மணல் நிறைந்த கடற்கரை ஓரமாக இரண்டு கல்லறைகள் போல் மணலால் அமைக்கப்பட்டு  ஒரு தீப்பந்தம் ஏற்றிய இடத்தில் சத்தியப்பிரமாணம் எடுக்கிறார்கள். அத்தோடு அனைத்துலகத்தின் படம்காட்டல் முடிவடைகின்றது.  5ம் கட்ட ஈழப்போர் என்பது அடுத்தவரை திட்டித்தீர்ப்பது என்பதால் இக்கட்டுரையை எழுதத்தொடங்கியதிலிருந்து என்மீதும் 5 கட்ட ஈழப்போர் தொடங்கி விட்டது எனவே இந்தக் கட்டுரையில் வாகீசனின் கைது பற்றி  எழுதவேண்டி வந்ததால் பரிதி இறுதியாக தமிழரசனோடு நடாத்திய பேச்சு வார்த்தை பற்றி எழுதமுடியவில்லை. எனவே அதனை அடுத்த  பதிப்பில் பார்ப்போம்..தொடரும்...............

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2

6:54 AM, Posted by sathiri, 3 Comments

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம்  2
(பூபாளம்  கனடா)
சாத்திரி

இந்தக் கட்டுரை முதல் பாகம் வெளியாகியிருந்த போதே மாவீரர் தினம் நடந்து முடிந்து விட்டிருந்தது  மூன்றாவது மாவீரர் தினத்தினை  இலண்டனில்  திடீரென அறிவித்தவர் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் பிரபாகரனின் நண்பருமான மண்டைக் கண்ணன் என்று அறியப் பட்டவர். புலிகள் அமைப்பில் குண்டப்பா என்கிற பெயரோடு  புலிகள் அமைப்பின் பயிற்சிக்கு இந்தியாவிற்கு போகின்றவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அமைப்பிற்கு  ஊருக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆகியவற்றை கவனிப்பதற்கு  கடற்கரைக்கு பொறுப்பாக இருந்தவர்.  அதே நேரம் புலிகள் அமைப்பின் முடிவிற்கு பிறகு புலிகளால் பிரேமதாசா காலத்தில் மாத்தையாவை தலைவராக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்யப் பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்கிற கட்சியை பாலசுப்பிரமணியம் என்பவர்  இலண்டனில் சட்டரீதியாக பதிவு செய்திருந்தார் இவர்கள் இருவரும் இணைந்தே இந்த மூன்றாவது மாவீரர் நாளை அறிவித்திருந்தனர்.  பாலசுப்பிரமணியம் என்பவர் புலிகளின் வெளிநாட்டு பிரிவில் தென்னாபிரிக்காவிற்கு பொறுப்பாக  இயங்கியவர். 2001 ம் ஆண்டு புலிகளின் அனைத்துலக செயலகம்  வெளிநாட்டு பிரிவில் மாற்றங்கள் ஏற்படுத்தியபொழுது  இவரையும் வன்னிக்கு அழைத்து நந்தவனத்தில் வைத்து (நந்தவனம் என்பது அனைத்துலக பொறுப்பாளர் கஸ்ரோவின் அலுவலகம்) இவரது பதவியும் பறிக்கப்பட்டிருந்தது.திடீரென எதற்காக நீங்கள் மூன்றாவதாக புதியதொரு மாவீரர் தினத்தை அறிவித்தீர்கள் என்று கேட்டதற்கு கண்ணன் என்பவர் சொன்ன பதில் என்னவென்றால் இதுவரை மாவீரர் தினங்களை நடாத்தியவர்கள் அதனை வியாபாரமாக்கி விட்டார்கள் எனவே நீங்கள்தான் இதனை நடாத்தவேண்டும் என்று தலைவரே தங்களுடன் தொடர்பு கொண்டு சொல்லியிருந்தார் என்றிருக்கிறார்.


தலைவரே நேரிலை கதைத்தாரா என வாயை பிளந்தபடி ஆச்சரியமாக கேட்டவர்களிற்கு  கண்ணன் தொடர்ந்து தலைவர் கதைத்த கதையை சொன்னார். அதாவது  ஆபிரிக்காவின் ஒரு நாட்டின் கடற்கரையோரமாக ஒரு கப்பல் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றது அதில் தான் தலைவர் தங்கியிருக்கிறார். அங்கிருந்துதான் சட்டிலைற் தொலைபேசி ஊடாகதன்னோடு கதைத்தாகவும் சொன்னவர் . தான் தலைவரோடு கதைத்ததை உறுதி செய்வதற்காக  இன்று அவர் கோழி சமைத்து உன்றதாக மேலதிக இலவச இணைப்பு தகவலையும் சொல்லியிருக்கிறார். எது எப்பிடியோ இவர்கள் மூன்றாவது மாவீரர் தினத்தை நடாத்தி அதற்கும் மக்கள்  போயிருந்தார்கள்.நூறு பேரளவில் வந்ததாக தகவல் சொல்லியிருந்தார்கள். இனிவரும் காலங்களில் இப்படியான பிரிவுகள் மேலும் அதிகரிக்கலாம்.


இனி பரிதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பின்னணி பற்றி பார்ப்போம்.இவர்களில் தாஸ் என்பவரை தவிர மற்றையவர்கள் பாரிசில் இயங்கும் வன்முறை கும்பல்களில் ஒன்றான பாம்புக் குழு எனப்படும் குழுவை  சேர்ந்தவர்கள். இவர்களின் ஆரம்பம் சுவிஸ் சுறிச் நகரத்தில் இயங்கியவர்கள் பின்னர் சுவிஸ் காவல்த்துறையின் கடுமையான நடவடிக்கைகளால்  அங்கிருந்து தப்பிவந்து பாரிசில் வசிப்பவர்களால் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார்கள். அதே நேரம் கடந்த வருடம் இதேகாலப் பகுதியில் வெண்ணிலா என்னும் குழுவினரால் பரிதி மீது தாக்குதல் நடத்தப் பட்டது தாக்குதல் நடாத்தியவர்களை பிரெஞ்சு காவல்த்துறையினரும் அடையாளம் கண்டு விசாரணைகளை நடத்தியிருந்தார்கள். ஆனால் காலில் வெட்டு வாங்கிய பரிதி அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யமுன்வரவில்லை.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி பரிதியின் நண்பர்கள் வற்புறுத்தியிருந்தார்கள். அதற்கு பரிதி சொன்ன பதில் என்னவெனில் போலிஸ் கேஸ் என்று போனால் பிறகு அவங்கள் இண்டு பக்கமும் நோண்டுவாங்கள்.ஏன் வெட்டிது என்று நோண்டத் தொடங்கினால் பாதிப்பு எங்களிற்கு தான் அதிகம் அதாலை பேசாமல் விடுவம் என்றதோடு அப்படியே விட்டுவிட்டிருந்தார்.

அதனால் பிரெஞ்சு காவலத்துறையினரும் பரிதி மீது தாக்குதல் நடாத்தியவர்களை சில நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விட்டு விடுதலை செய்து விட்டார்கள்.பிரான்ஸ் நாடு யெர்மன் சுவிஸ் நாடுகளைப் போல வெளிநாட்டு வன்முறை கும்பல்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுப்பது குறைவு காரணம் பிரான்சில் பலநாடுகளையும் சேர்ந்த பல்லின மக்கள் அதிகம் வாழும் நாடு அவர்களிற்குள் இது போன்ற வன்முறை கும்பல்களும் ஏராளம். இவர்களது பொதுவான தொழில் சிறிய அளவில் இருந்து பெரிய அளவு வரை  போதைப்பொருள் வியாபரம் கப்பம் சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ஆட்கடத்தல் என்பனவாகும்.அவர்கள் தங்களிற்குளேயே அடிபட்டு கொள்வார்கள். இடைக்கிடை கொலைகளும் விழும்.இவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் பிரெஞ்சு காவல்த்துறை திரட்டிக்கொண்டே இருப்பார்கள் இந்த கும்பலால் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பிற்கோ அல்லது பிரெஞ்சு மக்களிற்கு ஆபத்து என்று வரும் போதுதான் செயலில் இறங்குவார்கள். மற்றபடி இந்த குழுக்கள் தங்களிற்கள் அடிபட்டாலென்ன சுடுபட்டாலென்ன இதற்காக தங்கள்நேரத்தையும் பணத்தையும் செலவு செய்ய மாட்டார்கள்.


இதே போலத்தான் தமிழ்குழுக்களிற்கிடையிலான மோதல்களையும் பிரெஞ்சு காவல்த்துறையினர்  பெரியளவில் கணக்கெடுப்பது கிடையாது இவர்களிற்கிடையில் மோதுப்பட்டு யாராவது இறந்தாலும் அதனை  கணக்குத் தீர்த்தல் என்கிற வகைக்குள் அடக்கி கொலையாளி பிடிபட்டாலும்  தண்டனை பெரியளவில் இருக்காது 5 அல்லது 6 வருடங்களில் சிறையை விட்டு வெளியே வந்து விடுவார்கள்.இதே போல பரிதி மீது நடந்த தாக்குதலையும் கணக்குத் தீர்த்தல் என்கிற அடிப்படையிலேயே அடக்கியிருக்கிறார்கள்.காரணம் பரிதி என்பவர் எம்மவர்களிற்கும் எமது சில ஊடகங்களிற்கும்தான் தளபதி. கேணல்.மனித நேய செயற்பாட்டாளர். ஆனால் பிரெஞ்சு காவலத்துறைக்கு அவர் ஒரு குற்றவாளி என்பது மட்டுமல்ல இவர் சார்ந்த அமைப்பும் பிரான்சில் தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு.அவர் செய்த குற்றங்களிற்காக மூன்றரை ஆண்டுகள் தண்டனை பெற்றதொரு முன்னைநாள் கைதி என்பதோடு தொடர்ந்தும் காவல்த்துறையின் கண்காணிப்பில் இயங்கும் ஒருவர்.

எனவே ஒரு வன்முறை குழுவை செர்ந்தவரை இன்னொரு வன்முறைக்குழு கணக்குதீர்த்திருக்கின்றது என்பதே பிரெஞ்சுக் காவல்த்துறையின் பார்வை.
ஆனால் இதற்கிடையில் பிரான்சின் முன்னணி பத்திரிகையொன்று இந்தக் கொலை இலங்கை  தூதரகத்தின் பின்னணியில் நடாத்தப் பட்டதென்று ஒரு செய்தியையும் வெளியிட்டிருந்தது.அதனை  தொடர்ந்து வரும் காலங்களில் பார்ப்பதற்கு முன்னர். பரிதியை கொலை செய்தவர்கள் என சந்தேகத்தின் பெயரால் கைதாகி இருக்கும் பாம்பு குழுவிரிற்கும் பரிதிக்கும் இருந்த நெருக்கத்தையும் கொஞ்சம் பார்த்து விடுவோம்.

பிரான்சில் இயங்கிய புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பில் இருந்த அனைவருமே ஒவ்வொரு வன் முறைக் கும்பல்களை  தங்களோடு அரவணைத்து வைத்திருந்தனர் என்பது அனைவரிற்கும் தெரிந்த விடயம். இயக்கத்திற்கு பணம் கொடுக்க மறுக்கும் வியாபாரிகள் அல்லது சாதாரணமானவர்களை இந்த குழுக்களை வைத்தே  மிரட்டுவார்கள். பிரான்சிற்கு நாதன் (பாரிசில் சுட்டுக்கொல்லப் பட்டவர்)பொறுப்பாக இருந்த காலத்தில் முக்காப்புலா என்கிற குழுவை அரவணைத்து வைத்திருந்தார் இவர்களே யெர்மனியில் கேவலார் தேவாலயத்தில் ஆராதனைகள் நடந்துகொண்டிருந்தபோது தேவாலத்தில் புகுந்து சிலதமிழர்களை வாளால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட இந்தக் குழு யெர்மன் மற்றும் பிரெஞ்சு காவல்த்துறையின் இணைந்த நடவடிக்கையில் முடிவிற்கு வந்திருந்தது.நாதன் கொல்லப் பட்ட பின்னர் பொறுப்பெடுத்த இளங்கோ என்பவர் தானாகவே ஒரு குழுவை தொடங்கினார். புலிகள் அமைப்பில் இருந்து விலகி பிரான்சிற்கு வந்தவர்களை இணைத்து இந்தக்குழுவை தொடங்கினார்.இதற்கு குழந்தை என்பவர் தலைமை தாங்கினார் இந்தக் குழுவில்   சோதி.பரணி.ராகுலன்.பயஸ்.ஆகியோர் முக்கியமானவர்கள்.  இவர்களே  பாரிஸ் லாசப்பல் பகுதியில் பணம் கொடுக்க மறுத்த  V.S. CO  கடை உரிமையளரை தாக்கி கடையை உடைத்தது.  ஈழநாடு  பத்திரிகையை நடாத்திவரும் பாலச்சந்திரன் என்பவர்  புலிகள் பணம் என்றால் பெண்களையும் வைத்து வியாபாரம் செய்வார்கள் என்று  சொன்னதற்காக  அவரது மண்டையை உடைத்தது. குகன் (ஈரோஸ்) தாஸ்(ரெலோ) தவம் ஆகியோரை கடத்திக்கொண்டு போய் வெட்டியது  என்பன .

பிரான்சில் புலிகள் மீதான தடை கொண்டுவரப்பட இவர்களது செயற்பாடுகளும் முக்கியமானவை அந்தத் தடையோடு இவர்களது செயற்பாடுகளும் முடங்கிப் போக புதிதாக மீண்டும் பொறுப்பெடுத்த பரிதி இந்த பாம்புக்குழுவோடு நெருக்கமாகிக் கொண்டார்.
ஆரம்ப காலத்திலேயே  பிரான்சிற்கு பொறுப்பாக நாதன் இருந்த காலத்தில் புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப் பட்ட லூன் என்கிற வியாபார நிலையத்தையும் அவர்களது அலுவலகத்தையும் புலிகளின் புலனாய்வு பிரிவிலும் வெளிநாட்டு பிரிவிலும் இயங்கிய சிலரே அடித்து நொருக்கி அனைத்துலகத்தை சேர்ந்தவர்களிற்கு அடிபோட்ட சுவாரசியமான சம்பவம் ஒன்றும் நடந்திருந்தது.அதனையும் கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விடுவோம். பிரான்சில் எண்பதுகளின் இறுதியில் புலிகள் அமைப்பிற்கு வேலை செய்தவர்களில் முக்கியமானவர்கள்  நாதன் . ரங்கன்(தர்சன் இவர்தான் பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி வானொயை  இயக்குபவர்) மற்றவர் மாணிக்ஸ் என்பவர்.


                                                                         (நாதன்)

இயக்கத்திற்கு சேகரித்த நிதியில் நாதன் கையாடல் செய்து விட அது பற்றி கணக்கு கேட்ட ரங்கனை  வன்முறை குழு ஒன்றிக்கு பணத்தை கொடுத்து நாதன் போடச்சொல்லி விட்டார்.  அதேபோல ரங்கனை அந்தக் குழு கத்தியால் குத்திவிட  ரங்கன்   கோமா நிலைக்கு சென்று உயிர் தப்பிவிட்டிருந்தார். அதன் பின்னர் அவர் இயக்க நடவடிக்கைளில் இருந்தும் ஒதுங்கிகொண்டு விட்டிருந்தார். பின்னர் மாணிக்சும் ஒதுங்கிவிட நாதனே பொறுப்பாளராக தொடர்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில்  1995 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்  பாரிஸ் லாசப்பல் பகுதியில் இருந்த ஒரு மதுபானச்சாலையில் ரங்கனின் ஒன்று விட்ட சகோதரர் குமார்(தற்சமயம் கனடா) என்பவருடன் நானும் வேறு சில நண்பர்களும் அமர்ந்திருந்தோம்  குமாரை எனக்கு  ஊரிலேயோ  தெரியும்  குப்பிளான் கிராமத்தை சேர்ந்தவர். அவரது குடும்பம் புலிகள் அமைப்பின்  ஆதரவாளர்கள் என்பதால் எனக்கு அவர் பழக்கமாகியிருந்தார்.சிலர் பியர் குடிக்க சிலர் கோப்பி குடித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது நாதன்  சிலரோடு அங்கு வந்து கோப்பி குடிக்கத் தொடங்க ஏற்கனவே பியர் குடித்த போதையில் இருந்த குமார் நாதனை பார்த்து முறைக்க  நாதன் குமாரிடம்  என்ன  முறைக்கிறாய் என்று தூசணவார்த்தைகளையும் கலந்து கேட்க  கோபமடைந்த குமார் எழுந்து போய் நாதனின் கண்ணாடியை  பறித்து காலில் போட்டு மிதிக்கிறார்.அதற்கிடையில் இருவரையும் இருபக்கத்தினரும்  விலக்கு  பிடித்துவிட நாதன் அங்கிருந்து வெளியேறி சுமார் இருநூறு மீற்றர் தூரத்திலிருந்த அவர்களது வியாபார நிலையமான லூன் கடை வாசலில் போய் நின்று தொலைபேசி மூலம் முக்கப்புலா குழுவினரை அழைக்க அவர்களும் இரண்டு கார்களில் வந்து இறங்கினார்கள்.

அதே நேரம் அன்றைய அனைத்துலகப் பொறுப்புக்களில் இருந்த மனோவும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்.நிலைமை மோசமாகப் போவதை உணர்ந்த  நாங்கள்  நான் .ஈசன். சிவா(டிஸ்னி உணவக உரிமையாளரின் மகன் எனது நல்லதொரு நண்பன்)ஆகியோர்  நாதனிடம் சென்று ஏதோ கோபத்திலை இப்பிடி நடந்து விட்டது பிரச்சனையை பெரிதாக்கவேண்டாம் என கேட்டதும். குமார் வந்து தன்னிடம் மன்னிப்பு கோரினால்  விட்டு விடுவதாக சொல்லியிருந்தார். திரும்ப வந்த நாங்கள் குமாரை பேசிவிட்டு நடந்தது நடந்து விட்டது போய் மன்னிப்பு கேட்டு விட்டு வா என்று அனுப்பிவிட்டு  அந்த மதுபானச்சாலைக்குள் இருந்தபடி கவனித்துக்கொண்டிருந்தோம். ஆனால் குமாரை கண்டதும் நாதன் கடைக்கு உள்ளே போய்விட வேறு பலர் கடை வாசலிற்கு வந்தார்கள். குமாரிற்கு உள்ளே ஏதாவது பிரச்சனை நடந்தாலும் என நினைத்து  குமாரிற்கு பின்னால் போய் கவனிக்கச் சொல்லி குகனை நான் அனுப்பிவிட்டிருந்தேன்.

குமார் கடை வாசலிற்கு போனதும் அங்கு நின்றிருந்த ஒருவன் கைத் துப்பாக்கியை  எடுத்து குமாரின் கழுத்தில் சுட்டுவிடுகிறான்.குமார்  கழுத்தைப் பொத்திப் பிடித்தபடி கீழே விழ அது மழைக்காலம் என்கிற படியால் கையில் பெரியதொரு குடையோடு போயிருந்த  குகன் உடனே பாய்ந்து சுட்டவனை குடையால் தாக்கி பிஸ்ரலை பறித்து விடுகிறான். அதே நேரம் எதிரே பூக்கடை வைத்திருந்த பிரெஞ்சு பெண்மணி  போலிஸ் என கத்தியபடியே போலிசிற்கு போனடித்துவிட அங்கிருந்தவர்கள் எல்லாமே  நாதன் உட்பட ஓடிவிடுகிறார்கள். நாங்கள் உடனேயே குமார் அருகில் சென்று பார்த்தோம் குண்டு கழுத்தின் கொஞ்சம் கீழாக சதைப் பகுதியை மட்டுமே துளைத்து சென்றிருந்தது ஆபத்து இல்லை என்பது புரிந்தது அதற்கிடையில் அங்கு வந்த காவல்த்துறையினர் எங்களை விசாரிக்க  தீயணைப்பு படையினர் குமாரை வைத்திய சாலைக்கு எடுத்து சென்று விட்டிருந்தனர். சுட்டவர் யாரென்று எமக்கு தெரியாதெனவும் சத்தம் கேட்டே அந்த இடத்திற்கு வந்ததாக நாம் காவல்துறையிடம் தெரிவித்துவிட்டிருந்தோம்.காவலத்துறையும் அங்கிருந் போய்விட லூன் கடைக்குள் போய் பார்த்தோம் அங்கு  முகுந்தனும் பரமேஸ் மட்டுமே நின்றிருந்தார்கள். எதற்காக மன்னிப்பு கேட்க வந்தவனை சுட்டனீ்ங்கள் என்று கேட்டதும் தாங்கள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் தங்களிற்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்கள்.அவர்களை கடையை விட்டு வெளியேற்றிவிட்டு கடை உடைக்கப்பட்டு தீ வைக்கப் பட்டது.  அதையடுத்து நேராக  அனைத்துலகச் செயலகத்தின் அலுவலகத்திற்கு போயிருந்தோம் அங்கு மகேஸ் திரு ஆகியோர் நின்றிருந்தனர் அலுவலகத்திலும் நாதனை காணாததால் அலுவலகத்தையும் அடித்து நொருக்கிவிட்டு  அந்தக் குழு அங்கிருந்து வெளியேறி விட்டது.


இங்கு நடந்தது என்னவெனில் அனைத்துலகசெயலகத்தினை தாக்கிய அனைவருமே புலிகள் அமைப்பின் புலனாய்வு மற்றும் சர்வதேச கட்டமைப்பில் பணி புணிந்தவர்கள். இவர்களிற்கும் அனைத்துலக செயலகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது  அனைத்துலகத்தோடு அவர்கள் எவ்வித தொடர்புகளையும் வைத்திருப்பதும் கிடையாது. அவர்கள் தனியாக தங்களது லேலைகளை பார்ப்பதோடு வெளிநாடுகளில் அனைத்துலகத்தை சேர்ந்தவர்கள் என்னென்ன  தில்லு முள்ளு  நிதி மோசடிக செய்கிறார்கள் என்பதனையும் கண்காணித்து புலனாய்வுத் துறை  தலைமைக்கு தெரிவித்தபடி இருப்பார்கள். இந்தத்தாக்குதல் நடந்ததுமே புலனாய்வு பிரிவில் இயங்கிய ஈசன்(வசாவிளான்) என்பவர் உடனடியாக நடந்த சம்பவம் பற்றி விபரமாக எழுதி அனைத்துலகத்தின் கடை மற்றும் அலுவலகத்தை தாங்கியதற்கான காரணங்களையும் எழுதி புலனாய்வு தலைமைக்கு அனுப்பி விட்டிருந்தார்கள். அதே நேரம் தங்கள் அலுவலகத்தை இலங்கையரசின் கைக்கூலிகளும் இலங்கை புலனாய்வு பிரிவும் சேர்ந்து தாக்கிவிட்டார்கள் என்று இங்கு ஊடகங்களில் பிரச்சாரம் செய்த அதே வேளை  அதே பொருள்பட  ஏழு பக்க அறிக்கை ஒன்றும்  அனைத்துலகத்தால் தயாரிக்கப்பட்டு  இயக்கத்தின் தலைமைக்கு அனுப்பி வைத்திருந்தனர். பின்னர் அதே ஆண்டு சில வாரங்களின் பின்னர் புலனாய்வு பிரிவின் சக்தி(தற்சமயம் கனடா) தாய்லாந்தில் என்னை சந்தித்தபொழுது  அனைத்துலகம் அனுப்பியிருந்த ஓழு பக்க அறிக்கையின் பிரதியை எனது கையில் தந்து படித்துப் பார் என சொல்லி சிரித்தான்.

பின்னர் சக்தி ஆயுதம் கடத்திய குற்றச்சாட்டில்  தாய்லாந்து  பர்மா எல்லையில் வைத்து  தாய்லாந்து இராணுவ அதிகாரி ஒருவரோது கைது செய்யப் பட்டு  ஜந்து வருடங்கள் தாய்லாந்தில் சிறை வைக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகி அனைவரும் அறிந்ததே.இதை ஏன் இங்கு எழுதவேண்டி வந்தது என்றால் அனைத்துலகச் செயலகம் தங்களிற்குள் மாறி மாறி அடிபட்டுக்கொண்டு ஒருவரை மற்றவர்  அவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று குற்றம் சாட்டுவது வழமையாக நடப்பது ஒன்றாகி விட்டது.
இப்படி அனைத்துலகத்தின் பொறுப்புக்களில் இருந்த ஒவ்வொருவருமே ஒரு வன்முறை  குழுவை தங்கள் தேவைகளிற்காக பாவிப்பதும் வழைமையானதான ஒன்றே  அதே வழியில் தான் பரிதியும் பாம்பக்குழுவை  தனது தெவைகளிற்காக பாவித்து வந்தார்.அவரது கொலை பற்றிய விசாரணைகள் போய்க்கொண்டு இருக்கும் இதே நேரம் கடந்த வாரத்திலிருந்து  அனைத்துலகச் செயலகத்தினரால்  மீண்டும் இணையும் புலிகள் அமைப்பு என்கிற  தலைப்பிட்டு ஒரு காணொளியொன்று  இணையத்தினூடக பரவ விடப் பட்டுள்ளது.அதில் புலிகள் அமைப்பு மீளவும் இணைகின்றார்களா???அந்த காணொளியில் இருப்பவர்கள் யார்??அவர்கள் சொல்ல வருகின்ற சேதி என்ன என்பதையும்.கடைசியாக  பரிதிக்கும்  தலைமைச் செயலகத்தை சேர்ந்த தமிழரசனிற்கும் இடையில் என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்பதனையும் பார்ப்போம்.
தொடரும்..........

முதலாவது பாகத்தை படிப்பதற்கு இங்கு அழுத்துங்கள்.
http://sathirir.blogspot.fr/2012/12/blog-post.html

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்

4:21 AM, Posted by sathiri, No Comment

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்
சாத்திரி



தமிழீழ விடுதலைப் புலிகள்  அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும்   இலங்கையில்  மே மாதம் 2009 ஆண்டு   முடிவிற்கு கொண்டுவரப் பட்டபின்னர் புலம் பெயர் நாடுகளில் எஞ்சியிருக்கும் அதன் கட்டமைப்பின் இன்றைய  சமகாலப்பார்வை
நவம்பர் 8ந் திகதி  வியாழக் கிழைமை இரவு 9.30 தை தாண்டிய நேரம் பாரிஸ் 20 ல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் இந்த வருட மாவீரர் நாள் பற்றிய ஏற்பாட்டு விவாதங்களை முடித்து விட்டு நான்கு பேர் அலுவலகத்தை விட்டு வெளியே வருகிறார்கள்.அந்த நான்கு பேரில்  மேக்தாவும் மாஸ்ரரும்   வீதியால் நேராக நடந்து  செல்ல பரிதியும்  பார்த்திபனும் வீதியைக் கடந்து அலுவலகத்திற்கு எதிரேயிருந்த  பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சிற்காக காத்திருக்கிறார்கள்.  பஸ் நிலையத்தில் வேறு பல வேற்று நாட்டவரும் பஸ்சிற்காக காத்திருந்த வேளை திடீரென ஒரு வெடிச்சத்தத்தோடு பஸ் நிலையத்தின் பின்புற கண்ணாடி உடைந்து நொருங்குகின்றது.எதற்காக கண்ணாடி உடைந்திருக்கலாமென   பரிதி உட்பட அனைவரும் திடிக்கிட்டு பார்த்தபொழுது அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடுகள் பரிதியின்  மார்பிலும் வயிற்றிலும் விழுகின்றது.பார்திபன் என்பவர் வீதியை கடந்து ஓடிப்போய் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார்களிற்கு பின்னால் ஒழிந்து கொள்ள மற்றையவர்கள் பயத்தில் கண்களை பொத்திக்கொள்கிறார்கள். கொலையாளி அருகில் வந்து பரிதிஇறந்து விட்டதை உறுதிசெய்து விட்டு தயாராய் ஒருவன் இயக்கிக்கொண்டிருந்த ஸ்கூட்டரில் ஓடிப்போய் ஏற ஸ்கூட்டர்  அந்த இடத்தை விட்டு மறைந்து விடுகின்றது. கொலை நடந்த விதத்தை பாரக்கும் போது கொலையாளி உண்மையான குறிபார்த்துச்சுடும் கைதேர்ந்த கொலையாளி இல்லையென்பது மட்டும் தெளிவாகின்றது. கைதேர்ந்த கொலையாளியாக இருந்திருந்தல் ஒரு மீற்றரிற்கும் குறைவான தூரத்தில் இருந்து சுட்ட முதலாவது குண்டு குறி தவறிப் போயிருக்காது முதலாவது குண்டே பரிதியின் தலையை துளைத்திருக்கும். அல்லது அண்மையில் ஊரில் இருந்து வந்தவராக இருந்திருப்பார் வெளிநாட்டு சூழல் அவரிற்கு பதற்றத்தை கொடுத்திருக்கும்.  ஆனால் பரிதியோடு கூட இருந்தவர்களின் உதவியோடுதான் தகவல்களை பெற்று கொலைக்கான திட்டம் தீட்டப் பட்டிருக்கும் என்பது உறுதியாகத் தெரிகின்றது.


இது அத்தனையையும் பதற்றத்தோடு கவனித்துக்கொண்டிருந்த  ஒருவர் காவல்த்துறையின் இலக்கத்தை அழுத்துகிறார். சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்த காவல்த்துறையினரிற்கு கெல்மெட் போட்டபடி முகத்தை துணியால் மூடிய இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்க.  அதே நேரம் அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படை முதலுதவி பிரிவினர் பரிதியின் உயிர்  பிரிந்து விட்டதை உறுதி செய்கிறார்கள். உடனடியாக  அங்கிருந்தவர்களின் விபரம் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட காவல்த்துறையினர்  அவர்களை அகற்றி விட்டு  அந்த இடத்திற்கு யாரும் வராதபடி வீதிகளை மூடிவிடுகிறார்கள்.மேலதிக காவல்த்துறையினர் புலநாய்வுத் துறையினர் தடவியல் நிபுணர்கள் என அங்கு விரைகின்றார்கள்.
அதற்கிடையில் பரிதியோடு நின்றிருந்த பார்த்திபன் பரிதி கொல்லப் பட்டு விட்டதாக தனது  கைத்தொலைபேசி மூலம் செய்தியை மற்றையவர்களிற்கு தெரிவிக்கின்றார். செய்தி  பாரிசில் தமிழர்களிடம் வேகமாகப் பரவுகின்றது. மறுபக்கம் காவல்துறையினர் விசாரணையை  நடத்திக் கொண்டிருக்கும் போதே  கொலை நடந்த ஒரு சில நிமிடங்களிலேயே  தாங்களே தமிழ்த்தேசிய  ஊடகம் என்று தங்களைத் தாங்களே பிரகடனம் செய்த  சில இணையத்தளங்கள்  கொலையாளிகளை  கண்டு பிடித்து சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் பரிதி படுகொலை  என்கிற செய்தியை வெளியிடுகிறார்கள். அதற்கடுத்த நிமிடங்களிலேயே  கொலையாளிகளையும்  கண்டு பிடித்து  கே.பி. மற்றும் வினாயகம் ஆகியோரின் படங்களைப் போட்டு இவர்கள்தான் கொலையாளிகள் என்றும் செய்திகள் வெளியாகின்றது. இத்தனைக்கும் அப்பொழுதுதான் தடவியல் பரிசோதனைகள் முடிந்து பரிதியின் உடலை பிரெஞ்சு காவல்த்துறையினர் மேலதிக பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
000000000000000000000000000


பரிதியை  றேகன் என்கிற பெயரில் 84 ம் ஆண்டு இறுதிகளில்  புலிகள் அமைப்பின்  அன்றைய பிரதித் தலைவர் மாத்தையாவின் பாதுகாப்பு பிரிவு பொறுப்பாளராக எனக்கு அறிமுகம் ஆகின்றான். பின்னர் 85 ம் ஆண்டு கிளிநொச்சியில் ஒரு முகாம் பொறுப்பாளராக இருந்தவேளை  கிளிநொச்சி  இராணுவ முகாம் பகுதியில் நானும் நின்றிருந்ததால் எங்கள் அறிமுகம் நட்பாகி  கடந்த ஆண்டு வரை தொடரவே செய்தது.கடந்த வருடம் வரை தமிழர் வாழும் உலகநாடுகள் அனைத்திலும்  புலிகள் அமைப்பின்  அனைத்துலக செயவக அமைப்பு  ஒரு இடத்தில் நடாத்திவந்த மாவீரர் நாளானது கடந்த வருடம் இரண்டு அமைப்புக்களால் இரண்டு இடங்ககளில் நடப்பதற்கான ஏற்படுகள் நடந்து கொண்டிருந்த போதுதான் நான் பரிதியை  சந்தித்து கதைத்திருந்தேன். இரண்டாவது  மாவீரர் நாள் ஏற்பாடுகளை செய்திருந்தவர்கள் புலிகளின் தலைமைச் செயலகம் என்று தங்களை பிரகடனப் படுத்தியிருந்தார்கள். இந்த தலைமைச் செயலகம் என்பவர்கள் யாரென  கொஞ்சம் சுருக்கமாக  பார்த்து விடலாம். இறுதி யுத்தத்தின் போது  யுத்தப் பிரதேசத்திலிருந்தும் மற்றும் யுத்தப் பிரதேசங்கள்ளிற்கு வெளியே அதாவது வடக்கு கிழக்கிற்கு வெளியே நின்றிருந்த  இலங்கையிலிருந்து தப்பியோடி இந்தியா மலேசியா . சிங்கப்பூர்.இந்தோனிசியா. தாய்லாந்து ஆகிய நாடுகளிற்கு வந்து சேர்கிறார்கள்.இதில் பெரும் பாலானவர்கள் புலிகளின் புலனாய்வு பிரிவைச சேர்ந்தவர்கள். புலிகளின் முடிவிற்கு பின்னரும் புலிகளின் பெயரில்  தொடர்ந்து  ராமு சுபன் என்னும் பெயரில் மலேசியாவில்  இருந்து வெளியான  அறிக்கைகள் இவர்களுடையதுதான்.இப்படி வந்து சேர்ந்தவர்கள் தாங்கள் வெளி நாடுகளிற்கு வருவதற்காகவும் மற்றும் முகாம்களில் தங்கியிருக்கும் தங்கள் குடும்பங்களை மீட்கவும் வெளிநாடுகளில் இருந்த அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு பண உதவிகளை  கோருகின்றனர்.


ஆனால் புலிகள் அமைப்பு முடிவிற்கு வந்துகொண்டிருக்கின்றது என்கிற செய்தி 2009 ம் ஆண்டு ஏப்றல் மாதமளவில் அறிந்து கொண்ட அனைத்துகத்தை சேர்ந்தவர்கள் இறுதி யுத்தத்திற்கு என சேகரித்த நிதியில்  கிடைத்ததை சுருட்டவும்  புலிகளின் அசையும் அசையா  சொத்துக்களை பங்கு போடும் போட்டியில் பிரிந்து நின்று சண்டை பிடிக்கத் தொடங்கியிருந்தனர். ஆனால் யாரும் பெரிய வன்முறைகளில் இயங்காமல் புத்திசாலித் தனமாக நடந்து கொண்டார்கள் காரணம் வன்முறைகள் பின்னர் வழக்காகி காவத்துறைக்கு போனால் அவர்கள் நோண்டியெடுத்து உள்ளதையும் பிடுங்கி விடுவார்கள் என்கிற பயம் அவர்களிற்கு. ஏனெனில் புலிகள் இயக்கத்திற்கு உலகம் முழுவதும் உள்ள வர்த்தக  வியாபரங்களால் மாதம் ஒன்றிற்கு சுமார் 300 மில்லியன் டெலர்களை  வருமானமாகப் பெறும் அமைப்பாக இருந்தது. இலங்கையரசே கடன் வாங்கி  ஆயுதம் வாங்கி சண்டை பிடித்தக் கொண்டிருந்தபோது  புலிகள் அமைப்பு  தங்கள் பணத்திலேயே  நவீனரக ஆயுதங்களாக  இறக்கி சண்டை பிடித்துக்கொண்டிருந்தார்கள். 2001ம் ஆண்டிற்கு பின்னர்  அவர்களால்  ஆயுதங்களை வன்னிக்குள் கொண்டு சேர்க்க முடியாமல் போனது வேறு கதை..அப்படி உலகம் முழுவதும்  சொத்து சண்டைகள் நடக்கத் தொடங்கியிரந் போது  பிரான்சில் பிரிந்து சண்டை பிடித்தவர்களில் முக்கியமாக பரிதி மேக்தா  சுக்குளா போன்றவர்கள் ஒரு புறமும் ஆதித்தன் சாம்ராஜ்  போன்றவர்கள் மறுபுறமுமாக பங்கு பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். சாம்ராஜ் என்பவரே  புலிகள் அமைப்பின் பணத்தை  உண்டியல் முறை மூலம் மற்றைய நாடுகளிற்கு பரிமாற்றம் செய்பவர். இறுதி யுத்தத்திற்கென சேகரித்த பெருமளவு நிதி இவரின் கைகளிலேயே இருந்தது. பரிதி கொலை செய்யப் பட்ட பின்னர்  இவரும் பிரான்சு காவல்த்துறையால் விசாரிக்கப்பட்டிருந்தார்.  விசாரணை முடிந்து வெளியில் வந்ததும்  நாட்டை விட்டு வெளியேறி விட்டார். இவர் தென்னாபிரிக்கா சென்றிருக்கலாம்.  அதற்கிடையில் பினாமிகளாக  தனியார்கள் பெயரில் இருந்த வர்த்தக நிலையங்களின் பினாமிகள் சிலரை மிரட்டியும் பார்தார்கள். அவரகளோ போலிசுக்கு போனடித்து விடுவோம் என்றதும் பயத்தில் விட்டு விட்டார்கள். எனது நகரத்திலும் அப்படி புலிகளின் பினாமி உணவகம் ஒன்று ஈழம் றெஸ்ரோரனற் என்கிற பெயரில் ஒருவரால் இயக்கப் பட்டுக்கொண்டிருந்தது  ஆனால் கடந்த வருடத்திலிருந்து அதன்பெயர் இந்தியன் றெஸ்ரோறன்ராக மாறி விட்டது.


இப்படி இவர்களது சண்டையில் தப்பி வந்தவர்களது உதவிக் கோரிக்கைகளை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை.ஆனால் தப்பி வந்தவர்கள் தங்கள் தனிப்பட்ட நண்பர்கள் உறவுகளின் உதவிகளுடன்  சுமார் நூற்றுக்கு  மேற்பட்டவர்கள் ஜரோப்பாவிற்குள் வந்து விடுகிறார்கள். அப்படி வந்து சேர்ந்தவரகளில் பலர் தாங்கள் தங்கள் விசாப் பிரச்சனை வேலை என்று இருந்துவிட்டார்கள். ஆனால் பெருமளவு பணத்தை பதுக்கி வைத்துக்கொண்டு தங்களிற்கு உதவவில்லையென்கிற கோபம்  வெளிநாடுகளிற்கு வந்து சேர்ந்தவர்கள் நேரிலும் சென்று  பண உதவி செய்யுமாறும்  தாயகத்தில்  பாதிக்கப்பட்ட போராளிக்குடும்பங்களிற்கு உதவுமாறும் கேட்டுப் பார்க்கிறார்கள்.  அதுவும் அனைத்துலகத்தை சேர்ந்தவர்களால் மறுக்கப்படவே  புதிதாய் வந்து  சேர்ந்தவர்கள்  சிலர் இணைந்து   தாங்களே தலைமைச் செயலகம் தாங்கள்தான்  தாங்கள் தான் புலிகள் அமைப்பின் அனைத்து விடயங்களையும் முடிவெடுக்கும் அதிகாரம் உடையர்கள்  என அறிக்கையொன்றையும் விடுகிறார்கள். அப்படி தலைமைச் செயலகம் என்வர்களில்  இலண்டனில் சுரேஸ்.ராமு சுபன்.மற்றும் சங்கீதன் . பிரான்சில் தமிழரசன்.கனி. ஜெர்மனியில் தும்பன் புலவர் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

இவர்களது வருகையும் அறிக்கையும்  ஏற்கனவே வெளிநாடுகளில்  அனைத்துலகச் செயலகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு அல்லது துரத்தப் பட்டவர்களிற்கு புதிய உற்சகத்தை கொடுக்க அவர்களும் தலைமைச் செயலகத்தோடு கைகோர்த்துக் கொள்கிறார்கள். இது இப்படியாக போய்க்கொண்டிருக்கும் போது  புலிகளின் முடிவில் தொடங்கப் பட்ட நாடு கடந்த தமிழீழ அரசையும் இயங்க விடாமல் மிக மோசமாக அனைத்துலகச் செயலகத்தினர் எதிர்த்துக்கொண்டிருந்தனர்.  அனைத்துலகத்தின் ஜெர்மனிய பொறுப்பாளர் வாகீசன் என்பவர்  தான் இருக்கும் வரை நாடு கடந்த தமிழீழ அரசை இயங்க விடமாட்டேன் ஒரு இடத்தில் கூட்டம் நடாத்த விடமாட்டேன் என பகிரங்கமாக சவால் விட்டிருந்ததோடு மட்டுமல்லாமல் ஜெர்மனி பிரான்ஸ் சுவிஸ் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நா.க.அரசின் கூட்டங்களை குளப்பிக்கொண்டும் இருந்தார்கள். கே.பி கைதாகிய பின்னர் நா.க அரசை இயக்கியவர்கள் அனைவருமே கோட்சூட் போட்ட கனவான்கள். யாராவது வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சண்டை என்று இறங்கினால் ஒதுங்கி ஓரமாய் போய் விடுகிறவர்கள். அவர்களது கூட்டங்களில் அனைத்துலகச் செயலகத்தினர் வேட்டியை  மடித்துக் கட்டியபடி வாடா  வா..என்கிற மிரட்டல்களால் பயந்து போய் கையை பிசைந்து கொண்டு  நின்றவர்களிற்கு இந்த புதிய தலைமைச் செயலக வரவுகள் தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டவே அப்படியே  பாய்ந்து பற்றிக் கொண்டார்கள்.  இப்படியான புது கூட்டணி இன்னொரு மாவீரர் தினத்தை கடந்த வருடம் அறிவித்தபோதுதான் நானும் வேறு சில முன்னைநாள் போராளிகளும் ஒரு சமரசத் திட்டத்தோடு பரிதியை சந்தித்திருந்தோம்.


எங்கள் சந்திப்பானது மாவீரர் தினத்தை பிரிக்காது ஒற்றுமையாக நடத்துமாறும் அதே நேரம் இயக்கத்தின் வர்த்தக நிறுவனங்களை நடாத்துபவர்கள்  அதன் வருமானத்தில் 20 வீதத்தை மாதா மாதம் பாதிக்கப்பட்ட போராளிக் குடும்பங்களிற்கு கொடுக்குமாறும் கோரிக்கை  வைத்தோம். சிலர்  5 வீதத்தை தருவதாக ஒத்துக் கொண்டார்கள். ஆனால் மாவீரர் நாள் இணைந்து செய்யமுடியாது என்று மறுத்ததோடு அதற்கு அவர்கள் கூறிய காரணம். இறுதி யுத்தத்தில் இருந்து தப்பிவந்தவர்கள் அனைவரும் இலங்கை புலனாய்வு பிரிவால் அனுப்பப் பட்டவர்கள் அவர்களுடன் இணைய  முடியாது அவர்களிற்கு வருமானத்தில் பங்கும் கிடையாது என்றுவிட்டார்கள். புதிதாய் வந்தவர்கள் சிலரில் எனக்கும் சில சந்தேககங்கள் இருக்கத் தான் செய்தது அதனை கட்டுரைகளாகவே கடந்து ஆண்டு எழுதியிருக்கிறேன். ஆனால் உண்மையில் அவர்கள் இலங்கை இந்திய புலனாய்வுத் துறையால் இயக்கப் பட்டாலும் நாங்கள் இனியென்ன அடுத்த ஆயுதப் போராட்டமா நடாத்தப் போகிறோம் மாவீரர் தினம் தானே. இரண்டாம் உலக யுத்தத்தில் கொல்லப் பட்ட ஜெர்மனிய இரணுவத்தினரிற்கே பிரான்சு அரசு நினைவுத் தூபி கட்டி அஞ்சலி செலுத்தியிருக்கிறபோது எங்கள் மாவீரர்கள் தினத்தை இலங்கை இந்திய புலனாய்வு துறை என்று சந்தேகப் படுபவர்களோடு இணைந்து செய்வதில் எவ்வித நட்டமும் இல்லை அவர்கள் மாவீரர் தினத்தை உளவு பார்த்து என்ன செய்யப் போகிறார்கள் என வாதாடியிருந்தோம். ஆனால் அவங்களா நாங்களா என மோதிப் பார்த்து விடுவோம் என்று அனைத்துலக செயலகத்தினர் சவால் விட்டார்களே தவிர இணக்கத்திற்கு வரவில்லை. அதன் பின்னர் மாவீரர் தினமும் இரண்டாக நடந்து முடிந்தது. கடந்த வருடம் பரிதியும் தாக்குலிற்குள்ளாகியிருந்தார். அது மட்டுமல்ல அனைத்துலக செயலக இலண்டன் பொறுப்பாளர் தனம் மீதும் தாக்குதல் நடாத்தப் பட்டிருந்தது.

இந்த வருடம் பரிதி கொலை செய்யப் பட்டு விட்டார். கொலை நடந்த மறுநாள் பரிதிக்கு  தளபதி. லெப்.கேணல். கேணல்  என்று அவரவர் தங்கள் விருப்பத்திற்கு பதவிகள் கொடுத்து இணையத்தளங்களில் அஞ்சலி வெளியிட்டிருந்தார்கள். தற்சமயம் விடுதலையாகி வவுனியாவில் வசிக்கும் முன்னை நாள் போராளியொருவர் பரிதி பற்றி கதைத்தபோது  அவர் சொன்னது  எங்கடை தலைவர் தளபதி கேணல் எல்லாரையும் வெளிநாட்டிற்கு அனுப்பிப் போட்டு வெறும் சப்பையள் எங்களை வைச்சு சண்டை பிடிச்சதிலைதான் தோத்து போனவர் என்று சொல்லி சிரித்தான். இது இப்படியிருக்க  கொலை நடந்து நான்குநாட்கள் கழித்து   நடராசா மகீந்திரன் (பரிதி)கொலைச் சந்தேக நபர்கள் இருவர் கைது என்கிற செய்தி பிரெஞ்சு ஊடககங்களில் வெளியாகின்றது.  றமேஸ் மற்றும் பிறேம் என்பவர்களே கைதானவர்கள் இவர்கள் பெயர்களை இதுவரை காவல்த்துறையினர் இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.அதற்கடுத்ததாக தாஸ் என்கிற மன்னைநாள் ரெலோ உறுப்பினர் ஒருவரும் கைதாகிறார். இந்தக கைதுகளும் தமிழ் இணையத் தளங்கள் தங்கள் கற்பனைகளை  செய்திகளாக்கி கொண்டும் இருக்கும் போது  ஏற்கனவே இரண்டு மாவீரர் தினத்திற்கான  இடங்கள் பற்றிய செய்திகள்  வெளியாகியிருந்த வேளை  திடீரென  வேறு சிலர். தாங்களே உண்மையான புலிகள்  தங்களிற்குத்தான்  தலைவர் மாவீரர் தினத்தை நடாத்துமாறு கட்டையிட்டிருக்கிறார் என்றபடி இலண்டனில் மூன்றாவது மாவீரர் தினத்தை  இந்த  வருடம் அறிவித்திருக்கிறார்கள்.
கொலை தொடர்பாக கைது செய்யப் பட்டவர்கள் யார்??  இந்த திடீர் மூன்றாவது மாவீரர் தினத்தை நடாத்துவது யார் என்கிற விபரங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.   நன்றி தொடரும்..................

வெளித்தெரியாத வேர். M.S.R

12:21 PM, Posted by sathiri, No Comment


வெளித்தெரியாத வேர். M.S.R
சாத்திரி ஒரு பேப்பர்.

ஈழத்தின் ஆயுத விடுதலைப் போராட்டத்தின்  தங்கள்அனுபவங்களை மையமாக வைத்து  பலர் தங்கள் பதிவுகளை புத்தமாக்கியிருக்கிறார்கள். அவற்றில் .சி.புஸ்பராஜா. கி. பி. அரவிந்தன். மற்றும் ஜயர் ஆகியோருடைய பதிவுகள் முக்கியமானவை. ஆனால் இந்த மூவரது பதிவுகளிலுமே  இந்த  எம்.எஸ்.ஆர் என்கிற மனிதனைப் பற்றிய எந்தவொரு தகவல்களும் உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை. இந்த மூவரோடும் நெருங்கி பழகியவர்தான்  எம்.எஸ். ஆர். சி. புஸ்ப்பராஜா எதற்காக தனது புத்தகத்தில் இந்த மனிதரைப்பற்றிய பதிவுகளை தவறவிட்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கி. பி அரவிந்தனிடம் நான் ஒரு தடைவை கதைத்தபொழுது  அதற்கான காரணத்தை கேட்டிருந்தேன். அதற்கு அவர் கூறிய காரணம் நினைவுத் தேய்வுகள் காரமாண தவறவிட்டு விட்டேன் ஆனால் நீங்கள்  எங்காவது அவரைப் பற்றி கட்டாயம் பதிவு செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.அண்மையில் வெளியான ஜயரின்  பதிவுகளில் நிச்சயமாக ஏதாவது ஒரு தகவலாவது   எம்.எஸ்.ஆரைப் பற்றி இருக்கும் என எதிர் பார்த்தேன் ஆனால் ஏமாற்றம்.

ஜயரின் ஊரான வடக்கு புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர்தான் எம்.எஸ்.ஆர் அதைவிட ஈழப் போராட்ட ஆரம்ப காலங்களில் ஜரோடு இணைந்தே பல உதவிகளையும் போராட்டக் குழுக்களிற்கு செய்தவர்.ஆயுதப் போர் என அறைகூவல் விடுத்த சத்தியசீலன் தொடக்கம். அதை அடுத்த பரிமாணத்திற்கு தள்ளிய பொன் சிவகுமாரன் அதன் பின்னர் ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தத் தொடங்கிய  உமா. பிரபாகரன்.சிறீசபாரத்தினம்  மட்டுமல்ல  தொண்ணூறுகளின் யாழ் இடப்பெயர்வு  நடக்கும் வரை பலாலி இராணுவ முகாமை சுற்றி காவல் கடைமையில் நின்ற புலிகள் அமைப்பு போராளிவரை. இவரின் வீட்டில் ஒரு நாளாவது தங்கியிருந்து ஒரு வேளை உணவாவது உண்ணாதவர் கிடையாது.


  M.G.R என்றால் அனைத்து தமிழர்களிற்குமே  தெரியும்  ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு அவர்  என்னென்ன உதவிகள் செய்தார் என்பதும் அனைவரும் அறிந்தது  ஆனால் அதேயளவிற்கு கொஞ்சமும் குறைவில்லாத  உதவிகளை   வெளியே தெரியாமல் செய்தவர்  M.S.R . யார் இந்த . M.S.R??.....M.S..ராஜேந்திரன்.நெடிய கண்ணாடி அணிந்த உருவம். வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து  குப்பிளான்  செல்லும் வழில் இரண்டாவதாக இருந்த கேரளா பாணியிலான  மிகப்பெரிய பழையகாலத்து வீடுதான் இவர்களது வீடு.எழுபதுகளில் பல லொறிகளை வைத்து  கொழும்பிற்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த வசதி படைத்த குடும்பம். M.S.R என்கிற  எழுத்து பதித்த  லொறிகள்  பொதிகளை  எற்றியபடி  யாழ் கொழும்பு  வீதியில்  அன்றைய காலங்களில் யாரும் பார்க்காமல் இருந்திருக்க முடியாது என்றே சொல்லாம்.எழுபதுகளின் இறுதியில் ஆயுதப் போர் என்று தொடங்கியபோது அனைத்து போராளிகளையும் அரவணைத்து பாதுகாத்த ஒரு முக்கியமான வீடு இவருடையது.எல்லாவற்றிக்கும் மேலால் பிரபாகரனிற்கு  ஜய்யர் மற்றும் ராகவன் ஆகியோருடைய தொர்புகள் கிடைத்த பின்னர். அவரின் முக்கியமான மறைவிடம் இவரது வீடுதான். பிரபாகரன் துரையப்பாவை சுட்டுக்கொன்ற பின்னரும்.  பொன் சிவகுமரனின் கோப்பாய் வங்கிக் கொள்ளை தோல்வியடைந்து சிவகுமார் பிடிபட்டபோது அவருடன் வங்கிக் கொள்ளைக்கு போயிருந்த கி.பி அரவிந்தன்  தப்பியோடி நேராக போய்ச் சேர்ந்தது. இந்த வீட்டிற்குத்தான். இப்படி ஆரம்ப காலங்களில் இயக்க பேதங்களற்று  அனைவரரையும் போராளிகள் என்கிற நோக்கோடு அரவணைத்தவர்தான் M.S.R என்கிற மனிதன்.

பின்னை காலங்களில் இயக்க மோதல்கள் தொடங்கிவிட புலிகள்அமைப்பின் ஆதரவாளராக மாறிவிட்டிருந்தார். M.S.R  சரளமாக சிங்களம் கதைக்கத் தெரிந்தவர் என்பதால்  வடக்கு கிழக்கிற்கு  வெளியே  புலிகள் அமைப்பு நடாத்திய  தாக்குதல்களிற்காக  பாவித்த   அல்லது உதவிய சிங்களவர்களை   இவரது வீட்டில்தான்  கொண்டு வந்து தங்க  வைத்து  பராமரிப்பார்கள்.  அப்படியானவர்களிற்கு ஆடு  அடித்து விருந்து வைப்பதில் இருந்து  சாராயம் வாங்கி விருந்து வைப்பது வரை தனது  செலவிலேயே செய்து முடிப்பார்.அப்படியான  காலங்களில் 85 ம் ஆண்டு இறுதியில் பலாலி படை முகாமை சுற்றி காவல் நிலை அமைக்கும் பணிக்காக சென்றிருந்தவேளை எனக்கும் அறிமுகமாகிறார்.அதன் பின்னர் அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்றுவரத் தொடங்கியிருந்தேன். எந்த நேரத்தில் யார் சென்றாலும் அவர்களிற்கு தேனீர் தயாரிப்பதற்காக  அவர்கள் வீட்டு அடுப்பில் ஒரு பானையில் சுடுநீர் இருந்தபடியேதான் இருக்கும். எத்தனை பேர் போனாலும்  சலித்துக்கொள்ளாமல். அவரது மனைவி றூபியக்கா இன் முகத்துடன்  வரவேற்று சாப்பிடுறீங்களா  தேத்தண்ணி குடிக்கிறீங்களா என்று வரவேற்றபடியேதான் இருப்பார்.

அவர்கள் வீட்டின் காணியில் இருந்த கழிவறையில் மேலே சீமெந்து  தகடு(பிளாற்) போடப்பட்டிருந்தது அதனோடு ஒட்டியபடி ஒரு வேப்பமரம் அகன்று பரந்து கழிவறையின் மேல் பக்கத்தை நன்றாக மறைத்து வளர்ந்திருந்தது. அதற்குமேல் ஏறி நின்று பார்த்தால் வடக்கு புன்னாவை கட்டுவன் சந்தியில் இருந்து  குப்பிளான் வீதி இரண்டு பக்கமும் நன்றாக பார்க்கலாம். அத்தோடு அவரது வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி எதிரேயிருந்த ராகவன் வீடும் தெளிவாகத் தெரியும்.  டேய் இந்த பிளாற்றிலை உங்கடை அண்ணன் பதுங்கி படுத்திருக்கிறவர் என்று எனக்கு அடிக்கடி சொல்லுவார். 86 ம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து  தாயகம் திரும்பியிருந்த  தலைவர் பிரபாகரன்.  ஆரம்பத்தில் தனக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகளிற்கு திடீரென  போய் பார்த்து அவர்களிற்கு நன்றி தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தக் கொண்டிருந்தார். அப்படி ஒரு  இரவுப் பொழுதில் நான்   M.S.R அண்ணரோடு அவரது வீட்டில்  அரட்டையடித்தக் கொண்டிருந்தேன்.  றூபியக்கா இரவு உணவாக புட்டு அவித்துக்கொண்டிருந்தார்.

அவரது வீட்டிற்கு முன்னால் ஒரு வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஆயுதங்களுடன் குதித்த  பலர் மளமளவென அவரது வீட்டின் நாலு பக்கமும் புகுந்து நிலையெடுத்தார். அவரது வீட்டிற்கு  அருகேயே இரண்டு பக்கமும் புலிகள் அமைப்பின் காவல் நிலைகள் இருந்ததால் அங்கு வேறு யாரும் வரும் சந்தர்ப்பம் இல்லாததால் நாங்கள் அமைதியாக நடப்பதை கவனித்படி இருந்தோம். என்னைப்பார்த்து யாரே பெரிய தலைபோலை இருக்கு  சிலநேரம் குமரப்பாவா இருக்கலாமெண்டார். காரணம் குமரப்பா அன்றைய காலங்களில் அந்தப் பகுதியில் தான் தங்கியிருந்தார்.  ஆனால் தலைவர் பிரபாகரன் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்ததை கண்டதும் அட தம்பிவாறான் என்றார். அப்பதான்  எனக்கு சங்கடமாயிருந்தது தந்த வேலையை விட்டிட்டு இங்கை என்ன செய்யிறாயெண்டு பேச்சு விழலாமென எதிர்பார்த்தேன். ஆனால் வந்தவர்  M.S.R ரை கட்டித் தழுவி அண்ணை எத்தினை வருசமாச்சு  என்றபடி  நலம் விசாரித்து விட்டு என்னை பார்த்தவர்  சிரித்தபடி டேய் உனக்கும் இவங்களை தெரியுமா ஆச்சரியமாக  கேட்டவர் முழு இயக்கத்தையும்  இவர்தான் வளக்கிறார் போலை   என்று விட்டு. என்ன றூபியக்கா சாப்பாடு றெடிபோலை நல்ல நேரத்தக்குத் தான் வந்திருக்கிறன் என்றபடி குசினிக்குள் புகுந்து விட்டிருந்தார். அவருடன் மெய் பாதுகாவலர்கள் ஆறுபேர் வந்திருந்தார்கள். அனைவரிற்கும் றூபியக்கா  அவித்த புட்டு போதாது என்பதால்  மதியம் மிச்சம் இருந்த சோற்றையும் புட்டுடன் சேர்த்து  பெரிய பாத்திரத்தில் போட்டு இருந்த கறிகளையும் ஊற்றி அவசரமாய் கலந்தவர். அதை கையில் உருட்டி பிரபாகரன் கையில் வைத்தவர் தம்பி மற்றவையையும் வரச்சொல்லுங்கோ என்றார்.


பெடியள் வாங்கோ அக்காவின்ரை கையாலை சாப்பிட குடுத்து வைக்கவேணும் என்று கூப்பிட்டார். ஆனால்  விறைத்தபடி நின்றிருந்த பாது காவலர்கள் வரத் தயங்கினார்கள். அண்ணையின்ரை வீட்டிலை எனக்கு பாது காப்பு தேவையில்லை வாங்கோடா என்று மீண்டும் கூப்பிட்டதும்தான் ஒவ்வொருத்தராய் வந்து கையை நீட்டி சாப்பிட்டு முடித்ததும் M.S.R அண்ணன் செம்பில் தண்ணி அள்ளி அவர்கள் கைகள் கழுவ தண்ணீரை ஊற்றினார்.சாப்பிட்டு முடிந்து புறப்படும்போது  அண்ணை  எந்த உதவி தேவையெண்டாலும் எங்களிட்டை கேளுங்கோ எண்டு சொல்மாட்டன் உங்கடை உதவிதான் எங்களுக்கு தொடந்தும் தேவை என்று M.S.R ரிடம் விடை பெற்ற பிரபாகரன் என்னை பார்த்து  டேய் இங்கையே படுத்து கிடக்காமல் அலுவல்களை கவனி என்றுவிட்டு போய் விட்டார்.அப்படி எந்தனை வருடங்கள் கடந்தாலும் தலைவர் பிரபாகரனால் மறக்கமுடியாத ஒரு மனிதராகவே M.S.R இருந்தார்.

இந்தியப் படையினரின் வருகை புலிகளோடு யுத்தம் தொடங்கியதும் பலாலியில் இருந்து புறப்பட்ட இந்தியப் படையினர் வடக்கு புன்னாலைக் கட்டுவன் சந்தியில் இருந்த அனைத்து வீடுகளையும் இடித்து தரை மட்டமாக்கினார்கள். சந்தியில் இருந்த சாமியார் வீடு . ஸ்பீக்கர் மேகனின் வீடு ராசாத்தியக்கா வீடு அவரது எரிபொருள் நிரப்பு நிலையம் என்பவற்றோடு M.S.R அவர்களின் வீடும் அவரது நடக்க முடியாத வயது முதிர்ந்த தந்தை குட்டியப்பாவோடு சேர்த்து இந்தியப்படைகளால் இடித்து  தரை மட்டமாக்கப் பட்டதோடு அவரது லொறிகளையும் கொளுத்தி விட்டிருந்தார்கள்.எப்பொழுதுமே கலகலப்பாக  இருக்கும் மனிதர் அன்றோடு இடிந்து போனார். கடைசியாய்  தப்பியிருந்த ஒரோயொரு லொறியை விற்று  எல்லாத் தொழில்களும் செய்து பார்த்தார். பின்னை காலங்களில் அவரது மூத்த மகனும் இயக்கத்தில் இணைந்து சண்டையொன்றில் தலையில் காயமடைந்து  மன நிலை பாதிப்படைந்தவனாகிவிட்டிருந்தான்.  நீண்ட காலங்களின் பின்னர் இரண்டாயிரமாம் ஆண்டளவில்  மீண்டும்  தமிழ்நாட்டில் அவரது தொடர்பு கிடைத்போது என்னாலான சிறு உதவியினை செய்திருந்தேன். அது அவரது மகனின் மருத்துவ செலவுகளிற்கே போதுமானதாக  இருந்திருக்கவில்லை. அவரும் மீண்டும் வன்னிக்கு போய்விட எங்கள் தொடர்பும் விடு பட்டு போய்விட்டது. இறுதியில் மிகவும் வறுமையான நிலையில் வவுனியா பூந்தோட்டப் பகுதியில் வசித்து வந்தவர் அண்மையில்  இறந்து போய் விட்டார் என்கிற  செய்திமட்டுமே எனக்கு கிடைத்தது.

முன்னை நாள் போராளிகளிற்கும்  இயக்க ஆதரவாளர்களிற்கும் புலிகள் அமைப்பு அவர்களது வாழ்வாதாரங்களிற்கு உதவிகளையும் பொருளாதார வசதிகளையும் செய்து கொடுத்த காலகட்டங்களில் கூட தனக்காக உதவியென்று இயக்கத்திடம் போய் நிற்காமல் இறுதிவரை அவர்களிற்காக உதவி  வெளியே தெரியாத வேராக  உதவி செய்தே மரணித்துபோய் விட்ட அந்த மனிதனை இந்த மாவீரர் நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலிக்கிறேன்.

கடைசி அடி

1:29 PM, Posted by sathiri, No Comment

Posted Image

“சூரிச்” புகையிரத நிலையத்தினுள் நுழைந்த  அமுதன்  அங்கிருந்த சிற்றுண்டி சாலையை நோக்கி நடந்தான்.  அங்கு இருந்த கதிரைகளில் பிஸ்கற்றை சாப்பிட்டபடி  விளையாடிக்கொண்டிருந்த   மாலதியும் தமிழினியும்  பல நாட்களிற்கு  பின்னர் அமுதனைக் கண்டதும், அப்பா என்றபடி ஓடிப்போனவர்களை  முழந்தாளிட்டு   இரண்டு கைகளாலும்  கட்டியணைத்து மாறி மாறி முத்தமிட்டவன் . தான் வாங்கி உடைந்து விடாமல் பத்திரமாக பாதுகாத்தபடி  கொண்டு வந்த  இரண்டு Kinder சொக்கிலேற்றுக்களை இருவரிடமும் கொடுத்து விட்டு  மேனகாவை பார்த்தான். தன்னை  பாரக்கிறான் என்பதை கவனித்த மேனகா  அவனை கவனிக்காதது போல் வாடிக்கையாளர் ஒருவரிற்கு  குளிர் பானங்களை  எடுத்து நீட்டிவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டிருந்தாள். அவசரமாக  சொக்கிளேற்றுக்களை உடைத்த இருவரும் அதற்குள் இருந்த  பொருத்தப்படாத விளையாட்டு சாமான்களை  எடுத்தார்கள்.  மாலதிக்கு ஒரு காரும்  தமிழினிக்கு ஒரு பொம்மையும் கிடைத்திருந்தது. இருவரும் அதனை பொருத்தித் தருமாறு அமுதனிடம் கொடுத்ததும் அவன் ஒரு கதிரையில் அமர்ந்து பொருத்தத் தொடங்கினான்.

அவர்கள் இருபக்கமாக அமர்ந்து கொண்டார்கள்.


“அப்பா நீங்கள் ஏனப்பா இப்ப வீட்டை வாறேல்லை “இது தமிழினியின் கேள்வி. அவளின் தலையை தடவியபடியே  “அப்பாக்கு இப்ப தூரத்திலை  வேலை  அதுதான் வாறேல்லை  ஆனால்  நேரம் கிடைக்கேக்குள்ளை நான் அடிக்கடி உங்களை வந்து பாப்பன் . நீங்கள்  அச்சா பிள்ளையள் தானே ,குளப்படி செய்யாமல்  அம்மா சொல்லுறதை கேட்டு நல்லபடியா படிக்கவேணும். அப்பா கெதியிலை திரும்பவும் விட்டு வந்துடுவனாம்.சரியா? “என்றதற்கு ஓமென்று தமிழினி  தலையாட்டினாலும், சமாதானமடையாதவளாய்  “அப்பா நீங்களெண்டால்  பள்ளிக்கூடம் முடிஞ்சதும் காரிலை வந்து  வீட்டை கூட்டிக்கொண்டு போயிடுவிங்கள்.  ஆனா இப்ப  நாங்கள் அம்மா வரும்வரைக்கும் இங்கை இருக்கவேண்டியிருக்கு எனக்குப் பிடிக்கேல்லை “முகத்தை சுழித்தாள். “எனக்கும் தான் “என்றாள் மாலதி. ஆனால் மாலதி அவனிடம் அதிகம் கேள்விகள் எதனையும் கேட்கவில்லை அவள் கொஞ்சம் பெரியவள் என்கிற படியால்   தனது தாய்க்கும்  தந்தைக்குமிடையில் ஏதோ பிரச்சனை  அதனாலதான்  தந்தை வீட்டிற்கு வருவதில்லை என்பது புரிந்திருந்தது. தமிழினிக்கு  இப்பொழுதுதான்  நான்கு வயது அவள்தான்  இருவரிடமும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள்.

விளையாட்டு பொருள்களை பொருத்திக் கொடுத்தவன் ” அப்பாக்கு வேலைக்கு நேரமாகிது போகப்போறன்  அப்பாக்கு உம்மா தாங்கோ ” எண்டதும் இருவரும் இரண்டு பக்க கன்னத்திலும் ஒரே நேரத்தில் முத்தத்தை பதிக்க அமுதனின் கண்கள் கலங்கி விட்டிருந்தது. “இனி எப்ப வருவிங்களப்பா” என்கிற தமிழினியின் அடுத்த கேள்வி. “அப்பா கெதியிலை திரும்ப வீட்டை வந்திடுவன் குளப்படி செய்யக் கூடாது ” என்று விட்டு புறப்பட தயாரானவனிடம்   தமிழினி “அப்பா  எனக்கு  காரோடுற பார்பி பொம்மை  வேணும்” என்றாள். மேனகாவை பார்த்தான் அவள் கவனிக்காதது போலவே நின்றிருந்தாள். அவளிடம் போய் நாளைக்கு வழக்கு முடிவு தீர்ப்பு சொல்கிற நாள்.  எப்பிடியும் எனக்கு சார்பாத்தான் தீர்ப்பு வரும் அதுக்கு பிறகு எங்களுக்குள்ளை  உள்ள பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடும்  என்று சொல்லி விடைபெற மனம் தவித்தது.  ஆனால் தான் வந்து நிற்கிறது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நிக்கிறாள் கல்நெஞ்சக் காரி , கிட்ட கதைக்கபோக  ஏதாவது சத்தம் போட்டு விட்டாளெண்டால்  ரெயில்வே ஸ்ரேசனிலை மரியாதை போயிடும், எதுக்கு வம்பு என்று நினைத்தவன் பிள்ளைகளை இன்னொரு தடைவை முத்தமிட்டு விட்டு நடக்கத் தொடங்கியவன் இடையில் நின்று பிள்ளைகளை ஒரு தடைவை திரும்பிப் பார்த்தவன் என்ரை பிள்ளையள் இப்பிடி பிச்சையெடுக்கிற பிள்ளையள் மாதிரி இரயில் நிலையத்திலை குந்தியிருக்கிதுகள். மனிசி திரும்பியும்  பாக்கிறாள் இல்லை . ஏன் இந்த நிலைமை? நான் யாருக்கு என்ன  பாவம் செய்தனான் ?ஏன்?? ஏன்?? போய்க்கொண்டிருந்தான்………………………….


போய்க்கொண்டிருந்த அமுதனையே  மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள் மேனகா. பாவம் மனுசன் மெலிஞ்சு போச்சுது கனக்க தண்ணியடிக்கிறார் போலை. காரிலையே திரிஞ்ச மனுசன் எந்த பஸ் எங்கை போகுதெண்டே தெரியாதவர் காரையும் வித்துப்போட்டு பஸ்சிலை ஏறி இறங்கி என்ன கஸ்ர படுறாரோ.எண்டாலும் என்னட்டை வந்து ஒரு வசனம் கதைக்காமல் போறார் போகட்டும். நாளைக்கு வழக்கு முடிவு தெரிஞ்சிடும். கடவுளே  நல்ல முடிவா வரவேணும் என மனதிற்குள் வேண்டியவள். எவ்வளவு   மகிழ்ச்சியா இருந்த  எங்களுக்கு இவ்வளவு பிரச்சனை ஏன்??………………………
௦௦௦

/நித்திரையா தமிழா நீயும் எழுந்து பாரடா…/
பாடல் சி டியில் ஓடிக்கொண்டிருக்க  அதையே முணு முணுத்தபடி பாடசாலையால் கூட்டி வந்த பிள்ளைகளிற்கு  உணவை தயாரித்துக்கொண்டிருந்தான் அமுதன்.வீட்டு அழைப்பு மணி சத்தம்.திறந்து பார்த்தான்  அப்பாத்துரையும் பக்கத்தில் இன்னொரு புதியவர் அதுவரை அவன் பார்த்தேயில்லை. வரவேற்றவன் ஒரு நிமிசம் பிள்ளையளிற்கு சாப்பாடு குடுத்திட்டு வாறன் என்றவன் அவர்களிற்கு உணவை கொடுத்து விட்டு வந்து அமர்ந்தான். அப்பாத்துரையிடம்  “சொல்லுங்கோ என்ன புதினங்கள். கிளிநொச்சியையும் விட்டாச்சு எண்டு செய்தியள் சொல்லுது  எவ்வளவு கஸ்ரப் பட்டு கசை கொட்டி கட்டியெழுப்பின இடம் மனசுக்கு கஸ்ரமாயிருக்கு ஏன் அதை விட்டவை” என்று விட்டு இருவரையும் மாறி மாறி பார்த்தான்.


“இடங்களை விடுறதும் பிறகு பிடிக்கிறதும் இது முதல் தரம் இல்லைத்தானே  இதுவும் தந்திரோபாயமான பின் வாங்கல்தான்.  இந்த தடைவை கொஞ்சம் கூடுதலாய் பின்வாங்கினம் ஏனெண்டால் இழப்புகளை குறைச்சு  பலத்தை  தக்க வைக்கவேணும்.தலைவர் பெரிய திட்டம் ஒண்டு வைச்சிருக்கிறார் அதுதான் கடைசி அடி.  அதுக்கு இந்த தடைவை பெரிய தொகை  ஒண்டு உடனடியா அனுப்ப சொல்லி கேட்டிருக்கினம். அது மட்டுமில்லை  இதுதான் நாங்கள் சேக்கிற கடைசி நிதி அதாலை உங்களிட்டை இருந்து பெரிய பங்களிப்பை  எதிர் பாக்கிறம். அதுக்காவவே இவரை நாட்டிலையிருந்து  நேரடியா தலைவர் அனுப்பியிருக்கிறார். இவரின்ரை பெயர் விடுதலை ” என்று வலக்கை விரல்களை குவித்து  விளக்கத்தை சொல்லி முடித்தான் அப்பாத்துரை.
“பெரிய தொகையெண்டால் எவ்வளவு ” புருவத்தை உயர்த்தினான் அமுதன்.
“குறைஞ்சது பத்தாயிரம் பிறாங்காவது எதிர் பாக்கிறம்”.

பத்தாயிரமா?..வாயை பிளந்தவன்.இரண்டு வருசத்தக்கு முதல் நீங்கள் கடனடிப்படையிலை வாங்கின  நாலாயிரமே திருப்பி தரேல்லை ஆனாலும் நான் அதை கடனா நினைக்காமல் பங்களிப்பா தான் தந்தனான்.  மாத காசு வேறை தாறனான் ஆனால் பத்தாயிரம் கொஞ்சம் கஸ்ரம்.
அமுதன் நீங்கள் காசு தரத் தேவையில்லை கடன் மட்டும் எடுத்துத் தந்தால் போதும்  நாங்கள்  மாதா மாதம் காசை கட்டுவம். அவ்வளவுதான்.
என்ரை பாங்கிலை கடன் எடுக்கேலாது ஏற்கனவே வீட்டுக்கடன் ,கார் கடன் எல்லாம் எடுத்திட்டன்.அதுவும் பத்தாயிரம் கஸ்ரம்.தலையை சொறிந்தான் அமுதன்.

Posted Image

நீங்கள் ஒண்டும் கஸ்ரப் படவே தேவையில்லை  இதிலை கையெழுத்து மட்டும் போட்டால் போதும் உங்கடை விசா போட்டோ கொப்பி ஒண்டு அவ்வளவுதான் என்றபடி சில படிவங்களை  பையிலிருந்து வெளியே எடுத்தான் அப்பாத்துரை. ஆனாலும் அமுதனிற்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. இல்லை வந்து என்று இழுத்தான். அதை கவனித்த அப்பாத்துரை  என்ன யோசிக்கிறீங்கள்  நீங்கள் ஒரு மாவீரரின்ரை  அண்ணன். அது மட்டுமில்லை  எங்கடை பொறுப்பாளர் கஸ்ரோ அண்ணையே  தன்ரை குரலிலை பதிஞ்சு ஒரு சி.டி அனுப்பியிருக்கிறார் கேட்டுப்பாருங்கோ என்றதும் பக்கத்தில் இருந்த  விடுதலை  ஒரு சிடியை எடுத்து நீட்டினான். பாடலை நிறுத்திய அமுதன் அந்த சிடியை  ஓடவிட்டான்.  அதற்கு முன்னர் அவன் கஸ்ரோவின் குரலை கேட்டதே கிடையாது ஆனாலும்  அது கஸ்ரோதான் என நம்பினான். சுமார் ஏழு நிமிடங்கள்  ஓடிய சிடியை கேட்டவன்  சரி எங்கை கையெழுத்து போடவேணும் என்றான்.
நீட்டிய பத்திரங்களில் கையெழுத்தை போட்டவன் தனது விசாவையும் ஒரு போட்டோ கொப்பி எடுத்து கொடுத்தான். எல்லாவற்றையும் பத்திரப் படுத்திய அப்பாத்துரை இந்தாங்கோ புதிசா ஒரு சி.டி வந்திருக்கு ஏழு பிறாங் . எந்த பிரசுரமோ  சி.டிக்களோ  கலண்டர்களோ அமுதன்  தவற விடுவதில்லை. சி.டி யை வாங்கியவன் பத்து பிறாங்கை நீட்டி விட்டு  வைச்சிருங்கோ என்றான். அப்பொழுது வேலையால் வந்து நுழைந்த மேனகா இருவரிற்கும் வணக்கம் சொல்லிவிட்டு  அமுதனிடம் வந்தவைக்கு ஏதாவது குடிக்க குடுத்தனிங்களோ என்றதும் தான்  அமுதனிற்கு அந்த நினைவே வந்தது. இல்லையப்பா இனித்தான் .. அதற்குள் சமையலறைக்குள்  போனவள் எனக்கு உங்களை பற்றி தெரியும்தானே ஊர் கதை  எண்டால் உலகத்தையே மறந்திடுவீங்கள் என்றபடி தேனீரை தயாரிக்க தொடங்கி விட்டிருந்தாள்.அமுதனோ அதற்கிடையில் மேனகாவிற்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று அப்பாத்துரைக்கு  சைகை காட்டி விட்டிருந்தான். அவர்கள் விடை பெற்று போனதும்  அமுதனும் வேலைக்கு புறப்பட்டவன் புதிதாய் வாங்கிய  சி.டி யின் பொலித்தீன் உறையை பல்லால் கடித்து பிரித்து எடுத்து காரில் ஓடவிட்டு காரை இயக்கினான். “இதுதாண்டா கடைசி அடி “செல்லப்பா  பாடிக்கொண்டிருந்தார்…………


  00000
வேலையால் வந்து  தபால் பெட்டியை  திறந்து கடிதங்களை  எடுத்த அமுதன் முதலில் வங்கி கடிதத்தை பிரித்தவன் திடுக்கிட்டவனாய்  வந்திருந்த தொகையை  திரும்ப  திரும்ப  பார்தான் .கடைசியில் ஒண்டு ,பத்து, நூறு ,ஆயிரம்.,பத்தாயிரம், இலச்சம் எண்டு . கை விரல்களினாலும் எண்ணிப் பார்த்தான்  ஆறாவது விரலில் வந்து நின்றது. அவசரமாய் கைத்தொலைபேசியை எடுத்து அப்பாத்துரையின் இலக்கங்களை  அழுத்தியவன், “அப்பாத்துரை பாங்கிலை இருந்து கடிதம் வந்திருக்கு  ஆனால் நீங்கள் பத்தாயிரம் தானே கேட்டனீங்கள்  ஒரு லச்சம் வந்திருக்கு இப்ப என்ன செய்யிறது”.  மறுமுனையில்” ஓ அப்பிடியா”  என கேட்டவன். “தலைவர் கேட்ட தொகையை  குடுக்கிறதுக்காக  சில பேரின்ரை பெயரிலை கூடுதலா எடுத்தனாங்கள் அதிலை உங்கடை பேரும் வந்திட்டுது போலை…….. ம்.. ஒரு பிரச்சனையும் இல்லை நான் தாற எக்கவுண்டுக்கு மாத்தி விடுங்கோ ” என்றான் சாதாரணமாக. “இல்லை என்னட்டை ஒரு சொல்லு சொல்லியிருக்கலாமல்லோ நம்பி கையெழுத்து போட்டால் இப்பிடியா செய்யிறது ” கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டான்.

“அமுதன் காசு எங்களிட்டையா வந்திருக்கு உங்களிட்டை தானே வந்திருக்கு ,ஏன் ரென்சன் ஆகிறீங்கள். உங்களுக்கே தெரியும் போராட்டத்துக்கு நிதி உதவி செய்யிறதிலை இண்டு வரைக்கும் சுவிஸ்தான் முதலாவதா நிக்கிது. சின்ன நாடு  நாங்கள் கொஞ்சப்பேர்  ஆனால் கூடுதலாய் குடுக்கிறம் . தலைவரே அதை தன்ரை வாயாலை  புகழ்ந்து சொல்லியிருக்கிறார். அவசரம் எண்ட படியாலை எங்களாலை ஒவ்வொருத்தராய் தொடர்பு கொண்டு விபரம் சொல்ல முடியேல்லை கடனை நாங்கள் தானே கட்டப் போறம் பிறகெதுக்கு பயப்பிடுறீங்கள்”. ஆனாலும் சமாதானமடையாத அமுதன் “அதில்லை வந்து”….. என்று தொடங்கவும் குறுக்கிட்ட அப்பாத்துரை  , “அமுதன் அவனவன் நாட்டுக்காக உயிரையே  குடுக்கிறாங்கள் நீங்கள் காசை கடனெடுத்து குடுக்க யோசிக்கிறீங்கள். நீங்கள் யோசிக்கிறதை பாத்தால் நாட்டுக்காக போராடுற போராளியள் மட்டுமில்லை எங்களுக்காக உயிரை குடுத்த மாவீரர்களையும் அவமதிக்கிறமாதிரிக் கிடக்கு “, பதறிப்போன  அமுதன் “ஜயையோ அப்பிடியெல்லாம் இல்லை  என்ரை தங்கச்சியும் மாவீரர் தான் எனக்கும் அந்த வலி தெரியும் .எக்கவுண்ட் நம்பரை எஸ்.எம். எஸ் பண்ணி விடுங்கோ  இப்பவே போய் காசை மாத்தி விடுறன்” என்று விட்டு தொலைபேசியை நிறுத்தினான்.  ஒரு நிமிடத்திலேயே  எஸ்.எம். எஸ் . வந்திருந்தது.
00000
Posted Image

ஒரு மாதம் ஓடிவிட்ட நிலையில் செய்திகள் எல்லாமே குழப்பமானதாகவே வந்து கொண்டிருந்தது அமுதனிற்கும் ஒண்டும் புரியவில்லை. வங்கியில் அந்த மாதத்திற்கான கடன் பணமும் கழிந்து விட்டிருந்தது. ஆனால் அப்பாத்துரையிடமிருந்து  எந்த பதிலும் வரவில்லை.  போனடித்து  காசு என்று கேட்கவும் அமுதனிற்கு சங்கடமக இருந்தது. அப்பாத்துரையிடம் காசு  எண்டு கேக்காமல் நிலவரத்தை கேக்கிற மாதிரி அடிச்சு பாப்பம் என நினைத்து போனடித்து  “என்ன  புதினங்கள் சாலை கடற்கரையை  பிடிச்சிட்டதாவும்  புலிகளையும் தலைவரையும் முற்றுகைக்குள்ளை கொண்டு வந்திட்டதா  செய்தியள்ளை சொல்லுறாங்கள்.உண்மையோ “என்றதும், சிரித்தபடியே   அப்பாத்துரை தொடங்கினான்  “இலங்கை அரசுதான் புலிகள் முற்றுகைக்குள்ளை  அகப்பட்டிட்டினம்  எண்டு சொல்லுது  ஆனால் உண்மையிலை இலங்கை இராணுவம்தான் முற்றுகைக்குள்ளை  சிக்கு பட்டு நிக்கிது.வன்னிக்குள்ளை முழு ஆமியும் போய் நிக்கிறாங்கள் ஆனால் திருகோணமலை மட்டக்கிளப்பிலை உள்ள எங்கடை படையணியள்  அவங்களை சுத்தி வளைச்சு நிக்கிது.  வடிவா பாத்தீங்கள் எண்டால்  நாங்கள் தேள் வடிவத்திலை ஒரு தாக்குதலை நடத்தப் போறம்.தேள் எண்டால் தெரியும்தானே ?  ” தட்டுத் தடுமாறிய  அமுதன் “ஓம் தேள் எண்டால் நட்டுவாக்காலிதானே” என்றான். “ஓம் அதுதான் அது முன்னங்காலாலை கடிக்கிற நேரம் பின் வாலாலையும் குத்தும் வாலாலை குத்துறதுதான் மோசமாயிருக்கும்.  அதைப்பற்றி ஒரு பெரிய இராணுவ ஆய்வாளரே எழுதியிருக்கிறார் படிச்சனீங்களோ?” . “இல்லை படிக்கேல்லை” . “வெப்சைற்றுகளிலை இருக்கு படிச்சு பாருங்கோ அதைவிட  நாங்கள் வாங்கின  பிளேனுகளின்ரை  படங்கள் உங்களுக்கு மெயில் போட்டு விடுறன் பாருங்கோ பிறகு சந்திப்பம் “என்று அப்பாத்துரை இணைப்பை துண்டித்தான்.

அமுதனுக்கு  இன்னும் குழப்பமாயிருந்தது  அவங்கள் இவங்களை சுத்தி வளைச்சிருக்கிறம் எண்டுறாங்கள். இவங்கள் அவங்களை சுத்தி வளைச்சிருக்கிறம் எண்டுறாங்கள். இவன் வேறை தேள் மாதிரி வாலாலை குத்தப் போறம் எண்டுறான். புலியள்  புலிமாதிரி பாயாமல் எதுக்கு தேள் மாதிரி வாலாலை குத்துவான் என்றபடியே  கணணியை  போட்டு மின்னஞ்சலை திறந்தான். ஈழம் எயார் போஸ்(Eelam Air Force)என்று எழுதிய நவீன குண்டு வீச்சு விமானங்களின் படங்கள் வந்திருந்தது . அவனிற்கு  தெரிந்ததெல்லாம் சியாமா செட்டியும். அவ்ரோவும் புக்காராவும் தான்  ஆனால்  இதுகள் ஒண்டு கிபீர் மாதிரி இருந்தது மற்றது மிராச்சா இருக்குமோ??  யோசித்தவன் எதுவாயிருந்தாலும்  படங்களை பார்க்க  அவனிற்கு புல்லரித்தது.  இவ்வளவு வாங்கியிருக்கிறாங்கள்  சரி ஒரு மாத காசு தானே போனால் போகட்டும் என்று நினைத்தவன். வேலையிடத்திலை எல்லாருக்கும் காட்டவேணும் என்று நினைத்தபடி  கிறாபிக் குண்டு வீச்சு விமானங்களை  பிறின்ற் எடுத்துக்கொண்டான்.

அடுத்த மாதக் காசும் கழிந்து விட்டிருந்தது. மகிந்தா நிலத்தை முத்தமிட்டு  பயங்கரவாதத்தை அழித்து விட்டேன் என்று அறிவித்த அடுத்தடுத்த நாட்களில் அனைத்து செய்திகளிலும் புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டு விட்டதாக தலையின் வலப்பக்கம் காயமடைந்த படத்தினை திரும் திரும்ப போட்டுக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அமுதனிற்கு உடல் விறைத்து பைத்தியம் பிடித்ததை போல ஒரு உணர்வு பி.பி.சி…தொடங்கி  சி.என்.என். என்று உள்ளுர் செய்தி அனைத்தையும் மாறி மாறி பார்த்தவன், அப்பாத்துரைக்கு  போனடித்து விடயத்தை கேட்டான். பெரும் சத்தமாய் சிரித்த அப்பாத்துரை “பாத்தீங்களோ நீங்களும் ஏமாந்திட்டியள்.

இதுதான் எதிரிக்கு தேவை அவன் எங்களையும் சர்வதேசத்தையும் குழப்பிறதுக்கு செத்துப்போன ஒருத்தரின்ரை  தலையிலை  தலைவரின்ரை முகம் மாதிரி பிளாஸ்ரிக்கிலை செய்து வைச்சு படமெடுத்து போட்டிருக்கிறாங்கள்.ஆனால் தலைவர் ஆறாயிரம் போரோடை முல்லைத்தீவை விட்டு தப்பி காட்டுக்குள்ளை போட்டார்” என்றான் .உண்மையாவே என்று கேட்ட அமுதனிற்கு  தலைவர்  தப்பிட்டார் என்ற செய்தி கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது ,ஆனால் “வாங்கின பிளேனுகள் எல்லாம் எங்கை ?  அதுகளை ஏன் பாவிக்கேல்லை “என்று கேட்டான். “அதெல்லாம் பத்திரமா எரித்தியாவிலை நிக்கிது. தலைவர் அடுத்த சண்டையை தொடங்கினதும் இவங்கள் எரித்தியாவிலை இருந்து போய் அடிச்சிட்டு வருவாங்கள்  சரி நான் கொஞ்சம் அலுவலாய் நிக்கிறன் பிறகு கதைக்கிறன் “என்று தொடர்பை துண்டித்தான் அப்பாத்துரை. இந்த மாதமும் அமுதன் காசைப் பற்றி கதைக்கவில்லை.
மாதம் மூன்றை  தாண்டி அந்த மாத காசும்  கழிந்து விட்டிருந்தது அமுதனின் நிலைமை  கவலைக்கிடமாகி விட்டிருந்தது அப்பாத்துரையை தொலைபேசியில் பிடிக்க முடியவில்லை. மேனகா அன்று வழைமை போல் தனது காரிற்கு பெற்றோலை நிரப்பிவிட்டு  எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடன்  அட்டையை நீட்டிளாள்.அது வேலை செய்யவில்லை  அவசரத்திற்கு என வைத்திருக்கும் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு, வீட்டிற்கு போகிற வழியில்தான் வங்கி ,போய் கேட்கலாமென  நினைத்து வங்கிக்கு போயிருந்தாள்.

வீட்டின்  வரவு செலகு கணக்குகள் அனைத்தையும்  அமுதனே கவனிப்பதால் மேனகா அவற்றை கவனிப்து கிடையாது.  வங்கிக்கு போய் நிலைமையை கேட்டதும் தான்  அவளிற்கு புரிந்தது. அந்த மாத கடன் காசு கழியாமல் கடன்  அட்டைகள் முடக்கப்பட்டிருந்ததோடு அனைத்து பண கொடுப்பனவுகள் வீட்டுக் கடன் உட்பட வங்கியால் திருப்பிவிடப் பட்டிருந்தது. இவ்வளவு நிலைமை மோசமாகியும் தனக்கு எதுவும் தெரியாமல் மறைத்த அமுதன்  மீது ஆத்திரமாய் வந்தது. வீட்டிற்கு போனவள்  நேரடியாக அமுதனிடம் போய் பாங்கிற்கு என்ன நடந்தது என்றதும் தான்  மேனகாவிற்கு எல்லாம் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தவன் தயக்கத்தோடு  நடந்து முடிந்தது அனைத்தையும் சொல்லி முடித்தான். மேனகாவிற்கு கோபம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

௦௦௦௦௦௦

அன்றாடக்  கடனை ஈடு செய்வதற்காக மேனகாவின் நகைகள் எல்லாம் ஒவ்வொன்றாக விலைபோய் தாலியும் இறுதியாக அடைவு வைத்தாகிவிட்டது.அமுதனிற்கும்  மேனகாவிற்கும்  சின்ன சின்ன பேச்சுக்கள் கூட பெரும் சண்டையாக மாறத்தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நாளென்றின் இரவில் பிள்ளைகள் இருவரும் நித்திரையாகிப் போன பின்னர்  வேலையால் வந்த  அமுதனிடம் ” அப்பாத்துரை  தன்ரை மச்சானின்ரை பேரிலை ஒரு றெஸ்ரோரண் வாங்கிட்டானாம் தெரியுமோ?” ம்…என்றான்.

“அவனிட்டை காசு கேட்டினீங்களோ? ” அதற்கும்.  ம்…தான் பதிலாக வந்தது.மேனகா  தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்  அமுதனிடமிருந்து  ம்…மட்டுமே பதிலாக வந்துகொண்டிருக்க வெறுப்பின்  உச்சத்தை மேனகாவும்  கோபத்தின் உச்சத்தை அமுதனும் தொட்டுக்கொண்டிருந்த  அந்த  தருணங்களில்  ” சே நீங்களெல்லாம்  ஒரு மனுசன் ஏதாவது வாயை துறந்து கதையுங்கோ உங்களை ஒரு ஆம்பிளை  எண்டவே வெக்கமாயிருக்கு ” எண்டவும்  மேனகா என கத்தியபடி அமுதனின் கை அவள் கன்னத்தில் இறங்கியது மட்டுமல்ல எட்டி உதைத்தும் விட்டான்.
சத்தம் கேட்டு பிள்ளைகள் எழுந்து வந்து அழத் தொடங்கத்தான். தன்னிலைக்கு திரும்பிய அமுதனிற்கு  ஆத்திரத்தில் எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டோம் என்று புரிந்தது. பிள்ளைகளை சமாதானப்படுத்தி அவர்களை படுக்கைக்கு கொண்டு போய் விட்டான் . மேனகா அழுதபடியே படுக்கையறைக்குள் போய் கதவை பூட்டிக்கொண்டு விட்டாள்.கதவருகே வந்து நின்று மன்னிப்பு கேட்டுப்பார்த்தான் கதவு திறக்கவேயில்லை. அவள் ஏதாவது செய்து விடுவாளோ என்றும் அமுதனிற்கு பயமாக இருந்தது.போலிசிற்கு போனடிக்கலாமா என்றும் யோசித்தான். வேண்டாம் அவங்கள் வந்தால் சும்மா உள்ள பிரச்சனையையும் பெரிசாக்கிபோடுவாங்கள். எதற்கும் விடியட்டும் என நினைத்தவன் விஸ்கியை திறந்து கிளாசில் ஊற்றி குடித்தபடி படுக்கை அறை கதவையே பார்த்தபடி சத்தம் ஏதாவது கேட்கிறதா என  கவனித்தபடி இருந்தான்.


காலை மேனகா பிள்ளைகளை  பாடசாலைக்கு தயார்பண்ணிக்கொண்டிருக்கும் சத்தத்தத்தில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான் ,  சே கலியாணம் கட்டி இத்தினை வருசத்திலை ஒரு நாள்  இப்பிடி மோசமாய் நான் நடந்ததேயில்லை.இண்டைக்கு  அவளுக்கு பிடிச்ச சொக்கிலேற் கேக் வாங்கி கொண்டு போய் குடுத்து  காலிலை  விழுந்தாவது மன்னிப்பு கேட்கவேணும்.என்று நினைத்தவன். மாலை  பாடசாலையால் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கேக்கோடு  போயிருந்தான். வேலையால் மேனகா வந்ததும் பிள்ளைகளை  அறைக்குள் அனுப்பிவிட்டு கேக் பெட்டியை கையில் எடுக்கும் போதே  அவள் “உங்களோடை கொஞ்சம் கதைக்கவேணும் கோபப் படாமல்  ஆறுதலா கேளுங்கோ “,அவள் மேசையில் அமர  எதிரே அவன். கேக் பெட்டியை  இருவரிற்கும் நடுவில் வைத்தவன் சரி சொல்லு என்றான். நான் இண்டைக்கு வேலைக்கு போகேல்லை  என்றபடி பையில் இருந்து சில  காகிதங்களை எடுத்தவள் நான் நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திட்டன்  நாங்கள் பேசாமல் டிவோஸ் எடுப்பம் இதை தவிர வேறை வழி இல்லை.

அதிர்ந்துபோனவன் என்ன கதை கதைக்கிறாய் பிள்ளையளையாவது கொஞ்சம் யோசிச்சியா?
பிள்ளையளை யோசிச்சு அதுகளின்ரை எதிர் காலத்தை நினைச்சுத்தான் இந்த முடிவே எடுத்தனான்.

என்ன சொல்லுறாய்.?

நாங்கள் கட்ட வேண்டிய காசுகளை கணக்கு பாத்தன் எங்கடை வருமானத்தை விட மூண்டு மடங்கு வருது. நாங்கள் இருபத்து நாலு மணித்தியாலமும் வேலை செய்தாலும்  காணாது. நகைகளும் வித்தாச்சு தெரிஞ்சாக்களிட்டை  கடனும் வாங்கியாச்சு இந்த மாதம் வீட்டு கடன் கட்ட முடியேல்லை  இப்பிடியே போனால் வீட்டை பிடுங்கிபோடுவாங்கள். பிறகு நாங்கள் பிள்ளையளோடை சேர்ந்து தற்கொலை செய்யவேணும் இல்லாட்டி சூறிச் ரெயில்வே ஸ்ரேசனிலை தான் போய் படுத்திருந்து பிச்சையெடுக்கவேணும். இந்த இரண்டும்தான் தெரிவு இதிலை எதை செய்யலாமெண்டு நீங்களே சொல்லுங்கோ.

பிள்ளையளோடை தற்கொலையா என்ன விசர் கதை கதைக்கிறாய் .டிவோஸ் எடுத்தால் எல்லாம் சரியாயிடுமா என்றவன் விவாதங்கள் தொடர்ந்தது .சண்டை பிடித்தபடி சேர்ந்து  இருப்பதை விட பிரிந்து போவது  நல்லதாகத்தான்  தெரிந்தது.கடைசியில் மேனகா சொன்னவைகள் அவனிற்கு சரியாகப்படவே மன வேதனையுடன்  விவாகரத்து எடுக்க சம்மதித்தான்.அவன் ஆசையாய் வாங்கி வந்த கேக் குப்பைக்  கூடையை நிரப்பியிருந்தது.

௦௦௦
அப்பாத்துரையோ சிறிய தொகை  கொடுத்தவர்களிற்கு  தலைவர் கெதியிலை வருவார் வந்ததும்  கணக்கு தரலாமென்று பதில் சொல்லிவிட்டிருந்தான். பெருமளவில் கடனெடுத்து கொடுத்தவர்களிற்கு ஒரு புதிய திட்டத்தை அறிவித்தான். அதுதான் கொத்து றொட்டித் திட்டம். சூரிச்சில் உள்ள அனைத்து தமிழர்களும்  தினமும் தனது கடையில் கொத்து றொட்டி வாங்கவேண்டும். அதன் வருமானத்தை சேர்த்து மொத்தமாக்கி ஒவ்வொருத்தரின் கடனாக அடைக்கலாம். வேறு வழியின்றி கடன் கொடுத்தவர்களே சம்மதித்தும் இருந்தார்கள்.உணவு விடுதியில் வேலை செய்த அமுதனும்  பசிக்காவிட்டாலும் கொத்து றொட்டி வாங்க தொடங்கியிருந்தான். வருடம் ஒன்றை தாண்டி விட்டதொரு நாளில் தற்செயலாக அவனைப் போலவே  பெருந்தொகை கடன் வாங்கி கொடுத்திருந்த  மோகனை சந்தித்த போது, அமுதன்  உங்கடை கடனை  ஒரு மாதிரி கட்டிட்டாங்களாம் என்று மோகன் சொன்னபோதுதான்  தாங்கள் எல்லாருமே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுப் படுவதை உணர்ந்தார்கள். அவர்களைப் போலவே பெருந்தொகை கடன் எடுத்துக்கொடுத்த அனைவரையும் தொடர்பு கொண்டார்கள்.  கடையிசில்  ஆறு பேர்  சேர்ந்து  அப்பாத்துரைக்கு எதிராக வழக்கு போடுவது என முடிவு செய்து வழக்கும்  தாக்கல் செய்திருந்தார்கள்.

அன்று வழக்கின் இறுதிநாள்  ,வழக்கு போட்ட ஆறு பேரும் வந்திருந்தார்கள் . வழக்கில்  நல்லபடியாய் தீர்ப்பு  வந்தால் சூரிச் சிவன்கோவிலுக்கு அடுத்த திருவிழாவிற்கு  காவடி எடுப்பதாக  நேர்த்தி வைத்தபடி  அமுதனும் போயிருந்தான். ஆனால்  அவர்களில் ரமேஸ் மட்டும் நீதிமன்றத்திற்குள்ளே  வராமல் வெளியேயே  நின்றிருந்தான். அவனது நடவடிக்கைகள் வித்தியாசமாய் இருந்ததை கவனித்த அமுதன் அவனருகே போய்  நேரமாகிது உள்ளை வாடா என்று அழைத்தான்.நான் வரேல்லை  நீ உள்ளைபோ என்றான் . றமேஸ் நிறைய குடித்திருந்தான் என்றது அமுதனிற்கு புரிந்தது .என்னடா செய்யப் போறாய் என்றதற்கு  தனது ஜக்கெற்ரை  விலக்கி இடுப்பில் செருகியிருந்த கத்தியை காட்டியவன்  இண்டைக்கு அப்பாத்துரையை போடப்போறன்.

டேய்  விளையாடாதை  தீர்ப்பு எங்களுக்கு சாதகமாய்தான் வரும். அவசரப் படாதை…

சும்மா போங்கோ அவனிட்டை காசு இருக்கு கிரிமினல் லோயரை வைச்சு வாதாடிட்டான் ,எங்கடை அரசாங்க லோயர் என்னத்தை கிழிச்சவன். அது மட்டுமில்லை  காசையும் குடுத்திட்டு  கையெழுத்து  வைச்ச எங்களுக்கு விசரோ இல்லையோ எண்டு டெக்ரர் சேட்டிபிக்கற் வேறை எடுக்க வைச்சு  கொத்து றொட்டி வேறை  தீத்திட்டாங்கள்.

எனக்கு நம்பிக்கை இருக்கடா நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யேல்லை யாரையும் ஏமாத்தேல்லை  கடவுள் ஒண்டு ஒருத்தர் இருக்கிறார்  எல்லாம் நல்லபடி நடக்கும்.
சும்மா போங்கோ  நீங்களும் உங்கடை கடவுளும் அவரே காசு உள்ளவன்  ஏமாத்திறவன் பக்கம் தான் நிக்கிறார்.

டேய் உனக்கு இப்பதான் கலியாணமாகி  ஒரு பிள்ளை வேறை பிறந்திருக்கு  காசையும் குடுத்திட்டு  நீ ஜெயிலுக்கு போனால் உன்ரை குடும்பத்தை ஒருக்கா நினைச்சு பார்.

என்ரை குடும்பம்  நாசமா போனாலும் பரவாயில்லை பலபேரின்ரை குடும்பம் நிம்மதியா இருக்கும். காசை சுத்தினவங்களுக்கு லண்டனிலை குணத்துக்கும் பாரிசிலை  யோகனிற்கும் ஆசை தீர அடியாவது போட்டாங்கள் நாங்கள்தான் காசை குடுத்திட்டு வாயை பார்த்துக்கொண்டு நிக்கிறம்.

அதற்கு மேல்  அவனுடன் கதைத்து பிரயோசனம் இல்லையென நினைத்த அமுதன்  மற்றவர்களிடம் போய் நிலைமையை விளங்கப் படுத்தி  அவர்களை அழைத்து வந்ததும்  அவர்கள் ரமேசை அமத்தி பிடிக்க  அவன் செருகி வைத்திருந்த கத்தியை உருவி எடுத்தவன் அவனை விடவேண்டாம் என்றபடி  ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு குப்பை கூடையில் கத்தியை கொண்டுபோய்  எறிந்துவிட்டு வரும்போது  ,புதிய AUDI  கார் ஒன்றில் அப்பாத்துரை  நீதிமன்ற பகுதிக்குள் நுழைந்துகொண்டிருந்தான்.
நீதி மன்றத்திகுள் அனைவரும் எழுந்து அமர்ந்ததும்  நீதிபதி தீர்ப்பினை படிக்க ஆரமப்பித்தார். இதுவரை நடந்து முடிந்த விசாரனைகள் விவாதங்கள்  பரிசோதனைகளின் அடிப்படையில்  வழக்கை தொடர்ந்த ஆறு பேரும் கடன் பத்திரங்களில் அவர்களே  கையெழுத்திட்டுள்ளனர். அவை போலியானவை அல்ல என்பதை பரிசோதனைகள் நிருபிக்கின்றது.

அதே வேளை சம்பத்தப் பட்டவர்கள் மீது  நடாத்தப்பட்ட  உளவியல் பரிசோதனைகளில் அவர்கள் அனைவருமே  எவ்வித உளவியல்  தாக்கங்கள் பிரச்சனைகளுமற்றவர்கள் என்கிற அவர்களது மருத்துவ பரிசோதனை  உறுதி செய்திருப்பதால்  அவர்கள் அனைவருமே தங்கள்  சுய விருப்பின் பேரில் சரியான மனநிலையில் இருந்தே கையெழுத்தை இட்டிருக்கும் சாத்தியம் தெளிவாகின்றது. ஆகவே அவர்கள் பெற்றுக்கொண்ட கடன்களிற்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆகின்றார்கள். அடுத்ததாக அவர்களை  அப்பாத்துரை மோசடி செய்தார் என்பதற்கான சரியான வலுவான ஆதாரங்கள்  உறுதிப்படுத்தப்படவில்லை. அப்பாத்துரையின்  தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பணம் ஏதும் மாற்றம் செய்யப் பட்டிருக்கவில்லை. எனவே அப்பாத்துரை  இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ஆனால்  சுவிஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பான புலிகள் அமைப்பு கடந்த காலங்களில் நிதி மோசடிகளில் ஈடு பட்டது காவல்துறையாலும் நீதிமன்றங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைப் போல இந்த சம்பவத்திலும் நிதி மோசடிகள் நடந்திருக்கின்றதா என்பதனை  காவல்துறையினர் கண்டு ஆராயவேண்டும். மேலதிகமாக அப்பாத்துரை நிதிகளை பெறுவதற்காக   சம்பந்தப் பட்டவர்களை  மிரட்டியோ அல்லது அழுத்தங்களை பிரயோகித்திருந்தாலோ சரியான ஆதாரங்களுடன்  அவர்கள் மீண்டும்  காவல்துறையின் உதவியுடன் இந்த வழக்கை  மீளாய்விற்குட்படுத்தலாம்.  வழக்கு முடிந்தது  என்றுவிட்டு நீதிபதி எழுந்து போய் விட்டார்.

அப்பாத்துரை அவர்களை பார்த்து  நக்கல் சிரிப்பு ஒன்றை வீசி விட்டு காரில் ஏறி போய்விட்டான்.  அப்பவும் சொன்னான்  இந்த கோட்டு கேசிலை எனக்கு நம்பிக்கையிலையெண்டு கேட்டியா.  ஏதோ  தர்மம் நியாயம், கடவுள் எண்டாய் எங்கை எல்லாம் போனது. போடா நீயும் உன்ரை சாமியும் என்று  அமுதனை திட்டிவிட்டு ரமேஸ் போய்விட மற்றையவர்கள்  எதுவும் பேசாமல் அங்கிருந்து போய் விட்டார்கள். சோர்வோடு பஸ் நிலையத்தில் வந்து இருந்தவன்  சட்டைப் பையை தடவிப்பார்த்தான். வழக்கு நல்லபடியாய் முடிந்த பின்னர் தமிழினிக்கு  கார் ஓடுற பார்பி பொம்மை வாங்குவதற்காக  வைத்திருந்த பணத்தை எடுத்தபடி ஒரு கடைக்குள் நுழைந்தவன் ஒரு விஸ்கி போத்தலை வாங்கி விட்டு  ரமேசிடம் இருந்து பறித்த கத்தி  எறிந்த குப்பைக் கூடை பக்கம் போய் கத்தியை தேடியெடுத்து  இடுப்பில் செருகி விட்டு வந்த பஸ் ஒன்றில் ஏறிக்கொண்டான்.

௦௦௦
அப்பாத்துரையின்  கார்  அதன் நிறுத்துமிடத்தில் நுழைந்து   நிறுத்துமிட கதவு சாத்தப்படுவற்கு முன்னராக அவரசரமாக ஓடிப்போய் வாகனத் தரிப்பிடத்திற்குள் நுழைந்துகொண்டான். காரை விட்டு இறங்கிய  அப்பாத்துரை  அமுதனை பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தாலும்  தன்னை  சுதாகரித்துக்கொண்டு  .”என்ன அமுதன்  இந்த நேரத்திலை அதுவும் இஞ்சை என்று வில்லங்கத்திற்கு  ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கேட்டான். எதுவும்  போசாமல்  அப்பாத்துரையை நோக்கி முன்னேறிய அமுதன்  திடீரென அவனை நோக்கி பாய்ந்தவன் காரோடு அப்பாத்துரையை சாத்தி அழுத்திப் பிடித்தபடி இடுப்பில் செருகியிருந்த கத்தியை  உருவினான் . அப்பாத்துரை  பதறியவனாய்  அமுதன் சொல்லுறதைக்கேள்  சத்தியமா என்னட்டை ஒரு சதமும் இல்லை  எல்லாம் ஊருக்கு அனுப்பிட்டன்  என்னை  நம்பு,அமுதன்  அப்பாத்துரையின் அடிவயிற்றில்   கத்தியை செருகி இழுத்தான். அடி வயிற்றை  பொத்திய அப்பாத்துரை  என்னை ஒண்டும் செய்யாதை  உன்ரை காசு முழுக்க நான் திருப்பி தாறன் என்னை  விட்டிடு  என்றபடி அடிவயிற்றை பொத்தியிருந்த கைகளை எடுத்து கும்பிட்டான்  அவனது கைள் இரத்தத்தால் நனைந்து போயிருந்தது. ” அட ஒரு குத்திலையே ஊருக்கு  அனுப்பின காசு திரும்பி வந்திட்டுது” என்றபடி  அமுதன் கத்தியை அப்பாத்துரையின் வயிற்றிக்கும் மார்பிற்கும் இடையில் ஓங்கி இறக்கினான்.

என்னை விட்டுடடா  நான் பிள்ளை குட்டிக்காரன் கும்புடறனடா  அவனது நாக்கு குளறி  சத்தம் கம்மியது.. நானும் கூடத்தான் பிள்ளை குட்டிக்காரன்  உன்ரை மனிசி பிள்ளையள் கடைசி வரைக்கும் சந்தோசமா  வாழுறதுக்கு  எங்கடை காசு  உன்னட்டை இருக்கு ஆனால் எங்கடை பிள்ளை  குட்டியளை பற்றி நீ யோசிச்சியா என்று கத்தியபடி அப்பாத்துரையை கீழே விழுத்தியவன்  அவன் மீது செருகியிருந்த கத்தியை உருவிவிட்டு அவனது மார்பில் ஏறி அமர்ந்து ,கத்தியை இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்து தலைக்கு மேலாக தூக்கி ஓங்கி அவனது நெற்றியில் குத்தினான்.  டக் என்ற சத்தத்துடன் ஒரு அங்குலமளவு மட்டுமே நெற்றியில் கத்தி இறங்கும்போதே  அமுதனின் கைகள் வழுக்கி அவனது கையொன்று அறுக்கப்பட்டு இரத்தம் வழியத் தொடங்கியிருந்தது. ஆனால் அவனது மது வெறியும் கொலை வெறியும்  சேர்ந்திருந்தில் கை அறு பட்ட வலியை அவன் உணர்ந்திருக்கவில்லை. மெல்ல எழுந்தவன்  அப்பாத்துரையின் நெற்றியில் குத்திநின்ற கத்தியின் அடிப்பாகத்து பிடியில்  ” இது தாண்டா கடைசி அடி “என்றபடி தனது  வலது சப்பாத்து காலால் ஓங்கி அடித்தான்  சறக்  என்கிற சத்தத்தோடு அப்பாத்துரையின் மண்டையோடு உடைந்து  கத்தி மண்டைக்குள் இறங்கியது.

தனது கைத்தொலை பேசியை  எடுத்து காவல்துறையின் இலக்கங்களை அழுத்தினான். அவனிற்கு அருகாகா காவல்துறையின் வாகனங்களின் சைரன் ஒலிக்கத்தொடங்கியிருந்தது.
எமது கைகளின்  ஆயுதங்களை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள்.
௦௦௦
யாவும் கற்பனை  அல்ல.

பிற்குறிப்பு. கடைசி அடி சிறுகதை கடந்த மூன்று வாரங்களிற்கு முன்னரே எழுவரை சஞ்சிகைக்காக எழுதி அனுப்பி விட்டிருந்தேன். எனவே இதனை அண்மைய பாரிஸ் சம்பவத்துடன் போட்டு குளப்பி கொள்ளதோவையில்லை. ஆனாலும் கதையில் கூறப்பட்டுள்ளது போல் நடப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கும் இல்லை

அன்பு அம்மா.

11:10 AM, Posted by sathiri, 2 Comments


அன்பு அம்மா.

வீட்டு அழைப்பு மணிச் சத்தத்தை கேட்டு வாசல்  கதைவை திறந்த திறந்த நிவேதா வாசலில் நின்றிருந்த இருவரை பார்ததும்  நீங்கள் யார்  என்ன வேணும் என்றாள். இருவரில் ஒருவன் சிரித்தபடி நாங்கள் அன்பு அம்மாவை  பாக்கவேணும் அவாவை எனக்குத்தெரியும் அவாவோடை கொஞ்சம் கதைக்கவேணும்.அதுதான் வந்தனாங்கள் என்றான். இருவரையும் மேலும் கீழுமாக பார்த்த நிவேதா  இவங்கள் எதுக்கு  இங்கை வந்திருக்கிறாங்கள் என்று மனதில் நினைத்தபடியே சரி வாங்கோ என்றவள் அவர்களை இருக்கச: சொல்லிவிட்டு அம்மா உங்களை  ஆரோ தேடி வந்திருக்கினம்  வந்து பாருங்கோ  என்று தாயாரை அழைத்து விட்டு தனது அறைக்குள்  புகுந்து கொண்டாள். வரவேற்பறைக்கு வந்த அம்மா கண்ணாடியை சரிசெய்தபடி வந்தவர்களை பார்த்தவர் தம்பியயை யார்  என்றதும். அம்மா  என்னை ஞாபகம் இருக்கோ நான் தான் கீதன்  மல்லாவியிலையும்  பிறகு முள்ளியவளையிலையும் உங்கடை வீட்டை அன்புவோடை வந்திருக்கிறன். அன்புவின்ரை  சினேகிதன்  தெரியிதோ?  உற்று பார்த்த படியே  யோசித்த அம்மா  தெரியேல்லை பிள்ளை   அவனோடை எத்தினை  பேர் வந்தவங்கள் எனக்கு  எல்லாரையும் நினைவிலை இல்லை  என்ரை  மகனின்ரை சினேதம் எண்டுறீங்கள்  இருங்கோ என்ன குடிக்கிறீங்கள் என்றாள் கனிவுடன்.

நீங்கள் இஞ்சை  இருக்கிறீங்கள் எண்டு இப்பதான் கேள்விப் பட்டனான் அதுதான் உங்களை பாத்திட்டு  அதே நேரம்  மாவீரர் நாள் வருது தெரியும் தானே  இஞ்சை பக்கத்திலையும்  ஒரு மண்டபத்திலை செய்யிறம்  அதுக்கு கட்டாயம் நீ்ங்கள் வரவேணும்.  அதோடை நீங்கள்தான் குத்து விளக்கு ஏத்த வேணும் அம்மா என்றான். தம்பியவை  குறை நினைக்ககூடாத நான் அண்டைக்கு  விரதம் அதோடை மெளனவிரதமும் இருக்கிறனான்  ஒருத்தரோடையும்  அண்டைக்கு  கதைக்கவும் மாட்டன்  என் பாட்டிலை அறையை பூட்டிப் போட்டு எங்கடை செல்லங்களை  நினைச்சு தேவாரங்களை  மனதுக்கை  படிச்சபடியிருப்பன் உங்கடை நிகழ்ச்சிக்கு வந்து இந்த விளக்குஏத்திறதெல்லாம் சரிவராது தம்பி பெருமூச்சோடு சொல்லி முடித்தார்

உங்கடை விரதத்தை தராளமா பிடியுங்கோ அம்மா விளக்கு ஏத்திறதுக்கு கதைக்கவேணும் எண்டு அவசியம் இல்லைத்தானே  ஆனால் கட்டாயம் வரவேணும் என்று அடம் பிடித்தான்  கீதன்.  இறுதியில் நிகழ்ச்சிக்கு வருவதாக அம்மா உறுதியளித்திருந்தாள்.  அவர்கள் புறப் படும் போது வரவேற்பறை சுவரில்  காய்ந்துபோனதொரு மலையோடு சிரித்துக்கொண்டிருந்த அன்பரசனின் படத்தை பார்த்த கீதன் அம்மா  அன்புவின்ரை படம்  எங்களிட்டை இல்லையம்மா அதாலை இந்த படத்தை தந்தால்  மாவீரர் நாளன்று மண்டபத்திலை  வைச்சிட்டு  திருப்பிகொண்டு வந்து தாறன் என்றதும்.தம்பி அவனின்ரை  படங்களும் என்னட்டை கனக்க இல்லை பத்திரமா திருப்பி தருவியள் எண்டால் தரலாமென்றாள்.நானே பத்திரமாய் கொண்டு வந்து தருவன் பயப்படாமல் தாங்கோ என்றதும் படத்தை கழற்றி சேலைத் தலைப்பல் துடைத்து விட்டு கீதனிடம் நீட்டினார்.
   00000000000000000000000000
அன்பு அம்மவிற்கு சொந்தப் பெயர்  மனோகரி  ஆசிரியையாக கடைமையாற்றியவள். முதல் நிவேதாவும் இரண்டாவது நிவேதன்  இரண்டு பிள்ளைகள்தான்.  நிவேதா திருமணமாகி யேர்மனிக்கு வந்துவிட அன்றைய  யாழ்ப்பாண இடப் பெயர்வின்போது  செல்லடியில் கணவனை  பறி கொடுத்த  மனோகரி மகனுடன்  வன்னிக்குள் போய் சேர்ந்திருந்தார். வன்னிக்கு போனதும்   உயர்தரம்  படித்துக்கொண்டிருந்த நிவேதன் இயக்கத்திற்கு போய்விட்டு அன்பரசனாகி  மீண்டும் வந்திருந்தான். அதன் பின்னர் அவனோடு  இயக்ககாரர் பலரும் வந்து போகத் தொடங்கினார்கள்.  அதற்கு பிறகு மனோகரி அனைவரிற்கு  அன்பரசன்  அம்மாவானவள்  காலப் போக்கில் எல்லாரும் அவளை அன்பு அம்மா என்று கூப்பிடத் தொடங்க அவளிற்கே தனது பெயர் மறந்து  அன்பு அம்மா என்றால் தான் எல்லாரிற்கும் தெரியும் என்கிற நிலையாகிவிட்டிருந்தது.  அவரும் தனது தனிமையை போக்க பிள்ளைகளை  சேர்த்து பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருந்தார். ஆரம்பத்தில் சைக்கிளில் நண்பர்களோடு வந்து போய்கொண்டிருந்த  அன்பரசன்  பின்னர்  உருந்துளி(மோட்டார் சைக்கிள்.) என்று இப்பொழுது பொறுப்பாளராகி  பஜுரோவில் பாதுகாவலர்களுடன்  வரத் தொடங்கியிருந்தான்.
அத்தனையும்  சமர்க்களங்களில்  அவனது திறைமையால் வேகமாக வளர்ச்சிகண்டிருந்தான். பேச்சு வார்தைகள் தொடங்கிய காலம் வன்னிக்கு போயிருந்த நிவேதா தாயையும்  தம்பியையும் எப்படியாவது ஜெர்மனிக்கு கூட்டிவந்துவிடலாமென நினைத்து  எடுத்த முயற்சிகளில் அன்பரசன்  இயக்கத்தை விட்டு வர மறுத்து விடவே மகனை  பிரிந்து  வர மனமில்லாத மனோகரிக்கு .. இப்ப சமாதான காலம் தானே  அனேகமா இனி சண்டை தொடங்காது  பேச்சு வார்த்தையிலை தீர்க்கபோறதா இயக்கமே அறிவிச்சிருக்கு பயப்பிடாமல் வாங்கோ என்றுதன்னுடன் கொஞ்சக்காலமாவது வந்து இருக்கும்படி  அழைத்து வந்து விட்டிருந்தாள். ஆனால் மீண்டும் தொடங்கிய சண்டையில் கடைசியாய் ஆனந்த புரத்தில்  அன்பரசனும் இறந்து போனதாய் செய்திகள் மட்டும் கிடைத்தது. இலங்கை அரசு சார்ந்த  சில இணையத்தளங்களில் வெளியான படங்களையெல்லாம் நிவேதா தேடியபொழுது   அன்பரசனினன்  படமும் இருந்தது. அவர்களிற்கு ஆளாழிற்கொரு மூலையில் இருந்து அழுவதைத் தவிர வேறு வழியில்லை. மாவீரர் நாளன்று அன்பு அம்மா அன்று முழுதும் ஒரு துளி தண்ணீர்கூட வாயில் படாது விரதம் இருப்பதோடு அறையை பூட்டிக்கொண்டு மெளனவிரதமும் இருந்து விடுவார்.அன்பரசன் இறந்து போனதன் பின்னரான மூன்றாவது மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் கீதன் அவர்களது வீட்டுக் கதைவை தட்டியிருந்தான்.

    000000000000000000000000000000000
நிவேதாவிடம்  சொல்லி பூக்கள் வாங்கி நார் கிடைக்காததால் நூலில் அவைகளை  மாலையாகக் கட்டி தண்ணீர் தெளித்து ஒரு பிளாஸ்ரிக் பையில் வைத்துவிட்டு மண்டபதற்திற்கு போவதற்கு தயாராகியிருந்தார்அன்பு அம்மா. நிவேதாவிற்கோ அவளது கணவரிற்கோ  இப்பொழுதெல்லாம்  மண்டபத்திற்கு போய்  மாவீரர் நாளை கொண்டாடுவதில் ஆர்வமில்லை  அதனால்  அம்மாவை மண்டபத்தில் கொண்டுபோய் இறக்கி விடுவதாகவும்    மண்டபம்  அருகிலேயே இருப்பதாலும்  நிவேதாவிற்கு  வேலை  இருப்பதாலும் நிகழ்ச்சிகள் முடிந்ததும்  அம்மாவை பஸ்சில் வீடு வருமாறு ஏற்கனவே சொல்லி விட்டிருந்தாள். அதன்படி  அம்மாவை மண்டபத்திற்கு முன்னால் இறக்கிவிட்டுப் போயிருந்தாள். நிகழ்ச்சிக்கு  சனங்கள் வரஆரம்பித்திருந்தார்கள். அம்மாவும்  மண்டபத்தினுள் நுளைந்தபோது  வாசலில் ஒரு கூடையில் கார்த்திகை பூக்களோடு நின்றிருந்தவன் அம்மா பூ வாங்குங்கோ  ஒண்டு மூண்டு யுரோதான் என நீட்டினான். அம்மா கையிலிருந்த பூமாலையை அவனிற்கு காட்டிவிட்டு பேசாமல் உள்ளே போகவும்.   அவன் பக்கத்தில் நின்றவனிடம் " சரியான திமிர் பிடிச்ச கிழவியா இருக்கு என்றதும் மற்றவன்.   டேய் அது தானாம்  ஆனந்த புரத்திலை தீபன்   துர்க்கா  ஆக்களோடை செத்துப்போன அன்பரசனின்ரை அம்மா  அவாதானாம்  விளக்கு கொழுத்தப் போறா பேசாமல் இரடா என்றான்.

வரிசையாய் அடுக்கப் பட்டிருந்த கதிரைகளில் கடைசி வரிசையில் போய் அமர்ந்தவர்  மண்டப மேடையை பார்த்தார்  பல மா வீரர்களின்  படங்கள் வரிசையாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.  அப்பொழுதுதான் அவரிற்கு தான் செய்த தவறு உறைத்தது. இவ்வளவு  படங்கள் இருக்கு நான் மகனின் படத்துக்கு போட மட்டும்  ஒரு மாலையை  கொண்டந்திட்டனே  மற்றவங்களும் என்ரை பிள்ளை மாதிரித்தானே  மண்ணுக்காக மாய்ந்தவங்கள்  எல்லாமே என்ரை பிள்ளையள் தானே  என்று நினைத்தபடி  தனது பிளாஸ்ரிக் பையை திறந்து  மாலையில்  இருந்த பூக்களை  ஒவ்வொன்றாக பிரித்தெடுக்கத் தொடங்கினாள். அவரிற்கு பக்கத்தில் இருந்த ஒரு பெண் அம்மாவை பார்த்து சிரிக்க அவளை நிமிர்ந்து பார்த்து விட்டு எந்த சலனமும்  இல்லாமால்  பூக்களையே பிரித்தெடுத்துக் கொண்டிருந்தார். அந்த பெண்மணியோ  இது கொஞ்சம்  லூசாயிருக்குமோ?? என நினைத்தபடி  இரண்டு கதிரை தள்ளி போயிருந்துவிட்டார்.  வணக்க நிகழ்வுகள் ஆரம்பம் என ஒருவர் கையில் ஒரு பேப்பரை வைத்து பார்த்தபடி  அறிவிக்க எல்லாரும் எழுந்து நிற்க ஒருவர் கொடியெற்றினார்.

மொழியாகி எங்கள்  மூச்சாகி நாளை  முடிசூடும் தமிழ் மீது உறுதி .வழிகாட்டி  எம்மை உருவாக்கும் தலைவன்  வரலாற்றின் மீதும் உறுதி  விழி மூடி இங்கே துயில்கின்ற  வீரர்கள் மீதிலும் உறுதி  சிடியில் சுழலத் தொடங்கியிருந்தது... அடுத்தாக  லெப்.கேணல் அன்பரசனின் தாயார் விளக்கேற்றுவார். என அறிவித்தார்.  " தாயகக் கனவுடன்  சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை   உங்களைப் பெற்றவர் உங்களின் தோழர்கள் உறவினர் வந்துள்ளோம்". பாடல் போய்க்கொண்டிருந்தது ..எழுந்து  போன அம்மா விளக்கை ஏற்றிவிட்டு  மடியில்  பிரித்துப் போட்டிருந்த மாலையின் பூக்களை  எடுத்து ஒவ்வொரு மாவீரர்   படங்களிற்கு முன்னாலும் வைத்து படங்களை  தடவி தனது உதட்டில் ஒற்றியபடியே  போய்க்கொண்டிருந்தார். இறுதியாய் மிஞ்சியிருந்த ஒற்றை பூவை அன்பரசனின் படத்திற்கு முன்னால் வைத்தார்.. "எங்கே  எங்கே     ஒரு கணம் உங்கள்  விழிகளை இங்கே திறவுங்கள். ஒருகணம் உங்கள் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்"". படத்தை தடவியபொழுது அவர் கண்களில் படம் மங்கலாக தெரியத் தொடங்கியிருந்தது. கண்களை துடைத்துவிட்டு மேடையை விட்டு இறங்குகிறார்.ஆரம்பத்தில்  அவரிற்கு பூ விற்றவன்  அவசரமாக ஓடி வந்து படங்களிலிருந்த  பூக்களை  தனது கூடையில்  அள்ளிப் போட்டபடி வாசலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.

 நிகழ்ச்சிகள் ஆரம்பமாக தொடங்கியிருந்தது  சிறுமியர்கள் சிலர் அபிநயம் பிடித்து ஆடத் தொடங்க  அம்மா கண்களை மூடி தேவாரங்களை மனதில் உச்சரிகக் தொடங்கினார். கொத்து றொட்டியின் மணம் மண்டபத்தை நிறைக்கத் தொடங்க  பலர்  ஆசிய கடை சாமான்களை  பார்வையிட எழுந்து போகத் தொடங்கிருந்தார்கள். எவ்வளவு நேரம் போனதென்று தெரியவில்லை   கதிரைகள்  அடுக்கப்படும்  சத்தத்தில் அம்மா கண்ணைத் திறந்து பார்த்பொழுது எவரையும் காணவில்லை  மூவர் மட்டும் மண்டபத்தை துப்பரவு செய்து கொண்டிருந்தார்கள்.   எல்லாத்தையும் செய்திட்டு கடைசியிலை  மண்டபம்  கூட்டவும் கதிரையள்  அடுக்க மட்டும் எங்களை மாட்டி விட்டிட்டு   உண்டியலை மட்டும் தூக்கிக் கொண்டு போயிடுவாங்கள் என்று யாரையோ திட்டியபடி  வாசலில் நின்று பூ விற்றவன்  தான் விற்ற  கார்த்திகை பூக்களை  தும்புத்தடியால் வாரியள்ளி குப்பையில் போட்டுக்கொண்டிருக்க இன்னொருவன் அடுக்கி வைக்கப் பட்டிருந்த படங்களையெல்லாம் எடுத்து பெரிய கடதாசி பெட்டி ஒன்றிற்குள்  போட்டுக் கொண்டிருந்தான். டேய் படங்களை  கவனமாய் பாத்து போடு என்றபடி பிளாஸ்ரிக் கிண்ணத்தில் கோலாவை  கலந்து கொண்டிருந்தான் இன்னொருத்தன்.

இனி அடுத்த வருசத்துக்குத்தானே இதுகள்  உடைஞ்சாலும் திருத்தலாமென்றபடி  வரிசையாய் படங்களை எடுத்துப் போட்டபடி வந்தவன் அன்பரசனின் படத்தையும் தூக்கிய பொழுது பதறிப்போன அம்மா வேகமாய் அவனை நோக்கி  வேண்டாம் வேண்டாம்  என் சைகை  செய்து கையை ஆட்டியடி ஓடிப் போய்க்கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் அவன் படத்தை பெட்டிக்குள் போட்டுவிட சில்லென்ற சத்தம் எழுந்தது. போன வேகத்தில் அவனை  தள்ளி விட்டு படத்தை எடுத்தார் கண்ணாடி நீள் கீலங்களாய் உடைந்து போயிருந்தது. மெதுவாய் தனது சேலைத் தலைப்பால்  உடைந்த கண்ணாடிகளை தட்டித் துடைத்தவர் அவர்களை  முறைத்துப் பார்த்து விட்டு மண்டபத்திற்கு வெளியே வந்திருந்தார். வெளியே  மழை வருவதற்கான அறி குறியாக  வானம் இருண்டு ஒரு மின்னல் கீற்றொண்டு   கிழித்துப் போக போட்டிருந்த கடைகளை  கடைக்காரர்கள்  அவசரமாக அகற்றிக் கொண்டிருந்தார்கள்.  அன்பு அம்மா வானத்தை அண்ணாந்து பார்த்தார் விழத் தொடங்கிய  மழைத்துளியொன்று ஆவென்றிருந்த அவர் வாயில் வீழ்ந்து விட  காறித்துப்பியவர் அன்புவின் படத்தை சேலையில் சுற்றி மார்போடு அணைத்தபடி பஸ் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

முன்னை நாள் போராளிகளும் முகப்புத்தக லைக்குகளும்

12:15 AM, Posted by sathiri, 2 Comments

முன்னை நாள் போராளிகளும் முகப்புத்தக லைக்குகளும்
சாத்திரி ஒரு பேப்பர்

யுத்தம் முடிந்து ஆண்டு  மூன்று உருண்டோடி விட்டது . முதலாவது ஆண்டை விட  மூன்றாவது ஆண்டில் இலங்கைக்கு  தங்கள் உறவுகளை பார்க்கவும்  வீடு காணிகளை பார்வையிடவும் விடுமுறையை  செலவிடவென  செல்லும்  புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொகையும் அதிகரித்து விட்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி  நிரலில் எதிர் பார்த்த ஒன்று என்பதற்குமப்பால்  இலங்கைக்கான பயணம் என்பது தவிர்க்க முடியாதுதம்கூட. அதனை  தவறென்று வாதிடவும் முடியாது. ஆனால்  அப்படிப் போகின்றவர்கள்  போன தெவைகளை மட்டும் நிறைவேற்றி விட்டு  திரும்பி வந்தால்  எவ்வித சிக்கல்களும் இல்லை.  
போகிறவர்கள் தங்கள்  தேவைகள் அல்லது  வேலைகள் தவிர்ந்து  வேறு விடயங்களில்  மூக்கை  நுளைப்பது பிரச்சனையாகிப் போகின்றது.  அதில் முதலாவது   போகின்றவர்கள்  அவர்களிற்கு தெரிந்த அல்லது  அவர்கள் கண்ணில்  படும்  காயமடைந்து அங்கவினர்னகளாகி அல்லது மாற்றுத் திறநாளிகளாக  வாழும் முன்னை நாள் போராளிகளை படமெடுத்து விட்டு தங்கள் நாட்டிற்கு திரும்பியதும்  அதனை தங்கள் தளங்களில் அல்லது முகப் புத்தகத்தில் பதிவு செய்து விடுகின்றனர்.

பதிபவரது நோக்கம் என்னவாக இருக்கும் என்பதற்குமப்பால். அதனை பார்ப்பவர்கள் அதற்கு லைக் போட்டு பார்வைகளை  கூட்டுகின்றார்கள். அண்மையில் ஊரிற்கு போயிருந்த ஒருவர்  கைகள் இரண்டு இயங்காத முன்னை நாள் பெண் போராளியொருவர்  வாளிக் கயிற்றினை  வாயால் கவ்வி இழுத்து  கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளுவதை  படமெடுத்து  தனது முகப் புத்தகத்தில் பதிந்திருந்தார். அந்தப் படத்திற்கு சுமார் நூற்று முற்பதற்கும் மேற்பட்டவர்கள் லைக்  பண்ணியிருந்தார்.   அதனை பார்த்த எனக்கு உண்மையில் எதுவுமே புரியவில்லை.  வாயால் தண்ணி அள்ளுவதற்காக லைக் போட்டார்களா? அல்லது அவரது கைகள் இரண்டும்  இயங்காதற்கு  லைக் போட்டார்களா?? அல்லு மன்னை நாள் பெண் போராளி என்பதற்காகவா? அல்லது அந்தப் படம் தத்துரூபமாக எடுக்கப்பட்டதற்கா?  தனது மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி  தனது கணவனையும் வாழ்வையும் தொலைத்து  இரண்டு கைகளும் இயங்கமுடியாத நிலையிலும் நம்பிக்கையோடு தன் வாழ்நாளை  எதிர் கொள்ளும்  ஒரு பெண் போராளியின் படம்  லைக் பண்ணக்  கூடியததாகவா இருக்கின்றது?  இதனை  நண்பர் ஒருவரிடம் நான் கூறி கவலைப்பட்டபொழுது அவர் சொன்ன விடயம். அம்மா இறந்து போனார்  என்று ஒருவர்  முகப் புத்தகத்தில் தனது தயாரின் படத்தை போட்டு மரண அறிவித்தல்  போட்டிருந்தாராம். அதற்கே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் லைக் பண்ணியிருந்தார்களாம்.

 அதை விட இது பரவாயில்லையென்றார். இரண்டாவது விடயம்.  இறுதி யுத்தம் நடந்து முடிந்த பின்னர்   இலங்கையரசு  தனது வெற்றியை  பறைசாற்றவும். தம்மை யாரும் வெல்ல முடியாது  தங்களோடு  மோதுபவர்களிற்கு இதுதான் முடிவு என்கிற  மமதையை   தன் குடிமக்களிற்கும் உலகிற்கும்  சொல்வதாற்காக முல்லைத் தீவில்  புலிகளிடம் கைப்பற்றிய ஆயுதங்களை சேகரித்து ஒரு கண்காட்சி  இடத்தையும்.  பிரபாகரன் வசித்த  அதி உச்ச பாதுகாப்பு வசதியுடன் அமைந்திருந்த  நிலக் கீழ்  வீட்டையும்  கடற் புலிகளின்  பயிற்சி பெற்ற நீச்சல் குளத்தையும்  சுற்றுலா மையங்களாக்கியிருக்கின்றது அனைவரும் அறிந்த விடையம்.  தங்கள் இராநுவம் வெற்றி கொண்ட இடங்களை  பார்த்து மகிழ்வதற்கு தினமும்  தென்னிலங்கையிலிருந்து  பெருந்தொகை சிங்களவர்கள் படையெடுக்கிறார்கள். இதுவும் அறிந்த விடையம்தான்.

 ஆனால்  எம்மவர் அறியாத விடயம் வெளிநாடுகளில் இருந்து செல்லும்  எம்மவர்களும் வாகன ஒழுங்குகள் செய்தும்  தனியாகவும்  பெருமளவில் இந்த இடங்களை பார்வையிட செல்கிறார்கள். அவற்றை கண்டு  மகிழ அவை  எமது வெற்றிச் சின்னங்களும் அல்ல  களித்து மகிழ அவை எமது சுற்றுலா  தலங்களும் அல்ல. எமது இனத்தின் அவலத்தை  எமது  முப்பதாண்டு கால விடுதலை யுத்தத்தின் தோல்வியை  எமது மாவீரர்களின் கனவை எமது உறவுகளின் உணர்வுகளை என அனைத்தையும் அழித்து புதைத்த இடங்கள் அவை.அவற்றை எப்படி கண்கொண்டு பார்க்க முடியும்? முடிகிறதா உங்களால்.
ஆனால் இலங்கையரசு வெளிநாடுகளில்  இருந்து  இவற்றை பார்க்கப் போகும்  தமிழர்களின்  விபரங்களை மட்டும் பதிந்து விட்டு அவர்களிற்கு ஒவ்வித சோதனை கெடுபிடிகளையும் செய்வதில்லை என்பதோடு  அவர்களை இன் முகத் தோடு வரவேற்கவும்  முடிந்தளவு  தமிழில் உரையாடக்கூடிய  இராணுவத்தினரையும் இந்த இடங்களில் பணிக்கு அமர்த்தியுள்ளார்கள். இதே நேரம் உள்ளுரில் உள்ள ஒரு தமிழர் இந்த இடங்கிளிற்கு போவதென்றால்  பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

 அப்படி வெளிநாட்டிலிருந்து பொய் வந்தவர் இங்கு வந்து மற்றவர்களிடம். ஊருக்கு போவதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆமிக்காரன் கைப்பையை கூட திறந்து பாக்கேல்லை. தமிழிலையே சிரிச்சு கதைக்கிறாங்கள் என்றதும். அந்தக் கதையை கேட்டவர் அடுத்த  விடுமுறைக்கு  இலங்கைக்கு போவதற்கு மலிவு விலையில் றிக்கற் தேட ஆரம்பித்து விடுவார். இங்கிருந்து இலங்கையரசின்  உளவியல் யுத்தம் வெற்றிபெறத் தொடங்குகின்றது. வெளிநாடுகளில் தங்கள் புகலிடக் கோரிக்கைகளில் புலிகளாலும் தங்களிற்கு உயிர் அச்சுறுத்தல் என்றுதான்  80 வீதமானவர்களிற்கு மேற்பட்டவர்கள்  வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் அப்படி வாக்கு மூலம் கொடுத்து  அகதி அந்தஸ்த்து பெற்றுவிட்டு  பின்னர் போராட்டங்கள் ஊர்வலங்களில் கொடியை பிடித்தக்கொண்டு எங்கள் தலைவன் பிரபாகரன்  புலிகள் மீதான தடையை நீக்கு என்று கத்தியதும் அதை கேட்டு மக்கள்  திரண்டு விட்டார்கள் என்று  பயந்து போய் நடவடிக்கை எடுப்பதற்கு  வெள்ளைக்காரன்  என்ன கேணைப்பயலா?

புலிகள் மீதான தடை கொண்டு வருவதற்கு  ஒவ்வொருவரும்  புலிகளாலும் தங்களிற்கு உயிராபத்து  என்று கொடுத்த வாக்குமூலங்களும் ஒரு காரணம். அது மட்டுமல்ல  வெளிநாடுகளில் நடந்து முடிந்த ஊர்லங்கள் ஆர்ப்பாட்டங்களிற்கு இடத்தை ஒதுக்கி கொடுத்துவிட்டு  வெளிநாடுகள் போசாமல்  வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதற்கு அதுவும் ஒரு காரணமாக அமையும்.  இதே போலத்தான்  முல்லைத் தீவிற்கு சுற்றுலா பயணிகளாக படையெடுக்கும்  எம்மவர்களது விபரங்கள் அனைத்தையும் திரட்டி ஒரு வருடத்தில் இத்தனை ஆயிரம் தமிழர்கள் எவ்வித பிரச்சனைகளும் இன்றி தங்களால் வெற்றி கொள்ளப் பட்ட பயங்கரவாதத்தின் வெற்றிச்சின்னங்களை பார்வையிட்டு படமெடுத்து சென்றார்கள்  எனவே வெளிநாடுகளில் யாரோ ஒருசில தமிழர்கள்  எம் மீது போர்குற்றம் விசாரணை என்று ஊர்வலம் போகிறார்கள். அவர்கள் புலிகளின் எச்சங்கள் என்று சுலபமாக தன்து பிரச்சனைகளை முடித்துக் கொள்ளும். அதே நேரம் இங்கேயும்  தலைவர் பிரபாகரன் வாழ்ந்த நிழக்கீழ் வீட்டையும்  புலிகளின் ஆயுதங்களின் படங்களும் முகப்புத்தகத்தில்  போட்டு லைக்குகள் போய்க்கொண்டு இருக்கின்றது.

இறுதியாக.  யுத்தத்தில்  பல்லாயிரக் கணக்கான   பாடசாலைகள் நாசமடைந்து  இன்னமும் அவை திருத்தப்படாமல் மாணவர்கள் இடிந்த கட்டங்களிலும் கொட்டில்களிலும் மழைவந்தால் எழுந்து நின்றும் கல்வியை தொடந்து கொண்டிருக்கின்ற நிலைமையே தொடர்கின்றது ஆனால் அவைக்கு அருகில் உள்ள கோயில்கள் எல்லாமே புனரமைக்கப் பட்டு கோபுரங்கள் கட்டப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டு குளங்களும் புதுப் புது வடிவங்களில் அமைக்கபட்டு வருவது மட்டுமல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு படிமேலே போய்  எமது வாழ்விடங்களை அழித்து எம் மக்கள் தலைகளில் குண்டு மாரி பொழிந்த  இலங்கை விமானப்படை  உலங்கு வானுர்திகளை பல இலட்சங்கள்  கொடுத்து வாடைகைக்கு அமர்த்தி சில  நிமிடங்கள் மட்டுமே  வானத்தில் வட்டமிட்டு கோயில்கள் மீது பூமாரி பொழிய வைக்கின்றனர். எமது அடுத்த சந்ததியையும் மொழியையும் காப்பாற்றப் போவது கல்வி மட்டுமே அதுவே எமக்கு எஞ்சியுள்ள இறுதி ஆயுதம்.  கோயில்களோ சாமிகளோ அல்ல.  அதற்காக கோயில் கூடாது என்று சொல்லவில்லை  கோயில்கள்.  பணம் மெத்திப்போய் கூத்தடிப்பவர்களின் கூடாரமாகிவிடக்கூடது .சந்தணம் மெத்திய சில புலம்பெயர் தமிழர்களே  உங்களிற்கு எங்கு வேணுமானாலும் தடவிக் கொள்ளுங்கள் ஊருக்குப் போய் அங்குள்ள மக்களின் தலைகளில் தடவாதீர்கள்.