Navigation


RSS : Articles / Comments


தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.-

3:54 AM, Posted by sathiri, No Comment

தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது.-

சாந்தி ரமேஷ் வவுனியன் -

'ஈழத்தழிழர்களின் வலியை பதிவு செய்வேன்" பருத்திவீரன் இயக்குனர் அமீர் ஆவேசம் என அண்மையில் செய்திகள் படித்தோhம். அமீரின் ஆவேசம் என்ன என்பது பற்றி அவரது உரையைக் கேட்டபின் பின்தான் உண்மை உறைத்தது. ஒரு உண்மையான கலைஞனின் ஆதங்கம் அமீரின் உரையில் வெளிப்பட்டிருக்கிறதேயன்றி அது ஆவேசமல்ல. யதார்த்த வாழ்வை பிரதிபலித்த பருத்தீவீரனை நுணுநுணுக கவிதையாகப் பதிந்திருக்கும் அமீரின் கவிதைக் கண்களுக்குள் உப்புச்சப்பில்லாத எதையோ சினிமா என்று டென்மார்க்கிலிருந்து தமிழகம் சென்று பணத்தை விசிறி பாடல்காட்சிப் படம் காட்டியிருக்கிறார் கி.செ.துரையென்கின்ற கி.செல்லத்துரை.சினிமா என்ற பெயரில் பல லட்சம் டெனிஷ் குரோணர்களை ஏற்கனவே 'பூ(ஈ)க்கள்" என்று கத்;தியும் துவக்கும் காட்டி எமது தொலைக்காட்சிகளும் தென்னிந்தியப் பெரும்பான்மைப் படங்கள் போடும் கனவுலக ஆட்டத்தையுமே புதுமையான பூக்கள் என்று பெயரிட்டு கொசுக்களைப் படம் காட்டிய கி.செல்லத்துரை அவர்கள் திரும்பவும் பல லட்சம் டெனிஷ் குரோணர்களை கொட்டி தனது மகனை கதாநாயகனாக்கி 'இளம்புயல்" என்ற பெயரில் திரைப்படம் என்று ஒன்றைத் தயாரித்திருக்கின்றார். இப்படத்தின் பாடல் வெளியீட்டினை கடந்த வெள்ளி 25.07.08 அன்று சென்னையில் நிகழ்த்தியுமிருக்கிறார்.

எம்மவர் சினிமா என இதற்குப் பெயரிட்டு எம்மவர்களுக்கான சினிமா இதுதான் என தமிழகத்தில் போய் நின்று வீரவிளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த உரையைக் கேட்கின்ற ஒவ்வொரு ஈழத்தவனும் நாக்கைப்பிடுங்கி (இவர்களுக்காக நாக்கைப் பிடுங்குவது அதிகம்தான்) சாகலாம் போலத்தானிருக்கும். இல்லை எங்கள் கால்களில் இருப்பதைக் கழற்றி எங்கள் முகத்தில் நாங்களே அடிக்கத் தான் தோன்றுகிறது. போதாமைக்கு ஈழத்தழிழர் இங்கிருந்தே (அதாவது இந்தியாவிலிருந்தே) ஈழத்துக்குப் போனோம் , இங்கிருந்து போர்வீரர்களாகப் போனவர்களின் வம்சமே இன்று போராடுகின்றது என அருளுரை வழங்கியிருக்கிறார். ஈழத்தமிழினம் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என்பதும் எங்களுக்கான தனித்துவம் பண்பாடு கலாசாரம் மொழி உள்ளது என்பதும் எமது பூர்வீக நிலத்தை கொள்ளையிடும் சிங்களர்களுடன் நடக்கும் தமிழீழ விடுதலைப்போரின் வலிகளும் துயர்களும் டென்மார்க் வந்ததுடன் கி.செல்லத்துரைக்கு மறந்துவிட்டதா அல்லது ஞாபகப்பதிவில் மங்கிவிட்டதா ? சிங்கள இராணுவத்தின் கொலைப்பட்டியலில் குடும்பத்திலிருந்து 6பேரை கொடுத்துவிட்டு டென்மார்க் போனேன் என உருக்க உரை வழங்கியவருக்கு உண்மையில் ஈழத்தமிழரின் ஊற்று எங்கே தோற்று எங்கேயென்பது புரியாமல் கேவலக்கெட்ட ஒரு சினிமாவுக்காக எங்கள் இன மானத்தையே தமிழகத்தி;ல் போய் நின்று விற்றுவிட்ட வெங்காயச் சினிமா இயக்குனர் திலகம் கி.செ.துரையென்றால் மிகையில்லை.


குடும்பத்தில் ஆறுபேரை இலங்கை இராணுவத்திற்கு பலி கொடுத்தவருக்கு அந்த வலியிருந்திருப்பின் இப்படியான வார்த்தைகளைச் சொல்ல மனம் ஒப்புமா ? யாரோ சிந்தும் குருதியில் தங்களை வளர்க்கும் துரோகத்தை கி.செல்லத்துரையால் தான் செய்ய முடியும்.அதுமட்டுமல்ல தமிழ்சினிமாவில் இருக்கின்றவர்கள் இலங்கையிலே ஓர் இனப்போர் ஏன் நடக்கின்றது என்று கேட்டால் அதற்கு சிங்கள அரசு காரணமல்ல அதற்கு தமிழ் சினிமாதான் காரணம் என்பதைத் தமிழகத்தில் இருக்கின்ற சினிமாக்கலைஞர்கள் அறிந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. என்கிறார் இந்த அறிவுசீவி. தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் உட்பட சினிமாத்துறை சார்ந்த எம்மில் நேசமுள்ளவர்கள் ஈழத்தமிழினம் அதன் போராட்டம் என்ன என்பதைப் புரிந்து எங்களுக்கான பலம் தமிழகத்தில் பெருகியிருக்கிறது. இந்நிலையில் தனது சுய விளம்பரத்துக்காகவும் சொந்த இலாபத்துக்காகவும் கதையளக்கும் இவரிடமிருந்து ஈழத்தமிழர்களோ தமிழகத் தமிழர்களோ கற்க எதுவுமில்லை. தமிழக சினிமாவைப் பார்த்துத்தான் தமிழீழ விடுதலைப்போராட்டமே நடப்பதாக ஒரு மாயையான கனவை தமிழகக் கலைஞர்கள் மத்தியில் உரைத்த கி.செல்லத்துரையின் உதவாத சினிமாவை உலகம் முழுவதிலும் புறக்கணிக்கப் போகின்றது தமிழினம்.


இதுவரை தமிழீழ விடுதலைப்போரில் இறந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களின் தியாகங்களும் இந்த விளக்கம் கெட்ட கி.செ.துரை காற்றாய்,கடலாய்,பெயர் சொல்லாமல் ஊர் சொல்லாமல் உயர்ந்த லட்சியத்துக்காய் தங்கள் இளைய உயிர்களை உதிர்த்த மாவீரர்களின் தியாகங்களெல்லாம் வெங்காயச் சினிமாவின் தாக்கம் என்கிறாரா ? தமிழக சினிமாக்களில் தலைவர்களின் பின்னால் நூறுபேர் நின்று தலைவர் வாழ்க தலைவர் வாழ்க என கி.செல்லத்துரைக்கும் கோஷம் போடுவார்கள் என்று எண்ணியோ என்னவோ சிவாஜி கணேசனின் 'மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்" பாடலில் பாதிப்பு கி.செல்லத்துரையை தலையில் முடியைக் கூட உதிர்த்துவிட்டதாக உணர்ச்சி விழிம்பில் நின்று துடித்திருக்கிறார். அப்போ சினிமாவைப் பார்த்துத்தான் தங்கைக்கு வாழ்வமைத்துக் கொடுத்தாரா ? அப்போ சுய சிந்தனையே இவரிடம் இல்லையா ? எல்லாம் சினிமாவின் வழிநடநத்தல்தானா ? தன்னை ஒரு தமிழ் ஆசிரியானாக கலைஞனாக அறிமுகமாக்கிய மனிதரின் மூளை மண்டலமே சினிமாவின் இயக்குதலா ? வயது முதிர மனித உடலிலும் மனத்திலும் மாற்றங்கள் நிகழ்வது போல முடியுதிர்வும் இயற்கை. ஆனால் புலம் பெயர் நாடுகளில் இளவயதிலே நரையும் வழுக்கையும் பலருக்கு வந்துவிடுகிறது. காரணம் எமது இளைஞர்கள் ஒன்று இரண்டு மூன்று வேலைகளென்று செய்து உழைத்து தங்கள் தலைகளை விமான ஓடுபாதை நிலைக்கு வர வைத்துவிடுகிறார்கள். இப்படியான உழைப்பாழிகளின் பணத்தை இந்த மனிதர் தனது உதவாச் சினமாவுக்கு முதலீடாகவும் மாற்றுகிறார்.


ஈழத்தில் எத்தனையே தேவைகள் நிறைந்து கிடக்கிறது. நாளும் பசியிலும் குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலிலும் ஆட்லறி வீச்சுகளிலும் பிணங்களாக எம்மினம் நாளும் சாகிறது. அந்த மண்ணுக்காக அந்த மக்களுக்காக இந்தப் பணத்தை உதவினால் எத்தனையே நல்லவை எங்கள் மண்ணில் நடக்கும். மனமிருப்போரிடம் பணமில்லை பணமிருப்போனிடம் கொடுக்கும் மனமில்லை. வீணாக தனது குடும்ப விளம்பரத்துக்காக எத்தனை கோடிகளையும் செலவு செய்யத் தயாராக இந்த ஈழத்தமிழன். (ஈழத்தமிழருக்கே இழிவு)அமீர் போன்றவர்கள் தமிழகசினிமாவை கதாநாயகப்பிடியிலிருந்து மீட்க போராட ஈழத்தவர்களின் பெயரைச் சொல்லி ஒரு சதத்துக்கும் பயனில்லாத ஓடிப்பிடித்து விளையாடும் கனவுப்படம் காட்டும் கி.செல்லத்துரை அமீர் போன்ற இயக்குனர்களுக்கு உதவினால் கூட குறைந்த செலவில் நிறைந்தவொரு சினிமாவை தருவார்கள். நல்லதொரு சினிமாவுக்கான தளமாக தனது பொருளாதார வளத்தை பயன்படுத்தினால் எம்மவர்களே சிறந்த சினிமாவை எடுப்பார்கள். ஈழத்து இளைஞன் சோமிதரன் அண்மையில் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 'எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படத்தைத் தந்திருக்கிறான்.


சோமிதரன் செய்திருப்பது ஈழத்தமிழனத்தின் ஒரு வரலாற்று ஆவணம். யாழ் நூலக எரிப்பின் நினைவுகளை எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் ஆவணமாக்க அரும்பாடுபட்டு உழைத்திருக்கிறான். ஆயினும் இந்த இளைஞனது முயற்சிக்கு வீணாக இறைக்கும் பணத்தில் ஒரு பங்கைக் கொடுத்து உதவியிருப்பின் 'எரியும் நினைவுகள்" போல எத்தனையோ நினைவுகளை சோமிதரனும் சோமிதரன் போன்ற திறமையாளர்களும் தருவார்கள். மிகுந்த நெருக்கடிக்குள் சிறந்த தொழில்நுட்ப வசதியற்ற வன்னிக்குள்ளிருந்து வெளியான போராளிக்கலைஞர்களின் திரைப்படங்கள் எத்தனையோ அவையே எங்கள் ஈழத்து சினிமாவின் ஊற்றான ஆணிவேர்கள். இவையெல்லாம் தமிழக சினிமாவிலிருந்து பிறந்தவையல்ல எங்கள் கலை எங்கள் கண்களுக்குள்ளிருந்து எங்கள் மனிதர்களுக்குள்ளிருந்து பிறந்தவை. இதை விலைபேச டென்மார்க்கிலிருந்து புறப்பட்டு ஈழத்தமிழர் போராட்டமானது இந்தியா சினிhவிலிருந்து பிறந்ததென கதைவிடும் கி.செல்லத்துரையின் 'இளம் புயல்" தமிழர் வாழும் எந்த தேசத்திலும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். 30 ஆண்டுக்கு மேலாக ஈழத்தமிழர் படும் துயரை ஒற்றை வரிக்குள் ஒளித்து எங்கள் வாழ்வின் வலியை சாதாரண சினிமாவுக்கு ஒப்பாக்கிய இந்த கி.செல்லத்துரையின் இரண்டாவது படமான 'இளம் புயல்" அனைத்துத் தமிழர்களும் புறந்தள்ளி சிறந்த படைப்புக்களை ஊக்குவிக்க வேண்டும். இறுதியாக , பணத்துக்காக தமிழகக்கலைஞர்களின் தமிழக சினிமா உலகின் படைப்புக்களை திருடி வலைப்பதிவேற்றி பல்லாயிரம் டெனிஸ்குரோணர்களை இலாபமாகப் பெறுகிறார் கி.செல்லத்துரை.

இவரது மேற்பார்வையில் இயங்கும் பல இணையத்தளங்கள் திரைக்கு வந்ததும் வராததுமாக திரைப்படங்களை திருடி தனது சுய வருவாயைப் பெருக்கிக் கொள்கின்ற பெருச்சாளி. இத்தகைய இழிவான தொழில் செய்யும் கி.செல்லத்துரை மீதும் அவரது குழு மீதும் தமிழக சினிமாவுலகம் நடவடிக்கையெடுக்க வேண்டும். ஒரு திரைப்படத்தை எவ்வளவோ செலவுகளின் மத்தியில் தமிழகத் தயாரிப்பாளர்கள் வெளியிட வீட்டுக்குள் இணைய இணைப்பும் இணைய வழங்கலுக்கான வசதியையும் பெற்று உங்கள் முதுகிலேயே சவாரி செய்யும் இந்தத் துரோகத்தனத்தை இந்தியத் திரையுலகம் இனங்காண வேண்டும். இறுதியாக ஈழத்தமிழர்கள் இத்தகைய வெளியிடுகளைப் புறக்கணிப்போம். சிறந்த படைப்புக்களை வரவேற்போம். ஈழம் தமிழகம் என்று பிரித்துப் பார்க்காமல் தமிழகத்திலிருந்து வெளிவரும் சிறந்த சினிமாக்களையும் வரவேற்போம். பருத்திவீரனைத் தந்த அமீர் , ஆணிவேரைத் தந்த ஜான் போன்ற இயக்குனர்களை வரவேற்போம். 'பூக்கள்" 'இளம்புயல்" என்று ஆக்களை ஏமாற்றும் கி.செல்லத்துரையிடமிருந்து சிறந்த படைப்புக்கள் கிடைக்குமாயின் அதை ஊக்குவிக்கவும் தயாராகவுள்ளோம். கி.செல்லத்துரை நீங்கள் தயாரா ? அல்லது இந்த விமர்சனத்திற்கு எதிர்ப்பாட்டுப்பாட உங்கள் பிழைகளை மறைக்க புனைபெயர்களைத் தேடுவீர்களா ? அல்லது பூக்கள் நாயகர்களை அனுப்பி துப்பாக்கியால் சுடுவீர்களா ? எதுவாயினும் வாருங்கள். கருத்தை கருத்தால் வெல்வோம். சிறந்த கலைப்படையல்களைப் படைப்போம்.

மாயாவி

7:01 AM, Posted by sathiri, 2 Comments

மாயாவி

ஒரு பேப்பரிற்காக சாத்திரி

மாயாவி எண்டதும் சின்ன வயதிலை படிச்ச சித்திரக்கதை மாயாவிவேதாளன் கதை பலபேருக்கு ஞாபத்துக்கு வரும். ஆனால் இது சித்திரக்கதையில்லை ஊரிலை நடந்தகதை. முந்தி ஊரிலை காலத்துக்குக்காலம் மர்ம மனிதர். இல்லாட்டி மாயாவி மனிதர் உலாவுவினம். இல்லாட்டி உலாவுறகதை (வதந்தி) அடிக்கடி அடிபடும்.கதையளைக்கேட்டாலே ஒருவித மர்மம் நிறைஞ்ச ஒரு பரபரப்பாத்தான் இந்த மர்மமனிசனின்ரை கதை ஊரிலை கதைப்பினம்.கதையைக் கேட்டால் ஏதோ திகில் நிறைஞ்ச ஒரு இங்கிலிஸ் படம் பாத்தமாதிரி இருக்கும்.பெரும்பாலும் இந்தமாயாவி மனிசர் தோட்டங்களிலை விழைச்சல் இல்லாட்டி அருவிவெட்டு(நெல்லு வெட்டு)காலங்களிலைதான் அதிகமாய் உலாவுவினம்.அப்பிடித்தான் எங்கடை ஊரிலையும் திடீரெண்டு மர்ம மனிசனின்ரை கதை அடிபடத்தொங்கிச்சுது.அந்த மனுசனுக்கு உடம்பெல்லாம் முள்ளு முள்ளாய் இருக்குமாம்.

யாராவது பிடிக்கப்போனால் முள்ளம்பண்டி மாதிரி முள்ளு சிலிர்த்து பிடிக்கிறவரை குத்திப்போடும். இப்பிடி ஒருகதை. ஆளை பிடிக்க ஏலாதாம் பிடிச்சால் வழுக்கிக்கொண்டு ஓடிடுவானாம்.உடம்பு வழுக்கிற மாதிரி இருக்காம். சிலநேரம் திடீரெண்டு மறைஞ்சிடுவானாம்.இப்பிடி ஒருகதை . அதுக்கும் மேலைபோய் சிலநேரம் ஆகாயத்திலை எழும்பி பறக்கத்தொடங்கிடுவானாம். இருட்டுக்குள்ளை அவனின்ரை கண்கள் பச்சைக்கலரிலை மின்னுமாம்.இப்பிடி ஆளாளுக்கு அவிட்டு விட்டு வதந்தி ஊரெல்லாம் பரவி. ஊர்ச்சனத்துக்கெல்லாம் பயம்தொட்டிட்டுது. இரவிலை வெளியாலை போறதையும் சனம் குறைச்சுப்போட்டுது.

இரவு கள்ளடிக்க தனியப்போறவை கூட பொழுதுசாயமுதலே போத்தில்லை வாங்கியந்து வீட்டிலை வைச்சு அடிக்கத்தொடங்கிட்டினம்.அது மட்டுமில்லை இரவிலை தோட்டக்காவலுக்கு போறவையள் இரவு செக்கன்சோ (9 மணி கடைசிக் காட்சி ) படம் பாக்கப்போற வாலிபக்கூட்டங்களும் போகாமல் விட்டிட்டினம்.அந்த மர்ம மனிசனை சிலபேர் இரவிலைபாத்தும் இருக்கினம் ஆனால் ஆக்களைக் கண்டதும் அவன் எப்பிடியோ திடீரெண்டு இருட்டுக்குள்ளை மறைஞ்சிடுறான். அது வயற்கரை வைரவர்தான் உலாவுறார் பயப்பிடாதைங்கோ அப்பிடி யாரும் கண்டால் ஒரு தேவாரத்தை சொல்லுங்கோ ஒண்டும் நடக்காது எண்டு ஊருக்குள்ளை சில பழசுகளின்ரை புராணம். அதே நேரம் ஊருக்குள்ளை களவும் போகத்தொடங்கிட்டுது.சரி வைரவர்தான் இரவிலை உலாவுறாரெண்டால் கடவுள் ஏன்களவெடுக்கவேணும் எண்டொரு குளப்பம்.இந்த மர்ம மனிசன் திரியிறதை சாட்டா பயன்படுத்தி வேறை யாரோ களவுக்கு வெளிக்கிட்டினமோ எண்டும் இல்லை அந்த மர்ம மனிசன்தான் களவெடுக்கிறானோ எண்டும் சந்தேகம்.இப்பிடியான குளப்பத்திலை ஒருநாளிரவு வெள்ளரித் தோட்டத்துக்கு காவலுக்கு படுத்திருந்த வைத்திலிங்கத்தார் ஏதோ சத்தம் கேட்டு எழும்பி ரோச்லைற்றடிச்சு பாக்கிறதுக்கிடையிலை மர்மமனிசன் அவருக்கு கண்ணைப்பொத்தி அடிச்சுப்போட்டு ரோச்லைற்ரையும் பறிச்சுக்கொண்டு பறந்திட்டான். பயத்திலை அய்யோ எண்டு கத்திக் கொண்டு ஊருக்குள்ளை ஓடியந்த வைத்திலிங்கத்தார் மயங்கிவிழ. சனமெல்லாம் சேந்து தூக்கிக்கொண்டு போய் சங்கானை ஆஸ்பத்திரியிலை போட்டிச்சினம்.

அடுத்தநாள் ஊர்ச்சனமெல்லாம் ஒட்டுமொத்தமாய் நான்உட்பட சங்கனை ஆஸ்பத்திரியிலைதான் . போனவை எல்லாரும் வைத்திலிங்கத்தாரை வருத்தம் பாக்குறதுக்கில்லை . எல்லாருக்கும் அந்த மர்ம மனுசனை பற்றி அறியிறதுதான் முக்கிய நோக்கம். அவன் எப்பிடியிருப்பான் உயரமா கட்டையா??கறுப்பா சிவப்பா ??இல்லை கலர்கலரா இருப்பானா??உடம்பிலை முள்ளு இருந்ததா?? பறக்கிற செட்டை (இறக்கை)இருந்ததா?? எண்டு ஆளாளுக்கு கேட்ட கேள்வியிலை மயக்கம் தெளிஞ்ச வைத்திலிங்கத்தார் திரும்ப மயங்கிட்டார். எல்லாரும் வெளியாலை போங்கோ அந்தாளுக்கு உங்களாலை விசர் பிடிக்கப்போகுது எண்டு அங்கை நிண்ட நேர்ஸ் மார் சனத்தைக் கலைக்க. அதுக்குள்ளை ஒருத்தன் அய்யோ வைத்திலிங்கத்து விசராம் எண்டு சொல்ல. மர்மமனிசன் அடிச்சு வைத்திலிங்கத்துக்கு பைத்தியமாம் எண்டு புதுசா ஒரு புரளிவேறை உலாவத்தொடங்கிட்டுது.வைத்திலிங்கத்தாருக்கு விழுந்த அடியோடை சனத்துக்கு பயமும் கூடிட்டுது. அதாலை எல்லா வீட்டுக்காரரும் வீகளிலை கத்தி.பொல்லு.வாள்.எண்டு தற்காப்பு ஆயுதங்களை தயார்பண்ணி வீட்டுக் கூரை வேலியளுக்குள்ளை செருகிவைக்கத்தொடங்கினது மட்டுமில்லை. மர்ம மனிசன் வந்தால் மற்றை வீட்டுக்காரரையும் எழுப்புறதுக்கு சிலரின்ரை வீடுகளிலை மணி கூட வாங்கி கட்டித்தொங்க விட்டிருந்தவை. அது மட்டுமில்லை இரவிலை கோயில் மடத்திலை சாமம் வரைக்கும் இருந்து அரட்டையடிக்கிற எங்களுக்கும் நேரத்தோடையே வீட்டுக்கு வரச்சொல்லி வீட்டுக்காரரின்ரை கரைச்சல் தாங்கஏலாமல் நாங்களும் எங்கடை அரட்டை ஆராச்சியளை ஏழு எட்டு மணிகு்குள்ளையே முடிச்சிட்டு வீட்டை போய்விடுவம்.இப்பிடியே சில நாட்களாய் திகிலாய் இருந்த எங்கடை ஊர்க்கதை. மானிப்பாயிலை மர்ம மனிசன் திரியிறானாம் எண்டு மற்றைய ஊர்களுக்கும் பரவி பரபரப்பாய் கதை போய்க்கொண்டிருக்கேக்குள்ளை எங்கடை ஊரிலை கொழும்புக்கு லொறியிலை சாமான்கள் கொண்டுபோய் வியாபாரம் செய்யிற ஒருத்தர் கோயிலடியிலை நிண்ட எங்களிட்டை ஒரு விசயத்தை சொன்னார்.எங்கடை ஊரிலை கட்டையன் எண்டொருத்தன் இருந்தவன். உயரம் குறைவாய் ஆனால் நல்ல உறுதியான உருண்ட உடம்பு.அனின்ரை பெயரை இதிலை எழுதாமல் விசயத்தை எழுதிறன்.

அந்தக் கட்டையன் சாவச்சேரி சந்தையிலை மரக்கறி வித்ததை கண்டனெண்டு அந்த லொறிக்காரர் சொன்னதை கேட்டதும் எங்களுக்கு ஒரு பொறிதட்டிச்சிது.மரக்கறி விக்கிறதுக்கு கட்டையனிட்டை தோட்டம் இல்லை. மரக்கறியை வாங்கி விக்கிறதெண்டாலும் யாழ்ப்பாணத்திலை கிட்டமாய் கனக்க சந்தையள் இருக்கக்கூடியதாய் சாவச்சேரியிலை ஏன் விக்கவேணும் எண்டு யோசிச்சிட்டு கட்டையனை தீவிரமாய் கண்காணிக்கிறதாய் முடிவெடுத்து. வீடுகளிலை கணக்கெடுக்காத ஒரு ஏழெட்டுப்பேர் சேந்து இரவு ஒரு பன்னிரண்டு மணிவரைக்கும் ஆயுதங்களோடை தோட்டங்கள் வயல்பக்கமாய் சுத்திவந்தம்.ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை களவு போய்க்கொண்டுதான் இருந்தது. ஆயுதங்களோடை சுத்தினனாங்கள் எண்டதும் ஏதோ ஏகேயோடை சுத்தினதாய் நினைக்காதையுங்கோ. ஏகேயெல்லாம் நான் எட்ட நிண்டுதான் பாத்திருக்கிறன்.பொல்லுத்தடிகள்.மற்றது கோயில்லை வாழைவெட்டுறதுக்கு வைச்சிருந்த வாள் இதுதான் ஆயுதம்.இரவிரவாய் சுத்தியும் ஒரு பிரயோசனமும் இல்லாததாலை எங்கடை திட்டத்திலை ஒரு மாற்றத்தை செய்து பாத்தம். அதாவது விடியப்பறம்(அதிகாலை) இரண்டுமணிவரைக்கு நித்திரை கொண்டிட்டு இரண்டு மணிக்கு எழும்பி எல்லாப்பெடியளும் ஊருக்குள்ளை சுத்திவாறதெண்டதுதான் அடுத்த திட்டம். ஆனால் இதெல்லாம் எங்கடை வீடுகளுக்குத்தெரியாமல் தான் நடந்தது. எங்கடை மாற்றுத்திட்டத்துக்கு இரண்டாவது நாளே பலன் கிடைச்சிது.மானிப்பாய் நவாலி தோட்டப்பகுதிக்குள்ளை ஒரு உருவத்தை கண்டிட்டம். மெதுவாய் பதுங்கிப்போய் உருவத்தை கிட்ட நெருங்கிப்பாத்தம்.அந்த உருவம் மளமளவெண்டு பயித்தங்காய் பிடுக்கிகொண்டிருக்க. நாங்கள் எல்லாரும் கத்தியபடி ரோச்லைற்றை அடிச்சுக்கொண்டு ஓடிப்போய் பாஞ்சு ஆளைப்பிடிச்சால் நாங்கள் சந்தேகப்பட்டபடி எங்கடை ஊர் கட்டையனேதான்.யாரும் பிடிச்சால் வழுக்கிக்கொண்டு ஓட வசதியாய் உடம்பிலை எண்ணெயைப்பூசியிருந்தான்.அவனை பிடிச்சு கொண்டுவந்து எங்கடை கோயிலடியிலை கரண் கம்பத்திலை கட்டிவைச்சிட்டு அடுத்ததாய் என்ன செய்யலாமெண்டு யோசிச்சம்.

முந்திக் காலங்களிலை ஊரிலை நடக்கிற களவுகள் இல்லாட்டி கள்ளரைப்பிடிச்சால் அதை ஊர் விதானையாரிட்டைதான் பொறுப்புக் குடுக்கிறது வழக்கம். அதுமாதிரி நாங்களும் ஊர்விதானையார் மற்றது ஊர்பெரியாக்களிட்டை கள்ளனை பொறுப்பு குடுக்கலாம் எண்டு நினைச்சு. பிடிச்ச உடைனை நாலைஞ்சு அடியும் போட்டிட்டு அவனை கொண்டு வந்து எங்கடை கோயிலடியிலை இருந்த கரண்டு(மின்கம்பம்)கம்பத்தோட சேர்த்து அவன் இருக்கக்கூடிய வசதியாய் பின்பக்கமாய் கையை கட்டிப்போட்டு இரண்டுபேரை போய் விதானையாரையும் வேறை ஊரிலை பெரியாக்கள் சிலபேரையும் கூட்டிக்கொண்டுவர அனுப்பிப்போட்டு மற்றாக்கள் கட்டையனுக்கு காவல் நிண்டம்.என்ரை நண்பன் இருள்அழகன் வீட்டிலையும் கொடியிலை காயப்போட்டிருந்த உடுப்புகள் களவு போயிருந்தது.அதாலை கட்டிப்போட்டிருக்கிற கட்டையனைப்பாத்ததும் இருள்அழகனுக்கு வீரம் பெருக்கெடுத்து வந்திட்டுது. அதாலை கட்டையனைப்பாத்து டேய் எங்கடை வீட்டிலை காயப்போட்டிருந்த துணியளையும் நீயா களவெடுத்தனி என்று கேட்டபடி கட்டிப்போட்டிருந்த கட்டையனின் கன்னத்தை குறி வைத்து காலால் ஓங்கி அடிச்சான். அடிச்சதுதான் தாமதம் அய்யோ எண்டு கத்தினபடி இருள்அழகன் சுருண்டு விழுந்து கத்தினான். இதென்னடா அடிவாங்கினவன் அப்பியே அசையாமல் இருக்க. அடிச்சவன் ஏன் அய்யேவெண்டு சுருண்டு விழுந்து கத்திறாணென்டு எங்களுக்கு ஒண்டும் விழங்கேல்லை. பிறகுதான் புரிஞ்சுது இருள்அழகன் காலாலை ஒங்கிஅடிக்க அந்த நேரம் கட்டையன் தலையை குனிஞ்சிட்டான் அதாலை இருள்அழகன்ரை கால் கரண்கம்பத்திலை அடிபட்டிருக்கு.அதுவும் கொங்கிறீற் கம்பம் அடிஎப்பிடி இருந்திருக்குமெண்டு யோசிச்சுப்பாருங்கோ.அதுக்கிடையிலை ஊரிலை விதானையாரோடை கொஞ்சப்பெரிய மனுசர்எல்லாரும் நித்திரையாலை எழும்பி கோயிலடிக்கு வந்திட்டினம். இனிவந்தவை சும்மாவே இருப்பினம் எல்லாரும் கட்டையனுக்கு ஆளுக்கொரு அடிபோட . கட்டையன் எங்களைப்பாத்து "ஏன் என்னை கட்டிவைச்சு அடிக்கிறியள் சரியான ஆம்பிளையளாய் இருந்தால் என்னை அவிட்டு விட்டிட்டு யாராவது ஒற்ரைக்கு ஒற்றை தனியஅடிபட வாங்கோ. நான் தோத்திட்டால் உங்கடை தண்டனையை ஏத்துக்கொள்ளுறன்." எண்டு கத்தினான்.

களவெடுத்ததும் இல்லாமல் திமிரைப்பார் எண்டு சில பெருசுகள் புறுபுறுத்தாலும் அடிபட ஒருத்தரும் தயாராய்இல்லை.அப்பதான் என்ரை நண்பனொருவன் கட்டையனை அவிட்டு விடுங்கோ நான் அடிபடத்தயாரெண்டு முன்னுக்கு வந்தான் அவன் கராட்டியிலை கறுப்பு பட்டியும் எடுத்திருந்தவன்.சரியெண்டு நாங்களும் கட்டையனை அவிட்டு விட்டிட்டு ஏதோ வித்தை பாக்கிறதுக்கு நிக்கிறமாதிரி அவை இரண்டு பேரையும் நடுவிலை விட்டு நாங்கள் சுத்திவர நிண்டம்.என்ரை நண்பனும் கையைக் காலை வழைச்சு நெளிச்சு கராட்டி வித்தை எல்லாம் காட்டி தயாராக . கட்டையனும் தன்ரை பங்கிற்கு கையை காலை ஆட்டினவன் திடீரெண்டு சுத்திவர நிண்ட ஒருத்தரை தள்ளிவிழுத்திப்போட்டு வயல்வெளிக்குள்ளாலை இறங்கி ஓடத்தொடக்கிட்டான்.நாங்களும் கலைச்சுப்பாத்தம் அதோடை இருட்டாயும் இருந்தபடியாலை அவனைப்பிடிக்க முடியேல்லை.அதுக்குப் பிறகு கட்டையனை ஊர்ப்பக்கம் காணவேயில்லை.கன காலத்துக்குப் பிறகு ஒருநாள் நான் சைக்கிளிலை போய்க்கொண்டிருக்கேக்குள்ளை எங்கடை ஊரிலை ஒரு இயக்கத்தின்ரை முகாமுக்கு முன்னாலை ஒருதன் குத்திப் போட்டு எறியிற குண்டை கையிலை வைச்சிருந்தபடி என்னை மறிச்சு " தம்பி என்னை ஞாபகம் இருக்குதோ எண்டு கேட்டான். உற்றுப்பாத்தன். அது எங்கடை கட்டையன். பிறகென்ன என்ரை ஏசியா சைக்கிள் ஏறோப்பிளேன் வேகத்திலை அந்த இடத்திலை இருந்து மறைஞ்சிட்டுது.

அநியாயம் ஆனால் உண்மை

6:46 AM, Posted by sathiri, 2 Comments



மேலே படத்தில் தாயாருடன் உள்ள பெண்ணின் பெயர் சமந்தா சிய்லர் வயது 21 .நான் வசிக்கும் நகரத்தில் வசிக்கின்ற ஒரு மாணவி.கடந்தவாரம் எங்கள் பிராந்தியப்பத்திரிகையான (nice matin) இவரது படத்துடன் வந்த செய்தி எங்கள் நகர மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் செய்தியினை தேவை கருதி தமிழில் தருகிறேன்.சிய்லர் ஒருநாள் பொழுது போக்காக இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்த பொழுது இணையத்தில் ஒரு விளம்பரத்தினை பார்க்கிறார். அது ஒரு இணையத்தின் மூலமான பயண முகவர் நிலையமொன்றின் ஒரு விழையாட்டு .அதில் வெற்றி பெற்றால் உலகின் பல இடங்களிற்கு ஒரு வார காலம் உல்லாசப் பயணம் போய் வருவதற்கான பயணச் சீட்டும் தங்குவதற்கான விடுதியும் பரிசாக அறிவிக்கப்பட்டு. பரிசு பெற்றால் போவதற்காக தெரிவு செய்வதங்காக சில நாடுகளின் பெயர் விபரங்களும் அதில் இருந்தது. போட்டிக்கான விதி முறைகள் சுலபமானதுதான். அதில் நீங்கள் ஆணா பெண்ணா.முழுப்பெயர் வயது மற்றும் மின்னஞ்சல் முகவரி இவற்றை பதிவு செய்து அனுப்பி விட வேண்டியதுதான்.இதனைப்பார்த்த சிய்லரும் சிலநேரம் அதிஸ்ரம் அடித்தால் இந்தக்கோடை விடுமுறையை குதூகலமாகக்களிக்கலாமென நினைத்து அதில் கேட்டிருந்த விபரங்களை பதிவுசெய்து அனுப்பிவிட்டார்.

ஒரு வாரத்தின் பின்னர் சிய்லருக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.அதனைத் திறந்து பார்த்தவரிற்கு மகிழ்ச்சி அவர் நினைத்தது போலவே கோடை விடுமுறையை கொண்டாட்டமாக களிப்பதற்காக நீங்கள் போட்டியின் பரிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி஼br />?ீர்கள் என்று அவர் விபரங்கள் அனுப்பிய அந்த பயண முகவர் நிலையம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அத்துடன்சில ஆசிய மற்றும் தென்அமெரிக்க நாடுகளின் பெயர்ப்பட்டியலைப்போட்டு நீங்கள் செல்ல விரும்பும் ஒரு நாட்டினை தெரிவு செய்யும்படியும் கேட்டிருந்தனர்.சிய்லரும் தாய்லாந்தின் பத்தையா கடற்கரையோரம் கால் நனைக்கும் கனவுகளுடன் தாய்லாந்தினை தெரிவுசெய்து அனுப்பியிருந்தார்.ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு மின்னஞ்சல் வந்தது அதில் தற்சமயம் தாய்லாந்திற்கான ஒழுங்குகளை எங்களால் செய்யமுடியாமல் உள்ளது எனவே எங்கள் முகவர் ஒருவர் உங்களை நேரடியாக சந்தித்து நீங்கள் பயணம் செய்யக்கூடிய வகையில் மேலும் சில நாடுகளின் பெயர்ப்பட்டியலையும் காண்பித்து மேலதிக விபரங்களையும் தருவாரென்றும் .தொடர்புகொள்ளும்படி அதில் ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தினை வழங்கியிருந்தனர்.சியலரும் உடனே அந்த இலக்கங்களை அழுத்தினார். மறுமுனையில் ஒரு பிரெஞ்சுக்காரர் அல்லாத ஒரு ஆணின்குரல். தான்தான் அந்த பயணஏற்பாடுகளை செய்பவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நகரமத்தியில் ஏதாவது ஒரு சிற்றுண்டிச்சாலையில் சந்திக்கலாமென ஒரு நேரமும் ஒதுக்கப்பட்டு ஒரு சிற்றுண்டிச்சாலையில் சந்தித்தனர்.வந்தவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தென்அமெரிக்கா நாடுகளான வெனிசுலா.சிலி.பொரு. கொலம்பியா மற்றும்ஆஜென்ரீனா ஆகிய நாடுகளிற்கே தற்சமயம் ஒழுங்குகள் செய்யமுடியுமென்றும் அந்த நாடுகளின் விபரங்கள் சில படங்கள் என்று காடடியபடியே கதைக்கவும்.சிய்லர் ஆஜென்ரீனாவை தெரிவு செய்தார்.

ஆனால் அந்த முகவரோ ஆஜென்ரினாவிற்கு செல்வதற்கு பிறேசில் விமான சேவையிலேயே இடம் இருக்கிறது ஆனால் பிறேசிலில் இருந்து ஆஜென்ரீனாவிற்கான விமானத்திற்காக நீண்ட நேரக்காத்திருப்பு எனவே கொலம்பியாவை தெரிவு செய்யலாம் இங்கிருந்தே நேரடிவிமானத்தில் இலகுவான பயணம்.என்று கதைத்து சிய்லரை அந்த முகவர் சம்மதிக்க வைத்து விட்டார்.பிறகென்ன சில நாட்களில் மீண்டும் சிய்லரை நேரில் அழைத்த அந்த நபர் அவரிற்கான விமானசீட்டும் தயார் என்று கூறி விமானச்சீட்டையும் அவரின் செலவுகளிற்காக ஒரு உறையில் 1000 யுரோ பணத்தையும் கொடுத்து கொலம்பியா போனோ விமான நிலையத்தில் உங்களை எங்கள் முகவர் ஒருவர் வரவேற்று மேலதிக உதவிகளை செய்வாரென்று வழியனுப்பிவைத்தார்.சிய்லரும?? கொலம்பியா போனோ விமானநிலையத்தில் இறங்கியதும் திட்டமிட்டிருந்தபடியே அங்கு ஒரு முகவர் சிய்லரை அழைத்துப்போய் ஒரு விடுதியில் தங்கவைத்து சிய்லரிற்கு ஒருவாரகாலத்திற்கு அவர் சுற்றிப் பார்ப்பதற்காக உதவியாக ஒரு வழிகாட்டியையும் ஏற்பாடு பண்ணிவிட்டு போய் விட்டார்.ஒரு வார காலம் சிய்லரின் பயணம் நன்றாகமுடிந்தது. மீண்டும் பிரான்சிற்கு திரும்பவேண்டிய நாள் வந்தது . கொலம்பியாவில் வரவேற்ற அதே நபரே வழியனுப்பிவைக்க வந்திருந்தார்.ஒரு வாடைகைக்காரில்( taxi ) சிய்லரையும் ஏற்றிக்கொண்டு விமான நிலையம் நோக்கிப் போய்க்கொண்டிருந்த பொழுது ஒரு இடத்தில் அவர்களது வாடைகைக்கார் நின்றுவிட அதில் ஏதோ கோளாறு எனவே வேறொரு வாடைகைக்காரில் போகலாமென இன்னொரு காரில் மாறி விமான நிலையம் வந்தடைந்தனர்.

விமான நிலையத்தின் உள்ளே இடப்பதிவுசெய்யும்( bording ) இடம்வரை சிய்லரின் பொதிகளை கொண்டுவந்து கொடுத்து விட்டு அந்த முகவர் நல்ல பயணமாக அமையட்டும் என்று கூறி விடைபெற்றார். சிய்லரும் தன்னுடைய பொதிகளை பதிவுசெய்து விட்டு தன்னுடைய இருக்கைப் பதிவினைபெற்றுக்கொண்டு புறப்படும் பொழுது ஒரு விமான நிலைய அதிகாரி ஒருவர் வந்து சிய்லரை சில கேள்விகள் கேட்கவேண்டும் ஒரு நிமிடம் ஒத்துழைக்கமுடியுமா எனக் கேட்டுள்ளனர்.சிய்லரும் இது ஏதோ சாதாரண விமான நிலைய சம்பிரதாய விசாரணை என நினைத்து தாராளமாக ஒத்துளைக்கிறென் என்று கூறவும். அவர்கள் விமான நிலையத்தில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து செல்ல அங்கு கொலம்பிய விமான நிலைய காவல்துறையினரும் சிய்லரின் பயணப்பொதியும் இருந்தது.அங்கிருந்த காவல்துறை அதிகாரி சிய்லரைப்பார்த்து இது உங்கள் பொதிதானே என்று கேட்கவும். சிய்லரும் சாதாரணமாக தன்னுடையதுதான் என ஒத்துக்கொள்ள அவரது பொதியினை காவல்த்துறையினர் திறந்தனர். பொதியை திறந்ததும் செய்லரிற்கு ஆச்சரியம் காரணம் உள்ளே இருந்தவை அவருடைய துணிகள் அல்ல. அதற்கடுத்ததாய் அதிர்ச்சி உள்ளே ஒரு பாசல் அதில் 14 கிலோ நிறையுள்ள கொக்கெயின் போதைமருந்து. சிய்லர் இப்பொழுது போனோ சிறையில் இருக்கிறார். பிரெஞ்சுத் தூதரகம் இவரின் நலன் மற்றும் வழக்குகளை கவனித்து வருகின்றது.ஆனால் பிரான்சில் இது இரண்டாவது சம்பவம். சுமார் மூன்று ஆண்டுகளிற்கு முன்னரும் பாரிஸ் புற நகர்பகுதியில் வசிக்கும் ஒரு மாணவி இதே பாணியில் கொலம்பியாவிற்கு சென்று போதை மருந்துகளுடன் பிடிபட்டு அவர் நேரடிக் குற்றவாளி அல்ல ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்று தெரிந்திருந்தாலும் அவருடைய பயணப்பொதியில் போதை மருந்துகள் இருந்ததற்காக 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். எனவே எம்முடைய தமிழ் இளம் சமுதாயமும் காலையும் மாலையும் கணணியிலேயே கடலை போட்டுக்கொண்டு கவிண்டு கிடப்பதால் இதுபோன்ற கணணி விளம்பபரம் மற்றும் விழையாட்டுக்களில் கவனமாக இருக்கவேண்டியே இந்தச் செய்தியை தமிழில் தருகின்றேன் இல்லா விட்டால் களி சாப்பிட்டபடி கம்பி எண்ணப்போறம் எண்டு அடம்பிடிச்சால் உடைனையே கொலம்பியாவிற்கு ஒரு றிக்கற்..எடுங்கோ .............................

பூமாதேவி சிரிக்கிறாள்

4:36 AM, Posted by sathiri, No Comment

பூமாதேவி சிரிக்கிறாள்
ஒரு பேப்பரில்

பூமாதேவி சிரிக்கிறாளா அப்பிடியெண்டால் என்னவெண்டு யோசிக்கிறவைக்கு இப்ப உலகத்திலை நடக்கிற இயற்கை அழிவுகளைத்தான் பூமாதேவி சிரிக்கிறாள் எண்டு எழுதினனான்.சீனாவிலை பூகம்பம் பல்லாயிரம்பேர் மரணம். பர்மாவிலை சூறாவளி இரண்டுலச்சம்பேர் மரணம். அமெரிக்கா கலிபோர்ணியாவிலை காட்டுத்தீ பலநூறுபேர் கருகிக்போச்சினம் எண்டு இந்தமாதம் முழுக்க எல்லா செய்திகளிலையும் பாத்து பாத்து பாதிவாழ்க்கை வெறுத்துப்போச்சுது. அப்ப இன்னமும் பாதி இருக்கிதுதானே எண்டு கேக்கக்கூடாது. அது எங்கடை இனத்தின்ரை இழப்பை பாத்து அந்தப் பாதியும் ஏற்கனவே வெறுத்துப் போச்சுது. அதுதான் மொத்தமாய் வெறுத்துப்போச்சுதே பிறகேன் எங்களை வெறுப்பேத்திறாயெண்டு கேக்கிறவைக்கு......அதுதான் என்ரை நோக்கமே யான்பெற்ற இன்பம் பக்கத்து வீட்டுக்காரனும் பெறவேண்டும் எண்டிறதுதான் என்ரை விருப்பம்


..அதாலை இனி விசயத்துக்கு வாறன். இந்த சுனாமி வந்தால்பிறகு உலகத்தின்ரை வழைமையான காலநிலையிலை பெரிய மாற்றங்கள். இவனுக்கென்ன விசரோ மாறி மாறி வாறதுக்கு பேர்தானே காலநிலையெண்டு வியாக்கியானம் கதைக்கக்கூடாது. காலநிலை மாறி மாறித்தான் வாறது ஆனால் ஒரே சீராய்மாறும். இப்ப எப்பிடியெண்டால் போன வருசம் கோடை தொடங்க முதலே ஜரோப்பா எல்லாம் கெழுத்திற வெய்யில். பூமாதேவி சூடாயிட்டாள் அதாலை அவளை குளிர வைக்கவேணுமெண்டு குட்டி குட்டி தாடி வைச்ச பெரிய பெரிய விஞ்ஞானிமாரெல்லாம் ஒரு இடத்திலை சேர்ந்து காலாட்டினபடி கதைச்சுப்பேசி ஒரு அறிக்கையும் விட்டவை. ஆனால் இந்தவருசம் பாத்தால்நான் ஜரோப்பாவிலை பூமாதேவி மட்டுமில்லை எங்களுக்கும் உச்சிகுளிர்ந்து தடிமன்வாற அளவுக்கு மாசி மாசக் கடைசி மட்டும் பனி கொட்டித் தள்ளிச்சிது.ஆனால் இப்ப ஆனி மாதம்.பிரான்சிலை நான் இருக்கிற நீஸ் எண்டிற கடற்கரை நகரத்திலை சாதாரணமாய் கோர வெய்யில் மண்டையை பிளக்கத்தொடங்கியிருக்கும். சனமெல்லாம் வெக்கை தாங்கமுடியாமல் கடலுக்குள்ளையும் கடற்கரையிலையும் படுத்திருக்க வேண்டிய காலம். ஆனால் இந்தவருசம் நிலைமை தலைகீழ்....;

இரண்டு கிழைமையாய் ஒரே மழையும் குளிருமாய் இருக்கு.என்ரை முதலாளியும் ஒவ்வொரு வருசமும் கோடை தொடங்க. கடற்கரையிலை உள்ள தன்ரை உணவுவிடுதியை திறந்து அதைக்கவனிக்க என்னை அனுப்பிறது வழக்கம். அப்பிடித்தான் இந்தவருசமும் வந்து கடையைத்திறந்து போட்டு காவலிருக்க வெறும் கடற்கரைகாத்துத்தான் கடையுக்கை வருகிது. ஒரு சனத்தையும் காணேல்லை. இண்டைக்கு காத்தாலை கொஞ்சம் வெய்யில் வாறமாதிரி இருந்திச்சிது சனமும் கொஞ்சம் கரையிலை ஊலாவத்தொங்கிச்சிது. இந்த வெள்ளைக்காரருக்கு ஒரு பழக்கம் கொஞ்சம் வெய்யிலைக்கண்டால் காணும் உடைனை கடற்கரையிலை ஓடியந்து உடம்பிலை கிறீமை பூசிப்போட்டு படுத்திடுவாங்கள். என்ணெண்டால் சண்பாத்தெடுத்து எங்கடை பிறவுண் கலருக்கு வாறதுக்காம்.வெள்ளையள் என்ரை நிறத்தை பாத்து நீ குடுத்து வைச்சனியெண்டு பெருமூச்சு விடுவாங்கள். அதுவும் வெள்ளைக்காரியள்....சீ....வேண்டாம
் அங்காலை எழுதமாட்டன் பிறகு பேப்பரிலை என்ரை கதை வந்தஉடைனையே வீட்டிலை என்ரைகதை கந்தலாயிடும்.அதாலை விசயத்துக்கு வாறன் இண்டைக்கும் இப்பிடித்தான் கொஞ்சமாவது வியாபாரம் நடக்குமெண்டு கடற்கரையிலை கதிரை மேசையெல்லாத்தையும் அடுக்கச் சொல்லிப்போட்டு அண்டைக்கு என்ன சாப்பாடு செய்யிறது எண்டு குசினிக்காரரோடை கதைச்சுக்கொண்டு நிக்க திடீரெண்டு பெரிய அலையள் அடிக்கதொடங்கிச்சிது.

அங்கை காவலுக்கு நிண்ட முதலுதவிப்படை சிவப்பு கொடியை ஏத்திப்போட்டு எல்லாரையும் கடற்கரையை விட்டு வெளியாலை வரச்சொல்லி விசிலடிச்சுக்கொண்டிருக்க. சனங்களும் அவசரமாய் துண்டைக்காணேல்லை துணியைக்காணேல்லையெண்டு கடற்கரையை விட்டு ஓடத்தொடங்கிட்டினம். இந்தப் பழமொழி சிலநேரம் இந்த இடத்துக்கு பொருந்தாது ஏணெண்டால் எங்கடை கடற்கரையிலை ஒருதரும் ஒரு துண்டு துணியொண்டும் இல்லாமல்தான் படுத்துக்கிடக்கிறவை. ஆண்களோ பெண்களோ கீழை உள்ளாடை கட்டாயம் போட்டிருக்கவேணுமெண்டு சட்டம் போட்டிருக்கிறபடியாலை இடுப்பிலை றிபன் சைசிலை ஒரு துணிஏதாவது ஒட்டியிருப்பினம்.மேலை ஒண்டும் கிடையாது. என்னைப்பாத்து குடுத்து வைச்ச ஆளய்யா எண்டு உங்கடை மனசுக்குள்ளை மணியடிக்கிற சத்தம் கேக்கிது. ஆனால் எனக்கென்னவோ உதுகளை பாத்துப் பாத்து அலுத்தே போச்சுது. சரி அங்காலை அலையடிக்கிது இதுக்குள்ளை இது வேறையா???? நானும் அடுக்கின கதிரையளை தூக்கிறதுக்கிடையிலை ஒரு நாலைஞ்சு கதிரை அலை கடலிலை ஆடியசைஞ்சு போய்க்கொண்டிந்திச்சிது.

பிறகென்ன எல்லாத்தையும் அடிச்சு மூடிப்போட்டு மற்ற வேலைகாரரையும் வந்தவழியைப்பாத்து போகச்சொல்லிப்போட்டு. அடுத்ததாய் முதலாளிக்கு போனடிச்சு நிலைமையை சொல்லவேணுமெல்லோ ?? அதாலை என்ரை குரலையும் சோகச்செய்தி சொல்லுற நிலைமைக்கு கஸ்ரப்பட்டு மாத்தி ஒருமாதிரி அண்டையான் நிலைமையை ஒரு நேரடி வர்ணனையைபோல சொல்லி கடல் இழுத்துக்கொண்டு போன கதிரையளுக்கும் கண்ணீரஞ்சலி செலுத்திப்போட்டு. முதலாளியிட்டை வாங்கிற சம்பளத்துக்கு ஏதாவது வேலை செய்ய வேணுமெல்லோ அதுதான் இதை எழுதிறன். இதை எழுதேக்குள்ளைதான் யோசிச்சன் என்னதான் விஞ்ஞாமெண்டிறாங்கள் கண்டு பிடிப்பு எண்டிறாங்கள் இயற்கையின் மாற்றத்தை கட்டுப்படுத்த இன்னமும் மனிசராலை முடியேல்லை. பயந்து ஓடத்தான் முடியிது. இப்பிடித்தான் நான் படிச்சுக்கொண்டிருந்த காலத்திலை ஒரு சம்பவம். 1979 ம் ஆண்டு ஸ்கைலாப் எண்டொரு செயலிழந்த விண்வெளிக்கலமெண்டு பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தது.

அதுவும் இலங்கை இல்லாட்டி இந்தியாவிலைதான் விழப்போகுதெண்டும் விழுகிற இடத்திலை பெரிய பாதிப்பு வருமெண்டும் செய்தியளும் வெளியாகிக்கொண்டிருந்த நேரம். அந்த நேரம் இந்த விண்கலங்கள் இல்லாட்டி இதுபற்றின விஞ்ஞான அறிவுகள் எஙகடை சனத்திட்டை பெரியளவிலை இருக்காத காலகட்டம்;. அப்ப எங்கடை ஊரிலை உள்ளவையெல்லாம் ஸ்கைலாப் விழுந்தால் உலகம் அழிஞ்சிடுமாம் எண்டும் சிலபேர்.. இல்லை உலகத்திலை பாதி அழிஞ்சிடுமாம் எண்டும். சிலபேர் சிறீலங்காவும் இந்தியாவும்தான் அழியுமாம் எண்டும் ஆளாளுக்கு பயப்பிடுறமாதிரி கதை சொல்லிக் கொண்டு திரிஞ்சாங்கள். ஆனால் அதுபற்றின செய்தியளும் தொடர்ச்சியாய் ஊடகங்களிலை வந்துகொண்டிருந்தாலும் வதந்திகளைத்தான் சனம் அதிகமாய் நம்பிச்சினம். சரி உண்மை என்னவெண்டு படிப்பிக்கிற விஞ்ஞான வாத்தியாரிட்டை விளக்கம் கேட்டம். அது ஒரு 79 தொன் நிறையுள்ள விண்கலம். விழுற இடத்திலை தண்ணிவாற அளவு பெரிய பள்ளம் வரலாம் அது விழுற இடத்தைபொறுத்து சேதம் இருக்கும். அதேநேரம் அதிலை இருந்து ஏதாவது இரசாயனக் கதிர்வீச்சுகள் வெளியாலை வந்தால் அது பாதிக்கும் எண்டு விளக்கமும் தந்தார். எங்களுக்கு அந்த நேரம் நெல்லுக்கதிர் மட்டும்தான் தெரியும் இரசாயனக் கதிருகளைப்பற்றி ஒண்டும் தெரியாது.

ஆனால் விளக்கம் சொன்ன வாத்தியார் விஞ்ஞானத்தோடை சமயமும் படிப்பிக்கிறவர் அதலை ஸ்கைலாப் எங்கடை ஊருக்குள்ளை விழக்கூடாதெண்டு பிள்ளையாருக்கு ஒரு நேத்தியும் வையுங்கோடா பெடியள் எண்டிட்டு போட்டார்.இந்தப் பரபரப்பிலை ஒருநாள் " இன்றிரவு ஸ்கைலாப் பூமியை வந்தடையும் ஆனால் அதனை இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் விழ வைக்க முடியுமென்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் " என்று இலங்கை வானொலி அறிவிச்சிது. இந்த நாசமாய் போன விஞ்ஞானியளாலைதானே இவ்வளவு பிரச்சனையெண்டு நினைச்சபடி பிள்ளையாருக்கு நேத்தியும் வைச்சிட்டு தொடர்ச்சியாய் இலங்கை வானெலியிலை ஸ்கைலாப் பற்றி அடிக்கடி போய்க்கொண்டிருந்த விசேட செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தன்.அண்டை༢r />??்கு ஊர்சனங்களும் ஏதோ முனியடிச்ச மாதிரி முழுசிக் கொண்டுதான் திரிஞ்சவை.(முனியடிச்சு நீ பாத்திருக்கிறியா எண்டு கேக்கக்கூடாது) அண்டிரவு ஊர்ச்சனங்கள் எல்லாருமே றேடியோக்கு பக்கத்திலை இருந்து ஸ்கைலாப் விழுகிற செய்தியளை கேட்டுக் கெண்டிருக்க ஒரு எட்டுமணியளவிலை ஊருக்குள்ளை திடீரெண்டு பெரிசாய் நெருப்பு பத்தி எரியத் தொங்கிட்டுது.

அக்கம் பக்கத்து சனங்கள் எல்லாம் ஜயோ ஸ்கைலாப் விழுந்திட்டுது அதுவும் எங்கடை ஊருக்குள்ளை விழுந்திட்டு ஊர் அழியப்போகுது பிள்ளையாரே காப்பாத்து எண்டு அலறினபடி வீடுகளை விட்டு ஓடத்தொடங்க. நானும் பயத்திலை என்ன செய்யிறதெண்டு தெரியாமல் நாலைஞ்சு தேவாரத்தை கலந்து றீ மிக்ஸ் பண்ணி சொன்னபடி நிக்க றோட்டிலை சிலபேர் நெருப்பு எங்கடை ஊரிலை இருந்த பிரபல அரசியல் வாதியின்ரை வீட்டு காணிக்கள்ளை இருந்துதான் வருகிது ஸ்கைலாப் அவரின்ரை காணிக்குள்ளைதான் விழுந்திட்டுது எண்டு சொல்லிச்சினம்.இப்பிடி அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருக்க வெளியாலை இருந்து வீட்டை ஓடியந்த அண்ணன் சொன்னான் ஒருத்தரும்பயப்பிடாதையுங்கோ அது ஸ்லாப் இல்லை வேறை ஏதோ எரியிது போய் றேடியோவை கேழுங்கோ ஸ்கைலாப் இன்னும் விழேல்லை எண்டு சொல்லத்தான் எங்கடை வீட்டுக்காரர் எல்லாரும் திரும்ப வீட்டுக்குள்ளை ஓடிவந்து றேடியோவை கேட்டால் ஸ்கைலாப் இன்னமும் இந்து சமூத்திரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.கொஞ்ச நேரத்தாலைதான் விசயம் தெரிஞ்சது.

79 களிலை ஆயுதப் போராட்டம் தொடங்கியிருந்த காலம் ஊரிலை பொலிஸ்காரர் இல்லாட்டி இலங்கையரசாங்கத்துக்கு வால்பிடிக்கிறவைக்கு இளைஞர்கள் தாக்குதல் நடத்த தொடங்கியிருந்த நேரம். அதுமாதிரித்தான் எங்கடை ஊரிலை அந்த அரசியல்வாதியும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின்ரை முக்கியமான ஒருத்தர். அவருக்கு ஏதாவது செய்யவேணும் எண்டு நினைச்ச என்ரை அண்ணணும் அவரின்ரை சினேதங்களும் சேந்து ஸ்கைலாப் விழுறதை சாட்டாய் வைச்சு அவரின்ரை பெரிய வளவுக்கு வேலியடைக்க பறிச்சு வைச்சிருந்த பனையோலையளை கொழுத்தியிருக்கினம். அது எங்கடை ஊர்காரரையும் பயப்பிடுத்தி என்னையும் தேவாரத்தை றீ மிக்ஸ் பண்ண வைச்சிட்டுது. கடற்கரையிலை தொடங்கி ஸ்கைலாப்பிலை வந்து காவேலையை கொழுத்தி கதையை முடிச்சிட்டான் . பாவி முதல்லை உன்ரை கதையை முடிக்கவேணும் எண்டு திட்டினபடியே இருங்கள் அடுத்த பேப்பரில் சந்திக்கிறேன் நன்றி.

பெரியாருக்கு அரோகரா

9:24 AM, Posted by sathiri, No Comment


நாடகத்தினை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam14.smil


அன்புள்ள கறுப்பி நாயே

8:18 AM, Posted by sathiri, 2 Comments


தொடர்ந்து என்ரை கதையையே எழுதிக் கொண்டு வாறதாலை இந்தமுறை ஒரு நாய்க்கதை எழுதப்போறன்.எல்லாம் ஒண்டுதான் எண்டு முணுமுணுக்காமல் படியுங்கோ ஏணெண்டால் இது 80 களிலை ஊரிலை நான் வளர்த்த நாயின்ரை கதைதான். நாங்கள் வளர்த்த நாய் வயசு போய் செத்துப்போயிருந்த நேரம் என்ரை நண்பன் இருள்அழகனின்ரை வீட்டு நாய் நாலைஞ்சு குட்டிபோட்டிருந்தது.நான் அதிலை ஒரு நரைநிற கடுவன் ஒண்டையும் கறுப்பு பெட்டைக்குட்டி ஒண்டையும் தூக்கிக் கொண்டு வந்திட்டன்.இப்ப அதுகளுக்கு பேர் வைக்க வேணுமெல்லோ??.வீட்டிலை ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரை சொல்லிச்சினம். அதே நேரம் என்ரை தங்கச்சி.. நாயளின்ரை நிறத்தையே பெயராவைப்பம் எண்டிட்டு நரையனுக்கு பிறவ்ணி எண்டும் கறுப்பு குட்டிக்கு பிளக்கி எண்டும் வைப்பம் எண்டாள்.அவளின்ரை யோசினை எனக்கு பிடிச்சிருந்தாலும் நாங்கள் ஆர் தமிழரல்லோ அதாலை எனக்கு இங்கிலிசிலை பேர் வைக்கிறது பிடிக்கேல்லை அதை அப்பிடியே தமிழிலையே நரையன் எண்டும் கறுப்பி எண்டும் பேர் வைச்சு பக்கத்து வீடு இருள்அழகனின்ரை வீடு எண்டதாலை தாய் நாய் தேடிவந்து குட்டியை கவ்விக்கொண்டு போகாமல் இருக்க அதுளை எங்கடை வீட்டு தண்ணித்தொட்டிக்குள்ளை வைச்சு பால்குடுத்து வளத்தன்.இரண்டும் நல்லா வளந்து சாப்பிட தொடங்கத்தான் நரையனுக்கு ஏதோ ஒரு வருத்தம் பிடிச்சிட்டுது.என்னத்தை சாப்பிட்டாலும் மெலிஞ்படிதான் இருந்திச்சிது.

 ஆனால் கறுப்பி மினுமினுவெண்டு கொழுத்து வளந்துகொண்டிருந்தது. நரையனுக்கு சாப்பாடு பால் எல்லாம் கூடுதலாய்குடுத்தும் பாத்தன் ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. அந்தநேரம் நரையனை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் வைத்தியம் பாக்கிற அளவுக்கு என்னட்டை வசதி இல்லாததாலை பக்கத்திலை சண்டிலிப்பாயிலை இருந்த அரசாங்க மிருக வைத்திரிட்டை கொண்டு போய் காட்டினன்.அங்கை சுமணா எண்டு எனக்கு தெரிஞ்ச அக்கா ஒராள்தான் வைத்தியராய் இருந்தவா.

அவாவும் நரையனை பிடிச்சுப்பாத்திட்டு சாப்பாட்டோடை கலந்து குடு எண்டுசில விற்றமின் குளிசையளை எழுதித்தந்து விட்டார். நானும் அந்த விற்மின் குழிசையளையும் வாங்கி குடுத்தும் பாத்தன் ஒரு மாற்றமும் இல்லை.ஆனால் நரையனுக்கு எந்த நேரமும் சாப்பாடு தேவைப்பட்டது. சாப்பாட்டோடை யாரையாவது கண்டாலே காணும் உடைனை அவதிப்பட்டு அவைக்கு மேலை பாய்ஞ்சு பறிச்சுப்போடும். ஒருக்கால் சோறு போடப்போன அம்மாவை சோறு போடமுதலே அவதிப்பட்டு சோத்தோடை சேத்து அம்மாவின்ரை கையையும் கடிச்சுப்போட்டுது. அதுமட்டுமில்லை சாப்பாட்டுக்காக பக்கத்து வீடுகளுக்குள்ளையும் நுளையத் தொடங்க நரையனை எந்த நேரமும் கட்டிப்போட்டிட்டு சாப்பாட்டை தட்டிலை போட்டு தூர நிண்டு தட்டை தள்ளிவிட வேண்டிய நிலைமைக்கு வந்திட்டுது. ஆனால் அது எந்த நேரமும் சாப்பாட்டுக்கு அவதிப்படுறதாலை அதுக்கு அவதி எண்டிற பட்டத்தை குடுத்துஎல்லாரும் அவதி நரையன் எண்டு கூப்பிடத் தொடங்கிட்டினம்.சாப்பாடு போட்டு அலுத்துப்போன அம்மாவோ என்னட்டை" டேய் இந்த நாயைக் கட்டி சாப்பாடு போட்டநேரம் ஒரு யானையை கட்டிசாப்பாடு போட்டிருக்கலாம் பேசாமல் எங்கையாவது கொண்டு போய் விட்டிட்டுவாடா "எண்டு சொன்னாலும் எனக்கு நரையனை விடமனசு வரேல்லை.

ஆனால் நரையனுக்கோ வலை ஆட்டக்கூட பலமில்லாமல் மெலிஞ்சு போய்விட்டது.அதை திருப்பவும் தூக்கிக் கொண்டு மிருகவைத்தியர் சுமணாக்காவிட்டை போனன்.அவாவும் நரையனைப்பாத்திட்டு அம்மா சொன்மாதிரியே எங்கையாவது கொண்டுபோய் விடு எண்டு சொல்லவும் எனக்கு வந்த கோபத்திலை அவாவைப் பாத்து " நீங்கள் உண்மையா மிருகவைத்தியர் தானோ இல்லாட்டி கொழும்பிலை போய் கோழி வளப்புப் பற்றி படிச்சுப்போட்டு இஞ்சைவந்து மிருக வைத்தியர் எண்டுசொல்லிக் கொண்டு திரியிறீங்களோ எண்டு கேட்டிட்டன்.அவாவும் கோவத்தோடை தம்பி இந்த வருத்தத்துக்கு யாழ்ப்பாணத்திலை மருந்துவசதி இல்லை கொழும்பிலைதான் அதுவும் ஸ்பெசலாய் சொல்லி எடுப்பிக்கவேணும் வேணுமெண்டால் மருந்து ஊசிமருந்துகளின்ரை பேரை எழுதித்தாறன் கொழும்பிலை போய் வாங்கிக் கொண்டு வா. நான் அந்த ஊசியளை போட்டு விடுறன் எண்டு சொல்லி ஒரு கடுதாசியிலை விறுவிறெண்டு கொஞ்ச மருந்துகளின்ரை பேரை கிறுக்கி கையிலை தந்துபோட்டு இனி உன்ரை நாயோடை இஞ்சை வாறதெண்டால் இந்த மருந்துகளோடை வா இல்லாட்டி இந்தப் பக்கம் வராதை எண்டு சொல்லி அனுப்பி "இல்லை" கலைச்சு விட்டிட்டா.அந்தநேரம் மனுசருக்கு வருத்தம் வந்தாலே விக்சை தடவிப்போட்டு கொத்தமல்லியை அவிச்சு குடிச்சுப்போட்டு போத்து மூடிக்கொண்டு படுத்திடுவினம்.இதுக்கை நான் என்ரை நாய் நரையனுக்கு கொழும்பிலை இருந்து மருந்து எடுத்து ஊசி போட்டு இதெல்லாம் நடக்கிற காரியமோ ?? எண்டு நினைச்சபடி வீட்டை போறதுக்கு சண்டிலிப்பாய் சந்தியை கடக்கேக்குள்ளைதான் அவரின்ரை ஞாபகம் வந்திச்சுது.

அவர்தான் சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள்(நாகபூசணியம்மன்) கோயிலடியிலை இருக்கிற சாமியார்.இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம் ஆனால் இப்ப அவரைப் பற்றின கொஞ்ச விளக்கத்தோடை கதையை தொடருறன். இவர் குள்ளமாய் பெரிய வண்டியோடை இடுப்பிலை காவி. நடு மண்டையிலை அள்ளிமுடிஞ்ச சடாமுடி . நாலைஞ்சு ஊருத்திராச்சம் மாலை சிவப்புக் கண்களோடை சின்னப்பிள்ளையள் பாத்தால் பயப்பிடுற ஒரு தோற்றம். இவர் கன காலம் இமயமலையிலை போய் தவமிருந்திட்டு வந்தவர் எண்டு ஊரிலை கதைப்பினம். ஆனால் உண்மையிலை இமய மலையிலைதான் போய் தவமிருந்தாரோ இல்லாட்டி திருகோணமலையிலை போய் கொஞ்சக்காலம் ஆரும் சொந்தக் காரர் வீட்டிலை நிண்டிட்டு வந்தாரோ எண்டு உண்மை பொய் தெரியாது.ஆனால் எங்களுக்கு சின்னிலை ஏதாவது காச்சல் வருத்தம் வந்தால் அப்பா எங்களை அந்தச்சாமியாரிட்டை கூட்டிக்கொண்டு போனல் அவரும் விபூதியை மந்திரிச்சு பூசிப்போட்டு கையிலை ஒரு நூலும் கட்டிவிடுவார்.அதுக்காக மருந்து எடுக்காமல் விடுறதில்லை மருந்தும் எடுக்கிறதுதான். எங்களை மாதிரி ஊரிலையும் கனபேர் அவரிலை நம்பிக்கை.சரி சாமியாராவது என்ரை நரையனை கைவிட மாட்டாரெண்டு நினைச்சு அவரிட்டைப்போய் நரையனைக் காட்டி விசயத்தை சொன்னன் அவரும் யோசிச்சுப்போட்டு கொஞ்ச விபூதியை எடுத்து ஏதோ முணுமுணுத்துப் போட்டு நரையனுக்கு மேலை எறிஞ்சுபோட்டு போ எல்லாம் சரி வருமெண்டு அனுப்பிவிட்டார்.நானும் வீட்டை போய் நரையனை சங்கிலியிலை கட்டாமல் அப்பிடியே விட்டிட்டன். அடுத்தநாள் காத்தாலை நரையன் வீட்டு மரவள்ளித் தோட்டத்துக்கை செத்துப்போய் கிடந்திச்சிது.கவலையோடை அதை எடுத்து வளவுக்குள்ளை தாட்டுப்போட்டு அந்த இடத்திலை ஒரு நெல்லி மரத்தையும் நட்டுட்டுப்போட்டு அதோடை நரையனின்ரை கதையும் முடிஞ்சு போச்சுது. என்னடா கறுப்பி நாயே எண்டு தலைப்பை போட்டிட்டு நரையனைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறன் எண்டுதானே நினைக்கிறீங்கள். இனி கறுப்பிக்கு வாறன்.

கறுப்பிதான் வீட்டிலை செல்லப் பிள்ளை அதோடை நல்ல புத்திசாலி நாங்கள் கதைக்கிறதெல்லாம் பெரும்பாலும் அதுக்கு விளங்கும் சொல்லுறதை செய்யும்.நாங்கள் பள்ளிக் கூடம் போகேக்கை சைக்கிளுக்கு பின்னாலையே பிரதான வீதி வரைக்கும் ஓடியந்து நாங்கள் மறையும் வரைக்கும் அங்கை நிண்டு பாத்திட்டு வீட்டை ஓடிடும். ஆனால் ஒருநாள் கூட பிரதான வீதிக்கு வராது.அதே மாதிரி மத்தியானம் நாங்கள் பள்ளியாலை வீட்டை வாற நேரத்துக்கு சரியாய் ஒழுங்கை முகப்பிலை வந்து காவல் நிக்கும்.எங்களிலை உள்ள பாசம் மட்டுமில்லை பள்ளிக் கூடத்திலை தாற விசுக்கோத்திலை நாங்கள் கறுப்பிக்கெண்டு கொஞ்சம் கொண்டு வருவம். கறுப்பிக்கு அதை அந்தரத்திலை எறிய அது பாய்ஞ்சு பிடிச்சு சாப்பிட்டபடி பின்னாலை ஓடிவரும்.நான் சாப்பிட்டிட்டு முத்தத்திலை இருக்கிற வேப்பமரத்துக்குக் கீழை உள்ள வாங்கிலை கொஞ்சநேரம் ஒரு குட்டி நித்திரை போடுவன் கறுப்பியும் வந்து வாங்குக்கு கீழை படுத்திடும் நான் நித்திரையான நேரம் வீட்டுக்காரரைத் தவிர வேறை ஒருத்தரும் எனக்குக் கிட்ட வரமுடியாது.

அப்பிடி யாரும் வந்தால் பல்லைக் காட்டி உறுமி ஒரு எச்சரிக்கை விடும் அதுக்கு மேலையும் கிட்ட வந்தால் அவ்வளவுதான் அது எங்கை பாஞ்சு எதைக்கவ்வும் எண்டு தெரியாது.நான் வீட்டை விட்டு வெளியேறி இருந்த காலங்களிலை வீட்டுக்கு கடிதம் எழுதேக்குள்ளை கறுப்பியை வடிவாய் கவனியுங்கோ எண்டு ஒரு வசனம் எழுதத் தவறுறேல்லை. அதே மாதிரி நான் வீட்டை போற நாட்களிலை என்னைக் கண்டதும் கறுப்பி எனக்கு மேலை பாய்ஞ்சு எனக்கு நோகாமல் செல்லமாய் உடம்பெல்லாம் கடிச்சு விழையாடும்.இந்தியனாமி காலத்திலை எங்கடை ஊரிலை சண்டை நடக்கேக்குள்ளை பலஊர்நாய்கள் வெடி மற்றது குண்டுச் சத்தத்துக்கு திக்குத் திசை தெரியாமல் ஊரை விட்டே ஓடியிருந்ததுகள். எங்கடை வீட்டிலையும் எல்லாரும் அகதிகளாய் கோயில்லை போய் இருந்த நேரமும் கறுப்பி வீட்டிலையேதான் படுத்திருந்தது. பிறகு இந்தியனாமி எல்லா இடமும் பிடிச்சால் பிறகு எங்கடை ஊரிலை ஒருத்தன் இந்தியனாமியோடை சேந்து புலிகளுக்கு  ஆதரவு குடுத்த மற்றது போராளிகளின்ரை வீட்டுக்காரர் எல்லாருக்கும் பிரச்சனையள் குடுத்துக்கொண்டிருந்தான் . அவன் ஒருநாள்.. அம்மாவும் தங்கச்சியும் தனிய வீட்டிலை இருந்தநேரம் ஆமியொடை எங்கடை வீட்டையும் வந்து ஆயுதம் இருக்கு செக் பண்ணப்போறம் எண்டிட்டு தங்கச்சியின்ரை கையைப் பிடிச்சு இழுக்க இதைப் பார்த்த கறுப்பி பாய்ஞ்சு அவனைக்கடிச்சு குதற தொடங்க இந்தியனாமி ஒருத்தன் துவக்காலை கறுப்பிக்கு அடிக்க. இன்னொரு ஆமியின்ரை துவக்கு குண்டுகள் கறுப்பியை துளைக்க கறுப்பி சுருண்டு விழுந்ததாம். அதோடை அவங்கள் போட்டாங்கள் எண்டு சில நாளுக்கு வீட்டை போன என்னட்டை தங்கச்சி அழுதபடி சொல்லிப்போட்டு வளவுக்குள்ளை ஒரு இடத்தைக் காட்டி இஞ்சைதான் கறுப்பியை தாட்டிட்டு அதிலை ஒரு மாங்கண்டு நட்டிருக்கிறன் எண்டாள்.

சிலநாளுக்குப் பிறகு அந்த அவனை யாரோ மனிப்பாய் அந்தோனியார் கோயிலுக்கு பக்கத்திலை  வைச்சு சுட்டு. அவன் செத்துப்போனான் எண்டு ஊர்சனம் கதைச்சிச்சினம்.கறுப்பியின் ஆத்மாவேதான் அவனைப்பழிவாங்கியிருக்க வேண்டும் எண்டு நினைச்சன். இந்த வருசமும் அந்த மாமரம் நல்லாய் சிலுத்து காச்சிருக்கு ஆனால் சாப்பிடத்தான் நீங்கள் இலலையெண்டு அம்மா சொன்னா .

9:30 AM, Posted by sathiri, One Comment





பெண்களின் சாதனைகளை எங்கள் தேசியத்தலைவர் மழுங்கடிக்கிறாரா??

இந்தவார ஒரு பேப்பரிற்காக

தலைப்பைப் பார்த்ததும் சாத்திரிக்கு என்ன நடந்தது மாற்றுக்கருத்தாளர் என்கிற பெயரிலை கொஞ்சம் வாங்கிக் கொண்டு மற்றப்பக்கம்: தாவிவிட்டாரா?? அல்லது ஏதோ பரபரப்பிற்காக இப்பிடியொரு தலைப்பை வைச்சாரா எண்டு தலையைப் பிய்க்க வேண்டாம். நடந்தது இதுதான்.கடந்த 30.03.08 அன்று ஜெர்மனியில் உள்ள சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் ஜெர்மனியில் கற்றிங்கன்( HATTINGEN )நகரில் ஒரு புத்தக அறிமுக விழா ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர்.அந்தப் புத்தகத்தின் பெயர் நெருப்புப்பூக்கள் .புத்தகத்தினை எழுதியிருந்தவர் மட்டு மாவட்டத்தின் கல்லடி றொபேட் என்பவர்.இவர் சுமார் எட்டு ஆண்டுகளிற்கு மேலாக சிறீலங்காவின் வெலிக்கடைச் சிறையில் வாடுகின்ற ஈழத்தமிழர்களின் விடுதலையை நேசிக்கின்ற ஒரு போராளிக்கலைஞன்.

இவரது கவிதைத் தொகுப்பே இந்த புத்தகமாகும்.ஆயுள்தண்டனை பெற்று தனது காலத்தினை சிறையிலேயே கழித்தபடி வாழ் நாளில் விடுதலையாவேனா அல்லது தன்வாழ்வு சிறையிலேயே முடிந்து போகுமா என்கிற கேள்விகளிற்கு விடை தெரியாத பொழுதுகளிலும் தன் உணர்வுகளை கவிதையாய் வடித்து அதனை ஒரு புத்தகமாக்கி அந்தப் புத்தகத்தினை உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் கொண்டு போய் சேர்த்து அதில் வருகின்ற பணத்தினை ஈழத்தில் உள்ள செஞ்சோலை சிறுவர்களின் எதிர் காலத்திற்கு உதவியாக்குவதே அவரது நோக்கமாகும். இதனைப் படிப்பவர்கள் அனைவரிற்கும் அந்தக் கல்லடி றொபேட் என்பரை பற்றியும் அவரது உயரிய நோக்கமும் புரிந்திருக்கும்.

இந்தப் புத்தகத்தினை வெளியீடு செய்வதற்கு புலம் பெயர் தேசத்தில் முயற்சிகளை சிலர் எடுத்திருந்த போதும் இதே சர்வதேச புலம் பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பினைச் சேர்ந்த சிலர் முட்டுக் கட்டைகளைப் போட்டு தடுத்துக்கொண்டிருந்தனால் இந்தப் புத்தகம் கால தாமதமாகி கடைசியாய் சுவிஸ் நாட்டில் வேறொரு அமைப்பினரால் வெளியீடு செய்யப்பட்டது.அதே புத்தகத்திற்குத்தான் புத்தகத்தினை வெளியிட முட்டுக்கட்டை போட்ட அமைப்பினரே ஜெர்மனியில் அறிமுக நிகழ்வினை செய்திருந்திருந்தனர்.அந்த அமைப்பின் தலைவர் ஏலையா முருகதாசன் அவர்கள் விடுமுறையில் வேறு நாட்டிற்கு போகவேண்டி இருந்ததால் உபதலைவரான திருமதி விக்னா பாக்கியநாதன்.

இவரது பட்டங்கள் (பி.ஏ. மற்றும் கவிதாயினி ). இவர் கலைவிளக்கு என்கிற பத்திரிகையின் ஆசிரியர் மட்டுமல்ல ஜெர்மனியில் தமிழாலயம் பாடசாலையின் ஆசிரியராகவும் இருக்கிறார். பாடசாலைப் பிள்ளைகளிற்காக இலக்கணப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது தலைமையிலேயே அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. புத்தக வெளியீட்டு நாளன்று வேறு இரண்டு புத்தகங்களின்செருகல்களுடன் மூன்று புத்தகங்களின் அறிமுக விழாவாக நடந்தது.சரி இனித்தான் இந்தக் கட்டுரையின் தலைப்பு சம்பந்தமான விடயம்.இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில் உரைக்களம் அதாவது பட்டிமன்றம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தப் பட்டி மன்றத்தின் தலைப்பு பெண்களின் சாதனைகள் மதிக்கப்படுகின்றதா அல்லது மழுங்கடிக்கப்படகின்றதா என்பதே.இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கியும் அதனை ஒழுங்கு படுத்தியும் இருந்தவர் அந்த அமைப்பின் உறுப்பினரும் அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளருமான திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் என்பவர். இவரது பட்டங்கள்( ஊடகவியலாளர் மற்றும் கவிதாஞானவரிதிஎன்பன.) ஊடகவியலாளர் என்பதெல்லாம் பட்டமா?? இவர்களின் பட்டங்கள் பற்றிய விபரங்கள் இந்தக் கட்டுரைக்கு எதற்காக என்று நீங்கள் யோசிக்கலாம் கட்டுரையின் இறுதியில் அது உங்களிற்கு புரியும்.

இந்தப்பட்டிமன்றத்தின் இறுதியில் கருத்துக்கூறிய பட்டிமன்றத்தின் நடுவரான திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் எங்கள் தேசியத் தலைவர் அவர்களே மாமனிதர் என்கிற கெளரவத்தினை வழங்கும் பொழுது மனிதர் என்று ஆண்களை கெளரவிக்குமுகமாகவே வழங்குகிறாராரே தவிர மாமனிசி என்று பெண்கள்சார்பாக கெளரவிக்கப்படவிலை என்று கருத்தினைக்கூறினார் அப்படியானால் பெண்கள் சாதனைகளை எமது தேசியத் தலைவர் மழுங்கடிக்கின்றார் என்று கோசல்யா சொர்ணலிங்கம் சொல்கின்றாரா??என்று பார்வையாளர் வரிசையிலிருந்த பலர் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள சிலர் தலையிலடித்துக் கொண்டனர்.

அந்த ஏற்பாட்டினைச் செய்த அமைப்பினர் பலரும் மெளனமாகவே இருந்தது மட்டுமல்ல அந்த நிகழ்விற்கு தமைதாங்கிய திருமதி விக்னா பாக்கிய நாதனும் எதுவும் பேசாமல் மெளனமாகிய வேளையில் பிரான்சில் இருந்து அந்த நிகழ்விற்கு சென்றிருந்த கி.பி .அரவிந்தன் ஒலிவாங்கியை வாங்கி மாமனிதன் ஆண்பால் மாமனிசி பெண்பால் மாமனிதர் பலர்பால் என்று குழந்தைகளிற்கு பால் விளக்கம் குடுப்பதைப் போல 5 ம் வகுப்பு இலக்கணத்தை விளங்கப்படுத்திய பின்னனரும்.குழந்தையைப்போலவே தான் சொன்து சரியென்று கெளசல்யா சொர்ணலிங்கம் அடம்பிடித்துக்கொண்டிருந்தார்.

அது மட்டுமல்ல நடந்த தவறிற்காக சம்பந்தப் பட்டவரோ அல்லது சம்பந்தப்பட்ட அமைப்போ வருத்தமோ கவலையையோ தெரிவிக்கவில்லை. அப்பொழுதான் புரிந்தது அவர்களிற்கு இலக்கணப்பிழை இல்லை தனைக்கனப்பிழையென்று. முக்கியமானதொரு நிகழ்வில் தங்களை தமிழ் சமுதாயத்தின் முக்கிய நபர்களாகவும் தமிழ் சமூகத்தின் வழி காட்டிகளாகவும் புத்திமான்களாகவும் அடையாளப்படுத்திக்கொண்டிருந்த இவர்களது கேலிக்கூத்துக்களை பட்டிமன்றம் என்கிற பெயரில் குப்பைத்தொட்டி மன்றமாக்கி மேடையேற்றி முடிந்தபின்னர். அந்த நிகழ்வுபற்றிய இந்தக் கட்டுரையை எழுத நினைத்து அந்த அமைப்பின்தலைவர் ஏலையா முருகதாசன் அவர்கள் விடுமுறையை கழித்து வீடு திரும்பும் வரை காத்திருந்தேன் ஏனெனில் முன்னரும் நான் இந்த சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி விமர்சித்து ஒரு கட்டுரையை ஒரு பேப்பரில்எழுதியிருந்தேன்.அந்தக் கட்டுரை வெளிவந்ததும் தங்கள் அமைப்பினைபற்றி எழுதமுன்னர் தங்கள் பக்கத்து கருத்தக்களையும் கேட்டிருக்க வேண்டும் என்று அந்த அமைப்பினரால் என்மீது குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.

எனவேதான் அன் தலைவர் வீடு திரும்பியதும் அவரிடம் இந்த நிகழ்வில் நடந்த குளறுபடிகளிற்கு என்ன விளக்கம் அல்லது நடந்த சம்பவத்திற்கு நீங்கள் உங்கள் அமைப்பு சார்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டேன். தங்கள் அமைப்பு ஊறுப்பினர்களை அழைத்து கலந்தாலோசித்து சொல்வதாக சொன்னவர். நான் மீண்டும் அவரைத் தொடர்புகொண்ட பொழுது தான் அனைவரையும் அழைத்ததாகவும் ஆனால்அந்த நிகழ்வுடன் சம்பந்தப்பட்டவர்கள்யாரும் வரவில்லையென தனது இயலாமையினை தெரிவித்தார்.அப்படியானால் நடந்த சம்பவத்திற்கு நீங்கள் எவ்வித நடவடிக்கையோ அல்லது உங்கள் அமைப்பு சார்பில் ஏதாவது அறிக்கையே விடாது மெளனமாக இருப்பதால் பெண்களின் சாதனைகளை எங்கள் தேசியத்தலைவர் மழுங்கடிக்கிறாரார் என்கிற கூற்றினை உங்கள் அமைப்பு எற்றுக்கொள்கிறதா என்று கேட்டேன்.அதற்கு அவரின் தடுமாறியபடி மழுப்பலாக சம்பந்தமில்லாதவிடயங்களையே பேசினார்.


சரி அடுத்த ஒரு பேப்பரிற்கு இது பற்றிய கட்டுரையை எழுதுகின்றேன் அதற்கு முன்னர் ஏதாவது நடவடிக்கையெடுத்தால் அல்லது ஏதாவது சொல்ல விரும்பினால் எனக்கு அனுப்பிவையுங்கள் என்றதும். தங்கள் அமைப்பு சார்பாக ஒரு அறிக்கையை வேறொருவரின் பெயரைச் சொல்லி அவர் அனுப்பி வைப்பார் என்றார். நானும் மீண்டும் முருங்கை ஏறிய வேதாளம் போல அவர் சொன்னவரிற்கு தொலைபேசியடித்து விபரம் கேட்கவும் அவர் இன்னொருவரின் பெயரைச் சொல்லி அவர் அனுப்புவார் என்றார்.இப்படியே ஒருவர் மற்றவரின் பெயரை சொல்ல நானும் அவர்களிற்கெல்லாம் மாறி மாறி தொலைபேசியடித்து விபரம் கேட்டுஅதற்கு மேலும் என்னால் முருங்கை ஏறமுடியவில்லை..அதற்கு மேல் யாரையும் தொடர்புகொள்ளவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து அந்த ஒன்றியம் சார்பில் ஒருவர் எனக்கு தொலைபேசியடித்து அன்று நிகழ்வில் நடந்த பட்டிமன்றத்திற்கு கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள்தான் முழுப்பொறுப்பும் தங்கள் அமைப்பிற்கும் அதற்கும்எவ்வித சம்பந்தமும் இல்லை எனவே அந்த சம்பவத்திற்கு பொறுப்பை எற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவரை அந்த அமைப்பில் இருந்து நீக்குவதாகவும் கடிதம் அனுப்புகின்றோம் என்றார்.ஒருவர் தேவைப்படும்பொழுது மட்டும் பன்னீர் தெளித்து பட்டாடை போர்த்தி படத்திற்கு முகம்காட்டி மகிழும் இவர்கள்.ஏதாவது பிரச்சனையென்று வரும் பொழுது மட்டும் அவரிற்கே மஞ்சள் தண்ணி தெளித்து ஒரு மாலையைப்போட்டு பலியாடாக்கி விட்டு மற்றவர்கள் தப்பித்து விடுவது ஒரு சுயநலமற்ற பொதுநோக்குடைய ஒரு அமைப்பிற்கு சிறப்பாகாது.இனிவரும் காலங்களில் இவர்கள் வேண்டுமானால் ஏதாவது கவிதை கதைப்புத்கங்கள் வெளியிடுவது பட்டங்கள் சூட்டி மகிழ்வது பொன்னாடை போர்த்திப்படம் எடுத்துக் கொள்வது என்று அவர்கள் பாட்டிற்கு எதையாவது செய்யட்டும் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால் எங்கள்அமைப்பு ஈழத்தமிழர் போராட்ட அமைப்பின் உபஅமைப்பு என்று புலுடா விட்டபடி ஈழப்போராத்தையும் தமிழர் தேசியத்தையும் நீங்கள்உங்கள் வசதிக்கேற்ப மற்றவர் காதில் வைத்து அழகு பார்த்து மகிழ அது பூ அல்ல. பல்லாயிரம் மக்களினதும் போராளிகளினதும் தியாகத்தில் வளர்த்த நெருப்பு அதில் உங்கள் மேதாவித்தனங்களை காட்டி தயவு செய்து குளிர் காய நினைக்காதீர்கள்கள்.

செருப்புப் பூசை

12:55 PM, Posted by sathiri, 2 Comments




செருப்புப் பூசை
அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சலில் கனடிய பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தினை அனுப்பியிருந்தார்.விளம்பரத்தில் இருந்த படத்தினை உற்றுப்பார்த்தேன். அட நம்மடை டென்மார்க் லலிதா. அவர் வேறுயாருமல்ல இதே ஒரு பேப்பரில் மூண்று ஆண்டுகளிற்கு முன்னர் நான் அந்த லலிதா தன்னை ஒரு அம்மனின் அவதாரம் என்று தனக்குத்தானே அபிராமி அம்மன் என்று பெயரையும் வைத்து மக்களை ஏமாற்றும் ஒரு போலி பெண்சாமியார் என்று கட்டுரையை எழுதியிருந்தேன்.
அந்தக் கட்டுரையின் பின்னர் எனக்கும் அந்த லலிதாவின் கணவர் மற்றும் அவரது ஆதராவளார்களிற்கும் பலதொலைபேசி உரையாடல்கள் வாக்குவாதங்கள் என்பன மட்டுமல்ல எனக்கு மிரட்டல்களும் மிரட்டலின் உச்சமாய் அம்மன் அவதாரமெடுத்து என்னை பழிவாங்குவார் என்று ஜெர்மனியில் இருந்து அவரது ஒரு பக்கதர் கடைசி எச்சரிக்கையும் தந்து .இரண்டாண்டுகள் ஓடி ஓய்ந்து போன நிலைமையில்.இந்த விளம்பரத்தில் இருந்த ஒரு வசனம் என்னை மீண்டும் எழுதத்தூண்டியது. அதாவது அபிராமி என்கிற லலிதாவின் பிறந்தநாளன்று (29.03.2008)அவரின் திருப்பாதுகைகளிற்கு விசேட அபிசேகமும் ஆராதனையும்.
அவர் சாமியாடினாரா அவதாரமெடுத்தாரா.என்பதெல்லாம் வேறு பிரச்சனை அனால் அவரின் செருப்பிற்கு அபிசேகம் செய்து பூசை செய்கிற அளவிற்கு எம்மவர் நிலைமை வந்து விட்டதா என்று நினைத்த பொழுது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்று பாரதியின் வரிகள் நினைவிற்கு வந்து.இந்தச் சம்பவம் நடந்தது அதீத மத நம்பிக்கையே மூட நம்பிக்கையாகி அறிவியல் வளர்ச்சியோ கல்லியறிவோ அற்று ஏதோ முலையில் இருக்கின்ற ஒரு இந்தியக் குக்கிராமத்தில் அல்ல.
கனடாவில் மொன்றியலில் days inn hotal( விளம்பரத்தில் பார்க்கவும்) என்கிற ஒரு விடுதியில் நடந்ததுள்ளது அதற்கு அங்:குள்ள ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலேபோய் கனடாவில் உள்ள ஒரு வானொலியில் அந்நத நிகழ்வு நேரடிஒலிபரப்பு வேறை நடந்தது.விளம்பரத்தினைப்பார்த்ததும் நான் அதில் உள்ள ஒரு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அந்தப் பூசை பற்றிய விபரங்கள் பற்றிக் கேட்டேன்.
அன்று அபிராமி அன்னையின் படத்திற்கு பூசையும் பஜனையும் இடம்பெறும் என்றார்கள். சரி ஏதோ திருப்பாதுகைகளிற்கு ஏதோ அபிசேகமும் பூசையும் என்று விளம்பரத்திலை இருக்கே அது புரியவில்லை அப்படியென்றால் என்ன என்று கேட்டதற்கு. அவை அம்மா அணிந்த பாதுகைகள் டென்மார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது அதற்குத்தான் பூசை என்றார்.திருப்பாதுகை என்றால் அது செருப்பா?? அல்லது சப்பாத்தா??என்கிற எனது அடுத்த கேள்வியை கேட்டதும் பதில் தந்தவர் பதறியவராய் அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது.
திருப்பாதுகை எண்றுதான் சொல்லவேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் இராமாயணத்தில் இராமனின் பாதுகைகளை பரதன் அரியணையில் வைத்து பூசை செய்து ஆட்சி செய்தது போல தாங்களும் கனடாவில் அம்மனின் பாதுகைகளை வைத்து பூசை செய்கிறோம் என்று பரதன் பூசை செய்ததை பக்கத்தில் நின்று பார்த்தவரைப்போல எனக்கு ஒரு உதாரணமும் தந்து மேலதிகமாக டென்மார்க்கில் இருந்து கொண்டுவரப்பட்ட விபூதியும் பஞ்சாமிர்தமும் தேசிக்காயும் கொடுக்கப்படும் என்று சொல்லி தொடர்பினை துண்டித்து விட்டார். சரி டென்மார்க் குளிருக்கு லலிதாவால் செருப்பு போட இயலாது எனவே அந்த திருப்பாதுகை சப்பாத்தாகத்தான் இருக்கவேண்டும் என்று நானே முடிவுசெய்தாலும் எனக்கு இன்னொரு சந்தேகம்.
அந்தச் சப்பாத்து NIKE காய் இருக்குமா அல்லது ADIDAS சா?? இல்லாட்டி ஊர்ப்பழக்கத்திலை இன்னமும் BATA தானா??? பஞ்சாமிர்தத்தை டென்மார்க்கில் இருந்தா கொண்டுவரவேண்டும் கனடாவில் பழங்கள் கிடையாதா?? அதுதான் போகட்டும் தேசிக்காய் என்னத்திற்கு என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் தோன்றினாலும்.அதில் இருந்த மற்றைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அந்த பூசை பற்றிய ஏதாவது படங்கள் கிடைக்குமா என்று விசாரித்தேன்.
படங்கள் அந்த நிகழ்வினை ஒழங்கு பண்ணியவர்களின் அனுமதி தந்தால் தரமுடியும் என்றார்கள் அந்த நிகழ்வினை ஒழுங்கு பண்ணியவர் யாரென்று விசாரித்தப் பார்த்தால் அவர் எனக்கு எற்கனவே இந்த டென்மார்க் லலிதா பற்றிய கட்டுரை சம்பந்தமாக என்னுடன் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டவர்தான். இவர் சுவிஸ் நாட்டில் இருக்கின்ற லலிதாவின் ஏழாலை கிராமத்தை சேர்ந்த ஒரு ஆசிரியை இவர் எற்கனவே சுவிசில் லலிதாவிற்கு கிளைகளை ஆரம்பித்தள்ளார். அதன் விரிவாக்கம் தான் இந்த கனடாவில் செருப்புப் பூசை என்று தெரியவந்தது. எங்கள் ஊரில் சைவத்திற்கும் தமிழிற்கும் மிகப்பெரிய தொண்டு செய்த விபுலானந்த அடிகள் யோகர் சுவாமிகள் ஆறுமுக நாவலர் போன்றவர்களே தாங்கள் கடவுளின் அவதாரம் என்று மக்களை ஒரு போதும் ஏமாற்றிது இல்லை
பாதணிகளையோ ஏன் பாதடிகளையோ கூட யாரும் பூசை செய்தது கிடையாது.ஆனால் சிலர் தாங்கள் அவதாரம் என்றும் அற்புதம் செய்கிறோம் என்று ஊரில் வித்தை காட்டிய அனைவரும் கம்பங்களில் கட்டிவைத்து அடித்த அடியில் அவர்களது அற்புதங்களும் மறைந்து அந்த அவதாரங்களும் காணமல்போனதை நானறிவேன். தான் பராசக்தியின் அவதாரம் என்று கதைவிடும் லலிதாவிற்கு உண்மையிலேயே கடவுளின் அவதாரம் என்றால் என்னவென்று உண்மையான அர்த்தம் தெரியுமா என்று சந்தேகமே.
புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் கடவுளின் அவதாரம் என்பது பூவுலகில் அனியாயமும் அக்கரமமும் அதிகரிக்கும் பொழுது நியாயத்தை நிலைநாட்டவும் எவ்வித பாவமும் செய்யாது துன்பப்படும் மக்களை காப்பாற்றவே கடவுளின் அவதாரங்கள் சித்திகரிக்கப் பட்டுள்ளது.புராணங்களில் எந்தக் கடவுளின் அவதாரமும் நாடுநாடாய் மக்களிடம் உண்டியல் குலுக்கியதாகஎழுதப்பட்டிருக்கவும் இல்லை நான் படிக்கவும் இல்லை.
லலிதா கடவுளின் அவதாரமாக இருந்தால் தினம் தினம் துன்பப்பட்டும் வேதனைகள் சோதனைகளிற்கு மத்தியிலும் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டும் இருக்கும் அவரின் இனமாகிய தமிழினத்தை முதலில் காப்பாற்றலாமே.தினம் தினம் எமது மக்களின் மீதும் எந்தப் பாவமும் அறியாத சிறுவர்கள் மீதும் விழுகின்ற விமானக் குண்டுகளை தன்னுடைய அற்புத சக்தியால் அதனை போட்டவன் வீட்டிலேயே விழ வைக்கலாமே.அவதாரம் என்பதே அனியாயத்தை அழிக்கத்தானே வடிவெடுக்கின்றது அப்படியானால் சிறீலங்கா இராணுவமுகாம்கள் அனைத்தையும் ஒரு நொடியில் அழித்து சாம்பலாக்கலாமே.
அதை விட்டு விட்டு அவதாரமெடுத்தது நாடு நாடாய்: உண்டியல் குலுக்கி ஏன் தன்னுடைய சக்தியை வீணடிக்கிறார்.அதுமட்டுமா பெண்தெய்வங்களின் உருவப்படங்களில் தன்னுடையை படத்தை ஒட்டி கிராபிக் விழையாட்டுகள் செய்தும் (வெளிநாடு வருவதற்காக கள்ள பாஸ்போட்டில் தலை மாத்தின பழக்கதோசமாய் இருக்கலாம்) அரை மி.மீ அளவு மாணிக்கக்கல்லை வாயாலை எடுத்து அற்புதம் செய்கிராராம். மனிதன் மனிதனின் காலில் விழுவதையே மிகப்பெரும் கேவலமாக நினைக்கின்ற ஈழத்தவர்கள் இன்று புலம்பெயர்ந்து வந்த தேசத்தில் அறிவியல் உலகில் நின்று கொண்டு கடவுள் நம்பிக்கைக்கும் அப்பாற்பட்டு மூட நம்பிக்கைக்குள் வீழ்ந்து ஒரு போலி பெண்சாமியாரின் பாதடிகளை வணங்குவதை நினைத்தும் மக்களிற்கு வழிகாட்டியாய் இருந்து வழிநடாத்தவேண்டிய ஊடகங்களான் பத்திரிகைகள் மற்றும் வானொலிகளும் லலிதான் ஏமாற்றிற்கு துணைபோய் மக்களையும் மூட நம்பிக்கைக்கு துணைபோகத்தூண்டுவதை நினைத்தும் என்னுடய திருப்பாதுகையை கழற்றி( சப்பாத்தைத்தான்) எனக்கு நானே அடித்துகொள்கிறேன்.

வயலும் வைரவரும்

2:23 PM, Posted by sathiri, No Comment

வயலும் வைரவரும்.

இந்தவார ஒரு பேப்பரில்

வயலும் வாழ்வும் எண்டு கேள்விப்பட்டிருப்பம். அதே போலத்தான் இது எங்கடை ஊர் வயலும் வயற்கரையிலை இருந்த வைரவர் பற்றினதும்.யாழ் குடாவிலை அதிகமான கோயில் எந்தகடவுளிற்கு எண்டு ஒரு புள்ளி விபரம் எடுத்தால் அதிலை முதலாமிடம் வைரவருக்குத்தான். இடண்டாமிடம்தான் பிள்ளையாருக்கு.ஏனெண்டால் வைரவர் செவில்லாத சாமி் ஒரு இரும்புக்கம்பி இருந்தால் போதும் வைரவர் றெடி.அதுமட்டுமில்லை பெரிய கோயிலும் கட்டத்தேவையில்லை எங்கையாவது ஒரு மரம் முக்கியமாய் புளியமரம் இல்லாட்டி ஒரு சின்னக் கொட்டில் போட்டால் காணும். கொஞ்சம் வசதிஇருந்தால் சின்னாய் ஒரு கோயில் கட்டியிருக்கும் அவ்வளவுதான். யாழ் குடாவிலேயே பெரிய கோயில் வீதி வசதியோடை கொடியேறி திருவிழா நடக்கிற ஒரேயொரு வைரவர் கோயில் எனக்குத் தெரிந்து சண்டிலிப்பாய் பக்கம் இரட்டையர்புலம் வைரவர் எண்டிற கோயில்தான்.

மற்றப்படி வைரவரை காவல்தெய்வமாய் கும்புடுறதாலை ஊருக்கு நாலைஞ்சு வைரவர் இருப்பினம்.வைரவர் ஏழைகளின் கடவுள் அவரின்ரை பொரும்பாலான கோயில்களிலை உண்டியலே இருக்காது அதாலைதான் எங்கடை மக்கள் புலம்பெயர்ந்த தேசங்களிலை எந்த நாட்டிலையும் யாரும் வைரவருக்குகோயில் கட்டவேயில்லை என்று நினைக்கிறன். எங்கடை ஊர் வயற்கரையிலை இருந்த ஒரு புளிய மரத்துக்குக் கீழை யாரோ எங்கடை முன்னோர் வயலை காவல் காக்கவெண்டு ஒரு வைரவர் சூலத்தை நட்டுவிட்டிருந்தவை.பிறகு யாரோ அதுக்கு நாலு கம்பத்தை நட்டு கொட்டிலும் ஒண்டு போட்டிருந்தது. ஊரிலை நெல்லு விதைக்கிற காலத்திலை வயற்காரர் இந்த வைரவருக்கு தேங்காயுடைச்சு கற்பூரத்தை கொழுத்தி விதைக்க ஆரம்பிப்பினம்.பிறகு அறுவடை காலத்திலைதான் அதே மாதிரி தேங்காய் கற்பூரத்தை வைரவர் பாப்பார்.அறுவடை காலத்திலை மேலதிகமாய் வெட்டின நெல்லிலை அரிசியாக்கி வைரவருக்கு பொங்கலும் கிடைக்கும்.பிறகு பாவம் வைரவரை யாரும் கவனிக்கிறேல்லை அதக்குப் பிறகு அவரோடை பொழுது போக்கிறது நானும் இருள்அழகனும்தான்.ஆனால் ஊரிலை அந்தகாலத்திலை யாராவது ஒரு வாகனம் வைச்சிருந்தாலே அவர்தான் ஊரிலை பெரியாள் பணக்காரர் அவருக்கெண்டு ஒரு தனி மரியாதையும் இருக்கும்.

பாவம் இருக்க ஒழுங்காய் ஒரு கொட்டிலே இல்லாத வைரவர் மட்டும் நாலைஞ்சு வாகனம் வைச்சிருந்தவர்.நாய் தானே அவரின்ரை வாகனம்.எங்களோடை சேர்த்து ஊர் நாய்கள் நாலைஞ்சும் தான் வைரவருக்கு துணை.யாராவது எப்பவாவது தேங்காய் உடைச்சால் கல்லிலை வடிஞ்ச இளனியை நக்கிப்போட்டு அங்கையே படுத்திருக்குங்கள்.நாங்களும?? வயலிலை விதை பொறுக்க வாற பறைவைகளை கலைக்கிறதுக்காக ஒரு பெரிய தகரம் ஒண்டை வைரவரின்ரை கூரையிலை கட்டித் தொங்க விட்டிட்டிட்டு இரும்பு கம்பியாலை அடிச்சு சத்தம் எழுப்புவம். அதுமட்டுமில்லை அதுதான் வைரவர் கோயில் மணியும் 2 இன்1 எண்டு பயன்படும். மாலைநேரத்திலை அந்தக்கொட்டிலுக்குள்ளை இருந்துதான் நாங்கள் தாயம் ஆடுபுலியாட்டம் எண்டு விழையாடுறது மட்டுமில்லை யாரின்ரையும் தோட்டத்துக்குள்ளை களவாய் பிடுங்கின வெள்ளரிக்காயை வைச்சு சாப்பிடுறது முக்கியமாய் கள்ள பீடி அடிக்கிறதும் அங்கைதான்.ஒரு பீடியை பத்தவைச்சு ஆள் மாறி மாறி இழுத்து சுருளாய் புகைவிட முயற்சி செய்து புது பழக்கத்திலை பிரக்கடிச்சு (புரையேறி) கண்ணெல்லாம் கலங்கி தொண்டை நோவெடுத்தாலும் மீண்டும் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல அடுத்தநாளும் பீடியை பத்தவைச்சு சுருள்புகைவிட முயற்சிப்பது.

வீட்டை போகேக்கை வாயிலை பீடி நாத்தம் போறதுக்கு தோட்டத்திலை வெங்காயத்தை பிடுங்கி சப்பிறது.இப்பிடி எத்தனையோ விடயங்கள் சுமுகமாய் போய்க்கொண்டு இருக்கேக்குள்ளை அதுக்கு ஒரு தடை வந்திட்டிது. அதுக்கு காரணம் அந்தக் கோயிலுக்கு பக்கத்திலை குடியிருந்த ஒருவர் அவர் வேலை வெட்டிக்கு அதிகம் போக மாட்டார்.அன்றாடம் தண்ணியடிக்க செலவுக்கு மட்டும் ஊரிலை ஏதாவது ஒரு சின்ன வேலையள் செய்வார்.ஆனால் ஒவ்வொரு நாளும் இரவு தண்ணியடிச்சிட்டு கத்தறதுதான் அவரின்ரை முக்கிய வேலை. ஒரு அறுவடைக்காலம் சிலர் வைரவருக்கு பொங்கிபடைச்சுக் கொண்டு இருக்கேக்குள்ளை அங்கை நிண்ட அவர் திடீரெண்டு உருவந்து(சாமியாட) ஆடத்தொடங்கிட்டார். ஆடினவர் இந்த ஊர்மக்களுக்கு நல்லது செய்யப்போறன் பல உண்மையள் சொல்லப்போறன் என்று கத்தினபடி ஆட அதை பாத்துக்கொண்டு நிண்ட நாங்கள் நினைச்சம் எங்கடை அனியாயம் தாங்க ஏலாமல் வைரவர்தான் உண்மையிலை வந்து கள்ள வெள்ளரிக்காய் புடுங்கிறது கள்ளபீடியடிக்கிறதைப்பற்றி சொல்லப் போறாராக்கும் எண்டு நினைச்சு எங்களுக்கு சாதுவாய் கலக்கத் தொடங்கிட்டுது.

ஆனால் அப்பிடியொண்டும் நடக்கேல்லை அவரும் வேறை என்னவோ எல்லாம் புலம்பிப் போட்டு மயங்கிவிழுந்திட்டார். சுத்திவர நிண்டவை அவருக்கு முகத்திலை தண்ணியை தெளிச்சதும் எழும்பிப் பாத்தவர் எல்லாத் தமிழ் சினிமாவிலையும் மயங்கி விழுறவை எழும்பிக்கேக்கிற அதே வசனமான ஆ...நான் எங்கையிருக்கிறன் எனக்கு என்ன நடந்தது. எண்டு கேட்டார்.அதுவரை காலமும் அவரை டேய் எண்டு கூப்பிட்டவை எல்லாரும் அண்டைக்கு மரியாதையாய் அய்யா உங்களிலை வைரவர் வந்தவர் எண்டு சொல்லவும். அவர் அப்பிடியா எண்டு கேட்டிட்டு வைரவரைப்பாத்து விழுந்து கும்பிட்டிட்டு விபூதியை அள்ளி எல்லாருக்குமேலையும் எறிஞ்சுபோட்டு போட்டார்.அதுக்குப்பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் கோயிலை கூட்டிசுத்தம் செய்து. மழைவந்தால் மட்டுமே குளித்துக்கொண்டிருந்த வைரவரை குளிக்கவாத்து ஒரு பட்டுத்துணியும் கட்டி பூ எல்லாம் வைச்சு மணியடிக்கத்தொடங்கிட்டார்.

அது கேள்விப்பட்டு சனங்களும் வரத்தொடங்க இறுதி உச்சக்கட்ட காட்சியாய் அவரும் உருவாடி முடிக்க வைரவர் சூலத்தடியில் சில சில்லறைகளும் விழத்தொடங்கவே. உருவாடியவர் ஒரு நெஸ்பிறே பால்மா பேணியொண்டை உண்டியலாக்கி வைரவர் சூலத்தில் கட்டிவிட்டார்.அதுவரை காலமும் நிம்மதியாய் இருந்த வைரவருக்கும் எங்களுக்கும் பூசை எண்டு சனம் வரத்தொடங்கினதாலை நிம்மதியும் போய் கொஞ்சம் வளையமாய் புகைவிடப்பழகியிருந்ததும் மறந்து போகும் அபாயம் இருந்தது.ஆனால் எங்களிற்கு ஒரு சந்தேகம் அதுவரை காலமும் எவ்வளவு நட்பாய் வைரவரும் நாங்களும் பழகியிருப்பம் ஒரு நாள்கூட எங்களிலை வராமல் தண்ணியடிச்சிட்டு இரவிரவாய் கத்தி எங்கடை நித்திரையை கலைக்கிறவரிலை ஏன் வரவேணும் எண்டு யோசிச்சு அதுக்கு ஒரு முடிவு கட்ட தீர்மானிச்சம்.

ஒருநாள் இரவு அவர் தண்ணியடிச்சிட்டு சத்தம் போட்டபடி வந்துகொண்டிருக்க சனநடமாட்டம் இல்லாத வயற்பகுதியில் சாக்கு ஒன்றுடன் தயாராய் பதுங்கியிருந்த நாங்கள் பாய்ந்து அவரது தலையை சாக்கால் மூடிக்கட்டி வயலுக்குள் போட்டு. வைரவர் உண்மையாகவே உன்னிலை வந்தவாரா எண்டு கேட்டு அவருக்கு உருவாடிவிட்டம்.அவருக்கு நாங்கள் தான் உருட்டி உருட்டி உருவாடினது எண்டு தெரிஞ்சிட்டுது.தம்பியவை நான் இனி கோயில் பக்கமே வரமாட்டன் என்று மன்னிப்பு கேட்டது மட்டுமில்லை அதுக்கு பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் ஊரிலையே நிக்கமாட்டார். அடுத்த வெள்ளிக்கிழைமையும் வழைமை போல பூசைக்கு தயாராய் வந்த சனங்கள் அவரை காணாமல் அவரது வீட்டில் விசாரித்தனர்அவர் ஊரில் இல்லையெண்டதும் குழப்பத்துடன் போய்விட்டனர். சனங்களின் தொல்லை குறையவே.வெளியே துரத்தப்பட்ட நாய்களும் மீண்டும் வந்து மண்ணை விறாண்டி படுத்தக்கொள்ள கோயில் கூரையில் செருகியிருந்த பீடியை தேடியெடுத்து நாங்கள் சுருள் சுருளாய் விட்ட புகையை பார்த்து வைரவருக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும்.

விழித்திருப்போம்

1:00 PM, Posted by sathiri, No Comment

http://www.esnips.com/doc/eab937d6-453d-48f5-813b-06334038bc48/விழித்திருப்போம்

சுது மாத்தையாவும் சுடுபாணும்

12:57 PM, Posted by sathiri, No Comment

சுது மாத்தையாவும் சுடுபாணும்.

பாண் எண்டதும் பலரின் நினைவுகள் கட்டாயம் ஊருக்கு ஒருக்கால் போய்வரும்.வெளிநாட்டில் விதம் விதமாய் வகை வகையாய் பாணை சாப்பிட்டாலும். ஊரில் முன்னர் இருந்த ஒரு இறாத்தல் அச்சுப்பாண் றோஸ் பாண் அடுத்ததாய் வித்தியாசமாய் சங்கிலிப்பாண் சீனிப்பாண் மாலுப்பாண் எண்டும் இருந்தது . ஊரில் சாப்பிட்ட பாண் என்பது பலருக்கும் பல சம்பவங்களுடனும் ஒரு தொர்பை கொண்டருக்கும் எனவே பல நினைவுகளை கட்டாயம் ஒரு முறை கொண்டுவரும்.இலங்கை அரசியலையே மாற்றக்கூடிய வல்லமை இந்தப் பாணுக்கு இருக்கு அதாலைதான் ஒவ்வொரு தேர்தல்களிலையும் வேட்டபாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணின்விலையை குறைப்போம் எண்டு தேர்தல் வாக்குறுதி குடுக்கிறவை ஆனால் பிறகு அவை ஆட்சிக்கு வந்ததும் பாண் இருக்கிற விலையை விட இரண்டு மடங்கு கூடுறது வழைமையான விசயம். சிறீமாவின்ரை ஆட்சிக்காலத்திலை அவாவின்ரை பொருளாதாரக் கொள்கையாலை ஏற்பட்ட பட்டினி யாலை சனங்கள் பாணுக்கு நீண்ட வரிசையிலை காவல் நிண்டதை பலர் கதை கதையாய் சொல்லுவினம்.அது மட்டுமல்ல இந்த பாணிற்கு 83 கலவரத்தின்பின்னாலும் சாதக பாதகதான பல விசயங்கள் இருக்கவே செய்தது. எண்பதுகளிற்கு முன்னர் யாழ் குடாவில் பெரும்பாலும் ஏன் அனைத்து பேக்றிகளும் சிங்களவர்களவரே நடத்தினவை.

யாராவது ஒண்டிரண்டு பேக்கறி தமிழருக்கு சொந்தமாய் இருந்தாலும் அதில் பாண் போடுகிறவர் சிங்களவராகவே இருப்பார்.பாண் போடுகிறவரை பழைய படங்களில் வில்லனை பாஸ் எண்டு கூப்பிடுறதை போல இவரையும் (பாண்) பாஸ் எண்டுதான் சொல்லுறனாங்கள். இப்பிடி பாண் போடுகிற விசயம் சிங்களவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக அல்லது பாண் எண்டால் சிங்களவனுக்கு மட்டும்தான் போடத்தெரியும் எண்டிற ஒரு நினைப்பு எங்களிட்டை இருந்தது. ஆனால் 83 ம் ஆண்டு கலவரத்தோடை இந்த நிலைமையும் தலைகீழாய் மாறிப்போச்சுது. தமிழர் கொழும்பிலை இருந்து அடிவாங்கிக் கொண்டு யாழ்ப்பாணம் வந்து கொண்டிருக்க் யாழ்ப்பாணத்திலை இருந்த சிங்களவர் பேக்கறி நடத்தினவை கனபேர் தாங்களாகவே தங்கடை ஊருகளுக்கு போகத்தொங்கிச்சினம்.

அது மட்டுமில்லை ஊர் பெடியளும் பெரும்பாலும் புளொட் இயக்கம் எல்லா பேக்கறியளையும் கொளுத்த தொடங்கிட்டினம்.பேக்கறி எரிஞ்சதுக்கு அது மட்டும் காணரமில்லை சில தமிழ் பேக்கறிக்காரரும் தங்கடை வியாபாரம் நல்லா நடக்கவேணுமெண்டு பெடியளை உருப்பேத்திவிட்டும் சிங்களவரின்ரை பேக்கறிகயள் எரிஞ்சது.அந்த நேரம் புளொட் எண்டொரு இயக்கம் இருந்தது கனபேருக்கு ஞாபகம் இருக்கும். அவையள் சிங்களவர் விட்டிட்டு போன கன பேக்கறியளை எடுத்து தாங்கள் நடத்திச்சினம்.அதாலை அந்த இயக்கம் என்ன நோக்கத்திற்காக தங்கடை இயக்கத்தை தொடங்கிச்சினமோ அந்த நோக்கத்தின்ரை ஒரு பகுதிநிறைவேறிச்சிது.,இதிலை ஒரு விசயத்தை கட்டாயம் சொல்லவேணும். புளொட் எண்ட மாபெரும் இயக்கம் தொடங்கினதுக்கு எனக்கு தெரிஞ்சு மூண்டு நல்ல காரியம் செய்தவை ஒண்டு கோட்டை ஆமி இருக்கேக்கை அவங்கள் அடிக்கிற செல்லிலை இருந்து சனம் பாதுகாப்பாய் பதுங்க யாழ்ப்பாணம் வைத்திய சலைக்கு முன்னாலை மண்மூட்டை அடுக்கினது.

இரண்டாவது முனிசிபாலிட்டிக்கை (நகரசபை)இருந்த தாரை எடுத்து உருக்கி ஊரிலை கிடங்கு பள்ளமாயிருந்த றோட்டை திருத்தினது.மூண்டாவது சிங்களவன் எல்லாரையும் கலைச்சுப்போட்டு பேக்கறி நடத்தினது.இதுகளோடை அவையின்ரை போராட்டத்துக்கான தேவை முடிஞ்சுபோதச்சுது.சரி இனி திரும்ப கதைக்கு வாறன். அந்த நேரம் 83 பிரச்னைக்குப்பிறகும் தொடந்து சில சிங்களவர் யாழிலை இருந்தவை . இவையள் தமிழரோடை நல்லவிதமாய் பழகியதாலையும் எண்பது வீதம் தமிழராகவே மாறிவிட்டிருந்தனர் எண்டும் சொல்லலாம்.அப்பிடி இருந்தவையிலை எனக்குதெரிந்த சிலபேர் ஒருத்தர் எங்டை ஊரிலை பேக்கறி வைச்சிருந்த சுது மாத்தையாவும் ஜஸ்பழம் வித்த லொக்கு பண்டாவும் .இவையளின்ரை உண்மையான பெயர் எனக்கு மட்டுமில்லை ஊரிலை ஒருதருக்குமே தெரியாது எல்லாருமே அப்பிடி கூப்பிடுறதாலை அதுதான் அவையின்ரை பெயர். அடுத்ததாய் ஏழாலையிலை பேக்கறி வைச்சிருந்த கொத்தளாவளை .இவரை ஏழாலை குப்பிளான் புன்னாலைக் கட்டுவன் வசாவிளான் ஆக்களுக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் .மானிப்பாய் சாத்திரிக்கும் ஏழாலை கொத்தளாவளைக்கும் என்ன சம்பந்தம் எண்டு யோசிக்காதையுங்கோ அது அய்யருக்கும் அமாவாசைக்கும் உள்ள சம்பந்தம் தான்.. சுது மாத்தையா நல்ல உழைப்பாளி அவரேதான் பாண் போடுவார் அவரேதான் காலையிலை சைக்கிளின் பின்னால் பாண் அடுக்கிய ஒரு பெரிய தேயிலைப் பெட்டியை கட்டி கடையள் வீடுகளுக்கும் பாண் கொண்டு போய் குடுப்பார். அவர்தான் எங்கடை வீட்டுக்கும் பாண் போடுறவர்.

மழைக்காலம் எண்டால் அனேகமான வீடுகளிலை ஈரவிறகை வைச்சு ஊதாமல் பாண்தான் காலைமைச் சாப்பாடு எங்கடை வீட்டிலையும் பாணை வாங்கி சின்னதுண்டாய் வெட்டி சிரமப்படாமல். அம்மா ஒரு பாணை பாதியாய் பிச்சு ஆளுக்கு அரைறாத்தல் பாணும் அரைச்ச சம்பலும் தருவார்.பாணை நடுவிலை கோதி அதுக்குள்ளை சம்பலை அடைஞ்சுபோட்டு சுத்திவர பாணை பிச்சு அதை சம்பலிலை தொட்டு சாப்பிற சுகமே தனியானது.சிலநேரம் அரை றாத்தல் பாண்சாப்பிட்டாலும் எங்களுக்கு பசி அடங்காமல் நாங்கள் அடிபடுறதை பாத்து அம்மா கையிலை காசை தந்து பள்ளிக்கூடம் போற வழியிலை எதையாவது வாங்கி சாப்பிடுங்கோ எண்டுசொல்லி கலைச்சு விடுவா.நானும் போற வழியிலை எனக்குப்பிடிச்ச றோஸ் பாண் ஒண்டை வாங்கிஅதை இரண்டாய் பிச்சு ஒரு வாழைப்பழத்தை வாங்கி உரிச்சு அதை நடுவிலை வைச்சு அமத்தி கடுதாசியாலை சுத்தி கடிச்சபடி பள்ளிக்கூடம்போவன்: அதுக்குப்பேர்தான் சாண்விச் எண்டு எனக்கு இப்ப வெளிநாடு வந்தாப்பிறகுதான் தெரியும். ஊரிலையே சாண்விச் சாப்பிட்ட ஆள் நான்தான் எண்டு பெருமைப்பட்டுக்கொள்ளலாம்

.இறாத்தல் அழைவை போய் கிலோகிறாம் அளவை வந்தபின்னர் எல்லாப்பொருட்களையுமே நாங்கள் கிலோவிலை அழைக்கத்தொடங்கிய பின்னரும். பாணை மட்டும் இன்னமும் பேச்சுவழக்கில் இன்றுவரை இறாத்தல் எண்டுதான் சொல்லுறம். பாண் சாப்பிடுற விசயத்திலை நாங்கள் ஓரளவுபரவாயில்லை ஆனால் பாணும் பருப்புக்கறியும் இல்லையெண்டால் சிங்களவர் உயிரை விட்டிடுவாங்கள்.

பிரான்சில் நடந்து முடிந்த நகரசபைத்தேர்தல்களில்

3:39 PM, Posted by sathiri, No Comment

பிரான்சில் நடந்து முடிந்த நகரசபைத்தேர்தல்களில் முதலாவது சுற்றில் நம்மவர் ஆறு வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர் விபரங்கள் பின்வருமாறு (இரண்டாவது சுற்றில் மேலும் சிலர் வெற்றிவாய்ப்புக்களை கொண்டுள்ளனர்)

Louvre) (95380)லூவ்ர் திருமதி. வேர்ஜினி சபாரட்னம் (வலதுசாரிக்கட்சி)

Sarcelles(95200)சார்சேல் செல்வி சூசைபிள்ளை சன்டிறின் சோபியா (இடதுசாரி)

Clichy Sous Bois(93390)கிளிச்சி சூ புவா திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம் (இடதுசாரி)

Bondy(93140)பொன்டி திருமதி லீலாவதி ராஜேந்திரம் (இடதுசாரி)


Chelles(77500)செல் திருமதி வில்லியம் றெஜிநோட் அசந்தா (இடதுசாரி)


Evry Cougrans(91000)எவிறி குக்றோன் திருமதி பிரிதி நவனீதராயு (இடதுசாரி) இவர் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார் மேலதிக தகவல்கள் தொடரும்

பிரான்ஸ் நகரசபைத் தேர்தல்களில் நம்மவவர்கள்

8:11 AM, Posted by sathiri, No Comment

பிரான்ஸ் 2007 இல் இரு தேர்தல்களை சந்தித்தது அரச தலைவருக்கான தேர்தல், பாராளுமன்றத்திற்கான தேர்தல் இவைகள் இரண்டிலும் புலம்பெயர்ந்து இங்கு வந்து பிரஜா உரிமை பெற்ற கணிசமான தமிழர்கள் தமது வாக்குகளை பதிவு செய்து, தங்களை இந்நாட்டு அரசியலில் இணைத்துக்கொண்டனர். இதனுடாக இந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் உரிமையும், கடமையும் கொண்டவர்கள் ஆகிவிட்டனர். இந்நாட்டின் அரசியல் சூழல் எமது வாழ்க்கையை பாதிக்கிறது, இவைகளில் உள்ள நன்மை தீமைகளை விரும்பியோ விரும்பாமலோ சீர்தூக்கி பார்க வேண்டிய இடத்தில் நாம் நிற்கிறோம்.

1980 க்குபின் பெருமளவில் தமிழர்கள் நாட்டைவிட்டு உலகின் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்டுக்கொண்டனர் அவர்களில் ஒரு பகுதியினர் இங்கும் தஞ்சம் கேட்டு பரிஸில் மிகநெருக்கமான வீடுகளில்(அறைகளில்) வாழந்;ந்தார்கள் பின்னர் அவர்கள் அரசியல் அகதி அந்தஸ்தை பெற்று தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கே உள்ள முயற்சியும், சிக்கனமும் சேர தமக்கென வியாபார தொகுதியை லாசப்பலில் ஏற்படுத்திக்கொண்டனர் பாரிஸில் நெருக்கமான வீடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் வசதிகருதி புறநகர்பகுதிகளில் குடியேறிக்கொண்டனர். புறநகர்பகுதிகளில் குடியேறிக் கொண்ட தமிழர்கள் தமக்குள் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள பல சமூகஅமைப்புகளை உருவாக்கி சமூகமட்டத்திலும், கிராமமட்டத்திலும் பலமுன்னேற்ற பணிகளில் ஈடுபட்டு தம்மை ஒரு அசைந்துகொணடிருக்கும் இனமாகவும் மற்றைய இனத்தினரிடையே அடையாளப்படுத்திக் கொண்டனர் .

இன்று எமது இளம் தலைமுறையினர் பிரஞ்சுத்தமிழர்களாக வாழத் தொடங்கிவிட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் இங்கேயே வாழப்போகியார்கள். இவர்களின் கல்வியும் உழைப்பும் பொருளாதார பலத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் அதற்கான பாதுகாப்பு அரசியல்பலத்தில்தான தங்கியுள்ளது அதற்கான அடிப்டைஅரசியல் பாதுகாப்பை ஏற்படுத்தும் முகமாக 2008 இல் நடைபெறும் மாநகரபபை தேர்தலில் எம் இனத்தவர்கள் வேட்பாளர்களாக 14 நகரசபைகளில் 16 பிரதிநிதிகள் இணைத்துக்கொண்டுள்ளார்கள். இவர்களை மாநகரசபைளில் பிரதிநிதிகளாக்கி எமக்கான அரசியல் களத்தை நாம்திறந்து விடல் வேண்டும். இதற்கான ஒழுங்குகளை 61 தமிழ்ச்சங்கள் மற்றும் அமைப்புக்களின் கூட்டமைப்பான பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு என்கிற அமைப்பு செய்துவருகின்றது.

வேட்பாளர்கள் விபரம்

(Argenteuil)(95100) ஆர்ஜோன்தோய் திரு டொமினிக் இலங்கநாதன்

(Louvre) (95380)லூவ்ர் திருமதி. வேர்ஜினி சபாரட்னம்

Goussainville(95190) குசான்வீல். செல்வி ரம்ஜா ஜெயமோகன்

Villiers Le Bel(95400) வில்லியே லூபெல் திருமதி தங்கா பாஸ்கரன்

Sarcelles(95200)சார்சேல் செல்வி சூசைபிள்ளை சன்டிறின் சோபியா (இடது)

Garges les Gonesses(;95140) கார்ஜ் லே கொனேஸ திரு கரிப்பிரசாத் பாலசுந்தரம்

La Courneuve(93120)லாகுர்நோவ் திரு புவனேந்திரன்

செல்வி சரணியா

செல்வி மதுரா

Aulnay Sous Bois(93600) ஒலுனே சூ புவா செல்வி தட்சாயினி தேவராஜ

Clichy Sous Bois(93390)கிளிச்சி சூ புவா திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம்

Bondy(93140)பொன்டி திருமதி லீலாவதி ராஜேந்திரம்

Paris 8°(75018) பரிஸ் 18 திரு கிருபாகரன்

Chelles(77500)செல் திருமதி வில்லியம் றெஜிநோட் அசந்தா

Evry Cougrans(91000)எவிறி குக்றோன் திருமதி பிரிதி நவனீதராயு

(villeneufe st georges ) வில்நெவ் சென் .ஜோர்ச் ரவீந்திரநாத் கலையரசி

கணக்குப் புத்தகமும் காதலும்

8:14 AM, Posted by sathiri, No Comment

கணக்குப் புத்தகமும் காதலும்



இந்தவார ஒரு பேப்பரில்

காதலும் கணக்குபண்ணிறதும் இரண்டும் ஒண்டுதானே என்று நீங்கள் யோசிக்கிற கோணத்திலை யோசித்தாலும் சரிதான் ஆனால் என்ரைவாழ்க்கையிலை இந்த காதல் கணக்குப்பாடம் இரண்டும் ஒண்டுதான் ஏணெண்டால் இரண்டிலையும் நான் அடிக்கடி கோட்டைவிட்டிருக்கிறன்.படிக்கிற காலத்திலை அனேகமாக எல்லாப்பாடத்திலையும் நல்ல புள்ளிகள் எடுக்கிறனான். அனால் இந்தக்க கணக்கு பாடம் மட்டும் ஏனோ தெரியாது எனக்கு மண்டையிலை ஏற சரியாய் கஸ்ரப்பட்டுது. கணக்கு கொப்பியை எடுத்தாலே உடைனை நித்திரை தூக்கியெறியும் . இல்லாட்டி ஏதாவது யோசினையள் வந்து குளப்பும்.முந்தி இலவசக்கல்வித்திட்டம் வாறதுக்கு முதல் படிக்கிற புத்தகங்கள் நாங்கள்தான் விலைக்கு வாங்கவேணும். ஆண்டுத் தொடக்கத்திலை அந்தக் காலத்திலை புத்தகக் கடையளுக்கும் நல்ல வியாபாரம்.

புது வகுப்புக்கான புத்தகங்களை புத்தகக் கடையிலை வாங்கிறதை விட எங்களுக்கு முதல் வகுப்பிலை படிச்சு பாசாகிபோறவையிட்டை வாங்கினால் பாதி விலைக்கு வாங்கலாம்.புத்தகத்தை அடுத்தவருசம் விக்கிறதுக்காகவே புத்தகங்களிற்கு பாதுகாப்பாய் வாடிவாய் உறைபோட்டு பிறகு அதுக்கும் மேலை மழைபெய்தாலோ கைவியர்வை பட்டு புத்தகம் பழுதாகாமல் இருக்க பொலித்தீன் பேப்பராலை இன்னொரு உறை போட்டு பாதுகாப்பாய்தான் பாவிப்பினம். முந்தியெல்லாம் இந்த புத்தக உறையை கண்டபடி எங்களுக்கு பிடிச்ச சினிமா நடிகை நடிகர் மாரின்ரை படங்கள் வாறமாதிரியோ அல்லது வேறை வித விதமான படங்கள் உள்ள பேப்பருகளாலைஉறை போட இயலாது. அதுக்கும் அடிவிழும்.

பிறவுண் பேப்பர் எண்டொரு பழுப்புநிற பேப்பர் கடையிலை வாங்கி அதிலை உறை போடலாம். அது வாங்க வசதி குறைந்தவை சீமெந்து பேப்பர்தான்.ஆனால் எங்கடை வீட்டிலை ஒரு வகுப்பிற்கு புத்தகம் வாங்கினால் ஆறுவருசத்துக்கு அந்தவகுப்பு புத்தகம் வாங்கத்தேவையில்லை. ஏணெண்டால். ஒவ்வொரு வருச வித்தியாசத்திலை நாங்கள் ஆறுசகோதரங்கள். மூத்த அண்ணனுக்கு மட்டும் புதிதாய் புத்தகங்கள் வாங்கினால் சரி. பிறகு வரிசையாய் ஒவ்வொருத்தருன்ரை கையிலை மாறி ஆறாவதாய் கடைசித்தம்பியும் படிச்சு முடிய அந்தப்புத்தகம். மேலை கீழையெண்டு மூலைப்பக்கத்தாலை சுருண்டும் மட்டை பலதரம் சோறு போட்டு ஒட்டியும் விளக்கு வெளிச்சத்துக்கு வந்து அந்தப் புத்தகங்களில் விழுந்து உயிர் விட்ட விட்டில்பூச்சிகளின் அடையாளங்கள் .

மயிலிறகை தலையிலை இருக்கிற எண்ணெயிலை தடவி புத்தகத்துக்குள்ளை வைச்சால் அது குட்டிபோடும் எண்டு யாரோ ஒரு லூசுப்பயல் சொன்னதை நம்பி அப்பிடியே செய்து எண்ணெய் ஊறின பக்கங்கள்..அடிவாங்கி அழுதழுது படித்தபோது எங்கள் கண்ணீர் மற்றது மூக்குநீர் எல்லாம் விழுந்து பலஎழுத்துக்கள் அழிந்துபோன பல பக்கங்கள் என்று அரைவிலைக்கில்லை இலவசமாவே ஒருத்தருக்கும் குடுக்க இயலாத நிலைமைக்கு வந்திடும்.சீனிச்சரை சுத்த கடைக்காரன்கூட வாங்கமாட்டான். ஆனால் என்னட்டை வாற கணக்குப் புத்தகம் மட்டும் அப்பிடியே எந்தவித பாதிப்பும் இல்லாமல். என்னட்டை எப்பிடி வந்ததோ அதே போலை அடுத்த வருசம் தங்கையிட்டை குடுத்திடுவன்.

அந்தளவுக்கு எனக்கு கணக்கிலை விருப்பம். என்னடா காதலைப்பற்றி ஏதாவது எழுதுவான் வாசிப்பம் எண்டு பாத்தால் கணக்கு புத்தகத்தை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறான் என்டு உங்கள் கண்கள் கோபத்திலை சிவக்கிறது எனக்கு தெரியிது. சரி இனி காதலுக்கு வாறன்.அததான் என்ரை முதல் காதல் . ஆனால் அது காதலா எண்ட கேள்விக்கு இப்பவும் எனக்கு விடை தெரியாது. நான் பத்தாம் வகுப்புப்பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்த இறுதிக்காலம் காலம்.மானிப்பாய் இந்துவாலை வெளியேறி வட்டு யாழ்கல்லூரியாலை ஒடியந்து நான் மானிப்பாய் மெமோறியல் பாடசாலையிலை படிச்சுக்கொண்டிருந்தநேரம்.

ஊரிலை எங்கடை வீட்டிலை சின்னம்மாவிட்டை பாடம் கேட்டுப்படிக்க பலபேர் வருவினம்.அப்பிடித்தான் அவளும் வந்து போவாள் என்னுடைய சம வயது ஒரே ஆண்டுதான் படிச்சனாங்கள். அனால் அவள் மகளிர்கல்லூரி.நானும் அவளும் பல வருசமாகவே வாடா போடி என்று கதைக்கின்ற நல்ல நண்பர்கள்.நானும் அவளும் ஒன்றாக படிப்போம் நான் அவளிற்கு தமிழ்பாடத்தில் கட்டுரைகள் எழுத விஞ்ஞான பாடத்தில் உதவிகள் செய்துகுடுப்பன். அவள் கணக்கு பாடத்திலை நல்ல கெட்டிக்காரி அதாலை எனக்கு ஏறாத கணக்குப்பாடத்தை எப்பிடியாவது புரிய வைக்க முயற்சி செய்வாள்.அவள் பின்னக் கணக்கை வேகமாக பிரித்து வெட்டி விடையை காட்டும்போது எனக்கு ஏதோ மந்திர வித்தை பாத்த மாதிரி மலைப்பாய் இருக்கும்.தலையை சொறிஞ்சபடி திருப்ப செய்து காட்டச்சொல்லி கேப்பன்.அவளும் திருப்பி எத்தனை தரம் செய்து காட்டினாலும்.

ஊகூம்.......எனக்கு ஏறாது.அதாலை கணக்கை விட்டிட்டு வேறை பாடத்துக்கு தாவிடுவன்.ஒருநாள் இரண்டு பேருக்கும் ஏதோ பாடம் செய்ய சொல்லிப்போட்டு சின்னம்மா போய்விட. அவள் என்னட்டை எனக்கு கவிதை ஒண்டு எழுத உதவிசெய்யிறியா எண்டாள். வருசக்கடைசி சோதினை முடிய பள்ளிக்கூடத்திலை பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏதோ கவிதை கேக்கிறாளாக்கும் எண்டு நினைச்சு நானும். கவிதைதானே பிரச்சனையில்லை தேவையெண்டால் சின்னம்மாவிட்டையும் உதவி கேக்கலாமெண்டன்.அவள் பதறியபடி சின்னம்மாக்கு தெரியவேண்டாம். இது காதல் கடிதம் கவிதையாய் வேணும் தான் ஒரதரை காதலிக்கிறதாவும் அவருக்கு கவிதையள் விருப்பம் தனக்கு கவிதை எழுதவராது அதாலை தான் எழுதிற மாதிரி எழுதித்தா நான் திருப்பி என்ரை கையெழுத்திலை எழுதிக்குடுக்கிறன் எண்டாள். அய்யோ கடவுளே இப்பதான் இருள்அழகனுக்கு ஒருகடிதம் எழுதப்போய் இரண்டு பள்ளிக்கூடம் மாறியாச்சு. பத்தாம் வகுப்பு கடைசிசோதினை வேறை நெருங்கிற நேரத்திலை என்ரை மருதடி பிள்ளையாரே எனக்கு ஏன் இந்தசோதினை எண்டு நினைச்சாலும்.

ஒரு நீண்டகால நண்பி அதுவும் காதலுக்கு எண்டு கேட்டிட்டாள் இல்லையெண்டு சொல்ல மனம்வரேல்லை. அன்று இரவிரவாய் யோசிச்சு ஒரு பெண் ஆணுக்கு எழுதிற மாதிரி எழுதி அடுத்தநாள் அவளிட்டை குடுத்திட்டு என்ன பிரச்சனை வந்தாலும் என்னை தயவுசெய்து காட்டிக்குடுத்திடாதை எண்டு கெஞ்சினபடி சரி நீ யாரை விரும்பிறாயெண்டு சொல்லு எண்டு கேட்டன். உனக்கு தெரிஞ்சவர்தான் உனக்கு கெதியாய் தெரியவரும் எண்டிட்டு போட்டாள்.பிறகு சிலநாளாய் சின்னம்மாவிடம் வந்து ஏதாவது கேட்டுபடித்துவிட்டு என்னோடை கனக்க கதைக்காமல் ஒரு ஓரப்பார்வை பார்த்துவிட்டு போய்விடுவாள். எனக்கும் அவளோடை சேந்து படிச்சால் கணக்கு செய்யவேண்டிவரும் அதாலை அவள் அப்பிடி போறதே நல்லது எண்டு நினைச்சபடி இருக்க.

ஒருநாள் சின்னம்மா கையிலை கணக்குப்புத்கத்தை எடுத்தபடி டேய் நீ கனநாளாய் கணக்கு புத்தகமே கையிலை எடுக்கேல்லை வா இண்டைக்கு கணக்கு செய்யவேணும் எண்டபடி புத்தகத்தை விரித்தவர் அதற்குள் இருந்த ஒரு கடதாசியை எடுத்து படிச்சபடி கோபமாய் டேய் இது எத்தினை நாளாய் நடக்கிது எண்டார்.எனக்கு ஒண்டும் விளங்காமல் அந்த கடுதாசியை பாத்தன் நான் எழுதிய கவிதை அவளது கையெழுத்தில் என்னுடைய கணக்குப் புத்தகத்தில் இருந்திருக்கிறது. அதை நான் விரிச்சால்தானே கடிதத்தை பாக்கிறதுக்கு. ஆனால் சின்னம்மாவின்ரை தலையிலை அடிச்சு சத்தியம் பண்ணிய பிறகுதான் என்னை நம்பினார்.அந்தநேரம் அப்பா கண்டிக்கு போயிருந்ததாலை நான் தப்பினன். அந்தக்கடிதத்திற்கு பிறகு அவளிற்கு என்னிலை ஒரு அது .....இருக்கெண்டு தெரிந்த பிறகு .எனக்கும் அவளிலைஒரு இது ....இருந்தது. ஆனால். அவளின் அதுவும் என்னுடைய இதுவும் எப்படியோ காலவோட்டத்தில் எதுவுமே இல்லாமல் போய்விட்டது.

(ஒரு நண்பனின்உண்மை கதையிது

12:52 PM, Posted by sathiri, One Comment

இதயத்து சேகங்களை
இறக்கிவைத்து
சுமக்கும் சுமைகளையும்
சொல்லிட வார்த்தைதேடி
கலைந்துபோகும் என்
கனவுகளை
கலைத்து பிடித்து
கட்டிவைக்க விழையும்
வாலிபன்நான்
வசந்தத்தை அனுபவிக்கும்
வயதில்
வறுமையை தாங்கலாம்
வெறுமையை...........??
முடியவில்லை
வீதியில் வீசப்பட்டடோ
விக்கப்பட்டவனே இல்லை
சொந்தம் சுற்றம்
எல்லாம் உண்டு
உற்றாருக்கும் பெற்றாருக்கும்
உதவி உதவியே
உதிரிபாகங்கள்
தேய்ந்துபோய்
உடலும் மனமும்
சோர்ந்து.....என்
துக்கங்களை
தூக்கம்மட்டும்
அவ்வப்போது
தத்தெடுத்து கொள்ளும்
இதோ என்னை
தத்து கொடுத்துவிட்டேன்
நிதந்தரமாக

உயிர்காக்க உதவி தேவை IATAJ

2:12 AM, Posted by sathiri, No Comment


ஒரு பேப்பரிற்காக எழுதியது

உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழ்மக்களே ஊடகத்துறை சார்ந்தவர்களே உதவி செய்யுங்கள். இந்தக் குழந்தையின் உயிர் காக்க உடனடியாக இரத்தம் தேவை.இரத்தம் A. B. AB. O. என்கிற பிரிவு பிரச்சனை இல்லை ஏனெனனில். ஏற்கனவே எங்களில் இருக்கின்ற பிரிவுகளே போதும்.ஆனால் இரத்தத்தில் இனஉணர்வு.விடுதலையுணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக பட்டம் பதவி ஆசைகளற்ற கடைமையுணர்வு.இவை எல்லாம் கலந்த புது இரத்தம் உடனடியாகத்தேவை.ஏனெனில் நோயாளிக் குழந்தை மிகவும் அபாயக்கட்டத்தில் கோமா நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது. இந்தக் குழந்தையின் பெயர் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். இது .24.06.06......அன்று இலண்டனில் பிறந்தது.இதற்கு ஒன்றரை வயதாகிவிட்டது. இந்த ஒன்றரை வயதில் நான்கு பிறந்தநாட்களை அதுவும் பிரான்சில் இரண்டு ஜெர்மனியில் இரண்டு என நான்கு பிறந்தநாட்களை கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ளது.இந்தப்பிள்ளைய??வது வளர்ந்து தமிழ் ஊடகத்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களையும் உலக நாடெங்கும் சிதறிப்போய் கிடக்கும் பல சிந்தனையுள்ள பத்திரிகையாளர்களையும் பல ஊடகங்களையும் ஒன்றாக்கி உறவாக்கி ஏதோ சாதனை செய்யப்போகின்றது என்று கற்பனையில் இருக்க. இதற்கு வியாதி பிடித்து அதன் உறவினர்களாலேயே கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இந்தக்குழந்தைக்கு பால்மா வாங்கவே சிரமப்படும் தாயாரால் வைத்தியத்தை எப்படிப்பார்க்கபோகிறார் எனபதுதான் கவலை.குழந்தையின் உறவுகள்பற்றிய விபரம்.இந்தக்குழந்தை அவதாரக்குழந்தை எனபதால் தாயார் மட்டுமே உள்ளார் . தாயார் பெயர் ஆனந்தி சிவப்பிரகாசம். தலைவர்( முன்னாள் பி.பி.சி. தமிழோசையின் பணிப்பாளர்.)சித்தப்பா மற்றும் இந்தக்குழந்தையின் வைத்தியர். இரா துரைரட்ணம்.உபதலைவர் ( இலங்கை தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பத்திரிகையாளர்.)இவரும் குழந்தைக்கு வைத்தியம் பார்க்காமல் கைவிட்டுள்ளதாகவே அறியமுடிகின்றது.குகதாசன் குஞ்சியப்பு.நோர்வே(பத்திரிகையாளர்)கோபி மாமா இங்கிலாந்து (ஒரு பேப்பர் பத்திரிகையாசிரியர்)பற்றிமாகரன் தாத்தா இங்கிலாந்து ( அரசியல் ஆய்வாளர் மற்றும் பத்திரிகையாளர்)சிவா சின்னப்பொடி .பிரான்ஸ்(பத்திரிகையாளர்)றூபினி செல்வநாதன் ஜெர்மனிவேந்தர்கோன்.இங்கிலாந்து -( வடலி பத்திரிகை ஆசிரியர்)கந்தசாமி.இங்கிலாந்துஇப்படி உலகெங்கும் பலமான பிரபல்யமான உறவினர்கள் இருந்தும் இந்தக்குழந்தை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்தக்குழந்தையும் அவ்வப்போது சில சிணுங்கல்களுடன்(சில அறிக்கைகள்) நித்திரையாகி விடுகின்றது. எனவே இனிவரும் காலங்களிலாவது சம்பத்தப்பட்டவர்கள் ஊட்டச்சத்துக்கள் ஊட்டி இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்காளா??http://www.iataj.org/

ஓலை கொண்டு வந்துள்ளோன் அய்யா

2:09 AM, Posted by sathiri, No Comment



பெருமதிப்பிற்குரிய நாகலிங்கம் அய்யா அவர்களிற்கு உங்களிற்கு யாரோ முடிசூட்விட்டார்களாம் என்கிற செய்தி அறிந்ததும் பதறிப்போய்விட்டேன். அதே போலவே நீங்களும் அந்தத் தருணத்தில் பதறிப்போயிருப்பீர்கள். அந்த நேரம் உங்கள் உள்ளம் என்ன வேதனைப்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கும்போது என்வேதனை இன்னமும் அதிகரிக்கின்றது.ஏனெனில் உங்களை இன்று நேற்றல்ல நீங்கள் இணுவில்......கற்பித்த காலத்திருந்து உங்களை நான் அறிந்தவன். ஊருக்கு நீங்கள் செய்த உபகாரங்கள் எத்தனையோ எத்தனையோ. அதுமட்டுமல்ல புலம் பெயர்ந்து வந்த தேசத்திலும் கொடுத்தே பழக்கப்பட்ட கைகளை பொத்தி வைக்க முடியாமல் நீங்கள் புலம்பெயர் தேசத்திலும் பொதுநலத்தெண்டுகளையும் தன்னலமற்ற தமிழ்தொண்டுகளையும் பார்த்து நான் பூரித்து போயிருக்கிறேன். பூமாலை பொன்னாடை புழுகித்தள்ளும் புகழ்சிகள் இவற்றுக்கு அடிமையாகாத பண்பு அதற்கும் மேலாக உங்கள் தற்புகழ்ச்சி பிடிக்காத தன்னடக்கம். இவைகளிற்காகவே எங்கள் தேசியத்தலைவரே அவர்கள்கையால் உங்களிற்கு விருதுவழங்கி கொளரவித்திருந்தார்.

தமிழனாய்ப்பிறந்த ஒருவனிற்கு அவனது வாழ்நாளில் இதைவிடப்பெரிய கொரவவம் வேறு என்ன வேண்டும்.ஆனாலும் இந்திய அரசியல் சாக்கடையின் சம்பிரதாயங்களான முடிசூடுதல். வீரவாள் கேடயம் கொடுத்தல்.காலில் விழுதல்.விரலைக்கீறி இரத்தத்தால் வெற்றித்திலகமிடுதல்.பச்சை குத்துதல். பட்டங்கள் கொடுத்து பொன்னாடை போர்த்தி புகழ்ந்து தள்ளிவிட்டு பின்னர் அடுத்த மேடையிடையில் அதேநபரை தூற்றி துவேசித்தல். அடு்த்தவேளை சோற்றுக்கு வழியில்லாத தொண்டன் தலைவர்வாழ்கவென தொண்டை கிழியகத்துதல். இவையெல்லாம் பெரியளவில் இல்லாவிட்டாலும் எங்கள் ஈழத்தமிழர் சமூகத்திலும் முன்னைய காலங்களில் சிறிதளவு தொற்றியிருந்தது உண்மைதான் ஆனால் தமிழர்விடுதலைக்கூட்டணி கட்சியின் அழிவோடு அந்தசம்பிரதாயங்களும் அழிந்துபோய்விட்டன்.ஈழத்தில??புதிதாய்ப்பிறப்பெடுத்த எம்புதியசமுதாயம் புலிகள் காலத்தில் உலகேவியக்கும் பல புதுமைகளை செய்துகொண்டிருக்கும்வேளை புலம்பெயர்தேசத்து தமிழர்கள் பிடுங்கியெறியப்பட்ட பழைய சம்பிரதாய்ஙகளை தேடியெடுத்து புளிபோட்டுதேய்த்து புது முலாம் பூசிக்கொண்டிருக்கின்றனர். ஒரு முற்போக்கு வாதியான உங்களால் இவவற்றையெல்லாம் எப்படி உங்களால் தாங்கிக்கொள்ள முடிகின்றது.

அய்யா யேசு நாதருக்கு யூதர்கள் முள்முடி சூட்டி சவுக்கால் அடித்து சிலுவையை சுமக்கச் சொன்னபொழுது அவர் யூதர்களைப்பாத்து கோபப்படாமல் கடவுளிடம் "தந்தையே இவர்கள் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதனை அறியாபாவிகளாய் இருக்கின்றனர் எனவே இவர்களை மன்னியுங்கள் " என்று வேண்டிக்கொண்டாராம்.அதேபோல??ான் அன்று ஜெர்மன் கிறீபீல்ட் நகரில் உங்கள் தலையில் சூட்டப்பட்ட அந்த முடி நிச்சயம் உங்களிற்கு முள்முடியாக வேதனை தந்திருக்கும். ஆகவே அவர்கள் அறியாமல் செய்த பாவத்தை நீங்கள் மன்னித்தருளுங்கள் என்று நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

தாலியறுக்க சில ஆலோசனைகள்.

1:15 PM, Posted by sathiri, No Comment

தாலியறுக்க சில ஆலோசனைகள்.

இதென்னடா சாத்திரி ஊரிலை காணிவேல் கோயில் திருவிழாக்களிலை தான் செய்ததை இஞ்சை வெளிநாட்டிலையும் செய்யச்சொல்லி ஆலோசனை சொல்லுறாரோ எண்டு யோசிக்காதையுங்கோ. இது கள்ளத்தாலி அறுக்க ஆலோசனை இல்லை இது கணவன்மார் இறந்தால் பிறகு மனைவிமார் அறுக்கிற சடங்குத்தாலியறுப்பு.இது பொதுவான தமிழரின்ரை இல்லையில்லை இந்துக்களின்ரை சே அதுவுமில்லை இந்துதமிழரின்ரை இல்லை சைவத்தமிழரின்ரை எண்டு சொல்லலாமோ தெரியாது எனக்கும் சரியாய் தெரியாது ஆனால் எங்கடை முன்னோர் செய்த ஒரு சடங்கு அதுமட்டும் வடிவாத்தெரியும்.அது பொதுவா நடக்கிற ஒரு சடங்குதானே அதுக்கேன் ஆலோசனை எண்டு யோசிக்கிறீங்கள் எனக்கு விழங்குது. ஆனால் எங்கடை பெட்டையளை வயசுக்கு வந்ததும் கலியாணத்தை கட்டிக்குடுத்து கலைச்சு விடாமல்இப்ப காலமாற்றத்திலை பள்ளிக்கூடம் போகவிட்டதுபெரிய தப்பா போச்சுது.

எங்களுக்கு சமமாமுன்னேறி்கொண்டுவந்தது மட்டுமில்லை எங்களை எதிர்த்து கேள்வி வேறை கேக்கினம். அதுமட்டுமில்லை அவையை ஒடுக்கி வைக்கிறதுக்கு நாங்கள் கஸ்ரப்பட்டு கண்டுபிடிச்சு காலம்காலமா செய்துகொண்டு வாற சம்பிரதாயங்களையுமல்லோ செய்யக்கூடாது எண்டினம். போன முறையான் ஒரு பேப்பரிலை படிச்சிருப்பீங்கள் யாழிலையும்போட்டு வெட்டி பிறகுபோட்டு திருப்பவும் வெட்டி காணாமல் போட்டுது. யெர்மனியிலை நடந்த ஒரு தாலியறுப்பு சடங்கை செய்தது சரியில்லையெண்டு சாந்தி ரமேஸ் எண்டவா எழுதியிருந்தவா.எங்கடை சடங்கு சம்பிரதாயத்தை எதிர்த்து அதுவும் கேவலம் ஒரு பொம்பிளை எப்பிடி எதிர்த்து எழுதலாம். கட்டுரையை படிச்சஎனக்கு வந்த கோபத்திலை ஒரு பேப்பரை சுக்குநூறா கிழிச்சு எறிஞ்சுபோட்டன்.கட்டுரையை எழுதினவாவின்ரை நம்பரைத்தேடியெடுத்து நல்லாத்தண்ணியைபோட்டிட்டு நடுச்சாமத்திலை போனடிச்சு நாலுகிழி குடுப்பம் எண்டுதான் நினைச்சனான் ஆனால் பொலிசிலை போய் வழக்கு போட்டாலும் எதுக்கு வில்லங்கத்தை எண்டு நினைச்சுப்போட்டு.

இந்த புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளிலை வெள்ளைக்காரனிட்டை கோட்சூட் போடுறது முள்ளுக்கரண்டியாலை சாப்பிடுறது வைன்கிளாசை முட்டி சியஸ் சொல்லறதெண்டு எங்களுக்கு சாதகமான பல சம்பிரதாயங்களை பழகினாலும் எங்கடை தாலியறுப்பு சம்பிரதாயத்தை காப்பாத்திறதுக்காகவும்.இனிம༢r />??ல் காலத்திலை இப்பிடி நாலுஎழுத்து படிச்சிட்டு எங்கடை சடங்கு சம்பிரதாயங்களை விமர்சிக்கிற பெண்களிட்டை இருந்து எதிர்ப்பு வராமல் காப்பாத்தவும் சில ஆலோசனையளை எழுதலாம் எண்டு நினைக்கிறன்.

1) ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் மரணவீடுட்டுடன் சேர்த்து தாலியறுப்பு நிகழ்வை செய்யாமல் அதற்கு தனியாக ஒருநாள் பெரிய மண்டபம் எடுத்து காட்அடிச்சு ஆக்களை கூப்பிட்டு செய்யலாம்.

2)பொதுவாக இந்த தாலியறுப்பு நிகழ்வினை எங்கள் சம்பிரதாயப்படி பல விதைவைப்பெண்கள் சேர்ந்து செய்வதுதான் வழைமை எனவே நீங்கள் வசிக்கின்ற நகரத்தில் தமிழ் விதைவைப்பெண்கள் கிடைக்காவிட்டால் ஏதாவது ஒரு பேப்பரில் "தாலிறுப்பு நிகழ்வு நடாத்த விதைவைப்பெண்கள் தேவை அவர்களிற்கான போக்கு வரத்து செலவு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்" என்று ஒரு விளம்பரத்தை போடலாம்.

3)இந்த நிகழ்வினை ஒப்பாரிப்பாடலுடன் செய்தால் அதற்கென ஒரு தனி மவுசு கிடைக்கும். புலம்பெயர் நாடுகளிலை உள்ள பெண்களிற்கு தாலாட்டு பாட்டே தெரியாது இதுக்கை எப்பிடி ஒப்பாரி தெரியப்போகுது. அதாலை ஊரிலை அல்லது இந்தியாவிலை இருந்து ஒப்பாரி தெரிந்த கிழவிகளை அழைத்து வரலாம். அவருக்கு வெளிநாட்டுக்கு கூப்பிடுற விசா எடுக்கிறதுக்கு. எங்கள் கலாச்சார நிகழ்விற்கான விசேட பாடகர் என்று கேட்டால் கட்டாயம் வெளிநாட்டு தூதரகம் விசா தரும். ஆனால் இப்பிடி வருகிற ஒப்பாடி பாடகர்கள் பிறகு காலப்போக்கிலை கோயில் பூசைக்கு முன்னர் கூட்டிக்கொண்டு வந்த குருக்கள்மார் மாதிரி உங்கடை செலவிலை வெளிநாட்டுக்கு வந்திட்டு தனியா அசேலம் அடிச்சு இல்லாட்டி இமிகிரண் விசா எடுத்து சொந்தமா தொழில் செய்யத்தொடங்கிவிடுவினம். அதாலை முன்னெச்சரிக்கையையாய் அவையை கூட்டியந்த உடைனையே பாஸ்போட்டை பிடுங்கி வைச்சுக்கொண்டு நாலு இடம் சுத்திக்காட்டி நாலு பேரோடை பழக விடாமல் வந்த காரியம் முடிஞ்சதும் நேரை ஏயார்போட்டிற்கு கொண்டு திருப்பி ஏத்திவிடுங்கோ.


4)இந்த மூன்றாவது யோசனை கொஞ்சம் சிக்கலானதாகவோ செலவானதாகவோ தோன்றினால். இன்றைய விஞ்ஞானத்தை எங்கடை சம்பிரதாயங்களிலை புகுத்தலாம். அதாவது இப்ப வெளிநாடுகளிலை கன கலியாண வீட்டிலை ஏன் கோயில்களிலையும் மேளச்சத்தம் சிடியிலைதான் போகுது. அதுமாதிரி இந்த ஒப்பாரியையும் சிடியிலை அடிச்சு விட்டால் பிரச்சனை முடிஞ்சுது. சிடிவெளியிடுற நிறுவனக்காரர் இதை கவனத்தில் எடுக்கவும் உங்களிற்கும் ஒரு வியாபாரம் நடந்தமாதிரி இருக்கும்.

5) இந்த தாலியறுப்பு நிகழ்வைப்போல உடன்கட்டை ஏறுகிறது அதாவது கணவன் இறந்து போனால் கணவனை எரிக்கிற நெருப்பிலேயே மனைவியும் குதிச்சு இறந்து போறதும் எங்கடை முன்னோர்கள் செய்த சம்பிரதாயம் எண்டு புத்தகங்களிலை படிச்சு அறிஞ்சிருக்கிறன்.ஆனால் எங்கடை சடங்கு சம்பிரதாயங்களை அழிக்க வேணுமெண்டே சிலர் சதிசெய்து சட்டங்களை போட்டு அதை இல்லாமல் செய்து போட்டினம். ஆனாலும் இந்தியாவிலை சிலர் இடைக்கிடை செய்யினம். அழிஞ்சுபோன அந்த சம்பிரதாயத்தை திருப்பவும் நாங்கள்தொடங்கவேணும் ஆனால் வெளிநாட்டிலை அதுக்கு சட்டம் இடங்குடுக்காது. அதுக்கான அனுமதியை தரசொல்லி வழக்கு போடலாம்.

சரி இனிமேல் காலங்களிலை நடக்க இருக்கிற தாலியறுப்பு விழாவிற்கு எனக்கும் மறக்காமல் கட்டாயம் அழைப்பிதழ் அனுப்புங்கோ நேரிலை வந்தும் சில ஆலோசனையள் சொல்லுறன் நன்றி சாத்திரி

எழும்படி பெண்பாவாய்

9:25 AM, Posted by sathiri, No Comment

எழும்படி பெண்பாவாய்
ஒரு பேப்பரிற்காக

மார்கழி மாதம் ஊரில் திருவெண்பாவை காலம் தொடங்கினாலே பதின்ம வயதுகளில் இருந்தஎங்களிற்கு பக்தி பாதி பம்பல் பாதி கலந்த கொண்டாட்டம்.மயிர்க்கால்கள் குத்திட்டு நிக்கும் மெல்லிய மார்கழி மாதத்து குளிரிர். இப்ப ஜரோப்பா குளிரோடை ஒப்பிடேக்கை அதெல்லாம்ஒரு குளிரா என்று தோன்றுது. அதிகாலை நாலுமணிக்கு எழும்பி சில்லென்ற கிணத்து நீரை அள்ளி நடுக்கியபடி தலையில் ஊற்றிக்கொண்டு முன் ஜாக்கிரதையாக ஒரு காற்சட்டையை உள்ளை போட்டு மேலை அப்பாவின் பட்டுச்சால்வையை வேட்டியாக்கி கட்டிக்கொண்டு என்னிடம் இருந்த மிருதங்கத்தையும் தூக்கிக்கொண்டு கோயிலடிக்கு ஓடுவேன். மிருதங்கம் வைச்சிருந்தனான் எண்டதும் நான் ஏதோ பெரிய மிருதங்க வித்துவான் எண்டு கண்டபடி கற்பனை பண்ண வேண்டாம். அதையும் சொல்லிப்போட்டு பிறகு அங்காலை போறன்.முந்தி இந்த இந்த வாத்திய கருவிகள் இல்லாட்டிசங்கீதம் வாய்ப்பாட்டு (கணக்கு வாய்பாடு அல்ல)பழகுகின்ற ஆண்கள் வேட்டி கட்டி கழுத்திலை தொப்புளை தொடுகிற அளவுக்கு ஒரு பதக்கங்சங்கிலி இல்லாட்டி உருத்திராட்சை கொட்டை வைத்த ஒரு சங்கிலி போடுறதெண்டது ஒரு விதிக்கபடா சம்பிரதாயம் இல்லாட்டி எழுதப்படாத சட்டம் எண்டும் சொல்லலாம்.

அப்பிடித்தான் எனக்கும் ஒரு சங்கிலி போடவேணுமெண்ட ஆசை அதாலை சங்கீதம் படிக்கப்போறன் எண்டு கேக்க முடியாது ஏணெண்டால் எனக்கே தெரியும் என்னை சங்கீதம் படிக்க அனுப்பி ஊர்காரரின்ரை வெறுப்பை வீட்டுகாரர் சம்பாதிக்க மாட்டினம் அதாலை மிருதங்கம் பழகபோனால் அதை சாட்டா வைத்து வீட்டிலை ஒரு உருத்திராட்ச கொட்டை வைச்ச சங்கிலி வாங்கலாம் எண்டு ஒரு திட்டத்தை போட்டு நானும் மிருதங்க வகுப்புக்கு போகத் தொடங்கினாப்பிறகு அப்பாட்டை மெல்லமாய் சங்கிலி விசயத்தை சொன்னன் . அதுக்கு அப்பா என்னட்டை "டேய் மிருதங்கம் பழகுறதுக்கு முதல்லை மிருதங்கம்தான் தேவை அதை வாங்கித்தாறன் நீ நல்லாப் பழகி அரங்கேற்ரம் செய்யிற அண்டைக்கு நானே உனக்கு உருத்திராட்சை கொட்டை வைச்ச சங்கிலியை மேடையிலை வைச்சு போடுறன் எண்டுபோட்டார்".பிறகென்ன நான் மிருதங்கம் பழகி அரங்கிலை ஏறி இதெல்லாம் நடக்கிற கூத்தா அதாலை மிருதங்கம் வாங்கித்தந்த கொஞ்சநாளிலையே மிருதங்கம் பழகப்போறதை விட்டிட்டன்.

ஆனால் அந்தமிருதங்கத்தைதான் திருவெண்பா காலங்களிலை நான் கொண்டு போறனான். அதாலை அந்த பஜனைக்கோஸ்ரிக்கு நான் தான் மிருதங்க வித்துவான் .பஜனைப்பாட்டு ராகத்துக்கு ஏற்றமாதிரியெல்லாம் நான் தாளம்வாசிக்கமாட்டன். பஜனை பாடுறவை நான் அடிக்கிறதாளத்துக்கு ஏற்றமாதிரி பாடவேண்டியதுதான். சரி இனி விசயத்துக்கு வாறன்.கோயிலடியிலை என்னைப்போலவே நண்பர்கள் சங்கு.சேமக்கலம்.சிஞ்சா(தாளம்)༢r />??டுக்கு. பெற்றோல்மைக்ஸ் எண்டு ஆளாளுக்கு ஒரு பொருளோடை தயாராய் நிப்பினம்.பஜனை பாடப்போகிற எங்களுக்கு பாவங்கள் பக்தியிலை குளிருக்கை பாடுறாங்கள் எண்டு ஊரிலை ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டுக்காரர் பால்தேத்தண்ணியோ இல்லாட்டி பால்க்கோப்பியோ தாறது வழைமை.கொஞ்சம் வசதியான வீடு என்றால் `ஹார்லிக்ஸ்சும் பிஸ்கற்றும் கூட கிடைக்கும்.ஆனால்திருவெண்பா தொடங்கு முன்னரே தாங்கள் எந்த நாள் என்ன குடிக்க தருவினம் எண்டதை எங்களுக்கு சொல்லி ஒழுங்கு பண்ணியிருப்பினம்.

நாங்களும் அதை ஒரு கொப்பியிலை குறிச்சு வைச்சிருப்பம்.அதாலை நாங்கள் கோயிலடியிலை பஜனை தொடங்க முதலே அண்டைக்கு யாரின்ரை வீட்டிலை என்ன குடிக்கப்போறம் எண்டு ஒருதடைவை குறிச்சு வைச்சிருந்த கொப்பியிலை சரிபார்ப்பம். " டேய் இண்டைக்கு சந்தி வாத்தியார் வீட்டிலை கோப்பியும் விசுக்கோத்துமாம் எண்டுவான் ஒருத்தன்" அட போடா அந்த வாத்தி போனவருசம் பள்ளிக்கூடத்திலை தாற விசுக்கோத்தை தந்து ஏமாத்திப்போட்டுது.இந்தமுறை கிறீம் விசுக்கோத்து வாங்கிதராட்டி நான் அவற்றை வீட்டு வாசல்லை பாடமாட்டன்" என்பான் இன்னொருத்தன்.அது மட்டுமில்லை எங்களோடை படிக்கிற இல்லாட்டி தெரிஞ்ச பெட்டையளின்ரை வீட்டிலை அண்டைக்கு தேத்தண்ணி தாறநாளெண்டால் பிறகென்ன அதைவிட்ட சந்தோசம் வேறையொண்டும் இல்லை.

ஏணெண்டால் அதுவரை காலமும் சைக்கிளில் போக வரேக்கை வேலிக்கு மேலாலையும் மதிலுக்கு மேலாலையும் எட்டியெட்டி பாத்துக்கொண்டு திரிஞ்ச எங்களிற்கு அண்டைக்குத்தான் அவையளின்ரை வீட்டுக்குள்ளை போகிற சந்தர்ப்பம் கிடைக்கும். அதேநேரம் திருவெண்பா காலங்களிலை அனேகமான வீட்டுக்காரர் தங்கடை நாய்களை எல்லாம் பிடிச்சு கட்டிவைச்சிடுவினம். இல்லாட்டி எங்கடை பாட்டைக்கேட்டு நாய்களுக்கு பக்தி முத்தி எங்களை கலைக்க வெளிக்கிட்டிடும்.இப்பிடி கல கலப்பா ..“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன் செவியோ நின் செவிதான்…..எண்டு முதல் பாட்டோடை கோயிலடியிலை இருந்து தொடங்குவம் முன்னாலை ஒருத்தர் பெற்றோல்மைக்ஸ் விளக்கை தோழில் வைத்து பிடித்தபடி போக அந்த வெளிச்சத்தில் இன்னொருத்தர் திருவெண்பா புத்தகத்தை பாத்து ஒவ்வொரு பந்தியாய் சொல்லி நிறுத்த பின்னாலை போகிற மற்றறைவை திருப்பி சொல்லிக்கொண்டு எங்கள் பயணம் ஆரம்பமாகும்.

சில நேரங்களிலை பெற்றோல் மைக்ஸ் வெளிச்சத்தை பார்த்து பறந்து வருகிற மார்கழி மாதத்து ஈசல் கூட்டம் வெண்பா படிக்கிற எங்கடை வாய்க்குள்ளையும் புகுந்திடும் அதனாலை காறித்துப்பியபடி கடவுள் பாடலை பாடிக்கொண்டு போகவேண்டியிருக்கும்..ஏலோரம்
பாவாய் இப்பிடி வெண்பாவின்ரை .எட்டு பாடல் வரிகள் .முடிஞ்சதும் எல்லாரின்ரை கையிலை இருக்கிற வாத்தியமும் பெரிய சத்தம் எழுப்பும். இடைக்கிடை சினிமாப்பாட்டும் பாடுவம். எங்களோடை படிக்கிற பெட்டையளின்ரை வீட்டுவாசல் வந்தால் வெண்பாவின்ரை ஏலோரம்பாவாய் .முடியாமலே எழும்படி பெண்பாவாய் எண்டு கத்திப்போட்டு நாங்கள் கையிலை இருக்கிறது எல்லாத்தையும் அடிச்சுசத்தம போட்டு படைலைக்குள்ளை சங்கை வைச்சு ஊதிப்போட்டு போவம்.ஏணெண்டால் ஊரையே எழுப்பிறதுக்குதானே நாங்கள் பஜனை பாடுறது அதாலை யாரும் எங்களை பேசமாட்டினம் எண்டிற துணிவுதான்.

பிறகு கலையிலை எங்கையாவது போகேக்குள்ளை பெட்டையள் எங்களிட்டை "சனியள் நீங்களோ காத்தாலை எங்கடை படைலைக்குள்ளை சங்குஊதினது எண்டு செல்லக்கோபத்தோடை கேப்பினம். அதுக்கு நாங்களும் "எங்களுக்கு வேறை வேலை இல்லையோ உன்ரை கொப்பர் குறட்டை விட்டிருப்பார் அது உனக்கு சங்குச்சத்தம்மாதிரி கேட்டிருக்கும்." இப்பிடியான சீண்டல்கள். திருவெண்பா கடைசி நாளன்று ஒரு ரக்றரிலை பிள்ளையாரை வைச்சு சோடிச்சு லைற்எல்லாம் பூட்டி மேளதாளத்தோடை சாமி ஊரை வலம் கொண்டுவருவம்.. எங்களை நம்பி சாமியை தாறத்துக்கு பெரியாக்களுக்கு பயம்.அதாலை அந்த கடைசிநாள் ஊர்வலத்தை பெரியாக்கள் தான் செய்வினம் நாங்கள் பின்னாலை பாடிக்கொண்டு போக வேண்டியதுதான்.. அப்படிதிருவெண்பாவை அதிகாலையில் என்னுடன் கூத்தும் கும்மாளமுமாய் கூடிக் கும்மியடித்த எத்தனையோ என்வயது நண்பர்கள் இன்று உயிருடன் இல்லை.எண்ணிப்பார்க்கிறேன் கொடிய யுத்தத்தில் கோரமாய் மாண்டும் விடுதலையை நேசித்து வீரமரணம் அடைந்தும் காரணமேயின்றி காணாமல் போனவர்கள் என்று சுமார் பதினைந்து பேருக்கு மேல்.ஊரை எழுப்புவதற்காய் அன்று என்னுடன் தெருத்தெருவாய் திரு வெண்பாபாடியவர்கள் இன்று எந்த வெண்பாபாடினாலும் எழுப்பமுடியாதவர்களாய். ஆனாலும் திருவெண்பாவை காலம் வரும்போதெல்லாம். அவர்கள் நினைவுகளுடன்

குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே

8:50 AM, Posted by sathiri, No Comment

குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே
இந்தவார ஒரு பேப்பரிற்காக

83ம் ஆண்டு கொழும்பில் தமிழர்களிற்கு நடந்த அவலத்தை தமிழின வரலாற்றில் மறந்துவிட முடியாது அந்த கலவரத்தில் உறவுகளை உடைமைகளை இழந்து வடக்கு நோக்கி வந்த பல்லாயிரம் தமிழ்குடும்பங்களில் எங்கள் ஊரிலும் பல குடும்பங்கள் வந்து குடியேறினார்கள் அதில் ஊர்மண்ணின் வாசத்தை மறந்து பலவருடங்களாகிப்போன தமிழர்களும் அடங்குவர்.அப்படி வந்த தமிழ் குடும்பங்கள் பலர் உறவினர்வீடுகளில் தங்கினர் உறவினர்கள் இல்லாத அல்லது உறவினர்களுடன் தொடர்புகள் அற்ற பலகுடும்பங்களிற்கு ஊர் இளைஞர்கள் நாங்கள் தங்குமிட வசதிகள் மற்றும் உதவிகளை செய்து கொடுத்திருந்தோம். அப்படி அகதியாய் வந்திருந்த மாணவர்களிற்கு அவர்களது கல்வியை தொடர ஊர்பாடசாலைகளில் விசேடமாக ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

எங்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அப்படி பல மாணவர்கள் வந்து சேர்ந்தனர் அதைப்பற்றி எங்களிற்கு கவலையில்லை ஆனால் அதே போல அருகில் இருந்த மானிப்பாய் மகளிர் பாடசாலையிலும் பல மாணவிகள் சேர்ந்திருந்தனர்.இதுதான் விடயமே.அதுவரை காலமும் சீயாக்காய் வைத்து தோய்ந்து கருவேப்பிலை போட்டு காச்சிய தேங்காய் எண்ணெயை தலைக்கு வைத்து வழித்திழுத்து கன்னத்தில் வழியும் எண்ணெயை கைக்குட்டையால் துடைத்தபடி.இரட்டை பின்னலுடன்.நெற்றியில் மெல்லிதாய் ஒரு திருநீற்று கீறல் அதில் சின்னதாய் சந்தணப்பொட்டு.லேடீஸ் சைக்கிளை ஓடிக்கொண்டு ஒரு கையால் காண்டிலை பிடித்தபடி மறுகையால் மேலெழும்பும் பாவாடையை மாறி மாறி இழுத்துவிட்டபடி வந்து.எங்களைக்கண்டதுமே ஏதோ கொட்டிய சில்லறையை தேடுவது போல குனிந்து கொண்டு .கதைகேட்டால் எதையாவது சுரண்டியபடி படபடப்பாய் பதில் சொல்லிவிட்டு பறந்தோடும் எங்கள்ஊர்பெண்களையே பார்த்து பழகிப்போய்விட்ட எங்களிற்கு.(இப்போ அந்தக்காலம் எல்லாம் மலையேறிவிட்டது இப்போதெல்லாம் எங்கள்ஊர்பெண்கள் அழகுசாதனமாய் பயன்படுத்துவது 50 கலிபர்.ஆர்.பி.ஜு. ஆட்லெறிகள்)

புதிய கொழும்பு வரவுகளோ ஷாம்பூ வைத்து தோய்ந்து பறக்கவிட்ட தலை. தமிழ்பாதி ஆங்கிலம்பாதி கலந்துசெய்த தமிங்கிலம்.குளோரின் தண்ணீரை குடித்தும் குளித்தும் வளர்ந்ததால் கொஞ்சம் கலராய் உள்ள நெற்றியில் கலர்கலராய் ஒட்டுப்பொட்டு .நேருக்கு நேரே `ஹாய் " சொல்லி கலகலப்பாய் கதைக்கும் சுபாவம்.இதெல்லாம் எங்கள் உள்ளுர்ப்பெண்களின் மவுசை குறைத்து கொழும்பு வரவுகளின்மீது இளைஞர்களின் பார்வை திரும்பத்தொடங்கியது.அதுவரை காலமும் ஆங்கிலப்பாடம் தொடங்கியதும் களவாய் விழாங்காய்க்கு கல்லெறியப்போய்விடும் மாணவர்கள் எல்லாம் அக்கறையாய் வகுப்பில் ஆங்கிலவாத்தியாரிடம் சந்தேகங்கள் கேட்டுப்படிக்கதொடங்கியிருந்தனர்.அதுமட்டுமல்ல "அறுபதுநாளில் ஆங்கிலம் கற்க" எண்டொரு ஸ்போக்கிண் இங்கிலிஸ் புத்தகத்துடன் ரியுசனுக்கு வேறை அலையத்தொடங்கிவிட்டார்கள்.இப்பிடியெல்லாம் இருக்க கொழும்பில் இருந்து வந்த குடும்பங்களில் ஒன்றுதான் ரேகாவின் குடும்பமும். .ரேகாவின் தந்தை எங்கள்ஊரை சேர்ந்தவர்தான்.

கொழும்பில் இருந்து வந்த அனேகமான குடும்பங்கள் தங்கள் உறவுக்காரர்களின் வீடுகளில் குடியேறிவிட ரேகாவின் குடும்பம் மட்டும் யாரும் தங்களுடன் ஏற்றுக்கொள்ளாததால் தனித்து விடப்படவே நாங்கள் எங்கள் ஊரில் யாருமற்றிருந்த பழையகாலத்து நாற்சார சுண்ணாம்பு வீடொன்றை துப்பரவாக்கி அதில் குடிஇருத்தினோம்.ரேகாவும் முதல் நான் சொன்ன கொழும்பு பெண்களின் அனைத்து அம்சங்களும் அடங்கிய பெண்ணாக இருந்தாள். அந்தவருடம் பத்தாவது படித்துகொண்டிருந்தாள்.அவளிடம் ஒருபார்வைக்காகவே எனது நண்பர்கள் ஏன் நான் உட்பட அவர்கள் வீட்டுக்கு முன்னாலை அடிக்கடி போய்வருவம்.அவர்கள் இருந்த வீட்டை பொதுவாக எல்லாரும் பழைய வீடு என்றுதான் சொல்லுறது வழைமை.அதன்பின்னர்தான் மெல்லஅவர்களைப்பற்றிய கதை ஊரில் அடிபடத்தொடங்கியது ரேகாவின் தந்தை கொழும்பில் கணக்காளராய் வேலை பார்த்தவராம் அவர் மட்டக்கிளப்பு பெண் ஒருத்தியை காதலித்து தன் தாய் தந்தை உறவுகாரர்களின் சம்மதமின்றி கலியாணம் செய்ததால்தான் எங்கள் ஊரில் யாரும் அவருடன் கதைப்பதில்லையென்று தெரிய வந்தது.

அதுமட்டுமல்ல அவர்எங்களிற்கு நெருங்கிய உறவு என்றொரு மேலதிகதகவலும் கிடைக்கவே.அதை உறுதி செய்ய ஒருநாள் வெத்திலை பாக்கு இடித்துக்கொண்டிருந்த அம்மம்மாவை ஓரம்கட்டி "எணோய் உந்த பழைய வீட்டிலை குடியிருக்கிற கொழும்பாக்கள் எங்களுக்கு சொந்தமாம் உண்மையோ" எண்டு கதையை தொடக்கினதுதான் தாமதம் அம்மம்மா கோபமாய் "அந்த பூராயம் உனக்கு எதுக்கு ஆனால் அந்த வீட்டுப்பக்கம் போகாதை ஏதும் தந்தாலும் வாங்கிக் குடிக்காதை உன்னை பாயோடை ஒட்டவைச்சிடுங்கள் அதுகள் மந்திரம் செய்யிற ஆக்கள்" எண்டார்.மந்திரம் செய்யிற ஆக்களா?? ஏதும் வாங்கிக் குடிச்சா பாயோடை ஒட்ட என்ன பிசினா குடிக்க தாறவை எண்டு யோசிச்சபடி எப்பிடியாவது அம்மம்மாவிடம் முழுவிபரத்தை அவர் வழியிலேயே போய் கேட்டறிய எண்ணி நானும். உண்மையோணை நான் அந்தப்பக்கம் போறேல்லை பிறகேன் ஏதும் வாங்கி குடிக்கப்போறன் சொந்தம் எண்டு கேள்விப்பட்டன் அதுதான் என்னமுறை எண்டு கேட்டன். சரி அவை ஆர் எண்ட .அம்மம்மா தொடங்கினார் எடேய் அவன் எனக்கு பெறாமகன் முறை பெடி நல்லவன் ஆளும் நல்ல வடிவான ஆம்புளை நல்ல கெட்டிக்காரன் படிச்சு எக்கவுண்டன் வேலையும் கொழும்பிலை எடுத்து நல்ல சம்பளம் ஆனால் அவனை உந்த மட்டக்கிளப்பள் மருந்து குடுத்து மயக்கிபோட்டாள் "எண்டார்.

அதுக்கு நான் சொன்னன் ஏனணை அவாவும் நல்லாப்படிச்சு கொழும்பிலை எக்கவுண்டன் தானாமே பிறகேன் இவரை மயக்கவேணும்" எண்டதும்.அம்மம்மா கோவமாய் "எடேய் அவளெங்கை படிச்சவள் அவள் மந்திரம் மாயம் செய்து எக்கவுண்டன் ஆகிட்டாள் அதமாதிரி இவனையும் மயக்கிபோட்டாள் எண்டு"பாக்குஉரலை ஓங்கி குத்த நானும்எனக்கும் வந்தவிசயம் முடிஞ்சுது அதாவது ரேகான்ரை அப்பா அம்மம்மாக்கு பெறாமகன் எண்டால் எனக்கு சித்தப்பாவோ பெரியப்பா முறை அப்ப ரேகா தங்கை முறை.அட சே கிழவி இப்பிடியொரு குண்டைத்தூக்கி போட்டிட்டுதே எண்டு கவலையானாலும்.அம்மம்மா சொன்ன மந்திர விசயம் சிலநேரம் உண்மையா இருந்தால் நான் படிச்சு சோதினை எழுதி பாசாகிறதெல்லாம் நடக்காத அலுவல் அதாலை ரேகான்ரை அம்மாட்டை மந்திரத்தை கேட்டுப்படிச்சு பேசாமல் ஒரு டொக்ரர்ஆகவோ இஞ்சினியராவே வந்திடவேணும் என்று நினைச்சபடி.வழைமையான கோயில் மடத்தடிக்கு போகவும் அங்கு தயாராய் இருந்த என் நண்பன் இருள்அழகன் என்னிடம் டேய் வீட்டிலை கேட்டனியா ரோகா என்ன முறையாம் உனக்கு எண்டவும். நான் "அட போடா அவள் எனக்கு தங்கச்சிமுறையா போச்சுது எண்டு கவலையோடை சொன்னதுதான் தாமதம்.

எங்கள் ஊர் கோயில் குளத்தில் இருந்த அத்தனை தாமரைப்பூவும் இருள்அழகனின் முகத்தில் மலர்ந்தது போல ஒரு புன்னகையுடன் பிள்ளையாரான உண்மையாவோடா எண்டவன் சரி அப்ப போய் கொக்ககோ கோலா குடிச்சிட்டு வருவம் வா மச்சான் எண்டு கூப்பிட்டான்.அட ஒரு பிளேன்ரீ கூட வாங்கித்தாராதவன் ரேகா எனக்கு தங்கை முறை எண்டதும் கொக்கோ கோலா குடிக்ககூப்பிடுறான் பின்னாலை ஏதோ விலங்கம் இருக்கு எண்டு நினைச்சபடி போய்விட்டேன்.நான் நினைச்சபடியே ஒருநாள் இருள்அழகன் என்னிடம் டேய் ரேகாவை நான் லவ்பண்ணுறன் அவளுக்கும் விருப்பம் இருக்கு எண்டுதான் நினைக்கிறன் ஆனால் நேரை கேக்க பயமா கிடக்கு அவளின்ரை மனசை கவருற மாதிரி நீதான் எனக்கு ஒரு கடிதம் எழுதித்தர வேணுமாடா எண்டு கெஞ்சினான்.ஆனால் ரேகாவிற்கு அப்பிடி ஏதும் விருப்பம் இருந்ததாய் எனக்கு தெரியேல்லை ஆனால் நம்ம இருள்அழகன் கடிதம் குடுத்து பெட்டையளிட்டை பேச்சு வாங்கினது அது ஒண்டும் முதல்தரம் இல்லையே அதுமாதிரி ரோகாவிட்டையும் பேச்சு வாங்கிறதை கூத்துப்பாக்கலாம் எண்டு நினைச்சு "குளோரினை குடித்து குளோரினில் குளித்த கொழும்பு கோலமயிலே" என்று என்னுடைய வழைமையான நக்கல் பாணியிலேயே கவிதை வடிவில் எழுதி நண்பனிடம் கொடுத்துவிட்டேன்.ஆனால் நான் ஒன்று நினைக்க ரேகா ஒன்று நினைத்துவிட்டாள்.

அந்தக்கடிதத்தை அவள் அழுதபடியே தன்வகுப்பாசிரியையிடம் காட்ட. அந்த ஆசிரியை அதிபரிடம் காட்ட. அதிபர் ரேகாவையும் கூட்டிக்கொண்டு எங்கள் பாடசாலை அதிபரிடம் வந்து முறையிட. ஒரு தலைமை மாணவன் வந்து எங்கள் வகுப்பில் இருள்அழகனை அதிபர் கூப்புடுறார் என்றுவிட்டு போனான்.இருள்அழகனும் குடும்பத்தை விட்டு பிரிந்து போகும் புதுமணப்பெண்ணைப்போலை எங்களை பார்த்தபடி போய்விட்டான்.கொஞ்ச நேரத்தாலை வேறையொரு தலைமை மாணவன் வந்து என்னைக் கூப்பிட்டான். நண்பன் என்னை போட்டுக்குடுத்திட்டான் எண்டு எனக்கு விளங்கிவிட்டது . நான் அதிபர் அறைக்கு போனதும் அங்கை இருள்அழகன் மேசைக்கு கீழே தலையை குனிந்தபடி நிக்க அதிபரின் பிரம்பு இருள்அழகனின் பின்பக்கத்தில் தூசு கிழப்பிக்கொண்டிருந்தது. என்னைக்கண்டதும் அதிபர் அடியை நிப்பாட்டிவிட்டு என்னைப்பாத்து வாங்கோ கவிஞரே எண்டார். அதைகேட்டு சந்தோசப்படவா முடியும். எனக்கும் தூசு பறக்கபோகுது எண்டு பயந்தபடி நிக்க அதிபர் என்னைப்பாத்து உனக்கு அடிச்சு பிரயோசனமில்லை அதாலை நீ வீட்டைபோய் அப்பாவை கூட்டிக்கொண்டுவா எண்டார். எதுக்கு எண்டு யோசிக்கிறீங்களா??வேறையெதுக்கு பள்ளிக்கூடத்தை விட்டு நிப்பாட்டத்தான்.