Navigation


RSS : Articles / Comments


7:18 AM, Posted by sathiri, No Comment

ஈழபோராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் பாகம் 6

படுகொலைகளை கண்டிப்போம் படுகொலைகளை கண்டிப்போம் இது இலங்கை அரசு புலிகள் ஒப்பந்தத்திற்கு வந்ததன் பின்னர் புலத்தில் மாற்று கருத்தாளர் என்றும் மனிதவுரிமைவாதிகள் உஎன்றும் சொல்லிகொண்டு ஒரு குழுவினரின் குரல் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்க ஆரம்பித்துள்ளது.இவர்கள் படுகொலைசெய்யபட்ட சிலரின் பெயர்களை வைத்துகொண்டு தங்கள் சுய நலங்களிற்காக புலிகள்தான் இந்த கொலைகளை செய்தார்கள் என்று திருப்ப திருப்ப சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.

அப்படி அவர்களின் பட்டியலில் படுகொலைசெய்யபட்ட ஒருவரான சபாலிங்கத்தை பற்றிய உண்மையான விபரத்தை இதேதொடரில் முதலில் பார்த்தோம். அடுத்ததாக முக்கியமான இன்னொருத்தர் ரயனிதிரணகம. இவரது பெயர் ரயனி அல்ல ராஜினி என்பதே உண்மையான பெயர் ராஜினி எப்படி ரயனியானார் என்று தெரியாது. அது முக்கியம் அல்ல இங்கு இவரின் சகோதரி தான் இன்று இங்கிலாந்தில் மாற்று கருத்தாளர் என்று மனிதவுரிமை பேசிகொண்டிருக்கும் சிலரிற்குள் முக்கியமான நிர்மலா நித்தியானந்தன் ஆவார். இவரை விட ராஜினிக்கு இன்னும் இரு சகோதரிகள் உள்ளனர்.

ராஜினி ஆரம்ப காலங்களில் ஈழவிடுதலையை ஆயுதபோராட்டம் மூலமே பெற்று கொள்ள முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார் அத்துடன் கூட்டணியினரையும் கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவர்.இவர் தனது பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற காலத்திலேயே திரணகம என்ற சிங்கள இனத்தவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். பின்னர் 85 களில் மேற் படிப்பிற்காக இங்கிலாந்து வந்திருந்த சமயம் இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக வேலைத்திட்டங்கள் பலவற்றையும் செய்தவராவார் .இப்படி இங்கிலாந்தில் இருந்த காலகட்டத்தில் ராஜினிக்கும் அவரது விரிவுரையாளர் ஒருவருக்கும் எற்பட்ட காதலினால் திரணகம ராஜினியை பிரிந்துவிட அத்துடன் இருவருக்குமான தொடர்புகள் இல்லாது போய்விட்டது.

தான் ராஜினியை பிரிந்ததற்கான காரணங்கள் ராஜினியின் இயக்க தொடர்புகள் மற்றும் விரிவுரையாளருடனான தொடர்புகளே காரணம் என்று திரணகம பகிரங்கமாகவே பல இடங்களில் கூறியிருக்கிறார் இதில் இரகசியம் ஏதும் இல்லை. பின்னர் 86 களின் ஆரம்பத்தில் இவரது சகோதரி நிர்மலா புலிகளிற்கு ஆதரவாய் தமிழ்நாட்டில் இருந்தபடி புலிகளின் களத்தில் என்கிற பத்திரிகையை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தபோது இவர் புலிகளுடன் முரண்பட்டுகொண்டு வெளியேறியதால்(இதன் விபரத்தை இன்னொருமுறை விரிவாய் பார்ப்போம்)ராஜினியும் இங்கிலாந்தில்புலிகளிற்கு ஆதரவான வேலைகளை நிறுத்தி கொண்டார்.

பின்னர் இலங்கை திரும்பிய இவரிற்கு யாழ்பல்கலை கழகத்தில் மருத்துவபீட விரிவுரையாளர் பணி கிடைத்தது. அப்போதுதான் ஈழ விடுதலை போராட்டததின் இன்னொரு அத்தியாயத்தின் திறப்பிற்கு வழி கோலிய இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்து இந்திய இராணுவத்தின் வருகையும் அதை தொடர்ந்து இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்குமான மோதல் வெடித்திருந்த கால கட்டம். இந்திய இராணுவத்தின் கண்மூடித்தனமான பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் வெறியாட்டங்களும் நடந்துகொண்டிருந்த வேளை எல்லாவற்றிற்கும் மேலான மோசமான யுத்தகால சர்வதேச விதிகள் அத்னையையும் மீறிய யாழ்வைத்தியசாலை படுகொலையை 21ம் திகதி ஒக்ரோபர் மாதம் 1987ம் ஆண்டு இந்திய இராணுவம் மேற்கொண்டது.

இந்த காலகட்டங்களில்தான் ராஜினியும் சகமருத்துவபீட விரிவுரையாளரான சண்டிலிப்பாயை சேர்ந்த கோபாலசிங்கம் சிறீதரன் என்பரால் மேலும் அங்கு கணணித்துறையில் இருந்த ராயன்கூல்மற்றும் கலைப்பீட ராஜமோகன்ஆகியொரை இணைத்து யாழ்பல்கலைகழகமட்டத்தில் ஒரு மனிதவுரிமை அமைப்பை தோற்றுவித்து இந்திய இராணுவ மற்றும் இந்தியபடைகளுடன் சேர்ந்தியங்கி ஒட்டுக்குளுக்கள் முக்கியமாக ஈ.பி.ஆர்.எல். எவ் பின் மனிதவுரிமை மீறல்களையும் அவர்களின் பொதுமக்கள் மீதான படுகொலைகளையும் ஆதாரங்களுடன் தொகுத்து முறிந்தபனை என்னும் ஒரு புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகத்தை எழுதியதில் அதாவது யாழ்வைத்தியசாலை படுகொலைபற்றிய விபரங்களை ராஜினியே எழுதினார்.

இதனால் சர்வதேசத்திற்கு இந்திய இராணுவத்தின் கோரமான பக்ககங்களை காட்டிநின்றது உண்மையே.இதனால் இந்திய இராணுவ அதிகாரிகள் இந்திய உளவுபிரிவு மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பினரிற்கும் இந்த யாழ் மனிதவுரிமை அமைப்பிறகும் ஒரு பனியுத்தம் தொடங்கிவிட்டிருந்தது. அனால் ராஜினியும் சிறீதரனும் தொடர்ந்தும் ஈ.பி. ஆர்.எல்.எவ் வின் தேசிய விடுதலை இராணுவத்திற்கான கட்டாயஆள்சேர்ப்புபற்றிய விபரங்களையும் வெளி கொணரும் நோக்குடன் அவற்றை ஆதாரங்களுடன் சேகரித்து ஆவணங்களாக்க தொடங்கியபோது பனியுத்தம் நடாத்தியவர்களிற்கு குளிர் காச்சல் அடிக்க தொடங்கியது.

இதற்கு மேலும் இந்த யாழ்பல்கலைகழக மனிதவுரிமை அமைப்பை எழுதவிட்டு அழகு பார்க்கமுடியாது என்று தீர்மானித்து இந்திய இராணுவ அதிகாரிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் முதலமைச்சராக இருந்த வரதராஜபெருமாளும் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர்.இந்த அமைப்பின் தலையை வெட்டிவிட்டால் பிறகு வால்ஆடாது தலை யார்? பூவா தலையா போட்டு பார்த்தனர். அந்த அமைப்பின் தலையாய் இருந்தவர் சிறிதரன் ஆனால் பூவா தலையா போட்டு பார்த்தவர்களிற்கு இரண்டு பக்கமும் தலை விழுந்தது. ஆம் இரண்டு தலைகள் மற்றது ராஜினி காரணம் சிறீதரனைவிட ராஜினிக்கு வேறுமனிதவுரிமை அமைப்புக்களுடனான தொடர்புகள் அதிகம் அதைவிட தனிப்பட்டரீதியிலும் வெளிநாட்டு தொடர்புகளும் இருந்தன.ஆகவே சிறீதரனை போட்டால் ராஜினி வெளிநாடொன்றிற்கு தப்பிசென்றுவிட்டால் நிலைமை இன்னமும் இடியப்பம் (சிக்கல்)ஆகிவிடும் எனவே இரண்டு தலைகளுமே போடபடவேண்டிய தலைகள் தான் எனவே அந்தவேலையை முடிப்பதற்கு அப்போது ஈ.பி.ஆர் எல் எவ் பின் இராணுவ பிரிவு பொறுப்பாய் இருந்த றொபேட்(சுபத்திரன் சாவகச்சேரியை சேர்ந்தவர் இவர் பின்னர் சினைப்பர் தாக்குதலில் கொல்லபட்டுவிட்டார்)என்பவரிடம் ஒப்படைக்கபட்டு முதல் போடவேண்டிய தலை யார் எனபதனையும் அடையாளம் சொல்லிவழியனுப்பி வைத்தனர். இரண்டு தலையில் முதல் தலை?? அடுத்தஇதழில் பார்ப்போம்................


http://www.orupaper.com/issue55/pages_K__32.pdf

No Comment