Navigation


RSS : Articles / Comments


9:30 AM, Posted by sathiri, One Comment





பெண்களின் சாதனைகளை எங்கள் தேசியத்தலைவர் மழுங்கடிக்கிறாரா??

இந்தவார ஒரு பேப்பரிற்காக

தலைப்பைப் பார்த்ததும் சாத்திரிக்கு என்ன நடந்தது மாற்றுக்கருத்தாளர் என்கிற பெயரிலை கொஞ்சம் வாங்கிக் கொண்டு மற்றப்பக்கம்: தாவிவிட்டாரா?? அல்லது ஏதோ பரபரப்பிற்காக இப்பிடியொரு தலைப்பை வைச்சாரா எண்டு தலையைப் பிய்க்க வேண்டாம். நடந்தது இதுதான்.கடந்த 30.03.08 அன்று ஜெர்மனியில் உள்ள சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் ஜெர்மனியில் கற்றிங்கன்( HATTINGEN )நகரில் ஒரு புத்தக அறிமுக விழா ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர்.அந்தப் புத்தகத்தின் பெயர் நெருப்புப்பூக்கள் .புத்தகத்தினை எழுதியிருந்தவர் மட்டு மாவட்டத்தின் கல்லடி றொபேட் என்பவர்.இவர் சுமார் எட்டு ஆண்டுகளிற்கு மேலாக சிறீலங்காவின் வெலிக்கடைச் சிறையில் வாடுகின்ற ஈழத்தமிழர்களின் விடுதலையை நேசிக்கின்ற ஒரு போராளிக்கலைஞன்.

இவரது கவிதைத் தொகுப்பே இந்த புத்தகமாகும்.ஆயுள்தண்டனை பெற்று தனது காலத்தினை சிறையிலேயே கழித்தபடி வாழ் நாளில் விடுதலையாவேனா அல்லது தன்வாழ்வு சிறையிலேயே முடிந்து போகுமா என்கிற கேள்விகளிற்கு விடை தெரியாத பொழுதுகளிலும் தன் உணர்வுகளை கவிதையாய் வடித்து அதனை ஒரு புத்தகமாக்கி அந்தப் புத்தகத்தினை உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் கொண்டு போய் சேர்த்து அதில் வருகின்ற பணத்தினை ஈழத்தில் உள்ள செஞ்சோலை சிறுவர்களின் எதிர் காலத்திற்கு உதவியாக்குவதே அவரது நோக்கமாகும். இதனைப் படிப்பவர்கள் அனைவரிற்கும் அந்தக் கல்லடி றொபேட் என்பரை பற்றியும் அவரது உயரிய நோக்கமும் புரிந்திருக்கும்.

இந்தப் புத்தகத்தினை வெளியீடு செய்வதற்கு புலம் பெயர் தேசத்தில் முயற்சிகளை சிலர் எடுத்திருந்த போதும் இதே சர்வதேச புலம் பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பினைச் சேர்ந்த சிலர் முட்டுக் கட்டைகளைப் போட்டு தடுத்துக்கொண்டிருந்தனால் இந்தப் புத்தகம் கால தாமதமாகி கடைசியாய் சுவிஸ் நாட்டில் வேறொரு அமைப்பினரால் வெளியீடு செய்யப்பட்டது.அதே புத்தகத்திற்குத்தான் புத்தகத்தினை வெளியிட முட்டுக்கட்டை போட்ட அமைப்பினரே ஜெர்மனியில் அறிமுக நிகழ்வினை செய்திருந்திருந்தனர்.அந்த அமைப்பின் தலைவர் ஏலையா முருகதாசன் அவர்கள் விடுமுறையில் வேறு நாட்டிற்கு போகவேண்டி இருந்ததால் உபதலைவரான திருமதி விக்னா பாக்கியநாதன்.

இவரது பட்டங்கள் (பி.ஏ. மற்றும் கவிதாயினி ). இவர் கலைவிளக்கு என்கிற பத்திரிகையின் ஆசிரியர் மட்டுமல்ல ஜெர்மனியில் தமிழாலயம் பாடசாலையின் ஆசிரியராகவும் இருக்கிறார். பாடசாலைப் பிள்ளைகளிற்காக இலக்கணப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது தலைமையிலேயே அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. புத்தக வெளியீட்டு நாளன்று வேறு இரண்டு புத்தகங்களின்செருகல்களுடன் மூன்று புத்தகங்களின் அறிமுக விழாவாக நடந்தது.சரி இனித்தான் இந்தக் கட்டுரையின் தலைப்பு சம்பந்தமான விடயம்.இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் உரைக்களம் அதாவது பட்டிமன்றம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தப் பட்டி மன்றத்தின் தலைப்பு பெண்களின் சாதனைகள் மதிக்கப்படுகின்றதா அல்லது மழுங்கடிக்கப்படகின்றதா என்பதே.இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கியும் அதனை ஒழுங்கு படுத்தியும் இருந்தவர் அந்த அமைப்பின் உறுப்பினரும் அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளருமான திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் என்பவர். இவரது பட்டங்கள்( ஊடகவியலாளர் மற்றும் கவிதாஞானவரிதிஎன்பன.) ஊடகவியலாளர் என்பதெல்லாம் பட்டமா?? இவர்களின் பட்டங்கள் பற்றிய விபரங்கள் இந்தக் கட்டுரைக்கு எதற்காக என்று நீங்கள் யோசிக்கலாம் கட்டுரையின் இறுதியில் அது உங்களிற்கு புரியும்.

இந்தப்பட்டிமன்றத்தின் இறுதியில் கருத்துக்கூறிய பட்டிமன்றத்தின் நடுவரான திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் எங்கள் தேசியத் தலைவர் அவர்களே மாமனிதர் என்கிற கெளரவத்தினை வழங்கும் பொழுது மனிதர் என்று ஆண்களை கெளரவிக்குமுகமாகவே வழங்குகிறாராரே தவிர மாமனிசி என்று பெண்கள்சார்பாக கெளரவிக்கப்படவிலை என்று கருத்தினைக்கூறினார் அப்படியானால் பெண்கள் சாதனைகளை எமது தேசியத் தலைவர் மழுங்கடிக்கின்றார் என்று கோசல்யா சொர்ணலிங்கம் சொல்கின்றாரா??என்று பார்வையாளர் வரிசையிலிருந்த பலர் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள சிலர் தலையிலடித்துக் கொண்டனர்.

அந்த ஏற்பாட்டினைச் செய்த அமைப்பினர் பலரும் மெளனமாகவே இருந்தது மட்டுமல்ல அந்த நிகழ்விற்கு தமைதாங்கிய திருமதி விக்னா பாக்கிய நாதனும் எதுவும் பேசாமல் மெளனமாகிய வேளையில் பிரான்சில் இருந்து அந்த நிகழ்விற்கு சென்றிருந்த கி.பி .அரவிந்தன் ஒலிவாங்கியை வாங்கி மாமனிதன் ஆண்பால் மாமனிசி பெண்பால் மாமனிதர் பலர்பால் என்று குழந்தைகளிற்கு பால் விளக்கம் குடுப்பதைப் போல 5 ம் வகுப்பு இலக்கணத்தை விளங்கப்படுத்திய பின்னனரும்.குழந்தையைப்போலவே தான் சொன்து சரியென்று கெளசல்யா சொர்ணலிங்கம் அடம்பிடித்துக்கொண்டிருந்தார்.

அது மட்டுமல்ல நடந்த தவறிற்காக சம்பந்தப் பட்டவரோ அல்லது சம்பந்தப்பட்ட அமைப்போ வருத்தமோ கவலையையோ தெரிவிக்கவில்லை. அப்பொழுதான் புரிந்தது அவர்களிற்கு இலக்கணப்பிழை இல்லை தனைக்கனப்பிழையென்று. முக்கியமானதொரு நிகழ்வில் தங்களை தமிழ் சமுதாயத்தின் முக்கிய நபர்களாகவும் தமிழ் சமூகத்தின் வழி காட்டிகளாகவும் புத்திமான்களாகவும் அடையாளப்படுத்திக்கொண்டிருந்த இவர்களது கேலிக்கூத்துக்களை பட்டிமன்றம் என்கிற பெயரில் குப்பைத்தொட்டி மன்றமாக்கி மேடையேற்றி முடிந்தபின்னர். அந்த நிகழ்வுபற்றிய இந்தக் கட்டுரையை எழுத நினைத்து அந்த அமைப்பின்தலைவர் ஏலையா முருகதாசன் அவர்கள் விடுமுறையை கழித்து வீடு திரும்பும் வரை காத்திருந்தேன் ஏனெனில் முன்னரும் நான் இந்த சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி விமர்சித்து ஒரு கட்டுரையை ஒரு பேப்பரில்எழுதியிருந்தேன்.அந்தக் கட்டுரை வெளிவந்ததும் தங்கள் அமைப்பினைபற்றி எழுதமுன்னர் தங்கள் பக்கத்து கருத்தக்களையும் கேட்டிருக்க வேண்டும் என்று அந்த அமைப்பினரால் என்மீது குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.

எனவேதான் அன் தலைவர் வீடு திரும்பியதும் அவரிடம் இந்த நிகழ்வில் நடந்த குளறுபடிகளிற்கு என்ன விளக்கம் அல்லது நடந்த சம்பவத்திற்கு நீங்கள் உங்கள் அமைப்பு சார்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டேன். தங்கள் அமைப்பு ஊறுப்பினர்களை அழைத்து கலந்தாலோசித்து சொல்வதாக சொன்னவர். நான் மீண்டும் அவரைத் தொடர்புகொண்ட பொழுது தான் அனைவரையும் அழைத்ததாகவும் ஆனால்அந்த நிகழ்வுடன் சம்பந்தப்பட்டவர்கள்யாரும் வரவில்லையென தனது இயலாமையினை தெரிவித்தார்.அப்படியானால் நடந்த சம்பவத்திற்கு நீங்கள் எவ்வித நடவடிக்கையோ அல்லது உங்கள் அமைப்பு சார்பில் ஏதாவது அறிக்கையே விடாது மெளனமாக இருப்பதால் பெண்களின் சாதனைகளை எங்கள் தேசியத்தலைவர் மழுங்கடிக்கிறாரார் என்கிற கூற்றினை உங்கள் அமைப்பு எற்றுக்கொள்கிறதா என்று கேட்டேன்.அதற்கு அவரின் தடுமாறியபடி மழுப்பலாக சம்பந்தமில்லாதவிடயங்களையே பேசினார்.


சரி அடுத்த ஒரு பேப்பரிற்கு இது பற்றிய கட்டுரையை எழுதுகின்றேன் அதற்கு முன்னர் ஏதாவது நடவடிக்கையெடுத்தால் அல்லது ஏதாவது சொல்ல விரும்பினால் எனக்கு அனுப்பிவையுங்கள் என்றதும். தங்கள் அமைப்பு சார்பாக ஒரு அறிக்கையை வேறொருவரின் பெயரைச் சொல்லி அவர் அனுப்பி வைப்பார் என்றார். நானும் மீண்டும் முருங்கை ஏறிய வேதாளம் போல அவர் சொன்னவரிற்கு தொலைபேசியடித்து விபரம் கேட்கவும் அவர் இன்னொருவரின் பெயரைச் சொல்லி அவர் அனுப்புவார் என்றார்.இப்படியே ஒருவர் மற்றவரின் பெயரை சொல்ல நானும் அவர்களிற்கெல்லாம் மாறி மாறி தொலைபேசியடித்து விபரம் கேட்டுஅதற்கு மேலும் என்னால் முருங்கை ஏறமுடியவில்லை..அதற்கு மேல் யாரையும் தொடர்புகொள்ளவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து அந்த ஒன்றியம் சார்பில் ஒருவர் எனக்கு தொலைபேசியடித்து அன்று நிகழ்வில் நடந்த பட்டிமன்றத்திற்கு கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள்தான் முழுப்பொறுப்பும் தங்கள் அமைப்பிற்கும் அதற்கும்எவ்வித சம்பந்தமும் இல்லை எனவே அந்த சம்பவத்திற்கு பொறுப்பை எற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவரை அந்த அமைப்பில் இருந்து நீக்குவதாகவும் கடிதம் அனுப்புகின்றோம் என்றார்.ஒருவர் தேவைப்படும்பொழுது மட்டும் பன்னீர் தெளித்து பட்டாடை போர்த்தி படத்திற்கு முகம்காட்டி மகிழும் இவர்கள்.ஏதாவது பிரச்சனையென்று வரும் பொழுது மட்டும் அவரிற்கே மஞ்சள் தண்ணி தெளித்து ஒரு மாலையைப்போட்டு பலியாடாக்கி விட்டு மற்றவர்கள் தப்பித்து விடுவது ஒரு சுயநலமற்ற பொதுநோக்குடைய ஒரு அமைப்பிற்கு சிறப்பாகாது.இனிவரும் காலங்களில் இவர்கள் வேண்டுமானால் ஏதாவது கவிதை கதைப்புத்கங்கள் வெளியிடுவது பட்டங்கள் சூட்டி மகிழ்வது பொன்னாடை போர்த்திப்படம் எடுத்துக் கொள்வது என்று அவர்கள் பாட்டிற்கு எதையாவது செய்யட்டும் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால் எங்கள்அமைப்பு ஈழத்தமிழர் போராட்ட அமைப்பின் உபஅமைப்பு என்று புலுடா விட்டபடி ஈழப்போராத்தையும் தமிழர் தேசியத்தையும் நீங்கள்உங்கள் வசதிக்கேற்ப மற்றவர் காதில் வைத்து அழகு பார்த்து மகிழ அது பூ அல்ல. பல்லாயிரம் மக்களினதும் போராளிகளினதும் தியாகத்தில் வளர்த்த நெருப்பு அதில் உங்கள் மேதாவித்தனங்களை காட்டி தயவு செய்து குளிர் காய நினைக்காதீர்கள்கள்.

One Comment

Shan Nalliah / GANDHIYIST @ 12:28 AM

Interseting argument...but not a single woman has been awarded so far...!

worldtamilrefugeesforum.blogspot.com...worldtamileconomicforum...sarvadesatamilercenter...