Navigation


RSS : Articles / Comments


(ஒரு நண்பனின்உண்மை கதையிது

12:52 PM, Posted by sathiri, One Comment

இதயத்து சேகங்களை
இறக்கிவைத்து
சுமக்கும் சுமைகளையும்
சொல்லிட வார்த்தைதேடி
கலைந்துபோகும் என்
கனவுகளை
கலைத்து பிடித்து
கட்டிவைக்க விழையும்
வாலிபன்நான்
வசந்தத்தை அனுபவிக்கும்
வயதில்
வறுமையை தாங்கலாம்
வெறுமையை...........??
முடியவில்லை
வீதியில் வீசப்பட்டடோ
விக்கப்பட்டவனே இல்லை
சொந்தம் சுற்றம்
எல்லாம் உண்டு
உற்றாருக்கும் பெற்றாருக்கும்
உதவி உதவியே
உதிரிபாகங்கள்
தேய்ந்துபோய்
உடலும் மனமும்
சோர்ந்து.....என்
துக்கங்களை
தூக்கம்மட்டும்
அவ்வப்போது
தத்தெடுத்து கொள்ளும்
இதோ என்னை
தத்து கொடுத்துவிட்டேன்
நிதந்தரமாக

உயிர்காக்க உதவி தேவை IATAJ

2:12 AM, Posted by sathiri, No Comment


ஒரு பேப்பரிற்காக எழுதியது

உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழ்மக்களே ஊடகத்துறை சார்ந்தவர்களே உதவி செய்யுங்கள். இந்தக் குழந்தையின் உயிர் காக்க உடனடியாக இரத்தம் தேவை.இரத்தம் A. B. AB. O. என்கிற பிரிவு பிரச்சனை இல்லை ஏனெனனில். ஏற்கனவே எங்களில் இருக்கின்ற பிரிவுகளே போதும்.ஆனால் இரத்தத்தில் இனஉணர்வு.விடுதலையுணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக பட்டம் பதவி ஆசைகளற்ற கடைமையுணர்வு.இவை எல்லாம் கலந்த புது இரத்தம் உடனடியாகத்தேவை.ஏனெனில் நோயாளிக் குழந்தை மிகவும் அபாயக்கட்டத்தில் கோமா நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது. இந்தக் குழந்தையின் பெயர் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். இது .24.06.06......அன்று இலண்டனில் பிறந்தது.இதற்கு ஒன்றரை வயதாகிவிட்டது. இந்த ஒன்றரை வயதில் நான்கு பிறந்தநாட்களை அதுவும் பிரான்சில் இரண்டு ஜெர்மனியில் இரண்டு என நான்கு பிறந்தநாட்களை கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ளது.இந்தப்பிள்ளைய??வது வளர்ந்து தமிழ் ஊடகத்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களையும் உலக நாடெங்கும் சிதறிப்போய் கிடக்கும் பல சிந்தனையுள்ள பத்திரிகையாளர்களையும் பல ஊடகங்களையும் ஒன்றாக்கி உறவாக்கி ஏதோ சாதனை செய்யப்போகின்றது என்று கற்பனையில் இருக்க. இதற்கு வியாதி பிடித்து அதன் உறவினர்களாலேயே கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இந்தக்குழந்தைக்கு பால்மா வாங்கவே சிரமப்படும் தாயாரால் வைத்தியத்தை எப்படிப்பார்க்கபோகிறார் எனபதுதான் கவலை.குழந்தையின் உறவுகள்பற்றிய விபரம்.இந்தக்குழந்தை அவதாரக்குழந்தை எனபதால் தாயார் மட்டுமே உள்ளார் . தாயார் பெயர் ஆனந்தி சிவப்பிரகாசம். தலைவர்( முன்னாள் பி.பி.சி. தமிழோசையின் பணிப்பாளர்.)சித்தப்பா மற்றும் இந்தக்குழந்தையின் வைத்தியர். இரா துரைரட்ணம்.உபதலைவர் ( இலங்கை தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பத்திரிகையாளர்.)இவரும் குழந்தைக்கு வைத்தியம் பார்க்காமல் கைவிட்டுள்ளதாகவே அறியமுடிகின்றது.குகதாசன் குஞ்சியப்பு.நோர்வே(பத்திரிகையாளர்)கோபி மாமா இங்கிலாந்து (ஒரு பேப்பர் பத்திரிகையாசிரியர்)பற்றிமாகரன் தாத்தா இங்கிலாந்து ( அரசியல் ஆய்வாளர் மற்றும் பத்திரிகையாளர்)சிவா சின்னப்பொடி .பிரான்ஸ்(பத்திரிகையாளர்)றூபினி செல்வநாதன் ஜெர்மனிவேந்தர்கோன்.இங்கிலாந்து -( வடலி பத்திரிகை ஆசிரியர்)கந்தசாமி.இங்கிலாந்துஇப்படி உலகெங்கும் பலமான பிரபல்யமான உறவினர்கள் இருந்தும் இந்தக்குழந்தை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்தக்குழந்தையும் அவ்வப்போது சில சிணுங்கல்களுடன்(சில அறிக்கைகள்) நித்திரையாகி விடுகின்றது. எனவே இனிவரும் காலங்களிலாவது சம்பத்தப்பட்டவர்கள் ஊட்டச்சத்துக்கள் ஊட்டி இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்காளா??http://www.iataj.org/

ஓலை கொண்டு வந்துள்ளோன் அய்யா

2:09 AM, Posted by sathiri, No Comment



பெருமதிப்பிற்குரிய நாகலிங்கம் அய்யா அவர்களிற்கு உங்களிற்கு யாரோ முடிசூட்விட்டார்களாம் என்கிற செய்தி அறிந்ததும் பதறிப்போய்விட்டேன். அதே போலவே நீங்களும் அந்தத் தருணத்தில் பதறிப்போயிருப்பீர்கள். அந்த நேரம் உங்கள் உள்ளம் என்ன வேதனைப்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கும்போது என்வேதனை இன்னமும் அதிகரிக்கின்றது.ஏனெனில் உங்களை இன்று நேற்றல்ல நீங்கள் இணுவில்......கற்பித்த காலத்திருந்து உங்களை நான் அறிந்தவன். ஊருக்கு நீங்கள் செய்த உபகாரங்கள் எத்தனையோ எத்தனையோ. அதுமட்டுமல்ல புலம் பெயர்ந்து வந்த தேசத்திலும் கொடுத்தே பழக்கப்பட்ட கைகளை பொத்தி வைக்க முடியாமல் நீங்கள் புலம்பெயர் தேசத்திலும் பொதுநலத்தெண்டுகளையும் தன்னலமற்ற தமிழ்தொண்டுகளையும் பார்த்து நான் பூரித்து போயிருக்கிறேன். பூமாலை பொன்னாடை புழுகித்தள்ளும் புகழ்சிகள் இவற்றுக்கு அடிமையாகாத பண்பு அதற்கும் மேலாக உங்கள் தற்புகழ்ச்சி பிடிக்காத தன்னடக்கம். இவைகளிற்காகவே எங்கள் தேசியத்தலைவரே அவர்கள்கையால் உங்களிற்கு விருதுவழங்கி கொளரவித்திருந்தார்.

தமிழனாய்ப்பிறந்த ஒருவனிற்கு அவனது வாழ்நாளில் இதைவிடப்பெரிய கொரவவம் வேறு என்ன வேண்டும்.ஆனாலும் இந்திய அரசியல் சாக்கடையின் சம்பிரதாயங்களான முடிசூடுதல். வீரவாள் கேடயம் கொடுத்தல்.காலில் விழுதல்.விரலைக்கீறி இரத்தத்தால் வெற்றித்திலகமிடுதல்.பச்சை குத்துதல். பட்டங்கள் கொடுத்து பொன்னாடை போர்த்தி புகழ்ந்து தள்ளிவிட்டு பின்னர் அடுத்த மேடையிடையில் அதேநபரை தூற்றி துவேசித்தல். அடு்த்தவேளை சோற்றுக்கு வழியில்லாத தொண்டன் தலைவர்வாழ்கவென தொண்டை கிழியகத்துதல். இவையெல்லாம் பெரியளவில் இல்லாவிட்டாலும் எங்கள் ஈழத்தமிழர் சமூகத்திலும் முன்னைய காலங்களில் சிறிதளவு தொற்றியிருந்தது உண்மைதான் ஆனால் தமிழர்விடுதலைக்கூட்டணி கட்சியின் அழிவோடு அந்தசம்பிரதாயங்களும் அழிந்துபோய்விட்டன்.ஈழத்தில??புதிதாய்ப்பிறப்பெடுத்த எம்புதியசமுதாயம் புலிகள் காலத்தில் உலகேவியக்கும் பல புதுமைகளை செய்துகொண்டிருக்கும்வேளை புலம்பெயர்தேசத்து தமிழர்கள் பிடுங்கியெறியப்பட்ட பழைய சம்பிரதாய்ஙகளை தேடியெடுத்து புளிபோட்டுதேய்த்து புது முலாம் பூசிக்கொண்டிருக்கின்றனர். ஒரு முற்போக்கு வாதியான உங்களால் இவவற்றையெல்லாம் எப்படி உங்களால் தாங்கிக்கொள்ள முடிகின்றது.

அய்யா யேசு நாதருக்கு யூதர்கள் முள்முடி சூட்டி சவுக்கால் அடித்து சிலுவையை சுமக்கச் சொன்னபொழுது அவர் யூதர்களைப்பாத்து கோபப்படாமல் கடவுளிடம் "தந்தையே இவர்கள் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதனை அறியாபாவிகளாய் இருக்கின்றனர் எனவே இவர்களை மன்னியுங்கள் " என்று வேண்டிக்கொண்டாராம்.அதேபோல??ான் அன்று ஜெர்மன் கிறீபீல்ட் நகரில் உங்கள் தலையில் சூட்டப்பட்ட அந்த முடி நிச்சயம் உங்களிற்கு முள்முடியாக வேதனை தந்திருக்கும். ஆகவே அவர்கள் அறியாமல் செய்த பாவத்தை நீங்கள் மன்னித்தருளுங்கள் என்று நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

தாலியறுக்க சில ஆலோசனைகள்.

1:15 PM, Posted by sathiri, No Comment

தாலியறுக்க சில ஆலோசனைகள்.

இதென்னடா சாத்திரி ஊரிலை காணிவேல் கோயில் திருவிழாக்களிலை தான் செய்ததை இஞ்சை வெளிநாட்டிலையும் செய்யச்சொல்லி ஆலோசனை சொல்லுறாரோ எண்டு யோசிக்காதையுங்கோ. இது கள்ளத்தாலி அறுக்க ஆலோசனை இல்லை இது கணவன்மார் இறந்தால் பிறகு மனைவிமார் அறுக்கிற சடங்குத்தாலியறுப்பு.இது பொதுவான தமிழரின்ரை இல்லையில்லை இந்துக்களின்ரை சே அதுவுமில்லை இந்துதமிழரின்ரை இல்லை சைவத்தமிழரின்ரை எண்டு சொல்லலாமோ தெரியாது எனக்கும் சரியாய் தெரியாது ஆனால் எங்கடை முன்னோர் செய்த ஒரு சடங்கு அதுமட்டும் வடிவாத்தெரியும்.அது பொதுவா நடக்கிற ஒரு சடங்குதானே அதுக்கேன் ஆலோசனை எண்டு யோசிக்கிறீங்கள் எனக்கு விழங்குது. ஆனால் எங்கடை பெட்டையளை வயசுக்கு வந்ததும் கலியாணத்தை கட்டிக்குடுத்து கலைச்சு விடாமல்இப்ப காலமாற்றத்திலை பள்ளிக்கூடம் போகவிட்டதுபெரிய தப்பா போச்சுது.

எங்களுக்கு சமமாமுன்னேறி்கொண்டுவந்தது மட்டுமில்லை எங்களை எதிர்த்து கேள்வி வேறை கேக்கினம். அதுமட்டுமில்லை அவையை ஒடுக்கி வைக்கிறதுக்கு நாங்கள் கஸ்ரப்பட்டு கண்டுபிடிச்சு காலம்காலமா செய்துகொண்டு வாற சம்பிரதாயங்களையுமல்லோ செய்யக்கூடாது எண்டினம். போன முறையான் ஒரு பேப்பரிலை படிச்சிருப்பீங்கள் யாழிலையும்போட்டு வெட்டி பிறகுபோட்டு திருப்பவும் வெட்டி காணாமல் போட்டுது. யெர்மனியிலை நடந்த ஒரு தாலியறுப்பு சடங்கை செய்தது சரியில்லையெண்டு சாந்தி ரமேஸ் எண்டவா எழுதியிருந்தவா.எங்கடை சடங்கு சம்பிரதாயத்தை எதிர்த்து அதுவும் கேவலம் ஒரு பொம்பிளை எப்பிடி எதிர்த்து எழுதலாம். கட்டுரையை படிச்சஎனக்கு வந்த கோபத்திலை ஒரு பேப்பரை சுக்குநூறா கிழிச்சு எறிஞ்சுபோட்டன்.கட்டுரையை எழுதினவாவின்ரை நம்பரைத்தேடியெடுத்து நல்லாத்தண்ணியைபோட்டிட்டு நடுச்சாமத்திலை போனடிச்சு நாலுகிழி குடுப்பம் எண்டுதான் நினைச்சனான் ஆனால் பொலிசிலை போய் வழக்கு போட்டாலும் எதுக்கு வில்லங்கத்தை எண்டு நினைச்சுப்போட்டு.

இந்த புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளிலை வெள்ளைக்காரனிட்டை கோட்சூட் போடுறது முள்ளுக்கரண்டியாலை சாப்பிடுறது வைன்கிளாசை முட்டி சியஸ் சொல்லறதெண்டு எங்களுக்கு சாதகமான பல சம்பிரதாயங்களை பழகினாலும் எங்கடை தாலியறுப்பு சம்பிரதாயத்தை காப்பாத்திறதுக்காகவும்.இனிம༢r />??ல் காலத்திலை இப்பிடி நாலுஎழுத்து படிச்சிட்டு எங்கடை சடங்கு சம்பிரதாயங்களை விமர்சிக்கிற பெண்களிட்டை இருந்து எதிர்ப்பு வராமல் காப்பாத்தவும் சில ஆலோசனையளை எழுதலாம் எண்டு நினைக்கிறன்.

1) ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் மரணவீடுட்டுடன் சேர்த்து தாலியறுப்பு நிகழ்வை செய்யாமல் அதற்கு தனியாக ஒருநாள் பெரிய மண்டபம் எடுத்து காட்அடிச்சு ஆக்களை கூப்பிட்டு செய்யலாம்.

2)பொதுவாக இந்த தாலியறுப்பு நிகழ்வினை எங்கள் சம்பிரதாயப்படி பல விதைவைப்பெண்கள் சேர்ந்து செய்வதுதான் வழைமை எனவே நீங்கள் வசிக்கின்ற நகரத்தில் தமிழ் விதைவைப்பெண்கள் கிடைக்காவிட்டால் ஏதாவது ஒரு பேப்பரில் "தாலிறுப்பு நிகழ்வு நடாத்த விதைவைப்பெண்கள் தேவை அவர்களிற்கான போக்கு வரத்து செலவு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்" என்று ஒரு விளம்பரத்தை போடலாம்.

3)இந்த நிகழ்வினை ஒப்பாரிப்பாடலுடன் செய்தால் அதற்கென ஒரு தனி மவுசு கிடைக்கும். புலம்பெயர் நாடுகளிலை உள்ள பெண்களிற்கு தாலாட்டு பாட்டே தெரியாது இதுக்கை எப்பிடி ஒப்பாரி தெரியப்போகுது. அதாலை ஊரிலை அல்லது இந்தியாவிலை இருந்து ஒப்பாரி தெரிந்த கிழவிகளை அழைத்து வரலாம். அவருக்கு வெளிநாட்டுக்கு கூப்பிடுற விசா எடுக்கிறதுக்கு. எங்கள் கலாச்சார நிகழ்விற்கான விசேட பாடகர் என்று கேட்டால் கட்டாயம் வெளிநாட்டு தூதரகம் விசா தரும். ஆனால் இப்பிடி வருகிற ஒப்பாடி பாடகர்கள் பிறகு காலப்போக்கிலை கோயில் பூசைக்கு முன்னர் கூட்டிக்கொண்டு வந்த குருக்கள்மார் மாதிரி உங்கடை செலவிலை வெளிநாட்டுக்கு வந்திட்டு தனியா அசேலம் அடிச்சு இல்லாட்டி இமிகிரண் விசா எடுத்து சொந்தமா தொழில் செய்யத்தொடங்கிவிடுவினம். அதாலை முன்னெச்சரிக்கையையாய் அவையை கூட்டியந்த உடைனையே பாஸ்போட்டை பிடுங்கி வைச்சுக்கொண்டு நாலு இடம் சுத்திக்காட்டி நாலு பேரோடை பழக விடாமல் வந்த காரியம் முடிஞ்சதும் நேரை ஏயார்போட்டிற்கு கொண்டு திருப்பி ஏத்திவிடுங்கோ.


4)இந்த மூன்றாவது யோசனை கொஞ்சம் சிக்கலானதாகவோ செலவானதாகவோ தோன்றினால். இன்றைய விஞ்ஞானத்தை எங்கடை சம்பிரதாயங்களிலை புகுத்தலாம். அதாவது இப்ப வெளிநாடுகளிலை கன கலியாண வீட்டிலை ஏன் கோயில்களிலையும் மேளச்சத்தம் சிடியிலைதான் போகுது. அதுமாதிரி இந்த ஒப்பாரியையும் சிடியிலை அடிச்சு விட்டால் பிரச்சனை முடிஞ்சுது. சிடிவெளியிடுற நிறுவனக்காரர் இதை கவனத்தில் எடுக்கவும் உங்களிற்கும் ஒரு வியாபாரம் நடந்தமாதிரி இருக்கும்.

5) இந்த தாலியறுப்பு நிகழ்வைப்போல உடன்கட்டை ஏறுகிறது அதாவது கணவன் இறந்து போனால் கணவனை எரிக்கிற நெருப்பிலேயே மனைவியும் குதிச்சு இறந்து போறதும் எங்கடை முன்னோர்கள் செய்த சம்பிரதாயம் எண்டு புத்தகங்களிலை படிச்சு அறிஞ்சிருக்கிறன்.ஆனால் எங்கடை சடங்கு சம்பிரதாயங்களை அழிக்க வேணுமெண்டே சிலர் சதிசெய்து சட்டங்களை போட்டு அதை இல்லாமல் செய்து போட்டினம். ஆனாலும் இந்தியாவிலை சிலர் இடைக்கிடை செய்யினம். அழிஞ்சுபோன அந்த சம்பிரதாயத்தை திருப்பவும் நாங்கள்தொடங்கவேணும் ஆனால் வெளிநாட்டிலை அதுக்கு சட்டம் இடங்குடுக்காது. அதுக்கான அனுமதியை தரசொல்லி வழக்கு போடலாம்.

சரி இனிமேல் காலங்களிலை நடக்க இருக்கிற தாலியறுப்பு விழாவிற்கு எனக்கும் மறக்காமல் கட்டாயம் அழைப்பிதழ் அனுப்புங்கோ நேரிலை வந்தும் சில ஆலோசனையள் சொல்லுறன் நன்றி சாத்திரி

எழும்படி பெண்பாவாய்

9:25 AM, Posted by sathiri, No Comment

எழும்படி பெண்பாவாய்
ஒரு பேப்பரிற்காக

மார்கழி மாதம் ஊரில் திருவெண்பாவை காலம் தொடங்கினாலே பதின்ம வயதுகளில் இருந்தஎங்களிற்கு பக்தி பாதி பம்பல் பாதி கலந்த கொண்டாட்டம்.மயிர்க்கால்கள் குத்திட்டு நிக்கும் மெல்லிய மார்கழி மாதத்து குளிரிர். இப்ப ஜரோப்பா குளிரோடை ஒப்பிடேக்கை அதெல்லாம்ஒரு குளிரா என்று தோன்றுது. அதிகாலை நாலுமணிக்கு எழும்பி சில்லென்ற கிணத்து நீரை அள்ளி நடுக்கியபடி தலையில் ஊற்றிக்கொண்டு முன் ஜாக்கிரதையாக ஒரு காற்சட்டையை உள்ளை போட்டு மேலை அப்பாவின் பட்டுச்சால்வையை வேட்டியாக்கி கட்டிக்கொண்டு என்னிடம் இருந்த மிருதங்கத்தையும் தூக்கிக்கொண்டு கோயிலடிக்கு ஓடுவேன். மிருதங்கம் வைச்சிருந்தனான் எண்டதும் நான் ஏதோ பெரிய மிருதங்க வித்துவான் எண்டு கண்டபடி கற்பனை பண்ண வேண்டாம். அதையும் சொல்லிப்போட்டு பிறகு அங்காலை போறன்.முந்தி இந்த இந்த வாத்திய கருவிகள் இல்லாட்டிசங்கீதம் வாய்ப்பாட்டு (கணக்கு வாய்பாடு அல்ல)பழகுகின்ற ஆண்கள் வேட்டி கட்டி கழுத்திலை தொப்புளை தொடுகிற அளவுக்கு ஒரு பதக்கங்சங்கிலி இல்லாட்டி உருத்திராட்சை கொட்டை வைத்த ஒரு சங்கிலி போடுறதெண்டது ஒரு விதிக்கபடா சம்பிரதாயம் இல்லாட்டி எழுதப்படாத சட்டம் எண்டும் சொல்லலாம்.

அப்பிடித்தான் எனக்கும் ஒரு சங்கிலி போடவேணுமெண்ட ஆசை அதாலை சங்கீதம் படிக்கப்போறன் எண்டு கேக்க முடியாது ஏணெண்டால் எனக்கே தெரியும் என்னை சங்கீதம் படிக்க அனுப்பி ஊர்காரரின்ரை வெறுப்பை வீட்டுகாரர் சம்பாதிக்க மாட்டினம் அதாலை மிருதங்கம் பழகபோனால் அதை சாட்டா வைத்து வீட்டிலை ஒரு உருத்திராட்ச கொட்டை வைச்ச சங்கிலி வாங்கலாம் எண்டு ஒரு திட்டத்தை போட்டு நானும் மிருதங்க வகுப்புக்கு போகத் தொடங்கினாப்பிறகு அப்பாட்டை மெல்லமாய் சங்கிலி விசயத்தை சொன்னன் . அதுக்கு அப்பா என்னட்டை "டேய் மிருதங்கம் பழகுறதுக்கு முதல்லை மிருதங்கம்தான் தேவை அதை வாங்கித்தாறன் நீ நல்லாப் பழகி அரங்கேற்ரம் செய்யிற அண்டைக்கு நானே உனக்கு உருத்திராட்சை கொட்டை வைச்ச சங்கிலியை மேடையிலை வைச்சு போடுறன் எண்டுபோட்டார்".பிறகென்ன நான் மிருதங்கம் பழகி அரங்கிலை ஏறி இதெல்லாம் நடக்கிற கூத்தா அதாலை மிருதங்கம் வாங்கித்தந்த கொஞ்சநாளிலையே மிருதங்கம் பழகப்போறதை விட்டிட்டன்.

ஆனால் அந்தமிருதங்கத்தைதான் திருவெண்பா காலங்களிலை நான் கொண்டு போறனான். அதாலை அந்த பஜனைக்கோஸ்ரிக்கு நான் தான் மிருதங்க வித்துவான் .பஜனைப்பாட்டு ராகத்துக்கு ஏற்றமாதிரியெல்லாம் நான் தாளம்வாசிக்கமாட்டன். பஜனை பாடுறவை நான் அடிக்கிறதாளத்துக்கு ஏற்றமாதிரி பாடவேண்டியதுதான். சரி இனி விசயத்துக்கு வாறன்.கோயிலடியிலை என்னைப்போலவே நண்பர்கள் சங்கு.சேமக்கலம்.சிஞ்சா(தாளம்)༢r />??டுக்கு. பெற்றோல்மைக்ஸ் எண்டு ஆளாளுக்கு ஒரு பொருளோடை தயாராய் நிப்பினம்.பஜனை பாடப்போகிற எங்களுக்கு பாவங்கள் பக்தியிலை குளிருக்கை பாடுறாங்கள் எண்டு ஊரிலை ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டுக்காரர் பால்தேத்தண்ணியோ இல்லாட்டி பால்க்கோப்பியோ தாறது வழைமை.கொஞ்சம் வசதியான வீடு என்றால் `ஹார்லிக்ஸ்சும் பிஸ்கற்றும் கூட கிடைக்கும்.ஆனால்திருவெண்பா தொடங்கு முன்னரே தாங்கள் எந்த நாள் என்ன குடிக்க தருவினம் எண்டதை எங்களுக்கு சொல்லி ஒழுங்கு பண்ணியிருப்பினம்.

நாங்களும் அதை ஒரு கொப்பியிலை குறிச்சு வைச்சிருப்பம்.அதாலை நாங்கள் கோயிலடியிலை பஜனை தொடங்க முதலே அண்டைக்கு யாரின்ரை வீட்டிலை என்ன குடிக்கப்போறம் எண்டு ஒருதடைவை குறிச்சு வைச்சிருந்த கொப்பியிலை சரிபார்ப்பம். " டேய் இண்டைக்கு சந்தி வாத்தியார் வீட்டிலை கோப்பியும் விசுக்கோத்துமாம் எண்டுவான் ஒருத்தன்" அட போடா அந்த வாத்தி போனவருசம் பள்ளிக்கூடத்திலை தாற விசுக்கோத்தை தந்து ஏமாத்திப்போட்டுது.இந்தமுறை கிறீம் விசுக்கோத்து வாங்கிதராட்டி நான் அவற்றை வீட்டு வாசல்லை பாடமாட்டன்" என்பான் இன்னொருத்தன்.அது மட்டுமில்லை எங்களோடை படிக்கிற இல்லாட்டி தெரிஞ்ச பெட்டையளின்ரை வீட்டிலை அண்டைக்கு தேத்தண்ணி தாறநாளெண்டால் பிறகென்ன அதைவிட்ட சந்தோசம் வேறையொண்டும் இல்லை.

ஏணெண்டால் அதுவரை காலமும் சைக்கிளில் போக வரேக்கை வேலிக்கு மேலாலையும் மதிலுக்கு மேலாலையும் எட்டியெட்டி பாத்துக்கொண்டு திரிஞ்ச எங்களிற்கு அண்டைக்குத்தான் அவையளின்ரை வீட்டுக்குள்ளை போகிற சந்தர்ப்பம் கிடைக்கும். அதேநேரம் திருவெண்பா காலங்களிலை அனேகமான வீட்டுக்காரர் தங்கடை நாய்களை எல்லாம் பிடிச்சு கட்டிவைச்சிடுவினம். இல்லாட்டி எங்கடை பாட்டைக்கேட்டு நாய்களுக்கு பக்தி முத்தி எங்களை கலைக்க வெளிக்கிட்டிடும்.இப்பிடி கல கலப்பா ..“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன் செவியோ நின் செவிதான்…..எண்டு முதல் பாட்டோடை கோயிலடியிலை இருந்து தொடங்குவம் முன்னாலை ஒருத்தர் பெற்றோல்மைக்ஸ் விளக்கை தோழில் வைத்து பிடித்தபடி போக அந்த வெளிச்சத்தில் இன்னொருத்தர் திருவெண்பா புத்தகத்தை பாத்து ஒவ்வொரு பந்தியாய் சொல்லி நிறுத்த பின்னாலை போகிற மற்றறைவை திருப்பி சொல்லிக்கொண்டு எங்கள் பயணம் ஆரம்பமாகும்.

சில நேரங்களிலை பெற்றோல் மைக்ஸ் வெளிச்சத்தை பார்த்து பறந்து வருகிற மார்கழி மாதத்து ஈசல் கூட்டம் வெண்பா படிக்கிற எங்கடை வாய்க்குள்ளையும் புகுந்திடும் அதனாலை காறித்துப்பியபடி கடவுள் பாடலை பாடிக்கொண்டு போகவேண்டியிருக்கும்..ஏலோரம்
பாவாய் இப்பிடி வெண்பாவின்ரை .எட்டு பாடல் வரிகள் .முடிஞ்சதும் எல்லாரின்ரை கையிலை இருக்கிற வாத்தியமும் பெரிய சத்தம் எழுப்பும். இடைக்கிடை சினிமாப்பாட்டும் பாடுவம். எங்களோடை படிக்கிற பெட்டையளின்ரை வீட்டுவாசல் வந்தால் வெண்பாவின்ரை ஏலோரம்பாவாய் .முடியாமலே எழும்படி பெண்பாவாய் எண்டு கத்திப்போட்டு நாங்கள் கையிலை இருக்கிறது எல்லாத்தையும் அடிச்சுசத்தம போட்டு படைலைக்குள்ளை சங்கை வைச்சு ஊதிப்போட்டு போவம்.ஏணெண்டால் ஊரையே எழுப்பிறதுக்குதானே நாங்கள் பஜனை பாடுறது அதாலை யாரும் எங்களை பேசமாட்டினம் எண்டிற துணிவுதான்.

பிறகு கலையிலை எங்கையாவது போகேக்குள்ளை பெட்டையள் எங்களிட்டை "சனியள் நீங்களோ காத்தாலை எங்கடை படைலைக்குள்ளை சங்குஊதினது எண்டு செல்லக்கோபத்தோடை கேப்பினம். அதுக்கு நாங்களும் "எங்களுக்கு வேறை வேலை இல்லையோ உன்ரை கொப்பர் குறட்டை விட்டிருப்பார் அது உனக்கு சங்குச்சத்தம்மாதிரி கேட்டிருக்கும்." இப்பிடியான சீண்டல்கள். திருவெண்பா கடைசி நாளன்று ஒரு ரக்றரிலை பிள்ளையாரை வைச்சு சோடிச்சு லைற்எல்லாம் பூட்டி மேளதாளத்தோடை சாமி ஊரை வலம் கொண்டுவருவம்.. எங்களை நம்பி சாமியை தாறத்துக்கு பெரியாக்களுக்கு பயம்.அதாலை அந்த கடைசிநாள் ஊர்வலத்தை பெரியாக்கள் தான் செய்வினம் நாங்கள் பின்னாலை பாடிக்கொண்டு போக வேண்டியதுதான்.. அப்படிதிருவெண்பாவை அதிகாலையில் என்னுடன் கூத்தும் கும்மாளமுமாய் கூடிக் கும்மியடித்த எத்தனையோ என்வயது நண்பர்கள் இன்று உயிருடன் இல்லை.எண்ணிப்பார்க்கிறேன் கொடிய யுத்தத்தில் கோரமாய் மாண்டும் விடுதலையை நேசித்து வீரமரணம் அடைந்தும் காரணமேயின்றி காணாமல் போனவர்கள் என்று சுமார் பதினைந்து பேருக்கு மேல்.ஊரை எழுப்புவதற்காய் அன்று என்னுடன் தெருத்தெருவாய் திரு வெண்பாபாடியவர்கள் இன்று எந்த வெண்பாபாடினாலும் எழுப்பமுடியாதவர்களாய். ஆனாலும் திருவெண்பாவை காலம் வரும்போதெல்லாம். அவர்கள் நினைவுகளுடன்

குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே

8:50 AM, Posted by sathiri, No Comment

குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே
இந்தவார ஒரு பேப்பரிற்காக

83ம் ஆண்டு கொழும்பில் தமிழர்களிற்கு நடந்த அவலத்தை தமிழின வரலாற்றில் மறந்துவிட முடியாது அந்த கலவரத்தில் உறவுகளை உடைமைகளை இழந்து வடக்கு நோக்கி வந்த பல்லாயிரம் தமிழ்குடும்பங்களில் எங்கள் ஊரிலும் பல குடும்பங்கள் வந்து குடியேறினார்கள் அதில் ஊர்மண்ணின் வாசத்தை மறந்து பலவருடங்களாகிப்போன தமிழர்களும் அடங்குவர்.அப்படி வந்த தமிழ் குடும்பங்கள் பலர் உறவினர்வீடுகளில் தங்கினர் உறவினர்கள் இல்லாத அல்லது உறவினர்களுடன் தொடர்புகள் அற்ற பலகுடும்பங்களிற்கு ஊர் இளைஞர்கள் நாங்கள் தங்குமிட வசதிகள் மற்றும் உதவிகளை செய்து கொடுத்திருந்தோம். அப்படி அகதியாய் வந்திருந்த மாணவர்களிற்கு அவர்களது கல்வியை தொடர ஊர்பாடசாலைகளில் விசேடமாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

எங்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அப்படி பல மாணவர்கள் வந்து சேர்ந்தனர் அதைப்பற்றி எங்களிற்கு கவலையில்லை ஆனால் அதே போல அருகில் இருந்த மானிப்பாய் மகளிர் பாடசாலையிலும் பல மாணவிகள் சேர்ந்திருந்தனர்.இதுதான் விடயமே.அதுவரை காலமும் சீயாக்காய் வைத்து தோய்ந்து கருவேப்பிலை போட்டு காச்சிய தேங்காய் எண்ணெயை தலைக்கு வைத்து வழித்திழுத்து கன்னத்தில் வழியும் எண்ணெயை கைக்குட்டையால் துடைத்தபடி.இரட்டை பின்னலுடன்.நெற்றியில் மெல்லிதாய் ஒரு திருநீற்று கீறல் அதில் சின்னதாய் சந்தணப்பொட்டு.லேடீஸ் சைக்கிளை ஓடிக்கொண்டு ஒரு கையால் காண்டிலை பிடித்தபடி மறுகையால் மேலெழும்பும் பாவாடையை மாறி மாறி இழுத்துவிட்டபடி வந்து.எங்களைக்கண்டதுமே ஏதோ கொட்டிய சில்லறையை தேடுவது போல குனிந்து கொண்டு .கதைகேட்டால் எதையாவது சுரண்டியபடி படபடப்பாய் பதில் சொல்லிவிட்டு பறந்தோடும் எங்கள்ஊர்பெண்களையே பார்த்து பழகிப்போய்விட்ட எங்களிற்கு.(இப்போ அந்தக்காலம் எல்லாம் மலையேறிவிட்டது இப்போதெல்லாம் எங்கள்ஊர்பெண்கள் அழகுசாதனமாய் பயன்படுத்துவது 50 கலிபர்.ஆர்.பி.ஜு. ஆட்லெறிகள்)

புதிய கொழும்பு வரவுகளோ ஷாம்பூ வைத்து தோய்ந்து பறக்கவிட்ட தலை. தமிழ்பாதி ஆங்கிலம்பாதி கலந்துசெய்த தமிங்கிலம்.குளோரின் தண்ணீரை குடித்தும் குளித்தும் வளர்ந்ததால் கொஞ்சம் கலராய் உள்ள நெற்றியில் கலர்கலராய் ஒட்டுப்பொட்டு .நேருக்கு நேரே `ஹாய் " சொல்லி கலகலப்பாய் கதைக்கும் சுபாவம்.இதெல்லாம் எங்கள் உள்ளுர்ப்பெண்களின் மவுசை குறைத்து கொழும்பு வரவுகளின்மீது இளைஞர்களின் பார்வை திரும்பத்தொடங்கியது.அதுவரை காலமும் ஆங்கிலப்பாடம் தொடங்கியதும் களவாய் விழாங்காய்க்கு கல்லெறியப்போய்விடும் மாணவர்கள் எல்லாம் அக்கறையாய் வகுப்பில் ஆங்கிலவாத்தியாரிடம் சந்தேகங்கள் கேட்டுப்படிக்கதொடங்கியிருந்தனர்.அதுமட்டுமல்ல "அறுபதுநாளில் ஆங்கிலம் கற்க" எண்டொரு ஸ்போக்கிண் இங்கிலிஸ் புத்தகத்துடன் ரியுசனுக்கு வேறை அலையத்தொடங்கிவிட்டார்கள்.இப்பிடியெல்லாம் இருக்க கொழும்பில் இருந்து வந்த குடும்பங்களில் ஒன்றுதான் ரேகாவின் குடும்பமும். .ரேகாவின் தந்தை எங்கள்ஊரை சேர்ந்தவர்தான்.

கொழும்பில் இருந்து வந்த அனேகமான குடும்பங்கள் தங்கள் உறவுக்காரர்களின் வீடுகளில் குடியேறிவிட ரேகாவின் குடும்பம் மட்டும் யாரும் தங்களுடன் ஏற்றுக்கொள்ளாததால் தனித்து விடப்படவே நாங்கள் எங்கள் ஊரில் யாருமற்றிருந்த பழையகாலத்து நாற்சார சுண்ணாம்பு வீடொன்றை துப்பரவாக்கி அதில் குடிஇருத்தினோம்.ரேகாவும் முதல் நான் சொன்ன கொழும்பு பெண்களின் அனைத்து அம்சங்களும் அடங்கிய பெண்ணாக இருந்தாள். அந்தவருடம் பத்தாவது படித்துகொண்டிருந்தாள்.அவளிடம் ஒருபார்வைக்காகவே எனது நண்பர்கள் ஏன் நான் உட்பட அவர்கள் வீட்டுக்கு முன்னாலை அடிக்கடி போய்வருவம்.அவர்கள் இருந்த வீட்டை பொதுவாக எல்லாரும் பழைய வீடு என்றுதான் சொல்லுறது வழைமை.அதன்பின்னர்தான் மெல்லஅவர்களைப்பற்றிய கதை ஊரில் அடிபடத்தொடங்கியது ரேகாவின் தந்தை கொழும்பில் கணக்காளராய் வேலை பார்த்தவராம் அவர் மட்டக்கிளப்பு பெண் ஒருத்தியை காதலித்து தன் தாய் தந்தை உறவுகாரர்களின் சம்மதமின்றி கலியாணம் செய்ததால்தான் எங்கள் ஊரில் யாரும் அவருடன் கதைப்பதில்லையென்று தெரிய வந்தது.

அதுமட்டுமல்ல அவர்எங்களிற்கு நெருங்கிய உறவு என்றொரு மேலதிகதகவலும் கிடைக்கவே.அதை உறுதி செய்ய ஒருநாள் வெத்திலை பாக்கு இடித்துக்கொண்டிருந்த அம்மம்மாவை ஓரம்கட்டி "எணோய் உந்த பழைய வீட்டிலை குடியிருக்கிற கொழும்பாக்கள் எங்களுக்கு சொந்தமாம் உண்மையோ" எண்டு கதையை தொடக்கினதுதான் தாமதம் அம்மம்மா கோபமாய் "அந்த பூராயம் உனக்கு எதுக்கு ஆனால் அந்த வீட்டுப்பக்கம் போகாதை ஏதும் தந்தாலும் வாங்கிக் குடிக்காதை உன்னை பாயோடை ஒட்டவைச்சிடுங்கள் அதுகள் மந்திரம் செய்யிற ஆக்கள்" எண்டார்.மந்திரம் செய்யிற ஆக்களா?? ஏதும் வாங்கிக் குடிச்சா பாயோடை ஒட்ட என்ன பிசினா குடிக்க தாறவை எண்டு யோசிச்சபடி எப்பிடியாவது அம்மம்மாவிடம் முழுவிபரத்தை அவர் வழியிலேயே போய் கேட்டறிய எண்ணி நானும். உண்மையோணை நான் அந்தப்பக்கம் போறேல்லை பிறகேன் ஏதும் வாங்கி குடிக்கப்போறன் சொந்தம் எண்டு கேள்விப்பட்டன் அதுதான் என்னமுறை எண்டு கேட்டன். சரி அவை ஆர் எண்ட .அம்மம்மா தொடங்கினார் எடேய் அவன் எனக்கு பெறாமகன் முறை பெடி நல்லவன் ஆளும் நல்ல வடிவான ஆம்புளை நல்ல கெட்டிக்காரன் படிச்சு எக்கவுண்டன் வேலையும் கொழும்பிலை எடுத்து நல்ல சம்பளம் ஆனால் அவனை உந்த மட்டக்கிளப்பள் மருந்து குடுத்து மயக்கிபோட்டாள் "எண்டார்.

அதுக்கு நான் சொன்னன் ஏனணை அவாவும் நல்லாப்படிச்சு கொழும்பிலை எக்கவுண்டன் தானாமே பிறகேன் இவரை மயக்கவேணும்" எண்டதும்.அம்மம்மா கோவமாய் "எடேய் அவளெங்கை படிச்சவள் அவள் மந்திரம் மாயம் செய்து எக்கவுண்டன் ஆகிட்டாள் அதமாதிரி இவனையும் மயக்கிபோட்டாள் எண்டு"பாக்குஉரலை ஓங்கி குத்த நானும்எனக்கும் வந்தவிசயம் முடிஞ்சுது அதாவது ரேகான்ரை அப்பா அம்மம்மாக்கு பெறாமகன் எண்டால் எனக்கு சித்தப்பாவோ பெரியப்பா முறை அப்ப ரேகா தங்கை முறை.அட சே கிழவி இப்பிடியொரு குண்டைத்தூக்கி போட்டிட்டுதே எண்டு கவலையானாலும்.அம்மம்மா சொன்ன மந்திர விசயம் சிலநேரம் உண்மையா இருந்தால் நான் படிச்சு சோதினை எழுதி பாசாகிறதெல்லாம் நடக்காத அலுவல் அதாலை ரேகான்ரை அம்மாட்டை மந்திரத்தை கேட்டுப்படிச்சு பேசாமல் ஒரு டொக்ரர்ஆகவோ இஞ்சினியராவே வந்திடவேணும் என்று நினைச்சபடி.வழைமையான கோயில் மடத்தடிக்கு போகவும் அங்கு தயாராய் இருந்த என் நண்பன் இருள்அழகன் என்னிடம் டேய் வீட்டிலை கேட்டனியா ரோகா என்ன முறையாம் உனக்கு எண்டவும். நான் "அட போடா அவள் எனக்கு தங்கச்சிமுறையா போச்சுது எண்டு கவலையோடை சொன்னதுதான் தாமதம்.

எங்கள் ஊர் கோயில் குளத்தில் இருந்த அத்தனை தாமரைப்பூவும் இருள்அழகனின் முகத்தில் மலர்ந்தது போல ஒரு புன்னகையுடன் பிள்ளையாரான உண்மையாவோடா எண்டவன் சரி அப்ப போய் கொக்ககோ கோலா குடிச்சிட்டு வருவம் வா மச்சான் எண்டு கூப்பிட்டான்.அட ஒரு பிளேன்ரீ கூட வாங்கித்தாராதவன் ரேகா எனக்கு தங்கை முறை எண்டதும் கொக்கோ கோலா குடிக்ககூப்பிடுறான் பின்னாலை ஏதோ விலங்கம் இருக்கு எண்டு நினைச்சபடி போய்விட்டேன்.நான் நினைச்சபடியே ஒருநாள் இருள்அழகன் என்னிடம் டேய் ரேகாவை நான் லவ்பண்ணுறன் அவளுக்கும் விருப்பம் இருக்கு எண்டுதான் நினைக்கிறன் ஆனால் நேரை கேக்க பயமா கிடக்கு அவளின்ரை மனசை கவருற மாதிரி நீதான் எனக்கு ஒரு கடிதம் எழுதித்தர வேணுமாடா எண்டு கெஞ்சினான்.ஆனால் ரேகாவிற்கு அப்பிடி ஏதும் விருப்பம் இருந்ததாய் எனக்கு தெரியேல்லை ஆனால் நம்ம இருள்அழகன் கடிதம் குடுத்து பெட்டையளிட்டை பேச்சு வாங்கினது அது ஒண்டும் முதல்தரம் இல்லையே அதுமாதிரி ரோகாவிட்டையும் பேச்சு வாங்கிறதை கூத்துப்பாக்கலாம் எண்டு நினைச்சு "குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே" என்று என்னுடைய வழைமையான நக்கல் பாணியிலேயே கவிதை வடிவில் எழுதி நண்பனிடம் கொடுத்துவிட்டேன்.ஆனால் நான் ஒன்று நினைக்க ரேகா ஒன்று நினைத்துவிட்டாள்.

அந்தக்கடிதத்தை அவள் அழுதபடியே தன்வகுப்பாசிரியையிடம் காட்ட. அந்த ஆசிரியை அதிபரிடம் காட்ட. அதிபர் ரேகாவையும் கூட்டிக்கொண்டு எங்கள் பாடசாலை அதிபரிடம் வந்து முறையிட. ஒரு தலைமை மாணவன் வந்து எங்கள் வகுப்பில் இருள்அழகனை அதிபர் கூப்புடுறார் என்றுவிட்டு போனான்.இருள்அழகனும் குடும்பத்தை விட்டு பிரிந்து போகும் புதுமணப்பெண்ணைப்போலை எங்களை பார்த்தபடி போய்விட்டான்.கொஞ்ச நேரத்தாலை வேறையொரு தலைமை மாணவன் வந்து என்னைக் கூப்பிட்டான். நண்பன் என்னை போட்டுக்குடுத்திட்டான் எண்டு எனக்கு விளங்கிவிட்டது . நான் அதிபர் அறைக்கு போனதும் அங்கை இருள்அழகன் மேசைக்கு கீழே தலையை குனிந்தபடி நிக்க அதிபரின் பிரம்பு இருள்அழகனின் பின்பக்கத்தில் தூசு கிழப்பிக்கொண்டிருந்தது. என்னைக்கண்டதும் அதிபர் அடியை நிப்பாட்டிவிட்டு என்னைப்பாத்து வாங்கோ கவிஞரே எண்டார். அதைகேட்டு சந்தோசப்படவா முடியும். எனக்கும் தூசு பறக்கபோகுது எண்டு பயந்தபடி நிக்க அதிபர் என்னைப்பாத்து உனக்கு அடிச்சு பிரயோசனமில்லை அதாலை நீ வீட்டைபோய் அப்பாவை கூட்டிக்கொண்டுவா எண்டார். எதுக்கு எண்டு யோசிக்கிறீங்களா??வேறையெதுக்கு பள்ளிக்கூடத்தை விட்டு நிப்பாட்டத்தான்.