Navigation


RSS : Articles / Comments


எமதர்மனின் வாகனம் எருமையா ஏயார்பஸ்சா??

2:03 AM, Posted by sathiri, 2 Comments


எமதர்மனின் வாகனம் எருமையா ஏயார்பஸ்சா??

(இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது)
ஏயார் பஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இரண்டு விமானங்கள் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது பற்றிய செய்திகள் உலகமக்கள் அனைவரும் அறிந்ததே..அதனால்தான் எமதர்மன் இப்பொழுது ஏயார்பஸ் நிறுவன விமானங்களில் வருகின்றாரா என்கிற பயம் விமானப்பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.. முதலாவதாக பிறேசிலின் றியோ நகரத்திலிருந்து பாரீஸ் நோக்கி வந்த ஏயார் பிரான்சிற்கு சொந்தமான விமானம் அத்திலாந்திக் சமூத்திரப் பகுதியில் காணமல் போனதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 228 பயணிகளுமே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. நடந்த விபத்து தொழில்நுட்பக்கோளாறா.

அல்லது தீவிர வாதிகளில் நாசவேலைகளா என்கிற இரண்டு கோணத்திலும் பிரெஞ்சு அரசு விசாரணைகளை நடாத்தியது...விமானத்தில் பயணம் செய்த இரு பயணிகளின் பெயர்கள்: சர்வதேச காவல்துறையால் தேடப்படும் அல்கெய்தா தீவிரவாதிகளின் பெயரை ஒத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தாலும்..பின்னர் அப்படி ஏதும் இல்லை பெயர் குழப்பஙகளே காரணம் என்று பிரான்சின் பாதுகாப்புத்துறை அறிவித்தது...விமான விபத்து நடந்ததற்கான காரணங்களை அறிவதற்காக வழைமைபோல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதோடு விசாரணைக்கு ஏதுவாக விமானத்தின் கறுப்புப் பெட்டியை தேடும் முயற்சியும் நடந்தது . விபத்து நடந்தது மிக ஆழமான சமூத்திரப்பகுதியென்பதால் கறுப்புப் பெட்டியை தேடியெடுப்பது சிரமமாக உள்ளதாக அதன் மீட்புகுழுவினர் அறிவித்திருந்தனர்..அதேநேரம் விமானத்தின் கறுப்புப்பெட்டியின் ஆயுட்காலம் ஒருமாதங்களே ..அதற்குள் அதனை தேடியெடுத்து அதில் பதிவாகியிருந்தவற்றை ஆய்விற்குட்படுத்தவேண்டும்..ஒருமாதமாக தேடியும் கறுப்புப் பெட்டி கிடைக்காததால் மீட்புக்குழுவினர்.

அதற்கும் சேர்த்து அஞ்சலிசெலுத்திவிட்டு..விசாரணைகளை விபத்து என்றே முடித்துக்கொண்டு விட்டனர்..தீவிரவாதிகளின் தாக்குதலை பிரான்ஸ் அரசு மூடி மறைக்கிறதா எனவும் சில பத்திரிகைகள் சந்தேகங்களை எழுப்பியிருந்தன..ஆனால் நடந்தது உண்மையிலேயே விபத்தா அல்லது தீவிரவாதிகளின் தாக்குதலா??என்கிற உண்மையை இந்தச் சம்பவத்தின் விசாரணை அதிகாரியாக இருப்பவர் வயசாகி பென்சன் எடுத்துக்கொண்டு வயோதிபர் மடத்தில் கடைசிக்காலத்தை கழிக்கும்போது பொழுது போறதிற்காக ஏதாவது புத்தகம் எழுதுவார்.அப்படி எழுதும் போது இந்த விபத்தைப்பற்றியும் ஏதாவது எழுதினால்தான் உண்மைகள் வெளியாகும்..

எனவே அதுவரை காத்திருப்போம்..அடுத்ததாக முதல் விபத்து நடந்து மூன்று வாரங்களில் பிரான்சிலிருந்து கொமர் நாட்டிற்கு சென்றுகொண்டிருந்த யமானியா என்கிற தனியார் நிறுவனத்தின் ஏயார்பஸ் விமானம் இந்துசமூத்திரப்பகுதியில் குதித்ததில்அதில் பயணம் செய்த 153 பேர் இறந்து போனார்கள். இந்த விமானத்தில் எனது மகளின் பள்ளித்தோழியும் அவளது சகோதரன் தாய் தந்தையர் உட்படஇறந்போயுள்ளனர்..இந்த விமானம் இயந்திரகோளாறு காரமாக விசாரணைகளில் முடிவாகியுள்ளது.. அதாவது சில தனியார் நிறுவனங்கள் பயணிகளை கவர்வதற்காக குறைந்தவிலையில் பயணசீட்டுக்களை விற்றுவிட்டு தங்கள் செலவுகளை குறைப்பதற்காக விமானங்களை சரியாக பாராமரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளது..நடந்து முடிந்த இரண்டு விமான விபத்துக்களிலும் இரண்டு அதிசயமான சம்பவங்கள் நடந்துள்ளது..

ஒன்று சோகமானது மற்றது சுகமானது.. சோகமானது என்னவென்றால் முதலாவதாக நடந்த விமானவிபத்தில் இத்தாலி நாட்டைச்சேர்ந்த ஒரு வயதான தம்பதிகள் தங்கள் விமானத்தை தவறவிட்டுவிட்டதனால் உயிர் தப்பியிருந்தனர்..அவர்கள் றியோவிலிருந்தபடி தங்கள் உறவினரிடம் தொடர்புகொண்டு மகிழ்ச்சியையும் கடவுளிற்கு நன்றியும் தெரிவித்திருந்தது ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.. அவர்கள் நான்கு நாட்கழித்து விமானத்தில் ஜெர்மனியில் வந்திறங்கி இத்தாலி செல்வதற்காக வாடைகை காரில் இத்தாலி நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தபொழுது வீதி விபத்தில் மனைவி இறந்துபோக கணவன் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்...அடுத்த சுகமான செய்தி என்னவென்றால் இரண்டாவதாக நடந்த விமான விபத்தில் அதிலிருந்த பயணிகள் அனைவருமே இந்துபோக 13 வயதான சிறுமி ஒருத்தி மட்டும் உயிர் தப்பியுள்ளார்..

அவர் பின்னர் விபத்துப்பற்றி தெரிவிக்கையில் '' ஒரு பெரிய வெளிச்சத்தை தொடர்ந்து ஒரே இருட்டாக இருந்தது நடந்ததை எனக்கு விபரிக்கத்தெரியவில்லை ஆனால் கையில் அகப்பட்ட ஏதோ ஒன்னை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தேன் அதுமட்டும்தான் தெரியுமென்றார்.. இவர் உடைந்த விமானத்தின் பாகம் ஒன்றினை கட்டிப்பிடித்தபடி கடலில் மிதந்து கொண்டிருந்தபொழுது மீட்புபடையினரால் மீட்கப்பட்டிருந்தார்.. இந்த இரண்டு சம்பவங்களையும் பார்க்கும் போது தலைவிதி என்று ஏதோ சொல்லுறாங்களே அதை நம்பவேண்டித்தானுள்ளது.. ஆனால் உலகிலேயே மிகப்பெரியதும் நவீனமானதுமான விமானத்தயாரிப்பில் இறங்கிய ஏயார் பஸ் நிறுவனத்திற்கு 2000ம் ஆண்டிலிருந்தே சனிஉச்சத்தில் நிற்கிறது.ஏகப்பட்ட குளறுபடி நிருவாகத்தில் ஊழல் என பல குற்றச்சாட்டுகளுடன் காலத்தை கடத்திக்கொண்டிருப்பவர்களிற்கு இந்த விபத்துக்களும் நிச்சயம் புதிய தலையிடியாகத்தானிருக்கும்..

இனிவரும் காலங்களில் ஏயார் பஸ் விமாங்களின் முன்னால் சிறீலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொஞ்ச செத்தல் மிளகாயை கட்டித்தொங்கவிட்டு விமானம் புறப்படும்பொழுது விமானச்சில்லுகளிற்கு அடியில் பச்சைத்தேசிக்காயை வைத்து நசித்து விமானம் புறப்படுமானால் விபத்துக்களை தவிர்க்கலாம்..இதனை ஏயார்பஸ் நிறுவன அதிகாரிகள் கவனத்திலெடுக்கவும்...இப்படி ஒருமாதத்நடந்த இந்த இரண்டுவிமான விபத்துக்களிலும் அதிகமாக இறந்து போனவர்கள் பிரான்ஸ் நாட்டினை சேர்ந்தவர்கள் என்கிற படியால் பிரெஞ்சு மக்கள் அதிர்ச்சியடைந்து போயுள்ளவேளை இந்தவருட கோடை விடுமுறைக்கு செல்வதற்கு ஏயார் பஸ் விமானங்களில் பதிவு செய்யவதனையும் தவிர்த்து வருகிறார்கள்.. அப்படி பயணம் செய்பவர்களும் தங்கள் குலதெய்வங்களிற்கு நிச்சயம் வேண்டுதல் வைத்துவிட்டுதான் விமானத்தில் வலதுகாலை எடுத்து வைப்பார்கள்..

நானும் ஒரு விடயமாக பாரிசிற்கு போவதற்கு மலிவாய் ஒரு றிகற்றை பதிந்துபணத்தை கட்டிவிட்டுதான் பார்த்தேன் அதுவும் ஏயார் பஸ்விமானம்.மலிவு விலை றிக்கற் என்பதால் கட்டின பணத்தையும் திருப்ப பெறமுடியாது..இனியென்ன செய்யிறது பத்திரமாய் பாரிசிற்கு போய்வரவேணும் என்றும் அப்பிடி போய் திரும்பி வந்தால் எனது குல தெய்வமான எங்கடை ஊர் புளிளியடிவைரவரிற்கு வடைமாலை சாத்தி பொங்கல் வைக்கிறது என்று நேத்திக்கடன் வைச்சிருக்கிறன். அப்படி திரும்பி வந்தால் அடுத்த பேப்பரிலை சந்திக்கிறேன்.. நன்றி சாத்திரி.

2 Comments

Anonymous @ 11:39 AM

they are not exatly Airbus's fault. people are suspicious about the air france maintanance as well...this is not their first crash in years...they are known for their lack of maintanance...
eg: An Airfrance jet skids off the runway in toronto and proven that its the fault of the air lines. Air france sued toronto Airport authority for not having longer runwaqys but it was thrown out of court
eg2: the Concord crash..that was also their fault.

சாந்தி நேசக்கரம் @ 3:16 PM

இனிமேல் கால்நடையாகத்தான் எங்கையும் போறது. எயாபஸ் ஐயோ அம்மளாச்சியே காப்பாத்து.