Navigation


RSS : Articles / Comments


சொல்லமுடியாத கதை

2:15 PM, Posted by சாத்திரி, No Comment

அவனைச்சுற்றி நின்று அனைவரும் கை தட்டி வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். அப்பொழுது யாரோ அவனை தள்ளிவிட்டது போல இருந்தது . திடுக்கிட்டு விழித்தான் விமானம் சிங்கப்பூரின் சாங்கிவிமான நிலையத்தில் தரையிற்ங்கிக்கொண்டிருந்தது. தங்கள் பயணத்தை நல்லபடியாக முடித்தபயணிகள் விமானிக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக கைதட்டிக்கொண்டிருந்தனர் என்பதது அப்பொழுதான் அவனிற்கு தெரிந்தது

0000000000000000

நானும் விதவைதான் எனக்கு யுத்தத்தின் வலி தெரியும் எனவே சமாதானம் வேண்டும் என்றபடி சமாதான விதவைத் தேவதையாக வாக்கு கேட்டு சந்திரிகா ஆட்சியில் அமர்ந்து பேச்சு வார்தைகளும் தொடங்கி விட்டிருந்த காலகட்டம்.சந்திரிக்கா தேர்தலில் நிற்கும் பொழுதே புலிகளிற்கும் அவரிற்கும் சில இரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து சில உறுதி மொழிகளும் பரிமாறப்பட்டிருந்தது.இவை சந்திரிக்காவின் சிறுவயது தோழரும் அவரின் குடும்ப நண்பருமான குமாரசாமி வினோதன் ஊடாக நடைபெற்று முடிந்திருந்தது

000000000000000

தாய்லாந்தின் தலைநகரிற்கு வெளியே ஒரு கிராமத்தில் தங்கியிருந்த அவனிற்கு இலங்கைக்கு போகும்படி உத்தரவு கிடைத்தது. தன்னிமிருந்த கடவுச்சீட்டுக்களையெல்லாம் எடுத்து வரிசையாய் அடுக்கி பிரித்துப்பார்த்தவன். அதில் இரண்டை தெரிவுசெய்து எடுத்து இந்தமுறை சிங்கப்பூர் கிறீன்காட் இலங்கை பாஸ் போட்டிலையே போவம்.அது நல்லது எண்டு முடிவு செய்தவன். வேறொரு கடவுச்சீட்டில் தாய்லாந்திலிருந்து வெளியேறியவன். சிங்கப்பூரில் சிறீலங்கா கடவுச்சீட்டில் உள் நுளைந்தான். அன்றிரவே மீண்டும் சிங்கப்பூரிலிருந்து கொழும்பு செல்லவேண்டும். இலங்கையில் சிலரிற்கு பரிசு கொடுப்பதற்காக சில வாசனை திரவியங்களை (பெர்பியூம்) வாங்கினான். உலகத்திலை எத்தினை விதமான நல்ல வாசனைத்திரவியங்கள் விதவிதமாய் இருந்தாலும் எங்கடையளிற்கும் சிங்களவனுக்கும் சாளியை விட்டால் விட்டால் வேறையொண்டும் தெரியாது எண்டு நினைத்தபடி சாளி பெர்பியூம் நலைந்து லோக்கல் றே பன் கூலிங்கிளாஸ் நாலைந்து. லஞ்சம் எல்லாம் வாங்கியாச்சு என்று நினைத்தவன். காய்..லா என்று லா போட்டபடி .அவளும் வந்து சேர அவர்களின் பொரும்பாலும் ஆங்கிலமும் கொஞ்சம் தமிழும் கலந்தஉரையாடல் தொடங்கியது. அவளுடன் சேர்ந்து சாப்பிடலாம் வா தாய்லாந்திலை நாசிகொறியிங்கும். மீ கொறியிங்கும் சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு சிரங்கூன் பக்கம் போய் அன்னபூரணாவிலை தோசை சாப்பிடுவம் என்று புறப்பட்டார்கள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே அவளிடம் தன்னுடைய கடவுச்சீட்டை கொடுத்தவன். வழமையாய் சொல்லுற விசயம்தான் கொழும்பிலை இருந்து வேறை யாருடையதாவது போன்வந்தால் உடைனை உன்னட்டை இருக்கிற யெர்மன் நம்பருக்கு தெரிவிச்சுவிடு அவ்வளவுதான்.

எப்படா இந்த தொழிலை விடப்போறாய் .. டா

மை கோட்..இது தொழிலில்லை லா.. இது வேறை...லா.

இதையேதான் எப்பவும் சொல்லுறாய்.லா.

இதையேதான் நீயும் திரும்ப திரும்ப கேட்கிறாய் சரி சண்டையை விட்டிட்டு வேறை ஏதாவது பேசலாமா.லா

ஓ கே இன்றைக்கு என்ன புறோக்கிறாம்.

பெரிசா ஒண்ணுமில்லை நான் இரவே கொழும்பு போறேன். லா

ஓ தோசை தின்னத்தான் கூப்பிட்டியாடா??

கோபிக்காத லா. சீக்கிரமே திரும்ப வந்திடுவன்.வந்து பெரிய விருந்தே வைக்கிறன் என்று சொல்லி கண்ணடித்தான்
சாங்கி விமான நிலையத்தில் அவளின் உதட்டில் ஒரு முத்தம் வைத்து விட்டு உள் நுளைந்தவன். யாராவது வியாபாரிகளை எதிர்பார்த்து சுற்று முற்றும் பாக்கும் போதே கொழும்பா போறீங்கள் என்றபடி ஓடி வந்தவர்கள். ஓவர்ஸ்ரேயா காசு வேணுமா என்றார்கள். அப்படி வந்தவர்களில் ஒரு முஸ்லிம் வியாபாரியின் பொதியை வாங்கியவன் ஓவர் ஸ்ரே யெல்லாம் இல்லை உங்க ஆளிட்டை என்னை கொழும்பிலை கொண்டு போய் இறக்கிவிடச்சொல்லி போனிலை செல்லிடுங்க. என்றான். உங்க பேர் என்ன என்றவரிடம் கடவுசீட்டில் இருந்த பெயரை ஞாபகப்படுத்தி சொல்லிவிட்டு உள் நுளைந்தான்.

0000000000000000

கொழும்பு விமான நிலையத்தில் வெளியே வந்தவன் அங்கு சிங்கப்பூர் பொதிகளிற்காக தயாராக நின்ற முஸ்லிம் வியாபாரியிடம். பொதிகளை கொடுத்தவன். தன்னை ஏதாவது நல்லதொரு லொட்ஜில் இறக்கிவிடச்சொன்னதும். அவரும் தனக்கு தெரிந்த ஒரு லொட்ஜ் இருப்பதாக சொல்லி ஜம்பட்டா வீதியில் இருந்த முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான லொட்ஜில் இறக்கிவிட்டிருந்தார். கொழும்பு போய்க்கொண்டிருக்கும் பொழுதே தான் வந்துவிட்ட செய்தியை சிலரிற்கு கைத்தொலைபேசி மூலமாக தெரிவித்துவிட்டிருந்தான்.

அன்றிரவு ஜிந்துப் பிட்டியில் இருந்த வேணிபாரில் ஒரு சந்திப்பு. அங்கு சந்தித்தவர்களுடன் தண்ணியடித்துவிட்டு அங்கேயே கோழி புரியாணியும் சாப்பிட்டுவிட்டு நல்ல போதையில் ஆட்டோவில் ஏறிவந்து லொட்ஜ் றூம் கட்டிலில் அப்படியே விழுந்தவன் கண் அயர்ந்து போகும் போதே யாரோ கதவில் பலமாக தட்டினார்கள்.எவண்டா இந்த நேரத்திலையெண்டு நினைத்தபடி கதவைதிறக்கவும் தயாராய் சாதாரண உடையில் நின்றிருந்த இருவர் பாய்ந்து அவனை கட்டிலில் தள்ளி கையில் விலங்கை போட்டவர்கள். அவனின் உடுப்பு பையை ஒருவன் துளாவ மற்றையவன் அவனின் கைத் தொலைபேசியை நோண்டினான். அவனிற்கு விடயம் ஓரளவிற்கு புரிந்தது. ஆனால் எப்படி என்று புரியவில்லை. எது எப்பிடியானாலும் ஆங்கிலத்லேயே கதைப்தாக முடிவெடுத்தவன். ஆங்கிலத்தில் நீங்கள் யார் என்ன வேணும் என கத்தினான். கள்ள நாயே என்றபடி ஒரு உதைதான் விழுந்தது. அதற்குமேல் எதுவும் பேசாதவர்கள். அவனது கடவுச் சீட்டையும் அவனது பையையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து அங்கு நின்ற ரொயோட்டா டொல்பின் ரக வானில் உள்ளே தள்ளினார்கள். உள்ளே இன்னொருத்தனும் ஒரு பெண்ணும் இருந்தார்கள்.
உள்ளையிருந்த பெண் நாம்பன் மாட்டுக்கு பல்லை பிடிச்சு பாக்கிற மாதிரி அவனின்ரை நாடியை ஒரு கையாலை பிடிச்சு வலம் இடமாக திருப்பி பாத்திட்டு சிங்களத்தில் இவனை தெரியேல்லையெண்டவள். அவனிடம்.

டேய். பு....மகனே நீ புலிதானே

எக்ஸ்சியூஸ் மீ ஜ டின்ட் அண்டஸ்ராண்.

தமிழிலை கதையடா வேசைமேனே எண்டபடி அவளின் பங்கிற்கு அவனின் கதைப் பொத்தி ஒரு அறை விட்டாள்

அவனின் சேட் ஒன்றை எடுத்து ஒருத்தன் அவனது கண்ணை கட்டினான். வான் ஒரு இருபது நிமிசமாய் ஓடிக்கொண்டிருந்தது. இப்பிடித்தான் அவன் பாத்த ஒரு இங்கிலிஸ் படத்திலை கீறோவை கண்ணை கட்டி கொண்டு போவார்கள். கீறோ போகிற வழியை அக்கம் பக்கத்திலை கேக்கிற சத்தத்தை வைச்சு அடையாளம் பிடிப்பார். பிறகு அதே மாதிரி ரஜனியும் ஒரு படத்திலை நடிச்சிருந்தார். இவனும் அது மாதிரி வெளியிலை என்ன சத்தம் கேக்குதெண்டு காதை குடுத்துப் பாத்தான். ஆனால் சிங்களவன் புத்திசாலி வானிலை சிங்கள பாட்டை சத்தமாய் போட்டிருந்தான். அதலை ஒண்டும் கேக்கேல்லை.கடைசியிலை றெயின் ஒண்டு கோணடிச்ச சத்தம் மட்டும் கேட்டது. அது ஏதோ அவனிற்கு கடைசியா ஊதின சங்கு மாதிரியே இருந்தது.

வான் ஒரு இடத்தில் நிண்டது அவனை இறக்கி போனவர்கள் கண்கட்டை அவித்து விட்டதும் சுத்திவர பார்த்தான். அது போலிஸ் நிலையம் அல்ல. சாதாரண ஒரு வீடு போல இருந்தது.ஆனால் புலனாய்வு பிரிவின் இரகசிய சித்திரவதைக்கூடம் என்று மட்டும் புரிந்தது. அவனை கதிரையில் இருத்தியதும். அவள் தான் விசாரணை தொடங்கினாள். இதா பார் ஒழுங்கா உண்மையை ஒத்துக் கொண்டா நீ உயிரோடை போகலாம்.கணணியில் கிராபிக் செய்த ஒரு படத்தையும் அதே படத்தை கையால் ஓவியமாய் கீறியிருந்த படத்தையும் காட்டியபடிசெல்றா இந்த பெடிச்சியை உனக்கு எப்படி தெரியும்.நீ புலிதானே .அவளின் வட்டார வழக்கு பேச்சிலிருந்து அவள் மட்டக்கிளப்பு அல்லது அம்பாறை எண்டு புரிந்தது.

நோ சிஸ்ரர் எண்டவனிற்கு பேந்தும் பார் இங்கிலிசு எண்டு இன்னொரு அறை விழுந்தது. "சொறி "வளந்தது படிச்சது எல்லாமே சிங்கப்பூர். வேணுண்ணா என்னோடை டொக்கிமென்ன்ஸ் செக் பண்ணி பாருக்க . எனக்கு தமிழ் இப்பிடித்தான் வரும்.என்றான்.
அவளின் விசாரண நடந்து கொண்டிருந்தபோதே அங்கிருந்த மேசையில் அவனது பொருட்களை பரப்பி வைத்து அவனிடமிருந்த விசிட்டிங் காட்டுகள். அவனது சிங்கப்பூர் ஆவணங்களை மற்றையவன் பரிசோதித்துக்கொண்டிருந்தான்.

இனி சரிவராது எங்கடை வழைமையான விசாரணையை தொடங்க வேண்டியதுதான் என்று அவள் சிங்களத்தில் சொன்னதும். இருவர் வந்து அவனது உடுப்புக்களை கழற்றி நிருவாணமாக்கி அங்கிருந்த இரண்டு தூண்களிற்கிடையில் அவனது கைகளையும் காலையும் அகட்டி கட்டினார்கள்.டவின்சியின் மான் பவர்(man power) ஓவியத்தை போன்ற நிலையில் தொங்கிக் கொண்டிருந்தவனை
ஒருவன் வளைந்து கொடுக்கும் ஒரு வித பிளாஸ்ரிக் குளாயால் அவனது பின் பக்கம் முழுதும் முடிந்தவரை ஓங்கி அடித்துக்கொண்டிருந்தான்.அவன் ஏற்கனவே தண்ணியடித்திருந்ததால் வாங்கிய அடி நிருவாணமாக்கப்பட்ட கூச்சம் தூண்களில். தொங்கிய வலி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை.ஆனால் அவன் வாய் மட்டும் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருந்தது.

அப்பொழுது ஒருத்தன் சாராய போத்தலுடனும் சாப்பாட்டு பார்சல்களுடனும். உள்ளே நுளைந்தான் . வாங்கோ காசிம் நானா. என்று வரவேற்றார்கள். இவனை தொங்கவிட்டு அவர்கள் தண்ணியடிக்கத் தொடங்கியிருந்தார்கள். அவர்களின் சிங்களத்திலான உரையாடல்களில். அவளின் பெயர் ராணி.இன்னொருத்தன். உடுகொலஇவன்தான் அந்தக் குழுவின் பொறுப்பாளர்.. மற்றையவன்.பெர்ணான்டோ. அடுத்தவன் றஜித். என்பது மட்டும் அவனிற்கு புரிந்தது. கையில் சாராய கிளாசுடன் வந்த ராணி அவனின் வாயில் வைத்து பருக்கினாள்.. அவனிற்கும் அது தேவையாக இருந்தது. பின்னர் தன்து கைகளை கீழே கொண்டு சென்றவள். அவனது உறுப்பை விரலால் தட்டியபடி நீ எப்பவுமே இப்பிடித்தான் கிறீன் சேவ் செய்வியா என்றவும். மற்யைவவர்கள் கிறீன் சேவ் இல்லை கிளீன் சேவ்..ராணி தன்னுடைய வேலையை தொடங்கிட்டாள் என சொல்லி சிரித்தனர்.
மீண்டும் மேசைக்கு போனவள் ஒரு கிளாஸ் சாராயத்தை ஒரு மடக்கில் குடித்துவிட்டு திரும்ப வந்தது இனி உனக்கு தமிழ் தானாய் வரும் என்றபடி ஒற்றைக் கையை கீழே கொண்டு போனாள். இப்பொழுது அவளது உள்ளங்கையில் அவனது இரண்டு விதைகளும். உள்ளடங்கியிருந்ததுமெதுவாக கையை இறுக்கி பிசைய தொடங்கினாள். வலி உச்சத்தில் ஏறிக்கொண்டிருக்க அவன் கால்கள் நெம்பி பெருவிரல்கள் தூணைத்தொட்டது. வானத்திலிருந்த நட்சத்திரங்கள் இறங்கிவந்து அவனது தலையை சுற்றி வட்டமிட கண்கள் இருண்டது. மீண்டும் கண்விழித்தபொழுது அவர்கள் உணவருந்தியபடி இருந்தார்கள். ஆனாலும் அசையாமல் அவர்கள் பேசுவதை கேட்டான்.

தவறான ஆளை பிடிச்சிட்மோ. ??

ஏன் அப்படி சொல்லுறாய்???

அனிட்டை இருந்த விசிட்டிங் காட்டுகள் எல்லாம் பெரிய பிஸ்னெஸ் ஆட்கள். அரசியல் வாதிகள். போலிஸ் அதிகாரிகள் பெயர்கள் இருக்கு.

சும்மா எங்கையாவது பொறுக்கியெடுத்து சேர்த்து வைச்சிருந்திருப்பான். எதுக்கும் நாளைக்கு அந்த இலக்கங்களிற்கு தொடர்பு கொண்டு கேட்டு முடிவு செய்வம்.

எதுக்கும் சலாவுதீன் வரட்டும். அவனுக்குத்தான் யாப்பாணியளை தெரியும். ..இல்லாட்டி குணாளனிற்கு கட்டாயம் தெரியும்.

குணாளன் இப்ப சி.பி.சி.ஜ.டி. நிலாப்தீனோடையல்லோ??. அவங்களிட்டை குடுக்கக்கூடாது நாங்களே கண்டுபிடிக்கவேணும்.

சிலநேரம் இவனின்ரை தொடர்புகள் பெரிய இடமெண்டால் எங்களிற்கும் பிரச்சனை இவனை அந்தப் பெண்ணோடை சிலர் பாத்திருக்கிறதா சொலலியிருக்கிறாங்கள். எதற்கும் நாளைக்கு அந்த லொச்சிற்கு நேரடியா அவனையும் கொண்டு போய் விசாரிக்கலாம். காசிம் நானா நீங்கள் இவனை படமெடுத்து மட்டக்களப்பிற்கு போய் விசாரிட்டு வாங்கோ.

என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது இருமல் அவர்கள் பார்வையை திருப்பியது
தொங்கிய தலையை நிமிர்த்தி பிளீஸ் வோட்டர். வோட்டர்.. இவனுக்கு எப்பிடியடிச்சாலும் தமிழ் வருதில்லையென்றபடி ராணி திரும்பவும் சாராயத்தை போத்தலோடு எடுத்துப்போய் அவன் தலையை நிமிர்த்தி ஆட்டுக்கு தவிட்டுத் தண்ணி பருக்குவது போல பருக்கினாள். அவனிற்கு அதற்கு மேலும் முடியாமல் குமட்டிக்கொண்டுவரவே ஊவேக்......
வேணிபார் கோழிப்புரியாணி கூழாக பாய்ந்ததில் பாதி ராணியையும் நனைத்துவிட கோபமடைந்த ராணியின் உள்ளங்கைகளில் மீண்டும் அவனது விதைகள்.

0000000000000000000000

அதிகாலையளவில் கண் விழித்திருந்தான்.அவன் மயங்கியிருந்தானா அல்லது நித்திரையாகிப் போயிருந்தானா?என்பது நினைவில் இல்லை. அவன் எடுத்திருந்த சத்தியின் நாத்தம் அந்த அறையெங்கும் பரவியிருந்தது. தாகம் தொண்டையை அடைத்தது. அப்பொழுதுதான் அவனிற்கு உடல்வலியனைத்தும் தெரிந்தது. தலையில் பெரியதொரு பாறாங்கல்லை கட்டிவிட்டது போல பாரமாயிருந்ததோடு தலை வெடித்துவிடுகிற அளவிற்கு தலைவேறு வலியெடுத்தது. மூத்திரம் பெய்யவேண்டும் போல் முட்டியிருந்தது இருந்தது ஆனாலும் முடியவில்லை அவனது விதைகள் இரண்டும் வீங்கி நாவல் நிறமாய் மாறிவிட்டிருந்தது.மெதுவாய் முக்கியபடி சொட்டுச் சொட்டாய் பெய்து முடித்தவனிற்கு கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.


ஆனால் அந்த இடத்திலேயே பெய்ததால் மீண்டும் அடிவிழலாம் என அவன் எதிர்பார்த்தான். அடுத்து என்ன செய்வார்கள். கொலைசெய்து எங்காவது வீசி விடுவார்களா? அல்லது நான் யாரென்பதை கண்டு பிடித்து சிறையில் வாழ்க்கை கழியப்போகின்றதா? நேற்று அவனை சந்தித்தவர்கள் அவனை தேடியிருப்பார்களா? சிங்கப்பூரிற்கு செய்தி போயிருக்குமா? இப்படி ஆயிரம் கேள்விகளை திரும்ப திரும்ப அவன் மனதில் கேட்டுக்கொண்டிருக்கும் போதே விடிந்துகொண்டிருந்தது.
காலை கதவைத்திறந்த ஒருத்தன் நாற்றத்தில் முகத்தை சுழித்தபடி மீண்டும் கதவை சாத்தினான். சில நிமிட நேரத்தில் மீண்டும் கதவு திறந்தது அவனுடன் இன்னொருத்தன் கையில் வாளித் தண்ணீரும் துணியோடும் நின்றிருந்தான். வந்தவன் சே இவங்கள் என்ன மனிசரா மிருகங்களா இரவு முழுக்க தொங்கவிட்டிருக்கிறாங்கள் என சிங்களத்தில் திட்டிய படியே அவனது கட்டுக்களை அவிழ்த்து கிழே இறக்கவும் அவன் நிற்க முடியாமல் கீழே விழுந்து படுத்துக்கொள்ள. அவனை தூக்கியபடி சிங்களம் தெரியுமா? என்றான். அவன் பேசாமல் இருக்க யு ஸ்பீக் சிங்களம் என்றான். அவன் இல்லையென தலையாட்டி விட்டு தண்ணிகுடிக்கவேணும் என சைகை மட்டும் செய்தான். அவனை கதிரையில் இருத்தி ஒரு போத்தலில் தண்ணியை கொண்டு வந்து கொடுத்தவன். அந்த இடத்தை துப்பரவு செய்து கொண்டிருந்தவனை ரவி இவனை கொண்டுபோய் குளிக்கவிடு என்றான்.
அவனை குளிப்பதற்கு கூட்டிப்போன ரவி

நான் வடமராச்சி பிடிச்சு அஞ்சுமாதமாகிது டீ..ஓ .போட்டிட்டு இஞ்சை வேலைக்கு வைச்சிருக்கிறாங்கள். வெளிநாடு போக வந்தனான் சந்தேகத்திலைதான் பிடிச்சவங்கள். நீங்கள் ஊரிலை எந்த இடம்?

சிங்கப்பூர்

ஊரிலை சிங்கப்பூரா?? அது எங்கையிருக்கு?

சிங்கப்பூரிலை இருக்கு.

இந்த வாய்க்கொழுப்புக்குத்தான் பிடிச்சிருப்பாங்கள். போய் குளி.

குளித்து முடித்து வந்தவன் அந்த சிங்கள அதிகாரியிடம் வலிக்குளிசை கேட்டு வாங்கி போட்டுக்கொண்டான் அவன் பால்த்தேனீரும் வாங்கி கொடுத்திருந்தான்.
0000000000000
முதல்நாள் அவனைப் பிடித்த குழுவினருடன் மேலும் இருவர் வந்திருந்தனர். புதிதாய்வந்தவர்களில் ஒருவன் என்ன மச்சான் எப்பிடி இரிக்கிறாய். என்னை ஞாபகம் இரிக்கா என்றான். அவன் இல்லையென்று தலைமட்டுமஆட்டினான் நான் நம்பத் திறீயிலை செல்வா வீட்டிலையெல்லாம் இரிந்தனான் என்னை தெரியாதா?? மீண்டும் அவனது கேள்விக்கு இவனது தலையசைப்பு மட்டுமே பதிலானது. அவனும் உடுகொல மட்டும் வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் உள்ளே வந்த உடுகொல சலாவுதீனிற்கு தெரியாதாம் என்றான். புதிதாய் வந்த மற்றையவன் அவனை சுவரோடு நிற்க வைத்து கையில் ஒரு சிலேற்றில் சில இலக்கங்களை எழுதிக்கொடுத்து பிடிக்கச் சொல்லி பல கோணங்களில் படம் எடுத்தான். காசிம் நானா நீங்கள் படங்களை பிறின்ட் போட்டு மட்டக்களப்பிற்கு போய் விசாரிச்சு விபரங்களை கொண்டுவாங்கோ என்று உத்தரவிட்ட உடுகொல ராணி நாங்கள் இவனை அந்த லொட்சிற்கு அழைத்து போகலாமென்றான்.

அவன் கண்கள் கட்டப்பட்டது .இப்பொழுது அவர்கள் பயணித்தது போலீஸ் ஜீப் ஆனால் அனைவரும் சாதாண உடையில் தான் இருந்தனர் கட்டியிருந்த அவனது கண்களை அவிழ்த்தனர். போலீஸ் ஜீப் கிறீன் வீதியிலிருந்த பாரிஸ் லொட்ஜின் முன்னால் நின்றது. இது இலங்கையின் பிரபல பயண முகவரான பாரிஸ் தவம் என்பவரிற்கு சொந்தமானது. போலீஸ் ஜீப்பை பார்த்துமே அனைவரும் அறைகளிற்குள் பதுங்கிக்கொண்டனர். காரணம் அங்கிருந்தவர்கள் அனைவருமே வெளிநாடு போவதற்காக ஏஜென்சிகளிடம் காசுகட்டிவிட்டு காத்திருந்தவர்கள். கைவிலங்கிட்ட அவனை இறக்கியவர்கள். லொட்ச் மனேச்சரிடம் போய் விபரத்தை சொல்லி உடுகொல தன் கையிலிருந்த அந்த பெண்ணின் படத்தையும் அவனையும் காட்டி இவர்களை இங்கு தங்கிருந்தாரகளா? என்றான். பழைய மனேச்சர் காசை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டதால் தான் புது ஆள் வேலைக்கு சேர்ந்து கொஞ்சக்காலம்தான். அங்கை இருக்கிற பழைய ஆட்களை கேட்கச் சொல்லி சொன்னார்.
அப்பொழுது அங்கு வந்த றூம் போய்(லொட்சினை கூட்டிதுப்பரவாக்கி அங்குள்ளவர்களின் தேவைகளை கவனிப்பவன்.)அவனிடமும் அதே கேள்வியை கேட்டதும் அவனை ஆழமாக பார்த்தவன் இல்லையென்று தலையாட்டிவிட்டு லொட்சில் இருந்த மற்றையவர்களை கதவைதட்டி வெளியே வரும்படி சொல்லிக்கொண்டே போனான். வெளியே வந்த பலரும் அவனைத் தெரியாதென்றே சொன்னவர்கள் பெண்ணின் ஓவியத்தை பார்த்து தலையை சொறிந்தனர். ஒருத்தி மட்டும் அவனை அங்கு கண்டதாகவும். ஆனால் அந்த பெண்ணை தெரியாது என்றும் சொன்னாள். அவனைத் தெரியும் என்றதுமே ..இரடி வெளியாலை வந்ததும் முதல்வேலையா வந்து உனக்கு காதைப்பொத்தி போடுறன் எண்டு மனதில் நினைத்துக்கொண்டான். அங்கிருந்து புறப்படும் பொழுது றூம் போயை பார்த்து கண்களால் நன்றி சொன்னவன். செய்தி சிங்கப்பூரிற்கு போய்விடும் என்கிற நம்பிக்கை அவனிற்கு பிறந்திருந்தது.


அவர்கள் அருகிலிருந்த பியூட்டி லொட்ச்.மற்றும் விவேகானந்தர் லொட்ச் ஆகியவற்றிலும் விசாரித்தார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் தெரியாதென்றும் சிலர். பார்த்மாதிரி இருக்கு என்றும் பதில் சொன்னதால்.அவர்களிடம் ஏதோ வெறுப்பணர்வு தோன்றியிருந்தது இப்பொழுது அவனது கண்கள் கட்டப்படவில்லை ஜீப் மருதானை காவல் நிலையத்திற்கருகில் இருந்த காவல்த்துறையினரின் குடியிருப்பில் நுளைந்தது. அந்த அறையில் நுளைந்தபொழுதுதான் அவன் அங்குதான் முதல்நாள் இரவு தங்கவைக்கப்பட்டிருத்தான் என்று அவனிற்கு புரிந்தது. இப்பொழுது அவனிற்கு பசி வயிற்றை விறாண்டியது. மீண்டும் தலைவலிக்கத்தொங்கியிருந்தது.அப்பொழுது உடுகொலவின் கைத்தொலைபேசியடிக்க அதை எடுத்தவன் வெளியே போனான். சில நிமிட நேரத்தின் பின்னர் உள்ளே வந்தவன். மற்றயவர்களையும் வெளியே அழைத்தான். சிங்கப்பூரிற்கு தொலைபேசி போயிருக்குமோ என்று அவன் நினைத்துக்கொண்டான்.

00000000000000

மீண்டும் உள்ளே வந்தவர்கள் உடுகொல அவனிடம்

வினோதனை உனக்கெப்படி தெரியும்.

அவர் என்னுடைய றிலேசன் அங்கிள் முறை.

ஓ அப்பிடியா?

அவனது முகம் மாறியது உன்னை தேடி எல்லா போலிஸ் ஸ்ரேசனிற்கும் போன் போயிருக்கு.

ஓ றியலி ??

என்ன சாப்பிடுகிறாய்.

பிறியாணி.

00000000000000000

அன்றிரவு பொறளை இராணுவ மற்றும் காவல்த்துறை குடியிருப்பின் ஒரு தொடர்மாடி குடியிருப்பில் அவனது ஒற்றைக்கை மட்டும் ஜன்னலுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருந்தது. குளித்து முடித்து சுடிதார் அணிந்து வந்த ராணி அவன் முன்னால் ஒரு முறை சுழன்றவாறு நான் எப்பிடி இருக்கிறேன் என்றாள்.. ஊகூம்..பெரிய நதியா எண்டு நினைப்பு.கோயில் தேரிற்கு சீலையால் போர்த்தது போல இருக்கு என்று சொல்லாமென நினைத்தாலும் சுப்பர் என்றான். கதவைத் தட்டிய ஒரு போலிஸ்காரன் சாராயம் பியர் சோடா இரண்டு பிரியாணி பாசலை கொடுத்து விட்டு பவ்வியமாக விடைபெற்றான்.கைவிலங்கை கழற்றியவள் விலங்கின் இரண்டு பக்கத்தையும்காப்புப் போல் ஒரு கையிலேயே பூட்டினாள். இன்றிரவு நீ என்னுடைய பாதுகாப்பில்தான் இருக்கப் போகிறாய். ஒத்துளைத்தால் உனக்கு நல்லது இல்லாட்டில் நேற்றை இடத்தில் தொங்கவேண்டிவரும் என்றாள்.

என்னவேணும் பியரா சாராயமா ?

fist பாத்றூம் next பசி சைகையுடன் சேர்த்தே சொன்னான்.

வீட்டையும் நோட்டம்விட்டான் யாரும் தப்பிஓடிவிடாதபடி யன்னல் வெளியே இரும்புக்கம்பிகளால் ஒட்டப்பட்டிருந்தது.துணியெல்லாவற்றையும் கழற்றிவிட்டு போக சொன்னாள். கழிவறைக்கு போனவன் அப்படியே குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு அங்கிருந்த புளிச்ச நாத்மெடுத்த துவாயால் முன் பக்கம் மட்டும் மறைத்தபடி வந்தவனை ஏற இறங்க பார்த்த ராணி அவன் துவாயை பறித்துவிட்டு மீண்டும் கைகளை பின்பக்கமாக விலங்கிட்டு கதிரையில் தள்ளினாள்.தொலைக்காட்சியில் நீலப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இப்பொழுது அவனது விதைகள் அவளது உள்ளங்கைகளில் ஆனால் நசிக்கவில்லை .அவனின் காலகளை அகற்றி முழங்காலில் குனிந்தாள். உன்னை அவள் இவ்வளவு நசிச்சும் உனக்கு உனக்கு புத்திவரேல்லை. கீழே பார்த்து திட்டினான்.. அசையாதை அசையாதை .கொச்சிக்கடை அந்தோனியாரே வெள்ளவத்தை பிள்ளையாரே நேத்திக்கடன் வைத்தான். இரண்டு பேருமே கைவிட்டு விட்டனர். விலங்கிட்டிருந்த கைகளை சில வினாடிகள் இறுக்கப் பொத்திப் பிடித்தான் கைகளை விலங்கு அழுத்தியது மீண்டும் கைகள் லேசானது.அவளது பெருத்த உடம்பிற்கான காரணம் இப்பொழுது அவனிற்கு புரிந்தது .ம்.பரவாயில்லையே என எழுந்தவள் பியரை உடைத்து சில மடக்குகள் குடித்துவிட்டு அவனது ஒரு கை விலங்கை அகற்றி அவனது கையில் பியரை கொடுத்தாள். விலங்கின் திறப்பை ஒவ்வொருதடைவையும். பாதுகாப்பாக அங்கிருந்த அறையில் கொண்டுபோய் வைத்து கதவை பூட்டிவிடுவாள். அவளின் செய்கைகள் அனைத்தும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டதொரு புலனாய்வு அதிகாரியாகவே காணப்பட்டாள்.

00000000000000

நேரம் நள்ளிரவைத் தாண்டிக்கொண்டிருந்தது வீதி விளக்கின் வெளிச்சம் மெல்லிதாய் அறையை நிறைத்திருந்தது. அந்த படுக்கையறையின் கட்டிலில் அவனின் இடக்கை கட்டிலோடு மேற்பக்கமாக விலங்கிட்ட நிலையில் கலந்து முடித்த இருவரிற்கும் மூச்சுவாங்கியபடியிருக்க. அவளின் பருத்த உடல்பாதி அவன் மீது படர்ந்திருந்தது. அவன் கன்னத்து குழியினை விரலாம் மெதுவாய் வருடியவள் .எனக்கு உன்னிலை பிடிச்சதே இந்தக் குளிதான்.

நீ புலியில்லை எண்டு விசாரணயள்ளை தெரியிது.

அப்ப விடவேண்டியதுதானே ??

காசிம் நானா மட்டக்கிளப்பாலை விசாரண முடிச்சு வந்ததும் அங்கையும் உன்னை தெரியாதெண்டு சொல்லியிருந்தா உன்னை கோட்டிலை கொண்டுபோய் ஒரு ஜச்சிற்கு முன்னாலை லோக்கல் பொலிசிட்டை குடுத்திடுவம் பிறகு உன்ரை சொந்தக்காரங்கள் யாராவது வந்து கையெழுத்து போட்டு கூட்டிக்கொண்டு போகலாம்.

எதுக்கு என்னை அரஸ்ற் பண்ணீங்க??

பட்டிலங்தையிலை வெடிச்சு செத்த பெட்டையோடை கடைசியா ஒருத்தன் இரண்டுநாள் பாரிஸ் லொட்ச்சிலை தங்கியிருக்கிறான்.அவள் மட்டக்கிளப்பு மாமங்கம். அததான் காசிம் அங்கை போயிரக்கிறார் . அவனின்ரை பொலிஸ் பதிவு ஜடென்டி காட்டிலை திருக்குமார் எண்டு பெயர் இருக்கு அந்த ஜடென்டி படத்தை எடுத்து எல்லா லொட்ச் கோட்டல்கள் பொலிஸ் ஸ்ரேசன்கள் எல்லாம் அனுப்பி வைச்சனாங்கள். அப்பதான் ஒரு லொச்சிலை அதே மாதிரி ஒருத்தன் தங்கியிருக்கிறதா தகவல் வந்திச்சி. அதுதான் நீ...

இது லொட்ச் காக்காவின்ரை வேலையா என மனதிற்குள் நினைத்தவன். ..பட்டிலந்தை.. லேடி.. திருக்குமார் ..வெடிச்சது எதுவுமே புரியல்லை.என்னை பாத்தா அவன் மாதிரி இருக்கா??

உனக்கு எதுவுமே விளங்க வேண்டாம் வேண்டாம் அதுதான் நல்லது .

ஒண்ணு கேட்டா கோவிச்சசுக்க மாட்டீங்களே நீங்க சி ஜ டியா.

இப்ப அப்பிடித்தான் ஆனால் மின்னை அப்பிடியில்லை

அப்பிடின்னா??

அவள் கைகள் அவனது மார்பை வருடியபடியே ..நானும் சிங்களவனிற்கு எதிராதுவக்கு தூக்கினவள்தான். எங்கடை ஊரிலை ஈ;பி.ஆர்.எல்.எவ்வுக்கு போன முதல் பெடிச்சி நான்தான். இயக்கத்திலையே ஒருத்தரை காதலிச்சிருந்தனான் புலியள் ஈ.பி யை தடைசெஞ்சாப்பிறகு என்னையும் அவரையும் விசாரிச்சிட்டு விட்டிட்டாங்கள். நாங்கள் கலியாணம் செய்து எனக்கு பிள்ளையும் பிறக்க அவர் கட்டாறுக்கு போயிற்றார். எல்லாம் நல்லபடியாய்தான் போய்கொண்டிருந்தது. என்ரை அவரும் லீவிலை ஊருக்கு வந்திருந்தார் அந்த நேரம் இந்தியனாமிக்கும் புலியளிற்கும் சண்டை நடந்துகொண்டிருந்தது. இந்தியாவிலை நிண்ட பழைய இவற்ரை சினேதங்கள் ஈ.பி பெடியளும் ஊருக்கை இந்தியனாமியோடை திரிஞ்சவங்கள். இவர் வந்து நிண்டதை கேள்விப்பட்டு அடிக்கடி வந்திட்டு போவாங்கள். நாங்களும் வராதையெண்டு சொல்லோது. ஒருநாள் இரவு இதே மாதிரித்தான் நானும் அவரும் படுத்திருந்த நேரம் எங்கடை சொந்தக்கார பெடியன் ஒருத்தன் புலியிலை இருந்தவன். தீசன் எண்டு பேர் கதவிலை தட்டி என்ரை பேரை சொல்லி கூப்பிட்டான் அவசரமா துணியை சுத்திக்கொண்டு நான்தான் போய் கதைவை திறந்தன் இவரோடை கதைக்கவேணும் வரச்சொல்லுங்கோ எண்ட அவரும் பின்னாலை வந்திட்டார். என்னவெண்டாலும் இங்கை கதை அவர் வெளியிலை வரமாட்டார் எண்டு நான் அம்பிடிக்க . ஜயோ அக்கா ஒரு பிரச்சனையுமில்லை கதைக்கத்தான் எண்டு அவனும் அடம்பிடிக்க சொந்தக்கார பெடியன்தானே ஒண்டும் செய்யமாட்டானெண்டு அவரை வெளியாலை விட்டாலும் நானும் கொஞ்சம் பின்னாலை போனன் படலையடிக்கு போனதும் வெடிச்சத்தம் கேட்டிச்சு. மண்டை வெடி அவர் அதிலையே........ என்று சொல்லும் போது ராணியின் குரல் தளுதளுத்தது நின்று போய் அவனது மார்பில் சூடான சிலகண்ணீர் துளிகள் விழுந்ததை அவன் உணர்ந்தான். சில நிமிட அமைதியை அவனே கலைத்தான்.


அப்புறம் என்னாச்சு.??

அதோடை என்ரை விதியும் மாறிப்போச்சு. என்ரை மனிசனை சுட்டவனை கொல்லாமல் விடுறெல்லையெண்டு முடிவெடுத்தன். என்ரை புள்ளையை அம்மாட்டை குடுத்திட்டு ஆமியோடை போய் சேந்திட்டன்.அவனை மட்டுமே தேடினன் ஒம்பது மாதத்துக்கு பிறகு அவனை போட்டாப் பிறகுதான் என்ரை மனசு கொஞ்சம் ஆறிச்சிது.

ஓ அவனும் குளோசா?? பிறகெதுக்கு இப்பிடி நீங்க தொடந்தும்....இழுத்தான்.

பிறகு எங்கையாவது போய் என்ரை பிளையோடை வாழலாமெண்டுதான் நினைச்சனான். ஆனா புலியை பத்தி உனக்கு தெரியாது அது எங்கை போனாலும் விடாது. ஏதாவது அரபு நாட்டுக்கு போகலாமெண்டு நினைச்சன் அதக்கு என்னட்டை வசதியும் இருக்கேல்லை. வெளிநாடு போனாலும் உன்னை மாதிரி நான் படிச்ச ஆளும் இல்லை ஏதாவது வீட்டு வேலையள்தான் செய்யவேணும். அதோடை முதல்லை வெறும் மெசேச்குடுக்கிற ஆளாய் இருந்த என்னை சி.ஜ.டி யிலை சேர்த்து பயிற்சியளும் தந்து குவாட்டஸ் சம்பளம் எல்லாம் தாறாங்கள்.
என்னவோ ஒண்ணும் புரியல்லை ஆனா உங்களோடை ஸ்ரோறி பீலிங்கா இருக்கு சொறி. எனக்கு நீங்க அடிச்ச அடி ஒரே வலியா இருக்கு இன்னும் கொஞ்சம் விஸ்கி பிளீஸ் ..அப்பதான் தூங்கலாம்.
இப்ப எனக்கும் கவலையாத்தான் இருக்கு ஆனால் ஒண்டுமே செய்யேலாது என்றவள். அவன் மீதிருந்த நிரம்பிய ஆணுறையை உருவியெடுத்தவாறே துணியால் தன்னை சுற்றிக்கொண்டு அயையை விட்டு வெளியேறினாள்.

000000000000000


ஒரு கிளாஸ் நிரப்பி சாராயத்தை ஊற்றிவந்து அவனிடம் நீட்டியவள் அவன் குடித்து முடியும்வரை காத்திருந்து கிளாசை வாங்கியபடி உனக்கு இன்னொரு விடயத்தையும் சொல்லவேணும் நாளைக்கு உன்னை ஜட்சிற்கு முன்னாலை விடுதலை செய்யேக்கை நான் இப்பிடி நடந்ததா நீ வாயே திறக்கக்கூடாது அதுதான் உனக்கு நல்லது . அப்பிடி ஏதாவது நடந்தால் நீ எப்பிடியும் எங்களோடை கண்காணிப்லைதான் இருப்பாய் பிறகு கடல்லையோ களனி ஆத்திலையோ மிதக்கவேண்டிவரும். என்றவள் அவன்மீது போர்வையை போர்த்திவிட்டு "சரி படு நான் இஞ்சை வெளியிலைதான் படுத்திருப்பன்" என்படி விலங்கு சரியாய் பூட்டியிருக்கா என்று பார்த்து உறுதி செய்தவள் கதைவை பூட்டிவிட்டு போய்விட்டாள்.

000000000000

காசிம்மின் மட்டக்கிளப்பு அறிக்கை N.I.B அறிக்கை எல்லாம் வந்தது அவனை மருதானை நீதவான் முன்னிலையில் புறக்கோட்டை பொலிசாரிடம் C.I.D யினர் கையளித்தனர். அங்கேயே தயாராய் நின்ற வக்கீல் கையெழுத்திட்டு அவனை விடுதலை செய்தார். அங்கு வந்த ராணி அவனிடம் தனது கைத்தொலைபேசி இலக்கத்தை கொடுத்து உனக்கு எங்கை என்ன உதவி தேவையோ தராளமாய் எனக்கு போனடி தனது இலக்கத்தை கெடுத்துவிட்டு போனார்.அதன் பின்னர் அவனும் பாகிஸ்தானிற்கு தேங்காய் ஏற்றுமதி வியாபாரத்தினை அவனது பங்காளி சுமானந்த தேரரோடு தங்குதடையில்லாமல் தொடர்ந்ததோடு அடிக்கடி பொரளை ராணியின் குவாட்டசிற்கு பியரோடும். ஓல்ட் அரக்கோடும் போய்வருவதுமாய் அவர்களது நட்பு தொடர்ந்தது.

00000000000000

01.31.1996 திங்கள் அதிகாலை மீன்கள் பதனிடும் தொழிற்சாலையொன்றின் வாகனத்தரிப்பிடத்தில் வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறி ஒன்றினுள் அவன் தனியாக ஜட்டிமட்டும் அணிந்தபடி வியர்வையும் புளுதியுமாய் சிறிய மின்விளக்கு வெளிச்சத்தில் அதிகளவு சத்தம் எழுப்பாமல் கவனமாய் ஆனால்பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தவன். நேரத்தை பார்தான் அதிகாலை இரண்டை தொட்டுக்கொண்டிருந்தது அவனிற்கு பக்கத்தில் மசாயிர் அவனிற்கு உதவிக்கொண்டிருந்தான். சரிமச்சான் எல்லாம் முடிஞ்சுது இனி பின்னாலை கருவாட்டு கூடையளை அடுக்கினால்சரி என்றபடி வேகமாக இன்னொரு லொறியிலிருந்த கருவாட்டு கூடைகளை அந்த லொறிக்கு மாற்றிஅடுக்கி முடித்தவர்கள் அங்கு தொட்டியில் நிரம்பியிருந்த தண்ணீரில் உடலை கழுவி உடுப்பை மாற்றிபடியே அவன் மசாயிரிடம்..
மச்சான் நேரமாகுது நீ லொறியை எடு நான் காரிலை முன்னாலை போறன். என்றான்.

மச்சான் உன்னை நம்பித்தான் இரிக்கிரன் ஒண்டும் பிசவாது தானே

டேய் நான் அ..அ வின்ரை ஆள் ஒண்டும் பிசவாது லொறியைஎடு எண்டவன் காரிற்கு போய் அதற்குள்ளிருந்த jony walker போத்தலை திறந்து சில முறடுகள் விழுங்கி தொண்டையை கனைத்துவிட்டு பார்த்பொழுது. மசாயிர் தலையில் தொப்பியை போட்டபடி அவனது ஜீன்சில் இருந்த கைக்குட்டையை எடுத்து நிலத்தில் விரித்து முழந்தாளிட்டு தொழுதுகொண்டிருந்தான். இவன் வேறை நேரம்காலம் தெரியாதவன்.என்று சலித்துக்கொண்டான்.
தொழுது முடிந்த மசாயிரிடம் டேய் உன்ரை அல்லா பகிடி வெற்றி தெரியாதவர். கவனம். எல்லாம் பிழைக்கபோகுது .

அதில்லடா மனசாட்சியெண்டு இரிக்கல்லே அதுதான் என்படி மசாயிர் லொறியில் ஏறி அதை இயக்கினான்.

அவர்களது வாகனங்கள் கொழும்பு நகரினுள் நுளையும் முக்கிய சோதனை சாவடியை நெருங்க காவலரணில் இருந்த இரண்டு இராணுவ சிப்பாய்களில் ஒருத்தன் ரோச் லைற் வெளிச்சத்தை காட்டி முன்னால் வந்த காரை மறித்தான். அவனும் அவர்களும் சிங்களத்தில் உரையாக்கொண்டிருக்கும்போதே லொறி அவர்களைத்தாண்டிப்போய்க்கொண்டிருந்ததுகாரிற்குள் மக்கால்வாசியளவில் இருந்த போத்தலை எடுத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு மீண்டும் மசாயிருடன் இணைந்துகொண்டான். புறக்கோட்டை பகுதியில் காலை சந்தைக்காக லொறிகள் பொருட்களுடன் வந்து நிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. மசாயிரும் அந்த லொறிகளிற்கிடையில் ஒரு இடத்தில் நிறுத்தினான். அந்த லொறியை ஒருவனிடம் கையளித்து விடுவதோடு இவர்களது வேலை முடிந்துவிடும். காரை நிறுத்தியவன் ஒரு தொ.பே இலக்கத்தை அழுத்தினான். அங்கேயே மேம்பாலத்திற்கு அருகில் சாறத்தால் போர்த்துக்கொண்டு படுத்திருந்த ஒருவன் கரைநோக்கி வந்தான். சில சங்கேத மொழிகள் பரிமாறப்பட்டு இருவருமே சரியான ஆட்கள்தான் என உறுதி செய்து கொண்டபின்னர் அவன் லொறிக்கு புதியவனை அழைத்து போனாவன். மாசாயிர் கீழே இயங்கிக் கொள்ள இருவரும் லொறிக்குள் ஏறினார்கள். இங்கை சீற்றுக்கு பக்கத்திலைதான் சுவிச் வைச்சிருக்கிறன்.பிழைக்காது. அப்பிடி சிலநேரம் ஏதாவது பிழைச்சாலும் பின்பக்கமாய் ஒரு அடிகுடுத்தா போதும். என்றவனிடம் . அவன் ம்..என்று மட்டும் பதில் கொடுத்தான். விடைபெய முன்னர் அவனது பெயரை கேட்கலாமா என யோசித்தாலும் அது அவனது வேலையல்ல என நினைத்தபடி அங்கிருந்து வெளியேறினான். கார் கொழும்பிற்கு வெளியே பேலியகொடை பாலத்தை தாண்டி ஓடி கந்தானை பகுதியில் ஒதுக்குப் புறமாக ஒரு தென்னந்தோப்பில் நின்றது. கைக்கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டு இருவரும் நித்திரையாகிப் போனார்கள்.

00000000000000

அவர்களது காரை யாரோ உலுப்புவது போல் இருக்கவே திடுக்கிட்டு விழித்தார்கள். எருமை மாடு ஒன்று காரில் சொறிதேய்த்தபடி நின்றது. அவன் எருமை மாடு என்று திட்டிவிட்டு நேரத்தை பார்தான் ஆறரை மணியாகியிருந்தது. சே இன்னம் கொஞ்சநேரம் நித்திரை கொண்டிருக்கலாம். என்றவன் காரை இயக்கி பிரதான வீதி நோக்கி ஓடிக்கொண்டிருக்க மசாயிர் திரும்பவும் சுருண்டு படுத்துக்கொண்டான். கந்தானை சந்திக்கு வந்தவர்கள் அங்கிருந்த முஸ்லிம் சாப்பாட்டுக்கடையில் போய் முகம் கழுவி காலைக்கடன்களை முடித்துவிட்டு ரீயும் மாலுபணிசும் சாப்பிட்டார்கள். கார் இப்பொழுது கட்டுநாயக்கா விமான நிலையத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தது மசாயிர் காரை ஒடிக்கொண்டிருந்தான்.

மசாயிர் இதுவரைக்கும் என்னோடை இருந்து செய்த உதவிக்கு தாங்ஸ்சடா மச்சான்.

என்ன இப்பிடி சொல்லிட்ட நீ எனக்கு எவ்வளோ உதவி செஞ்சிரிக்காய். நானும் இன்னும் மூண்டு நாளிலை டுபாய் போயிடுவன்.
நீ போறவரைக்கும் காரை வைச்சிரு இன்னும் பத்துநாளைக்கு காசு கட்டியிருக்கு நீ போற அண்டைக்கு கொண்டு போய்விடு.

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் இறுதி சோதனைச்சாவடி..
சரி மச்சான் இதிலை நான் இறங்கிறன். தேவையில்லாமல் கொழும்பிற்கு உள்ளை போகாதை கவனம். ஏதும் அவசரமெண்டால் மட்டும் சிங்கப்பூர் நம்பருக்கு போனடி இல்லாட்டி டுபாய் போனதும் போனடி
சரிமச்சான் சந்திப்பம் ..மசாயிரிடமிருந்து விடைபெற்றவன்.காரில் தயாராய் வைத்திருந்த பொதியை எடுத்து அதிலிருந்த ஆவணங்களை கையில் எடுத்துக்கொண்டு விமான நிலையத்தில் நுளைந்தவன் வழைமையான சோதனைகளை முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காக பயணிகள் தங்கியிருக்கும் கூடத்தில் தங்கியிருந்தபொழுது அவன் எதிர்பார்த்திருந்த ராணியின் அழைப்பு வந்தது. விமான நிலைய அறிவித்தல் ஏதும் செய்துவிடக்கூடாது என்று நினைத்தபடியே
கைத்தொலைபேசியை காதில் வைத்து கலோ..என்றான்.

டேய் நீ சொன்ன இடத்துக்கு வந்திட்டன் ஏதோ அவசரமா வரச்சொன்னாய் என்ன ஏது எண்டும் சொல்லேல்லை எங்கை நிற்கிறாய்.

நேரத்தை பார்த்தான்..ஓ வந்திட்டீங்களா. நான் இங்கை பக்கத்திலைதான் சதாம் ஸறீற்றிலை நிக்கிறன் ஒரே ராபிக் பத்து நிமிசத்திலை வந்துடறேன்.

என்ன விசயம் எண்டாவது சொல்லன்.

அதை நேரிலை சொல்லுறன்அங்கை நீங்கள் 1st Floor போய் mony exchange பண்ணிற இடத்திலை நில்லுங்கோ. வந்ததும் சொல்லுறன்.

சரி கெதியாய் வா.

1st Floor லையே நில்லுங்க பிறகு உங்களை தேடஏலாது

சரி சரி அங்கையே நிக்கிறன். எத்தினையோ பேரை நான் ஓடவைக்கிறன் நீ என்னை ஓடவைக்கிறாய் எல்லாம் என்ரை விதி ..

தொலைபேசியை அவன் முழுதுமாக நிறுத்தினான். சிங்கப்பூர் விமானத்திற்கான பயணிகளை தயாராகும்படி அறிவித்தார்கள். விமானத்தில் ஏறி அமர்ந்துகொண்டான். விமானம் ஓடுபாதையில் உருளத்தொங்கியது நேரத்தினை பார்த்தான். கொழும்புநகரம் ஒருமுறை அதிர்ந்து அமைதியானது.ஒரு தவறை இன்:னொரு தவறால் சரிசெய்திருந்தான். அது சரியா தவறா என்பதைப்பற்றியெல்லாம் அவனிற்கு கவலையில்லை. அதைப்பற்றியெல்லாம் அவன் யோசிப்பதும் இல்லை.விமானம் மேலே கிளம்பியதும் போர்வையால் மூடியபடி நித்திரையாகிப்போனவனிற்கு கனவில் ராணியினால் விதை நசிக்கப்பட்டவர்களும் கொலை செய்யப்பட்டவர்களும் அவனைச்சுற்றி நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கதையின் முதலாவது பந்தியை மீண்டும் ஒருமுறை படிக்கவும்.

00000000000000000000000000000

கதை உண்மை சம்பத்தை தழுவியது

பிற்குறிப்புக்கள். 90 களில் தென்னிலங்கையில் சந்தேகத்தின் பெயரால் கைது செய்யப்படுபவர்கள் ராணியை அடையாளம் கண்பதற்கோ அல்லது விசாரணை செய்யவதற்கோ ஒரதடைவையாவது சந்திரப்பார்கள்.

சலாவுதீன். புலிகள் இயக்கத்தில் நீண்டகாலம் இருந்தவன். மட்டக்கிளப்பை சேர்ந்தவன் யாழ்ப்பாணத்தில் புலிகள் முகாம்களில் இருந்தவன். புலிகள் இயக்கத்தில் ஜிகாத் அமைப்பு ஊடுருவி விட்டது என்று அறிந்ததும். புலிகள் அமைப்பிலிருந்த அனைத்து முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டு களையெடக்கப்பட்டபொழுது தப்பிவந்தஒருவன்.

குணாளன் . புலிகள் அமைப்பில் இருந்தவன் வடமராச்சி கரவெட்டியை சேர்ந்தவன். இந்திய இராணுவ காலத்தில் இந்திய இராணுவத்திற்கு பெரும் தலையிடியாய் இருந்தவன். பின்னர் புலிகள் அமைப்புடன் முரண்பட்டு இலங்கை புலனாய்வு பிரிவுடன் இணைந்திருந்தான்.

நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)

4:50 AM, Posted by சாத்திரி, No Comment

நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)
சாத்திரி (ஒரு பேப்பர்)

புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிக்கையினை அடுத்து அந்த அமைப்பும் செயலிழந்து போனதன் பின்னர். உலகத் தமிழர்கள் அனைவருமே மிகுந்த எதிர் பார்ப்போடும் . நம்பிக்கைகளோடும் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்ததோடு மட்டுமல்லாது .அதன் மூன்று பாராளுமன்ற அமர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத் தீவில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்ததுமே தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், சாத்வீக வழியிலான போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒரு அமைப்பு அவசியமானது அது நாடுகடந்த தமிழீழ அரசே என வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாகுவதற்கு மட்டுமல்லாது. அதன் நோக்கங்கள் அதன் தேவைகள் என்ன என்பதோடு அதன் அவசியத்தையும் புலம்பெயர்ந்து வாழும் தழிழர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஒரு பேப்பர் குழுவினரோடு இணைந்தும், தனியாகவும். பரப்புரைகளையும் பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தேன். அதன் ஆரம்ப காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தொடர்பகம் நாடுகடந்த அரசை பகிரங்கமாக எதிர்த்தவேளைகளில். நாடுகடந்த அரசிற்கு ஆதரவாக அதன் பிரச்சாரப் பத்திரிகை போன்று ஒரு பேப்பர் செயற்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும். ஆனால் நாடுகடந்த அரசின் தேர்தல்கள் நடைபெற்று அதன் முதலாவது பாராளுமன்ற அமர்வும் நடந்து முடிந்த பின்னர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகளில் உள்ள குறைகளையும். இன்று ஈழத்தமிழினம் உள்ள நிலையில் இந்த உறுப்பினர்களின் செயற்பாட்டு வேகம் போதவில்லையென்பதையும். ஒரு பேப்பர் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.


அதே நேரம் நாடுகடந்த அரசால் தாயகத்தில் உள்ளவர்களிற்கு பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது என்பதனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் சர்வதேச நாடுகளில் அதனால் எத்தனையோ பணிகளை செய்யமுடியும். இலங்கையரசின் போர்குற்றங்களை வெளிக்கொண்டு வரலாம். இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களை வைத்து இலங்கையரசின் மீது வழக்குகள் தொடுக்கலாம். வழக்கு என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. இலங்கையரசு மீது வழக்கு தொடர்வது பற்றி உருத்திரகுமார் மற்றும் மதியுரைஞர் குழுவினைச் சேரந்த சிறிஸ்கந்தராசா (சிறீயண்ணா, சுவீடன்) ஆகியோரோடு உரையாடிக்கொண்டிருந்தபொழுது நான் சொன்ன விடயம். அதிகாரத்திலிருக்கும் ராஜபக்சமீது வழக்கு தொடர முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ராஜபக்சவிற்கு கொஞ்சமும் குறையாத இனப்டுகொலையை செய்த சந்திரிக்கா மீதாவது ஒரு வழக்கை பதிவு செய்யுங்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளன குறைந்தபட்சம் பதவியில் இல்லாத ஒருவரையாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்னறத்தில் நிறுத்துவன் மூலம் தற்சமயம் பதவியில் இருப்பவர்களாவது தங்கள் பார்வையை மாற்ற சந்தர்ப்பம் உண்டுடென்று கூறியிருந்தேன். பார்க்கலாம் என்கிற பதில்தான் கிடைத்தது. இன்றுவரை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அடுத்தடுத்து அறிக்கைகள் மட்டுமே வெளியாகின. கொசாவோவிலும். தென் சூடானிலும் தூதரகம் திறப்பதாக கூட செய்திகள் வெளியாகின. தூதரகம் திறக்கத் தேவையில்லை ஒரு அறையை வாடைகைக்கு எடுத்து அலுவலகமாக்கியிருக்கலாம். ஏன் ஒரு கொட்டிலையாவது போட்டு கொடியை ஏத்தியிருந்தாலும். அதன் படத்தை அண்ணாந்து பார்த்தாவது ஆசுவாசப்பட்டிருப்போமே. அதை விடுவோம், நா.க.த. அரசின் மூன்றாவவது பாராழுமன்ற அமர்வின் கூட்டத் தொடர் அண்மையில் நடைபெற்றது. அதன் முதலாவது நாள் அமர்வில் இலங்கையரசை கிடுகிடுக்க, கலங்கடிக்க அதிரடியான தீர்மானங்களாவது ஏதாவது நிறைவேறும் என அதன் நேரலை ஒளிபரப்பை ஆவலுடன் இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பல உசார் மடையர்களில் நானுமொருவன். ஆனால் கூட்டத்தின் இறுதியில் எல்லாருக்கும் பசிக்கிறது எட்டுமணிக்குத்தான் சாப்பாடு வரும் என்கிற தீர்மானத்துடன் முதலாம்நாள் அமர்வுகள் முடிவடைந்திருந்தது. நானும் கொட்டாவி விட்டபடி போய்சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டேன்.


கடந்த மாவீரர் தினத்தில் கூட நா.க. த. அரசு ஒரு தவறான முடிவெடுத்திருந்தது; அதாவது இறுதி யுத்தத்தில் வன்னியில் தலைவருடன் இருந்து தப்பி வந்தவர்கள் என்பவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஜரோப்பா எங்கும் மாவீரர்தின நிகழ்வுகளை இரண்டாக்கியிருந்தனர். இரண்டு வருடத்தில் இவர்களின் சாதனை என்று இதனைத்தான் சொல்லலாம். புதியதாய் வந்தவர்கள் பற்றியும் அதனை பின்நின்று இயக்கும் வினாயகம், சுபன் போன்றவர்கள் பற்றியும் போதுமான விபரங்கள் நா.க.த. அரசின் பிரதமரிற்கு எம்மால் வழங்கப்பட்டிருந்தது என்பதனையும் குறிப்பிட வேண்டும்.
கடைசியாய் வந்த செய்தி இலங்கைக்கு குண்டு போட்ட உருத்திரகுமார். உள்ளே போய் செய்தியை படித்தால். ஆபிரிக்க நாடுகளில் எமது உறவை வளர்த்துள்ளோம்.தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை திறந்து தமது நட்புறவை பேணும் நிலையில் இவை முனைந்துள்ளனவாம்.தென்னாபிரிக்காவின் ஆழும் தேசிய காங்கிரசின் 100 வது ஆண்டு கொண்டாட்டத்திற்கே நாடுகடந்த அரசு அழைக்கப்படவில்லை என்பது சோகமான விடையம். ஆனால் அதே கொண்டாட்டத்திற்கு உலகத்தமிழர் பேரவைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அழைப்பிதழ் போனது மட்டுமல்லாமல் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தனிப்படட்ட காரணங்களிற்காக தென்னாபிரிக்கா போகவில்லையாம். உள்நாட்டு பாதுகாப்பென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிநாட்டு பாதுகாப்பென்றால் உலகத்தமிழர் பேரவை இமானுவேல் அடிகளார். இரண்டு அமைப்பில் உள்ளவர்களிற்கும் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதுதான். அண்மையில் கூட இந்தியாவிற்கு முறையாக விசா பெற்று சென்றிருந்த இமானுவேல் அடிகளார் இந்தியாவிற்குள் நுளைய முடியாமல் திருப்பியனுப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருந்தார். இப்படி பல அச்சுறுத்தல்களிற்கு மத்தியில்தான் இந்த அமைப்புக்கள் தங்களாலான பணிகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் உருத்திர குமார் அவர்கள் பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்காவிற்குள் மட்டுமே மாறி மாறி பயணம் மேற்கொள்வதால் உலகம் முழுவதும் நாடுகடந்த தமிழீழ அரசினை பலப்படுத்தி அதனை சரியான பாதையில் இட்டுச்செல்ல முடியாது.


அது மட்டுமல்லாது நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் என்பவர்கள் ஒவ்வாரு தேர்தலின் போதும் மக்காளால் மாற்றப்படுவார்கள் மாற்றப்படவேண்டும். அதன் பிரதமர் கூட மாற்றப்படுவார். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது நிலையாக இருக்கும்.இருக்கவேண்டும். எனவே நாடுகடந்த தமிழீழ அரசு உறுப்பினர்கள் மீதான எமது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனடியாகவே அது நா. க. த. அரசின் மீதான எதிர்ப்பு அல்லது அதன்மீதான காழ்ப்பை நாம் காட்டுகின்றோம் என நினைப்பது தவறு. வுpமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நா.க.த.அசின் பிரதிநிதிகள். தங்களை திருத்திக்கொண்டு சரியான பாதையில் அந்த அமைப்பினை வழிநடாத்தவேண்டும். இல்லையேல் காலப்போக்கில் இதுவும் தனிநபர் துதிபாடும் அமைப்பாக மாறுவதோடு இறுதியில் தலைவனும் நானே தொண்டனும் நானே என்கிற இந்தியவின் சுப்பிரமணிய சுவாமியின் கட்சி மற்றும் இலங்கையில் ஆனந்தசங்கரியின் கட்சி போன்றதொரு நிலைக்கே நாடுகடந்த தமிழீழ அரசும் தள்ளப்படும்.

இறுதியாக நாடுகடந்த தமிழீழ அரசின் ஆரோக்கியமான செயற்பாடுகளை தட்டிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல். அதன் தவறான பக்கங்களை தட்டிக்கேட்பதற்கும் ஒரு பேப்பர் குழுமம் தயங்காது என்பததை தெரிவித்துக்கொளகிறேன்;.

சாத்தானின் குழந்தை.

1:06 PM, Posted by சாத்திரி, No Comment

சாத்தானின் குழந்தை.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தியேழாம் ஆண்டு . தை மாதம். யாழ்குடாநாடு எங்கும் இரவும் பகலும் இடைவிடாத புயலுடன் கூடிய பெருமழை.மழை வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த கிராமங்களில் ஒன்றுதான் மானிப்பாய் கிராமமும். அன்று பத்தாம் திகதி அதிகாலை நான்கு மணி நாற்பத்தியொரு நிமிடம். இருபது வினாடிகள். வானைக்கிழித்ததொரு பெரு மின்னல் தோன்றி மானிப்பாய் வைத்தியசாலையின் பின்னே மண்ணைத்தொட்டது. அங்கு காணியொன்றில் மழையில் நனைந்தபடி தலையை தொங்கப் போட்டுகொண்டுக்கொண்டிருந்த மாடு ஒன்று ம்மா...........என்ற சத்தத்துடன் கருகி இறந்து போனதோடு மின்கம்பிகளும் அறுந்து விழ எங்கும் கும்மிருட்டு.ஒருசில வினாடிகளில் பெருத்த இடியோசை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்த அனைவரையுமே திடுக்கிட்டு எழவைக்க . மானிப்பாய் வைத்தியசாலையின் பத்தாம் இலக்க அறையில். பத்தாம் இலக்க கட்டிலில். இருந்து அம்மா...என்றொரு பெரும் அலறல். பின்னர் க்குவா....குவா...குவா....என்ற குழந்தையின் அழுகை . ஆம் அவன் பிறந்துவிட்டான்.

கையில் ரோச்லைற் வெளிச்சத்துடன் அவசரமாய் ஓடிய தாதி குழந்தையின் மீது வெளிச்சத்தை பாச்சினாள். என்ன அதிசயம் அதன் தலையின் பின்னால் ஒளி வட்டம் மினுமினுத்தது. அவள் வீல்.....என்று அலறியபடி மயங்கிச்சாய ஓடிவந்த மற்றையவர்கள்.மயங்கியவளை ஒரு வீல் கதிரையில் வைத்து தள்ளிக்கொண்டு போக அங்கேயே தங்கியிருந்த குழந்தையின் தந்தையும் ஓடிவந்து பார்தார் ரோச்லைற் வெளிச்சத்தில் ஒளிவட்டம் மின்னியது. அவசரமாய் தொப்புள் கொடியை அறுதெறிந்துவிட்டு குழந்தையை ஒரு துணியில் சுருட்டிக்கொண்டு சண்டிலிப்பாயில் அமைந்திருந்த நாகபூசணி அம்மன் ஆலயத்தை நோக்கி ஓடியவர் கோயில் வீதியில் குடியிருந்த சடாமுடிச்சாமியரின் கதவில் அவசரமாய் தட்டவே சோம்பல் முறித்தபடி நித்திரையால் எழுந்து வந்த சாமியாரின் காலடியில் குழந்தையை கிடத்தி விட்டு சாமி நீங்கள்தான் எங்களை காப்பாத்தவேணும் இந்த குழந்தை பிறந்ததும் அதுகின்ரை தலையிலை ஒளிவட்டம் தெரிஞ்சது அதுதான் பயத்திலை உங்களிட்டை தூக்கிக் கொண்டு ஓடியந்தனான்.என்று மூச்சிரைக்க கூறி முடித்தார்.

குழந்தையை குளிந்து பார்த்த சாமியார் திடுக்கிட்டவராய் ஆ..இது சாத்தானின் குழந்தை என்றார்.. ஜயோ சாமியார் இது என்ரை குழந்தை நாலாவது நாயாய் அலையவைக்கப் போகுது .அழுதார் அந்த தந்தை.
இன்று பத்தாம் திகதி குழந்தை பத்தாம் இலக்க வார்ட்டில் பத்தாம் இலக்க கட்டிலிலா பிறந்தது

ஓம் சாமியார்.

சாமியார் கள்களை மூடினார் அம்மா தாயே நாகபூசணி எந்த குழந்தை பிறக்கக்கூடாதென்று இத்தனை நாளாய் கடும் தவம் செய்தனோ அந்த சாத்தானின் குழந்தை பிறந்து விட்டது. இனி நீதான் இந்த உலகத்தை காப்பாற்றவேண்டும். பலபேரின் நிம்மதியை கெடுக்கப்போகிறானே என்று மனதில் துதித்தவர்.

அவரைப் பார்த்து ஓன்றும் பயப்படாதே அம்மா துணையிருப்பார் .இந்தக் குழந்தை சாத்தானின் குழந்தையாக இருந்தாலும் வினை தீர்க்கும் வேல் முருகனின் பெயரை இவனிற்கு சூட்டுகிறேன். அந்த பெயரால் அனைவரும் இவனை அழைக்கும் பொழுது இவனது தீய குணங்கள் மாறி இவனிற்கு கடவுள் அருள் கிடைக்கும்.என்று கூறியவர் குழந்தையின் காதில் ஸ்ரீ கொளரி பாலகன் என்று மூன்றுமூறை சொன்னதும் குழந்தை வீரிட்டு அழத்தொடங்கியது. சிறிது விபூதியை எடுத்து குழந்தையின் நெற்றியில் தடவிவிட்டு எல்லாம் நன்றாக நடக்கும் போய்வாருங்கள் என வழியனுப்பிவைத்துவிட்டு. இந்தக் குழந்தையின் பத்தாவது வயதின் எனக்கல்லவா ஆபத்து என்றபடி கவலையுடன் கடவுளை தியானிக்கத் தொடங்கினார் சாமியார்.

வைத்தியசாலையில் காலை மயக்கத்திலிருந்து விழித்த குழந்தையின் தாயார் காலடியில் அவரிற்கு முதல்நாளிரவு வைத்தியசாலையில் உணவு கொடுத்த அலுமினியத் தட்டு கிடந்ததை கவனித்தார். அந்த தட்டைத்தான் ரோச்லைற் வெளிச்சத்தில் எல்லோரும் ஒளிவட்டம் எண்டு தவறாய் நினைச்சிட்டினம் என்பது அவரிற்கு புரிந்தது. உடைனையே அவசரமாய் அந்த அலுமினிய தட்டை களவெடுத்துக்கொண்டு வீட்டிற்கு போய்விட்டார். களவெடுத்த அலுமினியத் தட்டிலேயே குழந்தை உணவு உண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோஞ்சானாய் வளர்ந்தது.
0000000000000000

இப்பொழுது அந்தக் குழந்தைக்கு வயது பத்து அந்த வருடம் அதே நாகபூசணி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தவேளை கச்சான் கடலை வாங்குவதற்காக கோயிலிற்கு போனவன் கோயில் வீதியில் அந்த சாமியாரை கண்டுவிட்டான். உடனேயே சாமியார் முன்னால் போய் நின்றவன்.

சாமீ.............எனக்கொரு உண்மை தெரிஞ்சகணும் சாமீ........என்றான்.

அவனை குனிந்து பார்த்த சாமியார் யாராப்பா நீ உனக்கென்ன உண்மை தெரியவேண்டும்.

சாமீ..நீங்கள் நல்லவரா கெட்டவரா??

கோயில் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தவர் பின்னர் அவனை பார்த்து இரண்டு கைகளையும் விரித்து உதட்டை பிதுக்கியபடி தெரியலையேப்பா என்றார். ( இந்தக் காலகட்டங்களில் சிவாஜியின் முதல் மரியாதை படம் மற்றும் கமலின் நாயகன் படம் வெளியாகியிருக்கவில்லை என்பதனை அறியத்தருகின்றேன்.)

அப்ப எதுக்கு சாமி எனக்கு அப்பிடியொரு பேரை வைச்சனி சாமி??

என்ன பெயரப்பா ??

ஸ்ரீ கொளரி பாலகன் ..அதற்கு அர்த்தம் என்ன சாமீ

அதுவா திருகைலாய மலையில் வீற்றிருக்கும் பெருமானின் திருவாட்டி கொளரி அம்மையின் அழகுமகன் முருகன் என்று அர்த்தம்.

நல்லவேளை இந்த அர்தத்தையே எனக்கு பெயரா வைக்கமல் விட்டியே .கந்தன் கடம்பன்.வேலன் இப்பிடி அவருக்கு எத்தினை பேர் இருக்கு. ஆனால் எதுகய்யா இப்பிடி ஒரு பெயர்.உனக்குத் தெரியுமா ஒவ்வொருதடைவையும் வகுப்பிலை வாத்தியார் டாப்பு கூப்பிடேக்குள்ளை என்ரை பெயரை கூப்பிடும்போது அவர் பாட்டுபாடுறார் என்று நினைச்சு நான் நித்திரையாய் போயிடுறன் சாமி.என்றபடி அவன் கீழே குனிய. அய்யோ அம்மா தாயே காப்பாற்று சாத்தனின் குழந்தை பத்து வயதாகிவிட்டது காப்பாத்து என்றபடி அவர் கோயில் உள்ளே ஓடிக்கொண்டிருக்க அவன் எறிந்த கல்லு சாமியாரின் பின்மண்டையில் பட்டுத்தெறிக்க சாமியார் மயங்கி விழுந்தார்.
00000000000000
திரும்பிப் பார்க்காமல் அவன் ஓடினான்..ஓடினான்..ஓடினான்..(பராசக்க்தி படம் வெளிவந்துவிட்டிருந்தது) பத்துவருடங்களாக ஓடி யெர்மன் எல்வைவரை ஓடி ஒற்றைகள் கிழிக்கப்பட்ட பாஸ்போட்டுடன் பிராங்போட் விமான நிலையத்தில் நின்றான். அதை வாங்கிப் போன ஒரு யேர்மன் காரன் சிறிது நேரத்தில் திரும்ப வந்து சிரி கொரி பலகான் என்று கூப்பிட்டான். அதை அவன் கவனிக்கமல் அங்கு நடந்து போய்கொண்டிருந்த விமானப் பணிப்பெண்களின் பின்னழகில் மயங்கி நிற்க அந்த யெர்மன் காரன் வந்து அவனை கையில் பிடித்து சிரி கொரி பலகான் கம் என்று அழைத்துப் போனான்.அன்றே அந்த சாமியார் சொன்து போல் பலரது நிம்மதியை கெடுத்தபடியேதான் இருக்கின்றான். சாத்தானின் குழந்தை..சாத்திரி என்கிற பெயரில் :lol: :lol: :lol:

பி.கு...நான் ஒரு கட்டுரை எழுதியதற்காக ஒருவர் என்னை நீ சாத்தான் என்று முன்பொருதரம் திட்டியிருந்தார். இன்று கொஞ்சம் நேரம் கிடைத்து உண்மையில் அப்பிடி இருந்தால் எப்பிடியிருக்கும் எண்டு கற்பனையா நினைச்சு பார்த்தன் அதோடை அந்த பெயர் தான் எனதுமுழுப்பெயர். அந்த சாமியாரேதான் அதனை எனக்கு வைத்திருந்தார்.

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்

12:05 AM, Posted by சாத்திரி, 2 Comments

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்

Posted Image

முற் குறிப்பு . இந்தக் கதையை புலிகள் அமைப்பின் தீவிர விசுவாசிகளோ கலாச்சாரத்தினை கண்களாக மதிப்பவர்களோ தவிர்துவிடுவது நன்று


சீறா லியோனின் லுங்கி விமான நிலையம்..நையீரியாவிலிருந்து வந்த விமானம் தரைதட்டுகின்றது. றோகன். சோம்பல் முறித்தபடி பக்கத்தேயிருந்த தாய்லாந்து அழகி நுயும் மை பார்த்து வந்துவிட்டோம். உனக்கு இந்தத் தடைவை புதுவிதமான அனுபவங்களாக இருக்கப்போகின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும். சோர்வோ கோபமோ அடைந்து விடாதே எனக்காக எல்லாத்தையும் அனுசரித்துநடந்துகொள் என்றான்.மெல்லிதாக புன்னகைத்தவள் றோகனின் தோளில் சாய்ந்தபடி உனக்கொன்று தெரியுமா நான் எத்தனையோ ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறேன எத்தனை பேர் என்கிற கணக்குக்கூடத் தெரியாது ஆனால் உன்னை மட்டும்தான் நம்பி இப்படி தனியாக நாடு விட்டு வந்திருக்கிறேன். உனக்காக நான் மரணம்வரை வரவும்தயார். என்றவளின் கன்னங்களை மெதுவாக தடவிய றோகான். என்னுடைய ஒவ்வொரு பயணமுமே மரணம் வரையிலானதுதான் என்றவன் . சிரித்தபடியே இதுவும் மரணம் வரையிலான பயணம்தான் நியும். நான் ஒவ்வொரு தடைவையும் மரணத்தின் கதவை எனது திறமையால் திறக்கும் பொழுது அதிஸ்ரமும் உன்னைப்போல ஒரு அழகான பெண்ணும் கூடவே நிற்பதால் தப்பித்துக் கொள்கிறேன். ..

விமானம் நின்று பயணிகள் எழுந்து தங்கள் பொருட்களை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானார்கள். பலமணிநேரம் விமானத்தில் பொறுமையாக பயணிப்பவர்களால் விமானத்தை நிறுத்தி சரியாக கதவு திறக்கப்படும் வரை ஒருசிலநிமிடங்கள் பொறுக்கமுடியவதில்லை எவ்வளவு அவசரம் ஏதோ பலமில்லியன் வியாபரம் பேசப்போகிறவர்களைப்போல ஓடுகிறார்கள் என மனதில் நினைத்தபடி பொறுமையாக இருந்து ஆறுதலாக தனது உடைகளை சரி செய்துவிட்டு நியும்மின் கைகளை கோர்த்துக்கொண்டு விமானத்திலிருந்து இறங்கிப்போய் குடிவரவுப்பகுதியில் அதிகாரியிடம் தன்னுடையதும் நியும்மினதும் கடவுச்சீட்டை நீட்டினான். அவனுடைய மலேசியக் கடவுச் சீட்டையும் அவளுடைய தாய்லாந்து கடவுச் சீட்டையும் அதிகாரி புரட்டிக்கொண்டிருக்க நியும்மை இழுத்து அவள் உதட்டில் இச்..வைத்துக்கொண்டிருக்கும் பொழுதே கடவுச் சீட்டில் ஓங்கி இறப்பர் முத்திரை குத்தும் சத்தம் கேட்டது. கடவுச் சீட்டுகளை வாங்கிக் கொண்டு பொதிகளை எடுத்தபடி வெளியே வந்தான். அங்கு வாசலில் பெயர் மட்டைகளை கைகளில் தாங்கிப் பிடித்தபடி நின்றவர்களை நோட்டம் விட்டான்
ஒருவன் மட்டையில் பன்னிச் செல்வம் எழுதி தூக்கிப் பிடித்தபடி நின்றிருந்தான். அதைப்பார்த்தும் கழுக்கென சிரித்தவன் அவனை நோக்கிப் போய் அவனிடம் அறிமுகம் செய்து விட்டு அவனது பெயர் எழுதியிருந்த மட்டையை வாங்கி தனது பொக்கற்றினுள் இருந்த பேனாவை எடுத்துபன்னீர்செல்வம்எனமாற்றிஎழுதிஅவனிடம்கொடுத்துவிட்டு அவனைப்பின்தொடந்து விடுதிக்குபோவதற்காக அவன் கொண்டுவந்திருந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தார்கள்.

இந்தத் தடைவை நீண்டபயணமாகிவிட்டது தாய்லாந்து தென்னாபிரிக்கா.நைஜீரியா என்று சுற்றியடித்து இறுதி இடத்திற்கு வந்து விட்ட பயணக்களைப்பு. பொதிகளை அறையில் போட்டுவிட்டு நல்ல வெத வெதப்பான நீரில் குளித்துவிட்டு வந்த றோகான் துடைத்த துவாய் துண்டை இடுப்பில் அணிந்தபடியே தனது சிறிய பிறீவ்கேசை திறந்து சில ஆவணங்களையும் வேறொரு கடவுச்சீட்டையும் எடுத்து மேசையில் வைத்துவிட்டு அன்றிரவு நடக்கவிருக்கும் சந்திப்பை மனதில் ஒத்திகை பார்த்தபடி இருந்தபொழுது குளிக்கப் போயிருந்த நியும்.மழையில் நனைந்த செவ்வரளிப்பூவைப்போல நீர் சொட்டச் சொட்ட இடையில் குறுக்கே கட்டியிருந்த துவாயுடன் இன்னொரு துவாயால் தலையை துவட்டியபடி வெளியே வந்தவளை அப்படியே அகல விரிந்த கண்களால் அடியிலிருந்து முடிவரை அங்கமங்கமாக அசைபோட்டு பார்த்தபடி கண்ணதாசன் அனுபவித்துத்தான் கவிதை எழுதியிருக்கிறான் என்று மனதில் நினைத்தான்

என்ன இப்பொழுதுதான் புதிதாய் புசிப்பது போலவே பார்க்கின்றாயே ...

உனக்கொன்று சொல்லட்டுமா என்வாழ்வில் எத்தனையோ பெண்களில் புகுந்திருக்கின்றேன். மறுதடைவை அவர்கள் புது முதுகைக்கூட தொட்டதில்லை ஆனால் நீ மட்டும்தான் எனக்கு புதிது புதிதாய் பிறந்தவள் போல் தெரிகின்றாய் அதன் மர்மம்தான் எனக்கு மனதில் தோன்றவில்லை.

அதுவா அவர்களைப்போல அன்னியமாய் உடலோடுமட்டும் உறவாடுவதில்லை உளஅன்போடு உறவாடுவது காரணமாயிருக்கலாம்.

என்னவோ போ உன்னை அப்படியே தின்னவேணும்போல் உள்ளது.

பார்த்தாயா ஆபிரிக்கா வந்ததுமே நீ நரமாமிச பட்சணியாகிவிட்டாயோ?

இல்லை நான் சைவப்புலி உன்னை கொல்லாமலேயே உண்ணப்போகின்றேன்.

இங்கேயும் புலிதானா??

நான் எங்கேயும் புலிதான். புலி வேட்டைக்குத்தயாராகி விட்டது

என்று பற்களை வெளியே காட்டி உர்..என்று உறுமியபடி கைகள் இரண்டையும் புலியின் கால்களைப்போல முன்னே நீட்டி விரல்களை பிராண்டுவது போல் அவளது மார்புகளை நோக்கி நகர்ந்தவனை அவள் செல்லமாய் தள்ளிவிட .அவனோ அவளை கட்டிலில் இழுத்து சரித்து அவள்மீது படர்ந்து அவன் இயங்க அவளோ அகம்மயங்க புறம்கயங்க ஈருடலும்ஓருயிராய்முயங்கியமுடிவில் மான் புலியை வேட்டையாடி விட்டது என்றபடி அவனின் மூச்சு மேலும் கீழுமாய் முட்டிமோத அவள் அவனிற்கு முத்தங்கள் இட்டுக்கொண்டிருந்தாள்.

முத்தமாரி பெய்துவிட்டெளுந்தவள் இரண்டு சிகரற்றுக்களை எடுத்து இரண்டையும் ஒரேதடைவை உதட்டில் புகுத்தி பற்றவைத்தவள் ஒன்றை அவனின் உதட்டில் பொருத்திவிட்டு ஜன்னல் ஓரமாக வந்துநின்று புகையை உள்ளிழுத்து ஊதியவள் இரவு நிகழ்வுகள் எல்லாம் ஏற்பாடாகிவிட்டதா என்றாள்.நீ சிறிது ஓய்வெடுத்துக்கொள் நான் மீண்டும் குளித்துவிட்டு வெளியே போய் வாடைகைக்கார் ஒன்றை எடுத்துக்கொண்டு தகவலும் அனுப்பிவிட்டு வருகிறேன் என்றவன் அவசரமாய் குளித்து உடைமாற்றிக்கொண்டு தயாராய் வைத்திருந்த கடவுச்சீட்டை எடுத்தக்கொண்டு வெளியேறியவன் விலை உயர்ந்த வாடைகைக்கார் என்றினை எடுத்துவிட்டு நேரத்தை பார்த்தான் . இப்பொழுது நேரம் சரியானதாயிருந்தது இப்பொழுது அவன் காத்திருப்பான் போனடிக்கலாமென நினைத்தவன் அங்கிருந்த வீதியோர தொலைபேசிக் கூண்டு ஒன்றில் புகுந்து ஒரு கிறெடிட்காட்டை செருகிவிட்டு இலக்கங்களை அழுத்தினான்.

இந்தோனிசியாவின் யலாங்பாரு பகுதியில் வீதியோரத்தில் இருந்த ஒரு தொலைபேசிக்கூண்டின் மணி அடித்தது அதனருகே தயாராய் நின்றிருந்த றிசி தொலைபேசியை எடுத்ததும்

என்ன பயணம் எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சதா என்றவும்.

ஓம் அதெல்லாம் நல்லபடி முடிஞ்சுது இரவு சந்திப்பு முடிஞ்சதும் காலைமை உன்னுடைய நேரம் ஆறுமணிக்கெல்லாம் இதே நம்பருக்கு திரும்ப அடிக்கிறன்.

இந்த முறை நீ சந்திக்கிறவன்தான் பெரிய ஆள் இப்பதான் முதன் முதலாய் நாங்கள் அவனை சந்திக்கிறம். அவனோடை கதைக்கிற ஒவ்வொரு வசனமும் கவனமாய் கதைக்கவேணும் அதுக்காகத்தான் உன்னை அனுப்பியிருக்கு கொஞ்சம் கதை பிழைச்சு அவங்களுக்கு சந்தேகம் வந்தாலும் உன்னை அங்கையே புதைச்சிடுவாங்கள் கவனம்.

அதெல்லாம் பிரச்சனையில்லை மச்சான் நான் கதைச்சே கவித்திடுவன்.

அது தெரியும் ஆனால் இந்தமுறை கட்டாயம் பெரிய சாமான் ஒரு இரண்டு மூண்டாவது எடுக்கிறதுக்கு றைபண்ணு அதுக்காக எவ்வளவு றிஸ்க்எடுக்கவும் தயாரெண்டு சொல்லு

கட்டாயம் முயற்சி செய்யிறன்.


இவனாலை ஏலும் எண்டுதான் நினைக்கிறன் பாக்கலாம்.
நட்சத்திர நாய்களும் மணந்து கொண்டு திரியிறாங்கள் உடைஞ்ச நாட்டிலை இப்ப அவங்களே தரகரா மாறியிருக்கிறாங்கள். எண்டு அறிஞ்சனான் எதுக்கும் கவனம்


நானும் அறிஞ்சனான் நான் பாத்துக்கொள்ளுறன்.

சரி நியும் எப்பிடி இருக்கிறாள் ஒண்டும் பயப்பிடேல்லைத்தானே கடைசி நேரத்திலை ஒண்டும் சொதப்பிப் போடாமல் பாத்துக்கொள்.

அவள் பிரச்சனையில்லை அவளுக்கென்ன ஊர் சுத்துற சந்தேசம். தனக்கு பிரான்சும் இங்கிலாந்தும் பாக்கவேணுமாம் ஒரே நச்சரிப்பு அவ்வளவுதான்


சரி நாளைக்கு நல்ல செய்தியோடை திரும்ப தொடர்பிலை வா
தெலைபேசி துண்டிக்கப் படுகின்றது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
றோகன் வெள்ளை நிற நீளக்காற்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்யையும் அணிந்தவன் அதற்கு சிகப்புநிற கழுத்து கோவணத்தினை எடுத்து அணிந்து சரி பார்த்தவன் தயாராய் வைத்திருந்த சிகப்பு நிற மேலாடை(கோட்) அணிந்தபடி எப்படி இருக்கிறேன் என நியும்மை பார்த்துக் கேட்டான். களுக்கென சிரித்தவள். இதென்ன நிறக்கலவை ஆனாலும் பரவாயில்லையன்றாள். அவள் ஒரு விமானப் பணிப்பெண்ணைப்போல கறுப்பு நிறத்தில் குட்டை பாவாடை சட்டையோடு தயாராகியிருந்தவள் நான் எப்படி இருக்கிறேன் என்றாள். உண்மையை சொல்லட்டுமா?? மீண்டும் ஒருதடைவை அப்படியே ..உன்னை ஆனால் ஆடைகள் கசங்கிவிடும். வேண்டாம் போகலாம் என்றான்.

இருவரும் விடுதியை விட்டு வெளியே வந்ததும் அங்கு ராக்சியில் நின்றிருந்த ஒருவன் தன்னுடைய ராக்சியை பின்தொடருமாறு சைகை செய்தான். றோகன் தன்னுடைய வாடைகைக்காரில் அவனைப்பின்தொடர அது கடற்கரையோரமாக இருந்த பெரிய ஆடம்பர பங்களா ஒன்றின் முன்னால் போய் நின்றதும். ராக்சியை ஓட்டிவந்தவன் இதுதான் இடமென சைகையிலேயே காட்டிவிட்டு தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். றோகானின் கார் பங்களாவினுள் நுழைய முற்படும்பொழுது வாசலில் நின்ற காவற்காறன் மறித்து அவர்களை இறங்க சொல்லி பணிவாய் கேட்டுக்கொண்டான். நான் மெமேயை (முகமட்) சந்திக்க வநதிருப்பதாக சொல்லி சட்டைப்பையிலிருந்த ஒரு கடதாசியை எடுத்து காவற்காரனிடம் நீட்டவே. அதை வாங்கியவன் நீங்கள் மெமேயை சந்திக்க வந்திருப்பது எனக்கு தெரியும் ஆனால் சிறிது நேரம் பொறுங்கள் என்றவன் இன்னொருத்தனை அழைத்து அந்தக்கடதாசியை கொடுத்தனுப்பினான்.

கடதாசியுடன் போயிருந்தவன் இன்னொரு பெண்ணுடன் திரும்பவும் வந்து அவர்களை பரிசோதித்துவிட்டு உள்ளே அனுப்பச்சொன்னதும். வந்த பெண் நியும்மையும் காவற்காரன் றோகனையும் காலில் இருந்து தலைவரை தடவிப்பார்த்து ஆயுதம் எதுவும் இல்லையென்று உறுதிசெய்தபின்னர். அவர்களது கைப்பையையும் பரிசோதித்து விட்டு அந்த பிரமாண்டமான சொகுசு பங்களாவினுள் அழைத்துச்சென்றனர். உள்ளே போகும் போதே றோகன் அந்த பங்களாவின் சுற்றாடலை நோட்டம் விட்டான் விறைப்பான காவலர்கள் சுற்றிவந்துகொண்டிருந்தனர் கைகளில் ஆயுதங்கள் எதுவும் இல்லை அவற்றை அவங்கள் மறைத்து வைத்திருந்திருக்கலாம். பங்களாவின் நடுவில் பிரமாண்டமான நீச்சல்தடாகம் எவளையும் காணவில்லை. காவலர்கள் அவர்கள்இருவரிடமும் ஒரு அறையை காண்பித்து அதற்குள் தங்கியிருக்குமாறும் மொமே வந்ததும் அழைப்பதாக பவ்வியமாககூறி விடைபெற்றனர். அறைக்குள் பலவகையான குடிபானங்கள் சிற்றுண்டி என்பன அழகாக அடுக்கிவைக்கப்பட்டு மொமேயினது நல்வரவு இவை உங்களிற்கானவை என ஒரு வரவேற்பு அட்டையும் வைக்கப்பட்டிருந்தது..அறையில் நுளைந்ததுமே அதன் ஜன்னலை திறந்து அந்த பங்களாவின் பிற்பகுதியை கவனித்தான் பங்களாவின் பிற்பகுதி கடற்கரை கடலில் இருந்து பெரியதாய் கால்வாய் வெட்டி பங்களாவரை வள்ளங்கள் வந்து போக வசதி செய்யப்பட்டிருந்தததோடு ஒரு ஆடம்பர வள்ளமும் நின்றிருந்தது.

ஜன்னலை சாத்திவிட்டு அங்கிருந்து பெரிய கண்ணாடியில் தன்னை ஒருதடைவை பார்த்தவன் ரையை சரி செய்தபடி என்ன நியும் எதுவும் பேசாமல் இருக்கின்றாய் பயமாக இருக்கிறதா?? என்றான். பயமா எனக்கா நீ அருகில் இருக்கும் பொழுது என்னையே எனக்கு ஞாபம் இருக்காது பயம் என்னுள் எப்படிவரும் இந்த புது சப்பாத்து வலிக்கிறது என்றபடி தன்னுடைய குதிக்கால் சப்பாத்துக்களை காலால் தட்டி கழற்றிவிட்டு அமர்ந்துகொண்டாள் நியும்.சிறிது நேரத்தில் அவர்களது அறை கதவு தட்டப்பட்டது..ஒருத்தன் பணிவாக மோமே வந்துவிட்டார் நீங்கள் மட்டும் வாருங்கள் என றோகனை அழைத்தான்.எப்படி மெமேக்கு வணக்கம் சொல்வதென மனதில் ஒத்திகை பார்தபடியே அறையை விட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தான் நன்கு உடற்பயிற்சி செய்து முறுக்கேற்றி உடல் அதனை காண்பிற்பதற்காகவே அரைக்கை பனியன் ஜீன்ஸ் அணிந்த சாராசரி உயரத்துடன் ஒருவன் அமர்ந்திருந்தான் அவன்தான் மெமேயாக இருக்குமோ என றோகன் நினைத்தமாத்திரமே எழுந்த அவன் வணக்கம் வாருங்கள் இந்த மொமே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறான்.என்படி றோகனின் கைகளை குலுக்கும் பொழுதே எனக்கும்தான் உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி என்படி மெமேயின் தோளோடு தோள் மற்றி அணைத்து அறிமுகத்தை முடித்துக்கொண்ட பின்னர் அங்கு அமர்ந்து பேசத் தொடங்கினார்கள் அவர்கள் இருவரைத்தவிர வேறு யாரும் அங்கு இல்லை.மெமேயே பேசத் தொடங்கினான்

உங்கள் பொருட்களின் பட்டியல்கள் எனக்கு கிடைத்தது அதில் நீங்கள் திரும்ப திரும்ப கேட்கின்ற இலகு ஏவுகணைகள் மட்டும் பெற்றுக்கொள்ள முடியாது அது தவிர்ந்த அனைத்தும் ஒழுங்கு செய்யலாம்.

மொமே நீங்கள் முயற்சித்தால் முடியாதது என்று இல்லை அந்த நம்பிக்கை எமக்குள்ளது

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எதிரெதிரான வல்லரசு நாடுகளே எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தில் ஒன்று பட்டுநிற்கின்றனர் .எந்த போராட்டக் குழுக்களோ அல்லது ஆயுத குழுக்களின் கைகளில் ஆகாய எதிர்ப்பு ஏவுகணைகளை கொடுப்பதில்லையென்பதுதான் அது
ஆனால் யுத்தம் நடைபெறும் இடங்களில் அவர்களின் இரகசிய முகவர்களேதான் அதனை பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு வியட்நாமில் பாவிக்கபட்ட ஏவுகணைகளை இரஸ்யா கே.ஜி.பி முகவர்களும் ஆப்கானில் சி.ஜ.ஏ முகவர்களுமே கையாண்டனர் கியுபாவிலும் அதுவே நடந்தது. இங்கெல்லாம் யுத்தம் முடிவிற்கு வந்ததுமே முதல் வேலையாக அவர்கள் ஏவுகணைகளை திருப்ப பெற்றுக்கொண்டு விட்டனர்.


ஏன்??

அவை தீவிரவாத குழுக்களின் கிடைத்து தங்கள் பயணிகளின் விமானங்களின் மீது பயன்படுத்தப்படலாம் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். பயணிகள் விமனம் மீது இலகுவாக அவற்றை கொண்டு தாக்கலாம்.
உங்களிடமிருந்து முன்னர் நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறோமே??

அவை சாம் பழைய தயாரிப்புக்கள்தானே உடைந்த இரஸ்சியாவில் எம்மால் முடிந்தது அவ்வளவுதான். அதனால் நவீன குண்டு வீச்சு விமானங்களை ஒன்றும் செய்திருக்க முடியாதே உங்களால். அங்கேயும் நீங்கள் தவறிளைத்திருக்கிறீர்கள். ஒரு பயணிகள் விமானத்தை விழுத்திய செய்தி


அது ஏதே தவறாக நடந்துவிட்டது

அதேதான் அதுதான் தவறு இனிமேலும் அதற்கு முயற்சிக்காதீர்கள் அப்படி முயற்சித்தால் நீங்கள் உளவமைப்பு முகர்களிடம் மாட்டிவிடும் அபாயம் உள்ளது. அடுத்த விடயங்களிற்கு வருவோம். இந்தத் தடைவை பணத்தைவிட பொருட்களாகவே எதிர் பார்க்கிறோம். என்னதான் தென்அமெரிக்கா கெக்கெயின் கிடைத்தாலும் ஆசியா கெறோயினிற்கும் கஞ்சாவிற்கும் உள்ள மதிப்பே தனியானது. அதோடு ஒரு உதவியும் வேண்டும் எங்கள் பொருட்கள் சிலவற்றை வடஅமெரிக்க கரையொன்றில் நீங்கள் இறக்கிவிடவேண்டும் அவ்வளவுதான் நீங்கள் சரி சொன்னால் மிகுதி சரி


பொருட்கள் சரி ஆனால் உங்கள் பொருட்களை இறக்குவது நான் முடிவெடுக்க முடியாது அதனை கேட்டுத்தான் சொல்லவேண்டும். ஆபிரிக்காவின் பாதாள அரசனால் அங்கு போக முடியாதா?

நான் என்னதான் பாதாள அரசனாயிருந்தாலும் உங்கள் கடல் வலையமைப்பு என்பது பிரமாண்டமானது . உலக நாடுகளிற்கே தலைவலியை கொடுக்கின்றது அந்தளவிற்கு இன்னமும் என்னால் முடியவில்லை அது எப்படி உங்களால் சாத்தியம்.

எல்லாம் எங்கள் தவைனின் திறமை அதற்கென தேர்ந்தெடுத்து திறமையானவர்களை நியமித்திருக்கிறார்.


இப்பொழுது எங்கள் பேரம் முடிந்துவிட்டது சாவகாசமாக பேசலாமா? உங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில் நீங்களே உற்பத்தி செய்யலாமே ஏன் வேறு நாடுகளில் இருந்து கடத்தவேண்டும்.
எங்களது தேசம் உன்னதமான தேசமாக உருவாக்குகின்றோம். அங்கு போதைப்பொருட்கள் கிடையாது விலைமாந்தர் கிடையாது பிச்சையெடுப்பவர் கிடையாது அனாதைகள் கிடையாது

மெமே சத்தமாய் சிரித்தபடி.. என்ன சொல்கிறாய் உங்கள் தேசம் உருவானால் அதில் முதலில் பாதிக்கப்படபோவது நீதான்.


அது எனக்கும் தெரியும் எனது தேசம் உருவாகின்ற அந்தப் பொழுதே நான் தற்கொலை செய்து கொள்வேன் அங்கு என்போன்றவர்கள வாழமாட்டார்கள்.

சரி எதற்கு இப்படி .. மிகுதி முடிவை பின்னர் சொல் இனி நாங்கள் வாழ்க்கையை அனுபவிக்கலாம். அடுத்த பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது உங்கள் நண்பியையும் அழைத்து வாருங்கள் போகலாம்.


அந்த அறையில் விருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது தேவைக்கு அதிகமானதாகவே உணவும் குடிவகைகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது நியும் முடன் உள்ளே நுளைந்த றோகனிடம் என்ன குடிக்கிறாய் சம்பெயினா??கொக்ரெயிலா? என்றான் மெமே சம்பெயின் என்றதும். சம்பெயினோடு உனக்கு ஒரு அழகையும் சேர்த்து தருகிறேன். இதோ அந்த அழகி மக்கும்பா இவள் உனக்காக என்று ஒருத்தியை நோக்கி கையை காட்டிய மொமே. கறுப்பழகிகளை உரித்துப்பார்த்திருக்கின்றாயா என்றான்.அதெல்லாம் சர்வதேச ரீதியிலேயே உரித்திருக்கிறேன். ஆனால் இவள் பேரழகியாக தெரிகின்றாள்.


மேடையில் வலம்வரும் மொடல் அழகியை போல ஒருத்தி சம்பெயினை கையில் ஏந்தியபடி றோகனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளைப்பார்த்தால் பிறந்து வளர்ந்தவள் பேல தெரியவில்லை அங்கங்கள் எல்லாம் அளந்து செய்து அச்சில் வார்த்தெடுக்கப் பட்டவள் போல இருந்தாள்.இதோ என்னுடைய பரிசு என்று நியும்மை மொமேக்கு அறிமுகம் செய்த றோகன். நீ எப்படி ?? .எனக்கு ஆசிய அழகி இதுதான் முதற்தடைவை நன்றிகள் என்றான் மெமே .மதுக்கிண்ணங்கள் ஒன்றோடென்று உரசிக் கொண்டன. ஒருவன் சிறிய பொட்டலம் ஒன்றினை கொண்டுவந்து அங்கிருந்த கண்ணாடி மேசையில் பிரித்து பரப்பி பின்னர் அதனை மெல்லிய நீள் கோடாக்கிவிட்டு கொக்ரெயில் கிண்ணத்திலிருந்த ஒரு ஸ்றோ(குளாய்) வை எடுத்து அதை இரண்டாக வெட்டி ஒன்றை றோகனிடமும் மற்றையதை மொமேயிடமும் நீட்டிவிட்டு போனான். நேராக உறுஞ்சிய இரு குளாய்களும் ஒரு புள்ளியில் வந்து முட்டி நின்று கொண்டது.

ஒரு அழகிய சுருட்டு பெட்டி ஒன்றினை திறந்து றோகனிடம் நீட்டிய மொமே இவை கியூப விசேட சுருட்டுகள் ஒன்றை பிடித்துப்பார் என்றதும் சிந்துபோயிருந்த கண்களுடன் ஒரு சுருட்டை எடுத்து மூக்கின் குறுக்கே வைத்து கண்களை மூடி ஆழமாய் அதன் வாசனையை உள்ளேயிழுத்தான். அவனின் தந்தையின் மார்பில் தவழ்ந்தது போலவே ஒரு உணர்வு
00000000000000000000000000000000000000000000000000000000000000000

குகநாதன் அதிகம் படிக்காதவர் யாழ்ப்பாணம் தாவடியில் சாதாரண வியாபாரி ஊரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் வாழ்க்கையில் எதையாவது சாதிக்கலாமென நினைத்து சுடுட்டு கட்டுகளோடு இரயிலேறியவர். தலவாக்கலையில் சுருட்டுக்கடை முதலாளியாகியிருந்தார். லயத்தில் வாழ்ந்த வேலம்மாள் காதலியாகி மனைவியானாள். ஒரு ஆண் குழந்தை பிறந்தது றோகன் என பெயர் வைத்தார் தான் அதிகம் படிக்கவில்லை மகனை பெரிய படிப்பு படிக்கவைத்து சாதாரண யாழ்ப்பாணத்து மக்களின் மனங்களில் உறைந்து போன வைத்தியர் அல்லது பொறியிலாளர் அதுதான் அவரது கனவு. அவரது கனவும் மகனும் வளர்ந்தது. தொண்டமானிக்கு எலக்சன் வேலை செய்து தொண்டமானும் வெற்றி பெற்றுவிட அவரிடம் மகனிற்கு கொழும்பின் றோயல் கல்லூரியில் இடமும் வாங்கி விடுதியிலும் சேர்த்துவிட்டிருந்தார்.றோகனும் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த ஜீலை 23 ம் நாள் அவனைச்சுற்றி என்னவோ எல்லாம் நடந்து கொண்டிருந்தது. தமிழில் ஓலச்சத்தங்களும் சிங்களத்தில் பிடி .வெட்டு .கொலை செய் எக்கிற சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது சிலர் சிங்களத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். போலிசும் இராணுவமும் அவனது விடுதிக்கு முன்னால் காவல் நின்றனர். றோகனிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவனுடன் கூட இருந்த சிங்கள மாணவர்கள் அவனை வெளியே போகவேண்டாம் என தடுத்தனர். சின்ன வயதிலிருந்தே சிங்களத்தில் மட்டுமே பேசிப்பழகிய றோகனிற்கு அப்பொழுதுதான் தான் ஒரு தமிழன் என்று உறைத்தது.அப்பா அம்மாவை பார்க்கவேண்டும் என தவித்தான் ஒரு கிழைமை கழித்து சிங்கள நண்பன் ஒருவனுடன் ஊருக்கு போயிருந்தான் அவனது வீடும் தந்தையின் கடையும் இருந்த இடத்தில் சூடு அடங்கியிருக்காத சாம்பல் மட்டுமே இருந்தது.

தாயை ஒரு அகதி முகாமில் தேடி கண்டு பிடித்தபொழுது ஓடிவந்து கட்டிப்பிடித்து அழுதவர் அப்பவிட்டை சுருட்டு கடன்வாங்கிற றோகித்தான் கத்தியாலை குத்தி கடையோடை சேர்த்து கெழுத்தினவன் என்று சொல்லி புரண்டு அழுதார். அதுதான் சாம்பலின் சூடு அடங்கவில்லையென அவனிற்கு புரிந்தது. அடுத்தது என்ன எல்லாமே சூனியமாக தெரிந்தது. தோட்டக்காட்டாளை கலியாணம் செய்திட்டான் என்கிற காரணத்திற்காக ஒட்டு உறவு வைத்திராத தந்தையின் குடும்பத்திலிருந்து ஒரு சகோதரியை மட்டும் அவர் ஊர் கோயில் திருவிழாவில் போய் பார்த்துவிட்டு முருங்கைக்காயும் மாம்பழமும் கொண்டுவருவார்.

உன்ரை மாமி நல்லவா இந்தா உனக்கு உடுப்பு வாங்கி தந்திருக்கிறாரெண்டு றோகனிற்கு அதை போட்டுவிட்டு கட்டிப்பிடித்துக்கொள்வார். அவர் சொன்ன தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பயணமானார்கள்.
அவனது மாமி உண்மையிலேயே நல்லவர்தான் இளவயதில் சாதி மாறி ஒருத்தரை காதலித்திருந்தாராம் அவர் காதலித்தவரை அவரது உறவுகள் வெட்டி கொலை செய்து தாவடிசுடலையில் போட்டிருந்தார்களாம். அதையறிந்த மாமிக்கு மன பிறள்வு ஏற்படவே அவரை சுதுமலை அண்ணாமலை பரியாரியின்ரை இடத்திலை கொண்டு போய் விட்டிட்டனமாம். அதை கேள்விப்பட்டு றொகனின் தந்தைதான் அவரிற்கு வைத்தியம் பார்த்தது மட்டுமில்லாமல் மாதா மாதம் செலவிற்கு பணமும் அனுப்பியிருக்கிறார் அவர் இப்பொழுது சுதுமலை சிம்மையா பாரதி பாடசாலையில் ஒரு ஆசிரியை பிறகு திருமணமே செய்து கொள்ளவில்லையென்தை நேரில் தேடி கண்டு பிடித்தபொழுது றோகன் அறிந்து கொண்டான். இவனின் கொச்சைத்தமிழ் ஊரில் இவனிற்கு சிங்களவன் என்கிற பட்டத்தை வாங்கிக் கொடுத்தது அவனை தொடர்ந்து படிப்பதற்காக இந்தியா அனுப்பிவிட்டிருந்தனர். மிகுதி படிப்பினை இந்தியாவில் படித்து முடித்தவன் மும்பையில் கப்பல் தெழில்நுட்பம் படித்தவன் அப்பொழுதே புலிகளின் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். மிகுதி படிப்பினை அயர்லாந்தில் பூர்த்தி செய்ததும் அப்படியே புலிகளுடன் இணைந்து கொண்டான். இவனது பலமொழியறிவு பேச்சு திறைமை இன்று பேரம் பேசுபவனாகியிருக்கிறான்.
00000000000000000000000
என்ன சுருட்டை உருட்டி உருட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்றபடி மக்கும்பா சுருட்டின் நுனியை வெட்டி அதில் நெருப்பை மூட்டிவிட்டாள்.அன்றிரவு அளவுக்கதிகமாக போதையேறிவிட்டதனால் ஏதோ ஒப்பிற்காக கொஞ்சம் சாப்பிட்ட றோகன் கறுப்பழகியை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுளைந்ததும் பேரங்கள் நல்லபடியாய் முடிந்த விடயத்தை றிசிக்கு தெரியப்படுத்தவேண்டும் தூங்கிவிடக்கூடாது என்று நினைத்தவன் தன்னுடைய கைக்கடிகாரத்தில் ஒரு இருபது நிமிடங்கள் கழித்து அலாரம் வைக்கலாமா என யோசித்தான். சே இப்படியொரு பேரழகியுடன் வெறும் இருபது நிமிடங்களா இன்னொரு இருபது நிமிடங்கள் என்று நாற்பது நிமிடங்கள் கழித்து அலாரத்தை வைத்தான்.அலாரம் அடிக்கமுதலேயே அவன் வியர்த்து களைத்து ஓய்ந்து போனவன் எழுந்து உடைகளை அள்ளி அணிந்து கொண்டான் கொஞ்சம் போதையும் இறங்கியதுபோல இருந்தது.சிறிது நேரத்தில வருகிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியேறியவன். மீண்டும் விடுதிக்கு வந்து போனடிக்க வேண்டிய நேரம் வருமவரை காத்திருந்து. இலக்கங்களை அழுத்தினான் இந்தோனேசியா யலாங்பாரு வீதியோரத்து தொலைபேசி கூண்டு மணி அடித்தது. றிசி தொலைபேசியை எடுத்தான்.
என்னமாதிரி

எல்லாம் நல்படியா முடிஞ்சுது ஆனால் ஒரு புது டீலை போடுறான். அது சரியெண்டால் மிச்சம் சரி

என்னது புது டீல்

ஆபிரிக்கா நாடு ஒண்டிலை உள்ள அவனது பொருட்களை வட அமெரிக்கா கரை ஒன்றில் இறக்கிவிடவேணுமாம்.
அது முடியாதெண்டால்
அதைத்தான் அவன் முதலாவதாக எங்களிட்டை எதிர்பார்க்கிறான். சரியெண்டால் எல்லாம் சுலபமாகும். உடைஞ்ச கிழக்கு நாட்டிலை பாதியும் மிச்சம் வழைமையான கறுப்பு நாட்டிலையும் போய் ஏத்தவேண்டியதுதான்.

சரி பெரியது கிடைச்சதா??

அதைப்பற்றி கதைக்கவேண்டாம் எண்டிட்டான். முடியாதாம்.

சரி நான் முடிவு சொல்ல முடியாது அங்கை கேட்டு சொல்லுறன் ஒரு பதினைஞ்சு நிமிசம் கழிச்சு திரும்ப எடு
மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியவன்
என்னவாம்

டீல் ஓகேயாம். ஏத்தி இறக்கிற இடம் விபரங்களை அனுப்பிவிடு

சரி மச்சான் அதோடை இந்தமுறை நானும் ஒருக்கா ஊருக்கு போயிட்டு வரலாமெண்டு நினைக்கிறன். அம்மாவை பாத்து கனகாலமாகுது நான் எங்கை எப்பிடி இருக்கிறன் எண்டு கலைப்பட்டுக்கொண்டிருப்பா நான் வாறன் எண்டு அங்கை அறிவிச்சுவிடு

சரி நியும்மை பத்திரமா திருப்பி அனுப்பிட்டு நீ வழமையான தீவுக்கு போய் நில். அங்கை வண்டிவாற நேரம் நான் உனக்கு செய்தியனுப்பிறன்.

மிச்சம் குடுக்க வேண்டியது எங்கையாம்.

மொறிசியசில் ஒரு பாங்கிலை போட்டால் சரி அந்த விபரமும் அனுப்பி விடுறன். சரி மச்சான் சந்திப்பம் ..


புலிகளின் இரண்டு கப்பல்கள் முல்லைத்தீவு கடலில் சிலநாட்கள் நங்கூரமிட்டுவிட்டு திரும்பவும் சர்வதேச கடலில் இறங்கிப் போய்க்கொண்டிருந்தன.
றோகனிற்கு என்னென்ன சாப்பாடுகள் பிடிக்குமோ அத்தனையும் அவனிற்கு தாயாரும் மாமியும் செய்து அவனை திக்குமுக்காடவைத்துக்கொண்டிருந்தனர். வன்னியில் ஓயாதஅலை 3 சுழன்றடித்துக்கொண்டிருந்தது
00000000000000000000000000
2001 ம் ஆண்டின் இறுதியில் புலிகள் அமைப்பின் அதிகார நிருவாக மாற்றங்கள் நடந்தேறியது அதில் றோகனின் நண்பர்கள் பலரும் விலக்கப்பட்டு தனிவாழ்க்கைக்கு திரும்பி விட்டிருந்தனர். றொகனையும் பேரம் பேசலில் இருந்து திரும்பவும் கப்பலிற்கேமாற்றிவிட்டிருந்தார்கள். பேரம் பேசும் காலங்களில் அவனது போதை பழக்கம் மற்றும் அவனிற்கு பிடித்திருந்த ஆஸ்மா என்பவற்றால் அவனால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை அவனையும் வெளியேறுமாறு 2003 ல் உத்தரவுவந்தது,ஏதாவது நாட்டில் அகதி தஞ்சம் கோரலாமென நினைத்தவன் அதற்கு முன்னர் நியும் அடிக்கடி நச்சரிக்கும் பிரான்சை சுற்றி காட்டிவிடலாமென நினைத்து அவளை அழைத்துவந்து மூன்று வாரங்கள் பாரிஸ் நகரெங்கும் சுற்றி காட்டினான். அந்த மூன்று வாரங்கள் அத்தனையையும் மறந்து மகிழ்ச்சியாக கழித்தவன் மீண்டும் நியும்மை தாய்லாந்திற்கு திருப்பியனுப்பிவிட்டு அவனிற்கு பிடித்த சுவிஸ் நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்தான்.அப்பொழுதுதான் அவன் வாழ்க்கையில் சூனியத்தை உணர்ந்தான் ஒரு முறை தற்கொலை செய்து கொள்ளலாமா எனவும் யோசித்திருந்தான் ஆனால் இதுவரை நான் அம்மாவிற்கு என்று எதுவுமே செய்ததில்லை நாடு நாடு என்று ஓடியே நாட்கள் போய்விட்டிருந்தது.

நானும் இறந்துவிட்டால் அவரின் இறுதிக்காலங்கள் கவலையிலேயே கழிந்துவிடும் எனவே இனி முடிந்தளவு அவரை நல்லபடியாக பார்க்கவேண்டும் என நினைத்து தற்கொலை முடிவைமாற்றிவிட்டடிருந்தான். சுவிஸ் அகதிமுகாம் வாழ்க்கை வைத்திய ஆலேசனைகள் அவனை போதைப்பழக்கத்திலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவந்திருந்தது. காலமும் மனதைமாற்றியது .தமிழர்கள் அதிகமற்ற ஒரு அழகிய கிராமத்தில் அவனிற்கு வீடும் கிடைத்தது உருண்டோடிய வருடங்களில் நாட்டு நிலைமைகளை செய்திகளில் மட்டுமே படித்துக்கொண்டிருந்தான். தாயாரைத்தவிர வேறு எந்த தொடர்புகளையும் அவன் வைத்திருக்கவில்லை அதன் காரணம் ஒன்று அவன் விரும்பவில்லை அடுத்தது சுவிஸ் பொலிஸ் அவன் யாரென்று எப்படியாவது மணந்து பிடித்துவிடுவார்களோ என்கிற பயம். அப்படியான தொரு காலத்தில் 2005 ம் ஆண்டு ஒருநாள் பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வனொலியை கேட்டுக்கொண்டிருந்தபொழுது அதில் கலந்துகொண்டிருந்த ஒரு குரல் அவனிற்கு பழக்கமானது வானொலி நிலையத்திற்கு போனடித்து அவனது இலக்கத்தை வாங்கி அதனை அழுத்தியவன்.

கலோ என்கிற சத்தத்திற்கு
றோயர் றோயர் றிசி என்றான்.

றிசிக்கு ஒரே ஆச்சரியம்எப்பிடி மச்சான் இருக்கிறாய் எப்பிடி என்ரை நம்பரை கண்டு பிடிச்சனி??

நீதான் கையையும் வாயையும் வைச்சுக் கொண்டு சும்மாயிருக்க மாட்டியே கண்டு பிடிக்கிறது பெரியகஸ்ரமோ??

சரி சுவிஸ் நம்பர் விழுது ஆனால் நீ எங்கை நிக்கிறாய்

சுவிசிலைதான் இருக்கிறன் மூண்டு வருசமாய்

ஓ ஏன் உன்னையும் கழட்டி விட்டிட்டாங்களா?

ஓம் மச்சான் இப்பதான் வீடு தந்து ஒரு வேலையும் கிடைச்சிருக்கு

நியுமோடை தொடர்பு இருக்கோ இப்பவும்.

ஓமடா கதைக்கிறனான் எனக்கொரு மகனும் இருக்கிறான்.

ஓ உன்னோடையா இருக்கிறாள் .

இல்லை கடைசியா எல்லாம் விட்டிட்டு வரேக்கை அவளை பாரிசிற்கு கூட்டியந்து ஒரு மூண்டு கிழைமை நிண்டனாங்கள். பிறகு அங்கை அனுப்பிட்டு அவளையும் அந்த தொழிலை கைவிட்டிட்டு கடைசியாய் என்னட்டை கையிலை இருந்த காசை அனுப்பி அவளின்ரை கிராமத்திலை ஒரு கடைபோட்டு குடுத்தனான். ஒருநாள் போனடிச்சு தான் சுகமில்லாமல் இருக்கிறதாய் சொன்னாள். எனக்கு விருப்பம் இல்லை ஆனால் நானும் இல்லை தனக்கெண்டும் ஒருத்தரும் இல்லை அதாலை தனக்கொரு பிள்ளையாவது வேண்டும் எண்டு அழுது அடம் பிடிச்சாள். பிறகு என்னத்தை சொல்லுறது.

என்ன செய்யப் போறாய் கூப்பிடுற யோசனை ஏதும் இருக்குதோ??

நானும் அவளளோடை எல்லாம் முடிஞ்சுது எண்டுதான் நினைச்சனான் ஆனால் நான்தான் நல்லதொரு மகனாய் இருக்கேல்லை ஆனால் நல்லதொரு அப்பாவாய் இருக்க முயற்சிக்கிறன். இங்கை பதியேக்கை கலியாணம் செய்யேல்லையெண்டு சொல்லிட்டன். அதாலை நான் அங்கைபோய் அவளை எழுதிட்டுதான் கூட்டியரலாம்

நல்லது அதை செய்யவேண்டியதுதானே

இப்பதான் வீடு தந்திருக்கிறாங்கள் இன்னமும் விசா கைக்கு வரேல்லையடா அதை தந்தால்தான் நான் எதுவும் செய்யலாம் அது கையிலை கிடைச்சதும் அதுதான் முதல் வேலை அம்மாட்டையும் சொல்லிட்டன்


மகனுக்கு என்ன பெயர்

நான் தான் வைச்சனான் திலீபன்.


இப்படியாக அவர்களது உரையாடல் பழைய நினைவுகளை மீட்டியதாகவே அதிகாலைவரை தொடந்து கொண்டேபோனது...

2008 ம் ஆண்டு தாயகத்தின் நிலைமை மேசமானதாய் மாறிக்கொண்டேயிருந்தது பழைய வெளிநாட்டு கட்டமைப்பினரை உதவுமாறு தொடர்புகளை தேடியெடுத்து திரும்ப திரும்ப அழைப்பு விடுத்தக்கொண்டிருந்தார்கள். அப்படியானதொரு காலத்தில் மீண்டும் றோகனிடமிருந்து றிசிக்கு ஒரு அழைப்பு

என்னமச்சான் நிலைமை மேசமாய் போகுது

ஓமடா பாத்துக்கொண்டுதான் இருக்கிறன் என்ன செய்யிறது

என்னை எப்பிடியோ தேடிப்பிடிச்சு எஸ்.ஓ தொடர்பெடுத்தது

என்னவாம்

வண்டியொண்டு சமானோடை வெளிக்கிடுதாம் வரட்டாம்.

என்ன செய்யப் போறாய்

போறதெண்டு முடிவெடுத்திருக்கிறன்

உனக்கென்ன விசரோ??

இருக்கலாம் மச்சான் ஆனால் இப்ப நடக்கிறது விடுதலைப் போராட்டம் இல்லை. வாழ்வா சாவா எண்டிறது இப்ப போகமல் இருந்திட்டு பிறகு கவலைபட்டு பிரயோசனம் இல்லை.

எனக்கென்னவோ புத்திசாலித்தனமாய் தெரியேல்லை

உன்னட்டையிருந்து இப்பிடியொரு பதிலை நான் எதிர் பார்க்கேல்லையடா எத்தனைதரம் முடியாதெண்டு தெரிஞ்சே முட்டி மோதியிருக்கிறம். விதியை மாத்தியிருக்கிறம்.


இது விதியில்லை பல நாடுகளின்ரை மதி. சதியெண்டும் சொல்லாம்.கொஞ்சம் கஸ்ரம். இந்தனோசியாவிலை ஸ்ரிபன் பிடிபட்டதோடையே சர்வதேச வலையமைப்பு நட்சத்திர நாயளிட்டையும் பக்கத்து நாயளிட்டையும் போயிட்டுது. இனி என்ன செய்தாலும் கஸ்ரமடா. வடிவா கவனிச்சு பார் குறிப்பிட்ட இடத்தை தாண்டினதுமே அடிக்கிறாங்கள். தொடந்து ..ஒண்டு இரண்டில்லை ஒன்பது அடிபட்டிட்டுது இனியும் நம்பிக்கை இருக்கா உனக்கு

இருக்கடா மாத்தலாம் பாதையை மாத்தலாமெண்டு இருக்கிறன் அதுக்குத்தான் என்னை கேட்டிருக்கினம். ஏன் உன்னை கூப்பிடேல்லையா
என்னை கேட்டவைதான் ஆனா யோசிச்சுபார் எட்டுவருசம் எந்த தொடர்பும் இல்லை திரும்ப ஆரம்பத்திலையிருந்து தொடங்க முடியாது அது உதவாது அதாலை மாட்டன்எண்டிட்டன்.

நீ ஒரு சுயநலவாதியடா இப்ப குடும்பம் பிள்ளையை விட்டிட்டு போக உனக்கு மனசில்லை
அப்பிடி நீ நினைச்சாலும் பரவாயில்லையடா ஆனால் எனக்கென்னவோ அவன் பிடிபட்டதுமே எல்லா கப்பல்லையும் அவனை வைச்சே ஏதாவது ஜி.பி.எஸ் பொருத்தியிருப்பாங்களோ எண்டு நினைக்கிறன் காரணம் அவன் பிடிபட்ட ஒருமாதம் அவன் எங்கையெண்ட விபரமே தெரியாமல் இருந்தது


நான் போறதெண்டு முடிவெடுத்திட்டன் ஆனால் ஒரு உதவி உன்னட்டை கேக்கிறன்

என்னது

நான் சிலநேரம் திரும்பி வராமல் போனால் என்ரை மகனின்ரை பிறந்தநாளுக்கு மட்டும் ஒரு உடுப்பு பாசல் பண்ணிவிடு மச்சான் .அப்பாவின்ரை இழப்பெண்டால் எனக்கு என்னவெண்டு தெரியும் அதை அவனும் அனுபவிக்கவேண்டாம். அவனின்ரை பிறந்தநாள் வருசம் பிறந்த முதலாம் திகதிதான் விலாசம் அனுப்பி விடுறன்.


அப்பிடியெல்லாம் நடக்காது போயிட்டுவாடா.

துருக்கி நாட்டில் இருந்து போய் வருகிறேன்என்று றோகனின் ஒரு எஸ் எம் எஸ் றிசிக்கு வந்திருந்தது
ஒரு மாதம் கழித்து 20 ந்திகதி மார்கழி மாதம் 2008 ம் ஆண்டுவேலையில் நின்றிருந்த அவனிற்கு ஒரு தொபேசி அழைப்பு ..செய்தி பாத்தியா.
இல்லை என்ன நடந்தது
செய்தியை பார்

அவசரமாக வேலைடயிடத்து கணணியில் செய்திகளை தேடுகிறான்.


இன்று அதிகாலை 2.00 மணியளவில் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் மேலும் முல்லைத்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான கப்பலொன்றை அவதானித்த ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கப்பலில் உள்ளவர்களை தமது அடயாளங்களை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்த போது கப்பலில் இருந்து படையினைரை நோக்கி தாக்குதல் நாடாத்தப்பட்டதாகவும் கடற்படையினர் எதிர்தாக்குதல் நாடாத்தியபோது அக்கப்பலில் இருந்து பாரிய வெடிச்சத்ங்களுடனான தீச்சுவாலை வெளிவந்ததாகவும் தெரிவிக்கின்றது.

அத்துடன் அக்கப்பல் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அக்கப்பலுக்கு உதவிக்கு வந்த புலிகளின் நான்கு படகுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
000000000000

மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டிருந்த வருடக் கடைசியின் ஒரு காலையில் றிசியின் கைத்தொலைபேசி யில் ஒரு செய்தி வந்திருந்தது திறந்து பார்த்தான் நன்றிகள் சகோதரா இந்தவருடமும் உங்கள் பரிசுப் பொதி கிடைத்தது மகனிற்கு மகிழ்ச்சி நன்றாக படிக்கிறான் அப்பா எப்போ வருவார் எனக் கேட்டான். வளர்ந்து விட்டான் இனி அவனது தந்தைபற்றிய விடயத்தை அவனிற்கு சொல்லாமென நினைக்கிறேன் உங்கள் ஆலோசனை தேவை.. செய்தியை படித்த றிசி பதிலொன்றினை எழுதி அனுப்பிவிட்டிருந்தான் அது ' இப்பொழு எதுவும் சொல்லவேண்டாம் அவன் படிப்பை குழப்பிவிடுவான் இன்னும் சில வருடங்கள் போகட்டும். அதுவரை அவனது பிறந்தநாளிற்கு பரிசுகள் வந்தபடி இருக்கும் நன்றிகள்.

யாவும் உண்மை


கதையை இலகுவாக புரிந்து கொள்ள சில குறிப்புக்கள்.
நட்சத்திர நாடு.. அமெரிக்கா
நட்சத்திர நாய்கள் .அமெரிக்கா சி.ஜ.ஏ உளவமைப்பு மற்றும் அவர்களிற்காக பணத்திற்கு வேலை செய்பவர்கள்
உடைந்த கிழக்கு நாடு. உக்ரேய்ன்.
கீழ் கறுப்பு நாடு ..எரித்தியா
எஸ்.ஓ . புலிகளின் கடற்படை தளபதி சூசை
நட்சத்திர நாய்களின் பக்கத்து நாய்கள். கனடா உளவமைப்பு
வழைமையான தீவு .சீசெல்ஸ்.

அனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.

8:50 AM, Posted by சாத்திரி, No Comment

அனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.

சாத்திரி ஒரு பேப்பரிற்காக


இந்த வருடம் மாவீரர் தினம் ஜரோப்பாவிலை பெரும்பாலான நாடுகளிலை அனைத்துலகம் தலைமைச்செயலகம் இரண்டு பிரிவாக இரண்டுமே வேறு வேறு அமைப்பின் செயலகங்கள்: என்பதைப்போல போட்டி போட்டு ஒரு மாதிரி நடந்தேறிவிட்டது. யாராக இருந்தாலும்ஒரே இடத்தில் ஒற்றுமையாக மாவீரர்களை நினைவு கூரவேண்டும் என்பதே பலரினதும் ஒரு பேப்பர் குழுமத்தினரதும் அங்கலாய்ப்பாக இருந்தது ஒரு பேப்பர் குழுமமும் அதனைத்தான் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் அடம்பிடித்ததனால் யாருடைய நிகழ்வெள்றாலும் பரவாயில்லை மாவீரர்களை நினைவு கூரவேண்டியது எமது கடைமையென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் கலந்து கொண்டிருந்தனர்.மாவீரர் தினத்தன்று பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கலாமென பொதுவானதொரு அச்சம் இருந்திருந்ததும் உண்மை ஆனால் சிறு சிறு அசம்பாவிதங்கள் மட்டுமே சில நாடுகளில் நடந்ததோடு மாவீரர் வாரம் முடிவடைந்தது .

அந்தளவிற்காவது இரு குழுவினரும் மாவீரர்களை மதித்தது மகிழ்ச்சியே .
ஆனால் நாங்கள் தூய்மையானவர்கள்.கணக்குவழக்கு சரியாக காட்டுவோம் என்றபடி புதிதாகப் புறப்பட்ட தலைமைச்செயலகத்தினர் நடாத்திய நிகழ்வுகளை விட வழைமைபோல வருடாவருடம் கடைகளும் கொத்துறொட்டியும் போட்டபடி .மாவீரர்களிற்காக விற்ற பூக்களையே மீண்டும் எடுத்து மறுபடி விற்று காசு பார்த்த அனைத்துலகச் செயலக்தின் நிகழ்வுகளிலேயே மக்கள் அதிகளவு கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கு காரணம். தலைமைச்செயலகத்தினரிடம் ஒரு பேப்பர் எழுப்பியிருந்த சந்தேகங்களே பலரது மனங்களிலும் இருந்திருக்கின்றது. அதே நேரம் இவர்கள் பிரிந்து நின்றுஅடிபட்டாலும் நாம் மாவீரர்களை பிரிக்கக்கூடாது என்கிற காரணத்திற்காகவும். புதிதாக வந்தவர்கள் அப்படி என்னதான் செய்கிறார் பார்க்கலாமென விடுப்புப் பார்ப்பதற்கெனவும்.கடந்தகாலத்தில் அனைத்துலகச் செலயக்கதினரிர் நிதி மோசடிகாளால் பாதிக்கப் பட்டவர்களுமே தலைமைச்செயலகத்தின் நிகழ்வுலுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
மாவீரர் தினம் முடிவடைந்ததும் தலைமைச்செயலகம் நட்டக் கணக்கு காட்டினார்கள். இலண்டனில் இவர்கள் காட்டிய நட்டமோ இருபத்தி மூவாயிரம் பவுண்சுகள்.இதனை யார்?? எப்படி ??ஈடுகட்டப் போகிறார்கள் என்பது பற்றிய எந்த விபரமும் கிடையாது.அனைத்துலகச் செயலகத்திடம் கணக்கு என்கிற வார்த்தையே அவர்களது அகராதியில் கிடையாது. அதையாரும் கேட்கவும் முடியாது. கேட்டாலும் வராது. ஆனால் அவர்கள் சாதாரணமாக ஒரு பதிலை சொல்லியிருந்தனர் அது பார்த்தீர்களா புதிதாய் நிகழ்வு செய்தவர்களே நட்டக்கணக்கு காட்டுகிறார்கள். நாங்கள் இதைத்தானே வருடாவருடம் சொல்லுறம் எங்களிற்கும் நட்டம்தான்.


கணக்கு வழக்கு விடையங்களை விட்டுவிடுவோம். காரணம் மாவீரர்கள் வருடாவருடம் நினைவுகூரப்படவேண்டும். மக்களின் பங்களிப்பும் தொடர்ந்து இருக்கவேண்டும். இந்த இரு அமைப்பும் மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்காக எப்படி மோதிக்கொண்டார்களோ...வானொலி தொலைக்காட்சி இணையங்களில் எப்படி மாறி மாறி குற்றச்சாட்டுக்களை வைத்தார்களோ அதே போல இனிவரும் காலங்களில் இலங்கையரசின் போர் குற்றங்களை வெளிக்கொண்டு வருவதிலும் போட்டி போட்டுக்கொண்டு செயல்ப்படவேண்டும். சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு தொடரவேண்டும். சர்வதேச நீதி மன்றத்தில் அவர்களை நிறுத்தவேண்டும். யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களிற்கு உதவிகள் புரிந்தது போதாது என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டியபடியே அந்த மக்களிற்கான உதவிகளை செய்யவேண்டும்.


மக்களிற்கு கிடைத்த உதவிகளில் போர் குற்றம் தொடர்பான விடையங்களில் ஒருகுழு விட்ட தவறை மற்றைய குழு இணையங்களிலும் .பத்திரிகைகளிலும் பகிரங்கமாக சுட்டிக்காட்டி விவாதிக்கவேண்டும்.அதற்கும் ஒரு படி மேலே போய் இரண்டு தரப்பிலுமே அடுத்த போர் வெடிக்கும் தமிழீழமே தீர்வு என இணையங்களில் ஈழத்திற்கான இணையப் புரட்சி செய்யும் இளைஞர்கள் போரினால் பாதிப்படைந்து இன்று தங்கள் சமூகத்தாலும் சொந்த உறவுகளாலும் கைவிடப்பட்டு எந்த உதவிகளுமற்று ஏதிலிகளாகி வாழ்க்கையின் விரக்தியின் விளிம்பில் பலநூறு முன்னைநாள் பெண் போராளிகள் இருக்கின்றார்கள். இவர்களது வாழ்வின் ஆதாரங்களாக மாறி அவர்களின் வாழ்விற்கும் ஒரு அர்த்தத்தினை கொடுக்கலாம். அது முடியாதவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்காவது ஏதாவது வழிவகைகளை செய்யது கொடுக்கலாம்.
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மீண்மு; மீண்டும் மாவீரர் தின்தை கொண்டாடவும். மாவீரர்களின் நினைவுநாளை கொண்டாடவும். கோடை தொடங்கியதும் விழையாட்டு போட்டியை நடாத்தமட்டுமே இவர்கள் போட்டிபோட்டு அடிபட்டுக்கொண்டும். விற்ற பூவையே விற்றபடி நட்டக்கணக்கை காட்டிக்கொண்டேயிருப்பார்களாயின் இவர்களை ஒரு தலைவர் பிரபாகரன் என்ன ஆயிரம் பிரபாகரன்கள் வந்தாலும் இவர்களை திருத்தமுடியாது.
அதே நேரம் நாடு கடந்த அரசு என்பது வெறும் நாட்கள் கடத்தும் அரசாக மாறிக்கொண்டிருக்கின்றது. நாட்கள் கடத்தும் அரசு பற்றிய பதிவொன்றுடன் அடுத்த பேப்பரில் சந்திக்கின்றென் நன்றி வணக்கம் சாத்திரி

பேச்சு மட்டும்தான் தான் தேசியம் மிச்சமெல்லாம்.....

2:43 PM, Posted by சாத்திரி, No Comment

கடந்த இரண்டு நாள்களிற்கு முன்னர் தமிழ் பாராளுமன்ற  உறுப்பினர் சிறிதரனின் பின்னணியில் அவரது  சகோதரரால் நடாத்தப்படும்  லங்காசிறீ. தமிழ்வின் மற்றும் மனிதன் இணையத்தளங்கள் பற்றியதொரு சர்ச்சை  கிளம்பியிருந்தது. கூடவே இன்னொரு பெரும்  சர்ச்சை கிளம்பியிருக்கின்றது  அது என்னவெனில்  லங்கா சிறி இணையத்தினரால் நடாத்தப்படும் hi 2 world    தமிழ் அரட்டை சேவை பற்றியது. அந்த  காணொளி அரட்டையூடாக பலநூறு  தமிழர்கள் தமிழிச்சிகள்  ஆடைகளை கழற்றி ஆபாச அரட்டையடித்துள்ளதோடு தங்கள் நிர்வாண படங்களையும் பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது.  அதைப்பற்றி அறியலாமென நினைத்து  அரட்டையில்  அரட்டையடிக்கும் ஒரு இளைஞரை இனம் கண்டு தொடர்புகொண்டபொழுது  அவர் அண்ணை  என்னட்டை மட்டும் 56 தமிழ் பெட்டையளின்ரை  நிர்வாணப்படம் இருக்குதென்று பெருமையாக சொன்து மட்டுமில்லாமல். அவற்றை  அனுப்பியும் வைத்திருந்தார்.  அவற்றை பார்தால் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் திருமணமான வயதான பெண்களின் படங்களும்  இருந்தது. பலரது திறந்த மார்பில் தாலிதொங்கிக்கொண்டிருந்தது. இப்படி ஒருவரிடம் மட்டுமே 50ற்கு  மேற்பட்ட படங்கள் என்றால்  இதுவரை மொத்தமாக  அங்கு அரட்டை அடிப்பவர்களிடம் எத்தனை  படங்கள் பரிமாறப்பட்டிருக்கும்.நினைத்துப் பாருங்கள்.. தனிப்பட ஒருவன் ஒருத்தி  அரட்டையடிப்பதும். ஆடையை  கழற்றுவதும்  அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால். யாழ்ப்பாணத்தில் கலாச்சாரம்  கெடுகின்றது என்று  புலம்பும்  தமிழ்வின்  லங்காசிறி இணையமும். தமிழினத்தின் அடுத்த தலைவர்களில் ஒருவர் என சொல்லிக்கொள்ளும்  சிறிதரனின் பின்னணியில் இயங்கும்  இணையத்தளத்தில்  பெரும் கலாச்சார சீரழிவே நடைபெறுவதோடு அதற:;கு அவர்களும் உடைந்தையாக இருப்பதும் தான் கேள்விக்குள்ளாகின்றது

அதே நேரம்  இங்கு அரட்டையடிப்பவர்களிற்கு தெரியாமலேயே  அவர்களிற்கு பின்னால் உள்ள பெரும் ஆபத்து என்னவென்றால்.  இப்படியான அரட்டை இணைய வழங்கிகளை  பெரும்பாலும்  90 வீதம்  பாகிஸ்தானிலிருந்து  இயங்கும் நிறுவனங்களே  குறைந்த விலையில் வழங்குகின்றார்கள்.   இவர்களின் உரிமங்கள் பதிவுகள் திருட்டு பெயர்களில் இருப்பதனால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கமுடியாது.  இவர்கள் தங்கள் இணைய வளங்கியினுடாக பரிமாறப்படும்  நிர்வாண   காணொளிகள் மற்றும் படங்களை பதிவுசெய்து  ஆபாச இணையத்தளங்களை நடத்தி பெரும் பணம்  சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல்.  இந்தியா பாகிஸ்த்தான்.மலேசியா.சிங்கப்பூர் போன்ற  நாடுகளில் கைத்தொலைபேசி ஊடாகவும்  விற்பனை செய்கிறார்கள்.  அதாவது புலம்பெயர் தமிழர்களின் நிர்வாணப்படங்கள்  வியாபாரமாகின்றது. அந்த வகையில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.






தன்னுடைய மகனோ  மகளோ தனியறையில் கணணியில்  பாடம் சம்பந்தமாக அவர்களது நண்பர்களுடன் ஏதோ கதைக்கிறார்கள் என நினைக்கும் பெற்றோர்கள்.  சிலவேளைகளில் அவர்கள் எந்தெந்த தளங்களில்  உலாவுகிறார்கள்  கண்காணித்தாலும் பிள்ளை தமிழ் தளத்திலைதானே  உலாவுது  அதுகின்ரை  தமிழ் ஆர்வத்தை பாராட்டவேணும் என  நினைக்கும் பெற்றோர்கள்  தமிழ் தளத்தினுடாக பிள்ளை எங்கே போகின்றது என்பதையும் கண்காணிக்க வேண்டும். .அதே நேரம் கணவன் மனைவியை மனைவி கணவனை  கண்காணிக் வேண்டிய நிலைக்கு தள்ளிய  இது போன்ற  தமிழ் இணையத்தளங்கள் தேவைதான  என்பதனையும்  தமிழர்கள் தீர்மானிக்கவேண்டும்.


video

அதே நேரம் இங்கு தங்கள் படத்தை பரிமாறிய  ஆணோ பெண்ணோ நாளை திருமணம் என வரும் பொழுது அரட்டையில் இரண்டு பேருமே பார்த்திருக்கலாம்.  அல்லது அவங்கடை அம்மா அப்பாவை திருமணம் செய்யப் போகின்றவர்கள் பார்த்திருக்கலாம். இதனால் எத்தனை குடும்பங்கள் பிரியப் போகின்றது.



யாராவது ஓடிவந்து ஆதாரம் கேட்பார்கள்


கிணறு வெட்ட கிழம்பிய பூதம்

2:59 PM, Posted by சாத்திரி, 2 Comments


பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் நடந்தேறும் நாடகம்!சாத்திரி (ஒரு பேப்பர்)

அண்மையில்  சில இணையதளங்களில்  ஒரு செய்தி வெளியாகியிருந்தது  அதவாது இறுதிப் போரின்போது காயமடைந்த  பல போராளிகளை ஒரு பெண்  வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம்  பெருமளவு பணத்தினை வாங்கிவிட்டு அவர்களை ஆசிய நாடு  ஒன்றில்  கைவிட்டு விட்டு  தலைமறைவாகிவிட்டார் என்கிற செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்ததும்  இவரை எங்கேயோ  பார்த்தமாதிரி அல்லது  அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என தோன்றவே அவரைப்பற்றிய  மேலதிக தேடல்களை   தொடங்கிவிட்டிருந்தேன்.

                                          வன்னிரெக்  தயாபரன் மற்றும்  உதயகலா


கிணறு வெட்டப் பூதம் கிழம்பியது போல  தோண்டத் தோண்ட   தமிழ் மாணவர் அமைப்பை நடாத்திய  ரிசி என்;கிற சிவானந்தன் ரிசாந்தன் அல்லது ரிசாந்தன் சிவராசா (இதில் எந்தப்பெயர் உண்மையானது என்பது தெரியவில்லை).

                                                                   இவர்தான் ரிசி


 பிரித்தானியத் தமிழர் பேரவையின்  முக்கிய உறுப்பினராக இருந்து அண்மையில் அவ்வமைப்பிலிருந்து விலகிய  ஸ்கந்தா  என்கிற சுப்பிரமணியம் ஸ்கந்ததேவா ஆகியோரின்  தொடர்புகள் தெரியவரத் தொடங்கியது.  ஆனால் தேடலின் இறுதியில் இந்த வலைப்பின்னலை பின்நின்று இயக்குபவர் ஸ்கந்தாவே என்றும் அறிய முடிந்தது.

ஊரை அடித்து உலையில் போடும் இந்தக்கும்பலைப்பற்றி இனி கொஞ்சம் விபரமாக பார்க்கலாம்.
உதயகலா என்கிற பெண்  வன்னிப் பெருநிலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயம்  அவர்களால் நடாத்தப்பட்ட வன்னி ரெக் என்கிற தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துள்ளார். அங்கு அவர் படிக்கசென்ற காலங்களில்  அந்த பாடசாலையின் பொறுப்பாளராக இருந்த தயாபரன் அல்லது தயாபரராஜ் என்பவரிற்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்தது. உதயகலா ஏற்கனவே ஒரு போராளியை  திருமணமுடித்திருந்தவர். விழுப்புண் அடைந்திருந்த அவரது  போராளிக்கணவர் தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பட்டடிருந்தார். அங்கு அவர் புலிகளின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டு  சிறைவைக்கப்பட்டிருந்தார்.   அதற்கு பின்னர் தயாபரனுடன் தொடர்பு ஏற்படவே வன்னி ரெக்கின்  நிதியிலிருந்து  பணத்தினை மோசடி செய்த தயாபரன் உதயகலாவிடம் கொடுத்துள்ளார். இவ்விடயம் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துக்கு  தெரியவரவே தயாபரன் அவர்களால் இடைநிறுத்தப்பட்டு தண்டனையும்  கொடுத்திருந்தனர். அநே நேரம் இறுதியுத்தம் தொடங்கிவிடவே இவர்கள் இருவருமாக இராணுவத்திடம் சணைடைந்து பின்னர' விடுதலையானார்கள்.  கொழும்பில் தங்கியிருந்படி முகாம்களில் அடைபட்டிருந்த  மற்றும் காயமடைந்திருந்த போராளிகளை வெளியே எடுத்து விடுவதாக  அவர்களின் உறவினர்களிடம் பெருமளவு பணத்தினை பெற்று மோசடி செய்தவர்கள் அங்கிருந்து இந்தியாவிற்கு தப்பி சென்றுவிட்டனர். தப்பிச் சென்றவர்கள் தங்களை யாரும் தேடாதிருப்பதற்காக  தயாபரன் இறந்து விட்டாரென  ஒரு செய்தியை  உதயகலா பரப்பினார். அதிலும்  பணம் சம்பாதிக்க நினைத்தவர்  சமாதான காலத்தில் வன்னிக்கு  சென்று வன்னி ரெக்கில்  தயாபரனை  சந்தித்த அனைவரது விபரங்களையும் திரட்டி அவர்களிடம் தொடர்புகொண்டு  தயாபரன் இறந்து விட்டார்  எனவே அவரது மரணச்சடங்கிற்கு பணம் வேண்டுமென கேட்டபொழுது பலர் அனுப்பியிருந்தனர். ஆனால் ஒருவர் சந்தேகப்பட்டு  அவர் இறந்ததற்கான ஆதாரம் கேட்டபொழுது  தயாபரன் கண்ணை மூடியபடி படுத்திருந்த ஒரு படத்தினை அனுப்பிருந்தார்...

                                         தயாபரன் இறந்தது போன்றதொரு படம்









இது இப்படியிருக்க,  2008ம் ஆண்டில் ரிசி என்கிற ரிசாந்தன்  இலண்டனிற்குள் மாணவர் விசாவில் நுளைகிறார். மாணவர் விசாவில் நுளைந்த ரிசியை வைத்து  ஸ்கந்தா (ITSO)  அனைத்துலக தமிழ் மாணவர் அமைப்பு என்கிற தொரு அமைப்பினை  ரிசியியையும் தனது மகளையும் இணைந்து  பதிவு செய்கிறார். (பதிவிலக்கம்: 6993075 பதிவு செய்த திகதி: 20.08.2009)


. இந்த அமைப்பு  உதவி அமைப்பு என  வெளியில் சொல்லப்பட்டாலும்   அது வியாபார நிறுவனமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.  அதாவது இந்த அமைப்பிற்கு கிடைக்கும் நிதியை அதன் நிர்வாக இயக்குனர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.  அது மட்டுமல்லாது  ஸ்கந்தாவே  ரிசியை  இங்கிலாந்தின்  தமிழ்  இளையோரமைப்பு.  தமிழ் ஊடகங்கள்.. பிரித்தானிய தமிழர் பேரவை. மற்றும் தமிழ்  வியாபாரிகள் பிரபலங்கள் என அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து  ரிசி  தாயகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கான உதவி. வடகிழக்கு  பல்கலைக்கழக  மாணவர்களிற்கான உதவி என  தமிழ் இணையத்தளங்கள்,  ஊடகங்கள், facebook என  விளம்பரம் செய்யத் தொடங்கினார். ஸ்கந்தா - ரிசி கூட்டணி எதிர்பார்தத்தை போலவே பலர் மனமிரங்கி பணம் கொடுக்கத் தொங்கினார்கள். இவர்களிற்கு ஊரில் இருந்து  உதயகலா .கஸ்தூரி என்கிற  இருபெண்களே  பாதிக்கப்பட்டவர்களின் படங்களை  அனுப்பிவைத்துக்கொண்டிருந்தனர். இவர்கள் பாதிக்கப் பட்டவர்களின் படங்களை வைத்து  பணம் சம்பாதிக்கிறார்கள் என அறிந்த கஸ்தூரி இவர்களை விட்டு விலகிவிட்டார்.

இவர்கள்  தங்கள் ஏமாற்று வியாபாரத்தினை  விருத்தி செய்ய நினைத்து  விடுதலைப்புலிகளின் காலத்தில் முல்லைத்தீவில் பெண்கள் பராமரிப்பு  இல்லமாக இருந்த பாரதி இல்லத்தினை  மீண்டும் தாங்கள் பொறுப்பெடுத்து பாரிஜாதம் என்கிற பெயரில் இயக்கவிருப்பதாக  பிரச்சாரம் செய்து பல வியாபாரிகளிடம் பெரும்  தொகை பணத்தினை  சுருட்டியிருக்கிறார்கள்.


மறுபுறம் உதயகலாவை வைத்து  முன்னைநாள் போராளிகள்  காயமடைந்தவர்கள்  எனப்பலரையும் வெளிநாடு அழைத்து செல்வதாக அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு   அவர்களை  மலேசியாவிலும். தாய்லாந்திலும் கொண்டு சென்று கைவிட்டுள்ளார்கள். அதே நேரம் காயமடைந்த போராளிகளிற்கு நல்வாழ்வளிப்பதற்கு  வெளிநாடு அழைத்து வருகிறோம் என்று வெளிநாடுகளிலும்  பணம் சேகரித்துள்ளனர். ITSO     அமைப்பின் நடவடிக்கை இப்படியிருக்க,  இதே ஸ்கந்தா நம்பிக்கை ஒளி (RAY OF HOPE)   என்கிற இன்னொரு அமைப்பையும் பதிவு செய்தார். இவ்வமைப்பிலும் ஒரு இயக்குனராக தனது மனைவியையும் இணைத்துக் கொண்டார். (பதிவிலக்கம் 7192725 பதிவுத் திகதி 17.03.2010)



இதன் மூலமாக லண்டனில் வாழ்ந்த பல முன்னை நாள் போராளிகளை  தொடர்புகொண்டு  அவர்களின் ஊடாக  பாதிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளிற்கென  நிதி சேகரிக்கத் தொடங்கினார். சிறையிலிருந்து விடுதலையான பல போராளிகளின் தேவைகளை நேரடியாகவே வீடியோ  காட்சிகளாக படமெடுத்து அதனை  வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் போட்டுக்காட்டி பணம் சேகரிக்கப் பட்டது. ஆனால் இந்த அமைப்பினை உருவாக்கி  அதற்காக தன்னலமற்று பல முன்னைநாள் போராளிகள்  உதவிசெய்திருந்தனர். ஆனால் காலப் போக்கில் ஸ்கந்தாவின் குளறுபடி சரியான  கணக்கு வழக்கு காட்டாமை என்பவற்றால்  பலரும் அதிலிருந்து விலகிப் போய்விட்டனர். ஸ்கந்தாவும்  அவருடன் சேர்ந்து சிலரும் தொடர்ந்தும்  இந்த நம்பிக்கையொளியை  தொடர்ந்தும் இயக்குகின்றனர். (மற்றயவர்களது விபரங்கள் என்னிடமிருந்தாலும் அவர்களது நலன் கருதி அவற்றை இணைக்கவில்லை)

சிறிலங்கா அரசுடன் சேரந்தியங்கும் கே.பி.  வன்னியில் தொடக்கியிருக்கும்  'அன்பு இல்லம்' என்னும் சிறுவர் இல்லத்திற்கும்  ஸ்கந்தா அவர்கள்  ஒரு தொகை நிதியுதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது அண்மைக்கால நடவடிக்கையாக   இறுதி யுத்தத்தின் போது தலைவருடன் நின்று தப்பிவந்தவர்கள் எனக்கூறிக்கொண்டு  தாங்களே தலைமைச்செயலகம்  எனவே நாங்களே  மாவீரர்நாள் செய்யும் உரிமையுள்ளவர்கள் என கூறிக்கொண்டு  புதிதாக இரண்டாவது மாவீரர் நாளை ஜரோப்பா எங்கும் அரங்கேற்றியவர்களிற்கு  பின்னாலிருந்து இயக்கியது மட்டுமல்ல அவர்களிற்கு  ஆதரவு கொடுக்கும்படி அனைவரையும் ஸ்கந்தா  வேண்டியிருந்தார்.

இனி ITSOஅமைப்புப்பற்றிய அண்மைய தகவல்கள். வருடாவருடம் Company House  க்கு அனுப்பப்படவேண்டிய கணக்குவிபரங்கள் அனுப்பப்படாமையால். இந்த நிறுவனத்தின் பதிவினை Company House இரத்துச் செய்துள்ளது. இதற்கான இறுதி அறிவுறுத்தல் கடந்தவருடம் டிசம்பர் மாதம் 14ம் திகதி வழங்கப்பட்டிருந்தது. நிறுவனத்தை கலைத்தவிட்டதான அறிவிப்பினை இவ்வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி அனுப்பப்பட்டது. ஒரு கணக்காளரான ஸ்கந்தா ஏன் இந்த அமைப்பின் கணக்கு அறிக்ககையை சமர்ப்பிக்கவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும். இதுவிடயமாக அவரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. Company House  இனால் ITSO கலைக்கப்பட்டபோதிலும் இவ்வருடம் ஒகஸ்ட் மாதம் வரை இவ்வமைப்பு செயற்பட்டு வந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இறுதியாக குழப்பமடைய வைக்கும் சிலகேள்விகள்.  இதுவரை இவர்கள் வழங்கிய உதவிகளிற்கான சரியான தரவுகளோ வரவு செலவு கணக்குகளோ எங்குமே காண்பிக்கப்படதாது ஏன்? உதவிதேவைப்படும் எத்தனையோ ஆயிரம் பேர் தாயகத்தில் காத்துக்கிடக்க ..பல உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வசதியுள்ள  கே.பி அவர்களின் அன்பு இல்லத்திற்கு  நிதியுதவி செய்யவேண்டிதன் அவசியம் என்ன?  ரிசி   தன்னை மற்றையவர்களிற்கு   அறிமுகம்  செய்யும் பொழுது  தன்னைப்பற்றிய தகவல்களை  மாற்றி மாற்றிக் கொடுப்பது ஏன்? இத்தனை   குழப்பங்களும்  மோசடிகளும் கொண்டதொரு வலைப்பின்னலை பின்னாலிருந்து இயக்கும் BOSS யாரென்று ஆராய்ந்தால் அவர்தான்  மொட்டை BOSS   என்கிற  ஸ்கந்தா.