Navigation


RSS : Articles / Comments


ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது.

1:55 PM, Posted by sathiri, No Comment


ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது மனித உரிமைகள் நாளான நேற்று முன்நாள் புதன்கிழமை சிறிலங்காவில் தமிழரின் பேரவலம் குறித்த விண்ணப்பம் டென்மார்க் தமிழ் மக்களின் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.

டென்மார்கின் சமூக லிபறல் கட்சியின் பிரமுகர் த. தர்மகுலசிங்கம் மற்றும் டென்மார்க்கின் லுங்பி பங்குத்தந்தை அல்றின் சூசைப்பிள்ளை ஆகியோர் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறகம் வற்சனை புரூசல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து இந்த விண்ணப்பத்தை கையளித்தனர்.

கிறகம் வற்சன் பிரித்தானியாவின் மேற்கு லண்டன் லிபறல் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய லிபறல் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுத்தலைவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

வன்னி மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்குட்படுத்தப்ப�
�்டு காடுகளில் மரங்களின் கீழ் ஒதுங்கி உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஏதுமின்றி விடப்பட்டுள்ளனர்.

கடந்த 3 ஆம் நாள் ஒஸ்லோவில் 102 நாடுகள் இணைந்து கிளஸ்ரர் குண்டு பாவனையை தடைசெய்யும் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டன.

சிறிலங்கா வான்படையினர் ரஷ்ய தயாரிப்பான OFAB 500 ரக கொத்தணிக் குண்டுகளை அப்பாவித் தமிழ் மக்கள் மீது பிரயோகித்துள்ளனர்.

உணவு மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின்றி தவிக்க விட்டது மட்டுமன்றி இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிய அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களையும் வன்னியிலிருந்து வெளியேற்றியுள்ளது.

இந்நிறுவனங்களை வன்னியில் மீண்டும் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

வன்னியில் நடைபெறுவது சிறிலங்கா அரசு காட்டிக்கொள்வது போல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அல்ல. அது இன அடக்குமுறைக்கான போர்.

அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கருதி சிறிலங்கா அரசுக்கு ஆதரவு வழங்குகின்றன.

இந்தியா, பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளும் சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை வழங்குகின்றன..

தற்போது நிகழும் போர் சிறிலங்காவின் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.

உடலியல் ரீதியிலும் மனவியல் ரீதியிலும் அப்பாவித் தமிழ் மக்களின் வாழ்க்கை துயரமாகியுள்ளது.

டிசம்பர் 2008 முதல் வாரத்தில் சிறிலங்கா குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவு, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களை வெளிநாடுகளில் சுயநிர்ணய உரிமை பற்றி ஆதரவாகப் பேசியதற்காக விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் டென்மார்க் தழிழராகிய நாங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் கோரப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை சிறிலங்கா அரசு தொடர்வதற்கு உங்கள் அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையில் உடனடியானதும் நிரந்தரமானதுமான சமாதானத்தைக் கோருகின்றோம்.

இந்த சமாதானத்தை அடைவதற்காக தழிழீழ விடுதலைப் புலிகளை தமிழரின் பிரதிநிதிகள் என்றே ஏற்றுக்கொண்டுள்ளோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்திலெடுத்து தொலைநோக்குடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகிறது.

எனவே எதுவித தீர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளை உள்ளடக்கியதாகவே இருக்கவேண்டும். சமாதானத்தை அடைவதற்கான ஒரே வழி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதே என உறுதியுடன் நம்புகின்றோம்.

மேலும் சமாதானம் தொடர்ந்தும் நிலவ கடந்த கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

உங்கள் மூலம் சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் விரைந்து போர் நிறுத்தம் ஏற்படவேண்டும்.

தேவையேற்படின் நாமும் சமாதானப் பேச்சுவார்த்தையில் துணை புரிவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்துப் பெண்கள் அட்டை பிகருகள்

1:53 PM, Posted by sathiri, 27 Comments

டோண்டுவிற்கான பெயரிலியின் அனாகரீகம் நளினமானது என்கிற பதிவில் முரளி என்பவர் எழுதியிருப்பது முரளி கருத்து:

அதுஎன்னவோ தெரியவில்லை இலங்கை தமிழர்களில் சிலர் என்னேரமும் கற்பழிப்பு கற்பழித்தார்கள் என்று உளறி கொட்டிகொண்டே இருக்கின்றனர்.

ஈழத்தில் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகு தேவைதைகள் எங்கும் கொட்டி கிடக்கிறார்கள் போலும். தனுவை ஒருவன் கற்பழித்தான் என்று உணர்ந்த போது அடப்பாவமே அவளை கற்பழித்தவனுக்கு இந்தளவு உணர்ச்சியோ என்ற குழப்பம் கூட.அட்டு புகர்களை கூட கற்பழிக்க சில காரணங்களே இருக்க வேண்டும்.
அட்டு புகர்கள் தன்னை எவனாவது புணரமாட்டானா என்ற ஏக்கம் அல்லது அங்கு இருக்கும் ஆண்கள் பேச மட்டும் தான் என்று கூட சொல்லாம்.

முரளி என்பவரிற்கு சொல்லிக்கொள்ள விரும்புவது ஜயா (சார்) எங்களது ஈழத்து பெண்கள் அட்டை பிகருகள்தான். அவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும். முழு ஒப்பனை செய்த முககங்களோ. பருத்து நிமிர்ந்த மார்புகளோ. துருத்தி நிற்கும் பிட்டங்களோ. வளு வளு கால்களோ . இடையில் இருந்து மேலெழும் அளவுகளான இருபத்தியாறு . முற்பத்தியிரண்டு .இருபது என்கிற அளவுகளோ இல்லைத்தான். முப்பதாண்டுகள் திணித்து விடப்பட்ட யுத்தம் இலங்கை சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டு கால வரலாற்றில் அய்ம்பது ஆண்டுகள் அவசரகாலச்சட்டத்திலேயே ஆட்சி நடத்திவிட்டதன் பெருமை பொருளாதாரத்தடை என்பதால். துருத்தி நிற்கும் பற்கள்.வற்றிப்போன மார்புகள். வாடிப்போன முகம். ஒல்லியான கால்கள்.ஒட்டிய வயிறு . காலிலிருந்து கழுத்துவரை ஒரே அளவுகள்தான். ஆனாலும் அதிலிருந்த ஒரு வாசலையெ விட்டு வைக்காத இந்திய இராணும். நீங்கள் சொன்னது போல ஜஸ்வர்யா ராயாய் இருந்திருந்தால் ஒரு பெண்ணின் மிகுதி ஓன்பது வாசல்களையும் விட்டு வைத்திருப்பார்களா?? அவர்கள் மீதம் விட்டிருந்த மிகுதி வாசல்களையும் நீங்கள் உங்கள் எழுத்தால் நிரப்பியுள்ளீர்கள். நன்றிகளும் வாழ்த்துக்களும்.

சுய இன்ப டோண்டுவிற்கும் கையை இழுத்த பெயரிலிக்கும்.

2:38 PM, Posted by sathiri, 6 Comments

சுய இன்ப டோண்டுவிற்கும் கையை இழுத்த பெயரிலிக்கும்.

தொடர்ந்து ஈழத்தமிழர்களிற்கு எதிரான விடயங்களை தேடியெடுத்தும் சொந்தமாகவும் அனுபவித்து எழுதி சுய இன்பம் அடைந்து கொண்டிருந்து டோண்டுவின் கையை அதியுச்ச நிலையின்போது இழுத்து விட்டபெயரிலிக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக்கொண்டு நான் எழுதுவது என்னவெனில்... ஈழத்தமிழனின் உண்மையான வலிகளை யூரியுப்பில் பார்த்துவிட்டு ஒரு குத்துப்பாட்டும்(குத்துசாங்) ஒரு சண்டை(பைட்டும் ) வைத்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்.என்று சினிமா விமர்சனம் எழுதுபவர்களிடம் நாங்கள் தமிழன் என்கிற உணர்வினை எதிர்பார்ப்பது தறிகெட்டத்தனம்.எனவே எழுதி விட்டுப்போகட்டும்.

வாமலோசன் விடுவிக்கப்பட்டார்.

1:09 AM, Posted by sathiri, 12 Comments

அறிவிப்பாளர் வாமலோசன் விடுவிக்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட வெற்றி எம் எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வி வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலைதாரி ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இவருடைய கையடக்க தொலைபேசி இலக்கம் இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் மலேசியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று நண்பகல் அவர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe

பயோடேற்ரா (கருணா)

1:26 AM, Posted by sathiri, One Comment


மதிக்கப்பட்ட பெயர். கருணா அம்மான்
மதிப்பிழந்த பெயர். முரளிதரன்
தொழில். .நக்குவது
உபதொழில்.காட்டிக்கொடுப்பு. கடத்தல்.கப்பம்
பொழுது போக்கு.துரோகம் செய்வது
சாதனை. கிழக்கு மாகாண தமிழ்மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் உணர்வுகளையும் சிங்களத்திடம் அடகுவைத்தது.
சோதனை.பிள்ளையான்.
வேதனை.இங்கிலாந்தின் சிறைவாசம்.
நண்பர்கள். அண்மைக்காலமாக தேவானந்தா.
எதிரிகள்.தன்மானமுள்ள உலகத்தமிழர்கள் அனைவரும்.
இலட்சியம். எதுவுமே கிடையாது
பிடித்த பாடல். எங்கே செல்லும் இந்தப் பாததை யார்தான் யார்தான் அறிவாரோ(படம்.சேது)
மறந்தது. தமிழீழம்
நினைப்பது.மகிந்தா. கோத்தபாய.

புலம்பல்.அரசனை நம்பி புருசனை கைவிட்டதெண்ட பழமொழி எனக்குத்தான் பொருந்தும்.அரசாங்கத்தை நம்பி பெண்டாட்டி பிள்ளையளையும் கைவிட்டிட்டன்.இப்ப கோட்சூட்டை வேறை மாட்டி பார்லிமென்ருக்குள்ளை தள்ளிவிட்டிட்டாங்கள்.அறிக்கை வேறை விடவேண்டிக்கிடக்கு ஜயோ..ஜயோ..

இந்தியாவே இது தேவையா????

2:24 PM, Posted by sathiri, No Comment

இலங்கையின் போரை நிறுத்தவே முடியாது- ஆனால் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பேன் என்று இந்தியத் தலைநகர் புதுடில்லியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புதுடில்லி சென்றுள்ள மகிந்த ராஜபக்ச இன்று அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் போரை நிறுத்த முடியும்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் என் நாட்டு குடிமக்கள். அவர்களைப் பாதுகாப்பது எனது பணி என்பதை இந்தியப் பிரதமருக்கும் உலக நாடுகளுக்கும் தெரிவிக்கிறேன்.

இந்தியாவில் பயிற்சி பெற்ற 1,200 தமிழர்களை (துணை இராணுவக் குழுவினரை) சிறிலங்கா படையில் இணைத்துக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

2008 ஆண்டின் சிறந்த நகைச்சுவை

6:35 AM, Posted by sathiri, No Comment




இலங்கை
அமைதி ஒப்பந்தத்தி்ற்குப் பின்னர் தனது சொந்த குண்டு துளைக்காத உடையை, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு வழங்கினார் ராஜீவ் காந்தி. ஆனால் அவரையே குண்டு வைத்துக் கொன்றனர் புலிகள் என்று சட்டசபையில் காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எப்பிடித்தான் யோசிப்பாங்களோ?? யாராவது ஒரு விருதிற்கு அல்லது ஒரு பொன்னாடைக்காவது ஏற்பாடு பண்ணுங்கப்பா.

சிறீலங்கா வான் படை

10:33 AM, Posted by sathiri, No Comment

சிறீலங்கா வான் படையினர் இன்று பரந்தன் பகுதியில் நடத்திய கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட ஐந்து பொது மக்கள் படுகாயமடைந்துள்ளனர். மதியம் 12.50 மணியளவில் இரண்டு குமாரபுரம் பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் சிறீலங்கா வான் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த திருமதி மனோகரன் என்பவரின் 31ம் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே, விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதே நேரம் தாங்கள் கடற்புலிகளின் முக்கிய தளத்திற்கே குண்டு வீசியதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையரசு சொன்ன காயமடைந்த கடற்புலிகளின் படங்கள் இணைத்துள்ளேன். படங்கள் நன்றி செய்தி கொம்.



பிரான்சில் மாவீரர்நாள் விபரம்

3:24 PM, Posted by sathiri, No Comment

யாழ்ப்பாண பத்திரிகைகளின் இன்றைய பரிதாப நிலை

2:31 AM, Posted by sathiri, One Comment

யாழ்ப்பாணத்து மக்களினதும் யாழின் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் நிலைமையை பதிவு செய்த யாத்ரா பதிவாளரிற்கு நன்றிகள்










நன்றி யாத்ரா

உடன் பிறப்புக்களே

12:30 PM, Posted by sathiri, No Comment



உடன் பிறப்புக்களே என்
முயலாமை நான்கெழுத்து
தள்ளாமை நான்கெழுத்து
இயலாமை நான்கெழுத்து
ஈழத்தமிழா
மரணம் நான்கெழுத்து
அதுதான் உனது
தலையெழுத்து

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பல்கலைக்கழகமொன்று டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க உள்ளது. பெனரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தினால் ஜனாதிபதி மஹிந்த

1:37 PM, Posted by sathiri, No Comment

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்திய பல்கலைக்கழகமொன்று டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க உள்ளது.
பெனரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தினால் ஜனாதிபதி மஹிந்த கௌரவிக்கப்படவுள்ளார்.எதிர்வரும் விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி கௌரவிக்கப்படவுள்ளார். கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பில் இந்திய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=735:2008-10-26-04-03-08&catid=36:2008-09-21-04-33-30&Itemid=103

இந்திய குடியரசுத் தலைவி பிரதீபா பாட்டீல் இந்த கௌரவ விருதினை இலங்கை ஜனாதிபதிக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிழலாடும் நினைவுகள்

10:42 AM, Posted by sathiri, One Comment

நிழலாடும் நினைவுகள்

கப்ரன் கோணேஸ் (R.P.G.கோணேஸ்)

16.05.87.அன்று பிறபகல் ஒரு இரண்டுமணியளவில் வல்லைவெளியில் வடமராட்சியிவிருந்து ஒரு வாகனம் அச்சுவேலி நோக்கி வந்து கொண்டிருந்தது.அந்த வாகனம் வல்லை பாலத்தை அணமித்துகொண்டிருந்த பொழுது அப்போ பலாலி படைத்தளம்நோக்கி போய் கொண்டிருந்த உலங்கு வானுர்தியொன்று அந்த வாகனத்தை கவனித்தவிட்டு அதன் மீது தாக்குதலை தொடுக்கவும்.

அச்சு வேலியில் வல்லைவெளியின் முடிவில் இருந்த தெனங்காணி ஒன்றினுள் இருந்த காவலரணில் காவல் கடைமையில் இருந்த இரண்டு போராளிகள் அந்த உலங்குவானுர்தி மீது தாக்குதலை தொடுக்க உலங்கு வானுர்தி திரும்பி பலாலி படைத்தளத்துனுள் சென்று மறைந்து கொள்கிறது. உலங்கு வானுர்தி நடாத்திய தாக்குதலில் வாகனத்தில் வந்த ஒருவர் காயமடைந்திருந்தார் அவரிற்கு முதலுதவி வழங்கி அவரை அந்த வாகனத்திலேயே வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவர்கள் தங்கள் காவலரணினுள் மீண்டும் போகவும் பலாலியில் இருந்து ஒரு கடல் விமானம் மேலெழுந்து வட்டமடிக்க தொடங்க (இந்த விமானம் தான் 80 களின் இறுதியிக் காலங்களில் இலங்கை இராணுவம் உளவு பார்க்க பயன்படுத்தியது)இரண்டு உலங்கு வானுர்திகள் மேலெழுந்து போராளிகள் இருந்த அந்த காவலரணை தாக்கதொடங்கின.

உடனடியாக அந்த போராளிகளிற்கு உதவ அச்சுவேலி வசாவிளான் வீதியில் ஒட்டகப்புலத்தில் அமைந்திருந்த புலிகளின் முகாமில் இருந்து சில போராளிகள் ஒரு வாகனத்தில் விரைகின்றனர்.அவர்கள் அச்சுவேலி நோக்கி போய்கொண்டிருந்த வாகனம் பட்டுபூச்சி பண்ணையை கடக்கும் போது மூண்றாவதாக ஒரு உலங்கு வானூர்தி அந்த வாகனத்தை கலைத்து தாக்குதல் நடாத்ததொடங்கியது.தோப்பு சந்தியை வாகனம் அண்மித்ததும் உலங்கு வானுர்திஏவிய ஒரு குண்டென்று வாகனத்தின் அருகில் வீழ்ந்து வெடிக்கவும் நிலை தடுமாறிய வாகனம் அங்கிருந்த சிறிய மதகில் மோதிநின்றது.

வாகனத்தினுள் இருந்த கோணேசிற்கும் இன்னொரு போராளிக்கும் வாகன கண்ணாடிகள் உடைந்ததில் காயங்கள் ஏற்படவே வாகனத்தை மீண்டும் இயக்கிய போராளிகள் அச்சுவேலி சந்தியில் அமைந்திருந்த ஒரு தனியார் வைத்திய சாலையில் கோணெசையும் மற்ற போராளியையும் இறக்கிவிட்டு வல்லை சந்தியை அடைந்து அங்கு உலங்கு வானுர்திகள் மீது தாக்குதலை தொடுக்கவும் சில நிமிட நேர சண்டையின் பின்னர் உலங்கு வானூர்தியும் கடல் விமானமும் பலாலி தளத்தினுள் சென்று மறைய அந்த சண்டை முடிவுக்கு வருகிறது. வைத்திய சாலையில் கோணேஸ் காயமடைந்து அனுமதிக்கபட்ட செய்தி கெள்விப்படதும் அவள் அழுதபடி பதறியடித்து கொண்டு ஓடோடி வந்தாள் என்ன நடந்தது பெரிய காயமா ஆழுக்கு ஒண்டும் இல்லையா என்று அங்கு நின்ற தாதியை கேள்விகளால் துளைத்தவளை.

ஒண்டும் இல்லை சின்னகாயங்கள்தான் வான் அடிபட்டடு கண்ணாடி உடைஞ்சதாலை கன்னத்திலையும் நெஞ்சிலையும் கண்ணாடியள் குத்தி போட்டுது காலும் அடிபட்டிருக்கு அவ்வளவுதான் இப்ப டொக்ரர் உள்ளை பாத்தகொண்டு நிக்கிறார் அவசரபடாதை என்று அவளிற்கு ஆறுதல் சொன்ன அந்த தாதியின் தோள்களில் சாய்ந்தபடி குழந்தையை போல விம்மியழ தொடங்கி விட்டாள். அவள்யார்?? அவள் ஏன் அழுகிறாள்?? அவளிற்கும் கோணேசிற்கும் என்ன சம்பந்தம்??? பார்ப்போம். கோணெசின் கிராமமான அச்சுவேலிதான் அவளின் சொந்த கிராமமும் எனவே கோணேசை அவளிற்கு பல வருடங்களாக படிக்கும் காலங்களில் இருந்தே தெரியும் அந்த வைத்தியசாலையில் அவளும் ஒரு தாதியாக வேலை செய்கிறாள்.

அவள் கொணேசை பலவருடங்களாக காதலிக்கிறாள். கோணேஸ் புலிகள் இயக்கத்தில் இணைந்து பயிற்சிகள் முடித்து விட்டு வேறு இடங்களில் அவனது பணிகளை முடித்துவிட்டு அவனது சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்தபோதுதான் அவள் கோணேசிடம் தனது காதலை தெரிவித்திருந்தாள்.கோணேஸ் தனது நிலையை விளக்கி அவளது காதலை மறுத்து அவளிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான். ஆனாலும் அவள் விடுவதாய் இல்லை அவனை சுத்தி சுத்தியே வந்தாள் இதுதான் இவளிற்கும் கோணேசிற்கும் உள்ள தொடர்பு. கோணேஸ் அந்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து வைத்தியரிடம் விசேட அனுமதி பெற்று தனது பொறுப்பின்கீழ் இரவு பகலாய் கோணேசை கவனித்துவந்தாள்.

மறுநாள் கொணேசை பார்க்க ஒரு போராளி சென்றபொழுது அவள் கோணேசின் காயங்களை சுத்தம் செய்து மருந்து கட்டிகொண்டிருந்தாள். சென்ற போராளி கோணேசை நலம் விசாரித்துவிட்டு அவனிற்கு தேவையானவற்றை விசாரித்து கொண்டே அருகிலிருந்த மேசையை பார்த்தான். ஒரு சாப்பாட்டுபெட்டி இருந்ததை கவனித்தவன் கோணேசை பார்த்து அட நான் சாப்பாடு வாங்கி தரத்தான் வந்தனான் பிறகென்ன உனக்கு யாரோ கொண்டந்து தந்திட்டினம் என்றவும். அவள் கோபமாக யாரோ இல்லை நான் தான் கொண்டுவந்தனான் ஆனால் உங்கடை சினேதனுக்கு பசி இல்லையாம் நான் குடுத்தா சாப்பிட மாட்டாராம் என்றவும் அந்த போராளி ஓ பசி இல்லையாமே சரி என்ன சாப்பாடு எனறவாறு சாப்பாட்டு பெட்டியை திறந்து பாத்த்தவன்.

ம்.......புட்டும் முட்டை கத்தரிக்காய் எலாம் பொரிச்சு போட்டிருக்குவாசம் அந்தமாதிரியிருக்கு சரி உனக்கு வேண்டாம் எண்டா ஏன் வீணா கொட்டுவான் நானே சாப்பிடறன் எண்றவாறுஅந்த போராளி அதை சாப்பிட தொடங்கவும் மருந்து கட்டி முடிந்ததும் அவள் கோபமாக கவனம் சாப்பாட்டு பெட்டியையும் சேத்து விழுங்கிடாமல் அதை கழுவிதந்திட்டு போங்கோ என்றவாறு அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.அவள் போனதும் கட்டிலில் இருந்த போராளியை எட்டிஉதைந்த கோணேஸ் நான் பசிகொதியிலை இருக்கிறன் நீ ரசிச்சு சாப்பிடுறியா? கெதியா போய் சாப்பாடு கட்டிகொண்டுவா என்று என்று சொல்லவும் சிரித்தவாறே உனக்கு குடுத்துவைச்சது அவ்வளவும்தான் சரி நான் போய் சாப்பாடு கட்டிகொண்டு வாறன் எனறவாறே

அந்த போராளி வெளியே சென்று சாப்பாடு எடுத்து கொண்டு திரும்பி வருகையில் வழிமறித்த அவள் என்ன சாப்பாடு கட்டிகொண்டு பொறிங்கள் போலை நாங்கள் ஆசையா செய்து குடுத்தா அவரக்கு பிடிக்காது கடையிலை சாப்பிடட்டும் அப்பதான் கொழுப்பு குறையும் எனறபடி கையில் வைத்திருந்த ஒரு பையை அவனிடம் கொடுத்து. அண்டைக்கு அவர் காயப்படேக்கை அவர் போட்டிருந்த சேட்டு கிழிஞ்சுபோச்சுது ஒரே ரத்தமும் அதை எறிஞ்சாச்சு அதாலை அவர் அவர் நெடுக விரும்பி போடுற சிவப்பிலை செக்(கட்டம்) போட்ட சேட் ஒண்டு வாங்கினனான் நான் குடுத்தா வாங்க மாட்டார் அதாலை நீங்களே இதை அவரிட்டை குடுத்து விடுங்கோ என்று அவனிடம் நீட்டினாள்.

சிறிது யோசித்த அந்த போராளி சரி தாங்கோ குடுக்கிறன் எனறவாறு வாங்கி கொண்டு போனவன். கோணேசிடம் சாப்பாட்டை கொடுத்துவிட்டு டேய் இந்தா உனக்கொரு சேட்டும் வாங்கினனான் போட்டுபார் என்று அந்த சேட்டை நீட்டினான்.அவனை நிமிர்ந்து பார்த்த கோணேஸ் நீ எனக்கு இப்ப சேட்டுவாங்கினனி இதை என்னை நம்பசொல்லுறாய்?? எனக்கு தெரியும் யார் வாங்கி தந்திரு்பினம் எண்டு பேசாமல் அவையிட்டையே அதை கொண்டு போய் குடுத்திட்டு காம்பிலை என்ரை உடுப்பு பையிலை ஒரு சேட்டும் சாரமும் எடுத்துகொண்டுவாஎன்று அந்த போராளி அனுப்பிவைத்தான்.அந்த போராளியும் திரும்ப அவளிடமே அந்த சேட்டை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

நான்கு நாட்கள் கழித்து 20.05.87 அன்று வழைமை போல விடிந்த காலை 7.மணியளவில் இலக்கம்3 என்று அடைமெழியில் அழைக்கப்படும் ஒட்கப்புலம் புலிகளின் முகாமின் நடைபேசியில்(வோக்கி ரோக்கி) பலாலி தொண்டைமானாறு வீதியில் வழளாய் என்கிற கிராமத்தின் காவல் கடைமையில் இருந்த ஒரு போராளியின் அழைப்பு

நம்பர்3..... நம்பர் 3... குட்டி......... ஓவர்.........

குட்டி.... குட்டி .......நம்பர் 3....சொல்லுங்கோ ஓவர்.......

தொண்டைமானாறிலை இருந்து வந்த ஆமி குறூப் ஒண்டு ஒரு அம்பது பேரளவிலை றோட்டை விட்டு கீழை இறங்கிது என்ன செய்ய ஒவர்.......

வடிவா பாருங்கோ திரும்பி றோட்டிலை ஏறி பலாலி பக்கம் போனால் பேசாமல் விடுங்கோ கூடுதலா உள்ளை இறங்கினா உதவிக்கு மற்ற சென்றிலை உள்ளவையையும் எடுத்து அடியுங்கோ நாங்கள் உடைனை வாறம் உடைனைக்குடைனை தொடர்பிலை இருங்கோ ஓவர்.....

என்று வோக்கியில் முகாமிலிருந்த போராளி கதைத்துகொண்டே மற்றைய போராளிகளிற்கு அறிவித்தல் கொடத்ததும் சில வினாடிகளிலேயெ அனைத்து போராளிகளும் ஆயுதங்களுடன் ஒரு யுத்தத்திற்கு தயாராய் வாகனங்களில் பாய்ந்து ஏறவும் வாகனங்கள் வளளாய் பகுதிக்கு செல்வதற்காக அச்சுவேலி சந்தியை நோக்கி விரைந்தன.அவர்கள் புறப்பட்டதுமே வழளாய் பக்கமிருந்து துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டன. இராணுவம் குடியிருப்பு பகுதிகள் நோக்கி முன்னேற தொடங்கியதால் அங்கு காவல் கடைமையில் நின்ற போராளிகள் தாக்குதலை தொடங்கிவிட்டிருந்தனர்.

போராளிகளின் வாகனங்கள் அச்சுவேலி சந்தியை அண்மித்து கொண்டிருக்கவும் எதிரே வந்த ஒருவரின் சைக்கிளில் கொணேஸ் தனது முகாம் நோக்கி வந்துகொண்டிருந்தான்.கோணேச
கண்ட போராளிகள் வாகனத்தை நிறுத்தவும் ஒரு போராளி கோணேசை பார்த்து எங்கை போறாய் உன்னை யார் ஆஸ்பத்திரியை விட்டு வர சொன்னது என்று கடிந்து கொள்ளவும். அவன் போராளிகளிடம் துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது அதுதான் தான் வெளிக்கிட்டு வந்தனான் என்றவன் விபரம் அறிந்து கொண்டதும் தானும் வருவதாக அடம் பிடித்து வாகனத்தில் ஏறிக்கொண்டான்.

வாகனங்கள் வளளாய்கிராமத்தில் நுளைந்து கொண்டிருக்கும் போதே இராணுவம் உள்நுளைந்து விட்டதை உணர்ந்த மக்கள்அங்கிருந்து வெளியெறிகொண்டிருந்தனர். பொதமக்களை பாதுகாப்பாக அச்சு வேலி சந்தியை தாண்டி போகும்படியும் தாங்கள் அறிவிக்கும் வரை யாரும் திரும்ப வரவேண்டாம் என அறிவுறித்தியபடி போராளிகள் மறைவாக தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு வளளாய் தோட்டவெளிகளை நோக்கி முன்னேறுகின்றனர்.

தாங்கள் ஒரு பொறிக்குள் அகப்பட்டு விட்டோம் என்று உணர்ந்த இராணுவத்தினர் பலாலியில் இருந்தும் தொண்டை மானாற்றில் இருந்தும் மேலதிக உதவிகள் கிடைக்கும் வரை தோட்டங்களில் புகுந்து நன்றாக உருமறைப்பு செய்து கொண்டு பதுங்கிவிட்டிரந்தனர். அங்கு வந்த பொராளிகளிற்கு இராணுவம் எங்கு மறைந்திருக்கின்றது என்று கண்டு பிடிப்பது சிரமமாகவும் இருந்த அதேவேளை அந்த இடம் ஒரு சிக்கலான பகுதி காரணம் அனைத்து வளங்களையும் கொண்ட பலாலித்தளம் ஒரு பக்கமாகவும் தொண்டைமானாறு முகாமை மறுபக்கமாகவும் கடற்கரையையும் கொண்ட ஒரு பகுதி எனவே இராணுவத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளும் சுலபமாக கிடைக்கும் எனவே குறைந்தளவு நேரத்தில் எதிரிக்கு கூடதலான இழப்பை ஏற்படுத்தி அந்த இடத்தை விட்டு அகற்றாவிட்டால் நேரம் செல்ல செல்ல கள நிலை பாதகமாக அமையும்

எனவே போராளிகள் விரைந்து தோட்டங்களினுடாக பதுங்கியவாறு முன்னேறிகொண்டிருக்கவும் ஒரு இராணுவத்தினனின் துப்பாக்கி சட சடத்தது துப்பாக்கி குண்டொன்று ஒரு போராளியின் நெற்றியை உரசிசெல்ல சிறிய காயத்தடன் அந்த போராளி அவ்விடத்திலிரந்து அகற்றபட்டு சண்டை தொடங்கியது. எதிர் பார்த்ததை போலவே பலாலிமகாமிலிருந்து நான்கு உலங்குவானுர்திகளும் மூன்று குண்டு வீச்சு விமானங்களும் உதவிக்கு வர பலாலியில் இருந்தும் தொண்டைமானாற்றில் இருந்தும் அச்சு வேலி சந்தியை இலக்கு வைத்து எறிகணை களும் சீறி வர தொடங்கின.அதே போல பலாலி முகாமிலிருந்து மேலதிகமாக சுமார் இருநுறுபடையினரளவில் சுற்றிவழைப்பில் சிக்குபட்ட படையினரை மீட்க முன்னேற தொடங்கிருந்தனர். அவர்களை எதிர்த்து மறிப்பு சண்டையையும் போராளிகள் தொடுத்திருந்தனர்.

நேரம் செல்ல செல்ல சண்டை உக்கிரமடைந்தது நேரம் மதியத்தை தாண்டியும் இராணுவத்தினரால் தங்கள் இரண்டு பெரிய இராணுவ முகாம்களிற்கு சில கிலோமீற்றர்கள் தொலைவிலேயே சிக்குப்பட்டுள்ள தங்கள் சகஇராணுவத்தை மீட்கமுடியாத நிலையில் தொண்டைமானாற்றில் இருந்தும் மேலதிகமா இருனூறு பேரளவில் அச்சுவேலி சந்தியை நோக்கி முன்னேற தொடங்கினர். இதேவேளை உலங்கு வானுர்திகள் மற்றும் எறிகணைகள் அச்சுவேலி பிரதான வீதிகளை நோக்கி தாக்குதலை தொடுத்து போராளிகளிற்கு மேலதிக வழங்கல்கள் உதவிகள் வருவதை தடைசெய்த கொண்டிருந்தன.

அதேநேரம் போராளிகளிடம் இருந்த ஒரேயொரு விமான எதிர்ப்பு துப்பாக்கியான 50 கலிபரும் விமானதாக்குதலிற்கு உள்ளாகி அதனை இயக்கிய போராளிகளும் காயங்களிற்குள்ளாகி யுத்தகளத்திலிருந்து அப்புறபடத்தபடவும் தொண்டைமானாற்றிலிருந்து மேலதிக இராணுவத்தினரின் முன்னேற்றம் என்பன இராணுவத்தை முற்கைக்குள் வைத்திருந்த போராளிகள் முற்றுகைக்குள் உள்ளாகும் நிலை அதே நேரம் இராணுவம் இந்த சண்டையை திசை திருப்பும் முயற்சியாக பலாலியிலிருந்து தெற்கு பக்கமாக கட்டுவன் மற்றும் குப்பிளான் பக்கமாகவும் ஒரு முன்னேற்றத்தை ஆரம்பிக்க அந்த பகுதிகளில் போராளிகளின் எதிர் தாக்குதல்களை அன்றை யாழ் மாவட்ட தளபதி லெப்.கெணல்.ராதா வழிநடத்திகொண்டிருந்தார்.

அப்போது தான் வளளாய் தோட்டவெளியில் நடந்தகொண்டிரந்த சண்டையில் கோணேசின் துப்பாக்கியும் எதிரிகளை தேடி தேடி இயங்கி கொண்டிருந்தவேளை தான் கவனித்தான் ஒரு பூவரச மரத்திற்கு அருகுவரம்பில் நிலையெடுத்து இருந்த இரு இராணுவத்தினரிடமிருந்து ஒரு பதில் தாக்குதலும் வரவில்லையென்பதை . அவனிற்கு புரிந்து விட்டது அந்த இராணுவத்தினரிடம் துப்பாக்கி இரவைகள் முடிந்துவிட்டிருக்கும் என நினைத்தவன். அருகிலிரந்த போராளியை பார்த்து சொன்னான் டேய் அங்கை பார் பூவரசிற்கு பக்கத்திலை படுத்திருக்கிஆமிகாரரிட்டை ரவுண்ஸ் இல்லை போலை திருப்பி அடிக்காமல் படுத்திருக்கிறாங்கள் அவங்களை உயிரோடை பிடிப்பம் என்றவன் மற்றைய இரு போராளிகளிடம் நீங்கள் அவங்களை குறி வைச்சபடி இருங்கொ நான் எழும்பிபோய் பிடிச்சுகொண்டு வாறன் என்றவன்

மறைவில் இருந்து எழுந்து அந்த அந்த இராணுவத்தினரை நோக்கி சரண்டர் என்று கத்தியவாறு கைகளை ஆட்டினான் சில வினாடிகளின் பின் ஒரு இராணுவத்தினன் மெதுவாக ஒரு கையை உயர்த்தி சரணடைவதற்கான அறிகுறியை காட்டினான்.

கொணேஸ் தன்னுடைய கைகளை மீண்டும் அவர்களை நோக்கி ஆட்டிவிட்டு மெதுவாக அவர்களை நொக்கி பதுங்கிய படி முன்னேறுகிறான் மற்றை இரு போராளிகளும் அந்த இராணுவத்தினர் மறைந்திருந்த பகுதியை நோக்கி குறிவைத்தபடி கோணெசிடம் டேய் கவனம் ஓரளவுதூரத்திலை போனதும் அவங்களை வெளியாலை வரச்சொல்லு நீ கிட்ட போகாதைஎன எச்சரிக்க ஓமென்றவன் முன்னேறி அவர்களை அண்மித்ததும் அவர்களை வெளியெ வர சொல்லி கத்தி கைகளை காட்டினான்.அதை வேறு பக்கங்களில் பதுங்கியிருந்த இராணுவத்தினர் கவனித்து விட கோணெசை நோக்கி சர மாரியாக சுட்டார்கள்

கோணேசும் வேகமாக பாய்ந்து சென்று அந்த இராணுவத்தினர் நிலையெடுத்து மறைந்திருந்த பகுதிக்குள் பாய்ந்து பதுங்கி கொள்ளவும் கீழேயிருந்த இராணுவத்தினரிடம் இருந்து தகவல் அனுப்பபட்டிரக்கவேண்டும் அந்த பூவரசு மரம் இருந்த இடத்தை நோக்கி வேகமாக இரண்டு உலங்கு வானுர்திகள் நெருங்கி இரண்டும் நான்கு செல்களை ஏவின அவை வெடித்து அந்த இடம் ஒரே புகையும் தூசியுமாய் எழுந்து அடங்கிபோனது அந்த இடத்திலிருந்து கொணேசின் சத்தமோ அல்லது மற்றைய இரு இராணுவத்தினரின் சத்தமோ வரவில்லை. முவருமே இறந்து போய்விட்டனர்.

இதே நேரம் பாலியிலிருந்து முன்னெறிய இராணுவத்தினரும் அவ்விடத்தை நெருங்க அங்கு கள நிலைமையும் போராளிகளிற்கு உதவிகள் கிடைக்காமல் இராணுவத்திற்கு சாதகமாக மாறிக்கொண்டிருந்தது எனவே அவசரமாக போராளிகள் தங்கள் குழுவை மறுசீரமைத்து இருக்கின்ற குறைந்தளவு வசதிகளை பகிர்ந்து மீண்டும் ஒரு மூர்க்கமான தாக்குதலை தொடுத்து கோணேசின் உடலை எப்படியாவது எடுத்துகொண்டு சண்டையை அத்துடன் முடிவுக்கு கொண்டுவர எண்ணினர் அதன்படி மீண்டும் மூர்கமாக நானுறிற்கும் மேற்பட்ட இராணுவத்துடன் ஆகாய மற்றும் எறிகணை தாக்குதல்களிற்கு முகம் கொடுத்தபடி அறுபதிற்கும் குறைவான போராளிகளே அந்த சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் பிற்பகல் ஒரு மணியளவில் கோணேசின் உடலை மீட்ட பொராளிகள் சண்டையை நிறுத்தி பத்தைமேனி இடைக்காட்டு பகுதிக்கு பின்நகர்ந்து தங்கள் பாதுகாப்பு அரணமைக்க தங்கள் இறந்த மற்றும் காயப்பட்ட இராணுத்தினரை எடுத்து கொண்டு தங்கள் முகாம்களிற்கு திரும்பினார்கள்.அன்றைய சண்டையில் பன்னிரண்டு இராணுவத்தினர் கொல்லபட்டிருந்தனர். அதே நேரம் மறுபக்கம் குப்பிளான் சமாதி கோயிலடியில் லெப். கேணல் ராதாவும் இறந்து போனதாக வந்த செய்தியுடன் தனது விடுதலைக்காய் போராடிய இரண்டு போராளிகளை இழந்து விட்ட சோகத்தில் தமிழீழ தாயும் அன்றைய பொழுதை இருள் போர்வையை போர்த்திகொண்டு உறங்கி போனாள்.

மறுநாள் அச்சுவேலியிலிருந்த கோணேசின் வீட்டில் அவனது இறுதி சடங்குகள் நடந்து கொண்டிருந்தது அவளும் செய்திகேட்டு கையில் ஒரு பையுடன் அழுதபடி ஓடிவந்தாள் அங்கிருந்த ஒரு போராளியிடம் அய்யோ அண்ணை கடைசியாவாவது இந்த சேட்டை அவருக்கு போட்டுவிடுங்கோ என்று சொல்லி அவள் வாங்கி வைத்திருந்த அந்த சிவப்பு செக் சேட்டை கொடுத்து விட்டு அங்கேயே அழுதபடி நின்றிருந்தாள்.

கோணேசிற்கு அந்த சேட் அணிவிக்கபட்டு அதுவரை விடுதலை தீயாய் ஒளிர்ந்தவன் வல்லை சந்தியிலிருந்த மயானத்தில் தீயுடன் தீயாய் போனான். மறுநாள் அந்த ஒட்டகபுல புலிகளின் முகாமில் கோணேசின் உடுப்பு பையை எடுத்து பாத்த ஒரு போராளி அதில் கோணேசின் நாட்குறிப்பை எடுத்து புரட்டிப்பார்த்தான் அதில் கோணேஸ் அவளை நினைத்து எழுதிய கவிதைகளும் சில சினிமா பாடல்களும் கடிதங்கள் என்று எழுதியிருந்தான் அவனிற்குள்ளும் காதல் இருந்திருக்கிறது ஆனால் அவன் அதை காட்டிகொள்ளாமலேயே கரைந்து போய்விட்டான்.எம் தேசத்தின் விடுதலைக்காய் விதையாகி போன பல்லாயிரம் மாவீரர்களினுன் கொணேசும் வளளாயின் சிவந்த செம் மண்ணினை மேலும் தன் குருதியால் சிவப்பாக்கி போனான் அவனிற்கும் எமது வணக்கங்கள்.

பயோடேற்றா

1:57 PM, Posted by sathiri, 3 Comments



பயோடேற்றா

பெயர். ( பி)றாஜேஸ் பாலா
வயது. அறைளை பேந்தவயது
தொழில் . ஓய்வுபெற்ற தாதி
உபதொழில். ஓயாத புலியெதிர்ப்பு
விரும்புவது. அடிக்கடி ஊடகங்களில் பெயர் அடிபடுவதை
விரும்பாதது. உள்ளாடைகள் அணிவதை
பொழுது போக்கு. கட்டுரை கீறுவது.பெண்ணியம்பற்றி கும்மியடிப்பது.
நண்பர்கள். கிழக்கின் வெள்ளியும். வெள்ளிக்கு பிடித்த கள்ளரும்.
எதிரிகள். அவரின் வாயேதான்
நீண்டகாலக்கனவு. புலம்பெயர் தேசத்து புலியெதிர்ப்பாளர்களிற்கு தலைமை தாங்குவது.
அண்மைக்காலக்கனவு. பிள்ளையானின் பி.ஏ ஆவது.
சாதனை . கனடாவிற்கு போய் கறுப்பியை சந்தித்தது
சோதனை.லண்டனிலேயே இருக்கிற நிர்மலா ராஜசிங்கம்.
படிப்பது.தேனீ
பிடித்தவர். ஜெமினி(நடிகர்அல்ல)
பிடித்த விழையாட்டு. கபடி(இதில்தான் காலைவாரலாம்)
பிடித்த வீரவிழையாட்டு.கறிச்சட்டியடி
பிடித்த பாடல்.இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலை உனக்கு கவலைஎதுக்கு(படம் நினைத்தாலே இனிக்கும்)

பஞ்ச் டயலாக்.. சிக்ஸ்ரிதான் ஆனாலும் செக்சி

புலம்பல். நானும் நாலுபேருக்கு தலைமை தாங்கலாமெண்டு நினைச்சு புலியெதிர்ப்பை தெரியாத்தனமாய் தொட்டுப்போட்டு தொடரவும் முடியேல்லை. விடவும் முடியேல்லை.புலிளுக்கு ஒரேயொரு தலைமைதான். ஆனால் புலியை எதிக்கிறவை எல்லாருமே தாதான் தலைவரெண்டுறாங்கள்.இதுகளுக்கெல்லாம் நான் தலைமை தாங்கிறது நடக்கிற காரியமா??நாசமாய்போக..


என் இனிய சொந்த பந்தங்களே அடுத்ததாய் யாருடைய சுய விபரம் வருமெண்டு ஆவலாய் இருப்பீங்கள். (பி)றாஜேஸ் ஆச்சியின்ரை விபரத்திலையே இரண்டு பெண்களின்ரை பெயர் எழுதியிருக்கிறன் அதிலை யாராயிருக்குமெண்டு பூவா தலையா போட்டு பாத்து தலையை குழப்பிக்கொண்டிருங்கோ அடுத்த இதழில் சந்திக்கும்வரை அன்புடன் சாத்திரி.

தேவதை..தேவன்....பிசாசு

1:52 PM, Posted by sathiri, No Comment

தேவதை..தேவன்....பிசாசு

நிழலாடும் நினைவுகள்.
சாத்திரி ஒரு பேப்பர்

நீங்கள் யாராவது தேவதையைப் பார்த்திருக்கிறீர்களா??
நான் பார்த்திருக்கிறேன்.பழகியிருகிறேன். ஆகா சாத்திரி தன்ரை காதல்கதை ஏதோ சொல்லவாறார் எண்டு யோசிக்கிறீங்கள் விளங்குது. இது என்னுடைய காதல்கதை இல்லை.ஆனால் உண்மையிலேயே எனக்கொரு தேவதையைத்தெரியும்.மனிசனுக்க மண்டையிலை ஏதும் அடிபட்டிட்டுதோ என்கிற உங்களது சந்தேகமும் விளங்குது .அதனாலை என்னுடைய தேவதையைப் பற்றி சொல்லுறன்.
இந்த தேவதைகள் எல்லா மதக்கதைகளிலும். புராதன புராணக்கதைகளிலும் ஒரு முக்கிய இடத்தினை பிடித்தவர்கள்.இவயள் சரியான வடிவான நல்லவையள். பூமியில் யாராவது எங்கையாவது கஸ்ரப்பட்டாலும் வானத்திலையிருந்து இறங்கி ஓடிப்போய் உதவுவினம் .வரம்கொடுப்பினம் .இவையிட்டை மந்திர சக்தி இருக்கும். எங்களது கற்பனையின்படி இவையள் வெள்ளை உடுப்புத்தான் போடுவினம். தலையிலை கிரீடம் கையிலை மந்திரக்கோல் வைச்சிருப்பினம்..பாரதிராஜாவி ன்ரை படங்களிலை வாற கனவுப்பாடல்களில கதாநாயகிக்குப் பின்னால் ஆடிவரும் தேவதையளும் வெள்ளை உடையிலை சிலோ மோசனில் ஓடிவந்து இதனை உறுதி செய்திருக்கினம்.. இவை அனைத்தும்தான் ஒரு தேவதையின் அம்சங்கள் என்றால். எனக்கும் ஒரு தேவதையைத் தெரியும்.அவர்பெயர் செரீன். இவர் அழகான கிறீஸ்த்தவத்தேவதை.தூய வெள்ளை சீருடை தலையில் வெள்ளை கிரீடம் (தொப்பி) கையிலைமுதலுதவி மருந்துப்பெட்டி. தேவதையின்ரை கையிலை மருந்துப்பெட்டியா என்று ?? என்றுயோசிக்காதையுங்கோ. என்னுடைய தேவதை செரீன் ஒரு மருத்துவத்தாதி.எங்கடை மற்றது பக்கத்து ஊரிலை எங்கையாவது யாருக்காவது அவசர மருத்துவ உதவி தேவையென்றால் உடனடியாக எல்லோருமே உச்சரிக்கும் மந்திரச் சொல் செரீன்தான். இரவுபகலென்று பாராமல் கூப்பிட்டஉடனேயே தன்னுடைய ம(ந்திர)ருந்துப் பெட்டியுடன் புறப்பட்டு விடுவார்.
................................................................................
.
நீங்கள் வானத்து தேவர்களைப்பற்றி கதைகளில் படித்திருப்பீங்கள். ஆனால் ஊரிலை நீங்களும் இந்தத் தேவனை பார்த்திருப்பீங்கள் கதைத்திருப்பீங்கள். குறைந்தபட்சம் இவனைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீங்கள்.நாம் பாத்துப் பழகியிருக்கிறேன். மெலிந்த நெடிய உருவம் . 80 களின் ஆரம்பத்தில் பழைய றலி சைக்கிள்தான் அவனது வாகனம்.யாழ்குடாநாட்டின் அத்தனை குட்டிக்கிராமங்களிலும் அவன் சுற்றித்திரிவான்.அத்தனை ஊர்மக்களிற்கும் அவனைத்தெரியும் .அத்தனை ஊர்மக்களையும் அவனிற்கும் தெரியும்.உலகப்புகழ்பெற்ற மேனாலிசாவின் சிரிப்பிற்கு இன்றுவரை எத்தனைபேர் எத்தனை அர்த்தங்கள் கற்பிக்கிறார்களோ. அதேபோலவே அவனுடைய தலையை மெதுவாய் சரித்து சிரிக்கும் சிரிப்பிற்கும் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லாம். துயர்.மகிழ்ச்சி.வேதனை .கோபம்.என்று எல்லாத்துக்கும் அந்தச்சிரிப்பால்தான் வெளிப்படுத்துவான்.அவன் பெயர் திலீபன்.
................................................................................
....
நீங்கள் யாராவது பிசாசை பார்த்திருக்கிறீர்களா?? நான் பார்த்திருக்கிறேன் பேச விருப்பமில்லாவிட்டாலும் சிலநேரங்களில் பேசியிருக்கிறேன்.அது ஒரு கம்யூனிசம் பேசுகின்ற கெட்ட பிசாசு . அது சந்தியில்வந்து அடிக்கடி சொல்லும் "இவங்கள் சரியான விசரர் ரஸ்யாவையோ சீனாவையோ ஆதரிச்சு போனால்தான் அவையிட்டை உதவிகேட்டு எங்கடை பிரச்சனையை தீர்க்கலாம்.ஆனால் சீனாக்காரனின்ரை தத்துவமும் சரியில்லை ரஸ்யாகாரனின்ரை தத்துவம்தான்சரியானது.நான் ரசியாக் காரனோடை கதைச்சு எப்பிடியும் எங்கடை பிரச்னையை முடிக்கிறன்.மாக்சிட்டை இருந்து எப்பிடி லெனின் ரஸ்யாவுக்கு கொண்டு போனாரோ அதை அப்பிடியே நான் இஞ்சை கொண்டுவந்து காட்டுறன்.உவன் திலீபன் சொல்லறான் தாங்கள் மக்களோடை சேந்து போராடி தமிழீழம் எடுக்கப்போகினமாம்.உது நடக்கிற காரியமோ??"" சுற்றி நின்றவர்கள் எதுவும் புரியாமல் தலையை சொறிந்தபடி போய்கொண்டிருப்பர்
...........................................................
ஒருநாள் மானிப்பாய் வீதியில் உருந்துளியில் வேகமாய் போய்க்கொண்டிருந்த எனக்கு யாரோ நல்லாய் தெரிஞ்ச ஒருவரை கடந்ததுபோல ஒரு உணர்வு திடீரென நிறுத்தி திரும்பிப் பார்த்தேன். தேவதைதான் " என்ன செரீன் அக்கா எப்பிடிச்சுகம் ?? அம்மா எப்பிடியிருக்கிறா?? """என்றேன். " எட நீயே கண்டு கனகாலம். நாங்கள் நல்லாயிருக்கிறம். ஆனால் நாட்டு நிமையை நினைச்சால்தான் கவலையாய் கிக்டக்கிது. திலீபன் வேறை உண்ணவிதரம் இருக்கிது.ஒவ்வொருநாளும் வேலை முடிய போய் பாத்திட்டுத்தான் வாறனான்.இண்டையோடை நாலாவது நாளாகப்போகுது கவலையாக்கிடக்கு. இப்பவும் நல்லூரடிக்குத்தான் போறன். இந்தியா திலீபனின்ரை போராட்டத்தை கணக்கிலை எடுக்கும் எண்டு நீ நினைக்கிறியோடா???என்று கண்கள் கலங்க என்னிடம் கேட்டவருக்கு " மிகப்பெரிய சனநாயகநாடு .அகிம்சையை முதலாவதா மதிக்கிற நாடு எண்டெல்லாம் சொல்லினம்.பொறுத்திருந்து பாப்பம். திலீபனுக்கு ஒண்டும் நடக்காது கவலைப்படாமல் போட்டுவாங்கோ. என்றவும். "" அந்தோனியார்மேலை சத்தியமாய் சொல்லுறன் திலீபனுக்கு ஏதாவது நடந்தால் உவங்கள் நல்லாயிருக்கமாட்டாங்கள்"" என்றுவிட்டு சைக்கிளை மிதித்தபடி போய்விட்ர்.
..........................................
கம்யூனிசப்பிசாசு அன்றுமாலையும் சந்தியில் வந்துநின்று சொன்னது"" இவன் திலீபனுக்கு தேவையில்லாத வேலை இன்னும் இரண்டு நாளைக்கு இருந்து பாத்திட்டு எழும்பிடுவான். ஏனெண்டால் இந்தியா பெரிய வல்லரசுநாடு. அதுக்குப்பின்னாலை என்ரை ரஸ்யா உதவியாய் இருக்கிது. இப்பிடி சாப்பிடாமல் இருக்கிறது. ஆமியை றோட்டாலை திரியவிடாமல் சனங்கள் பாதையை மறிக்கிறதெல்லாம் அவங்களுக்கு கோவம்வரப்பண்ணும். பேசாமல் இந்தியா சொல்லுறபடி கேட்டால் எங்களுக்கு ஏதோ பாத்து செய்வாங்கள்.அதைவிட்டிட்டு அவங்களுக்கு கோவத்தை வரப்பண்ணினால் அவங்கள் கண்ணை மூடிமுளிக்கிறதுக்குள்ளை இவையளை இல்லாமல்பண்ணிப்போடுவாங்கள
" என்று தன்னுடைய வியாக்கியானத்தை தொடங்க அங்கு நின்றவர்கள் கோபமாய் பிசாசை அடிக்கப்போக பிசாசு அங்கிருந்து ஓடிப்போய் பதுங்கிக்கொண்டது..
.......................................................
எங்கள் தேவன் தேவலோகத்திற்கு திரும்பிப்போய்விட்டான்."திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்னவயதில் அதுதேவையா???தமிழீழம் எங்கும் ஒலிபெருக்கிகளில் இந்தப்பாடலுடன் திலீபனிற்கு அஞ்சலி நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன. தமிழ்மக்கள் அனைவரினது கண்களிலும் கோபத்தையும் துக்கத்தையும் கலந்த கலைவையை மட்டுமே காண முடிந்தது.இந்திய இராணுவத்திற்கு கற்கள் செருப்பு என்று கையில் கிடைத்ததையெல்லாம்எடுத்து எறியத்தொடங்கிவிட்டார்கள்.எகள் மண்ணில் ஒருநாள் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று திலீபன் கண்ட கனவை அவன் தன்னுடைய மரணத்தின் மூலம் தொடக்கிவைத்துவிட்டுப்போயருந்தான்.
..............................................
தமிழீழத்தின் காட்சிகள் வேகமாக மாறியது புலிகளிற்கும் இந்திய இராணுவத்திற்கும் போர்வெடித்து யாழ்குடாவெங்கும் இந்தியஇராணுவம் ஆக்கிரமித்துவிட்டிருந்தது .அதுவரை பதுங்கியிருந்த பிசாசும் மெதுவாய் வெளியேவந்து அருகில் இருந்த கந்தரோடை இந்தியனாமி முகாமில் போய் கை குலுக்கியபடி " சேர் நீங்கள் ஊர்முளுக்கப்பிடிச்சது சந்தோசம் புலியளின்ரை கதை முடிஞ்சு போச்சுது. ஒரு புலியும் ஊருக்குள்ளை இல்லை அப்பிடி யாரவது வந்தாலும் நான் உங்களுக்கு வந்து உடைனை சொல்லுறன்.ஆனால் இஞ்சை ஒரு நேஸ்(தாதி) களவாய் போய் காயமடைஞ்ச புலியளுக்கு மருந்து கட்டுறாவாம். இப்போதைக்கு இவ்வளவுதான். ஆனால் இனி அடிக்கடிவருவன்
.................................................
தேவதை அன்னிய அரக்கர்களால் பிடிக்கப்பட்டாள். அவளது சிறகுகள் ஒடிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு.அவளன் வெள்ளையுடை அந்தச் செஞ்சட்டைக்கார பிசாசின் காட்டிக்கொடுப்பால் இரத்தத்தில் தோய்ந்து சிவப்பாகிப்போன நிலையில். வீதியோரத்து வயலில் அந்திரான் சுடலைக்கருகில் அனாதைப்பிணமாய்கிடந்தாள்.அழுபடியே அந்தஊர்மக்கள் ஒன்றுகூடி அந்தச்சுடலையில் எரித்தார்கள். என்னுடைய கிறீஸ்த்தவ தேவதை இந்து முறைப்படி எரிக்கப்பட்டு அவளும் தேவலோகம் போய்விட்டாள்.
........................................
சில நாட்கள் கழித்து உடுவில் பகுதியில் ஒரு வாசகசாலையில் புகுந்து பத்திரிகைகளைப்புரட்டினேன். உதயன் பத்திரிகையில் முதற்பக்கத்தில் ஒரு செய்தி. ""யாழ்மாவட்டத்தின் ரஸ்ய சார்பு கொமினிச அமைப்பாளரான விஜயானந்தன் சுட்டுக்கொலை."" அந்தக்கொமினிச பிசாசிற்கு குழையடிக்கப்பட்டு விட்டது.எனக்குத்தெரியும் நிச்சயமாக அவன் நரகலோகம்தான் போயிருப்பான். ஆனால் இன்று புலம்பெயர்ந்த தேசங்களிலும் கொமினிசம் பேசியபடி சில பிசாசுகள் உலவியபடிதான் இருக்கின்றன.இவைகள் குழையடிக்கப்படுவது எப்போ????????
...............................................................................

பயோடேற்ரா

3:09 PM, Posted by sathiri, No Comment




பயோடேற்ரா


பெயர். போல் பொய்நேசன்
வயது. எட்டுக்கழுதை வயசு
தொழில். யாருக்குத்தெரியும்
பொழுது போக்கு. அனைத்து தமிழர் நிகழ்வுகளிலும் பங்குகொள்ளுதல்
நினைப்பு. இங்கிலாந்தின் பிரதமர்
பிழைப்பு. உதவி மேயர்
நண்பர்கள். இலங்கையரசின் புலனாய்வுத்துறையும்.ஒட்டுக்குழு உறுப்பினர்களும்.
ரசிப்பது. மாற்றான் தோட்டத்து மல்லிகையை
ருசிப்பது. ஓசியிலை எது கிடைச்சாலும்.
பிடித்த பொருட்கள். மேடையும் மைக்கும்.
பிடித்த பாடல். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் மனது மயங்கியென்ன....(படம் மன்மதலீலை)
பிடித்த விலங்கு. விலாங்கு
பிடிக்காதது.. திருமணம்
படிப்பது தேசம்.லண்டன்குரல்.உதயன். மற்றது என்னை புளுகிற ஊடகங்கள்.
வெடிப்பது(புளுகுவது) கோடண்பிறவுனோடை கோப்பி குடிச்சனான்.ஜேர்ச் புஸ்சோடை யூஸ் குடிச்சனான்.
கனவு. எம்பியாவது.
கற்பனை இங்கிலாந்து தமிழரெல்லாமே எனக்குப் பின்னாலைதான்


இவருடைய பஞ்ச் டயலாக். நான் நாலுஇடத்திலை நக்கிறதெண்டு முடிவெடுத்திட்டால் என்பேச்சை நானே கேக்கமாட்டன்.

அடு்த்த இதழில் (பி)றாஜேஸ்வரி பாலாவின் பயேடேற்ராவுடன் சந்திகும்வரை அன்புடன் சாத்திரி.

அமெரிக்கா சென்ற ராஜபக்சாவிற்கு வெத்திலை மடிச்சுக் கொடுக்கும் தமிழ்ப்பெ(பு)ண்ணு

1:34 PM, Posted by sathiri, 4 Comments




நீங்களும் செய்து பாக்கலாம்

12:21 AM, Posted by sathiri, No Comment


நீங்களும் செய்து பாக்கலாம்
சாத்திரி(ஒரு பேப்பர்)


வணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன்.

சரி தயாரா??

தேவையான பொருட்கள்
1)கூகிழ் தேடி
2)விக்கி பீடியா தகவல்
3)கூகிழ் வரைபடம்
4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள்
5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. போன்றவற்ரை பாத்தாலே போதும்.)
6)ஒரு தமிழ் அகராதி

தயார்ப்படுத்த வேண்டியவை
1)முதலில் உங்கள் கணணி மற்றும் அச்சு இயந்திரத்தையும் இயக்கி சிறிது நேரம் சூடாக விடவும்.

2) கணணி சூடாகி விட்டதா?? இப்பொழுது தமிழ் நெற் அல்லது புதினம் பதிவு போன்ற செய்தித் தளங்களை திறந்து இன்றைய செய்திகளைப் படியுங்கள்.

3) இப்பொழுது ஏதோ ஒரு செய்தியைப் பார்த்ததும் உங்கள் மூளையில் ஒரு மின்குமிழ்(பல்ப்பு) விட்டு விட்டு எரியத் தொடங்கும்.(அது நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்தியாகத்தானிருக்கும்)

4)உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த அந்தச் செய்தியை ஒரு கடதாசியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.

இனி செய்முறை (இதுதான் சரியான கஸ்ரமானது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் செய்யவும்)
முதலில் சூடாகிய உங்கள் கணணியில் உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த செய்தி(உதாரணமாக கடைசியாக வவுனியா ஜோசப் படைமுகாம் மீதான விமானத்தாக்குதல்) நடந்த இடத்தின் ஊரின் பெயரை கூகிழ் வரை படத்தில் சிறிதளவு போடவும்.இப்பொழுது அது நன்றாக வந்து விட்டதா. அடுத்ததாக விக்கிபீடியாவி்ல் சிறிதளவு கலந்து மேலதிக மணம் குணம் நிறைந்த தவவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.அவை புலிகளின் விமானம் எப்படி எந்தப் பாதையால் வவுனியா வந்தடைந்தது என்பதனை விரிவாக சேர்க்க வரை படத்த்திலும் தேடலாம். அல்லது உங்களிற்கு ஊரில் பேருந்து நடத்துனராக அதாவது (பஸ் கொண்டக்டர்) இருந்த அனுபவம் போதும்.அதாவது சில ஊர்களின் பெயரை வரிசையாக போடவும்.உதாரணமாக யாழ்ப்பாணம். அஞ்சுசந்தி.ஆனைக்கோட்டை. மானிப்பாய்.சண்டிலிப்பாய்.சங்
கானை.சித்தங்கேணி.வடலியடைப்பு
.
பண்டத்தெரிப்பு.மாதகல் .சில்லாலை ஏறு எண்டு பஸ்கொண்டக்ரர் சொல்லுறமாதிரி .கிளிநெச்சியிலை இருந்து வவுனியா வரை படஉதவியுடன்.சில ஊர்களின்ரை பெயரை வரிசையாய் போடலாம்.இதில் தமிழ் அகராதியில் இருந்தும் சில சொற்களைச்சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அத்துடன் இந்தத் தாக்குதலிற்கு என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கும் என்று சில ஆயுதங்களின் பெயரும் சில இராணுவச் சொற்களையும் சேர்த்தால் சுவையை அதிகரிக்கலாம். இறுதியாக அடுத்த தாக்குதல் எங்கே எப்பொழுது நடக்கும் என்றொரு ஊகத்தினையும் மேலே தூவிவிடுங்கள். இப்பொழுது சுடச்சுட சுவையான சமையல் தயார். இதனை நீங்கள் அச்செடுத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இணையத்தளங்களிற்கும் பத்திரிகைகளிற்கும் பரிமாறலாம்.


ஜயையோ.......சத்தியமாய் நான் சமையல்குறிப்புத்தான் எழுதத் தொடங்கினனான். எழுதிமுடிச்சுப்போட்டு கடைசியாப்பாத்தால் அரசியல் இராணுவ ஆய்வு மாதிரி வந்திட்டுது.இப்ப எங்கடையாக்கள் பலர் அரசியல் இராணுவ ஆய்வு செய்யிறம் எண்டு எழுதிறது சமையல் குறிப்புகள் மாதிரி இருக்கிறதாலை அதுகளைப் படிச்சு குழம்பிப் போய் சமையல் குறிப்பு எழுத வந்த நானும் குழம்பி அரசியல் ஆய்வு செய்யிறதெப்பிடி எண்டு எழுதிப்போட்டன். சரி மினக்கெட்டு எழுதிப்போட்டன் இனி என்ன செய்யிறது படிக்கவேண்டியது உங்கடை தலைவிதி. அதனாலை இதையும் படியுங்கோ அடுத்த தடைவை உண்மையாவே கூழ் காச்சிறது எப்பிடியெண்டு செய்முறையோடை வாறன். என்னுடைய இந்தச் சமையல் முறையைப்பார்த்து யாராவது இராணுவ அரசியல் ஆய்வாளர்கள் மனம்நொந்திருப்பின் அவர்களிற்கு என்னுடைய வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

12:20 AM, Posted by sathiri, No Comment




நீங்களும் செய்து பாக்கலாம்
சாத்திரி(ஒரு பேப்பர்)


வணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன்.

சரி தயாரா??

தேவையான பொருட்கள்
1)கூகிழ் தேடி
2)விக்கி பீடியா தகவல்
3)கூகிழ் வரைபடம்
4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள்
5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. போன்றவற்ரை பாத்தாலே போதும்.)
6)ஒரு தமிழ் அகராதி

தயார்ப்படுத்த வேண்டியவை
1)முதலில் உங்கள் கணணி மற்றும் அச்சு இயந்திரத்தையும் இயக்கி சிறிது நேரம் சூடாக விடவும்.

2) கணணி சூடாகி விட்டதா?? இப்பொழுது தமிழ் நெற் அல்லது புதினம் பதிவு போன்ற செய்தித் தளங்களை திறந்து இன்றைய செய்திகளைப் படியுங்கள்.

3) இப்பொழுது ஏதோ ஒரு செய்தியைப் பார்த்ததும் உங்கள் மூளையில் ஒரு மின்குமிழ்(பல்ப்பு) விட்டு விட்டு எரியத் தொடங்கும்.(அது நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்தியாகத்தானிருக்கும்)

4)உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த அந்தச் செய்தியை ஒரு கடதாசியில் குறித்து வைத்துக் கொள்ளவும்.

இனி செய்முறை (இதுதான் சரியான கஸ்ரமானது எனவே எதைப்பற்றியும் யோசிக்காமல் செய்யவும்)
முதலில் சூடாகிய உங்கள் கணணியில் உங்களிற்கு பல்ப்பு எரிய வைத்த செய்தி(உதாரணமாக கடைசியாக வவுனியா ஜோசப் படைமுகாம் மீதான விமானத்தாக்குதல்) நடந்த இடத்தின் ஊரின் பெயரை கூகிழ் வரை படத்தில் சிறிதளவு போடவும்.இப்பொழுது அது நன்றாக வந்து விட்டதா. அடுத்ததாக விக்கிபீடியாவி்ல் சிறிதளவு கலந்து மேலதிக மணம் குணம் நிறைந்த தவவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.அவை புலிகளின் விமானம் எப்படி எந்தப் பாதையால் வவுனியா வந்தடைந்தது என்பதனை விரிவாக சேர்க்க வரை படத்த்திலும் தேடலாம். அல்லது உங்களிற்கு ஊரில் பேருந்து நடத்துனராக அதாவது (பஸ் கொண்டக்டர்) இருந்த அனுபவம் போதும்.அதாவது சில ஊர்களின் பெயரை வரிசையாக போடவும்.உதாரணமாக யாழ்ப்பாணம். அஞ்சுசந்தி.ஆனைக்கோட்டை. மானிப்பாய்.சண்டிலிப்பாய்.சங்
கானை.சித்தங்கேணி.வடலியடைப்பு
.
பண்டத்தெரிப்பு.மாதகல் .சில்லாலை ஏறு எண்டு பஸ்கொண்டக்ரர் சொல்லுறமாதிரி .கிளிநெச்சியிலை இருந்து வவுனியா வரை படஉதவியுடன்.சில ஊர்களின்ரை பெயரை வரிசையாய் போடலாம்.இதில் தமிழ் அகராதியில் இருந்தும் சில சொற்களைச்சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அத்துடன் இந்தத் தாக்குதலிற்கு என்னென்ன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கும் என்று சில ஆயுதங்களின் பெயரும் சில இராணுவச் சொற்களையும் சேர்த்தால் சுவையை அதிகரிக்கலாம். இறுதியாக அடுத்த தாக்குதல் எங்கே எப்பொழுது நடக்கும் என்றொரு ஊகத்தினையும் மேலே தூவிவிடுங்கள். இப்பொழுது சுடச்சுட சுவையான சமையல் தயார். இதனை நீங்கள் அச்செடுத்தோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இணையத்தளங்களிற்கும் பத்திரிகைகளிற்கும் பரிமாறலாம்.


ஜயையோ.......சத்தியமாய் நான் சமையல்குறிப்புத்தான் எழுதத் தொடங்கினனான். எழுதிமுடிச்சுப்போட்டு கடைசியாப்பாத்தால் அரசியல் இராணுவ ஆய்வு மாதிரி வந்திட்டுது.இப்ப எங்கடையாக்கள் பலர் அரசியல் இராணுவ ஆய்வு செய்யிறம் எண்டு எழுதிறது சமையல் குறிப்புகள் மாதிரி இருக்கிறதாலை அதுகளைப் படிச்சு குழம்பிப் போய் சமையல் குறிப்பு எழுத வந்த நானும் குழம்பி அரசியல் ஆய்வு செய்யிறதெப்பிடி எண்டு எழுதிப்போட்டன். சரி மினக்கெட்டு எழுதிப்போட்டன் இனி என்ன செய்யிறது படிக்கவேண்டியது உங்கடை தலைவிதி. அதனாலை இதையும் படியுங்கோ அடுத்த தடைவை உண்மையாவே கூழ் காச்சிறது எப்பிடியெண்டு செய்முறையோடை வாறன்.

சாதனை சாதனை

10:51 AM, Posted by sathiri, No Comment

சாதனை சாதனை

சாதனை . சாதனை . மாபெரும் உலக சாதனை இருநநூறு மணித்தியாலங்கள் இடைவிடாது நடனமாடுகிறார்.அடாது மழை பெய்தாலென்ன. விடாது புயல் அடித்தாலென்ன.கொழுத்தும் வெய்யிலடித்தாலும் கொண்ட கொள்கை மாறாது குறித்த நேரம்வரை ஆடி உலக சாதனையை நிலை நாட்டுவார். வாருங்கள் வந்து உங்கள் ஆதரவினை வாரி வழங்குங்கள்..... என்ன சாத்திரி இதுவரை எழுதிக்கிழிச்சது காணாதெண்டு இப்ப புசிசா ஆடிக்கிழிக்கபோறாராக்கும் அதுவும் உலக சாதனையாம் எண்டிற உங்கள் அனுதாபப் பார்வை விழங்கினாலும் . இது நான் சாதனை நிகழ்த்தேல்லை இந்த அறிவிப்புக்கள் யாழில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் காரில் ஒரு ஸ்பீக்கரைக் கட்டி ஊர்ஊராய் சொல்லிக்கொண்டு திரிவினம்.இந்த சாதனை விசயமும் குனியா .மேனியா போலை ஒரு வியாதிமாதிரி பரவிஊருக்கு ஒரு இளைஞராவது சாதனை நிகழ்த்தப்போறன் எண்டு வெளிக்கிட்ட காலம். யாழ்குடாவிலை இந்த சாதனை நிகழ்த்திறதை தொடக்கி வைத்தவர் என்று பார்த்தால் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் 1975ம் ஆண்டு மன்னாரிலிருந்து பாக்கு நீரிணையைக்கடந்து இந்தியாவின் தமிழ்நாட்டு தனுஸ்கோடி கரையைத்தொட்டு மீண்டும் மன்னாரை வந்தடைந்து ஒரு சாதனையை நிகழ்த்தினார்.அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து வெவ்வேறை சாதனைகள் என்று மொத்தமாக ஏழு சாதனைகளை செய்து ஊலகசாதனைப்புத்தகமான கின்னசில் இடம்பிடித்தார்.

கடைசியாய் பிரான்ஸ் இங்கிலாந்துக்கிடையிலான கால்வாயை கடந்து சாதனை செய்ய முற்பட்டபொழுது அந்தச்சாதனையாளன் இறந்து போனார்.இந்தச் சாதனையாளன் தொடக்கி வைத்ததுதான் பிறகு ஊருக்கொருத்தராய் சாதனை செய்யிறம் எண்டு வெளிக்கிட்டவை.தொடர்ந்து கைதட்டி சாதனை . தொடர்ந்து நடனமாடி சாதனை . சைக்கிளோட்டிறது.தலைகீழாய் நடக்கிறது என்று ஆளாளுக்கு வெளிக்கிட்டிச்சினம். ஆனால் மப்பிலை தலைகீழாய் நடந்து சாதனை செய்தவையளும் இருக்கினம்.ஆனால் அதெல்லாம் கின்னசிலை சேர்க்கமாட்டாங்கள்.சரி ஆனந்தனுக்கு அடுத்தபடியாய் கனக்க சாதனை செய்யவெளிக்கிட்டவர் எண்டு பாத்தால்.யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேந்த நசீர் எண்டிற தமிழ்முஸ்லிம் ஒருத்தர்.இவர் யாழ்ப்பாணம் முத்தவெளியிலை ஒரு கண்ணாடிக் கூட்டுக்குள்ளை பல விசப்பாம்புகளோடை இருந்து சாதனை செய்யிறாராம் எண்டு கேள்விப்பட்டு நானும் சைக்கிளை எடுத்து மிதிச்சுக்கொண்டு முத்தவெளிக்கு ஓடிப்போய் பாத்தன்.

ஒரு கண்ணாடிக கூட்டுக்குள்ளை சில பாம்புகள் பாவம் அடிச்ச கோரவெய்யில் வெக்கை தாங்காமல் சரியான சாப்பாடும் இல்லைப்போலை மூலைக்கு ஒண்டாய் சுருண்டு போய்கிடந்திதுகள் நடுவிலை நசீர் ஒரு கதிரையை போட்டிட்டு அவரும் வெக்கை தாங்க ஏலாமல் ஒரு விசிறியாலை விசிக்கினபடி இருந்தார்.நசீரும் ஏதோ பெரிய அனகொண்டா மாதிரி மலைப்பாம்புகளை கழுத்திலை சுத்திக்கொண்டு நாலைஞ்சு நாகபாம்பு அவரைச்சுத்தி படமெடுத்தபடி நிக்குமெண்டு நினைச்சு ஓடிப்போன எனக்கு ஏமாற்றம்தான்.ஆனாலும் படமெடுத்தவை அது பாம்பு இல்லை யாழ்ப்பாண ஈழநாடு பத்திரிகையிலையிருந்து வந்த படப்பிடிப்பாளர். படமெடுத்து அது அடுத்தநாள் பேப்பரிலை செய்தியாவும் வந்தது. அடுத்தாய் ஒருநாள் றோட்டாலை காரிலை ஸ்பீக்கரை கட்டி சாதனை உலகசாதனை சங்கானையில் அரைப்பனை உயரத்தில் அந்தரத்தில் ஆடி சாதனை செய்கிறார் வாருங்கள் வந்து பாருங்கள் எண்டு ஒருத்தர் அலறிக்கொண்டு போனார். சங்கானையிலை அரைப்பனையிலை ஆடினால் அது சங்கானை சாதனையல்லோ இவரென்ன உலகசாதனையெண்டுறார்.சிலநேரம் ஆடுறவருக்கு சங்கானைதான் உலகமோ ?? எதுக்கும் ஒருக்கால் போய் பாப்பம் எண்டு நினைச்சு சங்கானைக்கு சைக்கிளை மிதிச்சன் சங்கானை பிள்ளைச்சுண்டு மைதானத்தடியிலை பாட்டுகேட்டிது. அங்கைதான் உலகசாதனை நடக்குதாக்கும் எண்டு நினைச்சு உள்ளை போனால் ஒரு பனையை அரைவாசியளவில் தறித்து அதிலை இரண்டு ஸ்பீக்கர் கட்டி எம்.ஜி.ஆரின் வெற்றிய நாளை சரித்திரம் சொல்லும் எண்டு பாட்டுபோய்க்கொண்டிருக்க அதுக்கும் மேலை ஒரு பலகையை மேடைபோல பொருத்தி அதுக்குமேலை ஒருத்தர் எம்.ஜி.ஆரின் பாட்டுக்கு கையை காலை ஆட்டினபடி நிண்டார்.அதை ஒரு பெரிய கூட்டமே ஆவெண்டு அண்ணாந்து பாத்தபடி நிண்டிச்சினம்.

நானும் கொஞ்ச நேரம் அண்ணாந்து பாத்து கழுத்து நோவெடுக்க கீழை குனிஞ்சு பக்கத்திலை நிண்ட ஒருத்தரிட்டை இவர் எத்தினை மணித்தியலம் ஆடப்போறார் எண்டு கேட்டன்.அதுக்கு அவரும் தம்பி வெளிநாடு ஒண்டிலை யாரோ எட்டுநாள் ஆடிசாதனை செய்தவங்களாம் . அதை முறியடிக்க இவர் பத்துநாள் ஆடுறதாய் முடிவெடுத்திருக்கிறார்.எண்டார்.வெளிநாடெண்டால் எந்த நாடு எண்டு திருப்பிக் கேட்டன் அவரும் தாடையை சொறிஞ்சபடி ரஸ்யாவே அமெரிக்காவே சரியாத்தெரியேல்லை ஆனால் ஆரோ ஆடினவங்களாம் எண்டார்.ஆனால் அந்த நேரம் எனக்கு உந்த உலகஅறிவு பெரிசா இருக்காதததாலை அமெரிக்காவிலையோ ரஸ்யாவிலையோ ஒருத்தரும் அரைப்பனையிலை ஆடினதாய் நான் கேள்விப்படேல்லை அதாலை சரி நம்ம ஊர்காரன் ஒருத்தன் அந்தச் சாதனையை முறியடிக்கப்போறான் எண்டுசந்தோசப்பட்டுக்கொண்டிருக்க. பக்கத்திலை இருந்த வேறை இரண்டு பேர் அண்ணாந்து பாத்தபடி இன்னொரு ஆராச்சியிலை ஈடுபட்டுக்கொண்டிருந்திச்சினம். அது என்னவெண்டால்.பனையை முழுதாய் தறிக்கிறதெண்டால் சுலபம். ஆனால் பாதியிலை தறிச்சிருக்கிறாங்கள் உண்மையிலை கெட்டிக்காரர். இதையும் உலக சாதனையிலை சேர்க்கவேணுமெண்டு கதைச்சுக்கொண்டு நிண்டிச்சினம்.எனக்கும் அது ஆச்சரியமாத்தான் இருந்தது அப்பதான் அடிப்பனையை உத்துப்பாத்தன். பாதியாய் தறிச்ச பனங்குத்தியை கீழை கிடங்கு கிண்டி தாட்டிருந்தது. ஆடுறவர் சாப்பிட மட்டும் நேரமெடுத்து உண்மையிலேயே தொடர்ந்து பத்துநாள் ஆடுவாரா இல்லாட்டி இரவு பன்னிரண்டு மணியளவிலை பாட்டையும் நிப்பாட்டிப்போட்டு எல்லாரும் படுக்கப் போனால்பிறகு இவரும் பனையாலை இறங்கி படுக்கப்போடுவாரா??எண்டு யாரையாவது கேக்க நினைச்சாலும் எதுக்கு அடுத்த ஊருக்கு வந்து அனியாயமாய் அடிவாங்குவானெண்டு நினைச்சுக்கொண்டு அங்கை ஆவெண்டு அண்ணாந்து பாத்துக்ககொண்டிருந்த சனங்களும் அதை பாக்க பக்கத்து ஊரிலை இருந்து வேலை மினக்கெட்டு போன என்னை மாதிரி அக்கள் இருக்கும் மட்டும் இப்பிடி சோதனையான சாதனையள் நடக்கத்தான் செய்யுமெண்டு நினைச்சபடி ஊருக்கு வந்திட்டன்.


ஒருநாள் நாங்கள் வழைமைபோலை கோயிலடி மண்டபத்திலை கச்சான் கடலை வாங்கி சாப்பிட்டபடி அரட்டையடிச்சுக்கொண்டிருக்கேக்குள்ளை ஏதோ கதையிலை எங்களுக்குள்ளை ஒரு பந்தயம் வந்திட்டுது அது என்னவெண்டால் யார் அதிகளவான கச்சான் கடைலை சாப்பிடுறது எண்டதுதான் பந்தயம். அதிலை நானும் இன்னொரு நண்பனுக்குமிடையிலை போட்டிவந்திட்டுது நண்பன் தான் 3 கிலோ கச்சான் சாப்பிடுவன் எண்டான் நான் ஏதோ ஒரு வேகத்திலை 5 கிலோ சாப்பிடுவன் எண்டிட்டன்.உடைனையே எல்லாரும் சேந்து என்னை பப்பாவிலை ஏத்திவிட்டு அப்பிடி நான் 5 கிலோ கச்சான் சாப்பட்டு சாதனை செய்தால் நாங்கள் மாலை நேரத்திலை மருதடிச்சந்தியிலை இருக்கிற குமார் கடையிலை குடிக்கிற பிளேன்ரீயும் வடையும் ஒரு மாதத்துக்கு எனக்கான செலவு தங்களுடையது எண்டு முடிவெடுத்திட்டாங்கள். உடைனையே சந்தர்ப்பம் காத்திருந்த என்ரை உயிர் நண்பன் இருள்அழகன் எல்லாரிட்டையும் காசு சேர்த்து ஓடிப்போய் கச்சான் கடைக்காறியிட்டை விசயத்தை சொல்லி 5 கிலோ கச்சானை நிறுத்துத் தரச்சொல்லி கேட்கவும் . கச்சான் கடைக்காறிக்கு ஒரே புழுகம் இன்னும் தேவையெண்டால் கேளுங்கோ உடைனை சுடச்சுட வறுத்துத்தாறன் எண்டு சொல்லி 5 கிலோ கச்சானை நிறுத்து. மொத்தமாய் கச்சான் வாங்கினதுக்காக மேலதிகமாய் இலவசமாய் இன்னும் இரண்டு கை கச்சானையும் அள்ளிப்போட்டு குடுத்துவிட்டாள்.

இருள் அழகன் கச்சானை கொண்டுவந்து எனக்கு முன்னால் கொட்டினதுமே எனக்கு அடிவயித்திலை ஒரு இலேசான மாற்றம் தெரிஞ்சிது.ஒரு மாதிரி சமாளிச்சுக்கொண்டு ஒரு நிபந்தனையை வைச்சன் அதாவது கச்சான் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் எனக்கு பிளேன்சோடா வாங்கித்தரவேணும் இதுதான் நிபந்தனை அதுக்கும் எல்லாரும் தலையாட்ட.எல்லாரும் கச்சானை உடைச்சு உள்ளங்கையிலை வைச்சு தேச்சு தோலை ஊதி ஊதி என்ரை கையிலை தர பிளேன் சோடாவை குடிச்சபடி என்ரை கச்சான் தின்னும் உலக சாதனை ஆரம்பமானது.கோயிருக்கு கும்பிட வந்தவையள் கூட கொஞ்ச நேரம் மடத்தடியிலை நிண்டு என்ரை உலக சாதனையை ரசிச்சு பாத்திட்டு "" இவன் ஏற்கனவே பித்தம் பிடிச்ச ஆள் மாதிரி இதுக்குள்ளை கச்சானை திண்டு இன்னும் பித்தம் தலைக்கேறி விசராக்கப்போகுது"" எண்டு வாயார வாழ்த்திவிட்டுப்போனார்கள்.இரண்டு கிலோ தாண்டியதுமே வயித்துக்குள்ளை வாயுக்குமிழிகள் ஓடிவிழையாட ஆரம்பிச்சது.மூன்றாவது கிலோவைத் தொட்டதும் முட்டிமோதிக்கொண்டிருந்த வாயுபகவான் வழிகிடைத்த இடத்தால் டர்ர்ர்ர்...................டர்ர்ர்ர்.......................என்று வெளியேறத்தொடங்கவே நானும் காற்றோட்டமாய் வயற்கரைப்பக்கமாய் சரிந்திருந்தபடியே மிச்ச சாதனையை தொடர்ந்தேன்.பிளேன் சோடா குடித்த வாயு வாயால் ஏவறையாய்(ஏப்பமாய்) வெளியேறிக்கொண்டிருந்தது.நலாவது கிலோவை கஸ்ரப்பட்டு அனுப்பிக்கொண்டிருக்க வயிற்ரை பிரட்டி சத்தி(வாந்தி) வாற மாதிரி இருக்கவே .

நண்பர்களிடம் போட்டி விதியில் சின்ன மாற்றம் செய்து சத்தி எடுத்திட்டு தொடந்து சாப்பிடலாமா எண்டு கேட்டுப்பாத்தன். அப்பிடியெல்லாம் செய்யமுடியாது அப்பிடிச்செய்தால் பந்தயத்தில் தோத்துப்போனதாக தீர்மானம் கொண்டுவருவோமெண்டு மிரட்டினார்கள். இவங்டை பெரிய ஜ.நா. சபைத்தீர்மானம் என்று நினைத்தபடி அடுத்த பிடி கடைலையை வரியல் போட்டேன் அவ்வளவுதான் உவ்வாய்ய்ய்க்........எண்டு ஏதோ அணை உடைஞ்சு வெள்ளம் வந்த மாதிரி சத்தி(வாந்தி) வந்து அந்த வெள்ளத்திலை எனக்கு முன்னாலை இருந்த நண்பர்கள் எல்லாரும் நனைஞ்சு போச்சினம். பிறகென்ன என்னைத் திட்டியபடியே கொயில் கிணத்திலை எல்லாரும் குளிச்சிட்டு மடத்தையும் கழுவிசுத்தம் செய்துபோட்டு போட்டினம். அண்டைக்கு கடைலை சாப்பிடுற போட்டியிலை தோத்துப்போனாலும் இண்டைக்கு வெளிநாட்டிலை இருந்தபடி கணணியிலை கடலை போடுறதிலை உலக சாதனை நிகழ்த்தியே தீருவது எண்டு உறுதியாய் இருக்கிறன்