Navigation


RSS : Articles / Comments


9:44 AM, Posted by sathiri, No Comment

ஈழப் போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம்எழுதியவர் சி. புஸ்பராசா அவரது புத்தகம் மற்றும் அவரைப் பற்றிய ஒரு பார்வை

எங்கள் ஈழ மக்களது வரலாற்றில் மிகப்பெரும் ஒரு சாபக்கேடு எங்கள் வரலாறு பற்றி அவ்வப்பொது போதுமான பதிவுகளை யாரும் மேற்கொள்ளவில்லை. அப்படி ஒரு சிலர் தங்கள் தனிப்பட்ட முயற்சியால் பதிந்து விட்டு போன பதிவுகளும் எதிரிகளால் அவ்வப்போது திட்டமிட்டு அழிக்கப் பட்டும் இங்கு புஸ்பராசா போன்றவர்களால் வேண்டுமென்றே திரிக்கப்பட்டும் எழுதப்படும் புனைகதைப் புளுகுகளே வரலாறாக தூக்கி பிடிக்கப்பட்டு தமிழின எதிரிகளின் தாராள விளம்பரத்தால் அவையே காலப் போக்கில் தமிழனின் வரலாறாகத் திட்டமிட்டு மாற்றப்படும் அபாயமும் இருக்கின்றது.

புஸ்பராசாவின் இந்த ஈழ பொராட்டத்தில் "எனது சாட்சியம்" என்கிற புத்தகம் வெளியான போதே அதனை வாங்கிப் படித்த நான் மற்றும் பல நண்பர்களும் இந்த புத்தகத்தில் பல வரலாற்று திரிபுகளும் அதில் ஈழ போராட்டத்தில் ஆரம்பகால மென்முறை (சாத்வீகப் போராட்டம்)போராட்டத்திலிருந்து அதனை வன்முறை போராட்டமாக மாற்றிய ஆயுதப் போராட்டத்தின் தந்தை என்று புஸ்பராசா அவரகள் தன்னை தானே கோடிட்டு காட்ட முயற்ச்சித்துள்ளார் என்பதும் அவரது புத்தகத்தில் தெளிவாக தெரிகின்றது.

அதனால் அந்தப் புத்தகத்தைப் பற்றியும் புஸ்பராசாவைப் பற்றியும் ஒரு விரிவான விளக்கமான ஒரு கட்டுரை எழத வேண்டும் என்று நான் நினைத்தாலும் அவரது அந்தப் புத்தகம் வெளிவந்த ஆரம்பத்தில் தமிழர்கள் மத்தியில் பாரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாமல் எந்த இணையங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ அதை பற்றிய விபர விவாத விளக்கங்களோ பெரிதாக வெளி வராததால் நானும் எனது கட்டரை எழுதும் நோக்கத்தை கை விட்டு விட்டேன் ஆனால் புஸ்பராசாவின் இறுதிக் காலங்களில் இந்திய பிரபல சில தமிழ் பத்திரிகைகளிலான அவரது பேட்டிகள் மற்றும் அய்ரோப்பாவில் சில வானொலி ஒரு தொலைக்காட்சி என்பனவும் அவரது பேட்டிகளை தொடர்ந்து வெளியிட்டதனால் அவரைப் பற்றி தெரிந்திராத பலரும் யார் அந்த புஸ்பராசா? அவர் புத்தகத்தில் என்ன எழதியிருந்தார் என்று அறியப் பலரும் ஆர்வமாக இருந்தார்கள். அவரை பற்றிய விவாதங்களும் கட்டுரைகளும் இணையங்களிலும் பத்திரிகைகளிலும் மாறி மாறி அடிபடத் தொடங்கியது .

ஊரில் இருந்த வயதானவர்களிற்கு இவர் யார்? ஈழ போராட்டத்தில் இவரின் பங்கு என்ன? என்று நன்றாகத் தெரியும் ஆனால் இணையங்களில் உலாவுகின்ற எமது இளைய சமுதாயம் இவரது பேட்டிகளைப் படித்து விட்டு இவர்தான் ஈழப்போராட்டத்தின் தந்தையா? என்கிற ஒரு வித குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளனர். அதைவிட இந்திய பிரபல பத்திரிகைகளில் அவரது பேட்டி வந்தபடியால் உண்மையாகத்தான் இருக்கும் என்கிற ஒரு எண்ணம் இவரைத் தெரியாத பலருக்கு ஏற்பட்டது . இந்த விடயத்தில் புஸ்பராசாவும் அவரை இயக்கியவர்களும் அவர்களது நோக்கத்தில் ஓரளவு வெற்றி கண்டனர் என்பது உண்மைதான்.

"ஈழப் போராட்டத்தில் பல வரலாற்றுத தவறுகள் இருக்கின்றன விரும்பியவர்கள் எல்லாம் விரும்பிய படி விரும்பியவர்களிற்காக வரலாறு எழுதப்பட்டு விட்டது"என்று தனது புத்தகத்தின் முன்னுரையில் 15 வது பக்கத்தில் கூறிக் கொண்டு தானே தனக்கு விரும்பியதை விரும்பியபடி வரலாறாக எழுதிவிட்டு போயிருக்கிறார். எனவேதான் புஸ்பராசா அவர்கள் இறந்து விட்ட நிலையில் மீண்டும் அவரது புத்தகத்தின் மீதான எனது பார்வைக் கட்டுரையை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக ஆரம்பகால ஆயுதப் போராட்டத்திலிருந்து இன்று தனிப்பட்ட வாழ்க்கைக்குள் இருக்கும் பலர் மற்றும் புஸ்பராசா அவர்கள் தனது புத்தகத்தில் கூறியது போல ஈழ ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பத்தில் முக்கிய பங்கு வகித்த இளைஞர்கள் பலரும் இருந்த அமைப்பான தமிழ் மாணவர் பேரவையின் தலைவராயிருந்த யாழ் உரும்பிராயைச் சேர்ந்த சத்தியசீலன் ஆகியோருடனும் தொடர்பு கொண்டு தகவல்களைத் திரட்டி மற்றும் எனக்கும் தனிப்பட முறையில் புஸ்பராசா அவர்கள் பற்றித் தெரிந்த தகவல்கைளையும் தருகிறேன்.

புஸ்பராசா அவர்கள் இளமைக் காலத்தில் அவரது பிறந்த ஊரான மயிலிட்டியில் தமிழரசுக்கட்சியின் பிரமுகராக இருந்த சிவனடியான் என்பவருடன் இணைந்து மயிலிட்டி சனசமூகநிலைய இளைஞர்களுடன் தமிழரசுக் கட்சிசார்பாக வேலைகள் செய்யத் தொடங்கினார். இதுதான் இவரது ஆரம்ப அரசியலுடனான தொடர்பு.அந்த கட்சி சார்பாக நடக்கும் கூட்டங்களிற்கு ஒழங்கு செய்தல். அன்று சிறீலங்கா அரசு கொண்டு வந்த தமழருக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து தமிழரசு கட்சி நடாத்திய ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்கள் என்பவற்றில் பங்கு கொண்டார். அதனால் அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களை காவல் துறை வந்து அள்ளிக் கொண்டு போகும். அதில் இவரும் பலமுறை காவலில் வைக்கபட்டிருந்தார் என்பதும் உண்மை. இவரைப் போல அன்று ஏன் இன்றும் சிறிலங்கா அரசால் பொராட்டத்திற்கு ஆதரவானவர்களையும் சந்தேகத்தின் பெயரிலும் பல நூற்று கணக்கில் தமிழர்கள் சிறைகளில் வாடினார்கள் வாடிக்கொண்டும் இருக்கின்றார்கள். அதே போல புஸ்பராசா சிறையில் இருந்த காலங்களில் ஆயதமேந்தி போராட புறப்பட்ட வேறு பல இளைஞர்களும் இதே காலகட்டத்தில் பிடிபட்டு இவருடன் இருந்த காரணத்தால் புஸ்பராசாவிற்கும் அவர்களுடனான தொடர்புகள் ஏற்படக் காரணமாய் இருந்தது.

அதைவிட சிறையில் இருப்பவர்கள் தங்கள் நேரத்தை போக்க தங்கள் கவலைகள் பிரச்சனைகள் எல்லாவற்றையுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது வழமை. அப்படி சிறையில் வாடிய ஆரம்பகால ஆயுதமேந்திய இளைஞர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை இருக்கும் ஒரு சிலரும் தங்கள் குடும்ப வாழ்வில் மூழ்கிப் போய் பெரிதாக எந்தவித பதிவுகளையும் எழுதாததினால் புஸ்பராசா அப்படி அவர்கள் பகிர்ந்த கொண்ட கருத்தக்கள் சம்பவங்களை எல்லாம் சேர்த்து தன்னிடமிருந்த எழுத்துத் திறைமையினால் விடிந்து கோழிகூவுவதற்கு முதலே நாங்கள் எதிரியை தேடி ஆயுதங்களுடன் பறப்பட்டு விடுவோம் என்று தனது வாழ் நாளில் துப்பாக்கியால் ஒரு கோழியைக் கூட சுட்டிருக்காத இவர் தனது புத்தகத்தில் எங்களிற்கு பெரிய பூமாலையொன்றை சுத்துகிறார். எனவே மீதி விபரங்களை தொடர்ந்தும் படிப்பதற்கு . அடுத்த பேப்பருக்கு காத்திருங்கள்.
தொடரும்....
http://www.orupaper.com/issue48/pages_K__30.pdf

No Comment