Navigation


RSS : Articles / Comments


ஈழப்போராட்டத்தில் எனது (பொய்)சாட்சியம் இறுதிப்பாகம்

12:17 PM, Posted by sathiri, 4 Comments

இந்திய இராணுவத்தின் உதவியுடன் உருவாக்க பட்ட தமிழ் தேசிய இராணுவத்திற்காக வீதிகளில் திரிந்த கண்ணிற்கு தெரிந்தவர்கள் மட்டுமென்றில்லை வீடு வீடாகவும் புகுந்து இளைஞர்கள் அனைவரும் வலுகட்டாயமாக பிடித்து இழுத்த கொண்டு செல்லபட்டு கட்டாய பயிற்சிகள் வழங்கபட்டனர் மறுத்தவர்களிற்கு கட்டிவைத்து கடுமையான தண்டனைகள் மட்டுமல்ல சுட்டும் கொல்லபட்டனர்.

பாடசாலை வசல்களில் நின்றே பாடசாலை முடிந்ததும் அப்படியே பாடசாலை சீருடைகளுடனேயே மாணவர்களை அள்ளிசென்றனர். வெளியே போன பிள்ளைகள் வீடுவரவில்லெயென்று தேடியபடி இந்திய இராணுவ முகாம்களிலும் இந்த ஈ.பி யின் முகாம் வாசல்களிலும் கண்ணீருடன் காத்து நின்றபெற்றோர்களும் மிரட்டி விரட்டபட்டனர்.தங்கள் பிள்ளைகளை பாது காக்க அந்த காலகட்டங்களில் பெற்றோர்கள் பட்ட தயரங்களை இந்த கட்டுரையில் எழுத்தகளால் என்னால் விழக்கிவிட முடியாது.அது மட்டுமல்ல எந்த வீட்டிலாவது வயதிற்கு வந்த இளம் பெண்களை வைத்திருந்தவர்கள் பாடு இதைவிட மேசமானது அந்த பெண்களை தங்களை திருமணம் செய்ய சொல்லி மிரட்டுவார்கள் மறுத்தால் மறுநாள் அவள் கடத்தபடுவாள் எங்காவது அவர்கள் தங்கள் மிருகதனத்தை தீர்த்துவிட்டு மிச்சமாய் அவளது உயிரற்ற உடலமட்டும் மிஞ்சும்.

புலிகளிற்கு உதவியவர்கள் என்று சொல்லி தங்கள் சொந்த பகையாளிகளையெல்லாம் சுட்டு தள்ளினார்கள் புலிக்கு தேனீர் கொடுத்தவன் சாப்பாடு கொடுத்தவன் அந்த குடும்பத்தில் யாராவது புலிகள் இயக்கத்தில் இருந்தால் அவனது குடும்பம் என்று தேடி தேடி மனிதவேட்டையாடினர். எனது ஊரான மானிப்பாயில் மண்டையன் குழு என்று ஒரு ஈ.பி கும்பல் முகாம் இருந்தது இதற்கு பொறுப்பாய் இருந்தவன் தான் பின்னர் மட்டகளப்பில் கொல்லபட்ட ராசிக் என்பவன்.

இந்த குழுவிற்கு மண்டையன் குழு என்று சிறப்பு பெயர் வந்ததற்கான காரணம் என்னவெனில் இவர்கள் யாரையாவது கைது செய்தால் சுட்டு கொல்ல மாட்டார்கள் அந்த நபரின் தலையை மட்டும் வெட்டி முண்டத்தை எங்காவது போட்டுவிட்டு தலையை மற்றவர்கள் பார்வைக்கு படும்படியாக சந்திகளில் மதில்களில் வைத்துவிட்டு போவார்கள்.இந்த இயக்கத்தைதான் புஸ்பராசா அவர்கள் ஈழவிடுதலை இயக்கங்களிலேயே மிகவும் மனிதாபிமானம் நிறைந்த ஒரேயொரு இயக்கம் என்று புகளாரம் பாடியிருக்கிறார்.

இப்படியான இவர்களின் கொடுமைகளில் கொலைகளில் சித்திரவதைகளில் இருந்து தப்பிக்க இளவயது ஆண்களும் பெண்களுமாய் இரகசியமாய் புலிகள் இருந்த காட்டுபகுதிகளிற்கு சென்று அவர்களுடன் இணைந்து கொள்ள தொடங்கினர். இந்திய அதிகாரிகள் போட்டகணக்கு பிழைக்க தொடங்கியது.இந்த காலகட்டத்தில் தான் பிரான்சில் வசித்த புஸ்பராசா இந்திய அதிகாரிகளின் விசேட அழைப்பின் பெயரில் பிரான்சில் ஈ.பி அமைப்பிற்கு வேலை செய்த உமாகாந்தனையும் அழைத்து கொண்டு இலங்கை சென்றார்.

அங்கு இந்திய இராணுவ உலங்குவானூர்திகளிலும் வடக்கு கிழக்கு எங்கும் 50க்கும் மேற்பட்ட தேசிய விடுதலை இராணுவத்தினரின் ஆயுத பாதுகாப்பு வழங்க மேலதிகமாக முன்னும் பின்னும் இந்திய இராணுவத்தின் இராணுவ வாகன தொடரணிகளின் பாதகாப்புடன் வலம்வந்து யாழ் அசோகா விடுதியிலும் கொழும்பில் நட்சத்திர விடதிகளிலும் தங்கியிருந்த இவரிற்கு தங்கள் பிள்ளைகளை இழந்தபிள்ளைகிற்காய் கதறிய இருக்கின்ற பிள்ளைகளை காப்பாற்ற துடித்த தாய்தந்தைகளின் அவலங்கள் புரியவில்லையென்று சொல்முடியாது.

காரணம் அசோகாவிடுதியில் முன்னால் இருந்த முகாமில் சித்திரைவதைபட்ட இளைஞர்களின் கதறல்கள் தன்னை கலவரபடுத்தியதென்றும் அவர்களை பார்க்க தினமும் அந்த முகாமின் முன்னால் வந்து அழுதபடிநின்ற பிள்ளைகளின் பெத்தவர்களை பார்க்க கவலையாய் இருந்ததென்றும் ஒரு ஒப்பிற்கு சப்பில்லாமல் ஒரு வசனத்தை எழுதி அவற்றிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல தப்பிக்க நினைக்திருக்கிறார்.

உற்ற நண்பர்களான பத்மநாபாவிடமோ வரதராஜபெருமாளிடமோ ஏன் உறுதுணையாக நின்ற இந்திய இராணுவ அதிகாரிகளிடமோ கூறி இவற்றை ஏன் அவரால் தடுக்கமுடியாமல் போனது . வேண்டாம் அதற்கான முயற்சிகளையாவது செய்தாரா?? என்றால் இல்லையென்பதே பதில்.இருக்கும்வரை பணம் பதவி சுகம் என்று அனுபவித்துவிட்டு இறுதியில் மரண படுக்கையில் இவைகளிற்காக இவர் வருந்துகிறேன் என்று இவர் கவலை தெரிவித்ததால் என்ன பயன்??. இந்த தொடரை எழுத தொடங்கும் போதே பலர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டனர் அது இறந்து போன ஒரு மனிதனை பற்றி எழுதுவது அவ்வளவு நாகரீகம் அல்ல என்றனர். இருக்கலாம் ஆனால் இந்த தொடரை தொடர்ந்து படித்தவர்வர்களிற்கு புரிந்திருக்கும் இது அந்த இறந்து போன மனிதனின் சொந்த வாழ்க்கையை பற்றிய விமர்சனமோ அல்லது விசமகருத்துகளையோ நான் இங்கு எழுதியிருக்கவில்லை பொதுவாழ்வு என்றும் தன்னினத்திற்கான விடுதலை போராட்டம் புறப்பட்டு தான் தடுமாறியது மட்டுமன்றி தன்னுடன் சேர்ந்தவர்களையும் தடுமாறவைத்து தன்னினத்தையும் தத்தளிக்கவைத்தவரின் தன்னிலைவிளக்க புத்தகம் எல்லாம் எம்மினத்தின் வரலாற்று புத்தகமாக ஆகிவிடாது.

ஈழவிடுதலை போராட்டத்தை ஈடுவைத்து வாழ்ந்தவர்கள் இறந்து போனாலும் மன்னிக்க முடியாதவர்களே. இதை எழுதுகின்ற நானும் படிக்கிற நீங்களும் ஒருநாள் இறந்து போகிறவர்களே எனவே மரணம் ஒன்று மட்டும் எல்லா மனிதனையும் புனிதன் ஆக்கிவிடாது என்று கூறி இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வரகின்ற வேளை இந்த தொடரை எழுத எனக்கு எவ்வித நிபந்தனைகளையோ கட்டுபாடுகளையோ விதிக்காமல் சுதந்திரமாய் எழுதவிட்ட ஒரு பேப்பரின் பொறுப்பாசிரியர் கோபிக்கும்.

இந்த தொடருக்காக ஈழவிடுதலையின் ஆயுத போராட்டத்தின் ஆரம்பகால தகவல்களை தந்துதவிய தமிழ் மாணவர் பேரவையின் அமைப்பாளரான திரு பொன்.சத்தியசீலன் அவர்களிற்கும்.மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத ஆரம்பகால போராளிகள்சிலரிற்கும். எனது கட்டுரைகளிற்கு வரும் விமர்சனங்கள் பாராட்டுகள் திட்டுக்கள் என்று எல்லாவற்றையுமே என்னுடன் சரிசமமாய் பகிர்ந்துகொள்ளும் ஒரு பேப்பர்காரன்கள் ஒரு பேப்பர்காரிகள் இந்த கட்டுரையை எழுத தூண்டுதலாய் அமைந்த யாழ்கொம் இணையதளத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக வாசகர்களாகிய உங்கள் அனைவரிற்கும் நன்றிகூறி விடை பெறமுன்னர்

ஈழவிடுதலையின் ஆயுத போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் பங்குபற்றிய பலர் இன்று புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் தாங்கள் விடுதலை போராட்டத்தை ஏதோஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு சில காரணங்களால் இடையில் விட்டு விட்டு வந்துவிட்டோம் என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மையில் ஒரு தவிப்பில் இருப்பதை அறிய முடிகிறது அவர்கள் அதை விடுத்து தங்கள் அனுபவங்களையும் நிகழ்வுகளையும் உண்மை பதிவுகளாக்க வேண்டும் அதுதான் அவர்கள் அடுத்த எமது சந்ததிக்காக விட்டு செல்லும் வரலாறு ஆகும். அதே போல மாணவர் பேரவை அமைப்பின் அமைப்பாளர் திரு பொன். சத்தியசீலன் அவர்களும் இதேபோன்ற ஒரு முயற்சியில் இருப்பதாக அறிந்தேன் அவரது முயற்சி விரைவில் பதிவாக வெளிவரும் என்கிற ஆவலுடன் எதிர்பார்த்து நன்றி வணக்கம்.

4 Comments

ஈழபாரதி @ 12:33 PM

கட்டுரை நன்றாக வந்திருக்கிறது வாழ்த்துக்கள். உண்மையை உரக்க உரத்து கூறி இருக்கிறீகள். வரலாற்றை என்றும் திரிக்க நாம் அனுமதியோம் என்பதை அழகாக கூறி இருக்கிறீர்கள் மீண்டும் வாழ்த்துக்கள்.

Anonymous @ 4:58 PM

சூப்பரா எழுதி இருக்கிறீங்க அண்ணா.

Anonymous @ 11:27 PM

பொய்யர்களின் புரட்டுகளை அம்பலப்படுத்தியுள்ளீர்கள் சாத்திரி. இதற்குப் பின்னுள்ள உங்கள் கடின உழைப்புக்கு என் பாரடுக்களும் நன்றியும் உரித்தாகுக. தொடர்ந்து மேலும் பல பொய்ச்சாட்சியங்களை கட்டவிழ்ப்பீர்கள் என நம்புகிறேன்.

Anonymous @ 6:37 PM

நல்லா இருக்கு.