Navigation


RSS : Articles / Comments


மச்சாங் மகிந்த வெண்டது சோரு சாப்புங்கலாம்..வாங்க

12:01 PM, Posted by sathiri, No Comment

தமிழர் பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியின் விளம்பரப் பலகை
Bold Italic

தலைப்பை படிச்சிட்டு கனக்க மண்டையை குழப்பிக் கொள்ளவேண்டாம். தமிழ்நாட்டில் எப்படி தமிழ் தமிங்கிலமாக மாறிக்கொண்டிருக்கோ ..அதைப்போலதான் இலங்கையிலும் இனி தமிழ் தசிங்களமாக மாறத்தொடங்கப் போகிற அபாயத்துக்கான ஆரம்ப அறிகுறிகள் தொடங்கிட்டுது...இலங்கையின்ரை சனாதிபதித் தேர்தலை உலகமே உத்து பாத்துக்கொண்டிருந்த நேரம் புலம்பெயர் தமிழர் இன்னும் அதிகமாய் உத்து உத்து பாத்துக்கொண்டிருந்தநாங்கள்..முடிவுகள் வெளியாயிட்டுது..அடுத்த தரமும் மகிந்த மாத்தையாவே அமோக வெற்றியோடை சனாதிபதியாயிட்டார்..இந்தத் தேர்தலாலை இவ்வளவு காலமும் இலங்கை சனாதிபதியை தீர்மானிக்கிற வாக்குகள் தமிழரிட்டையே இருக்கு எண்டிற மாயையும் உடைஞ்சு போச்சு..தமிழர்களே போங்கடா நீங்களும் உங்கடை ஒட்டும் நீங்கள் ஓட்டு போட்டாலென்ன போடாட்டிலென்ன இலங்கையின் சனாதிபதி சனநாயக முறையிலை தேர்தெடுக்கப்படுவார் எண்டு பெரிய அபாயகரமான உண்மையையும் இந்தத் தேர்தல் தமிழருக்கு பாடம் புகட்டியிருக்கு..


இது இப்பிடியிருக்க தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சித்திருக்கினம்..தமிழர்களின்ரை ஓட்டு பெரும்பாலானது பொன்ணண்ணைக்கே விழுந்திருக்கு..ஆனாலும் என்ன பொன்னண்ணை விழுந்து போனார்..முக்கியமாய் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா.பிள்ளையான் இனியபாரதி எண்டிற மூன்று ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலையும்..அவங்களையும் மகிந்தாவைவும் சேர்த்து தூக்கி எறிஞ்சது மட்டுமில்லை கருணாவின்ரை பிரிவுக்கு பிறகு மட்டக்கிளப்பான் எண்டாலே எல்லாரும் துரோகியள் எண்டு நினைத்த யாழ்ப்பாணியளிற்கும்..குறிப்பாக புறணி சொன்ன புலம்பெயர் யாழ்ப்பாணியளிற்கும் மட்டக்கிளப்பு மக்கள் தங்கடை வாக்குச் சீட்டாலை ஓங்கி உச்சி மண்டையிலை அடிச்சு நாங்கள் சோரம் போகிற துரோகியள் இல்லை எப்பவும் தன்மான தமிழராய்தான் இருப்பம் எண்டு உரத்து சொல்லியிருக்கினம்..இனியாவது உறைக்குதா பாப்பம்..அடுத்ததாய் மன்னார்.. வவுனியா.திருகோணமலை ..மலையகம் எண்டு எல்லா இடத்திலையுமே 50 வீதத்துக்கும் மேலான மக்கள் வாக்களிச்சிருக்கினம்..தேர்தல் நிலவரம் இங்குஅழுத்தவும்


யர்ப்பாணத்திலை மட்டும் காலங்காத்தாலை நடந்த குண்டு வெடிப்பு ..போக்குவரத்து தடங்கல்..எண்டது மட்டுமில்லாமல்.. புலம்பெயர் தேசத்து போலி புலிகளின்ரை புறக்கணிப்பு அறிக்கைகளும்..யாப்பாணத்திலை புலிகளின்ரை பெயரிலை ஒட்டின போலி நோட்டிசுகள்களாலையும் சனம் குழம்பி..பயந்து..அக்கறையில்லாமல்..20 வீத வாக்களிப்பு மட்டுமே நடந்தது..அது மட்டுமில்லால் யாழ்ப்பாணத்திலை வாக்காளர் எண்ணிக்கைப்படி 721,359 வாக்காளர்..அதிலை 300.000 வாக்காளர் அட்டைகளே வழங்கப்பட்டிருந்தது..இதுபற்றி கூட்டமைப்பும் தேர்தல் ஆணையத்திட்டை புகார் குடுத்திருந்தவை.அதிலையும் 168,583
வாக்குகள் விழுந்திருக்கு..மிச்ச வாக்காளர்கள் பலர் வேறை இடங்களிலையோ வெளிநாடுகளிலையோ வாழலாம்.அப்பிடிப் பாத்தாலும் 50 வீதம் வாக்குகள் யர்ப்பாணத்திலை விழுந்திருக்கு..இலங்கையின் ஒட்டுமொத்த தேர்தல் நிலவரம் இங்குஅழுத்தவும்

இந்த யாப்பாண மாவட்ட வாக்களிப்பு விபரத்தை மட்டுமே வைச்சு புலம்பெயர் தேசத்திலை தமிழ்தேசியத்தை தாங்களே தாங்கிப் பிடிக்கிறதாய் நினைக்கிற இணைய ஊடகங்களிலை இங்கு அழுத்தவும் யாரோ சேரமான் எண்டிற ஒரு டுபுக்கு கட்டுரை ஒண்டை எழுதியிருக்கிறார்..இவரின்ரை பார்வையிலையும் யாழ்ப்பாணம் மட்டுமதான் தமிழீழம்..அங்கை வாழுற மக்கள் மட்டும்தான் தமிழர்..எண்டிற நினைப்பிலை மற்றைய தமிழர் வாழுற மாவட்டங்களின்ரை வாக்கெடுப்பு வீதத்தை பாக்காமல் எழுதியிருக்கிறார்..அங்கை மக்கள் தேர்தலை புறக்கணிச்சதாலை இஞ்சை இவரின்ரைஇதயத்திலை பட்டாம்பூச்சி வேறை பறக்குதாம்..மானாட மயிலாவிலை நமீதாவை பாத்திட்டு கட்டுரையை எழுதியிருப்பார் போலை..அதுதான் பட்டாம் பூச்சி பறந்திருக்கு... அதை பிடிச்சு நச்செண்டு நசிக்க...அதென்னமே தெரியேல்லை வெளிநாடுகளிலை வட்டுக்கோட்டைக்கு 20 வீதம் மக்கள் வாக்களிச்சால் மட்டும்.99.9 வீதம் வெற்றி எண்டு எழுதுவாங்கள்..அதே 20 வீதம் மக்கள் யர்ப்பாணத்திலை வாக்களிச்சால்..மக்கள் புறக்கணிச்சிட்டினம்..வாக்கெடுப்பு தோல்வி ..பட்டாம் பூச்சி பறக்குதெண்டு எழுத எப்பிடித்தான் இவங்களுக்கு மனசு வருகுதோ.. தமிழனுக்கு அரசியல்தான் சுத்த சூனியம் எண்டால் இவங்கள் கணக்கிலையுமல்லோ சுத்தசூனியமாய் இருக்கிறாங்கள் எண்டு இதுகளை பாத்து வெளிநாட்டுக்காரன் நினைக்கப் போறான்.....சாமி நீதான் இவங்களுக்கு நல்ல புத்தியை ..குடுக்கவேணும்..

















தேர்தல் முடிவுகள் நீலம்.மகிந்தா...பச்சை.பொன்சேகா

இந்தமுறை தேர்தல் நடந்த முடிஞ்ச இடங்களின்லை விபரங்களை இலைங்கை வரைபடத்திலை பாத்தவுடைனை எனக்கு இரண்டு விசயம் சட்டெண்டு நினைவுக்கு வந்திச்சிது..
1)கொஞ்சக் காலத்துக்கு முதல் மஞ்சள் சிவப்பிலை இருந்த இடங்கள் எல்லாம் பச்சையாய் மாறிப்போயிருக்கு..ஒவ்வொரு தமிழ் இளையவர்களும் ஆயுதத்தை கையிலை தூக்கேக்குள்ளை கனவிலையும் நினைச்சு பாத்திருக்க முடியாத மாற்றம்..இது அடுத்த தேர்தலிலை நீலமும் பச்சையுமாய் மாறிப்போகலாம்..இல்லாட்டி முழுக்க நீலமாகவே மாறியும் போகலாம்.. எனவே இனிமேலாவது இப்படி வெறும் உணர்ச்சி வசப்பட்டு கட்டுரைகளை எழுதாமல் உண்மையை எழுதுங்கோ..இதை எழுதினதுக்காக என்னைப் போட்டு திட்டாமல் இதக்கான காரணம் என்ன??ஏன் இப்படியெல்லாம்.நடந்தது..இனி என்ன செய்யலாம் எண்டதை தயவு செய்து யோசியுங்கோ..இல்லாட்டி அங்கை மிச்சமிருக்கிற சோரு சாப்புங்குற தமிழர்களும் றபான் அடித்து கிரிபத் கிண்டி சாப்புடுகின்ற நிலைமைக்கு தள்ளப் படுவினம்..
2) ஆயுதப் போராட்டம் தொடங்கின எழுபதுகளிலை ஈரோஸ் இயக்கம் மலையகத்தையும் இணைச்சு இதுதான் தமிழீழம் எண்டு கீறிக்காட்டின படம்..அந்த நேரம் நான் சின்னப்பெடியன் நானும் நினைச்சன் ஆகா மலையகமும் எங்களுக்குத்தானாம்..தமிழீம் கிடைச்சால் அங்கை போய் தேயிலைத் தோட்டத்துக்குள்ளை ஒழிச்சுப் பிடிச்சு விழையாடலாமெண்டெல்லாம் நினைச்சன் (எனது நண்பர்களான ஈரோஸ் தோழர்கள் மன்னிக்கவும்) கன காலத்துக்குப் பிறகு அதே மலையகத்திலை நான் ஒழிச்சிருந்த நேரம் பொலி்ஸ் வந்து என்னைப் பிடிச்சுக்கொண்டு போன கதையும் நடந்தது.
ஆனையிறவில் பிரமாண்டமான படையினரின்வெற்றிச் சின்னம்


தேர்தல் முடிவுகள் வந்தால் பிறகு த.தே.கூட்டமைப்பு தனிய நிண்டிருக்கலாம் விசர் வேலை பாத்திட்டினம் எண்டு எல்லாரும் திட்டித்தீர்க்கினம்..வெண்டிருந்தால் ஆகா ஓகோ எண்டு புகழ்ந்து தள்ளியிருப்பினம்..கூட்டமைப்பு காரர் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்த நேரம் அவையள் சில பேரோடை நான் கதைச்சு தனிய நிக்கேலாதோ எண்டு கேட்டிருந்தனான்..அதுக்கு அவை சொன்ன பதில்.. புலியளின்ரை பின் பலம் இல்லாமல் போனால் பிறகு எங்களாலை இரண்டு பெரிய எதிரிகளையும் ஒட்டுக்குழுக்களையும் ஒரே நேரத்திலை எதிர்க ஏலாது அப்பிடி எதிர்த்தால்..எங்கடை படங்களுக்கு நீங்கள் மாலை போடவேண்டியிருக்கும்..ஆழையாள் மாறி மாறி போட்டிட்டு தங்களுக்குத் தெரியாண்டிட்டு போய் கொண்டிருப்பாகங்கள் .இல்லாட்டி நாங்களும் மொத்தமாய் வெளிநாடுகளிலை வந்து அசேலம்..அடிக்கவேண்டியதுதான்..எனவே எங்களிட்டை வேறை தெரிவு இருக்கவில்லை என்று தெளிவாய் சொல்லியிருந்தவை..

வெற்றி பெற்றால் வரலாறு தோற்றால் வெறும் சம்பவம்..எண்டு தேசியத்தலைவர் சொன்தாய் தமிழ்தாய் நாள் காட்டியிலை படிச்சிருக்கிறன்..நாங்கள் தொடந்து சம்பவங்களையே சந்திச்சு வாறதாலை..இனிமேலாவது சிந்திச்சு..வீராவேச அரசியலை விட்டிட்டு இரண்டு பேரினவாதக் கட்சிகளிடையே விலாங்கு அரசியல் செய்தால் மட்டும்தான் தமிழனின் இருப்பு இலங்கையிலை காப்பாத்தப்படும்..இல்லாட்டி விலங்குகளை விட மேசமாகவே வாழவேண்டிவரும்.. நன்றி
மீள் குடியேற்றப் பட்ட மக்கள் (புளியங்குளம்)