Navigation


RSS : Articles / Comments


உயிர்காக்க உதவி தேவை IATAJ

2:12 AM, Posted by sathiri, No Comment


ஒரு பேப்பரிற்காக எழுதியது

உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழ்மக்களே ஊடகத்துறை சார்ந்தவர்களே உதவி செய்யுங்கள். இந்தக் குழந்தையின் உயிர் காக்க உடனடியாக இரத்தம் தேவை.இரத்தம் A. B. AB. O. என்கிற பிரிவு பிரச்சனை இல்லை ஏனெனனில். ஏற்கனவே எங்களில் இருக்கின்ற பிரிவுகளே போதும்.ஆனால் இரத்தத்தில் இனஉணர்வு.விடுதலையுணர்வு எல்லாவற்றிற்கும் மேலாக பட்டம் பதவி ஆசைகளற்ற கடைமையுணர்வு.இவை எல்லாம் கலந்த புது இரத்தம் உடனடியாகத்தேவை.ஏனெனில் நோயாளிக் குழந்தை மிகவும் அபாயக்கட்டத்தில் கோமா நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது. இந்தக் குழந்தையின் பெயர் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம். இது .24.06.06......அன்று இலண்டனில் பிறந்தது.இதற்கு ஒன்றரை வயதாகிவிட்டது. இந்த ஒன்றரை வயதில் நான்கு பிறந்தநாட்களை அதுவும் பிரான்சில் இரண்டு ஜெர்மனியில் இரண்டு என நான்கு பிறந்தநாட்களை கோலாகலமாக கொண்டாடி முடித்துள்ளது.இந்தப்பிள்ளைய??வது வளர்ந்து தமிழ் ஊடகத்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களையும் உலக நாடெங்கும் சிதறிப்போய் கிடக்கும் பல சிந்தனையுள்ள பத்திரிகையாளர்களையும் பல ஊடகங்களையும் ஒன்றாக்கி உறவாக்கி ஏதோ சாதனை செய்யப்போகின்றது என்று கற்பனையில் இருக்க. இதற்கு வியாதி பிடித்து அதன் உறவினர்களாலேயே கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இந்தக்குழந்தைக்கு பால்மா வாங்கவே சிரமப்படும் தாயாரால் வைத்தியத்தை எப்படிப்பார்க்கபோகிறார் எனபதுதான் கவலை.குழந்தையின் உறவுகள்பற்றிய விபரம்.இந்தக்குழந்தை அவதாரக்குழந்தை எனபதால் தாயார் மட்டுமே உள்ளார் . தாயார் பெயர் ஆனந்தி சிவப்பிரகாசம். தலைவர்( முன்னாள் பி.பி.சி. தமிழோசையின் பணிப்பாளர்.)சித்தப்பா மற்றும் இந்தக்குழந்தையின் வைத்தியர். இரா துரைரட்ணம்.உபதலைவர் ( இலங்கை தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பத்திரிகையாளர்.)இவரும் குழந்தைக்கு வைத்தியம் பார்க்காமல் கைவிட்டுள்ளதாகவே அறியமுடிகின்றது.குகதாசன் குஞ்சியப்பு.நோர்வே(பத்திரிகையாளர்)கோபி மாமா இங்கிலாந்து (ஒரு பேப்பர் பத்திரிகையாசிரியர்)பற்றிமாகரன் தாத்தா இங்கிலாந்து ( அரசியல் ஆய்வாளர் மற்றும் பத்திரிகையாளர்)சிவா சின்னப்பொடி .பிரான்ஸ்(பத்திரிகையாளர்)றூபினி செல்வநாதன் ஜெர்மனிவேந்தர்கோன்.இங்கிலாந்து -( வடலி பத்திரிகை ஆசிரியர்)கந்தசாமி.இங்கிலாந்துஇப்படி உலகெங்கும் பலமான பிரபல்யமான உறவினர்கள் இருந்தும் இந்தக்குழந்தை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இந்தக்குழந்தையும் அவ்வப்போது சில சிணுங்கல்களுடன்(சில அறிக்கைகள்) நித்திரையாகி விடுகின்றது. எனவே இனிவரும் காலங்களிலாவது சம்பத்தப்பட்டவர்கள் ஊட்டச்சத்துக்கள் ஊட்டி இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்காளா??http://www.iataj.org/

No Comment