Navigation


RSS : Articles / Comments


பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்கக் கோரி கையொப்பம் சேகரிப்பு

1:35 PM, Posted by sathiri, One Comment

பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்கக் கோரி கையொப்பம் சேகரிப்பு

விண்ணப்பம் பற்றிய விபரத்தின் தமிழாக்கம் :

30 வருடங்களாக சிங்கள அரசாங்க அடக்குமுறையை எதிர்த்து தமிழர்கள் போராடி வருகிறார்கள். போராலும் ஆழிப் பேரலையாலும் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். 70 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் போரினால் உயிரிழந்துள்ளனர்.


கடந்த சில வருடங்களாக மனித உரிமை மீறல்கள் பாரிய அளவில் மீறப்படுகின்றன. கடந்த 2 வருடங்களாக ஆள்கடத்தல்களும் கொலைகளும் அதிகரித்துள்ளதாக Human Rights Watch கூறியுள்ளது. தமிழர் பகுதிகளுக்கான பிரதான பாதைகள் மூடப்பட்டுள்ளன. பல அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வது அரசாங்கத்தினால் தடுக்கப்படுகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டுமே இப் பகுதிகளில் சேவயாற்றி வந்தன. ஆனால் இரண்டு வருடங்களாக மனித நேயப் பணியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 39 மனித நேயப் பணியாளர்கள் இக் காலப் பகுதியுல் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபை, Action Contre Faim அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் கொலைக்கு இலங்கை அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சேவைகளை நிறுத்தி வருகின்றன.

இன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களே தமது ஆதரவை TRO போன்ற சேவை நிறுவனங்களூடாக வழங்கி வருகின்றனர். ஏப்ரல் மாதம் CCT அமைப்பில் பணிபுரிந்த 15 தமிழர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். கவலை அடைந்துள்ள கைது செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களையும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையையும் கவனத்தில் கொண்டு உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறோம்.

--------

கீழுள்ள இணைப்புக்குச் சென்று உங்கள் கையொப்பங்களைப் பதிவு செய்யலாம்.

http://www.gopetition.com/online/14849.html

தீவாளி

2:38 PM, Posted by sathiri, No Comment

தீவாளி

ஒரு பேப்பரிற்காக

தீபாவளியை தீவாளி என்றுதான் பேச்சு வழக்கில் ஊரில் சொல்லுவோம்.வருசா வருசம் தீபாவளி வரும்போதெல்லாம் இப்பொழுது தீபாவளி தமிழருடையதா??தீபாவளியை கொண்டாடலாமா? கூடாதா??என்று சர்ச்சைகளும் கட்டுரைகளும் வெளிவர ஆரம்பிக்கும். தீபாவளி ஏன் கொண்டாட வேணும் எண்டு எப்பவோ யாரோ சொல்லிவிட்டு போன நரகாசுரன் கதையிலை கொலைசெய்யப்பட்ட நரகாசுரனுக்கு வாழ்த்து சொல்லுற அளவுக்கு இப்ப நிலைமை வந்திட்டிது. ஏன் எதுக்கு எண்டு சரியான விபரம் தெரியாமலேயோ தமிழர் கொண்டாடுற பல பெருநாளிலை இதுவும் ஒண்டு.

அதையெல்லாம் ஒரு கரையிலை வைச்சிட்டு ஊரிலை சின்னிலை கொண்டாடின என்ரை சில தீபாவளி நினைவுகளை உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். தீபாவளியை பலபேர் பல மாதிரி கொண்டாடுவினம் .இந்தியாவிலை அதுவும் வடநாடுகள்மற்றும் ராஜஸ்தான் மானிலத்திலை பெரியளவிலை 3 நாளைக்கு கொண்டாடறவை. ஒரு தீபவாளி கொண்டாட்டத்தை நான் ராஜஸ்தானிலை பார்த்திருக்கிறன். ஆனால் அங்கையெல்லாம் அன்று விரதம் இருந்து லக்சுமி தெய்வத்திற்கு படையல் செய்வது வழைமை.எங்கடை நாட்டிலையும் சிலபேர் அப்பிடிதான் செய்யிறவை ஆனால் எங்கடை ஊர்ப்பக்கம் தீபாவளி கொண்டாடுற விதமே தனி. சாதாரணமா மரக்கறி சாப்பிடுறவை கூட அண்டைக்குதான் மச்சம்(இறைச்சி). சாப்பிடுவினம். வீட்டுக்கு வெளியிலை அடுப்பு மூட்டி அதிலை ஆடு கிடந்து கொதிக்கும்.

அது மட்டுமில்லை பொதுவா தண்ணியடிக்காதவை கூட அண்டைக்கு மூக்கு முட்ட அடிச்சிட்டு செய்யிற கூத்துகள் அதுவே ஒரு திருவிழா மாதிரித்தான்.சிலர் கொஞ்சமா அடிச்சிட்டு சும்மா சினிமா காட்டுறவையும் இருந்தவை. பெரும்பாலும் ஊருக்கை பழைய கோபதாபங்களும் அண்டைக்குதான் தீர்க்கபடுறதுமட்டுமில்லை தண்ணியடிச்சவர் யாரோ தன்பாட்டிலை சிவனே எண்டு போய் கொண்டிருக்கிறவரை பாத்து டேய் உன்ரை பார்வை சரியில்லை எண்டு வம்புக்கிளுப்பினம் .சிலநேரம் அவருக்கு உண்மையிலேயே வாக்கு கண்ணாகவும் இருக்கும்.அண்டைக்கு எங்கடை ஊர் ஆஸ்பத்திரியிலை நேஸ்மாருக்கு வேலையும் கூட .ஏணெண்டால் வெட்டு கொத்து பட்டு கனபேர் வருவினம். அடுத்தா எங்கடை ஊரிலை தீபாவளி நாளுக்கெண்டே ஆட்டுக்கிடாயள் வளக்கிறவை. வீட்டிலை பிள்ளைக்கு பால்மா இருக்கோ இல்லையோ ஆட்டுக்கெண்டு விசேசமா முருக்கங்குளை தவிடு எண்டு ஊட்டி ஊட்டி வளப்பினம்.

பிறகு தீபாவளியண்டு நாலைஞ்சு குடும்பமா சேந்து வீட்டு வளவுக்கை இல்லாட்டி ஊர் ஒதுக்குபுறமா ஒரு இடத்தலை ஆட்டை வெட்டி பங்கு போடுவினம். பங்கு போடேக்கை சில நேரம் ஆட்டுக்குடலுக்குஅடிபட்டு ஆக்களின்ரை குடல் வெளியிலை வந்த கதையளும் நடந்திருக்கு.இதெல்லாம் பெரியாக்களின்ரை தீபாவளியெண்டால் இனி எங்கடை தீபாவளிக்கு வருவம். தீபாவளியண்டு எல்லாருக்கும் புது உடுப்பு வாங்கிறது வழக்கம். ஆறு ஏழு பிள்ளையள் எண்டு இருக்கிற நடுத்தர குடும்பங்களிலை எல்லா பிள்ளையளிற்கும் விதம்விதமாய் உடுப்ப வாங்கிறது எண்டது இயலாத காரியம்.அது மாதிரிஎங்கடை வீட்டிலையும் நாங்கள் ஆறு உருப்படி். அதாலை விசேசமான நாட்களிலை எங்கடை ஊர் சங்கக் கடைக்கு இலங்கை கைத்தெறி கூட்டுத்தாபனம் சிங்களத்திலை சலுசலா எண்டு சொல்லுறவை அந்த சலுசலா துணி வாறது ஒரு குறிப்பிட்ட டிசைன் துணி மட்டும் வரும்.விலையும் மலிவு.

அதைவிட எங்கடை மாமா ஒருதர் சங்கக்கடை மனேச்சரா இருந்தவர் அவரிட்டை சொல்லி விட்டால் இன்னமும் கொஞ்சம் மலிவா வாங்கியருவார். அனேகமான தீபாவளிக்கு எங்களுக்கு எல்லாருக்கும் சலுசலாதுணியிலை டிசைன் போட்டது சில மீற்றர் டிசைன் போடாதது சில மீற்றர் எண்டு வாங்குவினம்.எங்கடை ஊரிலை ஒரு தையல் காரர் இருந்தவர் எனக்கு தெரிந்து இதுவரை உலகத்திலேயோ மீற்றர் அளவை பாவிக்காமல் பார்வையிலேயே அளவெடுத்து தைக்கிற ஒரேயொரு கெட்டிக்கார தையல்காரர் அவர்தான். அவரிட்டை துணியையும் குடுத்து எங்களையும் காட்டிவிட்டால் போதும். அது மட்டுமில்லை தையல் காரரிட்டை அப்பா ஒரு வசனம்சொல்லுவார் "வளர்ற பிள்ளையள் பாத்து கொஞ்சம் பெருசா தையுங்கோ எண்டுவார்." பிறகென்ன பார்வையிலையே அளவெடுக்கிற தையல்காரர் எங்களை பார்க்காமலேயே தைக்கிற காற்சட்டையை நாங்கள் போட்டு அதுக்கு இரண்டு பக்கமும் ஊசி குத்திவிட்டால்தான் இடுப்பை விட்டு கீழை விழாமல் நிக்கும். அதோடை ஒரு கலர் துணியிலையே அண்ணனுக்கு சேட்டு அக்காக்கு சட்டை எனக்கு காற்சட்டை தங்கைக்கு பாவாடை எண்டு எல்லாம் தைச்சு மிச்ச துணி கொஞ்சம் பெரிசா மிஞ்சினால் வீட்டுக்கு யன்னல் சீலை அதிலையும் மிஞ்சினால் தலைகணி உறை எண்டு பல கலர் மயமா இல்லாமல் ஒரோயொரு கலர் மயமா இருக்கும்.

அடு்த்ததா தீபாவளியண்டு எங்களையெல்லாம் வரிசையா இருத்தி குளிக்க வாத்து புது உடுப்பை போட்டு எங்களுக்கு கையிலை ஆளுக்கொரு கற்பூரகட்டியை கையிலை தந்து கோயிலுக்கு அனுப்பி விடுவினம் கோயிலுக்கு போய் அதை கொளுத்தி கும்பிட்டிட்டு அடுத்த வேலையா ஊரிலை இருக்கிற எங்களுக்கு படிப்பிக்கிற வாத்தியார் மற்றும் எங்கடை சொந்த காரர் வீடுகளுக்கு போய் புது உடுப்பை காட்டிபோட்டு அவை கையிலை தாற சில்லறைகளை வாங்கி கொண்டு சந்தோசமா வருவம்.தீபாவளிக்கு மறுநாள் மட்டும் பாடசாலைக்கு சீருடை போடத் தேவையில்லை ஒரு நாள் விசேட சலுகை தருவினம் அண்டைக்கு நாங்கள் தீபாவளி உடுப்பை போட்டு கொண்டு போய் பள்ளிகூடத்திலையும் கலர் காட்டலாம்.

ஆனால் பலருக்கு தாய்தகப்பன் தீபாவளி உடுப்பே பள்ளிக்கூட சீருடையை வாங்கி குடுத்திருப்பினம் அவைபாடு அண்டைக்கு கவலைதான். இப்படித்தான் ஒரு தீபாவளிக்கு வழைமை போல எங்கள் ஆறு பேருக்கும் சலுசலா ஒரேகலர் துணியிலை தைச்ச உடுப்பை போட்டுக்கொண்டு நாங்கள் வரிலையாய் கோயிலுக்கு போய்கொண்டிருக்க வீதியிலை போன யாரோ ஒருத்தர் " சலுசலா விளம்பரம் போகுதடா டோய்" எண்டு கத்த அப்ப கொஞ்சம் வளந்திருந்த அண்ணன் கோபத்திலை வீட்டை வந்து சேட்டை கழட்டி எறிஞ்சதோடை சலுசலா துணி உடுப்பிலை கொஞ்சம் மாற்றம் வந்தது. பிறகு நாங்களும் வளர வளர வீட்டிலை காசை வாங்கி எங்களுக்கு பிடிச்ச துணியை வாங்கி யாழ்ப்பாணம் புதிய சந்தை கட்டிடத்திலை இருந்த நியூ டீசன்ஸ். ஈரான். எண்டு பிரபலமான தையல் கடைகளை நோக்கி போக ஆரம்பித்து விட்டடோம்.ஆனாலும் பார்வையிலேயே அளவெடுத்து தைக்கிற எங்கள் ஊர் தையல்காரருக்கும் மவுசு இருந்துகொண்டேதான் இருந்தது. இப்படியாக எங்களிற்கு நரகாசுரனை பற்றியதோ கிருஸ்ணர் அவதாரம் எடுத்து கொலை செய்ததை பற்றி கதையை பற்றிய அக்கறை எதுவுமே இல்லை. பின்னர் நாட்டில் பிரச்சனைகள் தொடங்கிய போதும் கூட குண்டுச்சத்தங்கள் வெடியோசைகளின் நடுவிலும் எங்களை பொறுத்தவை மகிழ்ச்சியான ஒரு பண்டிகையாக தீபாவளி வருடா வருடம் வந்து போய் கொண்டிருந்தது.

1987ம் ஆண்டும் தீபாவளி வந்தது ஆனால் வழைமையான இலங்கை இராணுவத்தின் வெடியோசையுடன் அல்ல மாறாக அமைதிகாக்கும் படை என்கிற முத்திரையுடன் வந்த இந்திய அழிவுப்படையின் வெடியோசைகள் மத்தியில் அந்த தீபாவளிநாள் விடிந்தது அன்று எனது தந்தையையும் எனது சகோதரியையும் இந்தியப்படைகள் எங்கள் வீதியில் வைத்து சுட்டுகொன்று கொழுத்திவிட்டு போயிருந்தனர். அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளி நாளும் எங்கள் குடும்பத்திற்கு நினைவுநாளாகி போனது.

போத்தல் பித்தளை அலுமினியம்.

10:42 AM, Posted by sathiri, No Comment

போத்தல் பித்தளை அலுமினியம்.

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது.

பேத்தில் பித்தளை அலுமினியம். இந்த சத்தத்தை ஊரில் கேட்காதர்களே இருந்திருக்க மாட்டீர்கள். ஒரு சைக்கிளில் பின்னால் இரண்டுபக்கமும் சாக்கு அல்லது உரப்பையை கட்டியபடி போத்தில் பித்தளை அலுமினியம் இருக்கா என்று கத்தியபடியே வருவார்கள்.வீடுகளில் உள்ள பழைய உபோகிக்க முடியாத இரும்பு பித்தளை சாமான்களை நிறுத்து வாங்கி கொண்டு போவார்கள்.சிலர் பண்டமாற்று முறையில் வாங்கிய பொருட்களிற்கு பிளாஸ்ரிக் அல்லது அலுமினிய பாத்திரங்களை தருவார்கள். முன்னர் யாழ்சோனதெருவில் வசித்துவந்த சோனகர்களே பெரும்பாலும் இந்த வியாபாரத்தை செய்தனர்.இப்படி வேறு சில வியாபாரிகளின் கூவல் சத்தங்களையும் ஊரிலை கேட்கலாம் ஆடு இரிக்கா ஆடு.பழையகோட்.இப்பிடி இன்னும். அடுத்ததாய் மீன்வியாபாரிகளும். ஜஸ்பழவியாபாரிகளும் கோண் அடிப்பார்கள் அல்லது மணியடித்தபடி வருவார்கள்.

இதில் இந்த ஜஸ்பழம்தான்தான் இந்தவாரத்து கதை.ஜஸ்பழம் எண்டதும் வாயூறாத ஆக்களே இருக்க முடியாது அதுவும் புலம்பெயர்ந்து வாழுறவைக்கு ஜஸ்பழம் எண்டதும் ஊர் கோயில்திருவிழா அல்லது வேறை அதோடை சம்பந்தபட்ட மறக்கமுடியாத சம்பவம் கனக்க ஞாபகத்துக்கு வரும்.அதுமாதிரித்தான் எனக்கு ஒரு நினைவு. ஊரிலை நான் முதல் சொன்னது போலை சைக்கிளில் பின்னுக்கு ஒரு பெட்டிகட்டி அதில் ஜஸ்பழத்தை வைத்து வித்துகொண்டு வருவார்கள் பெட்டியில் கலர்கலராய் படம்கீறி அந்த ஜஸ்பழகொம்பனியின் பெயரும் எழுதியிருக்கும்.உள்ளை ஜஸ்பழமும் கலர்கலாய் இருக்கும். இதிலை கொஞ்சம் விசேசமானது ஜஸ்சொக் கொஞ்சம் விலையும் கூடுதல்.இந்த ஜஸ்பழ சைக்கிள் வியாபாரியள் சாதாரமாக ஒவ்வொருநாளும் ஊரிலை வலம் வருவினம். அடுத்ததா வாகனத்திலையும் வருவினம் இந்த வாகனகாரர் அனேகமா ஏதாவது நல்லநாள் பெருநாளிலைதான் ஊருக்கை வலம் வருவினம்.இல்லாட்டி கோயில் திருவிழாக்கள் பள்ளிக்கூட விழையாட்டு போட்டிஇப்பிடி ஏதாவது நிகழ்ச்சி நடக்கிற இடங்களிலை காணலாம்.

இந்த வாகனத்தை சுத்தி கலர் ரியூப்லைற் பூட்டி சின்ன ஸ்பீக்கரும் பூட்டி அதிலை சினிமா பாட்டைபோட்டுகொண்டுதான் வருவினம். அவையின்ரை ஸ்பீக்கரிலை பாடுற சினிமாபாட்டை செளந்தர்ராஜனும்.பி.சுலாவும் பாடியிருந்தாலும் அதிலை வாற சத்தம் இரண்டு பேரின்ரை குரலும் ஒரேமாதிரி வித்தியாசம் கண்டு பிடிக்கேலாத குரலாதான் கேக்கும்.ஆனாலும் பாட்டு என்ன பாட்டு எண்டு விளங்கும்.அதைவிட ஜஸ்பழவானின்ரை டீசல் இஞ்சின்வேலைசெய்யிற சத்தம் பாட்டுச்சத்தத்துக்கு மேலாலை கேக்கும்.சின்னவயசிலை ஜஸ்பழம் வாங்கிகுடிக்கிறதெண்டது ஒரு போராட்டமானவிசயம். ஏணெண்டால் ஊரிரை சாதாரணமா குடும்பங்கள் எல்லாத்திலையும் குறைஞ்சது அஞ்சு அல்லது ஆறு பிள்ளையள் இருப்பினம். இதிலை வருமானத்ததை கணக்கு பாத்து வாழுகின்ற நடுத்தரக்குடும்பங்களிலை கிழைமைக்கு ஒருக்கா எல்லா பிள்ளைகளிற்கும் ஜஸ்பழம் வாங்கி குடுக்கிறதெண்டால் கட்டுபடியாகாத விசயம்.

எனவே நடுத்தரகுடும்பங்களிலை உள்ள பிள்ளையளிற்கு ஊர் கோயில் கொடியேறினால் இல்லாட்டி தீபாவளி வருசத்துக்குதான் ஜஸ்பழம். இல்லாட்டி தூரத்து உறவினர் யாராவது வீட்டுக்குவந்திட்டு போகேக்கை கையிலை தாற சில்லறை அதுவும்இல்லாட்டி வீட்டிலை இருந்து மல்லிப்பேணி. உள்ளிப்பேணிக்கை அம்மா இல்லாட்டி அம்மம்மா வைக்கிறகாசிலை சில்லறையை களவெடுத்தால்தான்(உள்ளதை சொல்லதானே வேணும்) ஜஸ்பழம் குடிக்கலாம். அப்பிடி ஜஸ்பழத்தை வாங்கி குடிச்சு முடிஞ்சாலும் கடைசியா இருக்கிற தடிக்குச்சியையும் சூப்பி அதை சப்புசப்பெண்டு சப்பி அது முரசிலை குத்தி ரத்தம் வந்தாலும் கவலைப்படாமல் சப்பி தும்பாக்கி தான் எறிவம்.இப்பிடி சின்னவயசிலை நாங்கள் ஜஸ்பழம் குடிக்க படுகிற கஸ்ரங்களை பாத்து ஜஸ்பழவியாபாரியள் எல்லாருமா சேர்ந்து எங்கடை நெஞ்சிலை ரின்பாலை வாக்கிறமாதிரி ஒரு திட்டத்தை கொண்டு வந்திச்சினம்.அதாவது ஜஸ்பழவியாபாரியளும் போத்தில் பித்தளை இரும்புசாமானை வாங்கிகொண்டு அதுக்கு மாற்றீடா பண்டமாற்று முறையிலை ஜஸ்பழம் தருவினம் .

ஆனால் என்ன நாங்கள் எந்த விலையான பெருளை குடுத்தாலும் அதுக்கு விலை நிர்ணயம் கிடையாது ஒரு ஜஸ்பழம்மதான் கிடைக்கும். எங்களுக்கு அது போதும் தானே.இனி விசயத்துக்கு வாறன் அப்ப எனக்கொரு 10 வயது இருக்கும் ஒருநாள் பின்னேரம்வீட்டிலை நானும் தங்கையும்தான் என்ரை சின்னவயது நணபன் இருள்அழகனும் ஒழிச்சு பிடிச்சு விழையாடிக்கொண்டு நிண்டனாங்கள் அந்த நேரம் ஜஸ்பழகாரனின்ரை மணிச்சத்தம் கேக்க இருள்அழகன் அவசரமாய் ஓடினான் கொஞ்ச நேரத்தாலை கையிலை ஜஸ்பழம்குடிச்சபடி வர. எங்காலை காசு எண்டு நான் கேட்கவும் அவன் சொன்னான் காசு தேவையில்லை நான் வீட்டிலை இருந்த அலுமினிய பானையை குடுத்து வாங்கினனான் எண்டான். அப்பதான் எனக்கு மூளை வேகமாக வேலை செய்தது ஓடிப்போய் வீட்டிலை பழைய பாவிக்காத சாமான் ஏதாவது இருக்கா எண்டு தேடினன் கிடைக்கேல்லை ஜஸ்பழகாரனின் மணிச்சத்தம் தூரமாக போய்கொண்டிருந்தது அவசரத்துக்கு பாவமில்லை எண்டு கழுவி கவிட்டு வைத்திருந்த பித்தளை தேத்தண்ணி கேத்திலின்ரை மூடியை தூக்கி கொண்டோடிப்போய் ஜஸ்பழகாரனிட்டை குடுக்க அவனும் ஒரு ஜஸ்பழத்தை தந்தான்.

பின்னாலையே தங்கை தனக்கும் ஜஸ்பழம் வாங்கித்தரசொல்லி அழுதபடி ஓடிவரவே என்ன செய்யலாமென யோசித்த நான் மூடியே இல்லை பிறகென்னத்துக்கு கேத்தில் என நினைச்சு கேத்திலையும் தூக்கிகொண்டோடிப்போய் ஜஸ்பழகாரனிட்டை குடுக்க அவனும் ஏதோ லொத்தோ விழுந்த சந்தோசத்திலை சிரிச்சபடி ஒரு ஜஸ்பழத்தை தந்தான்.நாங்கள் ஜஸ்பழத்தை குடிச்சு முடிஞ்சு தடியை சப்பிக்கொண்டிருக்கவே வெளியிலை போயிருந்த அம்மா வந்து எங்களை பாத்திட்டு என்னட்டை ஜஸ்பழம் எங்காலை ஆர் வாங்கி தந்தது எண்டு கேட்டார். அந்த வயசிலை திட்டம் போட்டு பொய் சொல்ல தெரியாதுதானே நானும் மாமா வாங்கிதந்திட்டு போனவர் எண்டு சொல்ல அம்மாவும் பேசாமல் போய் வெளியாலை போய் வந்த களைப்பிற்கு தேத்தண்ணி போட கேத்திலை தேடினார். கேத்திலை காணமால் என்னைக்கூப்பிட்டு கேத்தில் எங்கை எண்டு கேக்கவும் நானும் பயத்திலை முழுசதொடங்க தங்கச்சி உடைனையே அம்மாதரப்பு சாட்சியாய் மாறி கேத்தில் ஜஸ்பழமாய் மாறியதை சொல்லி அப்புறூவர்ஆகி விட்டாள்.பிறகென்ன வேலியில் நின்ற பூவரசம் தடியொன்று அம்மாவின் கைகளிற்கு மாறி என்மீது விழையாடியது.

அது முடிய அம்மா என்ரை கையிலை காசை தந்து மரியாதையாய் ஓடிப்போய் ஜஸ்பழகாரன் எங்கை நிண்டாலும் தேடிப்பிடிச்சு காசை குடுத்திட்டு கேத்திலை வாங்கிகொண்டுவா என கலைச்சு விட்டார்.நானும் அழுதபடி ஜஸ்பழகாரனை தேடி இருள்அழகன் வீட்டை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் போது அய்யோ அய்யோ எண்டு இளுள்அழகனின்ரை அலறல் சத்தம் கோட்டது ஏணெண்டால் இருள்அழகன் ஜஸ்பழகாரனிட்டை குடுத்தது அவங்கடை வீட்டு புட்டுபானையை