Navigation


RSS : Articles / Comments


அன்று சிந்திய ரத்தம் ..13

2:00 PM, Posted by sathiri, No Comment

 அன்று சிந்திய ரத்தம் தொடர் ..13
புதிய தலைமுறை வார இதழுக்காக

சமாதானப் பேச்சு வார்த்தைகள் முறிந்ததை அடுத்து மேற்குலகின் இரண்டாவது திட்டப்படி விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்து பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கான பணிகள் ஆரம்பமானது .மாவிலாறில் தொடக்கி புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டு நிலங்களை  இலந்துகொண்டிருந்தர்கள் .2006 ஜூலை 26 இல் கிழக்கில் மாவிலாறில் தொடங்கிய யுத்தம்கொஞ்சம் கொஞ்சமாக விரிவு படுத்தப்பட்டது .புலிகள் நிலங்களை இழந்தபடி பின்வன்கிக்கொண்டிருந்தார்கள் .ஆனால் தமிழ்  ஆய்வாளர்களும்  மீடியாக்களும்  இதை ‘தந்திரோபாய பின்வாங்கல்’ என வர்ணித்தார்கள். புலி பதுங்குவது பாய்வதற்கு என்று எழுதினார்கள். அதே நேரம் புலிகள் தங்கள் ஆட்பலத்தை அதிகரிப்பதற்காக வீடுக்கொருவர் போராட்டத்துக்கு வரவேண்டுமென பிரச்சாரம் மட்டுமே செய்து கொண்டிருந்தவர்கள் வீட்டுக்கொருவரை கட்டாயமாக பிடித்துச் செல்லத் தொடங்கியிருந்தனர் என்பது யாவரும் அறிந்த செய்திகள் தான் அப்படி புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினியின் ஏற்பாட்டில் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள் சுமார் 500 பேர்வரை வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டுக்கொண்டுருந்தவேளை இலங்கை அரசுக்கு அந்த தகவல் கிடைத்ததையடுத்து 14.08.2006 காலை தீடிரென வானில் தோன்றிய குண்டு வீச்சு விமானங்கள் அந்தப் பகுதியில் குண்டுகளைப் பொழிந்துவிட்டு மறைந்தன .

அந்தத் தாக்குதலில் 61 மாணவிகள் கொல்லப்பட சுமார்  155 பேர் காயமடைந்தனர்.குண்டு வீச்சு சத்தத்தையடுத்து அங்கு விரைந்த பிள்ளைகளில் பெற்றோர்கள் இறந்து கிடந்த மற்றும் காயமடைந்த தங்கள் பிள்ளைகளை கட்டிக்கொண்டு கதறியழுதது மட்டுமல்லாது "நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள் "என்று புலிகளையும் தமிழினியையும் மண்ணள்ளித்தூற்றிய சம்பவங்களும் நடந்தது.அங்கு ஆயுதப் பயிற்ச்சி நடக்கவில்லை சாதாரண முதலுதவி பயிற்சிகளே நடந்தது என புலிகள் அறிக்கை விட்டதோடு சம்பவ இடத்தை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் யுனிசெப் அதிகாரிகளையும் அழைத்துப்போய் கட்டியிருந்தார்கள்.
சரியான பாதுகாப்பு பதுங்கு குழி வசதிகள் இல்லாமல் பயிற்ச்சி முகாம் நடத்தியது தமிழினியில் தவறு என்று அவரை கண்டித்த தமிழ்ச்செல்வன் உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கியதோடு அவரின் இடத்திற்கு ரமிலா என்பவரை நியமிக்கிறார்.புதிதாக பொறுப்பேற்றவரால் தமிழினியைப் போல திறமையாக செயல்பட முடியாதது மட்டுமல்ல பெரியளவில் ஆட்சேர்ப்பையும் நடத்தியிருக்க முடியவில்லை.பின்னர் தமிழ்ச்செல்வன் குண்டு வீச்சில் கொல்லப்பட அவரது பதவியை நடேசன் பொறுப்பேற்கிறார் .இவர் அரசியல் துறை பொறுப்பாளராக பதவியேற்ற பின்னர் பல நல்ல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது ஆனாலும் அவை காலங்கடந்த மாற்றங்களாகவே இருந்தது அதில் முக்கியமானது இந்தியாவுடனான உறவுகளை புதிப்பித்தல் என்பதாகும்.நடேசனால் தமிழினிக்கு மீண்டும் அவரது பதவி கொடுக்கப் பட்டது.ஆனால் மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவதுக்கு தானே காரணம் என நினைத்து   மனதளவில் மிகவும் பாதிப் படைந்த நிலையில் இருந்தார்  என்பது மட்டுமல்லாமல் பின்னர் ஆட்சேர்ப்பில் கவனம் செலுத்தாதது மட்டுமல்ல யுத்தத்தில் கூட அக்கறை இல்லாதவராகவே காணப் பட்டார்.

(யுத்தத்தின் இறுதியில் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியே வந்தவர் அண்மையில் புற்று நோய் தாக்கத்தால் மரணமடைந்தார்.அவரது இறுதிக் காலங்களில் அவரது நண்பர்களிடம் பேசும்போதும் சரி அவரது எழுத்துக்களும் யுத்தத்தை வெறுப்பதாகவே இருந்தது.)

புலிகளின் நிலைமை இப்படியிருக்க கருணா நிலைமை வேறாக இருந்தது.அவன் இந்தியாவில் இருந்தபோது தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பும் அலுவலகங்களும் அவனது சகாவான பிள்ளையானின் கட்டுப்பாட்டில் இருந்ததோடு தானே அதற்கு தலைவன் கருணாவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என அறிவித்தான் . தனித்து விடப்பட்ட கருணாவை வெளிநாடுகளில் இருந்த அவனது நண்பர்கள் பலரும்  திட்டித் தீர்த்தார்கள்.ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் இயக்கத்தை உடைத்திருக்க கூடாது நீ ஒதுங்கிப் போயிருக்கலாம்.தமிழ் மக்களுக்கு  செய்தவை எல்லாமே துரோகம் என வாதாடினார்கள்.இதனால் ஒரு கட்டத்தில் மனமுடைந்த கருணா எனக்கு எதுவுமே வேண்டாம் என்னை விட்டு விடுங்கள் என் வழியில் குடும்பத்தோடு தனியாக போய் விடுகிறேன் என்று லண்டனுக்கு புறப்பட்டு விட்டிருந்தான்.விதி விளையாடியது அல்லது புலிகளுக்கு கெட்டகாலம் என்றும் சொல்லலாம்  இலங்கை ராஜதந்திரிகளின் கடவுச் சீட்டு போன்று போலி கடவுச் சீட்டில் லண்டன் வந்து இறங்கியவனை  கீத்துரோ விமான நிலையத்தில் வைத்தே  02.11, 2007 அன்று அதிகாரிகள் கைது செய்தனர்.அவன் கைதானது போலி கடவுச் சீட்டு விவகாரம் என்றாலும் கருணா கைது விவகாரம் அறிந்ததும் மனித உரிமை அமைப்புக்கள், சிறுவர் பாது காப்பு அமைப்புகள் என வரிந்துகட்டிக்கொண்டு கருணா மீது போர் குற்ற விசாரணை வேண்டும் என களமிறங்கினார்கள்.அனேகமாக போர் குற்ற விசாரணை கருணா மீது பாயும் என்றே அநேகமானோர் நினைத்திருந்தார்கள்.ஆனால் அவன்மீது எந்த விசாரணைகளும் நடத்தப் படாது சிறையில் வைத்திருந்தார்கள் காரணம் புலிகள் தோற்கடிக்கப் படும்வரை புலிகளை தோற்கடிக்க நினைக்கும் அனைத்து சக்திகளுக்கும் அவன் தேவை ..

26.ஜூலை 2006 ம் ஆண்டு கிழக்கு மாவிலாறில் தொடங்கிய சண்டை அப்படியே  மெதுவாக வன்னியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளை மன்னர் பகுதியில் இருந்தும் ஏப்ரல் மாதம் 2008 இல் இராணுவத்தினர் இன்னொரு களமுனையை வன்னி நோக்கி திறந்தார்கள் .புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்த மடுப்பகுதியை கைப்பற்றுவதுதான் அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது.அதற்கு காரணமும் இருந்தது மடுப்பகுதில் இருக்கும் 400 ஆண்டுகள் பழமையான மாதா ஆலயம் அமைந்திருக்கின்றது.அந்த ஆலயத்தின் திருவிழா ஆகஸ்ட் மாதம் நடைபெறுவது வழமை.திருவிழா காலங்களின் தெற்கிலிருந்து பெருமளவான சிங்கள  கத்தோலிக்க மக்களும்  வந்து கலந்து கொள்வது வழமை.உள் நாட்டு யுத்தம் தொடங்கிய பின்னர்  சிங்கள மக்களின் வருகை குறைந்து போனது.பின்னர் சமாதன காலங்களில் மட்டுமே அவர்கள் வந்து போகும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது.எனவே அந்த வருடம் திருவிழாவுக்கு முன்னர் மடுப்பகுதியை கைப்பற்றி சிங்கள கத்தோலிக்க மக்களுக்கு அங்கு செல்ல வழியமைத்து கொடுப்பதன் மூலம் தான் ஒரு பௌத்த மதவாதியல்ல பொதுவாக சிங்கள மக்கள் அனைவரையும் நேசிக்கும் ஒருவன் என மகிந்தராஜபக்ச வுக்கு நிருபிக்க வேண்டிய தேவையும் இருந்தது.

ஆனால் இலங்கையரசு நினைத்தது போல மடுவைக் கைப்பற்றுவது சுலபமானதாக இருக்கவில்லைபுலிகளின் எதிர்ப்பு பலமாதாக இருந்ததால்  இராணுவம் மடுப்பகுதியை கைப்பற்ற்றுவதும் விடுவதுமாக சடுகுடு ஆடி இறுதியில் மடுவை கைப்பற்றியபோது மடு மாதா ஆலயத்தில் இருந்த மாதா சிலையை புலிகளின் கட்டளையில் பேரில் பாதிரியார்கள் எடுத்துச் சென்று மன்னார் தேவன் பிட்டி என்னுமிடத்தில் ஒரு ஆலயத்தில் வைத்து விட்டனர் .ஆலயத்தை கைப்பற்றினாலும் மாதா சிலை இல்லாததனால் இராணுவத்தினர் ஏமாற்றமடைந்தது மட்டுமல்லாது மகிந்தா நினைத்ததுபோல் அந்த வருடம் திருவிழாவும் நடத்த முடியவில்லை .ஆனால் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதா சிலையை புலிகள் அகற்ற வைத்தது பொதுவாகவே தமிழர் சிங்களவர் என்கிற பேதமின்றி  அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது மட்டுமல்லாமல் புலிகளுக்கான கேடுகாலம் என்றும் பேசிக்கொண்டார்கள்.அதே நேரம் சண்டை தொடங்கி இரண்டு ஆண்டுகள் கழிந்தும் இராணுவத்தால் குறிப்பிட்ட பெரு வெற்றிகள் எதனையும் பெற முடியாமல் இருந்தது புலிகளின் போரிடும் ஆற்றல் குறைந்து விடவில்லை என்பதை இலங்கை இராணுவம் மட்டுமல்ல உலக நாடுகளும் உணர்ந்து கொண்டனர்.எனவே களமுனையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் புதிய தந்திரங்களை கையாள வேண்டும் என்கிற நிலைமை அதனால் புலிகளின் போரியல் தந்திரங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் கருணாவை களத்தில் இறக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை.லண்டனில் சிறையில் இருந்த கருணாவை மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்வதென முடிவெடுக்கப் பட்டது  .....தொடரும்

No Comment