Navigation


RSS : Articles / Comments


ஜயோ அம்மே என்ன வாழ்க்கையோ

1:57 AM, Posted by sathiri, 5 Comments

தர்மகுமாரியின் நாட்டியம்.

1:41 PM, Posted by sathiri, No Comment


தர்மகுமாரியின் நாட்டியம்.

அண்மையில் தமிழகத்தினையும் தமிழீழத்தின் கிழக்குப்பகுதிகளையும் தாக்கலாமென்று அச்சப்பட்ட நிசா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வலுவிழந்து வங்கக்கடலைத்தாண்டிய செய்தியறிந்து கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதேவேளை.தமிழகத்தில் தர்மகுமாரி(வயது 58) என்பவர் புதிதாய் ஒரு புயலைக் கிளப்பிவிடவே. தமிழகத்துடன் தமிழீழம் மட்டுமல்ல உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அத்தனைபேரும் கொஞ்சம் அதிர்ந்துபோய்விட்டிருந்தனர்.தமிழகத்திலிருந்து வெளியாகும் குமுதம் ரிப்போட்டரில் இந்தியாவின் இடதுசாரிக்கட்சித் தோழர் மகேந்திரன் மீது தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றினார் என்றும்.

மற்றும் பாலியல் ரீதியான குற்றச் சாட்டுக்களை தெரிவித்த தர்மகுமாரியின் செவ்வியைப்படித்த எனக்கு. ஏற்கனவே இவரைப்பற்றி நான் படித்த சர்ச்சையான ஒரு செய்தி நினைவிற்குவரவே இவரைப்பற்றிய விபரங்களை சேகரிக்கும் தேடலில் இறங்கினேன். தோடலைத் தொடங்கியதுமே குப்பைத் தொட்டியை கிழறத்தொடங்கியது போல் அவரது விபரங்களும் குப்பைகளாகவே வந்துகொண்டிருந்தது. இவர் யாழில் கொக்குவில் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள்.தந்தை பெயர் முத்துக்குமாரசுவாமி. இவர் முன்னைநாள் புகையிரதத் திணைக்களத்தில் வேலை செய்தவர்.இவரிற்கு ஏழு பெண்களும் மூன்று ஆண்களுமாக பத்துப்பிள்ளைகள்.அவர்களின் பெயர்கள். ஆண்கள் . ஆனந்தகுமார்.சிவகுமார்.ஸ்கந்தகுமார்.(கண்ணன்)பெண்கள். ஜெயகுமாரி.சாந்தகுமாரி. விஜயகுமாரி. அருண்குமாரி. சந்திரகுமாரி.சுகந்தகுமாரி.தர்மகுமாரி. இப்பொழுது இவர்களில்.ஆனந்தகுமார் என்பவர்மட்டும் ஒரு சிங்களப்பெண்ணை மணமுடித்து தென்னாபிரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.மற்றையவர்கள் அனைவருமே இங்கிலாந்தில் வசித்து வருகின்றார்கள்.தர்மகுமாரியும் நாகலிங்கம் என்கிற கணக்காளரை திருமணம் செய்து கொண்டு தென்னாபிரிக்காவில் குடியேறியிருந்தார்

. இருவரிற்கும்.தர்சினி.சிவாந்தினி.பிரியாந்தினி. என்று மூன்று பெண்பிள்ளைகளும் பிறந்தது. இவர்களும் பிள்ளைகளை தமிழர் கலை கலாச்சார முறைப்படியும் கல்விகற்கவைப்பதென முடிவெடுத்து நாகலிங்ககம் தர்மகுமாரியையும் பிள்ளைகளையும் 96ம் ஆண்டு தமிழ்நாட்டில் கொண்டு போய் விட்டு விட்டு மாதா மாதம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்.இப்படிஇருக்கும் பொழுதுதான் இவர்களின் குடும்ப நண்பரான வைத்தியர் ஒருவருடன் தர்மகுமாரிக்கு(வயது 58) முதற்தொடர்பு ஏற்பட்டு அது கணவரிற்கும் தெரியவரவே இவர்கள் இருவரிற்குமிடையில் பிரச்சனைகள் தொடங்கிவிட்டிருந்தது.இந்த வைத்தியர் இப்பொழுது கனடாவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.இப்படியே தொர்ச்சியாக தமிழ் நாட்டில் இருந்த இடங்களிலெல்லாம் பல ஆண்களுடன் தொடர்புகள் பிரச்சனைகள் என்று பட்டியல் நீளுகின்றது.இவர் கொஞ்சம் வசதியான திருமணமான ஆண்களையே குறிவைத்து தொடர்புகளை ஏற்படுத்திவிட்டு பின்னர் அவர்களது மனைவிகளிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி கறப்பதை கறந்து விடுவது. இவரது பாணியாக இருந்திருக்கிறது.அதுமட்டுமல்ல இவரால் குற்றம் சாட்டப்பட்ட மகேந்திரனின் ஊரான தஞ்சாவூரை சேர்ந்த ஒருவருடனும் தொடர்பு ஏற்பட்டு .

அந்த நபரின் மனைவி மகேந்திரன் அவர்களிடமே பிரச்னையை தீர்த்து வைக்கும்படி போன விடயமும் நடந்துள்ளது. இவையெல்லாம் இப்படியிருக்க தர்மகுமாரியால் குற்றம் சாட்டப்பட்டவரான இடதுசாரித்தோழர் மகேந்திரனுடன் தொடர்பு கொண்டு விபரங்களைகேட்டபொழுது அவர் சொன்னார் தர்மகுமாரி தனக்குத் தெரிந்த ஒருவரின் சிபாரிசுடன் என்னைச் சந்தித்திருந்தார் அவரது பிள்ளைகளின் படிப்பிற்காக பாடசாலையில் சேர்ப்பதற்காகவும் தங்குமிடவசதிகளிற்காகவும் சில உதவிகளை செய்து கொடுத்தேன் அவ்வளவுதான். அதன் பின்னர் இரண்டாயிரமாம் ஆண்டு தான் ஒரு வீடு வாங்க விரும்புவதாகவும் அதற்குரிய பணம் தன்னிடம் இருப்பதாகவும் தனக்கு விசாபிரச்சனை இருப்பதாலும் வெளிநாட்டவர் என்பதாலும் வீடு வாங்குவதில் சிக்கல் இருப்பதால் தனக்கு நம்பிக்கையான ஒருவரை அறிமுகம் செய்து உதவும்படி கேட்டிருந்தார்.

நான் அரசியல் பொதுவாழ்வில் இருப்பதால் இது போன்ற பணவிவகாரங்களில் தலையிடவிரும்பாமல் மறுத்துவிட்டேன்.அதன்பின்னர் 2001 ம் ஆண்டின் பின்னர் நான் அவரை சந்திக்கவேயில்லையென்றார்.தர்மகுமாரியின் தந்தையான முத்துக்குமாரசுவாமி அவர்கள் தற்சமயம் இலண்டனில் ஒரு முதியோர்காப்பகத்தில் இருக்கின்றார். நடந்த சம்பவங்கள் தொடர்பாக அவரது கருத்தினைக் கேட்கலாமென தொடர்பு கொண்ட பொழுது அவர் தான் இப்பொழுது எதுவும் சொல்லக்கூடிய நிலையில் இல்லையென தெரிவித்து விட்டார்.அதே போல அவரது சகோதரர்களும் தங்களிற்கும் தர்மகுமாரிக்கும் இப்பொழுது எவ்வித தொடர்புகளும் கிடையாது எனவே எதுவும் சொல்ல விரும்பவில்லையென தெரிவித்து விட்டனர்.ஆனால் தர்மகுமாரி தென்னாபிரிக்காவில் தன்னுடைய முத்த மகளான தர்சினியின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு தென்னாபிக்காவின் இலங்கைத் தூதரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்த பொழுது தென்னாபிரிக்காவில் பல தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து இலங்கைத் தூதருக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் நடத்தியிருந்தனர்.தென்னாபிரிக்காவிலும் இந்தியாவிலும் இவர் இலங்கைத்தூதரகத்துடன் நல்லதொரு தொடர்பினை கொண்டிருந்தவராக உள்ளார்.

எனவேதான் தமிழ்நாட்டில் இன்று ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது பெரும் தீயாகப்பரவி தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியாவின் மற்றைய மானிலங்களிலும் தொற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளை அந்த ஆதரவுத் தீயை பற்றவைப்பதற்காக முதல் தீக்குச்சியை உரசிப் போட்வர்களின் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் இடதுசாரித் தோழர் மகேந்திரன் மீது திடீரென இப்படியொரு பாலியல் பணமோசடி என்று ஒரு நாட்டியத்தினை தர்மகுமாரி அரங்கேற்றியிருப்பதன் பின்னணியில் இலங்கைத் தூதரகத்தின் கைகள் தர்மகுமாரியை தழுவிக் கொடுத்திருக்கும் என்பது சந்தேகமில்லை. அது மட்டுமில்லை இலங்கைத் தூதரகத்துடன்: இணைந்து தன்னுடைய கட்சியில் உள்வர்களும் இதற்கு உடந்தை என்கிறார் மகேந்திரன்.எல்லாம் சரி இப்படியொரு பாலியல் குற்றச் சாட்டென்று எழுந்திருக்கின்றதே வழைமை போல ஏதாவதொரு இந்து மடம் அல்லது சாமியாரின் பெயர் அடிபடவில்லையே என்கிற குறையையும் தர்மகுமாரியே தீர்த்து வைத்துள்ளார்.இவர் அண்மைக்காலமாக கோயமுத்தூர் அருகே பேரூரில் சாந்தலிங்க சுவாமிகள் என்பரால் நடாத்தப்படும் பேரூர் மடத்திலேயே தங்கியிருந்து தஞ்சைப் பல்கலைகழகத்தில் அஞ்சல்வழி சைவ சித்தாந்தம் படித்ததாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் விசா பிரச்சனையை தீர்ப்பதற்காகவே இவர் தஞ்சைப் பல்கலைகழகத்தில் சேர்ந்ததாககூறப்படுகின்றது.அந்த மடத்திலும் பல ஆண்தொடர்புகளால் பிரச்சனைகள் எழுந்துள்ளதாக அந்த மடத்தின் உறுப்பினர்கள் சொல்கிறார்கள்.தன்னுடைய மகளிற்கு பரதநாட்டியம் பழக்குவதற்காக தமிழநாடு சென்றதாக தமிழ்நாட்டு பத்திரிகைகளிற்கு பேட்டியளித்த தர்மகுமாரி தானே ஒரு பாலியல் நாட்டியத்தினை அரங்கேற்றி விட்டு தற்சமயம் தென்னாபிரிக்காவிற்கு திரும்பிச் சென்று அங்கு உள்ள ஒரு இந்து மடத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனித கன்னி மரியாளிற்கும் குண்டுவீச்சு

12:07 PM, Posted by sathiri, 3 Comments



கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் முல்லைத்தீவு வீதியிலுள்ள தேவாலயத்தின் மீது (Holy Cross Convent) சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாளை கிறிஸ்மஸ் நடைபெறவுள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற தேவாலயத்தின் கூரையில் பாதுகாப்பு இடங்களிற்கான செஞ்சிலுவை அடையாளம் காணப்படுகின்ற போதிலும், சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பல புலிகள் கொல்லப்பட்டனர்

9:14 AM, Posted by sathiri, 18 Comments




நேற்று பரந்தன் பகுதியில் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பல புலிகள் கொல்லப்பட்டனர் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு குண்டு வைத்தது புலிகளா??

10:18 AM, Posted by sathiri, 5 Comments

பலகாலங்களாக வலைப்பதிவுகளில் ஈழம் பற்றியும் விடுதலைப்புலிகளைப்பற்றி பேச்சு எழும்தோதெல்லாம் விடுதலைப்புலிகளைப்பற்றி குற்றச் சாட்டுக்களை வைப்பவர்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் குண்டு வைத்தது புலிகள்தான் என்று தொடர்ச்சியாக எழுதி வருகின்றார்கள். ஆனால் அந்தக் குண்டினை வைத்தது TEA என்கிற தமிழீழ விடுதலை இராணுவம் என்கிற அமைப்புத்தான். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர். தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் என்பவர். இவர் சிறீலங்காவில் காவல்த்துறையால்கைது செய்யப்படு பனாங்கொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுது தப்பியோடியதால் இவரிற்கு பனாங்கொடை மகேஸ்வரன் என்றும் அழைப்பார்கள்.இவரே 1984 ம் ஆண்டுமீனம்பாக்கத்திலிருந்து புறப்பட்ட ஏயார் லங்கா விமானத்திற்கு குண்டு வைப்பதற்காக திட்டம் தீட்டி ஒருவரிடம் நேரம் கணித்த குண்டு பாசலை கொடுத்தனுப்பியிருந்தார்.அந்த நபர் கொழும்பு போவதற்கு பயணபோடிங்பாஸ் எடுத்து விட்டு குண்டுப்பொதியையும் பதிவு செய்து விமானத்தில் ஏற்றிவிட்டு அவர் அங்கிருந்துவெளியேறிவிடவேண்டும்.விமானம் வானில் கிழம்பியதும் குண்டு வெடிக்கக் கூடிதாய் நேரக்கணிப்பு செய்யப்பட்டிருந்தது இதுதான் திட்டம். ஆனால் குண்டுப் பொதியுடன் உள்ளே போனவருக்கு அங்கு காவல் அதிகாரிகளை பார்த்ததும் பயத்தில் குண்டுப்பொதியை அப்படியே விட்டு விட்டு வெளியேறிவிட்டார். குண்டுப்பாசல் ஏயார் லங்கா விமானத்தில் ஏற்றப்படவில்லையென்று தெரிந்ததும் தமிழீழ விடுதலை இராணுவ அமைப்பினால் விமானநிலையத்திற்கு தொலைபேசியடித்து குண்டு எச்சரிக்கையை விடுத்திருந்தனர். ஆனாலும் குண்டு வெடித்து பலர் இறந்து போயிருந்தனர். தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் தற்சமயம் வேலூர் சிறையில் இருக்கிறார்.

கோமாளி யார்?? பெடியன் சஞ்ஞேயா . கோடம்பாக்கமா??

2:53 PM, Posted by sathiri, 25 Comments

ஈழத்து எதிரிகளும் கோடம் பாக்கத்து கோமாளிகளும் என்று சஞ்சோய் நன்றாகவே கூத்தாடியிருக்கிறார்.அதுவும் தான் ஈழத் தமிழர்களிற்கு எதிரானவர் அல்ல என்பதனை பலமுறை பதிவாக்கியிருக்கிறார். கவனிக்க. எனவே நாங்களும் அவர் ஈழத் தமிழர்களிற்கு எதிராவர் அல்ல என்பதனை நம்பிவிட்டோம்.இலங்கையில் இந்திய இராணுவம் செய்ததை மட்டும் கோமாளிகள் திரும்ப திரும்ப பேசுகிறார்கள் ஆனால் இந்திய எல்லையில் இன்னமும் எதிரிகள் ஊடுவாமல் இரவுபகல் இந்திய இராணும் காக்கிறது என்பது பெருமைதான் ஏதோ ஒரு பகலில் அண்மையில்தான் மும்பையில் ஏதோ சிறியதாய் சரவெடிசத்தம் கேட்டது. அடுத்தாய் அவர் விட்டார் ஒரு சந்ராதேயன் பாருங்க
அது இதுதான்... கே.வி. தங்கபாலு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருக்கும் போது பிரபாகரன்( அப்போது குழுவில் ஒருவர்.. தலைவர் அல்ல) உள்ளிட்டோர் வந்து சந்தித்தது.. அவர்களை தங்கபாலு இந்திராகாந்தியுடன் அறிமுகப் படுத்தியது.. அப்போது இந்தியத் தமிழர்களுக்கும் சம உரிமை அளிக்க சம்மதமா என்று கேட்டது.. அதற்கு , அபப்டி எல்லாம் முடியாது.. அவர்கள் எங்களுக்கு அடுத்த நிலையில் தான் இருப்பார்கள் என்று சொன்னது.. அதனால் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இந்தக் குழுவை இந்திரா புறக்கணித்தது.. இந்தியா நேரடியாக தலை இடாது என்று சொன்னது..பிறகு தமிழக காங்கிரஸின் வற்புறுத்தலால் இவர்களுக்கு ஆயுத பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது என்று ஏகப்பட்ட உண்மை வரலாறுகள் வெளி வராமலே இருக்கு அண்ணா.. ஆனால் அதை எல்லாம் இப்போ வெளிக் கொண்டு வருவது என்ன பயன்? :) ........ஜயா தங்கபாலு பிரபாகரனை முதன் முதலில் சந்தித்ததே இந்தியா புலிகளின் தெலைதொடர்பு கருவிகளை பறித்த பொழுது பிரபாகரன் உண்ணாவிரம் இருந்தார் பிரபாகரனின் உண்ணா விரதத்தினை முடித்து வைக்க முயற்சித்த பொழுதுதான் சந்தித்தார் அதனை அவரிடமே கேட்கலாம்.அப்பொழுது பிரபாகரன்தான் புலிகளின் தலைவர் அவர் அப்பொழுதும் தலைவர்தான்.அதற்கடுத்ததாய் ஈழத்து போராட்ட குழுக்களிற்கு இந்திய பயிற்சி கொடுத்ததிலிருந்து அதன் எந்த நடவடிக்கைகளிலும் தமிழ் நாட்டு காங்கிரசின் தொடர்புகள் எதுவும் பெரிதாய் இல்லை. அப்படி ஒன்ற நடப்பதே அவர்களிற்கு தெரியாது. ஏனெனில் நானும் அதே இந்திய இராணுவத்திடம்தான் பயிற்சி பெற்றவன். அடுத்தாய் விட்டீர்களே ஒரு சந்திராதேயன் ் அது சூரியனை தொட்டு விட்டது இந்திய வம்சாவளியினரிற்கு சம உரிமை கொடுக்க சம்மதமா என்று புலிகளை கேட்டார்களாம். ?? பேசாமல் ஒரு கதை எழுதவும் . திரைக்கதை வசனம் .பாட்டு . பைட்டு என்று போட்டுத்தாக்கலாம். இலண்டன் ஜங்கரன் இன்ர நசினலை வெளியீட்டு உரிமை எடுக்கசொல்லி கேட்கலாம்.

மனிதவுரிமை பேசலாம் ஓடிவாருங்கள்

2:15 PM, Posted by sathiri, No Comment


குழந்தை இராணுவம்.
Sri Lanka Army child soldier victim

புலிகள் மக்களை கேடயமாக்குகிறார்களா?? நடேசன் பதில்

7:29 AM, Posted by sathiri, No Comment

சுவிஸில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் வெளிவரும் ‘நிலவரம்’இதழுக்கு தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கேள்வி.

கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றியே தீர்வதென விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. களநிலவரம் உண்மையில் எவ்வாறாக இருக்கின்றது?
பதில்.
சிங்களப் படைகளின் சிறப்பு டிவிசன்கள் இரண்டின் படையணிகள் கிளிநொச்சிக்கான சமரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் கிளிநொச்சியின் மேற்கே பலமுனைகளில் கடும் சண்டைகள் நாள்தோறும் நடக்கின்றன.

சிங்களப் படைகளின் முயற்சியை முறியடிக்கும் எதிர்ச்சமரில் புலி வீரர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். இதுவரை இரண்டு காலக்கெடுக்களைச் சிங்களத் தளபதிகள் கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு என்று விதித்தும், அது அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை.

கிளிநொச்சிக்கான சண்டைகளில் சிங்களப் படைகள் கடுமையான உயிரிழப்புக்களைச் சந்தித்து வருகின்றன. புதிய வியூகங்கள்- தந்திரோபாயங்களுடன் கிளிநொச்சியைப் பாதுகாக்கும் எதிர்ச்சமரில் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.
கேள்வி.
வன்னியில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஏதிலிகளாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் துயரம் மிக மோசமாக ஆகியிருக்கின்றது. மக்களை வவுனியாவிற்கு வருமாறு அரசு கோரி வருவதுடன், அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாகவும் பிரசாரம் செய்து வருகின்றது. ஏதிலிகளாக உள்ள மக்கள் வவுனியாவிற்கு வருகைதராமைக்குக் காரணம் என்ன?

பதில்.
சிங்களப் படைகள் நிலங்களை ஆக்கிரமிக்கும் போது அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாதுகாப்புத் தேடுவதுதான் வழமை. இதுதான் இப்போதும் நடைபெறுகின்றது.

தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு காட்டும் அக்கறை 'ஆடு நனையுதென்று ஓநாய் அழுத' கதைதான். இன அழிப்பிற்கும், சமூகச் சீரழிப்பிற்கும் எமது மக்களை உட்படுத்திப் போராட்டத்தை அழிக்கும் நாசகார நோக்குடனேயே சிங்கள அரசு தனது பகுதிக்குள் வருமாறு மக்களை அழைக்கின்றது. எத்தனை தடவைகள் இடம்பெயர்ந்தாலும், புலிகளின் கட்டுப்பாட்டு நிலத்தில் வாழவே மக்கள் விரும்புகின்றனர். சிங்கள அரசின் அழைப்பை மக்கள் தாமாகவே நிராகரிக்கின்றனர்.

நன்றிநிலவரம் பேட்டியை முழுதாய்படிக்க

http://www.swissmurasam.net/news/breakingnews-/10604-2008-12-12-17-48-36.ஹ்த்ம்ல்


நன்றி

புரிய வையுங்கள் டோண்டு சார்.

2:52 PM, Posted by sathiri, 19 Comments

புரிய வையுங்கள் டோண்டு சார்.
கீழே வருபவை நீங்கள் உங்கள் பதிவில் எழுதியவைதான்.


சிங்கள ராணுவத்தாரால் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை இங்கு நானோ சோவோ மறுக்கவில்லை. அதற்கு முக்கிய பொறுப்பு அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தும் புலிகள்தான். அதை முதலில் மனதில் வைக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அவை அப்படியே இருக்கட்டும். ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை சோ ராமசாமி மறுக்கவில்லையென்பது இருக்கட்டும் நீங்கள் மறுக்கவில்லையென்பதில் மகிழ்ச்சியே. அப்பாவி மக்களை புலிகள் கேடயமாக பயன் படுத்துகிறார்கள் என்கிற உங்களது வாதத்திற்கே வருவோம். யுத்தம் என்றால் நீங்கள் இன்னமும் பதினெட்டாம் நுற்றாண்டு காலப்பகுதியிலேயே இருந்து கருத்தெழுகிறீர்கள் என்பது புரிகிறது .முதலில் ஒரு யுத்தம் பற்றி எழுதமுன்னர் குறைந்தபட்ச இராணுவ அல்லது ஆயுத அறிவை தெரிந்து கொண்டு எழுதத் தொடங்குவது நல்லது இல்லையெனில் பேசாமல் ஏதாவது மொக்கை போட்டு விட்டு போவது நல்லது. புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். இன்றைய செய்திகளை நீங்கள் தொடர்து படிப்பீர்கள் என நம்புகிறேன். எல்லாச் செய்திகளையும் கவனியுங்கள் .எந்தச் செய்திகளிலும் புலிகள் மற்றும் சிறீலங்கா இராணுவத்திற்கும் நேரடியாய் எற்பட்ட நேரடி மேதல்களில் புலிகளின் செய்தி மட்டுமல்ல நீங்கள் உங்கள் உள்ளங்கைகளில் தாங்கி நிற்கும் இலங்கை இராணுவச் செய்திகளில் கூட வருவதில்லை. தமிழ்ப்பொது மக்களின் இழப்புச் செய்திகள் வான் தாக்குதல்களினாலும். எறிகணைத்தாக்குதல்களினாலும்தான் ஏற்படுகின்றது. ஒரு இடத்தினை இலங்கை இராணுவம் தாக்கி விட்டு முக்கிய புலிகளின் இலக்கு தாக்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிடும்பொழுது அங்கு இறந்தவர்கள் மட்டும் ஏன் பொது மக்களாக இருக்கிறார்கள். இலங்கை இராணுவத்தின் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கிற இடங்களில் இறக்கிறவர்களும் பொதுமக்களாகத்தான் இருக்கிறார்கள். உங்கள் விவாதத்தின்படி மக்களை புலிகள் கேடயமாகப் படுத்தினால் ??( கேடயம் என்பதன் பொருள் உங்களிற்கு நான் புரியவைக்கத் தேவையில்லை. )புலிகளினுடனான நேரடி மோதல்களில் அப்பாவி தமிழர்கள் இறக்கமல். வான் தாக்குதல்களிலும் எறிகணைத்தாக்குதல்களிலும் இறப்பதன் காரணம். சிறீலங்கா போர் விமானங்கள் குண்டு வீசும் பொழுது புலிகள் அப்பாவித் தமிழர்களை வானத்தை நோக்கி தூக்கிப்பிடித்து வான் குண்டுகளைத்தடுக்கிறார்களா?? சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைகள் சீறி வரும்பொழுது ஒவ்வொரு அப்பாவித் தமிழனையும் வானத்தை நோக்கி வீசி எறிகணைகளை தடுப்பதால் அவர்களை கேடயமாக்கி தாங்கள் தப்பித்துக்கொள்கிறார்களா??ஈழத்தமிழன் என்கிற முறையிலும் இந்தியா எனக்கும் இராணுவப்பயிற்சி தந்தது என்கிற முறையிலும் எனக்கும் சிறிது இராணுவ மற்றும் ஆயுத அறிவு உள்ளது என்கிற முறையில்தான் கேட்கிறேன் புரியவைக்கவும் நன்றி.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது.

1:55 PM, Posted by sathiri, No Comment


ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது மனித உரிமைகள் நாளான நேற்று முன்நாள் புதன்கிழமை சிறிலங்காவில் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் டென்மார்க் தமிழ் மக்களின் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.

டென்மார்கின் சமூக லிபறல் கட்சியின் பிரமுகர் த. தர்மகுலசிங்கம் மற்றும் டென்மார்க்கின் லுங்பி பங்குத்தந்தை அல்றின் சூசைப்பிள்ளை ஆகியோர் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறகம் வற்சனை புரூசல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து இந்த விண்ணப்பத்தை கையளித்தனர்.

கிறகம் வற்சன் பிரித்தானியாவின் மேற்கு லண்டன் லிபறல் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய லிபறல் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுத்தலைவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

வன்னி மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்குட்படுத்தப்ப�
�்டு காடுகளில் மரங்களின் கீழ் ஒதுங்கி உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஏதுமின்றி விடப்பட்டுள்ளனர்.

கடந்த 3 ஆம் நாள் ஒஸ்லோவில் 102 நாடுகள் இணைந்து கிளஸ்ரர் குண்டு பாவனையை தடைசெய்யும் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டன.

சிறிலங்கா வான்படையினர் ரஷ்ய தயாரிப்பான OFAB 500 ரக கொத்தணிக் குண்டுகளை அப்பாவித் தமிழ் மக்கள் மீது பிரயோகித்துள்ளனர்.

உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின்றி தவிக்க விட்டது மட்டுமன்றி இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிய அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களையும் வன்னியிலிருந்து வெளியேற்றியுள்ளது.

இந்நிறுவனங்களை வன்னியில் மீண்டும் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

வன்னியில் நடைபெறுவது சிறிலங்கா அரசு காட்டிக்கொள்வது போல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அல்ல. அது இன அடக்குமுறைக்கான போர்.

அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கருதி சிறிலங்கா அரசுக்கு ஆதரவு வழங்குகின்றன.

இந்தியா, பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளும் சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை வழங்குகின்றன..

தற்போது நிகழும் போர் சிறிலங்காவின் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.

உடலியல் ரீதியிலும் மனவியல் ரீதியிலும் அப்பாவித் தமிழ் மக்களின் வாழ்க்கை துயரமாகியுள்ளது.

டிசம்பர் 2008 முதல் வாரத்தில் சிறிலங்கா குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களை வெளிநாடுகளில் சுயநிர்ணய உரிமை பற்றி ஆதரவாகப் பேசியதற்காக விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் டென்மார்க் தழிழராகிய நாங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் கோரப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை சிறிலங்கா அரசு தொடர்வதற்கு உங்கள் அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையில் உடனடியானதும் நிரந்தரமானதுமான சமாதானத்தைக் கோருகின்றோம்.

இந்த சமாதானத்தை அடைவதற்காக தழிழீழ விடுதலைப் புலிகளை தமிழரின் பிரதிநிதிகள் என்றே ஏற்றுக்கொண்டுள்ளோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்திலெடுத்து தொலைநோக்குடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகிறது.

எனவே எதுவித தீர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளை உள்ளடக்கியதாகவே இருக்கவேண்டும். சமாதானத்தை அடைவதற்கான ஒரே வழி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதே என உறுதியுடன் நம்புகின்றோம்.

மேலும் சமாதானம் தொடர்ந்தும் நிலவ கடந்த கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

உங்கள் மூலம் சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் விரைந்து போர் நிறுத்தம் ஏற்படவேண்டும்.

தேவையேற்படின் நாமும் சமாதானப் பேச்சுவார்த்தையில் துணை புரிவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்துப் பெண்கள் அட்டை பிகருகள்

1:53 PM, Posted by sathiri, 27 Comments

டோண்டுவிற்கான பெயரிலியின் அனாகரீகம் நளினமானது என்கிற பதிவில் முரளி என்பவர் எழுதியிருப்பது முரளி கருத்து:

அதுஎன்னவோ தெரியவில்லை இலங்கை தமிழர்களில் சிலர் என்னேரமும் கற்பழிப்பு கற்பழித்தார்கள் என்று உளறி கொட்டிகொண்டே இருக்கின்றனர்.

ஈழத்தில் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகு தேவைதைகள் எங்கும் கொட்டி கிடக்கிறார்கள் போலும். தனுவை ஒருவன் கற்பழித்தான் என்று உணர்ந்த போது அடப்பாவமே அவளை கற்பழித்தவனுக்கு இந்தளவு உணர்ச்சியோ என்ற குழப்பம் கூட.அட்டு புகர்களை கூட கற்பழிக்க சில காரணங்களே இருக்க வேண்டும்.
அட்டு புகர்கள் தன்னை எவனாவது புணரமாட்டானா என்ற ஏக்கம் அல்லது அங்கு இருக்கும் ஆண்கள் பேச மட்டும் தான் என்று கூட சொல்லாம்.

முரளி என்பவரிற்கு சொல்லிக்கொள்ள விரும்புவது ஜயா (சார்) எங்களது ஈழத்து பெண்கள் அட்டை பிகருகள்தான். அவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும். முழு ஒப்பனை செய்த முககங்களோ. பருத்து நிமிர்ந்த மார்புகளோ. துருத்தி நிற்கும் பிட்டங்களோ. வளு வளு கால்களோ . இடையில் இருந்து மேலெழும் அளவுகளான இருபத்தியாறு . முற்பத்தியிரண்டு .இருபது என்கிற அளவுகளோ இல்லைத்தான். முப்பதாண்டுகள் திணித்து விடப்பட்ட யுத்தம் இலங்கை சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டு கால வரலாற்றில் அய்ம்பது ஆண்டுகள் அவசரகாலச்சட்டத்திலேயே ஆட்சி நடத்திவிட்டதன் பெருமை பொருளாதாரத்தடை என்பதால். துருத்தி நிற்கும் பற்கள்.வற்றிப்போன மார்புகள். வாடிப்போன முகம். ஒல்லியான கால்கள்.ஒட்டிய வயிறு . காலிலிருந்து கழுத்துவரை ஒரே அளவுகள்தான். ஆனாலும் அதிலிருந்த ஒரு வாசலையெ விட்டு வைக்காத இந்திய இராணும். நீங்கள் சொன்னது போல ஜஸ்வர்யா ராயாய் இருந்திருந்தால் ஒரு பெண்ணின் மிகுதி ஓன்பது வாசல்களையும் விட்டு வைத்திருப்பார்களா?? அவர்கள் மீதம் விட்டிருந்த மிகுதி வாசல்களையும் நீங்கள் உங்கள் எழுத்தால் நிரப்பியுள்ளீர்கள். நன்றிகளும் வாழ்த்துக்களும்.

சுய இன்ப டோண்டுவிற்கும் கையை இழுத்த பெயரிலிக்கும்.

2:38 PM, Posted by sathiri, 6 Comments

சுய இன்ப டோண்டுவிற்கும் கையை இழுத்த பெயரிலிக்கும்.

தொடர்ந்து ஈழத்தமிழர்களிற்கு எதிரான விடயங்களை தேடியெடுத்தும் சொந்தமாகவும் அனுபவித்து எழுதி சுய இன்பம் அடைந்து கொண்டிருந்து டோண்டுவின் கையை அதியுச்ச நிலையின்போது இழுத்து விட்டபெயரிலிக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக்கொண்டு நான் எழுதுவது என்னவெனில்... ஈழத்தமிழனின் உண்மையான வலிகளை யூரியுப்பில் பார்த்துவிட்டு ஒரு குத்துப்பாட்டும்(குத்துசாங்) ஒரு சண்டை(பைட்டும் ) வைத்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்.என்று சினிமா விமர்சனம் எழுதுபவர்களிடம் நாங்கள் தமிழன் என்கிற உணர்வினை எதிர்பார்ப்பது தறிகெட்டத்தனம்.எனவே எழுதி விட்டுப்போகட்டும்.