Navigation


RSS : Articles / Comments


ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய மடல்.

12:07 PM, Posted by sathiri, 2 Comments

ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய  மடல்.
சாத்திரி ஒரு பேப்பர்.

முன்னை நாள் தமிழ் தேசிய  கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாரளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி அவர்களே . கும்புடுறேனுங்கோ.  வெளிநாட்டிலையிருந்து அடிக்கடி  பகிரங்க மடலும் அறிக்கையும்  எழுதுபவர்களில்நீங்களும் ஒருவர்.  கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டுமென  அண்மையில்  ஒரு அறிக்கை விட்டிருந்தீர்கள். அதுதான் உங்களிற்கு நான் ஒரு இரகசிய கடிதம் எழுதலாமென நினைத்தேன்.இதனை  படிப்பவர்களும் சத்தமாக படிக்காமல் மனதிற்குள்ளேயே படிக்கவும்.

ஜெயா அண்ணாச்சி இலண்டனில் இருந்து  அதி தீவிர தமிழ்த்தேசியம் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் கதைக்கிறீங்களே  அப்படியே உங்களை ஒரு நாலு வருடத்திற்கு முன்னாடி றீவைண் பண்ணி அப்படியே திரும்ப ஓடவிடுங்க. .ஓட விடுவோமா??  விடுதலைப் புலிகளில் மட்டு அம்பாறை பொறுப்பாளர்  கருணா விடுதலைப் புலிகளோடு முரண்பட்டு  தான் பிரிந்து போய் விட்டதாக அறிவித்திருந்த நேரம். மட்டு அம்பாறை  மாவட்டங்களில்  இருந்த புலிகளின் முகாம்களில் தலைவர் பிரபாகரனின் படங்களை அகற்றிவிட்டு தன்னுடைய படங்களை வைக்குமாறு கட்டளையிட்டிருந்த நேரம்.மகளிர் அணிக்கு பொறுப்பாக இருந்த நிலாவினி  தனக்கும் கருணாவிற்கும் இருந்த கள்ள உறவு காரணமாக தன்னுடைய விசுவாசத்தினை கரணாவிற்கு காட்டுவதற்காக  தேசியத் தலைவரின் படங்களை உடைத்தும் கிழித்தும் எறியுமாறு கட்டளையிட்டிருந்தார். ஆனால் தலைவரது படங்களை பல முகாம்களில் போராளிகள் கழற்றி பத்திரமாக ஒழித்து வைத்திருந்த சம்பவங்களும் நடந்தது.  அப்படி கருணா அறிவித்த சில நாட்களில்  கிழக்கு பாராளுமன்ற  உறுப்பினர்கள் பலர் வன்னிக்கு போய்விட மற்றையவர்கள் மொனமாக இருந்த காலகட்டம். ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் புலிகளின் தலைமைக்கு எதிராக நீங்கள் உங்கள் தலைமையில் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை நடத்தியிருந்தீர்கள். மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் தலைவர் பிரபாகரனின் படத்தினை கிழித்தெறிந்தது மட்டுமல்லாது ஒரு படி மேலே போய்  தலைவரின் கொடும்பாவியையும் கொழுத்தியிருந்தீர்கள் என்பதனை மறுக்க முடியாது  காரணம் அன்று அந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் மற்றும் அன்று செய்தி சேகரிக்க வந்த பல பத்திரிகையாளர்களர் இன்று வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள்.

அன்றைய சம்பவத்திற்கு பின்னர் கருணாவிற்கு ஆதரவாக நடந்த அடையாள உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டிருந்தீர்கள்.பின்னர்  மட்டு அம்பாறையில் கருணாவின் அதிகாரம் கலைக்கப்பட்ட பின்னர்   புலிகளின் தலைமை தாராக்கி சிவராம் ஊடாக தொடர்பு கொண்டு உங்களை வன்னிக்கு வருமாறு அழைத்திருந்தனர். அப்பொழுது வன்னிக்கு சென்ற சந்திரநேரு சந்திரகாந்தனுடன்  வன்னிக்கு சென்றிருந்தீர்கள். புலிகள் உங்களை வன்னிக்கு அழைத்தற்கு காரணம்  கொழும்பில் புலிகள் ஒரு ஆடம்பர மாடிக்குடியிருப்பு ஒன்றினை உங்கள் பெயரில்  வாங்கி அதனை தங்கள் பாவனைக்கு பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அந்த மாடிக்குடியிருப்பினை  வாங்குவதற்கான  புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் இலண்டன் கிளையில் இருந்தே பணம் வழங்கப்பட்டிருந்தது. அது சம்பந்தமாக பேசுவதற்காகவே அழைப்பு விடுவிக்கப் பட்டிருந்தது. வன்னியில் அனைத்துலக செயலகப் பொறுப்பாளர் கஸ்ரேவை சந்தித்த நீங்கள் கிழக்கில் நடந்த சம்பவங்களிற்காக கஸ்ரேவை கட்டிப்பிடித்து பல தடைவை மன்னிப்பும் கேட்டிருந்தீர்கள்  அப்பொழுது  மற்றை பாராளுமன்ற  உறுப்பினர்களான் கனகரத்தினம்.செல்வராசா கஜேந்திரன் மற்றும் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரும் உடனிருந்திருந்தனர்.

அன்று இரவு உங்களை சந்தித்த பொட்டு அம்மான்  நீங்கள் செய்த வேலைக்கு உங்களை போட்டுத் தள்ளியிருக்கவேணும் ஆனால் உங்கள் தேவை இன்னமும் எங்களிற்கு இருக்கிறது என்றபொழுது  உங்களுடன்  அதே சந்திரகாந்தனும். துரோணர் மற்றும் சாத்தப்பனும் அங்கு இருந்திருந்தனர். அன்று உங்களை  புதுக்குடியிருப்பிற்கு  அழைத்து சென்றவரே தற்சமயம்  தலைமை செயலகம் என்று  சொல்லிக் கொண்டு  இலண்டனில் வசிக்கும்  சங்கீதன்தான் இவையெல்லாம் வெளிநாடு வந்ததும்  இங்கிலாந்தின் உறைபனிக் குளிரில் உங்களிற்கு மறந்து போயிருக்கலாம் ஆனால் இப்பொழுது படிப்படியாக  ஞாபகம் வரத்தொடங்கியிருக்கும்.

நீங்கள் வெளிநாடு வந்த சில காலங்களில் உங்கள் பெயரில் இருந்த  புலிகளின் கொழும்பு வீடு மருமகனின்  பொறுப்பில் இருந்தது  அதனை அறிந்து இலங்கை புலனாய்வு பிரிவினர் உங்கள் மருமகனை கைது செய்து  அந்த வீட்டையும் கையகப்படுத்தியிருந்தனர்.  ஆனால்  புலிகளின் முடிவிற்கு பின்னர்   அன்று மகிந்தாவுடன் நெருக்கமாக இருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கிசோர்  மூலமாக மகிந்தாவுடன்  தொடர்புகளை ஏற்படுத்தி உங்கள் வீட்டினை  மீள பெற்றதுடன் உங்கள் மருமகனும் விடுவிக்கப்பட்டுவிட்டார். இப்போ பல கோடி பெறுமதியான புலிகளின் சொத்து உங்கள் கைகளில். வெளிநாட்டில் மகிந்தாவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்படியே  மகிந்தாவுடன்  டீலை போட்ட நீங்கள் கில்லாடிதான் போங்கள். அது மட்டுமல்ல  பின்னர்  புலம்பெயர் தேசத்தில்  நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கி அதை வைத்து உருப்படியாக ஏதாவது செய்யலாமென நினைத்து அதற்கான  தேர்தல்கள் நடந்த பொழுது அதனை உடைப்பதற்கென்றே  திட்டமிட்டு அதற்குள் புகுந்து வேட்பாளராகியிருந்தீர்கள்.  உங்கள் சுயமுகம் தெரியாமல்  பழைய தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற நினைப்பில்  வாக்குகளை போட்டுவிட்டார்கள்.

ஆனால் தேர்தல்கள் முடிந்த கொஞ்ச காலங்களிலேயே உங்கள் சுயமகம் தெரிந்தது  நாடு கடந்த அரசை இரண்டாக உடைக்க முயற்சித்தீர்கள் அதிலிருந்து  பலருடன் வெளியேறுவதாக அறிக்கையும் வெளிவந்தது  ஆனாலும் பெரியளவில் உங்கள் பருப்பு வேகவில்லை.   அப்பப்போ பகிரங்க மடலும் அறிக்கைகளும் வெளிவந்துகொண்டேதான் இருந்தது.  சில காலங்களிற்கு முன்னரும் ஒரு  அறிக்கை  விட்டிருந்தீர்கள் காரணம் சிறீலங்கா அரசிற்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டு  ஏன் இன்னமும்  சிறீலங்கா அரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை பெறுகிறீர்கள் என  ஒரு பத்திரிகையாளர் கேட்தற்காக  வெளிவந்த அறிக்கை  அது .அதில் நீங்கள் சொல்லியிருந்த காரணம்  கிழக்கு மாகாணத்தில் முன்னை நாள் போராளிகளை எந்த உதவி அமைப்புக்களும்  கவனிப்பதில்லை  எனது பாராளுமன்ற ஓய்வூதியத்தை  முன்னை நாள் போராளிற்காக  செலவிடுகிறேன் அதற்காகத்தான் அந்த ஓய்வூதியத்தை பெறுகிறேன் என்று  சொல்லியிருந்தீர்கள்.  அந்த அறிக்கை வெளி வந்த ஒரு சில நிமிடங்களிலேயே   ஒரு தொண்டர் அமைப்பு  உங்களிடம் இருக்கும் கிழக்கு மாகாண முன்னை  போராளிகளின் விபரங்களை எமக்கு அனுப்பி வையுங்கள் உதவி செய்ய தயாராக இருக்கின்றோம் என மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.

அதற்கு உங்கள் பதில் எதுவும்  இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை அது மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில்  நீங்கள் யாரிற்கு உதவினீர்கள் என்கிற  விபரங்கள் கூட இல்லை   அப்படியானால் நீங்கள் யாரிற்கும் உதவவும் இல்லை  எங்களிடம் உதவிகோருபவர்களி்ன்  விபரங்களும் இல்லை  அரசாங்க ஓய்வூதியப்பணம் உங்கள்  வங்கி கணக்கிற்கு  பத்திரமாக போய் சேருகின்றது. அப்படித்தான் அண்மையில் கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்குமாறு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். கிழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பறக்கணித்தாலும் அங்கு தேர்தல் நடக்கத்தான் போகின்றது அங்கு சிறீலங்கா சுதந்திர கட்சியும்  முஸ்லிம் காங்கிரசும் வெற்றியடைந்து  தமிழரின் அங்கீகாரமானது கேள்விக்குறியாகிவிடும் இதுதான்  சிறிலங்கா அரசு எதிர்பார்ப்பது. அதைத்தான் நீங்கள் செய்யச்சொல்கிறீர்கள்.   அப்போ உங்கள் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பது யார்??
வழைமையாக நான் எந்தக் கட்டுரைகள் எழுதினாலும் சம்பந்தப் பட்டவர்களிடம் நேரடியாக  தொடர்புகொண்டு அவர்களது கருத்தையும் கேட்டபின்னரே கட்டுரையை வெளியிடுவது வழைமை ஆனால் நான் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை காரணம்   நீங்கள் யார் ??பெரிய அரசியல்வாதியாச்சே  மறுநாளே மறுப்பறிக்கை வெளியிட்டு விடுவீர்கள்எனவேதான் பரம இரகசியமாக சில கேள்விகளை இங்கு வைக்கிறேன் அதற்கான பதில்களை  படுத்திருந்து யோசிப்பீங்களோ றூம் போட்டு யோசிப்பீங்களோ தெரியாது  ஆனால் எந்த நேரமும் ஒரு பேப்பரிற்கு அனுப்பி வைக்கலாம்.

1)கருணா பிரிவின் போது கிழக்கு மாகாணத்தில் இருந்த அத்தனை  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர்களும் மெளனமாகவோ அல்லது  கருணாவிற்கு எதிர்ப்பு தெரிவித்போது நீங்கள் மட்டும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரனின்  கொடும்பாவியை  கொழுத்தியது ஏன்?

2)புலிகளின் பணத்தில் வாங்கப்பட்ட கொழும்பு வீட்டினை  மீட்பதற்காக மகிந்தவுடன் பேரம்பேசியபடியே  வெளிநாடுகளில் தமிழ் தேசியம். போராட்டம் என எப்படி உங்களால் ஊடகங்களில் மக்கள் தலையில் மிளகாயும் இஞ்சியும்  அரைக்க முடிந்தது.

3)இலங்கையரசிற்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்டு இன்னமும் எதற்காக பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஓய்வூதிய பணத்தினை பெற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள்.

4)உங்கள் ஓய்வூதிய பணத்தினை பாதிக்கப்பட்ட முன்னை நாள் போராளிகளிற்காக செலவிடுவதாக அறிக்கை விட்டிருந்தீர்கள் இதுவரை அதனால் பயன் பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவீர்களா

5)நாடு கடந்த தமிழீழ அரசில் இணைந்து போட்டியிட்டு விட்டு சொற்ப காலத்திலேயே  அதனை உடைக்க முனைந்தது எதற்காக

6)கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்து  கிழக்கு முழுதும் உள்ள நிருவாக ஆட்சி அலகுகளும் சிங்களத்திடம் போய் சேர்ந்துவிட்டால் உங்களிற்கு இலாபம் கிடைக்கலாம் ஆனால் கிழக்கு மக்களிற்கு என்ன இலாபம்

உங்கள் பதில்களை எமக்கு இரகசியமாகவே அனுப்பி வைக்கலாம்  அதனை நாமும்  இரகசியமாக பிரசுரிப்போம்.
கேள்வி அவ்வளவுதான்  பதிலிற்காக  வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் சாத்திரி.

2 Comments

S. Robinson @ 8:01 PM

தமிழ் திரட்டி ( www.tamiln.org ) தமிழன்.

பனங்கொட்டை (Panangkoddai) @ 4:22 AM

இந்தாப்பா பதிலு ரெடி.... அப்புறமா வெற கேள்வி கேட்டு நொய் நொய்ன்னு தொந்தரவு பண்ணப்படாது...

அம்மானை கிழக்கின் தலைவராவார் என்று மலை போல நம்பியிருந்தேன்பா. கடைசில சொதப்பிட்டாரு.

அது இராச தந்திரம்லெ.... என்னால மட்டும் தான் முடியும்.

ஒரு பொண்டாட்டி உள்ளவனே சோத்துக்கு சொங்கியடிக்கிறான். இதுல நீ வேற கடுப்ப கெள்ப்பிகிட்டு....

அது ரெம்ப இரகசியம்பா. சொன்னா போராளிகளோட உயிருக்கு ஆபத்தா போயிடும்....

அரசியல்ல இதெல்லாம் சகயம்பா... உடச்சிருந்தா கொஞ்ச எமோன்டு பாத்திருக்கலாம்.... மிஸ்சாயிடுத்து...

தட் இஸ் நொன் ஒவ் மை பிசினஸ். எப்பூடி என்னோட இங்கிலீசு.....