Navigation


RSS : Articles / Comments


ஊடகங்கள்

11:01 PM, Posted by sathiri, No Comment

ஊடகங்கள்

இன்று புலத்தில் பலஊடகங்கள் பொருகி விட்டன அவ் ஊடகங்களால் எமது போராட்டத்தை பற்றிய தெளிவை எமது பேராட்டத்தின் நியாயங்களை எவ்வளவு தூரம் அந்தந்த நாடுகளில் அந்த நாட்டு மொழில் அந்த நாட்டுமக்களிற்கு எடுத்து சென்றிருக்கிறார்கள் என்று பார்த்தால் பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின்பங்கு என்பது இந்த விடயத்தில் மிக மிக குறைவாகவே காணப்படுகிறது .புலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் அந்த நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுடன் எவ்வளவு தூரம் உத்தியோக புர்வமாகவோ அல்லது நட்பு ரீதியான தொடர்புகளை பேணிவருகிறார்கள் என்று பார்த்தால் பெரிதாக எதுவுமில்லை அதனாலேயே புலத்தில் எமது போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெறும் நிகழ்ச்சிகள் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பன பற்றிய விபரங்களோ அல்லது அதன் விளக்கங்களோ அய்ரோப்பிய மக்களிற்கு முறையாக சென்றடையவில்லை.

அதற்கு மிக பெரிய உதாரணம் புலிகளின் மீதான அய்ரோப்பிய யுனியனின் சில நடவடிக்கைகளைஎதிர்த்து அண்மையில் பெல்யியத்தில் நடந்து முடிந்த ஊர்வலம்.எல்லா தமிழ் ஊடகங்களிலும் ஒருமாத காலமாக பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளபட்டு பெல்யியத்தில் பதினைந்தாயிரம் மக்களிற்கு மேல் கூடி நடந்த மிக பெரிய அந்த பேரணி பற்றி பெல்யிய மற்றும் அய்ரோப்பிய ஊடகங்களிற்கோ மக்களிற்கோ தெரியாமல் போய்விட்டது.

ஏதோ ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது போல் நடந்து முடிந்து விட்டது.அந்த ஊர் வலத்திலும் தமிழ் ஊடகவியலாளர் எனப்படுபவர்களும் அதன் தலைவியும் வழைமை போல அடையாள அட்டையை மார்பில் குத்திகொண்டு புகை படங்களிற்கு அளகு காட்டி பின்னர் நடந்தவற்றை அதனை ஒரு செய்தியாய் தயாரித்து குறிப்பாய் தாங்களும் தங்கள் குடும்ப அங்கத்தவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட புகை படங்களுடன் ஒரு செய்தியையே அதுவும் தமிழ் ஊடகங்களிற்கு மின்னஞ்சல் செய்ததோடு; அவர்கள் பணி முடிந்து விட்டது.

இதனை அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட யாரும் செய்திருக்லாம் அதற்கு புலம் பெயர் ஊடக துறை அதற்கொரு தலைவி என்றொரு தகுதியோ அடையாளமோ தேவையில்லையே. அந்த மாபெரும் ஊர்வலத்தின் விபரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி அய்ரோப்பிய ஊடகங்களினுடாக அய்ரோப்பிய மக்களிடம் எடுத்து சென்று அவர்களின் ஆதரவினை எமது பக்கம் பெற்றுதர தவறிய மாபெரும் தவறு புலம் பெயர் ஊடக தலைவியையே சாரும்.

அதுமட்டுமல்ல அய்ரோப்பிய ஊடகங்களில் செய்திகள் வெளிவராததை சுட்டி காட்டி தமிழ் தேசியத்திற்கொதிராக பிச்சை காசிற்காக எழுதும் எச்சிலிலை இணைய மற்றும் செய்தி ஊடகங்களின் நகைப்பிற்கும் நாம் ஆளாகி விட்டோம் என்பதே மிக பெரிய வேதனை. இனிமேலாவது இப்படியான தவறுகள் நடக்காமல் அதற்கு பொறுப்பானவர்கள் பாத்து கொள்ள வேண்டும் .இல்லாவிடில் அவர்களிற்கு நேரமின்மை இயலாமை என்றால் நல்ல வேகமும் திறைமையும் உள்ள இளம் சந்ததியினரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு அவர்கள் பேசாமல் வீட்டிலிருந்து தொடர் நாடகம் பார்ப்பது மேல் . சிந்திப்பார்களா???

No Comment