Navigation


RSS : Articles / Comments


புலம்பெயர் தேசத்தில் சிறீலங்கா புலனாய்வு பிரிவின் புதிய பொறிகள்

2:33 PM, Posted by sathiri, 2 Comments

புலம்பெயர் தேசத்தில் சிறீலங்கா புலனாய்வு பிரிவின் புதிய பொறிகள்

இந்தவார ஓரு பேப்பரிற்காக எழுதியது

சிறீலங்கா அரசானது காலங்காலமாக தனது தமிழின அழிப்பு வேலைகளை தாயகத்தில் மேற்கொண்டுவரும் வேளைகளில் அதற்கு எதிராக புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைளையும் அடக்கிவிட தனது சகல வளங்களையும் பாவித்து சில நடவடிக்கைகளை மேற்டிகாள்வதும் பொதுவாக சகலரும் அறிந்ததே. அது போலத்தான் தற்சமயம் மகிந்த அரசும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் தமிழ் தேசியத்திறகான ஆதரவை குலைப்பதில் முழுமூச்சாக முயன்று வருகிறார். ஆனால் கடந்த காலங்களில் சிறீலங்கா அரசபதவிகளில் இருந்தவர்கள் தமிழர்களின் எழுச்சியை ஒடுக்க யாராவது ஒரு தமிழரிற்கு பதவிகளை கொடுத்து அவர் மூலமாகவே சர்வதேசமெங்கும் தமிழ் தேசிய செயற்பாடுகளிற்கொதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

மகிந்த அரசோ தன் சொந்த நலனை காக்ககூட ஒரு தமிழனிற்கு பெரும்பதவி ஒன்றினை குடுக்க விரும்பாமல் கொஞ்சம் மாறு பட்டு புலம்பெயர் தேசங்களில் இலகுவாய் விலை போக கூடிய சில தமிழர்களை தேடிப்பிடித்து அவர்கள் மூலமாக குறைந்த செலவில் நிறைந்த சேவையை எதிர்பாத்து சில செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த புலம்பெயர் தமிழர்களும் வாங்கியதற்கு வஞ்சகமில்லாமல் உழைப்பதையே காணக்கூடியதாக உள்ளது. இது பேலத்தான் அண்மையில் பிரான்சிற்கு வந்து போன ஒரு தமிழ் அமைச்சர் மூலமாக இலங்கை புலனாய்வு துறை பிரான்சிலும் சில நடவடிக்கைகளை செய்து முடிக்க சில திட்டங்கள் தீட்டப்பட்டு அவற்றை சில தமிழர்களிடம் ஒப்படைத்து சென்று விட்டார்.

அவர்கள் திட்டப்படி பிரான்ஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் பல்வேறு பெயர்களில் பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு பட்ட நோக்கங்களிற்காக நடாத்தபடுவது போன்ற ஒரு மாயையை காட்டி சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது. ஆனால் அந்த எல்லா நிகழ்வுகளிலுமே முதற்கட்டமாக மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் தேசிய மற்றும் தமிழர்களின் உரிமைபோரிற்கும் எதிரான கருத்துக்களை பரப்பி அவர்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவது. பின்னர் மீண்டும் தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம் தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழர் உரிமை போரின் முதுகெலும்பாக இருக்கும் புலம்பெயர் தேசத்து தமிழர்களின் ஆதரவை மழுங்கடிப்பதே முக்கிய நோக்கமாகும்.

அதே போல இந்தியாவில் இலங்கையரசு ஆழும்கட்சிகளையும் சில அதிகாரிகளையும் தன் சூழ்ச்சியால் தன்வசம் இழுத்து வைத்திருந்தாலும் தமிழ் நாட்டின் சாதாரண மக்களிடம் ஈழத்தமிழரிற்கான ஆதரவை இன்றுவரை சிதைக்க முடியாமல் திண்டாடிவருவது அனைவரிற்கும் தெரிந்த விடயம்தான். அதற்காக இலங்கையரசும் இந்திய அதிகாரிகளும் சேர்ந்து ஆடிய நாடகங்களும் அதே நேரம் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை கிளைத்தூதரகமும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டும் பெரிய அளவில் எவ்வித பயனையும் இலங்கையரசு பெறாததால். அடுத்த நடவடிக்கையாக புலம்பெயர் தேசத்து தமிழர்களை வைத்தே இந்த தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவை சிதைக்க திட்டம் தீட்டியுள்ளது. முக்கியமா தமிழ் நாட்டில் எத்தனை துன்பங்கள் வந்தபோதும் தமது தளராத ஆதரவை தந்தவர்கள் பெரியார் திராவிடஇயக்கங்களும் அரசியல் கட்சிகளும்.
தலித் இயக்கங்களும் அரசியல்கட்சிகளும் ஆகும்.

எனவே இந்த அமைப்புக்களின் ஆதரவை தமிழ் நாட்டில் சிதைத்து விட்டால் மற்றைய ஆதரவு கரங்களையும் மடக்கி விடாலாமென்பது இலங்கையரசின் கனவு. இதன் ஆரம்ப கட்டமாக பிரான்சில் சிறீலங்கா அரசிற்கு சேவகம் செய்ய புறப்பட்டவர்களால் சில நிகழ்வுகள் எற்பாடு செய்யபபட்டுள்ளன. அவை சமாதானப்பறைவைகள் என்கிற பெயரில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு என்கிற தலைப்பில் ஒரு எற்பாடு . இதை கேட்டதுமே சிரிப்புதான் வந்தது இதை படிக்கின்ற உங்களும் கட்டாயம் வரும். ஏனெனில் எங்கள் தேசத்தில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் அமைதி பூத்து குலுங்குகின்றது. எனவேதான் ஈராக்கை பற்றி கதைக்க போகினமாம். அடுத்த நிகழ்வு 26 புகலிட பெண்கள் சந்திப்பு இந்த புகலிட பெண்கள் சந்திப்பில் வருடா வருடம் வழைமை போல நடக்கின்ற புலியெதிர்ப்பு தான் இந்த வருடமும் நடக்க போகின்றது. எனவே இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை.

அனால் அடுத்ததாக நடக்க போகின்ற முதலாவது தலித்மகாநாடு என்கிற பெயரில்: நடக்க போகின்ற மகாநாடுதான் முக்கியமான ஆனால் மேசமான விளைவுகளை ஏற்படுத்த போகின்ற மகாநாடு. ஏனெனில் நான் முதலே குறிப்பிட்டது போல இது இந்தியாவில் தலித் அடைப்புகளிடையே ஈழத்தமிழரிற்கு இருக்கும் ஆதரவை சீர்குலைக்கும் ஒரு நிகழ்வு காரணம் இந்த நிகழ்வை ஒழுங்கு படுத்தியிருப்பவர்கள் இலங்கையரசின் எலும்புத்துண்டை எட்டிப்பிடித்தவர்கள். ஏற்கனவே இந்த மகாநாடு பற்றி நான் எதிர்பார்த்ததை போல இணைய தளங்களிலும் வலைப்பூக்களிலும் பல சர்ச்சையைகளை கிழப்பி விவாதங்களும் தொடங்கி விட்டது.

இந்த மகாநாட்டிற்கு பிரான்சில் பெரியார் விழிப்பணர்வு இயக்கம் என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் ஒரு பெண்மணியும் தெரிந்தோ தெரியாமலோ இந்த மகாநாட்டிற்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் ஆனாலும் அவரிற்கு தலித் மகாநாட்டின்உள்நோக்கம் பற்றிய போதிய விளக்கம் கொடுத்தும் அவர் பெரியார் இயக்கத்தின் பெயரால் தொடர்ந்தும் தனது ஆதரவை நடக்கவிரக்கும் தலித் மகாநாட்டிற்கு ஆதரவு வழங்குவதால் இந்த பெண்மணியும் இலங்கையரசிடம் விலைபோயுள்ளார் என்று எண்ணவே தோன்றுகின்றது. எது எப்படியோ இலங்கை புலனாய்வு பிரிவினர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்வுகள் பற்றி பிரான்ஸ்வாழ் தமிழர்கள் விழிப்பாயிருக்க வேண்டிகால கட்டம் இது. ஆனால் இந்த ஏற்பாடுகள் இந்தியாவில் ஈழத்தமிழர்களின் ஆதரவுத்தளம் ஆட்டம்காணுமா??அல்லது இந்தச்சதிகள் தகர்க்கப்பட்டு மேலும் உறுதியாகுமா?? பொறுத்திருந்து பார்க்கலாம் நன்றி சாத்திரி

2 Comments

Anonymous @ 10:10 AM

ninga sonnathu unmai enntha 2odu kulu net irrukkuஇராயகரன் aduthaven srirankan ennth odu kulugale ennda entha naki pulaippu poi undai family vedu pulai....

Anonymous @ 3:09 PM

சாத்திரீ நீங்கள் ஏழுதிய கட்டுரையின் உண்மை பெண்கள் மகாநாட்டின் ராஜேஸ்வரரியின் பேச்சிற்கு பின்னர்தான் புரியிது இதுதான் தலித்மகா நாாட்டிலையும் நடக்கபோகுதா????