வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா... வீர வணக்கங்கள்..
11:49 AM, Posted by sathiri, 22 Comments
இந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்..எங்கள் கனவு..எங்கள் உழைப்பு..எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்று அத்தனையையுமே இழந்துவிட்டோம்..இனியென்ன எல்லாம் முடிந்து விட்டது.. இனி பத்திரிகைகளில் மட்டுமல்ல இணையத்தளங்களிலும் எழுதுவதில்லை அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் மக்களிற்கு ஏதாவது செய்தாலே போதும் என்று முடிவெடுத்து மூடிக்கொண்டு இருந்துவிட்டேன்..
ஆனாலும் முடியவில்லை..காரணம்.. இப்பொழுது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று சர்ச்சையில் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இரண்டாக பிரிந்து ஒரு சண்டை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்.. ஒருவர் மற்றவரை சாதாரணமாய் நலம் விசாரிப்பது போலவே அவர்களிற்குள் துரோகிகள் என்று கூறிவிட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்.. புலிகளின் வெளிநாட்டு விவகாரங்களிற்கான பேச்சாளர் பத்மநாதன்.. 24ந்திகதி பிரபாகரனும்.. அவரது பிள்ளைகளும் யுத்தத்தில் இறந்து விட்டார்கள் என்கிற அறிவிப்பே..இத்தனைக்கும் காரணம்..அவரின் அறிவிப்பு வெளியான உடனேயே வெளிநாடுகளில் உள்ள ஒரு குழுவினர்..பத்மநாதன் விலைபோய்விட்டார் துரோகி என்றுவிட்டு அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே அவசரமாக நெடுமாறன் அவர்களுடனும் வைகோடனும் தொடர்பு கொண்டு பிரபகரன் இறக்கவில்லை உயிரோடதான் இருக்கிறார் என்று ஒரு அறிவிப்பை விடவைக்கின்றனர்.
வழைமை போலவே அதிகமாய் உணர்ச்சி வசப்படும் வை.கோ அவர்கள் இந்த விடயத்திலும் உணர்ச்சி வசப்பட்டு பத்மநாதனின் இந்த அறிவிப்பு துரோகத்தனமானது என்று ஒரு வசனத்தையும் சேர்த்தே சொல்லி விட்டார்.. இவர்கள் இருவரும் புலிகளின் ஆதரவாளர்களே தவிர புலிகளின் பேச்சாளர்களோ உறுப்பினர்களோ அல்ல..இவற்றுக்கிடையில்.. யாரென்று இதுவரையில் கேள்விப்பட்டே இருக்காத பெயர்களிலும்.. இல்லாத படையணியின் பெயரிலும் கூட பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற அறிவிப்புக்கள் வெளியாகிக்கொண்டிருந்தபோது புலிகளின் அரசியல் பிரிவில் எஞ்சியிருக்கும் மட்டு..அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவின் பொறுப்பாளர் தயாமோகனும் பிரபாகரன் இல்லை என்பதனை ..பி.பி.சி. தமிழ் ஓசையூடாக உறுதி செய்தபொழுது தயாமோகனும் துரோகியாக்கப்பட்டார்..
பிரபாகரனிற்காக அஞசலிநிகழ்வு செய்த ஜி.ரி.வி. என்கிற தொலைக்காட்சி சேவையின் ஊழியர்கள் மிரட்டப்பட்டார்கள்..(அவர்கள் மிரட்டப்படுவது இது முதல்தடைவையல்ல)ஜி. ரி்வியும்..எதற்கு வம்பு என்று .. பிரபாரனிற்கான அஞ்சலி நிகழ்வினை இடைநிறுத்தியது..சரி இனி இவர்களிற்கு யார்தான் வந்து உறுதிப்படுத்தவேண்டும்.. இறந்து போன பிரபாகரனே திரும்பவந்து நான் இறந்துவிட்டேன் நம்புங்கடா.. என்று சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா??அப்படி நடந்தாலும் பிரபாகரனும் துரோகியாக்கப்படுவார்.. 34 ஆண்டுகள் ஒரு ஆயுத விடுதலைப்போராட்டத்தினைநடத்தி.. கொண்ட கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு வீரனிற்கு ஒரு பூவினைப்போட்டு மனதார அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் மக்களை குழப்பியடித்து முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மாற்றுக்கருத்தாளர்களோ..இலங்கையரசோ அதன் கூலிகளோ அல்ல..
புலிகளின் வெளிநாட்டு பணியகங்களின் பொறுப்பாளர்களே இத்தனை அசிங்கங்களையும் நிறைவேற்றுகின்றனர்..காரணம் இறுதியாக அவசரகால நிதியென்று புலம்பெயர் தமிழர்களிடம் இவர்கள் சேகரித்த பல மில்லியன் யுரோக்கள் அந்தந்த நாட்டுப்பொறுப்பாளர்களிடமே முடங்கிப்போயுள்ளது. எதிர்பாராதவிதமாக புலிகளின் தலைமையில் அத்தனைபேருமே அழிக்கப்பட்டு விட்டதால்..இனி யாரிற்கும் கணக்கு காட்டத்தேவையில்லையென்று நினைத்து புலம்பெயர்தேசங்களில் உள்ள மக்களிற்கும் கடவுள் ஒருநாள் வருவார் என்பதைப்போல பிரபாகரன் இருக்கிறார்.. ஒருநாள் வருவார்..என்று கதைவிட்டுக்கொண்டே காலத்தை ஓட்டிவிடலாமென்று நினைத்தவர்களிற்கு. பத்மநாதன் மற்றும் தயாமோகனின் அறிக்கைகள் இடியாய் இறங்கியிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை..புலிகள் இனி அரசியல் ரீதியான ஒரு போராட்டத்தினை முன்னெடுப்தற்கு வெளிநாடுகளில் அரசியல் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் முயற்சிசியில் இறங்கிருக்கிறார்கள் என்கிற செய்தியாலும் இவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள் அப்படி ஒரு கட்டமைப்பு உருவானால் அவர்களிடம் தங்கள் கணக்குகள் சொத்துக்கள் பற்றிய விபரங்களையும் கையளிக்கவேண்டிவிடும் என்பதே இவர்களது பயம்..
சரி ஒரு வாதத்திற்கு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றுவைத்தாலும்..புலிகளின் தளபதிகள் தங்கள் இறுதிக்கணம் வரையும் சட்டிலைற் தொலைபேசி வசதியுடன் உலகில்அத்தனை பகுதிகளிற்கும் தொடர்புகொண்டபடியேதான் இருந்தனர்..இது அனைவரிற்கும் தெரிந்த விடயம்...பத்மநாதன் மற்றும் தயா மோகனது அறிக்கைகளால் உலகத்தமிழர்களது நிலை குழப்பமடைந்து அது ஈழத்தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளிற்கு தடையாக அமைந்து அவர்கள் சோர்வடைந்து விடுவார்கள் என்றுகூட சிந்திக்கத்தெரியாமல் 34 ஆண்டுகால போராட்டத்தினை நடத்தியவரல்ல பிரபாகரன்...அவர் எங்கு மறைந்திருந்தாலும் சில நிமிட உரையையாவது பதிவு செய்து சட்டிலைற் தொ.பே மூலம் உலகத்தமிழர்களிற்கு தெரியப்படுத்தி தமது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று நிச்சயம் அறியத் தந்திருப்பார்..
ஏனென்றால். 88ம் ஆண்டு இந்தியப்படை ஆக்கிரமிப்புக்காலத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று இந்திய ஊடகங்கள் எழுதியதில் அது பொதுமக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியபொழுது அன்று இந்தளவு தொழில் நுட்பவளங்கள் இல்லாதபொழுதும் பிரபாகரனின் 3 நிமிடங்கள் அடங்கிய பேச்சை பதிவுசெய்து போராளிகளால் மக்கள் கூடும் இடங்களில் சிறிய ரேப்றிக்காடர்களில் ஒலிக்கவிடப்பட்டு அவரது இருப்பு உறுதிசெய்யப்பட்டது..சரி் அவர் பத்மநாதனின் அறிக்கையை வெளியான பின்னர் பிரபாகரன்உயிருடன்இருந்தும் பதில் அறிக்கைகள் விடாமல் இருக்கிறார் என்றால் அவரும் பத்மநாதனின் அறிக்கையை ஏதோ காரணங்களிற்காக ஏற்றுக்கொள்கிறார் என்பதுதானே அர்த்தம்..
ஆனால் வெளிநாடுகளின் பொறுப்பாளர்கள் மட்டும் ஏற்கமறுப்பதற்கு அவர்கள் சொல்லும் சப்பைக்காரணம் வெளிநாடுகளில் உள்ள தமிழ்மக்கள் மனமுடைந்து விடுவார்களாம்..வெளிநாட்டு தமிழர்கள் மனமுடைந்து போனால் அதனை ஒட்டவைக்க ஆயிரம் வழிகளுண்டு இரண்டு நாள் அழுது விட்டு மூன்றாவது நாள் வழைமைக்கு திரும்பி விடுவார்கள்.ஆனால் இறந்து போன பிரபாகரனை இன்னமும் வாழ வைப்பதன் மூலம் மேலும் சட்டச்சிக்கல்களை உருவாக்கி வவுனியாவில் முட்கம்பிகளிற்கு பின்னால் நாளை என்ன நடக்குமென்றே தெரியாமல் எதிர் காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிகாலம் என்ன???சிந்திப்பீர்களா??
இதற்குமேல் என்னால் வாழைப்பழத்தை உரித்து அவர்கள் வாயில்வைத்து.ஒரு தடியால் வயிற்றிலும் தள்ளிவிடமுடியாது..எம்தலைவனிற்கு அஞசலிசெய்யத்தடையாய் நிற்காதீர்கள் என்று கெஞ்சிக்கேட்டுக்கொண்டு துரோகமும் வஞ்சகமும். புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் பணியக பொறுப்பாளர்களினால் நடத்தைகளினாலும் அவர்களால் அள்ளிவீசப்பட்ட வாக்குறிதிகளினாலும்.உலகநாடுகளின் ஏமாற்று உறுதி மொழிகளினாலும் அழிக்கப்பட்ட ஈழப்போராட்டத்தின் இறுதிநாட்கள் பற்றிய விரிவான அடுத்த பதிவொன்றுடன் சந்திக்கிறேன் நன்றி.
3:15 PM, Posted by sathiri, No Comment
தென்கிழக்காசியாசிவில் பிராந்திய அதிகாரப்போட்டி நடாத்திய உலக வல்லரசுகளிற்கும்.. அந்த நாடுகளில் அரசியல் நடாத்திய தேசிய அரசியல் கட்சிகளிலிருந்து உள்ளுர் அரசியல்நடத்தியவர்களிற்கும்.. இந்தியாவின் மத்திய மானில அரசியல் நடாததியவர்களிற்கும்.. ஏன் புதிதாய் தனிக்கட்சி தொடங்கியவர்களிற்கும்.. இலங்கையில் ஆட்சியை பிடிப்பவர்களிற்கும்.. ஆட்சியை பிடித்தவர்களின் வால்பிடித்து வாழ்ந்தவர்களிற்கும் ...இதுவரை மாற்றுக்கருத்தென்றும்..சனநாயக வாதிகள் என்றும் தங்களை இணைய புரட்ச்சியாளர்களாக்க உதவி இதுவரை ௩௪ஆண்டுகளாக ஒரு தனிமனிதனாய்விலைபோகது நின்று போராடி உலகத்தமிழனிற்கெல்லாம் முகவரி தேடித்தந்துவிட்டு தன்னுடைய முகவரியை தொலைத்து விட்ட பிரபாகரனிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து நீ திரும்ப வந்து விடாதே .. ஏனென்றால் இவர்கள் அத்தனைபேரின் பிழைப்பும் உன்னை நம்பித்தான் இருக்கிறது ...
நன்றி வணக்கங்களுடன்.விடைபெறுகின்றேன்..
9:41 AM, Posted by sathiri, 2 Comments
தமிழ் மணநிருவாகம் என்னை இந்தவார நட்சத்திரமாக தேர்தெடுத்ததற்கு முதலில் நன்றிகள்.. அதே நேரம் இந்தவாரம் என்னுடைய இடுகைகளிற்கு பின்னூட்டம் இட்டு தங்கள் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் பகிர்ந்து கொண்ட உள்ளங்களிற்கும்.. அனானிகளாகி தங்கள் கருத்தக்களை சென்னவர்களிற்கும் ..நன்றிகள்...ஆனால் ஒரு கவலை .. அனானிகளாக பினன்னுட்டமிடுபவர்கள் ..அது திட்டுவதாக இருந்தாலும் சரி.. வாழ்த்துவதாக இருந்தாலும்சரி.... தங்கள் அடையாளத்துடன் கருத்தக்களை முன்வைத்திருந்தால்....அந்தக் கருத்துக்களில் வீரியம் இருந்திருக்கும்...
அந்தக் கருத்துக்களால் ஒரு தாக்கம் இருந்திருக்கும்...அவர்களிற்கும் கவனமெடுத்து பதில் கருத்துக்களை எழுத வாய்ப்பாகவும் இருந்திருக்கும். இனி அது அவர்களது விருப்பம்..இயந்திர மயமாகி விட்ட வெளிநாட்டு வாழ்க்கையில் இயந்திர சங்கரங்களில் ஒன்றாக சுழன்றபடியே முடிந்தளவிற்கு இங்கு பதிவுகளையும் இட்டிருக்கிறேன்என நம்புகின்றேன்.. ஆனால் ஆரம்பத்தில் பலரும் அரசியல் மட்டும் எழுதாமல் பல விடயங்களையும் பதிவிடுங்கள் என்று கேட்டிருந்தனர்..ஆனாலும் ஈழத்தமிழினம் என்பது அரசியல் விழையாட்டுக்களில் சிக்கி சின்னாபின்னமாகி போய் விட்ட இன்றைய காலகட்டத்தில்..தமிழனின் வாசிப்பிலும் எழுத்திலும் உணர்விலும் உணவிலும்...அரசியலே முதலாவதாய் கலந்திருக்கின்றது...எனவே அரசியலை பெரியளவில் தவிர்த்து எழுதமுடியாமல் போய்விட்டது..அரசியல் இல்லாது கலகலப்பாக பொழுது போக்காக கதையும் .கவிதையும்..சினிமாவும் பொதுவிடயங்கள் பற்றியும் எழுதும் காலம் எமக்கும் ஒருநாள் வரும் என்கிற நம்பிக்கையுடனும்..
தமிழ்மணம் இனிவரும் காலங்களில் ஈழத்து பதிவாளர்களையும் நட்சத்திர பதிவாளர்களாக்குவதன் மூலம் எம்முடைய ஆதங்கங்கள் கருத்துக்களையும் தமிழ்நாட்டுஉறவுகளுடனும்..உலகெங்கும் வாழும் தமிழர்களுடனும் பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்குமென்று ஒரு அன்பான வேண்டுகோளுடனும்...எம் தேசத்தில் ஓடும் இரத்த ஆறு நின்று வெள்ளைப்பூக்கள் விரைவில் மலரும் என்கிற நம்பிக்கையுடன் ..விடைபெறுகின்றேன்..நன்றி வணக்கம்....
அழிக்கமுடியா அனுபவம்
2:40 PM, Posted by sathiri, 16 Comments
வணக்கம் உறவுகளே என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத இழப்புக்கள் பல அதில் நண்பர்கள் உறவுகள் என்று தொடரும்...ஆனானும் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யபட்ட எனது தந்தை மற்றும் எனது சகோதரியின் இழப்பிற்கு பின்னர் பல நண்பர்களின் இழப்புக்களும் என்னை பாதித்திருந்தது.. அந்த பாதிப்பின் வடுக்களில் இன்னமும் மறையாத ஒரு வடுவின் உண்மைக் கதை ...இந்தக்கதை ஏற்கனவே சிலபத்திரிகைகளிலும் இணையங்களிலும் வெளியாகியிருந்தாலும் மீண்டும் இங்கு இடுகின்றேன் .. கொஞ்சம் நீளமானதாகிவிட்டது பொறுமையாய் படியுங்கள் நன்றி.. |
1996ஆம் ஆண்டு ஆனி மாதம் மத்திய சென்னையில் ஒரு காலை நேரம் அவசர அவசர மாக வெளிக்கிட்டு சில பைகளில் நான் தயார் படுத்தி வைத்திருந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டு தயாராய் வீட்டு வாசலில் காத்து நின்ற ஓட்டோவில் போய் ஏறிய படி ஓட்டோக்காரனிடம் வரசளவாக்கம் போங்க என்றுவிட்டு அமர்கிறேன். எனக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ராணியக்காவை பாக்க போறன். இன்றைக்கு சுமார் 8 ஆண்டுகளிற்குப் பிறகு ராணியக்காவை பார்க்க போகின்ற மகிழ்ச்சி எனக்குள். பெடியள் எங்கை போறியள் அந்த ஆலமரத்திலை ஏறி ஆடு மாட்டுக்கு கொஞ்சம் குளை வெட்டித் தந்திட்டு போங்கோடா....... என்பார் . ஓமடா உங்கடை முக்கிய அலுவல் என்ன எண்டு எனக்குத் தெரியும் .. .. சந்தியிலை போய் நிண்டு போற வாற பெட்டையளை பார்த்து வீணிர் வடிக்கப் போறியள் அதை விட பிரயோசனமா குளையாவது வெட்டலாம் தானே என்பார். போடி உரல் குத்தி நீ பனையிலையே பாஞ்சு பாஞ்சு ஏறுவியே நீயே ஏறி வெட்டடி என்று விட்டு நாங்கள் சைக்கிழை மிதிக்கவும். நில்லடா காகம் என்ற படிதோட்டத்தில் உள்ள மண்ணாங்கட்டிகளை பொறுக்கி எங்களை நேக்கி எறிந்த படி.. பேரும் இனி வீட்டுப் பக்கம் வந்து பாருங்கோ இருக்கு இரண்டு பேருக்கும் சோறு தண்ணிகூடக்கிடையாது...... என்றபடி தனது வேலையைத் தொடர போய் விடுவார் . இப்படியே ஒவ்வொரு நாளும் எங்களுக்குள் சின்னச்சின்ன சீண்டல்கள் சண்டைகள் என்று தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் ஒரு நாள் கூட உண்மையாய் சண்டை பிடித்தது கிடையாது. ராணியக்கா குள்ளமாக இருப்பார். ஆனால் கடின உழைப்பினால் உருண்ட உறுதியான தேகம் சார் மணி குடுங்க ஆட்டோக்கு பெற்றோல் போடணும் எண்டு நினைவுகளைக் கலைத்தான். அவனிற்கு ஒரு அம்பது ருபாய் தாளை எடுத்து நீட்டி விட்டு ராணியக்காவை பற்றிய நினவகளில் மீண்டும் மூழ்கிப் போனேன்.
யு ஆர் எல்ரி ரி என்று கேட்க அவனும் நோ சேர் நோ என்றவும் அவன் ரமணனை துப்பாக்கி பிடியால் தாக்கவே அதைப் பாத்துக் கொண்டிருந்த ராணியக்கா பொறுக்க முடியாமல் இருவருக்கும் இடையில் புகுந்து அந்த சீக்கியனிடம் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவன் எல் ரி ரி இல்லை படிக்கிற மாணவன் என்றவும். |