Navigation


RSS : Articles / Comments


உருக்கும் உண்மை கதைகள்..உறவு 1

10:33 AM, Posted by sathiri, 4 Comments


வணக்கம் உறவுகளே....
முன்னர் உண்மைசம்பவங்களை கதைகளாக்கியிருந்தேன் அது பலரது வரவேற்பையும் பெற்றிருந்தது.அதே போல் மீண்டும் இங்கு நடந்து முடிந்த கோர யுத்தத்தினால் அவலப்படும் எமது உறவுகளின் இன்றைய நிலைகளை அவர்களுடன் தொலைபேசிஊடாக நேரடி உரையாடல் மூலம் சொன்னவற்றை அப்படியே கதையாக்குகின்றேன்.உங்கள் வரவேற்பு தொடர்ந்து இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் தொர்கிறேன்.நன்றி


வன்னிப்பெருநிலப்பரப்பில் தமிழீழ அரசு ஒன்று நடைமுறையிலிருந்த காலகட்டம். பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் குண்டுச்சத்தங்களும் ஓய்ந்து தமிழ் மக்கள் மனதில் மகிழ்ச்சியும் அதே நேரம் தமிழீழ அரசின் நிருவாகம் என்கிற ஒரு கட்டமைப்பின் அடுத்த பரிமாணத்தில் புகுந்துவிட்டதொரு மகி்ழ்சியுடனும் வாழ்ந்த காலகட்டம்.அந்த மகிழ்ச்சியான காலகட்டத்தில் இளம்பருவத்தினனாக இருந்த புவிகரனிற்கும் ஒருத்தியின் மீது காதல் ஏற்பட்டது.வழைமைபோல காதல் என்றாலே எதிர்க்கிற எமது சமூகத்தின் எதிர்ப்பும் அவனிற்கு தேன்றவே காதலும் தமிழீழ காவல்துறையின் உதவியுடன் காதலித்தவளை கரம்பிடித்து புதுமணத்தம்பதிகளாய் கிளிநொச்சி நகர்பகுதியில் குடியேறினான்.அவர்களின் காதலின் அடையாளமாய் ஒரு பெண்குழந்தையும் பிறந்தது.அவன் செய்தது கூலிவேலைதான் ஆனாலும் குடும்பம் மகிழ்ச்சியாகவேயிருந்தது. தான் அதிகம் படிக்கவில்லை ஆனால் தன்மகளை பெடிய படிப்புகள் படிப்பித்து எதிகாலத்தில் தமிழர் நிருவாகத்தில் ஒரு பெரிய அதிகாரியாக்குவது என்கிற எதிர்காலக்கனவுகளுடன் அவனது வாழ்நாட்கள் உருண்டேடிகொண்டிருந்தகாலத்தில். இலங்கையில் மீண்டும் சிறிது சிறிதாக குண்டுச்சத்தங்கள் கேட்கத்தொடங்கியது.தமிழீழ நிருவாக எல்லைகள் சுருங்கத்தொடங்கிக்கொண்டிருந்தன.அதே நேரம் எல்லைகளிற்கு உள்ளேயும் ஆழஊடுருவும் படைகளால் கிளைமேர்தாக்குதல்களும் தொர்ந்துகொண்டிருந்தது.

ஆனாலும் …. அங்கு வாழ்ந்த மக்களைப்போல ஏதோ ஒரு நம்பிக்கையில் தனது அன்றாட வாழ்கையை ஓட்டிக்கொண்டிருந்தான்.5ந்திகதி ஜப்பசி மாதம் 2008 ம் ஆண்டு அன்று வழைமைபேல தன்னுடைய மனைவி பிள்ளையிடம் விடைபெற்றுக்கொண்டு வேலைக்கு புறப்பட்டவன் கிளிநொச்சி உருத்திரபுரம் சாலையில் வேகமாக சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தான் ஒரு மரத்தை தாண்டும்பொழுது அவனை ஒரு பயிரோ வாகனம் ஒன்றும் வேகமாகக் கடந்தது.டமால் என்றெரு பெரிய குண்டுச்சத்தம் அது மட்டும்தான் அவனிற்கு நினைவிருந்தது.கண்விழித்து பார்த்தபொழுது கிளிநொச்சி வைத்தியசாலையில் அவனருகில் அழுதபடி அவனது மனைவி குந்தையும் நின்றிருந்தனர்.எழுந்திருக்க முயன்றான் முடியவில்லை உடலெல்லாம் ஒரே வலியாக இருந்தது.அவன் விழித்துவிட்டதை கவனித்த தாதியொருவர் அருகில் வந்து "அசையாமல் படுத்திருங்கோ கிளைமேர் அடியிலை உங்கடை இடக்கால் முறிஞ்சிட்டுது ஒப்பிறேசன் செய்திருக்கிறம் காலை அசைக்கவேண்டாம்" என்று ஆலோசனை கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றாள்..அப்பொழுதுதான் அவனிற்கு எல்லாம் நினைவிற்கு வந்தது.அடுத்தடுத்து பல சத்திர சிகிச்சைகள் நடந்தது.அவனது முழங்கால் மேசமாக பாதிக்கபட்டதால் அவனால் காலை மடிக்கமுடியாதென்பது பின்னர் தெரியவந்தது.

அவனது வருமானத்தை மட்டுமே நம்பியிருந் அவனது குடும்பமும் வறுமையில் வீழ்ந்தது.தன்னை பார்க்க வரும் மனைவி மகளிடம் " இன்னும் கொஞ்நாள் பொறுங்கோ நான் திரும்ப வந்ததும் நிலைமை சரியாயிடும் நான் என்ன பாடுபட்டாவது என்ரை பிள்ளையை படிப்பித்து பெரியாளாக்குவன் "என்று சொல்லிக்கொள்வான். நாளாக அவனது மனைவியும் வருவது குறைந்து போய் இறுதியில் வைத்தியசாலைப்பக்கம் வராமலேயே நிறுத்திவிட்டாள். அவள் எங்காவது வேலைக்கு போகத்தெடங்கியிருப்பாள் அதனால் நேரம் கிடைக்கமலிருக்கும் என அவனும் தன்னைத்தானே தேற்றிக்கொள்வான். மூன்றரை மாதங்களின் பின்னர் ஓரளவு குணமடைந்தவன் ஊன்று கோலின் உதவியுடன் நடக்கத்தொடங்கியிருந்தான். எப்பொழுது வீட்டிற்கு போகலாம் என்கிற அவனது நச்சரிப்பிற்கு ஒருநாள் வைத்தியரும் இனி போகலாம் அடிக்கடி வந்து காயத்திற்கு மருந்து கட்டவும் என்று சொன்னதுதான் தாமதம் அவன் தன்னுடைய கைத்தடியுடன் மனைவி மகளை பார்ப்பதற்காய் அவன் அத்தனை நாளும் அடக்கி வைத்திருந்த ஆசைகளுடன் வீடு நோக்கி போனவனிற்கு வீட்டில் யாரும் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தான்..அவர்கள் அங்கிருந்து போய் ஒரு மாதங்களாகிவிட்டது ஆனால் எங்கையென்று தெரியாது என்கிற பதில்தான் கிடைத்தது. தெரிந்தவர்கள் உறவினர்கள் என்கிற தேடல் தொடர்ந்தது..

ஒருவாறு அவள் இருக்குமிடத்தை அறிந்து அங்கு போய்விட்டான்..அங்கு போன பின்னர்தான் தெரிந்தது அவள் மனைவி அப்பொழுது இன்னொருத்தனிற்கு மனைவியாகிருந்தாள். அவர்களிற்குள் வாக்குவாதங்கள் நடந்தது பிள்ளையை தன்னிடம் தருமாறு சண்டைபிடித்தான். இறுதியாய் பிள்ளையை பலவந்தமாக தூக்கிக்கொண்டு கைத்தடியை ஊன்றியபடி நடக்க முயன்றவன் சாரம் அவிழ்ந்து போக சாரத்தையும் பிடிக்கமுயன்று தட்டுத்தடுமாறி நிலத்தில் விழுந்துபோனான். வேகமாய் வந்தவள் பிள்ளையை பறித்து விட்டு "உனக்கு காலும் ஏலாது இனி நீ பிச்சைதான் எடுத்து பிழைக்கலாம் நீ எப்பிடி பிள்ளையை வளக்கப்போறாய் எங்கையாவது போய் செத்து தொலைஞ்சு போ..."என்ற அவளது வார்த்தைகள் அவனிற்கு இன்னொரு கிளைமோர் வெடித்ததைப்போல இருந்தது..பிள்ளையையும் இழந்து அவனது எதிர்காலக்கனவுகளும் தமிழர் தாயகத்தின் எல்லைகள் போலவே சுருங்கிப்போய் சூனியமாய் நின்றது.

புவிகரனின் இன்றைய நிலையை அவனது குரலிலேயே கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.

4 Comments

Unknown @ 2:50 AM

veti vesungal avalai.pillai patri kavalaipadamal neengal ulaithu mun varungal.avargal thanaga vandhu viluvargal ungal kal adiyel.unmaiyana anbu endrum thorkathu

Unknown @ 2:52 AM

veti vesungal avalai.pillai patri kavalai padamal ulaithu mun varungal.pin avargal iruvarum ungal kal adiyel.

R.PRABAKARAN @ 12:14 AM

NEENGAL ANTHA KODURA MANIVAI NINAITHUKONDU,VERIYODU PANATHAI UNGAL VASAPADUTHY,PUTHIYA KALYANAM PANNUNGAL,PINNAR KANDIPAGA UN MAGAL UNGALAI THEDI VARUVAL..ANAL UNGAL MANAIVI OVVUR NALUM POSUNKI,UYIRODU SETHUKONDIRUPPAL...ITHU NICHAYAM SAATHIYAM...

R.PRABAKARAN @ 12:14 AM

HI