Navigation


RSS : Articles / Comments


படலைக்கு படலை

2:08 AM, Posted by sathiri, 2 Comments









படலைக்கு படலைஒருக்கால் தட்டி பாப்பம்

இந்தவாரம் ஒருபேப்பரில் வெளிவந்தது

படலைக்கு படலை என்கிற தொடர் நகைச்சுவை நாடகம் அதன் 5வது ஆண்டில் தொர்ந்தும் புலத்துவாழ் தமிழர்களின் படலைகளை தட்டஇருக்கின்றது. உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் சம்பவங்களை எங்கள் பிரச்சனைகளை எங்களின் கவலைகளை .மகிழ்ச்சிகளை .நிகழ்வுகளை என்று அன்றாட வாழ்வினை எங்கள் வீட்டு கண்ணாடியாய் இருந்து அதனை எங்களிற்கே பிரதிபலித்து அதன் மூலம் எங்களை சிரிக்வும் சிந்திக்கவும் செயற்படவும் வைக்கின்றது.


அதுமட்டுமல்ல ஒரு கற்பனை கதைகளையோ புராண இதிகாச கதைகளையோ நாடமாக்குவதென்றாலே சிரமம் அதற்கென தனிப்பட்ட பலரின் உழைப்பு மிக அவசியமாகின்றது.ஆனால் படைக்கு படலை நாடகம் வெறும் நகைசுவை நடிப்பு என்று நின்று விடாமல் எம்மவர் மத்தியில் இன்னமும் புதைந்து போயிருக்கும் சில சம்பிரதாயங்கள்.சடங்குகள் .சமயவிடயங்கள் என்று எம்மவர்களின் அன்றாட வாழ்வியலில் இன்னமும் படிந்திருக்கும் சில கறைகளை படம்பிடித்து அவற்றை கழுவும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால். இந்த கலைஞர்கள் அவர்களது வசன. நடிப்பு. படபிடிப்பு.மற்றும் தொழில் நுட்ப பிரச்சனைகளை எதிர்கொள்வதோடு மட்டுமன்றி அதற்கு மேலாக எம்மவர்சிலரின் விசனங்கள். விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். ஆனால் அதுவே அவர்களது வெற்றியும் ஆகும்.அதன் வெற்றிக்கு அதுமட்டும் காரணமல்ல.நடிப்பதற்கு அதுவும் திரையில் தோன்றுவதென்றாலே அழகான முகம் அதற்கு மேலும் அரிதாரம் பூசி அலங்கரித்து அடுக்கடுக்காய் வசனங்கள் இடையிடை எதுகைமோனையையும் எடுத்துவிடல் என்று நாடக தமிழில் இல்லாமல். எல்லா சம்பிரதாயங்களையும் உடைத்து.அனைவருக்கும் புரியும்படி அழகான பேச்சுதமிழ்.தமிழே அழகு அதை பேச எதற்கு முகஅழகு என்று தமிழை தமிழாக கதைத்து அரிதாரம் பூசி அன்னியபட்டு போகாமல் அடுத்தவீட்டுஉறவுகள் போனறதொரு உணர்வை ஏற்படுத்தும் அதன் நடிகர்களும் அதன் வெற்றிதான். ஒரு வீட்டில் ஒரு இளம் தம்பதியினரின் குடும்பத்தை பின்னணியாய் வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடர் காலப்போக்கில் பலரையும் இணைத்து பல குடும்பங்களாக வளர்ந்துஅதன் தேவைக்கேற்ப இன்று வெளிப்புறங்களிலும் படப்பிடிப்பக்களை நடாத்தி வளர்ந்து வருகின்றது. எனவே இந்த தொடர் நடிகர்களிற்கும் மற்றும் அதன் தயாரிப்பாளர் சுதன் ராச்சிற்கும் தொழில் நுட்ப கலைஞர்களிற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்ளுவேம். அடுத்ததாய் மேலே படலைக்கு படலை பற்றியும் அதன் வெற்றிகள் பற்றியதுமான கருத்துக்கள் ஆனாலும் அதில் சில குறைகளும் இருக்கதானே செய்யும் அவை தேவை கருதி புதிதாக இணைக்கபடும் நடிகளின் நடிப்பில் இன்னம் கொஞசம் கவனமெடுத்து அவர்களை பயிற்றுவித்த பின்னர் நடிக்க வைப்பது நலம் ஏனெனில் அவர்கள் ஒளிப்பதிவு(கமறாவை)கருவியை அடிக்கடி பார்ப்பது அல்லது பார்த்து கதைப்பது இயற்கை தன்மையை குறைத்து கொஞ்சம் உறுத்தலாக உள்ளது. அடுத்ததாக வெளிப்புற படப்பிடிப்புகளின் போது சில நேரம் ஒலி ஒளிப்பதிவு தரம் குறைந்ததாகவே இருக்கின்றது அதற்கான வசதிகள் இன்னமும் இல்லாதிருக்கலாம் ஆனாலும் ஒலிப்பதிவின் தரத்தில் வேறு வழிமுறைகள் மூலம் அதாவது ஒலிவடிவத்தை தனியாக பதிவு செய்து இணைப்பதால் அதன் தரத்தை கூட்டலாம். அதேபோல ஒளி ஒலிப்பதிவு முறையில் இன்னமும் நவீன முறைகளை கையாள்வதன் மூலம் எங்கள் படலையை மினுமினுபாக்கி கொள்ளவேண்டும் என்பதே எங்கள் விருப்பமும். யாரோ படலையிலை தட்டினம் பொறுங்கோ யாரெண்டு பார்த்து விட்டு தொடருகிறேன் நன்றி சாத்திரி

2 Comments

சினேகிதி @ 7:14 AM

sathiri padalaiku padalai nigalchi engda veeda elarukum virupam.

Unknown @ 12:45 AM

படலைக்குப்படலை மிகவும் ஒரு நல்ல நிகழ்ச்சி அது தொடரவேண்டும் என்பது என் அவா