Navigation


RSS : Articles / Comments


7:06 AM, Posted by sathiri, No Comment

MSN இல் சாத்திரியும் சோழியனும் ...

இந்தவார ஒரு பேப்பரில் வெளிவந்தது

யெர்மனியில் வசிக்கும் எழுத்தாளர் நாடகநடிகர் வில்லிசை கலைஞர் இப்படி பல கலைத்துறையிலும் காலடி பதித்திருக்கும் சோழியன் என்கிற ராஜன் முருகவேல் அவர்களுடன் எம்.எஸ்.என். மெசஞ்சரில் நடந்த ஒரு உரையாடல் அதனை பதிந்துஉங்களிற்கும்போட்டிருக்கிறேன்.

சாத்திரி. வணக்கமண்ணோய் எப்பிடி சுகம்

சோழியன். வணக்கம் நல்ல சுகம் `ஹம் அம்மன் கோயில் தேருக்கு போயிருந்தன் அங்கை உந்த ஒரு பேப்பர் மற்றது ஒரு றேடியொ காரரும் வந்திருந்தவை

சாத்திரி. ஓமண்ணை கேள்விப்பட்டனான் அவங்கள் இப்பிடித்தான் எங்கையாவது அன்னதானம் சக்கரை தண்ணி ஊத்தினம் எண்டு கேள்விப்பட்டால் எத்தினையாயிரம் கிலோ மீற்றர் எண்டாலும் பிளைற் பிடிச்சு போடுவாங்கள் ஊர்ப்பழக்கம் திருத்த ஏலாது.

சோழியன். கி..கி..கி.. சரி அங்கை ஒரு பேப்பர் கிடைச்சது படிச்சன் கன பக்கத்தோடை நல்லா இருந்திது அது எங்கடை சிற்றிக்கும் தொடந்து கிடைக்கிற மாதிரி ஏதாவது வழி பண்ணஏலாதோ??

சாத்திரி. அண்ணோய் அதுக்கு நீங்கள் தான் ஏதாவது ஒரு வழி பண்ணவேணும் முடிஞ்சளவு எல்லா இடமும் அனுப்பினம் இதுக்குமேலை நீங்கள் ஏதாவது உதவினால் உங்கடை சிற்றி பிறீமனுக்கும் தொடந்து வர பண்ணலாம்.

சோழியன். அதுக்கு என்ன செய்யவேணும்

சாத்திரி. முடிஞ்சா அங்கை சபேசனொடை கதைச்சு பாருங்கோ ஏதாவது வழி பண்ணலாம் ஆளை தெரியும் தானே

சோழியன். ஓ நல்லா தெரியும் முந்தி நான் அவரின்ரை இடத்துக்கு பக்கத்திலை லிவகசனிலைதான் இருந்தனான்.

சாத்திரி. லிவகுசனிலையோ ?? அப்ப உங்களுக்கு மானிப்பாய் ராசுவை தெரியுமோ நாடகமெல்லாம் நடிக்கிறவர்.

சோழியன். ஓ நல்லா தெரியும் நாங்கள் யெர்மன் வந்த புதிசிலை ஒரே காம்பிலைதான் இருந்தனாங்கள் சோசல் காசு எடுக்கிற நாளிலை இரண்டு பேரும் ஒரே கொண்டாட்டம் தான்

சாத்திரி. ஓ அவர் என்ரை மாமா தான் அப்ப சிறி எண்டவரை தெரியுமா அதே காம்பிலை தான் இருந்தவர்.

சோழியன். ஓ அவரையும் தெரியும் யெர்மனியிலையே முதல் முதல் 85ம் ஆண்டு தமிழ் முறைப்படி நடந்த கலியணம்எண்டா அவரின்ரை கலியாணமாதான் இருக்கும். ஊரிலை பல வருசமாகாதலிச்சு இஞ்சை வந்துதான் செய்தவை.பிள்ளையும் நல்ல பிள்ளை

சாத்திரி. ம் தெரியும் அங்கை ஒரு எட்டு வருசத்துக்கு மேலை காதலிச்சு இரண்டு வீட்டு காரருக்கும் விருப்பம் இல்லாததாலை பெரிய சண்டையெல்லாம் நடந்தது

சோழியன்.. நாங்கள் காம்பிலை இருந்த எல்லாருமா சேந்துதான் செய்து வைச்சனாங்கள் . அந்த நேரம் இஞ்சை குத்து விளக்கு தேங்காயெல்லாம் கிடைக்காதுதானே. நான்தான் இரண்டு ஆஸ்ரேயை எடுத்து கீழை கம்பியாலை கட்டி அலுமினிய பேப்பர் எல்லாம் சுத்தி குத்துவிள்கு மாதிரி செய்து கொழுத்தி கலியாணத்தை நடத்தினாங்கள்.அதை மறக்கேலுமா

சாத்திரி. ஓ அப்ப தேங்காய் எப்பிடி செய்தனியள்

சோழியன். அது யாரோ எங்கையோ தேடிபிடிச்சு வாங்கியந்தான். பிறகு அவையளுக்கு இரண்டு பிள்ளையளும் பிறந்து சந்தோசமாய் இருந்திச்சினம் பிறகு நானும் சிற்றி மாறி தூரமா வந்தா பிறகு தொடர்புகள் இல்லாமல் போச்சுது.

சாத்திரி. அவைக்கு இரண்டு பிள்ளையளில்லை மூண்டு பிள்ளையள் ஆனால் இப்ப டிவோஸ் இரண்பேரும்

சோழியன். சே உண்மையாவோ இல்லை பகிடியோ

சாத்திரி. உண்மையாதான் அண்ணை அது நடந்து ஒரு அஞ்சு வருசமாகிது

சோழியன். என் தம்பி இரண்டும் காதலிச்சு எவ்வளவு கஸ்ரபட்டு இஞ்சைவந்து கலியாணம் செய்து இருந்ததுகள் பெடியனும் நல்ல பெடியன். என்ன நடந்தது??

சாத்திரி. ஓமண்ணை எட்டு வருசம் காதலிச்சு உறவுகளை எதிர்த்து ஊரைவிட்டு வந்து கலியாணம் செய்து பதினாறுவருசம் குடும்பம் நடத்தி மூண்டு பிள்ளையளையும் பெத்து கடைசியிலை அந்த பிள்ளையளை வளக்கிறதாலை நடந்த பிரச்சனையிலை இப்ப பிரிஞ்சு போச்சினம்.

சோழியன். ஒண்டும் விளங்கேல்லை

சாத்திரி. உங்களுக்கு தெரியும்தானே பெடியன் கொஞ்சம் கண்டிப்பான ஆள் பிள்ளையளை கண்டிக்கிறதிலை தாய்க்கும் தகப்பனுக்கும் நடந்த சின்ன சின்ன பிரச்சனையளை பிறகு வந்து சேந்த சொந்தங்களும் அந்த பிரச்சனையளை ஊதி பெருப்பிச்சு போட்டினம்.

சோழியன்..அடடடடா உந்த சில செந்தங்களுக்கு இதுதான் வேலை புருசன் பெண்டாட்டி பிரச்னையை அவையை தீர்க்க விடுறேல்லை அதுக்கை புகுந்து ஏதாவது செய்து போடுவினம்.பிள்ளையளின்ரை எதிர்காலத்தை பற்றி யோசிக்கிறேல்லை

சாத்திரி. உண்மைதான் பெட்டையின்ரை பக்கம் சிலர் பிள்ளையளைஇஞ்சை அடிக்க ஏலாது நீ வேலைக்கு போறாய் காசு இருக்கு கார் இருக்கு அதோடை பாசையும் தெரியும் ஏன் புருசனுக்கு பயபிடுறாய் எண்டு உருவேத்த பெடியனின்ரை பக்கம் நீ ஆம்பிளை என்னவும் செய்யலாம் எண்டு ஏத்திவிட கடைசியா வீணான வீம்பாலை கோட்டடி வாசல்லை கதை கிழிஞ்சு போச்சுது

சோழியன். கேக்க கவலையாதான் இருக்கு

சாத்திரி .எனக்கும்தான் கவலை நானும் முடிஞ்சளவு முயற்சி பண்ணி பாத்தன் இரண்டு பேரையும் கோபத்தை விட்டு ஒரு மணித்தியாலம் மனம் விட்டு கதைக்கபண்ணினா ஏதாவது நல்லது நடக்குமெண்டு ஆனால் இரண்டு பேருமே தங்கடை வறட்டு கெளரவத்தை காப்பாத்துறதிலை பிள்ளையளை மறந்திட்டினம். இப்ப கடைசியா அவையின்ரை மன சாட்சி எண்டு ஒண்டு இருக்கும் தானே அதாலை சொந்தம் சினேகிதம் எண்டு எவையின்ரை தொடர்பும் இல்லாமல் எங்கையோ ஏதோ ஒரு மூலையிலை வாழ்ந்து கொண்டிருக்கினம்.

சோழியன். கல கலப்பா கதையை தொடக்கி இப்பிடி கவலையிலை முடிச்சு போட்டீர் சரி மனிசி சாப்பிட கூப்பிடுறா பிறகு சந்திப்பம்

சாத்திரி. சரியண்ணை மீண்டும் சந்திப்பம்

No Comment