Navigation


RSS : Articles / Comments


தாலியறுக்க சில ஆலோசனைகள்.

1:15 PM, Posted by sathiri, No Comment

தாலியறுக்க சில ஆலோசனைகள்.

இதென்னடா சாத்திரி ஊரிலை காணிவேல் கோயில் திருவிழாக்களிலை தான் செய்ததை இஞ்சை வெளிநாட்டிலையும் செய்யச்சொல்லி ஆலோசனை சொல்லுறாரோ எண்டு யோசிக்காதையுங்கோ. இது கள்ளத்தாலி அறுக்க ஆலோசனை இல்லை இது கணவன்மார் இறந்தால் பிறகு மனைவிமார் அறுக்கிற சடங்குத்தாலியறுப்பு.இது பொதுவான தமிழரின்ரை இல்லையில்லை இந்துக்களின்ரை சே அதுவுமில்லை இந்துதமிழரின்ரை இல்லை சைவத்தமிழரின்ரை எண்டு சொல்லலாமோ தெரியாது எனக்கும் சரியாய் தெரியாது ஆனால் எங்கடை முன்னோர் செய்த ஒரு சடங்கு அதுமட்டும் வடிவாத்தெரியும்.அது பொதுவா நடக்கிற ஒரு சடங்குதானே அதுக்கேன் ஆலோசனை எண்டு யோசிக்கிறீங்கள் எனக்கு விழங்குது. ஆனால் எங்கடை பெட்டையளை வயசுக்கு வந்ததும் கலியாணத்தை கட்டிக்குடுத்து கலைச்சு விடாமல்இப்ப காலமாற்றத்திலை பள்ளிக்கூடம் போகவிட்டதுபெரிய தப்பா போச்சுது.

எங்களுக்கு சமமாமுன்னேறி்கொண்டுவந்தது மட்டுமில்லை எங்களை எதிர்த்து கேள்வி வேறை கேக்கினம். அதுமட்டுமில்லை அவையை ஒடுக்கி வைக்கிறதுக்கு நாங்கள் கஸ்ரப்பட்டு கண்டுபிடிச்சு காலம்காலமா செய்துகொண்டு வாற சம்பிரதாயங்களையுமல்லோ செய்யக்கூடாது எண்டினம். போன முறையான் ஒரு பேப்பரிலை படிச்சிருப்பீங்கள் யாழிலையும்போட்டு வெட்டி பிறகுபோட்டு திருப்பவும் வெட்டி காணாமல் போட்டுது. யெர்மனியிலை நடந்த ஒரு தாலியறுப்பு சடங்கை செய்தது சரியில்லையெண்டு சாந்தி ரமேஸ் எண்டவா எழுதியிருந்தவா.எங்கடை சடங்கு சம்பிரதாயத்தை எதிர்த்து அதுவும் கேவலம் ஒரு பொம்பிளை எப்பிடி எதிர்த்து எழுதலாம். கட்டுரையை படிச்சஎனக்கு வந்த கோபத்திலை ஒரு பேப்பரை சுக்குநூறா கிழிச்சு எறிஞ்சுபோட்டன்.கட்டுரையை எழுதினவாவின்ரை நம்பரைத்தேடியெடுத்து நல்லாத்தண்ணியைபோட்டிட்டு நடுச்சாமத்திலை போனடிச்சு நாலுகிழி குடுப்பம் எண்டுதான் நினைச்சனான் ஆனால் பொலிசிலை போய் வழக்கு போட்டாலும் எதுக்கு வில்லங்கத்தை எண்டு நினைச்சுப்போட்டு.

இந்த புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளிலை வெள்ளைக்காரனிட்டை கோட்சூட் போடுறது முள்ளுக்கரண்டியாலை சாப்பிடுறது வைன்கிளாசை முட்டி சியஸ் சொல்லறதெண்டு எங்களுக்கு சாதகமான பல சம்பிரதாயங்களை பழகினாலும் எங்கடை தாலியறுப்பு சம்பிரதாயத்தை காப்பாத்திறதுக்காகவும்.இனிம༢r />??ல் காலத்திலை இப்பிடி நாலுஎழுத்து படிச்சிட்டு எங்கடை சடங்கு சம்பிரதாயங்களை விமர்சிக்கிற பெண்களிட்டை இருந்து எதிர்ப்பு வராமல் காப்பாத்தவும் சில ஆலோசனையளை எழுதலாம் எண்டு நினைக்கிறன்.

1) ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் மரணவீடுட்டுடன் சேர்த்து தாலியறுப்பு நிகழ்வை செய்யாமல் அதற்கு தனியாக ஒருநாள் பெரிய மண்டபம் எடுத்து காட்அடிச்சு ஆக்களை கூப்பிட்டு செய்யலாம்.

2)பொதுவாக இந்த தாலியறுப்பு நிகழ்வினை எங்கள் சம்பிரதாயப்படி பல விதைவைப்பெண்கள் சேர்ந்து செய்வதுதான் வழைமை எனவே நீங்கள் வசிக்கின்ற நகரத்தில் தமிழ் விதைவைப்பெண்கள் கிடைக்காவிட்டால் ஏதாவது ஒரு பேப்பரில் "தாலிறுப்பு நிகழ்வு நடாத்த விதைவைப்பெண்கள் தேவை அவர்களிற்கான போக்கு வரத்து செலவு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்" என்று ஒரு விளம்பரத்தை போடலாம்.

3)இந்த நிகழ்வினை ஒப்பாரிப்பாடலுடன் செய்தால் அதற்கென ஒரு தனி மவுசு கிடைக்கும். புலம்பெயர் நாடுகளிலை உள்ள பெண்களிற்கு தாலாட்டு பாட்டே தெரியாது இதுக்கை எப்பிடி ஒப்பாரி தெரியப்போகுது. அதாலை ஊரிலை அல்லது இந்தியாவிலை இருந்து ஒப்பாரி தெரிந்த கிழவிகளை அழைத்து வரலாம். அவருக்கு வெளிநாட்டுக்கு கூப்பிடுற விசா எடுக்கிறதுக்கு. எங்கள் கலாச்சார நிகழ்விற்கான விசேட பாடகர் என்று கேட்டால் கட்டாயம் வெளிநாட்டு தூதரகம் விசா தரும். ஆனால் இப்பிடி வருகிற ஒப்பாடி பாடகர்கள் பிறகு காலப்போக்கிலை கோயில் பூசைக்கு முன்னர் கூட்டிக்கொண்டு வந்த குருக்கள்மார் மாதிரி உங்கடை செலவிலை வெளிநாட்டுக்கு வந்திட்டு தனியா அசேலம் அடிச்சு இல்லாட்டி இமிகிரண் விசா எடுத்து சொந்தமா தொழில் செய்யத்தொடங்கிவிடுவினம். அதாலை முன்னெச்சரிக்கையையாய் அவையை கூட்டியந்த உடைனையே பாஸ்போட்டை பிடுங்கி வைச்சுக்கொண்டு நாலு இடம் சுத்திக்காட்டி நாலு பேரோடை பழக விடாமல் வந்த காரியம் முடிஞ்சதும் நேரை ஏயார்போட்டிற்கு கொண்டு திருப்பி ஏத்திவிடுங்கோ.


4)இந்த மூன்றாவது யோசனை கொஞ்சம் சிக்கலானதாகவோ செலவானதாகவோ தோன்றினால். இன்றைய விஞ்ஞானத்தை எங்கடை சம்பிரதாயங்களிலை புகுத்தலாம். அதாவது இப்ப வெளிநாடுகளிலை கன கலியாண வீட்டிலை ஏன் கோயில்களிலையும் மேளச்சத்தம் சிடியிலைதான் போகுது. அதுமாதிரி இந்த ஒப்பாரியையும் சிடியிலை அடிச்சு விட்டால் பிரச்சனை முடிஞ்சுது. சிடிவெளியிடுற நிறுவனக்காரர் இதை கவனத்தில் எடுக்கவும் உங்களிற்கும் ஒரு வியாபாரம் நடந்தமாதிரி இருக்கும்.

5) இந்த தாலியறுப்பு நிகழ்வைப்போல உடன்கட்டை ஏறுகிறது அதாவது கணவன் இறந்து போனால் கணவனை எரிக்கிற நெருப்பிலேயே மனைவியும் குதிச்சு இறந்து போறதும் எங்கடை முன்னோர்கள் செய்த சம்பிரதாயம் எண்டு புத்தகங்களிலை படிச்சு அறிஞ்சிருக்கிறன்.ஆனால் எங்கடை சடங்கு சம்பிரதாயங்களை அழிக்க வேணுமெண்டே சிலர் சதிசெய்து சட்டங்களை போட்டு அதை இல்லாமல் செய்து போட்டினம். ஆனாலும் இந்தியாவிலை சிலர் இடைக்கிடை செய்யினம். அழிஞ்சுபோன அந்த சம்பிரதாயத்தை திருப்பவும் நாங்கள்தொடங்கவேணும் ஆனால் வெளிநாட்டிலை அதுக்கு சட்டம் இடங்குடுக்காது. அதுக்கான அனுமதியை தரசொல்லி வழக்கு போடலாம்.

சரி இனிமேல் காலங்களிலை நடக்க இருக்கிற தாலியறுப்பு விழாவிற்கு எனக்கும் மறக்காமல் கட்டாயம் அழைப்பிதழ் அனுப்புங்கோ நேரிலை வந்தும் சில ஆலோசனையள் சொல்லுறன் நன்றி சாத்திரி

No Comment