Navigation


RSS : Articles / Comments


புலிக்காச்சல்

11:49 AM, Posted by sathiri, 4 Comments

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது

புலிக்காச்சல்

புலிக்காச்சல் இதுவும் எலிக்காச்சல் பிளேக் கோழிகாச்சல் குனியா மாதிரி இதுவும் ஒரு காச்சல் தான் இதன் தோற்றம் இலங்கையில் புலிகள் ஆயுத போராட்டம் தொடங்கிய காலத்திலேயே இந்த காச்சலும் இலங்கையில் தேற்றம் பெற்று பின்னர் தமிழ்நாடு ஊடாக இந்தியா விரலும் பரவி இன்று அவுஸ்ரேலியா தொடக்கம் கனடாவரை பரவியிருக்கிறது.இது தானாகவும் தொற்றி கொள்ளும் மற்றது பரம்பரையாகவும் இது பரவும் ஆனால் மிக அபூர்வமாக இலட்சத்தில் ஒருவரே இந்த நோயால் பாதிக்கபடுகிறார்கள். சாதாரணமாக காச்சல் வருபவர்கள் எல்லோரும் வைத்தியரிடம்தான் போவார்கள் ஆனால் புலிகாச்சல் வந்தவர்கள் மட்டும் காவல்துறையினரிடம் போவார்கள்.

சரி இந்த காச்சலால் பாதிக்கபட்வர்கள் அல்லது பாதிக்கபட்டவர்களால் நிகழ்ந்த சம்பவங்கள் சிலதை பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். அண்மையை சில செய்திகளை பார்தால் சிலரிற்கு புலிகாச்சல் உச்சத்தில் எறியிருக்கிறது.உதாரணமாக ஒரு செய்தி அ.தி.மு.க. தலைவி ஜெயலிதாவிற்கு post card மூலம் புலிகள் மிரட்டல் இப்படி எல்லா ஊடகங்களிலும் பரபரப்பான செய்தி. இந்தியாவில் அவனவன் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சொல்லி வட்டத்தை பிடித்து மாவட்டத்தை பிடித்து எம்.எல்.ஏ எம்.பி என்று கால் கடுக்க காத்து நின்று அதிகாரிகளிற்கு குடுக்கிறதை குடுத்து ஒரு மனுவை எல்லா கையெழுத்தோடையும் தயார் பண்ணி கொண்டு போய் முதல்வரிடம் குடுத்தாலும் அது அடுத்தவரிற்கு தெரியாமல் குப்பை கூடையிலையோ அல்லது கிடப்பிலையோ போய்விடும்.

ஆனால் யாரோ ஒரு பொழுது போகாத போக்கற்றவன் ஒரு 50 சத post card லை புலி எண்டு எழுதி முன்நாள் மதல்வரிற்கு அனுப்பினது மூலை முடுக்கெல்லாம் செய்தியா பரவிட்டுது. அது மட்டுமா தெழிலதிபரிற்கு தெலைபேசியில் மிரட்டல். துறைமுகத்தை தரைமட்டமாக்க போகிறோம் என்று மிரட்டல்.மீனவர்களை வைத்து ஒழிச்சு பிடிச்சு விழையாட்டு என்று இது இந்தியாவிலை இந்த காச்சலாலை பாதிக்கபட்டவையின்வை செயற்பாடு என்றால் புலத்திலை இந்த காச்சல் பிடிச்சஒரு சிலர்.அண்மையில் பிரான்சின் பொதுதேர்தல் நடந்து அதில் வலது சாரி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தபொழுது சோசலிச கட்சியின் தோல்வியை தாங்க முடியாத பலர் பிரான்சின் முக்கிய நகரங்களிலும் பாரீசிலும் ஆர்பாட்டங்களை நடாத்தினர் அது கலவரமாக மாறி ஆயிரக்கணக்கான வாகனங்களும் ஆர்ப்பாட்ட காரர்களால் கொழுத்தப்பட்டது.

அப்பொழுது பாரிஸ் பகுதியில் வாழும் புலிக்காச்சலில் திரியும் ரயாகரனின் வீட்டிற்கு அருகாமையிலும் ஒரு வானம் கொழுத்தபட்டு அந்த நெருப்பு அவர் இருந்த கட்டிடத்தின் ஒரு பகுதியையும் பாதித்திருந்தது. ஆனால் உடனடியாக தீயணைப்பு படையினரால் அந்த தீ அணைக்கபட்டாலும். பிறகென்ன வழைமை போல காவல் நிலையத்திற்கு ஓடிய அவர் அய்யோ புலிகள் என்னை கொல்ல சதி வீட்டை கொழுத்தி விட்டனர் என்று போட்டார் ஒரு போடு . அது மட்டுமல்ல இந்த காச்சல் காரர்களினால் நடாத்தபடும் இணையதளங்களிலும் செய்தியாக வந்தது.

இவரது கோமாளித்தனம் இப்படியென்றால் இன்னொருவர் அவர்தான் குகநாதன்: பிரான்சில் வானொலி பத்திரிகை தொலைக்காட்சி என்று அனைத்து ஊடக வழிகளையும் தன் சுருட்டலிற்காக பயன் படுத்த நினைத்து ஒரு வானொலி சேவை ஒன்றை தொடங்கினார் அந்த காலகட்டத்தில் தமிழை கேட்க கதைக்க ஏங்கிய புலத்து தமிழர்களிடையே இந்த வானொலி நல்லதொரு வரவேற்பை பெற்றது அந்த மக்களின் ஆதரவை தனக்கு லாபமாக்க முயன்ற இவர் அடிக்கடி பண பற்றாகுறை அதனால் வானொலியை நிறுத்தபோகின்றோம் என்று அடிக்கடி அறிவித்தல் விடுவார். தங்கள் வீட்டில் தமிழ் ஒலிக்காமல் போய் விடுமோ என்கிற ஆதங்கத்தில் மக்களும் பணமாகவும் காப்பு சங்கிலி தோடு ஏன் தாலிகொடியை கூட கழட்டி கொடுத்திருந்தனர்.

அதையே அவர் தொடர்ச்சியாக செய்து சுருட்டி கொண்டு தனது வானொலியில் வேலை செய்தவர்களிற்கோ இது பொது சேவைதானே எனவே பணத்தை எதிர் பார்காதீர்கள் என்று அவர்களிற்கு போக்கு வரத்து செலவு கூட கொடுத்ததில்லை.ஒரு காலத்தில் வானொலியென்றால் ஒரு உயர்வாக ஒரு உன்னத பொழுது போக்காக நினைத்த புலத்து தமிழர்கள் இன்று வானொலியென்றாலே வெண்டா வெறுப்பாகவும் உதை கேட்டாலே தலைவலி என்று நினைக்கின்ற அளவிற்கு ஒரு மாற்றிய பெருமை இவரையே சாரும்.இது மட்டுமல்ல உங்களிற்கு ஆறு அலைவரிசையில் படம் காட்டுகிறேன் என்று ஒரு தொலைகாட்சியை தொடங்கி இப்போ ஒரு அலைவரிசையில் அதில் மூன்று மதங்களின் கூட்டு பிரார்த்தனை போய்கொண்டிருக்கிறது

அதிலும் சுருட்டி வில்லங்கத்தில் மாட்டுபட்டு நிப்பவரால் பத்திரிகை கூட ஒழங்காக அடிக்க முடியாமல் அடித்த பத்திரிகைகளும் விற்காமல் போகின்ற வேகத்திலேயெ திரும்பி வந்து விடுகிற நிலையில்தான். இவர் பிரான்சிலிருக்கின்ற தன்னுடைய இரண்டு வீடுகளையும் விற்று விட்டு மலேசியாவில் போய் குடியேற திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியிருந்தபோதுதான் இவர் நாட்டை விட்டு ஓட போகிறார் என்கிற செய்தி கசிய தொடங்கி விடவே கடன் காரர்களை சமாளிப்பதற்காக உடனே தான் நாட்டை விட்டு ஓடவில்லை தனக்கு புலிகளால் ஆபத்து எனவே சில காலம் வேறொரு நாட்டில் தங்க யொசித்திருக்கிறேன் என்று சொல்லி சமாளித்து அதற்கு ஆதாரமாக இரண்டு இந்திய தமிழர்களான சக்தி மற்றும் அமீன் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து போய் சாட்சியாக்கி தனக்கு புலிளால் மிரட்டல் வருகிறதென்று ஒரு புகாரையும் கொடுத்திருக்கிறார்.

எற்கனவே இவருக்கு சாதுவாய் பிடித்திருந்த புலிக்காச்சல் இப்போ சன்னியாக்கி விட்டிருக்கிறது. இப்படி தங்களின் சய நலங்களிற்காகவும் சுருட்டல்களிற்காகவும் ஏன் சிலர் தங்கள் பெயர் பரபரப்பாக அடிபட்டாலே போதும் என்கிறதற்காகவும் இந்த காச்சலை தாங்களாகவே மன்வந்து எற்று கொள்கிறார்கள் எனவே இது உடல் சம்பத்த பட்டாத மனம் சம்பத்த பட்ட காச்சல் என்பதனால் இதை அவர்களாகவே குணப்படுத்தாமல் விட்டால் அது அவர்கள் இறக்கும் வரை இருந்து கொண்டேதான் இருக்கும் நன்றி சாத்திரி

சாத்திரியின் ஜரோப்பிய அவலம் நாடகம் அங்கம் 8 http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam8.ram

10:10 AM, Posted by sathiri, No Comment

கீழே அழுத்தி கேட்கவும்

http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam8.ram

அவலலம் நாடகம் அங்கம் 7

2:27 PM, Posted by sathiri, No Comment

http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam7.ram

சுவிஸ் மே ஊர்வலம் தாக்குதல் நடாத்தியது யார்????

10:39 AM, Posted by sathiri, No Comment

சுவிஸ் மே ஊர்வலம் தாக்குதல் நடாத்தியது யார்????

சுவிஸ் மே ஊர்வலம் அதில் புலிகள் சிலரை தாக்கினார்கள் என்று சிறீலங்கா மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளிடமும் விலைபோன சில இணையதளங்கள் பொய் செய்தியொன்றை மிக அக்கறையெடுத்து பரப்பிகொண்டிருக்கின்றன.ஆனால் நடந்த உண்மையென்ன என்பதனை சுவிஸ்வாழ் தமிழர்களிற்கு தெரியும் ஆனாலும் உலகெங்கும் வாழும் தமிழர்களும் அறிந்து கொள்வதற்காக நடந்த உண்மையை இங்கு எழுதுகிறேன். மற்றைய நாடுகளை போலவே சுவிசில் வருடாவருடம் மே தின கூட்டங்கள் சூரிச் மானிலத்தில் நடைபெறுவது வழைமை இதனை ஒரு அமைப்பு காவல் துறையின் உதவியுடன் ஒழுங்கு செய்கின்றது . இந்த ஊர்வலத்தில் அங்கு வசிக்கின்ற சகல நாட்டு மக்களும் பல சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் ஊடாகவும் இதனை ஒழுங்கு படுத்தி அதில் கலந்து கொள்கின்றனர்.

ஆனால் அதிக அளவு மக்கள் கலந்து கொள்கின்ற அமைப்புகளிற்கே சுவிஸ்அரசும் காவல் துறையினரும் அவர்கள் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை செய்வதற்கு இட வசதி செய்து கொடுக்கின்றது.சிறிய அளவு தொகை மக்களை கொண்ட அமைப்பினர் மே தின பேரணி நடந்து முடிந்ததும் கலைந்து சென்று விடுவார்கள். அதன்படி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கு செய்யப்படும் ஊர்வலத்திலேயே சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்கள் வருடா வருடம் கலந்து கொண்டு தொழிலாளர் உரிமைக்காகவும் மற்றும் தமிழர் உரிமைக்காகவும் தங்கள் போராட்ட நியாயத்தினையும் சுவிஸ் மக்களிற்கும் உலகிற்கும் எடுத்து சொல்வது வழைமை.இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வதால் தமிழர்களிற்கும் கூட்டமும் மற்றும் நிகழ்ச்சிகழ் நடாத்தவும் அதற்கு வசதியாக மேதினத்தினை ஒழுங்கு செய்யும் அமைப்பினால் ஒரு இடம் அதுவும் எல் ரி ரி அமைப்பு என்கிற பெயரிலேயெ பதிந்து வழைமை போல இட வசதி ஒதுக்கி கொடுக்கப்பட்டது.இந்த ஆண்டு பிரான்ஸ் ஒஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்திலும் ஈழ போராட்ட ஆதரவாளர்களிற்கு சில நெருக்கடிகள் அந்த நாட்டு அரசால் ஏற்பட்டது.

அதே போல சுவிசிலும் ஈழ போராட்ட ஆதரவாளர்கள் மீது ஒரு நெருக்கடியை கொடுக்க சுவிசில் சிறீலங்கா அரசின் புலனாய்வு பிரிவுடன் இணைந்து பகிரங்கமாகவே இயங்கி வருபவரான புளொட் அமைப்பின் றஞ்சன் என்பவர் திட்டத்தை போட்டார் றஞ்சனின் திட்டத்திற்கு இரு மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் கருணா அமைப்பின் ஆதரவாளர்கள் அவர்கள் அண்மையில் தான் சுவிசிற்கு வந்து றஞ்சனுடன் இணைந்து இயங்குகின்றவர்கள் உதவ முன்வந்தனர்.றஞ்சனின் திட்டப்படி கூட்டத்தில் வருபவர்களை கோபப் படுத்துவது அவர்கள் ஆத்திரமடைந்து தனது கூட்டத்தினரை தாக்குவார்கள் அதுவும் பல்லாயிரம் பேர் சேர்ந்து ஆவேசமாக உணர்ச்சி வசப்பட்டு தாக்கும் போது சிலர் இறந்து போக கூடிய சந்தர்ப்பமும் உண்டு.

அப்போது தான் எப்படியும் தப்பியோடி காவல் துறையினரிடம் போய் புலிகள் தன்னை கொல்ல வருகிறார்கள் என்றும் அதற்கு சுவிஸ் ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் பணம் கொடுத்து இருவரை அனுப்பியிருப்பதாக முன்னரே தன்னால் தயார் செய்யபட்டிருந்த அந்த இரு கருணா குழுவினரின் பெயைரை சொல்லி முறையிடுவார். உடனே அவர்களை கைது செய்து சுவிஸ் காவல் துறையினர் விசாரிக்கும் அப்போது அவர்கள் தாங்கள் புலிகள் அமைப்பினர் என்றும் புலிகள் சுவிஸ் பொறுப்பாளர்தான் பணம் தந்து றஞ்சனை கொலை செய்ய சொன்னதாக வாக்கு மூலம் கொடுப்பார்கள். இதை வைத்து சுவிசில் ஈழபோராட்ட ஆதரவினருக்கும் ஒரு நெருக்கடியை கொடுக்கலாமென்று ஏதோ தென்னிந்திய திரைப்படங்களை அதிகம் பார்த்த பாதிப்பில் றஞ்சன் திட்டம் போட்டார்.

அன்று ஈழ போராட்டத்திற்கு எதிராக இயங்குபவர்கள் சுமார் இருபத்தைந்து பேரளவில் அழைத்து கொண்டு இல்லாத ஒரு அமைப்பான புளொட் அமைப்பின் கொடியுடன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு ஒதுக்க பட்ட இடத்திற்கு போய் நின்று கொண்டனர்.அங்கு கூட்டத்திற்கான ஒழுங்குகளில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் இது எங்கள் அமைப்பிற்கென ஒதுக்கபட்ட இடம் எனவே நீங்கள் வேறு இடத்தில் போய் நில்லுங்கள் என்று றஞ்சனிடம் சொல்லவும். றஞ்சன் இது என்ன பிரபாகரன் வீட்டு காணியா என்று தொடங்கி மிக கேவலமான கெட்ட வார்த்தைகளால் திட்டவும் அங்கு நின்றவர்களிற்கு றஞ்சன் குழுவினர் வந்த நோக்கம் புரிந்து போனது. அவர்கள் உடனடியாக மே தின கூட்டத்தை ஒழுங்கு செய்யும் அமைப்பிற்கும் காவல் துறையினரிற்கும் தகவல் சொல்லிவிட்டு அமைதியாய் இருந்து விட்டனர்.

தங்கள் திட்டம் நிறைவேறாத றஞ்சன் குழுவினர் ஊர்வலம் அந்த இடத்தை வந்தடையும் வரை காத்திருந்து விட்டு ஊர்வலம் அங்கு வந்து சேர தொடங்கியதும் ஊர்வலத்தில் புலிகொடியுடன் வந்து கொண்டிருந்த வயதான ஒரவரிடம் கொடியை பறித்து அந்த கொடியால் அந்த வயோதிபரை தூசண வார்த்தைகளால் திட்டியபடி தாக்க தொடங்கினார்கள்.உடனே ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் அவர்களைதிருப்பி தாக்க தொடங்கி விட்டனர்.ஆனால் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்ததால் தழிழர் ஒருங்கிணைப்பு குழவினரால் அவர்களை கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது.றஞ்சன் உட்பட அவர்கள் குழுவினர் தப்பியோடிவிட ஆறு பேர் மட்டும் மக்களிடம் அகப்பட்டு கொண்டனர். உண்மையில் மூவாயிரம் பேரளவில் நின்ற அந்த கூட்டத்தில் ஒருவர் ஒரு அடி அடித்திருந்தாலே இந்த அரசாங்க அடிவருடிகள் இறந்து போயிருப்பார்கள்.

அப்படி ஒரு நிகழ்ச்சிதான் றஞ்சனிற்கும் தேவையாயிருந்தது.ஆனால் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளரும் அதன் பணியாளர்களும் தலையிட்டு அடிக்க விடாமல் தடுத்து அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.தனது திட்டம் ஓரளவு நிறைவேறிய றஞ்சன் அங்கிருந்து வேகமாக ஓடிப்போய் காவல் நிலையத்தினுள் புகுந்து புலிகள் அமைப்பினர் தன்னை கொலை செய்ய துரத்தி வருகிறார்கள் என்றும் இருவர் பெயரை சொல்லி அவர்களையே தன்னை கொலை செய்ய புலிகள் பொறுப்பாளர் அனுப்பியுள்ளார் என்றும் முறையிட்டார்.காவல்துறையினரும் றஞ்சன் சொன்ன இருவரையும் கைது செய்து விசாரிக்க ஆரம்பித்தனர். றஞ்சனின் திட்டப்படி அதுவரை எல்லாம் நன்றாகதான் நடந்தது ஆனால் நடந்து முடிந்ததோ வேறாக இருந்தது.

அந்த இருவரையும் காவல் துறை விசாரித்தபோது அவர்களும் றஞ்சன்: சொல்லிகொடுத்தபடி ஏதோ இலங்கை காவல் துறைக்கு கதை விடுவது போல சுவிஸ் பொலிசிற்கு கதை அளந்து கொண்டிருக்கும் போதே சுவிஸ் காவல்துறை அவர்களின் சாதகத்தை புரட்டி கொண்டிருந்தது. அவர்கள் சுவிசில் அகதி அந்தஸ்த்து கோரும் பொழுது அவர்களது வாக்கு மூலத்தில் தாங்கள் கருணா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் புலிகளால் தங்கள் உயிரிற்கு ஆபத்து என்றும் சொல்லியிருந்தனர்.அந்த வாக்மூலத்தை காவல் துறையினர் அவர்கள் முன்னால் தூக்கி போட்டபோதுதான் அவர்கள் திருவிழாவில் தொலைந்த குழந்தைகளை போல திரு திரு வென முழித்தபடி எல்லாவற்றிக்கும் றஞ்சன் தான் காரணம் என்று உண்மையை ஒரு வரி விடாமல் சொல்லி விட்டனர்.அதுமட்டுமல்ல தன்னுடன் வந்தவர்களை பலி கொடுத்தாவது புலிகள் மீது பழி போட நினைத்த றஞ்சன் மீது இப்பொழுது வழக்கு பதிவாகியுள்ளது.இது மட்டுமல்ல றஞ்சன் மீது எற்கனவே சுவிஸ் காவல் துறையில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது ஆனால் அவற்றில் ஆறு வழக்குகளில் இவர் கைதாகி தண்டனையும் பெற்றுள்ளார். அந்த வழக்குகளின் விபரம் இதோ


1).2002 சுவிஸ் அரசாங்கம் தனது நல்லெண்ண முயற்சியின் பயனாக பேர்ண் மாநிலத்தில் அமைந்திருக்கும் குரிசால் அரினா அரசவிருந்தினர் விடுதியில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்தபோது, அதனைக் குழப்புவதற்கு திரு.ரஞ்சனும் அவரது குழுவினரும் முற்சித்தார்கள். மாநாட்டு மண்;டபத்திற்குள் எதேச்சதிகாரமாக நுழைந்து நல்லெண்ண முயற்சியை குழப்ப முயன்றது. இச்செயலை சுவிஷ் அரச ஏற்பாட்டாளர்கள் நன்கு அறிந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


2)2004 உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஜெனீவாவில் நடாத்திய எழுச்சிநிகழ்ச்சியையும் திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்புவதற்கு முயன்றார்கள்.


3)2005 - சூரிக்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழத்தினரால் நடாத்தப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியையும் திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்புவதற்கு முயன்றார்கள்.


4)2005 பேர்ன் நகரில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடாத்திய வணக்க நிகழ்ச்சியையும் திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்புவதற்கு முயன்றார்கள்.

5)2006 படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் பேர்ணில் நடத்திய நினைவு தினத்தை திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்பியதோடு கண்ணீர் புகையை மண்டபத்திற்குள் பிரயோகித்து அங்கிருந்தவர்களை பாதிப்புக்குள்ளாக்கிய அதேவேளை காவல்துறையினரின் வருகையினால் இவர்கள் அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

6)2006 மார்ச் மாதத்தில் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரிபேர்க் மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் புலம் பெயர் தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்பாடு செய்த கலந்துரையாடல்களை திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்புவதற்கு முயன்றார்கள்.

நன்றி சாத்திரி

நிழலாடும் நினைவுகள்

9:10 AM, Posted by sathiri, No Comment

நிழலாடும் நினைவுகள்

ஒரு மே மாத நினைவு


எண்பதுகளின் ஆரம்பம் ஊரில் தமிழ் இளையதலைமுறையினர் இலங்கை அரசிற்கெதிராக வன்முறை போராட்டங்களை ஆரம்பித்திருந்த நேரம் வட கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொலிசார் மற்றும் அரசாங்கத்திற்கு வால்பிடிக்கிறவை மீது தாக்குதல்களும் நடக்க தொடங்கியிருந்தது. ஆனாலும் எனக்கு அந்த காலகட்டத்தில் இந்த பேராட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை அது மட்டுமல்ல எனது ஊரில் இந்த போராட்டங்களில் ஈடுபட்ட தெரிந்த ஒரு சில இளைஞரை காவல் துறை அடிக்கடி தேடிதிரிந்ததால் அவர்களுடன் பேசவோ பழகவோ கூடாது என்கிற எனது வீட்டு காரரின் கண்டிப்பு வேறை சும்மா கோயிலடியிலை கொஞ்சநேரம் சினேகிதங்களோடை மாலையிலை போய் கதைசிட்டு வாறதுக்கே எனக்கு உதவாக்கரை என்கிற மாபெரும் பட்டத்தை அடிக்கடி வழங்கி கெளரவிப்பார்கள் இதுக்கை இப்படியான தொடர்புகளும் என்றால் வீட்டிலை சேறும் கிடைக்காது பிறகு கோயில் வாசலிலை நிண்டு அய்யர் பலிபீடத்துக்கு நெய்வேத்தியம் வைச்சிட்டு காகத்துக்கு எறியிற வெள்ளை புக்கையைதான் பொறுக்கி தின்னவேணும்.

அது மட்டுமல்ல பொலிசில் எனது உறவினர்களும் சிலர் இருந்தனர் அவங்கள் வேறை என்னை கொண்டு போய் அடிச்சு முறிச்சு போடுவார்கள் என்கிற பயம் இப்படி பல விடயங்களால் எனக்கு இந்த போராட்ட இளைஞர்கள் விடயத்தில் கொஞ்சம் தூரவே நின்று கொண்டேன் என்று சொல்லலாம். படிப்புவிசயத்தில் மட்டுமே எனது கவனத்தை செலுத்தியபடி எனக்கென்றொரு நாளாந்த நிகழ்ச்சி நிரல் இருந்தது அது காலையில் பாடசாலைக்கு போய் வருவது என்கிற பெரிய வேலையுடன் மாலை பாடசாலை விட்டு வீடு திரும்பியதும் சாப்பிட்டு விட்டு ஏதாவது ஒரு கதைப்புத்தகத்தை எடுத்து கொண்டு எங்கள் தோட்டத்திற்கு சென்று அங்கு இருக்கும் காவல் கொட்டிலினுள் போய் சாக்கு கட்டிலில் படுத்தபடி கொஞ்சம் கதையை படித்துவிட்டு ஒரு குட்டி தூக்கம்.

மாலை 6 மணி கோயில் மணி அடிக்கிற சத்தத்திலை எழும்பி முகத்தை கழவிவிட்டு கோயிலடியிலை போய் பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் போட்டு அன்று நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்கு மூண்று தோப்புகரணமும் போட்டுவிட்டு ஒரு விபூதிகுறி ஒன்று இழுத்து அங்கிருக்கிற சந்தண கட்டையை கல்லில் தேய்த்து ஒரு பொட்டும் வைத்து கொண்டு அங்கு தேர் முட்டியில்(தேர் நிறுத்தும் இடம்)அரட்டைக்காக வந்து கூடும் எனது நண்பர்களுடன் சிறிது அரட்டை 7 மணியளவில் வீடு பின்னர் படிப்பு . இதுதான் வழைமையான நிகழ்ச்சி நிரல்.இப்பிடியே போய் கொண்டிருந்த காலத்தில். எனது நண்பர்கள் சிலரும் இந்த போராட்டங்களின் பக்கம் இழுக்கபட்டவர்களாய் இருந்தனர். அதில் சிலர் கம்யூனிச தத்துவங்களால் கவரப்பட்டு அதுபற்றியே அதிகம் பேசினார்கள் எனக்கோ இந்த கம்யூனிம் மாக்சிசம் எல்லாம் புதிதாகஇருந்தது. அதில் ஒரு பல்கலை களகத்தில் படிக்கிற ஒரு நண்பன் அதிகமாக இந்த சித்தந்தகள் பற்றி கதைப்பான் இப்பிடி இவங்கள் தொடர்ந்து கதைக்க கதைக்க எனக்கும் கம்யூனிசம் எண்டா என்னவென்று அறியும் ஒரு ஆவல் வந்து அந்த நண்பனை கம்யூனிம் பற்றி விளக்கமா ஒருக்கா சொல்லு எண்டன்.

அவனும் கார்ல்மாக்கசிலை தொடங்கி இந்த கம்யூனிசத்திலை வர்க்கம் இல்லை தொழிலாளி முதலாளி இல்லை சாதி இல்லை சாமி இல்லை சமயம் இல்லையெண்டு எங்கடை ஊரிலை இருக்கிறதையெல்லாம் இல்லை இல்லையெண்டாண்டான் . நான்அவனிட்டை சொன்னன் நிப்பாட்டு எனக்கு ஒண்டும் விழங்கேல்லையெண்டன். அவன் என்னை விடுறமாதிரியில்லை சரி சுருக்கமா உனக்கு விளங்கிறமாதிரி சொல்லுறன் எண்டிட்டு இப்ப நீ சாமிக்கு கற்பூரம் கொழுத்துறாய் அதாலை என்ன பிரயோசனம் எண்டான் நான் தட்டு தடுமாறி அது பாவமெல்லாம் அந்த கற்பூரம் மாதிரி கரையும் எண்டன். அவன் சிரித்தபடி நீ பாவத்தை செய்து கொண்டு கற்பூரத்தை கொழுத்தி என்ன பலன் அதாலை பேசாமல் அந்த காசிற்கு கடலை வாங்கி தின்னலாமல்லோ உன்ரை ஆசையாவது நிறைவேறும் என்றான். ஆகா என்ன தத்துவம் இதை முதலே யாராவது சொல்லியிருந்தால் எவ்வளவு காசுக்கு நான் கடலை வாங்கி திண்டிருப்பன் என்று நினைத்து. அன்றிலிருந்து நானும் கடலை தின்பதற்காக கம்யூனிசவாதியாகிய நிலையில்.

1981ம் ஆண்டு முதல் தவணை பரீட்சை முடிந்து மீண்டும் பாடசாலை ஆரம்பமாகியது அலுப்புடன் பாடசாலைக்கு போய் வந்து கொண்டிருந்த சித்திரை மாத இறுதி ஒருநாள் மாலை பாடசாலை விட்டு வெளியெ வந்ததும் மானிப்பாய் சந்தியில் பலர் கூடி நின்றபடி கதைத்து கொண்டிருந்:தார்கள் கூடிகதைப்பது அதுவும் சந்திகளில் ஒன்றும் புதிதான விடயம் இல்லை ஆனால் அவர்கள் கதைதத்தது புதிதான விடயம் . என்னவென்றால் சற்று மன்பு மானிப்பாய் நவாலி வீதியில் வயல்வெளி பக்கமாக முருகமூர்த்தி கோயிலடியிலை ரோந்து போய்கொண்டிருந்த விசேட பொலிசார் சைக்கிளிலை வந்த இரண்டு பெடியங்களை மறிச்சவையாம் பெடியள் நிக்காமல் ஒடவெளிக்கிட பொலிஸ் சுட்டதாம் . ஒரு சிலர் . பொலிசுக்கும் பெடியளுக்கும் துவக்கு சண்டை நடந்ததாம்...இப்படி சிலர் பொலிஸ் சுட்டு ஒரு பெடியன் சரியாம். இல்லை பெடியள் சுட்டு ஒரு பொலிஸ் சரியாம். இப்படி செய்திகள்.

இந்த காலகட்டம் தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் என்பதால் இப்படியான சில நிகழ்வுகளும் ஆனால் பல வதந்திகளும் உலாவிய கால கட்டம்.ஒரு சம்பவம் பத்து செக்கனிலேயே பலவடிவத்தில் பரவி விடும். ஆனால் உண்மையை சம்பவ இடத்தில் போய் யாரிடமாவது கேட்டறிந்தால் அல்லது மறுநாள் உள்ளுர் பத்திரிகையில் தான் உண்மையை அறியலாம். பாடசாலையில் வகுப்பறையில் இருந்த எனக்கும் ஏன் மற்றைய மாணவர்களிற்கும் கூட எவ்வித சத்தமும் கேட்கவில்லை ஆனாலும் அப்படியே அந்த வதத்திகளையும் காதில் வாங்கி போட்டு கொண்டு முடிந்தால் பின்னேரமளவிலை நவாலி பக்கம் போய் பாப்பம் இல்லாட்டி அந்த பக்கம் இருக்கிற நண்பர்கள் யாராவது பின்னேரம் கோயிலடிக்கு அரட்டையடிக்க வரேக்கை சொல்லுவாங்கள் தானே என்று நினைத்தபடி வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தேன்.வீட்டிற்கு போய்எனது வழைமையான நிகழ்ச்சி நிரலை செய்ய தொடங்கினேன். அதன்படி சாப்பிட்டு விட்டு கையில் ஒரு கதைப்புத்தகத்தடன் அருகில் இருக்கும் எங்கள் தோட்டத்திற்கு போய் காவல் கொட்டிலினுள் நுளைந்ததும் உள்ளே இருந்த சாக்கு கட்டிலில் ஒரு 25 வயது மதிக்க தக்கஒரு இளைஞன் படுத்திருந்தான்.யாரவன் எங்கடை கொட்டிலுக்கை என்று நினைத்தபடி கிட்ட போய் பார்த்தேன்.

அவன் தன் சாரத்தை கழற்றிதனது வலது தோள்பட்டையை சுற்றிகட்டியபடி உள்ளாடையுடன் படுத்திருந்தான்.அவனது உடை உடல் எல்லாம் இரத்தம் ஊறியிருந்தது பாதிமயக்கத்தில் முனகியபடி இருந்தவனை பதட்டத்துடன் அருகில் போய் விசாரித்தேன். அன்று மாலை நவாலி வீதியில் பொலிசார் சுட்டதில் காயமடைந்தவன் என்று தெரிய வந்தது அவரிடம் அண்ணை உங்களுக்கு சொந்த காரர் யாரும் இஞ்சை இல்லையோ என்றவும் .இல்லை தம்பி நான் திருகோணமலை எனக்கு யாழ்ப்பாணம் வடிவா தெரியாது. என்னொடை வந்த மற்றவருக்கு ஓரளவு இங்கை இடங்கள் தெரியும் பொலிஸ் சுடேக்கை மற்றவர் எங்கையோ ஓடிட்டார் என்றும் தாங்கள் இலங்கை அரசிற்கு எதிராகவும் தொழிலாளர் தினத்தில் மக்களை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடாத்த சொல்லி நோட்டீஸ் அடிச்சு அதை றோட்டு றோட்டா குடுத்து கொண்டு வரேக்கைதான் பொலிஸ் மறிச்சதெண்டும் .தாங்கள் ஓடவெளிக்கிட சுட்டிட்டாங்கள் என்று கொஞ்ச விபரம் .மட்டும் சொன்னான்.

முடிஞ்சா மருத்துகட்ட உதவிசெய்யும்படியும் வெளியே யாரிடமும் தெரியபடுத்த வேண்டாமென்றும் கெஞ்சலாய் கேட்டான்.எனக்கு பயமாவும் படபடப்பாகவும் இருந்தது. வீட்டிலை போய் சொல்லவும் ஏலாது . உடனே அருகில் இருந்த நண்பன் ஒருவனின் வீட்டிற்கு போய் விபரத்தை சொல்லி அவனையும் துணைக்கு கூட்டிகொண்டு அந்த இளைஞனிற்கு ஒரு சாரத்தையும் மாற்றி கொண்டு எங்கள் ஊரில் வீட்டில் வைத்து வைத்தியம் செய்யும் ஒரு வைத்தியரிடம் கொண்டு போனோம்.அவரிற்கு விபரத்தை சொல்ல அவர் தம்பி இரத்தம் கனக்க போயிருக்கு என்றபடி ஒரு குளுக்கோசை எற்றிவிட்டு காயத்தைபார்த்தார் துப்பாக்கி குண்டு பின்புறமாக நுளைந்து தோள் விலா எலும்பைஉடைத்து கொண்டு வெளியேறியிருக்கு காயத்திக்கு வெளியாலை உடைஞ்ச எலும்பு துண்டு வந்திருக்கு இதுக்கு என்னாலை பெருசா ஒண்டும் செய்யஏலாது உடைனை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்கோ நான் இப்ப இரத்தம் ஓடாமல் கட்டு போட்டுவிடறன் என்றார்.பெரியாஸ்பத்திரிக்கா என்று நானும் நண்பனும் வாயை பிழந்தோம்.ஏனென்றால் யாழ்பெரியாஸ்பத்திரிக்கு போனால் அங்கை பொலிஸ் விசாரனை எண்டு வரும் பிறகு நாங்கள் யார்?? அவர் யார்?? என்கிற பிரச்சனைகள் இதுக்கை வேறை வீட்டிலை தெரிஞ்சா துலைஞ்சம்.

என்ன செய்யலாமெண்டு யொசிச்ச நான் அந்த வைத்தியரையெ கேட்டன் அய்யா நீங்களே பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போய்....எண்டு இழுக்கவும் அவர் சொன்னார் தம்பி இது வில்லங்கமான கேஸ் நான் இவ்வளவு செய்ததே பெரிசு . அதெல்லாம் என்னாலை ஏலாது யாராவது ஊரிலை பெரியாக்களிட்டை சொல்லி அவையளோடை அனுப்புங்கோ நீங்கள் சின்ன பெடியள் உங்களுக்கு ஏன் வீண் பிரச்சனை என்று புத்திமதி சொல்லவும் தவறவில்லை. இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த அந்த இளைஞன் வைத்தியரிட்டை . அய்யா ஏதாவது வலிகுறைக்கிற மாதிரி குழிசை இருந்தா தாங்கோ வலி குறைய நானே போறன் என்றான். வைத்தியர் அவனிடம் தம்பி இது விழையாட்டு இல்லை எலும்பு உடைஞ்சிருக்கு வலி குறையாது உடைனை வைத்தியம் செய்யவேணும் எண்டு சொல்லி சில வலிகுறைக்கிற குழிசைகளையும் தந்து கட்டு போட்டு அனுப்பிவிட்டார். திரும்ப காவல் கொட்டிலிலை கொண்டு போய் விட ஏலாது மறுநாள் பக்கத்து தோட்டகாரர் பாத்தாலும் பிரச்சனை என்ன செய்யலாமென யோசித்த எனக்கு திடீரென ஒரு யொசனை தோன்றியது சண்டிலிப்பாயில் எனக்கு தெரிந்த ஒரு நண்பனின்குடும்பம் இருந்தது அவர்கள் அன்றைய காலகட்டத்தில் விடுதலை கூட்டணிஆதரவாளர்கள் . அதுமட்டுமல்ல தீவிரபோக்கு கொண்ட இளைஞர்களும் அங்கு வந்து போவது எனக்கு தெரியும்.அவர்களிடம் கொண்டு போய் விட்டால் கட்டாயம் உதவுவார்கள் என்று நினைத்து அவர்கள் வீட்டிற்கு கூட்டிபோய் விபரத்தை சொன்னேன்.

அவர்களும் தாங்கள் பாத்து கொள்ளுறதாய் சொன்னதும் தான் எனக்கு நிம்மதியாய் இருந்தது. மறு நாள் மாலை அந்த வீட்டிற்கு போய் விபரம் கேட்டேன் சின்ன ஒப்பிறெசன் ஒண்டு செய்தவங்கள் எங்களுக்கு தெரிஞ்ச டொக்ரர் மார் அங்கை இருக்கிறதாலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது போய் பாக்கிறதெண்டா பாக்கலாம் என்றார்கள். விபரம் அறிந்து கொண்டு யாழ் வைத்தியசாலைக்கு பேனேன் அதுக்கை தெரிஞ்சவங்கள் யாரும் கண்டாலும் எண்டிற பயம் வேறை . அவன் சிரித்தபடி தம்பி உங்கடை உதவிக்கு நன்றி நான் இன்னும் இரண்டு மூண்டு நாளிலை வெளியிலை வந்திடுவன் பிரச்சனையில்லை எண்டான் . சரி அப்ப நிங்கள் திரும்ப திருகொணமலைக்கே போகபோறியள் எண்டன் .தம்பி நான் அங்கை போக ஏலாது பிறகு யோசிப்பம் எண்டான். நானும் மறுநாள் என்னிடம் இருந்த பணத்தில்அவனிற்கு ஒரு சாறம் சேட்டு உள்ளாடை என்று ஒரு சோடி வாங்கி கொண்டு போய் குடுத்தது மட்டுமல்ல ஒரு நான்கு நாட்கள் என நினைக்கிறேன் ஒவ்வொரு நாளும் பாடசாலை விட்டதும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு எனது வழைமையான நிகழ்ச்சி நிரலை மாற்றி வைத்தியசாலைக்கு போய் அவனுடன் சில மணிநேரம் இருந்து கதைத்து விட்டு வருவேன். இப்படியே ஒரு நாள் அவனை தேடிபோனபோது அங்கு அவனை காணவில்லை.

கடைமையில் இருந்த ஒரு தாதி என்னிடம் ஒரு கடிதத்தை தந்தாள் அதில் தம்பி எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றது நான் போகிறேன் இதுவரை நீங்கள் எனக்கு செய்த உதவியை மறக்க மாட்டேன் முடிந்தால் நான் உயிருடன் இருந்தால் மீண்டும் எங்காவது எப்போதாவது சந்தித்து கொள்வோம் அன்புடன் உங்கள் உறவு என்று அவ்வளவு தான் எழுதியிருந்தது. ஆனாலும் அவனுடன் பழகிய நாட்கள் எனக்கு இனிமையானது அவனே எனக்கு கம்யூசம் என்றால் கடலை தின்பது மட்டுமல்ல அதனால் மக்களிடம் அலை கடலைப்போன்ற மாற்றத்தைஏற்படுத்த முடியும் என்று கம்யூனிசம் மாக்சிசம் என்று பல இசங்களை இதமாய் புரிய வைத்ததோடு விடுதலை. போராட்டம். சுதந்திரம்.உலக விடுதலை இயகங்கள் என்றும் தெரியவைத்து எனக்குள் மாற்றத்தை ஒரு தேடலை உருவாக்கி போனான் .அன்று அவனிற்காக மாற்றிய எனது வழைமையான நிகழ்ச்சி நிரல் மீண்டும் வழைமைக்கு திரும்பவேயில்லை.ஆனால் அவன் யார்?? சொந்த பெயர் என்ன?? ஏதாவது விடுதலை இயக்கத்தை சார்ந்தவனா??அல்லது தனியாகவே சில நண்பர்களுடனோ சேர்ந்து இலங்கை அரசிற்கு எதிராக இயங்கியவனா??என்று எந்த விபரத்தையும் எனக்கு சொல்லவில்லை நானும் நச்சரித்து கேட்கவும் இல்லை அதன்பின்னர் அவனை சந்திக்கவும் இல்லை....................

ஜரோப்பிய அவலம் 6

9:41 AM, Posted by sathiri, No Comment


http://tamilnews24.com/twr/audio/sathiri/avalam6.smil