Navigation


RSS : Articles / Comments


தேர்தல் திருவிழா - கருணாநிதியின் கபட அரசியல்

11:11 PM, Posted by sathiri, No Comment

இதோ தமிழ்நாட்டில் இன்னொரு தேர்தல் திருவிழா. வழமை போ; கிடைக்குமிடத்திலெல்லாம் வண்ண வண்ண சுவரொட்டிகள் வாண வேடிக்கைகள் பேரங்கள் பேச்சுகள் அறிக்கைககள். வீர வசனங்கள் வசை பாடல்கள் என்று ஒரு தேர்தலுக்கேயுரிய அத்தனை அம்சங்களுடனும் இந்த தேர்தலும் அதன் நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. அந்த தேர்தல் இறுதி நாட்களிற்கிடையில் யார் யார் என்ன வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் யார் யார் எந்த கட்சியுடன் கூட்டு வைக்கிறார்கள் யார் கட்சி தாவுகிறார்கள் என்பது எல்லாம் எமது சிறிய அறிவக்கு எட்டாத விடயம் அதை விடுவோம் காரணம் அதை எந்த ஆய்வாளர்களாலேயொ அல்லது சாத்திரம் பார்ப்பவர்களாலேயோ கூட கணிக்கமுடியாத விடயம்.

இந்த தேர்தலில் கூட்டாகவும் தனியாகவும் பல தமிழ் நாட்டு கட்சிகளும் முக்கியமாக எட்டு பெரிய கட்சிகள் சந்திக்கின்றன. அந்த கட்சிகளின் முக்கிய விடயங்களாக பதின் நான்கு விடயங்கள் முன்வைக்க படுகின்றது.

அந்த பதின் நான்கு விடயங்களில் ஈழதமிழர் மற்றும் புலிகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பும் இந்த பதின் நான்கு விடயத்தில் அடங்குகிறது. அது வழமையா நடக்கிறதுதானே இதிலென்ன புதினம் வழமையானதுதானே எண்று நீங்கள் யோசிப்பதும் புரிகிறது.

தமிழ் நாட்டில் எதிரும் புதிருமான இரண்டு பெரிய கட்சிகளான அ.தி.மு.க. வும் தி.மு. க இரண்டுமே ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின்னர் தமிழக தேர்தலில் இம்முறை ஈழ ஆதரவு சங்கை ஊத தொடங்கிருக்கிறார்கள். இவர்கள் எப்படித்தான் ஏற்ற இறக்கத்துடனும் இராகத்துடன் ஊதினாலும் எமக்கு கேட்பது வெறும் கூகூகூகூ தான்.

இதில் தனது வீட்டுக்கு மேலால் புலிகளின் விமானம் பறக்கிறது தன்னை கொல்ல பேகிறார்கள் என்று கூக்குரலிட்ட ஜெயலலிதா ஒருவர். மற்றையது தனக்காகவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும்என்னென்ன தகிடுதனங்கள் காலை வாருதல் முதுகில் குத்தல் நம்பவைத்து களுத்தறுத்தல் என்று என்னென்ன சூழ்ச்சிகள் எல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் அசர தந்திரம் என்கிற பெயரில் செய்து இன்று அரசியல் சாக்கியன் என்கிற பெயருடன் நிற்கும் கருணாநிதி.

இவர்களது ஈழதமிழர் மற்றும் புலிகள் மீதான பாசம் ஒன்றும் அவகள் அடிமனதிலிருந்து வந்ததல்ல அதற்கு காரணம் இன்று புலிகளின் பலமும் அதற்கு உறுதுணையாய் நிற்கும் ஈழ மற்றும் உலக தமிழர்களின் உண்மையான ஆதரவுமேயாகும்.இதிலே ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சி வேகத்தால் தலைவரானவர். கருணாநிதியோ ஆரம்பகாலத்திலிருந்தே தனது கட்சிக்குள் திட்டமிட்டு காய் நகர்த்தி தனது தகிடுதனத்தால் தலைவரானவர்.ஈழதமிழர் மற்றும் புலிகள் விடயத்தில் ஜெயலலிதா நேரடியாக பகிரங்மாக எதிர்த்த ஒருவர் கருணாநிதியோ வழைமையான வழுவல் போக்கில் நம்முன்னே புன்னகைத்தபடி பலதடைவை முதுகில் குத்திய குள்ளநரி.அதை அவர் ஈழபோராட்ட கால ஆரம் பதிலிருந்தே அதை செவ்வனே செய்து வந்த ஒருவர். அதில் பலவற்றை பக்கம் பக்கமாய் எழுதலாம்.

உதாரணத்திற்கு சில இலங்கைக்கும் இந்தியாவிற்கும் சட்டபடி எந்தவித நாடுகடத்தல் ஒப்பந்தமும் இன்றி ஈழவிடுதலை போராட்டத்தில் ஆரம்பகாலத்து போராளிகளில் ஒருவரான குட்டிமணியை 1973ம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டு கோளிற்கு இணங்க தஞ்சாவூரில் கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவிட்டார். பல அண்டுகளின் பின்னர். நீலன் திரு செல்வத்தின் கொலையுடன் சம்பந்த பட்டவர் என இலங்கையரசால் தேடப்பட்டவர் தமிழ்நாட்டில் சட்டப்படி அங்கு எந்த வித பிரச்னையும் இன்றி இருந்தபோது சி.பி.ஜ யினால் கைது செய்யபட்டு அவரை நாடு கடத்த கருணாநிதியிடம் ஒப்புதல் கோரபட்டபோது சட்டத்திற்கு புறம்பாக நாடு கடத்தும் அனுமதியை கொடுத்தார். ஆனால் தமிழ் நாட்டில் வங்கி கொள்ளையிலும் மற்றும் ஒரு கொலையுடனும் நேரடியாக சம்பத்தபட்டு இந்திய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கபட்ட டக்ளஸ் தேவானந்தாவோ இவர் ஆட்சியின்போது தமிழ் நாட்டில் போய் நட்சத்திர விடுதியில் படுத்திருந்து பத்திரிகைக்கு பேட்டியும் கொடுத்துவிட்டு வருகிறார்.

எப்போதுமே நக்கலும் நளினமாகவுமே பேசிபழக்கபட்ட கருணாநி எமது மக்களின் பாரிய பேரழிவுகளும் போராட்டமும் கூட அவருக்கு நக்கலாய் தெரிந்திருக்கவேண்டும் அதனால் ஒரு பத்திரிகை பேட்டியின் போது சொன்னார் தமிழீழம் கிடைத்தால் சந்தோசம் ஆனால் புலிகளை ஆதரிக்கமாட்டேன் என்றார். அதற்கு தேனிசை செல்லப்பா பாரீசில் நடந்த ஒரு நிகழ்சியின் போது அவரது பாணியிலேயே பதிலடி குடுத்தார். கருணா நிதியின் மகள் கனி மொழிக்கு பிள்ளை பிறந்தால் சந்தோசம் ஆனால் திருமணம் செய்வது கருணாநிதிக்கு பிடிக்காது என்று.

அதைவிட இந்த தேர்தலில் ஈழ அதரவு கட்சிகளான ம.தி.மு.க.வும் பா.ம.க. வும் கருணாநிதியுடன் கை கோர்த்து நிக்கும் போது ஏன் கருணா நிதிக்கு எதிராக இப்படியொரு கட்டுரை என்று படிப்பவர்கள் யோசிக்கலாம்.

அந்த இரு கட்சிகளும் ஈழதமிழருக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சியான விடயமே அவர்கள் கருணாநிதியுடன் கூட்டு வைத்திருப்பது அவர்களது எதிரகால அரசியல் ஆதாயங்களிற்காகவே தவிர அன்பினால் அல்ல. அதற்கு உதாரணமாக அண்மையில் ஒரு கூட்டத்தில் வை.கோ அவர்கள் கூறிய பாம்பின் நிழலில் பாதுகாப்பு தேடிய தவளை கதையோ போதுமானது.எம்மை பொறுத்தவரை கருணாநிதியின் நக்கல் மொழியில் சொலவதானால் இந்த தேர்தலில் ஜெயலலிதா வெல்ல வேண்டுமென்பதல்ல எமது விருப்பம் ஆனால் கருணாநிதி தோற்க வேண்டும். நேரடியாக சொல்ல போனால் தழுவி கொண்டே குழி பறிக்கும் கரணாநிதியை விட நேரே எதிர்க்கும் ஜெயலலிதாவே மேல்

http://www.orupaper.com/issue42/pages_K__34.pdf

No Comment