Navigation


RSS : Articles / Comments


பிரான்சில் தலித் மகாநாடு

3:16 PM, Posted by sathiri, No Comment

பிரான்சில் தலித்மகாநாடு என்கிற பெயரில் நடக்க இருக்கும் மகாநாட்டின் மூலமாக ஈழத்தமிழர் வாழ்வாதார போராட்டத்தை கொச்சைப்படுத்தி திசைதிருப்பும் நோக்கத்திற்காக சிலர் செயற்படுவதே அந்த மகாநாட்டின் நோக்கம் என்பதற்கு ஆதாரமாக ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எதிராக இலங்கை புலனாயய்வு பிரிவினரால் இங்கிலாந்தில் இயக்கப்படும் தேசம் என்கிற இணைய தளத்தில் தலித் மகாநாட்டிற்கான விளம்பரத்தினை இங்கு இணைக்கிறேன் பார்கக்கவும். இந்த விளம்பரத்தில் நான் சிவப்பு வண்ணத்தில் அடையாளமிட்டுள்ளவற்றை படித்தாலே புரியும்



http://thesamnet.net/?p=38

புலம் பெயர்ந்து, பல நாடுகளைத் தங்கள் வாழ்விடமாகக் கொண்ட தலித் சமூகத்திலிருந்து ஒரு சில சமூக சிந்தனையாளர்கள் தங்கள் சமூகப் பிரச்சினையும், இலங்கை இனப் பிரச்சனைத் தீர்வுடன் இணைக்கப்படவேண்டும் என கோரிக்கையைத் செயற்படுத்தும் வேலைத்திட்டங்களைத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த வருடத்திலிருந்து, பலவிதமான தலித் சமூக மேம்பாட்டு விழிப்புணர்ச்சி வேலைகள் செயற்படத் தொடங்கியதற்கு அடையாளமாக “வடு” என்ற மாதப் பத்திரிகை கடந்த நான்கு மாதங்களாக வெளிவருகிறது. “வடு” பத்திரிகையில் தலித் மக்களின் சரித்திரக் கூறுகள், அரசியல், பொருளாதார, சமூக விடயங்கள் எழுத்து வடிவத்தில் படைக்கப்படுகின்றன. இத்துடன் “தூ” என்ற தோழமை இணையத்தளமும் தலித் மக்களின் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பிரதிபலிக்கின்றன.
எத்தனையோ தமிழ் இயக்கங்களும், பிரமுகர்களும் கலந்து கொண்ட ஸ்ருக்காட் மாநாட்டில் எழுப்பப்பட்ட தலித் குரல்களை தமிழ்த் தேசியத்துக்குள் அடக்க முயன்றாலும்; E.P.R.L.F போன்ற முற்போக்குக் குழுக்கள் தலித் பிரச்சனையை ஒரு அரசியல் விடயமாகக் கணித்து பிரான்சில் இருக்கும் தலித் சமூக மேம்பாட்டுக் குழுவினருடன் ஒரு சந்திப்பை நடத்தினார்கள்.
தலித் முன்னணியினரின் அடுத்த செயற்பாடாக இலங்கையிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தலித் மக்களின் பல்வேறு விடயங்களை ஆராயும் நோக்கில் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 20, 21 ம் திகதிகளில் பாரிசில் ஒரு மகாநாடு நடக்கவிருக்கிறது.
அரசியல் ஆர்வலர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என்று பல தரப்பட்ட முற்போக்கு சக்திகளும் இணையும் இந்த மகாநாடு தமிழ் மக்களின் சமூக விடுதலைக்கு ஒரு வித்தியாசமான பரிமாணத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“எங்கள் ஆட்சி வந்தால் எந்தவிதமான பேதங்களும் இருக்காது” என்று மக்களை ஏமாற்றும் அரசியல் வாதத்தின் போலிமுகத்தை இனங்காட்டப் பல சரித்திர உண்மைகளை இந்த மகாநாடு மேடையேற்றும் என நம்பலாம்.
சமூகவியலில் அரசியல் மாற்றங்கள் தவிர்கமுடியாதவை. இம்மகாநாடு, தமிழ்த் தேசியத்தின் மாற்றுக் கருத்துக்களுக்கு முதற்படியாகும்
என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்பது அவர்களின் நிகழ்ச்சி நிரலை பார்த்தபோது புரிகிறது

No Comment