Navigation


RSS : Articles / Comments


சுவிஸ் மே ஊர்வலம் தாக்குதல் நடாத்தியது யார்????

10:39 AM, Posted by sathiri, No Comment

சுவிஸ் மே ஊர்வலம் தாக்குதல் நடாத்தியது யார்????

சுவிஸ் மே ஊர்வலம் அதில் புலிகள் சிலரை தாக்கினார்கள் என்று சிறீலங்கா மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளிடமும் விலைபோன சில இணையதளங்கள் பொய் செய்தியொன்றை மிக அக்கறையெடுத்து பரப்பிகொண்டிருக்கின்றன.ஆனால் நடந்த உண்மையென்ன என்பதனை சுவிஸ்வாழ் தமிழர்களிற்கு தெரியும் ஆனாலும் உலகெங்கும் வாழும் தமிழர்களும் அறிந்து கொள்வதற்காக நடந்த உண்மையை இங்கு எழுதுகிறேன். மற்றைய நாடுகளை போலவே சுவிசில் வருடாவருடம் மே தின கூட்டங்கள் சூரிச் மானிலத்தில் நடைபெறுவது வழைமை இதனை ஒரு அமைப்பு காவல் துறையின் உதவியுடன் ஒழுங்கு செய்கின்றது . இந்த ஊர்வலத்தில் அங்கு வசிக்கின்ற சகல நாட்டு மக்களும் பல சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் ஊடாகவும் இதனை ஒழுங்கு படுத்தி அதில் கலந்து கொள்கின்றனர்.

ஆனால் அதிக அளவு மக்கள் கலந்து கொள்கின்ற அமைப்புகளிற்கே சுவிஸ்அரசும் காவல் துறையினரும் அவர்கள் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை செய்வதற்கு இட வசதி செய்து கொடுக்கின்றது.சிறிய அளவு தொகை மக்களை கொண்ட அமைப்பினர் மே தின பேரணி நடந்து முடிந்ததும் கலைந்து சென்று விடுவார்கள். அதன்படி சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கு செய்யப்படும் ஊர்வலத்திலேயே சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்கள் வருடா வருடம் கலந்து கொண்டு தொழிலாளர் உரிமைக்காகவும் மற்றும் தமிழர் உரிமைக்காகவும் தங்கள் போராட்ட நியாயத்தினையும் சுவிஸ் மக்களிற்கும் உலகிற்கும் எடுத்து சொல்வது வழைமை.இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்வதால் தமிழர்களிற்கும் கூட்டமும் மற்றும் நிகழ்ச்சிகழ் நடாத்தவும் அதற்கு வசதியாக மேதினத்தினை ஒழுங்கு செய்யும் அமைப்பினால் ஒரு இடம் அதுவும் எல் ரி ரி அமைப்பு என்கிற பெயரிலேயெ பதிந்து வழைமை போல இட வசதி ஒதுக்கி கொடுக்கப்பட்டது.இந்த ஆண்டு பிரான்ஸ் ஒஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்திலும் ஈழ போராட்ட ஆதரவாளர்களிற்கு சில நெருக்கடிகள் அந்த நாட்டு அரசால் ஏற்பட்டது.

அதே போல சுவிசிலும் ஈழ போராட்ட ஆதரவாளர்கள் மீது ஒரு நெருக்கடியை கொடுக்க சுவிசில் சிறீலங்கா அரசின் புலனாய்வு பிரிவுடன் இணைந்து பகிரங்கமாகவே இயங்கி வருபவரான புளொட் அமைப்பின் றஞ்சன் என்பவர் திட்டத்தை போட்டார் றஞ்சனின் திட்டத்திற்கு இரு மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் கருணா அமைப்பின் ஆதரவாளர்கள் அவர்கள் அண்மையில் தான் சுவிசிற்கு வந்து றஞ்சனுடன் இணைந்து இயங்குகின்றவர்கள் உதவ முன்வந்தனர்.றஞ்சனின் திட்டப்படி கூட்டத்தில் வருபவர்களை கோபப் படுத்துவது அவர்கள் ஆத்திரமடைந்து தனது கூட்டத்தினரை தாக்குவார்கள் அதுவும் பல்லாயிரம் பேர் சேர்ந்து ஆவேசமாக உணர்ச்சி வசப்பட்டு தாக்கும் போது சிலர் இறந்து போக கூடிய சந்தர்ப்பமும் உண்டு.

அப்போது தான் எப்படியும் தப்பியோடி காவல் துறையினரிடம் போய் புலிகள் தன்னை கொல்ல வருகிறார்கள் என்றும் அதற்கு சுவிஸ் ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் பணம் கொடுத்து இருவரை அனுப்பியிருப்பதாக முன்னரே தன்னால் தயார் செய்யபட்டிருந்த அந்த இரு கருணா குழுவினரின் பெயைரை சொல்லி முறையிடுவார். உடனே அவர்களை கைது செய்து சுவிஸ் காவல் துறையினர் விசாரிக்கும் அப்போது அவர்கள் தாங்கள் புலிகள் அமைப்பினர் என்றும் புலிகள் சுவிஸ் பொறுப்பாளர்தான் பணம் தந்து றஞ்சனை கொலை செய்ய சொன்னதாக வாக்கு மூலம் கொடுப்பார்கள். இதை வைத்து சுவிசில் ஈழபோராட்ட ஆதரவினருக்கும் ஒரு நெருக்கடியை கொடுக்கலாமென்று ஏதோ தென்னிந்திய திரைப்படங்களை அதிகம் பார்த்த பாதிப்பில் றஞ்சன் திட்டம் போட்டார்.

அன்று ஈழ போராட்டத்திற்கு எதிராக இயங்குபவர்கள் சுமார் இருபத்தைந்து பேரளவில் அழைத்து கொண்டு இல்லாத ஒரு அமைப்பான புளொட் அமைப்பின் கொடியுடன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு ஒதுக்க பட்ட இடத்திற்கு போய் நின்று கொண்டனர்.அங்கு கூட்டத்திற்கான ஒழுங்குகளில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் இது எங்கள் அமைப்பிற்கென ஒதுக்கபட்ட இடம் எனவே நீங்கள் வேறு இடத்தில் போய் நில்லுங்கள் என்று றஞ்சனிடம் சொல்லவும். றஞ்சன் இது என்ன பிரபாகரன் வீட்டு காணியா என்று தொடங்கி மிக கேவலமான கெட்ட வார்த்தைகளால் திட்டவும் அங்கு நின்றவர்களிற்கு றஞ்சன் குழுவினர் வந்த நோக்கம் புரிந்து போனது. அவர்கள் உடனடியாக மே தின கூட்டத்தை ஒழுங்கு செய்யும் அமைப்பிற்கும் காவல் துறையினரிற்கும் தகவல் சொல்லிவிட்டு அமைதியாய் இருந்து விட்டனர்.

தங்கள் திட்டம் நிறைவேறாத றஞ்சன் குழுவினர் ஊர்வலம் அந்த இடத்தை வந்தடையும் வரை காத்திருந்து விட்டு ஊர்வலம் அங்கு வந்து சேர தொடங்கியதும் ஊர்வலத்தில் புலிகொடியுடன் வந்து கொண்டிருந்த வயதான ஒரவரிடம் கொடியை பறித்து அந்த கொடியால் அந்த வயோதிபரை தூசண வார்த்தைகளால் திட்டியபடி தாக்க தொடங்கினார்கள்.உடனே ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் அவர்களைதிருப்பி தாக்க தொடங்கி விட்டனர்.ஆனால் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்ததால் தழிழர் ஒருங்கிணைப்பு குழவினரால் அவர்களை கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது.றஞ்சன் உட்பட அவர்கள் குழுவினர் தப்பியோடிவிட ஆறு பேர் மட்டும் மக்களிடம் அகப்பட்டு கொண்டனர். உண்மையில் மூவாயிரம் பேரளவில் நின்ற அந்த கூட்டத்தில் ஒருவர் ஒரு அடி அடித்திருந்தாலே இந்த அரசாங்க அடிவருடிகள் இறந்து போயிருப்பார்கள்.

அப்படி ஒரு நிகழ்ச்சிதான் றஞ்சனிற்கும் தேவையாயிருந்தது.ஆனால் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளரும் அதன் பணியாளர்களும் தலையிட்டு அடிக்க விடாமல் தடுத்து அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.தனது திட்டம் ஓரளவு நிறைவேறிய றஞ்சன் அங்கிருந்து வேகமாக ஓடிப்போய் காவல் நிலையத்தினுள் புகுந்து புலிகள் அமைப்பினர் தன்னை கொலை செய்ய துரத்தி வருகிறார்கள் என்றும் இருவர் பெயரை சொல்லி அவர்களையே தன்னை கொலை செய்ய புலிகள் பொறுப்பாளர் அனுப்பியுள்ளார் என்றும் முறையிட்டார்.காவல்துறையினரும் றஞ்சன் சொன்ன இருவரையும் கைது செய்து விசாரிக்க ஆரம்பித்தனர். றஞ்சனின் திட்டப்படி அதுவரை எல்லாம் நன்றாகதான் நடந்தது ஆனால் நடந்து முடிந்ததோ வேறாக இருந்தது.

அந்த இருவரையும் காவல் துறை விசாரித்தபோது அவர்களும் றஞ்சன்: சொல்லிகொடுத்தபடி ஏதோ இலங்கை காவல் துறைக்கு கதை விடுவது போல சுவிஸ் பொலிசிற்கு கதை அளந்து கொண்டிருக்கும் போதே சுவிஸ் காவல்துறை அவர்களின் சாதகத்தை புரட்டி கொண்டிருந்தது. அவர்கள் சுவிசில் அகதி அந்தஸ்த்து கோரும் பொழுது அவர்களது வாக்கு மூலத்தில் தாங்கள் கருணா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் புலிகளால் தங்கள் உயிரிற்கு ஆபத்து என்றும் சொல்லியிருந்தனர்.அந்த வாக்மூலத்தை காவல் துறையினர் அவர்கள் முன்னால் தூக்கி போட்டபோதுதான் அவர்கள் திருவிழாவில் தொலைந்த குழந்தைகளை போல திரு திரு வென முழித்தபடி எல்லாவற்றிக்கும் றஞ்சன் தான் காரணம் என்று உண்மையை ஒரு வரி விடாமல் சொல்லி விட்டனர்.அதுமட்டுமல்ல தன்னுடன் வந்தவர்களை பலி கொடுத்தாவது புலிகள் மீது பழி போட நினைத்த றஞ்சன் மீது இப்பொழுது வழக்கு பதிவாகியுள்ளது.இது மட்டுமல்ல றஞ்சன் மீது எற்கனவே சுவிஸ் காவல் துறையில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது ஆனால் அவற்றில் ஆறு வழக்குகளில் இவர் கைதாகி தண்டனையும் பெற்றுள்ளார். அந்த வழக்குகளின் விபரம் இதோ


1).2002 சுவிஸ் அரசாங்கம் தனது நல்லெண்ண முயற்சியின் பயனாக பேர்ண் மாநிலத்தில் அமைந்திருக்கும் குரிசால் அரினா அரசவிருந்தினர் விடுதியில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்தபோது, அதனைக் குழப்புவதற்கு திரு.ரஞ்சனும் அவரது குழுவினரும் முற்சித்தார்கள். மாநாட்டு மண்;டபத்திற்குள் எதேச்சதிகாரமாக நுழைந்து நல்லெண்ண முயற்சியை குழப்ப முயன்றது. இச்செயலை சுவிஷ் அரச ஏற்பாட்டாளர்கள் நன்கு அறிந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


2)2004 உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஜெனீவாவில் நடாத்திய எழுச்சிநிகழ்ச்சியையும் திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்புவதற்கு முயன்றார்கள்.


3)2005 - சூரிக்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழத்தினரால் நடாத்தப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியையும் திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்புவதற்கு முயன்றார்கள்.


4)2005 பேர்ன் நகரில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடாத்திய வணக்க நிகழ்ச்சியையும் திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்புவதற்கு முயன்றார்கள்.

5)2006 படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் பேர்ணில் நடத்திய நினைவு தினத்தை திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்பியதோடு கண்ணீர் புகையை மண்டபத்திற்குள் பிரயோகித்து அங்கிருந்தவர்களை பாதிப்புக்குள்ளாக்கிய அதேவேளை காவல்துறையினரின் வருகையினால் இவர்கள் அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

6)2006 மார்ச் மாதத்தில் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரிபேர்க் மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் புலம் பெயர் தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்பாடு செய்த கலந்துரையாடல்களை திரு. ரஞ்சனும் அவருடைய சகாக்களும் குழப்புவதற்கு முயன்றார்கள்.

நன்றி சாத்திரி

No Comment