Navigation


RSS : Articles / Comments


ஈழபொராட்டத்தில் எனது(பொய்) சாட்சியம் பாகம்7

7:09 AM, Posted by sathiri, No Comment


சுபத்திரனிடம் பொறுப்பு ஒப்படைக்க பட்டதும் அவர் அந்த வேலையை செய்து முடிக்க தங்களது திருநெல்வேலி முகாமிலிருந்து நான்கு பேரை தெரிவு செய்து பொறுப்பை ஒப்படைக்கிறார். எங்கும் சந்திக்கு சந்தி இந்திய இராணுவத்தின் காவலரண்கள் ரோந்துகள் ஒட்டுக்குளுக்கனான ஈ.என்.டி.எல்.எவ். மற்றும் ஈ.பி. ஆர்.எல்.எவ். முகாம் என்று உயர் பாது காப்பு பகுதியாக மாறியிருந்த திருநெல்வேலியில்.1989 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 21ந் திகதி காலை வழைமை போல தனது கடைமைகளிற்காக ராஜினி தன்னுடைய சைக்கிளில் யாழ் பல்கலை கழகம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். அப்போது நடந்த சம்பவத்தை பார்த்தவர்கள் கூறியது அவரிற்கு எதிரே இரண்டு சைக்கிள்களில் நான்கு இளைஞர்கள் வந்துகொண்டிருக்கின்றனர் அவரை கடந்து ஒரு சைக்கிள் செல்ல ராஜினியை கடந்து பினேசென்ற சைக்கிளில்முன்னிற்கு இருந்தவன் ஒரு பெரிய துப்பாக்கியை சாரத்தால் சுத்தியபடி வைத்திருந்தான்.
மற்றைய சைக்கிள் அவரிற்கு எதிரே நிக்க அந்த சைக்கிளில் முன்இருந்து வந்த ஒருவன் தனது கைத்துப்பாக்கியால் முதலில் ராஜினியை நோக்கி சுட சைக்கிளை ஓட்டிவந்தவனும் ராஜினியை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டான் .ராஜினி அந்த இடத்திலேயே இறந்து போனார். இப்போ பெருக்கி பிரித்து பாருங்கள் கணக்கு சரியாக இருக்கும் யார் ராஜினியை கொன்றார்கள் என்று.ராஜினி கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் சிறிதரனிற்கு தலை சுற்றியது காரணம் அவரிற்கு தெரியும் அடுத்த தலை தன்னுடையததான் என்று. என்ன செய்யலாமென யோசித்தவர். இந்தியபடை காலத்தில் யாழ் அசோகா விடுதிதான் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் தலைமை முகாமாகவும் அன்றைய வடகிழக்கு முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்ட வரதராஜபெருமாளின் அலுவலகமாகவும் இயங்கிவந்தது.எனவே
ஈ.பி. ஆர். எல்.எவ். வுடன் தொடர்புடைய ஒரு வைத்திய சாலை ஊழியரை அவசரமாக அசோகா விடுதிக்கு அனுப்பி வைத்தார். அவரை வந்து சந்திக்கும்படி அழைப்பும் கிடைத்தது.அந்த ஊழியரையும் அழைத்துக்கொண்டு அசோகா விடுதிக்கு அரக்கபரக்க ஓடினார் சிறீதரன்.அவரை மட்டும்பரிசோதனைகளின் பின்னர் உள்ளே அழைத்தனர் உள்ளே போனவரிற்கு வரதராஜபெருமாள் வணக்கம் சொன்னார்.சிரமப்பட்டு சிரித்தபடி சிறீதரனும் வணக்கம் சொல்லி எதிரே அமர ஏளனமாக பார்த்தபடியே வரதராஜபெருமாள் சொன்னார். பாருங்கள் எத்தனையாயிரம் படை எவ்வளவு ஆயுதங்கள் உலகின் மிகப்பெரிய இராணுவம் எங்கள் பக்கம். முழத்திற்கு முழம் சந்திக்கு சந்தி எங்கள் ஆட்கள் வடக்கு கிழக்கு எங்கும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள். இன்னமும் சில சில்லறை புலிகளே மிச்சம் சல்லடை போட்டு தேடி அழித்து அந்த புலிளை புதைத்த இடத்தில் புல்லுமுளைக்கவிடுவோம்.ஆனால் நீங்களோ சிறுபிள்ளைதனமாய் இதற்குள் இருந்துகொண்டு மனிதவுரிமை மண்ணாங்கட்டி என்று எழுதிகொண்டு எதற்கு வேண்டாத வேலை??எங்கள் சொல் கேட்டால் நீங்கள் முன்னேற ஆயிரம்வழி இல்லையென்று அடம்பிடித்தால் ஒரேயொருவழி அது ராஜினிசென்றவழி இதில் எந்தவழி நீங்களே முடிவுசெய்யலாம் இது உங்களிற்கு மட்டுமல்ல உங்களைசேர்ந்தவர்களிற்கும் என்றார்.சிறிது யோசித்த சிறீதரன் இந்தமுறை உண்மை சந்தோசமாக சிரித்தபடி எழுந்தவர் நீங்கள் சொன்ன முதல்வழி என்வழிஎன்றுவிட்டு வெளியேறியவர் வெளியேநின்ற அந்த வைத்திய சாலைஊழியரைபார்த்து சொன்னார் புலிகள்தான் ராஜினியை கொன்றுவிட்டார்கள் என்றவும்.புரிந்துகொண்ட அந்த ஊழியரும் புன்னகைத்தார்.பின்னர் யாழ்பல்கலைகழக வளாகத்திற்கு வந்த சிறீதரன் ராஜினியை புலிகள்கொன்றுவிட்டனர் என்றும் அவரிற்கு தெரிந்த ஆனால் அந்த காலகட்டத்தில் பிரபல்யம் இல்லாத மூன்று புலிஉறுப்பினர்களின் பெயரையும் கூறி(இவர் கூறியவர்கள் ஒருவர் கோண்டாவிலையும் மற்றவர் சாவகச்சேரியையும் இன்னொருவர் மானிப்பாயையும் சேர்ந்வர்கள்) வில்லில்லாமலேயே பாட ஆமா புலிகள்தான் கொன்றுவிட்டனர் ராஜன்கூலும் பின்பாட்டுபாடினார்.ஆகா படித்தமனிதர் பெரிய மனிதர்அதுவும் கணிததுறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரவர் சொல்லிவிட்டாரேஅவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று சிலரும் நம்பிவிட்டனர்.நாளிற்கு நாள் சிறீதரனின் விசுவாசத்தை பார்த்த ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கமும் சிறீதரனிற்கு வேண்டிய வசதிகளும் பணஉதவிகள் செய்தது மட்டுமல்லாமல் பாதுகாப்பிறகென கைத்துப்பாக்கியும் ஒரு வோக்கிரோக்கியும் கூட கொடுத்திருந்தனர்.சிறீதரனும் பின்னர் சண்டிலிப்பாய் கல்வளையில் இருந்த அவரது வீட்டிற்கு செல்வதை தவிர்த்து யாழ் நகரபகுதியிலேயே பாதுகாப்பாக இருந்தபடி வாங்கின பணத்திற்கு புலியெதிர்பு பாடிகொண்டிருந்தார்.
இதுதான் ராஜினியின் கொலை புலிகள் வாலில் கட்டிவிட்டகதை. இதே விபரத்தை அதாவது ஈ.பி அமைப்புதான் கொலை செய்தனர் என்கிற விபரத்தை அதே அமைப்பிலிருந்து பிரிந்துசென்று பின்னர் ஈ.பி.டி.பி அமைப்பில் இணைந்து அந்த அமைப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அற்புதராஜா என்பவர் ஈ.பி.டி.யினரின் பத்திரிகையாகிய தினமுரசு பத்திரிகையிலும் அற்புதன் என்கிற பொயரில் ஆதாரங்களுடன் எழுதியிரந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.இது இப்படியிருக்க ராஜினியின் சகோதரியான நிர்மலா திடீரென சிலவருடங்களாக சிறீதரன் பாடிய அதேபாழைய பாட்டை ஏன் பாடுகிறார்??????அடுத்த பாகத்தில்...................

No Comment