Navigation


RSS : Articles / Comments


நிழலாடும் நினைவுகள்

10:41 AM, Posted by sathiri, No Comment





லெப்.கேணல் ஜொனி(விக்கினேஸ்வரன்: விஜயகுமார்)
பருத்திதுறை(குட்டலை)

இவர் பேராதனை பல்கலை கழகத்தில் பெளதீக விஞ்ஞான மாணவகாய் கல்வி கற்று கொண்டிருந்த காலத்தில் தன்னை விடுதலை போராட்டத்திற்காய் இணைத்த ஒரு போராளி.இந்தியா விடுதலை புலிகளிற்கும் பயிற்சி வழங்க முன்வந்த போது தலைவர் தொலை தொடர்பு மற்றும் அது சம்பந்தமான தொழில்நுட்ப பயிற்சிகளிற்கு ஜொனியை தெரிவு செய்து அனுப்பிருந்தார்.

அப்போது புலிகளிடம் தொலை தொடர்பு வசதிகள் அவ்வளவாக இல்லாத கால கட்டம் யாராவது மிக நம்பிக்கையான ஒருவர்தான் செய்திகளை காவிசென்று மற்றைய போராளிகளிற்கு தெரிவிப்பது வழைமை அப்படி புலிகளின் ஆரம்பகாலத்தில் இருந்தே பல இரகசிய செய்திகளைதாங்கி எடுத்து செல்பராக இருந்தவர்களில் முக்கியமானவர் ஜெனி.


1984ம் ஆண்டு ஆவணி மாதம் பொலிகண்டி பகுதியில் ஒரு எதிர்பாராத விதமாகமோதல் புலிகளிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் எற்படுகின்றது இராணுவத்திற்கு துணையாக பருத்தி துறை முகாம் இலங்கை கடற்படையும் இணைந்து கொள்ள அந்த மோல் ஒரு தொடர் சண்டையாக மாறிவிட்டது அது இரண்டாம் நாளும் தொடர்ந்தது அந்த காலகட்டதில் புலிகள் அமைப்பில் இருந்த அனேகமான போராளிகள் அந்த சண்டைநடந்த இடத்திற்கு போய் சேர்ந்திருந்தனர்.அவர் வழைமை போல பொலிகண்டி பகுதியில் சண்டையில் ஈடுபட்டிருந்த போராளிகளிற்கு சில செய்திகளை எடுத்து செல்லவும் அங்கு கள நிலைமைகளை அறிந்து வரவும் பண்டிதரின் முகாமில் இருந்து தயாராகிறார்.

அனால் சண்டைக்காக ஆயுதங்கள் அனைத்தையும் மற்றைய போராளிகள் எடுத்து சென்றுவிட்டதால். பாவனைக்கு உதவாது என்று கைவிடபட்ட ஒரு 4.5 வகை றீற்றா கைத்துப்பாக்கிறை எடுத்து இயக்கி பார்க்கிறார். அது பலதடைவை இயக்கினால் ஒரு தடைவை தான் அதன் விசை இயங்கும்.அதில் குண்டுகளை நிரப்பி இடுப்பில் செருகி கொண்டு கட்டியிருந்த சாரத்தினை மடித்து கட்டிகொண்டு புறப்படுகிறார்.

பருத்தி துறை கெருடாவில் பகுதியில் ஒரு ஒழுங்கையில் இவர் போய்க்கொண்டிருக்கும் போது அங்கு மறைந்திருந்த ஒரு இராணுத்தினன் திடீரென ஜொனியை நோக்கி தனது தப்பாக்கியை நீட்டியபடி அருகில் வரும்படி அழைக்கிறான் உடனே ஜொனி சைக்கிளை விட்டு இறங்கி அதை உருட்டியபடி அவனருகில் சென்று அய்யா நான் தோட்டதாலை வாறன் என்றபடி சைக்கிழை நிறுத்திவிட்டு கட்டியிருந்த சாரத்தை சரி செய்வது போல பாவனை செய்தபடி இடுப்பில் இருந்த துப்பாக்கியை திடீரென எடுத்து அவனை நோக்கி இயக்குகிறான். துப்பாகி இயங்கிவிட்டது அந்த இராணுவத்தினன் சுருண்டுவிழ ஜொனி முதல் தடைவையாக தப்பித்து கொள்கிறான்.

பின்னர் 1987ம் ஆண்டு பங்குனி மாதம் பலாலியை அண்மித்த கட்டுவன் பகுதியில் ஒரு மோதல் சம்பவம் அதில் தனது குழுவினருடன் சென்று ஜொனி சண்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரம் எங்கிருந்தோ எதிரியின் துப்பாக்கி குண்டு ஒன்று ஜொனியின் இடது பக்க கண்ணிற்கு மேலே நெற்றியில் புகுந்து அது வெளியெறாமல் நல்ல வேளையாக மூளையை தாக்காமல் பின்பக்க மண்டையோட்டில் முட்டியபடி உள்ளேயே நின்று விட்டது.பின்னர் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற ஜொனிக்கு அப்போதைய தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருந்த திரு எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய உதவியாளர் மூலம் ஜொனிக்கு சத்திர சிகிச்சைக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்குமாறு உத்தவிட்டிருந்தார்.

இந்தியாவின் பிரபல வைத்தியர்கள் பலர் சேர்ந்து செய்த சத்திர சிகிச்சை மூலம் தலையில் இரந்த கண்டினை அகற்றி இரண்டாவது தடைவையாக ஜொனி சாவை சுகம்விசாரித்து விட்டு திரும்பியிருந்தான்.இந்தியாவhல் ஜொனி தங்கியிருந்த காலகட்டத்தில் ஈழத்தில்மணலாறு பகுதியில் இந்தியபடைகளுடனான மோதல் தீவிரமடைந்து தலைவரை எப்படியாவது பிடித்துவிடுவது என்று இந்திய இராணுவம் போரிட்டு கொண்டிருக்க இந்திய உளவு படையும் தன்னாலான தகிடுதன வேலைகளையும் செய்து கொண்டிருந்தது

அதில் ஒன்றுதான் சண்டையை முடிவுக்கு கொண்டுவர சில யோசனைகள் என்று ஜொனியிடம் சில செய்திகளை சொல்லி அதை தலைவரிடம் கொண்டு போய் சேர்க்க சொல்லிவிட்டு இந்தியாவிற்கு விசுவாசமான ஒட்டு குழுக்களின் உதவியுடன் ஜொனியை பின் தொடர்ந்து சென்று தலைவரின் இருப்பிடத்தை அறிந்து அதை அழிப்பதே இந்திய உளவுபடையின் நோக்கமாகும். அதன்படி ஜொனிவவுனியாவில் கொண்டுவந்து விடப்பட்டு தலைவரைபோய் சந்தித்துவரும்படி வழியனுப்பிவைத்தனர்.

ஜொனிக்கும் இவர்களது திட்டம் புரிந்தது ஆனால் போராட்டத்தின் ஆரம்பகாலந் தொட்டே எதிரிகளை ஏமாளிகளாக்கி செய்திகளை உரிய இடங்களிற்கு எடுத்த சென்ற ஜொனிக்கு இந்திய உளவுபடையையையும் அதன் ஒட்டு குழுக்களையும் ஏமாற்றி தன்னை பின் தெடரமுடியாதவாறு சென்று தலைவரை சந்திப்பது ஒன்றும் பெரிய விடயமாய் இருக்கவில்லை. அதன்படியே தலைவரை சென்று சந்தித்து விட்டு திரும்பிவந்தான். தங்களை ஏமாற்றி தலைவரின் இருப்பிடத்தை அறியமுடியாதவாறு செய்துவிட்டான் என்கிற ஆத்திரத்தில் தூதுவனான நிராயுதபாணியாய் சென்றுவந்த ஜொனியை இந்திய இராணுவம் கொலைசெய்து வீதியிலே வீசி விட்டு சென்று விட்டனர்.,இந்திய வைத்தியர்களால் காப்பாற்ற பட்ட உயிரை இந்திய இராணுவம் நயவஞ்சகமாக பறித்து கொண்டது.

No Comment