Navigation


RSS : Articles / Comments


கிணறு வெட்ட கிழம்பிய பூதம்

2:59 PM, Posted by sathiri, 2 Comments


பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் நடந்தேறும் நாடகம்!சாத்திரி (ஒரு பேப்பர்)

அண்மையில்  சில இணையதளங்களில்  ஒரு செய்தி வெளியாகியிருந்தது  அதவாது இறுதிப் போரின்போது காயமடைந்த  பல போராளிகளை ஒரு பெண்  வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம்  பெருமளவு பணத்தினை வாங்கிவிட்டு அவர்களை ஆசிய நாடு  ஒன்றில்  கைவிட்டு விட்டு  தலைமறைவாகிவிட்டார் என்கிற செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்ததும்  இவரை எங்கேயோ  பார்த்தமாதிரி அல்லது  அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என தோன்றவே அவரைப்பற்றிய  மேலதிக தேடல்களை   தொடங்கிவிட்டிருந்தேன்.

                                          வன்னிரெக்  தயாபரன் மற்றும்  உதயகலா


கிணறு வெட்டப் பூதம் கிழம்பியது போல  தோண்டத் தோண்ட   தமிழ் மாணவர் அமைப்பை நடாத்திய  ரிசி என்;கிற சிவானந்தன் ரிசாந்தன் அல்லது ரிசாந்தன் சிவராசா (இதில் எந்தப்பெயர் உண்மையானது என்பது தெரியவில்லை).

                                                                   இவர்தான் ரிசி


 பிரித்தானியத் தமிழர் பேரவையின்  முக்கிய உறுப்பினராக இருந்து அண்மையில் அவ்வமைப்பிலிருந்து விலகிய  ஸ்கந்தா  என்கிற சுப்பிரமணியம் ஸ்கந்ததேவா ஆகியோரின்  தொடர்புகள் தெரியவரத் தொடங்கியது.  ஆனால் தேடலின் இறுதியில் இந்த வலைப்பின்னலை பின்நின்று இயக்குபவர் ஸ்கந்தாவே என்றும் அறிய முடிந்தது.

ஊரை அடித்து உலையில் போடும் இந்தக்கும்பலைப்பற்றி இனி கொஞ்சம் விபரமாக பார்க்கலாம்.
உதயகலா என்கிற பெண்  வன்னிப் பெருநிலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயம்  அவர்களால் நடாத்தப்பட்ட வன்னி ரெக் என்கிற தொழில் நுட்பக் கல்லூரியில் படித்துள்ளார். அங்கு அவர் படிக்கசென்ற காலங்களில்  அந்த பாடசாலையின் பொறுப்பாளராக இருந்த தயாபரன் அல்லது தயாபரராஜ் என்பவரிற்குமிடையில் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்தது. உதயகலா ஏற்கனவே ஒரு போராளியை  திருமணமுடித்திருந்தவர். விழுப்புண் அடைந்திருந்த அவரது  போராளிக்கணவர் தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பட்டடிருந்தார். அங்கு அவர் புலிகளின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டு  சிறைவைக்கப்பட்டிருந்தார்.   அதற்கு பின்னர் தயாபரனுடன் தொடர்பு ஏற்படவே வன்னி ரெக்கின்  நிதியிலிருந்து  பணத்தினை மோசடி செய்த தயாபரன் உதயகலாவிடம் கொடுத்துள்ளார். இவ்விடயம் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்துக்கு  தெரியவரவே தயாபரன் அவர்களால் இடைநிறுத்தப்பட்டு தண்டனையும்  கொடுத்திருந்தனர். அநே நேரம் இறுதியுத்தம் தொடங்கிவிடவே இவர்கள் இருவருமாக இராணுவத்திடம் சணைடைந்து பின்னர' விடுதலையானார்கள்.  கொழும்பில் தங்கியிருந்படி முகாம்களில் அடைபட்டிருந்த  மற்றும் காயமடைந்திருந்த போராளிகளை வெளியே எடுத்து விடுவதாக  அவர்களின் உறவினர்களிடம் பெருமளவு பணத்தினை பெற்று மோசடி செய்தவர்கள் அங்கிருந்து இந்தியாவிற்கு தப்பி சென்றுவிட்டனர். தப்பிச் சென்றவர்கள் தங்களை யாரும் தேடாதிருப்பதற்காக  தயாபரன் இறந்து விட்டாரென  ஒரு செய்தியை  உதயகலா பரப்பினார். அதிலும்  பணம் சம்பாதிக்க நினைத்தவர்  சமாதான காலத்தில் வன்னிக்கு  சென்று வன்னி ரெக்கில்  தயாபரனை  சந்தித்த அனைவரது விபரங்களையும் திரட்டி அவர்களிடம் தொடர்புகொண்டு  தயாபரன் இறந்து விட்டார்  எனவே அவரது மரணச்சடங்கிற்கு பணம் வேண்டுமென கேட்டபொழுது பலர் அனுப்பியிருந்தனர். ஆனால் ஒருவர் சந்தேகப்பட்டு  அவர் இறந்ததற்கான ஆதாரம் கேட்டபொழுது  தயாபரன் கண்ணை மூடியபடி படுத்திருந்த ஒரு படத்தினை அனுப்பிருந்தார்...

                                         தயாபரன் இறந்தது போன்றதொரு படம்









இது இப்படியிருக்க,  2008ம் ஆண்டில் ரிசி என்கிற ரிசாந்தன்  இலண்டனிற்குள் மாணவர் விசாவில் நுளைகிறார். மாணவர் விசாவில் நுளைந்த ரிசியை வைத்து  ஸ்கந்தா (ITSO)  அனைத்துலக தமிழ் மாணவர் அமைப்பு என்கிற தொரு அமைப்பினை  ரிசியியையும் தனது மகளையும் இணைந்து  பதிவு செய்கிறார். (பதிவிலக்கம்: 6993075 பதிவு செய்த திகதி: 20.08.2009)


. இந்த அமைப்பு  உதவி அமைப்பு என  வெளியில் சொல்லப்பட்டாலும்   அது வியாபார நிறுவனமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.  அதாவது இந்த அமைப்பிற்கு கிடைக்கும் நிதியை அதன் நிர்வாக இயக்குனர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.  அது மட்டுமல்லாது  ஸ்கந்தாவே  ரிசியை  இங்கிலாந்தின்  தமிழ்  இளையோரமைப்பு.  தமிழ் ஊடகங்கள்.. பிரித்தானிய தமிழர் பேரவை. மற்றும் தமிழ்  வியாபாரிகள் பிரபலங்கள் என அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து  ரிசி  தாயகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கான உதவி. வடகிழக்கு  பல்கலைக்கழக  மாணவர்களிற்கான உதவி என  தமிழ் இணையத்தளங்கள்,  ஊடகங்கள், facebook என  விளம்பரம் செய்யத் தொடங்கினார். ஸ்கந்தா - ரிசி கூட்டணி எதிர்பார்தத்தை போலவே பலர் மனமிரங்கி பணம் கொடுக்கத் தொங்கினார்கள். இவர்களிற்கு ஊரில் இருந்து  உதயகலா .கஸ்தூரி என்கிற  இருபெண்களே  பாதிக்கப்பட்டவர்களின் படங்களை  அனுப்பிவைத்துக்கொண்டிருந்தனர். இவர்கள் பாதிக்கப் பட்டவர்களின் படங்களை வைத்து  பணம் சம்பாதிக்கிறார்கள் என அறிந்த கஸ்தூரி இவர்களை விட்டு விலகிவிட்டார்.

இவர்கள்  தங்கள் ஏமாற்று வியாபாரத்தினை  விருத்தி செய்ய நினைத்து  விடுதலைப்புலிகளின் காலத்தில் முல்லைத்தீவில் பெண்கள் பராமரிப்பு  இல்லமாக இருந்த பாரதி இல்லத்தினை  மீண்டும் தாங்கள் பொறுப்பெடுத்து பாரிஜாதம் என்கிற பெயரில் இயக்கவிருப்பதாக  பிரச்சாரம் செய்து பல வியாபாரிகளிடம் பெரும்  தொகை பணத்தினை  சுருட்டியிருக்கிறார்கள்.


மறுபுறம் உதயகலாவை வைத்து  முன்னைநாள் போராளிகள்  காயமடைந்தவர்கள்  எனப்பலரையும் வெளிநாடு அழைத்து செல்வதாக அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு   அவர்களை  மலேசியாவிலும். தாய்லாந்திலும் கொண்டு சென்று கைவிட்டுள்ளார்கள். அதே நேரம் காயமடைந்த போராளிகளிற்கு நல்வாழ்வளிப்பதற்கு  வெளிநாடு அழைத்து வருகிறோம் என்று வெளிநாடுகளிலும்  பணம் சேகரித்துள்ளனர். ITSO     அமைப்பின் நடவடிக்கை இப்படியிருக்க,  இதே ஸ்கந்தா நம்பிக்கை ஒளி (RAY OF HOPE)   என்கிற இன்னொரு அமைப்பையும் பதிவு செய்தார். இவ்வமைப்பிலும் ஒரு இயக்குனராக தனது மனைவியையும் இணைத்துக் கொண்டார். (பதிவிலக்கம் 7192725 பதிவுத் திகதி 17.03.2010)



இதன் மூலமாக லண்டனில் வாழ்ந்த பல முன்னை நாள் போராளிகளை  தொடர்புகொண்டு  அவர்களின் ஊடாக  பாதிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளிற்கென  நிதி சேகரிக்கத் தொடங்கினார். சிறையிலிருந்து விடுதலையான பல போராளிகளின் தேவைகளை நேரடியாகவே வீடியோ  காட்சிகளாக படமெடுத்து அதனை  வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் போட்டுக்காட்டி பணம் சேகரிக்கப் பட்டது. ஆனால் இந்த அமைப்பினை உருவாக்கி  அதற்காக தன்னலமற்று பல முன்னைநாள் போராளிகள்  உதவிசெய்திருந்தனர். ஆனால் காலப் போக்கில் ஸ்கந்தாவின் குளறுபடி சரியான  கணக்கு வழக்கு காட்டாமை என்பவற்றால்  பலரும் அதிலிருந்து விலகிப் போய்விட்டனர். ஸ்கந்தாவும்  அவருடன் சேர்ந்து சிலரும் தொடர்ந்தும்  இந்த நம்பிக்கையொளியை  தொடர்ந்தும் இயக்குகின்றனர். (மற்றயவர்களது விபரங்கள் என்னிடமிருந்தாலும் அவர்களது நலன் கருதி அவற்றை இணைக்கவில்லை)

சிறிலங்கா அரசுடன் சேரந்தியங்கும் கே.பி.  வன்னியில் தொடக்கியிருக்கும்  'அன்பு இல்லம்' என்னும் சிறுவர் இல்லத்திற்கும்  ஸ்கந்தா அவர்கள்  ஒரு தொகை நிதியுதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது அண்மைக்கால நடவடிக்கையாக   இறுதி யுத்தத்தின் போது தலைவருடன் நின்று தப்பிவந்தவர்கள் எனக்கூறிக்கொண்டு  தாங்களே தலைமைச்செயலகம்  எனவே நாங்களே  மாவீரர்நாள் செய்யும் உரிமையுள்ளவர்கள் என கூறிக்கொண்டு  புதிதாக இரண்டாவது மாவீரர் நாளை ஜரோப்பா எங்கும் அரங்கேற்றியவர்களிற்கு  பின்னாலிருந்து இயக்கியது மட்டுமல்ல அவர்களிற்கு  ஆதரவு கொடுக்கும்படி அனைவரையும் ஸ்கந்தா  வேண்டியிருந்தார்.

இனி ITSOஅமைப்புப்பற்றிய அண்மைய தகவல்கள். வருடாவருடம் Company House  க்கு அனுப்பப்படவேண்டிய கணக்குவிபரங்கள் அனுப்பப்படாமையால். இந்த நிறுவனத்தின் பதிவினை Company House இரத்துச் செய்துள்ளது. இதற்கான இறுதி அறிவுறுத்தல் கடந்தவருடம் டிசம்பர் மாதம் 14ம் திகதி வழங்கப்பட்டிருந்தது. நிறுவனத்தை கலைத்தவிட்டதான அறிவிப்பினை இவ்வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி அனுப்பப்பட்டது. ஒரு கணக்காளரான ஸ்கந்தா ஏன் இந்த அமைப்பின் கணக்கு அறிக்ககையை சமர்ப்பிக்கவில்லை என்பதை அவர்தான் விளக்க வேண்டும். இதுவிடயமாக அவரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. Company House  இனால் ITSO கலைக்கப்பட்டபோதிலும் இவ்வருடம் ஒகஸ்ட் மாதம் வரை இவ்வமைப்பு செயற்பட்டு வந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இறுதியாக குழப்பமடைய வைக்கும் சிலகேள்விகள்.  இதுவரை இவர்கள் வழங்கிய உதவிகளிற்கான சரியான தரவுகளோ வரவு செலவு கணக்குகளோ எங்குமே காண்பிக்கப்படதாது ஏன்? உதவிதேவைப்படும் எத்தனையோ ஆயிரம் பேர் தாயகத்தில் காத்துக்கிடக்க ..பல உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வசதியுள்ள  கே.பி அவர்களின் அன்பு இல்லத்திற்கு  நிதியுதவி செய்யவேண்டிதன் அவசியம் என்ன?  ரிசி   தன்னை மற்றையவர்களிற்கு   அறிமுகம்  செய்யும் பொழுது  தன்னைப்பற்றிய தகவல்களை  மாற்றி மாற்றிக் கொடுப்பது ஏன்? இத்தனை   குழப்பங்களும்  மோசடிகளும் கொண்டதொரு வலைப்பின்னலை பின்னாலிருந்து இயக்கும் BOSS யாரென்று ஆராய்ந்தால் அவர்தான்  மொட்டை BOSS   என்கிற  ஸ்கந்தா.



2 Comments

ப.கந்தசாமி @ 4:33 PM

எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற பழமொழி ஞாபகம் வருகிறது.

புங்கையூரன் @ 7:31 PM

சாத்திரியார்,
உண்மைகள் வெளிக்கொண்டுவரப் பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடம் இருக்கக் கூடாது! எமது இனத்தின் பேரைப் பயன்படுத்தி,சிலர் திரும்பத் திரும்ப, எங்கள் தலையில், மிளகை அரைப்பதை அனுமதிப்பது மிகவும் தவறு! தொடருங்கள், உங்கள் பணியை! அதன் விளைவுகளைத் தீர்மானிக்கும் முடிவை மக்களிடமே விட்டு விட்டு, நீங்கள் விலகி நில்லுங்கள்!