Navigation


RSS : Articles / Comments


அவலங்கள்

9:28 AM, Posted by sathiri, No Comment

அவலங்கள்

உறவுகளிற்கு வணக்கங்கள் இனவெறி யுத்தத்தால் இன்று எமது இனம் உலகெங்கும் பிடுங்கியெறியப்பட்டு விழுந்த இடங்களிலெல்லாம் மீண்டும் பதியமாகி வேரோடி இன்று விருட்சங்களாகி நிற்கிறோம். அந்த விதத்தில் எம்மினத்தின் எங்கும் எதிர்த்து எதிர் நீச்சல் போடும் திறனை மற்றைய இனத்தவர்கள் பாராட்டுவதை பார்த்து நாம் பெருமிதம் கொள்ளும் அதேவேளை. எம்மினத்தில் சில விச செடிகளும் வேரோடி போயிருக்கத்தான் செய்கிறது. அது அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தாலும் அவைகள் எமது இனத்தின் ஒட்டு மொத்த இருப்பையே கேள்வி குறியாக்ககூடிய பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. புலத்தில் எமதினத்தின் மீது மற்றைய இனத்தவர்கள் ஏன் அந்த நாட்டு அரசுகளே வெறுப்படைய கூடிய பல செயல்கள் நடந்தேறியிருக்கின்றது.பலர் பெரிய மனிதர் என்கிற போர்வையிலேயே இன்னும் அப்படியான செயல்களை தொடர்ந்து கொண்டும் இருக்கினறனர்.அப்படியான செயல்களையும் அதனை செய்பவவர்களையும் இங்கு அம்பலப்படுத்துவதே எனது நோக்கமாகும். இதனால் அவர்கள் என்மீது ஆத்திரப்பட்டு மீண்டும் அதே தவறை செய்யாமல் ஒருகணம் நான் ஏன் அப்படிச்செய்தேன் என்று சிந்தித்து நல்வழி செயல்படவேண்டும் என்பதே எனது நோக்கம்.மற்றபடி அவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட கோபமோ பிரச்சனைகளோ எதுவும் இல்லையென்பதை உறுதிபட கூறுவேன்.

No Comment