Navigation


RSS : Articles / Comments


ஓலை கொண்டு வந்துள்ளோன் அய்யா

2:09 AM, Posted by sathiri, No Comment



பெருமதிப்பிற்குரிய நாகலிங்கம் அய்யா அவர்களிற்கு உங்களிற்கு யாரோ முடிசூட்விட்டார்களாம் என்கிற செய்தி அறிந்ததும் பதறிப்போய்விட்டேன். அதே போலவே நீங்களும் அந்தத் தருணத்தில் பதறிப்போயிருப்பீர்கள். அந்த நேரம் உங்கள் உள்ளம் என்ன வேதனைப்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கும்போது என்வேதனை இன்னமும் அதிகரிக்கின்றது.ஏனெனில் உங்களை இன்று நேற்றல்ல நீங்கள் இணுவில்......கற்பித்த காலத்திருந்து உங்களை நான் அறிந்தவன். ஊருக்கு நீங்கள் செய்த உபகாரங்கள் எத்தனையோ எத்தனையோ. அதுமட்டுமல்ல புலம் பெயர்ந்து வந்த தேசத்திலும் கொடுத்தே பழக்கப்பட்ட கைகளை பொத்தி வைக்க முடியாமல் நீங்கள் புலம்பெயர் தேசத்திலும் பொதுநலத்தெண்டுகளையும் தன்னலமற்ற தமிழ்தொண்டுகளையும் பார்த்து நான் பூரித்து போயிருக்கிறேன். பூமாலை பொன்னாடை புழுகித்தள்ளும் புகழ்சிகள் இவற்றுக்கு அடிமையாகாத பண்பு அதற்கும் மேலாக உங்கள் தற்புகழ்ச்சி பிடிக்காத தன்னடக்கம். இவைகளிற்காகவே எங்கள் தேசியத்தலைவரே அவர்கள்கையால் உங்களிற்கு விருதுவழங்கி கொளரவித்திருந்தார்.

தமிழனாய்ப்பிறந்த ஒருவனிற்கு அவனது வாழ்நாளில் இதைவிடப்பெரிய கொரவவம் வேறு என்ன வேண்டும்.ஆனாலும் இந்திய அரசியல் சாக்கடையின் சம்பிரதாயங்களான முடிசூடுதல். வீரவாள் கேடயம் கொடுத்தல்.காலில் விழுதல்.விரலைக்கீறி இரத்தத்தால் வெற்றித்திலகமிடுதல்.பச்சை குத்துதல். பட்டங்கள் கொடுத்து பொன்னாடை போர்த்தி புகழ்ந்து தள்ளிவிட்டு பின்னர் அடுத்த மேடையிடையில் அதேநபரை தூற்றி துவேசித்தல். அடு்த்தவேளை சோற்றுக்கு வழியில்லாத தொண்டன் தலைவர்வாழ்கவென தொண்டை கிழியகத்துதல். இவையெல்லாம் பெரியளவில் இல்லாவிட்டாலும் எங்கள் ஈழத்தமிழர் சமூகத்திலும் முன்னைய காலங்களில் சிறிதளவு தொற்றியிருந்தது உண்மைதான் ஆனால் தமிழர்விடுதலைக்கூட்டணி கட்சியின் அழிவோடு அந்தசம்பிரதாயங்களும் அழிந்துபோய்விட்டன்.ஈழத்தில??புதிதாய்ப்பிறப்பெடுத்த எம்புதியசமுதாயம் புலிகள் காலத்தில் உலகேவியக்கும் பல புதுமைகளை செய்துகொண்டிருக்கும்வேளை புலம்பெயர்தேசத்து தமிழர்கள் பிடுங்கியெறியப்பட்ட பழைய சம்பிரதாய்ஙகளை தேடியெடுத்து புளிபோட்டுதேய்த்து புது முலாம் பூசிக்கொண்டிருக்கின்றனர். ஒரு முற்போக்கு வாதியான உங்களால் இவவற்றையெல்லாம் எப்படி உங்களால் தாங்கிக்கொள்ள முடிகின்றது.

அய்யா யேசு நாதருக்கு யூதர்கள் முள்முடி சூட்டி சவுக்கால் அடித்து சிலுவையை சுமக்கச் சொன்னபொழுது அவர் யூதர்களைப்பாத்து கோபப்படாமல் கடவுளிடம் "தந்தையே இவர்கள் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதனை அறியாபாவிகளாய் இருக்கின்றனர் எனவே இவர்களை மன்னியுங்கள் " என்று வேண்டிக்கொண்டாராம்.அதேபோல??ான் அன்று ஜெர்மன் கிறீபீல்ட் நகரில் உங்கள் தலையில் சூட்டப்பட்ட அந்த முடி நிச்சயம் உங்களிற்கு முள்முடியாக வேதனை தந்திருக்கும். ஆகவே அவர்கள் அறியாமல் செய்த பாவத்தை நீங்கள் மன்னித்தருளுங்கள் என்று நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

No Comment