Navigation


RSS : Articles / Comments


புலத்தில் இலகுவாய் முன்னேற சில வழிகள்

11:05 PM, Posted by sathiri, No Comment

புலத்தில் இலகுவாய் முன்னேற சில வழிகள்

உங்களுக்கு கஸ்ரம் வந்தால் என்ன செய்வீர்கள் பொதுவாக எல்லாரும் கடவுளை வேண்டுவார்கள் கடவுளே காசு தா என்று அதே கடவுளையே முலதனமா போட்டு நீங்கள் வாழ்வில் முன்னேறலாமே அதற்கு நீங்கள்: செய்ய வேண்டியது நீங்கள் வசிக்கும் நாட்டில் உங்கள் நகரத்ததில் ஒரு கோயில் கட்ட வேண்டும்.

அதற்கு நகர சபையிடமும் கலாச்சார அமைச்சிடமும் எங்கள் மக்கள் எமது கடவுளை கும்பிட முடியாமல் சரியாக கஸ்ரப்படுகிறார்கள் அவர்களது கலாச்சாரம் அழிகிறது அதனால் குற்ற செயல்கள் அதிகரிக்கிறது அவர்களை நல்வழிப்படுத்தஒரு கோயில் கட்ட இடம் வேண்டுமென்று கூறி இலவசமாகவே அல்லது குறைந்த வாடைகைக்கோ ஒரு இடத்தை வாங்குங்கள் (பிரான்ஸ் போன்ற கோயில் கட்ட அனுமதியில்லாத நாடுகளில் ஒருகட்டடத்தை எடுக்கலாம்) இடம்சரி அடுத்தது கட்டடம் கட்ட பணம் வேண்டுமே வழி. வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுங்கள்.

இதோவிரைவில் வெளிவருகிறது (இது நல்லாயில்லை) உங்கள் வினை தீர்க்க ஊரில் ஒரு ஆலயம் வேண்டாமா(எல்லாரும் பாவம் செய்தவைதானே)எனவே ஆலய நிதி வள்ளல்களே வாரி வழங்குங்கள். ஆயிரம் யுரோக்கு மேல் நன்கொடை தருபவர்களின் பெயர் கோயில் சுவர் கற்களில் பொறிக்கப்படும் எண்டு போடுங்கோ அப்பதான் எல்லாரும் ஆயிரத்துக்கு மேலை தருவினம்.

ஆனால் பெயர் எல்லாம் பொறிச்சு மினக்கடாதையுங்கோ செலவாகும். காசு தந்தவர் பெயர் எங்கையெண்டு கேட்டா கல்லிலை பொறிச்சிருக்கு மேலை சீமெந்து புசியிருக்கு எண்டு சொல்லுங்கோ அவர் என்ன சுரண்டியா பாக்க போறார். அடுத்ததா சிலையும் அய்யரும் வேணும் அதுக்கு இந்தியா போக வேணும். இந்தியா கன்னியா குமரியிலை சிலையள் மலிவா வாங்கலாம்.

எங்கடையாக்கள் அதிகம் கும்பிடுற பிள்ளையார். அம்மன்.முருகன். முக்கியமா நவகிரகங்கள்.ஏணெண்டா அப்பதான் என்னை மாதிரி சாத்திரியள் சொல்லிவிடுவினம் பிள்ளை உனக்கு சனி செவ்வாய் தோசம் எண்டு.அவை சுத்த வசதியா இருக்கு மல்லோ சிலைகள் கொண்டு வரும்போது முடிந்தால் கொஞ்சம் தூளையும் சிலைகளிற்கை மதை;து அடைத்து எடுத்து வரலாம் தப்பிவந்தால் நீங்கள் அதிஸ்ரசாலி பிடிபட்டால் கடவுள் உங்களை கை விட்டிட்டார் எண்டு அர்த்தம் கம்பி எண்ணலாம்.

சிலை சரி அடுத்தது அய்யர் இதிலை சரியான கவனமா இருக்க வேணும் அய்யருக்கு மந்திரம் தெரியுதோ இல்லையோ அவருக்கு அதிகவெளியுலக விபரம் தெரியாத அப்பாவியாக இருப்பது உங்களிற்கு நல்லது. ஏணெ;டா அவர் இங்கை வந்து இடம் பிடிபட பிறகு உங்களிற்கு போட்டியா தானே தனிய கோயில் கட்டதொடங்கிடுவார்.

அய்யருக்கு இந்திய காசில் ஒருதொகையை பேசி மாதா மாதம் இந்தியாவில் அவரது வங்கியில் போட ஒழுங்கு பண்ணுங்கள் அத்துடன் இங்கு தங்குமிட வசதி உணவு இலவசம் எண்டு சொல்லுங்கோ கோயில்லை இருக்கிறதை சாப்பிட்டிட்டு அங்கேயே ஒரு கரையிலை படுக்க விடலாம். அய்யரை இங்கு கொண்டு வந்ததும் முதலில் அவரின் கடவு சீட்டை பறித்து நீங்கள் வைத்து கொள்ளுங்கள் உங்களிற்கு நல்லம். ஏணெண்டால் அய்யர் மேலதிக உழைப்பிற்காய் திருமணவீடு துடக்கு கழிவு எண்டு வெளியிலை விடேக்கை வெளியாக்களின்ரை ஆலோசனை கேட்டு தான் சிலோன் காரன் எண்டு சொல்லி அசுல் அடிச்சு தனிய உழைக்கபோயிடுவார் பிறகு நீங்கள் இன்னொரு அய்யரை தேடி இந்தியா போய் வீண் செலவு.

கோயிலில் சிலைகளை பதிக்கும் போது இலகுவாய் நகர்த்த கூடிய மாதிரி வைக்கவும் அப்பதான் மேலதிகமாக சனி ஞாயிறு நாட்களில் அவைகளை கழட்டி ஒரு ழூலையில் போட்டுவிட்டு இடவசதியுடனான மண்டபமாக்கி கோயிலை பிறந்தநாள் திருமண நாளிற்கு வாடைகைக்கு விடலாம். இப்ப ஊர் காசிலை கோயிலும் கட்டி அய்யரும் வந்தாச்சு இனியென்ன உங்கள் காட்டில் சீ வீட்டில் பணமழைதான். எல்லாத்துக்கும் மேலாக தேர் இழுக்க அனுமதியும் எடுத்தீட்டீங்களண்டா நீங்கள் தான் கடவுள்.

No Comment