Navigation


RSS : Articles / Comments


கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை 5

2:29 PM, Posted by sathiri, One Comment



சிங்கப்பூரும் சிங்காரிகளும்(காமம்)

இலங்கையில் பிரேமதாசா அரசுடன் புலிகள் நடத்திய இரகசிய பேச்சுக்கள்  உத்தியோக பூர்வ பேச்சு வார்தையாக மாற்மடைந்து கொண்டிருந்த காலகட்டம்.  சிங்கப் பூர் விமான நிலையத்தில் உலகின் பல பகுதிகளிலும் இருந்த வந்திருந்த  புலிகள் அமைப்பை சேர்ந்த பலரும் பயணிகள் விமானம் மாறுவதற்காக  காத்திருக்கும் மண்டபத்தில்  ஒரு மணி நேரத்தில் சந்தித்து விட்டு பின்னர் வெவ்வேறு பகுதிகளிற்கு பிரிந்து செல்லும்படியாக விமானப் பதிவுகள் செய்யப்பட்டிருந்தது  அப்படி பதிவு செய்யப் பட்டி ரிக்கற் ஒன்று அவனிற்கும் கிடைத்திருந்தது. அவன் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இறங்கிய நேரம் புலிகள் அமைப்பின் மூளை  எனப்படுபவர் தனது மனைவியுடன் வந்திருந்தார் . இன்னொரு பெண் இரண்டு குழந்தைகளுடன் சுவீடனிலிருந்து வந்திருந்தார்.

நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்த அனைவரும் கலகலப்பாக கதைத்துக்கொண்டிருக்கும் போதே தாய்லாந்திலிருந்த வந்த விமானத்தில்  புலிகளின் முதுகெலும்பு என வர்ணிக்கப் பட்டவர் வந்து இறங்கியிருந்தார்.அதேயளவு சம நேரத்தில் இந்தோனிசியாவிருந்து வந்த விமானத்திலும் ஒருவர் வந்திறங்குகிறார்.முதுகெலும்பை கண்டதுமே அனைவரது முகங்களும் இறுகி சீரியசாகின்றது. வந்தவர் நேரடியாக மூளையிடம் போய் கைகொடுத்து மற்றவர்களிடமும் நலம் விசாரித்துவிட்டு  மூளையை தனியாக அழைத்தக்கொண்டு கதைப்பதற்காக ஒரு லோஞ்சிற்குள் நுளைந்து விடுகிறார். அவரை  அவன் நேடியாக பார்ப்பது இது இரண்டாவது தடைவை அவனை  ஒரு வினாடி பார்த்து விட்டு பேசாமல் போய்விட்டார்.   அவர் தனக்கும் கை தந்து கதைப்பார் என்று சில வினாடிகள் எழுந்து நின்று காத்திருந்தவனிற்கு ஏமாற்றம். ஒரு நாளைக்கு என்னை தேடி வந்து கதைக்கிறமாதிரி செய்யிறன் என்று மனதிற்குள் சவால் விட்டபடியே போசமல் மீண்டும் அமர்ந்து அங்கு கிடந்த மகசீன் ஒன்றை எடுத்து பெர்பியூம் விளம்பரத்து அரை குறை  அழகியொருத்தியின் படத்தை அங்குலம் அங்குலமாக ஆாய்ந்து கொண்டிருக்கும்போது அவனிற்கு முன்னால்  ஒருவர் நின்று எப்பிடி சுகம் என்றார் நிமிர்ந்து பார்தான்.

நெடிய  கறுத்த உருவம் சுருள் முடி  கோட் சூட் அணிந்து  நின்றவர்  என்னோடை வாரும் என்று இன்னொரு லோஞ்சிற்குள் அழைத்து சென்றவர் என்ன குடிக்கிறீங்கள் என்றார். பிளேன் ரீ என்றதும். ஓடர் கொடுத்து விட்டு நான்தான் உதயன் என்று தன்னை அறிமுகம் செய்தவர். உம்மடை கால் எப்பிடியிருக்கு காது  எல்லாம் சரியாயிட்டுதா என்று அவனை விசாரித்த பொழுதே அவனது அத்தனை விபரங்களும் அவர் கையில் உள்ளது என்று அவனிற்கு புரிந்து போனது மட்டுமல்ல அவரை பற்றி அவரது சாகசங்கள் பற்றியெல்லாம் அவன் கேள்விப் பட்டிருக்கிறான். பல மொழிகள் சரளமாக பேசக்கூடியவர். இந்த உலகப்பந்தில் அவர் கால்படாத இடங்களே இல்லையென்று சொல்லாம்.இப்பொழுது அவரே அவனிற்கு முன்னாலிருந்து கதைப்பது அவனாலேயே நம்ப ஆச்சரியமாக மட்டுமில்லாது  மகிழ்ச்சியாகவும் இருந்தது. பிரெஞ்சு கதைக்க பழகிட்டியா என்று பிரெஞ்சிலேயே கேட்டார்.  ஓமென்றவனிற்கு பிரெஞ்சிலேயே அவன் செய்யவேண்டி விடயங்கள் பற்றி விபரித்து  கையில் கொஞ்ச டெலர்களையும் கொடுத்து விட்டு கவனமாய் செலவழிக்கவேணும் அடிக்கடி கேக்கக்கூடாது  என்றுவிட்டு ஒருவரின் விலாசத்தை கொடுத்து அவரை போய் சந்திக்கும்படி சொல்லி விடை பெற்றார். பின்னர் அங்கு சந்தித்த அனைவருமே பல்வேறு நாடுகளிற்கு பிரிந்து பயணிக்க அவன் மட்டும் சிக்கப்பூரில் வெளியேறினான். சிங்கப்பூர் விமான நிலையத்தில் வெளியேறும் போது நல்வரவு என்று தமிழில் எழுதி தொங்கவிடப் பட்டிருந்த  பதாதகையை பார்த்தவன்.

விரைவிலை எங்கடை விமான நிலையத்திலையும் இப்பிடி தமிழிலை எல்லாம் எழுதும் காலம்  வருமென்று நினைத்தபடி வெளியே வந்து பஸ்சில் ஏறி அமர்ந்தவன் யன்னல் வழியே  கண்களால்  சிங்கப்பூரை மேய்ந்தான்.இங்கு  வருவது இரண்டாவது தடைவை முதல் தடைவை வந்தபொழுது நாலு நாட்கள் வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் விடுதி ஒன்றில் ஓய்வு பின்னர் நாட்டைவிட்டு போய்விட்டிருந்தான். இனித்தான் சிங்கையை  அனுபவித்து பார்க்கப் போகின்றான் என்பது மட்டுமல்ல அவனது வாழ்க்கையில் பல அனுபவங்களையும் பெறப்போகும் இடம்.சிங்கப்பூரிற்கு 1819 ம் ஆண்டு பிரித்தானியர் ராபல்ஸ் என்பவர் வரும்போது  மலேசியாவில் இறந்து போனவர்களை புதைக்கும் சுடுகாடாகத்தான் பெரும்பாலும் சிங்கை இருந்ததாம். பிறகு 1965 ம் ஆண்டு அங்கு நடந்த தேர்தலில் லீ குவான் யூ  தேர்தல் அறிக்கையாக  தான் ஆட்சிக்கு வந்தால் சிங்கப் பூரை சிலோன் போல் மாற்றுவேன் என்று உறுதிகொடுத்திருந்தாராம். ஆனால் சிறிலங்கா இன்று சுடுகாடாகமாறிப்போய் இருக்கிறது சிங்கப்பூர் எங்கையயோ போய்விட்டது.

சிங்கைக்கு தலைநகரம் கிடையாது  அதன் பிரதான இடம் என்று அழைக்கப்படும் ஒச்சார்ட் வீதியில் இருந்த விலாசத்தை  தேடிப்போயிருந்தான் அது பலமாடிகளை கொண்டதொரு வர்த்தக நிலையம். அதன் மாடிப்பகுதி ஒன்றிலிருந்த  பாரிய எலெக்றோனிக் கடை ஒன்றுதான் அவன் தேடிப்போயிருந்த விலாசம். அங்கிருந்த பணியாள் ஒருவரிடம் அலி அகமத் என்று கேட்டதும்  கடைக்குள் இருந்த கண்ணாடி அலுவலகத்தை காட்டினான்.மத அடையாளங்களுடன்  சிறு தாடிசிவந்த தடித்த மனிதரொருவர் அமர்ந்திருந்தார். அலுவலகத்தினுள் நுளைந்தவன் தன்னை அறிமுகம் செய்ததும் தயாராய் வைத்திருந்த சில பத்திரங்களை எடுத்து நீட்டியவர் நிரப்பி கையெழுத்து போட்டு குடுங்க தம்பி என்றார். சிங்கையில் நீண்ட நாட்கள் தங்கவேண்டுமானால் ஒன்று வேலை  அல்லது மாணவ விசா தேவை அவன் வேலை எதுவும் செய்தாயில்லை எனவேதான் மாணவ விசாவிற்கான அனுமதி பத்திரமும்  எலொக்றொனிக் பொறியியல் படிப்பதற்கு தனியார் கல்வி நிறுவனமொன்றின் நுளைவு அனுமதி பத்திரங்களும் இருந்தது  தனது கடவு சீட்டை எடுத்து அதில் இருந்த விபரங்களை பதிந்து கையெழுத்திட்டு நீட்டினான்.போட்டோ  என்றார் எடுத்து நீட்டினான்.  சரி தம்பி ஒரு வாரத்திலை வாங்க எல்லாம் வந்திடும் என்ன தேவையென்னாலும் போனடிக்காதீங்க நேரடியாவே வாங்க  நான் இல்லேன்னா அதே அந்த பெண்கிட்டை விடயத்தை சொல்லிட்டு போங்க என்று கடையில் கல்லாவில் இருந்த பெண்ணை காட்டியவர். ஒரு விசிட்டிங் கட்டை எடுத்து நீட்டி இவரை போய் பாருங்க இவர்  உங்களுக்கான அடுத்த ஒழுங்ககளை செய்து தருவார் என்று சொல்லி அங்குபோவதற்கான வழி முறையையும் சொல்லியவர். எப்பிடி போவிங்க என்றார். பஸ்சிலைதான் என்றதும் அவ்வளவு சிரமபடவேண்டாம் என்றவர் யோசித்து விட்டு இருபது வெள்ளியை எடுத்து நீட்டி ரக்சிலையே போயிடுங்க என்றார். விடைபெற்றான்.

விசிட்டிங் காட்டில் விலாசம் தோ பா  யோ (toa payoh) என்றிருந்தது  ரக்சி காரனிடம் காட்டிவிட்டு ஏறி அமர்ந்தான். சில நிமிடங்கள் ஓடிய ராக்சி ஒரு சீன விடுதி ஒன்றின் முன்னால் நின்றது ரக்சிகாரனின் கணக்கை தீர்த்துவிட்டு உள்ளே நுளைந்து வரவேற்பு பகுதியில் நின்றிருந்த பெண்ணிடம்  ஆங்கிலத்தில் அலி அகமத்  அனுப்பினார் என்றான் . அவள் ஒரு பெட்டியை எடுத்து நீட்டினாள்  ஒரு கைத் தொலைபேசி மோட்டோரேலா மொடல் பற்றியுடன் சேர்த்து  குறைந்தது ஒன்றரை கிலோ வரும். இப்ப உள்ளவைகள் போல இடுப்பில் செருகவோ பொக்ற்றில் வைக்கவோ முடியாது  அதை தனியாக ஒரு பையில்தான் தூக்கி கொண்டு போகவேணும்.



இப்ப உள்ள மாதிரி சிம்காட் சிஸ்ரம்வேறை இல்லை அதாலை வேறை நாட்டுகாரர் சிங்கையில் இணைப்பு எடுக்க முடியாது  யாராவது சிங்கப்பூர் காரரின் பெயரில்தான் இணைப்பை எடுக்கலாம். அந்த விடுதி சீனரின் பெயரில்தான் இணைப்பு எடுக்கப்பட்டிருந்தது . கைத்தொலைபேசியை உருட்டி பார்த்துக்கொண்டிருந்தவனிடம் நீங்கள் போகலாமென்றாள் .

எங்கை போறது ??

அதைப்பற்றி எனக்கு தெரியாது .ஆனால் இங்கு தங்க முடியாது

மலிவான  விடுதி ஏதாவது இங்கை கிடைக்குமா??

வெளியேறி வலப்பக்கமாக நடந்து போ 500 மீற்றரிலை ஒரு லொட்ச் வரும் அங்கு இடமிருக்கா என்று கேட்டுப்பார்.  போய்வா என்றாள்

லொச்சில் இடமிருந்தது  அதுவும் ஒரு சீனனின் லொச்தான் அவன் அறையை காட்டினான்  ஒண்டரை மீற்றர் அகலம். இரண்டு மீற்றர் நீளம் .சிறிய கட்டில்  மேலே இரண்டு அறைக்கு பொதுவாக ஒரு காத்தாடி . குளியலறை கழிவறை எல்லாமே பொதுதான்.  நாளிற்கு ஏழு  வெள்ளியென்றான்.சிங்கை ஒரு பொதுவுடைமை நாடு என்பதும் அப்பொழுதான் அவனிற்கு புரிந்தது. அது மட்டுமல்ல அங்கு அப்படியானதொரு இன்னொரு உலகம் இருப்பதும் அப்பொழுது தான் அவனிற்கு தெரியும். கைத் தொலைபேசியை சார்ச்சரில் வைத்துவிட்டு கொண்டு வந்த பொதியை கட்டிலுக்கு கீழே தள்ளிவிட்டு படுக்கையில் சாய்ந்தபொழுது  கை தொலைபேசி அடித்தது  வாழ்நாளில் முதன் முதலாக கைத் தொலைபேசியில் பேசப் போகின்றான் எடுத்து காதில் வைத்து கலோ என்றதும். நான் உதயன்  என்றது குரல்.

000000000000000000000000000000000000000000000000000000000
ஏதும் தலைபோற அவசரம்  எண்டால் மட்டுமதான் இந்த போனை  பாவிக்கவேணும் மற்றபடி நாளைக்கு உனக்கு வசதியான சனம் அதிகம் இல்லாத இடமாய் இருக்கிற ஒரு பொது போன் பூத் ஒன்றிலை போய் பாத்து  அதுகின்ரை நம்பரை எனக்கு தந்துவிடு மற்றாக்களிற்கும் அந்த நம்பரையே குடுத்துவிடு இனி அந்த நம்பரிலை தொடர்பிலை இருப்பம் என்று விட்டு தொடர்பை துண்டித்து விட்டார்.

அடுத்தநாள் தோ.பா யோ  சந்தைக் கட்டிடப் பகுதியில் போய் சுற்றிப்பார்த்தான்  அது இரவும் பகலும் சனம் நிறைந்து கலகலப்பாக இருக்கும் ஒரு இடம். அங்கு ஒரு ஓரமாய் வயதான மலே இனத்தவரின் புத்தகக் கடை ஒன்று அங்கு பத்திரிகைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் விற்கும் கடை மாலையில் பூட்டிவிடுவார். அதற்கு அருகில் ஒரு தொலைபேசிக்கூடு இருந்தது அருகிலேயே  சீமெந்து வாங்கும் ஒன்றும் இருந்ததால் அந்த தொலைபேசிக் கூண்டை தெரிவு செய்து அதன் இலக்கத்தை குறித்தக்கொண்டான். அதற்கு பின்னர்  தேவைக்கேற்ப அந்த இலக்கத்திற்கு அழைப்புக்கள் வரும். அவனும் வகுப்பிற்கு போக ஆரம்பித்திருந்தான் காலை இரண்டு அல்லது  மூண்டு மணிநேரம்தான் வகுப்பு அது முடிய  மதியம் அளவு சாப்பாடு ஆசையாய் ஒரு  பியர் குடிக்க நினைத்தால்  அளவு சாப்பாடை கைவிட்டு 50 சதத்திற்கு வெள்ளைச்சோறும் 50 சதத்திற்கு  பருப்பு சாம்பாரும் பொலித்தீன் பையில்   கட்டித்தருவார்கள்.மிச்சக் காசில்  ஒரு பியர் வாங்கலாம் சாப்பிட்டு விட்டு லாச்சில் ஒரு குட்டித் தூக்கம் மாலையில் வந்து அந்த சீமெந்து வாங்கில் குந்தினால் இரவு பத்து அல்லது அதற்கு மேலும் நித்திரை வரும்வரை அங்கேயேதான் சுற்றிக்கொண்டிருப்பான். அது அவனது வெளிவேலைகளின் ஆரம்ப காலம் என்தால் அதிக வேலைகளும் கொடுக்கப் பட்டிருக்கவில்லை. பொழுதை போக்குவதற்காக  றேடியோவுடன் கூடிய வோக்மன் ஒன்று வாங்கியிருந்தான். அதற்குப் பின்னால் ஒரு வில்லங்கமே வரப் போகிறதென்று தெரிந்திருந்தால் அதனை வாங்காமலேயே விட்டிருப்பான் ஆனால் என்ன செய்ய விதி.


சிங்கப்பூர் தமிழ் வானொலியில் இரவு நல்ல நிகழ்ச்சிகள் போடுவார்கள். அவை பெரும்பாலும் இலங்கை வானொலியை ஒத்ததாகவே இருக்கும்.அதிலொரு நிகழ்ச்சிதான்  நேயர் விருப்பம்.நேயர்கள் விரும்பிய பாடல்களை தொலைபேசி மூலம் கேட்டதும் ஒலிபரப்புவார்கள்.  இருவர் நடத்தும் அந்த நிகழ்ச்சியில் தேவராஜ்  என்பவர்  இலங்கையில் மூளாயை  பூர்வீகமாக கொண்டவர். ஆனால் அவர் இலங்கைக்கு பேனதே கிடையாது.சிங்கையில் உள்ளுர் தொ.பே கட்டணம்  மிக மலிவு 10 சதம் போட்டு விட்டு அதிக நேரம் பேசலாம். அவனும் விரும்பிய பாடலை கேட்பதற்காக போனடித்திருந்தான் அவனது கதையிலேயே யாழ்ப்பாணத்தவன்  என அடையாளம் கண்டுகொண்ட தேவராஜ் நீங்கள் சிலோன்தானே என்றார்  பின்னர் ஊரை விசாரித்தார் அவனும் வாயில் வந்த புன்னாலைக் கட்டுவன் என்று சொல்லி வைத்தான். பின்னர் ஒவ்வொரு இரவும்  அவன் அந்த நிகழ்ச்சியை தவற விடுவதில்லை பாடல் கேட்பதற்காக போனடிக்கத் தொடங்கியிருந்தவன்  இன்னொன்றையும் கவனிக்கத் தொடங்கியிருந்தான்  ஒரு பெண்  ஒவ்வொரு நாளும் சோகப் பாடல்களையே  தொர்ந்தும் கேட்பார்.

தான் விரக்தியில் இருப்பதாக  நிகழ்ச்சி நடத்துபரிடமும் சொல்லியிருந்தாள். அன்றைய காலகட்டத்தில் தான் வானொலியில் இன்னொரு நிகழ்ச்சியையும் இரவு  11 மணிக்கு பின்னர் அறிமுகப் படுத்தியிருந்தனர். அந்த நிகழ்ச்சி மேலைத்தேய வானொலிகளில் நடக்கும் நிகழ்ச்சி  போல் ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைகளை  குடும்ப பிரச்சனைகளையும் வானொலியில் பெயரை குறிப்பிடாமலோ அல்லது குறிப்பிட்டோ சொல்லுவார். அந்த நிகழ்ச்சியை ஒரு பெண்ணும் ஆணும்  அதோடு ஒரு மன நல ஆலேசகர் ஒருவருடன் இணைந்து நடத்திக்கொண்டிருந்தனர். பிரச்சனைகளை சொல்பவர்களிற்கு  மன நல ஆலோசகரும் ஏதாவது உப்பு சப்பில்லாத  ஆலோசனைகள் உதாரணமாக எல்லாரிடமுமே தியானம் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பார். அது மட்டுமல்ல நேயர்களும் போனடித்து  தங்கள் ஆலோசனைகளை ஆறுதலை சொல்லலாம் அடுத்தவனின்ரை பிரச்சனையை கேட்பதென்றால் எல்லாரிற்குமே ஒரு ஆர்வம்தானே அதனால் அவனும் அந்த நிகழ்ச்சியை கேட்பதுண்டு பெரும்பாலும் பெண்களே பிரச்சனைகளோடு வருவார்கள். அப்படியானதொரு நாளில் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்த பெண்குரலை உற்று கேட்டுக்கொண்டிருந்தான்.அந்தப் பெண் தழுதழுத்த குரலில் தனது கணவனின் பெண் தொடர்புகள் பற்றியும் அவர் வீட்டிற்கே வருவது இல்லையென்றும் தனக்கு ஒரு பெண் குழந்தையும் இருப்பதாக கூறி தனக்கு தற்கொலை செய்யவேண்டும் போல் உள்ளது என்று சொல்லி முடித்தாள்.

ஒவ்வொரு நாளும் சோகப் பாடல்கள் கேட்கும் அதே பெண்குரல்தான் அடையாளம் கண்டு பிடித்துவிட்டான். உடைனையே வானொலி நிலையத்திற்கு பேனடித்தவன் தியானம் செய்யச்சொல்லிக்கெண்டிருந்த உளவியல் ஆலோசகரிடம்  வணக்கம் சொன்னவன் என்னங்க இப்பிடி எல்லாரிட்டையும் தியானம் செய்யுங்கள் எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறீங்களே  கடைசியில் சிங்கை  பெண்கள் சாமியார் மடமாயிடுமே என்றதும். அவரே சிரித்துவிட்டார். உங்கள் ஆலோசனைதான் என்ன என்றார்? தினமும் இப்பிடி கனபேர்  பிரச்சனைகளோடை வருகிறார்களே அதற்கு சிங்கையின் அதிக வேலை. தனிமை என்பன முக்கிய காரணங்கள். இப்படி பிரச்சனைகளோடு வருபவர்களிடையே  நீங்களே  ஒரு தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் தங்களிற்குள் மனம் விட்டு பேசினாலே மன அழுத்தம் குறைந்து விடும் என்றவன் தற்சமயம் கதைத்த பெண்ணிற்கும் தனிமை தான் பிரச்சனை என்று தெரிகின்றது   எனது தொ.பே இலக்கத்தை தருகிறேன் விரும்பினால் அவர் தொடர்பு கொள்ளலாம் தாராளமாக மனம்விட்டு  கதைக்கலாம்  என்று சொல்லி இலக்கத்தையும் கொடுத்தான். வீதியோரத்து இலக்கம்தானே யார் போனடிச்சா அவனுக்கென்ன ?


மறுநாள் வழைமைபோல சோகப்படல் ஒன்றை ஒலிபரப்ப கேட்டுவிட்டு போயிருந்தாள்.  வானொலிக்கு போனடித்தவன்  வாழும்வரை போராடு  என்கிற பாடலை சற்றுமுன் சோகப் பாடல் கேட்டவரிற்கு சமர்ப்பிக்கிறேன்  அதனை ஒலி பரப்புங்கள் என்று கேட்டிருந்தான். பாடல் போய்க்கொண்டிருக்கும் போதே  கூண்டு தொலைபேசி ஒலித்தது. காதில் வைத்து கலே என்றான். நமஸ்காரங்க என்றது பெண்குரல்.

வணக்கம்   அப்பாடா இப்பவாது போனடிச்சீங்களே மகிழ்ச்சி.

றெம்ப நன்றிங்க

எதுக்கு ??

எனக்காக பாட்டு போட சொன்னதற்கு.

அதுசரி உங்களோடை பேர்தான் என்ன?

தனலக்சுமி

தனம் ரெம்ப இருக்குமோ?

அதெல்லாம் றெம்ப இருக்குங்க ஆனா மனசுலை நிம்மதிதான் இல்ல  என்று அவனது கேள்வியின் முழு அர்தமும் புரியாமல் அப்பவியாய் பதில் சொன்னாள். அன்று சில நிமிடங்கள் மட்டுமே நடந்த உரையாடல்  முடிவிற்கு வர மறுநாள் மீண்டும் தொலைபேசியடித்தது. உங்களோடை சோகத்திற்கு  காரணம் தான் என்னங்க நேரடியாகவே கேட்டுவிட்டிருந்தான்.  அது ரெம்ப பெரிய கதைங்க  உங்களிற்கு  ஏதாவது வேலையிருக்கும்  எதுக்கு என்னோடை கதையெல்லாம்  என்றாள். அவனிற்கு  அந்த சீமெந்து வாங்கில் இருந்து தேய்ப்பதைத் தவிர வேறை முக்கியமான வேலை எதுவும் இல்லை.  பரவாயில்லீங்க சொல்லுங்க என்றான்.  சொல்லத் தொடங்கினாள். பல மணி நேரமாக  அவள் சொன்ன கதையை  சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.  அவள் கணவர் ஒரு தொழில் அதிபர்  சிங்கையிலும்  கொங் கொங்கிலும்  மும்பையிலும் அவரிற்கு அலுவலகங்கள் இருந்தது அதுவும்  சினிமாத்துறையில்.  அவரது நிறுவனம் தான் பாடல் இசை தட்டு வெளியிடும் முன்னணி  நிறுவனம். அது மட்டுமல்ல இந்திய படங்களின் வெளிநாட்டு வினியோகம் .

இந்தி தமிழ் மொழி  படங்களையும் தயாரித்திருந்தார்கள். அவரிற்கு சிங்கையிலும்  கொங்கொங்கிலும் சீன பெண்களோடு  உறவும் அதனால் குழந்தைகளும் உண்டு  அதைவிட சினிமாத் துறையில் பல பெண்களோடும் தொடர்புகள். அதனால் தங்கள் மகனை வழிக்கு கொண்டு வரலாமென நினைத்தும் தங்களிற்கு குடும்ப வாரிசு வேண்டும் என்கிற காரணத்தாலும் அவரின் தாய் தந்தையர்  தமிழ் நாட்டின்  நெய்வேலிக்கு சென்று   தங்கள் உறவில் பொருளாதாரப் பிரிவில்  படித்துக்கொண்டிருந்த  கிராமத்து  சூழலில்  வளர்ந்த தனலக்சுமியை  பேசி முடித்திருந்தனர். அவள் சங்கீதமும் நடனமும் கூட கற்றிருந்தாள். வெளிநாடு வசதியான இடம்  சீர் வரிசை எதுவும் இல்லை இருபது வயதுகள் வித்தியாசம்.அவளின்  படிப்பு இடை நிறுத்தப் பட்டது . தாய் தந்தையரின் வற்புறுத்தலா அல்லது அவளின் அழகா ஏதோவென்றில்  அவனும் தாலி கட்டிவிட்டிருந்தான். அவள் சிங்கை வந்து  மகளும் பிறந்த பொழுதுதான்  கணவன் வீட்டிற்கு வராத காரணங்கள்  புரிந்தது  அதனை  ஆராய்ந்த பொழுது அடிக்கடி சண்டைகள்.  எப்போதாவது வீட்டிற்கு வரத்தொடங்கியிருந்தான்.  மாமா  மாமியின் அன்பான கவனிப்பு  வசதியான வாழ்க்கை  அவள் குழந்தையின் சிரிப்பு   அவளை வாழவைத்துக்கொண்டிருந்தது . இதெல்லாம் இல்லாட்டி நான் எப்பவோ செத்திருப்பேனுங்க  என்று முடித்திருந்தாள்.

அந்த தொழிலதிபரின் மனைவியா என அவனிற்கும்  ஆச்சரியமாகவே இருந்தது. அதன் பின்னர் நாளிற்கு நாள் நிமிடங்கள் அதிகரித்து மணித்தியாலங்களை  விழுங்கத் தொடங்கியிருந்தது. அவள் பாட்டு படித்து காட்டுவாள்   அவனும் ஆரம்பத்தில் அம்புலிமாமா ஜோக்கில்  தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அந்தமாதிரி  ஜோக்குகள்  சொல்ல ஆரம்பித்திருந்தான் அவளிற்கும் பிடித்திருந்தது விழுந்து விழுந்து சிரித்தபடி அப்புறம் என்பாள். அவனிற்கு நின்றுகதைப்பதால் கால்வலியெடுத்து குந்தியிருந்து கதைக்கத் தொடங்கினான். வயர் கொஞ்சம் நீளமாக இருந்தால் சீமெந்து வாங்கில் படுத்திருந்தபடியே கதைக்கலாமெண்டு நினைப்பும் வந்தது .
ஏனுங்க எத்தனை நாளிற்குத்தான் இப்பிடி போனிலையே பேசிறது நேரிலை பாக்கவே முடியாதா?
அவன் அப்படி கேட்க மாட்டான ??என எதிர் பாத்திருந்தவள் போல்  நாளைக்கு பாக்கலாமே என்றாள்.

எங்கை பாக்கிறதாம்.

நான் அதிகமா தனியா எங்கையும் வெளிலை போனதில்லீங்க இங்கை பக்கத்திலையே West Coast Plaza வந்திடுங்களேன். அங்க முதல் மாடியிலை உள்ள கோப்பிக்கடையிலை பாக்கலாமே.

எனக்கும் சிங்கப்பூர் அவ்வளவா தெரியாது அது எங்கைங்க இருக்கு?

யுரோங் பக்கமுங்க.

எப்பிடியோ தேடிப்பிடிச்சு வந்துடறேன் ஆனா எப்பிடி உங்களை அடையாளம் கண்டு பிடிக்கிறதாம்.?

நான் சுடிதாரிலை இருப்பேன்.

றெம்ப முக்கியமான அடையாளம் சிங்கப்பூரிலை சீனாக்காரிகூடத்தான் சுடிதார் போடுறாங்க.

வெள்ளை சுடிதார் மேலை சிகப்பு சோல் போட்டு வாறேன் அது உங்களிற்கு ஈசியா இருக்கும்  நீங்க?

எப்பவாவது தோய்க்கிற கறுப்பு ஜுன்ஸ்  மேலை சிகப்பு ரீசேட் ஓகேயா?

சரிங்க நாளைக்கு சந்திப்பம்..
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஆனாலும் அவனிற்கு ஒரு சந்தேகம் உண்மையிலேயே அது அப்பாவிப் பெண்தானா அல்லது ஏதாவது வேறை மாதிரி கும்பலாயிருக்குமோ என்பததான் அது .எதக்கும் நேரத்தோடையே போய் மறைந்திருந்து நோட்டம் விடுவது என்று தீர்மானித்திருந்தான். அவன் சொன்னது போல் சிவப்பு ரீ சேட் போடாமல் வெள்ளை ரீ சேட்டுடன் போனவன் முதலாம் மாடியில் இருந்த துணிக்கடை ஒன்றில் இருந்து நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அவள் சொன்ன நேரத்திற்கு ஓடும் மாடிப்படிகளில்  ஒரு சோடி தனங்கள் தெத்திவிழையாட ஓடிவந்துகொண்டிருந்தது ஒரு வெள்ளைச் சுடிதார். அவள்தான் தனலக்சுமியா இருக்கலாமென முடிவெடுத்திருந்தாள். பெத்தாங்களா  இல்லை அளவெடுத்து செய்தாங்களா என்று அதிசயிக்கும் அங்கங்கள் அளவாகவும் அழகாகவும்  அசைந்துகொண்டிருந்தது.அவள் அழகிற்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் கொட்டிக்கொடுத்து விட்டு காலடியிலேயே காத்திருக்கலாம். அப்படியிருக்க ஒரு கோடீஸ்வரன் தாலியை கட்டிட்டு அப்பப்ப வந்து தொட்டுட்டு போறானே என்று அவனிற்கு கோவமும் வந்தது. கோப்பிக் கடையருகில் வந்தவள் பதட்டத்தோடு சுற்றிவர பாத்துக்கொண்டிருந்தபோதே அவளோடு யாரும் வரவில்லையென உறுதி செய்தவன் அவளருகில் வந்து வணக்கமுங்க மன்னிச்சுங்க  சிகப்பு ரீசேட் அழுக்காயிட்டுது அதுதான் வெள்ளையிலை வரவேண்டியதாயிட்டுது என்றான்.

உங்க பேச்சை பாத்தா பெரியாளா இருப்பிங்க  என்று நினைச்சன் ஆனா சின்ன பையனா இருக்கிறீங்களே  என்றாள்

உலகமகா அவமானம். நானும்தான்  உங்களை வயசான கிழவியா இருப்பீங்க எண்டு நினைச்சன்  ஆனால் சின்னப் பெண்ணா இருக்கிறீங்கள் என்றான்.

வெட்கத்தோடு சரிங்க யாராச்சும் பாத்தாலும் நான் போயிடுறேனே?
என்னது இதுக்கா இவ்வளவு தூரம் வந்தனான் சரி வாங்க கடைஉள்ளை போய் ஓரமாய் உக்காந்து கூலாய் ஏதாவது குடிக்கலாம்.

சில நிமிட சந்திப்புத்தான் அவள் பயந்தவளாகவும் படபடப்போடுமே இருந்தாள். அந்த சில  நிமிடங்களிலேயே அவள் இருக்கும் குடியிருப்பு எத்தனையாம் மாடி என்ன இலக்கம் எப்போது தனியாக இருப்பாள் என்கிற விபரமெல்லாம் தெரிந்து கொண்டிருந்தான்.  விடைபெற்றவளிடம் என்னங்க இனி எப்போ சந்திக்கிறதாம் என்றான்.

எனக்கு இப்பிடி வெளிலை சந்திக்க றெம்ப பயமா இருக்கு எங்க மாமா மாமி யாராவது பாத்தா பெரிய பிரச்சனையாயிடும்.

அப்போ சந்திக்கபோறதேயில்லையா?

மெளனமானாள்.

சரிங்க இரவு பேனிலையே பேசலாம் விடைபெற்றான்.

அன்றிரவு போனடித்துக்கொண்டேயிருந்தது அவன் எடுக்கவேயில்லை  அந்தப் பக்கமாய் வந்த ஒரு சீனன் ஒருவன் எடுத்து காதில் வைத்து கலோ என்றான் அதற்கு பிறகு போனடிக்கவில்லை அவன் சிரித்துக்கொண்டான்.

அடுத்தநாள் அவளது குடியிருப்பை தேடிப்பிடித்து போயிருந்தான் வசதியானவர்கள் வாழும் இருபது  மாடிகளைக் கொண்ட ஆடம்பரக்குடியிருப்பு  காவலாளிகள்  பாதுகாப்பு கமறாவெல்லாம் பூட்டியிருந்தது. முதல் மாடியில் பல அலுவலகங்கள் இருந்ததால் இலகுவாக உள்ளே புகுந்துவிட்டிருந்தவன் லிப்ற்றில் ஏறி 16 வது மாடிக்கு வந்தவன் அவனது வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். துவாரம் வளியாக பார்த்தவள் ஆச்சரியத்துடன் கதைவை திறந்து நீங்களா என்றவள் உள்ளை வாங்க பரபரப்பானாள். எப்படி வீட்டை கண்டு பிடிச்சிங்க?

அதுதான் நேற்றே சொல்லிட்டிங்களே

நல்லவேளை இப்பதான் மாமி வந்து மகளை எடுத்துக்கொண்டு போனாங்க

அதுவும் நேற்றே சொல்லிட்டிங்களே

ஓ அதுதான் புடுங்கி புடுங்கி கேட்டீங்களா? அதுசரி எதுக்கு  நேத்து போன் எடுக்கலை?

காத்திருக்கிறது மட்டுமில்லை  காக்க வைக்கிறதிலையும் ஒரு சுகம் இருக்கு

என்வோ போங்க எனக்குத்தான் மனசே சரியில்லை. என்ன சாப்பிடுறீங்க என்றவாறு  பரபரப்பானவள் இன்னிக்கு மதியம் சாப்பிட்டுதான் போகணும்  சமையலில் இறங்கியவள் நான் வெஜுரேரியன் காய் மட்டும்தான் சமைக்க தெரியும் பரவாயில்லையா?

நானும்  வெஜுரேரியன்தான்  நான் (non) வெஜுரேரியன்  ..பசிக்கு எது இருக்கோ  எல்லாமே சாப்பிடுவேன்.

சமைத்து முடித்தவள் மேசையில் அவனிற்கு மட்டும் பரிமாறிவிட்டு காத்திருந்தவளிடம்.ஏன் உங்களிற்கு பசிக்கலையா

அதில்லை ஆம்பிளைங்களிற்கு பரிமாறிவிட்டு அவங்க சாப்பிட்டப்புறம் சாப்பிடறதுதான் எங்க ஊர் வழக்கம்.

மற்றவங்க பசியோடை பாத்துக்கொண்டிருக்க  சாப்பிட்டால் வயித்தை வலிக்குமாம் அதலை சேந்து சாப்பிடுறது எங்க ஊர் வழக்கம் எனக்கு வயித்து வலிவேண்டாம் சும்மா உங்காருங்க

சாப்பாட்டை போட்டு விட்டு அமர்ந்தவளிற்கு ஒரு பிடி உணவை எடுத்து வாயருகே நீட்டிளான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டாள் ஆனாலும் கண் மூடி வாய்திறந்தாள் தொண்டைவளியே உணவு உள்ளிறங்கும் போது கண்கள் கலங்கியிருந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் போனடித்து மாமியார் அப்போதைக்கு வரமாட்டார் என்பதை உறுதி செய்தாள் அவர்களும் அதே மாடிக்குடியிருப்பில் வேறு பகுதியில் தான் குடியிருந்தார்கள்.போவதற்கு புறப்பட்டவனிடம்  உங்களிற்கு ஏதாவது அவசர வேலையிருக்கா என்றவளிடம்.

எனக்கென்ன வேலை  அவசரம் ஒண்டும் கிடையாது சோபாவில் அமர்ந்தான்

அப்ப கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாமே அமர்ந்தாள் அதே சோபாவில்தான் கொஞ்சம் இடைவெளி

ஏதாவது  ஜோக்  சொல்லுங்களேன்.

ம்ம்ம்...ஜோக் வேண்டாம் அது போனிலை சொல்லுறன்.இப்ப  ஒரு சின்ன விடுகதை

விடை சரியா சொன்னா என்ன குடுப்பீங்க

என்ன வேணுமானாலும்..என்னை வேணுமானாலும். ஆனா தோத்திட்டா எனக்கு இங்கை ஒரு முத்தம் குடுக்கவேணும் தன் உதடுகளை காட்டினான்.

சீய்ய்ய்..செல்லமாய் கோபித்தவள் சரி சொல்லுங்க

வென்றாலும் தோற்றாலும் இலாபம்தான் எனவே ஈசியாய் ஒரு விடுகதை ..எல்லா ஆங்கில எழுத்தக்களிலும் றெம்ப கூலாக இருக்கும் எழுத்து எது??

ம்ம்...கொஞ்சம் யோசித்தவள் விடை தெரிந்திருக்கலாம். ஆனாலும் தெரியாது உதட்டை பிதுக்கினாள்.
சரி தோத்திட்டாய் எங்கை குடு.. உதட்டை காட்டினான்

முதல்லை விடையை சொல்லுங்க

B தான் ஏனெண்டா அதுதானே  Aக்கும்  C க்கும் இடையிலை இருக்கு

அட ஆமால்ல

எங்கை குடு குடு ஊம்ம்ம்..

அங்கையெல்லாம் முடியாது கன்னத்திலைதான்

சரி ஏதோ பரவாயில்லை கன்னத்தை காட்டினான்.

உதட்டை குவித்து கிட்ட நெருங்கியவனிள் கண்கள் முடிக்கொள்ள அவன் சட்டென கன்னத்தை திருப்பி தன்உதடுகளை அவள் உதடுகளோடு ஒட்டினான்  அவளிற்கோ பிரிக்க விருப்பமில்லை சோபவில் சரித்தான்.மெல்ல அவன் கைகளை விலக்கியவள்  மெல்லிய குரலில் இங்கை வேணாம்.
விசாலமான படுக்கையறை துள்ளிவிழுந்தால் தூக்கியெறியும் சொகுசு பஞ்சுமெத்தை. ஆரம்பிக்கும் ஆனந்த சயனத்தில் அவன். அவள் யன்னல் திரைகளை இழுத்தாள் பகல் இரவானது அவிழ்த்தஅவள் அங்கு நிலவானாள்.அலுமாரியை திறந்து காற் சலங்கைகளை கால்களில் மாட்டிக்கொண்டாள். அவள் மேனியில் அச் சலங்கைகள் மட்டுமே ஆடையாக

என்ன இது ??

எனக்கு மகிழ்ச்சியோ கவலையோ  சலங்கையை கட்டிக்கொள்வேன்.இப்போ நான் றெம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இப்ப இது றெம்ப முக்கியமாக்கும் என நினைத்தவன் கையை நீட்டினான். அவன் கைகளில் அவள் வீணையானாள் மீட்டத்தொடங்கினான். முத்தத்தை  நெற்றியில் தொடங்கியவன் உதட்டை கடந்து கழுத்துவழியிறங்கி இடையை தொட்டபோதுதான் ..றெம்ப பெரிய இடத்திலை வாயை வைக்கிறமோ? ஏதாவது பிரச்சனை வந்தால் ???.  சே முழுக்க நனையிறதெண்டு முடிவெடுத்தாச்சு மொட்டாக்கு இனியெதுக்கு.முன்னேறினான். அவள் சலங்கை ஒலிக்க ஆரம்பித்தது. இந்தநேரம்  சீர்காளியின்ரை ஒரு மணிக்கொருமணி  எதிர் எதிர் ஒலித்திட எண்டிற பாட்டை  சிங்கப்பூர் வானொலியிலை போட்டால் எப்பிடியிருக்கும். .. பலநாள் பாலைவனத்தில் தாகத்தோடு  தண்ணியின்றி அலைந்த ஒரு ஒட்டகம் பசும் சோலையில் நீர் நிலையை கண்டது போல் தாகம் தீரும்வரை அள்ளி அள்ளி பருகினாள்.அடித்து ஒய்ந்தது  சலங்கை அவன் அணைப்பில் அவள்.

ஏய் ...

ம்...

றெம்ப சூடயிருக்கே

எது ??

அறைதான்

ஏசியை கொஞ்சம் கூட்டிவிடேன்.

குளிரை   கூட்டியவள் மீண்டும் கூடினாள்.
அன்ரிரவு வானொலிக்கு போனடித்து மகிழ்ச்சியான பாடல் ஒன்றையும் கேட்டிருந்தாள் நிகழ்ச்சி நடத்தியவரிற்கே ஆச்சரியம்.
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
இரண்டு மாதங்கள் அவனிற்கு அனேகமாக ஒவ்வொரு நாளுமே அவள் வீட்டில் விருந்துதான் இப்பொழுதெல்லாம் அவனிற்கு சாப்பாட்டு காசு மிச்சம் அது மட்டுமல்ல தாரளமாக பியரும் அடிக்க அவள் அவ்வப்பொழுது அவன் சட்டைப் பையில் வைக்கும் பணம் உதவியது. இப்பொழுதெல்லாம் சிங்கப்பூர் வானொலிக்கு  இரண்டு நேயர்கள் குறைந்து போய்விட்டிருந்தனர். ஆனால் அவனிற்கு வேலைகள் அதிகரித்திருந்தது மட்டுமல்ல அடிக்கடி வெளிநாடுகளிற்கும் பயணிக்க வேண்டியிருந்தது கொள்வனவு பொருட்களை சேகரித்து வைப்பதற்காக  தனியாக ஒரு வீடும் தேடிக்கொண்டிருந்தான் அப்படியானதொரு நாளில்தான் அவள் வீட்டிற்கு சென்றிருந்தவனை
என்னங்க கொஞ்சம் இங்கை வாங்களேன். முதன் முதலாக சாமியறைக்குள் அழைத்து சென்றவள் அங்கு தட்டில் இருந்த இரண்டு மெட்டிகளை அவன் கையில் கொடுத்து இதை மாட்டிவிடுங்களேன்..

என்னது ?

மெட்டி இது கூட தெரியாதா?

அது தெரியிது இப்ப எதுக்கு இதைமாட்டி விடணும்.

தெரிஞ்சோ தெரியாமலே பிடிக்காத தாலியை கட்டிக்கிட்டேன்.  ஆனா அதை  கழற்ற மனசு இல்லை  அதாலை மெட்டியை கழற்றிட்டு  மனசுக்கு பிடிச்சவர் கையாலை போட்டுக்கபோறன்.அவன் கைகளில் திணித்தாள்.

நிலைமையின் விபரீதம் இப்பொழுதுதான் அவனிற்கு புரியத் தொடங்கியது. சங்கடமான நிலைமை  சரி தாலியா கட்டப் போறம் மெட்டிதானே மாட்டி விடுவம்.  மாட்டி விட்டான்.அன்று அவன் அணைப்பில் இருந்தவள் ..என்னங்க எனக்கு இப்பிடியே செத்துடணும் போல இருக்கு..ஏய் லூசு  என்ன உளறுறாய்??  வீட்டு அழைப்பு மணி அடித்தது.. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தவள் போய்  துவாரம் வளியாக பாத்தவள்  ஜயையோ மாமியும் மகளும்  அவளிற்கு காத்தாலை லேசா உடம்பு சரியில்லை என்றவள் .திரும்ப ஓடிவந்து அவனை குளியலறைக்குள் தள்ளி கதவை சாத்தி விட்டு போயிருந்தாள்.
அப்பொழுதான் அவன் மண்டையில் உறைத்தது ஜயோ  வசல்லை செருப்பை கழட்டி விட்டிருந்தனே  கவனிச்சிருப்பாங்களோ?? என்ன செய்யலாம்.

குளியலறை யன்னலை திறந்து எட்டிப்பார்த்தான் 16 ம் மாடி தலை சுத்தியது குதிச்சால் எலும்புகூட மிஞ்சாது. என்ன செய்யலாம்.?? அப்பதான்  அவனிற்கு ஊர் பிள்ளையாரின்  ஞாபகம் வந்தது  மருதடியானே உனக்கு சின்ன வயசிலை தேங்காயெல்லாம் உடைச்சு கற்பூரம் கொளுத்தியிருக்கன் என்னை காப்பாத்து. அவள் மாமியாரை சமாளித்து அனுப்பி விட்டிருந்தாள். உடைகளை  அவசரமாய் எடுத்து அணிந்தவன் வெளியேறியபோது அவள் குழந்தை அவனை பார்த்து புன்னகைத்தது அந்தப் புன்னகை அவனை ஊடுருவி மனதில் என்னவோ செய்தது. இனி அவளிடம் போவதில்லை  முடிவெடுத்தான் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000


அப்பொழுது அவன் அடிக்கடி மலேசியாவிற்கும் போய் வருவதால் ஈசூன்  (yishn)பகுதியில் வீடு எடுத்திருந்தான். வானொலியில்  அவள் மீண்டும் சோகப் பாடல்கள் கேட்கத்தொடங்கியிருந்தாள். அவன் பாடல் எதுவும் கேட்பதில்லை. அவனது குடியிருப்பிற்கு கீழே உள்ள கோப்பிக்கடையில்  தினமும் பத்திரிகையை கையில் எடுத்தபடி பிளேன் ரீ குடிப்பது  அவனது வழைமை. அன்றும் அப்படி பத்திரிகையை புரட்டியவன்   ..மாடியில் இருந்து குதித்து இளம் தாய் தற்கொலை  படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது.   மனது லேசாய் வலித்தது  நானும் ஒரு காரணமோ .  யோசித்தான்.   சே இதையெல்லாம் யோசிச்சு கொண்டிருந்தால் அடுத்த வேலை நடக்காது.
இப்பொழுதெல்லாம் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள். ஆனாலும் அங்கு நிற்கும் போது வழைமையாக பத்திரிகையை எடுத்தபடி பிளேன்ரியோடு அமர்ந்தவன் முன்னால்

காய்.யு ஆர் ரமிலியன்.??

சிங்கையில் இப்பிடித்தான் ஆங்கில அகராதியிலேயே இல்லாத சொற்கள் எல்லாம் கேட்கலாம்.
நிமிர்ந்து பார்த்தான் சப்பை முகம் பழுப்பு நிறம்.மலே பெண்போல தெரிந்தாள் கைகளால் மார்போடு  கட்டியணைத்த பைபிள்.

நோ நான் ஜப்பானிஸ் ஆனா தமிழ்பேப்பர் படிப்பன்.

யூ ஆர் வெரி பனி'funny) லா...ஜ ஆம் போலின்   வலக்கையை நீட்டினாள்.

தொடரும் ஆனால் இப்போதைக்கில்லை.....

 முன்னைய பதிவுகள்இங்கு அழுத்தவும்

நானும் பில்லாவும்.

2:08 PM, Posted by sathiri, One Comment

நானும் பில்லாவும்.
சாத்திரி ஒரு பேப்பர்.

Posted Image

நான் வேலையிடத்தில் நின்றபொழுது ஒரு குறுந்தகவல் என்னுடைய நண்பி ஒருத்தியினுடையது. அவர் பிரான்சின் .pathe திரைப்பட நிறுவனத்தின் எனது பிராந்தியத்திற்கான நிருவாக இயக்குனராக இருக்கிறாள். படம் பார்ப்பதற்கான  ஓசி ரிக்கற்றுக்கள் அடிக்கடி தருவாள். அவளது குறுஞ் செய்தி என்னவெண்டால்  ஒரு பொலிவூட் படம் ஒண்டு எங்கடை நிறுவனம் வாங்கியிருக்கு  வாற ஞாயிற்று கிழைமை  படம்  நான் நிக்கமாட்டன் வக்கேசனிலை போறன் அதாலை றிக்கற் உன்ரை தபால் பெட்டியிலை போட்டு விடுறன். இதுதான் தகவல். போலிவுட் படமெண்டால் ஏதாவது கிந்திப் படமாயிருக்கும் ஏனெண்டால் சாருக்கான் நடிச்ச படமெண்டு இஞ்சை ஓடினது  இல்லாட்டி slum dog millionaire மாதிரி வெள்ளைக்காரன்  இந்தியாவிலை போய் எடுத்த படமாயிருக்கும் எண்டுதான் நான் நினைச்சன். காரணம் என்ரை இடத்திலை என்ரை குடும்பத்தை விட்டால் வேறை இரண்டு தமிழ் குடும்பம்தான் தூரத்திலை இருக்கினம். அதாலை தமிழ் படம் எடுத்து ஓடுறதுக்கான சாத்தியம் எதுவும் இல்லை. வீட்டை வந்து தபால் பெட்டியை திறந்து பாத்தால்  பில்லா 2 எண்டு எழுதி ஒரு நோட்டிசும் 3 றிக்கற்றும் இருந்திச்சிது  எனக்கு சரியான புளுகம். ஏனென்டால் எங்கடை சிற்றியிலை ஓடுற முதல் தமிழ்படம் அதுவும் பிரெஞ்சு கொம்பனியே எடுத்து போடுறாங்கள்.

அதைவிட ஓசி றிக்கற் வேறை இதுக்கு மேலையும் படத்தை பாக்க போகாமல் விட்டால் நான் தமிழனேயில்லை எண்டு முடிவுக்கு வந்திட்டன். ஆனால் தலையின்ரை படம் பேர் வேறை பில்லா  படத்திலை தலை எப்பிடியும் ஒரு பிஸ்ரலாலை மகசீன் மாத்தாமலேயே ஆயிரம் குண்டுகளால் குறைஞ்சது  50 பேரையாவது சுட்டுத்தள்ளுவார்.  வன்முறை காட்சிகளாக இருக்கும் அதாலை மகளை விட்டிட்டு நானும் மனிசியும் போறது எண்டு முடிவெடுத்தன். பொதுவா பிரான்சிலை ஓடுற படங்களிற்கு வயது கட்டுப்பாடு 10..12...16..18...வயது எண்டு நாலாய் பிரிச்சிருப்பாங்கள். அந்த வயதுக்குட்பட்டவையை உள்ளை விடமாட்டாங்கள்.  ஆனால் பில்லா படத்துக்கு இந்தியன் சென்சார் போட் குடுத்த  U சேட்டிபிக்கற்ரை பாத்திட்டு பிரெஞ்சு காரன்  வயது கட்டுப்பாடு எதுவும் போடேல்லை. சரி இப்ப தியேட்டர் வாசல்லை வந்து இறங்கியாச்சு தியேட்டர் நிருவாகம்  ஒருமாதமாய் விளம்பரம் செய்ததிலை 60 கிமீற்றர் தூரத்திலையிருந்தும் தமிழாக்கள் வந்திருந்திச்சினம்.பலவருசம் காணாத பலரையும் காணக்கூடியதாய் இருந்தது. ஆனாலும் மெல்லிதாய் ஒரு தலையாட்டல் ஒரு புன்னகை இதோடை சரி மிஞ்சிப் போனால் எப்பிடி இருக்கிறியள் எண்டொரு கேள்வி அவ்வளவும்தான். ஒரு 50 அல்லது ..60 எங்கடையாக்கள்  பாண்டிச்சேரி தமிழர்கள் ஒரு இருபது பேரளவில் இருந்தனர் அதோடை 12 பிறெஞ்சுக்காரர் எண்ணிப் பாத்தனான்.

தியேட்டருக்குள்ளை போய் இருந்தாச்சு எனக்கு வலப்பக்கம் ஒரு பாண்டிச்சேரி குடும்பம் இடப் பக்கம் கொஞ்சம் வயதான பிரெஞ்சு சோடியொண்டு.பிரெஞ்சுக்காரி என்னை பாத்து நமஸ்த்தே எண்டாள் நான் வணக்கம் எண்டன். வெள்ளைக்காரி குழம்பிட்டாள் அதுக்கிடையிலை என்ரை மனிசி புகுந்து நமஸ்தே போட்டு வைக்க நான் பிரெஞ்சிலை  பொன்சு(bonjour) எண்டிட்டு பேசாமல் இருந்திட்டன். படம் எழுத்தோட்டம் தொடங்கிச்சுது  இராணுவ ராங்கி. கெலி கொப்ரர் .துவக்கு சூடு எண்டு எழுத்தோட்டம் போகத் தொடங்கவே இது ஈழத் தமிழனிட்டையிருந்து தொடங்கப் போகுதெண்டு எனக்கு விளங்கிட்டுது .மணிரத்தினம் மாங்குளத்திலை மலையை காட்டினமாதிரி இதிலை மன்னாரிலை மலையையோ இல்லாட்டி யாழ்ப்பாணத்திலை தொப்பிக்கலை காட்டையோ காட்டப் போறாங்கள் எண்டு நினைச்சு நிமிந்து இருந்தன்.ஆனால் படம் பயங்கர சண்டையிலை தொடங்கிச்சுது ஒரே விசிலடி கைதட்டல் கனபேர் தலையெண்டும் தலைவா எண்டும் கத்தினாங்கள். நானும் மனிசியும் பக்கத்திலையிருந்த பிரெஞ்சுக்காரியும் ஒருத்தரை யொருத்தர் பாத்தம். கனகாலத்துக்கு பிறகு  எங்கடை படம் பாக்கிற மகிழ்ச்சி அதுதான் கத்துறாங்கள் எண்டு பிரெஞ்சு காரியிட்டை சொல்ல அவள் அதை அடுத்ததாய்யிருந்த தன்ரை மனிசனிட்டை கடத்தினாள்.

அஜித் ஒருத்தனின்ரை கழுத்திலை கத்தியை வைச்சு சறக்கொண்டு அறுக்க பின் வரிசையிலை தாயின்ரை மடியிலையிருந்த ஒரு பெண் குழந்தை 3 வயதுதானிக்கும் வீரிட்டு அழத் தொடங்கிச்சிது. அதை அவர் ஓராட்டி பாத்து களைச்சு வெளியாலை தூக்கி கொண்டு போயிட்டார். ஒரு படத்திலையே சண்டை வன்முறை காதல் காமம் உணர்வு எண்டு எல்லாத்தையும் கலந்து அரைச்சு குடுக்கிற தமிழ் படங்களிற்கு குழந்தையளை அதுவும் 12 வயதுக்கு குறைஞ்சவையை கூட்டக்கொண்டு போக கூடாது எண்டது என்ரை கருத்து. சண்டை முடியத்தான் கதை தொடங்கிச்சுது தமிழ்நாட்டு கடற்கரையிலை அஜித் அகதியாய் படகிலை வந்து இறங்குவார். ஈழத்தமிழ் கதைச்சு கொலைவெறி வரப்பண்ணப் போறான் எண்டு நினைச்சன் நல்லவேளை அப்பிடியொண்டும் நடக்கேல்லை.முகாமிலை பதியிறவரிட்டை தான் பவளத்துறையிலை இருந்து வாறதாய் சொல்லுவார். எனக்கு சந்தேகம் மனிசியை மெல்ல சுரண்டி பவளத்துறையா பருத்தித்துறையா? எண்டன்.

உனக்கு காதும் மங்கிப்போச்சுது பவளத்துறையாம் எண்டாள்.அப்ப அவர் ஈழத்து அகதியில்லை இந்தியாவுக்கு கீழை இலங்கையை தவிர வேறையொரு நாடும் இருக்கு எண்டு அப்பதான் எனக்கு தெரிஞ்சிது. என்ரை பூகோள வாத்தி  பூலோகம் சுத்திப்போட்டான் சொல்லித்தரேல்லை. அங்கையும் தமிழர் இருக்கினம் சண்டை நடக்கிது அங்கையிருக்கிற பவளத்துறையிலையிருந்துதான் இவன் அகதியா வந்திருக்கிறான். எதுக்கும் வீட்டை போன உடைனை  கூகிழ் மப்பிலை தேடிப்பாக்கவேணும் எண்டு நினைச்சபடி படத்தை பாத்தக்கொண்டிருந்தன். அதுக்கிடையிலை பிரெஞ்சக்காரிக்கு ஒரு சந்தேகம் வந்திட்டுது அவள் என்னட்டை  மன்னிக்வேணும் ஒரு சந்தேகம் எண்டாள். என்னை மாதிரி எல்லாம் தெரிஞ்ச ஒருத்தன் பக்கத்திலை இருக்கேக்குள்ளை  தாரளமாய் கேக்கலாமெண்டன்.  இந்த கதை இந்தியாவிலை எந்த பகுதியிலை நகருது எண்டாள். இது  சவுத் இந்தியா தமிழ் நாட்டு கடற்கரையிரை நகருது ஆனாலும் நத்தை வேகம் எண்டன். ஆனால் அடுத்த சந்தேகம். அவர் எந்த நாட்டிலையிருந்து அகதியா வாறார் எண்டாள். அது சஸ்பென்ஸ்  படத்தின்ரை கடைசியிலைதான் சொல்லுவாங்கள் எண்டு நான்தான் கதைவசனம் எழுதினமாதிரி சொன்னன்.

தொடந்து  நடந்த சண்டைக்கு இடைவேளை விட்டாங்கள். இங்கத்தைய படங்களுக்கு இடைவேளை விடுறேல்லைதானே . அதாலை இடைவேளையோடை கன வெள்ளையள் படம் முடிஞ்சுதெண்டு வீட்டை போட்டாங்கள். எனக்கு பக்கத்திலை இருந்தவைக்கு படம் முடியேல்லையெண்டு சொன்னதாலை அவங்கள் போகேல்லை. கடைசியா நாலு வெள்ளையள்தான் மிச்சம். படத்திலை கீழை பிரெஞ்சிலை மொழி பெயர்ப்பு ஓடிக்கொண்டிருந்ததாலை அஜித்தை பார்வதி ஓமணகுட்டன்  மாமா எண்டு கூப்பிறநேரமெல்லாம் பிரெஞ்சிலை oncle(uncle)எண்டு மொழி பெயர்ப்பு  போய்க்கொண்டிருந்தது ஆனால் இரண்டு பேரும் லவ்பண்ணி பாட்டும் தொடங்க  பக்கத்திலை இருந்த பிறெஞ்சுக்காரி குளம்பிட்டாள். உங்கடை ஊரிலை மாமனை கட்டுறவங்களா? எண்டாள். ஜயோ இது என்ரை ஊரில்லை  இந்தியா அங்கை இப்பிடித்தான் வரைமுறை  பழக்கவழக்கம் தெரியாததுகள் மாமனையும் கட்டுங்கள் மச்சானையும் கட்டுங்கள் .அவங்கள் கட்டுறாங்களோ இல்லையோ  சினிமாகாரர் வருசக்கணக்கா  இப்பிடித்தான் காட்டுறாங்கள் எண்டு சொல்ல நினைச்சனான்.

பார்வதி ஓமணகுட்டன்
ஆனால் என்ரை மனிசி பெங்களுர்காரி  பிறகு அவள் என்னை  டேய் நீ என்ரை மாமனா உன்னை எப்பிடி நான் கட்டினான் எண்டு கேட்டால் வில்லங்கமாயிடும் .அதோடை இரவு நுளம்புக்கடியோடை பல்க்கனியிலைதான் படுக்கவேணும். அது..அது  வந்து இஞ்சை புருசன் பெண்சாதி செல்லமா  மை பேபி எண்டு கூப்பிடுற மாதிரி அங்கை மாமா எண்டு சும்மா கூப்பிடுறவை அதைத்தான் மொழி பெயர்த்தவன் பிழையா மொழி பெயர்த்துப் போட்டாங்கள் எண்டன் அப்பாடா.. படம் ஒரு மாதிரி முடிஞ்சு வீட்டை வந்ததும் முதல் வேலையா கொம்புயூட்டரை போட்டு கூகிழ் மப்பிலை உலகப்படத்தை எடுத்தன். இண்டைக்கு  பவளத்துறையை  கண்டு பிடிக்காமல் விடுறேல்லை ஏனெண்டால் இப்பிடித்தான்  கொஞ்ச காலத்துக்கு முதல்  இவன் நடிச்ச படம் ஒண்டை பாத்திட்டு  அத்திப்பட்டியை  தேடி களைச்சுப்போனன். இந்தியாக்கு கீழை உள்ள நாடுகளை நேட்டம் விட்டன் . ஆ கண்டு பிடிச்சிட்டன்  படத்தை கொஞ்சம் பெரிசாக்கினன்.  அப்பதான் விளங்கிச்சிது  மெளசை வேகமாய் இழுத்திட்டனெண்டு  ஜயோ அது அவுஸ்ரேலியா..

என்னடா  படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பாங்கள் படிச்சிட்டு படத்தை பாக்க போகலாமெண்டு நினைச்சிருப்பியள்.  படத்திற்கு விமர்சனம் எழுதலாம் ஆனால் சண்டைக்கு  எப்பிடி விமர்சனம் எழுதிறது அதுக்கு இராணுவ ஆய்வுதான் எழுதலாம். அது எனக்கு தெரியாது

கிணறு தோண்ட கிழம்பிய பூதம் இறுதிப்பாகம்.

9:11 AM, Posted by sathiri, No Comment

கிணறு தோண்ட கிழம்பிய பூதம் இறுதிப்பாகம்.

ஒரு பேப்பர் சாத்திரி

இதுவரை  நான்கு தொடர்களில் ஸ்கந்தா  மற்றும் ரிசி  என்பவர்களது கூட்டணி எப்படி  புலம்பெயர் மக்களையும் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களையும்   திட்டமிட்டு எப்படி மோசடி செய்து பணம் சுருட்டினார்கள் என்பதோடு பின்னர் அவர்கள் இருவருக்குமிடையில் யாரையார் ஏமாற்றுவது என்று ஏற்பட்ட போட்டியில்   ஸகந்தாவே வெற்றி பெற்றார் என்பதனையும்  பார்திருந்தோம்.   இன்றைய நிலையில் ரிசி  இங்கிலாந்தில் தலைமறையு வாழ்க்கை  வாழ்க்கை  வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.  ஆனால் ஸ்கந்தா  இன்னமும் பந்தாவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.  இவர்கள் இருவராலும்   தாயகத்தில்  இவர்களது மோசடிகளிற்கு  பாவிக்கப்பட்டவர்களும் இவர்களால் கைவிடப்பட்டு நிற்கின்றார்கள்.   அவர்களை விடுவோம் ஏனெனில் அவர்களும் இவர்களது ஆசை வார்த்தைகளிற்கு மயங்கி  இவர்களின் மோசடிக்கு துணை போனவர்கள்தான்  ஆனால் இவர்களால் பாதிக்கபட்டவர்கள்  யுதத்தில் மோசமாக பாதிக்கபட்டும்  உடல் அவயவங்களை  இழந்த மக்களும்  முன்னை நாள் போராளிகளுமே. அவர்கள்  இனி அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்  அல்லது செய்ய முடியும் என்று எதுவுமே தெரியாமல் விதி விட்ட வழி என்று  வாழ்நாளை போக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  அதே நேரம்  இந்த  மோசடிக்கு  முக்கியமாக பயன்படுத்தப் பட்ட உதயகலா மற்றும் கஸ்தூரி ஆகியோர் தங்கள் கைப்பட எனக்கு எழுதியிருந்த  கடிதத்தின்  விபரங்களை சுருக்கமாக இங்கு தந்து இத்தொடரை முடிவிற்கு கொண்டுவருகிறேன்.. முதலில் உதயகலா எழுதிய கடிதத்தின் சுருக்கம்..



வன்னியில்  நடந்த இறுதி யுத்தத்தின் போது  சரணடைந்து   முகாமிலிருந் விடுதலையாகி வெளியே வந்து   குடும்பத்துடன்  இணைந்த பின்னர்  ஒரு தொழில் நிறுவனத்தில்  இணைந்து  பணியாற்றிக் கொண்டிருந்த வேளை  போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு  உதவுவதாக  சொல்லிக் கொண்டு  ஸ்கந்தா மற்றும்  ரிசி  ஆகியோர்  தனது  முகவர்கள்  மூலம் தன்னை தொடர்பு கொண்டு  பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை  சேகரித்து தருமாறும்  பின்னர் தங்கள் உதவியினை  பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கி  உதவி வழங்கப்பட்டதற்கான  ஆதாரங்களை  தங்களிற்கு அனுப்பி வைக்குமாறும்.  இதனை சேவையாக செய்தாதலும்  அதற்கான  ஒரு கூலி வழங்கப்படும் என்பற்கிணங்க  அவர்களின் முகவரான  கஸ்தூரி முலம்  கோரிக்கை  விடுத்திருந்தனர். அதற்கிணங்கவே  பாதிக்கப்பட்டவர்களின்  விபரங்களை  நான் சேகரித்து  இலண்டனிற்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். 


ஆனால் நான் அனுப்பிய விபரங்களில்  உள்ளவர்களில்  உள்வர்கற்கான  உதவிகள்  கிடைத்தாலும்  அவர்களிற்கு கிடைத்த உதவியினை விட  இரண்டு மடங்கு எதவிகள் கிடைத்ததாக  உதாரணத்திற்கு   அவர்களிற்கு  5000 ரூபாய் கொடுத்திருந்தால் 10000 ரூபாய்  கொடுத்ததாக  ஆதாரகடிதங்களை பெற்று  அனுப்புமாறு  நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தேன் அது மட்டுமல்லாது  ஸ்கந்தா மற்றும் ரிசி ஆகியோரின் கோரிக்கைக்கு  இணங்கவே  பாதிக்கப்பட்டவர்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதற்காக   பலரை தெரிவு செய்து  அவர்களிடம் ப ஒரு தொகை பணத்தினை பெற்று  ஸ்கந்தாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவர்களை சில ஆசிய நாடுகளிற்கு அனுப்பியும் வைத்திருந்தேன்  அதன் பின்னர் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்வேண்டியது  ஸகந்தாவின் கடைமை பயணிகளிடம் பெற்ற பணத்தினையும்  ஸகந்தாவின் முகவர்களின் பெயரில் வங்கிகளில் வைப்பு செய்து வி்டேன்.  ஆனால் ஸ்கந்தா ரிசி   ஆகியோர் கூட்டாக  ஏமாற்று வேலை செய்கிறார்கள் என்பதனை அறிச்ததும் யாழில் இயங்கி அலுவலகத்தினை மூடிவிட்டு  அவரின் முகர்களுடனான  கஸ்தூரி மற்றுஓம் ராதிகா ஆகியோரோடு  நான் பிரச்சனைப்பட்டதும் என்னை  துரோகியாக்கி ஏமாற்றுக்காரியாக்கி இணையங்களில் செய்தியினை வெளியிட்டுவிட்டனர்..   என்று இப்படியாக     உதயகலா   இரண்டு பக்கத்தில் கடிதம் எழுதியிருந்தார்.....
அடுத்ததாக கஸ்தூரி எழுதியவை......


 முள்ளியவளை கிரமத்திற்கு வந்திருந்த  உதயகலா அங்கு பாதிக்கப் பட்ட மக்களை அணுகி தான் சுவிசில் இருந்து ந்திரப்பதாகவும் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு பிரிவு  தன்னை  பாதிக்கப்பட்டவர்களிற்காக உதவும்படி அனுப்பியதாக கூறிக்கொண்டு  பிள்ளைகள்  கற்பதற்கான புத்தகங்கள்   சிடிக்கள்  எனபன விற்பனை செய்தார். பின்னர்  பாதிக்கப் பட்டவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஒரு குடும்பத்திற்கு  3 இலட்சம் வீதம் வாங்கி கொண்டவர் அவர்களை  கொழும்பிற்கு அழைத்துச்சென்று  நீர்கொழும்புப் பகுதியில் தங்க வைத்திருந்தார் சிலரை வெளிநாடுகளிற்கும் அனுப்பி வைத்திருந்தார்.  நீர் கொழும்பில் தங்கியிருந்தவர்கள் தங்களை வெளிநாட்டிற்கு  ஏன் இன்னமும் அழைத்து செல்லவில்லையென்று பிரச்சனை கொடுத்தபோது  அவர்களை  உல்லாச விடுதிகளிற்கு அழைத்து சென்று அவர்களிற்கு மது வாங்கி கொடுத்து தானும் அவர்களோடு மது அருந்தி உல்லாசமாக இருந்து அவர்களை  ஏமாற்றினார். அதுமட்டுமல்லாது  முகாம்களில்  அடைபட்டு கிடந்தவர்களையும் வெளியே எடுத்து விடுவதாக கூறி பலரிடம் பணத்தினை வாங்கி மோசடி செய்துள்ளார். பணத்தினை கொடுத்தவர்கள் உறவினர்களும் வெளியே வராததால் உதயகலாவிடம் போய் விபரம் கேட்டபொழுது உங்களை  புலி என்று சொல்லி 4ம் மாடிக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியதோடு மட்டுமல்லாது  அதில் சிலரை நீர் கொழும்பில் உள்ள விடு ஒன்றிவைத்து அடித்து தன்புறுத்தியும் இருக்கிறார். இதனால் பலர் மனநோயாளியாகியுள்ளனர்.  அது மட்டுமல்லாது பல கடை முதலாளிகளையும் சில சிங்களவர்மூலமாக  உளவு பிரிவினர் என்று சொல்லி மிரட்டி பணம் வாங்கியுள்ளார். இவரிற்கும்  ரிசிக்குமே தொடர்புகள் உள்ளது தமக்கும் ஸ்கந்தாவிற்கும்  எவ்வித தொடர்புகளும் இல்லையென்று  ஒரு கொலிவூட்படம் தயாரிக்கக் கூடிய ரேஞ்சிற்கு கஸ்தூரியின் கடிதம் 4 பக்கத்தில்  கிடைத்திருந்தது.


இங்கு கடிதம் எழுதிய உதயகலா  தான் பணத்தினை ஸ்கந்தா குழுவினரிற்கு பணம் வங்கிகளில் இட்டதற்கான  பல ஆதாரங்களை இணைத்திருந்தார். அதுமட்டு மல்லாது அவர் ஸ்கந்தா ரிசி ஆகியோருடன் இணைந்து வேலை செய்ததற்கான ஆதாரங்களும் அனுப்பியிருந்தார்.்்ஆனால் கஸ்தூரி உதயகலா பற்றிய குற்றச் சாட்டுகளிற்கு எவ்விதமான  ஆதரங்களும்  தரவில்லையென்பதுடன்.தமக்கும் உதயகலாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்யென்று எழுதியிருக்கிந்தார்.  தமக்கும் உதயகலாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல்  உதயகலா செய்த மோசடிகள் மட்டும் எப்படி அவரிற்கு தெரிந்திருக்கின்றது  என்பது  கேள்விக்குறி????உதயகலாவால் ஏமாற்றப் பட்டவர்களின் விபரங்களை அனுப்புவதாக கூறியவர்  பின்னர் எதனையும் அனுப்பவில்லையென்பதுடன். அவரின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது  இந்தத் தொடர் ஒரு பேப்பரில் வெளிவந்த நாள் முதல்  ஸ்கந்தா மற்றும்  ரிசி போன்றவர்கள் தங்கள் பக்க விளக்கங்களையும்  எம்முடன் தொடர்பு கொண்டு தாராளமாக தந்தால் அதனையும் நாங்கள் பிரசுரிப்போம் என  அவர்களிற்கு தனியாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தோம்.  ஆனால் ஸ்கந்தா அவர்கள்  எம்மை மறைமுகமாக மிரட்டும் பாணியில் பலருடன் தொடர்பு கொண்டு  இந்த கட்டுரையை நிறுத்தும்படி எனக்கு ஒரு அழுதத்தினை  கொடுக்க மயற்சித்ததோடு  ஒரு பேப்பர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பலர் மூலமாக  அறிவித்திருந்தார்.

அவர் இவ்வளவு சிரமப் பட்டிருக்கத் தேவையில்லை டின்னுடனோ அல்லது ஒரு பேப்பர் ஆசிரியர் குழுவினருடனோ  நேரடியாக தொடர்பகளை ஏற்படுத்தி தனது பக்க நியாயத்தினை தாராளமாக வைத்திருக்கலாம். எது எப்படியோ தேசியம் என்கிற போர்வையில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவுகின்றோம் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் செய்த மோசடியினை ஒரு பேப்பர் வெளிக்கொண்டு வந்து  அதனை தடுத்து நிறுத்தியுள்ளதோடு  அவ்களை  மக்களிற்கு அடையாளம் காட்டியுமுள்ளது. இனிவரும் காலங்களில் இவர்கள் போன்றவர்களிடம் மக்கள் அவதானமாக இருக்கும்படி வேண்டிக் கொள்வதோடு  யாராவது இவர்கள் போன்றவர்களிடம்  ஏமாற்றப்பட்டிருந்தால் தகுந்த ஆதாரங்களுடன் ஒரு பேப்பரை தொடர்பு கொண்டால்  அவற்றை உறுதிப்படுத்திய பின்னர் ஒரு பேப்பர் அதனை   பகிரங்கப்படுத்தும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம்.

கிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3

12:44 PM, Posted by sathiri, No Comment

கிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3
இந்த வார ஒரு பேப்பரிற்காக சாத்திரி

வாசகர்களே  இந்தப் பாகத்தில்  மிகுதி விடயங்களிற்குள் நுளைவதற்கு முன்னர்.  தாயகத்தில் போரால் பாதிக்கப் பட்ட  மக்களிற்கு உதவுதாக  கூறிக்கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளி என்கின்ற  அமைப்பை பற்றியும் சிறிது பார்த்துவிடுவோம். 2009 ம் ஆண்டு மேமாதம்  தாயகத்தில் புலிகளின் ஆயுதப் போர் முடிவடைந்து விட்ட நிலையில் பெருமளவு  போராளிகள்  காயமடைந்தும்  அங்கவீனர்களாகவும்  இலங்கையரசிடம் சரணடைந்ததன்  பின்னர்.  அவர்களிற்கு ஏதாவது  உதவவேண்டும்  என்கின்ற  நோக்குடன்  கனடாவில் இருக்கும்  ஒரு புலிகள் அமைப்பின்  முன்னைநாள்   போராளியால்  வெளிநாடுகளில் வாழும் முன்னை நாள்  புலிகள் அமைப்பு போராளிகள்   பலரையும் இணைத்து உருவாக்கபட்டதுதான்  இந்த நம்பிக்யொளி அமைப்பு.இது பின்னர்  பிரான்ஸ். பிரித்தானியா டென்மார்க்  என்று ஜரோப்பா மற்றும்  ஸ்கன்டிநேவிய நாடுகளிற்கும் விரிவாக்கப்பட்டு அந்தந்த  நாடுகளில்   ஒவ்வொரு குழுக்கள் அமைக்கப்பட்டு  அதற்கென ஒரு பொறுப்பாளரும் நியமிக்கப் பட்டதோடு அந்தந்த நாடுகளில் அந்த அமைப்பை பதிந்து இயங்கவும். அதே நேரம்  முன்னை நாள் போராளிகள் அல்லது புலிகள் என்கிற  எவ்வித  அடையாளங்களுமின்றி பாதிக்கப்பட்ட போராளிகளிற்கு உதவுவதுதான் இதன் நோக்கம்.  அன்றைய காலத்தில்  நேசக்கரம் என்னும் அமைப்புடன் இணைந்து  நானும் தாயகத்து மக்களிற்கு உதவிக்கொண்டிருந்த காலகட்டம்.(தற்சமயம் அந்த அமைப்பில் இல்லை)

நம்பிக்கையொளி அமைப்பினை உருவாக்குவதற்காகவும் அதன் சட்ட வரைபுகளிற்காகவும் எனது உதவியினையும்  அந்த கனடிய நண்பர் நாடியிருந்தார். அதனடிப்படையில்  நம்பிக்கையொளியின்  உருவாக்கத்திற்கும் மற்றும்.உதவி கோருபவர்களின்  விபரங்களை பரிமாறுதல் மற்றும் வழங்கப்பட்ட உதவிகள் ஒருவரிற்கே மீண்டும் கிடைக்கமல் அவற்றை சரிபார்த்தல் என  பல வழிகளிலும் நம்பிக்கையொளி அமைப்பிற்கு உதவிகளும் செய்திருந்தேன். இப்படியான காலகட்டத்தில் தான்  இலண்டனில் நம்பிக்கையொளி அமைப்பினை  தான் பதிந்து  தருவதாக ஸ்கந்தா  முன்வந்திருந்தார். இவர் ஏற்கனவே புலிகள் அமைப்பு ஆதரவாளர் என்பதோடு  பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினராக இருந்ததாலும்  நன்கு அறியப்பட்டிருந்தார். எனவேதான் பதிவு பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது.  இதே நேரத்திலேயே  ஸ்கந்தா ரிசியையும் பலரிற்கு அறிமுகப்படுத்தி  ரிசியின்  பொறுப்பில் I T S O  ம் உருவாக்குகின்றார்.இதன்பின்னர்  தாயகத்திலிருந்து  முன்னை நாள் போராகளாகவிருந்து  சரணடைந்தவர்கள் மற்றும் சரணடைந்து  விடுதலை பெற்றவர்களை வைத்து   நம்பிக்கையொளி நிறுவனம்  பாதிக்கபட்டவர்களின் தகவல்களை சேகரிக்கதொடங்கியது.  அப்படி சேகரித்த தகவல்களை  வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கொண்டு சென்று  உதவிகளை பெற்று  வழங்கிவந்தனர்

.ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே நடந்தது.  ஆனால் நாள் செல்லச் செல்ல  நம்பிக்கையொளி அமைப்பின் இலண்டன் கிளை  மற்றைய நாட்டு  உறுப்பினர்களுடன்  தொடர்புகளை ஏற்படுத்தாமலும் கலந்தாலோசிக்காமலும். தன்னிச்சையாக செயற்பட ஆரம்பிக்கத் தொடங்குகின்றனர்.  பாதிக்கப்பட்ட  காயமடைந்த போராளிகளின் படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகளை  போட்டுக்hட்டி மக்களிடமும் வர்த்தகர்களிடமும்  சேகரித் பெரும் தொகை  பணத்தின் விடயங்களையோ தாயகத்திற்கு அனுப்பிய  தொகை என்பனவற்றை  அந்த அமைப்பை தொடங்கி  இயக்கிவந்த கனடிய உறுப்பினரிற்கோ மற்றைய நாட்டு உறுப்பினர்களிற்கோ  தெரிவிக்காமலும்  தகவல்களை பரிமாறாமலும் நடக்க தொடங்கிவிட்டிருந்தனர். சேகரிக்கப்பட்ட பெருமளவு நிதியில் சிறிய தொகை மட்டுமே  பாதிக்கப்பட்டவர்களிற்கு கொடுக்கப்பட்டு  அவர்களிடமிருந்து  கடிதங்களும்  படங்களும் எடுக்கப்பட்டு  சில தமிழ் இணைய ஊடகங்களில் விளம்பரப் படுத்தியிருந்தனர்.  இப்படி நம்பிக்கையொளி இலண்டன் பிரிவு ஸ்கந்தாவின் கைகளில்  முழுதுமாய்  வீழ்ந்த பின்னர் இவரால் தனது நம்பிக்கை பாத்திரமானவன் என நினைத்து  ரிசியை  முதன்மைப் படுத்தி  உருவாக்கப்பட்ட  I.T.S.O  கிழக்கு  மகாணத்தில் கடந்த வருடம் 2011 ம் ஆண்டு தைமாதமளவில்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு  காரணமாகவும்  பெருமளவு நிதியிளை நம்பிக்கையொளி அமைப்பும்  I.T.S.O வம் சேர்த்தனர். இதற்காக பல தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்  உதவியிருந்தார்கள்.   இதில்  நம்பிக்கையொளி அமைப்பை விட   ரிசியிடமே எம்மவர்கள் பெரும்தொகை பணத்தினை  வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களிற்காக கொடுத்திருந்தனர். காரணம் ரிசி தான் ஒரு பல்கலை கழக மாணவர் என்றும்  இலண்டனிலும் தனது பல்கலைகழக படிப்பை தொடர்வதாகவுமே கதைவிட்டு திரிந்தவர். எனவேதான்  படித்தவன் அதுவும் பல்கலைகழக மாணவன் என்றாலே  எம்மவர்களிற்கு ஒரு ஈர்ப்பு பல்கலைகழக மாணவன் ஏமாற்றமாட்டான் என்கிற  ஒரு  மாயை. ஆனால் அப்படி சேர்த்த பணம் அத்தனையையும்  ரிசி தனது  இலங்கை வங்கி  கணக்கிற்கு அனுப்பிவிட்டிருந்தார்.

பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனமான தமிழர் நலவாழ்வு நிறுவனம்( tamil health orginitation) I T S O இன் இலங்கையிலுள்ள அதன் வங்கிழ கணக்கிற்கு  (  commercial dilakanda  srilanka)ஒரு இலட்சம்  ரூபாயை வழங்கியுள்ளதாக  அதன் இணைத்தளத்தில் கணக்கு காட்டியுள்ளது   இலங்கையில் பதிவு செய்யப்படாத நிறுவனத்திற்கு  எப்படி நிறுவனத்தின் பெயரில் வங்கி  கணக்கு திறக்கப்பட்டது  அந்த கணக்கில்  பணம் எப்படி போடப்பட்டது என்பதனை  தமிழர் நலவாழ்வு  நிறுவனம்தான்  விளக்கவேண்டும்.இந்த விடயத்தை அறிந்த ஸ்கந்தா   தனக்கு பங்குதராமல் மொத்தமாய் ஆட்டையை போட்ட ரிசி மீது கடுப்பாகிறார். இங்கு இவர்கள் மோதல் தொடங்குகின்றது.இங்கு ஒருவர் மொல்லைமாரி என்றால் மற்றவர் முடிச்சவிக்கி எனவே  இருவரும் உதவி நிறுவனத்தின் கணக்கு விபரங்களை பகிரங்கமாக கேட்க முடியாத  நிலை எனவே யாரை எங்கே காலை வாரலாமென தருணம் காத்திருக்கின்றனர். ரிசி தொழிலுக்கு  புதிது என்பதால் ஸகந்தா தனது அனுபவத்தையும் தொடர்புகளையும் பாவித்து  ரிசியை ஓரம் கட்டதொடங்கியதோடு அவர் தொடர்ந்தும்  தொழிலில்  நீடித்து  பணம் சுருட்டவிடாமல்   அவரை  தமிழின துரோகியாக்கி தமிழ் ஊடகங்கள் ஊடாக செய்தியை கசிய விடுகிறார்.

அப்பொழுதுதான்  ஏற்கனவே ஸ்கந்தாவுடன்  பிரச்சனை பட்டுக்கொண்டிருந்த உதயகலாவின் பெயரும் இலவச இணைப்பாக்கப்பட்டு  செய்திகள் வெளியாகின்றது.  ஆனால் செய்திகள் வெளியானதுமே  இவை அனைத்திற்கும் பின்னணி  ஸ்கந்தாவே என்பதனை அறிந்து முதன் முதலாக ஒரு பேப்பர்  கிணறு தோண்டக் கிழம்பிய பூதம் முதலாவது பாகத்தில்  அம்பலப்படுத்தியிருந்தது.. அதே நேரம் கடந்த ஒரு பேப்பரிற்கு  பாகம் இரண்டினை எழுதி முடித்துவிட்டு  ஸ்கந்தா தரப்பு நியாயங்களை  தெரியப்படுத்துமாறு  ஸ்கந்தா அவர்களிற்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தேன். ஆனால் அவர் அதற்கு நேரடியான பதில் எதனையும் தராது அந்த மின்னஞ்சலை தற்சமயம்  யாழ்ப்பாணத்தில்  வசிக்கும் ராதிகா என்பவரிற்கு அனுப்பி ராதிகா என்பவரிடமிருந்து  எனக்கு ஒரு மின்னஞ்சலும்  மேற்படி  கட்டுரை சம்பந்தமாக  சில விபரங்கள் தரவேண்டும் என்றும் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி   ஒரு தோ.பே  இலக்கத்தையும் இணைத்திருந்தார்.  அவருடன் நான்  தொலைபேசி இணைப்பினை ஏற்படுத்தியபொழுதுதன்பெயர் ராதிகா என்றும் தானும்   அலுவலகத்தில் வேலை செய்தவர் என்றும் ஸ்கந்தா என்பவர் எந்த தவறும் செய்யவில்லையென்றும்  உதயகலாவே  பலரிடம்  பணமோசடி செய்தார்  அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்  நூறு பேரின் பெயர் விபரம் மற்றும் அவர்களது தொலைபேசி இலக்கங்கள்ஆதாரமாக  இருப்பதாக  கூறியதும். அவற்றை  என்னிடம் அனுப்பி வைக்கும்படியும்  நானே அவர்களுடன் நேரடியாக  கதைத்து  இருதரப்பு நியாயங்களையும் ஒரு பேப்பர் மூலமாக வெளிக்கொண்டு வருவேன் என சொல்லியிருந்தேன்.

அதற்கு அவரோ நூறு பேரின் பெர் விபரங்களும் உடனடியாக தரமுடியாது முதலாவதாக பத்துப்பேரின் விபரங்களை  அனுப்புவதாகவும்  இதில் செய்திகளில் தனது பெயர்  வெளிவரக்கூடாது  என்று பலமுறை வலியுறுத்தியிருந்தார்.  அவர் தரும்  ஆதாரங்கள்  உண்மையாக இருப்பின்  அவரது பெயர் வெளியிடமாட்டேன் என கூறியிருந்தேன்.பின்னர் அவர் 17 பேருடைய பெயர்களையும்  தொ.பே இலக்கங்களையும்  இன்னொரு  மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பியிருந்தார். அது யாருடைய மின்னஞ்சல்  முகவரி என்பதனை பின்னர் பாக்கலாம்.  எனக்கு கிடைத்த 17 இலக்கங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்த  முனைந்தேன். பல இலக்கங்கள் வேலை செய்யவில்லை . அதில் இரண்டு இலங்கங்கள்  ஒருவருடையது.  அவர் மூலம் மேலும் பல தகவல்கள் கிடைத்தது அவரது தகவல்களின்படி  ராதிகா  மற்றும் அவரது காதலன் நியூ சீலன் ஆகியோரின்  உதவியுடன் வவுனியாவை சேர்ந்த  ஜேர்ச் மற்றும் கிரிஜா என்பவர்களது கணக்குகளிலும்  நியூ சீலனின் கணக்கிலும் தாங்கள் பணத்தை வைப்பிலிட்டதாக கூறினார். நியூ சீலனின் கணக்கில்  பணம் வைப்பிலிட்டதற்கான ஆதாரத்தினையும் இங்கு இணைக்கிறேன்.

Posted Image

ராதிகா என்பவர் அனுப்பிய  விபரங்களில்  ஒரேபெயர் இரண்டு தடைவை குறிப்பிட பட்டிருந்ததும் பல இலக்கங்கள்  வேலை  செய்யாததனாலும் மீண்டும் அவருடன்  தொடர்பினை ஏற்படுத்தி விபரம் கேட்டபொழுது அந்த  விபரங்களை தானும் குழலி என்பவருமே சேர்ந்து தயாரித்ததாகவும் அதே நேரம் தங்கள்  வேலைபழு காரணமாக  தவறுகள் நடந்து விட்டதாக சப்பை கட்டு கட்டினார்.
இனி உதயகலாவிற்கும் ரிசிக்கும் என்ன தொடர்பு என்பதனை பார்க்க முன்னர்  செல்வி சபாரத்தினம் கஸ்தூரி என்பவரை   அடுத்த  தொடரில் உங்களிற்கு அறிமுகப்படுத்துகின்றேன்.
தொடரும் ...................

கிணறு வெட்ட கிழம்பிய பூதம் 2

2:28 PM, Posted by sathiri, 5 Comments



ஒரு பேப்பரிற்காக சாத்திரி

2011 டிசம்பர் 4,5ம் திகதிகளில் தமிழ் இணையங்களில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியிருந்தது. உதயகலா தயாபரராஜ் என்ற பெண்ணின் மோசடி, விபச்சாரம் நீலப்படமென்றெல்லாம் கதை வசனம் தயாரிக்கப்பட்டு மெகாசீரியல் நீளத்துக்கு செய்தி பரவியிருந்தது.

அதே நேரம் போரால் பாதிக்காப்பட்டு  அங்கவீனமானவர்களும்  முன்னை நாள் போராளிகளையும் வெளிநாடு அழைத்துச் செல்லதாகக்கூறி  அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு  தாய்லாந்திலும் மலேசியாவிலும் கைவிட்டு விட்டார்கள் என்கிற செய்தியும் பரவியிருந்தது .அப்படி கைவிடப்பட்டு நின்றவர்கள் சிலருடன் தொடர்புகளை  ஏற்படுத்தி   அவர்களின் வாக்கு மூலங்களை ஆதாரமாக வைத்து  இவை அனைத்தையும் பின்னால் நின்று இயக்குபவர்  மொட்டை பாஸ் என செல்லமக அழைக்கப்படும்  லண்டனில் வசிப்பவரான  ஸ்கந்த தேவாவே என்டபதை நான் ஒரு பேப்பர் மூலமாக  அம்பலப்படுத்தியிருந்தேன். அந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னராக அதனுடன் சம்பந்தப் பட்டவர்களான . ரிசி மற்றும்  ஸ்கந்தா ஆகியோடும்  தொடர்பு கெண்டு அவர்களது  கருத்துக்களையும் கேட்டிருந்தேன்.  விபரம் வெளிவந்ததுமே  ரிசி என்பவர்  அவர்  இயக்கிய  தமிழ் செய்தி இணையத்தளத்தினையும் நிறுத்திவிட்டு  தலைமறைவாகி விட்டிருந்தார். ஆனால் ஸ்கந்தாவோ  தனக்கு யாரையும் தெரியாது தனக்கும் இவற்றிற்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஒற்ரை வரி பதிலில் மறுத்திருந்ததோடு  ரிசி என்பவர்தான் (I.S.O.T.O.)  என்கிற தொரு அமைப்பின் ஊடாக  போரால் பாதிக்கப் பட்ட மாணவர்களிற்கு உதவுவதாக  தன்னிடம் பெரும் தொகை பணத்தினை வாங்கி ஏமாற்றி விட்டதாகவும்   எனக்கு மின்னஞ்சல் முலம்  பதில் தந்திருந்தார்.

அங்கவீனமடைந்த முன்னை நாள் போராளிகளை  ஏமாற்றிய விடயத்தில் சம்பந்தப் பட்டதாக  கூறப்பட்ட  உதயகலா மற்றும் தயாபர ராஜ் ஆகியோரோடு அப்பொழுது என்னால் உடனடியாக தொடர்புகளை  ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை.அதன் பின்னர்  சிலகாலங்களிற்கு பின்னர்  உதயகலா மற்றும்  தயாபராஜ் ஆகிரோடு  தொடர்பு கொள்ளக்கூடிய சந்தர்பம் எனக்கு கிடைத்த பொழுது  செய்திகளில் வெளியானபோல் தங்களிற்கும் நடந்த மோசடிகளிற்கும் எவ்வித சம்பந்தமும்  இல்லை அனைத்திற்கும்  ஸ்கந்தாவே பொறுப்பு என  அதற்குரிய ஆதாரங்களுடன்  தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக மீண்டும் இந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னரும் ஸ்கந்தா அவர்களிற்கு உதயகலா எழுதியிருந்த கடிதத்தினையும் இணைத்து  அவரது பக்க கருத்துக்களை கேட்டிருந்தேன். ஆனால் அவர் நேரடியாக எவ்வித பதிலையும் தராமல் இலங்கையில் வாழும் ராதிகா என்பரிற்கு  அவற்றை அனுப்பி ராதிகா மூலமாக சம்பந்தமேயில்லாத பதில் ஒன்றினை  அனுப்பியிருந்தார்.  அவற்றை பின்னர்  பார்க்கலாம்.இனி நடந்து முடிந்த மோசடி  பற்றியும் அதில் ஸ்கந்தாவின் பங்கு  என்ன என்பதனையும் பார்ப்போம்.

ஸ்கந்ததேவாவே , ரிஷி என்ற ரிசாந்தன் அல்லது ரிஷி ஆகிய இருவரும்  gatherpage என்கிற அமைப்பினை தாயகத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்து நடாத்தி வந்தனர். இந்த  gatherpage இல் 20 வரையிலான இளம் பெண்களை வைத்து பல்கலைக்கழகமாணவர்கள், கல்விகற்கும் மாணவர்களுக்கு உதவுவதாகக் கூறி நடாத்தி வந்தனர். சமநேரத்தில்  I S O T O என்ற அமைப்பினை ஸ்கந்ததேவாவின் மகளின் பெயரிலும், ரிஷியின் பெயரிலும் பிரித்தானியாவில் பதிவு செய்து நடாத்தத் தொடங்கினார்கள்.

இதேநேரம் நம்பிக்கையொளி என்றொரு அமைப்பினை லண்டனில் ஸ்தந்ததேவாவின் மனைவி கமலாவின் பெயரில் (வியாபார நிறுவனம் என்ற பதிவோடு) பதிந்து கொண்டார். நம்பிக்கையொளி மூலம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவியென்ற பெயரில் ஊடகங்கள் மூலமும், மக்களிடமும் பண வசூலிப்பு ஸ்கந்ததேவாவும் அவரது குழுவினரும் செய்து வந்தனர். இதில் சிறுபகுதி மட்டும் மக்களுக்குப் போக மீதப்பெரும்பகுதிக்கு கணக்கில்லாது போனது.

இச்செயற்பாட்டின் மூலம் நிகழ்ந்த ஊழல்கள் மக்கள் மத்தியில் தெரியவர இவ்வருடம் பெப்ரவரிமாதம் வாழைக்குட்டி கொடுத்து தாயக மக்களை வாழ வைக்கிறோம் என்ற பெயரில் நம்பிக்கையொளியை தொண்டு நிறுவனமாக பதிவு செய்து மீண்டும் மக்களை ஏமாற்றிப் பண வசூல் பண்ண புறப்பட்டுவிட்டது ஸ்கந்ததேவா கூட்டணி. ஏமாறுபவர்கள் உள்ளவரை ஸ்கந்தா போன்றவர்களும் இருந்து கொண்டேயிருப்பார்கள். அது போகட்டும். உதயகலாமீது எப்படி கள்ளப்பட்டம் விபச்சாரப்பட்டம் சூட்டப்பட்டது என்பதனைப் பார்ப்போம்.

உதயகலா துடிப்பும் துணிச்சலும் மிக்க  ஒரு பெண். இந்தப்பெண்ணை ஸ்கந்தா கூட்டணியின் முகவர்கள் அணுகுகிறார்கள். சமூக முன்னேற்றம் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை தமது நிறுவனங்கள் மூலம் செய்து வருவதாகவும் தமது நிறுவனம் இலங்கையிலும் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

தமது நிறுவனத்தில் பணியாளாக உதயகலாவை இணையுமாறும் மாதாந்தம் சம்பளம் தருவோம், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை ஊர்கள் தோறும் சென்று எடுத்துத் தருமாறும் வேண்டுகிறார்கள். தரப்படுகிற விபரங்களுக்கு, உரியவர்களுக்கு நம்பிக்கையொளி, i s o t o  இரண்டும் உதவிகளைத் தருமென்றும் கேட்டுள்ளனர். மக்களுக்கான உதவிகள் மூலம் தனக்கும் ஒரு வேலை வாய்ப்புக் கிடைக்கிறதே என்ற நம்பிக்கையில் உதயகலா ஸ்கந்தாவின் பணிப்பில் பணிக்கு அமர்த்தப்படுகிறார். இவர்கள் சொல்கிற இடங்களுக்கெல்லாம் சென்று பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை உதயகலாவும் சேகரித்து அனுப்பத் தொடங்கினார்.

இத்தோடு நின்றுவிடாமல் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு போரால் பாதிக்கப்பட்ட ஊனமுற்றவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டு சென்று கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலைகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியாகச் செய்வதாகவும் ஸ்கந்தா கூறியுள்ளார். வெளிநாடு போக விரும்புகிற போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் 2 முதல் 3 லட்சம் வரையான பணத்தையும் சேகரிக்குமாறும் பணித்தார். உதயகலா சுவிசிலிருந்து வந்திருப்பதாக மக்களிடம் அறிமுகமாகும்படியும் பணித்தார்கள் ஸ்கந்தாவும் அவர் பின் நின்ற கும்பலும்.


ஸ்கந்தா மீதிருந்த நம்பிக்கையில் உதயகலாவும் செயற்படத் தொடங்கினார். அத்தோடு வெளிநாடுகளிலிருந்து பலரை உதயகலாவுடன் ஸ்கந்தா தொலைபேசத் தொடர்புபடுத்திவிட்டார். தமது பணி மக்களுக்கானது அதில் உதயகலாவின் பங்கு தங்களுக்கு வேண்டும் என்பதனையும் வெளிநாட்டு முகவர்கள் கூறினார்கள். வெளிநாட்டில் இருந்து மக்களுக்காக இயங்குவோரென பலர் ஸ்கந்தாவின் ஏற்பாட்டில் உதயகலாவுடன் பேசியிருக்கிறார்கள். இப்போது முழுமையான நம்பிக்கை ஸ்கந்தா கூட்டணிமீது உதயகலாவுக்கு வந்துவிட்டது.

ஸ்கந்தாவினதும் அவரது கூட்டணியினரின் சொற்படி பல ஊனமுற்றவர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் சேகரித்து அவர்கள் சொன்னபடி கொழும்பில் இட ஒழுங்குகள் செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஒழுங்குகளையும் ஸ்கந்தாவின் ஆலோசனைப்படி உதயகலா பொறுப்பேற்றுச் செய்து கொண்டிருந்தார். வடக்கு கிழக்கு இரு பகுதியிலும் ஸ்கந்தா வழங்கிய தரவுகளோடு உதயகலா சென்று வெளிநாட்டுக்கு ஆட்கள் சேர்த்ததோடு ஸ்கந்தாவின் பெயரால் வழங்கப்பட்ட WheelChair, பண உதவிகளும் பல ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. றால் போட்டு சுறாபிடித்த ஸ்கந்தாவின் சூழ்;ச்சியை நம்பிய உதயகலாவும் ஸ்கந்தாவின் சொற்படி இயங்கிக் கொண்டிருந்தார்.

இவ்வேளையில் பயவாநசியபந என்கிற அமைப்பில் ரிஷியாலும் ஸ்கந்தாவாலும் இயக்கப்பட்ட அலுவலகத்திலும் அது சார்ந்த இடங்களிலும் பெண்கள் துஸ்பிரயோகம் ஏமாற்று வேலைகள் , ஆட்களைக் கொல்வதற்கான திட்டமிடல்கள் போன்ற வேலைகள் நடைபெறுவதனை பாதிக்கப்பட்ட சில இளம் பெண்கள் மூலம் உதயகலா அறிந்து கொள்கிறார்.  gatherpage  அலுவலகத்தில் நடைபெறுகிற ஊழல்கள் ஸ்கந்தாவுக்கு தெரியாமல் நடப்பதாக நினைத்த உதயகலா இவ்விடயம் பற்றி ஸ்கந்தாவுக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தினார்.

ஆயினும் ஸ்கந்தாவால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த உதயகலா gatherpage இல் நடக்கிற துஸ்பிரயோகங்கள் நிறுத்தப்படாவிட்டால் அதுபற்றி இராணுவத்தினருக்கும் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப் போவதாக ஸ்கந்தாவுக்கு தொலைபேசியில் மிரட்டினார். அத்தோடுgatherpage  இற்கு நேரே சென்று அங்கு பணியாற்றிய கஸ்தூரி , ராதிகா போன்ற பெண்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

கஸ்தூரி , ராதிகா இருவரும் உதயகலாவுடன் முரண்பட்டு ஸ்கந்தாவுக்கு விடயம் தெரிவிக்கப்பட்டது. விடயம் இப்பெண்களுக்கு இடையில் கைகலப்பு வரை சென்றுவிட உதயகலா பொலிசாருக்கு தொலைபேசியில் தகவல் சொல்லப்போவதாக தொலைபேசியை எடுக்க கஸ்தூரி திடீரென gatherpage அலுவலகத்தில் இருந்த எழுத்துப்பிரதி ஆவணங்கள் யாவற்றையும் தீயிட்டெரித்தார். விடயங்கள் உடனுக்குடன் ஸ்கந்தா கூட்டணிக்கு கஸ்தூரி , ராதிகா மூலம் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

விடயத்தைச சமாளிக்க ஸ்கந்தா உதயகலாவுடன் சமாதானம் பேச முயன்றார். உதயகலா விடாப்பிடியாக இந்த மோசடியை இணையங்களுக்கும் அச்சு ஊடகங்களுக்கும் அறிவிக்கப் போவதாகக் கூறினார். விடயத்தின் நிலமையைப் புரிந்து கொண்ட ஸ்கந்தா உதயகலாவை அமைதியாகச் சிலநாள் இருக்கும்படியும் தவறுகளை விசாரித்து முடிவுக்கு வருவோம் எனவும் வேண்டிக் கொண்டார். ஆனால் தொடர்ந்து இந்த மோசடிக்காரர்களுடன் தான் இயங்கமாட்டேன் எனக்கூறிய உதயகலா நம்பிக்கையொளியுடனான உறவை முறித்துக் கொண்டு வெளியேறினார்.

gatherpage இல் நடைபெறுகிற மோசடி வெளியில் உதயகலா மூலம் வெளிவராது இருக்க ஸ்கந்தா தனது நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் அவசர அவசரமாக உதயகலா தயாபரராஜ் மோசடி, விபச்சாரம் என செய்தியைப் பரப்பி மின்னஞ்சல் மூலமும் பரப்புரையை மேற்கொண்டார். வெறுமனே ஸ்கந்தாவின் மோசடியை வெளியில் சொல்லுவேன் என்ற உதயகலா மீது முழுப்பழியும் விழுந்துவிட ஸ்கந்தா கருணாநிதி கணக்கில் ஒரு புனைவையும் அவிழ்த்துவிட்டார். அதுதான் 28ஆயிரம் பிரித்தானியப் பவுண்ஸ்களையும் ரிஷியிடம் கொடுத்து ஏமாந்ததான கதை. உதயகலாவுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிராத ரிஷியை உதயகலாவுடன் தொடர்புபடுத்தி செய்தியை ஆளாளுக்கு ஊடகங்கள் கதையெழுதி வெளியிட்டிருந்தன.

ஸ்கந்தாவை நம்பி வெளிநாட்டுக்கு போகும் கனவோடு கொழும்பில் தங்கியிருந்தவர்களுக்கு விடயத்தைச் சொல்வதெப்படியெனத் தவித்த உதயகலா வெளிநாடு அனுப்பும் முகவர் ஏமாற்றிவிட்டதாகச் சொன்னதோடு பணத்தைக் கொடுத்தவர்கள் உதயகலாவையே சுற்றத் தொடங்கினார்கள். பெருந்தொகை பணத்தை உதயகலா முன்னின்று பெற்றுக் கொடுத்தமையால் அதற்கான பதிலையும் உதயகலாவே சொல்ல வேண்டியிருந்தது.

இந்தப்பணப்பிரச்சனை வந்ததும் ஸ்கந்தாவையும் ஸ்கந்தாவின் முகவரான மட்டக்களப்பின் முகவருக்கும் தொலைபேசியெடுத்து தான் பொறுப்பு நின்று பெற்றுத் தந்த பணத்தை உரியவர்களுக்குத் திருப்பிக் கொடுக்குமாறு வேண்டினார். ஸ்கந்தா எதற்கும் தான் பொறுப்பில்லையெனத் தப்பிக்க பல பொய்களைச் சொன்னார். இறுதியில் உதயகலா மோசடி விபச்சாரம் என்ற செய்தியை தான் இணையங்களுக்கு கொடுக்கவில்லையென்று சத்தியம் செய்தார். gatherpage இல் பணியாற்றிய பெண்பிள்ளைகளில் சிலரது பெயரைச் சொல்லி அவர்களே செய்தியை வெளியில் போட்டதாகவும் சொன்னார்.

செய்தி வந்த அவமானத்தால் தயாபரராஜ்ஜின் குடும்பம் அவரை வெறுத்து ஒதுக்கிவிட்டது. அத்தோடு சகோதரனுடன் இருந்த உதயகலாவின் தாயாரை உதயகலாவின் சகோதரன் வீட்டில் இருந்து வெளியேறச் சொல்லிவிட்டார். அந்தத்தாய் இன்று வரையும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலேயே ஆதரவற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது தயாபரராஜ் மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார். இதேபோன்ற நிலமையில் உதயகலாவும் மன அழுத்த நோய்க்கு ஆளாகி துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவமானத்துடன் வாழ முடியாத துயரத்தில் தங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளும் முடிவில் உதயகலா தயாபரராஜ் இருந்த நேரம் கடவுள் காட்டிய வழிபோல அவர்கள் பட்ட துன்பங்கள் யாவும் வெளியுலகிற்கு கொண்டுவரும் வகையிலான சந்தர்ப்பம் ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது.





தொடரும்.....
அடுத்த தொடரும் அங்கங்களில்.....
1) தயாபரராஜ் உதயகலா மோசடியானவர்களா புலிகள் தண்டித்தார்களா ?
2) உதயகலாவுடன் ரிஷி தொடர்புபடுத்தப்பட்டது எப்படி ?
3) தயாபரராஜ் எப்படிக் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தது ?
4) ஸ்கந்தா தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பதாக கூறும் குழலி (றஜிதன் ஜோதி) யார் ?
5) குழலியின் அண்ணனின் மகனான ஜோய்க்கும் ரிசிக்கும் என்ன சம்மந்தம் ? ஜோயிடம் ரிஷியின் முகவரான நிதர்சன் என்பவர் பெற்ற பணத்துக்கு என்ன நடந்தது ?
6) இந்த நாடகத்தில் ஸ்கந்தா தயார்படுத்தியயவர்கள்  யார் ?
 பிற்குறிப்பு :-
தொடர்ந்த மர்மங்களுக்கான பதில் இனிமேல் தொடரும்......மேற்படி மோசடிகள் தொடர்பான சகல புகைப்பட ஆதாரங்கள் ஒலிப்பதிவுகள் யாவும் எஎன்னிடம் உள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் அவற்றையும் வெளியிடக் காத்திருக்கிறோம்.
Photobucket


Photobucket

சிமிக்கி

2:04 PM, Posted by sathiri, 2 Comments

மனோகரா தியேட்டர் முதலாவது வகுப்பு இருக்கையில் நாதனும் சாவித்திரியும் படத்தில் மூழ்கிப்போருந்தனர்.மடமடக்கும் பட்டுச்சேலையில் அவளும் . வெள்ளைச் சட்டை வெள்ளைக்காற்சட்டையில் அவனும்.அவர்களை பார்தததுமே புதிதாய் கலியாணமானவர்கள் என்று சொல்லிவிடலாம்.வெள்ளி விழா படத்தில் ஜெமினிகணேசனை ஒட்டி உரசியபடி ஜெயந்தி காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான்நான் பேசுவேன் என்கிற பாடலை பாடிக்கொண்டிருந்தார். எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் அனைவருமே சொக்கிப் போய் அமர்ந்திருந்தனர். நாதனின் விரல்கள் சாவித்திரியின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொள்ள திரை வெளிச்சத்தில் நாணத்துடன் நாதனை திரும்பிபிப்பார்தாள். நீரும் அசல் அந்த கீரோயின் மாதிரித்தான் இருக்கிறீர் யாரோ புது ஆள். பெயரை எழுத்தோட்டத்திலை கவனிக்கேல்லை வாற ஞாயிறு வந்து படத்தை திரும்ப பாக்கேக்குள்ளை கீரோயினின்ரை பேரை கவனிக்கவேணும். அதிலை அவா போட்டிருக்கிற மாதிரி ஒரு சிமிக்கி உமக்கும் போட்டால் அந்த கீறோயின் மாதிரியே இருப்பீர் எண்டு சாவித்திரியின் காதில் கிசுகிசுத்தான்.படம் முடிந்து வெளியே வந்து சைக்கிளில் சாவித்திரியைஏற்றிக்கொண்டு வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கும் போது அவனது மனம் முழுதும் எப்படியாவது அவளிற்கு ஒரு சோடி சிமிக்கி வாங்கி குடுப்பது என்கிற எண்ணம் மட்டும்தான் மனதில் நிறைந்திருந்தது சாவித்திரியோ காதோடுதான் பாடலை மனதிற்குள் முணு முணுத்தபடியே இருந்தாள்.

நாதன் தொலைத் தொடர்பு இலாகாவில் சாதாரண ஊழியன். சாவித்திரியை கோயிலில் அவனது அம்மா காட்டியதுமே பிடித்துபோய் திருமணம் செய்து கொண்டான். இருவர்களது குடும்பங்களும் நடுத்தர குடும்பங்கள்தான். நாதன் குடும்பத்தில் ஒரேயொருத்தன் என்பதால் அவனது வீட்டிலேயே சாவித்திரியோடு குடும்பம் நடாத்தத் தொடங்கியிருந்தான். நாலைந்து தடைவைகள் வெள்ளி விழா படத்தை அவர்கள் பார்த்து முடித்துவிட்டதொரு நாளிள் வேலை முடிந்து வீட்டிற்கு மகிழ்ச்சியோடு வந்த நாதன் சாவித்திரியை தன் தாய் தந்தைக்கு தெரியாமல் இரகசியமாக அறைக்குள் அழைத்தவன். அவளது கண்ணை மூடச்சொல்லி கைகளில் சிவப்பு ரிசு பேப்பரில் சுற்றியதொரு சிறிய பொட்டலத்தை வைத்தான். கண்களை திறந்த சாவித்திரியின் கண்கள் ஆச்சரியத்தோடு ஆனந்தக் கண்ணீரால் கசிந்தது. அவளது கைகளில் ஒரு சோடி சிமிக்கி மின்னியது.அவளது காதில் இருந்த வழையங்களை கழற்றிவிட்டு சிமிக்கியை போட்டு விட்டவன் நீர் இப்ப அசல் அந்த கதாநாயகிமாதிரியே இருக்கிறீர் எங்கை ஒருக்கா அந்த பாட்டை பாடுமன் என்றதும். வெட்கத்தில் குனிந்த சாவித்திரியின் கன்னத்தின் அருகே முகத்தை கொண்டு போனதுமே. கெதியிலை அப்பா ஆகப்போறார் இன்னும் ஆசையைப்பார் என்று வயிற்றை தடவிக்காட்டினாள். அவன் கன்னத்திற்கு கொடுக்கப்போன முத்தத்தை அப்படியே இறக்கி அவளது வயிற்றில் கொடுத்துவிட்டு இப்ப இரண்டுபேருக்கும் கணக்கு தீர்த்தாச்சு என்று சிரித்தான்.
இண்டைக்கு நல்லம்மா கிழவி என்ரை வயித்தையும் நான் நடக்கிறதையும் பாத்து ஆம்பிளை பிள்ளைதான் எண்டு சொன்னவா.

உண்மையாவே??நல்லம்மா கிழவி சொன்னால் அரக்காது என்றபடி மீண்டும் அவளது கன்னத்தை நோக்கி முகத்தை கொண்டு போகும் பொழுது ..டேய் தம்பி வேலையாலை வந்ததும் சாப்பிடாமல் உங்கை என்னடா செய்யிறாய் என்கிற அவனது அம்மாவின் குரலை கேட்டதும் அவசரமாய் உடுப்பை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.


                                                     0000000000000000000000

ஒவ்வொரு இரவிலும் அவனது அணைப்பில் இருக்கும் சாவித்திரியின் சிமிக்கியை அவன் சுண்டி விழையாடுவததோடு அந்த பாடலை ஒருக்கால் பாடச்சொல்லி கேட்பதும் அவளும் இரண்டொரு வரிகளை முணுமுணுப்பதும் அவனிற்கு ஒரு பழக்கமாகிப் போய் விட்டிருந்தது கால ஓட்டங்கள் அவர்களிற்கு ஒரு மகனையும் மகளையும் பிள்ளைகளாக்கி மகிழ்வை கொடுத்ததோடு அவனது தாய் தந்தையரின் மரணங்களும் இயற்கையோடு கரைந்து போய்விட்டிருந்தது. நாட்டுப்பிரச்சனையில்அவனதுவேலையும்பறிபோயிருந்தாலும்.சிறிதளவுஓய்வூதியப்பணம் கிடைத்துக்கொண்டிருந்தது..அளவான வருமானம் அழகான குடும்பம். அன்பான மனைவி சாராசரி மனிதருக்கு இருக்கவேண்டிய அனைத்தும் இருந்தாலும். நாட்டின் அசாதரண சூழலும் அரசியலும் அவர்களையும் அவ்வப்பொழுது சீண்டத் தவறியதில்லை.தொண்ணூறுகளின் ஆரம்பம். பிள்ளை பிடி இராணுவத்திடமிருந்து பிள்ளையை காப்பாற்ற கையிலிருந்த பணத்தோடு நகைகளையும் அடைவு வைத்து மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். பதினெட்டு வருடங்களிற்கு பின்னர் முதன் முதலாக சாவித்திரியின் சிமிக்கியும் கழன்று அடைவு கடைக்குள் போயிருந்தது. அவளிற்கு வேறு எதுவும் பேட விருப்பம் இல்லததால் வேப்பங் குச்சியை முறித்து காது ஓட்டையில் செருகிவிட்டிருந்தாள்..நாதனிற்கும் சிமிக்கி இல்லாத சாவித்திரியின் முகத்தை பார்க்கவே அந்தரமாக இருந்தது. மகன் வெளிநாட்டிலை இருந்து காசு அனுப்பினதும் முதல் வேலையா நகையளை மீட்கலாம். இல்லாட்டி நான் சிமிக்கியை மட்டுமாவது எப்பிடியும் மீட்டுத் தருவன் என்று அவள் மனதை தேற்றியபடியிருந்தார். அதே போல் பிரான்ஸ் வந்து சேர்ந்துவிட்ட மகன் பல மாதங்களின் பின்னர் அனுப்பிய பணத்தில் சிமிக்கி மீண்டதும்தான் சாவித்திரியின் முகத்தில் மகிழ்ச்சி முழுவதுமாய் மீண்டிருந்தது.

யாழ்ப்பாண இடப்பெயர்வோடை மகளும் குமராகிவிட்ட நிலையில் வன்னிக்குள் புகுந்துவிட்டிருந்தவர்கள். உடனடி செலவுகளிற்காக நகைகள் அடைவிற்கு போனாலும் சாவித்திரி சிமிக்கியை மட்டும் கழற்றவேயில்லை.அதே நேரம் மகள் இயக்கத்துக்கு ஓடிடுவாளோ எண்டிற பயத்திலை மகனை நச்சரிச்சு அவளையும் ஒரு மாதிரி இலண்டனில் கட்டிக்குடுத்து விட்டிருந்தார்கள்.காலப்போக்கில் வன்னிக்குள்ளேயே புலிகளின் நிருவாகக் கட்டமைப்பில் நீதி நிருவாகத் துறையில் நாதனிற்கு பதிவாளராக வேலையும் கிடைத்துவிட வன்னியிலேயே தங்கிவிட்டிருந்தனர்.இறுதி யுத்தத்தில் பலஇலட்சம் மக்களோடு மக்களாக அவர்களும் மணிக்பாம் முகாமில் முடங்கிப் போனவர்கள். பிள்ளைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குகூட கையில் பணமேதும் இல்லாததால் மீண்டும் சிமிக்கியை கழற்றி அம்மானின் ஆள் எண்டவனிடம் குடுத்து கொஞ்சப்பணம் வாங்கி மகனுடன் கதைத்து உண்டியலில் காசும் எடுத்து வெளியே வந்த பிறகு அம்மானின் ஆளை தேடினால் காணக்கிடைக்கவில்லை. சிமிக்கி போன கவலையில் மீண்டும் சாவித்திரியன் காதுகளில் வேப்பங்குச்சி புகுந்து கொண்டது. கொழும்பில் தங்கியிருந்தவர்களிற்கு அவசர அவசரமாக ஸ்பொன்சர் வேலைகள் நடந்தது.

ஆனால் நாதன் மகனிடமும் சாவித்திரி மகளிடமும் போய் விட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் தாங்கள் தனித்தனி தீவுகளிற்குள் தூக்கி வீசப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். தொலைபேசியில் மட்டுமே நலம் விசாரிப்புக்கள். ஒருநாள் சாவித்திரி கணவனிடம் சாதாரணமாய் சாப்பிட்டியளோ என்று தொலைபேசியில் கேட்டதற்கு. என்னத்தை எதை சாப்பிட்டாலும் வைக்கலை சாப்பிட்டமாதிரிக் கிடக்கு ருசியே இல்லையெண்டு சொல்லப்போக அது மருமகளின் காதில் விழுந்து அதை அவள் அழுதழுது என்ரை சாப்பாடு சரியில்லையாம் எண்டு மாமா மாமிட்டை சொல்லுறார். ஏதோ என்னாலை முடிஞ்சது இவ்வளவுதான் எண்டு கணவனிடம் சொல்ல அது பெரிய பிரச்சனையாகிப் போயிருந்தது. அன்றிரவு மகன் நாதனிற்கு வெளிநாடு ஜஸ் சாப்பட்டு வகை பற்றி பெரியதொரு விரிவுரையே நடத்தியதோடு உங்களிற்கு சிகரற் வாங்கித்தாறன். குடிக்க பியர் வாங்கி அடிக்கி வைச்சிருக்கிறன். வெத்திலை வாங்கி போட காசும் தாறன் இதைவிட வாழக்கையிலை வேறை என்ன வேணும் இனிமேல் மருமகளை குறை சொல்லாதையுங்கோ என்று முடித்திருந்தான். அதற்கு பிறகு நாதனும் பேச்சை குறைத்துக் கொண்டார். தமிழ் அதிகம் தெரியாத பேரப்பிள்ளையும் பள்ளிக்கூடம் போய்விட்டால் தனியே தொலைக்காட்சிதான் பொழுது போக்கு அதுவும் நாள்செல்ல வெறுத்துப் போய்விட கொஞ்சம் வெய்யிலடித்தால் வெளியில் இறங்கி உலாவுவார். சாவித்திரிக்கு தொலைக்காட்சி மட்டுமே தஞ்சமாகிப் போனது. மகள் எவ்வளவு நச்சரித்தும் காதில் தோடு போட மறுத்துவிட்டாள். எங்கையாவது வெளியில் போகும் போது மட்டும் மானம் மரியாதைக்காக மகள் தருவதை போடுபவர் வீட்டிற்கு வந்ததும் கழற்றி குடுத்துவிடுவார் மகளும் காரணம் கேட்பதில்லை சாவித்திரியும் சொல்வதில்லை.

                                                       00000000000000000000000
ஒரு வருடத்தில் நாதனிற்கு பிரான்சின் விசா கிடைத்துவிட மகன் குடும்பத்தோடு மகளிடம் போயிருந்தார். மனைவியை கண்ட அவரது மகிழ்ச்சி அவளின் காதுகளை பார்த்ததுமே மறைந்து போனது.ஆனால் அவரும் ஏதும் மனைவியிடம் கேட்கவில்லை. பிரான்சிற்கு திரும்பியதும் ஒரு முடிவு செய்திருந்தார். தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள பகுதியான லா சப்பல் பகுதில் ஒவ்வொரு கடையாக ஏறி வேலை தேடத் தொங்கியிருந்தார். அவரின் வயதை பார்த்து எல்லாருமே தயங்கினாலும் ஒரு கடைக்காரன் ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலம் சாமான் அடுக்கிற வேலை. சம்பளம் மணித்தியாலத்துக்கு ஏழு யுரோ .சம்பளம் பதிய மாட்டன் விரும்பினால் செய்யலாமெண்டான். நாதனுக்கும் கிடைத்தவரை லாபம். அடுத்தநாளே பகல் நகைக்கடை கண்ணாடிகளிற்குள்ளால் கண்களை மேயவிடத் தொடங்கியிருந்தார்.
மகனிற்கும் தான் வேலைக்கு போறது தெரியாமலிருக்க தெரிஞ்ச சினேதன் ஒருதன் அம்பிட்டிருக்கிறான் லா சப்பல் பக்கம் போய் அவனோடை கதைச்சிட்டு வாறனான் என்று கதைவிட்டிருந்தார்.

ஒரு மாதம் போனதும் ராயூ யுவர்லசின் கதைவை தள்ளிக்கொண்டு உள்ளை புகுந்தவர் தம்பி எனக்கொரு சிமிக்கி வேணும் எண்டார். கடைக்காரனும் இருந்த சிமிக்கி வகை எல்லாத்தையும் அவர் முன் பரப்பினான். இதன்ன ஒண்டும் சரியில்லையெண்டு விட்டு பக்கத்திலிருந்த மோகன் .தங்கமாளிகை என்று பாரிசில் இருந்த எல்லாக்கடையும் ஏறி இறங்கிவிட்டார் அவர் தேடியமாதிரி சிமிக்கி எங்கையும் இல்லை.திரும்பவும் ராயூ யுவர்லசிற்கு நுளைந்தவரிடம் என்ன ஜயா சிமிக்கி கிடைச்சதோ?? என்றான் கடைக்காறன்.என்னத்தை குட்டி குட்டி சிமிக்கியள்தான் புது டிசைன் எண்டு காட்டுறாங்கள். தம்பி நான் சொல்லுறமாதிரி செய்து தருவியோ??
தாராளமா நீங்கள் காசை தாறியள் அதுக்கேற்றமாதிரி செய்து பொருளை தருவம்.
சரி ஒரு பேப்பரும் பேனையும் தாரும். என்றதும் நீட்டிய பேப்பரில் கண்ணாடியை சரிசெய்து விட்டு மெதுவாக நடுங்கும் கைகளால் சிமிக்கியை கீறத் தொடங்குகிறார் வாடிவா பாரும் தம்பி தோடு இப்பிடி வட்டமாயிருக்கவேணும்.கல்லு வைச்சது கீழை சிமிக்கி 5 கல்லு பிறகு 7 கல்லு பிறகு 9 கல்லு வைக்கவேணும்.
கீறி முடித்த சிமிக்கியை பாத்த கடைக்காரன் இதென்ன கர்ணனின்ரை குண்டல சைசிலை கீறியிருக்கிறியள். கோழிக்கரப்பு மாதிரி இருக்கு இப்ப இந்த சைசிலை ஒருத்தரும் போடுறேல்லை ஜயா.
தம்பி உம்மாலை முடியுமோ முடியாதோ??

எனக்கென்ன ஆனால் இந்த அளவுக்கு இதே டிசைனிலை செய்யிறதெண்டால் ஆயிரத்து இருநூறாவது ஆகும் பவுண் விலை தெரியும்தானே?

உமக்குஅந்த கவலை உமக்கு வேண்டாம்.

சரி ஜயா அட்வான்ஸ் பாதி தந்தால் பவுணை வாங்கி பொருளை செய்யத் தொடங்கலாம்.
தம்பி இந்த மாத கடைசியிலை கொண்டந்து தருவன். பிறகு செய்யத் தொடங்கும் விடை பெற்றார்.
அவரும் அட்வான்ஸ் குடுத்து சிமிக்கி செய்யத் சொல்லி எல்லாம் நல்லாய் போய்க்கொண்டிருந்த ஒருநாள் கடையில் சாமான் அடுக்கிக் கொண்டிருந்த நாதன் நிமிர்ந்து பார்த்து திடுக்கிட்டு போனார்.
வீட்டுக்கு பக்கத்திலை தமிழ் கடை இருக்க இஞ்சை என்னத்திற்கு வந்தவள் என்று அவர் யோசித்து முடிப்பதற்குள் மருமகள் அவரை பார்த்து விட்டு மருதாணி பவுடரை எடுத்துக்கொண்டு போய் கடைக்காரரிடம் காசு குடுக்கும் பொழுது அந்த ஜயா கனநாளய் இஞ்சை வேலை செய்யிறாரோ ??எண்டதும் கடைக்காரரும் வஞ்சமிலலாமல். இப்பதான் ஒரு மூண்டு மாதமாய் நல்ல மனிசன். பாவம் பிள்ளையள் அவரை கவனிக்கிறேல்லை போலை அதுதான் இந்த வயதிலையும் வேலை செய்யிறார் எண்டொரு மேலதிக தகவலையும் சொல்லி வைத்தான்.

                                           000000000000000000000000
இண்டைக்கு வீட்டிலை சுனாமி அடிக்கப் போகுது என்று நினைத்தபடியே வீட்டிற்குள் நுளைந்த நாதனிடம் அப்பா உங்களோடை கொஞ்சம் கதைக்கவேணும். எண்டதும் மருமகளும் பேரனை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுளைந்துவிட்டாள். கடைக்காரன் தான் உங்கடை சினேதனோ என தொடங்கியவன் மானம் போகுது மரியாதை போகுது. என்ன குறை விட்டம். சாப்பாடா?? சிகரற்றரா?? பியரா?? வெத்திலையா??உடுப்பா??அடுக்கிக் கொண்டே போனான். நாதனின் மௌனம் மட்டுமே பதிலானது. கோபத்தில் லண்டனிற்கு போனடித்து சத்மாய் நடந்ததை சொல்லி முடித்துவிட்டு அம்மா நீங்களே அவரிட்டை கேளுங்கோ எதுக்கு வேலைக்கு போனவெரெண்டு உங்களிட்டையாவது சொல்லுறாரோ பாப்பம் என்று தொலைபேசியை நாதனிடம் நீட்டினான். தொலைபேசியை காதில் வைத்தவர். மறுபக்கத்தில் என்னப்பா இதெல்லாம் என்கிற விசும்பிய குரலிற்கு எல்லாம் காரணத்தோடைதான் என்றுவிட்டு மகனிடம் தொலைபேசியை நீட்டிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டார்.டேய் அப்பா என்ன செய்தாலும் ஏதாவது காரணம் இருக்குமடா அவரை பேசாதை என்றவரிடம் நீயும் அவருக்கு வக்காளத்து வாங்கு என்று கத்திவிட்டு போனை வைத்தான்.

மகளிடம் திரும்பியவர் பிள்ளை அப்பாக்கு அங்கை சரிவருதில்லை போலை இஞ்சை வீடு வசதியா தானே இருக்கு இஞ்சை கூப்பிட்டால் எனக்கும் துணையா இருக்கும் என்றதும். அதிகம் பேசாத மருமகன் உங்கடை அம்மாக்கு அப்பாவை விட்டிட்டு இருக்கேலாது போலை என்று நமட்டு சிரிப்படன் சொல்லி சிரித்ததும் சாவித்திரி கூனிக் குறுகி கூசிப் போனாள். அதற்கு பிறகு சாவித்திரியும் சரியாக சாப்பிடுவதில்லை யாருடனும் கதைப்பதில்லை ஏன் இந்த மனுசன் இப்பிடி செய்ததெண்டு அந்த கவலையிலேயெ நாட்கள் போய்க்கொண்டிருந்தது. நாதனை வேலைக்கு போகவேண்டாமென்று மகனிற்கும் அவரிற்கு சண்டை விரிசல் கூடிக்கொண்டே பேனதே தவிர இருவரும் ஆற அமர்ந்து இருந்து அவர் வேலைக்கு போவதற்கான காரணங்களை கதைக்கவில்லை. அம்மா அப்பா என்கிற உறவு பிள்ளைகளின் வாய்களில் கிழவன் கிழவியாகிப் போனது.
மட்டுமல்லாமல் உறவுகளிற்கிடையில் விரிசல்களும் அதிகரித்துப் போனது அந்த மாத இறுதியில் நாதனின் கைகளிற்கு சிமிக்கி கிடைத்துவிடும். அன்று வேலையால் வந்தவர் மகனிடம் நானும் அம்மாவும் உருக்கு போகப் போறம் அதுக்கான வேலையளை பார் என்றுவிட்டு போய்விட்டார். அவன் மீண்டும் தங்கைக்கு போனடித்து கத்தினான். அம்மவும் அப்பிடித்தான் இஞ்சை சரியா கதைக்கிறேல்லை சாப்பிடுறேல்லை கனதரம் பிறசர் கூடி தலைசுத்தி விழுந்திட்டா ஏதும் நடந்திடுமோ எண்டு எனக்கும் பயமா கிடக்கு பேசாமல் ஊருக்கே அனுப்பிறது நல்லதுபோலை கிடக்கு அங்கை என்ரை சீதன வீடும் காணியும் யாரோ தானே இருக்கினம். அவையளோடை கதைச்சு எழும்ப சொல்லிப் போட்டு பேசாமல் இரண்டு கிழட்டையும் அனுப்பி விடுறது நல்லது போலத்தான் கிடக்கு என்றாள்.

                                                       0000000000000000
பயண அலுவல்கள் தயாராகி விட்டிருந்தது நாதன் british airways இலண்டனிற்கு போய் அங்கிருந்து சாவித்திரியுன் இணைந்து கொழும்பு போவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுதம்பி நான் ஊருக்கு போறன் என்று வேலை செய்த கடைக்காரரிடம் விடை பெற்ற நாதன் சட்பளத்தை வாங்கிக் கொண்டு நகைக் கடைக்குள் நுளைந்தார். மிகுதி பணத்தை கொடுத்ததும் கடைக்காரர் ஒரு சிறிய டப்பாவை திறந்து சிமிக்கியை காட்டினான் ஜயா எப்பிடி இருக்கு நான் நினைச்சமாதிரியே இருக்கு அது சரி இவ்வளவு பெரிய சிமிக்கியை யாருக்கு குடுக்கப் போறியள். என்ரை மனிசிக்கு என்றபடி கொடுப்பிற்குள் சிரித்தவர் அதை வாங்கி சிறிய பையில் சுற்றி சட்டை பையில் பத்திரப் படுத்திக்கொண்டு வீடு நொக்கி போனவர். மகன் அவரது பொருட்கள் தயாராக எடுத்து வைத்திருந்தான் அவர்களது கார் விமான நிலையம் நோக்கி போய்க்கொண்டிருந்தது அவரோ அடிக்கடி சிமிக்கி பத்திரமாக இருக்கிறதா என தொட்டு பார்த்தபடியே இருந்தார். விமான நிலையத்தில் பேரனை கட்டியணைத்து முத்தம் இட்டு விடைபெறும்போது அவரது கண்கள் கலங்கிப்போய்விட்டிருந்தது. மருமகளிடமும் பிள்ளை ஏதும் குறையள் இருந்தால் மனசிலை வைச்சுக்ககொள்ளாதைஎன்றதும் அவளும் கலங்கித்தான் போனாள்.மகனிடம் திரும்பியவர் தம்பி பேட்டுவாறன் என்றதும் போங்கோ ஆனால் அங்கை போய் நிண்டு கொண்டு போனடிச்சு காசு காசு எண்டு உயிரை வாங்ககூடாது என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டான். அவரிற்கு குளைக் கம்பியால் யாரோ நெஞ்சில் செருகியது போலதொரு வலி. நெஞ்சை தடவினார் சட்டைப் பையில் சிமிக்கி தட்டுப்பட்டது.

கீத்றோ விமான நிலையம் கொழும்பு செல்லும் விமானத்தில் ஜன்னல் பக்கமாக சாவித்திரியும் அருகில் நாதனும் அமர்ந்திருந்தார்கள். சாவித்திரிதான் முதலாவதா தொடங்கினாள். நீங்கள் ஊருக்கு போவம் எண்டதும் நானும் ஏன் எதுக்கொண்டு கேக்காமல் மகளையும் பேரப் பிள்ளையையும் விட்டிட்டு பேசாமல் வந்திட்டன். எதுக்கு இதெல்லாம்??

சத்தியமா சொல்லு சாவித்திரி வன்னியிலை நாங்கள் கடைசியாஅந்த செல்லடிக்குள்ளையும் இலைக்கஞ்சி குடிக்கேக்குள்ளை இருந்த நிம்மதி சந்தோசம் இஞ்சை வந்த இரண்டு வரியத்திலை இருந்ததோ?

இல்லைத்தான் .....

சத்தியமாய சொல்லுறன் ஒவ்வொரு நாளும் சாப்பிடேக்குள்ளை எனக்கு ஏதோ கல்லையும் முள்ளையும் விழுங்கினமாதிரியெ இருந்தது ஆனால் மகனும் மருமகளும் சங்கடப் படுவினம் எண்டு எதுவும் பேசாமல் விழுங்குவன். அவரின் குரல் தளுதளுத்தது...

எனக்கு மட்டும் என்ன நீங்கள் என்னத்தை சாப்பிடுறியள் எப்பிடி சாப்பிடுறியள் எத்தினை மணிக்கு தேத்தண்ணி குடிக்கிறியள் எல்லாம் கவலைதான்.

அது மட்டுமில்லை நலைஞ்சு உடுப்பு காலையும் சப்பாத்துக்குள்ளை செருகிக் கொண்டு மிசின் மாதிரி பிள்ளையள் ஓடித்திரியிதுகள். அதுகளுக்கு எங்களையும் தனிய கவனிக்கிறது ஒரு பாரம். அதே நேரம் இந்த நடைமுறையளும் எங்களுக்கும் சரிவராது அதுதான் போறதெண்டு முடிவெடுத்தனான். அதுகள் விரும்பினால் வருசா வருசம் ஊருக்கு வந்து எங்களை பாத்திட்டு போகட்டும்.

விமானம் மேலெழும்பத் தொடங்கிவிட்டிருந்தது

நானும் அதைத்தான் யோசிச்சனான். ஆனா எதுக்கு நீங்கள் வேலைக்கு போனனீங்கள் அதாலைதானே பிரச்சனையே தொடங்கினது அதையாவது சொல்லுங்கோவன்.

சிரித்தபடி சட்டைப் பையிலிருந்து சிறிய பெட்டியை எடுத்து திறந்து காட்டினார் மின்னிக்கொண்டிருந்த சிமிக்கிளை பார்த்து சாவித்திரியின் கண்கள் மின்னியது. ஆனாலும் இதுக்காகவா இவ்வளவு கஸ்ரப்பட்டு வேலைக்கு போனனீங்கள் மகனிட்டை கேட்டிருக்கலாம்தானே??

அப்பிடியா அப்ப நீ மட்டும் ஏன் மகள் தந்த தோட்டை வாங்கி போடேல்லை எனக்கு உன்னைப்பற்றி தெரியுமடி அதுதான் நானே வேலை செய்து அந்த சம்பளத்திலை இதை செய்தனான். என்றபடி சாவித்திரியிடம் நீட்டினார்.அவளோ காதை அவரிடம் நீட்டினாள் கண்ணாடியை கழற்றி துடைத்து மீண்டும் அணிந்து கொண்டவர் அவள் காதிலிருந்த குச்சியை மெதுவாக ஆட்டி இழுத்தெடுத்துவிட்டு சிமிக்கிகளை பூட்டிவிட்டார் அதை கவனித்த பகத்து இருக்கையில் இருந்த வெள்ளைக்காரி வலக்கை கட்டை விரலை உயர்த்திக்காட்டினாள். நாதனும் அவளிற்கு கை கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு சாவித்திரியிடம். எங்கை அந்தப் பாட்டை ஒருக்கா பாடுமன்.

எந்தப் பாட்டை ??

அதுதான் அந்தப் பாட்டு. சாவித்திரியும் அவரது காதில் மெதுவாக நடுங்கும் குரலில் காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான் நான் பேசு...................தொண்டை அடைத்தது கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். நாதனின் கை விரல்கள் அவளின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொண்டது.கட்டுநாயக்காவில் தரை தட்டிய விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியபின்னரும் இருவர் மட்டும் இன்னமும் உறக்கத்திலிருந்ததை கவனித்த பணிப்பெண் அவர்களின் அருகில் சென்று உங்கள் பயணம் நிறைவடைந்து விட்டது எழுந்திருங்கள் என்று அவர்களை மெதுவாய் தட்டியவள் பயத்தில் திடுக்கிட்டு உதவி உதவி என கத்தினாள்.

யாவும் கற்பனையே

உணர்வுகள் உறவுகள்

2:15 PM, Posted by sathiri, 4 Comments

உணர்வுகள் உறவுகள்
அம்மம்மா

இந்தவார ஒரு பேப்பரிற்காக  சாத்திரி

.காலைச்சூரியன் எழும்போதே சேர்ந்து எழுந்து முற்றம் கூட்டி தண்ணீர் தெளிக்கும் போது அந்தத் தண்ணியை கொஞ்சம் அவன் மீதும் தெளித்து எழுப்பிட்டு குளித்து நெற்றி நீளத்திற்கும் இழுத்த விபூதிக்குறியோடு மாட்டில் பால்கறந்து போட்ட தேனீர் பித்தளை மூக்குப்பேணிகளில் ஊற்றி ஒன்றை அவனிடம் கொடுத்து இதை கொண்டுபோய் தாத்தாட்டை குடு என்று நீட்டி விட்டு காலைச்சாப்பாடு தயாரிப்பில் இறங்கி விடுவார்.அவனிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மம்மாவும் தாத்தாவும் நேருக்கு நேர் கதைத்ததை அவன் பார்ததேயில்லை ஏதாவது அவர்கள் கதைப்பதென்றாலும் இதைபோய் அங்கை சொல்லு என்று அவன்தான் இடையில் மாறி மாறி கதைகாவி.

இவங்களிற்குள்ளை ஏதும் சண்டையாயிருக்குமோ??என்றும் அவன் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால் சண்டை பிடித்ததையும் அவன் காணவில்லை. மத்தியானமானதும் தாத்தா கள்ளடிக்கப் போய விட்டு வருவார். அவர் தூரத்தில் வரும்பொழுதே முற்றத்தில் படுத்திருக்கும் வாதாபி வாலையாட்டியபடி மெதுவாய் முனகியபடி சந்தோசத்திலை நிலத்திலை விழுந்து புரளும்.. குசினிக்குள் நின்றபடியே டேய் செம்பிலை தண்ணி எடுத்து வை தாத்தா வாறார் என்று குரல் கொடுப்பார்.தூரத்தில் தாத்தா வந்து கொண்டிருப்பார். அவர் வாறது எப்பிடி வாதாபிக்கும் உள்ளை நிக்கிற அம்மம்மாவிற்கும் தெரியும் ?? வாதாபி மணத்திலை கண்டு பிடிச்சிருக்கும். அம்மமாவுக்கும் மணக்கிற சக்தி இருக்கோ எண்டு மண்டையை போட்டு குழப்பி ஒருநாள் அவாவிடமே கேட்டும் பார்த்தான்.சின்னப்பெடியன் உனக்கு விளங்காது எண்டு சொல்லி சிரிச்சார்.

தாத்தா நேரடியாக கிணத்தடிக்குப்போய் கைகால் கழுவி விட்டு வந்து செம்புத்தண்ணியை ஒரு முறடு குடித்துவிட்டு அதை கொண்டுவந்து சாப்பிட சப்பாணி கட்டியமர்ந்ததும் அவன் கொண்டுபோய் வாழையிலையை குடுப்பான். பெரும்பாலும் வழையிலைதான் சாப்பிடுவார். வாழையிலை இல்லாத காலத்திலை அம்மம்மா ஒரு ஓலைப்பெட்டியை கவித்துப்போட்டு அதில் பெரிய பூவரசம் இலைகளை மெதுவாய் நெருப்பில் வாட்டி கோப்பை போல வட்ட வடிவமாய் அடுக்கி தருவார் அதிலை என்னதான் சொதி குளம்பு ஊத்தி சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடியும்வரை கொஞ்சம்கூட கீழே ஒழுகாது .

அது மட்டுமில்லை தாத்தா செருமினால் பிடரியை சொறிந்தால்.உச்சந்தலையை சொறிந்தால்.நெஞ்சை தடவினால் அதற்கெல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும் அது அம்மம்மாவிற்கு மட்டுமே புரியும். அதே நேரம் அம்மம்மாவின் ஒவ்வொரு பார்வைக்குமான அர்த்தங்கள் தாத்தாவிற்கு மட்டுமே புரிந்தவை.பால் குடித்து முடித்துவிட்டதொரு குழந்தைக்கு முதுகில் தட்டி அது ஏவறை (ஏப்பம்) விட்டதும் ஆனந்தப்படும் ஒரு தாயைப்போல் தாத்தாவும் சாப்பிட்டு முடித்த பின்னர் தானது வயிற்றை தடவி ஒரு ஏவறை விட்டால்தான் அவாவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியை காணலாம்.இரவில் சாப்பிட்டு முடிந்ததும் காலை நீட்டி சுவரில் சாய்ந்படி வெற்றிலைப் பெட்டியை எடுத்து வெற்றியலை. பாக்கு. சுண்ணாம்பு புகையிலை. எல்லாம் அளவாய் சேர்த்து பாக்குஉரலில் போட்டு இடித்து அதை ஒரு முழு வெற்றிலையில் கொட்டி சுருட்டி அதனை இரண்டாகப்பிரித்து பாதியை தாத்தாவிடம் கொடுக்கச்சொல்லி அவனிடம் நீட்டிவிட்டு பாதியை அவர் வாயில் போட்டு மென்றுவிட்டு வாய்கொப்பளித்துவிட்டு படுக்கப் போவார்.

அவர்களின் வாழ்க்கையின் சுக துக்கங்கள் அனைத்தையும் சரிபாதியாய் பகிர்ந்து கொண்டதன் முழு அர்த்தமுமே அவர்கள் இரவில் பகிர்ந்து கொள்ளும் அந்த வெற்றிலையில் ததத்துவமாய் பொதிந்திருந்தது அப்பொழுது அவனிற்கு புரிந்திருக்கவில்லை.அப்படியானதொரு நாளில்தான் தாத்தா நோய்வாயப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். அவரது இறுதிக்கணங்கள் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றிரவு தாத்தா மயங்கிய நிலைக்கு போய்விட்டிருந்தார். அவன்தான் அவசரமாக ஓடிப்போய் நடராசா பரியாரியை அழைத்து வந்தான். வந்தவர் எல்லாம் பரிசோதித்துவிட்டு சொந்தபந்தங்களிற்கு சொல்லினுப்பிட்டு பால் ஊத்துறவை ஊத்துங்கோ எண்டு சொல்லிவிட்டு அவரின்ரை பங்கிற்கு அவரும் பால் ஊத்திவிட்டு போய்விட்டார். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எண்டு எல்லாரும் வரிசையாய் நிண்டு பால் ஊத்தியாச்சு. ஆனால் இன்னமும் சேடம் இழுத்துக்கொண்டுதானிருந்தது. பலர் சொல்லியும் அவர் விரும்பினபடி விதம் விதமாய் சமைச்சு போட்ட கையாலை பால் ஊத்தமாட்டன் எண்டிட்டார் அம்மம்மா ..மண் பொன் எல்லாம் உரசி ஊத்தியாச்சு நேரம் போய்க்கொண்டேயிருந்தது சேடம் இழுத்துக்கொண்டேயிருந்தது. பிள்ளை உயிர் கிடந்து தவிக்கிது இப்பிடி தவிக்கவிடாதை அடம்பிடிக்காமல் பாலை ஊத்து எண்டு ஊர்பெருசுகள் எல்லாரும் வற்புறுத்தினால் பிறகுதான் விசும்பியபடி ஒரு கறண்டியில் பாலை எடுத்து அவரது வாயில் ஊற்றினார் தாத்தாவின் மார்பு சில அங்குலம் கட்டிலில் இருந்து மேலே எழும்பி திரும்ப கீழே இறங்க மெல்லியதாய் ஒரு கொட்டாவியோடு அவரது உயிர் பிரிந்து போனது. வீடு முழுதும் ஒரே ஓலம்.
00000000000000000000

அதிகாலையே சினேகிதங்களோடை சேந்து ஊர் முழுக்க இழவு சொல்லிவிட்டு விடியமுதலேயே சுன்னாகம் இரத்தினன் வீட்டிற்கு ஓடினான். காரணம் செத்த வீட்டிற்கு வெள்ளை கட்டிறவன். ஜயர் இவையளிற்கு முதல் முக்கியமான ஒருவன் இரத்தினன். அந்த நேரத்திலை நாடகத்திற்கு வைரமுத்து . தவிலிற்கு தட்சணாமூர்த்தி மாதிரி பறையடிக்கிறதுக்கு இரத்தினன். இரத்தினின்ரை நாள் சரிவாராமல் பிணம் எடுக்கிறதை தள்ளிப் போட்ட சம்பவங்களும் நடந்திருக்கு. கறுத்த மெலிஞ்ச வலிச்ச உடம்பு வெத்திலை போட்டு சிவந்தவாய் இதுதான் இரத்தினன்.இரத்தினன் தொழில் திறமை .பக்தி இதுக்கு அடுத்ததாய் சாதியத்திற்கு எதிரானதொரு போராளியும். யார் செத்தவீட்டிற்கு கூப்பிடப் போனாலும் அவனின்ரை முதல் உத்தரவு தனக்கோ தன்னோடை வாறவைக்கோ சிரட்டையிலை தேத்தண்ணி தரக்கூடாது எண்டு கண்டிப்பாய் சொல்லிவிடுவான்.

அவனிற்காக கிளாசுகள் வாங்கித்தான் தேத்தண்ணி குடுக்கவேணும்.செத்த வீட்டிற்கு வந்ததும் வெறும் தேத்தண்ணியை குடிச்சபடி வெற்றிலையை போட்டு சப்பித் துப்பினபடியே இருப்பான் அவனின்ரை உதவியாளர் அல்லது அவனிட்டை தொழில் பழகிறவர்தான் இடைக்கிடை மேளத்தை அடிச்சபடி இருப்பினம்.கடைசி பொற்சுண்ணப்பாடல் முடிஞ்சு எல்லாரும் பந்தம் பிடித்துக்கொண்டிருக்கும் போதுதான். தேத்தண்ணி இருந்த இரத்தினன்ரை கிளாசிலை சாராயம் நிரம்பியிருக்கும். ஒரு சுருட்டை பற்றவைத்து விட்டு மேளத்தை தூக்குவான். அதுக்கு பிறகு சத்தத்தை வைச்சே இரத்தினன் அடிக்கத் தொங்கிட்டான் எண்டு எல்லாருக்கும் தெரியும்.
தாத்தா செத்த நேரம் அவரின்ரை ஆம்பிளை பிள்ளையள் எல்லாம் வெளிநாட்டிலை உடைனை வரமுடியாத நிலைமை அதலை அவன்தான் கொள்ளி வைக்கவேணும் தாத்தாவேறை தண்ணியடிச்சிட்டு டேய் நீ தானடா எனக்கு கொள்ளி வைக்கவேணும் எண்டு அடிக்கடி சொல்லுவார். கொள்ளி வைக்கிறதெண்டு முடிவாகிட்டுது அதுக்கு கட்டாயம் மொட்டையடிக்கவேணும். மொட்டையடிச்சால் பிறகு பள்ளிக்கூடத்திலை எல்லாரும் அவனை மொட்டைப் பாப்பா சட்டியுடைச்சான் மூண்டுபானை கூழ் குடிச்சான் எண்டு நக்கலடிப்பினம் அதாலை மொட்டையடிக்காமல் தலைமயிரை ஒட்ட வெட்டச்சொல்லி கேக்கலாமெண்டு தம்பிஜயாவை தேடிப்போனான். தம்பிஜயாவோ பின்வளவு பூவரசிலை தோல்வாரை கட்டிப்போட்டு சவரக்கத்தியை இழுத்துத் தீட்டிக்கொண்டிருந்தான்.

தம்பி ஜயா மொட்டையடிக்காமல் கொஞ்சம் ஒட்டவெட்டினால் காணும்தானே??

தம்பி இது சடங்கு சம்பிரதாயம் இதுகளை மீறக்கூடாது எண்டபடி அவன் தலையில் தண்ணியை தெளித்து வழிக்கத் தொடங்கினான். ஒருநாள் அவனின்ரை சலுனிலை பலவருசமாய் வைத்து தம்பிஜயா தேய்த்தக்கொண்டிருந்த சீனாக்காரத்தை எடுத்து கீழைபோட்டு உடைத்துவிட்டான் அதற்கு எப்பிடியும் பழிவாங்கியே தீருவான் என்பது அவனிற்கு தெரியும்.மொட்டையடித் முடித்தவன் தம்பின்ரை மண்டை வடிவான உருண்டை மண்டையெண்டு பழிவாங்கிவிட்ட திருப்தியில் சொல்லிச் சிரித்தான்.

எல்லாரது அழுகுரல்களோடையும் வேலியை வெட்டி பிணம் வீதியில் இறங்கியது வேட்டி கட்டியபடி மொட்டைத்தலை தோளில் கொள்ளிக்குடத்துடன் அவனும் ஊர் ஆண்களும் சுடலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். பட்டினத்தார் பாடலும் எவ்வொரு சந்தியிலும் இரத்தினனின் மேளச்சமாவுமாக சுடலைக்கு போய் சேர்ந்ததும் அடுக்கியிருந்த மரக்குற்றிகளில் பிணத்தை கிடத்தி பெட்டியை பிரித்தார்கள். அவனை பிணத்தை சுற்றி வலம்வரச்சொன்ன தம்பிஜயா கொடுவாக்கத்தியால் கொள்ளிக் குடத்தில் கொத்தி அதிலிருந்து வழிந்த நீரை பிணத்தை நோக்கி தட்டிவிட்டுக்கொண்டிருந்தான். தம்பிஜயா நல்லா தண்ணியடிச்சிருந்தான் வெறிவளத்திலை அவனின்ரை மொட்டந்தலைக்கும் கொள்ளிக்குடத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் கொடுவாக்கத்தியாலை பிடரியிலை கொத்திப்போடுவானோ எண்டும் பயமாக இருந்தது.கடைசியாய் தாத்தாவின் தலைமாட்டில் கொள்ளியை செருகியபோதுதான் அவனால் அடக்கமுடியாமல் அழுகை விம்மிவெடித்தது. அப்பிடியே திரும்பிப் பாக்காமல் வீட்டிற்கு போகச்சொன்னார்கள்.

எட்டுச்செலவு வரைக்கும் ஒவ்வொருநாளும் ஒப்பாரிபெண்டுகள் சொந்தக்காரரின் பட்டிணி பண்டம் எண்டு நாட்கள் போய் எட்டுச்செலவும் முடிந்து அடுத்நாள். டேய் செம்பிலை தண்ணியெடுத்து வாசல்லை வையடா எண்டு வழைமைபோல குசினிக்குள் இருந்து அம்மம்மா குரல் குடுத்தார். என்ன இது மனிசி பழக்கதோசத்திலை சொல்லுதோ எண்டு நினைக்க வாதாபியும் மெதுவாய் முனகியபடி வாலை ஆட்டியபடி நிலத்தில் கிடந்து புரண்டது.அவனிற்கு பயம் வரவே செம்பில் தண்ணியை எடுத்துவைத்துவிட்டு வீட்டிற்குள் ஓடினான். தாத்தாவின் படத்திற்கு முன்னாள் ஓலைப்பெட்டியை கவிழ்த்துப் போட்டுவிட்டு வாட்டிய பூவரசம் இலைகளை வட்டமாய் அடுக்கிக்கொண்டிருந்தார் அம்மம்மா....

ஆண்டவரே ஆறாவடுவை வாசித்து விட்டேன்

1:34 PM, Posted by sathiri, No Comment




சயந்தனின் ஆறாவடு கைகளில் கிடைத்ததும் முதலில் எனக்கு ஏமாற்றம் காரணம் புத்தகம் பெரியதாய் இருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன். அடுத்ததாக நான் அந்த புத்தகத்தினை பத்து மணிநேர இரயில் பயணம் ஒன்றில் படிக்கத்திட்டமிட்டிருந்தேன் புத்தகத்தை பார்த்தால் குறைந்தது ஒரு இரண்டு மணிநேரத்திற்குள் படித்து முடித்து விடலாம்போல் இருந்தது மிகுதி நேரம் என்ன செய்யலாமென்கின்ற கவலை..இரயில் ஏறி ஆறாவடுவை பிரித்தேன். சயந்தனின் சிறியதொரு உரையுடனும் சு.வில்வரத்தினத்தின் கவிதையோடும் ஆரம்பமாகின்றது. எம்மவர் பொதுவாக கவிதைத் தொகுப்போ அல்லது நாவலோ வெளியிடும்பொழுது யாராவது ஒரு பிரபலத்தின் முன்னுரையோடு ஆரம்பிப்பதே வழைமை.பத்து நாளில் எழுதி முடித்த புத்தகத்திற்கு பிரபலத்தின் முன்னுரைக்காக பலமாதங்கள் காத்திருந்த கதைகளையும் நான் அறிந்திருக்கின்றேன். அப்படி பிரபலமென்றின் முதுகு சொறிவோடு புத்தகத்தை ஆரம்பிக்காததையிட்டு சயந்தனிற்கு முதுகில் ஒரு தட்டு.

நாவல் ஒற்றைக்காலையிழந்த புலிகளின் முன்னை நாள் போராளியொருவன் இத்தலிக்கு கப்பலில் களவாக இடம் பெயர்கிறான் அவனிற்கு ஒரு காதலியும் இருக்கிறாள். நீர்கொழும்பு கடற்கரையில் தொடங்கும் கதை இலங்கையில் இந்தியப்படை காலத்து சம்பவங்களில் புகுந்து யாழ் இடப்பெயர்வில் விரிந்து ஓயாத அலைகளில் ஊடறுத்து சமாதான காலத்தின் சம்பவங்கை சுமந்து ஆழ்கடலில் சங்கமமாகி படித்தவர்கள் மனங்களிலும் மெல்லியதாய் கீறி ஆறாவடுவை ஏற்படுத்தி முடிந்து போகின்றது.

சயந்தனின் சிறுகதைகளை ஏற்கனவே வாசித்தவன் என்கிற முறையில் நான் எதிர்பார்த்த எள்ளல்களையும் ஆங்காங்கே தூவியிருக்கிறார். அதில் இந்தியப்படை காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரின் தமிழ் தேசிய இராணுவத்திற்காக வலுக்கட்டாயமாக இளைஞர்களை பிடித்து பயிற்சி கொடுக்கிறார்கள் அப்படி பிடிபட்ட ஒருவன் பயிற்சி முகாமில் பொறுப்பாளரிடம் அண்ணை எங்கடை தலைவர் யார் என கேட்கிறார் அதுக்கு அவர் இது தெரியாதா வரதராஜப்பெருமாள்தான் என்கிறார். அதற்கு அவனும் அப்பாவித்தனமாய் பொன்னாலை கோயிலில் குடிகொண்டிருக்கும் வரதராஜப்பெருமாள் என நினைத்து பெருமாளே இந்தச் சனியனிகளிட்டை இருந்து தப்பிவந்தால் இந்த வருசம் உனக்கு காவடி எடுக்கிறன் என்று நேர்த்தி வைப்பான்.
அடுத்ததாய் கதையின் நாயகன் முதல் தடைவை வெளிநாட்டிற்கு களவாக புறப்பட்டு பிடிபட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படுகிறார். அவரை இலங்கை விமான நிலையத்தில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்கிறார்கள் அப்பொழுது உனக்கு நியூட்டனை தெரியுமா என கேட்டபொழுது அவனும் ஜந்தாம் வகுப்பு விஞ்ஞான ரீச்சரும் இதே கேள்வியை தானே கேட்டவர் என்கிற வரியை படித்தபொழுது இரயில் என்னை மறந்து சத்தமாய் சிரித்துவிட்டேன். இப்படி பல எள்ளல்களை அள்ளி விட்டிருக்கிறார்.

இனி அவரின் கதா பாத்திரங்கள் என்று பார்த்தால் குண்டுப்பாப்பா பருத்த மார்புகளையுடைய நிலாமதி இவர் போராளிகளின் கைக்குண்டினை மார்புக்குள் ஒழித்து வைத்திருந்தது ஏற்புடையதல்ல என்று நண்பர் நந்தா தன்னுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார். கைக்குண்டு என்றால் அந்தக்காலத்து ரி.என்.ரி அல்லது பென்ரலைற் குண்டுகளை மனதில் வைத்து அவர் எழுதியிருக்கலாம். ஆனால் சிறிய ரக கைக்குண்டுகள் M 26..57..61 MARK 3 a2 M 33 M 63 என்பன வெறும் 400 கிறாம் எடையுள்ள சிறிய சுற்றளவை கொண்ட கைக்குண்டுகள். இவற்றை மார்பு கச்சையினுள் கீழ்ப்புறமாக மறைக்கலாம் என்றே எண்ணுகிறேன். அது அருமையான படைப்பு..மகளின் மாதவிடாய் காலத்தில் வேறு வழிகளின்றி கோயிலில் அம்மனின் பட்டுத்துணியை களவெடுத்து பாவிக்கும் சுபத்திரை .நேரு ஜயா .கப்பலில் முதலில் இறந்து போகும் சின்னப் பெடியன் பெரிய ஜயா ஆகியோர் மனதை அழுத்தி செல்கின்றார்கள். இவை நாவலின் நிறைப்பக்கங்கள் என்றால் குறை பக்கங்கள் தேவி என்கிற மனப்பிறழ்வு பெண்பத்திரம் இந்திய இராணுவத்தால் வன்புனர்பு செய்யப்பட்டு கர்பப்பம் அடைகிறாள் அவளை சுட்டுக் கொலை செய்தவர்கள் யார் என்பதை சொல்வதில் ஒரு தளம்பல்..

அமுதன் எப்படி இயக்கத்தை விட்டு வெளியேறினான்என்பதில் தெளிவின்மை
அதே நேரம் ஈழத் தமிழரல்லாத தமிழர்களும் இருபது வருடங்களிற்கு முன்னரேயே புலம் பெயர்ந்து விட்டவர்களிற்கு இந்தியப்படை காலம் இடப்பெயர்வு என்பன என்பது பற்றி வெறும் செய்திகளியே அறிந்திருப்பார்கள். அவர்களிற்கு அவை பற்றி மேலதிக விளக்க குறிப்பக்களை கொடுத்திருக்கலாம். உதாரணத்திற்கு நியூட்டன் என்றால் புலிகளின் முக்கியமான புலனாய்வு போராளி என்பது எத்தனை பேரிற்கு தெரிந்திருக்கும் . அதனால் அவர்களும் சிரிக்கமுடியாமல் போயிருக்கலாம். அதே நேரம் சில விடையங்களை வேகமாக நகர்த்தியிருக்கிறார். இயக்கம் வெளியேறியது .சனங்கள் திரும்பவும் யாழ்ப்பாணம் போனார்கள். இராமலிங்கத்தை இயக்கம் சுட்டது.செம்மணியில் கிருசாந்தியின் சைக்கிளை இராணுவம் மறித்தது. என்பன.செய்தித் தலைப்புக்களை படிப்பது பேல இருக்கின்றது ஆயினும் அமுதன் என்கிற முன்னைநாள் விடுதலைப் புலிப் போராளியின் செயற்கை காலினை எரித்திய முன்னை நாள் போராளியான இத்திரிசிசிற்கு கிடைக்கச்செய்து கதையை முடித்த அந்த சிந்தனைக் கோர்வைக்கு ஒரு கைதட்டு