Navigation


RSS : Articles / Comments


குளு குளு டென்மார்க்கில் கிளு கிளு பெண்சாமியார்

11:08 PM, Posted by sathiri, No Comment

காலங்காலமாய் போலிசாமியார்கள் பற்றிய செய்திகள் வருவதும் அவர்கள் பிடிபடுவதுமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் எம்மிடையே இன்னமும் போலி சாமியார்கள் உருவாகி கொண்டும் மக்கள் அவர்களை நம்பி கொண்டும் தான் இருக்கிறார்கள்.ஆனாலும் போலி சாமியார் களை நம்புகிற விடயத்தில் இந்தியாவை போல எம்மவர்கள் அதிகம் இல்லை எண்று மகிழ்ச்சியடைவதா அல்லது இன்னமும் போலிகளை நம்பும் எம்மவர் இருக்கிறார்கள் என்று கவவையடைவதா என்று தெரியவில்லை.

80 களில் யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதிகளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர் பிரேமானந்தா சாமியார்.அவரை ஒரு போராளி குழு ஒன்று பிடிக்க சென்றபோது மயிரிழையில் இந்தியாவிற்கு தப்:பியோடி அங்கு இந்தியாவில் தமிழ்நாட்டை ஒரு கலக்கு கலக்கி இப்போது சிறைச்சாலையில் எந்த வித அற்புதங்களும் செய்யமுடியால் நாழை கழிக்கிறார். பின்னர் அவ்வப்போது ஈழத்தில் சில சாமியார்கள் தோன்றி சாமியாடுவதும் அருள் வாக்கு சொல்வதும் பின்னர் அவர்களை போராளிகள் அழைத்து போனதும் அவர்கள் அருளும் போய் அம்மனும் மலையேறி சாதாரண மனிதர்களாய் திரிவதும் பலரும் அறிந்ததே.

ஆனால் இன்று புலத்தில் டென்மார்க் நாட்டில் ஒரு பெண் சாமியார் தோன்றி சாமியாடி அருள் சொல்கிறார் அவரையும் அவரது பின்ணணி பற்றியும் சிறிது பாரக்கலாம் . இந்த பெண் சாமியார் ஈழத்தில் ஏழாலையை சேர்ந்தவர் இவரும் மற்றை ஈழதமிழர்களை போல டென்மார்க் நாட்டில் அகதியாக குடியேறியவர் பின்னர் புலத்தில் எம்மவர் தங்கள் திறைமைக்கேற்ப தொழில்களை தொடங்கியது போல இவரும் தனது திறைமைக்கேற்ப தனது வீட்டின் சாமான்கள் போட்டு வைக்கும் நில கீழ் அறையில் ஒரு சிறிய கோவில் போல ஒன்றை உருவாக்கினார்.

தனக்கு ஊரில் ஆறு வயதிலேயே அம்மன் வந்து விட்டதாகவும் அதனால் தான் கலையாடுவதாகவும் கூறி கொண்டு அக்கம் பக்கத்திலுள்ள தமிழர்களை அழைத்து சாமியாடி குறி சொல்ல தொடங்கினார். எனக்கு தெரிய இவருக்கு இரண்டு தடைவை குலைப்பன் காச்சல்தான் வந்தது ஊரிலை. அப்பிடி பாத்தால் மாரி காலத்திலை மலேரியா வந்தாக்கள் எல்லாரும் அம்மன் அளுள் கிடைத்ததாக நினைத்து சாமியாடலாம்.அவர் எதிர்பார்த்தது போல சிறிது கூட்டமும் பண புளக்கமும் வர தொடங்கியது (அதுதானுங்க காணிக்கை)நாளடைவில் இவரது பெயர் அக்கம் பக்கத்து நகரங்களில் வசிக்கும் தமிழர் களிற்கும் பரவ புலத்தில் ஏதோ ஒரு மனச்சுமையுடனும் இருக்கும் தமிழர்கள் மன ஆறுதலுக்காகவும் இவர் சொல்வது நடக்குமாம் என்கிற ஒரு நப்பாசையிலும் இவரை தேடி போக தொடங்கினார்கள்.

அவர்களது நப்பாசை இந்த பெண்சாமியாரின் பேராசையாக மாறி அவர்களிடம் வழைமையாக எல்லா போலி சாமியார்களும் சொல்வது போல தோசம் தெய்வ குற்றம் பரிகாரம் என்று பணம் கறக்க தொடங்கினார்.இவரது விசேடம் என்னவெண்றால் நல்ல வாட்ட சாட்டமான அழகான ஆண்கள் அவரிடம் போனால் அவர்களிற்கு உடனே ஏதாவது தோசம் கண்டுபிடித்து அவர்களிற்கான பரிகார பூசையை தனியாக ஏற்பாடு செய்து விடுவார்.பிறகென்ன பரிகாரத்திற்கு போனவர் பேய்பிடித்து வெளியே வருவார்.

இப்படித்தான் ஒருமுறை ஈழத்தில் எம்மவருக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் பார்க்க கொஞ்சம் வாட்ட சாட்டமாய் இருப்பார் அவர் இவரிடம் தொண்டு நிறுவனத்திற்காய் பண உதவி கேட்டு இவரை நாடியிருந்தார் போனவரிடம் அந்த அம்மணி சொல்லியிருக்கிறார் பண உதவிதானே பிரச்சனையில்லை நான் இன்றிரவு பூசையில் இருக்கும் போது அம்மன் என்னில் வருவார் அப்பவாருங்கள் நீங்கள் கேட்ட உதவியை அம்மன் அருளுடன் தருகிறேன் என்று போனவரும் கொஞ்சம் சாமி பக்தியுள்ளவர் அவரும் அடடா அம்மனே வந்து உதவபோறா எண்டு நினைத்து அன்றிரவு குளித்து சுத்தமாய் பயபக்தியுடன் அர்ச்சனை சாமானுடன் போயிருக்கிறார் அங்கு போனதும் அவருக்கு ஒரு சந்தேகம் அங்கு யாரும் இல்லை இவர்மட்டும்தான் சரி எதுக்கும் வந்த அலுவலை பாப்பம் எண்டிட்டு பக்தியுடன் அந்த அம்மணிமுன் அமர அந்த அம்மணியும் சில வசனங்களை உச்சரித்தபடி உடலையும் தலையையும் ஆட்டியபடி அம்மன் வந்திட்டா உனது பிரச்சனைகளை தீர்து வைப்பா எனவே நீ அம்மனை குளிர்வித்து மகிழ்ச்சி படுத்து அப்போதான் அம்மன் மகிழ்வடைந்து நீ கேட்டதை தருவா எணறபடி அவரை கட்டியணைத்திருக்கிறார்.

போனவர் திடுக்கிட்டு அம்மணியை உதறி தள்ளி விட்டு துண்டை காணம் துணியை காணம் எண்டு ஒடியந்திட்டார்.இப்படி பல லீலைகளை அம்மன் செய்து வந்ததால் அவரது கணவன் ஆரம்பத்தில் அவருடன் கோபித்து கொண்டு போய் தனியாக கனகாலம் இருந்தவருக்கு அந்த அம்மணியின் பெயர் புகழ் பணம் என்பவற்றை பார்த்து விட்டு அவருடன் சமரச உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டு அவருடன் மீண்டும் இணைந்து விட்டார். அதனால் அவரும் இப்ப கடவுளாகி விட்டார் அவரிடம் போகும் பக்தர்கள் முக்கியமாக அவரது காலிலும் அவரது கணவர் காலிலும் வீழ்ந்து ஆசீர் வாதம் வாங்கவேண்டும்.

அவர்கள் காலில் விழும் எம்மவர்களை என்னவெண்று சொல்வது.அதை விட இவர்களிடம் அதிகம் ஏமாந்தவர்கள் பிள்ளையில்லாத குறையை போக்கவென்று இவரிடம் சென்று பணத்தை கொடுத்தவர்களே.போனவர்கள் கொஞ்சமாவது சிந்தித்திருக்கலாம் ஒரு ஆண் சாமியார் என்றாலாவது பரவாயில்லை பிள்ளை வரம் கொடுப்பார் பெண் சாமியாரால் எப்படி பிள்ளை வரம் குடுக்க இயலும். இவரது திருகு தாளங்கள் மெல்ல மெல்ல வெளியே தெரிய வர அக்கம் பக்கத்திலுள்ள தமிழர்களும் மற்றும் டென்மார்க்வாழ் தமிழர்களும் இவரிடம் போவதை நிறுத்த இவருக்கும் வருமானம் குறைந்து கொண்டு போகவே இன்னொரு ஆலோசனையை செயற்படுத்தினார்.

அதுதான் அய்ரோப்பாவில் ஒளிபரப்பாகும் ஒருதமிழ் தொலை காட்சி நிறுவனர் ஒருவரை பிடித்தார் அவருக்கு தனிய விசேட பூசை நடத்தி அருள்வாக்கு கொடுத்தார். அந்த நிறுவனரும் அருள் பெற்று கொண்டு தனது தொலைகாட்சி முலம் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுக்க தொடங்கினார். அந்த அம்மணி எதிர்பார்த்த பலன் கிடைத்தது மற்றை அய்ரோப்பிய நாடுகளில் இருந்து ஏமாந்த எம்மவர்கள் இப்போடென்மார்க்கிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இன்றை கால கட்டத்தில் இந்த அளவுக்கு விஞ்ஞான வசதிகள் கொண்ட இந்த காலகட்டத்தில் அதுவும் இத்தனை வசதிகள் கொண்ட அய்ரோப்பாவில் வாழ்ந்து கொண்டு இன்னமும் பிள்ளை வரம் கேட்டும் எதிர் காலத்தை அருள்வாக்கு முலம் அறியவும் இவர் போன்ற போலி சாமியார்களை நம்பி மோசம் போகும் எம்மவர்களை என்ன செய்யலாம் விடையையும் நீங்களே சொல்லுங்கள் மக்களே??

No Comment