Navigation


RSS : Articles / Comments


இலவ(ஈழ)ம் காத்தவர்கள்

12:05 AM, Posted by sathiri, 2 Comments

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்

Posted Image

முற் குறிப்பு . இந்தக் கதையை புலிகள் அமைப்பின் தீவிர விசுவாசிகளோ கலாச்சாரத்தினை கண்களாக மதிப்பவர்களோ தவிர்துவிடுவது நன்று


சீறா லியோனின் லுங்கி விமான நிலையம்..நையீரியாவிலிருந்து வந்த விமானம் தரைதட்டுகின்றது. றோகன். சோம்பல் முறித்தபடி பக்கத்தேயிருந்த தாய்லாந்து அழகி நுயும் மை பார்த்து வந்துவிட்டோம். உனக்கு இந்தத் தடைவை புதுவிதமான அனுபவங்களாக இருக்கப்போகின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும். சோர்வோ கோபமோ அடைந்து விடாதே எனக்காக எல்லாத்தையும் அனுசரித்துநடந்துகொள் என்றான்.மெல்லிதாக புன்னகைத்தவள் றோகனின் தோளில் சாய்ந்தபடி உனக்கொன்று தெரியுமா நான் எத்தனையோ ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறேன எத்தனை பேர் என்கிற கணக்குக்கூடத் தெரியாது ஆனால் உன்னை மட்டும்தான் நம்பி இப்படி தனியாக நாடு விட்டு வந்திருக்கிறேன். உனக்காக நான் மரணம்வரை வரவும்தயார். என்றவளின் கன்னங்களை மெதுவாக தடவிய றோகான். என்னுடைய ஒவ்வொரு பயணமுமே மரணம் வரையிலானதுதான் என்றவன் . சிரித்தபடியே இதுவும் மரணம் வரையிலான பயணம்தான் நியும். நான் ஒவ்வொரு தடைவையும் மரணத்தின் கதவை எனது திறமையால் திறக்கும் பொழுது அதிஸ்ரமும் உன்னைப்போல ஒரு அழகான பெண்ணும் கூடவே நிற்பதால் தப்பித்துக் கொள்கிறேன். ..

விமானம் நின்று பயணிகள் எழுந்து தங்கள் பொருட்களை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு இறங்கத் தயாரானார்கள். பலமணிநேரம் விமானத்தில் பொறுமையாக பயணிப்பவர்களால் விமானத்தை நிறுத்தி சரியாக கதவு திறக்கப்படும் வரை ஒருசிலநிமிடங்கள் பொறுக்கமுடியவதில்லை எவ்வளவு அவசரம் ஏதோ பலமில்லியன் வியாபரம் பேசப்போகிறவர்களைப்போல ஓடுகிறார்கள் என மனதில் நினைத்தபடி பொறுமையாக இருந்து ஆறுதலாக தனது உடைகளை சரி செய்துவிட்டு நியும்மின் கைகளை கோர்த்துக்கொண்டு விமானத்திலிருந்து இறங்கிப்போய் குடிவரவுப்பகுதியில் அதிகாரியிடம் தன்னுடையதும் நியும்மினதும் கடவுச்சீட்டை நீட்டினான். அவனுடைய மலேசியக் கடவுச் சீட்டையும் அவளுடைய தாய்லாந்து கடவுச் சீட்டையும் அதிகாரி புரட்டிக்கொண்டிருக்க நியும்மை இழுத்து அவள் உதட்டில் இச்..வைத்துக்கொண்டிருக்கும் பொழுதே கடவுச் சீட்டில் ஓங்கி இறப்பர் முத்திரை குத்தும் சத்தம் கேட்டது. கடவுச் சீட்டுகளை வாங்கிக் கொண்டு பொதிகளை எடுத்தபடி வெளியே வந்தான். அங்கு வாசலில் பெயர் மட்டைகளை கைகளில் தாங்கிப் பிடித்தபடி நின்றவர்களை நோட்டம் விட்டான்
ஒருவன் மட்டையில் பன்னிச் செல்வம் எழுதி தூக்கிப் பிடித்தபடி நின்றிருந்தான். அதைப்பார்த்தும் கழுக்கென சிரித்தவன் அவனை நோக்கிப் போய் அவனிடம் அறிமுகம் செய்து விட்டு அவனது பெயர் எழுதியிருந்த மட்டையை வாங்கி தனது பொக்கற்றினுள் இருந்த பேனாவை எடுத்துபன்னீர்செல்வம்எனமாற்றிஎழுதிஅவனிடம்கொடுத்துவிட்டு அவனைப்பின்தொடந்து விடுதிக்குபோவதற்காக அவன் கொண்டுவந்திருந்த வாகனத்தில் ஏறி அமர்ந்தார்கள்.

இந்தத் தடைவை நீண்டபயணமாகிவிட்டது தாய்லாந்து தென்னாபிரிக்கா.நைஜீரியா என்று சுற்றியடித்து இறுதி இடத்திற்கு வந்து விட்ட பயணக்களைப்பு. பொதிகளை அறையில் போட்டுவிட்டு நல்ல வெத வெதப்பான நீரில் குளித்துவிட்டு வந்த றோகான் துடைத்த துவாய் துண்டை இடுப்பில் அணிந்தபடியே தனது சிறிய பிறீவ்கேசை திறந்து சில ஆவணங்களையும் வேறொரு கடவுச்சீட்டையும் எடுத்து மேசையில் வைத்துவிட்டு அன்றிரவு நடக்கவிருக்கும் சந்திப்பை மனதில் ஒத்திகை பார்த்தபடி இருந்தபொழுது குளிக்கப் போயிருந்த நியும்.மழையில் நனைந்த செவ்வரளிப்பூவைப்போல நீர் சொட்டச் சொட்ட இடையில் குறுக்கே கட்டியிருந்த துவாயுடன் இன்னொரு துவாயால் தலையை துவட்டியபடி வெளியே வந்தவளை அப்படியே அகல விரிந்த கண்களால் அடியிலிருந்து முடிவரை அங்கமங்கமாக அசைபோட்டு பார்த்தபடி கண்ணதாசன் அனுபவித்துத்தான் கவிதை எழுதியிருக்கிறான் என்று மனதில் நினைத்தான்

என்ன இப்பொழுதுதான் புதிதாய் புசிப்பது போலவே பார்க்கின்றாயே ...

உனக்கொன்று சொல்லட்டுமா என்வாழ்வில் எத்தனையோ பெண்களில் புகுந்திருக்கின்றேன். மறுதடைவை அவர்கள் புது முதுகைக்கூட தொட்டதில்லை ஆனால் நீ மட்டும்தான் எனக்கு புதிது புதிதாய் பிறந்தவள் போல் தெரிகின்றாய் அதன் மர்மம்தான் எனக்கு மனதில் தோன்றவில்லை.

அதுவா அவர்களைப்போல அன்னியமாய் உடலோடுமட்டும் உறவாடுவதில்லை உளஅன்போடு உறவாடுவது காரணமாயிருக்கலாம்.

என்னவோ போ உன்னை அப்படியே தின்னவேணும்போல் உள்ளது.

பார்த்தாயா ஆபிரிக்கா வந்ததுமே நீ நரமாமிச பட்சணியாகிவிட்டாயோ?

இல்லை நான் சைவப்புலி உன்னை கொல்லாமலேயே உண்ணப்போகின்றேன்.

இங்கேயும் புலிதானா??

நான் எங்கேயும் புலிதான். புலி வேட்டைக்குத்தயாராகி விட்டது

என்று பற்களை வெளியே காட்டி உர்..என்று உறுமியபடி கைகள் இரண்டையும் புலியின் கால்களைப்போல முன்னே நீட்டி விரல்களை பிராண்டுவது போல் அவளது மார்புகளை நோக்கி நகர்ந்தவனை அவள் செல்லமாய் தள்ளிவிட .அவனோ அவளை கட்டிலில் இழுத்து சரித்து அவள்மீது படர்ந்து அவன் இயங்க அவளோ அகம்மயங்க புறம்கயங்க ஈருடலும்ஓருயிராய்முயங்கியமுடிவில் மான் புலியை வேட்டையாடி விட்டது என்றபடி அவனின் மூச்சு மேலும் கீழுமாய் முட்டிமோத அவள் அவனிற்கு முத்தங்கள் இட்டுக்கொண்டிருந்தாள்.

முத்தமாரி பெய்துவிட்டெளுந்தவள் இரண்டு சிகரற்றுக்களை எடுத்து இரண்டையும் ஒரேதடைவை உதட்டில் புகுத்தி பற்றவைத்தவள் ஒன்றை அவனின் உதட்டில் பொருத்திவிட்டு ஜன்னல் ஓரமாக வந்துநின்று புகையை உள்ளிழுத்து ஊதியவள் இரவு நிகழ்வுகள் எல்லாம் ஏற்பாடாகிவிட்டதா என்றாள்.நீ சிறிது ஓய்வெடுத்துக்கொள் நான் மீண்டும் குளித்துவிட்டு வெளியே போய் வாடைகைக்கார் ஒன்றை எடுத்துக்கொண்டு தகவலும் அனுப்பிவிட்டு வருகிறேன் என்றவன் அவசரமாய் குளித்து உடைமாற்றிக்கொண்டு தயாராய் வைத்திருந்த கடவுச்சீட்டை எடுத்தக்கொண்டு வெளியேறியவன் விலை உயர்ந்த வாடைகைக்கார் என்றினை எடுத்துவிட்டு நேரத்தை பார்த்தான் . இப்பொழுது நேரம் சரியானதாயிருந்தது இப்பொழுது அவன் காத்திருப்பான் போனடிக்கலாமென நினைத்தவன் அங்கிருந்த வீதியோர தொலைபேசிக் கூண்டு ஒன்றில் புகுந்து ஒரு கிறெடிட்காட்டை செருகிவிட்டு இலக்கங்களை அழுத்தினான்.

இந்தோனிசியாவின் யலாங்பாரு பகுதியில் வீதியோரத்தில் இருந்த ஒரு தொலைபேசிக்கூண்டின் மணி அடித்தது அதனருகே தயாராய் நின்றிருந்த றிசி தொலைபேசியை எடுத்ததும்

என்ன பயணம் எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சதா என்றவும்.

ஓம் அதெல்லாம் நல்லபடி முடிஞ்சுது இரவு சந்திப்பு முடிஞ்சதும் காலைமை உன்னுடைய நேரம் ஆறுமணிக்கெல்லாம் இதே நம்பருக்கு திரும்ப அடிக்கிறன்.

இந்த முறை நீ சந்திக்கிறவன்தான் பெரிய ஆள் இப்பதான் முதன் முதலாய் நாங்கள் அவனை சந்திக்கிறம். அவனோடை கதைக்கிற ஒவ்வொரு வசனமும் கவனமாய் கதைக்கவேணும் அதுக்காகத்தான் உன்னை அனுப்பியிருக்கு கொஞ்சம் கதை பிழைச்சு அவங்களுக்கு சந்தேகம் வந்தாலும் உன்னை அங்கையே புதைச்சிடுவாங்கள் கவனம்.

அதெல்லாம் பிரச்சனையில்லை மச்சான் நான் கதைச்சே கவித்திடுவன்.

அது தெரியும் ஆனால் இந்தமுறை கட்டாயம் பெரிய சாமான் ஒரு இரண்டு மூண்டாவது எடுக்கிறதுக்கு றைபண்ணு அதுக்காக எவ்வளவு றிஸ்க்எடுக்கவும் தயாரெண்டு சொல்லு

கட்டாயம் முயற்சி செய்யிறன்.


இவனாலை ஏலும் எண்டுதான் நினைக்கிறன் பாக்கலாம்.
நட்சத்திர நாய்களும் மணந்து கொண்டு திரியிறாங்கள் உடைஞ்ச நாட்டிலை இப்ப அவங்களே தரகரா மாறியிருக்கிறாங்கள். எண்டு அறிஞ்சனான் எதுக்கும் கவனம்


நானும் அறிஞ்சனான் நான் பாத்துக்கொள்ளுறன்.

சரி நியும் எப்பிடி இருக்கிறாள் ஒண்டும் பயப்பிடேல்லைத்தானே கடைசி நேரத்திலை ஒண்டும் சொதப்பிப் போடாமல் பாத்துக்கொள்.

அவள் பிரச்சனையில்லை அவளுக்கென்ன ஊர் சுத்துற சந்தேசம். தனக்கு பிரான்சும் இங்கிலாந்தும் பாக்கவேணுமாம் ஒரே நச்சரிப்பு அவ்வளவுதான்


சரி நாளைக்கு நல்ல செய்தியோடை திரும்ப தொடர்பிலை வா
தெலைபேசி துண்டிக்கப் படுகின்றது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
றோகன் வெள்ளை நிற நீளக்காற்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்யையும் அணிந்தவன் அதற்கு சிகப்புநிற கழுத்து கோவணத்தினை எடுத்து அணிந்து சரி பார்த்தவன் தயாராய் வைத்திருந்த சிகப்பு நிற மேலாடை(கோட்) அணிந்தபடி எப்படி இருக்கிறேன் என நியும்மை பார்த்துக் கேட்டான். களுக்கென சிரித்தவள். இதென்ன நிறக்கலவை ஆனாலும் பரவாயில்லையன்றாள். அவள் ஒரு விமானப் பணிப்பெண்ணைப்போல கறுப்பு நிறத்தில் குட்டை பாவாடை சட்டையோடு தயாராகியிருந்தவள் நான் எப்படி இருக்கிறேன் என்றாள். உண்மையை சொல்லட்டுமா?? மீண்டும் ஒருதடைவை அப்படியே ..உன்னை ஆனால் ஆடைகள் கசங்கிவிடும். வேண்டாம் போகலாம் என்றான்.

இருவரும் விடுதியை விட்டு வெளியே வந்ததும் அங்கு ராக்சியில் நின்றிருந்த ஒருவன் தன்னுடைய ராக்சியை பின்தொடருமாறு சைகை செய்தான். றோகன் தன்னுடைய வாடைகைக்காரில் அவனைப்பின்தொடர அது கடற்கரையோரமாக இருந்த பெரிய ஆடம்பர பங்களா ஒன்றின் முன்னால் போய் நின்றதும். ராக்சியை ஓட்டிவந்தவன் இதுதான் இடமென சைகையிலேயே காட்டிவிட்டு தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். றோகானின் கார் பங்களாவினுள் நுழைய முற்படும்பொழுது வாசலில் நின்ற காவற்காறன் மறித்து அவர்களை இறங்க சொல்லி பணிவாய் கேட்டுக்கொண்டான். நான் மெமேயை (முகமட்) சந்திக்க வநதிருப்பதாக சொல்லி சட்டைப்பையிலிருந்த ஒரு கடதாசியை எடுத்து காவற்காரனிடம் நீட்டவே. அதை வாங்கியவன் நீங்கள் மெமேயை சந்திக்க வந்திருப்பது எனக்கு தெரியும் ஆனால் சிறிது நேரம் பொறுங்கள் என்றவன் இன்னொருத்தனை அழைத்து அந்தக்கடதாசியை கொடுத்தனுப்பினான்.

கடதாசியுடன் போயிருந்தவன் இன்னொரு பெண்ணுடன் திரும்பவும் வந்து அவர்களை பரிசோதித்துவிட்டு உள்ளே அனுப்பச்சொன்னதும். வந்த பெண் நியும்மையும் காவற்காரன் றோகனையும் காலில் இருந்து தலைவரை தடவிப்பார்த்து ஆயுதம் எதுவும் இல்லையென்று உறுதிசெய்தபின்னர். அவர்களது கைப்பையையும் பரிசோதித்து விட்டு அந்த பிரமாண்டமான சொகுசு பங்களாவினுள் அழைத்துச்சென்றனர். உள்ளே போகும் போதே றோகன் அந்த பங்களாவின் சுற்றாடலை நோட்டம் விட்டான் விறைப்பான காவலர்கள் சுற்றிவந்துகொண்டிருந்தனர் கைகளில் ஆயுதங்கள் எதுவும் இல்லை அவற்றை அவங்கள் மறைத்து வைத்திருந்திருக்கலாம். பங்களாவின் நடுவில் பிரமாண்டமான நீச்சல்தடாகம் எவளையும் காணவில்லை. காவலர்கள் அவர்கள்இருவரிடமும் ஒரு அறையை காண்பித்து அதற்குள் தங்கியிருக்குமாறும் மொமே வந்ததும் அழைப்பதாக பவ்வியமாககூறி விடைபெற்றனர். அறைக்குள் பலவகையான குடிபானங்கள் சிற்றுண்டி என்பன அழகாக அடுக்கிவைக்கப்பட்டு மொமேயினது நல்வரவு இவை உங்களிற்கானவை என ஒரு வரவேற்பு அட்டையும் வைக்கப்பட்டிருந்தது..அறையில் நுளைந்ததுமே அதன் ஜன்னலை திறந்து அந்த பங்களாவின் பிற்பகுதியை கவனித்தான் பங்களாவின் பிற்பகுதி கடற்கரை கடலில் இருந்து பெரியதாய் கால்வாய் வெட்டி பங்களாவரை வள்ளங்கள் வந்து போக வசதி செய்யப்பட்டிருந்தததோடு ஒரு ஆடம்பர வள்ளமும் நின்றிருந்தது.

ஜன்னலை சாத்திவிட்டு அங்கிருந்து பெரிய கண்ணாடியில் தன்னை ஒருதடைவை பார்த்தவன் ரையை சரி செய்தபடி என்ன நியும் எதுவும் பேசாமல் இருக்கின்றாய் பயமாக இருக்கிறதா?? என்றான். பயமா எனக்கா நீ அருகில் இருக்கும் பொழுது என்னையே எனக்கு ஞாபம் இருக்காது பயம் என்னுள் எப்படிவரும் இந்த புது சப்பாத்து வலிக்கிறது என்றபடி தன்னுடைய குதிக்கால் சப்பாத்துக்களை காலால் தட்டி கழற்றிவிட்டு அமர்ந்துகொண்டாள் நியும்.சிறிது நேரத்தில் அவர்களது அறை கதவு தட்டப்பட்டது..ஒருத்தன் பணிவாக மோமே வந்துவிட்டார் நீங்கள் மட்டும் வாருங்கள் என றோகனை அழைத்தான்.எப்படி மெமேக்கு வணக்கம் சொல்வதென மனதில் ஒத்திகை பார்தபடியே அறையை விட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தான் நன்கு உடற்பயிற்சி செய்து முறுக்கேற்றி உடல் அதனை காண்பிற்பதற்காகவே அரைக்கை பனியன் ஜீன்ஸ் அணிந்த சாராசரி உயரத்துடன் ஒருவன் அமர்ந்திருந்தான் அவன்தான் மெமேயாக இருக்குமோ என றோகன் நினைத்தமாத்திரமே எழுந்த அவன் வணக்கம் வாருங்கள் இந்த மொமே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறான்.என்படி றோகனின் கைகளை குலுக்கும் பொழுதே எனக்கும்தான் உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி என்படி மெமேயின் தோளோடு தோள் மற்றி அணைத்து அறிமுகத்தை முடித்துக்கொண்ட பின்னர் அங்கு அமர்ந்து பேசத் தொடங்கினார்கள் அவர்கள் இருவரைத்தவிர வேறு யாரும் அங்கு இல்லை.மெமேயே பேசத் தொடங்கினான்

உங்கள் பொருட்களின் பட்டியல்கள் எனக்கு கிடைத்தது அதில் நீங்கள் திரும்ப திரும்ப கேட்கின்ற இலகு ஏவுகணைகள் மட்டும் பெற்றுக்கொள்ள முடியாது அது தவிர்ந்த அனைத்தும் ஒழுங்கு செய்யலாம்.

மொமே நீங்கள் முயற்சித்தால் முடியாதது என்று இல்லை அந்த நம்பிக்கை எமக்குள்ளது

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எதிரெதிரான வல்லரசு நாடுகளே எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தில் ஒன்று பட்டுநிற்கின்றனர் .எந்த போராட்டக் குழுக்களோ அல்லது ஆயுத குழுக்களின் கைகளில் ஆகாய எதிர்ப்பு ஏவுகணைகளை கொடுப்பதில்லையென்பதுதான் அது
ஆனால் யுத்தம் நடைபெறும் இடங்களில் அவர்களின் இரகசிய முகவர்களேதான் அதனை பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு வியட்நாமில் பாவிக்கபட்ட ஏவுகணைகளை இரஸ்யா கே.ஜி.பி முகவர்களும் ஆப்கானில் சி.ஜ.ஏ முகவர்களுமே கையாண்டனர் கியுபாவிலும் அதுவே நடந்தது. இங்கெல்லாம் யுத்தம் முடிவிற்கு வந்ததுமே முதல் வேலையாக அவர்கள் ஏவுகணைகளை திருப்ப பெற்றுக்கொண்டு விட்டனர்.


ஏன்??

அவை தீவிரவாத குழுக்களின் கிடைத்து தங்கள் பயணிகளின் விமானங்களின் மீது பயன்படுத்தப்படலாம் என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். பயணிகள் விமனம் மீது இலகுவாக அவற்றை கொண்டு தாக்கலாம்.
உங்களிடமிருந்து முன்னர் நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறோமே??

அவை சாம் பழைய தயாரிப்புக்கள்தானே உடைந்த இரஸ்சியாவில் எம்மால் முடிந்தது அவ்வளவுதான். அதனால் நவீன குண்டு வீச்சு விமானங்களை ஒன்றும் செய்திருக்க முடியாதே உங்களால். அங்கேயும் நீங்கள் தவறிளைத்திருக்கிறீர்கள். ஒரு பயணிகள் விமானத்தை விழுத்திய செய்தி


அது ஏதே தவறாக நடந்துவிட்டது

அதேதான் அதுதான் தவறு இனிமேலும் அதற்கு முயற்சிக்காதீர்கள் அப்படி முயற்சித்தால் நீங்கள் உளவமைப்பு முகர்களிடம் மாட்டிவிடும் அபாயம் உள்ளது. அடுத்த விடயங்களிற்கு வருவோம். இந்தத் தடைவை பணத்தைவிட பொருட்களாகவே எதிர் பார்க்கிறோம். என்னதான் தென்அமெரிக்கா கெக்கெயின் கிடைத்தாலும் ஆசியா கெறோயினிற்கும் கஞ்சாவிற்கும் உள்ள மதிப்பே தனியானது. அதோடு ஒரு உதவியும் வேண்டும் எங்கள் பொருட்கள் சிலவற்றை வடஅமெரிக்க கரையொன்றில் நீங்கள் இறக்கிவிடவேண்டும் அவ்வளவுதான் நீங்கள் சரி சொன்னால் மிகுதி சரி


பொருட்கள் சரி ஆனால் உங்கள் பொருட்களை இறக்குவது நான் முடிவெடுக்க முடியாது அதனை கேட்டுத்தான் சொல்லவேண்டும். ஆபிரிக்காவின் பாதாள அரசனால் அங்கு போக முடியாதா?

நான் என்னதான் பாதாள அரசனாயிருந்தாலும் உங்கள் கடல் வலையமைப்பு என்பது பிரமாண்டமானது . உலக நாடுகளிற்கே தலைவலியை கொடுக்கின்றது அந்தளவிற்கு இன்னமும் என்னால் முடியவில்லை அது எப்படி உங்களால் சாத்தியம்.

எல்லாம் எங்கள் தவைனின் திறமை அதற்கென தேர்ந்தெடுத்து திறமையானவர்களை நியமித்திருக்கிறார்.


இப்பொழுது எங்கள் பேரம் முடிந்துவிட்டது சாவகாசமாக பேசலாமா? உங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில் நீங்களே உற்பத்தி செய்யலாமே ஏன் வேறு நாடுகளில் இருந்து கடத்தவேண்டும்.
எங்களது தேசம் உன்னதமான தேசமாக உருவாக்குகின்றோம். அங்கு போதைப்பொருட்கள் கிடையாது விலைமாந்தர் கிடையாது பிச்சையெடுப்பவர் கிடையாது அனாதைகள் கிடையாது

மெமே சத்தமாய் சிரித்தபடி.. என்ன சொல்கிறாய் உங்கள் தேசம் உருவானால் அதில் முதலில் பாதிக்கப்படபோவது நீதான்.


அது எனக்கும் தெரியும் எனது தேசம் உருவாகின்ற அந்தப் பொழுதே நான் தற்கொலை செய்து கொள்வேன் அங்கு என்போன்றவர்கள வாழமாட்டார்கள்.

சரி எதற்கு இப்படி .. மிகுதி முடிவை பின்னர் சொல் இனி நாங்கள் வாழ்க்கையை அனுபவிக்கலாம். அடுத்த பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது உங்கள் நண்பியையும் அழைத்து வாருங்கள் போகலாம்.


அந்த அறையில் விருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது தேவைக்கு அதிகமானதாகவே உணவும் குடிவகைகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது நியும் முடன் உள்ளே நுளைந்த றோகனிடம் என்ன குடிக்கிறாய் சம்பெயினா??கொக்ரெயிலா? என்றான் மெமே சம்பெயின் என்றதும். சம்பெயினோடு உனக்கு ஒரு அழகையும் சேர்த்து தருகிறேன். இதோ அந்த அழகி மக்கும்பா இவள் உனக்காக என்று ஒருத்தியை நோக்கி கையை காட்டிய மொமே. கறுப்பழகிகளை உரித்துப்பார்த்திருக்கின்றாயா என்றான்.அதெல்லாம் சர்வதேச ரீதியிலேயே உரித்திருக்கிறேன். ஆனால் இவள் பேரழகியாக தெரிகின்றாள்.


மேடையில் வலம்வரும் மொடல் அழகியை போல ஒருத்தி சம்பெயினை கையில் ஏந்தியபடி றோகனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளைப்பார்த்தால் பிறந்து வளர்ந்தவள் பேல தெரியவில்லை அங்கங்கள் எல்லாம் அளந்து செய்து அச்சில் வார்த்தெடுக்கப் பட்டவள் போல இருந்தாள்.இதோ என்னுடைய பரிசு என்று நியும்மை மொமேக்கு அறிமுகம் செய்த றோகன். நீ எப்படி ?? .எனக்கு ஆசிய அழகி இதுதான் முதற்தடைவை நன்றிகள் என்றான் மெமே .மதுக்கிண்ணங்கள் ஒன்றோடென்று உரசிக் கொண்டன. ஒருவன் சிறிய பொட்டலம் ஒன்றினை கொண்டுவந்து அங்கிருந்த கண்ணாடி மேசையில் பிரித்து பரப்பி பின்னர் அதனை மெல்லிய நீள் கோடாக்கிவிட்டு கொக்ரெயில் கிண்ணத்திலிருந்த ஒரு ஸ்றோ(குளாய்) வை எடுத்து அதை இரண்டாக வெட்டி ஒன்றை றோகனிடமும் மற்றையதை மொமேயிடமும் நீட்டிவிட்டு போனான். நேராக உறுஞ்சிய இரு குளாய்களும் ஒரு புள்ளியில் வந்து முட்டி நின்று கொண்டது.

ஒரு அழகிய சுருட்டு பெட்டி ஒன்றினை திறந்து றோகனிடம் நீட்டிய மொமே இவை கியூப விசேட சுருட்டுகள் ஒன்றை பிடித்துப்பார் என்றதும் சிந்துபோயிருந்த கண்களுடன் ஒரு சுருட்டை எடுத்து மூக்கின் குறுக்கே வைத்து கண்களை மூடி ஆழமாய் அதன் வாசனையை உள்ளேயிழுத்தான். அவனின் தந்தையின் மார்பில் தவழ்ந்தது போலவே ஒரு உணர்வு
00000000000000000000000000000000000000000000000000000000000000000

குகநாதன் அதிகம் படிக்காதவர் யாழ்ப்பாணம் தாவடியில் சாதாரண வியாபாரி ஊரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் வாழ்க்கையில் எதையாவது சாதிக்கலாமென நினைத்து சுடுட்டு கட்டுகளோடு இரயிலேறியவர். தலவாக்கலையில் சுருட்டுக்கடை முதலாளியாகியிருந்தார். லயத்தில் வாழ்ந்த வேலம்மாள் காதலியாகி மனைவியானாள். ஒரு ஆண் குழந்தை பிறந்தது றோகன் என பெயர் வைத்தார் தான் அதிகம் படிக்கவில்லை மகனை பெரிய படிப்பு படிக்கவைத்து சாதாரண யாழ்ப்பாணத்து மக்களின் மனங்களில் உறைந்து போன வைத்தியர் அல்லது பொறியிலாளர் அதுதான் அவரது கனவு. அவரது கனவும் மகனும் வளர்ந்தது. தொண்டமானிக்கு எலக்சன் வேலை செய்து தொண்டமானும் வெற்றி பெற்றுவிட அவரிடம் மகனிற்கு கொழும்பின் றோயல் கல்லூரியில் இடமும் வாங்கி விடுதியிலும் சேர்த்துவிட்டிருந்தார்.றோகனும் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த ஜீலை 23 ம் நாள் அவனைச்சுற்றி என்னவோ எல்லாம் நடந்து கொண்டிருந்தது. தமிழில் ஓலச்சத்தங்களும் சிங்களத்தில் பிடி .வெட்டு .கொலை செய் எக்கிற சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது சிலர் சிங்களத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். போலிசும் இராணுவமும் அவனது விடுதிக்கு முன்னால் காவல் நின்றனர். றோகனிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவனுடன் கூட இருந்த சிங்கள மாணவர்கள் அவனை வெளியே போகவேண்டாம் என தடுத்தனர். சின்ன வயதிலிருந்தே சிங்களத்தில் மட்டுமே பேசிப்பழகிய றோகனிற்கு அப்பொழுதுதான் தான் ஒரு தமிழன் என்று உறைத்தது.அப்பா அம்மாவை பார்க்கவேண்டும் என தவித்தான் ஒரு கிழைமை கழித்து சிங்கள நண்பன் ஒருவனுடன் ஊருக்கு போயிருந்தான் அவனது வீடும் தந்தையின் கடையும் இருந்த இடத்தில் சூடு அடங்கியிருக்காத சாம்பல் மட்டுமே இருந்தது.

தாயை ஒரு அகதி முகாமில் தேடி கண்டு பிடித்தபொழுது ஓடிவந்து கட்டிப்பிடித்து அழுதவர் அப்பவிட்டை சுருட்டு கடன்வாங்கிற றோகித்தான் கத்தியாலை குத்தி கடையோடை சேர்த்து கெழுத்தினவன் என்று சொல்லி புரண்டு அழுதார். அதுதான் சாம்பலின் சூடு அடங்கவில்லையென அவனிற்கு புரிந்தது. அடுத்தது என்ன எல்லாமே சூனியமாக தெரிந்தது. தோட்டக்காட்டாளை கலியாணம் செய்திட்டான் என்கிற காரணத்திற்காக ஒட்டு உறவு வைத்திராத தந்தையின் குடும்பத்திலிருந்து ஒரு சகோதரியை மட்டும் அவர் ஊர் கோயில் திருவிழாவில் போய் பார்த்துவிட்டு முருங்கைக்காயும் மாம்பழமும் கொண்டுவருவார்.

உன்ரை மாமி நல்லவா இந்தா உனக்கு உடுப்பு வாங்கி தந்திருக்கிறாரெண்டு றோகனிற்கு அதை போட்டுவிட்டு கட்டிப்பிடித்துக்கொள்வார். அவர் சொன்ன தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பயணமானார்கள்.
அவனது மாமி உண்மையிலேயே நல்லவர்தான் இளவயதில் சாதி மாறி ஒருத்தரை காதலித்திருந்தாராம் அவர் காதலித்தவரை அவரது உறவுகள் வெட்டி கொலை செய்து தாவடிசுடலையில் போட்டிருந்தார்களாம். அதையறிந்த மாமிக்கு மன பிறள்வு ஏற்படவே அவரை சுதுமலை அண்ணாமலை பரியாரியின்ரை இடத்திலை கொண்டு போய் விட்டிட்டனமாம். அதை கேள்விப்பட்டு றொகனின் தந்தைதான் அவரிற்கு வைத்தியம் பார்த்தது மட்டுமில்லாமல் மாதா மாதம் செலவிற்கு பணமும் அனுப்பியிருக்கிறார் அவர் இப்பொழுது சுதுமலை சிம்மையா பாரதி பாடசாலையில் ஒரு ஆசிரியை பிறகு திருமணமே செய்து கொள்ளவில்லையென்தை நேரில் தேடி கண்டு பிடித்தபொழுது றோகன் அறிந்து கொண்டான். இவனின் கொச்சைத்தமிழ் ஊரில் இவனிற்கு சிங்களவன் என்கிற பட்டத்தை வாங்கிக் கொடுத்தது அவனை தொடர்ந்து படிப்பதற்காக இந்தியா அனுப்பிவிட்டிருந்தனர். மிகுதி படிப்பினை இந்தியாவில் படித்து முடித்தவன் மும்பையில் கப்பல் தெழில்நுட்பம் படித்தவன் அப்பொழுதே புலிகளின் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். மிகுதி படிப்பினை அயர்லாந்தில் பூர்த்தி செய்ததும் அப்படியே புலிகளுடன் இணைந்து கொண்டான். இவனது பலமொழியறிவு பேச்சு திறைமை இன்று பேரம் பேசுபவனாகியிருக்கிறான்.
00000000000000000000000
என்ன சுருட்டை உருட்டி உருட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்றபடி மக்கும்பா சுருட்டின் நுனியை வெட்டி அதில் நெருப்பை மூட்டிவிட்டாள்.அன்றிரவு அளவுக்கதிகமாக போதையேறிவிட்டதனால் ஏதோ ஒப்பிற்காக கொஞ்சம் சாப்பிட்ட றோகன் கறுப்பழகியை அழைத்துக்கொண்டு அறைக்குள் நுளைந்ததும் பேரங்கள் நல்லபடியாய் முடிந்த விடயத்தை றிசிக்கு தெரியப்படுத்தவேண்டும் தூங்கிவிடக்கூடாது என்று நினைத்தவன் தன்னுடைய கைக்கடிகாரத்தில் ஒரு இருபது நிமிடங்கள் கழித்து அலாரம் வைக்கலாமா என யோசித்தான். சே இப்படியொரு பேரழகியுடன் வெறும் இருபது நிமிடங்களா இன்னொரு இருபது நிமிடங்கள் என்று நாற்பது நிமிடங்கள் கழித்து அலாரத்தை வைத்தான்.அலாரம் அடிக்கமுதலேயே அவன் வியர்த்து களைத்து ஓய்ந்து போனவன் எழுந்து உடைகளை அள்ளி அணிந்து கொண்டான் கொஞ்சம் போதையும் இறங்கியதுபோல இருந்தது.சிறிது நேரத்தில வருகிறேன் என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியேறியவன். மீண்டும் விடுதிக்கு வந்து போனடிக்க வேண்டிய நேரம் வருமவரை காத்திருந்து. இலக்கங்களை அழுத்தினான் இந்தோனேசியா யலாங்பாரு வீதியோரத்து தொலைபேசி கூண்டு மணி அடித்தது. றிசி தொலைபேசியை எடுத்தான்.
என்னமாதிரி

எல்லாம் நல்படியா முடிஞ்சுது ஆனால் ஒரு புது டீலை போடுறான். அது சரியெண்டால் மிச்சம் சரி

என்னது புது டீல்

ஆபிரிக்கா நாடு ஒண்டிலை உள்ள அவனது பொருட்களை வட அமெரிக்கா கரை ஒன்றில் இறக்கிவிடவேணுமாம்.
அது முடியாதெண்டால்
அதைத்தான் அவன் முதலாவதாக எங்களிட்டை எதிர்பார்க்கிறான். சரியெண்டால் எல்லாம் சுலபமாகும். உடைஞ்ச கிழக்கு நாட்டிலை பாதியும் மிச்சம் வழைமையான கறுப்பு நாட்டிலையும் போய் ஏத்தவேண்டியதுதான்.

சரி பெரியது கிடைச்சதா??

அதைப்பற்றி கதைக்கவேண்டாம் எண்டிட்டான். முடியாதாம்.

சரி நான் முடிவு சொல்ல முடியாது அங்கை கேட்டு சொல்லுறன் ஒரு பதினைஞ்சு நிமிசம் கழிச்சு திரும்ப எடு
மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியவன்
என்னவாம்

டீல் ஓகேயாம். ஏத்தி இறக்கிற இடம் விபரங்களை அனுப்பிவிடு

சரி மச்சான் அதோடை இந்தமுறை நானும் ஒருக்கா ஊருக்கு போயிட்டு வரலாமெண்டு நினைக்கிறன். அம்மாவை பாத்து கனகாலமாகுது நான் எங்கை எப்பிடி இருக்கிறன் எண்டு கலைப்பட்டுக்கொண்டிருப்பா நான் வாறன் எண்டு அங்கை அறிவிச்சுவிடு

சரி நியும்மை பத்திரமா திருப்பி அனுப்பிட்டு நீ வழமையான தீவுக்கு போய் நில். அங்கை வண்டிவாற நேரம் நான் உனக்கு செய்தியனுப்பிறன்.

மிச்சம் குடுக்க வேண்டியது எங்கையாம்.

மொறிசியசில் ஒரு பாங்கிலை போட்டால் சரி அந்த விபரமும் அனுப்பி விடுறன். சரி மச்சான் சந்திப்பம் ..


புலிகளின் இரண்டு கப்பல்கள் முல்லைத்தீவு கடலில் சிலநாட்கள் நங்கூரமிட்டுவிட்டு திரும்பவும் சர்வதேச கடலில் இறங்கிப் போய்க்கொண்டிருந்தன.
றோகனிற்கு என்னென்ன சாப்பாடுகள் பிடிக்குமோ அத்தனையும் அவனிற்கு தாயாரும் மாமியும் செய்து அவனை திக்குமுக்காடவைத்துக்கொண்டிருந்தனர். வன்னியில் ஓயாதஅலை 3 சுழன்றடித்துக்கொண்டிருந்தது
00000000000000000000000000
2001 ம் ஆண்டின் இறுதியில் புலிகள் அமைப்பின் அதிகார நிருவாக மாற்றங்கள் நடந்தேறியது அதில் றோகனின் நண்பர்கள் பலரும் விலக்கப்பட்டு தனிவாழ்க்கைக்கு திரும்பி விட்டிருந்தனர். றொகனையும் பேரம் பேசலில் இருந்து திரும்பவும் கப்பலிற்கேமாற்றிவிட்டிருந்தார்கள். பேரம் பேசும் காலங்களில் அவனது போதை பழக்கம் மற்றும் அவனிற்கு பிடித்திருந்த ஆஸ்மா என்பவற்றால் அவனால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை அவனையும் வெளியேறுமாறு 2003 ல் உத்தரவுவந்தது,ஏதாவது நாட்டில் அகதி தஞ்சம் கோரலாமென நினைத்தவன் அதற்கு முன்னர் நியும் அடிக்கடி நச்சரிக்கும் பிரான்சை சுற்றி காட்டிவிடலாமென நினைத்து அவளை அழைத்துவந்து மூன்று வாரங்கள் பாரிஸ் நகரெங்கும் சுற்றி காட்டினான். அந்த மூன்று வாரங்கள் அத்தனையையும் மறந்து மகிழ்ச்சியாக கழித்தவன் மீண்டும் நியும்மை தாய்லாந்திற்கு திருப்பியனுப்பிவிட்டு அவனிற்கு பிடித்த சுவிஸ் நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்தான்.அப்பொழுதுதான் அவன் வாழ்க்கையில் சூனியத்தை உணர்ந்தான் ஒரு முறை தற்கொலை செய்து கொள்ளலாமா எனவும் யோசித்திருந்தான் ஆனால் இதுவரை நான் அம்மாவிற்கு என்று எதுவுமே செய்ததில்லை நாடு நாடு என்று ஓடியே நாட்கள் போய்விட்டிருந்தது.

நானும் இறந்துவிட்டால் அவரின் இறுதிக்காலங்கள் கவலையிலேயே கழிந்துவிடும் எனவே இனி முடிந்தளவு அவரை நல்லபடியாக பார்க்கவேண்டும் என நினைத்து தற்கொலை முடிவைமாற்றிவிட்டடிருந்தான். சுவிஸ் அகதிமுகாம் வாழ்க்கை வைத்திய ஆலேசனைகள் அவனை போதைப்பழக்கத்திலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவந்திருந்தது. காலமும் மனதைமாற்றியது .தமிழர்கள் அதிகமற்ற ஒரு அழகிய கிராமத்தில் அவனிற்கு வீடும் கிடைத்தது உருண்டோடிய வருடங்களில் நாட்டு நிலைமைகளை செய்திகளில் மட்டுமே படித்துக்கொண்டிருந்தான். தாயாரைத்தவிர வேறு எந்த தொடர்புகளையும் அவன் வைத்திருக்கவில்லை அதன் காரணம் ஒன்று அவன் விரும்பவில்லை அடுத்தது சுவிஸ் பொலிஸ் அவன் யாரென்று எப்படியாவது மணந்து பிடித்துவிடுவார்களோ என்கிற பயம். அப்படியான தொரு காலத்தில் 2005 ம் ஆண்டு ஒருநாள் பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் வனொலியை கேட்டுக்கொண்டிருந்தபொழுது அதில் கலந்துகொண்டிருந்த ஒரு குரல் அவனிற்கு பழக்கமானது வானொலி நிலையத்திற்கு போனடித்து அவனது இலக்கத்தை வாங்கி அதனை அழுத்தியவன்.

கலோ என்கிற சத்தத்திற்கு
றோயர் றோயர் றிசி என்றான்.

றிசிக்கு ஒரே ஆச்சரியம்எப்பிடி மச்சான் இருக்கிறாய் எப்பிடி என்ரை நம்பரை கண்டு பிடிச்சனி??

நீதான் கையையும் வாயையும் வைச்சுக் கொண்டு சும்மாயிருக்க மாட்டியே கண்டு பிடிக்கிறது பெரியகஸ்ரமோ??

சரி சுவிஸ் நம்பர் விழுது ஆனால் நீ எங்கை நிக்கிறாய்

சுவிசிலைதான் இருக்கிறன் மூண்டு வருசமாய்

ஓ ஏன் உன்னையும் கழட்டி விட்டிட்டாங்களா?

ஓம் மச்சான் இப்பதான் வீடு தந்து ஒரு வேலையும் கிடைச்சிருக்கு

நியுமோடை தொடர்பு இருக்கோ இப்பவும்.

ஓமடா கதைக்கிறனான் எனக்கொரு மகனும் இருக்கிறான்.

ஓ உன்னோடையா இருக்கிறாள் .

இல்லை கடைசியா எல்லாம் விட்டிட்டு வரேக்கை அவளை பாரிசிற்கு கூட்டியந்து ஒரு மூண்டு கிழைமை நிண்டனாங்கள். பிறகு அங்கை அனுப்பிட்டு அவளையும் அந்த தொழிலை கைவிட்டிட்டு கடைசியாய் என்னட்டை கையிலை இருந்த காசை அனுப்பி அவளின்ரை கிராமத்திலை ஒரு கடைபோட்டு குடுத்தனான். ஒருநாள் போனடிச்சு தான் சுகமில்லாமல் இருக்கிறதாய் சொன்னாள். எனக்கு விருப்பம் இல்லை ஆனால் நானும் இல்லை தனக்கெண்டும் ஒருத்தரும் இல்லை அதாலை தனக்கொரு பிள்ளையாவது வேண்டும் எண்டு அழுது அடம் பிடிச்சாள். பிறகு என்னத்தை சொல்லுறது.

என்ன செய்யப் போறாய் கூப்பிடுற யோசனை ஏதும் இருக்குதோ??

நானும் அவளளோடை எல்லாம் முடிஞ்சுது எண்டுதான் நினைச்சனான் ஆனால் நான்தான் நல்லதொரு மகனாய் இருக்கேல்லை ஆனால் நல்லதொரு அப்பாவாய் இருக்க முயற்சிக்கிறன். இங்கை பதியேக்கை கலியாணம் செய்யேல்லையெண்டு சொல்லிட்டன். அதாலை நான் அங்கைபோய் அவளை எழுதிட்டுதான் கூட்டியரலாம்

நல்லது அதை செய்யவேண்டியதுதானே

இப்பதான் வீடு தந்திருக்கிறாங்கள் இன்னமும் விசா கைக்கு வரேல்லையடா அதை தந்தால்தான் நான் எதுவும் செய்யலாம் அது கையிலை கிடைச்சதும் அதுதான் முதல் வேலை அம்மாட்டையும் சொல்லிட்டன்


மகனுக்கு என்ன பெயர்

நான் தான் வைச்சனான் திலீபன்.


இப்படியாக அவர்களது உரையாடல் பழைய நினைவுகளை மீட்டியதாகவே அதிகாலைவரை தொடந்து கொண்டேபோனது...

2008 ம் ஆண்டு தாயகத்தின் நிலைமை மேசமானதாய் மாறிக்கொண்டேயிருந்தது பழைய வெளிநாட்டு கட்டமைப்பினரை உதவுமாறு தொடர்புகளை தேடியெடுத்து திரும்ப திரும்ப அழைப்பு விடுத்தக்கொண்டிருந்தார்கள். அப்படியானதொரு காலத்தில் மீண்டும் றோகனிடமிருந்து றிசிக்கு ஒரு அழைப்பு

என்னமச்சான் நிலைமை மேசமாய் போகுது

ஓமடா பாத்துக்கொண்டுதான் இருக்கிறன் என்ன செய்யிறது

என்னை எப்பிடியோ தேடிப்பிடிச்சு எஸ்.ஓ தொடர்பெடுத்தது

என்னவாம்

வண்டியொண்டு சமானோடை வெளிக்கிடுதாம் வரட்டாம்.

என்ன செய்யப் போறாய்

போறதெண்டு முடிவெடுத்திருக்கிறன்

உனக்கென்ன விசரோ??

இருக்கலாம் மச்சான் ஆனால் இப்ப நடக்கிறது விடுதலைப் போராட்டம் இல்லை. வாழ்வா சாவா எண்டிறது இப்ப போகமல் இருந்திட்டு பிறகு கவலைபட்டு பிரயோசனம் இல்லை.

எனக்கென்னவோ புத்திசாலித்தனமாய் தெரியேல்லை

உன்னட்டையிருந்து இப்பிடியொரு பதிலை நான் எதிர் பார்க்கேல்லையடா எத்தனைதரம் முடியாதெண்டு தெரிஞ்சே முட்டி மோதியிருக்கிறம். விதியை மாத்தியிருக்கிறம்.


இது விதியில்லை பல நாடுகளின்ரை மதி. சதியெண்டும் சொல்லாம்.கொஞ்சம் கஸ்ரம். இந்தனோசியாவிலை ஸ்ரிபன் பிடிபட்டதோடையே சர்வதேச வலையமைப்பு நட்சத்திர நாயளிட்டையும் பக்கத்து நாயளிட்டையும் போயிட்டுது. இனி என்ன செய்தாலும் கஸ்ரமடா. வடிவா கவனிச்சு பார் குறிப்பிட்ட இடத்தை தாண்டினதுமே அடிக்கிறாங்கள். தொடந்து ..ஒண்டு இரண்டில்லை ஒன்பது அடிபட்டிட்டுது இனியும் நம்பிக்கை இருக்கா உனக்கு

இருக்கடா மாத்தலாம் பாதையை மாத்தலாமெண்டு இருக்கிறன் அதுக்குத்தான் என்னை கேட்டிருக்கினம். ஏன் உன்னை கூப்பிடேல்லையா
என்னை கேட்டவைதான் ஆனா யோசிச்சுபார் எட்டுவருசம் எந்த தொடர்பும் இல்லை திரும்ப ஆரம்பத்திலையிருந்து தொடங்க முடியாது அது உதவாது அதாலை மாட்டன்எண்டிட்டன்.

நீ ஒரு சுயநலவாதியடா இப்ப குடும்பம் பிள்ளையை விட்டிட்டு போக உனக்கு மனசில்லை
அப்பிடி நீ நினைச்சாலும் பரவாயில்லையடா ஆனால் எனக்கென்னவோ அவன் பிடிபட்டதுமே எல்லா கப்பல்லையும் அவனை வைச்சே ஏதாவது ஜி.பி.எஸ் பொருத்தியிருப்பாங்களோ எண்டு நினைக்கிறன் காரணம் அவன் பிடிபட்ட ஒருமாதம் அவன் எங்கையெண்ட விபரமே தெரியாமல் இருந்தது


நான் போறதெண்டு முடிவெடுத்திட்டன் ஆனால் ஒரு உதவி உன்னட்டை கேக்கிறன்

என்னது

நான் சிலநேரம் திரும்பி வராமல் போனால் என்ரை மகனின்ரை பிறந்தநாளுக்கு மட்டும் ஒரு உடுப்பு பாசல் பண்ணிவிடு மச்சான் .அப்பாவின்ரை இழப்பெண்டால் எனக்கு என்னவெண்டு தெரியும் அதை அவனும் அனுபவிக்கவேண்டாம். அவனின்ரை பிறந்தநாள் வருசம் பிறந்த முதலாம் திகதிதான் விலாசம் அனுப்பி விடுறன்.


அப்பிடியெல்லாம் நடக்காது போயிட்டுவாடா.

துருக்கி நாட்டில் இருந்து போய் வருகிறேன்என்று றோகனின் ஒரு எஸ் எம் எஸ் றிசிக்கு வந்திருந்தது
ஒரு மாதம் கழித்து 20 ந்திகதி மார்கழி மாதம் 2008 ம் ஆண்டுவேலையில் நின்றிருந்த அவனிற்கு ஒரு தொபேசி அழைப்பு ..செய்தி பாத்தியா.
இல்லை என்ன நடந்தது
செய்தியை பார்

அவசரமாக வேலைடயிடத்து கணணியில் செய்திகளை தேடுகிறான்.


இன்று அதிகாலை 2.00 மணியளவில் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அச்செய்தியில் மேலும் முல்லைத்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான கப்பலொன்றை அவதானித்த ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கப்பலில் உள்ளவர்களை தமது அடயாளங்களை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்த போது கப்பலில் இருந்து படையினைரை நோக்கி தாக்குதல் நாடாத்தப்பட்டதாகவும் கடற்படையினர் எதிர்தாக்குதல் நாடாத்தியபோது அக்கப்பலில் இருந்து பாரிய வெடிச்சத்ங்களுடனான தீச்சுவாலை வெளிவந்ததாகவும் தெரிவிக்கின்றது.

அத்துடன் அக்கப்பல் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் அக்கப்பலுக்கு உதவிக்கு வந்த புலிகளின் நான்கு படகுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
000000000000

மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டிருந்த வருடக் கடைசியின் ஒரு காலையில் றிசியின் கைத்தொலைபேசி யில் ஒரு செய்தி வந்திருந்தது திறந்து பார்த்தான் நன்றிகள் சகோதரா இந்தவருடமும் உங்கள் பரிசுப் பொதி கிடைத்தது மகனிற்கு மகிழ்ச்சி நன்றாக படிக்கிறான் அப்பா எப்போ வருவார் எனக் கேட்டான். வளர்ந்து விட்டான் இனி அவனது தந்தைபற்றிய விடயத்தை அவனிற்கு சொல்லாமென நினைக்கிறேன் உங்கள் ஆலோசனை தேவை.. செய்தியை படித்த றிசி பதிலொன்றினை எழுதி அனுப்பிவிட்டிருந்தான் அது ' இப்பொழு எதுவும் சொல்லவேண்டாம் அவன் படிப்பை குழப்பிவிடுவான் இன்னும் சில வருடங்கள் போகட்டும். அதுவரை அவனது பிறந்தநாளிற்கு பரிசுகள் வந்தபடி இருக்கும் நன்றிகள்.

யாவும் உண்மை


கதையை இலகுவாக புரிந்து கொள்ள சில குறிப்புக்கள்.
நட்சத்திர நாடு.. அமெரிக்கா
நட்சத்திர நாய்கள் .அமெரிக்கா சி.ஜ.ஏ உளவமைப்பு மற்றும் அவர்களிற்காக பணத்திற்கு வேலை செய்பவர்கள்
உடைந்த கிழக்கு நாடு. உக்ரேய்ன்.
கீழ் கறுப்பு நாடு ..எரித்தியா
எஸ்.ஓ . புலிகளின் கடற்படை தளபதி சூசை
நட்சத்திர நாய்களின் பக்கத்து நாய்கள். கனடா உளவமைப்பு
வழைமையான தீவு .சீசெல்ஸ்.

அனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.

8:50 AM, Posted by sathiri, No Comment

அனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.

சாத்திரி ஒரு பேப்பரிற்காக


இந்த வருடம் மாவீரர் தினம் ஜரோப்பாவிலை பெரும்பாலான நாடுகளிலை அனைத்துலகம் தலைமைச்செயலகம் இரண்டு பிரிவாக இரண்டுமே வேறு வேறு அமைப்பின் செயலகங்கள்: என்பதைப்போல போட்டி போட்டு ஒரு மாதிரி நடந்தேறிவிட்டது. யாராக இருந்தாலும்ஒரே இடத்தில் ஒற்றுமையாக மாவீரர்களை நினைவு கூரவேண்டும் என்பதே பலரினதும் ஒரு பேப்பர் குழுமத்தினரதும் அங்கலாய்ப்பாக இருந்தது ஒரு பேப்பர் குழுமமும் அதனைத்தான் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் அடம்பிடித்ததனால் யாருடைய நிகழ்வெள்றாலும் பரவாயில்லை மாவீரர்களை நினைவு கூரவேண்டியது எமது கடைமையென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் கலந்து கொண்டிருந்தனர்.மாவீரர் தினத்தன்று பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கலாமென பொதுவானதொரு அச்சம் இருந்திருந்ததும் உண்மை ஆனால் சிறு சிறு அசம்பாவிதங்கள் மட்டுமே சில நாடுகளில் நடந்ததோடு மாவீரர் வாரம் முடிவடைந்தது .

அந்தளவிற்காவது இரு குழுவினரும் மாவீரர்களை மதித்தது மகிழ்ச்சியே .
ஆனால் நாங்கள் தூய்மையானவர்கள்.கணக்குவழக்கு சரியாக காட்டுவோம் என்றபடி புதிதாகப் புறப்பட்ட தலைமைச்செயலகத்தினர் நடாத்திய நிகழ்வுகளை விட வழைமைபோல வருடாவருடம் கடைகளும் கொத்துறொட்டியும் போட்டபடி .மாவீரர்களிற்காக விற்ற பூக்களையே மீண்டும் எடுத்து மறுபடி விற்று காசு பார்த்த அனைத்துலகச் செயலக்தின் நிகழ்வுகளிலேயே மக்கள் அதிகளவு கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கு காரணம். தலைமைச்செயலகத்தினரிடம் ஒரு பேப்பர் எழுப்பியிருந்த சந்தேகங்களே பலரது மனங்களிலும் இருந்திருக்கின்றது. அதே நேரம் இவர்கள் பிரிந்து நின்றுஅடிபட்டாலும் நாம் மாவீரர்களை பிரிக்கக்கூடாது என்கிற காரணத்திற்காகவும். புதிதாக வந்தவர்கள் அப்படி என்னதான் செய்கிறார் பார்க்கலாமென விடுப்புப் பார்ப்பதற்கெனவும்.கடந்தகாலத்தில் அனைத்துலகச் செலயக்கதினரிர் நிதி மோசடிகாளால் பாதிக்கப் பட்டவர்களுமே தலைமைச்செயலகத்தின் நிகழ்வுலுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
மாவீரர் தினம் முடிவடைந்ததும் தலைமைச்செயலகம் நட்டக் கணக்கு காட்டினார்கள். இலண்டனில் இவர்கள் காட்டிய நட்டமோ இருபத்தி மூவாயிரம் பவுண்சுகள்.இதனை யார்?? எப்படி ??ஈடுகட்டப் போகிறார்கள் என்பது பற்றிய எந்த விபரமும் கிடையாது.அனைத்துலகச் செயலகத்திடம் கணக்கு என்கிற வார்த்தையே அவர்களது அகராதியில் கிடையாது. அதையாரும் கேட்கவும் முடியாது. கேட்டாலும் வராது. ஆனால் அவர்கள் சாதாரணமாக ஒரு பதிலை சொல்லியிருந்தனர் அது பார்த்தீர்களா புதிதாய் நிகழ்வு செய்தவர்களே நட்டக்கணக்கு காட்டுகிறார்கள். நாங்கள் இதைத்தானே வருடாவருடம் சொல்லுறம் எங்களிற்கும் நட்டம்தான்.


கணக்கு வழக்கு விடையங்களை விட்டுவிடுவோம். காரணம் மாவீரர்கள் வருடாவருடம் நினைவுகூரப்படவேண்டும். மக்களின் பங்களிப்பும் தொடர்ந்து இருக்கவேண்டும். இந்த இரு அமைப்பும் மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்காக எப்படி மோதிக்கொண்டார்களோ...வானொலி தொலைக்காட்சி இணையங்களில் எப்படி மாறி மாறி குற்றச்சாட்டுக்களை வைத்தார்களோ அதே போல இனிவரும் காலங்களில் இலங்கையரசின் போர் குற்றங்களை வெளிக்கொண்டு வருவதிலும் போட்டி போட்டுக்கொண்டு செயல்ப்படவேண்டும். சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு தொடரவேண்டும். சர்வதேச நீதி மன்றத்தில் அவர்களை நிறுத்தவேண்டும். யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களிற்கு உதவிகள் புரிந்தது போதாது என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டியபடியே அந்த மக்களிற்கான உதவிகளை செய்யவேண்டும்.


மக்களிற்கு கிடைத்த உதவிகளில் போர் குற்றம் தொடர்பான விடையங்களில் ஒருகுழு விட்ட தவறை மற்றைய குழு இணையங்களிலும் .பத்திரிகைகளிலும் பகிரங்கமாக சுட்டிக்காட்டி விவாதிக்கவேண்டும்.அதற்கும் ஒரு படி மேலே போய் இரண்டு தரப்பிலுமே அடுத்த போர் வெடிக்கும் தமிழீழமே தீர்வு என இணையங்களில் ஈழத்திற்கான இணையப் புரட்சி செய்யும் இளைஞர்கள் போரினால் பாதிப்படைந்து இன்று தங்கள் சமூகத்தாலும் சொந்த உறவுகளாலும் கைவிடப்பட்டு எந்த உதவிகளுமற்று ஏதிலிகளாகி வாழ்க்கையின் விரக்தியின் விளிம்பில் பலநூறு முன்னைநாள் பெண் போராளிகள் இருக்கின்றார்கள். இவர்களது வாழ்வின் ஆதாரங்களாக மாறி அவர்களின் வாழ்விற்கும் ஒரு அர்த்தத்தினை கொடுக்கலாம். அது முடியாதவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்காவது ஏதாவது வழிவகைகளை செய்யது கொடுக்கலாம்.
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மீண்மு; மீண்டும் மாவீரர் தின்தை கொண்டாடவும். மாவீரர்களின் நினைவுநாளை கொண்டாடவும். கோடை தொடங்கியதும் விழையாட்டு போட்டியை நடாத்தமட்டுமே இவர்கள் போட்டிபோட்டு அடிபட்டுக்கொண்டும். விற்ற பூவையே விற்றபடி நட்டக்கணக்கை காட்டிக்கொண்டேயிருப்பார்களாயின் இவர்களை ஒரு தலைவர் பிரபாகரன் என்ன ஆயிரம் பிரபாகரன்கள் வந்தாலும் இவர்களை திருத்தமுடியாது.
அதே நேரம் நாடு கடந்த அரசு என்பது வெறும் நாட்கள் கடத்தும் அரசாக மாறிக்கொண்டிருக்கின்றது. நாட்கள் கடத்தும் அரசு பற்றிய பதிவொன்றுடன் அடுத்த பேப்பரில் சந்திக்கின்றென் நன்றி வணக்கம் சாத்திரி

பேச்சு மட்டும்தான் தான் தேசியம் மிச்சமெல்லாம்.....

2:43 PM, Posted by sathiri, No Comment

கடந்த இரண்டு நாள்களிற்கு முன்னர் தமிழ் பாராளுமன்ற  உறுப்பினர் சிறிதரனின் பின்னணியில் அவரது  சகோதரரால் நடாத்தப்படும்  லங்காசிறீ. தமிழ்வின் மற்றும் மனிதன் இணையத்தளங்கள் பற்றியதொரு சர்ச்சை  கிளம்பியிருந்தது. கூடவே இன்னொரு பெரும்  சர்ச்சை கிளம்பியிருக்கின்றது  அது என்னவெனில்  லங்கா சிறி இணையத்தினரால் நடாத்தப்படும் hi 2 world    தமிழ் அரட்டை சேவை பற்றியது. அந்த  காணொளி அரட்டையூடாக பலநூறு  தமிழர்கள் தமிழிச்சிகள்  ஆடைகளை கழற்றி ஆபாச அரட்டையடித்துள்ளதோடு தங்கள் நிர்வாண படங்களையும் பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது.  அதைப்பற்றி அறியலாமென நினைத்து  அரட்டையில்  அரட்டையடிக்கும் ஒரு இளைஞரை இனம் கண்டு தொடர்புகொண்டபொழுது  அவர் அண்ணை  என்னட்டை மட்டும் 56 தமிழ் பெட்டையளின்ரை  நிர்வாணப்படம் இருக்குதென்று பெருமையாக சொன்து மட்டுமில்லாமல். அவற்றை  அனுப்பியும் வைத்திருந்தார்.  அவற்றை பார்தால் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் திருமணமான வயதான பெண்களின் படங்களும்  இருந்தது. பலரது திறந்த மார்பில் தாலிதொங்கிக்கொண்டிருந்தது. இப்படி ஒருவரிடம் மட்டுமே 50ற்கு  மேற்பட்ட படங்கள் என்றால்  இதுவரை மொத்தமாக  அங்கு அரட்டை அடிப்பவர்களிடம் எத்தனை  படங்கள் பரிமாறப்பட்டிருக்கும்.நினைத்துப் பாருங்கள்.. தனிப்பட ஒருவன் ஒருத்தி  அரட்டையடிப்பதும். ஆடையை  கழற்றுவதும்  அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால். யாழ்ப்பாணத்தில் கலாச்சாரம்  கெடுகின்றது என்று  புலம்பும்  தமிழ்வின்  லங்காசிறி இணையமும். தமிழினத்தின் அடுத்த தலைவர்களில் ஒருவர் என சொல்லிக்கொள்ளும்  சிறிதரனின் பின்னணியில் இயங்கும்  இணையத்தளத்தில்  பெரும் கலாச்சார சீரழிவே நடைபெறுவதோடு அதற:;கு அவர்களும் உடைந்தையாக இருப்பதும் தான் கேள்விக்குள்ளாகின்றது

அதே நேரம்  இங்கு அரட்டையடிப்பவர்களிற்கு தெரியாமலேயே  அவர்களிற்கு பின்னால் உள்ள பெரும் ஆபத்து என்னவென்றால்.  இப்படியான அரட்டை இணைய வழங்கிகளை  பெரும்பாலும்  90 வீதம்  பாகிஸ்தானிலிருந்து  இயங்கும் நிறுவனங்களே  குறைந்த விலையில் வழங்குகின்றார்கள்.   இவர்களின் உரிமங்கள் பதிவுகள் திருட்டு பெயர்களில் இருப்பதனால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கமுடியாது.  இவர்கள் தங்கள் இணைய வளங்கியினுடாக பரிமாறப்படும்  நிர்வாண   காணொளிகள் மற்றும் படங்களை பதிவுசெய்து  ஆபாச இணையத்தளங்களை நடத்தி பெரும் பணம்  சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல்.  இந்தியா பாகிஸ்த்தான்.மலேசியா.சிங்கப்பூர் போன்ற  நாடுகளில் கைத்தொலைபேசி ஊடாகவும்  விற்பனை செய்கிறார்கள்.  அதாவது புலம்பெயர் தமிழர்களின் நிர்வாணப்படங்கள்  வியாபாரமாகின்றது. அந்த வகையில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.






தன்னுடைய மகனோ  மகளோ தனியறையில் கணணியில்  பாடம் சம்பந்தமாக அவர்களது நண்பர்களுடன் ஏதோ கதைக்கிறார்கள் என நினைக்கும் பெற்றோர்கள்.  சிலவேளைகளில் அவர்கள் எந்தெந்த தளங்களில்  உலாவுகிறார்கள்  கண்காணித்தாலும் பிள்ளை தமிழ் தளத்திலைதானே  உலாவுது  அதுகின்ரை  தமிழ் ஆர்வத்தை பாராட்டவேணும் என  நினைக்கும் பெற்றோர்கள்  தமிழ் தளத்தினுடாக பிள்ளை எங்கே போகின்றது என்பதையும் கண்காணிக்க வேண்டும். .அதே நேரம் கணவன் மனைவியை மனைவி கணவனை  கண்காணிக் வேண்டிய நிலைக்கு தள்ளிய  இது போன்ற  தமிழ் இணையத்தளங்கள் தேவைதான  என்பதனையும்  தமிழர்கள் தீர்மானிக்கவேண்டும்.



அதே நேரம் இங்கு தங்கள் படத்தை பரிமாறிய  ஆணோ பெண்ணோ நாளை திருமணம் என வரும் பொழுது அரட்டையில் இரண்டு பேருமே பார்த்திருக்கலாம்.  அல்லது அவங்கடை அம்மா அப்பாவை திருமணம் செய்யப் போகின்றவர்கள் பார்த்திருக்கலாம். இதனால் எத்தனை குடும்பங்கள் பிரியப் போகின்றது.



யாராவது ஓடிவந்து ஆதாரம் கேட்பார்கள்


கிணறு வெட்ட கிழம்பிய பூதம்

2:59 PM, Posted by sathiri, 2 Comments


பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் நடந்தேறும் நாடகம்!சாத்திரி (ஒரு பேப்பர்)

அண்மையில்  சில இணையதளங்களில்  ஒரு செய்தி வெளியாகியிருந்தது  அதவாது இறுதிப் போரின்போது காயமடைந்த  பல போராளிகளை ஒரு பெண்  வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம்  பெருமளவு பணத்தினை வாங்கிவிட்டு அவர்களை ஆசிய நாடு  ஒன்றில்  கைவிட்டு விட்டு  தலைமறைவாகிவிட்டார் என்கிற செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்ததும்  இவரை எங்கேயோ  பார்த்தமாதிரி அல்லது  அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என தோன்றவே அவரைப்பற்றிய  மேலதிக தேடல்களை   தொடங்கிவிட்டிருந்தேன்.

                                          வன்னிரெக்  தயாபரன் மற்றும்  உதயகலா


கிணறு வெட்டப் பூதம் கிழம்பியது போல  தோண்டத் தோண்ட   தமிழ் மாணவர் அமைப்பை நடாத்திய  ரிசி என்;கிற சிவானந்தன் ரிசாந்தன் அல்லது ரிசாந்தன் சிவராசா (இதில் எந்தப்பெயர் உண்மையானது என்பது தெரியவில்லை).

                                                                   இவர்தான் ரிசி


 பிரித்தானியத் தமிழர் பேரவையின்  முக்கிய உறுப்பினராக இருந்து அண்மையில் அவ்வமைப்பிலிருந்து விலகிய  ஸ்கந்தா  என்கிற சுப்பிரமணியம் ஸ்கந்ததேவா ஆகியோரின்  தொடர்புகள் தெரியவரத் தொடங்கியது.  ஆனால் தேடலின் இறுதியில் இந்த வலைப்பின்னலை பின்நின்று இயக்குபவர் ஸ்கந்தாவே என்றும் அறிய முடிந்தது.

ஊரை அடித்து உலையில் போடும் இந்தக்கும்பலைப்பற்றி இனி கொஞ்சம் விபரமாக பார்க்கலாம்.
உதயகலா என்கிற பெண்  வன்னிப் பெருநிலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயம்  அவர்களால் நடாத்தப்பட்ட வன்னி ரெக் என்கிற தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துள்ளார். அங்கு அவர் படிக்கசென்ற காலங்களில்  அந்த பாடசாலையின் பொறுப்பாளராக இருந்த தயாபரன் அல்லது தயாபரராஜ் என்பவரிற்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்தது. உதயகலா ஏற்கனவே ஒரு போராளியை  திருமணமுடித்திருந்தவர். விழுப்புண் அடைந்திருந்த அவரது  போராளிக்கணவர் தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பட்டடிருந்தார். அங்கு அவர் புலிகளின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டு  சிறைவைக்கப்பட்டிருந்தார்.   அதற்கு பின்னர் தயாபரனுடன் தொடர்பு ஏற்படவே வன்னி ரெக்கின்  நிதியிலிருந்து  பணத்தினை மோசடி செய்த தயாபரன் உதயகலாவிடம் கொடுத்துள்ளார். இவ்விடயம் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துக்கு  தெரியவரவே தயாபரன் அவர்களால் இடைநிறுத்தப்பட்டு தண்டனையும்  கொடுத்திருந்தனர். அநே நேரம் இறுதியுத்தம் தொடங்கிவிடவே இவர்கள் இருவருமாக இராணுவத்திடம் சணைடைந்து பின்னர' விடுதலையானார்கள்.  கொழும்பில் தங்கியிருந்படி முகாம்களில் அடைபட்டிருந்த  மற்றும் காயமடைந்திருந்த போராளிகளை வெளியே எடுத்து விடுவதாக  அவர்களின் உறவினர்களிடம் பெருமளவு பணத்தினை பெற்று மோசடி செய்தவர்கள் அங்கிருந்து இந்தியாவிற்கு தப்பி சென்றுவிட்டனர். தப்பிச் சென்றவர்கள் தங்களை யாரும் தேடாதிருப்பதற்காக  தயாபரன் இறந்து விட்டாரென  ஒரு செய்தியை  உதயகலா பரப்பினார். அதிலும்  பணம் சம்பாதிக்க நினைத்தவர்  சமாதான காலத்தில் வன்னிக்கு  சென்று வன்னி ரெக்கில்  தயாபரனை  சந்தித்த அனைவரது விபரங்களையும் திரட்டி அவர்களிடம் தொடர்புகொண்டு  தயாபரன் இறந்து விட்டார்  எனவே அவரது மரணச்சடங்கிற்கு பணம் வேண்டுமென கேட்டபொழுது பலர் அனுப்பியிருந்தனர். ஆனால் ஒருவர் சந்தேகப்பட்டு  அவர் இறந்ததற்கான ஆதாரம் கேட்டபொழுது  தயாபரன் கண்ணை மூடியபடி படுத்திருந்த ஒரு படத்தினை அனுப்பிருந்தார்...

                                         தயாபரன் இறந்தது போன்றதொரு படம்









இது இப்படியிருக்க,  2008ம் ஆண்டில் ரிசி என்கிற ரிசாந்தன்  இலண்டனிற்குள் மாணவர் விசாவில் நுளைகிறார். மாணவர் விசாவில் நுளைந்த ரிசியை வைத்து  ஸ்கந்தா (ITSO)  அனைத்துலக தமிழ் மாணவர் அமைப்பு என்கிற தொரு அமைப்பினை  ரிசியியையும் தனது மகளையும் இணைந்து  பதிவு செய்கிறார். (பதிவிலக்கம்: 6993075 பதிவு செய்த திகதி: 20.08.2009)


. இந்த அமைப்பு  உதவி அமைப்பு என  வெளியில் சொல்லப்பட்டாலும்   அது வியாபார நிறுவனமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.  அதாவது இந்த அமைப்பிற்கு கிடைக்கும் நிதியை அதன் நிர்வாக இயக்குனர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.  அது மட்டுமல்லாது  ஸ்கந்தாவே  ரிசியை  இங்கிலாந்தின்  தமிழ்  இளையோரமைப்பு.  தமிழ் ஊடகங்கள்.. பிரித்தானிய தமிழர் பேரவை. மற்றும் தமிழ்  வியாபாரிகள் பிரபலங்கள் என அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து  ரிசி  தாயகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கான உதவி. வடகிழக்கு  பல்கலைக்கழக  மாணவர்களிற்கான உதவி என  தமிழ் இணையத்தளங்கள்,  ஊடகங்கள், facebook என  விளம்பரம் செய்யத் தொடங்கினார். ஸ்கந்தா - ரிசி கூட்டணி எதிர்பார்தத்தை போலவே பலர் மனமிரங்கி பணம் கொடுக்கத் தொங்கினார்கள். இவர்களிற்கு ஊரில் இருந்து  உதயகலா .கஸ்தூரி என்கிற  இருபெண்களே  பாதிக்கப்பட்டவர்களின் படங்களை  அனுப்பிவைத்துக்கொண்டிருந்தனர். இவர்கள் பாதிக்கப் பட்டவர்களின் படங்களை வைத்து  பணம் சம்பாதிக்கிறார்கள் என அறிந்த கஸ்தூரி இவர்களை விட்டு விலகிவிட்டார்.

இவர்கள்  தங்கள் ஏமாற்று வியாபாரத்தினை  விருத்தி செய்ய நினைத்து  விடுதலைப்புலிகளின் காலத்தில் முல்லைத்தீவில் பெண்கள் பராமரிப்பு  இல்லமாக இருந்த பாரதி இல்லத்தினை  மீண்டும் தாங்கள் பொறுப்பெடுத்து பாரிஜாதம் என்கிற பெயரில் இயக்கவிருப்பதாக  பிரச்சாரம் செய்து பல வியாபாரிகளிடம் பெரும்  தொகை பணத்தினை  சுருட்டியிருக்கிறார்கள்.


மறுபுறம் உதயகலாவை வைத்து  முன்னைநாள் போராளிகள்  காயமடைந்தவர்கள்  எனப்பலரையும் வெளிநாடு அழைத்து செல்வதாக அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு   அவர்களை  மலேசியாவிலும். தாய்லாந்திலும் கொண்டு சென்று கைவிட்டுள்ளார்கள். அதே நேரம் காயமடைந்த போராளிகளிற்கு நல்வாழ்வளிப்பதற்கு  வெளிநாடு அழைத்து வருகிறோம் என்று வெளிநாடுகளிலும்  பணம் சேகரித்துள்ளனர். ITSO     அமைப்பின் நடவடிக்கை இப்படியிருக்க,  இதே ஸ்கந்தா நம்பிக்கை ஒளி (RAY OF HOPE)   என்கிற இன்னொரு அமைப்பையும் பதிவு செய்தார். இவ்வமைப்பிலும் ஒரு இயக்குனராக தனது மனைவியையும் இணைத்துக் கொண்டார். (பதிவிலக்கம் 7192725 பதிவுத் திகதி 17.03.2010)



இதன் மூலமாக லண்டனில் வாழ்ந்த பல முன்னை நாள் போராளிகளை  தொடர்புகொண்டு  அவர்களின் ஊடாக  பாதிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளிற்கென  நிதி சேகரிக்கத் தொடங்கினார். சிறையிலிருந்து விடுதலையான பல போராளிகளின் தேவைகளை நேரடியாகவே வீடியோ  காட்சிகளாக படமெடுத்து அதனை  வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் போட்டுக்காட்டி பணம் சேகரிக்கப் பட்டது. ஆனால் இந்த அமைப்பினை உருவாக்கி  அதற்காக தன்னலமற்று பல முன்னைநாள் போராளிகள்  உதவிசெய்திருந்தனர். ஆனால் காலப் போக்கில் ஸ்கந்தாவின் குளறுபடி சரியான  கணக்கு வழக்கு காட்டாமை என்பவற்றால்  பலரும் அதிலிருந்து விலகிப் போய்விட்டனர். ஸ்கந்தாவும்  அவருடன் சேர்ந்து சிலரும் தொடர்ந்தும்  இந்த நம்பிக்கையொளியை  தொடர்ந்தும் இயக்குகின்றனர். (மற்றயவர்களது விபரங்கள் என்னிடமிருந்தாலும் அவர்களது நலன் கருதி அவற்றை இணைக்கவில்லை)

சிறிலங்கா அரசுடன் சேரந்தியங்கும் கே.பி.  வன்னியில் தொடக்கியிருக்கும்  'அன்பு இல்லம்' என்னும் சிறுவர் இல்லத்திற்கும்  ஸ்கந்தா அவர்கள்  ஒரு தொகை நிதியுதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது அண்மைக்கால நடவடிக்கையாக   இறுதி யுத்தத்தின் போது தலைவருடன் நின்று தப்பிவந்தவர்கள் எனக்கூறிக்கொண்டு  தாங்களே தலைமைச்செயலகம்  எனவே நாங்களே  மாவீரர்நாள் செய்யும் உரிமையுள்ளவர்கள் என கூறிக்கொண்டு  புதிதாக இரண்டாவது மாவீரர் நாளை ஜரோப்பா எங்கும் அரங்கேற்றியவர்களிற்கு  பின்னாலிருந்து இயக்கியது மட்டுமல்ல அவர்களிற்கு  ஆதரவு கொடுக்கும்படி அனைவரையும் ஸ்கந்தா  வேண்டியிருந்தார்.

இனி ITSOஅமைப்புப்பற்றிய அண்மைய தகவல்கள். வருடாவருடம் Company House  க்கு அனுப்பப்படவேண்டிய கணக்குவிபரங்கள் அனுப்பப்படாமையால். இந்த நிறுவனத்தின் பதிவினை Company House இரத்துச் செய்துள்ளது. இதற்கான இறுதி அறிவுறுத்தல் கடந்தவருடம் டிசம்பர் மாதம் 14ம் திகதி வழங்கப்பட்டிருந்தது. நிறுவனத்தை கலைத்தவிட்டதான அறிவிப்பினை இவ்வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி அனுப்பப்பட்டது. ஒரு கணக்காளரான ஸ்கந்தா ஏன் இந்த அமைப்பின் கணக்கு அறிக்ககையை சமர்ப்பிக்கவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும். இதுவிடயமாக அவரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. Company House  இனால் ITSO கலைக்கப்பட்டபோதிலும் இவ்வருடம் ஒகஸ்ட் மாதம் வரை இவ்வமைப்பு செயற்பட்டு வந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இறுதியாக குழப்பமடைய வைக்கும் சிலகேள்விகள்.  இதுவரை இவர்கள் வழங்கிய உதவிகளிற்கான சரியான தரவுகளோ வரவு செலவு கணக்குகளோ எங்குமே காண்பிக்கப்படதாது ஏன்? உதவிதேவைப்படும் எத்தனையோ ஆயிரம் பேர் தாயகத்தில் காத்துக்கிடக்க ..பல உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வசதியுள்ள  கே.பி அவர்களின் அன்பு இல்லத்திற்கு  நிதியுதவி செய்யவேண்டிதன் அவசியம் என்ன?  ரிசி   தன்னை மற்றையவர்களிற்கு   அறிமுகம்  செய்யும் பொழுது  தன்னைப்பற்றிய தகவல்களை  மாற்றி மாற்றிக் கொடுப்பது ஏன்? இத்தனை   குழப்பங்களும்  மோசடிகளும் கொண்டதொரு வலைப்பின்னலை பின்னாலிருந்து இயக்கும் BOSS யாரென்று ஆராய்ந்தால் அவர்தான்  மொட்டை BOSS   என்கிற  ஸ்கந்தா.



புலி போராளி என்று சொல்லி

11:24 PM, Posted by sathiri, No Comment

புலம்பெயர் தேசமெங்கும் வினாயகம் தலைமையில் புதியதாக மாவீரர் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அந்தக் குழுவில் முக்கிய நபரான ,லண்டனில் வசிக்கும் மயூரன்.(தேள்வடிவத் தாக்குதல் புகழ் வன்னியன்) தன்னை ஒரு புலிப் போராளி என கூறி மலேசியாவில வாழும் புலிகள் அமைப்பு ஆதரவாளரான ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி அவரது அரைகுறை ஆபாச படங்களை வாங்கி நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார். சிங்களவன் செய்தால் ஜயோ தமிழ் தேசியம் என கத்துபவர்கள் ?இ,வர்களே அதை செய்யலாமா?? http://youtu.be/X3aFq9eBRCo

http://youtu.be/X3aFq9eBRCo 

தலைவணங்குகிறேன் அண்ணை

11:11 AM, Posted by sathiri, One Comment

இன்று என் வீட்டுத் தோட்டத்திலேயே மாவீரர்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினேன்


மண்ணிற்காகவும் மாவீரர்களிற்காகவும்  மரணித்த தலைவனிற்றும் ஆயிரமாயிரம் மாவீர்களிற்கும்.மக்களிற்கும் அஞ்சலிகள்.


அன்றைய காலத்தில்
அனைவரிற்கும் தம்பி
அடுத்து வந்தவர்களிற்கெல்லாம்
அண்ணன்.
அன்பான கணவன்
அற்புதமான தந்தை
அலையாய் எழுந்த தமிழினத்திற்கு
தலைவன்.
தன்மானத்தை விற்றவர்களின்
தலை வலி
எதிரிக்கு எட்டாத சூரியன்
சுற்றியிருந்த சுயநலக்கூட்டத்திற்கு
புகழ்பாடும் கடவுள்.
தமிழினத்தின்
குறியீடு
தலைவணங்குகிறேன்
அண்ணை

கடிகாரம் ஓடுமுன் ஓடு

11:51 AM, Posted by sathiri, No Comment

ஊரிலை சின்னவயிசிலை பள்ளிக்கூடத்திலை பாரதிதாசனின்ரை தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை எண்டொரு பாட்டுச் சொல்லித் தருவினம். அது உண்மையிலை பெண்குழந்தையளிற்கான பாட்டு அதையேன் பெடியளிற்கும் படிப்பிச்சவையெண்டு தெரியாது ??..ஆனால் அதிலை ஒரு வரி வரும் கடிகாரம் ஓடுமுன் ஓடு எண்டு. அதற்கான அர்த்தம் அண்டைக்கு எனக்கு உண்மையா விளங்கேல்லை ஆனால் வெளிநாடு வந்தால் பிறகுதான் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இங்கு தமிழாக்களின்ரை நிகழ்வுகளைத் தவிர மற்றையபடி எல்லாமே நேரம்..நேரம்.. நேரம்.. நேரத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றோம்..


ஊரிலையெண்டால் வீடுகளிலை வரவேற்பறையிலை மட்டும் ஒரு மணிக்கூடு இருக்கும்.அப்பிடி எங்கை வீட்டிலையும் ஊரிலை ஒரு பெரிய மணிக்கூடு ஒண்டு வரவேற்பறையிலை இருந்தது பாக்கிறதுக்கு ஒரு அலுமாரி மாதிரி இருக்கும். ஒரு ஆள்அளவு உயரம். மேலை மணிக்கூடு கீழை தோசைத்தட்டு மாதிரி ஒரு வட்டம் ஆடிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் அதுக்கு சாவி குடுக்கவேணும் நான் சின்னவயசிலை ஒரு கதிரை வைச்சு ஓறித்தான் அதுக்கு சாவி குடுக்கிறனான். ஒவ்வொரு மணித்தியாலமும் அது அடிக்கிற சத்தம் கோயில் மணி அடிச்சமாதிரி இருக்கும். அதை முன்னேறி பாச்சல் நடவடிக்கை நேரம் சந்திரிக்கா அனுப்பின குரங்குகள் உடைச்சு போட்டுதுகள் எண்டு அம்மா கவலையோடை சொன்னா.. இஞ்சை வெளிநாட்டிலை பாத்தமெண்டால் கழிவறையிலை குளியலறையிலை படுக்கையறையிலை வரவேற்பறையிலை எல்லா இடமும் மணிக்கூடுதான். பத்தாததுக்கு கைத்தொலைபேசியிலை கணணியிலை பாக்கிற ரிவியிலை எண்டு நேரம் ஓடிக்கொண்டிருக்கும் காத்தாலை அலாரச்சத்தத்தோடை எழும்பி கழிவறைக்கு போறத்திலையிருந்து பல்லுத்தீட்டிறது குளிக்கிறது (இதுகள் செய்யாதவைக்கு பிரச்சனையில்லை ) உடுப்பு போடுறது எண்டு தொடங்கி வேலைக்குப் போய் வந்துஇரவு ரி.வி பாக்கிறது. குடும்ப காரர் எண்டால் பிள்ளையளோடை குடும்பத்தோடை மினக்கெடுறது. ஏன் கணவன் மனைவி உறவு கூட எல்லாத்தையுமே நேரம் பாத்துப் பாத்துத்தான் செய்யவேண்டியிருக்கும்.


ஒரு நாள் இப்பிடித்தான் நான் தண்ணியடிச்சிட்டு நல்லாயிருக்கெண்டு பொரிச்ச மிளகாயை கனக்க அள்ளித் திண்டிட்டன் அடுத்தநாள் காத்தலை கழிவறைக்குள்ளை அஞ்சு நிமிசம் கூடுதலாயிருக்கவேண்டி வந்திட்டு பிறகு அந் அஞ்சு நிமிசத்தை குளிக்கேக்குள்ளை அவசர அவசரமாய் சவுக்காரம் போடாமல் குளிச்சு நிவர்த்தி பண்ணிட்டன். ஜரோப்பாவிலை ஒருநாள் ஞாயிறு மட்டும் அலாரசத்தம் இல்லாமல் நிம்மதியாய் விரும்பின நேரத்திற்கு எழும்பி விரும்பினதை செய்யலாம். அனால் இந்த லண்டனிலை இருக்கிறவையள் போன பிறப்பிலை பாவம் செய்த பிறவியள். அதுகளிற்கு ஞாயிறும் நிம்மதியில்லை கிழைமையிலைஏழுநாளும் ஓட்டம்மதான். இப்பிடித்தான் ஒருக்கால் லண்டனிலை உள்ள என்ரை சினேகிதன் ஒருத்தனுக்கு பிறந்தநாள் அவனுக்கு வாழ்த்தும் சொல்லிட்டு. கொஞ்சம் ஊர்கதையளும் கதைப்பம் எண்டு இரவு போனடிச்சன் . போனை எடுத்தவன் மச்சான் ஓடிக்கொண்டிருக்கிறன் கொஞ்சம் பொறுத்து எடு எண்டான். கார் ஓடிக்கொண்டிருக்கிறான் எண்டு விளங்கிச்சிது. கொஞ்சத்தாலை திருப்ப அடிச்சன் அவனின்ரை மனிசி எடுத்து அவர்இப்பதான் வந்தவர் குளிக்கிறார் கொஞ்சத்தாலை அடியுங்கோ எண்டா. திரும்ப ஒரு அரை மணித்தியாலம் கழிச்சு எடுத்தன். அவன் போனை எடுத்து மச்சான் என்ன அலு....வ்......வ்.....வ்...வல் எண்டான். சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எண்டு விளங்கிச்சுது அவசரமில்லை ஆறுதலாய் அடிக்கிறன் எண்டிட்டு நான் நித்திரையாய் போயிட்டன்.

பிறகு அடுத்தநாள் அவனுக்கு வாழ்த்தாவது எஸ். எம். எஸ் அனுப்புவம் எண்டு நினைச்சு உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எண்டதை முழுசா எழுத எனக்கு நேரமில்லை.வேலைக்கு போற நேரம் கார் சிவப்பு சிக்னல்லை நிக்கிற நேரமாய் பாத்து அவசரமாய் W...U... H....B.....DAY எண்டு வாழ்த்து சொல்லி ஒரு எஸ் எம்.எஸ் சை போட்டிட்டு வேலைக்குபோயிட்டன் . அதை அவன் வாசிச்சு விளங்கி T.K.S எண்டு பதிலும் போட்டிருந்தான். இது இப்பிடி அண்டாட வாழ்க்கை போய்க்கொண்டிருக்க என்னை தினமும் நித்திரையாலை எழுப்பிற என்ரை அலார மணிக்கூடு ஒருநாள் பழுதாய் போயிட்டுது. பதினைஞ்சு வருசத்துக்கு முதல் பாரிசிலை ஒரு அறையிலை நாலு தனிக்கட்டையள் (பெடியள்) சேந்து கூட்டுக்குடும்பமாய் இருக்கேக்குள்ளை வாங்கினது. பிறகு ஒவ்வொருத்தராய் கலியணம் கட்டி தனிக்குடித்தனம் போய் அறையிலை இருந்த ஒவ்வொரு பொருளாய் பாகப் பிரிவினை செய்யேக்குள்ளை நான் இந்த அலார மணிக்கூட்டை தூக்கிக் கொண்டு வந்திட்டன். காரணம் இது நான் தான் தேடி வாங்கினனான். ஓடுற டிக்..டிக்.. சத்தம் கேக்காது மணிக்கூடு ஓடுற சத்தம் கேட்டால் எனக்கு நித்திரை வாராது எரிச்சலதான் வரும் ஆனால் அது அலாரம் அடிக்கிற சத்தம் அந்த ஏரியாவுக்கே கேட்கும். பதினைஞ்சு வருசம் ஓடி ஓய்ந்து போன மணிக்கூட்டை திருத்தலாம் எண்டு நான் கடை தேடி அலைய மனிசி சொல்லிச்சிது உந்த பழசை கொண்டு அலையாதையுங்கே இப்பதானே விதம் விதமாய் புது எலெக்றோனிக் அலாம் மணிக்கூடுகள் வாங்கலாம். சத்தமும் வராது உதை குப்பையிலை எறியுங்கோ நான் புதுசு வாங்கியாறன் எண்டாள்.

பழசுகளை எறியிறதெண்டால் உன்னையும் தான் எறியவேணும் எண்டு முணு முணுத்தபடி கவலையோடை அதை குப்பை வாளிக்குள்ளை போட்டிட்டு நான் மணிக்கூடு வாங்க வெளிக்கிட திரும்பவும் மனிசின்ரை சத்தம் ''எங்கை மணிக்கூடு வாங்கவே போறியள் நீங்கள் போனால் நிண்டு நிதானிச்சு வடிவாய் பாத்து ஒண்டையும் வாங்கமாட்டியள் கையிலை அம்பிட்டதை தூக்கிக் கொண்டு வந்துடுவியள் .பக்கத்திலை சீனா சாமான் கடையொண்டு இருக்கு நான் போய் நல்லதாய் பாத்து வாங்கியாறன்'' எண்டாள். எடியேய் நிண்டு நிதானிச்சு எல்லாத்தையும் செய்யிறதெண்டால் உன்னையுமல்லோ செய்திருக்கமாட்டன் எண்டு சத்தமாவே சொன்னன். மசினி முறைச்சு பாத்திட்டு போயிட்டுது.. போய் சீனாக்கடையிலை எலெக்றோனிக் மணிக்கூடு ஒண்டை வாங்கியந்து தந்திட்டு இந்தாங்கோ எதுவும் உருப்படியாய் செய்யத் தெரியாது நேரத்தை யாவதுஒழுங்கா பிடிச்சு விடுங்கோ என்று,விட்டு போய்விட்டாள் எனக்கென்னவோ அது உள் குத்துமாதிரி தெரிஞ்சது. ஆனாலும் சரி எதையோ நான் ஒழுங்கா பிடிச்சு விடேல்லை போலை கிடக்கு எண்டு நினைச்சபடி பேசாமல் மணிக்கூட்டு பெட்டியை பிரிச்சன் . மணிக்கூடு பாவிப்பது எப்படி எண்டொரு விளக்கக் கடுதாசி இருந்திச்சிது. ஊரிலை முத்தத்திலை விழுகிற நிழலை வைச்சே எத்தனை மணி எண்டு சரியா சொல்லுற எங்களுக்கு இவங்கள் மணிக்கூடு எப்பிடி பாவிக்கிறதெண்டு சொல்லித்தாறாங்கள் எண்டு கொவத்திலை அதை எடுத்து முதல் வேலையா கிழிச்சு குப்பையிலை போட்டிட்டு வந்து மணிக்கூட்டை எடுத்து கறண்டை குடுத்தன். மணிக்கூடு 88 மணி88 நிமிசம் எண்டு காட்டிச்சிது. சீனாக்கடைக்காரன் மனிசியை பேய்க்காட்டிப் போட்டான் எண்டு விளங்கிச்சிது. மனிசிட்டை எடியேய் பாத்தியோ அப்பவும் சொன்னனான் சீனாக்கடைக்காரனிட்டை போகாதையெண்டு அவன் உன்னை சுத்திப்போட்டான் வந்துபார் மணிக்கூடு 88:88 எண்டு காட்டுது எண்டன் . ஜயோ அது எலெக்றோணிக் மணிக்கூடு அப்பிடித்தான் காட்டும் அதுக்குத்தான் நேரத்தை பிடிச்சு விடச்சொன்னனான் எண்டு பதில் வந்தது .

சாதாரணமாய் உலகம் முழுக்க 24 மணித்தியாலமும் 60 நிமிசமும்தானே அதெப்பிடி சீனாக்காரனின்ரை மணிக்கூடு மட்டும் கூடுதலாய் 88.88 நிமிசம் காட்டும் .மணிக்கூடு எப்பிடி பாக்கிறதெண்ட செய்முறை கடிதாசியைவேறை கிழிச்செறிஞ்சு போட்டன் மணிக்கூட்டிலைவேறை நாலைஞ்சு பட்டின் கிடக்கு எப்பிடி நேரம் பிடிக்கிறதெண்டு புலம்பிக்கொண்டிருக்க அதுவரைக்கும் எங்கடை சண்டையை கண்டும் காணாதபடி கணணியிலை விழையாடிக்கொண்டிருந்த மகள் எழும்பி வந்து என்னட்டை மணிக்கூட்டை பிடுங்கி நேரத்தை பிடிச்சு விட்டிட்டு அப்பா காத்தாலை எத்தனை மணிக்கு அலாம் வேணுமெண்டாள். ஆறு மணிக்கெண்டன். அலார சத்தம் மியூசிக் வேணுமா இல்லை றேடியோ ஏதாவது வேணுமா எண்டாள்..ஓ அதெல்லாம் இருக்கா சரி காலங்காத்தாலை எழும்பேக்குள்ளை எங்களை சுத்தி என்ன நடக்கிதெண்டு அறியிறது நல்லது தானே அதாலை 24 மணி நேர செய்தி றேடியோவிலை விடு எண்டன்.எல்லாம் சரி செய்திட்டு இனி இரண்டு பேரும் சத்தம் போடக்கூடாது எண்டிட்டு போயிட்டாள். அடுத்தநாள் காலை ஆறு மணிக்கு அலாரம் றேடியோ வேலை செய்தது..துருக்கியில் நிலநடுக்கம்.பலநூறுபேர் பலி ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. தாய்லாந்தில் மழைவெள்ளம். இதுவரை இருநூறுபேர் பலி. ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டு வெடிப்பு முப்பது பேர் பலி இருபது பேர் காயம் எண்டு தொடர .. இதென்ன காலங்காத்தாலை ஒரே இழவு எண்டு றேடியோ மணிக்கூட்டு வயரை இழுத்து பிடிங்கிப் போட்டு வேலைக்கு தயாரானேன். கடைசியாய் ஒரு கேள்வி. சீனாக்காரனின்ரை எலெக்றோணிக் மணிக்கூடு ஏன் அடிக்கடி 88:88 நிமிசம் காட்டுதெண்டு யாருக்காவது தெரியுமோ

அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.2

1:47 AM, Posted by sathiri, 2 Comments

கடந்த ஒரு பேப்பரி இந்தப் பதிவினை ஒரு நிஞாபகப்பதிவாகவே மேலோட்டமாக எழுதியிருந்தேன். அதனை படித்த பலரும் இந்திய இராணுவகாலத்தில் தெய்வேந்திர சர்மா தலைமையில் நடந்த hடுகொலைகளைகளை ஏன் எழுதவில்லையென்றும் இனி வருங்காலத்தில் யாரும் புத்தகங்களையோ பதிவுகளையோ தேடி எடுத்து மினக்கெட்டு படிக்கப்பது அரிழதாகவே இருக்கும் எனவே அவற்றை கணணி பதிவுகளாக்குவது அவசியம் இன்று இல்லாவிட்டாலும் எதிர்வரும் காலத்தில் எமது மக்கள் எதிர்கொண்ட அழிவுகளை எமது சந்ததி அறியவேண்டிய தேவை உள்ளதால் அவற்றை முடிச்தளவு கட்டாயம் எழுதும் படி கேட்டிருந்தனர் எனவேதான் அதன் தொடராக இந்தப் பதிவினை எழுதுகின்றேன்.


இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை பெரும் எதிர் பார்ப்புடன் முற்றுகையிட்டு அங்கு புலிகள் இல்லாத காரணத்தால் ஆத்திரமடைந்து போயிருந்தனர். ஆனால் புலிகள் நவாலி. சண்டிலிப்பாய் அளவெட்டி மூளாய் அராலி மற்றும் வடலியடைப்பு பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தாக்குதல்களை தொடுத்துக்கொண்டிருந்தார்கள். அது இந்திய இராணுவத்திற்கு பெரும் இழப்பையும் கொடுத்தது. கெரில்லாக்களிற்கு பொதுவாக காடுகளும் மலைகளுமே பதுங்கும் பாதுகாப்பரணாக விளங்குவது வழைமை. ஆனால் இவையிரண்டுமே இல்லாத யாழ்ப்பாணக்குடாநாட்டில் புலிகளிற்கு பாதுகாப்பாக விழங்கியது யாழ்ப்பாணத்தின் ஒழுங்கையமைப்புக்கள்தான்.. இந்திய இராணுவம் தங்கள் படை நடவடிக்கைக்கு ஏதுவாக இலங்கையரசின் சுற்றுலாத் துறையினரால் 80 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைபடத்தைதே வைத்துக்கொண்டு தாக்குதல்களை வழிநடத்தினார்கள். அதில் யாழ் குடாவின் ஒழுங்கைகள் எதுவுமே வரையப்பட்டிருக்கவில்லை.

புலிகள் ஒழுங்கைகளால் வந்து தாக்கியது அவர்களிற்கு பெரும் தலையிடியை கொடுத்தது. மருதனாமடம் சந்தியிலிருந்து முன்னேறி உடுவில் அரிசி ஆலையில் முகாம் அமைத்திருந்த சர்மா புலிகளின் நடமாட்டத்தை அறிய ஜேர் பரமேஸ்வரன் என்கிற தமிழ் அதிகாரி ஒருவரின் கீழ் ஒரு பட்டாலியன் இராணுவத்தை தயார்ப்படுத்தி ஊர்பொதுமக்களிடம் விபரம் கேட்டறிந்து புலிகளை தேடித்தாக்கியழிக்கும்படி கட்டளையிட்டிருந்தார். அதன்படி பரமேஸ்வரனும் சண்டிலிப்பாய் பகுதியில் பெருமளவில் நின்றிருந்த புலிகளை தாக்குவதற்காக உடுவில் சண்டிலிப்பாய் டச்சுவீதி ஊடாக நகர்வை மேற்கொண்டார். அவரது வரைபத்தில் டச்சுவீதியில் மானிப்பாயிலிருந்து குறுக்காக கந்தரோடை செல்லும் இரண்டு சிறிய வீதிகள் இல்லை அவரது படைகள் சண்டிலிப்பாயை அண்மித்ததும் கந்தரோடையிலிருந்தும் மானிப்பாய் கட்டுடைப் பகுதியிலிருந்தும் புலிகள் இடையே புகுந்து தாக்கியதில் பரமேஸவரன் உட்பட நாற்பதிற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் இறந்து போனார்கள்.புலிகளின் முதலாவது ஊடறுப்பு தாக்குலாகவும்இதை எடுக்கலாம்.


இதனால் கோபமடைந்த சர்மா பொதுமக்களை கேடயங்களாக்கியபடி முன்னேற்றத்தை தொடர்ந்தார். அதன்படி முன்னேறி முக்கிய இடங்களை அடைந்ததும் பிடித்து வந்தவர்களை ஓடச்சொல்லிவிட்டு பின்னாலிருந்து சுட்டுவிடுவார்கள். பெரும்பாலனவர்கள் இறந்து போக சிலர் மட்டும் தப்பியோடிய சம்பவங்கள் ஏராளம்.அது மட்டுமில்லாமல் புலிகளின் இலக்கு என்றோ அல்லது புலிகள் தாக்குதல்கள் நடத்தாமலேயே பல இடங்களில் பொதுமக்களை படுகொலை செய்தார்கள் அதில் சில.

21.10.1987 யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் சுமார் 60 பொதுமக்கள்.
10.10.1987 பிரம்படி (கொக்குவில்)படுகொலைகள் சுமார் 40 பொதுமக்கள். இவர்களை ராங்கிகளாலும் ஏற்றிக் கொல்லப்பட்டார்கள்.
10.10.1987 கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலைகள் சுமார் 35 பொதுமக்கள்.
26.10.1987 அளவெட்டி இந்து ஆச்சிரம படுகொலைகள் சுமார் 17 பொதுமக்கள்.
27.10.87 சாவகச்சேரி படுகொலைகள் சுமார் 67 பொதுமக்கள்.
19.01.1989 வல்வைமற்றும் ஊறணி வைத்தியசாலைப் படுகொலைகள்.சுமார் 65 பொதுமக்கள்
மற்றும் கிழக்கு மாகாணத்தில் பெருமளவான முஸ்லீம்கள்
இப்படி பல படுகொலைகளை நடாத்தி முடித்திருந்தனர்.


மேலே நான் குறிப்பிட்டவையனைத்தும் முறைப்படி ஆவணப்படுத்தபட்டவைகளே .
இவை இப்படி நடந்துகொண்டிருக்கமற்றப்பபக்கம் எங்கடை சனத்தின்ரை கூத்துக்கள்; தொடர்ச்சியான ஊரடங்குச்சட்டத்தால் கடைகள் எதுவும் திறக்காமல் பொதுமக்களிற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது புலிகள் முதலில் சங்கக்கடைகளை உடைத்து உணவை எடுக்கவிட்டிருந்தனர். மானிப்பாய் சங்கக் கடையையு உடைத்து சாமாகளை அள்ளிக்ககொண்டு போனவர்வகள் அங்கை அடிக்கி வைச்சிருந்த வெறும் சாக்குகளையும் அள்ளிக்கொண்டு போனார்கள். கடைசியாய் வந்த இருவர் பொருள் ஏதும் இல்லாததால் ஒருத்தர் தராசை கழட்ட மற்றவன் படிக்கல்லை தூக்கிக் கொண்டுஓடினான். படிக்கல்லை தந்திட்டுபோடா எண்டு தராசை கழட்டினவர் கலைக்க படிக்கல்லு பாரம் தாங்காமல் அவன் போட்டிட்டு ஓடிப்போயிட்டான். தாராசோடை படிக்கல்லுகளும் கிடைச்ச சந்தோசத்திலை அவர் நடந்து போனார்.

அதே மாதிரி மானிப்பாயிலை பிரபல றோஸ் பிறாண்ட் ரொபி புளுட்டோ கொம்பனி இருந்தது அங்கை தார் பரல்கள் மாதிரி பெரிய பரல்களிலை சீனிப்பாணி அடுக்கி வைச்சிருந்தவங்கள் சனங்கள் பரல்களை உருட்டிக்கொண்டு போனார்கள். கட்டாயம் அவைக்கு சீனி வருத்தம் வந்திருக்கும்.. மிச்ச பரல்களை இந்தியனாமி காவலரணிலை பாதுகாப்பிற்கு அடுக்கி வைச்சிருந்தாங்கள். அதே மாதிரி சண்டிலிப்பாயிலை வடிசாராய நிலையம் ஒண்டு இருந்தது பனங்கள்ளை காச்சி வடிச்சு சாராயம் தயாரிப்பினம். பாதி பதப்படுத்தப் பட்ட கள்ளை தண்ணீர் ராங்குகள் மாதிரி உயரத்திலை கட்டியிருந்த பல ராங்குகளிலை சேமிச்சு வைச்சிருந்தவை.

இந்தியனாமி அடிச்ச செல் ஒண்டு அங்கையிருந்த ராங்கிலை பட்டு அது உடைஞ்சு புளிச்ச கள்ளு ஒழுகிக் கொண்டிருந்தது அதை பலபேர் ஓடிப்போய் வாளி குடம் எண்டு அம்பிட்டதிலை ஏந்திக் கொண்டு ஓட எதுவுமே கிடைக்காதவை ராங்கிற்றக கீழை போய் அண்ணாந்து ஆவெண்டு வாயை திறந்து குடிச்சுக் கொண்டிருந்திச்சினம். அப்பிடி குடிச்ச சிலர் கோமாவாகி அங்கையே விழுந்து கிடக்க பிறகு அங்கை வந்த இந்தியனாமி போட்டுத் தள்ளிட்டு போயிட்டான்.

மேலதிக சில குறிப்புக்கள்.


இந்திய இராணுவத்துடனான மோதல் பற்றி . பலர் கேட்டிருப்பதால் கொஞ்சம் விரிவாகவே எழுதுகிறேன். அதில் முதலாவது இராஜீவ் காந்தி கொல்லப் பட்டிருக்காவிட்டாலும் புலிகளின் தலைமை இந்தியா தருணம் கிடைத்த சந்தர்ப்பத்தில் தீர்துவிடுவதே கொள்கையாக இயங்கியது. பின்னர் இராஜீவ் கொலைநடந்து விட்டிருந்ததால் அது முக்கிய காரணமாக்கப் பட்டது. இந்தியாவுடனான மோதல்கள் தொடங்கியதற்கான காரணங்களை இங்கு தருகிறேன்.
இலங்கை ஒப்பிரேசன் லிபரேசனை 87 தொடங்குகின்றது; அன்றைய காலத்தில் புலிகளிடம் போதிய ஆயுத ஆள்பலம் இல்லாததால் பின்வாங்கியிருந்தாலும் மில்லரின் தற்கொலை தாக்குதலில் கலங்கிபோனது இலங்கை மட்டுமல்ல இந்தியாவும்தான். இங்கு வடமராச்சியை விட்டு புலிகள்பின் வாங்கிய பொழுதே
அதன் நரிவிழையாட்டு தொடங்குகின்றது.

1)புலிகளிடம் தொடர்புகொண்டு புலிகளிற்கு தேவையான நவீன ஆயுதங்களை தருவதாகவும் புலிகளின் தலைவரின் கடிதமாக அது உறுதிப்படுத்தப் பட்டிருக்கவேண்டும் என கேட்கின்றனர். அப்படி புலிகள் கொடுத்த பட்டியலை இலங்கையரசிடம் காட்டி புலிகளிற்கு இந்த ஆயுதங்களை கொடுக்கப் போகின்றோம் என மிரட்டுகின்றனர். ஆனால் புலிகளிற்கு ஆயுதம் கொடுக்கவில்லை.

2)ஒப்பந்தத்தின் பின்னர் அவற்றை துரிதமாக நடைமுறைப்படுத்தும்படி 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் உண்ணாவிரதம். அவனும் இறந்து போகிறான் எந்த முன்னேற்றமும் இல்லை

3)ஆனால் புலிகள் தொடர்ந்தும் வடகிழக்கில் வேறு உறுப்பினர்களை தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியபடியே இருந்தனர். அப்பொழுதுதான் மட்டுவின் பூபதியம்மாள இறந்து போகிறார். அதனை டிக்சித்தின் கவனத்திற்கு புலிகள் கொண்டு சென்றபொழுது டிக்சித் சொன்னது கொஞ்சநாளில் தானாக செத்திருக்கவேண்டிய கிழவி கொஞ்சம் முதலேயே போயிட்டுது;

4)குமரப்பா புலேந்திரன் உட்பட பதினொரு புலிகள் இயக்கத்தவர்கள் ஆயுதங்களோ சயனைற்றோ இன்றி ஒப்பந்தத்திற்கு மாறாக இலங்கையரசால் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தபொழுது இந்தியாவால் அதனை தடுத்து நிறுத்தி அவர்களை விடுவித்திருக்க முடிந்திருக்கும். அதனையும் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர்.

5)இதற்கு பின்னரும் புலிகளின் இந்தியாவுடன் மோதும் எண்ணத்துடன் இருக்கவில்லை. ஒக்ரோபர் 9 ந்திகதி டெல்லியும் கொழும்பிற்கும் நடந்த தகவல் பரிமாற்றத்தில் பிரபாகரனை கைது செய்வது என்று நடந்த உரையாடல் புலிகளினால் ஒட்டுக்கேட்கபட்டதோடு மட்டுமல்ல புலிகளோடு நெருக்கமாக இருந்த இந்திய இராணுவ அதிகாரி ஒருத்தரும் புலிகளிடம் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். அன்றிரவே 9 மணியளவில் பிறவுண் வீதியில் பிரபாகரன் தங்கிருந்ததாக கருதப்பட்ட வீட்டினுள் இந்திய அதிரடிப்படையினர் புகுந்து சுற்றிவளைத்து தேடினார்கள் அங்கு யாரும் இருக்கவில்லை.


6)10 ம் திகதி காலை மராட்டிய ரெஜிமெண்ட் யாழ்ப்பாணத்தின் பிரபல பிராந்திய பத்திரிகை நிலையங்களை குண்டு வைத்து தகர்த்ததோடு அதன் ஊழியர்களையும் கைது செய்து கோட்டையில் சிறை வைக்கின்றனர். அதே நேரம் வேறு புலிஉறுப்பினர்களும் கைது செய்யப் படுகின்றனர்.
அன்றே இலங்கையில் புலிகளிற்கெதிரான நடவடிக்கைகளை இந்தியப் படை ஆரம்பித்துவிட்டதாக இந்திய வானொலி மலைச்செய்தியின் பின்னர் அதிகார பூர்வமாக அறிவிக்கின்றது


7)நவம்பர் 12 ந்திகதி இரவு இலங்கையின் இந்திய கட்டளைத் தளபதிக்கே தெரியாமல் இந்திய உளவுப் பிரிவினர்.இந்தியாவின் குவாலியர் (மத்தியப் பிரதேசம்) இராணுவ அதிரடிப்படை முகாமிலிருந்து 70 பேரடங்கிய பாரா கொமாண்டோ படையணி ஒன்றை கொண்டுவந்து பிறவுண் வீதியும் திருநெல்வேலி வீதியும் இடத்திற்கு அருகில் உள்ள கொக்குவில் கிராம சபைக்கு அருகில் நற்ளிரவு 1 மணியளவில் தரையிறக்காப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றனர். அதன் பின்னர் அதிகாலையளவில் இன்னொரு
படையணி சீக்கிய காலாட்படையின் 13 வது சிறப்பு டையினர் 30 பேர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கருகில் இறக்கப்படுகின்றனர். இவர்களிற்கு றோ அதிகாரிகள் இட்ட கட்டளை பிரபாகனை முடிந்தால் கைது செய்யுங்கள் அல்லது சுட்டுக்கொன்று விடுங்கள் என்றதுதான்.

இவை இப்படி நடந்து கொண்டிருக்க பிரபாகரன் இரக்கின்ற வீடு என இந்தியா குறிவைத்த வீட்டில் அவர் இருந்திருக்கவில்லை அங்கு அவர் இந்திய அதிகாரிகளை சந்திப்பதை மட்டுமே நடத்தியிருந்தார். ஆனால் அவர் உடுவில் பகுதியில் ஒரு வீட்டிலேயே தங்கிருந்தார். ஆனால் இந்திய இராணுவம் இறங்கிய பகுதியில் மாத்தையா மற்றும் அன்ரன் வாத்தி ஆகியோரது முகாம்கள் இருந்தது முதலாவது கெலி அதிகாலை 1 மணிக்கு இறங்கியதுமே அவர்கள் ஊசாராகி யாழ் பல்கலைகழக கட்டிடம் மற்றும் மரங்களில் நிலையெடுத்து விட்டிருந்தனர். அதிகாலை இரண்டாவது சீக்கிய காலாட்படையணி இறங்க தொடங்கியதும் தாக்குதலை நடத்தத் தொங்கியிருந்தனர். தரையிறங்கிய 30 பேரில் 29 பேர் இந்து போக ஒருவர் கைது செய்யப் பட்டார். மறுபுறம். தரையிறங்கிய 70 பேரில் 40 பேர் இறந்து போக யாழ் கோட்டையிலிருந்து இன்னொரு மீட்பு அணி வந்து மற்றையவர்களை மீட்டுக்கொண்டு போனார்கள்.

அப்பொழுது தான் நான் முன்னர் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் 10 ம் திகதி பிரபாகரனும் மற்றையவர்களும் கைது செய்யப்படலாம் என்பது உறுதியாகி விட்டிருந்தது அதன் போதே பிரபாகரன் அனைவரையும் அழைத்து கேட்டிருந்தார் கைதாகி அவமானப்பட்டு சிறையில் அடிவாங்கி சாவதா?? அல்லது அகப்படாமல் சயனைற் அடிப்பதா??? அல்லது போராளிக்கேயுரிய போர்குணத்துடன் இறுதி வரை போராடிச்சாவதா??நான் போராடிச்சாவதென முடிவெடுத்துவிட்டேன். நீங்கள் உங்கள் முடிவுகளையும் சொல்லாம். மற்றையவர்கள் போய்விடலாம் எண்டார். அப்பொழுதுதான் சாகும்வரை போடுவதென முடிவெடுக்கப்பட்டது.

அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.

11:41 AM, Posted by sathiri, No Comment

அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.
ஒரு பேப்பரிற்காக நினைவுப்பதிவு சாத்திரி

இலங்கைத்தீவில் தமிழர்களிற்கு தீர்வும் சமாதானமும் வாங்கித் தருவதாக சொல்லியபடி இந்திய இராணுவம் அமைதிப்படை என்கிற பெயரில் வந்திறங்கி தமிழர்களின் அமைதியை பறித்து அவலங்களை மட்டுமே கொடுத்து இருபத்தி முன்று ஆண்டுகள் .ஆகிவிட்டது 10.10 1987 ம் ஆண்டுஆண்டு யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவத்தின் மராட்டிய பட்டாலியன் (First Battalion of Maharatta Light Infantry)யாழ் பிரந்திய பத்திரிகைளான ஈழமுரசு முரசொலி ஈழநாடு பத்திகை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்த்ததிலிருந்து யுத்தத்தை தொடங்கி விட்டிருந்தனர்.அதைனைத் தொடர்ந்து புலிகளும் வேறு தெரிவுகள் எதுவும் இன்றி இந்திய இராணுவத்துடன் மோதிப்பார்த்து விடுவது என்கிற முடிவை எடுத்திருந்தனர்.

மோதல் தொடங்கி பதினைந்து நாட்களை கடந்து நீட்டுகொண்டு போனது. ஒரு 24 நாலு மணித்தியத்திலேயோ மிஞ்சி மிஞ்சிப் போனால் 48 மணித்தியாலத்தில் புலிகள் அனைவரையும் பிரபாகரன் உட்பட கைது செய்து ஆயுதங்களை பறித்துவிடலாமென நினைத்திருந்த இந்திய அரசியல் தலைமைகளிற்கும் அதிகாரிகளிற்கும் ஏமாற்றமாகி போனது மட்டுமல்ல அவர்களிற்கு புலிகளினுடனான யுத்தம் கௌரவப் பிரச்சனையாக மாறிவிட்டிருந்தது.அதே நேரம் இலங்கையிலிருந்த இந்தியப்படைகளின் கட்டளை யதிகாரி திபீந்தர் சிங்கிற்கு புலிகளை அழக்கும் நோக்கம் இருக்கவில்லை முடிந்தளவு அவர்களை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்யவே விரும்பியிருந்தார். இதனால் இவரிற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டிக்சித்திற்கும் முரண்பாடுகளும் தோன்றியிருந்தது. காரணம் டிக்சித்திற்கு புலிகளை விரைவாக அழித்து முடித்துவிடவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது.


சமாதான காலத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளுடன் நல்லதொரு நட்போடு பழகியதாலும் தென்னிந்தி பட்டாலியன்கள் குறிப்பாக மெட்ராஸ் பட்டாலியன்களும் (தமிழ்நாட்டு இராணுவத்தினர்) முன்னணி நகர்வு படைகளில் இருப்பதால் தான் புலிகளை அழிப்தற்கு தாமதமாகின்றது என நினைத்த இந்திய உளவுத்துறையும் அரசியல் தலைமையும் இன்னொரு கட்டளை அதிகாரியை இலங்கைக்கு அனுப்பி மாற்றங்களை கொண்டுவர எண்ணினர் அதன்படி சீங்கியர்களின் காலிஸ்தான் போராட்டத்தில் இறுதியாக பொற்கோயில் தாக்குதலில் கட்டளையிடும் அதிகாரியாக திறைமையாக பணியாற்றிய தெய்வேந்திர சர்மாவை இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இவர் திபீங்தர் சிங்கின் கட்டளைகளிற்கு கீழ்படியாமல் தன்னிச்சையாகவே நடவடிக்கைகளை எடுக்கும் சுதந்திரம் அவரிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. நேரடியாக பலாலியில் வந்திறங்கிய தெய்வேந்திர சம்மா உடனடியாகவே முன்னணி படையணிகளில் மாற்றங்களை கொண்டுவந்தார். புலிகளுடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளை மாற்றியவர். தென்னிந்திய பட்டாலியன்களை பின்நகர்த்திவிட்டு (முக்கியமாக தமிழ்நாட்டு இராணுவத்தினர்) வட இந்திய பட்டாலியன்களான சீக்கிய. மராட்டிய.குர்கா படையணிகளை முன்னணிக்கு நகர்த்தினார். அத்தோடு மட்டுமல்லாது அவர் ..காலாட் படையணிகளிற்கு இட்ட கட்டளை என்னென்ன பொருள்கள் அசைகின்றதோ அத்தனையையும் சுட்டுத்தள்ளியவாறு முன்னேறுங்கள் என்றதுதான்.


அதே நேரம் புலிகளின் மோசமான கண்ணி வெடித் தாக்குதலில் இருந்து தப்பிக்க முன்னேறும் இராணுவத்தினரிற்கு கனரக ராங்கி படையணியினர் பாதைகளின் தடைகளை அகற்றி கொடுக்குமாறும் எந்தத் தடைகள் வந்தாலும் தாங்கிளால் தகர்த்தபடி முன்னேறும்படி கட்டளையிட்டிருந்தார். சர்மாவின் கட்டளைகளின் படி இந்திய இராணும் தமிழர் பகுதிகளில் பல அழிவுகளை கொடுத்தபடியே முன்னேறியது. அசைந்த பெருள்களான நாய் பூனை ஆடு மாடு.மனிதர்களையெல்லாம் காலாட்படை சுட்டுத்தள்ள. அசையாது நின்ற கட்டிடங்கள் மரம் செடியெல்லாவற்றையும் ராங்கிகள் தகர்த்தபடி முன்னேறினர். யாழ்குடாவின் பிரதான சாலைகளை சில நாட்களிற்குள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த இந்திய இராணுவத்தினரின் அடுத்த இலக்கு சுதுமலையம்மன் கோயில் ஆகும்.

அதற்கு காரணம் இலங்கை இந்திய ஓப்பந்தத்தின் பொழுது பிரபாகரன் முதன் முதலாக மக்கள் முன் தோன்றி உரையாற்றியது சுதுமலையம்மன் கோயிலில்தான். அதே நேரம்.இந்திய இராணுவ அதிகாரிகள் புலிகளை சந்திக்க வந்திறங்கியது இந்தியாவிலிருந்து பிரபாகரன் வந்திறங்கியது எல்லாமே சுதுமலையம்மன் கோயில் சுற்றாடலில்தான். அது மட்டுமல்ல அதே சுற்றாடலில் புலிகளின் இரண்டு பெரிய ஆயுத தொழிற்சாலைகளும் அப்பையா அண்ணை தலைமையில் இயங்கியது. இந்த விடையங்கள் இந்திய உளவுத்துறையினரிற்கு தெரியும்.

எனவேதான் காலிஸ்தான் அமைப்பினர் பொற்கோயிலை தலைமையிடமாக வைத்து அங்கு பெருமளவு ஆயுதங்களையும் குவித்து இந்திய இராணுவத்துடன் போரிட்டனரோ அதே போலவே புலிகளின் முக்கிய தலைவர்கள் சுதுமலையம்மன் கோயிலில் பெருமளவு ஆயுதங்களுடன் பதுங்கியிருக்கலாமென இந்திய இராணுவம் நினைத்தது. சர்மா தலைமையில் ஏழு முனைகளில் இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை நோக்கி நகர்ந்தது. 21 ந் திகதி நற்றிரவு சுதுமலை மானிப்பாய் பகுதி முழுவதையும் சுற்றி வளைத்த இராணுவத்தினர் அனைவரது வீடுகளிலும் புகுந்து அங்கிருந்தவர்களை ஒரு அறைகளில் போட்டு பூட்டிவிட்டு அந்தப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் அம்மன் கோயிலிற்குள் தாக்குதலை நடத்தி புகுந்து கொள்ள காலை புலரும்வரை காத்திருந்தனர்.

அதிகாலையானதும் மெல்ல நகர்ந்த டாங்கி படையணியினர் அம்மன் கோயிலை சுற்றி வழைத்து நிறுத்தப்பட்டனர். காலை 5.30 மணியளவில் டாங்கிகளின் குண்டுகள் அம்மன் கோயிலை நோக்கி சீறிப்பாய்ந்தது. கோயிலின் வடக்கு கோபுரம். மணிக்கூண்டு கோபுரம்.தெற்கு மதில் சுவர். எல்லாம் சிதறியது. கோயிலின் பின்னாலிருந்த நூற்றாண்டு கடந்து பரந்து விரிந்திருந்த ஆலமரத்தின் கிளைகளும் முறிந்து விழுந்தது. அதுவரை காலமும் சனி விதரத்திற்கு போடும் சோத்தையு ம் பலிபீடத்து புக்கையையும் கொத்தி சாப்பிட்டு விட் சந்தோசமாய் அந்த ஆலமரத்தில் கூடுகட்டி வாழ்ந்த காகங்கள் பலதும் செத்துவிழ மீதி காகங்களோ காலங்காத்தாலை எந்தச் சனியன்கள் எங்கடை கூட்டை பிரிச்சது எண்டு நினைத்தபடி கா கா எண்டு திட்டியபடியே பறந்து போனதே தவிர கோயிலிற்குள் இருந்து எந்த பதில் தாக்குதலும் வரவில்லை.

சில நிமிட இடைவெளி விட்டு மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியவர்கள் ஆச்சரியத்தோடு கோயிலின் உள்ளே நுளைந்து தேடினார்கள் யாரும் அங்கிருக்கவில்லை. சர்மாவுக்கு சரியான கோபம்.யாரடா இந்த கோயிலின்ரை பூசாரி தேடிப்பிடிச்சு இழுத்து வாங்கோ என்று கட்டளையிட்டார். அந்தக் கோயில் ஜயர் பக்கத்திலேயே தான் குடியிருந்தார். அவர் சின்ன வயதிலை போலியோ நோயாலை தாக்கப்பட்டு கால்கள் சூம்பிப் போய் சரியாக நடக்க முடியாதவர். அவரை தேடிப்பிடிந்து இரண்டு இராணுவத்தினர் தூக்கிக் கொண்டுவந்து சர்மாக்கு முன்னாலை போட்டார்கள். சர்மா ஜயரிட்டை எங்கை எல் டி டி ..எங்கை ஆயுதம்.. எண்டு ஆங்கிலத்திலை கத்த ஜயருக்கு ஒண்டும் விழங்கேல்லை உடைனை ஒரு தமிழ் ஆமி ஓடிவந்து எல் டி டி எங்கை ஆயுதம் எங்கை ஆயுதம் எண்டு கேட்டார். ஜயரும் எல் டி டியை. நீங்க ளும் அவைய அவையளும் இந்த கோயிலுக்கு முன்னாலை சந்திச்சு கதைக்கேக்குள்ளைதான் கடைசியாய் கண்டனான் என்றவர்

ஆயுதம் அங்கையிருக்கு எண்டு அம்மனின்ரை கையிலை இருந்த வாளையும் முருகனின்ரை கையிலை இருந்த வேலையும் காட்டினார். அதோடை அவர் நிப்பாட்டியிருக்கலாம் ஆனால் பக்கத்திலை பிள்ளையார் இருக்கிறார் அவரிட்டை ஆயுதம் இல்லை கையிலை மோதகம்தான் இருக்கு எண்டதும் நக்கலா....என்றபடி ஜயருக்கு நாலைஞ்சு அடி போட்டு கலைச்சு விட்டிட்டாங்கள். இயக்கத்தையும் ஆயுதத்தையும் காட்டிக் குடுக்க நான் என்ன விசரனோ எண்டு புறு புறுத்தபடி ஜயர் போயிட்டார். இந்திய இராணுவமும் கோயில் வீதியிலை பலஇடத்திலை கிடங்கு தோண்டிப்பாத்திட்டு போய் விட்டார்கள்.

கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27

8:24 AM, Posted by sathiri, No Comment


இந்தவார ஒரு பேப்பரிற்காக
சாத்திரி

கண்ணை கட்டி விட்டதைப்போல்.. கார்த்திகை 27
இந்த வருட மாவீரர் நாள் பற்றிய கட்டுரை ஒன்றினை கடந்த பேப்பரிலும் உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.புலம் பெயர் தேசமெங்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நின்று இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. அனைவரும் கலந்து பேசி ஒரு ஒற்றுமையுடன் மாவீரர்களிற்கான அஞசலியை செலுத்துவதே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையும் ஆகும் என்றும். என்றொரு வேண்டு கோளும் விடுக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்தது ஆனால் ஆக்கபூர்வமான எந்த முடிவுகளும் எடுக்கப்படால் இரு குழுக்கள்தனித்தனியே இந்த வருட மாவீரர் நாள் ஏற்பாட்டினை செய்யத் தொடங்கியதோடு மட்டுமல்லாது. ஆளாறிற்கு தாங்களே உண்மையானவர்கள் மற்றையவர்கள் விலை போனவர்கள் இலங்கை இந்திய உளவாளிகள் என மாறி மாறி அறிக்கைப் போரும் தொடங்கி விட்டனர்.

இதில் ஒரு பிரிவினர் புலிகள் அமைப்பில் இருந்து மே 2009 ம் ஆண்டிற்கு பின்னர் இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படைகளிடம் சரணடைந்தும் வேறு விதங்களில் தப்பியோடி ஜரேப்பாவிற்குள் நுளைந்தவர்கள். இவர்களின் வாதமென்னவென்றால் கடந்த காலங்களில் புலிகளின் வெளிநாட்டு பிரிவினர் பல தவறுகளை விட்டுவிட்டார்கள் அதுதான் புலிகளின் அழிவிற்கும் புலிகள் மீதான தடைக்கும் காரணம். பெருமளவான நிதியினையும் இவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள்
எனவே அந்த நிதி மற்றும் சொத்துக்களை தாங்கள் பொறுப்பெடுத்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தினை தாமே நகர்த்தப் போவதாகவும். இனி வருங்காலங்களில் தாமே புலம்பெயர் தேசங்களில் மாவீரர் நாள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் ஒழுங்கமைக்கப் போவதாக கூறுகிறார்கள்.. இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கின்றது கடந்த காலங்களில் புலிகளின் அனைத்துலகச்செயலகத்தினரில் பலர் நிதி மோசடி. தங்கள் பதவி நிலைகளை தக்கவைப்பதற்காக மற்றைய உறுப்பினரை காட்டிக்கொடுத்தல்.

மாவீரர் நாள் நிகழ்வுகளை வியாபாரமாக மாற்றியது என பலவிடையங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவை எல்லாவற்றிலும் மாற்றம் வரவேண்டும் மாவீரர் நாள் புலம் பெயர் தேசங்களில் புனிதமாக நடைபெற வேண்டுமென மாவீரர் குடும்பங்கள் அங்கலாய்க்கின்றார்கள். ஆனால் புதிதாய் வந்திறங்கியவர்கள். பழைய நிருவாக சீர் கேடுகளை மாற்றியமைப்பவர்களாகத் தெரியவில்லை.
அதற்கான காரணங்கள். புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிக்கிறோம் என பகிரங்கமாக அறிவித்து விட்ட பிறகு இனி வரும் காலங்களில் அனைத்து போராட்டங்களும் ஆயுதமற்ற வன்முறையற்ற அரசியல் மற்றும் சனநாயக ரீதியிலான மென்முறைப்போராட்டங்களே. இதனை யாரும் ஒழித்திருந்து பலபெயர்களில் செய்ய வேண்டிய தேவையில்லை. பகிரங்கமாவே செய்யலாம் கைகளில் புலிக்கொடி ஏந்தி தலைக்கு மேலே தலைவர் பிரபாகரனின் படத்தை உயர்த்திப் பிடித்தபடியே செய்யலாம் எவ்வித தடையும் இல்லை.


ஆனால் புதிதாக வந்தவர்களோ ஒவ்வொரு நாடுகளில் வேறு வேறு பெயர்களில் அதுவும் புலிகளின் அமைப்பில் இருந்த தளபதிகள் அல்லது பழைய உறுப்பினர்களின் பெயர்களான வினாயகம்.சங்கீதன்.அல்லது தயாபரன். ஜேம்ஸ். தும்பன்.கரிகாலன். தமிழரசன்.சுரேஸ். சீர்மாறன். என்கிற பெயர்களில் நடமாடுவதோடு. பல இரகசியக் கூட்டங்களை மட்டுமே இதுவரை ஜரோப்பிய நாடுகளில் நடத்தியுள்ளனர். தாங்களே இறுதிவரை தலைவருடன் முள்ளி வாய்காலில் நின்றதாக கூறிக்கொண்டு புதியதொரு கட்மைப்பினை கட்டியமைத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப் போவதாக கூறும் இவர்கள்.முதலில் பொதுக்கூட்டங்களை கூட்டி மக்கள் முன் தோன்றியோ .அல்லது ஊடகங்களான வானொலி தொலைக்காட்சிகளில் பங்கு பற்றியோ இறுதி யுத்தத்தின் போது நடந்த சம்பவங்கள் பற்றி புலம்பெயர் தேசத்து தமிழர்களிள் மனங்களில் தத்தளிக்கு பலநூறு கேள்விகளிற்கு பதில் கொடுத்து முதலில் அவர்களிற்கு தெளிவைக் கொடுக்கவேண்டும். அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தினை எப்படி நகர்த்துவது அல்லது நகர்த்தலாம் எக்கிற ஆலோசனைகள் பகிரங்கமாக கலந்துரையாடப்படல் வேண்டும்.

அதே நேரம் ஜரோப்பிய நாடுகளில் இவர்களது அகதி தஞ்சக் கோரிக்கைகள் இன்னமும் அனுமதிக்படாமலேயே சரியான ஆவணங்கள் கடவுச்சீட்டு இன்றி இவர்களால் எப்படி எல்லைப் பாதுகாப்பு கூடிய இங்கிலாந்து சுவிஸ்.நோர்வே . டென்மார்க் போனற நாடுகளிற்கொல்லாம் சுதந்திரமாக போய் இரகசியக் கூட்டங்கள் நடாத்த முடிகின்றது என்பதனையும் மக்களிற்கு புரியவைக்கவேண்டும்.விடுதலைப் புலிகள் தடைசெய்யப் பட்டுள்ள ஜரோப்பிய நாடுகளில். தாங்கள் அந்த அமைப்பின் அசல் பிரதிநிதிகள் என சொல்லித் திரியும் பொழுது இவர்களை இயங்கவிட்டு பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நாட்டு உளவுத்துறையினர் இவர்கள் விடயத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள் என நாம் எடுத்துக்கொள்லாமா?? அல்லது தீவிரவாத எதிர்ப்பு அணுகு முறையின்(counter insurgency) அடிப்படையில் அவர்களது ஆதரவும் உள்ளது என எடுத்துக்கொள்லாமா??அல்லது எல்லாமே இந்த நாட்டு உளவமைப்புக்களிற்கு தெரியாமல் நடக்கின்றது என சொல்ல வருகின்றார்களா?? இது பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படும் வரை இவர்கள் மீதான சந்தேகங்கள் தொடரும்.அதுவரை இவர்கள் மீதான சந்தேகங்கங் தொடரும்.


அடுத்து மாவீரர் நாளிற்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார எம்.பி ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.

எனவே மாவீரர் வணக்க நிகழ்வினை யார் ஒழுங்கு செய்தாலும். கொத்துறொட்டிக்கடை புடைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்றும் ஜரோப்பாவின் யாரோ ஒரு கடைசி வாங்கு பாராளுமன்ற உறுப்பினர் வரவழைக்கப் பட்டு அவர் வடைக்கதை சொல்லாமலும்..இந்தியாவிலிருந்து உணர்ச்சிகர மேடைப் பேச்சாளர்கள்சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு வீண் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்காமல் அனைத்தையும் தவிர்த்து .. பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பட்டெளி வீசிப்பறக்க மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் வரவேற்க ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே "என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல.....மக்களும் வரமாட்டார்கள்.

மனங்கள் கனக்கின்றது மாவீரரே

9:46 AM, Posted by sathiri, One Comment



மனங்கள் கனக்கின்றது மாவீரரே
இந்தவார ஒரு பேப்பரிற்காக
சாத்திரி



மாவீரர் வாரம் நெருங்குகின்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தைப் போல தாயகத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையே ஏற்படும்.மாவீரர் நாள் வாரத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிக்கும். சில வேளை கிறீஸ் பூதங்கள் கூட இரவுகளில் அதிகளவில் வழுக்கித் திரியலாம். அஞ்சலி செலுத்துபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே அவர்களிற்கான அஞசலியை வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களால்தான் சுதந்திரமாக செய்யமுடியும். ஆனால் அதற்கும் அண்மைக்காலங்களாக வருகின்ற செய்திகள் மனதை கலங்கடிப்பவையாகவே இருக்கின்றது. காரணம். இந்த முறை மாவீரர் நிகழ்வுகளை பிரிந்து நிற்கின்ற தமிழர் அமைப்புக்கள் தனித்தனியாக நடத்தப் போவதாக மட்டுமல்லாது மாவீரர் நாள் அறிக்கையும் தனித்தனியாக வெளியிடப் போவதாக தகவல்கள் ...

இந்தமுறை கலக்கப் போறது யாராம் என்று என்னோடை கதைக்கும் போது ஒரு நண்பன்என்னிடம் கேட்டான். அவன் தமிழ் தொலைக்காட்சியளிலை நடக்கிற கலக்கப் போறது யாரு அசத்தப் போவது யாரு எண்டிற நகைச்சுவை நிகழ்ச்சியை பற்றித்தான் கேக்கிறானாக்கும் என நினைச்சு நானும் என்னட்டை தமிழ் தொலைக்காட்சி ஒண்டும் கிடையாது அதுகளை பாக்கிற நேரமும் கிடையாது . ஏதாவது தேவையெண்டால் கணணியிலை தேடிப் பாத்திடுவன். எண்டன் ஏடேய் அதை நான் சொல்லேல்லை இந்த முறை மாவீரர் நாள் உரையை பற்றி கேட்டன் ..ஏனெண்டால் ஆளாளிற்கு அறிக்கை விடப் போறம் எண்டு கதையள் அடிபடுது அதைத்தான் கேட்டனான் எண்டான்.. அப்படி கேட்டது அவனுடைய தவறு இல்லை ..உலகமே உற்று நோக்கிய பிரபாகரனின் மாவீரர் நாள் கொள் கொள்கை விளக்க உரையை "கலக்கப் போவது யார்?? "என்று கேட்கின்ற அளவிற்கு 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் தாங்களே தாயகத்திலுள்ள தமிழரிற்கான போராட்டங்களை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு பல பிரிவுகளாகி நிற்கும்புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.

1989 ம் ஆண்டு முதலாவது மாவீரர் நாள் உரையானது மாவீரர்களிற்கான அஞ்சலியுடன் தொடங்கி புலிகள் அமைப்பின் கொள்கை விளக்கங்கங்களோடு புலிகள் அமைப்பானது அன்றைய காலகட்டங்களில் தமிழ் மக்களிற்கும் சர்வதேசத்திற்கும் என்னென்ன செய்திகளை சொல்லவிரும்புகின்றனர் . தாயகத்து மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களிடம் என்னென்ன எதிர்பார்க்கின்றனர் அவர்களது கடைமைகள் என்ன. சர்வதேசத்திடம் என்னென்ன எதிர்பார்க்கின்றனர்.என்கிற விடயங்கள் அடங்கியதாக இருக்கும். புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களால் நேரடியாக வாசிக்கப் படும் அந்த உரையினை உலகநாடுகளே உன்னிப்பாக அவதானித்தபடி இருக்கும். உரையில் பிரபாகரன் எந்தெந்த விடயங்களை அழுத்திச் சொல்கிறார். எங்கு நின்று நிதானித்து சொல்கிறார். எங்கு ஏற்ற இறக்கங்கள் வருகின்றது என்று அனைத்துமே அலசி ஆராயப்படும்.காரணம் வருடத்தில் ஒரு முறைமட்டுமே பேசுபவர் பிரபாகரன் அதுவும் அந்த மாவீரர் நாள் உரை மூலமாகத்தான். மிகுதி அனைத்திற்குமே செயல்வடிவம்தான் அதனால்தான் அதற்கு அத்தனை மதிப்பு..

2008 ம் ஆண்டுடன் மாவீர் நாள் கொள்கை விளக்கவுரை நின்று விட்டது. அதற்கு பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உலகம் அறிந்ததுதான். ஆனால் எமக்காகவும் எமது மண்ணிற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கியவர்களின் நினைவிடங்களையும் கூட இலங்கை இராணுவம் சர்வதேச விதிகளையும் மீறி அழித்து தரைமட்டமாக்கப் பட்ட நிலையில். அங்கு வாழும் மக்களாலும் அவர்களிற்கான அஞ்சலியை செலுத்த முடியாத நிலையிலும். புலம் பெயர் தமிழர்கள் ஒன்று கூடி ஒற்றுமையாய் அந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அவர்களின் கனவுகளை நினைவாக்க மனதில் உறுதியெடுத்து அவர்களிற்கான அஞ்சலிகளை செலுத்தவேண்டியது எமது கடைமையல்லவா??அதுதானே நாம் அவர்களிற்கு செய்யும் மரியாதையாகும்.
அதே நேரம் புலம் பெயர் நாடுகளில் உள்ள அனைத்து அமைப்புக்களும் தங்கள் அமைப்பின் சார்பில் ஓவ்வொரு அஞசலி அறிக்கையை விடலாம்.ஆனால் அது மாவீரர் நாள் புலிகள் அமைப்பின் கொள்கை விளக்க உரையாக அமையாது. தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் வாசிக்கப்படாத எந்தவொரு உரையும் மாவீரர் நாளின் புலிகள் அமைப்பினது கொள்கை விளக்க உரையாக அமையாது.அதனை எந்தவொரு தமிழர் மட்டுமல்ல சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளாது. மற்றைய அனைத்து உரைகளுமே மாவீரர்களிற்கான அஞ்சலி உரையாகவே கணிக்கப்படும்.


பல பிரிவுகளாக பல்வேறு இடங்களில் பல்வேறு அறிக்கைகளுடன் மாவீரர் நாள் நடைபெறப் போகின்றது என்கிற செய்திகளிற்கிடையில் கடந்த ஞாயிறு 18.ந் திகதி பிரான்சில் பாரிஸ் நகரில் பிரான்சின் தமிழ் அமைப்பக்களில் முக்கியமான அமைப்புக்களும் மக்களும் இணைந்து மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார்கள். கலந்துரையாடலின் இறுதியில் அனைத்து அமைப்புக்களும் ஒற்றுமையாக ஒருமித்து மாவீரர் வாரத்தினை கடைப்பிடிப்பது. அனைவரும் இணைந்து மாவீரர்களிற்கான அஞ்சலி பிரசுரம் ஒன்றினை வெளியிடுவது. அதே நேரம் கடந்த காலங்களில் இடம் பெற்றதைப் போன்று நிகழ்வு மண்டபத்தில் வியாபாரக் கடைகள் போடுவதற்கு வியாபாரிகளை அனுமதிப்பதில்லை. சிறுவர்களிற்காக பிஸ்கற்றுக்களும் குடிபானம் மட்டும் வினியோகிப்பது என்கிற ஒருமனதான தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

இது மனதிற்கு ஆறுதலைத்தரும் செய்தியாக மட்டுமில்லாது மாவீரர்களின் தியாககங்கள் வீண் போகவில்லை என்கிற மகிழ்ச்சியையும் தருகின்றது. ஆனால் இங்கிலாந்து ஜெர்மனி சுவிஸ் ஆகிய நாடுகளில் இன்னமும் இழுபறி நிலைகள் உள்ளதாகவே தெரிகின்றது. அவர்களும் ஒன்றிணைந்து எமக்காக உயிர் நீத்த மாவீரர்களை மனதில் நிறுத்தி அவர்களிற்கான அஞ்சலிகளை செலுத்தி உலகத் தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு மாவீரர்களின் கனவுகளை நினைவாக்குவோமென இந்த வருட மாவீரர் வாரத்தில் உறுதியெடுக்கவேண்டும்.
மாவீரர் வாரத்தை பிரிந்து நின்று வெறுமனே அனுட்டிப்பதில் பயனில்லை மாவீரர் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திறனும் ஆற்றலும் புலம்பெயர் தமிழர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எத்தனை துரோகங்களிலும் தடைகளிலும் அதை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டில் நாமிருக்கிறோம்.
தமிழீழ விடுதலை என்பது வெறும் கனவல்ல என்று உலகமும் சிங்களமும் ஒருநாளில் அறிந்து கொள்ளட்டும்.

தியாகங்களால் எம் மாவீரர்கள் விடுதலை பயணத்தை உச்சத்தில் வைத்தனர். எதையும் முடிக்கும் வல்லமை காட்டினர். தமிழரின் வீரம் பிறப்பிலென்று பறை சாற்றினர். காலங்காலமாய் எமது விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை எங்கள் மாவீரர்களே உடைத்து வெற்றி கொண்டனர். தியாகத்தின் எல்லையை தொட்டு நின்றனர்.அந்த வீரர்களின் தியாகத்துக்காய் இந்த வாரம் நாம் சிந்தும் கண்ணீரே நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சிறிய நன்றிக்கடன் என கொள்வோம்
நம் கோவில்களான கல்லறைகளை உடைத்து விடுவதால் எங்கள் மனங்களின் தொழுகைகளை நிறுத்த முடியாது சொந்த குருதி வடியும்போது சந்தோசம் வருமா எங்கிருந்தாவது? தமிழராக முன்பு மனிதனாக வேண்டும்.மனிதராவோம்.

கார்த்திகையில் வானம் கூட அழுது தொழும் எம் செல்வங்களை ..கார்த்திகைப் பூவும் பூத்து வணங்கிக்கொள்ளும் உலகத் தமிழர் ஒன்றிணைந்து நாமும் மாவீரர் புகள்பாடுவோம்.

பா வா ம் பி ற பா க ர ன்.

10:50 AM, Posted by sathiri, No Comment



ஆண்டு 15.03.1995 இடம் யாழ்குடாநாடு சங்கானைக்கிராமம்.அதிகாலை 5 மணி
..................................................................................................................................
தம்பிப்பிள்ளையர் கொட்டிலுக்கு முன்னால் இருந்த சாக்குக் கட்டிலில் சாரத்தாலை போத்தபடி இருமியபடி சுருண்டு படுத்திருந்தார்.கண்விழித்து பார்த்த நல்லம்மாவிற்கு விழங்கியது இண்டைக்கும் மனுசன் தொழிலுக்கு போகாது போலை கிடக்கு. இரண்டுநாள் எப்பிடியோ சமாளிச்சாச்சு இனி கஸ்ரம்தான் .நாசமாய்போற மனுசன் ஆசுப்பத்திரிக்கும் போகுதில்லை.இண்டைக்கு எப்பிடியும் கொண்டு போறதுதான். "மோகன் டேய் மோகன் எழும்படா. கொப்பர் இண்டைக்கும் தொழிலுக்கு போறமாதிரி இல்லை நீயாவது பெட்டியை கட்டிக்கொண்டு போட்டுவாடா. இல்லாட்டி இண்டைக்குபாடு பிச்சைதான்.

சும்மா கிடவணை நான் உந்த பெட்டி கட்டமாட்டன் சொல்லிப்போட்டன் நான் பள்ளிக்கூடம் போகவேணும்.சும்மாகிட எனக்கு நித்திரை வருது. மோகன் காலை சொறிந்துவிட்டு திரும்பவும் சுருண்டுகொண்டான்.
ஊகும்.வயித்துபாட்டுக்கே வழியைகாணேல்லை.இவர் படிச்சு கிழிச்சு பெரிய இஞ்சினியராகப்போறாராக்கும்.காஞ்ச வயித்தோடையே பள்ளிக்கு போப்போறாய்.மல்லன் மாதிரி வளந்ததுதான் மிச்சம் ஒரு சதத்துக்கு பிரயோசனம் இல்லை.இந்த மனுசன் உழைக்கிறதை குடிச்சுப்போடும்.ஏதோ என்ரை தம்பி தப்பித்தவறி வெளிநாட்டுக்கு போனதாலை அப்பப்ப அவன் போடுற பிச்சையை வைச்சு உங்களை கொண்டிழுக்கிறன்.அதுவும் இல்லாட்டி எப்பவே உங்களுக்கெல்லாம் சோத்திலை விசம்வைச்சிட்டு நானும் செத்திருப்பன். நல்லம்மா புறுபுறுத்தபடியே கேத்திலை எடுத்து தேய்க்கத் தொடங்கினாள்.


மோகனிற்கு நித்திரையை தொடர முடியவில்லை. உண்மைதான் ஜயா மூண்டுநாளாய் தொழிலுக்கு போகேல்லைத்தான்.அம்மா சின்ன சின்ன கூலி வேலையளிற்கு போறவா.மாமாவின்ரை உதவியோடை ஒரு மாதிரி அக்காவை கட்டிக்குடுத்தாச்சு.வீட்டிலை அடுத்தது நான்தான் பெரியாள்.பதினேழுவாயதாயிட்டுது.நாட்டு நிலைமையாலையும் ஒழுங்காயில்லாததாலை படிக்காததாலையும்.முதல்தரம் பத்தாம் வகுப்பு சோதினையை கோட்டை விட்டிட்டன்.இப்ப அடுத்த தரம் எடுக்கிறதுக்கு அப்பப்ப பள்ளிக்கூடம் போறன்.நானும் வேலை ஏதாவது செய்தால் குடும்பம் கொஞ்சம் நல்லா ஓடும்.தங்கச்சியவையாவது ஒழுங்காபடிப்பினம்.நானும் வெளிநாட்டுக்கு போயிட்டன் எண்டால் பிரச்சனை முடிஞ்சுது.சிந்தனைகளை முறித்துவிட்டு மெல்ல எழும்பி கேத்தில் கொதித்துக்கொண்டிருந்த அடுப்புக்கரையில் போய் குந்தினான்.

மவராசன் எழும்பிட்டார்.இண்டைக்கு தேத்தண்ணியாவது இருக்கு நாளைக்கு சுடுதண்ணிதான்.

சும்மா புறுபுறுக்காதையணை.நான் வேலைக்கு போறன்.ஆனால் ஜயா மாதிரி பெட்டியை கட்டி பிரயோசனம் இல்லை இப்ப மீன் விக்கிற விலையிலை 500 ருபாய்க்கு வாங்கியந்து வித்தால் 100 ருபாயும் லாபம் வராது.மிச்சம் நாறிப்போம்..மினக்கெட்டு சைக்கிள் உழக்கிறதுக்கும் பத்தாது.

ஓ................அப்ப என்ன வைர யாவாரம் செய்யப்போறியளோ??இருக்கிறதைவிட்டிட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதை தம்பி.

பறக்கிறதில்லை இதுவும் இருக்கிறதுதான்.நான் மண்ணெண்ணை வாங்கியந்து விக்கப்போறன்.கொஞ்சம் கயிற்றம்தான் ஆனா நல்ல லாபம் வரும்.

அதுக்கு உந்த வன்னி கின்னியெல்லாம் கடந்தல்லோ போகவேணும் உந்த பாதையள் எல்லாம் உனக்கு தெரியுமே.

அதெல்லாம் எனக்கு தெரியும் நீ எனக்கொரு ஜயாயிரம் ரூபாய் ஒழுங்குபண்ணித்தா.

ஆத்தை படுற பாட்டிலை குத்தியன் மொன்னிக்கழுத கதையாய் கிடக்கு நானே கஞ்சிக்கு வழியில்லைணெ்டு இருக்க ஜயாரத்துக்கு எங்கை போறது

ஏணேய் எனக்குத் தெரியும் நீ பதுக்கி வைச்சிருப்பாய் பயப்பிடாதை ஒரு கிழைமையிலை உன்ரை காசை திருப்பித் தந்திடுவன். தேதண்ணியை கெதியாய் பேடு.. ஜயாவை ஆசுப்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போட்டு வாறன்.காசை றெடிபண்ணு.கரித்துண்டென்றை எடுத்து கடித்து பல்லில் தேய்த்தபடி கிணத்தடிப்பக்கமாய் போனான்.
......................................................................................................................................................................................
ஆண்டு 15.03.1995 இடம் யாழ்குடாநாடு ஆறுகால்மடம் கிராமம். காலை 8 மணி.

ரகு பாடசாலைக்கு தயாராகியபடி தன்னுடைய 200 சி.சி மேர்டார்சைக்கிளை துடைத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது பாடசலை சீருடையில் ஒரு இளவயது பெண்ணை அழைத்தபடி அவளின் தந்தையார் ரகுவின் வீட்டின் அகன்ற இரும்புக் கதவில் தட்டினார் .அவர்களை கண்டதும் ஜயையோ...என்றபடி ரகு வீட்டின் உள்ளே ஓடிவிட்டான். ரகுவின் தந்தையார் தாமோதரம் பிள்ளை வெளியே வந்து பார்த்தால்.அவருக்கு தெரிந்தவர்தான் சுடலைக்கு பக்கத்தில் மரக்காலை வைத்திருக்கும் ரங்கன்.

என்ன ரங்கன் இந்தப்பக்கம்.

ரங்கன் கோபத்தில் கொதித்தவனாய் சத்மாய் .இஞ்சை பாருங்கோ ஊருக்குள்ளை இருக்கிறவர் தெரிஞ்சவர் எண்ட ஒரு மரியாதையிலைதான் தான் வீடு தேடி வந்தனான்.உங்கடை மகனை கட்டுப்படுத்தி வையுங்கோ இல்லாட்டி பெரிய பிரச்னையிலை வந்து முடியும் சொல்லிப்போட்டன்.


தாமேதரம் பிள்ளையருக்கு தன்ரை மகன் ஏதோவம்பிலை மாட்டிப்போட்டான் எண்டது மட்டும் புரிந்தது."கோபத்திலை கத்தாமல் விளக்கமா சொல்லன் அவன் கடைசிப்பெடி வீட்டிலை செல்லமாய் வளந்திட்டான் ஏதாவது சின்ன குளப்படி பண்ணியிருப்பான் சொன்னத்தானே தெரியும்.


ஓ உங்களை மாதிரி காசுக்காருக்கு இதுகள் சின்னக்குளப்படிமாதிரித்தான் தெரியும்.மகளை பின்னுக்கும் முன்னுக்கும் கலைச்சு திரியிறானாம். அண்டைக்கு கடிதம்வேறை குடுத்தவனாம்.அதை இவள் கிழிச்செறிஞ்சு போட்டாளாம்.இவளை கடத்தப்போறனெண்டு வெருட்டியிருக்கிறானாம். அதாலை இவள் வேறை பயத்திலை பள்ளிக்கூடம் போகமாட்டணென்டு சொல்லிப்போட்டாள்.இண்டைக்குத்தான் எனக்கு விசயம் தெரியும். உங்கடை மகனை கண்டிச்சு வையுங்கோ. இல்லாட்டி அடுத்ததா நான் காவல்துறையிட்டை போகவேண்டிவரும். இனியும் என்ரை பெட்டைக்கு பின்னாலை திரிஞ்சதெண்டு கேள்விப்பட்டன் அதுக்கு பிறகு நான் மனிசனாயிருக்கமாட்டன்.மரம் அரியிற வாளாலை இரண்டா அரிஞ்சு தாட்டுப்போடுவன் சொல்லிப்போட்டன். என்று கோபமாய் பொரிந்து விட்டு மகளையும் அழைத்துக்கொண்டு ரங்கன் போய்விட்டான்.


தாமோதரத்தாருக்கு தலை சுத்துவதுபோலை இருந்தது அக்கம் பக்கத்திலை ஆரும் கேட்டிருப்பினமே எண்டு மெல்ல றோட்டுக்கு வந்து எட்டிப்பாத்தார். எப்பவுமே வேலை வெட்டியில்லாமல் மடத்திலை குந்தியிருக்கும் கூட்டம் இவரின்ரை வீட்டையே பாத்துக்கொண்டிருந்தது.அவமானம் மதம் பிடித்த பெரிய யானையைப்போல அவரைத்துரத்தத் தொங்கியது இரும்புக்கதவை இழுத்துப் பூட்டியவர். முன்னால் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துவிட்டு அங்கு மல்லிகைச்செடிக்கு கொழுகொம்பாய் நட்டிருந்த பெரிய தடியை ஆட்டி இழுத்தெடுத்தபடி டேய்ரகு என்று கத்தினார்.

குசினிக்குள் மீனாச்சிக்கு பின்னால் பம்மிக்கொண்டு நிண்ட ரகுவை இழுத்தெடுத்து விளாசத்தொடங்கினார்." டேய் நாயே பளார்....உனக்கு செல்லம் கூடிப்போச்சு.பளார் .....எல்லாருமே செல்லம் தந்து தந்துதான் உன்னை கெடுத்துப்போட்டினம்.பளார்.... இவளிட்டை சொன்னாலும்.கேக்கமாட்டாள். பளார்.... ..அப்பவே சொன்னனான் பத்தாம் வகுப்பு படிக்கிற பெடியனுக்கு மோட்டச்சைக்கிள் வேண்டாமெண்டு .பளார்.... .அதுவும் அதுகளுக்கு போய் லவ்லெட்டர் குடுத்திரக்கிறாய். பளார்.....அதுகளார்..நாங்களார்..பளார்..... மானம் மரியாதையெல்லாம் போட்டுது..பளார்..பளார்..பளார்....கம்பு தும்பாய்போயிருந்தது. அடித்த அடி விலக்குப்பிடித்த மீனாச்சி மேலையும் பாதிவிழுந்தது.குசினியில் பாத்திரங்கள் சிதறிய சத்தமும் ரகுவின் அலறலும் நாலைந்து வீடுகளிற்கு கேட்டிருக்கும்.


தாமோதரத்தாருக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது ரகு பிறந்ததிலிருந்து ஒருநாளும் இப்படி அவனிற்கு அடித்தில்லை.எப்பவாவது காதிலை பிடிச்சு செல்லமாய் திருகியிருப்பார் அவ்வளவுதான்.அவனுடைய அம்மா மீனாச்சி சொல்லவே வேண்டாம்.ரகுவிற்கு மூக்கில் தூசிபோய் தும்மினாலே போதும் பதறிப்போய்விடுவார். ரகுவிற்கு மூத்தவர் அண்ணனும் அக்காவும் இங்கிலாந்தில் திருமணமாகி குடும்பமாய் வசிக்கிறார்கள்.இன்னொரு அண்ணன் கொலண்நாட்டில். பலவருட இடைவெளிக்கு பின்னர் பிறந்தவன்தான் ரகு.கடைக்குட்டி என்பதாலும். மூத்தவர்கள் வெளிநாட்டிற்கு போகும்போது இவன் சின்னவனாக இருந்ததாலும் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை.எனவேதான் அவன் கேட்டது எதற்கும் மறு பேச்சு கிடையாது உடைனையே கிடைத்துவிடும்.இப்பவும் தானக்கு திருமணம் தோவையெண்டு சொல்லியிருந்தால் வயதைக்கூட பாக்காமல்.சொந்தத்தில் யாரையாவது பாத்து கட்டிக்கொடுத்திருப்பார்கள் ஆனால் அவன் காதல் கடிதம் குடுத்தது அதுவும் மரக்காலைக்காரனின்ரை பெட்டைக்கு குடுத்ததுதான் தாமேதரத்தாருக்கு பிறசர் ஏத்தியது.


ரகு இன்னமும் குசினிக்குள் விக்கி விம்மிக்கொண்டிருந்தான். பாளாய்போன மனிசன் இந்தாளுக்கு விசர் கிசர் பிடிச்சிட்டுது போலை இப்பிடி என்ரை பிள்ளையை போட்டு அடிச்சுப்போட்டுது. என்ரை பிள்ளை வாட்டசாட்டமாய் வசதியாய் இருக்கிறானெண்டு அவள் பல்லைக்காட்டியிருப்பாள்.அதுவும் மோட்டச்சைக்கிள்ளை வேறை திரியிறான்.சும்மா விடுவாளைவையே. தகப்பன் காரன் கண்டதும் கதையை பிரட்டியிருப்பாளவை அவளவையளின்ரை பரம்பரையே ஆம்பிளையளை மயக்கிறதுதானே வேலை என்ரை கையிலை அம்பிடட்டும் அவளின்ரை.............................கிழிச்சு விடறன்.என்று திட்டியபடியே மீனாச்சி அவனது அடிகாயங்களை டெற்றோல் போட்டு பஞ்சினால் தடவிக்கொண்டிருந்தார்.


இவன் படிச்சு பட்டம் வாங்கினது போதும் முதல்வேலையா இவனை லண்டனுக்கு அனுப்பிற அலுவலை பாததிட்டு வாறன்.இவனை வெளியிலை போக விடாதை மோட்டச்சைக்கிள் இருந்தால்தானே ஊர் சுத்துவான் எங்கை அதுகின்ரை திறப்பு..எண்டபடி மோட்டச்சைக்கிள் திறப்பை தேடியெடுத்து தனது பொக்கற்றுக்குள் போட்டபடி பக்கதிலை இருந்த கொமினிக்கேசனிற்கு போய் மூண்டு பிள்ளையளின்ரை நம்பரையும் குடுத்து அப்பா நிக்கிறார் அவசரமாம் எண்டு சொல்லி விடுங்கோ.

முதலில் கொலண்டில் இருந்த மகனின் தொலைபேசி அழைப்பு வந்தது.தாமேதரத்தார் மளமளவெண்டு தொடங்கியவர் மற்றயவையோடையும் கதைச்சு உடனடியாய் அவனை எடுக்கிற வழியை பாருங்கோ எண்டு ஒரே மூச்சிலை சொல்லி முடிச்சார்.
அவனையும் கூப்பிட்டு அம்மாக்கு நானும் உங்களுக்கு அக்காவும் எப்பவோ ஸ்பொன்சருக்கு குடுக்கிறதுக்கு கதைச்சனாங்கள்.நீங்கள்தான் அவன் இந்த வருசம் ஓ எல் எடுக்கிறான் முடியட்டும் எண்டு இழுத்தனியள். சரி அண்ணை அக்காவோடை கதைச்சு உடனடியா அவனை கூப்பிடுற ஒழுங்கை செய்யிறன்.அதோடை உங்கடை ஸ்பொன்சர் அலுவல்களையும் பாக்கிறன் என்று கொலண்டில் இருக்கும் மகனின் பதிலோடு வீட்டிற்கு போன போது ரகுவை காணவில்லை.
எங்கையடி போட்டான் அதுக்கிடையிலை.


நீங்கள் மாட்டுக்கு அடிச்சமாதிரி அடிச்சுப்போட்டியள்.பாவம் கடையிலைபோய் சோடா குடிச்சிட்டு வாறனெண்டு காசு வாங்கிக்கொண்டு போனவன் இப்ப வந்திடுவான் மீனாச்சி ஆறுதல் சொன்னார்.ரகு திரும்ப வரவில்லை.தமோதரத்தாருக்கும் மீனாச்சிக்கும் பயம்பிடிக்கத்தொடங்கியது. சிலவேளை அந்தப் பெட்டையோடை ஏதும் லவ் இருந்திருக்குமோ?அதை கூட்டிக்கொண்டு......எங்கையாவது போய் தற்கொலை.................இப்படி பல சிந்தனைகள் ஓடியபடியே ஒரு நாள் போய்விட்டது.மறுநான் ரகுவின் நண்பர்கள் வீடுகளிலெல்லாம் போய் விசாரித்தனர். அதோடை மரக்காலை பக்கமும் போய் பார்த்தார்கள்.எந்த செய்தியும் கிடைக்கவில்லை.எதுக்கும் காவல் துறையிலை போய் புகார் குடுக்கலாமெண்டு யோசித்தாலும் தாமோதரத்தாருக்கு கெளரவ குறைச்சாயிருந்தது.சிலநேரம் இயக்கத்துக்கு போயிருக்கலாமெண்டு மீனாச்சிக்கு பயமாயும் இருந்தது.இரண்டு நாளாகிவிட்டது காவல்துறைக்கு போறதைத் தவிர வேறை வழியில்லை காவல் துறையில் போய் புகார் குடுத்திருந்தனர்.சிலநேரம் இயக்கத்திற்கு போயிருந்தால் பயிற்சிக்கு போனவர்களின் பெயர் விபரம் கோண்டாவில் அல்லது எழுது மட்டுவாள் முகாமில் இருக்கும் அங்கு போய் சரி பார்க்கச்சொல்லியனுப்பி விட்டிருந்தனர்.மீனாச்சி எல்லாக் கோயிலுக்கும் நேர்த்தி வைத்தபடி கோண்டாவில் முகாமில் போய் விசாரித்தார்கள்.ரகு இயக்கத்திற்கு போய்விட்டான்..................
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

09.07.1995: ஆண்டு சனிக்கிழைமை.
....................................................................................................................................................................................
சந்திரிக்கா போட்ட மோசமான பொருளாதாரத்தடை மோகனை மண்ணெண்ணெய் வியாபாரத்தில் வேகமாக முன்னேற்றியிருந்தது சைக்கிளை விட்டு 90 சி.சி றீசைக்கிள் மோட்டார் சைக்கிளிற்கு மாறியிருந்தான். தானும் அடுத்ததொரு மண்ணெண்ணை மகேஸ்வரனாகவேண்டும் ஒரு கல்வீடு கட்டவேணும்.என்பதுதான் அவனுடைய கனவு. அப்படி மகேஸ்வரன் றேஞ்சிற்கு வந்தாலும் எலெக்சனிலை நிக்கிறேல்லையெண்டு முடிவெடுத்திருந்தான். ஊரில் பெற்றோல் எண்டாலே என்னவெண்டு சனத்திற்கு மறந்து போயிருந்தது எல்லாமே மண்ணெண்ணெய்தான்.பெற்றோலிற்கு மாற்றீடாக ஆராய்ச்சிகள் எல்லாம் நடந்தது சிலர் கசிப்பில் வாகனம் ஓட முயற்சிகளும் நடந்துகொண்டிருந்தது.மண்ணெண்ணெய்க்கும் செஞ்சிலுவை கப்பலையே காவலிருக்கவேண்டிய நிலைமை .இந்த நேரத்தில்தான் யாம்போத்தல் பஞ்சு விளக்கு பிரபல்யமானது.மற்றும்படி யாராவது சிரமப்பட்டு வன்னிக்குப்போய் வவுனியாவிற்கு உள்ளே போய் அல்லது தரகுகளிடம் காசு கொடுத்து மண்ணெண்ணையை கொண்டுவந்து விற்பார்கள்.அதைத்தான் மேகன் செய்துகொண்டிருந்தான்.அப்பொழுதுதான் அதுவரை கேள்விப்பட்டேயிருக்காத ஊர்களான ஊரியான் கொம்படி கிளாலி என்பன உலகத்திற்கே தெரியவந்தது.
ஊர் நிலைமையும் மோசமாகிக்கொண்டிருந்தது அம்மான் ரத்வத்தை யாழ்ப்பாணத்தை பிடிச்சு புலியளை ஒழிக்கிறதெண்டு சபமெடுத்திருந்தார்.

வழைமை போல இரண்டு பிளாஸ்ரிக் மண்ணெண்ணெய் கலன்களை கட்டிக்கொண்டு அவனது மோட்டச்சைக்கிளையும் மண்ணெண்ணையிலையே ஓடியபடி வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தான்..ஆமி முன்னேறி பாஞ்சதும் பிறகு புலிபாய்ஞ்சதும் நடக்கேக்குள்ளை வன்னியலை வந்துகொண்டிருந்த மோகன் பளைப்பக்கமாய் இரண்டுநாளாய் பதுங்கியிருந்திட்டு ஊருக்கு புறப்பட்டான் .அண்டைக்கும் வலிகாமம் பக்கம் அளவெட்டியிலை இருந்த ஆமி அடிச்ச செல்லுகள் பரவலாய் விழத்தொடங்கியிருந்தது.எந்தநேரமும் பெரிய சண்டைவரலாமெண்டு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் புலியள் இருக்கினம்தானே பிறகென்ன கவலையெண்டு நினைச்சபடி மோகனின் மோட்டசைக்கிள் புகையை கக்கியபடி போய்க்கொண்டிருந்தது .திடீரெண்டு சங்கானை மெயின் வீதியிலையும் ஒரு கெலி அடிக்கத்தொங்கியது.மோகனிற்கு தனக்கு வெடி விழுந்தாலும் பரவாயில்லை மண்ணெண்ணை கானிலை விழக்கூடாதெண்ட பயம்.குறுக்கு பாதையாலை போகலாமெண்டு நவாலி றோட்டிலை மோட்டச்சைக்கிளை இறக்கினான்.

ஒரு பனங்கூடல் அதுக்கு பிறகு சின்ன வயல் வெட்டை அதைதாண்டிட்டால் முருகன் கோயில் சேச்சடி வரும் பிறகு அங்காலை குடிமனையள் போய்சேந்திடலாமென நினைச்சவன் அந்தப்பக்கமும் கெலிசத்தம் வந்தது.நாசமறுப்பார் இண்டைக்கு என்ரை மண்ணெண்ணைக்கு அழிவு வைக்கமால் விடமாட்டாங்கள் போலை கிடக்கு எண்டு. நினைத்தபடி பனங்கூடலுக்குள் பதுங்கினான்.
அங்கு உருமறைப்பு செய்திருந்த இயக்காரரரின்ரை 50 கலிபர் ஒண்டு சடசடத்தது.கெலிக்கு வால்லை வெடிவிழுந்திருக்வேணும் புகைஞ்சபடி ஒரு பக்க செட்டை பிஞ்ச தும்பி மாதிரி சாய்வா பறந்தபடி காரைநகர் பக்கமாய் போனது .போக வெளிக்கிட்ட மேகனை இயக்கபெடியள் மறிச்சிட்டினம்.ஒரு கொஞ்ச நேரத்திலை திடீரெண்டு ஒரு புக்காரா இயக்கத்தின்ரை 50 கலிபர் சடசடத்ததுதான்.ஆனால் பெரிய வெடிச்சத்தங்கள் ஊரே அதிர்ந்தது.மேகன் காதைப்பொத்தியபடி குப்புற படுத்திருந்தான்.பலநுறுபேரின் அலறல் சத்தம் பொத்திய அவனது கைகளையும் ஊடுருவி காதில் புகுந்துகொண்டது. சேச்சுக்கு (சென் பீற்றஸ் தேவாலயம்)அடிச்சிட்டாங்கள்.மோகன் மண்ணெண்ணை கானை கழட்டி பத்திரமாய் காவேலையால் முடிவிட்டு காயம்பட்டவர்களை மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு ஏத்தி இறக்கினான்.150 பேரிற்கு மேல் இறந்து போயிருந்தனர்.

Photobucket

22.07.1995:ம் ஆண்டு
.............................................................................................................................................................................................
முன்னேறி பாய்ச்சல்லை இடம்பெயர்ந்தவையள் திரும்பவும் வீடுகளிற்கு வந்துகொண்டிருந்தார்கள்.இயக்கமும் 100 கோடி ரூபாய் தேவையெண்டு தேசிய பாதுகாப்பு நிதியெண்டு ஒரு திட்டத்தை தொடங்கி வீடு வீடாய் காசு சேர்க்கத் தொடங்கியிருந்தவை வெளிநாட்டுக்காரருக்கு ஒரு லச்சம் அரக்காது.மோகனிட்டையும் 25ஆயிரம் கேட்டு மோகன் கெஞ்சி கூத்தாடி வீட்டு நிலைமை விளங்கப்படுத்தி 15ஆயிரமாய் குறைச்சிருந்தான். அந்தக் காசும் ஒரு கிழைமைக்குள்ளை குடுக்கவேணும் அதோடை இரவுக்கு பொன்னாலைக்கு பங்கரடிக்க வரச்சொல்லி இயக்கம் கேட்டிருந்தது கட்டாயம் போகவேணும் என நினைச்சபடியே மோகனும் சங்கானை சந்தியிலை வழைமை போல பின்னேரமாய் ஒரு மேசையை போட்டு மண்ணெண்ணை யாவாரத்தை ஆரம்பித்திருந்தான்.

சுந்தரத்தார் நல்ல வெறியிலை கொஞ்சம் தள்ளாடியபடி பிளாஸ்ரிக் கானோடை வந்தவர் டேய் எனக்கு 5 லிற்றர் ஊத்து எண்டார்.

ஜயா ஆழுக்கு ஒரு லீற்றர்தான் இருக்கிறதை எல்லாருக்கும் பகிரவேணும்.அதுவும் முக்கியமா படிக்கிற பிள்ளையளிற்கு.உங்களுக்கெதுக்கு 5 லிற்றர்.

காசை எடுத்து எறிஞ்சவர்"டேய் உனகென்ன காசுதானே வேணும் இந்தா.. ....ஊத்து நான் தோட்டம் செய்யப்போறன் ஊத்து.

பிள்ளையளும் மனிசியும் பிரான்சிலை பேசாமல் நீங்களும் போய் சேருறதை விட்டிட்டு தோட்டம் செய்யப் போறாராம்.இந்தாங்கோ ஒரு லீற்றர்தான் விரும்பினால் வாங்குங்கோ இல்லாட்டி போங்கோ.

முறைத்தபடி ஒரு லீற்றர் மண்ணெண்ணையுடன் ..உந்த அகதி நாயளிற்கு என்ன செய்யிறன் பாரெண்டு புசத்தியபடி போய்க்கொண்டிருந்தார்.

அகதிகளாய் இடம்பெயர்ந்து வந்திருந்தவர்கள் அவரின்ரை வீட்டு கிணத்திலை தண்ணி அள்ளினம் எண்ட கோபத்திலை கிணத்துக்கை மண்ணெண்ணையை ஊத்திப்போட்டாராமெண்டு காவல்துறை சுந்தரத்தாரை பிடிச்சுக்கொண்டு போட்டினமாம் எண்டு அடுத்தநாள் கேள்விப்பட்டான்.சனம் மண்ணெண்ணெய்க்கு படுற பாட்டிலை விசர் மனுசன் கிணத்துக்கை ஊத்திட்டுதாம்.நல்ல மிதி குடுக்கவேணும்.என்று மனதில் நினைத்தபடி. அடுத்தநாள் இயக்கத்திற்கு குடுக்கவேண்டி 15 ஆயிரத்தை எண்ணியெடுத்து கடதாசில் சுற்றி தலைமாட்டில் வைத்தபடிபடுத்துக்கொண்டான்.
மறுநாள் காலை செல் சத்தங்களுடன் விடிந்தது சிறிது நேரத்திற்கு பின்னர் மக்களை அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுமாறு இயக்கம் அறித்துக்கொண்டு திரிந்தார்கள்.ஆமி வந்தாலும் இயக்கம் திரும்பவும் பிடிக்கும்தானே என்கிற நினைப்பில் மோகனும் தன்னிடமிருந்த மண்ணெண்ணையை பத்திரமாக ஒரிடத்தில் ஒழித்து வைத்துவிட்டு இருந்த பணத்தையும் ஆளிற்கொரு மாற்றுத்துணிகளை மட்டும் எடுத்தபடி குடும்பமாக வெளியேறினார்கள். போற வழியிலையிலையே அரசியல் துறை அலுவலகத்திலை அவைக்கு குடுக்கவேண்டிய காசையும் குடுத்திட்டு போகவேணும் என மனதில் நினைத்தபடி "எணோய் நான் ஜயாவையும் கடைசியையும் ஏத்திக்கொண்டு போறன் நீ மற்றவளோடை கோப்பாய் பக்கமாய் வாந்துசேர் " என்றுவிட்டு ""முன்னேறிப் பாய்வதென்ன அம்மா நீ பின்னாடி ஓடுவதேன் சும்மா என்று சிட்டுவின் பாடலை முணு முணுத்தபடி தன்னுடைய 90 இயக்கினான்.தம்பிப் பிள்ளையரிற்கு இருமல் கூடிக்கொண்டே போனது. சூரியக்கதிரின் வெப்பமும் அதிகமாகிக்கொண்டே போனது.
......................................................................................................................................................................................
கோப்பாய் ..சாவகச்சேரி ..கிளாலி யெண்டு மல்லாவி வரை வந்து சேர்ந்தாயிற்று எங்கும் மக்கள் வெள்ளம் யார் எங்கே தங்குவதெண்டு தெரியவில்லை..வன்னியில் சொந்தங்கள் இருந்தவர்கள் பாடு ஓரளவு பரவாயில்லை .மற்றும்படி மரங்களின் கீழும் தரப்பாள்களும்.தடியில் கட்டிய சேலைகளும்தான் இருப்பிடமாகியது. தங்களின் நிலங்களையெல்லாம் மனிதர்கள் பிடித்துவிட்டார்கள் என்கிற கோபத்தில் பாம்புகளும் கலைத்து கலைத்து கொத்தியது. எங்காவது மிருகங்களை தேடியலைந்த நுளம்புகளிற்கு மனிதஇரத்தம் விருந்தாகி மலேரியாயும் வயிற்றுப்போக்கும்.தேசிய வியாதியாய்போனது.

ஆறேழு லச்சம் சனத்தை திடீரெண்டு வெளியேறுங்கோ எண்டு சொல்லிப் போட்டாங்கள்.எங்கை போறது?? எங்கை தங்கிறது?? எத்தினை நாளைக்கு தங்கிறது எண்டு ஒரு இழவும் தெரியேல்லை. போற இடத்திலை சாப்பாடு தண்ணியாவது கிடைக்குமே எண்டும் தெரியாது. மூண்டு பேர் வெளிநாட்டிலை எண்டு சொல்லி மூண்டுலச்சம் காசு மட்டும் வாங்கிப் போட்டு இப்பிடி வீடு காணியெல்லாம் விட்டு அனாதையாய் நடக்கவைச்சிட்டாங்களே என்று புலம்பிய படியே .கொஞ்சம் .காசு.. நகை காணி உறுதி ..எல்லாத்தையும் ஒரு துவாயில் போட்டு சுருட்டி இடுப்போடு சேர்த்துக்கட்டியபடி மீனாச்சியும் தாமோதரத்தாருக்கு பின்னலை ஓடிக்கொண்டிருந்தாள்..


கோண்டாவிலில் இருந்து மகனைத்தேடத்தொடங்கிய மீனாச்சி வன்னிக்குள் வந்ததுதம் தேடலை தொடர்ந்துகொண்டேயிருந்தார். அவரின்ரை சொந்தக்கார பெடியனொருத்தன் இயக்கத்திலை அரசியல் பிரிவிலை பொறுப்பிலை இருந்தவன் .இயக்கப்பெயர் பொழிலன் அவனைத் தேடிப்பிடித்து விசயத்தை சொன்னவர். அவனை ஒருதரம் பாத்து கதைச்சால் மட்டும் போதும் எங்கையிருக்கிறாணெண்டு சொல்லு என்று அழுது புலம்பினார். மீனாச்சியின் அழப்பறை தாங்காமல் அவனும் எல்லா இடமும் தவகல் அனுப்பி ரகுவை கண்டு பிடித்தவன்... அம்மா ஆள் பயிற்சி முகாமிலை இருக்கு இப்ப ஒண்டும் செய்யேலாது பொறுத்தனீங்கள் இன்னும் ஒரு மாதம் பொறுங்கோ பயிற்சி முடிஞ்சு வந்ததும் பாக்கலாம்" மீனாச்சி கொஞ்சம் ஆறுதலடைந்தாலும் அடிக்கடி அரசில் பிரிவு முகாமிற்கு போய் பொழிலனை நச்சரித்தபடியேதான் இருந்தாள்.

ரகுவிற்கு பயிற்சிக்கு போனதிற்கு பிறகுதான் ஏனடா வந்தம் எண்டிருந்திச்சிது. நேரத்துக்கு நேரம் வித விதமான சாப்பாடு கைநிறைய காசு மோட்டார் சைக்கிளில் சினேகிதங்களோடை ஜாலியாய் ஊர் சுத்தித் திரிந்தவனிற்கு ...பயிற்சி முகாமில் ஒவ்வொருநாளும் ஒரேசாப்பாடு கல்லு மண் கடிபடும் . அவிச்ச கடலைக்குள்ளை சிலநேரம் பூச்சி புளுவும் அம்பிடும் . கொட்டில்லை மணல்தரையிலை படுக்கை... சிலநேரம் பங்கர் .நுளம்பு இலவச இணைப்பு.எல்லாத்துக்கும் மேலை காலங்காத்தாலை பயிற்சி தொடங்கிறதுக்கு அடிக்கிய விசில் சத்தத்தை கேக்க உயிர் போறமாதிரி இருக்கும். தப்பியோடுவமா எண்டு சில நேரம் யோசிச்சிருக்கிறான். ஆனால் பயிற்சி முகாம் தொடங்கி ஒரு கிழைமையிலை தப்பியோடின ஒருத்தனை திரும்ப பிடிச்சுக்கொண்டுவந்து எல்லாருக்கும் முன்னாலை அடிச்ச அடியை பாத்த ரகுவுக்கு வயித்தை கலக்கியது. ஓடுற யோசினையை கைவிட்டவன் அதுமட்டுமல்ல நாள் செல்லச்செல்ல பயிற்சியும் பழகிப்போனது.ஒருமாதிரி பல்லைக்கடித்படி பயிற்சியை முடித்துவிட்டான்.

பயிற்சி முடிந்து வேயொரு முகாமிற்கு அனுப்பபட்டிருந்த ரகுவை பொழிலனே நேரடியாக தேடிவந்து அழைத்துப்போய் தன்னுடைய அரசியல் பிரிவு முகாமில் வைத்து மீனாச்சியிடம் ஒப்படைத்துவிட்டு
அக்கா ஆளை கூட்டிக்கொண்டு போங்கோ நான் அவனின்ரை பொறுப்பாளரோடை கதைச்சு மூண்டுநாள் லீவு கேட்டு கூட்டியந்தனான்..தேடிவாறஅளவிலை வைக்காமல் மூண்டாம் நாள் ஆளை கொண்டுவந்து இஞ்சை விடவேணும் பிறகு எனக்கு பிரச்சனையை தரக்கூடாது... என்று பொழிலன் கண்டிப்பாக சொல்லியனுப்பி விட்டிருந்தான்.

என்ன தளுதளு வெண்டிருந்த என்ரை பிள்ளை இப்பிடி காஞ்சு கறுத்துப்போய் வருத்தக்காரன் மாதிரி வந்து நிக்கிது ..இதெல்லாம் உனக்குத் தேவையோடா என்று புலம்பியபடியே மீனாச்சி ரகுவை கட்டிப்பிடித்து அழுதபடியே அழைத்து போனார்.
அந்தக் கஸ்ரமான சூழ்நிலையிலும் மீனாச்சி காசை விட்டெறிந்து ரகுவிற்கு பிடிச்சமாதிரி விதம் விதமாய் சமையல் சாப்பாடு தடல்புடலாய் நடந்தது .கண்மூடி முழித்தது போலை மூண்டுநாள் ஓடிவிட்டது. ரகு திரும்ப முகாமிற்கு போகவேணும்.
தம்பி நான் அடிச்சுப்போட்டன் எண்டுதானே இயக்கத்துக்கு ஓடினனி.. இனி அடிக்கமாட்டனடா திரும்பி வாடா தளுதளுத்தார் தமோதரத்தார்.

எடேய் உன்ரை காம்ப் எங்கையிருக்கெண்டு காட்டு நான் வந்து உன்ரை பொறுப்பாளரோடை கதைச்சு கையிலை கால்லை விழுந்தாவது உன்னை கூட்டிக்கொண்டு வாறன் சொல்லடா என்றபடி ரகுவைக்கட்டிப்பிடித்து அழுதார் மீனாச்சி

ரகுவுக்கும் அழுகையாய் வந்தது ""அங்கையெல்லாம் ஒருத்தரும் வரேலாது எங்கடை காம்ப் வன்னிவிளாங்குளத்திலை இருந்து உள்ளுக்கை காட்டுக்கை போகவேணும்.கொஞ்நாள் போகட்டும் நானே பொறுப்பாளரோடை கதைச்சிட்டு வாறன்.""
அரசியல் முகாம்வரை தாமோதரத்தாரும் மீனாச்சியும் கொண்டுபோய் ரகுவை விட்டுவிட்டார்கள்.சில மாதங்கள் கடந்தது தாமோதரத்தாருக்கு இலண்டன் ஸ்பொன்சர் சரிவந்து அவர் மகளிடம் போய்விட்டார். மீனாச்சியோ ரகுவை விட்டு வரமாட்டன் எண்டு அடம் பிடித்து நிண்டதாலை அவரது ஸ்பொன்சர் இழுபட்டது. தாமோதரத்தார் லண்டன் போய் சேந்ததும் மீனாச்சி அதிரடி திட்டத்தில் குதித்தார் .பொழிலனின்ரை அரசியல் முகாமிற்கு போனவர் ரகுவை கொண்டுவாங்கோ இல்லாட்டி அன்னம் தண்ணி இல்லாமல் இதிலையே சாகப்போறனெண்டு முகாமுக்கு முன்னாலை குந்திவிட்டார்.
மனிசி கொஞ்சநேரம் குந்தியிருந்திட்டு பேசாமல் போயிடும் எண்டுதான் பொழிலன் நினைத்தான்.ஆனால் மனிசி அங்கையே படுத்திட்டுது.ஒரு நாள் போயிட்டுது மனிசியை விடுப்புப் பாக்கிற சனமும் சமாதானப்படுத்தி வீட்டை கூட்டிக்கொண்டு போறதுக்கு சொந்தபந்தங்களும் முகாமுக்கு முன்னாலை குவியத் தொங்கிட்டினம். பொழிலனிற்கு தர்மசங்கமாய் போகவே ரகுவின்ரை முகாம் பொறுப்பாளரோடை வோக்கில் தொடர்புகொண்டு விசயத்தை சொன்னான்.

முகாம் பொறுப்பாளர் ரகுவை கூப்பிட்டு
உன்ரை அம்மா பொழிலன்ரை காம்ப் வாசல்லை ஒரே பிரச்சனையாம் இந்தா அவாவோடை கதைச்சு சமாதானப்படுத்தி அனுப்பிவிடு இந்தா வோக்கியிலை கதைச்சுப்பார் இல்லாட்டி நேரை போய் கதைக்கப்போறியா ??நேரிலை போய்த்தான் கதைக்கவேணுமெண்டால் நானும் கூடவாறன். வோக்கியை நீட்டினான்.

இல்லையண்ணை ................

என்ன வோக்கிலை சொன்னால் கேக்கமாட்டாவே சரி வெளிக்கிடு நேரிலை போய் கதைச்சிட்டு வலருவம்.

அதுவுகும் இல்லை.....

அப்ப என்ன செய்யப்போறாய்.??

அம்மா என்ன சொன்னாலும் கேக்கமாட்டா....................

ம்........

நான் முதல் வீட்டை போட்டு வரேக்குள்ளையே சொல்லித்தான் விட்டவா

என்வெண்டு???

ரகுவிற்கு நாக்கு வரண்டது மெண்டு விழுங்கியவனாய்.."கெதியாய் இயக்கதை விட்டிட்டு வரச்சொன்னவா.....

அதுக்கு?????

எழுதித் தந்திட்டு போகலாமெண்டு................................

அங்கிருந்த மேசையில் ஓங்கி கையால் அடித்த பொறுப்பாளர்." என்னடா விழையாடுறீங்களா?? நினைச்ச உடனை வாறதுக்கும் விருப்பமில்லாட்டில் போறதுக்கும் நாங்கள் என்ன சத்திரமா நடத்திறம்.??ஒருதனை எடுத்து பயிற்சி குடுத்து வெளியாலை கொண்டு வாறதுக்கு எவ்வளவு கஸ்ரப் படுறம் ..எவ்வளவு செலவெண்டு தெரியுமோ??

வேணுமெண்டால்கேக்கிற காசை அம்மாட்டை காசு வாங்கி தாறன்..நான் போப்போறன்.

பொறுப்பாளரின் கை ரகுவின் கன்னத்தில் இறங்கியது." கழட்டடா குப்பியை நீ நினைச்சமாதிரியெல்லாம் போக ஏலாது .இனி நீ ஆயுதத்தை கையாலை தொடக்கூடாது நான் மேலிடத்திலை கதைச்சுப்போட்டுத்தான் முடிவு சொல்லுவன்.எனக்கு முன்னாலை நிக்காதை போ எண்டு கத்தினான்.

ரகு குப்பியை கழட்டி பொறுப்பாளரிடம் குடுத்துவிட்டு கன்னத்தை தடவி அழுதபடி போனான். முகாமிலிருந்த மற்றையவர்கள் கிண்டலடிக்கத் தொடங்கினார்கள்.

ரகு இயக்கத்தை விட்டு போவதாக எழுதிக் குடுத்ததன் பின்னர் ஆறு மாதங்கள் தண்டனைக்காலமாக அறிவிக்கப்பட்டு பயிற்சி முகாமிற்கு அனுப்பப்பட்டான்.ஆறு மாத காலமும் பயிற்சி முகாமில் சமையல் செய்வது.முகாமை துப்பரவாக்குவதுதான் அவனது வேலை.அங்கையும் அவனிற்கு கிண்டல்கள் தெடரத்தான் செய்தது. ஆறுமாத காலத்தை முடித்து வீட்டிற்கு போய்விட்டான். மீனாச்சிக்கு இப்பதான் பெரியநிம்மதி. ஆனால் அடுத்த பிரச்சனை இயக்கத்தின்ரை பாஸ் முறையாலை இரண்டு பேரும் ஒரே நேரத்திலை வன்னியை விட்டு வெளியாலை பேகேலாத நிலைமை. என்ன செய்யலாமெண்டு மண்டையை போட்டுக் குளப்பிக்கொண்டிருந்வளிற்கு திடீரெண்டு வசந்தியின் நினைப்பு வந்தது.
வசந்தி மீனாச்சியின்ரை பெறாமகள் முறை .யாழ்ப்பாணத்திலை காதலிச்சு ஒரு பெடியனோடை ஓப்போய் பிரச்சனையெல்லாம் நடந்தது.சாதி மாறி காதலிச்ச பிரச்சனையெண்டபடியாலை தமிழீழ காவல்துறை தலையிட்டு அவைதான் கலியாணமும் கட்டி வைச்சவை. அதுக்குப்பிறகு அவளோடை மீனாச்சி கதைக்கிறேல்லை.இடம் பெயந்து வந்து இப்ப இஞ்சைதான் பக்கதிலை எங்கையே கொட்டில் போட்டு இருக்கினமாம். கையிலை குழந்தோடை நிவாரணம் வாங்கிக் கொண்டு போகேக்குள்ளை அவளை மீனாச்சி பாத்திருக்கிறா.முதல்வேலையா வசந்தியை தேடிப்பிடிக்கவேணும்.
வசந்தியை தேடிப்பிடிச்ச மீனாச்சி " எடியேய் உன்னை அண்டைக்கு றோட்டிலை கண்டனான் நீ சரியாய் கஸ்ரப் படுறியாம் எண்டு கேள்விப்பட்டன்.என்னதான் பிரச்சனையெண்டாலும் ஒருத்தருக்கு கஸ்ரம் எண்டால் சொந்த இரத்தம் துடிக்குமல்லோ. அதுதான் உன்னைத் தேடித்திரிஞ்சனான்.இந்தாடி பிடியடி" எண்டு பத்தாயிரம் ரூபாயை வசத்தியின் கைகளில் திணித்தார். வசந்தியும் கண்கலங்கினாள்.

அடுத்தடுத்து சிலநாட்கள் வசந்தியை சந்தித்து கதைச்ச மீனச்சி ஒருநாள் மெதுவாய் விசயத்தை அவிழ்த்தார். " எடியே உன்னட்டை சொன்னால் என்ன... எனக்கும் இப்ப ஏலாது அடிக்கடி நெஞ்சுவலி வருகிது இஞ்சை எல்லா டாக்குத்தர் மாரிட்டையும் காட்டிப்போட்டன். கொழும்புக்கு போகச்சொல்லிப் போட்டாங்கள்.நான் தனியா என்னெண்டு போறது இவன் ரகுவையும் கூட்டிக்கொண்டு போனால்தானே எனக்கு உதவியாயிருக்கும். ஆனால் இவங்கள் குறுக்காலை போவார் ஒராழுக்கு அதுவும் எனக்கு மட்டும்தானாம் பாஸ் தருவாங்கள். அப்பதான் உன்ரை நினைப்பு வந்தது. நான் கேட்டால் நீ மாட்டன் எண்டே சொல்லப் போறாய். நீ பிணை நிண்டியெண்டால் நான் போய் வருதத்தை மாத்திப் போட்டு வந்திடுவன். அதுவும் நீ சும்மா பிணை நிக்கவேண்டாம். நீயும் பாவம்தானே பிள்ளைகுட்டிக்காரி உனக்கு 50 ஆயிரம் தாறன். ஒண்டும் அவசரமில்லை யோசிச்சு உன்ரை மனிசனிட்டையும் கேட்டு சொல்லு. ஆனால் கட்டாயம் திரும்வந்திடுவன் பயப்பிடத் தேவையில்லை. ஏதோ நான் வருத்தத்திலை வன்னிக்கை சாகிறதோ இல்லை கொழும்பு போறதோ எண்டிறது உன்ரை கையிலைதான் இருக்கு.

வசந்தியும் யோசித்தாள் இருக்கிற கஸ்ரத்திற்கு ஜம்பதாயிரம் ரூபாய் கிடைச்சால் எவ்வளவு பெரிய உதவி அதே நேரம் வீட்டுக்காரர் எல்லாருமே வெறுத்து ஒதுக்கி இருக்கேக்குள்ளை மீனாச்சி பெரியம்மாதான் தேடிவந்து உதவினவா. வருத்தம் எண்டு தானே உதவி கேக்கிறா.பாவம் இந்த உதவிகூட செய்யாட்டில் மனிசரில்லை.

மீனாச்சியும்.வசந்தியும் புலிகளின் பாஸ் அலுவலகம் நோக்கி நடந்தனர்.
.........................................................................................................................................................................
12.01.1997 ம் ஆண்டு பாரிஸ்

மோகன் கேஸ் எழுதிறவருக்கு முன்னாலை பயபக்தியாய் அமர்ந்திருந்தான்

ஒரு வெள்ளைப் பேப்பரையும் பேனையையும் எடுத்தவர்
தம்பி உம்மடை முழுப்போர் குடும்ப விபரத்தை சொல்லும் என்றபடி எழுதத் தொடங்கினார்.

என்ரை பேர் தம்பிப் பிள்ளை மோகன் குடும்பத்திலை நான் இரண்டாவது மூத்த அக்க ஒராள் கட்டிட்டா அவாக்கு இரண்டு பிள்ளையள். எனக்குப்பின்னாலை இரண்டு தங்கச்சியள்

அப்பா அம்மா??

ஜயா இல்லை மோசம்போட்டார் ஒரு தங்கச்சி இயக்கத்துக்கு போட்டாள் அம்மாவும் கடைசியும்தான் வன்னிக்கை இருக்கினம்.

கேஸ் எழுதிறவனின்ரை கண்ணிலை ஆயிரம் வாற் பிரகாசம் மின்னியது. பேப்பரில் எனது தந்தை இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். என்று எழுதிஅதை சுத்தி பேனையாலை ஒரு வட்டம் போட்டார்.

அவர் என்ன எழுதுகிறார் என மெதுவாக எட்டிப்பார்த்த மேகன் எட உங்கடை ஜயாவும் ஆமி சுட்டு மோசம் போட்டாரே என்றான்

தம்பி நான் என்ரை கேஸ் எழுதேல்லை உமக்குத்தான் கேஸ் எழுதிறன் உம்மடை அப்பாவைத்தான் ஆமி சுட்டுகொண்டது.

ஜயோ அண்ணை என்ரை ஜயாவை ஆமி சுடேல்லை ஜயா ஒரே கசிப்படி அதோடை இடைக்கிடை அம்மாக்கும் அடி. ஒருநாள் நெஞ்சை பொத்திக்கொண்டு படுத்திருந்தார். பக்கத்திலை சங்கானை ஆஸ்பத்திரிக்கு நான் தான் கொண்டு போனனான். குளிசை தந்திச்சினம்அவை சொல்லிச்சினம் ஆளுக்கு கான்சர் போலை கிடக்கு அனேகமா ஈரல் பெரிஞ்சிருக்கவேணும் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்கோ எண்டிச்சினம். பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போனம். கண்போம்.. ஆளுக்கு ஈரல் பொரிஞ்சுதான் போச்சுது கான்சர் உடைனை மகறகமவுக்கு கொண்டு போங்கோ எண்டாங்கள். மகறகம எங்கை கிடக்கெண்டு நாலு பேரிட்டை விசாரிச்சு இஞ்சை மாமாவுக்கும் போனடிச்சு காசு அனுப்பச்சொல்லிப்போட்டு காவலிருந்தம். மாவின்ரை காசு வாறத்துக்கு முதல் யாழ்ப்பாணத்துக்கு ஆமி வந்திட்டான்.நாங்களும் இடம் பெயர்ந்து வன்னிக்குள்ளை வந்திட்டம். மல்லாவிக்கை தான் முழுச்சனமும் அடைஞ்சுபோய் இருந்தனாங்கள். சாதரமணமாய் காயப்பட்டவைவைக்கே மருந்து வசதியள் இல்லாத நேரம். ஜயாக்கு கான்சர் மருந்துக்கு எங்கை போறது அவர் வன்னியிலையே செத்துப்போனார்.

தம்பி ஆயிரம் பேருக்கு மேலை கேஸ் எழுதி விசா எடுத்துக்குடுத்திருக்கிறன்.நீர் சொல்லுறமாதிரி நான் கேஸ் எழுதினால் நீர் கெலிங்பாற பிற்றக்கொட்டுவாதான்.உமக்கு விசா வேணுமெண்டால் நீர் விபரங்களை மட்டும் சொல்லும் நான் எழுதித்தாற கேசை அனுப்பும்.இல்லாட்டி நடையை கட்டும் எனக்கு அடுத்த கேஸ் பின்னாலை நிக்கிறார்.

இல்லையண்ணை மன்னிச்சுக்கொள்ளுங்கோ நீங்களே விரும்பினமாதிரி எழுதுங்கோ.

சரி தம்பி உடம்பிலை ஏதும் காயங்கள் கிடக்கோ

கொஞ்சம் யோசித்தவன் ம் ..ஓமண்ணை ஒருக்கா என்ரை 90 யின்ரை சைலெஞ்சர் பட்டு வலக்கால்லை எரிஞ்சகாயமெண்டு இப்வும் பெரிசாய் இருக்கு பிறகு கடைசியாய் கிளாலியை கடக்கேக்கை ஆமி அடிச்ச செல் ஒண்டு நான் சரியாய் விழுந்து படுக்கிறதுக்கிடேலை கிட்ட வந்து விழுந்து வெடிச்சதிலை எனக்கு பின்பக்கத்திலை செல் பீஸ் பட்ட காயம் ஒண்டும் இருக்கு

உமக்கு ஒவ்றாவிலையே காட்தான் அரக்காது. ஆனால் நான் சொல்லுற புறுவ்கள் எல்லாம் உடைனை எடுக்கவேணும். நான் எழுதித் தாறதுகளை உடைனை எடுக்கிற வேலையை பாரும்.என்றபடி ஒரு துண்டில் மரணஅத்தாட்சிப்பத்திரம். காயம் பட்டதற்கான வைத்தியரின் அத்தாட்சி பத்திரங்கள்.கிராம சேவையாளரின் உறுதிக்கடிதம் என்று எழுதி நீட்டியவர். இதுகளை கெதியாய் எடும். அதோடை உம்மடை அப்பா செத்தது சூட்டுக்காயத்தாலையெண்டும் உமக்கு வலக்காலிலை எரிகுண்டு பட்டதெண்டும் பின்னாலை செல்பட்டதெண்டும் விபரமாய் டொக்ரர் சேட்டிபிக்கற்றுகளும்.எழுதியெடும்

அண்ணை இதெல்லாம் ஊரிலையிருந்தே எடுக்கவேணும்...இழுத்தான்

தம்பி விபரமில்லாத ஆளாய் இருக்கிறீர். உதிலை லாசப்பல் பக்கம் போனாலே ஆரையும் பிடிச்சு லைசன்சிலை இருந்து பிறப்பத்தாட்சி பத்திரம் மரண அத்தாட்சி பத்திரம் ஊர் விதானை மாரின்ரை கடிதம் எல்லாம் எடுக்கலாம். ஆனாலும் பிரெஞ்சுக்காரன் கெட்டிக்காரன் கனக்க கள்ளமெண்டு பிடிச்சிருக்கிறான். அதாலை கண்டவையிட்டையும் போய் வாங்காமல் நான் ஒரு நம்பர் தாறன் அவருக்கு போனடியும் எல்லாம் செய்து தருவர். ஒறிச்சினல்மாதிரியே இருக்கும் என்றபடி ஒரு விசிட்டிங் காட்டை நீட்டினார்.

மோகன் பவ்வியமாக எழுந்து கையில் என்பலப்பில் இருந்த ஒருதொகையை கொடுத்து அண்ணை இந்தாங்கோ அட்வான்ஸ் மிச்சம் கேஸ் எடுக்கேக்கை தாறதெண்டு மாமா சொன்னவர்.

ம்...நான் கடன் வியாபாரம் செய்யிறேல்லை தம்பி கட்டாயம் கேஸ் எடுக்க வரேக்குள்ளை மிச்சத்தை கொண்டுவரவேணும் அப்பதான் கேஸ் தருவன். வாறகிழைமை வாரும். எதுக்கும் வரமுதல் ஒரு போனடிச்சு முடிஞ்சிட்டுதோ எண்டு கேட்டிட்டுவாரும் நான் சொன்ன புறுவுகள் மறக்கவேண்டாம்.

விடைபெற்றான் மோகன் அடுத்தாவாரம் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் கேசை எடுப்பதற்காக மிகுதி பணத்துடன் போயிருந்தான் ஆவணங்களை சரிபார்த்தவர். தமிழில் எழுதிய வாக்குமூலம் ஒன்றினையும் அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும்கொடுத்து. தம்பி தமிழிலை உள்ளதை வடிவாய் மனப்பாடம் பண்ணி வையும் ஒவ்றா காரன் குறுக்கு கேள்வியள் கேட்பான் டக்கு டக்கெண்டு பதில் சொல்லவேணும். முக்கியமாய். திகதி மாதங்கள் கவனம்.எல்லாத்தையும் ஒரு போட்டோகொப்பி எடுத்துப்போட்டு ஒவ்றாவுக்கு அனுப்பும்.

மோகன் விடைபெற்றான் போகிற வழியிலேயே இரயிலில் பலதடைவை படித்துப்பார்த்தவன் ""சங்கானை ஞானவைரவரே எனக்கு காட் கிடைக்க வேணும் நல்லதொரு வேலை கிடைக்கவேணும். கல்வீடு கட்டவேணும்.உனக்கு வடைமாலையோடை பொங்கல்"".என்று நேத்திக்கடன் வைச்சபடி கேசை அனுப்பிவிட்டிருந்தான்.விசா பதில் வரும்வரை லாசப்பல் தமிழ்க்கடை ஒன்றில் சாமான் அடுக்கும் கள்ளவேலையும் ஒன்று கிடைத்திருந்தது. ஞான வைரவரிற்கு வடைமாலை விருப்பம் இருந்ததோ இல்லாட்டி கேசை படிச்ச ஒவ்றா காரனிற்கு பரிதாபம் ஏற்பட்டதோ தெரியாது மோகனை கூப்பிட்டு கனக்க கேள்வி ஒண்டும் கேக்கேல்லை அகதி அந்தத்து ஏற்கப்பட்டுள்ளது என்று கடிதம் வந்திருந்தது. வைரவரே நானும் உன்னை ஏதோ சிம்பிளா நினைச்சன் நீ பேய்காய்தான் உனக்கு வடைமாலை என்று மனதில் நினைத்தபடி வேலை ஒன்று தேடத்தொடங்கியிருந்தான்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
20.06.1997 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம்.
விமான நிலையத்தினுள் புகுந்துவிட்டிருந்த ரகுவிற்கு கண்ணாடி தடுப்பின் பின்னால் நின்றபடி கையசைத்படி மீனாச்சி நின்றிருந்தாள். கண்கள் கலங்கியிருந்தது ரகு கைகாட்டியபடியே மறைந்து போனான். "போய் இறங்கி போன் வந்ததும் வெள்ளவத்தை பிள்ளையாருக்கு நேத்தி வைச்சபடியே தங்க எலி வாங்கிக் குடுங்கவேணும். " என்று மனதில் நினைத்தபடி வாகனத்தில் போய் மீனாச்சி ஏறினாள்.

மீனாச்சி வவுனியா தாண்டியதுமே தாண்டிக்குளத்துக்கு அங்காலை நினைக்கவே விரும்பவில்லை நடந்தெல்லாம் கெட்ட கனவாய் மறந்து போனாள். அதாலைதான் பிறந்து வளந்த ஊர்கோயில் தாமரை வைரவருக்கே நேத்தி வைக்காமல் வெள்ளவத்தை பிள்ளையாருக்கு நேர்த்தி வைத்திருந்தாள். ரகுவும் இத்தாலியிலை இறங்கி சுவிசுக்குள்ளை போய் சேந்திட்டானாம் எண்டு செய்தி கிடைச்சதும். இரண்டு பவுணில் ஒரு எலி செய்து பிள்ளையார் கோயில் ஜயரின் அரிச்சனைத்தட்டில் போட்டாள்.ஜயருக்கு வாயெல்லாம் பல்லு......அடுத்த ஒரு மாதத்திலேயே மீனாச்சிக்கும் கொலண்ட் ஸ்பொன்சர் கிடைத்து வந்து சேர்ந்துவிட்டாள்.

சுவிசில் அகதி விசா கேட்ட ரகு சுறிச்மானிலத்திற்கு அருகில் ஒரு இடத்திற்கு ஒரு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தான்.உதவிப்பணம் மட்டும் கிடைத்து வேலை ஏதும் செய்யமுடியாது என்பதால் பொழுது போக்குவதற்கு சுரிற் பாணெவ்(இரயில் நிலையம்)அங்கைதான் சில தமிழ் பெடியளோடை பழக்கம் கிடைச்சது அவர்கள்தான் பாம்பு குறூப் எண்டு பிறகு தெரியவந்தது.ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் சுறிச் பொது பூங்காதான் அவர்களது சந்திப்பிடமாக மாறியிருந்தது.இரவு நேரம் செல்லச் செல்ல பியர் . கட்டை.கஞ்சா.என்று அந்தப்பூங்கா அவர்களிற்கு ஒரு சொர்க்கமாக மாறிவிடும்.இடையிடை வேறு யாருடனாவது அல்லது வேறு தமிழ் குழுக்கழுடனும் மோதல்களும் நடக்கும்.சண்டைகளை பாத்தால் ஏதும் பெரிய விடயமாக இருக்காது பெரும்பாலும் பெட்டையளை அடிப்படையாக கொண்டு தொடங்கினதாய்தான் இருக்கும்.பெட்டையை நக்கலடிச்சது.வெவ்வேறை குறுப்பிலை இருந்த பெடியள் ஒரு பெட்டையை லவ் பண்ணினது. பெட்டையை பின் தொடர்ந்து போனது இப்பிடித்தான் சண்டையள்.. சூறிச் பொலிசும் ஆரம்பத்திலை தமிழ் குழு சண்டையளை ஏதோ பெரிய அளவிலை நினைச்சுத்தான் தனிப்படை அமைச்சு வேகமாய் விசாரணை எல்லாம் செய்தவங்கள். பிறகு விசாரிச்சு கொண்டு போனதிலை அவங்களுக்கே வெறுத்துப்போச்சு. இப்பவெல்லாம் தமிழ் பெடியள் சண்டை எண்டு தகவல் போனாலே ஆறுதலாய் ஆடி அசைஞ்சு எல்லாம் முடிஞ்சால் பிறகு வந்து அங்கை காயப்பட்டவையளை ஆஸ்பத்திரிக்கு அனுபிப்போட்டு விசாரணையை தொடங்குவாங்கள்.

பாம்பு குறூப்பிலை சேர்ந்த ரகு தானும் புலியள் இயக்கத்தின்ரை றெயினிங். தவளைப்பாச்சல் நடவடிக்கைக்கு தானும் தவளை மாதிரியே பாய்ஞ்சு பழகின்னனான்.முல்லைத்தீவு முகாமுக்கள்ளை முதலாவதா புகுந்ததுநான்தான் என்று கொழுத்தி விட்ட வாணங்களை பலரும் நம்பி அண்ணாந்து பாத்தனர். அதுகளுக்குள்ளை நடந்த சண்டை ஒண்டிலை ரகு ஒருத்தனை கத்தியாலை குத்திப்போட்டான் குத்து வாங்கினவன் தப்பிட்டான்..குத்துவாங்கின பெடியனுக்கு விசா இல்லை அதோடை அவனும் அடிபாட்டு குறூப் எண்டதாலை அவனும் பொலிஸ் கேஸ் எண்டு போகேல்லை. அதோடை ரகு கீரோவாகிட்டான். அதுக்குப்பிறகு எந்த சண்டையெண்டாலும் பாம்பு குழு அவனைத்தான் கூப்பிடுவினம்.
.............................................................................................................................................................................................
01.05 1998 ம் ஆண்டு
அன்று மேதினம்.தொழிலாளர் தினம்
இது ஒரு தனி வரலாறை உலகில் உருவாக்கிய நினைவு நாள். 1886 இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வெடித்த ஒரு வரலாற்று புரட்சி உலகில் அனைவரின் வாழ்விலும் மாற்றத்தை வழங்கியது! அப்படி என்ன நடந்தது?நீராவி எந்திரத்தின் கண்டுபிடிப்பு உலகில் புதிய எந்திரங்களையும், தொழிற்கூடங்களையும் உருவாக்கியது. தொழிற்புரட்சி இந்த உலகில் அதிரடி மாற்றங்களை வழங்கிய காலமது. ஆலைகள், சுரங்கங்கள் என எங்கும் புது உருவாக்கங்களால் உலகம் வேகமாக சுழன்றது. வேலை, உற்பத்தி பெருக்கம் என உலகம் வேகமாக சுழன்ற வேளை குடும்பங்களில் அதன் தாக்கம் இருந்தது. எல்லோரும் 16, 18 மணி நேரம் வரை சுரங்கங்களிலும், ஆலைகளிலும் கடுமையாக உழைத்தனர். அப்போதெல்லம் கழைப்புடன் வேலையை விட்டு வரும்வேளை குழந்தைகள் நித்திரையில் இருப்பார்கள். இப்படியே காலங்கள் ஓடியத்தால் பல குழந்தைகளுக்கு தனது வீட்டுக்கு வரும் அந்த மனிதர் (அப்பா) யார் என்றே தெரியவில்லை. பாசத்தை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லாமல் போனது. உறவுகளோடு கலந்து வாழவும், ஓய்வு எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாமல் இயந்திரம் போன்ற வாழ்க்கையானது. ஆலை நிர்வாகமும், முதலாளிகளும் உற்பத்தி, இலாபம் என்பதில் மட்டும் கவனமாக இருந்தனர்.வேலை நேரத்தை குறைக்கவேண்டும் என பல போராட்டங்கள் நடந்தும் அந்த குரலுக்கு செவிசாய்க்காமல் அடிமைத்தனமான அணுகுமுறைகள் தொடர்ந்தன.

வேலைநேரம் வரையறுக்க கேட்டு 1886 மே 1இல் அமெரிக்காவின் பல பகுதிகளிலுமாக சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதன் ஒரு கட்டமாக 8 மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து சிக்காகோ நகரில் "மெர்க்காமிக் ஹார்வெஸ்ட் ஒர்க்ஸ்" என்ற ஆலையின் தொழிலாளர்கள் போராடினார்கள். போராட்டம் தொடர்ந்ததால் ஆலை மூடப்பட்டது, துப்பாக்கி தோட்டாக்கள் தொழிலாளர்களை கொன்றுகுவித்தது. அந்த அடக்குமுறையில் பிறந்தது 8 மணி நேரம் என்ற உரிமை! வடிந்த குருதியுடன் உயிர் சாயும் வேளையில், உதிரத்தில் தோய்த்து கரம் உயர்த்தி முழக்கமிட்ட அந்த மாமனிதர்களால் நமது உரிமைகள் பிறந்தன. அதில் ஒரு உரிமை தான் 8 மணி நேரம் வேலை என்ற உரிமை கிடைத்தது. சிகப்பு சிந்தனையின் தொடக்கமும், சிகப்பு கொடி உருவான வரலாறும் இதுவே.
சிக்காகோ நகரில் கொன்று குவிக்கப்பட்ட தொழிலாளர்களின் நினைவாக அவர்களிற்கு மே மாதத்தில் மலர்கின்ற சிறிய வெள்ளைப்பூக்களால் அஞ்சலி செலுத்து முகவாகவும் தொழிலாளர்களின் உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்தவும் உலகம் முழுவதுமே தொழிலாளர்கள் மே முதலாம் திகதி ஒன்று கூடி ஊர்வலம் நடாத்தி ஆடிப்பாடி மகிழ்வார்கள். அப்படி நடக்கும் ஒரு நிகழ்வில் ஒரு நூற்றாண்டு கடந்தும் மே தினக்கூட்டத்தில் இரத்தக்களரி நடக்கும் இடமாக சுவிஸ் சூறிச் மானிலம் விளங்கியது. அதுவும் ஈழத் தமிழர்களால்.

பல வருடங்களாக சுவிஸ் மக்களாலும் சுவிஸ்வாழ் வேற்றின மக்களாலும் தொழிலாளர் கட்சியின் செங்கொடிகள் ஏந்தி ஆடிப்பாடி மகிழ்ச்சியாய் நடந்துகொண்டிருந்த ஊர்வலத்தில் எண்பதுகளின் இறுதியில் சிவப்பு கறுப்பு கலந்த கொடிகளுடன் இணைந்து கொண்டார்கள். டொச்சு .பிறெஞ்சு.இத்தாலி.துருக்கி ஆகிய மொழிகளுடன் "அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம் "என்று தமிழிலும் கோசங்கள் கிழம்பியது. இவர்கள் சிறீலங்காவை சேர்ந்தவர்கள் இனம் மொழி மதம் இவையனைத்தையும் கடந்து உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வுடன் மற்றைய இனத்தவர்களும் கைகொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

அடுத்தடுத்த வருடங்களில் வேறும் பலர் இணைந்து கொண்டார்கள் அவர்கள் கொடியிலும் சிவப்பு வர்ணம் இருந்தது ஆனால் கோசம் வேறாக இருந்தது ""எங்கள் தலைவன் பிரபாகரன் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்."" ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்து எறிவோம் என்கிற கோசங்களும். எங்கள் தலைவன் பிரபாகரன் என்கிற கோசமும் மாற்றமடைந்தது ..அடியடா அவனை உதையடா.வெட்டடா.. என்றும் வேறு சில கெட்ட வார்ததைகளாகவும் மாறிப்போனது. எங்கும் இரத்தக்களரி மற்றைய இனத்தவர் திகைத்து நின்றனர். வருடத்தில் ஒரேயொருநாள் நிம்மதியாக இருக்கலாமென நினைத்திருந்த சூறிச் காவல்த்துறையினரிற்கு வேலை வந்து விட்டது. பலரையும் கைது செய்து விசாரித்தனர். அடிபட்டது இலங்கைத்தமிழர்கள்தான் ஆனால் இரண்டு பிரிவு வாக இருக்கின்றனர்அப்பொழுதுதான் அவர்களிற்கு புரிந்தது நாங்கள் தான் முதல்லை ஊர்வலம் நடத்த தொடங்கினாங்கள் அதாலை . அவங்களை ஊர்வலம் நடக்க விடமாட்டம். எண்டனர் ஒரு குறூப். நாங்கள்தான் நாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கிறம் எங்கள் தலைவன்தான் உயர்ந்தவன் எனவே நாங்கள் அவங்களை ஊர்வலம் நடத்த விடமாட்டம் என்றனர் மற்றைய குறூப். இரண்டு குறூப்பையும் விசாரித்த அதிகாரிக்கு தலையை சுத்தியது. தங்கடை நாட்டிலை வாழ வழியில்லையெண்டு இஞ்சை வந்து தஞ்சம் கோரிப்போட்டு எங்கடை நாட்டிலை யாரார் ஊர்வலம் நடத்தலாம் நடத்தக்கூடாது எண்டு இவங்களே தீர்மானிப்பாங்களாம். என்று நினைத்தபடி கைதுகள் தண்டனைகள் தொடர்ந்தது.

ஆனாலும் வருடாவரும் மேதினக்கூட்டத்தில் சண்டையும் தொடர்ந்தது.எண்பதுகளில் சுவிஸ் நாட்டில் தமிழர்கள் குறிப்பாக சூறிச் நகரம் புளொட் அமைப்பு மற்றும் புளொட் ஆதரவாளர்களையே அதிகமாகக் கொண்டிருந்தது.புலிகளின் அமைப்பிற்கு முரளி பொறுப்பேற்றபின்னர் அவரின் போச்சாற்றல் மற்றும் நிருவாகத்திறமை என்பன சுவிஸ்தமிழர்களை புலிஆதரவாளர்களாக மாற்றியது.இவருடைய காலத்திலேயே மேதினக் கூட்டத்தில் புலிக்கொடிகளுடனும் பிரபாரனது படங்களுடனும் மக்கள் தொகை அதிகரித்திருந்தது. ஆனால் அவரது தனிப்பட்ட சில தகாத செயற்பாடுகளும் நிதி கேட்டு சிலரை நேரடியாக மிரட்டியதாலும் சுவிஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையவாசம் அனுபவிக்க வேண்டி வந்தது.
அன்று மேதினம் ரகு குழுவினர் ஒரு காரின் டிக்கியில் பேஸ்போல் மட்டைகள் பொலுகள் உடலில் மறைக்கப்பட்ட கத்திகளுடன் தயாரானார்கள். அந்தக் குழுவின் தவைர் குகன் மற்றவர்களிற்கு திட்டத்தை விளங்கப்படுத்தினான் .இதுதான் இவங்களுக்கு கடைசி ஊர்வலம் இண்டைக்கு எப்பிடியும் ரஞ்சனை போடுறது. எல்லாரும் ஒதுங்கிட்டாங்கள் அவன் மட்டும்தான் இப்ப தனியா ஆடுறான் அவனுமில்லாட்டி அடுத்தவருசம் அனைத்து அடக்கு முறையளையும் உடைப்பம் எண்டு கத்த ஒருத்தரும் வரமாட்டாங்கள். பஸ் ஸ்ரான் தாண்டி பார்க் வற இடத்திலை கரை நிப்பாட்டி வைப்பம். நாங்களும் சனத்தோடை ஊர்வலமாய் வந்து காருக்கு கிட்டை நிப்பம் அங்கள் வந்ததும் தொடங்குவம்.

இவர்கள் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் பொழுதே புளொட் ஆதரவாளர்களும் திட்டம் தீட்டினார்கள். அவங்கள் எப்பிடியும் வருவாங்கள் நாங்கள் எங்கடையாக்களோடை போகாமல் அவங்களுக்கு முதல் வெள்ளையளோடை கலந்தபடி வெள்ளையளுக்கு நடுவிலையே போவம். அடிவிழுந்தால் வெள்ளையளிற்கும் சேந்துதான் விழும் அப்பதான் பிரச்சனை பெரிசாகும். புலியள் எண்டால் இப்பிடித்தான் எண்டு எல்லாருக்கும் தெரியவரும். இவர்கள் திட்டம் இப்பிடியிருக்க சூறிச் நகர காவல்த்துறை எப்பிடியும் சிறிலங்கன் அடிபடுவாங்கள் என்று எதிர்பார்த்தபடி தங்களது திட்டத்துடன் ஊசார் நிலையில் நின்றிருந்தார்கள்.

ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது மேளதாளங்கள் பாண்ட வாத்திய இசைகள்.பலமொழிகளில் கோசங்கள்.இவற்றுடன் நட்டுவமேளம் நாதஸ்வர இசையுடன் எங்கள் தலைவன் பிரபாகரன் புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசமும் உரத்து ஒலித்து .ரகு குழுவினர் கார்டிக்கியை திறந்து ஆளிற்கொன்றை கையில் எடுத்தனர்.கொக்கியே விழையாடத் தெரியாத ரகுவின் கையிலும் ஒரு கொக்கி மட்டை.புளொட் கொடி ஏந்தியிருந்தவர்களை நோக்கி நகரத் தொடங்கினார்கள் சனங்கள் சிதறி ஓடத் தொடங்க ஊசார் நிலையிலிருந்த காவல்த்துறை செயலில் இறங்கியது.
ரகு ஒரு மாதகாலம் கவலில் வைக்கப்பட்டு அவனிற்கான அகதி அந்தஸ்த்து கோரலும் நிராகரிக்கப்பட்டு பதினைந்து நாட்களில் சுவிஸ் நாட்டை விட்டு வெறியேறிவிடவேண்டும் அதன் பின்னரும் சுவிசில் இருந்தால் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவான் என்று காவல்த்துறை எச்சரித்து விடுவித்திருந்தது.
சுவிசில் ஜெனிவா ஊடாக பிரான்ஸ் நோக்கி போய்க்கொண்டிருந்த கார் ஒன்றில் ரகு அமர்ந்திருந்தான்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
20.02.2000 ஆண்டு. பாரிஸ்
மோகனிற்கு நிரந்தரமாக உணவு விடுதியென்றில் வேலை கிடைத்துவிட்டது. பாரிஸ் 20 ல் ஸ்ருடியோ(சிறியஅறை)ஒன்றையும் எடுத்து தனியாகவே தங்கியிருந்தான்.வெளிநாடு வந்த கடனை அடைப்பதற்காக பெரிய சீட்டும் ஒண்டு போட்டிருந்தான். அன்று மாலை வேலையால் வந்தவன் அவசரமாக தமிழ் தொலைக்காட்சியை போட்டான் காரணம் வன்னியில் ஓயத அலைகள் சுழன்றடித்துக்கொண்டிருந்த நேரம் அது. எனவே வேலையிலேயே மோகனிற்கு கவனம் போகவில்லை ஊரிலை என்ன நடக்கிறது புலிகள் எங்கையெங்கை பிடிச்சிட்டினம் எந்தப்பக்கமாய் முன்னேறிக்கொண்டு போகினம் என்று அறியிற ஆவல்.இடைக்கிடை கைத்தெலைபேசியிலை தெரிஞ்சவர்களிடமெல்லாம் புதினம் கேட்டுக்கொண்டே வேலையை செய்துகொண்டிருந்தான். தமிழ் தொலைக்காட்சியில் விசேட செய்திகளில் புலிகள் ஆனையிறவுப் பகுதியை அண்டிபகுதிவரை முன்னேறி தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவும். ஆனையிறவுத்தளம் விரைவில் வீழலாமென எதிர்பாக்கப்படுவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது மட்டுமில்லை ஆய்வாளர் வல்லவன் கூட தொலைபேசியூடாக வந்து புலிகள் ஆனையிறவை எப்படித்தாக்குகிறார்கள் என்னென்ன வியூகத்தில் தாக்குகின்றார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.உவர் வல்லவன் ஆயிறதிலை சரியான கெட்டிக்காரன்.அரசியல்.. இராணுவத்தாக்குதல்..கலாச்சாரம் எண்டு என்ன கிடைச்சாலும் சப்பி சக்கையாக்கி துப்பிப் போடுவார். அதாலையே அவரை சக்கை லைக்கை லா வல்லவன் எண்டுதான் எல்லாரும் சொல்லுறவை.

மோகனிற்கு ஒரே புளுகம் எப்பிடியும் ஆனையிறவை பிடிச்சிடுவாங்கள்.என்ரை தங்கச்சியும் ஏதாவது ஒருஇடத்திலை நிண்டு அடிபட்டுக்கொண்டிருப்பாள்.கடவுளே ஒரு கெடுதியான செய்தியும் வரக்கூடாது எண்டு சுவரில் மாட்டியிருந்த கலண்டர் பிள்ளையாரை பார்த்து மனதில் வேண்டிக்கொண்டான். வீட்டு அழைப்பு மணி அடிச்சது எடுத்து யாரது எண்டான். நான்தான் உதயன் .....
உதயன் பாரிசில் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரிக்கும் ஒருவன்.அவன் ஒரு உணவுவிடுதியில்தான் வேவை செய்கிறான் வேலை ஓய்வு நேரம் மற்றும் லீவுநாள் எல்லாம் இயக்கத்தின்ரை பிரசுங்களை கொண்டு திரிந்து விக்கிறது.நிதி சேகரிக்கிறதுதான் இவனது இரண்டாவது வேலை . மெல்லிய கறுத்த உருவம் முன் நெற்றிவழுக்கை தோளில் தொங்கும் பை அது நிறைய புலிகள் அமைப்பின் பிரசுரங்கள் சி டிக்கள் புத்தகங்கள். ஒரு கணக்கு கொப்பி தூக்க முடியாமல் துக்கிக் கொண்டு அலைவான். இயக்கத்துக்கு ஜம்பது ரூபாய் தருவதாக சொல்லி விட்டு ஜம்பது தரம் அலைய வைத்தாலும் சினக்காமல் சிரித்தபடியே "வணக்கம் இண்டைக்காவது தருவியளோ இல்லாட்டி இன்னொரு நாளைக்கு வரவோ" எண்டுதான் கேட்பான். எங்கை தமிழாக்கள் இருந்தாலும் மணந்து பிடித்து அவையளின்ரை வீட்டு அழைப்பு மணியை அடித்துவிடுவான். புலிகள் இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த இயக்கத்தை வெறுப்பவர்கள் கூட ஆரம்பத்தில் அவனை திட்டி அனுப்பினாலும் பிறகு உதயனை பார்த்து பரிதாபப் பட்டு பணம் குடுத்திருக்கினம். காரணம் அவனின்ரை கதை அணுகு முறை அப்பிடி.
மோகன் கதைவைத் திறந்துவிட உள்ளே வந்த உதயன்.

என்ன இண்டைக்கு லீவுதானே

இல்லை ஒருத்தனுக்கு சுகமில்லையெண்டு காத்தாலை வேலைக்கு கூப்பிட்டாங்கள் போட்டு இப்பதான் வந்தனான்.இந்தாங்கோ உங்கடை காசு எடுத்து வைச்சிருக்கிறன்.

செய்தி பாக்கிறியள் போலை எப்படி அடி ..இதுதான் கடைசி அடியாய் இருக்கும் ..

உண்ணானை சொல்லுறன் பெரிய சந்தோசம். ஆனால் என்னமாதிரி ஆனையிறவு விழுமோ??

என்ன இப்பிடி கேட்டிட்டியள் உள்ளை இறங்கி நிக்கிறது ஆர்??பால்ராச் அண்ணையல்லோ.விழாமல் எங்கை போகப்போகுது.

அவரைபத்தி கேள்விப்பட்டிருக்கிறன் ஆள் பெரிய விண்ணன் தானாம். ஆனையிறவு விழவேணும் அதுதான் என்ரை ஆசை.

இப்ப உள்ள நிலைமையிலை நிதி கொஞ்சம் கூடுதலாய் தேவைப்படுதாம் அதலை அவசரகால நிதி சேகரிக்கிறம் குறைஞ்ச தொகை ஆயிரம் யுரோ கேக்கிறம் ஆனால் அது குலுக்கல் முறையிலை திருப்பித் தருவம்.

இஞ்சை பாருங்கோ உதயன் அவசரகால நிதி அவசரமில்லாத நிதி எண்டெல்லாம் என்னட்டை கேக்ககூடாது . உங்களுக்கு ஆரம்பத்திலையே சொல்லியிருக்கிறன் எனக்கு வந்த கடன் இருக்கு. அதைவிட எனக்கொரு கனவு இருக்கு கல்வீடு கட்டுறது. என்ரை தங்கச்சியும் இயக்கத்திலைதான் இருக்கிறாள்.என்ரை செலவுகளையும் சமாளிச்சுதான் ஒரு நாளைக்கு இரண்டு யூரோ எண்டு சேத்து உங்களுக்கு மாதம் அறுபது யூரோ தாறன்.அதைவிட சிடியள் புத்தகங்கள் கலண்டர் வாங்கிறன் இவ்வளவுதான் என்னாலை ஏலும்.இந்தாங்கோ அறுபது யூரோ.

இயக்கம் ஆனையிறவு வரைக்கும் போயிட்டுது கூடுதலாய் ஒரு ஜம்பது யூரேவை குடுக்கலாமா எண்டு யேசித்தாலும். எதுக்கும் ஆனையிறவு விழட்டும் அடுத்தரம் சேத்து குடுக்கலாம் எண்டு நினைத்தபடி காசை நீட்டினான்.
உதயன் கணக்கு கொப்பியை எடுத்து மேகன் அறுபது யூரோ எண்டு வரவு வைத்தவன் ""சரி கேட்டுப்பாத்தன் வசதி இருந்தால் முயற்சி பண்ணி பாருங்கோ. சந்திப்பம்."
உதயன் போய்விட்டான்.


லாசப்பல் பக்கம் போனால் இன்னமும் செய்தியள் ஏதாவது கிடைக்கும். வரேக்குள்ளை ஒரு பங்காட்டு இறைச்சியும் ஒரு சப்பட்டையும் வாங்கி கொண்டந்து சமைச்சிட்டு சப்பட்டையை அடிச்சிட்டு சாப்பிட்டு ஒரு படம் பாக்கலாம் எண்டு நினைச்சபடி வெளிக்கிட்டான்.என்ன தான் ரி வி ..றேடியோவிலை செய்தி கேட்டாலும் எங்கடையாக்களிட்டை லா சப்பலிலை செய்தி கேக்கிறமாதிரி வராது.இயக்கம் ஒரு ராங்கை அடிச்சாலும் அதை பத்தாலை பெருக்கி பத்து ராங்க் அடிச்சிட்டாங்களாம் எண்டுவாங்கள். அதுவும் ஒருத்தன் தானே நேரை அடிச்சமாதிரி அக்சனோடை சொல்லுவான். அது பொய் எண்டு தெரிஞ்சாலும் கேக்க ஒரு திறிலாத்தான் இருக்கும்.........
......................................................................................................................................................................................
15.03.2009ம் ஆண்டு பாரிஸ் பிரான்ஸ் குற்றத்தடுப்பு பிரிவு பாரிஸ் அலுவலகம்.
பாரிசின் குற்றத்தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி ஜோன் பியரின் அலுவலகம். ஜேன்பியர் ஜரோப்பாவிலிருந்து ஒலிபரப்பாகும் இரண்டு தமிழ் தொலைக்காட்சிகளையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தான். ஜேன் பியரிற்கு தற்சமயம் முக்கியமானதொரு நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. அது ஈழத் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் வன்முறைகள் நடக்காமல் கண்காணித்து கட்டுப்படுத்தவேண்டும். இதுதான் அவனது இறுதி நடவடிக்கை இந்த நடவடிக்கை முடிந்ததுதம் அவன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளப் போகிறான். இதே இவன் காவல் துறையில் இருந்துவிட்டு பின்னர் குற்றத்தடுப்புப் பிரிவின் சாதாரண அதிகாரியாக 1988 ம் ஆண்டு கடைமையில் இணைந்த பொழுதும் ஒரு ஈழத் தமிழரை புலன் விசாரணை செய்ததுடன் ஆரம்பித்திருந்தான். 88 ம் ஆண்டு இறுதியில் பிரான்ஸ் பெல்ஜியம் எல்லையில் ஒரு தமிழரின் காரை எல்லைக்காவல் துறையினர் சோதனையிடுகின்றனர்.

காரில் சக்திவாய்ந்த தொலைத்தொடர்புக்கருவிகள் மற்றும் ஒரு வானொலி இயக்குவதற்கான கருவிகளும் இருந்தது உடனடியாக அவரை கைது செய்ததோடு பொருட்களையும் பறிமுதல்செய்த எல்லைக்காவல் காவல்துறையினர் பரிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரிற்கு தகவல் அனுப்பியிருந்தனர். பாரிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் அவரது வீட்டினை உடைத்து சோதனை செய்தபொழுது மேலும் சில தகவல் தொடர்பு கருவிகளுடன் புலிகள் இயக்கத்தின் பத்திரிகைகள் பிரசுரங்கள் என்பனவும் அகப்பட்டது. எல்லையில் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளிற்காக பாரிசிற்கு கொண்டுவரப்பட்டார். புதிதாக குற்றப்புலனாய்வு பிரிவில் பதவிற்றிருந்த ஜேன்பியர் அவரை விசாரிக்கிறான்.அந்தப் பொருட்கள் அனைத்தும் புலிகள் இயக்கத்திற்காக பெல்யியம்புறுக்செல்லில் சபீனா விமானத்தில் ஓற்றப்பட்டு அவனும் அதனுடன் பயணிக்கவேண்டும் இடையில் கைது செய்யப்பட்டுவிட்டான். அந்த விசாரணைகளின் போதுதான் ஜேன் பியரிற்கு சிறிலங்கா தீவில் புலிகள் இயக்கம் பற்றிய விபரங்கள் தெரியவருகின்றது. ஆனால் அவனது விசாரணைகள் எல்லாம் கைப்பற்றப் பட்ட பொருட்களால் பிரான்ஸ் நாட்டிற்கு ஏதாவது கெடுதல்கள் சதி வேலைகள் உண்டா என்பதுதான். அப்படி எதுவும் இல்லை அதனால் கைது செய்யப்பட்டவர் பொருட்கள் பறிமுதல் செய்ததுடன் விடுதலை செய்யப் படுகிறார்.அவரை விடுதலை செய்தாலும் தன்னுடைய தொழில் ரீதியாக புலிகள் இயக்கம் அதன் செயற்பாடுகள் முக்கியமாக பிரான்சில் அவர்களது செயற்பாடுகளை அறிந்து கொள்ளவும் அதனை கண்காணிக்கவும் விடுதலை செய்யப்பட்டவருடன் தனிப்பட்ட நட்பை பேணுகிறான்.


அதனால் நிறையவே ஈழத்தமிழர் பற்றிய விபரங்களையும் அறிந்து கொள்கிறான். அதன்பின்னர் இலங்கையில் இந்தியப் படைகாலத்தில் புலிகள் இந்தியப்படை மோதல்கள் நடந்து கொண்டிருந்த பொழுதுதான் அனிதா பிரதாப் சி என் என் செய்தி சேவைக்காக பிரபாகரன் பற்றி தயாரித்திருந்த சிறு விவரணம் வெளியாகியிருந்தது அதனை பிரான்சின் பிரபல பத்திரிகையான. லு மோந் பத்திரிகை பிரபாகனின் படத்துடன் கட்டுரையாக வெளியிட்டிருந்தனர்.பிரபாகரனைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்த ஜேன்பியரிற்கு அந்தக் கட்டுரை அவரின் மீது ஒரு ஈர்ப்பை கொடுத்திருந்தது. காரணம் இந்தியப்படையின் ஆளணி ஆயத பலம் என்பதும் புலிகளின் பலம் எனபதும் ஊகிக்கக்கூடியதுதான்.. கட்டுரையில் வெளியாகியிருந்த பிரபாகரனின் படத்தினை வெட்டியெடுத்து அதை சிறிய பிறேமில் போட்டு தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களின் படங்களுடன் அலுவலக மேசையில் வைத்திருந்தான். அதன் பிறகு எத்ததையோ வடிவங்களில் பிரபாகரனின் படங்கள் வெளிவந்திருந்த போதும் அவன் அந்தப் படத்தை மாற்றவில்லை அதுமட்டும்தான் அவனை ஈர்ந்திருந்தது. அதே நேரம் அவனிடம் விசாரணைக்கு வரும் தமிழர்களிடமெல்லாம் பிரபாகரனின் படத்தைக்காட்டி இவரைத் தெரியுமா. இவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சொல்லத் தவறுவதில்லை..

அவன் அப்படி சொல்லும் பேதெல்லாம் விசாரிக்கப்படும் தமிழர் இவன் பிரபாகரனை தனக்கு பிடிக்கும் எண்டு சொல்லி தானும் எங்களுக்கு சார்பானவன் எண்டு காட்டி எங்களிட்டை உண்மையை கறக்கப் பாக்கிறானோ??எண்டு நினைச்சவையளும் உண்டு அதே நேரம் பிரபாகனை தெரியுமெண்டு சொன்னால் எப்பிடி தெரியும் எங்கை தெரியுமெண்டு கேள்வி கேட்டு என்னையும் புலி எண்டு உள்ளை தூக்கி போட்டுவானோ எண்டு பயந்து தெரியாது எண்டு சொன்னவையளும் உண்டு.

Photobucket

தெரியாது எண்டு யாராவது சொல்லும் போதெல்லாம் தலையாட்டி சிரிப்பான். தொடர்ச்சியாக தமிழர்களுடன் பழகியதில் கொஞ்சம் தமிழும் கொச்சையாய் கதைக்கப் பழகியிருந்தான் விசாரணை செய்பவர்களை வணக்கம் சுகமாக இருக்கிறீங்களா என தமிழில் கேட்டபடி விசாரணையை தொடங்குவான். அதுவரை அவனை தமிழில் திட்டிக்கொண்டிருந்தவர்கள் அவனது தமிழை கேட்டதும் திடுக்கிட்டு நான் திட்டினது எல்லாம் விழங்கியிருக்குமோ என நினைச்சு பல தடைவை மன்னிப்பு கேட்ட சம்பவங்களும் உண்டு .அதே நேரம் புலிகள் அமைப்பின் பிரான்ஸ் கட்டமைப்பில் சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் யார் இறங்கினாலும் அவன் தன் கடைமை தவறியது கிடையாது கைது செய்து விசாரணை செய்து தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவான். அதுமட்டுமில்லை பாரிசில் இயங்கிய அனைத்து தமிழ் அடிபாட்டு குறூப்புகளின் பெயர்கள் அதன் உறுப்பினர்களின் விபரங்கள் எல்லாமே அவனிற்கு அத்துபடி. அவைகளில் பலரிற்கு தண்டனை வாங்கிக் கொடுத்திரக்கிறான். பிரான்சின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் கைதுகளும் இவன் தலைமையிலான குழுவே தகவல்களை திரட்டி விசாரணைகளையும் செய்திருந்தனர்..இருபத்தியொரு ஆண்டுகள் கழித்து அவனது இறுதி நடவடிக்கையும் ஈழத்தமிழர் பற்றியதுதான். காரணம் ஈழத்தமிழர்கள் பற்றிய தகவல்கள் .அதுபற்றிய பரிச்சயமும் அவனிற்கு அதிகமாக இருந்ததால் அவனிடமே அந்த பொறுப்பு ஓப்படைக்கபட் பட்டிருந்தது.

ஜேன் பியர். அலுவலகத்தினுள் தேவன் நுளைந்தான். தேவன் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளர். பாரிஸ் நகரில் குற்றச்செயல்களிற்காக கைது செய்யப்படும் தமிழர்களின் காவல்த்துறை விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர்களிற்கு பிறெஞ்சு மொழியறிவு இல்லாதிருந்தால் மொழிபெயர்ப்பிற்காக காவல்த்துறை அழைப்பவர்களில் தேவனும் ஒருத்தன்.

தேவனிற்கு கொடுத்து வரவேற்ற ஜேன் பியர்.

வணக்கம் தேவன் மீண்டும் உங்ளது சேவை எங்களிற்கு தேவை தற்சமயம் நடக்கும் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என நினைக்கிறேன். ஆர்ப்பாட்டங்களின் பொழுது யாராவது உணரச்சி வயப்பட்டு வன்முறைகளில் இறங்கலாம்..அல்லது இந் ஆர்ப்பாட்டங்களின் வன்முறைக் குழுக்கள் புகுந்து தமக்கு சாதகமாக்கி வன்முறையை துண்டலாம். அல்லது குழப்புவதற்காகவே வேறு சிலரும் முயற்சிக்கலாம். எது எப்படியோ பொது மக்களோ சொத்துக்களோ பாதிக்கப்படக்கூடாது அதுதான் எனது நோக்கம் . அதற்கான நான் ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கியிருக்கிறேன். அதில் ஒரு பாண்டிச்சேரி தமிழரும் உள்ளார். ஆனால் அவரிற்கு உங்கள் வித்தியாசமான உச்சரிப்புக்கள் புரிவதில்லை. இந்த நடவடிக்கை முடியும் வரை எம்முடன் நீங்கள் ஒத்துளைக்கவேண்டும் முக்கியமாக ..பல தொலைபேசி உரையாடல்கள் உடனுக்குடன் எமக்கு மொழிபெயரக்கப்படவேண்டும்.கொஞ்சம் அதிகமான வேலை சிரமம் தருவதற்கு மன்னிக்கவேண்டும்.

பரவாயில்லை எனது தொழில் அதுதானே இதில் சிரமம் பாக்க முடியாதே.

நல்லது இந்த தமிழ் தொலைக்காட்சியில் எங்கெங்கு ஆர்பாட்டங்கள் நடைபெறப்போகின்றது எத்தனை மணிக்கு நடைபெறுகின்றது என்கிற விபரங்கள் உடனுக்குடன் அறிவித்தல் கொடுத்தபடி இருக்கிறார்கள் அவைகளை எனக்கு குறிப்பெடுத்துத்தாருங்கள். உங்களிற்கு சிரமம் இல்லாமல் பணி செய்ய அனைத்து வசதிகளுடனும் ஒரு அறை ஒழுங்கு செய்துள்ளேன் உங்கள் பணிகளை உடைனேயே தொடங்கலாம் நன்றி
தேவன் தமிழ் தொலைக்காட்சிகனை பார்த்து குறிப்பெடுத்தபடியே பதியப்பட்டிருந்த தொ.பே அழைப்புக்களை மொழி மாற்றீடு செய்து பதியத் தொடங்கினான். தமிழ் தொலைக்காட்சியில்.... ""எல்லாரும் வீதிங்கு வாங்கோ எங்கடை சனம் சாகுதுகள் எல்லாரும் போராடவேணும். தயவுசெய்து றோட்டிலை இறங்குங்கோ"" என்று மீனாட்சி அழைத்தபடி இருந்தான்.
......................................................................................................................................................................................
20.03.2009
பிரான்சிற்கு வந்து சேர்ந்த ரகு பிரான்சில் அகதி தஞ்சம் கோரியிருந்தான் அது நிராகரிக்காப்பட்டு மீள் பரிசீலனைக்காக அனுப்பிவைத்திருந்தான் அதுமட்டுமல்ல அவன் கலியாணம் கட்டினால் திருந்தி விடுவான் என நினைத்து அதே நேரம் விசாவும் அவனுக்கு பிரச்சனையாய் இருந்தபடியால் நல்ல விசா உள்ள பெட்டை ஒண்டையும் அவர்களது சொந்தத்தில் தேடி மீனாச்சி கலியாணம் செய்து வைத்து விட்டிருந்தாள்.ஆனாலும் ரகுவிற்கு சும்மாயிருக்க முடியவில்லை .பாரிஸ் லாசப்பல் பக்கம் போய் நட்புகளை பிடிக்கத் தொடங்கினான். லா சப்பலிலும். முக்காப்புலா. மின்னல்.வெண்ணிலா .விழுதுகள் .என பல குழுக்கள் இருந்தது. ரகு முக்கப்புலா குழுவில் இணைந்து அடிபாடுகளில் இறங்கியவன் முக்காப்புலா அமைப்பின் தலைவன் ஒரு கொலைகேசில் உள்ளேபோக இப்பொழுது ரகுதான் அதற்கு தலைவன்.

பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும் தனது குழுவோடு புலிக்கொடியோடு முன்னிற்கு நின்று கத்தத் தொடங்கியிருந்தான்.

ஜேன் பியரின் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களில் சாதாரண உடையில் உலாவத் தொடங்கியிருந்ததோடு அந்தப் பகுதிகளில் உயரமான கட்டிடங்களில் இரகசியக் கமாறாக்களையும் பொருத்தி கண்காணிக்கத் தொங்கியிருந்தனர்.

லண்டனில் பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் தொடங்கியிருந்தது. ஊர்வலங்களில் கலந்து கொள்ளாமல் அதுவரை சும்மாயிருந்த தமிழர்களையும் அது உலுப்பி விட்டிருந்தது. ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் வலுப்பெற்றது. அப்பொழுது லண்டன் நகரை இணைக்கும் பிரதான மேம்பாலம் ஒன்றினை இளையோர்கள் மறித்து போராட்டத்தை நடத்தினார்கள்.அது பல இங்கிலாந்து ஊடகங்களின் பார்வைகளையும் திருப்பியிருந்தது.அதையடுத்து பாரிசிலும் தமிழர்கள் லா சப்பல் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். பொலிசார் குவிக்கபட்டனர்..ரகுவும் புலிக்கொடி ஒன்றைமுதுகில் போட்டு சுப்பர் மானைப்போல கட்டியபடி தன்னுடைய குழுவினருடன் வந்தவன். அங்கு கிடந்த குப்பை வண்டிகளை இழுத்து வீதியில் தள்ளி தீவைத்தவன் அங்கிருந்து வேகமாக இன்னொரு குறுக்கு வீதியில் புகுந்தான். வாகனப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டது. கார்களின் கோண் சத்தம் தீயணைப்பு வண்டியின் சைரன் போலிஸ் வாகனங்களின் சைரன் என ஒரே இரைச்சலாய் மாறியது. அந்த வழியால் வந்து மாட்டுப்பட்டு நின்ற கார்களில் ஒருத்தி திட்டியபடியே கோணை அடிக்க அவளது காரின் பக்கக் கண்ணாடியை சலோப் என கத்தியபடி ஓங்கி அடித்தான் அது சிதறியது

அத்தோடு நிக்காமல் வரிசையாக சில கார்களிற்கும் அடித்துக்கொண்டே போனான். அப்பொழுது அந்தப்: பக்கத்தால் வந்து கொண்டிருந்த 31 ம் இலக்க பஸ் போக்கு வரத்து இறுகியதில் லா சப்பல் பகுதியில் நின்றுவிட அதிலிருந்த மக்கள் இறக்கிப் போய் கொண்டிருந்தனர். அந்தப் பகுதிக்கு வந்த ரகு குழுவினர் அந்த பஸ்சையும் அடித்து நொருக்கிவிட்டு எங்கள் தலைவன் பிரபாகன் என்று கத்தியபடி போய்கொண்டிருந்தனர் . இவையனைத்தையும் போலிசாரின் இரகசிய கமராக்கள் பதிந்து கொண்டிருந்தன. ஜேன்பியரிற்கு தகவல்கள் உடனுக்குடன் போய்க்கொண்டிருந்தது முடிந்தளவு வன்முறையை கட்டுப்படுத்துங்கள் யாரையும் உடனே கைது செய்யவேண்டாம் தேவைப்பட்டால் கண்ணீர் புகையை பாவிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்திருந்தான்.


பாரிசில் நிலைமைகள் இப்படியிருக்க இலண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரனை எழுப்புவதற்காக இலண்டன் புலிகளின் பணியக பொறுப்பாளர்கள் திட்டமிட்டனர் பரமேஸ்வரனிற்கு விசா இல்லை அவன் விசா எடுக்கிறதுக்காகத்தான் உண்ணாவிதரம் இருக்கிறான் அவனை எழுப்பிப் போட்டு எங்கடையாக்கள் ஒராளை இருத்தப்போறம் என்று தங்கள் பொறுப்பாளரிற்கு தகவல் அனுப்பியிருந்தாரகள். அந்தத் தகவல் வெளியே கசிந்ததில் வேறு பலர் பரமேஸ்வரனின் போராட்டத்தை குழப்பவேண்டாம் அதை மாத்தினால் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது பேல இருக்கும் அவனுக்கு சனத்தின்ரை ஆதரவும் இருக்கு . அதையும் இழக்கவேண்டி வரும் எண்டு நடேசனிற்கு செய்தி அனுப்பி விட்டிருந்தனர். எல்லாத்தையுமே நாங்கள்தான் செய்யவேணுமெண்டு அடம்பிடிக்காதேங்கோ சனத்தை அவங்கடை பாட்டிலை விரும்பின படி செய்யவிடுங்கோ எண்டு நடேசன் கண்டிப்பாக சொல்லிவிட்டிருந்தார்.

அதே போலத்தான் சுவிசிலும் இளையோர்கள் போராட்டம் நடத்தவிடாமல் சுவிஸ் பணியககம் குறப்பாக கிருஸ்ணா அம்பலவாணர் போன்றவர்கள் தடுத்தனர். அப்பொழுது இசுவிஸ்ளையோர் அமைப்பிற்கு பொறுப்பாக குரு என்பவர் போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிஐந்தார். இளையோரை போராட்டம் நடாத்தவிடாமல் தடுக்கிறார்கள் என்கிற குருவின் வாக்கு முலம் பதியப்பட்டு நடேசனிற்கு போட்டுக்காட்டப்பட்டது.. பின்னர் நடேசனின் தலையீட்டால் இளையோர் அமைப்பு போராட்டங்களை நடாத்த அனுமதிக்கப்பட்டனர். அதுக்கு பின்னர்தான் அம்பலவாணர் திடீரென ஜ.நா சபைக்கு முன்னாலை சாகும்வரை உண்ணாவிதரம் என்று அறிவித்து விட்டு பின்னர் பேர்ண் வெளிநாட்டமைச்சகத்திற்கு முன்னால் என்று செய்தி வெளியாகியிருந்ததுபேர்ண்முருகன் கோயில் உண்ணாவிதரத்தை ஆரம்பித்தார். சுவிஸ் ஜெனிவாவில் இருந்த ஜ.நா சபையை பேர்ண் முருகன் கோயிலுக்கு மாத்திட்டாங்களா என்று பலரும் சந்தேகப்பட்டனர். உண்ணாவிதரம் தொடங்கிய மூன்றாவது நாள் அவர் தனது மனிசிக்கு போனடிச்சு எடியேய் என்னாலை முடியேல்லை போலிசுக்கு போனடி என்று சொல்லி பிறகு அவரின்ரை மனிசி என்ரை மனுசன் சாகப் போறார் காப்பாத்துங்கோ எண்டு போலிசுக்கு போனடிக்க ..போலிஸ் வந்து அவரை அப்பிடியே கட்டிக்கொண்டு போய் வைத்தியசாலையில் போட்டுவிட்டு பேய்விட்டனர்.அதே குரு பின்னர் இளையோரமைப்பையும் தவறாக வழிநடத்தி பின்னர் சுவிசில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்ததையும் குளறுபடியாக்கிக் கொண்டிருக்கிறார் தற்சமயம் வரை.

Photobucket

25.03.2009
பிரான்சில் ஒருங்கிணைப்பு குழுவினர் கைது செய்யப்பட்ட பின்னர் சில மாதங்கள் பிரான்சில் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளை பலர் பயம் காரணமாக பொறுப்பெடுக்க முன்வரவில்லை அதே நேரத்தில் தான் டென்மார்க்கில் இருந்து மயூரன் விடுதலை என்கிற பெரில் பிரான்ஸ் பொறுப்பை ஏற்கிறார். அவர் பயமில்லாமல் தொடர்ந்தும் வேலைகள் செய்தவர்களிற்கு ஒரு கூட்டத்தை வைத்தார் உதயனும் அதில் இருந்தான். நாட்டிலை இப்ப இருக்கிற சிக்கலான நிலைமை உங்கள் எல்லாருக்கும் தெரியும் இப்ப எங்கடை பெரிய பிரச்சனையே நிதிதான் பெரும்தொகை நிதி தேவைப்படுது அந்த நிதி உடைனை திரட்டினால்தான் தாயக்திலை எங்கடை மண்ணையும் மக்களையும் காப்பாத்தலாம்.எனவே நீங்கள் சாதாரணமாய் குறைஞ்சது இரண்டாயிரம் யுரோ ஒவ்வொருத்தரிட்டையும் வாங்கவேணும். ஆதரவாளர்களிட்டை எவ்வளவு வங்கிகளிலை கடன் எடுத்துத் தர இயலுமோ எடுத்துத் தரச்சொல்லி சொல்லுங்கோ. கடைக்காரரிட்டை குறைஞ்சது ஜயாயிரம் யுரோ கேளுங்கோ உடைனை இதை செய்யவேணும் எண்டான்.
மாவிலாறிலை தொடங்கி மடு பிறகு கிளிநெச்சிவரை போய் நிக்கிது இந்த நேரம் சனங்களும் கன கேள்வி எங்களை கேக்கினம் பதில் சொல்லத் தெரியேல்லை அதோடை முதல் பொறுப்பாளர் பிடிபட்டா பிறகு யார் இப்ப பொறுப்பு எண்டும் சனத்துக்கு தெரியாது அதாலை நீங்கள் பொதுவா ஒரு கூட்டம் வைக்கவேணும் என்று உதயன் தலையை சொறிந்தான்.
கட்டாயம் அடுத்த ஞாயிற்று கிழைமை தமிழ் பள்ளிக்கூடத்துக்கு உங்களுக்கு தெரிஞ்சவையளை வரச்சொல்லுங்கோ நான் கதைக்கிறன் ஆனால் புது பொறுப்பாளர் நாட்டிலை இருந்து வந்திருக்கிறார் எண்டு அவையளிட்டை சொல்லுங்கோ.
நீங்கள் டென்மார்க்கிலை இருந்தல்லோ வந்தனியள்.
ஓம் ஆனால் நாட்டிலை இருந்து வந்தவர் எண்டால்தான் என்ரை சொல்லுக்கு ஒரு மரியாதை இருக்கும் அப்பதான் நான் சொல்லுறதை அவையள் நம்புவினம் அதாலை நாட்டிலை இருந்து வந்தவர் எண்டே சொல்லுங்கோ.

உதயன் மேகனின் வீட்டிற்கு போயிருந்தான் வீட்டு சுவரில் மோகனின் தங்கையின் படம் பெரிதாக்கப்பட்டு மாலை போடப் பட்டிருந்தது. அதைபாத்ததும் உதயனிற்கு இரண்டாயிரம் யுரோ கேக்க தயக்மாய் இருந்தது.
உதயனை வரவேற்ற மோகன். கிளிநொச்சி சண்டையிலை செத்திட்டாளாம் பொடிகூட எடுக்கேல்லையாம் இப்பதான் போனகிழைமை எனக்கு அம்மா முல்லைத்தீவிலை நிண்டு போனடிச்சவா .ஒரு கொமினிக்கேசன்தான் இயங்குதாம் அதுக்கு சனம் வரிசையிலை நிக்குதாம் அதுவும் எப்ப போகும் எண்டு தெரியாது எண்டார். அதோடை எங்கடை கடைசியையும் பாப்பா குறூப் வந்து பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம் எண்டு சொல்லியழுதா என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. என்ன நடக்கும் இயக்கம் திருப்பி அடிக்குமோ இல்லாட்டி....ஏதாவது தெரியுமேமோகன்??

உண்மையை சொன்னால் எனக்கும் ஒண்டும் தெரியாது புதிசா ஒரு பொறுப்பாளர் நாட்டிலையிருந்து வந்திருக்கிறார் வாற ஞாயிற்று கிழைமை கூட்டம் வைக்கிறார் கட்டாயம் வாங்கோ அதோடை அவசரகால நிதியும் சேர்க்கிறம் ஒராளிட்டை இரண்டாயிரம் வாங்கிறம் யோசியுங்கோ என்றுவிட்டு உதயன் விடைபெற்றான்.

ஞாயிற்றுக் கிழைமை அந்தப் பாடசாலையில் கணிசமான கூட்டம் நிறைந்திருந்தது விடுதலை பேசத்தொடங்கினார்.
எங்கள் பலம் தக்கவைக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் தந்திரோபயமாகத்தான் பின்வாங்கியுள்ளோம். இந்த பின்வாங்கல் தற்காலிகமானதுதான். ஆனால் இப்பொழுது எமது மக்களிற்கான வாழ்வா சாவா என்கிற நிலைமை இந்த நிலைமையை நாம் மாற்றியமைக்கவேண்டுமானால். எம்மால் முடிந்தளவு நிதியை வழங்கினால் அங்கு கள நிலைமைகள் மாறும் இல்லாவிடில் எதிரி எம்மை அழித்துவிடுவான். எனவே விரைவாக உங்கள் பங்களிப்புக்களை செய்யுங்கள்.
.............................................................................................................................................................................................
மறுநாள் மேகன் உதயனிற்கு போனடித்து இரண்டாயிரம் யுரோ றெடி பண்ணிவைச்சிருக்கிறன் எங்கை சந்திக்கலாம்.
கொஞ்ச நேரத்திலை லா சப்பல் புட்டுக்கடைக்கு வருவன் அங்கை வாங்கோ.

உதயன் விடுதலைக்கு போனடிச்சான் உங்களிட்டை சேத்த காசையும் கணக்குகளும் தரவேணும். அதோடை இனி நான் நிதி சேகரிக்கிற வேலையளையும் விடப்போறன். இனி என்னாலை ஏலாது.மனச்சாட்சி இடம் குடுக்குதில்லை.
உதயன் விடுதலையிடம் பணத்தையும் கணக்குகளையும் ஒப்படைத்தவன் அவனது தோள்பையில் மிச்சமிருந்த பிரசுரங்கள் சி. டி க்களையும் எடுத்து கொடுத்துவிட்டு விடைபெற்றவன். பத்து வருடங்களிற்கு மேலாக அவனது தோளில் தொங்கிய அந்த தோல்பையை இனி எனக்கு தேவைப்படாது என்று சொல்லியபடியே வீதியோரத்தில் கிடந்த குப்பை வாளியில் எறிந்து விட்டு லா சப்பல் இரயில் நிலையத்தை நோக்கி நடந்தான். தோளில் பை இல்லாத உதயனை பலர் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். சிலர் அடையாளமே கண்டுகொள்ளவில்லை.

அன்று மோகன் வேலைக்கு போகும் பொழுது கையில் பெரியதொரு போர்வையுடன் போயிருந்தான். அவனது முதலாளி அவனிடம்.

மோகன் என்ன போர்வையோடை வருகிறாய் வீடு இல்லையா றோட்டிலையா படுக்கப் போகிறாய். ..

இல்லை எங்கடை நாட்டிலை நடக்கிற படுகொலைகளை எல்லாருக்கும் தெரியப்படுத்த எங்கடையாக்கள் நாலுபேர் ஈபிள் ரவருக்கு முன்னாலை உண்ணாவிதரம் இருக்கினம்.
வேலை முடிய அவையளோடை நானும் போய் விடியும் வரை இருக்கப் போறன். சரியான குளிர் அதுதான் போரவையை கொண்டந்தனான்..


சரி சாப்பிடாமல் இருந்தால் எல்லாருக்கும் உங்கடை பிரச்சனை தெரிந்திடுமா??


அது ... அது ...ஏன் சாப்பிடாமல் இருக்கினம் என்ன காரணம் எண்டு எல்லாரும் கேட்பினம் தானே. அப்ப நாங்கள் விசயத்தை சொல்லுவம்.


அதையே சாப்பிட்டிட்டு சாதாரணமாய் நின்று சொன்னாலும் கேட்பினம்தானே??

அதுகள் எங்கடை போராட்ட வடிவம் உங்களுக்கு புரியாது


உங்கடை போராட்ட வடிவம் எங்களிற்கு புரியாது என்கிறாய் பிறகு அந்த வடிவத்தாலையே புரியவைக்கப்போறம் என்கிறார் முரண்பாடாக உள்ளதே


மோகனிற்கு எரிச்சலாக வந்தது ஆனாலும் அக்கிக் கொண்டு சாப்பிடாமல் இருந்து தங்களை வத்தி போராட்டத்தை நடத்தினால் தான் எங்கடையாக்கள் எல்லாரும் தாங்களும் வீதியிலை இறங்கி போராட முன்வருவினம்.

கொஞ்சம் பொறு பிரச்சனை உங்கடை நாட்டிலைதானே.

ஓம்.

பாதிக்கபடுகிறது உங்களது இனம் தானே ??

ஓம்.

அப்ப இங்கை வாழுகிற உங்கடை இன மக்கள் எல்லாரும் தாங்களாய் வீதிக்கு வருவினம் தானே போராடுவதற்கு.. பிறகெற்கு சாப்பிடாமல் கஸ்ரப்பட்டு அவையளை வரவழைக்கவேணும்.

மோகனிற்கு பதில் சொல்லத் தெரியவில்லை அது..வந்து....அப்பிடித்தான் ..ஆனால் எனக்கு இந்த சனி ஞாயிறு லீவும் வேணும் நான் பெல்ஜியம் ஜ.நா சபைக்கு முன்னாலை நடக்கப்போற ஆர்ப்பாட்டத்துக்கு போகவேணும்.

அது இருக்கட்டும்இப்ப பொதுவாகவே பெல்ஜியம் ஜ.நா சபை கூட்டத்தெடர் இல்லை அதைவிட சனி ஞாயிறு லீவுநாள் உங்கடை ஆர்ப்பாட்டத்தை பார்கிறதற்கு அங்கை யார் இருக்கப் போகினம்

அதுதான் எனக்கும் புரியேல்லை எப்பவுமே ஜ.நா சபை லீவு நேரம் இல்லாட்டி சனி ஞாயிறு லீவு நாட்களிலைதான் எங்கடையாக்கள் ஊர்வலம் ஆர்பாட்டத்தை ஏற்படு செய்யினம். ஊரவலமாய் போய் வாசல் காவல் காரனிட்டை மனு குடுக்கிறதே வேலையா போச்சுது. ஆனால் சுவிசிலை ஒருதடைவை அங்கத்தைய இளையோரமைப்பு மட்டும்தான் உருப்படியா ஜ.நா.சபை கூட்டத் தொடர் நடக்கேக்குள்ளை ஆர்ப்பாட்டம் செய்திருக்கினம். ஆனாலும் போகமல் இருக்க முடியேல்லை போகவேணும்.

உனக்கு எப்ப லீவு வேணுமோ தாராளமாய் எடுத்துக்கொள். ஆனால் எனக்கென்னவோ உன்னுடைய பிரச்சனையே புரியவில்லை
..........................................................................................................................................................................
ஜெர்மனியில் பிரித்தானிய மற்றும் சீனத்தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. அதன் ஏற்பாடுகளை ஜெர்மனிய தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் சுஜாதா செய்திருந்தார். அதற்கு முதல் பெல்யியம் ஜ.நா சபைக்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தவரும் அவரே. அவரிடம் வந்த ஜெர்மன் பொறுப்பாளர் வாகீசன். இவங்களுக்கு நாங்கள் சும்மா வெளியிலை நிண்டு கத்தி பிரயோசனம் இல்லை அதாலை இண்டைக்கொரு வேலை செய்யப் போறம். நீங்கள் எம்பசி வாசலுக்கு கிட்ட கூடுதலா பெண்களை முன்னாலை விடுங்கோ. பிரான்சிலை இருந்து ரகு குறூப்பை கூப்பிட்டிருக்கிறன் அவங்கள் இடையிலை புகுந்து கல்லெறிஞ்சு எம்பசி கண்ணாடியளை உடைச்சிட்டு சனத்தோடை சனமாய் மாறி போயிடுவாங்கள் நீங்களும் கொஞ்ச பெட்டையளிட்டை கல்லை குடுத்துவிடுங்கோ. பயப்பிடாதையுங்கோ நிறை சனம் எண்டபடியாலை பொலிஸ் கண்டு பிடிக்காது


இந்தத் திட்டம் ஆi;ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்கியிருந்த பாதர் இமானவேலிடம் யாரோ சொல்லிவிட அவர் ..ஒருத்தரும் கல்லெறியக்கூடாது அப்பிடி செய்தால் இனியொரு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தரமாட்டாங்கள். எறிஞ்சால் நானே பொலிசிலை பிடிச்சுக் குடுத்திடுவன் என்று வாகீசனிடம் சொல்லிவிட அங்கு அருகில் வந்து விட்ட ரகுவிற்கு செய்தி போனது. சே.......பாதிரிக்கு தேவையில்லாத வேலை இவ்வளவு தூரம் வந்திட்டம் சும்மா திரும்பி போகேலாது என்ன செய்யலாமென யோசித்தவனிற்கு ஒரு யோசனை தோன்றியது . கல்லுத்தானே எறியக்கூடாது தனது நண்பர்களை அழைத்து விடயத்தை சொன்னான். பிரித்தானிய தூதரகத்தினுள் முட்டைகள் போய் விழ ஆரம்பித்தது. பாதுகாப்பு அதிகாரி ஒருத்தன் வந்து பிரித்தானிய கொடியை பத்திரமாக இறக்கி உள்ளே கொண்டு சென்றான். அப்பொழுது சில கற்களும் உள்ளேபோய் விழ மேலதிகமாக போலிசார் அங்குவர ரகு குழுவினர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
மினக்கெட்டு வந்ததுக்கு பிரயொசனம் இல்லாமல் போச்சுது என்ன செய்யலாமென மற்றவரகளுடன் ஆலோசித்தான். நோர்வேயிலை செய்தமாதிரி சிறிலங்கன் எம்பசியை உடைச்சுப்போட்டு போவம் எண்டான் ஒருத்தன். டேய் ஜெர்மன் பொலிசை விழையாட்டா நினைக்காதை அவங்கள் பிரெஞ்சு பொலிசு மாதிரியில்லை பிடிச்சாங்களெண்டால் கட்டிக்கொண்டு போய் கட்டுநாயக்காவிலை இறக்கிவிட்இடிட்டுத்தான் மற்றவேலை பாப்பாங்கள். வேண்டாம் பிரான்சுக்கே திரும்பி போவம் என்று முடிவெடுத்தார்கள்.
.............................................................................................................................................................................................
19.05.2009 செவ்வாய்
. வேலையில் நின்ற மோகனின் கைத் தொலைபேசி அடித்தது எடுத்தான் அவனது நண்பன் ஒருவன். டேய் நியூஸ் தெரியுமோ தலைவரின்ரை பொடியெண்டு சி என் என் னிலை காட்டுறாங்கள். மோகனிற்கு தலைசுற்றி கண்கள் மயங்குவது போலை இருந்தது கிழே குந்தி இருந்துவிட அவனிற்கு பக்கத்தில் நின்றவன் முதலாளியை கூப்பிட்டு விசயத்தை சொல்லவும்.
இவன் கொஞ்சநாளாய் இப்பிடித்தான்..என்றபடி அவனை வீட்டிற்கு போய் ஓய்வெடுத்து வரும்படி அனுப்பிவிட்டான். வீட்டிற்கு வந்தவன் இரண்டுநாளாய் வேலைக்கே போகவில்லை ஏதாவது ஒரு செய்தி தவைர் இருக்கிறார் என்று சொல்லாதா?? தலைவர் தான் இருக்கிறன் எண்டு எதிலையாவது அறிவிக்கமாட்டாரா என இரண்டு நாளாய் உலகத்தின் அனைத்து மொழிகளிலும் உள்ள தொலைக்காட்சிகளை பாத்தும் வானொலிகளையும் கேட்டும் களைத்துப்போய்விட்டான். பலம் தக்கவைக்கப்பட்டிரக்கு பணம்தான் பிரச்சனையெண்டு விடுதலை சொன்னவர் எதுக்கும் அவருக்கு போனடிச்சு பாப்பம் என நினைத்து விடுதலையின் தொலைபேசி இலக்கத்தை அழுத்தினான். அந்த இலக்கம் பாவனையில் இல்லை என்று சொல்லியது

22.05.2009
ஜேன் பியரின் அலுவலகத்தில் இருபத்தியொரு தமிழர்களின் கோப்புக்கள் அடக்கிவைக்கப்பட்டிருந்தது. தன்னுடைய குழுவினரை அழைத்தவன் நாங்கள் நடவடிக்கையில் இறங்கும் நேரம் வந்துவிட்டது. இன்று இருபத்தியொரு பேரையும் கண்காணியுங்கள். இன்று இரவிலிருந்து நாளை அதிகாலைக்குள் அனைவரையும் கைது செய்துவிடவேண்டும். என உத்தரவிட்டவன். தேவனை அழைத்து அனேகமாக நாளையுடன் உங்களிற்கும் விடுதலை கிடைத்துவிடும். இன்று விடிய விடிய வேலை உண்டு தயாராக இருங்கள் என்று சொல்லியவன். என்னுடைய குழு நடவடிக்கைக்கு இறங்கி விட்டார்கள் அதனை கவனிக்கவேண்டும் மீண்டும் சந்திப்போம் என விடைபெற்றான்.
அன்று வேலைக்கு போயிருந்த மோகன் லா சப்பல் பக்கம் போனாலாவது ஏதாவது செய்தி கிடைக்கும் என நினைத்து லா சப்பலில் இறங்கி நடந்து கொண்டிருந்தான் அனைத்து தமிழர் முககங்களிலும் ஒரு இறுக்கம். யாரை பார்த்தாலும் என்னவாம். இருக்கிறாரா?? இல்:லையா என்கிற கேள்விதான். லா சப்பலின் பின்பறமாக இருந்த இரயில்வே பாலத்தில் ரகு குழுவினர் நின்று தண்ணியடித்தபடியிருந்தனர்.

அவர்களை கண்டதும் மோகனுக்கு மனதில் சின்தொரு மகிழ்ச்சி ஏனெண்டால் ரகு தான் இயக்கத்திலை கனகாலம் இருந்தவன் எண்டும் கடைசி நேரம் வரைக்கும் வன்னியோடை தொடர்பிலைஇருந்தவன்எண்டும் அடிக்கடி சொல்லியிருக்கிறான் அவனுக்கு விசயம் தெரிஞ்சிருக்கும் என்று நினைத்தபடி ரகுவிடம் போனவன். என்னமாதிரி செய்தியள்ளை படத்தை அடிக்கடி காட்டுறாங்கள் .ஆனால் இஞ்சை கனபேர் இருக்கிகிறார் எண்டினம் உனக்கு ஏதாவது தெரியுமே எனக் கேட்டான். லேசாக மற்றவர்களை பார்த்து ஒரு ஏளனப்பன்னகையை வீசியவன் நான் பதில் சொல்லியே களைச்சுப் போனன். எண்டவன் பிளாஸ்ரிக் கிண்ணத்தில் விஸ்கியை ஊற்றி கலந்து மோகனிற்கு நீட்டியவன் .இஞ்சை வடிவாய கவனி என்றபடி அங்கு நின்ற காரின் போனற் மீது படிந்திருந்த தூசியில். ஒரு வட்டத்தை போட்டான் இதுதான் நந்திக்கடல் 18 ந திகதி விடியப்பறம் நாலுமணி சொர்ணம் தலைமையிலை இருபது படகுகள் எல்லாத்திலையும் கரும்புலியள் தலைவரும் ஒரு படகிலை ஏறுறார். படகுகள் ஸ்ரட் ஆகிது தலைவரின்ரை படகுக்கு முன்னாலை அஞ்சு படகு வலப்பக்கம் அஞ்சு இடப்பக்கம் அஞ்சு பின்னாலை அஞ்சு ..நந்திக்கடல் பாதியை தாண்டேக்குள்ளை ஆமிக்காரன் கண்டிட்டான். அடிபாடு தொடங்கிது.. என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வேகமாக வந்த சாதாரண கார் ஒன்றில் சிவில் உடையிலிருந்த காவல்த்துறையினர் இறங்கி போலிஸ் என்று தங்கள் அடையாள அட்டையை உயர்த்தி காட்டிய அதே நேரத்தில் கைத்துப்பாக்கிகளையும் அவர்களை நோக்கி நீட்டியபடி கையை உயர்த்தச் சொன்னார்கள். கையில் விஸ்கி கிளாசுகளுடன் நின்றுகொண்டிருந்தவர்கள் அதனை அப்படியே கீழே போட்டு விட்டு கையை உயர்த்தினர்.

மேகனிற்கு கிளாசை கீழேபோட மனமில்லை அதனை காரில் மேல் வைத்து விட்டு கையை உயர்த்தினான். எங்கேயோ தயாராய் நின்ற போலிஸ் வான் ஒன்று சைரன் அடித்தபடி வேலகமாய் வந்து நின்றது . மோகனின் அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்த ஒருவர் அவனை அங்கிருந்து போகும்படி கூறிவிட்டு மற்றைய அனைவரும் விலங்கிட்டு வானில் ஏற்றப்பட்டனர். சே....... நந்திக்கடலுக்குள்ளால தலைவர் உடைச்சுக் கொண்டு வெளியாலை போறதுக்கிடையிலை பிறெஞ்சு பொலிஸ்காரன் வந்து கெடுத்துப் போட்டான் என்று திட்டியபடி போய்க்கொண்டிருந்தான்.
.....................................................................................

ஜேன்பியரிற்கு முன்னால் விலங்கு கழற்றப்ட்ட நிலையில் ரகுவிறைப்பாய் அமர்ந்திருந்தான் உங்களிற்கு பிறெஞ்சு நன்றாக புரியுமா??
இல்லை கொஞ்சம் புரியும்.

உங்களிற்கு உதபுவதற்காக ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்துள்ளோம்.


என்னை எதற்காக கைது செய்தீர்கள் நான் செய்த தவறு என்ன??


மொழி பெயர்ப்பாளர் வந்ததும் உங்களிற்கு விளக்கமாக கூறுகிறேன்.


. சிறிது நேரத்தில் உள்நுளைந்த தேவன் ரகுவிற்கு தன்னை அறிமுகப்படுத்திவிட்டு அருகில் அமர்ந்தான்


ஜேன்பியர் வழைமையான சம்பிரதாயகேள்விகளான பெயர் விபரம் விலாம் என கேட்டு கணணியில் பதிந்தவன். அவனது குற்றங்களை வகைப்படுத்தினான். பொது மக்களிற்கு இடைஞ்சல் ஏற்படுத்தியது தனியார் சொத்து பொது சொத்துக்களிற்கு சேதம் ஏற்படுத்தியது. எனத் தொடங்கியவன் ஒரு கார் கண்ணாடியை உடைக்கும் பொழுது அதில் இருந்த பெண்ணிற்கு கண்ணாடி துகள்கள் கண்ணில் புகுந்து மோசமாக பாதிக்கபட்டது. யெர்மனிவரை சென்று குழப்பம் விழைவித்து என அனைத்தையும் சொல்லிவிட்டு இவையனைத்தையும் ஒத்துக்கொள்கிறீரா எனக்கேட்டான்.

இவையெல்லாம் தான் நான் செய்த குற்றங்களா?? இவை குற்றமல்ல எமது போராட்டம். உலகத்திற்கும் உங்களிற்கும் எமது மக்கள் படுகின்ற துன்பங்களை எடுத்துச்சொல்வதற்கு எங்களிற்கு வேறை வழியில்லை.


பாரிஸ் 10ல் ஒரு கடையை உடைத்து நாசம் செய்து கடையில் இருந்த சிலரை மோசமாக தாக்கி காயப்படுத்தியிருக்கிறீர்கள். அவர்கள் வைத்தியசாலையில் உள்ளனர்.
அவங்கள் எங்கடை எதிரியள் அவங்கள் தான் எங்கடையாக்களை படுகொலையள் செய்யிறாங்கள். அதை நீங்களும் பாத்துக்கொண்டுதான் இருக்கிறியள். அவங்கள் அங்கை கொலை செய்யலாம் நாங்கள் அடிச்சால் குற்றமா??


இதுஉங்கள் நாட்டில் நடக்கும் சம்பவங்களிற்கான விசாரனையல்ல பிரான்ஸ் நாட்டில் அதன் சட்டங்களை மதிக்காமல் நடந்த சம்பவங்களை பற்றிய விசாரணை இங்கு எமக்கு எல்லாருமே சமம். வன்முறையை யார் செய்தாலும் குற்றம்தான்.


எமது விடுதலைக்காகத்தானே எங்கடை தலைவர் போராடினவர் அவரை பயங்கரவாதியெண்டு பிரான்சும்தான் சொல்லி எங்களுக்காக போராடின இயக்கத்தை தடை செய்திருக்கினம். எங்கள் தலைவனிற்காக எதையும் செய்வேன் உயிரையும் கொடுப்பேன் அதை நீங்கள் வன்முறையெண்டால் தாராளமாக என்னை உள்ளை போடுங்கோ.


நல்லது என்றபடி ஜேன்பியர் கோப்பு ஒன்றை எடுத்தவன் அதிலிருந்த ஒரு தாளை மட்டும் எடுத்து அதில் மெல்லிய பச்சை வர்ணத்தால் கோடிட்ட இடத்தை மட்டும் ரகுவிற்கு படித்துக்காட்டச்சொல்லி தேவனிடம் கொடுத்தான். தேவன் படிக்கத் தொடங்கினான் அப்பொழுதுதான் ரகுவிற்கு புரிந்தது அது அவன் பிரான்சில் அகதி அந்தஸ்த்து பெறுவதற்காக எழுதிய அவனது விணப்பம். ரகுவின் முகம் வெளிறத் தொடங்கியது. தேவன் தொடர்ந்து படித்தான்.


பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த என்னை புலிகள் அமைப்பினர் பலவந்தமாக ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றவர்கள் வன்னியில் உள்ள ஒரு பயிற்சிமுகாமிற்கு அனுப்பி வைத்தனர். எனக்கு புலிகள் அமைப்பில் இணையவோ பயிற்சி எடுக்கவோ விருப்பம் இல்லை ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் பயிற்சி தொடங்கி இரண்டு வாரத்தில் சந்தர்ப்பம் பார்த்து அங்கிருந்து தப்பியேடினேன். தப்பியேடியநான் எனது வீட்டிற்கு மீண்டும் செல்ல இயலாது காரணம் புலிகள் இயக்கம் என்பது மிகவும் கொடுரமான அமைப்பு அவர்களது தண்டனைகளும் கொடுரமானதாகவே இருக்கும். சுட்டும் கொன்று விடுவார்கள். எனவே நான் அவர்களிடம் அகப்படாமல் தப்பி யோடி கொழும்பிற்கு வந்து சேர்ந்திருந்தேன் கொழும்பிற்கு வந்து கொட்டாஞ்சேனையில் எனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து எனது படிப்பினை மேற்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தவேளை ஒருநாள் சிறீலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினராலும் சுற்றிவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளிற்குள்ளாக்கப்பட்டேன்.

சித்திரவதைகள் தாங்கமுடியாமல் நான் இயக்கத்தால் பலவந்தமாகவே பயிற்சிக்கு அழைத்து செல்லப்படதாக கூறியிருந்தேன். அனால் அவர்கள் நம்புவதாக இல்லை தொடர்ந்தும் சித்திரவதைகளை அனுபவித்தேன் அப்பொழுது பெரும் தொகை பணத்தை எனது தாயார் சிறீலங்கா காவல்த்துறையினரிற்கு கொடுத்து என்னை மீட்டு பிரான்சிற்கு அனுப்பிவைத்தார். எனவே சிறீலங்காவில் எனக்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகளாலும் இலங்கையரசின் கட்டுப்பாட்டு பகுதியில் இலங்கையரசு நிருவாகத்தாலும் உயிரிற்கு அச்சுறுத்தல் இருப்பதால் பிரான்சில் நான் அகதி தஞ்சம் கோரியுள்ளேன்..... நிறுத்திவிட்டு தேவன் ரகுவை திரும்பிப் பார்த்தான்.

அண்ணை கொஞ்சம் தண்ணி தருவியளோ??


ஜேன்பியர் ஒரு படத்தினை ரகுவிடம் காட்டி இவரை தெரியுமா என்றான்.


ரகு மிண்டி விழுங்கியபடி ஓம் கேள்விப்பட்டிருக்கிறன் என்றான்.


இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என்றபடி அவன் பதிவு செய்த ஆவணங்களை அவனிடம் நீட்டியபடி ஒரு பேனாவையும் நீட்டி கையெழுத்து போடுங்கள் என்றான்.


அண்ணை என்னை சிலோனுக்கு ஏத்துவாங்களோ?? அண்ணை தெரியாமல் பெடியளோடை சேந்து சும்மா பகிடியாய் முசுப்பாத்திக்கு செய்து போட்டன் மன்னிச்சு கொள்ளச் சொல்லுங்கோ. என்றவன் ஜேன் பியரை பாத்து மிஸ்யூ... எக்சுசே முவா மிஸ்யு ... பறதோம் மிஸ்யு. என்றான்

தம்பி நான் ஒண்டும் நீதிபதி இல்லை அதுமாதிரித்தான் அவரும் .. அவர் முடிவு செய்யிறெல்லை. உங்களை நீதிமன்றத்திலை ஒப்படைப்பினம். அவையள் முடிவு செய்வினம்.


ஒரு போலிஸ் காரர் வந்து ரகுவிற்கு விலங்கிட்டு அழைத்துச் சென்றார்...........
ஜேன்பியரின் சேவைக்காலம் முடிவடைந்து விட்டது அன்று அவன் தனது அலுவலகத்தை புதிதாக பொறுப்பேற்பவரிடம் ஒப்படைக்கவேண்டும். அலுவலகத்தினுள் ஒரு கடுதாசி பெட்டியுடன் உள் நுளைந்தவன் அங்கிருந்த தன்னுடைய பொருட்கள் அனைத்தையும் பெட்டியில் போட்டவன் படங்களையும் ஒவ்வொன்றாக கழற்றி பெட்டியில் போடத் தொடங்கினான். கடைசியாய் பிரபாகரனின் படத்தை எடுத்து கையில் வைத்தபடி சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு தமிழில் பா வா ம் பிற பாகரன் என்று சொல்லி தலையாட்டியபடியே படத்தினை தனது பெட்டியில் போட்டபடி அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.


முற்றும்.

யாவும் கற்பனையல்ல

பிற் குறிப்பு ..ரகு 5 வருடங்கள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறான். சிறைத்தண்டனை முடிந்ததும் நாடு கடத்தப்படுவான். மேகன் இறுதியுத்தத்தில் காணாமல் போன தாயாரையும் இயக்கத்தால் பிடித்துச் செல்லப்பட்ட தங்கையையும் தேடிக்கொண்டேயிருக்கிறான்..உதயன். வேறு மானிலத்திற்கு போய் அமையாக வாழ முயற்சிக்கிறான். தேவன் தனது மொழி பெயர்ப்பு வேலையை விட்டுவிட்டான். ஜேன் பியர் ஓய்வு பெற்று தனது கிராமத்திற்கு போய் விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளான். வாகீசன் ஜெர்மன் சிறையில் இருக்கிறான். சுவிஸ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் குரு அங்கு முன்னர் இயக்கத்திற்கு வேலை செய்த அனைவரையும் துரோகிகள் என அறிவித்து விட்டு தானே புதிய பொறுப்பாளர் என பிரகடனம் செய்துள்ளான்.