Navigation


RSS : Articles / Comments


பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்கக் கோரி கையொப்பம் சேகரிப்பு

1:35 PM, Posted by sathiri, One Comment

பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்கக் கோரி கையொப்பம் சேகரிப்பு

விண்ணப்பம் பற்றிய விபரத்தின் தமிழாக்கம் :

30 வருடங்களாக சிங்கள அரசாங்க அடக்குமுறையை எதிர்த்து தமிழர்கள் போராடி வருகிறார்கள். போராலும் ஆழிப் பேரலையாலும் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். 70 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் போரினால் உயிரிழந்துள்ளனர்.


கடந்த சில வருடங்களாக மனித உரிமை மீறல்கள் பாரிய அளவில் மீறப்படுகின்றன. கடந்த 2 வருடங்களாக ஆள்கடத்தல்களும் கொலைகளும் அதிகரித்துள்ளதாக Human Rights Watch கூறியுள்ளது. தமிழர் பகுதிகளுக்கான பிரதான பாதைகள் மூடப்பட்டுள்ளன. பல அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வது அரசாங்கத்தினால் தடுக்கப்படுகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டுமே இப் பகுதிகளில் சேவயாற்றி வந்தன. ஆனால் இரண்டு வருடங்களாக மனித நேயப் பணியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 39 மனித நேயப் பணியாளர்கள் இக் காலப் பகுதியுல் கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபை, Action Contre Faim அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் கொலைக்கு இலங்கை அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சேவைகளை நிறுத்தி வருகின்றன.

இன்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்களே தமது ஆதரவை TRO போன்ற சேவை நிறுவனங்களூடாக வழங்கி வருகின்றனர். ஏப்ரல் மாதம் CCT அமைப்பில் பணிபுரிந்த 15 தமிழர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். கவலை அடைந்துள்ள கைது செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களையும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையையும் கவனத்தில் கொண்டு உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறோம்.

--------

கீழுள்ள இணைப்புக்குச் சென்று உங்கள் கையொப்பங்களைப் பதிவு செய்யலாம்.

http://www.gopetition.com/online/14849.html

One Comment

Anonymous @ 3:46 PM

ஆங்கிலத்திலும் இருந்தால் கையொப்பம் இடும் ஆட்களின் எண்ணிக்கை கூடலாம் அல்லவா?