Navigation


RSS : Articles / Comments


ஜெனீவா.ஜ.நா சபை முன்னால் ஒரு தமிழர் தீக்குளித்தார்.

7:06 AM, Posted by sathiri, No Comment

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்த சுவிஸ் காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் .லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும் இவரிற்கு ௩௮ வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இவர், 4-5 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாகவும் .உடனடியாக ஜ.நா சபை இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டும் என்றும். ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார்.

No Comment