Navigation


RSS : Articles / Comments


பேச்சு மட்டும்தான் தான் தேசியம் மிச்சமெல்லாம்.....

2:43 PM, Posted by sathiri, No Comment

கடந்த இரண்டு நாள்களிற்கு முன்னர் தமிழ் பாராளுமன்ற  உறுப்பினர் சிறிதரனின் பின்னணியில் அவரது  சகோதரரால் நடாத்தப்படும்  லங்காசிறீ. தமிழ்வின் மற்றும் மனிதன் இணையத்தளங்கள் பற்றியதொரு சர்ச்சை  கிளம்பியிருந்தது. கூடவே இன்னொரு பெரும்  சர்ச்சை கிளம்பியிருக்கின்றது  அது என்னவெனில்  லங்கா சிறி இணையத்தினரால் நடாத்தப்படும் hi 2 world    தமிழ் அரட்டை சேவை பற்றியது. அந்த  காணொளி அரட்டையூடாக பலநூறு  தமிழர்கள் தமிழிச்சிகள்  ஆடைகளை கழற்றி ஆபாச அரட்டையடித்துள்ளதோடு தங்கள் நிர்வாண படங்களையும் பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது.  அதைப்பற்றி அறியலாமென நினைத்து  அரட்டையில்  அரட்டையடிக்கும் ஒரு இளைஞரை இனம் கண்டு தொடர்புகொண்டபொழுது  அவர் அண்ணை  என்னட்டை மட்டும் 56 தமிழ் பெட்டையளின்ரை  நிர்வாணப்படம் இருக்குதென்று பெருமையாக சொன்து மட்டுமில்லாமல். அவற்றை  அனுப்பியும் வைத்திருந்தார்.  அவற்றை பார்தால் இளம் பெண்கள் மட்டுமில்லாமல் திருமணமான வயதான பெண்களின் படங்களும்  இருந்தது. பலரது திறந்த மார்பில் தாலிதொங்கிக்கொண்டிருந்தது. இப்படி ஒருவரிடம் மட்டுமே 50ற்கு  மேற்பட்ட படங்கள் என்றால்  இதுவரை மொத்தமாக  அங்கு அரட்டை அடிப்பவர்களிடம் எத்தனை  படங்கள் பரிமாறப்பட்டிருக்கும்.நினைத்துப் பாருங்கள்.. தனிப்பட ஒருவன் ஒருத்தி  அரட்டையடிப்பதும். ஆடையை  கழற்றுவதும்  அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால். யாழ்ப்பாணத்தில் கலாச்சாரம்  கெடுகின்றது என்று  புலம்பும்  தமிழ்வின்  லங்காசிறி இணையமும். தமிழினத்தின் அடுத்த தலைவர்களில் ஒருவர் என சொல்லிக்கொள்ளும்  சிறிதரனின் பின்னணியில் இயங்கும்  இணையத்தளத்தில்  பெரும் கலாச்சார சீரழிவே நடைபெறுவதோடு அதற:;கு அவர்களும் உடைந்தையாக இருப்பதும் தான் கேள்விக்குள்ளாகின்றது

அதே நேரம்  இங்கு அரட்டையடிப்பவர்களிற்கு தெரியாமலேயே  அவர்களிற்கு பின்னால் உள்ள பெரும் ஆபத்து என்னவென்றால்.  இப்படியான அரட்டை இணைய வழங்கிகளை  பெரும்பாலும்  90 வீதம்  பாகிஸ்தானிலிருந்து  இயங்கும் நிறுவனங்களே  குறைந்த விலையில் வழங்குகின்றார்கள்.   இவர்களின் உரிமங்கள் பதிவுகள் திருட்டு பெயர்களில் இருப்பதனால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கமுடியாது.  இவர்கள் தங்கள் இணைய வளங்கியினுடாக பரிமாறப்படும்  நிர்வாண   காணொளிகள் மற்றும் படங்களை பதிவுசெய்து  ஆபாச இணையத்தளங்களை நடத்தி பெரும் பணம்  சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல்.  இந்தியா பாகிஸ்த்தான்.மலேசியா.சிங்கப்பூர் போன்ற  நாடுகளில் கைத்தொலைபேசி ஊடாகவும்  விற்பனை செய்கிறார்கள்.  அதாவது புலம்பெயர் தமிழர்களின் நிர்வாணப்படங்கள்  வியாபாரமாகின்றது. அந்த வகையில் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.






தன்னுடைய மகனோ  மகளோ தனியறையில் கணணியில்  பாடம் சம்பந்தமாக அவர்களது நண்பர்களுடன் ஏதோ கதைக்கிறார்கள் என நினைக்கும் பெற்றோர்கள்.  சிலவேளைகளில் அவர்கள் எந்தெந்த தளங்களில்  உலாவுகிறார்கள்  கண்காணித்தாலும் பிள்ளை தமிழ் தளத்திலைதானே  உலாவுது  அதுகின்ரை  தமிழ் ஆர்வத்தை பாராட்டவேணும் என  நினைக்கும் பெற்றோர்கள்  தமிழ் தளத்தினுடாக பிள்ளை எங்கே போகின்றது என்பதையும் கண்காணிக்க வேண்டும். .அதே நேரம் கணவன் மனைவியை மனைவி கணவனை  கண்காணிக் வேண்டிய நிலைக்கு தள்ளிய  இது போன்ற  தமிழ் இணையத்தளங்கள் தேவைதான  என்பதனையும்  தமிழர்கள் தீர்மானிக்கவேண்டும்.



அதே நேரம் இங்கு தங்கள் படத்தை பரிமாறிய  ஆணோ பெண்ணோ நாளை திருமணம் என வரும் பொழுது அரட்டையில் இரண்டு பேருமே பார்த்திருக்கலாம்.  அல்லது அவங்கடை அம்மா அப்பாவை திருமணம் செய்யப் போகின்றவர்கள் பார்த்திருக்கலாம். இதனால் எத்தனை குடும்பங்கள் பிரியப் போகின்றது.



யாராவது ஓடிவந்து ஆதாரம் கேட்பார்கள்


No Comment