Navigation


RSS : Articles / Comments


உருக்கும் உண்மைகள் 2

11:52 AM, Posted by sathiri, One Comment

எங்கே குட்டியண்ணா

வன்னி மண்ணில் எந்தக் கவலைகளும் இன்றி எதிர்காலம் பற்றிஎந்தவொரு சிந்தனைகளுமற்று துள்ளித்திரிந்த சிறுமிதான் சியாமளா ... சியாமளாவிற்கு இன்று வயது ஒன்பது இன்று அவளது குடும்பத்தில் யுத்தம் தாயாரை பலியெடுத்துவிட தந்தையோ வேறு திருமணம்செய்து கொண்டு பிள்ளைகளை கைவிட்டு சென்றது மட்டுமல்ல அவளது மூத்தசகோதரனோ மண்ணிற்காக போராடிய குற்றத்திற்காக இன்று தடுப்பு முகாமில் வாடுகின்றான். இவளது அடுத்த அண்ணன்தான் குட்டியண்ணா. சியாமளாவிற்கு குடும்பத்தில் மிகவும் பிடித்தஒரு உறவு இரண்டாவது குட்டியண்ணாதான்.அப்பா அம்மா இல்லாத குறையை குட்டியண்ணாவே போக்கினான். குட்டியண்ணா பாடசாலைக்கு சென்றாலென்ன கோவிலுக்கு சென்றாலென்ன. விழையாடச்சென்றாலென்ன குட்டியண்ணாவின் கைகளைப்பிடித்தபடி சியாமளா தொங்கிக் கொண்டே செல்வாள்.தன்னுடைய குடும்பத்தில் உள்ள மற்றைய சகோதர சகோதரிகளைப்பற்றி அவளிற்கு கவலையே இல்லை. இறுதி யுத்தத்த மேகங்கள் வன்னி மண்ணை முடிக்கொண்டபொது வானில் குண்டு வீச்சு விமானங்களின் சத்தம் கேட்டபோதெல்லாம் குட்டியண்ணா முதலில் தேடுவது இவளைத்தான் இவளையும் தூக்கியள்ளிக்கொண்டு ஓடிப்போய் பங்கரிற்குள் (பதுங்குகுழி)தள்ளி பாதுகாத்துக்கொள்வான்.

ஆனால் இராணுவம் முன்னேறிவர இவர்களது வீடும் காணியும் பதுங்கிய பங்கரும் பறிபோக எங்கே போவதென்று தெரியாமல் போய்க்கொண்டிருந்த குடும்பத்துடனருடன் குட்டியண்ணாவின் கைகளை பிடித்தபடி போய்க்கொண்டிருந்தாள் சியாமளா.முற்றுகைக்குள் வீழ்ந்த முல்லைத்தீவு மண்ணில் முடங்கிப்போன மக்களில் இவர்களும் அடங்கினர்..இறுதி யுத்தம் குண்டுச்சத்தங்களும் அவலக்குரலும். மரண ஓலங்கள் மட்டுமே செவிகளில் கேட்கத்தொடங்கியிருந்தது. வீட்டிற்கொருவர் போராடபோகவேண்டும் என்றிருந்த நிலைமாறி வீட்டிலிருந்த அனைவருமே போராடவேண்டும் என்கிற நிலையையும் கடந்து வீடு வாசல் அத்தனையையும் இழந்து முற்றுகைக்குள் முடங்கிப்போன அனைவருமே வயது வித்தியாசமின்றி போராடவேண்டும் என்கிற இறுதிக்கட்டம்..அப்படியொரு பொழுதில் அவளது குட்டியண்ணாவையும் காணவில்லை ..போய்விட்டான்...குட்டியண்ணா எங்கே என்று சியாமளா சகோதரியிடம் கேட்டு அழுதாள்...வருவார் அழக்கூடாது கெதியாய் வருவார். இதைத்தான் அவர்களால் சொல்ல முடிந்தது..ஒரு நாள் இரண்டு நாட்களாகி. சிலவாரத்தில் முள்ளிவாய்க்காலும் வீ்ழ்ந்துபோக அத்தனை கொடிய கோர யுத்தம் எதவும் சியாமளாவை பாதிக்கவில்லைஅவளது கேள்வி தேவை எல்லாமே குட்டியண்ணாவைப்பற்றியதாகத்தான் இருந்தது. அவளின் நச்சரிப்பு தாங்கமுடியாமல்..குட்டியண்ணா வெளிநாடு போயிருக்கிறார்..எங்களுக்கு இருக்க வீடு பிள்ளைக்கு நல்ல உடுப்பு விரும்பின சாப்பாடு எல்லாம் வாக்கக்கூடியமாதிரி உழைச்சு நிறைய காசோடை திரும்பிவருவார்.அதுவரைக்கும் அழக்கூடாது என்றொரு பொய்யை சொல்லி சியாமளாவை தேற்றி வைத்திருக்கிறார்கள் அவளது சகோதரிகள்..

குட்டியண்ணா இன்று உயிருடன் இருக்கின்றானா??அல்லது ஏதோவொரு இரகசிய இராணுவத்தடுப்புமகாமில் வாடுகின்றானா என்பது எவரிற்கும் தெரியாது. சியாமளா சகோதரிகளுடன் மணல்காடு அகதி முகாமில் குட்டியண்ணா வெளிநாட்டிலிருந்து திரும்ப வருவார் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறாள். முகாமிற்கு தொலைபேசிமூலம் சியாமளாவுடன் கதைத்தபொழுது அவள் என்னிடம் கேட்டது மாமா நீங்கள் வெளிநாட்டிலை இருந்துதானே கதைக்கிறீங்கள் உங்களிற்கு குட்டியண்ணாவை தெரியுமா???என்பதுதான்.அப்பொது எனக்கு சியாமளாவின் கதை முழுதுமாகத்தெரியாததால் நானும் தட்டுத்தடுமாறி "பிள்ளை வெளிநாடு பெரிய இடம் இஞ்சை உங்கடை குட்டியண்ணாவை தேடுறது கஸ்ரம் ....கண்டு பிடிச்சால் உங்களோடை கதைக்க வைக்கிறேன்.என்று சொல்லி முடித்தேன்.பின்னர் அவளது சகோதரி முழுவிபரங்களும் சொன்னபொழுதுதான். சியாமளாவின் குட்டியண்ணா வெளிநாட்டில் எங்காவது கிடைக்கமாட்டானா என்கிறதொரு நப்பாசை எனக்குள் தோன்றியது..இப்படி பலநூறு சியாமளாக்கள் தங்கள் குட்டியண்ணாக்களின் வருகைக்காக எதிர்பார்த்து அந்த முகாம்களில் வாடிக்கிடக்கிறார்கள்..எங்களால் குட்டியண்ணாக்களாக மாறமுடியாது ஆனால் குட்டியண்ணா உயிருடன் இருந்தால் என்னென்ன தன் தங்கைக்கு செய்வாரோ அதையாவது எம்மால் செய்ய முடியுமல்லவா????????

சியாமளா என்கிற சிறுமியின் குரலை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.

One Comment

www.bogy.in @ 10:08 PM

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in